Saturday, December 22, 2012

நித்யஸ்ரீ கணவர் தற்கொலை மர்மங்கள்

http://2.bp.blogspot.com/_9vPNlqoYUtY/TSE8NlhVbDI/AAAAAAAADco/j2AIV3vn7xU/s1600/Nithyasree+Mahadevan+Carnatic+musician+playback+singer.jpg 
சென்னை:பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன், நேற்று கோட்டூர்புரம் மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.பழம்பெரும் கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ, 39. இவரும் கர்நாடக இசை உலகில் மிக பிரபலமாக விளங்குகிறார். திரைப்படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.

விருப்ப ஓய்வு:


இவரது கணவர் மகாதேவன், 45. மென்பொருள் பொறியாளரான இவர், மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார்.தந்தை விஸ்வநாதன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோட்டூர்புரத்தில் மகாதேவன் வசித்து வந்தார். மகாதேவன்-நித்யஸ்ரீக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.



மகாதேவன், நேற்று காலை 8:00 மணிக்கு மகள்களை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்று, கொண்டு விட்டு வீடு திரும்பினார். பின் காலை 11:00 மணிக்கு, அவரது ஓட்டுனர் தண்டபாணி, 30, என்பவரை அழைத்து காரை எடுக்கும் படி கூறினார்.



அடையாற்றில் குதித்தார்:


இருவரும் அருகில் உள்ள டென்னிஸ் அரங்கம் ஒன்றிற்கு சென்றனர். அங்கிருந்து கோட்டூர்புரம் வழியாக வீடு திரும்பும்போது, மகாதேவன் காரை ஓட்டியுள்ளார்.நண்பகல் 12:30 மணிக்கு, பாலத்தின் நடுவில் திடீரென காரை நிறுத்தி, சாவியை எடுத்து கொண்டார். திடீரென பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் தண்டபாணி, உடனடியாக நித்யஸ்ரீயை அலைபேசியில் அழைத்து நடந்ததை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கிருந்த சிலர், உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். காரில் வந்த நபர் ஆற்றில் குதித்த தகவலால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

உடல் மீட்பு:


தகவலறிந்து, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சீர் செய்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்க முயன்றனர். அதற்குள் மகாதேவனில் உடல் ஆற்றில் மிதந்தது. அதை கயிறு கட்டி மேலே இழுத்தனர்.அப்போது, ஆட்டோ மூலம் அங்கு விரைந்து வந்த நித்யஸ்ரீ, கணவர் குதித்த இடத்தை பார்த்து கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய போலீசார், ஆட்டோ மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மகாதேவனின் உடலை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாதேவன் இறந்ததை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
நன்றி - தினமலர் 






பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் வி.மகாதேவன் (45) வியாழக்கிழமை அடையாறு ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.



இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: கோட்டூர்புரம் 4-வது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் மகாதேவன். இவரது மனைவி பிரபல கர்நாடக இசைப் பாடகியும், தமிழ் திரைப்பட பின்னணி பாடகியுமான நித்யஸ்ரீ. இத் தம்பதிக்கு தேஜாஸ்ரீ, தனுஷாஸ்ரீ என இரு மகள்கள் உள்ளனர். இதில் தேஜாஸ்ரீ (8) 3-ம் வகுப்பும், தனுஷாஸ்ரீ (7) 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். எம்.இ. படித்துள்ள மகாதேவன் மந்தைவெளியில் ஆர்.கே. சாலையில் உள்ள ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.



மகாதேவன் காரில் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். காரை டிரைவர் சுரேஷ் ஓட்டினார். கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு டென்னிஸ் மைதானத்துக்குச் சென்று, அங்கு பயிற்சி பெறும் தனது மகள்களை பார்க்கச் சென்றாராம். ஆனால் இரு மகள்களும் அப்போது இல்லையாம். இதனால் ஏமாற்றம் அடைந்த மகாதேவன், அங்கிருந்து காரை தானே ஓட்டினார்.



