Saturday, September 17, 2011

'அணு சக்தி... அழிவு சக்தி! கூடங்குளம் குப்பைக்கூளம்!!!! ஜூ வி கட்டுரை..

கூடங்குளம் வேண்டாம்!''

உக்கிரமாகும் உண்ணாவிரதம்!
'அணு சக்தி... அழிவு சக்தி!’ என்ற கோஷம் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில்... நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யாவின் ஆதரவுடன் அணு உலைகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதை எதிர்த்து, கொதித்தெழுந்து நெருப்பைக் கக்குகிறார்கள் மக்களும், மக்கள் இயக்கங்களும்!


ரஷ்ய அரசின் ஒத்துழைப்புடன் 13,500 கோடி முதலீட்டில் நடந்து வரும் இந்த அணு உலைகளின் மெகா திட்டத்தை நிறைவேற்றி, அதன் மூலம் இந்த ஆண்டுக்குள் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.


இதை எதிர்த்து போராடிய மக்களின் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவற்றை ஒடுக்க, காவல் துறை அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்ய... கொந்தளித்த மக்கள், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜை சந்தித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் 127 பேர் கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகத்துக்குப் பெரும் தலைவலி!



உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் 'அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனிடம் பேசினோம். ''அணு சக்தியால் லாபத்தைவிடவும் இழப்பே அதிகம். 'நமக்கு மட்டும் அல்லாமல் வருங்கால சந்ததியையும் அழித்து ஒழிக்கக்கூடிய அணு உலையை இங்கே மட்டும் அல்ல, எங்கேயும் அமைக்க வேண்டாம்’ என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இந்த மக்களும், 'அணு உலையால் சாவதைவிடவும் பட்டினிகிடந்து அற வழியில் உயிரைவிடுவோம்’ என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்!' என்றார்.


இதற்கிடையே, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இடிந்தகரைக்கு வந்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பால பிரஜாபதி அடிகள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான குமாரதாஸ் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இது தவிர, அண்ணா ஹஜாரே, மேத்தா பட்கர் உள்ளிட்ட சமூகப் போராளிகளும் வருவார்கள் என்பதால், போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.


இதனிடையே, 'அணு உலை அமைக்கும் பணி முடிவடையும் சமயத்தில், இத்தகைய போராட்டங்கள் நடத்துவது நியாயமா? இதற்காகச் செலவிட்ட பணம் இழப்பாகிவிடுமே?’ என அணு மின் நிலையத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபற்றி போராட்டக் குழுவைச் சேர்ந்தவரும், தமிழகம் - புதுவை மீனவ மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான ஆண்டன் கோமஸிடம் கேட்டதற்கு, ''கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டோம் என்பதற்காக நாமே சாவைத் தேடிக்கொள்ள முடியுமா? ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் நிறையப் பேருக்கு புற்றுநோய் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

லட்சக்கணக்கில் செலவு செய்து மகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்த பிறகு, கடைசி நேரத்தில் மணமகனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தால், 'இவ்வளவு செலவு செஞ்சுட்டோமே... பரவாயில்லை’னு விட்டு விடுவோமா?' என்று எதிர் கேள்வி கேட்டார்.


அணு சக்தித் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் பிரதமரின் காதுகளுக்கு எட்டுமா இந்த அபலை மக்களின் கூக்குரல்?


-
 ''எவ்வித ஆபத்தும் இல்லை...''


கூடங்குளம் அணு மின் திட்டத்தின் வளாக இயக்குநர் எம்.காசிநாத் பாலாஜியிடம் மக்கள் கூறும் புகார்கள் பற்றி கேட்டபோது, ''இந்தியாவில் செயல்படும் 6 அணு மின் நிலையங்களைப் போன்றுதான் கூடங்குளத்திலும் செயல்படப் போகிறது. எதிர்பாராத விபத்து, கதிர்வீச்சு போன்ற எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை.


உலக அணு சக்தி கழகம் வகுத்துள்ள பாதுகாப்பு கோட்பாடுகளை இங்கே பின்பற்றுகிறோம். தற்போது பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிய சோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். இந்த சூழ்நிலையில் உள்ளூர் மக்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டுமோ என்றெல்லாம் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதுபோன்ற சூழ்நிலை எப்போதும் வராது.


