Saturday, January 25, 2014

வல்லினம் - ‘ஈரம்’ மாதிரியே வித்தியாசமான கதைக்களமா? - இயக்குநர் அறிவழகன்


நாம் பார்க்கும் படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே நம் மனதை விட்டு நீங்காத இடத்தை பெறும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றான ‘ஈரம்’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் அறிவழகன். அந்தப் படத்திற்கு பிறகு ‘வல்லினம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார் அறிவழகன். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக்கொண்டிருக்கையில், ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம்.




‘ஈரம்’ மாதிரியே ‘வல்லினம்’ படமும் வித்தியாசமான கதைக்களமா?



'ஈரம்' பேய்ப்படம் என்றால் ‘வல்லினம்’ முழுக்க முழுக்க ஒரு பேஸ்கட் பால் விளையாட்டு சம்பந்தமான கதை. விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையில் காதல், நட்பு, வில்லன்கள் இப்படி எல்லாமே கலந்து திரைக்கதை பண்ணியிருக்கேன். 6 மாதங்களில் படத்தோட திரைக்கதை எல்லாம் எழுதி, மொத்த ஷுட்டிங்கும் 90 நாள்ல முடிச்சுட்டேன். ‘ஈரம்’ படம் எப்படி டெக்னிக்கல் விஷயங்களால் பெரிதும் பேசப்பட்டதோ, அந்த வகையில் ஒரு படி மேலே போய் இந்த ‘வல்லினம்’ படத்தை பண்ணியிருக்கேன்.



பேஸ்கட் பாலை மையமா வைச்சு கதை எழுத என்ன காரணம்?



நான் ஒரு பேஸ்கட் பால் ப்ளேயரோ, விளையாட்டு ரசிகனோ கிடையாது. இருந்தாலும் எனக்கு ஒரு ஆதங்கம் இருந்தது. எனக்கு மட்டுமல்ல சமூகத்துல இருக்குற மக்கள்கிட்ட ஒரு ஆதங்கம் இருந்துட்டு இருக்கு. இங்க கிரிக்கெட்டுக்கு இருக்கிற மரியாதை மத்த விளையாட்டுக்கு இல்லை. அந்த ஆதங்கத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கேன்


இந்த மாதிரி கதைல ஹீரோவுக்கு அந்த விளையாட்டு தெரியலைன்னா பாக்கும்போது சிரிப்பாயிடும்.. இல்லையா..?



ஒரு நடிகரை பிளேயரா நடிக்க வைக்குறது கஷ்டமான விஷயம்தான். எல்லாருமே இந்த கதைக்கு ஒரு பிளேயரை தான் நடிகராக ஆக்குவாங்க. நான் நகுலை முடிவு பண்ணினேன். ஏன்னா அவரோட எனர்ஜி. எப்போதுமே துறுதுறுன்னு இருப்பார் அதுதான் பேஸ்கட் பால் விளையாட்டுக்கு ரொம்ப முக்கியம். கிட்டதட்ட ஒரு மாசத்துல அந்த விளையாட்டுல இருக்குற முக்கியமான விஷயங்களை உடனே கத்துக்கிட்டார். படம் பாத்தவங்க எல்லாருமே அவர் ஒரு பாஸ்கட் பால் வீரராகவே மாறிட்டதா சொல்லியிருக்காங்க.



‘ஈரம்’மாதிரியே வல்லினம் படமும் மேக்கிங்கில் பேசப்படுமா?



‘ஈரம்’ படம் பாத்தீங்கன்னா ஒரு ப்ளூ டோன் (Tone) இருக்கும். அதே மாதிரி ‘வல்லினம்’ படத்துக்கு சிவப்பு டோன் அப்படினு ஃபிக்ஸ் பண்ணினேன். தமிழ்நாட்டுல சிவப்பு நிற கட்டிடம் இருக்குற கல்லூரியா தேடினேன். கோயம்புத்தூர் விவசாய கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி மட்டும்தான் சிவப்பு கலர்ல இருந்துச்சு. அங்கே ஷுட்டிங் அப்படின்னா வகுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாதுனு சொல்லிட்டாங்க. அதனால காலேஜ் லீவு நேரத்துல, சனி,ஞாயிறு இப்படி ப்ளான் பண்ணி ஷுட்டிங் நடத்தினோம். அதே மாதிரி காலேஜ் க்ரவுண்டுக்கு பக்கத்துல பேஸ்கட் பால் க்ரவுண்டு மாதிரி காட்சிகள் இருக்கு. அதுக்கு தமிழ்நாடு, ஐதராபாத்துல எல்லா காலேஜ்ஜையும் பார்த்தேன். கடைசில சென்னை பச்சையப்பா காலேஜ்தான் செட்டாச்சு.



இந்த மாதிரி விளையாட்டை மையப்படுத்தி எழுதின கதையில் கதாநாயகிக்கு நடிக்க ஸ்கோப் குறைவா இருக்குமே?


விளையாட்டை மையப்படுத்தி பண்ணியிருந்தாலும் நாயகி மிருதுளாவுக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கேன். நல்லா பண்ணியிருக்காங்க.



முதல் இரண்டு படங்களின் கதைக்களமும் பேய், விளையாட்டு... உங்க அடுத்த படத்தோட கதைக்களம்?



‘ஈரம்’ படத்தை ஏத்துக்கிட்டாங்க. ‘வல்லினம்’ வெளியான உடனேயும் எல்லாரும் பாத்து நல்லாயிருக்குனு சொல்லுவாங்கனு நம்பறேன். அதுக்கு அப்புறம் அப்படினு கேட்டா, இயக்குநர் அறிவழகனை வச்சு படம் பண்ணினா எல்லா விதத்துலயும் நல்லாப் போகும்னு என்னை நம்புற தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை வைச்சுதான் பண்ணுவேன். அதே நேரத்துல, நான் எழுதுற கதைக்கு இந்த நடிகர் சரியா இருப்பார்னு தோணினாதான் அப்ரோச் பண்ணுவேன்.



இயக்குநர் அறிவழகனை நம்பி படத்துக்கு வர்றவங்க எந்த விதத்துலயும் ஏமாறக்கூடாது அப்படிங்கிற விஷயத்துல நான் தெளிவாக இருக்கேன். தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா இல்லயான்னு எனக்கு தெரியல. எனக்கு பிடிச்ச கதையை எடுத்துருக்கேன் அப்படினு சொல்லவே மாட்டேன். நான் கதை எழுதுற அப்பவே எனக்கும் பிடித்து, ரசிகர்களுக்கும் பிடிக்கும் அப்படினு உறுதியா நம்பினாதான் திரைக்கதை எழுதவே ஆரம்பிப்பேன். இப்போ காமெடி டிரெண்ட், லவ் டிரெண்ட் அப்படினு எந்த ஒரு டிரெண்ட் பின்னாடியும் ஓடுற ஆள் நான் இல்லை!


thanx - the hindu 

Friday, January 24, 2014

கோலி சோடா - சினிமா விமர்சனம்

விக்ரமன் திரைக்கதையில் பாண்டிய நாடு சுசீந்தரன் இயக்கத்தில் 4 விஷால் நடிச்சா படம் எப்படி  இருக்கும், அப்படி இருக்கு, ஷப்பா  முடியலடா சாமி. பசங்க படத்தில்  யதார்த்தமான  உறவுகளை மென்மையாக ச்சொல்லி  கோல் அடித்த  பாண்டிராஜ்  இயக்குநராக  ஜெயித்து தயாரிப்பாளராக இதில்  தவறான  ஒரு கதையைத்தேர்ந்து எடுத்து  சொதப்பி  இருக்கிறார் .


கோயம்பேடு மார்க்கெட்  தான் கதைக்களம், அங்கே  பிஞ்சிலே பழுத்த பசங்க 4 பேர்  வழக்கம் போல்  பொண்ணுங்களை  ரூட் விடறாங்க . மனம்  கவர்ந்த  பொண்ணு  உங்களுக்குன்னு  தனி அடையாளமா என்ன  இருக்கு ? என கேட்க உடனே   4 பேரும்  சேர்ந்து  விக்ரமன் பாணில   ஆச்சி மெஸ்  ஆரம்பிச்சு  ஒரே பாட்டிலே நல்ல வேளை  கோடீஸ் வரன் எல்லாம் ஆகலை..  கொஞ்சம் வசதியா ஆகிடறாங்க . 


 அந்த  மெஸ்க்கு   ஒரு ரவுடி  கும்பல் வருது . அவங்களுக்கும் இந்த பொடிப்பசங்களுக்கும்  ஒரு மோதல் . அதுல  எப்படி பசங்க  ஜெயிக்கறாங்க என்பதை  மிக மிக செயற்கையாக , நம்ப முடியாத அளவில்   வலிந்து  வன்முறையைப்புகுத்தி  செயற்கையான அனுதாபத்தை வர வைத்து அதகளம் பண்ணுவதாக   நினைத்து  சொதப்பி  இருக்கிறார்கள் 


 அழகாய்  இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற கவித்துவமான  டைட்டிலுடன்  நல்ல கதையைத்தந்த  இயக்குநர்  விஜய் மில்டன் பல விஜய் , விஷால் படங்கள்  எல்லாம் பார்த்துக்கெட்டுப்போய் இப்படி ஒரு  லோ  கிளாஸ் மசாலாப்படம்  கொடுத்திருக்கிறார். 


