Wednesday, August 15, 2012

அட்டகத்தி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4ZKnKmu1vbj66VfftnQboUbAahyP3EhDJ3KSSTJuIGGQj2ImtFmH9S_vIpHZo04cu9e_6T94nz5kRatIHWSbbNnpXMWC9hTYAPAgFxxhi4ziqzAa3CUOo9o6IMM8aev41PPYg94XbW7w/s1600/attakathi_movie_posters_wallpapers_004.jpgஅண்ணா என்றழைத்த பெண்ணை கண்ணா எண்றழைக்க வைக்கத்துடிக்கும்  ஒரு  சராசரி இளைஞனின் எளிமையான காதல் கதைதான் இந்த அட்டகத்தி..அட்டகத்தின்னா என்ன? . டம்மி பீஸ், வெத்து வேட்டு = அட்டகத்தி.. அந்தக்காலத்துல எம் ஜி ஆர் அட்டைக்கத்தி வீரர்னு எதிரிகளால் கிண்டல் செய்யப்பட்டார்.. ஆனால்  அவர்  அடைந்த புகழ் அளப்பரியது.. 


ஹீரோ +2 ல ஒரு பேப்பர் போயிடுச்சு,ஒவ்வொரு எலக்‌ஷன் வர்றப்பவும் டாக்டர் ராம்தாஸ் எப்படி அடுத்த தேர்தலில் நான் தான் சி எம்னு சொல்வாரோ அந்த மாதிரி 4 வருஷமா பாஸ் ஆகிடுவேன், அடுத்த வருஷம் பாஸ் அப்டினு ரீல் விட்டுட்டு பார்க்கறவங்க கிட்டே காலேஜ் ஸ்டூடண்ட்னு ரீல் விட்டுட்டு திரியறார்


பார்த்தேன் ரசித்தேன் படத்துல வர்ற மாதிரி ஹீரோ பஸ்ல பார்த்த ஒரு ஸ்கூல் ஃபிகரை லவ் பண்றாரு.. வழக்கம் போல அந்த ஃபிகர், பார்க்குது, சிரிக்குது... ஆனா லவ் சொல்ல வரும்போது “ அண்ணா, என்னை விட்டுடு”ங்குது.. ஹீரோ உடனே தாடி எல்லாம் வளர்த்து தேவதாஸ் ஆகலை.. அடுத்த ஃபிகரை பார்க்கறான்..


வீட்டுக்கு எதிர் வீட்டுப்பெண் ஒண்ணு பார்த்து சிரிக்குது.. அதையும் ரூட் விடப்பார்க்கறான்.. அப்புறம் பார்த்தா அது அண்ணன் ஃபிகரு, அண்ணி முறை.. இப்படியே டாக்டர் ராம்தாஸ் அரசியல் மாதிரி மாறி மாறி பச்சோந்தி மாதிரி ஹீரோவுக்கு மனசு மாறிட்டே இருக்கு. ஸ்கூல் லைஃப் முடிஞ்சு  எப்படியோ கேப்டன் கரை சேர்ந்த மாதிரி பாஸ் ஆகி காலேஜ் போறாரு..  இதுவரை படம் பவானி ஆற்றுத்தண்ணீர் மாதிரி  தெளிவா , அமைதியா, ஜாலியா போகுது.. 


இடைவேளைக்குப்பிறகு கல்லூரி வாசல் பிரசாந்த் கெட்டப்ல ஹீரோ ரூட்டு தல... என்ற காலேஜ் சேர்மேன் மாதிரி ரவுடி ஆகறார்.. காடு வெட்டி குரு மாதிரி பார்த்த ஆள்ங்களை எல்லாம் அடிக்கறார்.. காலேஜ்ல ஆரம்பத்துல அவர் ரூட் விட்ட ஃபிகரு காலேஜ் படிக்க வருது.. 


 இவரை பார்த்து ஏன் இப்படி இருக்கே?படு கேவலமா இருக்கியே? அன்னைக்கு எப்படி இருந்தே?ன்னு உசுப்பேத்தி விடுது.. பழைய சசிகலா கதவைத்திறன்னு ஜெ சொன்ன மாதிரி ஹீரோ மறுபடி அந்த பொண்ணு பின்னால சுத்தறார்.. முரளி மாதிரி கடைசி வரை காதலை சொல்லாம மென்னு முழுங்கிட்டே இருந்தா என்ன கதி ஆகும்?கறது க்ளைமாக்ஸ்..



http://tamil.cinesnacks.net/photos/movies/Attakathi/attakathi-movie-stills-158.jpg


ஹீரோ புதுமுகம். இடைவேளை வரை இவர் நடிப்பு கலக்கல்.. தெனாவெட்டான நடிப்பு.. அக்மார்க் சராசரி பிளஸ் டூ மாணவன் பாடி லேங்குவேஜ்.. ஒவ்வொரு ஃபிகரும் அவரை ரிஜக்ட் செய்யும்போது கொஞ்சமே கொஞ்ச நேரம் வருத்தப்படுவதும், பின் ஜாலி ஆவதும் செம. 


 ஆனா இடைவேளைக்குப்பின் அவர் சேது விக்ரம் மாதிரி , பானுச்சந்தர் மாதிரி நடிப்பில் இமிடேட் பண்றார்.. ஆனாலும் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.. 


 ஹீரோயினும் புதுமுகமே.. கொஞ்சம் ஏறு நெற்றி.. கிராமத்து முகம், நகரத்து முகம் கலந்த கலவை.. ஸ்கூல் கேர்ள், காலேஜ் கேர்ள் என அவர் காட்டும்  மாறுதலான முகத்தோற்றங்கள் அழகு.. 


 படத்தில் முக்கியமான ஹீரோ இசை.. படம் ரிலீஸ் ஆகும் முன்னே ஹிட் ஆன பாடல்கள்.. அதுவும் ஆடி போனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி பாட்டு ஹை லைட்.. அலட்டிக்காத இசை.. மனதைக்கொள்ளை கொள்ளுது.. பின்னணி இசை ஓக்கே.. ஆனா பல காட்சிகளில் அந்தக்கால டிராமா இசை போல் போட்டிருப்பதால் படமும் டிராமா பார்க்கும் உணர்வையே தருது.. 

http://masscinema.in/wp-content/gallery/attakathi-movie-stills_1/attakathi-tamil-movie-stills-57.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. அம்மா, என் ஜட்டி எங்கே?



அங்கே தான் இருக்கும் பார்டா.. 


இல்லை


 எங்கம்மா வீட்டுக்கு கொடுத்து விட்டிருக்கேன்.. 

ம்க்கும், அய்யோ என்னம்மா இது அடுப்புக்கரித்துணியா வெச்சிருக்கே?



2.  லவ்வர்ஸ் பாய்ஸ்னா அப்படித்தான்.. ஃபீல்டு ஒர்க் பண்ண போயிடனும்.. 



3. விட்றா, நீ தமிழ்லயா ஃபெயில்.. இங்க்லீஷ்ல தானே?அந்நிய நாட்டு மொழியை படி படின்னா எப்படி படிக்க?


4. படிக்கலைனாலும் ஈசியா பரீட்சை எழுதலாம் மச்சி.. இங்க்லீஷ் கொஸ்டீன் பேப்பர்ல இருக்கறதை அப்படியே எழுதனும், ஆனா ஒரு கண்டிஷன்.. நீ எழுதி இருக்கறது யாருக்கும் புரியக்கூடாது.. 


5.. டேய் என்னடா..? ஃபிகர் உன்னை பார்த்து சிரிக்குது?


ஹி ஹி 

 அய்யய்யோ, நீயும் அவளைப்பார்த்து சிரிக்கறே.. 

 ஹி ஹி \


 அடப்பாவி.. நான் 3 வருஷமா ட்ரை பண்றேன்.. ஆனா எனக்கு சிக்கலை, ஜஸ்ட் 3 மாசத்துல நீ கரெக்ட் பண்ணிட்டியே மச்சி.. 



6.  அண்ணா! இனி என் பின்னால வராதே! 


 என்னது? அண்ணனா?



7. விட்றா.. இப்போ நான் சோகமா இருந்தா மட்டும் அது என்ன என்னை மாமான்னா  கூப்பிட்றப்போகுது?


8. இவர் தான் ஹீரோவோட அப்பா.. இவருக்கு எப்போ எல்லாம் கோபம் வருதோ அப்போ எல்லாம் வாழை மரத்தை வெட்டுவார்.. அதான் அட்டைக்கத்தி ஃபேமிலி.. 


 9. பாழாப்போன வாத்தியார் 2 மார்க் சேர்த்து போட்டிருந்தா  ஆகாதா? என் பையன் அப்பவே பாஸ் பண்ணி இருப்பானே?


 உங்க பையன் ஃபெயிலா?

ச்சே ச்சே ஒரு பேப்பர்ல தான் போச்சுங்க.. அம்மா தெரியாம சொல்றாங்க.. 


 ஆமாமா, ஒரு பேப்பர் தான், ஆனா 4 வருஷமா அதை க்ளியர் பண்ணாம இருக்கான்.. 


10. அடடா.. அடடா.. 2 பொண்ணுங்களும் பார்க்கறாங்களே, திவ்யா, நதியா 2 ல யாரை செலக்ட் பண்ண? ஒரே குழப்பமா இருக்கே?


http://moviegalleri.net/wp-content/gallery/attakathi-shooting-spot-stills/attakathi_movie_shooting_spot_stills_1e167d0.jpg



11. நல்லாதான் பார்க்குது, சிரிக்குது.. நான் கூட செட் ஆகிடும்னுதான் நினைச்சேன்.. ஹூம்


12. நான் நல்லாத்தானே இருக்கேன்?டிரஸ்ஸிங்க் சென்ஸ் நல்லாத்தானே பண்றேன்?அவனைப்பார்த்தா அவளுக்குப்பிடிக்குது.. என்னைப்பார்த்தா பிடிக்கலை, அது ஏன்?


13. ஹாய்.. சாப்டாச்சா?


 ம் ம் 


 சாப்பிடலைன்னா பிரியாணி வாங்கித்தரலாம்னு நினைச்சேன்.. 

