Thursday, August 02, 2012

மல”பார்” ஜூவல்லர்ஸ் மகிமை மங்கைளுக்கு தெரியுமா?

Continue Reading
· · · 12 minutes ago ·

1. அந்த ஆசிரமத்துல மட்டும் ஏன் இவ்ளவ் கூட்டம்?

இங்கே வந்தா எல்லா நடிகைகளையும் ஒரே இடத்துல பார்க்கலாமாம்.



--------------------------------------


2. அவரு சரியான டியூப்லைட்டா இருக்காரு

ஏன்?

ஒரு ஆசிரமம்னா அதனோட ஹை லைட் பூஜை புனஸ்காரம்  பக்தி தானே-ன்னு அப்பாவியா கேட்கறாரே?



-------------------------------------


3. சுவாமி! உங்க ஆசிரமத்துக்குப்பக்கத்துல எந்த மார்க்கெட்டும் இல்லையே, ஏன்?

 மார்க்கெட் போன நடிகைகள் அப்படியே ஆசிரமத்துக்கும் போய்ட்டாங்கன்னு ஒரு பேச்சு வந்துடக்கூடாதே?



------------------------------------


4.சுவாமி! தினமும் யார் முகத்தில் விழிப்பீர்கள்?

 காட்டில் இருந்தால் நரி முகத்தில், COT -டில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்



---------------------------



5. சாமியார் ஏன் ஐ டெக்ஸ் மை டப்பாவை கைல வெச்சிருக்காரு?

ரேப் கேஸ் அவர் மேல இருக்காம்.. யார் கேட்டாலும் என் கிட்டே ஆண்மை இல்லை, கண் மை தான் இருக்குன்னு சொல்லி சமாளிக்க 



----------------------------------





6. நீயா? நானா? கோபினாத்  மாதிரி நீ இருக்கனும்

 புரியலையே?

எப்பவும் எதுலயும் கோட்டை விட்டுடாம பார்த்துக்கனும்


------------------------------------



7. சுவாமி, ஆடி மாசத்துல புது மணத்தம்பதிகளை பிரிச்சு வெச்சுடறாங்க, இதை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?

என் ஆசிரமத்தில் அந்த மாதிரி கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை பெண்ணே! வா ! கதவை மூடு



-----------------------------------



8. குருவே! இங்கே மிலிட்ரி ரம் கிடைக்குமா?


நித்தி - சிஷ்யா! ஆஸ்”ரம்” என்பதை தவறாக புரிந்து கொண்டாய்!


-------------------------------------------

9. அய்யய்யோ தமிழச்சி -எந்த பிரச்சனை வந்தாலும் என் புருஷன் அதை ஊதித்தள்ளிடுவார்.. 



அப்பாவித்தமிழன் - ஏன்? அவர் செயின் ஸ்மோக்கரா?



------------------------


10. டாக்டர், கால்ல கட்டி, ஆபரேஷன் பண்ணனும்


கால் ஆபரேஷன் தானேன்னு 4 -ல் ஒரு பங்கு ஃபீஸ் எல்லாம் குடுக்கக்கூடாது, ஃபுல் ஃபீஸும் கட்டிடனும், ஓக்கேவா?



----------------------------




11. தங்கர் பச்சான் ஆளுங்கட்சியா?


 ஏன் கேட்கறே?


 அம்மாவின் தொலை பேசின்னு ப்டம் எடுக்கறாரே?



---------------------------


12. டாக்டர், என் கிட்னி ஃபெயிலியர் ஆகிடுச்சு



 அப்டியா?  எத்தனை அரியர் வெச்சிருக்கு?



----------------------------


13. டாக்டர், என் கணவர் கொடூரமான ஆளா இருக்கார்.. 

 டெயிலி “ கருணை”க்கிழங்கு சாப்பிடச்சொல்லுங்க 



-------------------------


14. தலைவரே, டெசோ மாநாட்ல என்ன ஸ்பெஷல்?

 துக்ளக் சோ பேசுவார்




--------------------------------



15. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்கள் அனைவரும் சிக்ஸ் பேக் பெறவும், பெண்கள் அனைவரும் ஜீரோ சைஸ் இடை பெறவும் ஆவன செய்யப்படும்



--------




16. டாக்டர், என் கிட்னி ஃபெயிலியர் ஆகிடுச்சு



அடடா, கிட்னியும் ஃபெயிலா?




------------------------------



17.அத்தான் ,24 மணி நேரமும் ஹெல்மட்டோட சுத்தறீங்களே, ஏன்?



ஊரெல்லாம் கடன், நான் என்ன செய்ய?




-----------------------------------


18. அபாயம், தொடாதே!தொட்டால் மரணம் சம்பவிக்கும்னு டிரான்ஸ்ஃபார்மர்ல போட்டிருக்கு.. 




அதனால் என்ன?


 அதுக்கு கீழே மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்னும் போட்டிருக்கே?



----------------------------------


19. என் கணவர் அநியாயத்துக்கு குடிகாரரா  இருக்கார்




ஏன்?


நகை வாங்கலாம்னு கூப்பிட்டாக்கூட மல”பார்” ஜூவல்லர்ஸ் தான் வருவேன்கறார்

---------------------------------

20. ஸாரி! நான் உங்களை என் தம்பியாத்தான் நினைச்சேன்

நோ, பிராப்ளம். நான் என் அண்ணன் லவ் சம்பந்தமாத்தான் உங்க கிட்டே பேச வந்தேன்



------------------------------


சமூக வாழ்க்கையில் இருந்துதான்
மனிதனின் சிந்தனை படைக்கப்படுகிறதே தவிர
இதற்கு அப்பால் எந்த சக்தியும் இல்லை!

- கார்ல் மார்க்ஸ்

Wednesday, August 01, 2012

சுல்தான், நீ எங்கே இருக்கிறாய்? - சுஜாதா - சிறுகதை

அந்த நாள் என் சந்தோஷ நாள். எனக்கு வேலை கிடைத்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்திருந்தது. அதை மாலதியிடம் காண்பிக்கச் சென்றபோது, அவள் ஊருக்குக் கிளம்பத் தயாராக நான்கு அவசர சாரிகளைப் பெட்டிக்குள் அடைத்துக்கொண்டு இருந்தாள்.



”மாலதி! எனக்கு வேலை கிடைத்துவிட்டது!”



மாலதி மற்றொரு சாரியைக் கசக்கி அடைத்தாள். அவள் முகம் என்னவோ போல் இருந்தது. ”ஏன் மாலதி என்னவோ போல் இருக்கிறாய்?”



மாலதி என்னை வெறித்துப் பார்த்தாள். ”நான் இனி இந்த வீட்டில் ஒரு கணம் தாமதிக்கப்போவதில்லை. சொந்த அப்பாவாக இருந்தால் என்ன, திஸ் இஸ் தி லிமிட்! நான் போகிறேன்!”



”இரு, இரு எங்கே போகிறாய்?”



”எங்கேயாவது!” அவள் கண்களில் நீர் ததும்பியது.



”ஆ, கம் ஆன்! அவசரப்படாதே. என்ன நடந்துவிட்டது? அப்பா ஸ்டார் டஸ்ட்’டை நிறுத்திவிட்டாரா! மாலதி நீ போய்விட்டால் டாக்டர் அவர்களைப் பார்த்துக்கொள்வது யார்? ஒரே ஓர் அப்பா இல்லையா?”



”பார்த்துக்கொள்வதற்கு ஆள் கிடைத்துவிட்டான். மாடிக்குப் போய்ப் பார்! உனக்குப் போட்டியாக மற்றொரு சிநேகிதன் வந்திருக்கிறான். சுல்தான்!



எனக்குத் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் புரியவில்லை. சுல்தான்… இந்தப் பெயரை எங்கோ பார்த்திருக்கிறேனே? சே, அப்படி இருக்காது. எனக்குப் போட்டியாக ஒரு சுல்தானா?





மூன்று தாவலில் மாடி ஏறினேன். கதவு சாத்தி இருந்தது. டாக்டரின் குரல் கேட்டது. ”அப் சுல்தான், அப்! அப்படி சுல்தான், அப்படி அப்!”



புரியவில்லை. கதவைத் தட்டினேன். ”கம் இன். கதவு தாளிடப்படவில்லை. ஆ பையா! எங்கே வந்தாய்..?”



அறையில் டாக்டர் மட்டும் தான் இருந்தார்.

”டாக்டர், முப்பத்தைந்து செகண்டுகளுக்கு முன் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

”ஓ. சுல்தானை நீ இன்னும் சந்திக்கவில்லை அல்லவா?அதோ பார்!”

டாக்டர் குறிப்பிட்ட திக்கில் அறையின் வடமேற்கு மூலையின் மேலே, வெண்டிலேட்டர் என்னும் காற்று ஜன்னலில் தொற்றிக் கொண்டிருந்த சுல்தானை முதல் தடவையாகப் பார்த்தேன்.

சுல்தான் சுமார் மூன்றடி உயரமுள்ள ‘சிம்பன்ஸி’ ரகக் குரங்கு. உடல் முழுவதும் கருகரு என்று கேசம். நீளநீள விரல்கள். முகத் தில் முக்கால் பாகத்தை அடைத் துக்கொண்டு பற்கள்.

மேற்படி பற்கள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டுஇருந்தன. அந்த சினிமாஸ்கோப் சிரிப்பைச் சிரிப்பு என்கிற ரகத்தில்தான் சேர்க்க வேண்டும். பளீர் என்று வெண் பற்கள். ஒவ்வொன்றும் நாற்பது வாட்.

”சுல்தான், கீழே வா!” என்றார் டாக்டர், அது உடனே ரப்பராகத் தாவி, ஒரு கோட் ஸ்டாண்டு, ஒரு சோபாவின் விளிம்பு இவை மூலமாக எங்கள் அருகில் வந்து நின்றது. பக்கத்தில் பார்க்க இன்னும் மொசமொசவென்று அசிங்கமாக இருந்தது. ”டாக்டர், நான் போய்விட்டுச் சாவகாசமாக வருகிறேன். உங்களுக்கு எவ் வளவோ வேலை இருக்கும்.”



”பயப்படாதே. சுல்தான் ஒன்றும் செய்ய மாட்டான். சுல்தான். இது என் ஃப்ரெண்ட்! ஃப்ரெண்ட்! மாமாவுக்கு ஷேக்ஹாண்ட் கொடு.”



சொரசொர என்று ஒரு கரம் என் கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு, ஒரு சலாம் போட்டது. ‘ஹலோ’ என்றேன். சுல்தான் என் பையிலிருந்து பேனாவை எடுத்துக்கொண்டுவிட்டது.



”டாக்டர், என் பேனாவைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள்.”



”எப்படி! ஏறக்குறைய மனுஷாள் மாதிரியே பண்ணுகிறது பார்!”



டாக்டர், என்ன இது, குரங்கை வைத்துக்கொண்டு கூத்து! எங்கே பிடித்தீர்கள் இக் குரங்கை? எதற்காக? ஐயோ, என் பேனாவைக் கடிக்கிறதே! டேய், குடுத்துடுடா.”



”பையா, ஒரே ஒரு வார்னிங். அதை டேய் கீய் என்று மரியாதை இல்லாமல் பேசாதே. சில வேளை கோபம் வந்துவிடும்!” டாக்டர் குரங்கின் தலையை வருடிக்கொண்டே தொடர்ந்தார். ”சர்க்கஸில் வாங்கினேன். நொடித்துப்போன சர்ககஸ் கம்பெனி. இதற்குப் பட்டாணி போடக்கூடக் காசில்லை. பையா, டாக்டர் க்யூலரின் ஆராய்ச்சிகளைப் பற்றிப் படித்திருக்கிறாயா?”



”டாக்டர், நான் கடைசியில் படித்தது ‘நீச்சலடி சுந்தரி’ என்கிற மர்ம நாவல். குமாரி ஜெயபுஷ்பா எழுதியது.”



”டாக்டர் க்யூலர், ‘தி மெண்டாலிட்டி ஆஃப் ஏப்ஸ்’ என்று அருமையான புத்தகம் எழுதி இருக்கிறார்.”



”டாக்டர்! மாலதி ரொம்ப கோபத்தில் இருக்கிறாள். என்ன நடந்தது?”