கோட்டூர்புரம் அடையாறு பாலத்தின் அருகே நண்பகல் 12.30 மணியளவில் கார் வந்ததும். திடீரென காரை விட்டு இறங்கி செல்போனில் பேசியபடியே நடந்து சென்றாராம். பின்னர் திடீரென பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார். இதை பார்த்து டிரைவர் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸôருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று மகாதேவனை மீட்டனர்.



பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகாதேவன் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மகாதேவன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்து வேறுபாடு: போலீஸôர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னையே அவரின் இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. நித்யஸ்ரீ திரைப்படங்களில் பின்னணி பாடுவதில் மகாதேவனுக்கு விருப்பம் இல்லையாம். இது தொடர்பாக இருவருக்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் சரிவர வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.




மேலும் நித்யஸ்ரீயின் கர்நாடக இசை கச்சேரிகளின் தேதிகளை மகாதேவன் கவனித்து வந்தாராம். மார்கழி மாத கச்சேரியில் தேதி கொடுத்தது தொடர்பாக நித்யஸ்ரீக்கும், மகாதேவனுக்கும் இடையே வியாழக்கிழமை காலை வாக்குவாதம் ஏற்பட்டதாம். எனவே குடும்பப் பிரச்னை காரணமாகவே மகாதேவன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸôர் கருதுகின்றனர்.


நன்றி - தினமணி


http://newindianexpress.com/incoming/article1346039.ece/ALTERNATES/w460/Nithyasree-Mahadevan.jpg



எனது கேள்விகள்



1. நித்யஸ்ரீயின் கணவர் ஆற்றில் குதித்ததை நேரில் பார்த்த டிரைவர் அவரைக்காப்பாற்ற ஏன் முயற்சிக்க வில்லை? அவருக்கும் நீச்சல் தெரியாதா? அக்கம் பக்கம்  கூச்சல் போட்டு உதவி கேட்டாரா?


2.  தற்கொலை செய்பவர்கள் தனிமையில் இருக்கும்போதுதானே செய்வார்கள்? டிரைவர் பார்க்க பார்க்க ஆற்றில் குதித்தால் காப்பாற்றி விடுவார்கள் என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்காதா?



3. தற்கொலை செய்ய நினைத்தவர் எதுக்கு கார் சாவியை கையில் எடுத்துட்டு போகனும்?



4. மன உளைச்சலில் இருந்த நித்யஸ்ரீயின் கணவர் ஏன் காரை ஓட்ட வேண்டும்? கார் டிரைவர் தானே ஓட்டனும்? பொதுவாக டென்ஷனில் இருக்கும்போது யாரும் டிரைவிங்க் பண்ண மாட்டாங்க, அதுவும் டிரைவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு ..



5. ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இறந்து போன தன் அம்மாவின் பிரிவின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறதே , 8 மாதங்கள் கேப் ஏன்? பொதுவா தற்கொலை எண்ணம் என்பது ஒரு நிமிட சோகத்தில் வருவது , அம்மா இறந்த துக்கத்தில் இருந்து மீள  ஒரு மாதம் அல்லது 3 மாதங்கள் போதும் அப்போதெல்லாம் நிகழாத சம்பவம் ஏன் 8 மாதங்கள் கழித்து இப்போது?



6. கார் டிரைவரைத்தவிர அவர் தற்கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் யாராவது இருக்காங்களா? அது பற்றித்தகவலே இல்லையே? 


18 comments:

swam said...

என்னங்க உங்க சினிமா விமர்சனத்துல இயக்குனர கேள்வி கேட்குற மாதிரி கேட்குறிங்க??
கூவம் ஆத்துல எவன்ங்க விழுந்து காப்பாத்துவான் ???

neeyaathamizhan? said...

Tv yil nithyasri visham kudithu maruththuvamanayil anumathi enRu scrolling odiyathu enna kadhai?

kk said...

ராஜேஸ்குமாரின் தீவிர பான் போல இருக்கு..சி.பி சி.பி.ஐ

உலக சினிமா ரசிகன் said...

சிபி...உங்கள் கேள்விகள் அபத்தம்.
அநாகரீகம்.

இந்த போக்கை தயவு செய்து நிறுத்தவும்.

Adien Ramanuja Dasan said...