 ஸாரி.. அது காலைல சாப்பிட்டதை சொல்லிட்டேன், இப்போ சாப்பிடலாம்ங்க.. 




14. அப்போ  எல்லாம் என்ன ஸ்டைலா இருப்பே.. இப்போ ஏன் இப்படி இருக்கே? பார்க்க பொறுக்கி மாதிரி இருக்கு.. 


15. ஹலோ.. லெட்டர்னா கேவலமா?இன்னைக்கும் காதலை சொல்ல அழகான வழி கடிதம் தான்.. 


16. இங்கே பாரு, மச்சி, பொண்ணு ஓக்கே சொன்னா உடனே தூக்கிடனும்.. அதான் நல்லது.. 


17. பசங்க கூட சேர்ந்து குடிச்சேன்னு தெரிஞ்சுது.. உன்னை எதும் செய்ய மாட்டேன்.. பிராந்தில விஷத்தை கலந்து நான் குடிச்சிடுவேன்.. ஆரம்பத்துல கூல் டிரிங்க்ஸ்தான்னு சொல்லிக்குடுப்பாங்க.. பார்த்துக்கோ, நம்பிடாதே. என்ன?

18.அண்ணான்னு ஒரு பிகர் சொல்லுச்சுன்னா தங்கச்சின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கணும் மச்சி"



http://tamil.cinesnacks.net/photos/movies/Attakathi/attakathi-movie-stills-175.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. ஹீரோ தினேஷ், ஹீரோயின் நந்திதா இருவரிடமும் வேலை வாங்கிய விதம் மார்வெலஸ்.. 


2. ஹீரோ வலுக்கட்டாயமாக வராத சோகத்தை முகத்தில் வர வைக்க ஒரு தலை ராகம் படம் பார்த்து சோகத்துக்கு ட்ரை பண்ணி நடிப்பது புதுசு.. நல்ல ஐடியா.. 


3. சாவு வீட்டில் நடக்கும் சோகத்தை  காமெடியாக்கி அங்கே ஹீரோ தப்பாட்ட மேள இசைக்கு ஆடிக்கொண்டே கண் இமையால் ரப்பர் எடுப்பது, அதை பார்த்து குதுகலித்து ஹீரோவின் அண்ணண் ஃபிகர் அமுதா தனி இடத்தில் போய் குத்தாட்டம் போடுவது அழகு..நடுக்கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா?".ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா கானா பாட்டு கலக்கல்

http://moviegalleri.net/wp-content/gallery/attakathi-shooting-spot-stills/attakathi_movie_shooting_spot_stills_2f4a39f.jpg



4. பஸ்சில் காதல் சோகத்தில் ஹீரோ இருக்கும்போது பழைய தோழி பஸ்சில் வாலண்ட்ரியாய் வந்த ஆண்ட்ரியா போல் உரசுவது, மேலே விழுவது அவர் இடையை எல்லை மீறிய அழகியல்வாதமாய் உபயோகிப்பது செம கிளு கிளு.



5. ஹீரோவின் அப்பாவின் கேரக்டர் மனம் தொடுகிறது.. அல்டாப் பேர்வழியாக இருந்தாலும் மகன் மீது காட்டும் மறை முக பாசமும், தான் குடிகாரனாக இருந்தாலும் தன்  மகன் நல்லவனாக வளரனும் என்ற ஆதங்கத்தில் பேசுவது எல்லாம் செம.. அதே போல் அம்மா கேரக்டரும் படு பாந்தம்.... அவர் கணவருக்கு சோறு ஊட்டும் காட்சியில் ஏங்க வைக்கும் பாச மழை.. 


6. இசை சந்தோஷ் நாராயணன்.. இவர் கீதாப்பிரியனா? கிதார்ப்பிரியனா? படம் பூரா மெல்லிய கிதார் ஒலி மனதை வருடுது.. 2012இன் மறக்க முடியாத இசை.

7. படத்துல ஹீரோ ரூட் விடும் பெண்கள் மட்டும் 8 பேர். எல்லாமே 70 மார்க் ஃபிகர்ங்க தான் மிக இயல்பான , ஒப்பனை இல்லாமலேயே அழகுள்ள மனதை சுண்டி இழுக்கும் ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன் சபாஷ் டைரக்டர் பா ரஞ்சித்

8. படத்தின் போஸ்டர் டிசைன், மார்க்கெட்டிங்க் டெக்னிக், ஸ்டில்ஸ் எல்லாம் செம.. ஒளிப்பதிவும் அருமை... 


http://tamil.cinesnacks.net/photos/movies/Attakathi/attakathi-movie-stills-154.jpg

 இயக்குநரிடம்  சில கேள்விகள்



1. காலேஜில் ஹீரோவை அடிக்க  5 பேர் வர்றாங்க.. அப்போ ஹீரோ கூட 12 பேர் இருக்காங்க.. அவங்க அம்போ என்று  அவரை விட்டுட்டு ஓடிடறாங்க.. இது 2 வகைலயும் லாஜிக் இல்லை.. 1. எண்ணிக்கை//  5 பெருசா? 12 பெருசா? அடுத்து என்னதான் ஆள்கள் ரவுடிகளாக வந்தாலும் அப்படி எல்லாம் நண்பர்கள் விட்டுட்டுப்போக மாட்டாங்க.. ஆனா அந்த சீனை யாரும் குறை சொல்லமுடியாத படி காமெடி ஆக்கிட்டதும் சாமார்த்தியம் தான்.. ஆனாலும் குறை குறை தான்.. 



2. ஹீரோ கிட்டே முன்னாள் தோழி தானா வந்து உரசரது பார்க்க கிளுகிளுப்பாத்தான் இருக்கு.. ஆனா அதில் நம்பகத்தன்மை இல்லை.. ஏன்னா ஒரு ஆண்ட்டியோ, டிக்கெட்டோதான் அப்படி வாலண்ட்ரியா உரசும். இப்படி உரசுனா எவனும் லவ்வர்னு நினைக்க மாட்டான்.. அயிட்டம்னு தான் நினைப்பான்.. 


3. அந்த பஸ் கில்மா சீன் நடக்கறப்ப ஹீரோயின் அதை பார்த்துடறா.. அதை பார்த்து அதிர்ச்சி ஆகற மாதிரி காட்டி பின்னால ஒரு சஸ்பென்ஸ் வெச்சிருக்கீங்க.. ஓக்கே. ஆனா அந்த சீனுக்குப்பின் படம் ஏன் ஸ்கிப் ஆகுது? எடிட்டிங்க்ல கோளாறா?

http://tamil.cinesnacks.net/photos/movies/Attakathi/attakathi-movie-stills-148.jpg


4. ஹீரோ எதையும் லைட்டா எடுத்துக்குவார் என்பதை அடிக்கடி சொல்றதால
 காதல் தோல்வி வரும்போது நமக்கும் பெரிய பாதிப்பு வர்லை.. அது பெரிய மைனஸ்.. 


5. இயக்குநர் சொல்ல வர்ற மேட்டர் லவ் சக்சஸ் ஆகலைன்னா இருக்கவே இருக்கு அடுத்த லவ்   டேக் இட் பாலிஸி.. நல்ல தீம் தான்.. ஆனாலும் முதல் காதல் மாறாத ரணமாய் என்றும் மனசில்  தங்கி இருக்கும் என்பதை அழுத்தமா சொல்ல தவறிட்டார்னு நினைக்கறேன்..


6.படத்தின் முன்பாதி வரை சினிமாத்தனம் இல்லாம நாம எல்லாரும் சந்திச்ச பஸ் லவ் பேஸ் பண்ணி படம் போகுது. ஆனா பின் பாதில ஹீரோவை ஏன் எல்லாப்படத்திலும் வர்ற மாதிரி காலேஜ் ரூட் தல ஆக்கனும்? ஃபைட், ரகளை எல்லாம் எதுக்கு? அதான் பல படங்கள்ல காட்டியாச்சே. அந்த 2 ரீல் கட் பண்ணி இன்னும் வெரைட்டியா யோசிச்சிருக்கலாம்..


7. ஆல்ரெடி ஹீரோ ஹீரோயினுக்கு லவ் லெட்டர் குடுத்தவன்.. அப்போ பாப்பா பிளஸ் டூ மெச்சூரிட்டி பத்தலை ஓக்கே இப்போ காலேஜ் கேர்ள். தான் இன்னொருவரை லவ் பண்ற விஷயத்தை அவ ஏன் ஹீரோ கிட்டே சொல்லலை? எந்த பொண்ணும் இந்த விஷயத்துல மறைக்க மாட்டா.


சி.பி கமெண்ட் - காதல் படங்கள்ல ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி மாதிரி செம ஸ்பீடு திரைக்கதை எதிர்பார்த்து போனா ஏமாற்றம் தான் வரும்..இது கோவை குற்றாலம் மாதிரி மிதமான வேகத்தில் பொழியும் நீர் ஊற்று.. எல்லாருக்கும் பிடிச்சுடாது.. காதலர்கள், யூத்ங்க, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்கு பிடிக்கும். பெண்களும் பார்க்கும் படி கண்ணியமான நெறியாள்கை..இந்தப்படம் சந்தேகம் இல்லாத ஒரு வெற்றிப்படம் தான், ஆனா பிரமாதமான வெற்றிப்படம் ஆகும் வாய்ப்பை ஹேர் இழையில் தவற விட்ட படம்

http://www.cinemahour.com/gallery/events1/moviestills/Attakathi%20Movie%20Stills/65795440Attakathi_Movie_Stills-(58).jpg

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று


 டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேங்க் -  3 1/2  /5


டெக்கான் கிரானிக்கல் - 7 /10



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 17. 8..2012 ) 12 படங்கள் முன்னோட்ட பார்வை

இந்த வாரம்  ஆக்ஸ்ட் 15 க்கு அதாவது புதன் கிழமை அன்னைக்கு  8 படங்களூம் ஆகஸ்ட் 17 வெள்ளி அன்று 3 படங்களும் ரிலிஸ்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpMnLo-TytwJM-D4PI6xc9PasVMB28BmDcBLifyVPAcJR34MvdqpCzYO4246Lsrr8AaBsSoiYaZspgLa9nOerXKZgALSUIPefaaFQFrtKev3j0VVn2PRDVIWyAIYVnsjv9t_1ufKI07Jrz/s1600/attakathi_movie_posters_wallpapers_004.jpg
1.அட்டகத்தி - தமிழ் சினிமாவில் தொன்னூறு சதவீதப் படங்கள் மதுரை அல்லது தூத்துக்குடி பின்னணியில்தான் வருகின்றன. அதை மீறி வரும் படங்களில் வட சென்னை- காசிமேடு - மீனவர் வாழ்க்கை என காட்சிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் முதல் முறையாக மதுரை, வட சென்னை பின்னணி இல்லாமல், சென்னையின் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை, பேச்சு வழக்குகளை மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது. அந்தப் படத்துக்கு அட்டகத்தி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த புறநகர்ப் பகுதிகளில் வாழ்பவர்கள் பெரும்பாலும் வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து குடியிருப்பவர்கள்தான் என்பதால், கலவையான பேச்சு வழக்கு, தனித்த வாழ்க்கை முறை என இருப்பார்கள்.