”நான் அவளிடம் சுல்தானை வாங்கி வந்ததைப் பற்றிச் சொல்லவில்லை. அவள் டிரெஸ் பண்ணிக்கொண்டிருந்தபோது உள்ளே எட்டிப் பார்த்துவிட்டான். கொஞ்சம் குழப்பம். அதிருக்கட்டும், குரங்குகளை வைத்துக்கொண்டு க்யூலர் நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார்.”



”மாலதி ஊருக்குக் கிளம்பிக்கொண்டு இருக்கிறாள்!”



”எங்கேயும் தனியாகப் போக அவளுக்குத் தைரியம் கிடையாது. நாயர் கடை வரை போய்த் திரும்பிவிடுவாள். அவளுக்கு என்னை விட்டுவிட்டு இருக்க முடியாது… க்யூலர் கெஸ்டால்ட்டின் சைக்காலஜியை நிரூபிப்பதற்கு குரங்குகளுக்குச் சில புத்திசாலித்தனமான காரியங்களைக் கற்றுக்கொடுத்தார்… உதாரணத்துக்கு இதோ பார். கம் சுல்தான்…”



எனக்கு கெஸ்ட்டால்டின் மனோதத்துவத்தில் ஈடுபாடு அதிகம் இல்லை என்று சொன்னதைப் பொருட்படுத்தாமல் டாக்டர் அவர்கள் அறையின் மூலையில் இருந்த கூண்டுக்குள் சுல்தானை அழைத்துச் சென்றார். அதைக் கூண்டுக்குள் அடைத்துப் பூட்டினார். சுல்தான் உள்ளே திருதண்டி சந்நியாசி மாதிரி குதித்தது. டாக்டர் அலமாரிக்குச் சென்று ஒரு நீளமான பச்சைநாடன் வாழைப் பழத்தை எடுத்துக் கூண்டின் அருகில் கொண்டுவந்து சுமார் எட்டு அடி தள்ளி வைத்தார். இரண்டு சிறிய மூங்கில் குச்சிகளைக் கூண்டுக்குள் சுல்தானிடம் கொடுத்தார்.

”பையா, வேடிக்கையைப் பார்!”



சுல்தான் முதலில் தன் உடம்பை ஹடயோகியைப் போல நீளமாக இழுத்து வாழைப்பழத்தை எட்டப் பார்த்தது. முடியவில்லை. ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அதனால் வாழைப்பழத்தை எட்டப் பார்த்தது. குச்சி நீளம் போதவில்லை. சுல்தான் மற்றொரு குச்சியை வைத்து முயன்று பார்த்தது. ம்ஹூம். அதுவும் நீளம் போதவில்லை.



இரண்டு குச்சிகளையும் கீழே போட்டுவிட்டுச் சற்று நேரம் கூண்டுக்குள் பின்கை கட்டிக்கொண்டு எலெக்ஷனில் தோற்றவன் போல உலாத்தியது. திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல ஒரு மூங்கிலை எடுத்தது. அதன் நுனியில் கடித்து நீளவாக்கில் கொஞ்சம் பிளாச்சாய்ப் பிளந்துகொண்டது. அந்தப் பிளவில் மற்றொரு குச்சியைச் சொருகிக்கொண்டது. அப்போது நீளம் போதுமானதாக இருந்தது. லாகவமாக வாழைப் பழத்தைக் குச்சியால் தன்பால் நகர்த்தி எடுத்துக்கொண்டுவிட்டது.



”பார்த்தாயா!”



”ரிமார்க்கபிள் டாக்டர். சுல்தான். நீ ஒரு ஜீனியஸ்!”


”ஜீனியஸ் அவனில்லை. கற்றுக் கொடுத்த நான்!”



”இன்னும் என்னவெல்லாம் செய்யும்? மோர்சிங் வாசிக்குமா?”


”பொறு, இதுவரை க்யூலரின் ஆராய்ச்சியின்படிதான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இனிதான் டாக்டர் ராகவானந்தம் வருகிறார்.”



டாக்டர் அலமாரிக்குச் சென்று சிறிய பட்டாணி அளவில் இரண்டு சமாசாரங்களை எடுத்துவந்து எனக்குக் காட்டினார். ”இது என்ன தெரியுமா? மெர்க்குரி செல் பேட்டரி. இது ஒரு சின்ன எலெக்ட்ரானிக் சர்க்யூட். பேட்டரியிலிருந்து சக்தி கொடுத்தால் இதிலிருந்து சின்னச் சின்ன அலைகள், மின் துடிப்புகள் கிடைக்கும். இந்த இரண்டையும் இணைத்துச் சுல்தானின் தலையில் ஆக்ஸிபிட்டல் பாகத்தில் பொருத்தப்போகிறேன். சுல்தானின் மூளைக்குச் சிறிய மின் அதிர்வுகள் கிடைக்கும்போது நடக்கப்போவது என்ன தெரியுமா…? நீ மைக்கல் க்ரைடனின் டெர்மினல் மான் படித்தாயா?”



”டாக்டர், நான் சமீபத்தில் படித்தது நீச்சலடி…”



”நிகழப்போவது மனித சரித்திரத்தில் ஒரு மைல் கல். சுல்தானுக்கு அறிவு கிடைக்கப்போகிறது. சுல்தான் இப்போது இருப்பதைவிடப் பதின்மடங்கு அறிவு பெறப்போகிறான்.”



”டாக்டர், ஏற்கெனவே என் பேனாவைக் கடித்து உண்டு இல்லை என்று பண்ணிவிட்டது. குரங்குக்கு எதற்கு அறிவு கொடுக்க வேண்டும்?”



”இதில் ஒரு சிக்கல்.”



”நல்ல வேளை.”



”தன் தலையில் இந்தக் கருவியைப் பொருத்த விட மாட்டேன் என்கிறான் சுல்தான். என் ஒருத்தனால் சமாளிக்க முடியவில்லை.”



”எனவே…”



”நீ கொஞ்சம் ஒத்தாசை செய்தால் காரியம் நிறைவேறும்.”



”நோ நோ நோ. டாக்டர், எனக்குக் குரங்குகளிடம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. எங்கேயாவது பிடுங்கிவைத்தால்… சே சே! பல் ஒவ்வொன்றும் எவ்வளவு தீர்க்கமாக வளர்ந்திருக்கிறது பாருங்கள்.”



”பையா, உதவி செய்யமாட்டாயா?”



”இல்லை டாக்டர். நான் உங்களுக்கு எவ்வளவோ உதவியிருக்கிறேன். ஆனால், குரங்கு வேலை வேண்டாம். என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் முடியாது!”



”அப்படியா?”



”ஆம். டாக்டர்.”



”முடியாதா?”



”ம்ஹூம். முடியாது.”



”சுல்தான்!” என்றார் டாக்டர். சுல்தான் நிமிர்ந்தது.



”ஷகூலா ஜாகராண்டா!”



”என்ன டாக்டர் அது. குரங்கு பாஷையா… ஹ…ஹ….” என் சிரிப்பு உறைந்தது. சுல்தான் தன் பற்களை ஆர்மோனியக் கட்டைகள் போல் விரித்து என் எதிரில் வந்து நின்றது. ஒரு தடவை எம்பிக் குதித்தது. ஒரு தடவை பாதி உட்கார்ந்து நிமிர்ந்தது. படபட என்று தன் தொடைகளில் தாராசிங் போலத் தட்டிக் கொண்டது.



”டாக்டர், எனக்குப் பயமாக இருக்கிறதே, என்ன செய்யப் போகிறது.”


சுல்தான் லபக் என்று என் தலைமேல் ஏறி டென்னிஸ் ரெஃபரி போல உட்கார்ந்துகொண்டது.


”டாக்டர், திஸ் இஸ் பிளாக் மெயில். என்ன இது! இறங்கச் சொல்லுங்கள்.” நான் தலையை அசைக்காமல் கரகம் ஆடுபவன் போல் இரண்டு கைகளையும் நீட்டி பேலன்ஸ் பண்ண வேண்டியிருந்தது. ”டாக்டர், ப்ளீஸ்!”


அவர் சும்மா இருந்தார்.



”டாக்டர், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். எத்தனை குரங்குகளை வேண்டுமானாலும் பிடித்துக்கொள்கிறேன். இதை இறங்கச் சொல்லுங்கள்!”

”தட்ஸ் த பாய்! சுல்தான், இறங்கு!”

இறங்கிவிட்டது.

”நீ பிடித்துக்கொள்ள வேண்டாம். நான் பிடித்துக்கொள்கிறேன். நீ தலையில் பேண்டேஜ் போல் இந்த சாதனத்தைக் கட்டிவிட வேண்டும். அவ்வளவுதான்.’



”செய்கிறேன் டாக்டர்.” டாக்டர் அவர்கள் சுல்தானைப் பிடித்துக்கொள்ள அந்த இரண்டு சாதனங்களையும் பதித்து பேண்டேஜ் போல என்னைத் தலையில் இறுக்கக் கட்டச் சொன்னார். சுல்தான் தன் பற்களை விரித்து என்னைப் பார்த்த பார்வையில். ‘உன்னை அப்புறம் கவனித்துக்கொள்கிறேன்’ என்றது.



”இது சாதாரணமாகவே புத்திசாலிக் குரங்கு. இதற்கு மூளையில் ‘பல்ஸ்’ கொடுத்தால் இதைச் சமாளிப்பது சற்றுச் சிரமமாக இருக்கலாம். கூண்டுக்குள் அடைத்துவிடலாம்” என்று சுல்தானைக் கூண்டுக்குள் அடைத்துப் பூட்டிவிட்டார்.



”நீயும் குரங்கு வித்தையில் சேர்ந்துகொண்டுவிட்டாயா?” என்று குரல் கேட்டுத் திரும்ப… மாலதி.


”நீ ஊருக்குப் போகவில்லையா? நல்ல வேளை!” என்றேன்.


”டாக்ஸிக்கு அனுப்பியிருக்கிறேன்” என்றாள்.


”மாலதி. கேன்சல் பண்ணு உன் பயணத்தை. சுல்தானைக் கூண்டில் அடைத்தாகிவிட்டது. இதோ பார், இனி இதனால் உனக்கு ஓர் உபத்திரவமும் கிடையாது” என்றார் டாக்டர்.



”கூண்டில் அடைக்க வேண்டியது வேறு இரண்டு ஆசாமிகளை. எத்தனை நாழி டாக்ஸி கொண்டு வர!”



”மாலதி டார்லிங்! இனிமேல் சுல்தானைக் கூண்டுக்குள் வைத்துத்தான் கண்காணிப்பேன்.”



வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டது



”மாலதி, போகாதே!”



”இந்தக் குரங்கு இந்த வீட்டில் இருக்கும்வரை நான் இங்கே இருக்கப் போவதில்லை. காலையில் என்ன செய்தது தெரி யுமா?”

”சொன்னார்! அன்ஃபார்ச்சுனேட்” என்றேன்.


”மாலதி, டாக்டர் க்யூலர் என்ற ஜெர்மானியர்….” என்றார் டாக்டர்.



”பார்த்தாயா, ஆரம்பித்தாகிவிட்டது… டாட்டா!”



மாலதியின் பின்னே நானும் டாக்டரும் தொடர… அவள் வைராக்கியமாக இறங்கிக் கீழே வந்தாள். வாசலில் டாக்ஸி இல்லை. வேறு ஏதோ கார் சத்தம் கேட்டிருக்கிறது.



”மாலதி, இப்போதுகூட லேட் இல்லை. இனி உனக்கு எந்தத் தொந்தரவும் கிடையாது. சுல்தானுக்கு மனிதத் தன்மை கொடுத்துவிட்டேன். நாகரிகம் கொடுத்துவிட்டேன். அவன் இனி பாத்ரூமுக்குள் எல்லாம் எட்டிப் பார்க்க மாட்டான்.”



டாக்டர் அவர்கள் மேலே தொடர்வதற்குள் மாடியில் ‘டணாங்’ என்று சில்லறை இறைபடுவது போல் சத்தம் கேட்டது.



”டாக்டர், அது என்ன சத்தம்!”



”கண்ணாடி உடைந்திருக்கும்” என்றாள் மாலதி.



”இல்லையே. கூண்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுத்தானே வந்தோம்! பையா, வா பார்க்கலாம்.”

”நீங்கள் போய்ப் பாருங்கள். நான் மாலதியுடன் சற்று நே…. டாக்டர்!”

”என்ன?”



”என் அப்பாயின்மென்ட் லெட்டர்! என் வேலை! அதை மாடியில் வைத்துவிட்டேன்! கூண்டுக்கு அருகில் உள்ள மேஜையில்!”