Keep your nose away from someone's personal life... Kotturpuram coovam is not a river it is a typical collection of mud and human wastage.. no one can swim in that river. So far who ever attempted suicide in that river has not been saved... If you were his driver will you have fallen into it and saved him.
He has been taking treatment for depression. Your policing are not solicited in this case. Real police will take care of it. Now go see if there is any business to do. If there is nothing to do, do anything other than writing bullshit.

Unknown said...

boss உங்களுக்கு ஒடம்பு முழுக்க கிட்னி !!!!!!

Ramesh Kulandaivelu said...

ஒரு முதலாளிக் கேட்டால் கார் ஓட்டக்கூடாது என்று சொல்ல எந்த வேலைக்காரருக்கும் உரிமையில்லை. இரண்டாவது, காரை நிறுத்திவிட்டு விருட்டென்று சாவியை எடுத்துக் கொண்டு இறங்கும் போதும் ஓட்டுனரால் எதற்காக என்று கேள்வி கேட்க முடியாது, மற்றும் எதிர்பாராமல் அவர் நடந்துகொள்ளும் போது எதுவும் செய்ய முடியாது. அத்தனை பரப்பரப்பான பகுதியில் அவர் குதித்திருப்பதால் யாரும் தள்ளிவிட்டிருக்கலாம் என்ற பேச்சிற்கே இடமிருக்க வாய்ப்பில்லை. பொதுவாக மேலே ஒரு நண்பர் சொன்னது போல் கூவம் ஆற்றில் குதித்துக் காப்பாற்றும் அளவுக்கு யாருக்கும் துணிவு இருக்காது என்பது உண்மை. மொத்தத்தில் ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதிய ஒரு கட்டுரைப்போலவே இருக்கிறது சிபி. நித்யஸ்ரீ பற்றி இதுவரை எந்தவொரு கிசுகிசுவோ ஊகங்களோ கூட வந்ததில்லை. ஒரு இசைப்பாரம்பரியமிக்க குடும்பத்தில் வந்தவர். அவரைப் பற்றிய இது போன்ற கட்டுரைகளை வெளியிட்டு எங்களைப் போன்ற கர்நாடக இசை பிரியர்களை நோகடிக்காமல் இருப்பது நலமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Unknown said...

நடந்த இந்த துக்க சம்பவம், இசை அதிலும் கர்நாடக இசை பிரியர்களை, அதிர்ச்சியுலும் , வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது . இதிலிருந்து நாங்கள் வெளி வரவே காலம் பல ஆகும். எனில், நித்யஸ்ரீயின் நிலை எப்படி இருக்கும் என்று யோசிக்காமல், சிபி (யாரிவர் ?) எழுதி யிருக்கும் இந்த பேத்தல் , தேவையற்ற ஒன்று! கர்நாடக இசை பிரியர்களுக்கு, நித்யஸ்ரீ ஒரு குடும்ப உறுப்பினர் / உறவினர் போன்றவர் ! எனவே , இந்த அவர் இழப்பு, எங்கள் அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு. மீண்டும் யதார்த்த , முந்தைய நிலைக்கு திரும்ப வேண்டுமே, அவர்தம் இசையை மீண்டும் கேட்போமா, அவ்விரு குழந்தைகளின் நிலை என்ன, என்று கலங்கி நிற்கும் எங்களுக்கு, இது எரிச்சலையும் கோபத்தையும் தூண்டுவதாக உள்ளது. யார் கேட்டார்கள் இந்த சிபியின் கட்டுரையை ? இவருக்கு மனதில் துப்பறியும் சாம்பு என்ற எண்ணமா ? என்ன நடந்தது , காரணம் என்ன, என்று துப்பறிவதற்கு போலீஸ் உள்ளது!

இந்த கட்டுரையை எழுதியதற்கு இவர் உடனே மன்னிப்பு கோரவேண்டும், அத்துடன், இனி இவர் எழுத முற்படும் எந்த விஷயத்தையும் பலமுறை யோசிக்க வேண்டும்; அல்லது வேறு வேலையிருந்தால் பார்க்கட்டும்; இது போன்ற அதிகப்ப்ரசங்கித்தனமான, மனதை புண்படுத்தும் கட்டுரைகளை, எழுதக்கூடாது, என்று கேட்டுகொள்கிறேன்.