இதைத்தான் அட்டகத்தியில் படம்பிடித்துள்ளாராம் இயக்குநர் பா இரஞ்சித். இவர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்தவர். அட்டகத்திதான் இவருக்கு முதல் படம்.

ஒரு அட்டகத்தி தன்னை வெட்டுக்கத்தியாக நினைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது படத்தின் சுவாரஸ்யமான ஒன்லைன்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோ ரோலுக்கு ஆறு புதுமுகங்களை தேர்வு செய்து, அவர்களில் இறுதியாக தினேஷ் என்பவருக்கு வாய்ப்பு தந்துள்ளனர். புதுமுகம் ஸ்வேதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு தாய்மொழி கன்னடம். ஆனால் தமிழ் சரளமாகத் தெரியும் என்பதால் தேர்வு செய்தார்களாம்.

மானாட மயிலாட ஐஸ்வர்யா முக்கிய வேடத்தில் வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சென்னையின் புறநகர்களான பழந்தண்டலம், பூந்தண்டலம், கொளப்பாக்கம், மணப்பாக்கம், திருநீர்மலை, குன்றத்தூர் என சுற்றிச் சுற்றி படமாக்கியுள்ளார்களாம். ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில், abirami - ரிலீஸ்

அட்டகத்தி - சினிமா விமர்சனம்

 


 http://chennaionline.com/images/articles/July2012/4c7e4492-c36b-4fa7-9026-3dbf9ca7a6e6OtherImage.jpg

2. நான் -  இசையமைப்பாளர்கள் நடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, மைக்கேல் ஜாக்சன், மடோனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்று பிரபல இசையமைப்பாளரும், "நான்" பட ஹீரோவுமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார். "காதலில் விழுந்தேன்", "வேட்டைக்காரன்" உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் விஜய் ஆண்டனி. இவர் இப்போது "நான்" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜீவா சங்கர் என்பவர் இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியும் வருகிறார். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்துள்ள நிலையில் ரிலீசுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.




இந்நிலையில், "நான்" படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், எனது நண்பர் ஜீவா சங்கர் தான் இப்படத்தின் டைரக்டர். வித்தியாசமான கதை. எனக்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அதன்படி இந்தபடத்தில் ஹீரோவாக நடித்தேன். படமும் நன்றாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர்கள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. 


மைக்கேல் ஜாக்சன், மடோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல் நம்மூர் இசை மேதைகள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரும் விளம்பரங்களில் நடித்துள்ளனர். நான் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் அவ்வளவு தான். "நான்" படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. எல்லா தரப்பினருக்கும் இந்தபடம் நிச்சயம் பிடிக்கும், அப்படியே என்னையும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். 

ஈரோடு  தேவி அபிராமியில் ரிலீஸ்  



நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEuryDn-dTJDoZQ51tBVn0IA5iDRw5Gd5zzTlHtzs6TJaMkNjlS2JeRvHEKS94kCNeVUv_i4PNyNt_d07uoUUfK3_UDJwVXNGGGfYFBChI0k6QZWOA2cx_8SZeHNvjIuK3v5RB8Ed13kY/
3. முதல்வர் மகாத்மா - சென்னை வந்துள்ள அன்னா ஹசாரே, காமராஜர் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள முதல்வர் மகாத்மா என்ற படத்தின் இந்தி பதிப்பை நுங்கம்பாக்கம் ஃபோர்பிரேம் தியேட்டரி்ல் பார்த்து ரசித்தார்.


சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று காலை சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று அவர் கலந்து கொண்டார். முதலில் இயக்குனர் பாலகிருஷ்ணனனின் முதல்வர் மகாத்மா படத்தின் இந்தி பதிப்பு நுங்கம்பாக்கம் ஃபோர்பிரேம் தியேட்டரி்ல் அவருக்காக விஷேசமாக திரையிடப்பட்டது. பாலகிருஷ்ணன் ஏற்கனவே காமராஜ் என்ற படத்தை இயக்கியவர். முதல்வர் மகாத்மா படத்தை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் எடுத்துள்ளார்.

இதில் இந்திப் படத்தின் விஷேச காட்சியை அன்னா ஹசாரே, கிரண்பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் பார்த்து, ரசித்து, பாராட்டினர்.



தன் தாய்நாடு பின்னோக்கி செல்வதால் தான் மீண்டும் உலகிற்கு சென்று மக்களுக்கு உதவ விரும்புவதாக கடவுளிடம் கோரிக்கை விடுக்கிறார் காந்தி. அதை ஏற்ற கடவுள் காந்தியை ஒரு கிராமத்தில் துப்புரவு தொழிலாளியாகப் பிறக்க வைக்கிறார். காந்தி தான் பிறக்கும் கிராமத்தில் ஆசிரமம் துவங்கி மக்களுக்கு உதவுகிறார். இயற்கைக்கு எதிராக சத்யாகிரகம் இருந்து மழையை வரவழைக்கிறார். இதைப் பார்த்த மக்கள் அவர் பின்னால் செல்கின்றனர்.

இதனால் ஊழல்வாதிகளும், சுயநல தொழில் அதிபர்களும் காந்தியை எதிர்க்கிறார்கள். அவருக்கு பல வழிகளில் தொல்லை கொடுக்கின்றனர். அவற்றை எல்லாம் காநதி சகித்துக் கொண்டிருக்கும் வேளையில் சித்தார்த் என்ற குறும்பட தயாரிப்பாளர் அவரை சந்தித்து சீடராகிறார். அவரிடம் காந்தி தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மறைந்து விடுகிறார்.

இந்த படத்தில் காந்தியாக நடித்திருப்பவர் காமராஜ் படத்தில் காமராஜாக நடித்த கனகராஜ் (61). காந்தியின் சீடராக பாலிவுட் நடிகர் அனுபம்கேர் நடித்துள்ளார்.

2 மணி நேரம் ஓடும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. இப்படத்தை பார்க்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு அன்னாவை அவரது சொந்த ஊருக்குச் சென்று அழைப்பு விடுத்திருந்தார் பாலகிருஷ்ணன். நிச்சயம் பார்ப்பதாக அப்போது அவருக்கு வாக்களித்திருந்தார் அன்னா. அதன்படி இன்று படத்தைப் பார்த்து தனது வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல வருடங்களாக படமே பார்க்காமல் இருந்து வந்தவர் அன்னா. இன்றுதான் அவர் முதல் முறையாக படம் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/08/iruvan-movie-stills-41-300x199.jpg

4. இருவன் -ஒரு படம் வந்து வெற்றி பெற்ற பிறகு அதைக் காப்பி அடித்து அதே மாதிரியான படங்கள் வருவது நடைமுறையில் உள்ளது. ஆட்டுகார அலமேலு வெற்றி பெற்ற பிறகு கழுதை, நாய், குரங்கை வைத்தெல்லாம் படம் வந்தது. சமீபத்தில் பருத்தி வீரன் ஜெயித்த பிறகு நிறைய ஹீரோக்கள் அழுக்கு லுங்கி அரிவாளுடன் வந்தார்கள். ஆனால் இப்போது ஒரு படம் வெளிவரும் முன்பே அதன் கதையை தெரிந்து கொண்டு அதே மாதிரியான படங்கள் வெளிவரத் தொடங்கி விட்டது.

கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பற்றியது. இதுவே ஒரு ஆங்கிலப் படத்தில் சுட்ட கதைதான். இதைப்பார்த்து கன்னடத்திலும், தமிழிலுமாக சாருலதா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் படத்தை எடுத்துவிட்டார்கள். இதில் ஹீரோயின் பிரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தையாக நடித்திருக்கிறார்.

இப்போது இவர்கள் இருவரையும் மிஞ்சிவிட்டார் ஒரு சிறுபட இயக்குனர். இ.எஸ்.முருகானந்தம் என்ற இந்த புதுமுக இயக்குனர் குறுகிய காலத்தில் டிஜிட்டல் பார்மெட்டில் இருவன் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டு வருகிற 15ந் தேதி வெளியீடு என்று அறிவித்தும் விட்டார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக உடல் ஒட்டிப் பிறந்தவர்களின் உண்மை கதை என்ற கேப்சனோடு. இதே போன்று இதற்கு முன்பு ஒரு கூத்து நடந்தது. ஒரு தென்கொரிய படத்தை காப்பி அடித்து அமீர் நடிக்க சுப்பிரமணிய சிவா யோகியை இயக்கினார். அதற்கு சில வாரங்கள் முன்பே அழுக்கன் என்ற படத்தை அதே கதையுடன் புதுமுகங்கள் எடுத்து வெளியிட்டுவிட்டனர்.