”குரங்கு சாப்பிட்டிருக்கும். ஓடு” என்றாள் மாலதி. எனக்கு திகீர் என்றது. டாக்டருடன் மாடிக்கு நானும் ஓடினேன். அறைக்குள் நுழைந்தபோது…



அறை காலியாக இருந்தது. கூண்டு திறந்திருந்தது. மேஜை மேல் வைத்திருந்த என் அப்பாயின்மென்ட் லெட்டரைக் காணோம். சுல்தானையும் காணோம்!

”டாக்டர்! என் லெட்டர்!”

”பையா! என் குரங்கு!”



”எங்கே அந்த சுல்தான்?”



”சுல்தான்! எங்கே ஒளிந்துகொண்டு இருக்கிறாய்? வந்துவிடு! கண்ணல்லவா? பையா, என் ஆராய்ச்சி வெற்றி… வெற்றி! எப்படித் தப்பித்திருக்கிறது பார். அதற்கு அறிவு வந்துவிட்டது. மேஜை மேல் வைத்திருந்த சாவியைக் குச்சியால் தள்ளி எடுத்துப் பூட்டைத் திறந்திருக்கிறது. குரங்கு… பூட்டைச் சாவி போட்டுத் திறந்திருக்கிறது… வெற்றி!”



”டாக்டர், என் லெட்டரை ஏன் அது எடுக்க வேண்டும்? எங்கே அந்தத சுல்தான்!”



அதற்குப் பதில் போல கீழே வீல் என்று ஐயாயிரம் சைக்கிள் அலறல் கேட்டது. மாலதி! அங்கே விரைந்தோம். ”என்ன மாலதி? என்ன ஆச்சு!”



”குரங்கு…” என்றாள். அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. பயம் தொண்டையை அடைத்தது. அதே சமயம் பின்கட்டிலிருந்த டாக்டர் வீட்டுச் சமையற்காரர் அரை டிராயர் அணிந்துகொண்டு பிரசன்னமானார். ”சார்! டாக்டர் சார்! இனி ஒரு நிமிஷம் இந்தப் பைத்தியக்கார வீட்டில் காரியம் செய்ய மாட்டேன். குரங்கு வளர்க்கலாம். ஆனா, இவ்வளவு செல்லம் கொடுக்கக் கூடாது. நேரா சமையல் அறைக்கு வந்து என் வேஷ்டியையும் துண்டையும் உருவிக்கொண்டுபோய்விட்டது. சே!”



”கையில் ஒரு காகிதம் வைத்திருந்ததா? ரிஜிஸ்டர்டு லெட்டர்?” என்றேன்.

”அது என்ன இழவோ. எனக்குத் தெரியாது. மாலதி அம்மா இந்த நிமிடமே என் கணக்கைத் தீர்த்துவிடுங்கள்.”


”வேஷ்டியையா உருவிற்று? உருவக் கூடாதே!” என்றார் டாக்டர்.



”இன்னும் கொஞ்சம் நாழி இருந்தா டிராயரையும் உருவி இருக்கும்.”



”பையா, விபரீதம். அதன் தலையில் இருக்கும் சாதனத்தை எடுத்துவிடக்கூடும் இல்லையா?”





”மாலதி, நீ சுல்தானைப் பார்த்தாயா?”

”திடுதிடுவென்று நடு ஹாலில் குறுக்கே நொண்டி ப்ளே விளையாடுகிற மாதிரி ஓடியது. அவ்வளவுதான் தெரியும் எனக்கு.”

”எந்தப் பக்கம் போச்சு?”

”வாசல் பக்கம்.”

”போச்சுடா!”

”பையா, வா! சுல்தானைப் பிடித்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் ஆபத்து.”

நானும் டாக்டரும் வெளி

யே வந்தோம். தெரு அமைதியாக இருந்தது. நாங்கள் மேலும் கீழும் பார்த்தோம். எலெக்ட்ரிக் கம்பங்களைப் பார்த்தோம். மரங்களைக் கூர்ந்து பார்த்தோம். சுல்தான் சுல்தான் என்று செல்லமாகக் கூப்பிட்டுப் பார்த்தோம். ம்ஹூம்!

”டாக்டர், அதோ பாருங்கள்…”



சாலை நடுவே குரங்கின் காலடிகள் மாதிரி தெரிந்தது. அருகே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை தெரிந்தது. கடைக்காரரிடம் சென்று, ”ஐயா, இந்தப் பக்கம் ஒரு கறுங்குரங்கு போயிற்றா?” என்று கேட்டேன். அந்த ஆள் என்னை ஒருவிதமாகப் பார்த்தார். அதே சமயம், எதிர் வீட்டிலிருந்து ஒரு நனைந்த ஆசாமி ஓடி வந்தார். ”மாணிக்கம், சட்டுனு ஒரு சோடா உடை! எனக்குப் படபப்பாக இருக்கிறது” என்றார்.



”என்ன ஆச்சு சார்?”



”கொஞ்ச நாளாகவே எனக்கு தத்துபித்து என்று கனா. ஆனா, சொன்னா நம்ப மாட்டே. பகல்ல முழிச்சுட்டு இருக்கிறபோது எனக்குக் கனா வருகிறது! தலையிலே முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு ஆப்பிரிக்க தேசத்துக் குரங்கு பாத் ரூம் வழியா எட்டிப் பார்த்து ஒரு பேப்பரை ஆட்டறாப்பலே! சோடா.”

”சார்! அந்த பேப்பர் என் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் சார். எங்கே அந்தக் குரங்கு?”

”அப்ப குரங்கு நிஜமா?”

”ஆம்!”

”அப்ப வீட்டுக்குள்ளே இருக்கு! குரங்கு உங்களுதா! அறிவுகெட்ட பசங்களா! என்னடா இது அக்கிரமம்? முண்டாசைக் கட்டிவிட்டுக் குரங்கை உள்ளுக்குள்ளேவிட்டு வேடிக்கை பார்க்கறீங்களா? எனக்கு சப்த நாடியும் அடங்கிப் போச்சு!”



”சார், இதை அப்புறம் சாவகாசமாக உங்களுக்குச் சொல்கிறேன். இப்ப அந்தக் குரங்கை முதலில் பிடிக்க வேண்டும். பையா! வா போகலாம்” என்று டாக்டர் கடையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை முறித்துக்கொள்ள இருவரும் அந்த வீட்டில் நுழைந்தோம்.



இக்கட்டாக இருந்த அந்த வீட்டில் ஸ்தம்பித்த ஒண்டுக் குடித்தனக்காரர்களைக் கடந்து, குறிப்பிட்ட பாத் ரூமெல்லாம் தேடி… அறை அறையாகத் தேடி (‘கார்ப் பரேஷன்காரர்களோ?’) பின்கட்டுக்குச் சென்றோம்.



சுல்தான் சாதுவாகச் சப்பணம் கட்டிக்கொண்டு ஒரு வயதான பாட்டிக்கு எதிரே உட்கார்ந்திருந்தது. அந்த மாது கண்களை இடுக்கி அதை உற்றுப் பார்த்து, ”யாரப்பா நீ நம்ம கிஷ்ணசாமி புள்ளையாட்டம் இருக்கே?” என்றுகேட்டுக் கொண்டிருந்தாள்.

`நான் ரகசியமாக, பைய, பின்னால் இருந்து அணுக முயற்சிக்க, சுல்தான் எங்க ளைப் பார்த்துவிட்டது. உடனே உயரமான பின்புறச் சுவரின் மேல் ஏறிக்கொண்டது.



”சுல்தான், நான் சொல்வதைக் கேள். வந்துவிடு!” என்றார் டாக்டர். ”சுல்தான், என் பேப்பரைக் கொடு!” என்றேன் நான். ”ஏன் சார், அந்தக் குரங்கு பேசுமா?” என்றது ஒரு குரல். ”கொசுவலை கொண்டுவரேன். அதைப் போட்டுப் பிடித்துவிடலாம்” என்றது மற்றொரு குரல். நான் ஓட்டுப் பக்கம் ஏறி, மெதுவாக மறுபடி சுல் தானைப் பின்புறம் அணுகி… அணுகி… அணுகிவிட்டேன். பிடித்துவிட்… ம்ஹூம். தப்பித்து அந்தப் பக்கம் குதித்துவிட்டது.



”பையா, சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறது! அந்தப் பக்கம் என்ன இருக்கிறது?”



”சின்ன சந்து, டாக்டர்.”

”சந்தின் முடிவில்?”

”தட்டி போட்டு அடைத்திருக்கிறது.”

”சார், அந்தத் தட்டிக் கதவைத் திறக்கிறீர்களா?” சந்தில் மடக்கி விடலாம். பையா, குரங்கு தெரிகிறதா?”

”தெரிகிறது, பத்தடி தூரத்தில் ராஸ்கல் நின்றுகொண்டிருக்கிறது.”



நானும் டாக்டரும் மெதுவாக நடந்தோம். எங்களுக்குப் பத்தடி முன்னாலேயே சுல்தான் நடந்தது.



”சுல்தான், கண்ணே! நில்லடா!” என்றார் டாக்டர்.



சந்தின் இறுதியில் தட்டி அடைத்திருந்தது. அதன் மேல் முதுகை வைத்துக்கொண்டு நின்றது. நாங்கள் அருகே வருவதைப் பார்த்ததும் தட்டியைப் பிரித்துக்கொண்டு அந்தப் பக்கம் சென்றுவிட்டது.



நான் தட்டியைப் பிரித்து அந்தப் பக்கம் என்ன என்று பார்த்தேன். என் ரத்தம் உறைந்தது.



அந்தப் பக்கம் ஒரு பொதுக்கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. பேசுபவர்கள் எங்களுக்கு முது கைக் காட்டிக்கொண்டு இருக்க… எதிரே திரளான மக்கள் குந்தி உட்கார்ந்துகொண்டு ஆ என்று வாய் பிளந்து பேச்சாளரைக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

சுல்தான் முதலில் ஒரு மூலையில்தான் இருந்தது. யாரும் அதைக் கவனிக்கவில்லை. ஆனால், பக்கத்தில் ஒரு காவலர் இருந்தார். அவர் தொப்பி அருகில் இருந்தது.

”குமுறுகிறோம். கொதிக்கின்றோம். மக்களின் விருப்பத்தினையும் நலத்தினையும் சீரழிக்கும்…” பேச்சாளர்.

சுல்தான் அந்தத் தொப்பியை சைஸ் பார்த்துக்கொண்டு இருந்தது.

”….” ”…..” என்று டாக்டர் சன்னமாகக் கூப்பிட்டார் சந்தினூடே! போலீஸ்காரர் கால் மாற்றிக் கால் போட்டு உட்கார்ந்துகொண்டார். சுல்தான் அவரை நிமிர்ந்து பார்த்தது.

”மத்திய அரசைக் கேட்கின்றோம்!” என்றார் பேச்சாளர். ”உங்களுக்கு விருப்பமிருந்தால் வந்து எங்கள் அரியணையில் உட்கார்ந்து பாருங்கள். அது அரியணையல்ல… முள்!”

சுல்தான் அந்தக் காலி நாற்காலியில் போய் உட்கார்ந்துகொண்டது. மக்கள் பேச்சாளரின் உதடுகளிலேயே கவனமாக இருந்தார்கள்.



”சுல்தான்!” என்று எட்டு பாயின்ட் எழுத்துக்களில் அதட்டிப் பார்த்தார் டாக்டர்.



”வண்ணாரப்பேட்டை அறுபத்து மூன்றாவது வட்டம் கிளை சார்பாகத் தலைவர் அவர்களுக்கு மலர் மாலை” என்று சுல்தானுக்கு ஒரு மாலை போடப்பட்டது.



அப்புறம் அங்கே நிகழ்ந்ததை விவரிப்பது சற்றுச் சிரமமாக இருக்கிறது.



”டேய், குரங்குடா!” என்றது ஒரு குரல். அப்புறம் ஒரு சலசலப்பு!


”எதிர்க்கட்சிக்காரன் வேலைடா!”


”தொப்பி மாட்டிக்கிட்டிருக்குடா!”


