Thursday, September 08, 2011

சிங்கம் மாதிரி கர்ஜிக்கும் சீமான் ஜெவிடம் மட்டும் சிறு நரி போல் பம்முவது ஏன்? விகடன் பேட்டி - காமெடி கும்மி

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Vijayalakshmi-Photos/boss-engira-baskaran-vijaylakshmi-008.jpg 
அடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்!

சிலிர்க்கிறார் கொ.ப.செ. சீமான்
நீங்கள் இறந்த பிறகு, உங்களுடைய உடலை யாரிடம் ஒப்படைப்பது?’ - தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட பிறகு, இப்படி ஒரு கேள்வி எழுவது சிறைத் துறை சம்பிரதாயம். பேரறிவாளன், 'என் தாயிடம் ஒப்படையுங்கள்’ என எழுதிக் கொடுத்தார்.

ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்த முருகனும் சாந்தனும், 'எங்கள் உடல்களை அண்ணன் சீமானிடம் ஒப்படையுங்கள்!’ என எழுதிக் கொடுத்தார்கள். மரண மேகமாகச் சூழ்ந்த இந்தக் கொடூர நிகழ்வுகளை, சட்டப் போராட்டமும் சட்டமன்றத் தீர்மானமும் சுக்குநூறாக நொறுக்கிவிட்ட நிலையில், சீமானுடன் ஒரு சந்திப்பு...


1.  ''நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை... சட்டமன்றத்தில் தீர்மானம்... இந்த இரட்டிப்பு வெற்றி எப்படிச் சாத்தியமானது?''

சி.பி - தமிழகம் முழுக்க எழுந்த பிரம்மாண்டமான மக்கள் எழுச்சிதான் காரணம். எந்த ஒரு தனி நபரும் இதற்கு  சொந்தம் கொண்டாடிட முடியாது.. 




''முழுக்க முழுக்கப் பெண்களாலேயே நிகழ்த்தப்பட்ட சாதனை இது!


தூக்குக் கயிற்றை அறுத்து எறியும் இந்த அறப் போரை முன்னின்று நடத்தியவர்கள் பெண்கள். 21 வருடங்களாகப் பல தளங்களிலும் கண்ணீரைச் சுமந்தவர் எங்கள் தாய் அற்புதம் அம்மாள்.

அவருடைய கண்ணீரில் கருவான எழுச்சி, தங்கைகள் கயல்விழி, சுஜாதா, வடிவாம்பாள் அக்கா ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் நடத்திய பட்டினிப் போராட்டத்தில் பன்மடங்காக வீரியம் பூண்டது. தங்கை செங்கொடியின் மரணத்தில், ஒருமித்த எழுச்சித் தீயாக வெடித்தது.


தாய் உள்ளத்தோடு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, தமிழர்களின் எழுச்சி வென்றது. ஒரு தாயின் கண்ணீர், இன்னொரு தாயாலேயே துடைக்கப்பட்டது. கட்சிப் பாகுபாடு பார்க்காத அத்தனை தலைவர்களும் இதற்கு பக்க பலமாக நின்றார்கள்!''

சி.பி - ஆரம்பத்துல அம்மா “நான் எதுவும் இதுல செய்யறதுக்கில்லை”ன்னு எஸ் ஆகப்பார்த்தாரு... ஆனா தமிழகம் முழுக்க எழுந்த எதிர்ப்பு அலை  உள்ளாட்சித்தேர்தல்ல பாதிப்பு ஏற்படுத்தும் என உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்த பின் சுதாரித்து அடுத்து உருப்படியான முடிவு எடுத்துட்டார்.. 

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Seeman-Viji-reel-02.jpg


2. ''போர்க் குணத்தோடு போராடும் வழக்கம் உடைய நீங்கள், தூக்குத் தண்டனை விவகாரத்தில் ரொம்பவே அடக்கி வாசித்தீர்களே?''