ஆங்கிலப் படத்தை காப்பி அடித்து படம் எடுப்பவர்கள். இந்தக் கதையை வேறு யாராவது உல்டா செய்து கொண்டிருக்கிறார்களா? என்பதை தீவிரமாக விசாரித்து உறுதி செய்து கொண்ட பிறகு படத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்த பிறகு யாராது தொடங்குகிறார்களா? என்று கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்சம் கதை வெளியில் தெரியாத அளவுக்காவது நடந்து கொள்ள வேண்டும். இதற்கென தனி உதவியாளர்களை வைத்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பலகோடியில் எடுக்கப்படும் படத்தின் எதிர்பார்ப்பை சில லட்சங்களில் எடுக்கப்பட்டும் சிறு படங்கள் காலிபண்ணிவிடும். ஈரோடு STARல் ரிலீஸ்


5.  திருமதி கஜா என் காதலி -  இது ஏதோ கில்மா படம் போல 


http://www.hindustantimes.com/Images/Popup/2012/6/katrina-ek-tha-tiger.jpg
6. ek tha tiger - சல்மான்கான் நடிப்பில் அடுத்து வெளிவரும் ஏக் தா டைகர் படம் பல்வேறு காரணங்களுக்காக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


லேட்டஸ்டாக இந்தப் படம் கிளப்பியிருக்கும் பரபரப்பு... படத்தின் சேட்டிலைட் உரிமை மட்டுமே ரூ 75 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்பதுதான். சோனி தொலைக்காட்சி நிறுவனம் இந்தப் படத்தை வாங்கியிருக்கிறதாம்.


இந்த செய்தி மட்டும் நிஜமாக இருக்கும்பட்சத்தில், இது ஒரு உலக சாதனை என்றே சொல்ல வேண்டும்.


யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இந்த ஏக் தா டைகர். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சமீபத்தில்தான் விலைபேசியது சோனி என செய்தி வெளியானது.


ஆனால் இதனை மறுத்துள்ள சோனி நிறுவனம், "நாங்கள் 15 மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிவிட்டோம். அப்போது இந்த விலையை கொடுத்திருப்போமா என்பதை செய்தி வெளியிட்டவர்கள் யோசிக்க வேண்டும்," என அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் சினேக ரஞ்சனி தெரிவித்தார்.


இந்தியில் வெளியான சிங்கத்துக்கு ரூ 18 கோடியும், ஹ்ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 2க்கு ரூ 38 கோடியும், அக்னீபாத் ரூ 41 கோடியும் சேட்டிலைட் ரைட்ஸாக கிடைத்தது. இதுவரை எந்த நடிகரின் படத்துக்கும் ரூ 50 கோடி சேட்டிலைட் உரிமைத் தொகையாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஈரோடு ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ்


EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGEW-GrEx9IYc9xoXB5WF0Cz5UatquY6kKDRibExcabP0EDroVCGGjMAUGxtmPSKNyYkmC_heipIPvgs0_mmQRu5ehdijKsNFNqwkdXaDja_RN7vEuiD4q3KvGnNNSP0GVcutCdYOh_aQ/s400/Devudu-Chesina-Manushulu-First-Look-Poster-1590.jpg

 7. Devudu Chesina Manushulu (telugu) -ரவிதேஜா, இலியானா நடிச்ச தெலுங்கு படம்

இனிமே வரும் படங்கள் எல்லாம் ஆகஸ்ட் 17 வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றன

http://kollywoodz.com/wp-content/uploads/2012/07/Pandi-Oli-Perukki-Nilayam-Movie-Posters02.jpg

8. பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் - பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் என்னும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராசுமதுரவன். சென்டிமென்டுக்கு பெயர் போன இவர் படங்களில் கவர்ச்சி என்பது கொஞ்சமும் இருக்காது. ஆனால், இப்போது இவர் இயக்கியிருக்கும் பாண்டி ஒலிப்பெருக்கி நிலையத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சுனைனா ஒரு பாடலுக்கு கவர்ச்சியில் நடனமாடியிருக்கிறார். இதில் சுனைனா செம சீனாம்.. ஈரோடு ஆனூரில் ரிலீஸ்

பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் - சினிமா விமர்சனம்


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/03/etho-seithai-ennai_songs.jpg


9. ஏதோ செய்தாய் என்னை - டைரக்டர் பி.வாசுவின் மகன் சக்தி நடிப்பில், புதுமுக இயக்குநர் எல்வின் இயக்கும் படம் "ஏதோ செய்தாய் என்னை".

காதலை மையப்படுத்தி அந்த காதலில் ஜெயிக்க நான்கு வில்லன்களை சமாளித்து தன் காத‌லில் கதாநாயகன் எப்படி வெற்றி பெறுகிறான் என்பது தான் படத்தின் கதை. ஏற்கனவே நிறையபடங்களில் இதுபோன்ற காதல் காட்சிகள் வந்தாலும், இந்த காதலை சற்று வித்யாசமாக ஆர்ப்பாட்டம், அருவா போன்ற கலாச்சாரங்கள் ஏதும் இல்லாமல் டீசன்ட்டாக இயக்குகிறார் புதுமுகம் எல்வின்.

படத்தின் நாயகனாக ‌பிரபல டைரக்டர் பி.வாசுவின் மகன் சக்தி நடிக்க, அவருக்கு ஜோடியாக போரண்மை லியா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த், ஆனந்த்பாபு, ரகுமான், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எழில் என்பவர் தயாரித்து, படத்திற்கு ஒளிப்பதிவும் செய்கிறார்.ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் ரிலீஸ்
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/08/Aachariyangal-Movie-stills.jpg

10. ஆச்சரியங்கள் - இந்தப்படத்துக்கு  என்ன விசேஷம்னா பேப்பர்ல  விளம்பரம் குடுத்து புது முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 மாசத்தில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படம். 



11.The Expendables 2

The Expendables 2, கோலிவூட்டில் தயாராகிவரும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாகும். Lions Gate Entertainment தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இத் திரைப்படத்தை Simon West இயக்குகிறார்.


வரும் ஆகஸ்ட் 17 திரையிடப்படவுள்ள இத் திரைப்படத்தில் Sylvester Stallone, Jason Statham, Jet Li,Dolph Lundgren, Chuck Norris, Randy Couture, Terry Crews, Liam Hemsworth, Jean-Claude Van Damme, Bruce Willis, மற்றும் Arnold Schwarzenegger ஆகியோர் நடித்துள்ளனர்.



நவீன ஆயுதங்களின் வெடிப்பு சத்தங்களோடு படமாக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தில் ஜெட் லீ நடிப்பதால் மரபு ரீதியான உடல் சண்டைக்கும் குறைவிருக்காது.


இத் திரைப்படம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://www.awardscircuit.com/wp-content/uploads/2012/08/oddlifeoftimothygreen_banner.jpg

12. The Odd Life of Timothy Green (2012)

 

மேஜிக் ரியலிசம் எனப்படும் அம்புலிமா டைப் கதை.. வாரிசு இல்லாம கஷ்டப்படும் ஒரு தம்பதி தங்களூக்கு எந்த மாதிரி குழந்தை வேணும்னு ஒரு லிஸ்ட் எழுதி ஒரு பெட்டில அதை வெச்சு தோட்டத்துல புதைக்கறாங்க.. அடுத்த நாள் அவங்க எதிர்பார்த்த அதே குணநலன்களுடன்  10 வய்சுப்பையன் வர்றான். அவன் யாரு? எப்படி வந்தான்? எனப்தே திரைக்கதை.. புதுமைப்பித்தன் தமிழ்ல எழுதுன பிரம்ம ராட்சஷ் வகை கதை. ஈரோட்டில் ரிலிஸ் இல்லை

 

 http://www.kerals.com/kerala/wp-content/uploads/2012/01/Poovampatti4.jpg

 

13. பூவம்பட்டி- எஸ்.எம்.கே.சூர்யா பிரதர்ஸ் மூவிஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் படம் 'பூவம்பட்டி'. முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாகும் இப்படத்தை புதுகை மாரிசா, என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இதில் ஹீரோவாக சந்தீப் அறிமுகமாக, ஹீரோயின்களாக லாவண்யா, ஸ்ரீஷாலினி ஆகியோர் நடிக்கிறார்கள்.


கிடார் ஆனந்த் இசையமைக்கும் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். இப்படத்தின் பாடல்வெளியீட்டு விழா சென்னை, ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை பத்திரிகையாளர் அமலன் தொகுத்து வழங்கினார். மற்ற தொகுப்பாளர்களைப் போல இல்லாமல் சுறுக்கமாக சொன்னாலும் சுவாரஸ்யமாக சொல்லி நிகச்சியை தொகுத்து வழங்கும் ஆற்றல் படைத்த அமலன், ஒரு நிகழ்ச்சியில் நடிகை நமிதாவுக்கு "ஆறடி ஆல்கஹால்" என்ற பட்டத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிகழ்ச்சியில் நடிகைகளுக்கு எந்த பட்டத்தையும் கொடுக்கவில்லையென்றாலும், இதில் நடித்திருக்கும் புதுமுக ஹீரோவுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறார். "சூர்யாவையும், நந்தாவையும் சேர்த்து மிக்ஸியில் அடித்து செய்த கலவையில் உருவானவர் போல இருக்கிறார் இந்த ஹீரோ." என்பதுதான் அந்த அடையாளம்.


குறைந்த செலவில் குறிப்பிட்ட நாட்களுக்குள் இப்படத்தை முடித்திருக்கும் இப்படக் குழுவினர் அனைவரும் இளைஞர்கள் என்பது கூடுதல் செய்தி. அதிலும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.என்.கே.சின்ராசுவைப் பார்த்தால் ஓட்டுப் போடும் வயதையே தாண்டியிருப்பாரா? என்ற சந்தேகமே நமக்கு வருகிறது. அந்த அளவுக்கு இளைஞர்களாக இருக்கும் இவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் 'பூவம்பட்டி' படத்தின் பாடல்களும் இளைஞர்களுக்கு ஏற்றதுபோலத்தான் இருந்தது. ...