டணாங் என்று ஒரு கோலி சோடா பாட்டில் மேடை நோக்கி விரைந்தது. அதைப் பிடித்து சுல்தான் திரும்ப எறிய, ‘அமைதி அமைதி’ என்று ஒலிபெருக்கி அலற, அந்தக் கூட்டம் கலைந்த தேனீக்கூடு போல் ஆகிவிட, தக்காளிப் பழம், முட்டை, ஒற்றைச் செருப்புகள் எல்லாம் பிரயோகமாக…

”டாக்டர், வாருங்கள்! பின்பக்கமாகவே ஓடிவிடலாம்” என்று நாங்கள் ஓட, எங்களுடனேயே சுல்தானும் ஓடி வர, ‘பிப்பீ’ என்று போலீஸ் விசில் சத்தம் கேட்க, என் தோளில் ஒரு முரட்டுக் கை பரவ…

மாஜிஸ்ட்ரேட் கனைத்துக்கொண்டார். ”கைதிகள் டாக்டர் ராகவானந்தம், முதுகுடுமிப் பெருவழுதி. இது அவர் சொந்தப் பெயரில்லை என்று நினைக்கிறேன். இருவரும் இ.பி.கோ.268 பப்ளிக் நியூசன்ஸ், உடன் இ.பி.கோ.289 இவ் விரு பிரிவுகளின்படி குற்றவாளிகளாக நிரூபிக் கப்பட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அப ராதம் செலுத்தத் தவறினால், இரண்டு மாதம் சிறைத் தண்டனை” என்று படித்தார்.



”டாக்டர், என்னிடம் சில்லறையாக இல்லையே?” என்றேன்.



”பையா, கவலைப்படாதே! யுவர் ஆனர்! அபராதத் தொகையைச் செலுத்தத் தயாராக இருக்கிறோம். மாலதி!” என்றார்.



சபையில் தலைமறைவாக இருந்த மாலதி ஓரமாக வந்து, ”அப்பா பேங்கில் மொத்தம் 550 ரூபாய்தான் இருந்தது” என்றாள்.



நான் திடுக்கிட்டேன். டாக்டர் தலையைச் சொறிந்து என்னை நோக்கினார். ”இப்ப என்ன செய்வது?”



”முதுகுடுமி ஜெயிலில் இருக்க வேண்டியதுதான்! க்யூலரின் அருமையான புத்தகம் கொண்டுவந்திருக்கிறேன். படித்தால் பொழுது போய்விடும். இரண்டு மாதம்தானே?” என்றாள் மாலதி.

Bhale Dongalu - இலியானாவின் தெலுங்கு சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOg5hj3IZCPaxL7yLCSIu-zjY5u70Rf1qqVRcrFh-mSvAwrbysbzwyfqCH9VbQXdPpH4JhqfvjjklcR4pbXr-xgd3VKv6tYAfA1OJ1BJAJHlh7fcXWBdhXdzQq5V0upnQIcujk7bNkhZE/s400/1.jpg 






வழக்கம் போல் மரபு மாறா அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோவின் அடையாளமா ஹீரோ ஒரு வெட்டாஃபீஸ்.. அப்பா திட்டிட்டே இருக்காரு.. ஏதாவது ஒரு வேலைக்கு போ,.. இல்லை இடத்தை காலி பண்ணுன்னு ஜெ ராம்தாசை கேவலப்படுத்துன மாதிரி விரட்றாரு.. ஹீரோ பட்டணம் வர்றாரு.. 




ஹீரோயினும் ஒரு ஓடுகாலிதான்.. பாப்பா ஃபேஷன் கேர்ள் அல்லது மாடலிங்க் கேர்ள் ஆகனும்னு ஆசை.. வீட்ல மேரேஜ் ஏற்பாடு நடக்குது..  விட்டா போதும்னு இதுவும் ஓடி வந்துடுச்சு..


பாருங்க.. ஜாதகப்பொருத்ததை.. 10 பொருத்தமும் பொருந்துன மாதிரி

1. வீட்டுக்கு அடங்காதவங்க  2. கைல 10 காசு 2 பேர்ட்டயும் இல்லை  3. வீண் ஜம்பத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை..

இதுக்கு மேல என்ன வேணும்?

மார்வாடிக்கடைல ஹீரோயின் தங்கநகைன்னு சொல்லி  கவரிங்க் நகையை  விக்கறாங்க.. உலகத்துலயே அப்படி ஒரு ஏமாளி சேட் இருக்கா மாட்டார்..

அப்புறம் ஒரு ஷோ ரூம்ல போய் வாஷிங்க் மெஷினுக்குள்ளே 10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை அபேஷ்  பண்ணிட்டு வந்து  பிலாட்ஃபார்ம்ல வந்த ரேட்டுக்கு தள்ளி விடறாங்க..

அந்த ஷோ ரூம் ஓவர் தான் வில்லன்.. கோடி கோடியா சம்பாதிச்சாலும் இந்த பிசாத்து 10 லட்சம் ரூபா போனதுக்கு என்னமோ தன் குல கவுரவமே போன மாதிரி கவலைப்படறான்.. 

 http://mimg.sulekha.com/telugu/bhale-dongalu/events/bhale-dongalu/bhale-dongalushoot90.jpg




தேடுதல் வேட்டை நடக்குது.. இப்போ ஒரு போலீஸ் ஆஃபீசர் எண்ட்ரி.. எப்படியாவது இந்த 2 கேடிகளையும் பிடிச்சே தீருவேன்னு ஆடியன்ஸை பார்த்து சொல்றாரு.. இடைவேளை

வில்லன் போதை மருந்து பிஸ்னெஸ் பண்றவன்.. இண்டர் நேஷன்ல் கிரிமினல்..  கலைஞரை விட 10 மடங்கு டேலண்ட்டான ஆள்.. அப்படிப்பட்டவனை ஹீரோ மளிகைக்கடைல மைதா மாவு பாக்கெட் 5 வாங்கி அதை அபின்னு சொல்லி விக்கறார்.. அந்த கேன வில்லன் அதை வாங்கி கோடிக்கணக்கான பணத்தை லூஸ் மாதிரி தர்றார்..

 உண்மை தெரிஞ்சதும் கேப்டன் மாதிரி கண் எல்லாம் சிவக்குது.. எப்படியாவது ஹீரோவை பிடிச்சே தீருவேனு சொல்லிட்டே இருக்கார்..

 இப்போ திடீர்னு டைரக்டர்க்கு ஒரு டவுட்.. இவ்ளவ் கேனத்தனமா திரைக்கதை இருக்கே.. செண்ட்டிமெண்ட் கொஞ்சம் சேர்த்தா என்ன? உடனே ஹீரோ ஏமாத்தி சேர்த்த பணத்தை எல்லாம் பஸ்ல பார்த்த முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஒரு 8 வயசுப்பொண்ணோட ஆபரேஷன் செலவுக்கு உதவி பண்றாங்க ( ராபின் ஹூட் இமேஜ்)

இந்த மொள்ளமாரி ஹீரோவை, முடிச்சவுக்கி ஹீரோயினை அந்த கேன வில்லனோ, லூஸ் போலீஸ் ஆஃபீசரோ பிடிச்சாங்களா? இல்லையா? என்பது தான் கேவலமான க்ளைமாக்ஸ்,..

 இதுல செம காமெடி என்னன்னா  க்ளைமாக்ஸ்க்கு 2 ரீல் முன்னால ஹீரோயின் சசிகலா மாதிரி திடீர்னு திருந்திடுது.. ஹீரோ கிட்டே சொல்லுது.. இதுவரை நாம செஞ்ச தப்பு எல்லாம் போதும்.. இனிமே தப்பு பண்ணக்கூடாது.. ( தப்புன்னா கில்மா தப்பு இல்லை.. திருட்டு )

 ஹீரோவும் மண்டையை மண்டையை ஆட்டறான்..


ஹீரோ எனக்கு 20 உனக்கு 18 உன் தங்கச்சிக்கு 16 , உங்கம்மாவுக்கு 38 அப்டினு ஒரு படம் த்ரிஷா நடிக்க வந்ததே அந்த ஹீரோ தருண்.. நடிக்க எல்லாம் வாய்ப்பே இல்லை.. இருக்கற கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்துக்குவாரு.. ஹீரோவுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன்..  நல்ல படம் கிடைச்சு நல்ல பேரு வாங்கறதை விட முக்கியம் ஏதோ சான்ஸ் கிடைக்குதேன்னு குப்பைப்படத்துல நடிச்சு கெட்டபேர் வாங்கிக்க கூடாது

ஹீரோயின் உடுக்கு இடை அழகி இலியானா.. இவரு தம்னா மாதிரி எழுமிச்சை நிறத்தவர் அல்ல.. இருந்தாலும் இவர் ஒரு லெமன் அழகிதான் .. ஹி ஹி .. இலந்தைப்பழச்சிவப்பு உதட்டு அழகி, தொப்பை போடாத மிகச்சில நடிகைகளில் இவரும் ஒருவர்.. மற்றபடி நடிப்பு பற்றி எல்லாம் மூச்

வில்லன் கஜினி படத்துல வில்லனா வந்தாரே அவர் தான் அவர் சம்சாரம் இந்தப்படத்தை பார்த்தா கண்டிப்பா அவருக்கு  உதை தான் விழும்.. அவ்ளவ் கேனத்தனமான கேரக்டரைசேஷன்.. .. , Jagapati Babu- இவர் தான் போலீஸ் ஆஃபீசர்.. ஹய்யோ அய்யோ
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivvkVgsJ1yGVzx_T5pwPdYNMZdJ0qSrJj9aM1gvClwqBznC1tQo21u-lmXbpvC4Vxj9m1mutBLiBMFCcvaCpex04XGYS3-PNfwEhpdfZizdrkIydq0I0TcuJUM1MBwTXijcWNpO7iXW5c/s1600/ileana-latest-most-cute+(1).JPG

இந்த கேவலமான படத்துலயும் ரசிக்கும்படி இருந்த சில பல வசனங்கள்


1.  வேலைக்கு போகலை?

சம்பளம் ரொம்ப கம்மி

 படிச்சதும் கம்மிதானே? பி காம் 3 வது வருஷம் , வித் ஏகப்பட்ட அரியர்ஸ்.. அவ்ளவ் தான் வரும்.. 




2.திருடனை பிடிக்க போலீஸ்க்கு மிஷின் கன் கொடுப்பாங்க.. உங்களுக்கு மட்டும் வாஷிங்க் மிஷின் குடுத்திருக்காங்க?




3.  ஒரு சாதாரண பால் (BALL)  பிடிக்கத்தெரியாத நீ என்னை பிடிக்க போறியா? 




4. பொண்ணு எப்படி இருப்பா?


 அஜந்தா சிலை மாதிரி


 காம சூத்ரா கதையா சொல்லிட்டு இருக்கே?






5. சாதாரணமா நான் யார் கிட்டேயும் உண்மையை சொல்ல மாட்டேன். ஆனா நீங்க மிரட்டி கேட்கறதால உங்க கிட்டே மட்டும் சொல்றேன்..  ஹி ஹி 




6.  யூ ஆர் ஏன்  இடியட்

 தாங்க்க்ஸ்


7.  உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?

 சொன்னாத்தானே தெரியும்?

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6AdTgIvdl4c4HYElbGpkA4-oPn8wdlDHgJNy8fObHHxnesBzhYJ5dkvRmpbSHyTLCYUzTIhr_w2dGcCiWn4F8-h9mI0hmzHHv6Ps-jcH33CymxWMuYK0-I49gnNmPQ1enL8PTuwbgtLA/s400/Bhale+Dongalu.jpg


8. ஏம்மா,, அவன் என்ன பண்றான்? பார்த்து சொல் பார்க்கலாம்?

 பொக்கே விக்கறான்




 நோ, கொக்கே ( போதைப்பொருள்) விக்கறான், அதை  அதிகமா யூச் பண்ணா ஆபத்து.


 ஆமா, கொக்கே சாப்பிட்டா உயிர் போயிடும் பிஸ்கட் சாப்பிட்டா பசி போயிடும்




9. சாதாரணமா இருக்கும்போது என் முகம் சும்மா தான் இருக்கும்.. பொண்ணுங்க வந்துட்டா சுறு சுறுப்பு ஆகிடும்,.,. ம்


10.அவங்க ஏன் உன்னை துரத்திட்டு வர்றாங்க?



திரும்பிப்பார்க்கறப்ப என்னை பார்த்துட்டாங்க .. கடத்திட்டு போகப்போறாங்க .. அழகா இருக்கேன் இல்லையா?

 ம், தப்புதான்

 எது ? அழகா இருக்கறதா?