உலகத்தில் எங்குமே இல்லாத விசேஷ பாதுகாப்பு ஏற்பாடு களாக,  40 மீட்டர் உயரத்தில் இயல்புநிலை குளிர்விப்பானை (ஹீட் எக்ஸ்சேஞ்சர்) வடிவமைத்து இருக்கிறோம். அதனால் கதிர் வீச்சு எந்தவகையிலும் வெளியேற வாய்ப்பே இல்லை. நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளை தாங்கக்கூடிய வகையில் கடல் மட்டத்தில் இருந்து ஏழரை மீட்டர் உயரத்தில் அணு மின் நிலைய கட்டடத்தை அமைத்துள்ளோம்.

அணு மின் நிலைய வளாகத்தின் ஒரு புறம் கடல் பகுதியை ஒட்டி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக 500 மீட்டர் வரை மீன் பிடிக்க வேண்டாம். அதற்கு அப்பால் தாராளமாக மீன் பிடித்துக் கொள்ளலாம். இதுகூட, நாட்டின் பாதுகாப்பு நலன் கருதிதான். கதிர்வீச்சு பாதிப்பு குறித்து ஆராய, பாபா அணு மின் நிலைய சுற்றுச்சூழல் ஆய்வகம் ஒன்று கூடங்குளம் ஏரியாவில் 2004 முதல் இயங்கி வருவது மக்களுக்குத் தெரியும்.

அணு மின் நிலையம் துவங்கியபிறகும் அந்த ஆய்வகம் தொடர்ந்து இங்கேதான் இயங்கப் போகிறது. புற்றுநோய் வரும் என்பதெல்லாம் வெறும் வதந்தியே. இங்கே கதிர்வீச்சு வெளியே வரவே வராது எனும்போது எப்படி பாதிப்புகள் ஏற்படும்?'' என்று கேள்விகளை எழுப்பினார்.





சி.பி - சுனாமி எல்லாம் வரவே வராதுன்னு சொல்லலையா?வந்த பின் திண்டாடுவதை விட வரும் முன் காப்போம்!!

நமது பதிவர் பாலா உண்ணாவிரதத்தில் உள்ளார். 

http://koodalbala.blogspot.com/2011/09/blog-post_17.html#comments


1. டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தால், குண்டு வெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்று கருத்துள்ளதே? 

சி.பி - மக்கள் சிந்தித்து வாக்களித்திருந்தால் காங்கிரஸ் ஆட்சி கூடத்தான் தவிர்க்கப்பட்டிருக்கும். யோவ்! நடந்து முடிஞ்சதைப்பற்றி என்ன பேச்சு? இனி ஆக வேண்டிய வேலையைப்பாருங்க!


அசம்பாவிதம் தடுக்கப்பட்டு இருக்கலாம்!

கண்காணிப்பு கேமரா மற்றும் ஸ்கேனர் இயந் திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற பார் கவுன்சில் கோரிக்கை விடுத்து இருந்ததாம். ஏல நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்தக் கருவிகள் இன்னமும் வந்து சேரவில்லை. டெல்லி போலீஸும் தங்களுக்குத் தேவையான சி.சி.டி.வி. கேமராக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை முடிவெடுக்க முடியாமல் நாட்களைக் கடத்தியது. இந்தக் காலதாமதமும் தான் இத்தனை உயிர்ப் பலிகளுக்குக் காரணம்!



ஏற்கெனவே மே 25-ம் தேதி இதே வளாகத்தில் குண்டு வெடித்தது. இப்போது இரண்டாம் முறை. 'உலகில் எங்குமே பயங்கரவாதிகள் ஒரே இடத்தை இரு முறை குறிவைத்துத் தாக்கியது இல்லை. இது இந்தியப் பாதுகாப்பு அமைப்பில் இருக்கும் படுகேவலமான கேலிக்கூத்து’ என்று டெல்லிப் பத்திரிகையாளர் ஒருவர் எழுதி உள்ளார். ஒரே இடத்தில் எத்தனை தடவை குண்டு வைத்தாலும் இவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது எல்லா பயங்கரவாத அமைப்புகளுக்கும் தெரிந்திருக்கிறது.


பிரதமரும் உள்துறை அமைச்சரும்  கணக்கில் கெட்டிக்காரர்களாக இருக்கலாம், ஆனால், காவலுக்குக் கெட்டிக்காரர்கள் இல்லை!