படத்தில்  பாராட்டுப்பெறும்  விஷயம் இதை 2  மணி  நேரத்தில்    சுருக்கமா முடிச்சதே .அப்பாடா, விட்டாப்போதும்னு ஓடி வந்துட்டேன் , இனிதான் போய் பைக் எடுக்கனும் 


பசங்க படத்தில் வந்த அதே 4 பசங்க   இதில்  கொஞ்சம் வளர்ந்து  இருக்காங்க .அவங்க அளவில்  சொன்ன வேலையைச்செஞ்சு  இருக்காங்க 


20  ரவுடிகளுடன்  4 பசங்க  மோதுவது  , ஜெயிப்பது , க்ளைமாக்சில்  பயங்கர வில்லனுடன் பொடியன்கள்  மோதி  ஜெயிப்பது , பஞ்ச் டயலாக் பேசுவது என  விஜயையே  கிலி அடிக்க வைக்கும்  கில்லிக்காட்சிகள் உண்டு .


a



நச் வசனங்கள் 


1.  சூப்பர் ஃபிகருங்க எல்லாம் அட்டு ஃபிகருங்களைக்கூடவே வெச்சுக்குதே ஏன்? அப்படியாவது பசங்க நம்மைப்பார்க்கட்டும்னுதான் ( இதைச்சொல்வது  14 வயசுப்பையன் -அய்யோ அம்மா)



2 அப்பவே அம்மா சொல்லுச்சு பொம்பளைப்புள்ளைங்களை எல்லாம் நம்பாதேன்னு

  டேய் , உனக்குத்தான் அம்மாவே  இல்லையே ?

 எல்லா அம்மாக்களும் அப்படித்தானேடா சொல்வாங்க?



3  ஐஸ் க்ரீம் எப்போடா ஆர்டர்  குடுத்தே?


 நீ  கோபமா  இருக்கும்போதே கொடுத்துட்டேன்



4  என்ன  இருந்தாலும்  செக்யூரிட்டிக்கு இந்த  சின்சியாரிட்டி  இருக்கக்கூடாது  ( இதைச்சொல்வது  போலீஸ் ஆஃபீசரைப்பார்த்து )



 5 அடி வாங்குனா அநாதைப்புள்ளை கூட அம்மான்னு தான் கூப்பிடும் ( கொலம்பஸ் கண்டு பிடிச்சுட்டாரு )


6  பல் இல்லாதவனுக்கு பக்கோடாவும் , பஞ்சு மிட்டாயும்  1 தான்





இயக்குநரிடம்  சில கேள்விகள்



1  விஜய் , விஷால் இடம் கால்ஷீட் கேட்டு கிடைக்கலை என்பதற்காக இப்படி எல்லாம் உணர்ச்சி வசப்படுவது  நியாயமா?


2   டீன்  ஏஜ் பசங்க வாழ்க்கையை சொல்றேன்னு சொல்லி  13  டூ 14 வயசுப்பசங்களை இப்படி  கெடுத்து வெச்சதுக்கு என்ன பரிகாரம்  செய்யப்போறீங்க ?


3  க்ளைமாக்சில்   வில்லனை 4 பசங்களும்  நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தும் அட்டகாசமான கேவலமான் ஐடியா  யார் கொடுத்தது ? அநேகமா சம்பளம் வாங்காத ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராத்தான் இருக்கும்





 பாராட்டு பெறும் இடங்கள்


1  இமான் அண்ணாச்சியின்   காமெடி 10  நிமிசம் இருக்கு , மொத்தப்படத்துக்கும் அது 1 தான் ஆறுதல்


2  பவர் ஸ்டார்  ஒரு பாட்டுக்கு ஆடறார். அவர்  இனி சில்க் சுமிதா டிஸ்கோ சாந்தி ரேஞ்சுக்கு ஒரு பாட்டு ஆட்டக்காரர் ஆகிடுவார் போல

3  ஹீரோயினாக வரும்  கனகாம்பரக்கலர் உதட்டுக்காரி 16 வயசுப்பஞ்சு மிட்டாய்  நல்ல  முக வசீகரம் . பாந்தமான நடிப்பு ( யாரைக்குறை சொன்னாலும்  ஹீரோயினைக்குறை சொல்லாதோர் சங்கம் ) , ஹீரோயினின் அம்மா வாக வருபவர்   நடிப்பு



சி பி கமெண்ட் - கோலிசோடா - பிஞ்சில் பழுத்த பசங்க ளின்.செயற்கையான வன்முறை சினிமா =


 விகடன் மார்க் =39 ,


ரேட்டிங் = 2.25 / 5

ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன்



டிஸ்கி - இந்த கில்மா க்ரைம் த்ரில்லரை வழங்குவது

 -அட்ரா சக்க: நேர் எதிர் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/01/blog-post_2813.html

நேர் எதிர் - சினிமா விமர்சனம்

 

ஹீரோ  ஒரு பொண்ணை  உயிருக்கு  உயிரா  லவ் பண்றார். அந்த ஊர்லயே  ஃபேமசான  ஒரு கில்மா ஹோட்டல்க்கு அந்தப்பொண்ணு கார்ல போறதைப்பார்த்து ஃபாலோ பண்ணி அந்தப்பொண்ணு   ரூம் போட்ட ரூம்க்கு எதிர்  ரூம் ல ரூம் போடறார் ( அடேங்கப்பா, ஒரு வாக்கியத்துல எத்தனை  ரூம் ? நாம போட்டாச்சு ? ) .இப்போ அவளைக்கண்காணிக்கனும். இப்பவெல்லாம் பொண்ணுங்களைக்கண்காணிப்பதுதானே நாட்டோட ஹாட் டாபிக்?


கண்காணிப்பு நடக்கும்போது  ஹீரோ தன் உயிர் நண்பனுக்கு  ஃபோன் பண்ணி  மேட்டரைச்சொல்லி துணைக்கு அவனையும் வரச்சொல்றார். இப்போ  ஒரு ட்விஸ்ட். ஹீரொவுக்கு துரோகம் செஞ்சதும்  ,ஹீரோவுக்கு  நிச்சயம் ஆன பொண்ணோட  கில்மா பண்ண ஹோட்டல்க்கு அந்த ரூம் ல வந்ததும் அந்த  உயிர் நண்பன்  தான். 


 இந்த  ரூம் ல ஹீரோ , அந்த  ரூம் ல  ஹீரோயின் , வில்லன். அவன் வெளில வர வழி இல்லை . இனி என்ன நடக்கும் ? என்பதன் பர பரப்பான  க்ரைம்  த்ரில்லர் தான் நேர்  எதிர்  கதை .


அஜித்தின் மச்சானும் , ஷாலினி அஜித்தின் தம்பியும் ஆன  ரிச்சர்ட் தான் படத்தின்  வில்லன். ப்ளே பாய் கேரக்டர் பிரமாதமாப்பண்ணி  இருக்கார். கதிர்  இயக்கத்தில் காதல் வைரஸ் ல ஹீரோ வா நடிச்சாரே அவரே  தான் . படத்தில் மொத்தம் உள்ள  முக்கியமான அஞ்சு கேரக்டர் ல இவர்  தான்  முதல் பரிசு வாங்கறார். முகத்தில் பதட்டம் காண்பிக்கும்போதும் சரி , ஒரே  ஹோட்ட்ல ல 2  ஃபிகருங்களைக்கரெக்ட் பண்ணும்போதும் சரி அப்ளாஸ் அள்ளறார் ( தியேட்டர்ல இருந்த 13 பேர்ல அப்ளாஸ் அடிச்சது நாம மட்டும்  தான் . ஒரு பில்டப் வேணாமா? )


ஹீரோவா வருபவர்  புதுமுகம் பார்த்தி . ஏதோ பரவாயில்லை என்ற அளவில் தான் இவர் நடிப்பு . வாய்ஸ் மாடுலேஷனில்   வெரைட்டி காண்பிக்கிறேன் பேர்வழி என இவர் நிறுத்தி  நிதானமாக வசனம் பேசுவது வசனத்தை ஒப்பிப்பது மாதிரி இருக்கு . 



ஹீரோயினாக வரும்  வித்யா  60 மார்க்  போடும் அளவு சுமார் அளவைத்தாண்டிய   ஃபிகர் என்றால் , வில்லனின் எக்ஸ் & கரண்ட் கேர்ள்  ஃபிரண்டாக வரும் அந்த  ஃபிகர்  75 மார்க் அளவு பிரமாதமாக இருக்கார். இந்த  இயக்குநர்கள்ட்ட இருக்கும் கெட்ட பழக்கமே   சுமார்   ஃபிகரை  ஹீரோயினா போட்டுட்டு , பக்கா  ஃபிகரை  துணைக்கேரக்டரில்  போட்டுடுவதுதான் ( இதுக்கு ஏதாவது  முக்கிய உளவியல் , களவியல் காரணம் இருக்கும் என அவதானிக்கிறேன் , நேரம்  கிடைக்கையில்  விசாரித்து  இது பற்றி தாளிக்கிறேன் ) 


ஹோட்டல்   ரூம் பாயாக வரும்  எம் எஸ் பாஸ்கர்    கச்சிதமான நடிப்பு , அல்வா வாசுவும் இருக்கார் ,ஒரு சீனில் மட்டும் காமெடி பண்றார் . 