சி.பி - அண்ணன் ஆல்ரெடி விஜயலட்சுமி மேட்டர்ல அம்மாகிட்டே இருந்து அழைப்பு வந்து விளக்கம் கேட்டா என்ன சொல்றது?ன்னு பம்பிட்டு இருந்தாரு, இந்த மாதிரி சூழ்நிலைல அம்மாவை எதிர்த்து அரசியல் பண்ண வேண்டாம்னு நினைச்சார் போல..  




''தொட்டதற்கெல்லாம் சட்டையைப் பிடிக்கிற ஆள் நான் இல்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த முதல்வர், நிச்சயம் மூன்று பேர் தூக்கு விவகாரத்திலும் அக்கறை காட்டுவார் என உறுதியாக நம்பினோம். ஈழத்தில் போர் தீவிரமானபோது கண்ணீர் உகுத்தால்கூட கைது நடவடிக்கையைப் பாய்ச்சினார் கலைஞர்.

தம்பி முத்துக்குமாரின் தீக்குளிப்பு தமிழ்நாடு முழுக்கத் தகித்தபோது, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இளைய சமுதாயக் கைகோப்பை ஒடுக்கினார். ஆனால், மூன்று பேர் தூக்கைத் தடுக்க, மனிதச் சங்கிலி, மத்திய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், தொடர்வண்டி மறியல், கவர்னர் மாளிகை முற்றுகை, தங்கை செங்கொடியின் உடலைவைத்து காஞ்சி முழுக்க ஊர்வலம் என எத்தனையோ போராட்டங்கள் நடந்தன. இதில் எதற்காவது அரசு அனுமதி மறுக்கப்பட்டதா? போராட்டங்களுக்காக யாராவது சிறையில் அடைக்கப்பட்டார்களா? அடக்குமுறைச் சட்டங்கள் பாய்ச்சப்பட்டனவா?

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் அரசாங்கத்தை எதற்காக நாங்கள் எதிர்க்க வேண்டும்? 'ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதில் என்ன தவறு?’ என, தங்கபாலு, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் சொல்வதைப்போல் முதல்வரும் சொல்லி இருந்தால், நம்மால் என்ன செய்திருக்க முடியும்?

சி.பி - அப்படி அம்மா சொல்ல 1% கூட சான்ஸ் இல்லை, காங்கிரஸ் கூட கூட்டு கிடையாது,வைக்கும் ஐடியாவும் அம்மாவுக்கு இல்லை, அப்படி இருக்கும்போதுதேவை இல்லாம சோனியாவுக்கு ஏன் ஜால்ரா அடிக்கப்போறாங்க? 



அப்படி ஒரு வார்த்தை வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு நொடியும் தவிப்பும் பதற்றமுமாக நாங்கள் தத்தளித்துக்கிடந்தோம். தன் எழுச்சியான மக்கள் போராட்டம்தான் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. எவ்வித சாயமும் இல்லாமல் உயர்நீதிமன்றத்தில் திரண்ட தலைவர்களாகிய நாங்களே ஆச்சர்யப்பட்டோம். மக்களின் பின்னால் தலைவர்கள் அணிவகுக்கும் காலம் வந்துவிட்டது.


'தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து...’ என்கிற வார்த்தைகளைத் தீர்மானத்தில் முதல்வர் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். கோரிக்கைகள் பலிக்காத இடத்தில்தான் கொந்தளிப்பு தேவை. பக்குவம் பழகியவர்களுக்கு இது புரியும்!''


சி.பி - அண்ணே, என்ன தான் சப்பை கட்டு கட்னாலும் குரலை உயர்த்திப்பேச முடியாட்டாலும் பம்மிக்கிட்டேவாவது அம்மா கிட்டே நீங்க இது பத்தி பேசி இருந்தா உங்க இமேஜ் டேமேஜ் ஆகாம இருந்திருக்கும்./.


http://telanganabuzz.com/upload/news/17767/vijayalakshmi-case.jpg

3. ''உங்கள் மீதான வழக்குகளுக்காகப் பயந்துதான் நீங்கள் அமைதி காத்ததாகச் சொல்லப்படுகிறதே?''