ஈரோட்டில் ரிலீஸ் இல்லை

ரஜனீஷ்(ஓஷோ) VS சுவாமி கில்மானந்தா


Tamil Venkat shared Mokka postku like poduvor sangam's photo.
1.பில்லா 2 எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை ஸா‌ரி :: சக்‌ரி டோலட்டி # அதெல்லாம் முடியாது, விஜயை வெச்சும் நீங்க படம் எடுக்கனும்,



----------------------


2. டெசோ மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானதல்ல -கருணாநிதி # தலைவரே, அப்புறம் என்ன இதுக்கோசரம் அதை நடத்தனும்?


---------------------


3. சபரிமலையில் கஞ்சி மட்டும் போதாதா? மாநில அரசுக்கு கேரள ஐகோர்ட் கேள்வி  # வெயிட், ரஞ்சி கமிங்க் ஆன த வே - நித்தி


------------------------


4. நல்ல கதை அமையட்டும் சேர்ந்து நடிப்போம்- சினேகா# நாக்ரவியின் சொந்தக்கதைல இந்நாள் கணவர் முன்னாள் காதலரா நடிச்சா செமயா இருக்கும்



--------------------------


5. தொடர் மழை: சீன பெருஞ்சுவரில் பாதிப்பு # சுவர் எழுப்புன காண்ட்ராக்டர்கள் கழக உடன்பிறப்புகளா இருக்குமோ?



-------------------------


· · · Tu


6. நான் எழுதுன நாடகங்களில் அனைவர் மனம் கவர்ந்தது - மனோகரா.. நான் நடித்த நாடகத்தில் சிறந்தது - டெசோ - தமிழ் இனத்தலைவர் DR கலைஞர்


------------------------


7. கறுப்புபணத்தை மீட்க வலியுறுத்தினார் ராம்தேவ் # யோவ், முதல்ல உன் கிட்டே இருக்கும் 300 கோடிக்கு கணக்கு காட்டு




--------------------

8. மத்திய அரசிடம் வறட்சி நிதி கேட்க தமிழக அரசு திட்டம்: ஒத்துழைப்பாரா கருணாநிதி? # வர்ற நிதில 10% அவருக்கு சொல்லுங்க, நல்லாவே ஒத்துழைப்பார்


----------------------


9. சர்வர் எரர் னா என்ன பண்ணனும்? 


ஹோட்டல் வேணாம்னு வீட்டுக்கு வந்து மனைவியையே பரிமாறச்சொல்லனும்


-----------------------


10. GHEE  ஸ்டோர்ல வேலை செய்யற பையனும், பொண்ணும் லவ் பண்ணா  அது ”நெய்”வீகக்காதல்



--------------------------





11. தலைவரே! கிரானைட் குவாரிக்கு சீல் வெச்சுட்டாங்க.. 



விடுய்யா, எத்தனை சீல் உடைச்சிருப்போம், ஜூஜுபி இதெல்லாம்


-------------------------


12. கோபியர் கொஞ்சும் ரமணா = கோபி மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் கொஞ்சும் கேப்டன்!



-----------------------


13. “ வாலி” ப வயசுப்பையன் - மிஸ்,எந்த கேள்வி கேட்டாலும் நான் ஏன் பதில் சொல்றதில்லைன்னா பொண்ணுங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளைங்களை விட தெரியாதுன்னு சொல்றவனைத்தான் பிடிக்கும்கறதால


டீச்சர் -??



---------------------


14. சனிக்கிழமை சம்சாரத்து கிட்டே வாயை குடுத்து வம்பிழுக்காம இருந்தா சனீஸ்வரனுக்கு வேலை இல்லாம பண்ணிடலாம் # மவுனகுரு மங்குனி


-----------------



15. ஆபீஸ்க்குள்ளெ என்ட்ரி ஆகறப்போ ரிசப்ஷனிஸ்ட் பொண்ணு ஆரத்தி எடுத்தா நல்லாதான் இருக்கும்.ஹூம்



------------------------



தேவதை... அவள் ஒரு தேவதை..



16. கலா மாஸ்டரை ஒரு வேளை யாராவது லவ் பண்ணினா அவர் தான் கலா "பக் பக்" காதலன்



-----------------------

17. எங்க ஆபீஸ்ல ஆம்பளைங்க எல்லாம் புல் ஸ்லீவ் சர்ட்,பொண்ணுங்க எல்லாம் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் .எந்த ஊர் நியாயம் இது?



------------------------


18. அத்தனைக்கும் ஆசைப்படு – ரஜனீஷ்(ஓஷோ)” ,அத்தைக்கும் ஆசைப்படு - சுவாமி கில்மானந்தா



------------------------


19. இந்தியா முழுதும் தேடிப்பார்த்தால் எங்கும் இல்லை மது விலக்கு, குஜராத் மட்டும் விதி விலக்கு




--------------------


20. யுவர் ஆனர், எனக்கு மாலைக்கண் நோய் இருக்கு, நான் எப்படி கிரா”நைட்” கொள்ளை அடிச்சிருக்க முடியும்? # S கேப் 7 மலை



------------------------


Tuesday, August 14, 2012

ட்விட்டரில் கலைஞர் - காமெடி கலாட்டா

திமுக தலைவர் கருணாநிதி பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் இன்று தனது பெயரில் கணக்கு தொடங்கியுள்ளார்.






1.மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் உருப்பட முடியாது: விஜயகாந்த் #  எனக்கு 89 வயசு ஆகுது - கலைஞர் சூசகத்தகவல்



---------------


2. டெசோ மாநாடு மீண்டுமொரு பராசக்தி நாடகம்: பா.ஜ., குற்றச்சாட்டு # ஆமா, அது டிராமாதான், காமா சோமா என ஏதாவது நீங்க எதிர்பார்த்தா?



-----------------------


3. சுந்தர்.சி - அஞ்சலி நட்பு...! # கூடா நட்பா? கூடி முடிச்ச நட்பா? - குஷ்பூ காட்டமான கேள்வி



------------


4. ஸ்ரீதேவி - எனக்கு 49 வயசு ஆகுது  # எத்தனை வருஷத்துக்கு முன்னால மேடம்?


--------------------

5. பிச்சை கேட்கறப்போ தர்மப்பிரபோன்னா வயிற்றுப்பசி இரவலன், தர்ம குஷ்பூன்னா கில்மா புரவலன்



----------------------

6. பெண்களுக்கான தனி நகரத்தை உருவாக்குகிறது சவுதி அரேபியா # சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி உண்டா?


-----------------------

7. மாட்டுக்கு கொம்பு சீவுவோருக்கு நல்ல காலம் : ஐ.டி., தொழிலை விட கூடுதல் வருமானம்#தமிழன் கொம்பு சீவிவிடுவதில் வில்லன் ஆச்சே?



----------------------------


8. பொருத்தமானவர் கிடைத்ததும் திருமணம் செய்வேன் -த்ரிஷா.. # ரிசப்ஷன் மவுண்ட்ரோட்ல மிட்நைட்ல?



----------------


9.  டொக் டொக்.. 



சோனியா காந்தி - யாரு?


 ...........  




சோனியா காந்தி - ஓ, மன்மோஹனா? எஸ் கம் இன் # FB remix


-------------------------------------

10.ட்விட்டரில் தீய சக்திகள் நடமாட்டம், தமிழ்நாட்டில் ட்விட்டருக்கு தடை - ஜெ அவசர அறிவிப்பு! கலைஞர் திகைப்பு


------------------------


11.234 தொகுதிகளில்  போட்டி இட்டு ஜெயித்தவன் நான், 140இல் வெற்றிக்கனியை பறிக்க மாட்டேனா? - கலைஞர்



--------------

12. நிருபர் - தலைவரே! கிரந்தம் தவிர்ப்பீங்களா?


கலைஞர் - ஜெவை மட்டும் தவிர்ப்பேன்



------------------

13. கலைஞர் குஷ்பூவுடன் டி எம்மில் கடலையா? இவர் என்ன விடலையா? அட்ரா சக்க அதிரடி ஆய்வு



---------------------


14. கலைஞரை ட்விட்டரில் ஃபாலோ செய்பவர்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசுப்பணி இல்லை - ஜெ அறிவிப்பு



-----------

 15. கலைஞர் -தம்பி அனிரூத், தங்கை ஆண்ட்ரியா முத்தக்காட்சி வெளிவந்ததும், நான் ட்விட்டரில் வந்ததும் எதேச்சையானது, கயிறு திரிக்காதீர்



--------------

16. டெசோ மாநாட்டுக்கு அடுத்து ட்விட்டர் மாநாடுதான் - கலைஞர்


 ------------------


17. கலைஞர் - ஸ்விஸ் பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுனப்ப எவனுக்கும் தெரில, ட்விட்டர்ல உடனே தெரிஞ்சுடுச்சே?




-----------------------------


18. மு,க ஸ்டாலின் - எப்படியோ இவரு ட்விட்டருக்கு அடிமை ஆகிடுவாரு, அடுத்த சி எம் நான் தான்


---------------------------


19. அழகிரி, ஸ்டாலின் இருவரில் எனது ட்வீட்ஸை அதிகம் யார் ஆர் டி, ஃபேவரைட்ஸ் பண்றாங்களோ அவர்களுக்கே அடுத்த சி எம் ஆகும் வாய்ப்பு - கலைஞர்



--------------------------

20.  கலைஞர் - கழக உடன் பிறப்புகள் யாரும் குஷ்பூவை கூட்டத்தில் கிள்ளக்கூடாது, ட்விட்டரில் டி எம் போடக்கூடாது # ஸ்டாலின், அழகிரி விதி விலக்கு



--------------------------

 21. ட்விட்டர்ல வெறுமனே DMனு போட முடியலை, ஆனா CMனு போட முடியுது # நீதி - CM விட DMக்கு பவர் ஜாஸ்தி



-------------------------


22. ஜெ- நான் ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்க மாட்டேன், 140 கட்டுப்பாடு ஆகாது.என் இஷ்டப்படி தான் இருப்பேன்



--------------------------


23. ஜெ-போய் பொழப்பை பார்க்காமல் ட்விட்டரில் வீணாய் பொழுதைக்கழிக்கும் சில அரசியல்வாதிகளை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது



----------------------------


24. அச்சமின்றி வாழ்வது தான் சுதந்திரம்: ஜெயலலிதாவின் சுதந்திர தின செய்தி # அப்புறம் நீங்க ஏன் சசிகலாவுக்கு பயப்படறீங்க?மேடம் டம் டம்


------------------------

25. ஆண்ட்ராய்டு ஃபோனின் விற்பனையை அதிகரிக்கவே மார்க்கெட்டிங்க்காக செய்த டிராமாவே அது - ஆண்ட்ரியா பல்டி



-----------------------


26. சுதந்திர தின செய்தி - கொடநாடு நட்பு கூடா நட்பு


-------------------


27. வாய்க்குள்ளே இருந்து லிங்கத்தை எடுத்தா சாமியாரு,சுவிங்கத்தை எடுத்தா ரோமியாரு # ஆண்ட்ரியா டைரிக்குறிப்புகள்



----------------------

28. டெசோ மாநாட்டில் ஒரு போலீசார் கூட மருந்துக்கும் கண்களில் தென்படவில்லை கருணாநிதி # திருடர்கள் போலீசை தேடுவது வேடிக்கையா இருக்கு - ஜெ



----------------------------






அட்டகத்தி

http://static.moviecrow.com/movie/attakathi/2671.jpg

தமிழ் திரையுலகில் தற்போது சின்ன பட்ஜெட் படம் 'அட்டகத்தி'  பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.




இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் இது. நாயகனாக தினேஷ், நாயகியாக ஸ்வேதா நடித்து இருக்கிறார்கள்.


சந்தோஷ் இசையமைக்க, பிரமோத் வர்மா ஒளிப்பதிவு செய்ய, விஜயகுமார் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் மொத்த உரிமையையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கி, சொந்தமாக வெளியிடுகிறது.

'அட்டகத்தி'யில் சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக இயல்பாக பதிவு செய்திருக்கிறார்கள். " நம்ம எல்லாருக்குள்ளயும் ஒரு ஹீரோ ஒளிஞ்சுகிட்டிருப்பான்.. அவன் கண்டிப்பானவாவும் இருப்பான். அதே நேரத்துல அவனுக்குள்ள ஒரு குழந்தைத்தனமும் ஒளிந்திருக்கும். அதை வெளிக்காட்டுகிற படமா அட்டகத்தி இருக்கும்" என்கிறது படக்குழு.



http://www.tamilkey.com/wp-content/uploads/2012/01/Watch-AttaKathi-Movie-Online-Trailer.jpg

'அட்டகத்தி' படத்தினைப் பற்றி அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு வந்தது படத்தின் FIRST LOOK வெளியான போது தான்.  படத்தின் LOGO, FIRST LOOK என அனைத்து விதத்திலும் 'அட்டகத்தி' கவனம் ஈர்த்தது.படத்தை முடித்த பின்,  தன்னுடைய குருநாதர் வெங்கட்பிரபுவிற்கு தனது படத்தினை பிரத்யேகமாக திரையிட்டு காட்டினார் ரஞ்சித். இயக்குனர் ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய வெங்கட்பிரபு, தன்னுடைய சக இயக்குனர்கள் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கும் இப்படத்தினை திரையிட்டு காட்டினார்.

இப்படத்தினைப் பார்த்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தங்களது நிறுவனம் மூலம் வெளியிட தீர்மானித்து அனைத்து உரிமைகளையும் வாங்கிக் கொண்டது.

ஸ்டூடியோ கிரீன் வசம் உரிமைகள் போனதை அடுத்து 'அட்டகத்தி'யை அவர்கள் மெல்ல மெல்ல பட்டை தீட்டினார்கள்.

இயக்குனர்கள் வெங்கட்பிரபு, வெற்றிமாறன், பாண்டிராஜ், ராஜேஷ், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன் என அனைவருமே படத்தினை பற்றி பாராட்டி பேச, 'அட்டகத்தி' இணையத்திலும் கவனம் பெற்றது.




http://www.cinemamasti.com/wp-content/uploads/Attakathi-Movie-Stills-2.jpg





'ஆசை ஒர் புல்வெளி ,  'ஆடி போனா ஆவணி'  போன்ற பாடல்கள் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆகஸ்ட் 15ம் தேதி உறையை விட்டு வெளியே வந்து, வெள்ளித்திரை நிரப்ப வருகிறது அட்டகத்தி.!


http://timesofindia.indiatimes.com/photo/11265485.cms


படம்: அட்டகத்தி
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள்: பிரதீப்

வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன்
என் விழி மூடவில்லை பார்வை இடம் மாறவில்லை
பல யுகம் தாண்டி வந்தேன் உந்தன் முகம் காட்டு பெண்ணே
வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன்

நொடி ஒவ்வொன்றும் உன்னை தேடி வாழ்கிறதே
சில்லென்ற காற்று என்னை கடிக்கின்றதே
காத்திருக்கும் நேரம் மிகவும் சுடுகின்றதே
என் இமை மூடா கண்கள் உன் நிழல் பார்க்க துடிக்கிறதே



 http://masscinema.in/wp-content/gallery/attakathi-movie-stills_1/attakathi-tamil-movie-stills-60.jpg


டம்: அட்டகத்தி
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள்: பிரதீப், கல்யாணி நாயர்

ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
யார் உயிர் யாரோடு (யாரோடு )யார்
உடல் யாரோடு(யாரோடு )
போனது மர்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வர்ணங்கள்
விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே


தியேட்டர் ட்ரெயிலர்



 கலக்கல் ஹிட்டான மெலோடி - ஆடி போனா ஆவணி
 அ  மனதை வருடும் ஆசை ஒரு
 நன்றி - தமிழ்ப்பாடல் வரி, விகடன்

GOOLI - நான் ஈ சுதீப்-ன் கன்னட சினிமா விமர்சனம்

http://i.ytimg.com/vi/ObT2-qZZ-fw/0.jpg 

2012 ல நான் ஈ ரிலீஸ் ஆகி ஒரு கலக்கு கலக்கினாலும் கலக்குச்சு, உடனே நம்மாளுங்க அந்த பட வில்லன் சுதீப் நடிச்ச பழைய படங்களை  தூசு தட்டி டப் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. போஸ்டர்ல பந்தாவா நான் ஈ சுதீப்பின் அடுத்த வெற்றிப்படம்னு ஒட்டுனதுக்கே கேஸ் போடனும், ஏன்னா இந்தபடம் 2008 ல ரிலீஸ் ஆனது....தமிழ்ல கொருக்குப்பேட்டை கூலின்னு டைட்டில் வெச்சிருக்காங்க.. இந்த கேவலமான டைட்டில் செலக்ட் பண்ண ஆளை கலைஞரின் டெசோ மாநாட்டுப்பேச்சை முழுசா கேட்கச்சொல்லியோ, மானாட மயிலாட கலா மாஸ்டர் முகத்தை க்ளோசப்ல பார்க்க வெச்சோ தண்டனை கொடுக்கனும் ராஸ்கல்ஸ்..


ஹீரோ வழக்கம் போல ரவுடி, தாதா, பேட்டைல மோசமான குடிகாரன்.. ( குடிகாரன்னாலே மோசம் தான், அது என்ன மோசமான குடிகாரன்?)..ரஜினிக்கு கூட எந்தப்படத்திலும் இவ்ளவ் பில்டப் இல்லை. இவருக்கு ஏகபட்ட பில்டப்.. இப்படிப்பட்ட ஆளை ஒரு கோடீஸ்வரி லூசு ஹீரோயின் லவ்வுது


 லூஸ்னா மனநலம் எல்லாம் பாதிக்கப்படலை.நாட்ல எத்தனையோ பேரு படிச்சுட்டு டீசண்ட்டா வேலைக்கு போய்ட்டு இருக்காங்க.. அவங்களை எல்லாம் விட்டுட்டு  இந்த சினிமா ஹீரோயின்க மட்டும் நிஜ வாழ்வுல செகண்ட். ஹேண்டா தொழில் அதிபரையும், சினிமா வாழ்வுல தலையே சீவாத பல் துலக்காத கேவலமான ரவுடியையும் தான் லவ் பண்ணி தொலைக்கறாங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxNWhgLawIryuf24SG_gxijSn7Y-QmG5vrn6Y_kYsZ9RsAqWtDNB-llBhmxLrJ7RRWcGaVlGEQwSiExWoBSQJRoPfwrzJYBbyRVeWfcaKG547OlSTtXfofNZb6bJkZtP0CJH7Pr6OpAQQ/s1600/Mamta+Mohandas+%252811%2529.jpg


ஹீரோயின் ஹீரோ கிட்டே லவ்வை சொல்றா.. அவன் ஏத்துக்கலை.. இதெல்லாம் ஒத்து வராதுங்கறான்.. வில்லன்க ஹீரோயினை கடத்தி ஹீரோவை மிரட்டும்போது  ஹீரோயினை காப்பாத்தறார். உடனே ஹீரோயின் ஐ ஜாலி என் மேல லவ் இருந்தாங்காட்டிதானே என்னை காப்பாத்துனே? என கொலம்பஸ் மாதிரி கேட்கறா.. 


 ஹீரோ போனா போகுது புடவை பறக்குது புடிச்சுக்கோ என்று  ரஜினி சொன்ன மாதிரி ஓக்கே சொல்றார்.. ஹீரோயின் அண்ணன்காரன் கருணா மாதிரி கூட இருந்தே குழி பறிக்கற ஆள்.. அவரு அடியாட்களை ஏவி விட்டு ஹீரோயினை கொலை பண்ணி  சொத்தை அடைய நினைக்கறார்.. என்ன ஆச்சு? என்ற கேவலமான சஸ்பென்சை தில் இருக்கறவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க..


ஹீரோ சுதீப் ரஜினி ஸ்டைல்ல சிகரெட் பிடிக்கறாரு.. ஆர் பார்த்திபன் புதிய பாதை ஸ்டைல்ல சரக்கு அடிக்கறாரு..நம்பவே முடியாத  ஃபைட் எல்லாம் போடறாரு.. ஓவர் ஓவர் ஓவரோ ஓவர்.. இவர் வில்லன் கேரக்டர்க்குத்தான் லாயக்கு.. காதல்க்கு செட் ஆக மாட்டார்,.. ஒரு வேளை இயக்குநர் நல்லா அமைஞ்சா செட் ஆகலாம்.. 