இவர் எழுதுவதை 'படைப்பு ' என்று வேறு போட்டுகொள்கிறார்; கேவலம்! இனி பிரசுரிக்கும் முன், எடிட்டர் கள் கவனமாக இருப்பது நல்லது.

AshIQ said...

அவரு Investigate பன்றாராம்,
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கமுடியல, அந்த இடத்தில் நீர் நின்றிருந்தால் நீருக்குள் நீர் குதிச்சிருப்பீரா? அப்படியே குதிச்சாலும் உம்மால தன்னிக்குள் விழுந்தவரை கரையில் கொண்டுவந்து சேர்க்கமுடியுமா? சரி ட்ரைவருக்கு நீச்சல் தெரிந்தே இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கா? இதுக்கு முதலில் பதில் சொல்லும் ஓய்
அலப்பறைக்கு ஒரு அளவு வேண்டாமா சாமி
-ஆஷிக்

Siva said...

Hello writer do u know how to swim...How many Indians know how to Swim

kavitha said...

unnecessary post......if u really respect human values,delete the post...tht is the minimum u can do

அசோகபுத்திரன் said...

இந்த கேள்வி கேக்குற ஃபார்மட்டையெல்லாம் சினிமாவோட நிப்பாட்டிக்கங்க சிபி சார்... இது மகா மட்டமான கேவலமான புத்தி... நீங்க பண்ணினது தப்புன்னு இவ்வளவு கமெண்ட் வந்திருக்கே, இதுக்கு மதிப்பு குடுத்த இந்த கட்டுரையை டெலீட் பண்ணுங்க... இல்ல சின்மயி அம்மாவின் ”அன்பு வேண்டுகோளுக்கிணங்க” சில கட்டுரைகளை அழிச்சீங்களே, அது மாதிரி ஏதாவது வேண்டுகோள் வந்தால்தான் அழிப்பீங்களா ?

Unknown said...

ungal kelviyil samooka poruppo akkaraiyo illai.childish...vanmaiyaaka kandikkiren!!!!

[email protected] said...

you should delete this article.

ப.கந்தசாமி said...

ஒரு இறப்பை மனிதாபிமானத்துடன் பார்க்கவேண்டும். இறந்தவரின் உறவுகள் மனம் என்ன நிலையில் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

anandrajah said...

எல்லாம் முடிஞ்சி போச்ச்...!

எனக்கும் ஆதங்கம் தான் உங்கள மாதிரி.. ட்விட்டர் கருப்பு மாதிரி..!

பாவம்.... நித்யஸ்ரீ அக்காவ தவிக்க விட்டுட்டு போயிட்டானே மனுஷன்னு அவம்மேல கோவம் வந்து....... இதோ நீங்க கேட்ட அத்தனை கேள்விகளும் மனசுக்குள்ளே வந்தது..!

நீங்க எங்க சார்பா கேட்டுபுட்டீங்க.. நாங்க கேக்கல. அம்புட்டுத்தான்..!

மனுஷன் உயிரை விட கூவம் ஆற்றின் தன்மையை பற்றி நிறைய பேர் இங்கே சொல்லிட்டாங்க..

புயலின் கொந்தளிக்கும் அலைகளின் மத்தியில் மீன்களால் அரைகுறையாக்கப்பட்ட ... கடல் நீரில் உறீப்போயி பிடித்தால் கையோடு வந்துவிடும் உடலை சக மனிதனாக உயிரை பணயம் வைத்துத்தான் எடுத்தேன். எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

கூவம் ஆற்றின் தன்மை புதைகுழியின் தன்மை அல்ல. உயிரை காப்பாற்றும் உத்வேகத்தில் செண்ட் அடிக்கும் மனோபாவம் வராது.

இந்த கேள்விகளின் மூலம் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை. இங்கே கேட்ட கேள்விகளில் ஒரு பச்சாதாப ஆதங்கம் தொக்கி நிற்பது முகம்கானா அந்த நட்புக்கும் அன்பிற்க்கும் ரசிகமனதிற்கும் மட்டுமே புரியும்.

Unknown said...

pundai

Unknown said...

pundai
i will fuck you
call me +940212263005