 ம்ஹூம், கடத்தறது



11. சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஏன் டைவர்ஸ் பண்றாங்க? ( பெருசா எதிர்பார்த்து ஏமாந்திருப்பாங்க ஹி ஹி )


இப்போ அது தான் ஃபேஷன்.. ஃபாரீன்ல எல்லாம் ஆ-ன்னா ஊன்னா டைவர்ஸ் தான்


12.  உன் சம்சாரம் நெருப்பு மாதிரி

 ஆமா அவ சூடா இருக்கா..  தொட்டுப்பார்த்தேன்


13.  நம்ம 2 பேருக்கும்  ஒரே அளவு செல்வம், மதிப்பு,அந்தஸ்து, எல்லாம் சமம். என் கிட்டே இல்லாதது அப்படி என்ன உன் கிட்டே இருக்கு? 

 உன் சம்சாரம்  இப்போ என் கிட்டே தான் இருக்கா. ஹி ஹி 


14. பணம் இல்லாம கூட என்னால வாழந்துட முடியும் , ஆனா நீ இல்லாம வாழ்ந்துட முடியாது ( ஏன்னா அவ பேர்ல தான் எல்லா சொத்தும் இருக்கா?) 



இந்தப்படத்தோட உல்டா தான் அது.. ஹி ஹி 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwGv36WMoXzXRKskb7wXPQ0gKkuRhsyZxsa1rrxHYdPDLnShXtUlqFa90NkyKVs5bnH3niWPpEqBpDk7sa8-gIFv5ZCX2m-UcED01p1TUJAvK6hTIibDHZ3FbJspH35qN_q97zkJLYs08/s400/BUNTY+P.jpg

 இயக்குநரிடம் நக்கலாக சில கேள்விகள்


1.அண்ணே, எந்த ஊர்ல நாய் மைதா மாவு சாப்பிட்டு இருக்கு?  அப்டியே சாப்ட்டாலும் ரெகுலரா  வில்லன் நாயை அபின் சாப்பிட வைத்து பழக்கி இருக்கான்.. அது கண்டு பிடிக்காதா? கொஞ்சம் அபின் கொஞ்சம் மைதா கொடுத்தா அதுக்கு தெரியாதா>?



2. எங்கோ இருக்கும் பேபியோட ஆபரேஷனுக்கு பணம் கட்ட ஹீரோ ஹாஸ்பிடல் வந்து வில்லன் கிட்டே மாட்டிக்கறாங்க.. இது மணி ட்ரான்ஸ்ஃபர் காலம்.. அந்த ஹாஸ்பிடல் அக்கவுண்ட் நெம்பர் வாங்குனா உலகின் எந்த மூலைல இருந்தும் யார் வேணாலும் பணம் கட்டலாமே? எதுக்கு மெனக்கெட்டு ஹீரோ அங்கே வரனும்?


3. அந்த போலீஸ் ஆஃபீசர் படம் பூரா என்ன தான் பண்றார்? சம்பளம் எதுக்கு தண்டமா கொடுத்தீங்க..?


4. இவ்வளவு கேனத்தனமா லாஜிக் இல்லாம வெட்டியா நடிக்க சாரி வந்துட்டுப்போக வில்லன் எப்படி சம்மதிச்சாரு..?


இந்த ஹாலிவுட் படம் தான் இதனோட மூலம் -

http://jumpinblack.com/wp-content/uploads/2010/02/23mv5o4.jpg




 சி. பி கமெண்ட்  - இந்த கேவலமான படத்தை ஈரோடு சங்கீதாவில் பார்த்தேன்..


 தொழில் நுட்பக்கலைஞர்கள்  

Directed by K. Vijaya Bhaskar
Produced by Sakhamuri Panduranga Rao
Bellamkonda Suresh
Written by Abburi Ravi
Starring Tarun Kumar
Ileana D'Cruz

Jagapati Babu
Music by K.M. Radha Krishnan
Release date(s) April 11, 2008
Country India
Language Telugu              

சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு ரூ 12,500 பரிசு பெற்ற மங்கையர் மலர் சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyuaAWvx_l9LovRTGuCGgKhDPmznWaA9QiVfMtu4atfMnQ1-guCPhTwmnw-ajFQ8sm9d1OsfkP9zWJ8hOFc_ySegln1Y3WHL6axy0GjPZ4saToBzT76KNLHz1TUrwii85rlSMoGMaa4IHZ/s1600/p86.jpg 


தெளிவு!



கதை: ர.கிருஷ்ணவேணி



ஓவியம்: ஸ்யாம்





வங்கி சற்றே மூச்சுவிடும் மதிய நேரம். கலகலவென்று சாப்பாட்டு நேரம் நடந்து கொண்டிருந்தது. புளியோதரையும், புலாவும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.



இந்தா உஷா, உனக்காக புளி சாதமும், வெங்காய வத்தலும் கொண்டு வந்திருக்கேன்... சாப்பிடு."



அதென்ன உஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல்? இந்தப் பக்கம் கொஞ்சம் திருப்புங்க ராதா!"


உஷா உண்டாயிருக்கா. அதுக்காகக் கொண்டு வந்தேன். உனக்கென்ன வேண்டிக்கெடக்கு?"


நான் குண்டாயிருக்கேன். போதாதா?"



சிரிப்பு அலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. பேச்சு சினிமா, புடவை என்று திரும்பியது.


சாந்தா மேடம், உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு."


பியூனின் குரல் கேட்டு, வாயில் போட்ட தோசையை அவசரமாக விழுங்கி, தண்ணீரைக் குடித்தாள் சாந்தா.



‘யாராக இருக்கும்?’



ஹலோ, நான் திவ்யா பேசறேன்."



திவ்யா? சட்டென புரியவில்லை.



யாரு?"



போன ஞாயிற்றுக்கிழமை, என்னைப் பொண்ணுப் பாக்க வந்தீங்களே. அந்த திவ்யா தான்".



ஓ! ஆமாம். என் ஃப்ரெண்டோட பொண்ணு பேரும் திவ்யாதான். ஆனா, அவ கல்யாணமாகி அமெரிக்கா போயிட்டா. இந்த நேரத்துல கூப்பிட சான்ஸே இல்லை. அதான் யோசிச்சேன். சொல்லும்மா திவ்யா. என்ன விஷயம்?"



உங்களோட கொஞ்சம் பேசணும்."



சொல்லும்மா."



இல்ல, நேர்ல பாத்து பேசணும்."



பொண்ணுப் பாத்து, சம்மதம் சொல்லி, நிச்சயத்துக்கு நாள் குறிக்கும் நிலையில், பொண்ணு வருங்கால மாமியாரிடம் தனியாகப் பேச வேண்டுமென்றால், விஷயம் என்னவாக இருக்கும்? காதல்... திருமணம் செய்ய சம்மதம் இல்லை என்று ஏதாவது சொல்லப் போகிறாளோ?’



மைலாப்பூர் கற்பகாம்பாள் கோயிலுக்கு வாம்மா திவ்யா. நேர்ல பாக்கலாம்" சொல்லி ஃபோனை வைத்தாள் சாந்தா.



அம்மா, புதுப் பூமா. இரண்டு முழம் பத்து ரூபாதாம்மா." பூக்காரியின் குரலுக்கு மதிப்பு கொடுத்து, தேவையான பூவை வாங்கிக்கொண்டாள். திவ்யாவுக்கு என்று தனியாகக் கொஞ்சம் வாங்கினாள்.



மஞ்சள் நிற சுடிதாரில், பளிச்சென்று ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள் திவ்யா. வண்டியை நிறுத்த வேண்டிய இடம் பார்த்து நிறுத்திவிட்டு வந்தாள். பக்கத்திலிருந்த கடையில் அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டாள்.



என்னம்மா திவ்யா பொண்ணு, கோவில் பக்கம் பாத்து ரொம்ப நாளாச்சு?"



ஆமாம் கனகவள்ளியம்மா! வேலைக்குப் போறேன். நேரம் சரியாப் போயிடுது. உங்கப் பொண்ணு நல்லா படிக்குதா?"



படிக்குதும்மா."


நல்லா படிக்க வைங்க. எதுக்காகவும் படிப்ப நிறுத்திடாதீங்க. ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க."



சரி கண்ணு."


தங்கவேலு அண்ணன் எங்க காணோம்?"



இங்கதான் இருந்தாரு. டீ குடிக்க எங்கனா போயிருப்பாரு. உம் பேச்சுதான் அவருக்கு. நீதான ஆபரேஷன் பண்ண, தெரிஞ்சவங்க மூலம் ஏற்பாடு பண்ணி பிழைக்க வச்ச?"



வரும்போது அவரைப் பாக்கறேன். இருக்கச் சொல்லுங்க." பேசியவாறே சாந்தாவைப் பார்த்து அருகே வந்தாள்.




ரொம்ப நேரமாய் காத்துக்கிட்டு இருக்கீங்களா?"



இல்லம்மா. இப்பதான் வந்தேன். இந்தா, பூ வச்சுக்கோ."


உள்ளே போகலாமா?"




சென்றார்கள். அர்ச்சனை முடித்து, பிரசாதம் வாங்கி வெளியில் வந்தார்கள். ஒதுக்குப்புறமாக உட்கார்ந்தார்கள்.



சொல்லு திவ்யா! என்ன விஷயம்?" நேரடியாக வந்தாள் சாந்தா.


எங்கம்மா, உங்ககிட்ட எங்கக் குடும்பத்தைப் பத்தி என்ன சொல்லி இருக்காங்க?"



ஏன் இப்ப என்ன பிரச்னை திவ்யா?"



நீங்க முதல்ல சொல்லுங்க."



உங்கப்பா சின்ன வயசுல இறந்துபோயிட்டாரு! நீ ஒரே பொண்ணு. வேற யாரும் உறவுக்காரங்க இல்லைன்னு சொன்னாங்க."




எங்கப்பா சாகலை. உயிரோடதான் இருக்காரு."



உங்கம்மா வெத்து நெத்தியோட, கழுத்தில தாலி இல்லாம இருக்காங்களே!"




அது, எங்கப்பா செஞ்ச தப்புக்கு, எங்கம்மா தனக்குத் தானே கொடுத்துக்கிட்ட தண்டனை." திவ்யா மேலே பேசிக் கொண்டே போனாள்.



பொறுப்பில்லாத கணவனுக்கு வாழ்க்கைப்பட்டும், பொறுமை காத்தாள் என் அம்மா. காலம் போனால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பினாள். ஆனால், வேறொரு பெண்ணைத் தேடி, அவளை, தான் இருக்குமிடத்துக்கே அழைத்து வந்தபோது தாங்க முடியாதவளாய் தட்டிக் கேட்டவளை எட்டி உதைத்தான் கணவன்.




அவ இங்கதான் இருப்பா. என்ன செய்வ?" திமிராகக் கேட்டான்.



கணவன் கட்டிய தாலியைக் கழற்றி, அவன் கையிலே தந்தாள். என்னைப் பொறுத்தவரை, இன்னிக்கே நீ செத்துட்ட; கட்டிய பெண்டாட்டிக்கும் பிறந்த குழந்தைக்கும் மட்டும் துரோகம் செய்யல. இன்னொருத்தன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு வந்து, அந்தப் புருஷனுக்கும் கெடுதல் செஞ்சுட்ட. இனிமே உன்கூட வாழ நான் தயாரில்லை" என்று தூக்கி எறிந்துவிட்டு, கைகுழந்தையான என்னைத் தூக்கிக்கொண்டு வெளியேறிய என் அம்மாவை, நான்கு பெண்களுடன் இருந்த அவள் பிறந்தகம், அணைத்துக் கொள்ள மறுத்தது.




இப்புடி சடக்குனு வந்துட்டா எப்பிடிம்மா? ஆம்பிளைங்க முன்ன, பின்ன இருந்தாலும், நாமதான் அனுசரிச்சுக்கிட்டு போகணும். உனக்கு நாலு தங்கச்சிங்க இருக்காங்க. நீயும் ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருக்க. எல்லாத்தையும் யோசிச்சுப்பாரு. அவசரப்படாத" என்று அறிவுரைதான் வழங்கியது. பிறந்த வீட்டையும் துறந்து, தனித்து ஜெயித்துக் காட்டுவதாக சபதம் செய்து, தெரிந்தவர்கள் உதவியால் மேலே படித்து, பள்ளி ஆசிரியையாகி, தன்னை வளர்த்து ஆளாக்கின கதையை நீளமாக முடித்தாள் திவ்யா.