ஹீரோயின்  மம்தா மோகன் தாஸ், சிவப்பதிகாரம் ஹீரோயின்.. அரக்கோணம், கும்பகோணம் க்ளோசப், லாங்க் ஷாட் என எந்த கோணத்தில் பார்த்தாலும் கிளு கிளுப்பே வர்லை.. சாதா ரசிகனுக்கே அது வர்லைன்னா கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோவுக்கு எப்படி வரும்?படம் பூரா ஹீரோயின் வர்றாங்க..  பாடல் காட்சிகளில் சீன் காட்றாங்க.. ஆனா ரசிக்கற மாதிரி இல்லை..

வில்லன்க எல்லாம் படு கேவலமா இருக்காங்க..உஷ் அப்பா முடில


http://azhaki.files.wordpress.com/2010/05/mamta-mohandas-wallpapers207.jpg?w=576


ஸ்டண்ட் மாஸ்டரிடம் சில கேள்விகள்



1. ஹீரோவை அடிக்க வில்லன்களோட அடியாளுங்க  திருப்பதி கோவில்ல லட்டு வாங்கவா போறாங்க? ஏன் ஒன் பை ஒன் லைன்ல வர்றாங்க? மொத்தமா 56 பேரும் அட்டர் டைம்ல போனா ஹீரோவால அடிக்க முடியாதுன்னா?


2. ஜெட்லீயை விட ரொம்ப நேரம் ஹீரோ அந்தரத்துல பறக்கறாரே?புவி ஈர்ப்புவிசைன்னு ஒண்ணு இருக்கே? என்னாச்சு?


3. வில்லன் ஒரு லோக்கல்  ரவுடி. அவன் க்ளைமாக்ஸ்ல கல்யாண மண்டப வாசல்ல இருந்து ஒரு கோடாலியை வீசறான். அது 2 பர்லாங்க் தாண்டி மணமேடைல உக்காந்திருக்கற ஹிரோயின் நெற்றில கன கச்சிதமா தாக்குது
ஒலிம்பிக்ல கூட அப்படி யாராலும் செய்ய முடியாது.


4. சூப்பர் மேக்ஸ் பிளேடு விலை 2 ரூபா.. அதனோட எடை 8 கிராம்.ஹீரோ ஒரு சீன்ல  அந்த பிளேடை வெச்சு 67 பேரை சாய்ச்சுடறார். அவங்க கைல அரிவாள், வெட்டுக்கத்தி எல்லாம் இருக்கு, ஆனா ஹீரோவை ஒண்ணும் பண்ண முடியலை. 


5. அதே சீன்ல ஹீரோ அந்த பிளேடை தூக்கி வீசறார். அது 1 பர்லாங்க் தூரம் உள்ள இடத்தில் நிற்கும் ஆள் நெற்றில பட்டு ஆள் அவுட்.. கின்னஸ்க்கு எழுதிப்போடலாம்.

http://www.bharatwaves.in/wallpapers/d/61913-4/Mamtha+mohandas_002.jpg

இயக்குநரிடம்  சில கேள்விகள்



1. பொதுவா பொண்ணுங்க கிட்டே அவங்களை குறை சொன்னா பிடிக்காது.. ஆனா ஹீரோ என்ன கேவலமா திட்டினாலும் ஹீரோயின் சிரிச்சுக்கிட்டே இருக்கு லுசா?



2. லோஹிப் ஜீன்ஸ், டாப் டி சர்ட் போட்ட்டுட்டு வந்த ஹீரோயினை கண்டபடி ஹீரோ திட்றாரு.. அவர் பழக்கமே இல்லாத ஆள்.. அப்படி பேசுனா பொண்ணு ஸண்டைக்கு வரனும், அல்லது கோபப்படனும், ஹீரோயின் லவ் பண்ணுது. எனக்கு பழக்கமான பெண் கிட்டே நான் ஒரு டைம் “ மிஸ், டிரஸ் ஓவர் கிளாமர். எல்லாம் தெரியுது”ன்னு சொன்னேன்.. அந்த பொண்ணு “ எனக்கும் தெரியும்” மைண்ட் யுவர் ஓன் பிஸ்னெஸ்னு சொல்லுச்சு



3. கிஷோர்னு ஒரு நல்ல நடிகரை வேஸ்ட் பண்ணிட்டீங்க. அவர் படத்துல என்ன பண்றார்? ஹீரோ எது செஞ்சாலும் வேடிக்கை பார்த்துட்டு தேமேன்னு நிக்கவா போலீஸ் யூனிஃபார்ம்?


4. ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏதோ பேச போறார். அதை பார்த்து உடனே அவன் கூட இருக்கும் ஆள் எதிர்  கோஷ்டி கூட சேர்றான்கறது நம்பவே முடியலை.


5. ஹீரோ ஹீரோயின் கிட்டே பேசிட்டு இருக்கார், அப்போ வில்லன்க 18 ஜீப்ல 89 பேரு வர்றாங்க இஞ்சின் சவுண்ட், அத்தனை பேரு நடந்து வரும் சத்தம் கேட்காதா? எப்படி சத்தம் இல்லாம முதுகுல குத்த முடியும்? ஹீரோவுக்கு காது டமாரம்னு வெச்சுக்கிட்டாக்கூட ஹீரோயின் என்ன பண்றா?ஹீரோ முதுகுல குத்தும் வரை?





http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/mamta-mohandas-05/mamta-mohandas-01.jpg
மனம் கவர்ந்த வசனங்கள்



1. சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி மீடியாக்களுக்கு இல்லை, அவங்க தேவை பரபரப்பு, பிளாஸ் நியூஸ், உடனடி புகழ்



2. என்ன இது? லோ ஹிப் ஜீன்ஸ்? லோ ஹிப் தெரியற மாதிரி அரைகுறை பனியன் வேற


அய்யய்யோ


 இப்போ மூடி என்ன பண்றது? அதான் உலகமே பார்த்துடுச்சே?


3. உலகத்துலயே துரோகம் பண்ணாத, பண்ண நினைக்காத ஜீவன்கள் அம்மா அப்பா தான்


4. என்னது? உங்க பேரு நைண்ட்டியா? பேரே புதுசா இருக்கே?


குடிமகன்களுக்கு மட்டும் புரியும்



5. நான் லவ் பண்றேன்


 ஹலோ நான் என்ன மாமா மாதிரி லெட்டரை கொண்டு போய்க்குடுக்கனுமா?


 ஹலோ, நான் உங்களைத்தான் லவ் பண்றேன்



6. நாலு பேர் முன்னால உன்னை பார்த்து நான் சிரிக்கறதையே உன்னால தாங்கிக்க முடியலையே?நாளை ஊர் உலகம் ஒரு ரவுடியை மேரேஜ் பண்ணீக்கிட்டியேன்னு உன்னைப்பார்த்து சிரிக்கறப்போ அதை எப்படி தாங்க்கிக்குவே?


7. எவ்ளவ் புத்திசாலியா இருந்தாலும் ஒரு வீக் பாயிண்ட் அவனுக்கு இருக்கும்.. 



8. ஏதோ டென்ஷன்ல உன்னை லவ் பண்றதா சொல்லிட்டேன், டோண்ட் டேக்  சீரியஸ். 


டென்ஷன்ல தான் உண்மை எல்லாம் வெளீல வரும் 



9. குடிகாரனையும், கொலைகாரனையும் எப்டி வேணாலும் காப்பாத்திடலாம், ஆனா காதல்ல விழுந்தவனை மட்டும் காப்பாத்தவே முடியாது


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhigsrKJLplw6h_9W1_shMw5owYIPabEe9IXJhgpGrVQbht6_Irl0aoWDepq-fAc7RjHcNrUiYmzK3oX-fKP-meZnAq4xFGY4NzpCgTCnkSkNh3zecxFyndfI08pzwrOuRBOBqv0Sx6A1c/s400/Mamatha+Mohandas7.jpg




ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன், படம் படு குப்பை. போயிடாதீங்க.

ஆன்ட்ரியோமேனியா - அனிரூத்காணாம நீ போனியா?

http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2010/01/andrea-jeremiah-1.jpg

1.உங்களில் யார் அடுத்த ஆண்ட்ரியா? விஜய் டி வி கில்மா நிகழ்ச்சி.ஜெ அதிர்ச்சி



---------



2. அம்ரூத் ,ஆன்ட்ரியா இருவரும் உபயோகிப்பது க்ளோஸ் அப் டூத் பேஸ்ட் தான்



-------------

3. ஆகஸ்ட் 13 லயே இப்படி,ஆகஸ்ட் 15 சுதந்திரமா என்னென்னெ நடக்குமோ?



------------------

4. ஆன்ட்ரியா - மத்தவங்களுக்குத்தான் அனிரூத்.எனக்கு ஹனி ரூட் (HONEY ROUTE)



--------------


5. ரீமிக்ஸ் ரேப்க்கு சமம் - MSV # அப்போ அனிரூத் ஆன்ட்ரியா ரீமிகஸ்?


----------------


http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2010/01/andrea1.jpg


6. ஆண்டரியா - இது ஜஸ்ட் மரியாதை நி "முத்தம்"ஆன சந்திப்பே!



---------



7. ஆன்ட்ரியோலிப்போகிராபி பெற்றதும் கற்றதும் 1,செல்வராகவன் 2 சரத்குமார் 3 அனிரூத்,..்




-----------------


8. ஜட்ஜ் - சம்பவம் நடந்தப்ப என்ன பண்ணிட்டு இருந்தீங்க?