2. 'திருக்குறளின் நல்ல கருத்தைக் கேட்டுவிட்டு சபையைவிட்டு வெளியே வந்துவிடுகிறோம்’ என்கிறார்களே தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்? 

திருக்குறளின் நல்ல கருத்துகளைக் கேட்டு நடந்திருந்தால், எதிர்க் கட்சியாகும் நிலைமையே வந்திருக்காதே!

 சி.பி - யோவ், அதுக்கு ஏன்யா அங்கே போறீங்க? கலைஞரின் குறளோவியம் படிச்சுட்டு கமுக்கமா வீட்லயே இருந்துக்க வேண்டியதுதானே?



3. 'மதுவிலக்கு கொண்டுவருவதுபற்றியும் மது விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்றும் வாய் கிழியப் பேசுபவர்கள்தான், கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள்’ என்று ஜெயலலிதா கூறி இருக்கிறாரே! யார் என்று தெரிகிறதா? 


இதில் ரகசியம் என்ன இருக்கிறது? ராமதாஸைத்தான் சொல்கிறார் ஜெயலலிதா. இதே வார்த்தைகளைக் கருணாநிதி சொல்லி இருந்தால் ராமதாஸ் என்ன கர்ஜனை செய்திருப்பார்? ஜெயலலிதா சொன்னதைக் கேட்டும்... கேளாதவர் மாதிரி ஆகிவிட்டார். டாக்டரிடம்தான் எவ்வளவு மாற்றம்?

 சி.பி - அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!!!!!!


4. எதிர்த்துப் பேசிப் பதில் அளிக்க... எந்த எதிர்க் கட்சியும் இல்லாத சட்டசபை நிகழ்ச்சிகள்பற்றி..? 


'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்கிறார் முதல்வர். அவர் இதைத்தான் எதிர்பார்த்தார். அதுவே நடக்கிறது!

சி.பி - உள்ளாட்சித்தேர்தல்ல கேப்டன்க்கு  அல்வான்னு கன்ஃபர்ம் ஆகிடுச்சு, இனி பாருங்க, களை கட்டும் ...கேப்டன் மப்புல புள்ளி விபரம் சொல்வார் பாருங்க!



5. இரும்பு மண்வெட்டி 'ஸ்டாலின்’, வெள்ளி மண்வெட்டி 'அழகிரி’, தங்க மண்வெட்டி 'கனிமொழி’... போன்ற கதைகளை அமைச்சர் பேசியது சரியா? 


அமைச்சர் ந.சுப்பிரமணியம் தனது ஆதிதிராவிடர் நலத் துறையில் செயல்படுத்த எத்தனையோ ஆக்கபூர்வமான திட்டங்கள் இருக்கின்றன. இதுபோன்ற வெட்டிக் கதைகளை விடுத்து உருப்படியான காரியங்களில் ஈடுபடு வது மட்டுமே... அவரின் பொது வாழ்வுக்கு நல்லது!


  சி.பி - அண்ணன் அஞ்சாங்கிளாஸ் வரை தான் படிச்சிருப்பார் போல!!!!!!!


6. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்து சாதித்தது என்ன? 


அதை அவர்தான் சொல்லவேண்டும். ஆனால், அவர்தான் எதையும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லையே!

பேரறிவாளன், சாந்தன், முருகன் விஷயத்திலும் அவர் மௌனமே பதில். தூக்கு போட தேதி குறித்த செய்தியைக் கேள்விப் பட்டதும் ப.சிதம்பரத்துக்கு வைகோ போன் செய்திருக்கிறார். லைனுக்கு வரவில்லை ப.சி. காலை முதல் மாலை வரை பல தடவை முயற்சித்தும் ப.சி. பேசவில்லையாம். 'செய்தி உண்மையா? இல்லையா? என்பதையாவது கேட்டுச் சொல்லுங்கள்’ என்று உதவியாள ரிடம் சொல்ல... அதற்கு மட்டும் 'உண்மைதான்’ என்று பதில் சொல்லச் சொல்லி இருக்கிறார்

. இதை எனக்குச் சொன்ன ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர், 'புலிகளை ஆதரித்ததற்காக பொடாவில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த வைகோவை, சிவகங்கை தொகுதி பிரசாரத்துக்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தவரும் இதே சிதம்பரம்தான்’ என்றார்.