சி.பி - நிருபர் நேரடியா அட்டாக் பண்ணிட்டாரு.. இப்போ பாருங்க பெனால்டி கோல் எதிர்கொள்ளும் கோழி மாதிரி பார்ட்டி பம்மும் பாருங்க.. 


''வழக்குகளுக்குப் பயந்து அல்ல; என் இலக்குகளுக்குப் பயந்து! சிறையில் என் தம்பிகளின் தவிப்பை அருகே இருந்து அறிந்தவன் நான். வேலூர் சிறைக்குள் நான் இருந்தபோது, ரஜினி என்கிற வழக்கறிஞர் ஒரு விவகாரத்தில் சிக்கி உள்ளே வந்தார். மூன்று தம்பிகளின் தூக்கு குறித்து அவர் பேசியபோது, 'நான் செத்தால்தான், அவங்களைத் தூக்கில் போட முடியும்’ எனச் சொன்னேன்.


அந்த வார்த்தைகளைக் காக்க வேண்டியவனுக்கு, யாரையும் தாக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் தம்பிகள் இருவர் தீக்குளித்தபோதுகூட, 'உயிர் வேண்டாம்; உணர்வு போதும்’ என்றுதான் வலியுறுத்தினேன். வலிய போராட்டங்களையும் வன்முறைகளையும் நிகழ்த்திப் பெயர் வாங்குவது பெரிது அல்ல. ஆனால், மூன்று உயிர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி, அரசியல் செய்கிற ஆள் நான் இல்லை. எங்களுடைய நோக்கம் எதிர்க் கட்சி அரசியல் அல்ல; எதிர்கால அரசியல்!

சி.பி - என்னது எதிர்கால அரசியலா? அப்படி ஒரு நினைப்பு வேற அண்ணனுக்கு இருக்கா?அப்போ அண்ணி விஜயலட்சுமிதான் கொள்கை பரப்பு செயலாளரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

சிறை ஒருபோதும் என்னைச் சிதைக்காது; செதுக்கவே செய்யும். வழக்குக்குப் பயந்தவனாக இருந்திருந்தால், மாதச் சுற்றுலா போவதுபோல் கடந்த ஆட்சியில் சிறை வலம் வந்திருப்பேனா? காலம் முழுக்கச் சிறையில் அடைத்தாலும் சிறைக் கம்பியோடு கம்பியாக இந்தத் தம்பி இருப்பானே தவிர, வாய் பொத்தி நிற்பவர்களின் வரிசையில் நிற்க மாட்டான்!''


சி.பி - அண்ணன் இங்கே, மேடைல எல்லாம் சீற்றமாத்தான் பேசறாரு.. ஆனா அம்மா முன்னே போய் நிக்கும்போது மட்டும் பம்முறாரு.. அது ஏன்?


http://reviews.in.88db.com/images/stories/vijyalakhmi.jpg


4. ''நீங்கள் அடுத்தடுத்து பாராட்டு மழை பொழிவதைப் பார்த்தால், அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத கொ.ப.செ. ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே?''

சி.பி - அதுக்கு ஒரு பட்டியலே இருக்கே? இவரு இப்போ வந்தவர் தானே? போற போக்கைப்பார்த்தா கேப்டன் தான் அதிமுக வோட கொ ப செ ஆவார் போல..!!!!!!!!!!


''போரைத் தடுக்க கடந்த ஆட்சியில் எந்த அளவுக்குப் போராடினோம் என்பது தெரிந்தால், இப்படிக் கேட்க மாட்டீர்கள். கலைஞரை நாங்கள் போராடச் சொல்லவில்லை. அவர் அமைதியாக இருந்திருந்தால், எங்களின் போராட்டங்களாலேயே ஈழப் போரைத் தடுத்திருப்போம்.