ஏதோ ஹாலிவுட் படத்தைப்பார்த்து  எடுத்திருக்கார்னு அப்பட்டமா தெரியுது . (நேர் எதிர் = உன்னோடு ஒரு நாள் = ACROSS THE HALL ( 2009))பரபரப்பான  கதை  தான் , நகாசு வேலைகள்  சேர்த்து  இன்னும் கலக்கி  இருக்கலாம் .100 நிமிடம் தான் மொத்தப்படமே . இயக்குநர் , ஜெயபிரதீப்  முதல் படம் என்ற அளவில்   ஓக்கே  தான் .  இசை சதீஷ் சக்ரவர்த்தி , பல இடங்களில்  பி ஜி எம்களில்  ஹாலிவுட் பட தழுவல் அப்பட்டமாய்த்தெரியுது . 

 என் பேரு லட்சுமி என்ற  ஒரு பாட்டில் அந்த  முதல் வரி புரியவே பாட்டு  முடிஞ்சிடுது . அது  ஒரு  ஹிட் பாட்டு 

 

இயக்குநரிடம்  சில கேள்விகள் 



1.  நிச்சயம் ஆன பெண்  அதே  ஊரில்  கில்மா லாட்ஜில்  ரூம் போடுமா?  டீசண்ட்டான  ஹோட்டலில்  தங்க மாட்டாங்களா? 


2   ஹீரோ  அந்த  ஹோட்டலுக்கு வந்து   ஹீரோயின் தங்கின  ரூம் எது என லெட்ஜரில் பார்த்து அதுக்கு  எதிர்  ரூம் வேணும்  என கேட்டு வாங்குவது பின்னாளில்  சாட்சி ஆகி விடாதா?  நானா  இருந்தா   ஜஸ்ட் சுத்திப்பார்க்கறேன்னு சொல்லி ஹீரோயின் ரூம்  நெம்பர்  நோட் பண்ணி  அதுக்கு  எதிர்  ரூம் எதுன்னு பார்த்துட்டு வந்து பின்  ரிசப்சனில்  குறிப்பிட்ட  ரூம் நெம்பர் வேணும் என கேட்டிருப்பேன் . கேட்டா லக்கி நெம்பர்னு  சாக்கு சொல்லிக்கலாம் 


3  ஹீரோயின்  ரூம் புக் பண்ண  ஹோட்டல் வரும்போது ஒரே  ஒரு ஹேண்ட் பேக் தான் வெச்சிருக்கார் . ஆனா ரூமுக்குள்  அவர் வரும்போது  ரூம் பாய் எக்ஸ்ட்ரா ஒரு ட்ராவல் பேக் கொண்டு வர்றார் . அடுத்த  சீனில்      3 பேக் ஆகிடுது . எப்டி ? 


4  யாரும்   5 வது மாடில  இருந்து டக்னு எஸ் ஆகிடக்கூடாதுன்னு   ஹீரோ தம்பிள்சை  லிஃப்ட் கதவின் இடுக்கில் மாட்டி வெச்சுடறார். ஓக்கே , ஆனா   ரிசப்ஷனில்  வார்னிங்க்  லைட்  எரியுமே ? ஏன் 6 மணி  நேரமா  யாரும் பார்க்கலை ? யாருமே லிஃப்டில் போக  முயற்சிக்கலையா? 



5  ஹீரோயின்  தங்கும்  ரூம்  நெம்பர் 504 . அதே வரிசையில்  5  ரூம்  இருக்கு.  ஆனா   504 க்கு  எதிர்  ரூம்  507 எப்படி  வரும் ?  அந்த வரிசையில்  ஹீரோயின் ரூம் 2 வது  ரூம் . 


6 வில்லன்    ரூமுக்குள்ளே   இருந்துக்கிட்டே  தன் நண்பனான  ஹீரோ கிட்டே  ரிசப்ஷன் க்கு கீழே  போ என   ஃபோனில்  சொல்றார். அந்த வாக்கியத்திலேயே தப்பு ,  காட்டிக்குடுத்த மாதிரி ஆச்சு . அவர் வெளில  இருந்து பேசுவது  போல் காட்டிக்கொள்வதால்  கீழே வா என  தானே அழைக்கனும் ? கீழே  போ என்றால் அவர் அந்த  ஹோட்டலில்  இருப்பது   ஹீரோவுக்கு  தெரிந்து  விடாதா? 

7 கதையின்  முக்கிய  ட்விஸ்ட்டே     வில்லன் தன்  செல் ஃபோனை  ஹீரோயின்  ரூம் ல போட்டுட்டு  ஹீரோயின்  ஃபோனை மாத்தி எடுத்துட்டுப்போவதில்  தான்  இருக்கு . அதை  ஹீரோயின் பார்த்துடறா. உடனே ஏன் அவ  ஃபோன் பண்ணி சொல்லலை ? 


8  வில்லன்  ஹீரோயின்  ரூமில்  இருந்து வெளியே வர வழி  இல்லை .  ஹீரோ எதிர்  ரூம் ல  இருந்து  நோட் பண்ணிட்டு இருக்கான் .  டைவர்ட் பண்ண   ஹீரோ லேண்ட் லைன் நெம்பருக்கு  ஃபோன் பண்றான் , ஹீரோ   கதவை விட்டு நகர்ந்ததும்   வில்லன் டக்னு  ரூமை விட்டு வெளியேறும் காட்சி கலக்கல்  தான். ஆனா இந்த  ஐடியா  ஹீரோவுக்கு ஏன் தோணலை ?  ஃபோனை அட்டெண்ட் பண்ணுனதும் கட் ஆகுதே , உடனே ஏன்  ஒடிப்போய் பார்க்கலை ? 


9  ஏன்  சைலன்ஸர் பொருத்தாம    ஹீரோ  ஒரு ஹோட்டல்  ரூம் ல கொலை செய்யனும் ? 


10  போலீஸ்   ஹோட்டலை சூழந்ததும்   ஹீரோ   ரூம் பாய்  டிரசில்  ஈசியா தப்பிச்செல்வது  போல் காட்டறாங்க. கொலை நடந்த  ஹோட்டலில்  விசாரணை  முடியும் வரை  யாரையும்  வெளில போக அனுமதிக்க மாட்டாங்களே? 


11  கொலை செய்யப்பட்ட  ஹீரோயின்  செல்  ஃபோன் ல லாஸ்ட்   ரிசீவ்டு கால், டயல்டு கால்  செக் பண்ணாலே   ஹீரோ மாட்டிக்குவாரே? டக்னு படத்தை  முடிச்சுட்டா  எப்படி ? 



 

நச்  வசனங்கள் 


1.ஹோட்டல் ல நாள் கணக்குல தங்கறவங்களை விட மணிக்கணக்கில தங்கறவங்க தான் அதிகம்



2 மிஸ்!,லிப்ட் ல போனா சீக்கிரம் மேலே போய்டலாம். யா.லைப் லயும் மேலே போய்டலாம்.படிக்கட்ல நடந்தாதான் ஆரோக்யம்


3 நாட் ல 5000 கோடி ஊழல் நடத்தினவன் எல்லாம் ராஜ வாழ்க்கை வாழறான் , ஆனா  5000 ரூபா லஞ்சம் வாங்குன சாதா ஆளை  ஜெயில்ல தள்ளுவாங்க


4 நண்பனுக்கு துரோகம் செய்யறவன்  வேற எது செய்யவும் அஞ்ச  மாட்டான் 



5 அவ மேல  உயிரையே வெச்சிருக்கேன்னு சொல்வியே , இப்போ உயிரையே எடுத்துட்டியே?


 உயிர்  போற வலியை  விடக்கொடூரமானது நம்பிக்கைத்துரோகம் 

 

சி பி கமெண்ட் -        இது   ஹாலிவுட் படத்தின் காப்பியோ , ஒரிஜினலோ படம் பர பரப்பா தான் போகுது . ஆனா   100  நிமிடம் என்பதால்  சிலருக்கு  ஃபுல்   மீல்ஸ் சாப்பிட்ட  திருப்தி  இல்லாமல்  போகலாம் . மற்ற படி ஒரு நல்ல க்ரைம்  த்ரில்லரே .ஈரோடு  தேவி அபிராமில படம் பார்த்தேன் 


ஆனந்த விகடன் மார்க் = 40 


 ரேட்டிங்க்  =  2.5 / 5

Across the Hall (2009) Poster

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 24 1 2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

 

நேர் எதிர்-கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரி யேஷன்ஸ் வழங்கும் நேர் எதிர்

thanu presents ner ethir
ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் நேர் எதிர்.


கலைப்புலி எஸ். தாணு வின் வி கிரியேஷன்ஸ் வழங்கும் தி மூவி ஹவுஸ் எண்டர்
டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.


கேயாரிடம் 12 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் கற்ற எம். ஜெயபிரதீப் இயக்கியுள்ளார்.


ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுட ன் பார்த்தி
அறிமுகமாகிறார்.


நேர் எதிர் ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர். முழுக்க முழுக்க இதன் கதை
இரவிலேயே நடக்கிறது. ஒரு காட்சி கூட பகலில் எடுக்கப் படவில்லை.


அது என்ன நேர் எதிர்? வழக்கமான நாயகன் வில்லன் மோதலா என்றால், மறுக்கிறார்

இயக்குநர்.