அரசியலும் பதவிகளும்தான் மனிதர்களின் குணங் களைத் தீர்மானிக்கின்றன!

சி.பி - மார்க்கெட் வால்யூ என்பதையும் சேர்த்துக்குங்க. 


7. ஓட்டுக்குப் பணம் குற்றம்... ஓட்டுக்குப் பின் இலவசம் குற்றம் இல்லையா? 


அது அதைவிடப் பெரிய குற்றம்தான்! ஓட்டுக்கு பணம், இரவில் தரப்படுகிறது. இலவசங் கள், பட்டப்பகலில் கிடைக்கின்றன. அது ஒரு கட்சியின், தனி மனிதர்களின் பணம். ஆனால் இலவசங்கள்... அரசாங்கத்தின், அனைத்து மக்க ளின் பணம்!


ஓட்டுக்கு பணம் வாங்குவதற்குச் சிலர் வெட்கப்படுகிறார்கள். ஆனால், டி.வி., மிக்ஸி கிடைத்ததைப் பெருமையாக நினைக்கிறார்கள். இரண்டுமே பாவங்கள்தான்!


சி.பி - கோயிலுக்கு உள்ளே போய் பாவம் பண்ணுனாலும், வெளில வந்து பாவம் பண்ணுனாலும் பாவம் பாவம் தானே?


8. தொடர்ந்து என்னைக் கவலைகள் வாட்டுகிறதே? 


'கவலைகள் - பறவைகள். அவை உங்கள் தலைக்கு மேலே பறப்பதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால், உங்கள் தலையின் மேல் அவை கூடு கட்டவிடாமல் தடுக்க முடியும்’ என்கிறது சீனப் பழமொழி!

 சி.பி - ஒரு சம்சாரம்மட்டும் கட்டி இருந்தா ஒரு கவலை, பல சம்சாரம் கட்டி இருந்தா பல கவலை!


9. இன்றைய நிலையில் துணிச்சலான தமிழகத் தலைவர் யார்? 


தங்கபாலுதான்!


'நானும் எவ்வளவு நாள்தான் தலைவராவே நடிக்கிறது?’ எனத் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டும், எவ்வளவு தைரியமான 'தலைவராக’ வலம் வருகிறார்! அவரைவிடத் துணிச்சலானவர் உண்டா சொல்லுங்கள்?

 சி.பி - கலைஞர் தான். சன் டி வி , கலைஞர் டி விக்கு ஆப்புன்னு தெரிஞ்சும், தன் குடும்பமே ஜெயில் வாசத்துல இருந்தும் இன்னும் வலிக்காதது மாதிரியே நடிக்கறாரே? குருதிப்புனல்ல கமல் பேசும் வசனம் தான் நினைவு வருது.  தைரியம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாதது மாதிரி நடிக்கறது.

tks - ju vi


டிஸ்கி 1 -

எங்கேயும் எப்போதும் - அசத்தலான திரைக்கதை யுக்தி + அஞ்சலியின் அழகு நடிப்பு - சினிமா விமர்சனம்

டிஸ்கி 2 -

வந்தான் வென்றான் - சந்தானம் பகடி + தப்ஸியின் ஜிகிடி - சினிமா விமர்சனம்

 

33 comments:

கடம்பவன குயில் said...

ஒரு சம்சாரம் கட்டினா ஒருகவலை. பல சம்சாரம் கட்டினா பல கவலையா???
என்ன ஒரு அரிய தத்துவம்...

எப்படி சிபி இப்படி?????

கடம்பவன குயில் said...

வழக்கம் போல சிபி கமெண்ட் நச்...

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் வெற்றியடைய என் வாழ்த்துக்களையும் இறைவனிடம் என் பிரார்த்தனைகளையும் முன் வைக்கிறேன்.

நிச்சயம் போராட்டம் விரைவில் வெற்றியடையும்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர் .

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பாலாவிடம் பேசினேன், இன்னும் ஐந்து நாள் தாங்கலாம்னு சொன்னார், நெஞ்சைக் குத்திக் கிழித்தது அந்த வார்த்தைகள். அஹிம்சை வளர்த்த காந்திய நாட்டில் 127 பேர் உண்ணாவிரதம் இருப்பதை கண்டும் நமக்கென்ன என்று அரசு இருப்பது எந்த விதத்தில் சரி என்று புரிய மாட்டேங்குது.

rajamelaiyur said...