எங்கம்மாவைப் பொறுத்தவரைக்கும், எங்கப்பா என்னைக்கோ செத்துட்டாரு. ஆனா, எனக்கு விவரம் புரியற வயசு வந்த பிறகு, ஒருநாள், எங்கம்மா என்னைக் கூப்பிட்டு, எல்லா விவரமும் சொன்னாங்க. தஞ்சாவூர் பக்கம், முனிசிபல் சேர்மனா எங்கப்பா இருக்கிறதா தகவல் சொன்னாங்க.




உனக்கு வசதியாய் வாழணும்னா, அவர் செஞ்சது தப்பில்லைன்னு பட்டா, நீ அவரோட போய் சேர்ந்திருக்கலாம்’னு சொன்னாங்க. எனக்குப் பிடிக்கலை. அதனால நான் போகலை. ஆனா, அம்மா இந்த உண்மையை உங்கக்கிட்ட சொல்லியிருக்கணும். உங்களுக்கு நான் மருமகளாய் வந்தபிறகு, வேற யார் மூலமாவது உங்களுக்குத் தெரிய வந்து, எங்கம்மாவ நீங்க தவறாய் நினைக்கக்கூடாது இல்லையா? அதுக்காகத்தான். உங்களை நேர்ல பாத்து சொல்லணும்னு நெனச்சேன். இப்ப நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சரி."




பேசி முடித்த திவ்யா, கைப்பையிலிருந்த பாட்டிலிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்து தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன.



வா, திவ்யா போகலாம்."



நீங்க என்ன சொல்றீங்க? எனக்குப் புரியலையே."




நிச்சயத்துக்கு நாள் குறிக்கணும். முகூர்த்தப் புடவை எடுக்கணும். நிறைய வேலைகள் இருக்கு. உனக்கு என்ன கலர் பிடிக்கும்?" பேசிக்கொண்டே போன சாந்தாவை புரியாமலே பார்த்தாள் திவ்யா.



எதையும் போட்டுக் குழம்பிக்காம கிளம்பு."



நான் இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் நீங்க...?"



நீ இன்னிக்கு ஃபோன் பண்ணினபோது, இந்தப் பொண்ணு என்ன பேசப் போகுது?" அப்படின்னு யோசன போச்சு. இங்க கோயில் வாசல்ல உன்னைப் பார்த்தேன். உன்னோட வண்டிய, முறையாய் பார்க்கிங்ல நிறுத்தி வந்ததப் பார்த்தேன். அங்க இருந்தவங்ககிட்ட, தன்மையாய் பேசறதப் பார்த்தேன். அவங்களுக்கெல்லாம், உன்னாலான உதவிகள் செய்யறேங்கறதும் புரிஞ்சது. கோயிலுக்கு, அடிக்கடி வர்ர தெய்வ பக்தி உள்ள பொண்ணுங்கறதும் தெரிஞ்சது.




என்கிட்ட பேசும்போது, உனக்கு படபடப்பு இல்லை. உண்மைய சொல்லணும்கற நேர்மை மட்டுமே இருந்தது. உங்கப்பா யாருன்னு உங்கம்மா சொன்னதுக்கப்புறமும், வசதியான வாழ்க்கை வாழணும்னு நீ ஓடலை. எது தப்பு, எது சரின்னு, உனக்குள்ள ஒரு தெளிவு இருக்கு. இந்த விஷயத்த வேற யார் மூலமும், ஏன் என் பிள்ளைக்குக்கூட சொல்லாம, என்னை நேர்ல கூப்பிட்டு, என் கண்ணைப் பாத்து சொல்ற துணிவு இருக்கு. சுருக்கமாய் சொன்னா, உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."



எங்கம்மா...?"





இவ்வளவு தெளிவான பெண்ணா, உன்னை வளர்த்திருக்காங்கன்னா, உங்கம்மாவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்பிடி ஒரு பொண்ணு வேற எங்க தேடினாலும் என் ஹரிக்கு கிடைக்காது. உங்கம்மா செஞ்சது தப்பே இல்லை. இதைப்பத்தி, நானே உங்கம்மாகிட்ட பேசிக்கறேன்."



எனக்கு இப்பத்தான் ரொம்ப பயமாய் இருக்கு."



என்ன திவ்யா நான் இவ்வளவு விளக்கு சொன்னதுக்கப்பறம், பயம்னா என்ன அர்த்தம்?"



நான் சொல்லாத விஷயங்களைக்கூட, நீங்களாய் புரிஞ்சுக்கிட்டீங்க. எதையுமே பட்டுன்னு முடிவெடுக்காம, யோசிக்கிறீங்க. அடுத்தவங்க பக்கம் இருக்கற நியாயத்த புரிஞ்சுக்கிறீங்க. உங்களுக்கு, நல்ல மருமகளாய் நான் இருக்கணும்கற பயம்தான்."



என்ன திவ்யா! இப்படி புகழ்ந்தா எனக்கு ரொம்ப வெட்கமாய் இருக்கு. குளிருது வேற."



பொய்யாக நடுங்கி, புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்ட சாந்தாவைப் பார்த்து கலகலவென சிரித்தாள் திவ்யா. மரியாதையுடன் பார்த்தாள். இத்தனை நல்ல உறவை தனக்குக் கொடுத்த இறைவனுக்கு மனதால் நன்றி கூறினாள்.




கிளம்பலாமா திவ்யா?"



வீட்டுக்குத்தானே போறீங்க?"



ஆமாம்...!"



நான் உங்களை ட்ராப் பண்ணட்டுமா?"



ஓ.கே. தாரளமா. ஆனா அதுக்கு முன்னால ஒரு சின்ன வேலை இருக்கு."





என்ன வேலை?"

எதுத்த ஹோட்டல்ல பாதாம் அல்வா சூப்பரா இருக்கும். ஒரு பிடி பிடிச்சுட்டு போகலாமா?"



ம்... எனக்கும் பாதாம் அல்வா பிடிக்கும்!"



நீ சொல்லாமலே, உனக்கு மஞ்சள் கலர் பிடிக்கும்னும் புரிஞ்சுக்கிட்டேன்."



கோயிலைவிட்டு வெளியே வந்த போது, கடல் காற்று, இதமாக வீசத் தொடங்கியிருந்தது. மாமியாரும், மருமகளும் பழகும் தோழமை உணர்வும் அதில் அழகாய்க் கலந்திருந்திருந்தது.


நன்றி - சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி , புலவர் தருமி , மங்கயர் மலர்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn-xl2jh03RD1KwiamDSMkG1SXBg1rDBPGgQvNbqszY-qAH6hWFjrmLVkx1TXYfc5fC_zkfM73AN6bhLUFC_cuovUXKoIzI4ihT8NCvWDmwHERrX4z5F-xvHRfN3DVgj6T3zkalQsNoUc/
ஈரோடு நகர படங்கள்


1. அபிராமி  70 MM AC  DTS - பில்லா 2

2. தேவி அபிராமி AC  - சகுனி


3. ராயல் - மனங்கொத்தி பறவை


4. வி எஸ் பி AC  DTS - பொல்லாங்கு


5. ஆனூர் AC  DTS - நான் ஈ


6. ஸ்ரீ சண்டிகா - பில்லா 2


7. ஸ்ரீ கிருஷ்ணா  DTS- THE DARK KNIGHT RISES ( BAT MAN 3)


8. அன்ன பூரணி -மாலைப்பொழுதின் மயக்கத்திலே

9. ஸ்ரீ லட்சுமி   DTS- நாடோடி மன்னன்


10. ஸ்டார் - BLOOD MARY


11. பாரதி - கொஞ்சும் இளமை


12. அண்ணா  DTS - சுழல்


13. ஸ்ரீநிவாசா   DTS  மாலைப்பொழுதின் மயக்கத்திலே


14. சங்கீதா DTS- திருடி திருடன்


15. மாணிக்கம்  - பாட்ஷா

. ஒரு இன்கம்டாக்ஸ் ஆஃபீசரை கட்டிக்கிட்ட பொண்ணு ...

It Happen In Malaysia....LOL !!!
1.சங்க்மா ஜெயிச்சா மாணவர்களுக்கு நல்லது,

மம்மி - நாட்டின் பிரதமர் யார்?

 சிங்க்மா

 மம்மி- நாட்டின் ஜனாதிபதி யார்?


 சங்க்மா


------------------------


2. பில்லா 2 சூப்பர் ஹிட்னு சொல்லிக்க ஒரு வழி இருக்கு, பில்லா 3 எடுத்து அதை ஃபெயிலியர் ஆக்கிட்டா? # பெரிய கோட்டை  சின்னக்கோடு ஆக்க அதை அழிக்காம பக்கத்துல அதை விட பெரிய கோடு வரையும் ஃபார்முலா



-----------------------


3. மேனேஜர்னா நம்மை விரட்டிட்டே இருப்பார், சம்சாரம்னா நம்மை மிரட்டிட்டே இருக்கும் # மிடில் கிளாஸ் சிந்தனைகள்



-----------------------


4. ஈரோடு பெருமாள் கோவிலில் சுண்டல் தரும் நேரம் காலை 7 மணி.ஈஸ்வரன் கோயிலில் வெண்பொங்கல் தரும் நேரம் காலை 8 மணி # ஓ ஸி ரோஸியின் டைரிக்குறிப்பு



-----------------------

5. பொண்ணுங்களுக்கு ஓவர் வாய்=6 வாய்? #கிரிக்கெட் கிறுக்கு



---------------------



Gud Morning Frnds...
Gud Morning Frnds...


6. அல்ஜீப்ரா சம் செய்வது = 7 1/2 யை கூட்டுவது போல. மனைவியை போனில் நாமா கால் பண்ணி பேசுவது = 7 1/2 யை கூப்பிடுவது போல




---------------------

7. விஜய் ரசிகரின் டைரியில் - காலம் கன் ( gun) (துப்பாக்கி) போன்றது



-------------------


8. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டா? கே வி ஆனந்த். சூர்யா கிட்டே கேட்கனும் # மாற்றான்



-------------------------

9. வெள்ளிக்கிழமையை சில்வர்டேன்னு சொல்லாம ஏன் பிரைடேன்னு சொல்றாங்க?



--------------------

10. சிவப்புக்கலர் கோட் டையே எப்பவும் போட்டுட்டு இருந்தா அவர் செங்கோட்டையனா?



---------------------




11. சார், இந்த ஸ்டெப் வழியாப்போனா மேலே போலாமா?


ச்சே ச்சே முடியாது, ஸ்டெப் வழியா போய் அங்கே இருந்து கீழே குதிச்சா மேலே போயிடலாம்


------------------------


12. ஒரு இன்கம்டாக்ஸ் ஆஃபீசரை கட்டிக்கிட்ட பொண்ணு


- நீ ”வருவாய்” என நான் இருந்தேன்;-0



-----------------------


13. எப்பவும் ஒரு பெக் அடிச்ச மாதிரியே இருக்கற ஆள் தான் பெக்கர்?



-----------------------

14. விஜய் பன்ச் டயலாக் - என் கைல எப்பவும் GUN இருக்கும், எதிரி கண்ல எப்பவும் பயம் இருக்கும்




---------------------

15. தமிழ் சினிமா ஹீரோ - நான் பனங்காட்டு நரி ,சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன்

# ஏன்? பனங்காட்டு நரிக்கும், உனக்கும் காது டமாரமா?



-------------------------



16. கற்பழித்தால் இனி ஆயுள்:புதிய சட்டம் ரெடி # நித்தி - நல்ல வேளை, இனிமே ரேப் பண்ணுனவங்களுக்குத்தானே இந்த புதிய சட்டம்?



------------------------


17. மன்மோகன் சிங்கை "ஜோக்கர்' என விமர்சித்த ராஜிவ்காந்தி  சுயசரிதையில் தகவல் # அதான் சோனியா காந்தி யூஸ் பண்ணிக்கிட்டாங்க



------------------------

18. தீபாவளிக்கு பவர் ஸ்டார்-ன் ஆனந்த தொல்லை ரிலீஸ் # ஆனந்த தீபா “வலி”



---------------------

19. அம்மாவின் கைப்பேசியில் சாந்தனு - இனியா முத்தக்காட்சி!  # அப்போ கலைஞரின் கைப்பேசியில் என்னெ ல்லாம் இருக்கோ?



-----------------------

20. டியர், ப்ளீஸ் ஊட்டி விடு..