உலகில் எல்லா விலங்குகளும் அதனதன் சுபாவத்தில் சரியாகவே இருக்கின்றன. சிங்கம்
புல் தின்னாது; வேட்டையாடவே செய்யும். நாய் முனகாது; குரைக்கவே செய்யும். பூனை
குரைக்காது; மியாவ் என்றே கத்தும். பாம்பு கொஞ்சாது; சீறவே செய்யும். ஆனால்
மனிதன் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறான்.



ஒரு மனிதன் எப்போது புலி போல பதுங்குவான்,எப்போது சிங்கம் போல வேட்டையாடுவான்
என்று யாருக்கும் தெரியாது. எப்போது நரித்தனம் செய்வான், எப்போது பாம்பு போல
விஷத்தைக் கக்குவான் என்று யாருக்குமே தெரியாது. எல்லா விலங்குகளின்
குணத்தையும் தன்னுள்ளே கொண்டவனாக இருக்கிறான்.



ஒருவனைப் பற்றி உலகில் மற்றவர் நினைத்து நம்பி இருக்கும் எண்ணத்துக்கு நேர்
எதிர் ஆக அவன் இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை எடுத்துக்கொண்டு
சுவாரஸ்யப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் நேர் எதிர்.



படத்தில் வரும் 5 பாத்திரங்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று புரியாதபடி
காலம் நடத்தும் ஆட்டம்தான் திரைக்கதை.



இன்றைய யதார்த்த உலகில் நாகரிகம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளும்
போக்குகளுமே கதைப் பின்னணி.


இப்படத்துக்காக ஏவி எம் ஸ்டுடியோவில் ஒரு பெரிய செட் போடப்பட்டு பெரும்பாலான


காட்சிகள் அதில் படமாகியுள்ளன. மூன்று மாடிகள் கொண்ட இந்த செட் 75 லட்ச ரூபாய்

செலவில் போடப் பட்டுள்ளது.


தற்காலச் சூழலில் தவறு எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை படம்
பிடித்துக்காட்டும் கதை. காதல், நட்பு எல்லாம் இணைந்த சஸ்பென்ஸ். அடுத்தது

என்ன என்று ஊகிக்க, நம்ப முடியாத திருப்பங்களுடன் கதை பயணிக்கும்" என்கிற
இயக்குநர் ஜெயபிரதீப், இது ஆபாசம் அருவருப்பில்லாத படமாக இருக்கும் என்று
உத்திர வாதம் தருகிறார்.



நேர் எதிர் ஒரு நகரம் சார்ந்த கதை. ஏவி.எம். செட் தவிர சென்னையில் முக்கிய
சாலைகள், ஹோட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களிலும் படமாகீயுள்ளது.


படத்தில் 5 பாடல்கள். இசை சதீஷ் நாராயணன். இவர் ஏ.ஆர். ரஹ்மானின்
மாணவர்.ஏற்கெனவே கனிமொழி லீலை இசைய மைத்தவர். இப்படத்தின் பின்னணி இசையும்
பேசப்படும்
அறிவுமதி, அறிமுக கவிஞர் கமலக்கண்ணன் ஆகியோருடன் ஜெயபிரதீப்பும் பாடல்
எழுதியுள்ளார். ஸ்ரேயா கோஷல், நீத்தி மோகன், பிரபல பாப் சிங்கர் லண்டன் ஹர்ஷி
போன்றவர்கள் பாடியுள்ளனர்.



ஒளிப்பதிவு ராசாமதி. இவர் கவிஞர் அறிவுமதியின். மகன். சித்து+2.போன்ற
படங்களில் பணியாற்றியவர். கலை அறிமுகம் மாயாபாண்டி எடிட்டிங் கோபி கிருஷ்ணா.
இவர் ஏற்கெனவே வழக்கு எண் 18/9 குட்டிப்புலி மனங்கொத்திப் பறவை
படங்களில் பணியாற்றியவர்.



நேர் எதிர்படத்தை தி மூவி ஹவுஸ் எண்டர்டெய்ன் மெண்ட் நிறுவனம்
தயாரித்துள்ளது.படத்தைப் பார்த்த கலைப்புலி எஸ். தாணு, அதன் நிறமும், தரமும்
பிடித்துப் போகவே தன் வி கிரியேஷன்ஸ் சார்பில் வாங்கி வெளியிடுகிறார். வி
கிரி யேஷன்ஸ் சம்பந்தப் பட்டதுமே படத்துக்கு வெளிச்சம் அதிகரித்துவிட்டது.


பிரமாண்டம் கூடி விட்டது.
ராத்திரி நேர சென்னையை படத்தில் பிழிந்திருக்கிறார்கள். முழுப்படமும் சென்னையில்தான். அதிலும் ராத்திரிவேளையில். எல்லோரும் தூங்குகிற நேரம். என்றாலும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று பிரமாண்ட அரங்கு ஒன்றை நிர்மாணித்து முக்கிய காட்சிகளை அதில் எடுத்திருக்கிறார்கள்.

FILE

ராசாமதியின் ஒளிப்பதிவு படத்தின் வலது கை என்றால் ரஹ்மானின் முன்னாள் உதவியாளர் சதீஷ் சக்ரவர்த்தியின் இசை இடது கை. ரத்தமும் சதையுமான படம் போலிருக்கிறது.  வெளியாகும் மூன்று படங்களில் இதற்கு மட்டும்தான் யுஏ சான்றிதழ்.
ஈரோட்டில்  தேவி அபிராமியில்  ரிலீஸ் 

 
2.மாலினி 22 பாளையங்கோட்டை 22 பீமேல் கோட்டயம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம். இயக்கியவர் ஆஷிக் அபு. ஆண்களால் திட்டமிட்டு சூறையாடப்படும் பெண் அவர்களை பழிவாங்குவதுதான் படத்தின் நாட். பூ ஒன்று புயலானது விஜயசாந்தி கதைதான். ஆனால் ஆஷிக் அதனை கையாண்டவிதம் ரொம்ப மாடர்ன்.
FILE

முக்கிய குற்றவாளியான ஃபகத் ஃபாசிலுக்கு பாதிக்கப்பட்ட பெண் ரிமா கல்லிங்கல் தரும் தண்டனை சவுதி அரேபியா பாணி. அங்கு திருடினால் கையை வெட்டுவார்களாம். இங்கே ஃபகத்தின் அதை நறுக்குகிறார் ரிமா.

இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிராக... 
நடக்கும் குற்றங்களால் ஏற்பட்ட அறச்சீற்றம்தான் இந்தப் படத்தை ரிமேக் செய்ய காரணம் என்று சீறுகிறார் படத்தை ரிமேக் செய்திருக்கும் ஸ்ரீப்ரியா. ஒருகாலத்தில் இவர் காட்டிய கவர்ச்சியை இப்போது மறந்துவிட்டார் போலும். ஸ்ரீப்ரியாவின் கணவர்தான் தயாரிப்பு.
FILE

சம்பிரதாயங்களை சைலண்டாக நொறுக்குவதுதான் ஆஷிக் அபுவின் ஸ்டைல். இதற்காக மரபை காலி செய்கிறார் என்று ஒவ்வொரு நாளும் ஒரு கண்டெய்னர் விமர்சனங்களை எதிர்கொள்ளவும் செய்கிறார். தண்ணி அடிப்பது, ஃப்ரி செக்ஸ், பழிவாங்குவதற்காக உதவி செய்கிற பொpய மனிதனுடன் படுப்பது என்று சகல சினிமா இலக்கணங்களையும் இதில் மீறியிருந்தார். தமிழில் அதனை எந்தளவு ஸ்ரீப்ரியா கொண்டு வந்திருக்கிறார் என்பது கேள்வி.

இந்தப் படத்தின் போதுதான் ஆஷிக் அபுவும், ரிமா கல்லிங்கலும் நெருக்கமாகி திருமணம் செய்து கொண்டனர். மாலினி 22 பாளையங்கோட்டையில் ரிமா கல்லிங்கல் நடித்த வேடத்தில் நித்யா மேனன். அரவிந்த சங்கர் இசையமைத்துள்ளார். இரண்டு மணி பத்து நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. 
ஈரோட்டில் சண்டிகா , அண்ணா வில்  ரிலிஸ் \\\\
 
கோலிசோடா

கோயம்பேட்டில் உருவான கோலிசோடா

Kolisoda in Koyampedu

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை டைரக்ட் செய்த ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் 6 வருடங்களுக்கு பிறகு தற்போது டைரக்ட் செய்துள்ள படம் கோலிசோடா. 
படம் டைரக்ட் செய்ய யாருமே வாய்ப்பு கொடுக்காததால் தானே இந்தப் படத்தை சொந்தமாக தயாரித்தார். படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த டைரக்டர் லிங்குசாமிக்கு படம் பிடித்துப்போக இப்போது திருப்பதி பிரதர்ஸ் படத்தை வாங்கிவிட்டது. படத்தை நல்ல விலைக்கு விற்று விட்டதால் சந்தோஷத்தில் இருக்கும் வி.மில்டன் தனது கேமரா அசிஸ்டெண்டுகள் 4 பேருக்கும், உதவி இயக்குனர்கள் 4 பேருக்கும் தங்க சங்கிலியை பரிசாக வழங்கி தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

படத்தை பற்றி அவர் கூறியதாவது: கோலி சோடாவுக்குள் ஒரு விஷயம் இருக்கு. அமைதியா வச்சிருந்தீங்கன்னா தாகம் தீர்க்க உதவும். அதையே ரொம்ப பிரஷர் கொடுத்தீங்கன்னா வெடிச்சு சிதறிடும். படத்துல வர்ற நான்கு பசங்களும் அப்படித்தான். கோயம்பேடு மார்க்கெட்டுல கிடைகிற வேலை செஞ்சு வாழுற பசங்க, அவுங்கள போயி டார்ச்சர் பண்ணினா என்னாகும்றதுதான் கதை.