கூடினால் குற்றம், சீறினால் சிறை எனச் சகிக்க முடியாத அரக்கத்தனங்களை அவிழ்த்துவிட்டு, ஒருமித்த தமிழர் எழுச்சியை கலைஞர் முடக்கியதை மறக்க முடியுமா? மூவரைக் காக்க தீக்குளித்த தங்கை செங்கொடிக்கு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஈழத் துயரங்களைத் தடுக்கக் கோரி உயிர்விட்ட தம்பி முத்துக்குமார் பெயரை சட்டமன்றத்தில் மொழிய கடந்த ஆட்சியாளர்களுக்குத் துணிவு இருந்ததா? காங்கிரஸுக்குக் கை கட்டி, வாய் பொத்தி இனத்தையே பலி கொடுத்த கலைஞர், 'அன்றைய நிலை வேறு; இன்றைய நிலை வேறு’ என வியாக்கியானம் பேசுகிறார்.


 சி.பி - ஆமா , அன்றைய நிலை தமிழகம் முழுக்க வளைச்சு போட்டாரு, இன்றைய நிலை தமிழகம் முழுக்க கோர்ட் , ஜாமீன்னு அலையறாரு..


20 வருட இறுக்க நிலையை இந்த இரண்டு வருடங்களில் உடைத்தவர்கள் நாங்கள். கலைஞரின் துரோகங்களுக்கு ஆளாகியவர்களுக்குத்தான் இப்போதைய ஆட்சியின் மகிமை புரியும்!''



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/04/vijayalakshmi.jpg

5. ''அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளாதது சர்ச்சை ஆனதே?''


''அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது சாத்தியமே இல்லை. அனைத்துக் கட்சிகளும் திரண்டால், தமிழகத்தால் தாங்க முடியுமா? அனைத்துக் கட்சிகளும் கைகோக்கும்என்கிற நம்பிக்கை இற்றுப்போய், ஒவ்வொருவர் பின்னாலும் ஓடிக் களைத்துத் திரும்பிய என்னையே அந்த சாத்தியமற்ற சங்கமிப்பில் இணையச் சொல்கிறீர்களே... ஒரு சாதாரணக் கட்சியின் மாநாட்டுக்குக்கூட லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரள்கிறார்கள்.

ஆனால், ஈழப் போரைத் தடுக்க நடந்த அனைத்துக் கட்சிப் போராட்டத்தில் திரண்டவர்கள் எத்தனை பேர்? எங்கள் கட்சி தேர்தலுக்கானது அல்ல; இனத்தின் தேறுதலுக்கானது. இங்கே தமிழர்களை இணைப்பது எளிது. ஆனால், தலைவர்களை இணைப்பது கடினம். ஒன்றாக நிற்க இங்கே எல்லோரும் தயார். ஆனால், யார் முன்னால் நிற்பது என்கிற அக்கப்போருக்குப் பதில் இல்லையே?''

 சி.பி - அண்ணன் வார்த்தை ஜாலத்துல அடி பிண்றாரு.. ஆனா செயல்ல அந்த அளவு புத்திசாலித்தனம் இல்லையே?





6. ''மாநில அரசின் தீர்மானம் குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் சொல்லி இருக்கிறாரே?''


''சோனியா சொன்னால் கேட்கிற சட்டம், எங்கள் முதல்வர் சொன்னால் கேட்காதா?




சி.பி - அண்ணன் சந்தடி சாக்குல எங்கள் முதல்வர் சொன்னால் அப்டின்னு ஒட்டி உறவாடறார் பாருங்க, அநேகமா அண்ணன் உள்ளாட்சித்தேர்தல்ல கூட்டணி போட்ருவாரு போல



முறையாகத் தேர்தலில் நின்று வெல்ல முடியாதவர்களால் எங்களைக் கொல்ல மட்டும் முடியுமா? அமெரிக்காவில்கூட குடியரசுத் தலைவரை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், தலையாட்டும் தகுதி மட்டுமே கொண்டவர்களை முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் நடைமுறை ஆகிவிட்டது.