 கார் இப்போ கொடைக்கானல் போய்ட்டு இருக்கு, திடீர்னு ஊட்டிக்கு காரை விடச்சொன்னா எப்டி?


-----------------------------



a


டிஸ்கி -
ஈரோடு நகர படங்கள்


1. அபிராமி  70 MM AC  DTS - பில்லா 2

2. தேவி அபிராமி AC  - சகுனி


3. ராயல் - மனங்கொத்தி பறவை


4. வி எஸ் பி AC  DTS - பொல்லாங்கு


5. ஆனூர் AC  DTS - நான் ஈ


6. ஸ்ரீ சண்டிகா - பில்லா 2


7. ஸ்ரீ கிருஷ்ணா  DTS- THE DARK KNIGHT RISES ( BAT MAN 3)


8. அன்ன பூரணி -மாலைப்பொழுதின் மயக்கத்திலே

9. ஸ்ரீ லட்சுமி   DTS- நாடோடி மன்னன்


10. ஸ்டார் - BLOOD MARY


11. பாரதி - கொஞ்சும் இளமை


12. அண்ணா  DTS - சுழல்


13. ஸ்ரீநிவாசா   DTS  மாலைப்பொழுதின் மயக்கத்திலே


14. சங்கீதா DTS- திருடி திருடன்


15. மாணிக்கம்  - பாட்ஷா



 இணைய உலகில் ஓர் புதிய புரட்சி! உலகத் தமிழர்களின் மனதிற்கு மகிழ்ச்சி!தமிழ்ப் பதிவர்களின் கூட்டு முயற்சியாகஇப்பொழுது வானொலி வடிவில் புரட்சி எப்.எம்!கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஹோம் மினிஸ்டர்ஸ் யுவர் அட்டென்சன்


Tuesday, July 31, 2012

ஃபிலிமோத்ஸவ் - சுஜாதா - சிறுகதை

மந்திரி வந்திருக்க வேண்டும். எல்லோரும் தேர்தல் உற்சவத்தில் கவனமாக இருந்ததால்

டில்லி அதிகாரி ஒருத்தர் மட்டுமே வந்திருந்தார். வெள்ளைக்கார டைரக்டர்கள் சிலர்

வந்திருந்தார்கள். எதற்கெடுத்தாலும் ‘வெரி நைஸ்’, ‘வெரி நைஸ்’ என்றார்கள்.

மற்றொரு ‘கல்யாணராம’னைத் தேடி தமிழ் சினிமா டைரக்டர்கள், கதாசிரியர்கள்,

பத்திரிக்கையாளர் என்று பல பேர் டேரா போட்டிருந்தார்கள்.





சகட்டுமேனிக்கு சினிமா

பார்த்தார்கள், குடித்தார்கள். விலை போகாத ஹிந்தி நடிகர்கள், குறுந்தாடி வைத்த

புதிய தலைமுறை டைரக்டர்கள், புதுக் கவிஞர்கள், அரசாஙக் அதிகாரிகள், கதம்பமான

கும்பல். சிகரெட் பிடிக்கும் பெண்கள், சத்யஜித்ரேயைத் தொடர அவர் பொலான்ஸ்கியைக்

கட்டிகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்.





பட்டுப்புடவை அணிந்த ஒரு சுந்தரி குத்துவிளக்கு ஏற்றினாள்.

எல்லோரும் சினிமா எத்தகைய சாதனம், மனித சமுதாயத்தை எப்படி மாற்றக்கூடிய வல்லமை

படைத்தது என்பது பற்றி இங்கிலீஷில் பேசினார்கள். ‘சினிமாவும் சமூக மாறுதலும்’

என்று புஸ்தகம் அச்சடித்து ஒல்லியான அதை இருபது ரூபாய்க்கு விற்றார்கள். உதட்டு

நுனியில் ஆங்கிலம் பேசினார்கள். சினிமா விழா!





நம் கதை இவர்களைப் பற்றி அல்ல. ஒரு சாதாரண பங்களூர் குடிமகனைப் பற்றியது. பெயர்

நாராயணன். தொழில் யஷ்வந்த்புரத்து பிஸ்கட் ஃபாக்டரியில் பாக்கிங்க் செக்‌ஷனில்.

ஃபிலிம் விழாவுக்காக தேதி அறிவிக்கப்பட்ட அன்று அதிகாலையில் சென்று வரிசையில்

நின்று தலா 11 ரூபாய்க்கு ஏழு டிக்கட் அடங்கிய புத்தகம் ஒன்றை

அடித்துப்பிடித்து வாங்கி வந்துவிட்டான்.





கூட்டத்தைத் தடுக்க போலீஸ் மெலிதான லட்டியடித்ததில் முட்டியில் வலி.

இருந்தாலும் முழுசாக வெளியே வந்துவிட்டான். டிக்கட் கிட்டிவிட்டது. ஏழு படத்தில

ஒரு படமாவது நன்றாக இருக்காதா..?





நாராயணின் அகராதியில் இந்த ’நன்றாக’ என்பதை விளக்க வேண்டும். நன்றாக என்றால்

சென்சார் செய்யப்படாத.. குறைந்த பட்சம் ஒரு கற்பழிப்புக் காட்சியாவது

இருக்கக்கூடிய படம். நாராயணனின் குறிக்கோள் நவீன சினிமாவின் மைல் கல்களை

தரிசித்துவிட்டு விமர்சனம் செய்வதல்ல. அதற்கெல்லாம் பண்டிதர்கள்

இருக்கிறார்கள். அவனைப் பொறுத்தவரை ஒரு பெண்ணாவது ஏதாவது ஒரு சமயம்

உடையில்லாமல் ஓரிரண்டு ஃப்ரேமாவது வரவேண்டும். அப்போதுதான் கொடுத்த காசு

ஜீரணம்.





நாராயணின் ஆசைகள் நாசூக்கானவை.

அவன் தின வாழ்க்கையும் மன வாழ்க்கையும் மிகவும் வேறுபட்டவை. தின வாழ்க்கையில்

அவன் ஒரு பொறுப்புள்ள மகன். பொறுப்புள்ள அண்ணன். பக்தியுள்ள பிரஜை. பனஸ்வாடி

ஆஞ்ச நேயா, ராஜாஜிநகர் ராமன் எல்லாரையும் தினசரி அல்லது அடிக்கடி

தரிசிக்கின்றவன். எவ்வித ஆஸ்திக சங்கத்துக்கும் பணம் தருவான். எந்தக் கோயில்

எந்த மூலைக் குங்குமமும் அவன் நெற்றியில் இடம் பெறும். நாராயணனுக்குத் திருமணம்

ஆவதற்கு சமீபத்தில் சந்தர்ப்பம் இல்லை. ஐந்து தங்கைகள், அனைவரும் வளர்ந்து

கல்யாணத்திற்குக் காத்திருப்பவர்கள். ஒருத்திக்காவது ஆக வேண்டாமா?




பெண்களைப்

பற்றி இயற்கையாகவே நாராயணன் கூச்சப்படுவான். பஸ் நிலையத்திலோ, ஃபாக்டரியிலோ

அவர்களை நிமிர்ந்து பார்க்க மாட்டான். அவனை பலரும் புத்தன், ஞானி என்று

அழைப்பார்கள்.





அவன் மன வாழ்க்கை வேறு தரத்தது. அதில் அபார அழகு கன்னியர்கள் உலவி அவனையே

எப்போதும் விரும்பினர். இன்றைய தமிழ், இந்தி சினிமாவின் அத்தனை கதாநாயகியரும்

நாராயணனுடன் ஒரு தடவையாவது பக்கத்தில் அமர்ந்து தடவிக்கொடுத்திருக்கிறார்கள்.

எத்தனை அழகு என்று வியந்திருக்கிறார்கள்.





நாராயணனுக்கு கிருஷ்ன ன் என்றொரு சிநேகிதன். அவன் அடிக்கடி நாராயணனிடம் கலர்கலராக

சில போட்டோக்கள் காண்பிப்பான். ஐரோப்பா தேசத்து நங்கைகள் வெட்கத்தை அறைக்கு

வெளியில் கழற்றி வைத்துவிட்டு தத்தம் அந்தரங்களைப் பற்றி சந்தேகத்துக்கு எவ்வித

சந்தர்ப்பமும் தராமல் இதோ பார், இதைப் பார் என்று நாராயணனைப் பார்த்துச்

சிரிக்கும் படங்கள். படங்களை விட அந்தப் புத்தகங்களில் வரும் விளம்பரங்கள்,





சாதனங்கள் நாராயணனை ரொம்ப வருத்தின. இதெல்லாம் நம் நாட்டில் கிடைத்தால் என்னவா!

என் போன்ற தனியனுக்கு இந்த சாதனங்கள் சிறப்பானவை. பயமோ கவலையோ இன்றி எவ்வளவு

திருப்தியும் சந்துஷ்டியும் அளிக்கும்.




என்னதான் அழகாக அச்சிடப் பெற்றிருந்தாலும் சலனமற்ற இரு பரிமாணப் படங்களைவிட

சினிமாச் சலனம் சிறந்ததல்லவா? நங்கைமார் நகர்வதைத் தரிசிக்கலாம். கேட்கலாம்.

கிருஷ்ணப்பா சொன்னான், ”அத்தனையும் சென்சார் செய்யாத படம் வாத்தியாரே! நான்

எதிர்த்தாப்பலே தியேட்டருக்கு வாங்கியிருக்கேன். தினம் தினம் படத்தைவிட்டு

வெளியே வந்ததும் எப்படி இருந்தது சொல்லு. நானும் சொல்றேன்.”

நாராயணன் பார்த்த முதல் படம் ரஷ்யப்படம். சைபீரியாவின் பனிப்படலத்தில் எவ்வளவு

கஷ்டப்பட்டு அவர்கள் வேலை செய்து எண்ணெய் கண்டுபிடித்து.. படம் பூரா

ஆண்கள்,கிழவர்கள். பாதிப்படத்துக்கு மேல் பனிப்படலம். வெளியே வந்தால் போதும்

என்று இரண்டு மணி நேரத்தை இரண்டு யுகமாகக் கழித்துவிட்டு வெளியே வந்தான்.

கிருஷ்ணப்பா எதிர் தியேட்டரில் பார்த்த ஃபிலிமோத்சவப் படத்தில் ஐந்து நிமிடம்

விடாப்பிடியாக ஒரு கற்பழிப்பு காட்டப்பட்டதாம். கானடா தேசத்து படம்.






வர்ணித்தான். ”பார்க்கிறவங்களுக்கே சுந்த் ஆயிடுச்சி வாத்தியாரே!” நாராயணன்

இன்னும் ஒரு நாள் இந்த தியேட்டரில் பார்ப்பது.. அப்புறம் எதிர் தியேட்டரில்

மாற்றிக்கொள்வது என்று தீர்மானித்தான்.

நாராயணன் பார்த்த இரண்டாவது படம் டிராகுலா பற்றியது. படம் முழுவதும் நீல

நிறத்தில் இருந்தது.

நீள நகங்களை வைத்துக்கொண்டு ராத்திரி 12 மணிக்கு கல்லறையிலிருந்து புறப்பட்ட

டிராகுலா அந்த அழகான பெண்ணின் ரத்தத்தை உறிஞ்சுவதற்குக் கிளம்பியபோது நாராயணன்

சிலிர்த்துக் கொண்டான். ஆகா, இதோ! ரத்தம் உறிஞ்சுவதற்கு முன்பு, இதோ ஒரு

கற்பழிப்பு, சிறந்த கற்பழிப்பு, அப்படியே அவள் கவுனைக் கீறிக் குதறிக்

கிழித்து, உள்ளுடைகளையும் உதறிப்போட்டு, மெதுவாக அங்கம் அங்கமாக அந்த நகங்களால்

வருடி, அப்புறம்தான் கழுத்திலிருந்து ரத்தம் எடுக்கப் போகிறது என்று

எதிர்பார்த்து ஏறக்குறைய நாற்காலியில் சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டான்.

அந்தப் பாழாப்போன பெண், டிராகுலா அருகில் வந்ததும் தன் கழுத்தில் சங்கிலியில்

தொங்கும் சிலுவையைக் காண்பித்துவிட -வந்தவன் வந்த காரியத்தைப் பூர்த்தி

செய்யாமல், ஏன் ஆரம்பிக்கக்கூட இல்லாமல், பயந்து ஓடிப்போய் விடுகிறான். சட்!