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு அடையாளம் வேணும். கோயம்பேடு மார்க்கெட்டு எனக்கு தெரிஞ்சு ஒரு 5 ஆயிரம் பேராவது எந்த அடையாளமும் இல்லாம இருக்காங்க. வேலை செய்றது, சாப்புடுறது, தூங்குறது இதை தவிர அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதிலேருந்து நான்கு பசங்கள எடுத்து கதை சொல்றேன்.

கோயம்பேடு மார்க்கெட்டுல பல மாசம் தங்கியிருந்து ஸ்கிரிப்ட் எழுதினேன். அங்கேயே படபிடிப்பு நடந்துச்சு. நாலஞ்சு கேமராவை ஆங்காங்கே மறைத்து வச்சு. ஷ¨ட்டிங் நடத்தினேன். சினிமா ஷ¨ட்டிங் நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது. நீங்க அடிக்கடி கோயம்பேடு மார்க்கெட் போறவங்களா இருந்தா இந்தப் படத்துல நீங்களும் வரலாம்.

ரொம்ப யதார்த்தமான ஆர்ட் படமும் கிடையாது, ஒரு குத்து சாங், ஒரு பார் சாங். கொஞ்சம் லவ்வுன்னு கமர்ஷியல் படமும் கிடையாது. இதை தாண்டி மூன்றாவது வகையா இந்தப் படத்தை எடுத்திருக்கேன். இதுக்கு பிறகு எனக்கு நல்ல இயக்குனர்ங்ற அடையாளம் கிடைக்கும்னு நம்புறேன். என்கிறார் விஜய் மில்டன்.
சினிமாவில் நீங்கள் இயக்குனராக இல்லாமல் வேறு எதுவாக இருந்தாலும் அது இரண்டாம்பட்சம்தான். இயக்குனர்தான் கேப்டன் ஆஃப் தி ஷிப். இருமுறை அந்த தொப்பியை அணிந்தவர்களால் அதனை கழற்றுவது கடினம்.
FILE

2006 ல் அந்த தொப்பியை முதல்முறையாக போட்டார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். முதல்முறை என்பதால் கட்டுப்பாட்டில் நிற்காமல் கப்பல் கவிழ்ந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு கோலி சோடாவின் மூலம் மீண்டும் கேப்டனாகியிருக்கிறார்.
 

அடையாளப் பிரச்சனைதான் இந்தப் படத்தின் கதை. அடையாளமே இல்லாத ஒரு குரூப்பின் அடையாள சிக்கல்களை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன் என்கிறார் விஜய் மில்டன். மீண்டும் 2006 ரிப்பீட் ஆகுமோ என்று அவரது பேச்சு பயமுறுத்தினாலும் டீஸர் வேறு மாதிரி உள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் வேலை பார்க்கும் சிறுவர்களும் அல்லாத டீன்ஏஜும் அல்லாத இரண்டுங்கெட்டான் வயதுக்காரர்களின் கதையிது. பாண்டிராஜின் பசங்க படத்தில் நடித்தவர்கள்தான் முக்கிய நட்சத்திரங்கள்.



ஆள்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் நான்கு கேமராக்களை மறைத்து வைத்து கொரில்லா பாணியில் படமாக்கினார்களாம்.

அருணகிரி பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தயாரிப்பு பாரதி சீனி. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தை விநியோகிக்கிறது.  இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்று வழங்கியுள்ளது.



ஈரோட்டில்  ஆனூர் , ஸ்ரீநிவாசாவில்  ரிலீஸ்

 

4   JAI HO
As soon as the Jai Ho
நாட்டில் நடக்கும் ஊழல், அநீதியை எதிர்த்து, சாதாரண மனிதன் எடுக்கும்
விஸ்வரூப போராட்டம் தான், இந்த படத்தின் ஒன்லைன். சிரஞ்சீவி நடித்து, நம்ம ஊர் முருகதாஸ் இயக்கி, 'ஸ்டாலின்' என்ற பெயரில், 2006ல் வெளியான, தெலுங்கு திரைப்படம் தான், இந்த படத்தின் மையக் கருத்து. இதில், அநீதியை கண்டு பொங்கி எழும் நபராக, வாழ்ந்து காட்டியுள்ளார், சல்மான் பாய். அவருக்கு உதவும் முக்கிய வேடத்தில், வெளுத்து கட்டியுள்ளார், தபு. 
இவர்களுடன், சுனில் ஷெட்டி, சனா கான் ஆகியோரும் உள்ளனர். சொகைல் கான் இயக்கியுள்ளார். 'அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கையை மையமாக வைத்து, இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது' என, யாரோ பீதியை கிளப்பி விட்டதால், பாலிவுட் திரையுலகம் பரபரத்து போய் கிடக்கிறது.
ஈரோட்டில் ஸ்ரீ கிருஷ்ணா வில்  ரிலீஸ் 
 A


47  RONIN  -கடந்த மாதம் உலகம் முழுவதும் ரிலீசாகி வசூலை குவித்த படம் 47 ரோனின். யுனிவர்செல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்ல எரிக் ரின்ஞ்ச் டைரக்ட் செய்திருந்தார். கேனு ரீவாஸ், ஹிரோயோகி சந்தா, கோ சைபாக்ஷி நடித்திருக்கிறார்கள். ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் ரிலீசானது. இந்தப் படம் இப்போது 47 சாகச வீரர்கள் என்ற டைட்டிலுடன் தமிழில் டப் செய்யப்பட்டு வருகிற 24ந் தேதி ரிலீசாகிறது


ஈரோட்டில்  வி எஸ் பி  யில்  ரிலீஸ் 
நன்றி  - தினமலர், மாலைமலர், ஆல் சினிமா நெட் 

உலகில் தோன்றிய முதல் வம்புக்கிழுத்தல் எது? ஒரு அழகிய ஆராய்ச்சி

1டைரக்டர் பாலா வின் நந்தா படமும் , அமைச்சர் சசிதரூர் மனைவி சுநந்தா இரண்டுக்கும் பொதுவான ஒற்றுமை எதிற்பாராத அதிர்ச்சி சோக முடிவு



==============



2ஒரு டைம் ஏ டி எம் ல பணம் எடுக்க 17 ரூபாயாம் .என் அக்கவுன்ட் ல் பேலன்சே 10 ரூபா தானுங்க்ணா


================



3சசிதரூர் அஜித் ரசிகராம்.சம்சாரம் விஜய் ரசிகையாம்.எந்தப்படம் முதல்ல பாக்கறதுன்னு தகராறாம் #,அட்ரா சக்க டுபாக்கூர் செய்திகள்



===============


4பசிச்சா கிச்சன் ரூம் போயோ ஹோட்டல் போயோ சாப்பிடாம " எனக்கு பசிக்கி" என ட்வீட் போடுபவனே தமிழன்


=================



5டைப்ரைட்டிங்கில் லோயர் ,ஹையர் எக்சாம் பாஸ் ஆனவங்கதான் பிரபல ட்வீட்டர் ஆக முடியும் என்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!



================



6 காங் கட்சி ஆம் ஆத்மி க்கு டெல்லி ல தர்ற ஆதரவும் ,நயன் தாரா -சிம்பு காதலும் 1, எப்போ வேனா வாபஸ் ஆகலாம்



=============



7 நீ இல்லாமல் எனக்கு எந்த சக்தியும்் இல்லை.ஆனால் நீ என் அருகில் இருப்பது மாதிரி உணரும் கற்பனா சக்தி தான் என்னை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது



==================


8  பனி வெடிப்பு வராமல் இருக்க உதட்டில் எண்ணெய் பூசிக்கொள்வது மாதிரி உன் முத்தம் பெறாத காய்ந்த கன்னத்தைக்காப்பாற்ற கண்ணீரால் ஈரப்படுத்துவேன்



===================


9 கச்சேரியில் பாடகி தன் மனதில் இருக்கும் காதலனை எதிரில் நிற்பது போல் கற்பனை செய்தும் பாடகன் அந்த பாடகியை காதலியாய் மனதில் நினைத்தும் !



================



10   நீ அருகில் இல்லாமல் போனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என உன்னிடம் வீம்பாய்க்காட்டிக்கொள்வதுதான் என் பலவீனம்.



==============


11 நான் உன் மீது அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அன்பு காட்டி வருவேன்.நீ எப்போது வந்தாலும் முழு அன்பையும் ஒரே மூச்சில் கர்ணன் போல் வழங்கிடுவா



=================


12 எதுவரைக்கும் இவன் தாக்குப்பிடிப்பான் என ்பரீட்சை வைக்கும் ஆள் நீ! எப்போது வருவாள் இவளைத்தாங்கிப்பிடிப்போம் எனும் எதிர்பார்ப்பில் நான்



===============



13 நம் இரண்டு உள்ளங்கைகள் சேரும்போது கை ரேகைகள் அவைகளுக்குள் பொருத்தம் பார்த்து இணைந்து கொள்கிறது



================


14 உலகில் தோன்றிய முதல் வம்புக்கிழுத்தல் காதலியின் ஜடையைப்பிடித்து இழுத்ததாகத்தான் இருக்கும் # சவுரிராணியின் டைரியிலிருந்து



=================


15  மண்டையைப்போடாத மனுசன் எங்கிருக்கான்.புருசன் கூட சண்டை போடாத சம்சாரம் எங்கே இருக்கு?