மக்களாட்சி என்கிற பெயரில் சர்வாதிகாரப் போர்வையோடு அலைகிறது இந்தியா. திட்ட அமைச்சரையும் சட்ட அமைச்சரையும் நிர்மாணிக்கும் சக்தியாக எங்கள் முதல்வர் சீக்கிரமே உருவெடுப்பார். அடுத்த பிரதமரை அடையாளம் காட்டப்போவதும் அவர்தான்!

சி.பி - அடுத்து வரப்போவது பி ஜே பி தான், ஆனா அன்னா ஹசாரே தான் பி எம்னு ஒரு பேச்சு அடிபடுது பார்ப்போம், அத்வானிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.. 

http://filmreviews.bizhat.com/wp-content/uploads/2011/07/seeman-vijayalakshmi-affair-photo-3.jpg
இது தெரியாமல் தமிழக முதல்வரோடு மத்திய அரசு மோதினால், அன்றைக்குத்தான் தெரியும் தமிழர்களின் ஒருமித்த உணர்வு எத்தகையது என்று. அதுவரை அந்த சட்ட அமைச்சர் தன் கொட்டத்தை அடக்கிக்கொண்டால் சரி!''

சி.பி - சரி, அதெல்லாம் போகட்டும்னே, விஜயலட்சுமிக்கும் , எனக்கும் எந்த தொடர்பும் இல்லைனு சொன்னீங்க, ஆனா நீங்க பாப்பா பர்த்டே பார்ட்டில கேக் ஊட்டுன ஃபோட்டோ எல்லாம் அக்கா ரிலீஸ் பண்ணீட்டாங்க.. அதை எப்படி டீல் பண்ணுனீங்க?பிரபு தேவா மாதிரி பைசல் பண்ணுனீங்களா?

 thanx - vikatan

25 comments:

settaikkaran said...

தல, சீமான் இப்போ ஒரு காகிதப்புலி! அம்புட்டுத்தேன்! இந்த இலங்கைத்தமிழர் விஷயத்துலே ஒவ்வொருத்தரா நம்மளை ஏமாத்தியாச்சு; இப்போ இந்தாளும் சேர்ந்திட்டாருன்னு தோணுது! :-(

SURYAJEEVA said...

சும்மாவே குழம்புவோம் நாங்க.. இதுல ரெண்டு விஜய லக்ஷ்மி படத்த போட்டு இன்னும் எக்ஸ்டராவா குழப்புவது நியாயமா அண்ணே

Mathuran said...

சீமான் கூட ஜெவிடம் தோற்றுவிட்டாரே

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அண்ணா மொத்தமா குழப்புரியலேய் என்னாச்சு..?

MANO நாஞ்சில் மனோ said...

ஜெயலலிதாவா கொக்கா...!!

MANO நாஞ்சில் மனோ said...

தூக்கு தண்டனை இல்லாமல் மூவரும் விடுதலை ஆகவேண்டும் என்பதே என் அளவிலா தாகம்...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, நீ விஜயலட்சுமி போட்டோவை போட்டு சீம்மான் அண்ணனை தாக்குரியா உயர்த்துறியான்னே குழப்பமா இருக்குடா ராஸ்கல்...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

சி ..பி ...தம்பி ...
நீங்க ஏன் அரசியல்கு...
வரபிடாது .!!!!!!......குதிக்க கூடாது !!!!!!.
உங்கள்கு தொலை நோக்கு பார்வை
உள்ளது ....
உங்கள் பதில்கள் அட்டகாசம் ...

நிரூபன் said...

அடடா...அதிரி புதிரி பதில்களையல்லவா சீமான் சொல்கிறார்..

நிரூபன் said...

ஆமா பாஸ், நீங்க கும்முவது போன்று, மக்களின் ஏகோபித்த உணர்வெழுச்சியினைத் தனி நபர்கள் கொண்டாட முடியாது தான்,
ஆனால் எது நடந்தாலும் சீமான் தான் தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று தம்பட்டம் அடிக்கிறாரே ஏன்?

நிரூபன் said...