நடிகை - சுஜாதாவின் "வாய்"மையே வெல்லும் நாவல் ரீடிங்



--------------



9. வாய் &ஆடி = வாயாடி# ஆடி காத்து அதிர்ஷ்டக்காத்து


--------


10. கமல் - விஸ்வரூபத்துல நான் அடக்கி வாசிச்சேன் ஹூம் மிஸ் ஆகிடுச்சு



------------


http://www.shotpix.com/images/80975798600046662070.jpg


 11.உருவு கண்டு எள்ளாமை வேண்டும்,உதட்டு உறவு கண்டு ஜொள்ளாமை வேண்டும் # அனிரூத், ஆண்ட்ரியா ரசிகர் மன்றம், ஈரோடு



-----------


12. பொட்டாசியம் அயோடைடு 1 ,சல்பர் 2 = கடவுள் துகள் (KISS)# கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் டூ அனிருத் ஆன்ட்ரியா


-------------


13. ஆ என்று வாய் பிளந்தான் - அந்தக்கால எழுத்து ,ஆன்ட்ரியா என்று வாய்பிளந்தான் - இந்தக்கால எழுத்து



------------------



14. ஜட்ஜ் - உனக்கு இன்னும் 18 வயசு ஆகலை.இது தப்பில்லையா?



அனிரூத் - அவங்க வயசு 34 என் வயசு 16,ரெண்டயும் கூட்டி ரெண்டால வகுத்தா சரியா வரும்


---------------


15. வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்


-----------

 http://4.bp.blogspot.com/-LFAcWIw-iCs/TqL4DcmVAPI/AAAAAAAADLw/bsHUkAfpQZ0/s640/andrea-saree-stills-013.jpg



16. ஆண்ட்ரியா !U made our day mad



------------------


17. ஆண்ட்டியை கிஸ் அடிச்சா அது தப்பு.ஆண்ட்ரியாவை கிஸ் அடிச்சா அதுதான் டாப்பு # சென்னை ட்ரெண்ட்




--------------


18. ஆகஸ்ட் 13 முத்த தினமாக அறிவிக்கப்படுமா? ஒபாமா ஆலோசனை




-------------


19. விஜய் டி வி நீயா? நானா? இந்த வாரம் விவாத தலைப்பு .ஆன்ட்ரியா செய்தது சரியா? ( நல்லாத்தானே செஞ்சாரு?)




------------


20. சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் ஸம் ஸம் .சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம் # மை டியர் மார்த்தாஆன்ட்ரியா



-------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAeQHyKx3rTcXi6xuwOhgO5tY2dQnCuMQG17mfhBrBm0RYfYxkfizEEfvbzGedkcGP3hAdlbrG4liKHJL5BtEZEPCSDUeUmsN67sOYsN-IPAFIXAsY1K5wV-3o3DP2QaEaJZZblgQ29A/s1600/andrea-hot-stills4.jpg



21. நித்தியான்ந்தா ஆன்மீக சேனல் ஆரம்பித்தார் # முதல் நிகழ்ச்சியா அந்த ஜிஞ்சிதா டி விடி போட்டு விடுங்க



-------------


22. ஆண்ட்ரியா - சின்ன வயசுலயே எனக்கு வாய் ஜாஸ்தின்னு ஊர்ல எல்லாரும் சொல்வாங்க.


அனிரூத் - இப்போ வாய் நாஸ்தின்னு சொல்வாங்க பாரு



-------------

 23. அனிரூத் - மவுத் ஆர்கன்ல வாசிச்சுக்காட்டுன்னாங்க.உங்க் மவுத்தே ஆர்கன் மாதிரிதான் இருக்்குன்னு சொல்லி கிஸ் பண்ணிட்டேன#வாலி்


--------------



24. லிப் ரீடிங்னா இதானா?



-------------


25. ஆன்ட்ரியோமேனியாவால் பாதிக்கப்பட்டு ஒரு நப்பாசையில் சலூனில் மீசை எடுத்த ஆசைநாயகர்கள்.1,மாமே 2.ரைட்டர் CSK 3,k7்




--


http://www.metromatinee.com/gallery/a2220/large/Andrea%20Jeremiah6886.jpg


26. அனிரூத்- ஆண்ட்ரியா டெமோ மாநாடு நடத்த திட்டம், அலை கடல் என வாரீர்!



--------------------



27.  ரஷ்யா,ஜப்பானில் கடலுக்கு அடியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில், 7.5ஆக பதிவு;   # இதுக்கு நான் பொறுப்பல்ல -ஆண்ட்ரியா27.



-------------------------


டிஸ்கி - சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழுங்கள் - நன்றி -சன் டி வி

ஆண்ட்ரியா - அனிரூத் லிப் டூ லிப் கிஸ் - கோடம்பாக்கம் பர பரப்பு http://www.adrasaka.com/2012/08/blog-post_3508.html

 

பெண்களின் மூட நம்பிக்கையும், மூடா ஸ்லீவ்லெஸ் ரவிக் (கையும்)

1.நித்தி-சென்னை சங்கமம் மாதிரி பிடதி சங்கமம் ஆரம்பிச்சு எல்லா நடிகைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துடனும்



-------------------------


2. எங்க குடும்பமே  சாரி குடும்பம், மனைவி அடிக்கடி சாரி வாங்கிக்குடுங்கம்பாங்க, நான் சாரி முடியாதும்பேன், ஹி ஹி 




---------------------------


3. ஜனாதிபதி பிரணாப்புடன் பிரதமர் மன்மோகன் சந்திப்பு#  பிரணாப் - யார் எது சொன்னாலும் ஆமா சாமி போடுவீங்களாமே? சிங்க் - ஆமா சாமி




-------------------------


4. ரயில்களில் ரகசிய கேமராக்கள் பொருத்த முடிவு # அதான் சொல்லீட்டிங்களே, அப்புறம் எப்படி அது ரகசியக்காமரா ஆகும்?



------------------



5. "தயாநிதி, கலாநிதி ரூ.550 கோடி லஞ்சம் பெற்றது உண்மையே': சிபிஐஅறிக்கை # நிதிஸ் மனசாட்சி - கண்டுபிடிச்சது கையளவு, கண்டுபிடிக்காதது கடல் அளவு





6. அஞ்சலி  -படுக்கையறை காட்சியில் நடிக்க மாட்டேன் 


டைரக்டர் - விளையாடாதீங்க, நீங்க பேஷண்ட், ஹாஸ்பிடல் பெட்ல படுத்திருக்கீங்க, அவ்ளவ் தான்


---------------------


7. சேமியா உப்புமா சாப்பிட்டா சேமிக்கும் பழக்கம் வந்துடுமா? #இன்றைய சிந்தனை



-----------------------


8. டாக்டர் என் மனைவி டெயிலி என் ஆபீஸ்க்கு வந்து சம்பளஉயர்வு உண்டானு கேட்டு டார்ச்சரிங்.


ஓ,இன்க்ரி" மென்டல்" பேஷன்ட்?



-------------------------


9. டீச்சர் -ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க.



 லொள் மாணவன் - வழக்கமா சுடில வருவீங்க,இன்னைக்கு சேலைல,இன்னா மேட்டரு?



---------------------------


10. ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கத்தகுதி உள்ள இருவர்



 1 அஜித் - நடை ,துப்பாக்கி சுடுதல்


 2 லாங்க் ஜம்ப் ,தெலுங்கு படங்களை சுடுதல்


--------------------------


" எனக்கு கெட்ட பெயர் வருவது பற்றியோ ,தண்டனை கிடைப்பது பற்றியோ , என் ஆவி பிரிவது பற்றியோ நான் சிறிதும் கவலைப்படவில்லை . என் வாழ்நாளில் , தமிழர்களை இழிவு படுத்தும் கடவுள் - சமயப் பற்றும் இழிவுத் தன்மையும் சிறிதளவு குறைந்தாலும் வெற்றி பெற்றவனாவேன் ! "



11. மற்றவர்களுக்காக வாழ்வதை குறைத்து நம் பெற்றவர்களுக்காக வாழ்வோம்.உலகின் சிறந்த பண்பு பெற்றோர் சொல் கேட்டலும அதன்படி நடத்தலும்்



-------------------------


12 ஒரு ஆண் இரண்டு கேர்ள் பிரண்டுக்கு மேல் வைத்திருப்பதை இந்த இரட்டை இலை அரசு அனுமதிக்காது -ஜெ அறிவிப்பு,கலைக்னர் கமல் தனுஷ் அதிர்ச்சி




------------------------------



13. சரவணன் மீனாட்சி கல்யாணம் நடந்துடுச்சு.சட்டு புட்டுன்னு ஆக வேண்டிய காரியத்தை பாருங்க # முதலிரவே வா வா @ லைவ் டெலி காஸ்ட்



--------------------------

14. ஆன்ட்ராய்டு போனை யூஸ் பண்றப்ப ஆண்ட்ரியா நினைவு வந்தா நீயும் கில்மா ராகவனே!



-----------------------


15. டியர் ,எப்பவும் குறை சொல்லிட்டே இருக்கிங்களே ஏன்?



 உன் எடை 98 கிலோ,அதை குறைனு சொல்றது தப்பா?


-----------------------



· · · 14 hours ago ·


16. திருமணம் ஆனதும் ஆணின் சிந்தனை- எப்போ மனைவியுடன் சேரலாம்?பெண்ணின் சிந்தனை -எப்போ கணவனை பெற்றோரிடம் இருந்து பிரிக்கலாம?்



-------------------


17. ஆண்கள் அறிவில்லாதவர்கள் என்பது பெண்களின் மூட நம்பிக்கை.மேக்கப் இல்லாமலும் பெண்கள் அழகானவர்கள் என்பது ஆண்களின் மூடா நம்பிக்கை



--------------------------


18. அன்பான அமைதியான அழகான குடும்பப்பாங்கான எங்கம்மாவை அனுசரித்துப்போகும் அரசுப்பணியில் உளள பெண் தோழிகள் தேவை் # கல்யாண மாலை எஃபக்ட்



--------------------------

19. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ஓக்கே கெட்ட மாட்டுக்குஎத்தனை சூடுன்னு யாரும் சொல்லவே இல்லையே?



-----------------------


20. மல்லிகை முல்லை மலர்கள் காதல் உணர்வை தூண்ட வல்லவை அதான் அந்தக்காலத்துல விதவைகள் பூச்சூடத்தடை



----------------------------

நீங்கள் படத்தில் பார்த்துக் கொண்டிருப்பது "யாரும் 'கொய்யா'- க்காய் :))