==============




16 அன்பே! சந்தையில் நீ 7 சவுரி வாங்கி வந்து தினமும் ஒன்று அள்ளி முடிவதால் இன்று முதல் நீ ஜடை ஏழு அள்ளல்கள் ஆனா



================



17 உடம்பு சரி இல்ல இன்னைக்கு நீங்க சமைங்கன்னு சம்சாரம் சொன்னா அடடா உனக்கு உடம்பு சரி இல்லைனு எனக்கு மனசு சரி இல்லைனு எஸ் ஆகிடுபவனே தமிழன்



===============



18 தன் வீட்டு சொந்தம் விருந்தினராய் வீட்டுக்கு வரும்போது உடம்பு சரி இல்லை,சமைக்க முடியாது என்று சொன்ன சம்சாரம் உலகத்தில் எங்கும்் இல்லை



===============



19 என் மேல இருக்கும் கோபத்துல சாப்டாம போய்டாதீங்கனு சம்சாரம் சொல்லுச்சு.வழக்கமா சாப்பிடும் 6 தோசைக்குப்பதிலா 8 தோசை சாப்ட்டேன் # யார்கிட்டே


================



20 புத்தகத்திருவிழா போய் இன்னின்ன புக்ஸ் வாங்கினேன் னு லிஸ்ட் போட்டவங்க ட்வீட்ஸ் எல்லாம் மார்க்டு.கேள்வி கேட்போமில்ல ?



====================

Thursday, January 23, 2014

சிம்பு தேவன் விஜய் இணையும் " செங்கோட்டை சிவப்பு சிங்கம்" படத்துக்கு ஜெ தடை.டைட்டில் மாற்றப்படுமா? விஜய் ஆலோசனை

Embedded image permalink
 Chimbu devan who is known for directing fantasy films like Imsai Arasan 23 aam Pulikesi, Arai En 305il Kadavul, Irmumbu Kottai Murattu Singam is all set to direct Vijay's next after AR Murugadoss project. Yes it is confirmed that PT Selvakumar(Vijay's PRO) and Thameens have paid the advance to the director and the project will kick start from August /September.


நன்றி -http://cinemalead.com/news-id-vijays-next-with-chimbu-devan-vijay-chimbu-devan-23-01-144359.htm

13h 
It is said that the film will be action  entertainer along with Chimbu Devan's fantasy element. Vijay who recently heard the one-liner was thoroughly impressed with Chimbu's narration.
 
 
1. விஜய் - சிம்பு தேவன் இணைந்து படம் பண்றாங்க.- செய்தி # டைட்டில் அறை எண் 143 ல் தலைவா் ?
 
 
 
================
 
 
 
2 சிம்பு தேவன் விஜய் இணையும் " செங்கோட்டை சிவப்பு சிங்கம்" படத்துக்கு ஜெ தடை.டைட்டில் மாற்றப்படுமா? விஜய் ஆலோசனை #,சும்மா
 
 
 
================
 
 
3  சார்.இது காமெடிப்படமா? ஆக்சன் படமா?
 
 
 
 இது பயங்கரமான ஆக்சன் படம். ஆனா பாக்கும்போது செம காமெடியா இருக்கும் 
 
 
================
 
 
4  கமலின்  விஸ்வரூபம் 2 ஆக்சன்க்குப்போட்டியா முருகதாஸ் கூட விஜய் படம்.உத்தம வில்லன் காமெடிப்படத்துக்குப்போட்டியா சிம்புதேவன் படம் அப்டினு  யாரும் இன்னும்  கிளம்பலையா? 
 
 
 
=============
 
 
 
5  10 1 2015 பொங்கல் ரிலீஸ் விஜய் சிம்புதேவன் படம் ரிலீஸ் # கூட்டுத்தொகை 10 வருவதால் டைட்டில் 10 எழுத்து வந்தா நல்லது
 
 
 
=================
 
 
 
6 வசீகரா ,மின்சாரக்கண்ணா ,பிரண்ட்ஸ் படங்களுக்குப்பின் விஜய் முழு நீளக்காமெடிப்படம் செய்கிறார்
 
 
 
================
 
 
 
7 பிரம்மானந்தம் காமெடி ரோலில் செய்தால் ஆந்திரா மார்க்கெட்க்கு யூஸ் ஆகும்.சிம்புதேவன் க்கு யோசனை
 
 
===============
 
 
8 சிம்புதேவன் பட விஜய் பஞ்ச் = சேவல் கூவுவதற்கு முன்னாலயே எந்திரிப்பேன்.ஆந்தை தூங்கினபின்தான் தூங்குவேன் # ஜெ வின் முன்னாள் சின்னம் சேவல்
 
 
 
=================
 
 
9 சார்.fantasy படம் பண்றீங்க்ளாமே? 
 
 
 
ஆமா.என் fans எல்லாரும் தலா ஒரு ரோல் பண்றாங்க 
 
 
 
=================
 
 
 
 
10 செல்வராகவன் மைன்ட் வாய்ஸ் - 60 கோடி செலவுல நாம செஞ்ச FANTASY படமே ஊத்திக்கிச்சு.இதுல இவர் வேற ரிஸ்க் எடுக்கறாரு.
 
 
 
=================
 
 
 
 
11  சிம்பு தேவன்படத்தில் விஜய் நடித்தால் இயக்குநர் மார்க்கெட் வேணா உயரும் ARமுருகதாஸ் ,ஷங்கர் படத்தில் நடித்தால் விஜய் மார்க்கெட் உயரும்
 
 
==============
 
 
12 விஜய் 58 # இளையதளபதி + சிம்புதேவன் = 7+6=13 , 58 = கூட் டுத்தொகை =13 #, ராசி 13 
 
 
 
===============
 
 
 
13 உள்ளத்தை அள்ளித்தா மெகா ஹிட் குடுத்தும் அடுத்து வந்த மேட்டுக்குடி யில் கார்த்திக் சம்பளம் உயரலை.ஆனா அமரன் பிளாப்னாலும் சம்பளம் ஏறிச்சு
 
 
 
==============
 
 
14 பொதுவா ஒரு ஹீரோ புதுப்படத்தொடக்கம் பற்றி அறிவிச்சா ரசிகர்கள் சந்தோசப்படுவாங்க.ஆனா இன்னைக்கு விஜய் ரசிகர்கள் அமைதியா இருக்காங்க.ஏன்?
 
 
================
 
 
15  சி தேவன் = சார்.உங்க டோட்டல் இமேஜையே மாத்திக்காட்றேன்.
 
 
 
 
 விஜய் - ஆ பு வேணாம்.உண்டான இமேஜைக்கெடுக்காம இருந்தாலே போதும்
 
 
 
================
 
 
16 சிம்பு தேவன் படத்தைப்பத்தி கலாய்க்க மாட்டேன்.எனவே அண்ணன் இட்ஸ் பிரசந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
 
 
 
===============
 
 
17  ரேட் பேசலாமா? 50 லட்சம் ரூ MGகட்டனும் ஒரு தியேட்டருக்கு. ( MG = மினிமம் கேரண்டி ) ,
 
 
 
 தியேட்டர் ஓனர் = நீங்க தியேட்டர் வாடகை கட்டிடுங்க. வர்ற லாபத்துல  ( சப்போஸ் லாபம் வந்தா ) ஆளுக்குப்பாதி 



================



18   இம்சை அரசன் புகழ் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் # படம் அம்சமா வந்தா சரி .இம்சையா வந்தா போச்சு
 
 
===============
 
 
 
19 விஜய் ரசிகர் வீராச்சாமி - ஜில்லாவோட கலெக்சன் எவ்ளவ் தெரியுமா? சார்.பேச்சை மாத்தாதீங்க.சிம்புதேவன் படத்தைப்பத்தி பேசிட்டிருக்கோம்
 
 
 
================
 
 
20  சி தேவன் - கன்னித்தீவு சிந்துபாத் கதையை உல்டா பண்ணி FANTACY COMEDY ஆக்கிடலாம்.ஓக்கே?
 
 
 
 ம்.படம் பூரா சிந்து குளிச்சுட்டே இருந்தாஎப்டி? 
 
 
 
==============
 
 
 
21  சிம்புதேவன் படம் போணியாகாதுனு சிலர் நக்கல் அடிக்கறாங்க.அதை புக் பண்ண தியேட்டருக்குத்தான் முருகதாஸ் படம்னு சொல்லிட்டா மேட்டர் ஓவர்
 
 
 
=============
 
 
 
22   அன்பே! பார்க்காமல் காதலித்தோம்.முருகதாஸ் படம் போல் கலக்கலாய் வந்து நிற்பாய் என நினைத்தேன்.சிம்பு தேவன் படம் போல் சுமாராய் இருக்கிறாயே!
 
 
 
 
=================
 
 
23  டான்ஸ் ஆடத்தெரிஞ்சவங்க தான் விஜயைக்கலாய்க்கனுமா? அண்ணே!,அப்போ நயன் தாரா ,நமீதா,சிம்பு,அனிரூத் கலாய்க்க என்ன திறமை வேணும்?
 