//
மக்கள் சிந்தித்து வாக்களித்திருந்தால் காங்கிரஸ் ஆட்சி கூடத்தான் தவிர்க்கப்பட்டிருக்கும். யோவ்! நடந்து முடிஞ்சதைப்பற்றி என்ன பேச்சு? இனி ஆக வேண்டிய வேலையைப்பாருங்க!
//

உண்மை

மாதேவி said...

அணுமின் நிலையம் :(

மகேந்திரன் said...

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சு நண்பரே....

SURYAJEEVA said...

சி.பி. யும் ஜோதியில கலந்தது மகிழ்ச்சியா இருக்குதுங்க.. கூடங்குளம் குறித்து மேலும் ஒரு பதிவா.. இதை தாங்க நாங்க எதிர்பார்க்கிறோம்..

சக்தி கல்வி மையம் said...

மாப்ள நானே சொள்ளலாம்ன்னு நினைச்சேன் இந்தப் பிரச்சனைப் பற்றி ஒரு பதிவு போடுன்னு..

காட்டான் said...

போராட்டம் வெற்றி பெறவேண்டும்...

சசிகுமார் said...

நன்றி........

மாலதி said...

பாலா விற்கு உளம் நிறைந்த பாராட்டுகள் நன்றி . வழமைபோல உமது இடுகை சிறப்பனதகவும் சிந்திக்க தூண்டவும் செய்தன பாராட்டுகள் அணுமின் நிலையம் கூடாது கூடாது கூடவே கூடாது என எல்லூம் எதிர்ப்போம் ஒன்றுபடுவோம்...

குறையொன்றுமில்லை. said...

அணு சக்தி துறையை கையில் வைத்திருக்கும் வைத்திருக்கும் பிரதமரின் காதுகளுக்கு எட்டுமா இந்த அபலை மக்களின் கூக்குரல்?/ எட்டனும் கண்டிப்பா எட்டும்.

சம்பத்குமார் said...

அரசவையே ! உங்களின்
செவிக்குள் எங்களின்
ஒப்பாரிகள் ஒலிக்கவில்லையா ?
உங்கள் கண்ணீரின்
உப்பு கரிக்கவில்லையா ?
இதயக் கிணற்றில்
இரக்க நீர் சுரக்கவில்லையா ?
எங்களின் சுவாசங்கள்
அடைபடப் போகிறதே…
சுவாசிக்கும் உங்களுக்கு
இன்னுமேன் தெரியவில்லை ?



போராட்டம் கண்டிப்பாய் வெற்றிபெற வேண்டும்

நட்புடன்
சம்பத்குமார்

Jana said...
This comment has been removed by the author.
Jana said...

தேவையான பதிவு.. நன்றிகள்

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

முக்கியமான தகவல்கல் படித்தேன்

MANO நாஞ்சில் மனோ said...

எங்க அண்ணனா கொக்கா.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, கூடங்குளம், உன் கேள்விதாம்லேய் எங்க கேள்வியும்....

MANO நாஞ்சில் மனோ said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள நானே சொள்ளலாம்ன்னு நினைச்சேன் இந்தப் பிரச்சனைப் பற்றி ஒரு பதிவு போடுன்னு..//

நான் நாலு திட்டு திட்டுறதுக்கு முன்னே பதிவு போட்டுட்டான் இந்த பதிவுலக ராஸ்கல் சாரி "சூப்பர் ஸ்டார்....."

ம.தி.சுதா said...

என்றும் தர்மம் வெல்லும் சகோதரா


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
maruthamooran said...

அவசியமான பதிவு பாஸ்.

shaik said...