நல்லாத் தான்யா கடிக்கிறீங்க,
என்னது அண்ணி விஜயலட்சுமி கொள்கைப் பரப்புச் செயலாளரா...
அவ்...........

நிரூபன் said...

அனல் பறக்கும் பேச்சாளரை வைத்து அடிச்சுத் தூள் கிளப்பியிருக்கிறீங்க. ரசித்தேன் பாஸ்.

Yoga.s.FR said...

விஜயலட்சுமி கூட "இப்போ" எந்த தொடர்பும் இல்லேன்னு சொல்லியிருப்பாரு!இவரு தான் ஊதி பெருப்பிக்கிராறு!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர் .

செங்கோவி said...

எப்படி இருந்த சீமான்..

கடம்பவன குயில் said...

உங்களுடைய ஒவ்வொரு பே(ா)ட்டி கமெண்டும் நச்.....உங்க முன்னாடி நின்னு சீமான் உங்களின் பதிலடிகளுடன் பேட்டியை எதிர்கொண்டிருந்தால் எப்படியெல்லாம் திணறியிருப்பார் என்பதை பார்க்கவேண்டும் போலுள்ளது.

சீமானை சீண்டிய சிபியின் சீரியஸான பேட்டியாயிருந்திருக்கும். சிபி கமெண்ட் சூப்பர்.

monica said...

சீமான் என்ற களிமண்ணை ,கலைஞர் ஆட்சியில் சசிகலாநடராஜன் என்ற குயவர் பிசைந்து பிசைந்து சட்டியாக உருமாற்றி நந்தவனத்து ஆண்டியான அம்மாவிடம் கொடுத்து விட்டார்.இப்ப அம்மா கூத்தாடி கூத்தாடி போட்டு உடைக்கப் போ.....றா....ங்க...... டமா..............ர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏண்ணே ரெண்டு விஜயலட்சுமிக போட்டோவையும் போட்டிருக்கீங்க? உங்க கணக்கே புரியலையே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
எப்படி இருந்த சீமான்../////

அந்த பர்த்டே போட்டோவே இவர்தான் எடுத்திருப்பாரு போல...... அண்ணே மிச்சத்தையும் ரிலீஸ் பண்ணுங்கண்ணே....

Anonymous said...

சீமானின் மறு பக்கம்...

சுதா SJ said...

அம்மா நல்லது செய்யுறாங்க சோ சீமான் ஆதரிக்கிறார் என்று சொல்ல ஆசைதான், ஆனாலும் மனசாட்சி தடுக்குது...
இந்த ஜால்ரா அம்மாவுக்கு வேணும் என்றால் பயனை கொடுக்கலாம்...
சீமான் கட்சிக்கு இது இறங்குமுகத்தை கொடுத்துவிடும்...
யோசியுங்க சீமான்

ஜோதிஜி said...

அதென்ன படங்கள் எல்லாம் பெரிசு பெரிசா இருக்கு?

”தளிர் சுரேஷ்” said...

சீமான் சீன் ரொம்ப ஓவராதான் போடறாரோ? படங்கள்லாம் சூப்பரா இருக்கு!

மர்மயோகி said...

சீமான் அப்படி என்ன கிழித்து விட்டான்? அவன் ஊர் ஊராகப் போய் குரைத்துக்கொண்டிருப்பதர்க்கு காரணம் தேச துரோகி வைக்கோவுக்கு விடுதலைப்புலிகள் போடும் பிச்சையில் இந்த தேச துரோகி சீமானுக்குக்கும் சில எலும்புத்துண்டுகள் கிடைக்கிறது..அதற்காக இந்த நாய்கள் இந்தியாவுக்கே தேச துரோகம் செய்து பிழைத்து வருகின்றன..சீக்கிரம் இந்த மிருகங்களும் தூக்கு மேடைக்கு செல்லும் நாள் வரும்..

கும்மாச்சி said...

இலங்கை தமிழர் விஷயத்தில் எல்லோரும் அரசியல் பண்ணுகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.