 
==============
 
 
 
24  ஷகீலா - என்னைக்கலாய்க்கனும்னா டெய்லி 10 டைம் நீ விடாம குளிச்சுட்டே இருக்கனும்
 
 
===============
 
 
 
25   விடிய விடிய ஜில்லாக்கதை கேட்டுட்டு விடிஞ்சதும் இதுல எப்டிண்ணே 100 கோடி கலெக்சன் வரும்ன் கேட்டானாம் ஒருத்தன்.அது மாதிரி...
 
 
===============
 
 
 
26  விஜய் -58 டெக்னிக்கலா பிரில்லியண்ட்டா இருக்கும் - சிம்பு தேவன் # குட்.திரைக்கதையை பிரில் இங்க் ல எழுதி இருப்பாரோ?
 
 
 
================
 
 
27  விஜயிசம் ரூல்ஸ் தமிழ் நாடு னு ஒரு கட் அவுட் நான் பார்த்தேன்.நல்ல வேளை நம்ம சி எம் பார்க்கலை. ஜெ யிசம் வெளிப்பட்டிருக்கும்
 
 
==============
 
 
 
 
 
 
 
 
நன்றி
தலைவி சன்னிலியோனுக்கு சல்மான்கான் புடவை உடுக்க சொல்லி கொடுக்கும் காட்சி...!:)
Embedded image permalink
 
 
 
 
 

சார்.இது காமெடிப்படமா? ஆக்சன் படமா?

1ஜட்ஜ் - உங்க பேருக்கு முன்னால 18 இனிஷியல் இருக்கே?



நடிகை - யுவர் ஆனர்.என்னைக்கட்டின புருசனை நான் கை விட்டதில்லை.இனிஷியலுக்கு மரியாதை




===================



2,,,ஜட்ஜ் - இந்தியாவில் இத்தனை பிகர் இருக்க பாகிஸ்தான் பிகரை ஏன் கரெக்ட் செஞ்சே?



 - சானியா மிர்சாவை பாகிஸ்தானுக்கு குடுத்தோம்.அதுக்கு பதிலா



======================



3 சார்.நீங்க டேக்கன் படத்தை காபி அடிச்சுத்தான் விருதகிரி எடுத்தீங்களா?




கேப்டன் - நோ.சரக்கடிச்சு எடுத்தேன்



====================


4,,,மாமா! உங்க பொண்்ணு ஓவரா சீன் போடுவா போல.




மாப்ளை!,ஓவரா பேசுனா அப்புறம் சோறு போடமாட்டா பாத்துக்குங்க


=====================


5டாக்டர்.கொழுப்பு ஜாஸ்தியா இருந்தா நெய் சேர்த்துக்கக்கூடாதா?




நெய் என்ன உங்க பொண்டாட்டியா? தாராளமா சேத்துக்கலாமே?



=================


6பொண்ணு பாக்கும்போது தான் ஒரு புத்தகப்ரியன்னு மாப்ளை சொன்னார்.ஆனா ஒரு புக் கூட படிச்சதே இல்லையாமே?




 அவர் சொன்னது FACEBOOK பிரியர்னு




====================



7ஜட்ஜ் - எதுக்காக மனைவியைக்கொலை செஞ்சே?



கைதி -சம்பளத்தை மனைவி கையில் தான் தருவோம்னு நிர்வாகம் சொல்ச்சு.இப்போ என்ன செய்வீங்க?


=================


8முதல் இரவில் நஸ்ரியா - டியர்.நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.தாலி கட்ன புருசனா இருந்தாலும் கவர்ச்சி காட்ட மாட்டேன்.ஒரு அனுமானமா பாத்துக்குங்க



=====================



9ஜட்ஜ் - பா கிஸ் தான் பிகர் எப்டி உங்களுக்கு செட் ஆச்சு?




கைதி - வழக்குக்காக கேட்கறீங்களா?,ஆதங்கத்துல கேட்கறீங்களா?



==================



10ஹிஸ்டரி மிஸ் ஹிலாரி - உத்தரப்பிரதேசம் ,மத்தியப்பிரதேசம் இரண்டில் எது செழிப்பானது?



லொள் மாணவன் - மத்தியப்பிரதேசம் தான் டீச்சர்


=================


11திருடன் - மரியாதையா பீரோ சாவியைக்குடு.இல்லைனா உன் சம்சாரத்தை கொலை செஞ்சிடுவேன்.



சாவியே அவ கிட்டே தான் இருக்கு.முடிஞ்சா எடுத்துக்க்


==================


12டியர்.தாடி வெச்சா எனக்குப்பிடிக்கும்



 . அய்யய்யே.பொண்ணுங்க் தாடி வெச்சா எனக்குப்பிடிக்காதே?


=================


13எதுக்காக பேங்க் வாசல்ல பிச்சை எடுக்கறே?



கைல காசில்லைனு ஒரு பயலும் பொய் சொல்ல் முடியாது.டக் னு பேங்க்ல கட்டிடலாம்



==================



14தமிழ் மிஸ் தன்யா - டெய்லி க்ளாஸ் ல தமிழ் ல ஏதாவது எழுதனும்.



 லொள் மாணவன் - உங்க அழகை வர்ணிச்சு ஒரு லெட்டர் எழுதவா மிஸ் ?




================


15திருடன் - எல்லாப்பணத்தையும் மூட்டை கட்டு.



 17 ரூபா துட்டு வெட்டு.ஒரு டைம் பணம் எடுக்க் சர்வீஸ் சார்ஜ் 17 ரூபா.நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு




================


16டாக்டர் ! பல்லி என் மேல விழுந்துடுச்சு .இப்போ நான் என்ன செய்ய?



மேடம் நீங்க பல்லி மேல விழுந்தாத்தான் பல்லிக்கு ஆபத்து.குளிச்ட்டு கிளம்புங்க



================



17டாக்டர்.எதுக்காக எனக்கு விஷ ஊசி போடறீங்க?



 மனைவி இறந்த சோகம் தாங்க முடியலைன்னீங்க்ளே? ,அவர் போன இடத்துக்கே போங்க


===================



18   டாக்டர்.பயங்கரத்தலைவலி.2 டீ 4 காபி குடிச்சும் போகலை.ஏன்?




மேடம் உங்க கையால போட்டுக்குடிச்சிருப்பீங்க.கடைல குடிச்சுப்பாருங்க



================



19  உதட்டுச் சாயங்கள் ஒரு வயதிற்குமேல் செட்டாவதில்லை பெண்களுக்கு



அப்போ 2 வயசு ஆகிட்டாலே லிப்ஸ்டிக் போடமாட்டீங்களா? 


================



20   சார்.இது காமெடிப்படமா? ஆக்சன் படமா?



இது பயங்கரமான ஆக்சன் படம். ஆனா பாக்கும்போது செம காமெடியா இருக்கும்



========================

விடியும் வரை பேசு - சினிமா விமர்சனம் (தினமலர் )

 
தினமலர் விமர்சனம்

முகம் தெரியா மனிதர்களுடனும், அறிமுகம் இல்லா அழகிகளுடனும், செல்போனில் பெரியவர்களின் சொல்பேச்சு கேட்காமல் கடலை போடும் ஆண், பெண் இருபாலருக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''விடியும் வரை பேசு''.

திருமணத்திற்கு காத்திருக்கும் தங்கை, விதவை தாய், குடும்பத்தை காப்பாற்றி வரும் தாய் மாமன், உருகி உருகி காதலிக்கும் தாய்மாமனின் மகள், அவருக்காகவே தன் புருஷன் அக்கா குடும்பத்திற்கு உதவுவதை தடுக்காத அத்தை... என உயிருக்கு உயிரான கிராமத்து உறவுகளை உடைய நாயகர் அனித்துக்கு, சென்னையில் வேலை கிடைக்கிறது. சென்னை வந்ததும் நாயகரின் போக்கில் எக்கச்சக்க மாற்றம். 
காரணம், அவரது செல்லுக்கு சின்னதாக வரும் ஒரு மிஸ்டுகால். மிஸ்டுகாலில் வந்த 'மிஸ்' உடன் நாயகர் அனித், அனுதினமும் கடல் அளவு காதல் வளர்க்க, அதை வெறும் பொழுதுபோக்காக கடலை வறுப்பதாக கருதுகிறார் அந்த மிஸ்டுகால் நாயகி! அதனால் நாயகர் அனித்தின் பிறந்தநாள் விழாவுக்கு வருவதாக சொல்லிவிட்டு வராமல் போகிறார் அந்த மிஸ்டுகால் மோகினி!

தன் முறைபையனுக்குள் வேறு காதல் வேரூண்றி விட்டதை அறிந்து, ஊரில் தாய்மாமன் மகள் விஷம் குடிக்கிறார். அதனால் பெற்றதாயின் வெறுப்பிற்கும், உடன்பிறந்த தங்கையின் வெறுப்பிற்கும் ஆளாகும் ஹீரோ, மிஸ்டுகால் மோகினி தந்த ஏமாற்றம், தாய்மாமன் மகளின் காதல் போராட்டம், நட்பு மற்றும் உறவுகளின் வெறுப்பேற்றம்... உள்ளிட்டவைகளால் ஒருமாதிரி மனநிலை பாதிப்பிற்கும், கஞ்சா 'அடிக்டு'க்கும் ஆளாகி தெருவில் போகும், வரும் இளம் பெண்களின் செல்போன்களை எல்லாம் பிடுங்கி உடைப்பதுடன் அவர்களை தாக்கவும் செய்கிறார்.