என்ன மேன் கரண்ட் இல்லை என்று ஆர்பாட்டம் செய்கின்றீர்கள் அப்படி கரண்ட் உற்பத்தி பண்ண மின் நிலையம் வைத்தால் அதற்கும் வேண்டாம் என்று போராட்டம் செய்கின்றீர்கள், வடிவேலு பணியில் வேணும் ஆனால் வேண்டாம் என்று போட்டு குழப்புகின்றீர்கள், இப்படித்தான் இந்தியாவிற்கு முதல் முதலில் கம்ப்யூட்டர் வந்த பொது எதோ அணுகுண்டு வந்தது போல நம்முடைய கம்யூனிஸ்ட் தோழர்கள் பயம் கட்டினார்கள் கம்ப்யூட்டர் வந்தால் வேலை போய்விடும் ஆடு குட்டி போடாது கோழிகள் முட்டை போடாது என்று ஒரே பீதியை கிளபினர்கள், எதில் தான் ஆபத்து இல்லை பஸ் ரயில் விமானம் எல்லாம் விபத்து நடத்து கொண்டுதான் இருக்கின்றது அதற்காக அதில் பயணம் செய்யாமல் இருகின்றீர்களா, செல்போன் பேசினால் கதிர் வீச்சு ஆபத்து இருக்கு என்று தலை தலையாக அடித்து கொள்ளுகின்றார்கள் அதுக்காக செல் போன் பேசாமல் இருகின்றீர்களா நில நடுக்கம் வரும் என்று மர வீட்டில் குடி இருகின்றீர்களா அடுக்கு மாடி வீட்டில் தானே குடி இருகின்றீர்கள், எல்லா வற்றிலும் நல்லது கேட்டது இருக்கின்றது

சென்னை பித்தன் said...

தேவையான நேரத்தில்,தேவையான பதிவு!

கோகுல் said...

@alavoudine
எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கு உண்மைதான்,ஆனா நல்லதெல்லாம் இருக்க ஏன் கெட்டத தேடனும்கரதுதான் போராடுபவர்களின் கேள்வி.சூரிய ஒளி,காற்றாலை போன்ற மரபுசாரா விஷயங்கள் இருக்க அனுஉலையை தேர்ந்தேடுப்பானேன்?
" "I made one great mistake in my life... when I signed the letter to President Roosevelt recommending that atom bombs be made;."
இதை சொன்னது அணுகுண்டை தயாரிப்பதில் பங்கு வகித விஞ்ஞானி ஐன்ஸ்டின் தான்.இது அணுகுண்டுக்கு மட்டும் பொருந்தாது கொஞ்சம் மிஞ்சினால் கதிர் வீச்சை கக்க வாய்ப்புள்ள அணுஉலைகளுக்கும் இது பொருந்தும்.மேலும் அணு உலைகளை வடிவமைத்த ரஷ்யாவும் விபத்துகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என கூறியுள்ளது.இதுதான் மேலும் யோசிக்க வைக்கிறது.போராட தூண்டுகிறது.கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டுமென்ற எண்ணம கிடையாது.

Unknown said...

நல்ல பதிவு

Unknown said...

இன்று என்னுடைய பதிவு

கூகுளின் அதிரடி சாதனை

உணவு உலகம் said...

நல்ல பகிர்வு.

இருதயம் said...

@கோகுல்

நண்பரின் பயம் அவசியமற்றது. ஒரு காலத்தில் நெருப்பை பார்த்து ஜனங்கள் பயந்தார்கள். அந்த நெருப்பினால் பல அழிவுகளும் வந்தது. ஆனால் இன்று நெருப்பு என்பது சிறு பிள்ளைகளும் பயன்படுத்த கூடிய அளவில் உள்ளது. காரணம் அதை பயன்படுத்துவதை நாம் அறிந்து கொண்டோம். அதே போல் அணுசக்தி என்பது நமக்கு புதியது அல்ல. கடந்த 40 வருடங்களாக அணு உலைகளை பயன் படுத்தி வருகிறோம். இது வரை எல்லாம் சரியாக தான் இருக்கிறது. ஆனால் நண்பர்கள் இந்தியாவை நம்புவதை காட்டிலும் அயல் நாடுகளை ஒப்பிட்டு பார்ப்பதே தலையாய கடமையாக எண்ணுகிறார்கள். அணு சக்தி ஒரு பசுமை சக்தி . அதனால் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு தாராளமாக கூடங்குளத்தை வரவேற்கலாம்

நவின் குமார் said...

எல்லா விளக்கத்தையும் சொல்லும் அணு சக்தி துறை இப்போதைக்கு சொல்ல வேண்டியது கழிவுகளை என்ன செய்ய போகிறோம் என்று தான்

”தளிர் சுரேஷ்” said...

அணுசக்தியை அழிவு சக்தியாக ஏன் பார்க்கவேண்டும்? பாதுகாப்புடன் பயன் படுத்தலாமே!