ஹீரோ அனித்தின் நிலைதான் இப்படி என்றால் இவரை ஏமாற்றிய மிஸ்டுகால் மோகினியின் நிலையோ இன்னும் மோசம். அந்த செல்போன் மோகினிக்கு பொழுதுபோக்கே இப்படி போனில் பலருடன் கடலை போடுவதுதான். 
அப்படி ஒரு குண்டுவெடிப்பு தீவிரவாதியுடன் மிஸ்டுகால் மோகினி தினமும் போட்ட கடலைக்காக போலீஸ் அவளை கைது செய்து தீவிரவாதிக்கும், உனக்குமான தொடர்பு என்ன? எனக்கேட்டு சித்ரவதை செய்கிறது! போலீஸ் சித்ரவதையில் இருந்து நாயகியும், சித்தபிரமையில் இருந்து நாயகரும் மீண்டும் கரம் கோர்த்தனரா? அல்லது நாயகரும், நாயகரின் தாய்மாமன் மகளும் திருமணம் புரிந்தனரா? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் 'விடியும் வரை பேசு' படத்தின் மீதிக்கதை!


நகரத்து நவநாகரீகங்களில் சிக்கி, கிராமத்து உயர்வுகளையும், உறவுகளையும் மறக்கும் நகர கிராமத்து ஆசாமி கேரக்டரில் அனித், கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவரது நடிப்பு நடனமெல்லாம் ஓ.கே. நடை, உடை, பாவனையில் உடை தான் உதைக்கிறது. என்னதான் பாடிபில்டர் என்றாலும் அதற்காக உடம்புகாட்டும் படியான முண்டாபனியன் மற்றும் பட்டன் போடாத சட்டைகளையும், அதிலும் அடிக்கும் சிகப்பு, பச்சை, மஞ்சள், நீலம் உள்ளிட்ட கலர்களில் உடை உடுத்தி ரசிகர்களின் கண்களை கூச செய்திருப்பதை மட்டும் அடுத்தடுத்த படங்களில் அனித் குறைத்து கொண்டு நடிப்பது அவருக்கும், தமிழ்சினிமா ரசிகர்களுக்கும் நல்லது!


நன்மா, வைதேகி என இரண்டு நாயகியர். மிஸ்டுகால் மோகினி ஒரு மாதிரி நகரத்து கவர்ச்சி என்றால், கிராமத்து தாய்மாமன் மகள், ஒரு மாதிரி கிராமத்து கவர்ச்சி என கலக்கி இருக்கின்றனர். பலே, பலே!

இமான் அண்ணாச்சி, மீரா கிருஷ்ணன், கிரேன் மனோகர், சிவநாராயண மூர்த்தி, தீனதயாளன், ராஜ்கிருஷ்ணா, கனகப்ரியா, கதிர், முனிராஜ், காளிகாபிரபு என எண்ணற்ற நட்சத்திரங்கள், தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!

'யாரோ அவள் யாரோ...', 'கன்னிப்பொண்ணு மனசு...' உள்ளிட்ட நான்கு பாடல்களும், புதியவர் மோகன்ஜியின் இசையில் தாளம் போட வைக்கும் ர(ரா)கம்! பின்னணி இசையில் இன்னும் ஸ்கோர் பண்ணனும் சார்!

ஆர்.ராஜாமணியின் அழகிய ஒளிப்பதிவில், எ.பி.முகனின் எழுத்து-இயக்கத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், இன்றைய நாகரீக உலகத்தில் யாராலும் தவிர்க்க முடியாத செல்போனையும், அதில் சில சமயங்களில் வரும் மிஸ்டுகாலையும் 'மிஸ்யூஸ்' செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக 'விடியும் வரை பேசு' படத்தை எடுத்திருப்பதற்கு பாராட்டியே ஆக வேண்டும்!

ஆகமொத்தத்தில், ''விடியும் வரை பேசு'' - ''செல், சில்மிஷங்களுக்கு எதிரான வீச்சு!''
 
thanx  - dinamalar 


  • நடிகர் : அனித்
  • நடிகை : நன்மா
  • இயக்குனர் :ஏ.பி.முகன்

Wednesday, January 22, 2014

என் கிட்டே நல்லா வாங்கிக்கட்டிக்கப்போறீங்கன்னு பொண்டாட்டி கோபமா சொல்லும்போது

110 நாள் சம்பளத்தோட லீவ் கிடைச்சாலும் 11,வது நாள் சலிச்சுக்கிட்டே ஆபீஸ் போறவன் தான் தமிழன்



=================



2ஐ லைக் யூ னு 1000 காளையர்கள் பிரபோஸ் செஞ்சாலும் பேஸ்புக் ல ஒரு குரங்கு போட்டோவை பிடிச்சு போட்டு" ஐ லவ் திஸ் க்யூட்" னு போடுபவரே தமிழச்சி




=======================


3ஐ லீவ் யூ னு காதலி ஊடலுக்காக கோபமாச்சொல்லும்போது கூட ஐ ஜாலி லீவ் என குதிப்பவனே தமிழன் ;-))





===============



4மலைக்கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதில் என்ன பிரச்சனைன்னா 1350 படி இறங்கி வருவதற்குள் ஜீரணம் ஆகிடும் #,நீதி = பார்சல் வாங்கிக்கனும்



==================



5ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் = கை இல்லா ரவிக்கை = ரவிக் # சுருக் தமிழ்




=================





6என் கிட்டே நல்லா வாங்கிக்கட்டிக்கப்போறீங்கன்னு பொண்டாட்டி கோபமா சொல்லும்போது டக்னு கட்டிப்பிடிச்சு இப்டியா ? னு கேட்டுடனும்



=================



7சேர்க்கை சரி இல்லைடா என அப்பா கண்டிப்பதற்கும் ,அதையே சம்சாரம் சொல்வதற்கும் மாறுபட்ட அர்த்தம் ;-))


===================



8காதலிக்கு இதுவரை முத்தம் கூடத்தந்ததில்லை என்பாரும் ஆன் லைன் சந்தா கட்டியும் எதுவும் படித்ததில்லை என்பாரும் ஒன்றே



==============


9பனி காலம் முடிந்து விடுவதில் பெண்களுக்கு ஏற்படும் தர்மசங்கடம் இனி கணவனால் உதட்டில் ஏற்பட்ட காயத்தை பனிவெடிப்பு என சமாளிக்க முடியாது



=================


10நைட் 12 க்கு எந்தப்பொண்ணு கிட்டே குட் நைட் சொல்லிட்டு படுத்தானோ அதே பொண்ணு கிட்டே அதிகாலை 4 மணிக்கு GM சொல்லிடறானே அவன் தான் தமிழன்



=================



11பொண்ணுங்க கலந்துக்கலைனு தெரிஞ்சதும் அசால்ட்டான சட்டை ,சாதா கோட் னு கோபிநாத் சராசரி ஆகிட்டார் பார்த்தீங்களா?,அங்கே தான் தமிழன் நிக்கறான்



==================



12மோடிக்கும் ,வீரம் பர்ஸ்ட் லுக் ஸ்டில்லுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. வெறும் டீ தானே? என எள்ளி நகையாடப்பட்டு பின் வெற்றி கண்டவர்கள்



=================



13குழந்தையைக்கண்டிக்காத ,திட்டாத ,அடிக்காத அப்பாவை விட அதை எல்லாம் செய்யத்தயங்காத அம்மாவைத்தான் குழந்தை விரும்புவது புரியாத புதிர்


====================



14நீயா? நானா? இன்னைக்கு சப் னு தான் இருக்கும்.லேடீஸ் இல்லை போல




===============



15இன்னும் எத்தனை தோசை வேணும் னு கேட்டு சூசகமா டிபனை முடிச்சுக்கச்சொல்றா.இன்னும் 8 போதும்னுட்டேன் #,யாரு கிட்டே?



===================


16இந்த பொண்டாட்டிங்க எல்லாம் அவங்கம்மா வீட்ல இருக்கும்போது நமக்குக்குடுக்கும் மரியாதை என்ன? நடிகையர் திலகம் சாவித்ரி தோத்தாங்க போங்க



================


17மகாபாரத்த்தை இயற்றியவர் வேணா வியாசரா இருக்கலாம்.ஆனா அதை மக்களுக்கு டி வி ல வழங்குபவர் பூர்விகா மொபைல்சாம்



===============



18பூந்தி ,மிக்சர் சாப்ட்டு பாத்து வாங்கறதைக்கூட ஒரு வகைல ஒத்துக்கலாம்.கரும்பு வாங்கும்போது கூட ஒரு கரணை சாப்ட்டு பார்த்துதான் வாங்கறவங்களை



===================



19சிவகார்த்திகேயனுக்கு ரசிகைகள் அதிகம் எப்டி ங்கறதை கண்டுபிடிச்ட்டேன்.அவரு லேடீஸ்ட்ட ரொம்ப ஒபீடியன்ட்டாம் # உமாரியாஸ் @விஜய் டிவி



==================


20கோலி மாதிரி வீரமா பேட்டிங் பண்ண இந்த ஜில்லா லயே யாரும் கிடையாது


========================