என்ன கதை இது! நிச்சயம் இந்த தியேட்டரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்

சினிமாப்படங்கள் அத்தனையும் அடாஸ் என்று தீர்மானித்து வெளியே வர,

கிருஷ்ணப்பாவைச் சந்திக்கப் பயந்து, வேகமாக பஸ்ஸ்டாண்டை நோக்கி ஓட, கிருஷ்ணப்பா

பிடித்துவிட்டான்.






“என்னாப் படம் வாத்தியாரே! டாப்பு! அப்பன் தன் பொண்ன காணாம்னுட்டு தேடிக்கிட்டு

போறான். அவ, எங்க அகப்படறாத் தெரியுமா? செக்ஸ் படங்கள் எடுக்கறவங்ககிட்ட

நடிச்சிட்டு இருக்கா! எல்லாத்தையும் காட்டிடறான்! கொட்டகையிலே சப்தமே இல்லை..

பின் டிராப் சைலன்ஸ்.”





“கிருஷ்ணா, நாளைக்கு டிக்கட் மாத்திக்கிடலாம். நீ என் தியேட்டர்லேயும் நான் உன்

தியேட்டர்லேயும் பாக்கிறேன்!”

“நாளைக்கு மட்டும் கேட்காதே வாத்தியாரே! நாளைக்கு என்ன படம் தெரியுமா? லவ்

மெஷின், பிரஞ்சுப் படம். நான் போயே யாகணும்!”

“பிளாக்கில கிடைக்குமா?”

“பார்க்கிறேன்! துட்டு ஜாஸ்தியாகும். ஏன் உன் படம் என்ன ஆச்சு.”

“சே, பேசாதே! மரம் செடி கொடியைக் காட்டியே எல்லா ரீலையும் ஓட்டறான். நீ

எப்படியாவது எனக்கு பிளாக்கில ஒரு டிக்கட் வாங்கிடு. என்ன விலையா இருந்தாலும்

பரவாயில்லை!”





85 ரூபாய்க்கு ஒரு டிக்கட் மிகுந்த சிரமத்துடன் கிடைத்ததாக வாங்கி வந்தான்.

கிருஷ்ணா, “உன் டிக்கட்டைக் கொடு” என்றான்.

“இதை வித்து பார்க்க முடியுமான்னு சோதிச்சுட்டு அப்புறம் வர்றேன். நீ தியேட்டர்

போயிரு” என்றான்.

“படத்தின் பெயர் லவ் மெஷின் இல்லையாமே.”

“ஏதோ ஒரு மெஷின். கிராக்கிங் மெஷினோ என்னவோ! ஆனா படு ஹாட்! கியாரண்டி மால்.”

நாராயணன் பார்த்த அந்த மெஷின் படம் செக்கஸ்லோவேகியா படம். நிஜமாகவே ஒரு புராதன

சினிமா எந்திரத்தைப் பற்றியது. நடிகர்கள் ‘கப்ராஸ், கப்ராஸ்’ என்று வேற்று

மொழியில் பேசிக்கொண்டிருக்க, படத்தின் அடியில் ஆங்கில எழுத்துக்கள் நடுங்கின.

எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த நாராயணனின் இங்கிலீஷ் அவ்வளவு வேகமாகப்

படிக்க வரவில்லை.





இரண்டு வார்த்தை படிப்பதற்குள் படக் படக் என்று மாறியது. படத்தில் மிக அழகான

இரண்டு பெண்கள் இருந்தார்கள். இரண்டு பேரும் ஏராளமாக கவுன் அணிந்து வந்தார்கள்.

கதாநாயகன் அண்ணனா, அப்பனா, காதலனா, என்று தீர்மானிக்க முடியவில்லை. கவுன்

போட்டிருந்த பெண்கள் சாஸ்திரத்துக்கூட அந்த கவுன்களைக் கழற்றவில்லை. இண்டர்வெல்

வரை ஒரு பட்டன்? ம்ஹூம்! படுக்கையில் அவர்கள் படுத்ததுமே காமிரா நகர்ந்துபோய்

தெரு, மண், மட்டை என்ற புறக்காட்சிகளில் வியாபித்தது. ஒரே ஒரு இடத்தில்

சினிமாவுக்குள் சினிமாவாக பாரிஸ் நகரத்தின் எஃபில் டவர்முன் ஒரு பெண் தன்

பாவாடையைக் கழற்றுவதாக ஒரு காட்சி வந்தது. அதாவது வரப் பார்த்தது. அதற்குள்

காமிரா அவசரமாக அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் முகபாவங்களைக்

காட்டத் தலைப்பட்டது. வெளியே வந்தான். கிருஷ்ணப்பா நின்றுகொண்டிருந்தான்.

“என்ன? பார்த்தியா? படம் எப்படி?”



“நீ பாக்கலை?”



”நான் என் டிக்கட்டை விற்கலாம்னு போனேன்! யோசிச்சேன். இன்னிக்கு இங்கதான்

பார்க்கலாமேன்னு உன் டிக்கட்ல உள்ளே நுழைஞ்சேன். கிடக்கட்டும் உன் படம்

எப்படி?”




“நாசமாய்ப் போச்சு. ஒரு எழவும் இல்லை. படம் முழுக்க குதிரை வண்டி கட்டிகிட்டு

ஒரு ஆள் பயாஸ்கோப் வைச்சுக்கிட்டு ஊர் ஊராப் போறான்!”

நாராயணன் கிருஷ்ணப்பாவை சற்று தயக்கத்துடன் கேட்டான்.

“உன் படம் எப்படி?”

“செமைப்படம் வாத்தியாரே.”

நாராயணன் மவுனமானான்.




“வேஸ்ட் ஆறதேன்னு உட்கார்ந்தேன். படுகிளாஸ். ஒரு முத்தம் கொடுக்கிறான் பாரு,

அப்படியே அவளைச் சாப்பிடறான். ஆரஞ்சுப்பழம் உரிக்கிற மாதிரி உடுப்புகளை

ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா உருவி…”




“கிருஷ்ணா அப்புறம் பேசலாம். எனக்கு அர்ஜண்டா வேலை இருக்குது! வர்றேன்” என்று

விரைந்தான் நாராயணன். அவனுக்கு அழுகை வந்தது. கிருஷ்ணப்பா போன்ற எப்போதும்

அதிர்ஷ்டக்காரர்களிடம் ஆத்திரம் வந்தது. “நாளைக்கு எங்கே படம் பார்க்கிறே

சொல்லு…” என்று தூரத்தில் கிருஷ்ணப்பா கேட்டான். நாராயணன் பதில் சொல்லாமல்

நடந்தான்.




ரப்பர் டயர்வைத்த வண்டியில் பெட்ரமாக்ஸ் அமைத்து எண்ணெய் கொதிக்க

மிளகாய் பஜ்ஜி தத்தளிக்க பலபேர் தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கண்ணாடிப்பெட்டிக்குள் பொம்மை நங்கைகளின் அத்தனை சேலைகளையும் உருவித்

தீர்க்கவேண்டும் போல ஆத்திரம் வந்தது. மெல்ல நடந்தான். இருட்டு ரேடியோக்

கடையைக் கடந்தான். ‘டாக் ஆஃப் தி டவுன்’ என்கிற ரெஸ்டாரண்ட் வாசலில் ஒரு

கூர்க்கா நிற்க, ஒன்றிரண்டு பேர் அங்கே விளம்பரத்துக்காக வைத்திருந்த

போட்டோக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று இரண்டு காட்சிகள்,

லிஸ்ஸி, லவினா, மோனிக்கா, டிம்பிள்.. நான்கு அபூர்வ பெண்களின் நடனங்கள்.

மேற்படி நங்கைகள் இடுப்பில் மார்பில் சில சென்டி மீட்டர்களை மறைத்துச்

சிரித்துக் கொண்டிருந்தார்கள்.






அந்த வாசல் இருட்டாக இருந்தது. வெற்றிலை பாக்குப் போட்டு ‘பதக்’ என்று

துப்பிவிட்டு ஒருத்தன் உள்ளே செல்ல, கதவு திறக்கப்பட்டபோது பெரிசாக சங்கீதம்

கேட்டு அடங்கியது.




உள்ளே செல்ல எத்தனை ரூபாய் ஆகும் என்று யாரைக் கேட்பது என்று தயங்கினான். அந்த

கூர்க்காவைப் பார்த்த மாதிரி இருந்தது. வீட்டில் வந்து அம்மாவிடம் சொல்லி

விடுவானோ? நடந்தான்.




சற்று தூரம் சென்றதும்தான் தன்னை ஒருவன் பின்தொடர்வதை உணர்ந்தான். முதலில் அவன்

பேசுவது புரியவில்லை. பின்பு தெரிந்தது. “ஆந்திரா, டமில்நாடு, குஜராத், மலையாளி

கேர்ள்ஸ் சார்! பக்கத்திலேதான் லாட்ஜ். நடந்தே போயிறலாம்.”

நாராயணன் நின்று சுற்றுமுற்றும் பார்த்து “எவ்வளவு” என்றான்.

அவன் சொன்ன தொகை நாராயணனிடமிருந்தது.

”பிராமின்ஸ் வேணும்னா பிராமின்ஸ், கிறிஸ்டியன்ஸ், முஸ்லீம்? வாங்க சார்!”

நாராயணன் யோசித்தான்.






“நிஜம் ஸார் நிஜம்; நிஜமான பெண்கள்!”




நாராயணன் “வேண்டாம்ப்பா” என்று விருட்டென்று நடந்து சென்றான்.



நன்றி - அமரர் சுஜாதா, உயிர் மெய், சிறுகதைகள்

முந்தானை முடிச்சு - சினிமா விமர்சனம்

http://tvshowz.in/uploads/posts/mundhanai-mudichu.jpg

 தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்களில் ஒன்று, ஏ வி எம் மின் உயர்ந்த பட்ச வசூல் கொட்டிய படம்,  இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் கே பாக்யராஜின் மாஸ்டர் பீஸ் படம், எம் ஜி ஆரால் கலை உலக வாரிசு என கே பி யை அறிவிக்க வைத்த படம், முருங்கைக்காயை தாவர வயாக்ரா என உணர வைத்த படம் என பல அம்சங்கள் கொண்ட படம் முந்தானை முடிச்சு..

கதையோட ஒன் லைன் ரொம்ப சிம்ப்பிள் - ரெண்டாந்தாரமா வாக்கப்படற மனைவி மொத தாரத்துக்குழந்தையை சித்தியா கொடுமைப்படுத்தாம தன் குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டா நல்லாருக்கும்  அவ்ளவ் தான்.. ஆனா அதுக்கான திரைக்கதை தான் கே பி யின்  மாஜிக் மந்திரம்

கிராமத்து நாட்டாமை பொண்ணு தான் ஹீரோயின்.. அவர் 3 சின்னப்பசங்களோட  அதிக்கலம் பண்ணிட்டு இருக்காரு.. ஐ மீன் ஜாலி விளையாடு , கலாட்டா.. அந்த ஊருக்கு புதுசா வாத்தியாரு வர்றார்.. அவர் தான் ஹீரோ.. கைக்குழந்தையோட  வர்றார்..

ஆரம்பத்துல அவரை கலாட்டா பண்ணுன ஹீரோயின் அவர் ஒரு விடோயர்னு தெர்ஞ்சதும் லவ்வறார்.. ஆனா ஹீரோவுக்கு சித்தி கொடுமை பற்றி பயம் இருப்பதால் அதுக்கு ஓக்கே சொல்லலை.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3guSskKsOLjpIxdSo4yFFMyfWGqFMEWC9GSo-hkhADy0q6f8Z7TbpmX8PQ-kMfWqEX3-k9qygNWTe8zLK6l9DyvvDiehNWzU7uPV3voNhBpG2IQnak0oHLydgKktQ3kyFb61AeIiVZYjb/s400/Mundhanai-Mudichu.jpg


ஹீரோயின் ஹீரோ தன்னை கெடுத்துட்டதா பொய்ப்புகார் கொடுத்து கட்டாயத்தாலி வாங்கிக்கறார்.. மேரேஜ் ஆனாலும் நோ கில்மான்னு ஹீரோ உறுதியா இருக்கார்.. அவர் மனசை ஹீரோயின் எப்படி மாத்தி தாம்பத்ய வாழ்க்கை வாழறார் என்பதே கதை..

படத்துல முதல் ஹீரோ திரைக்கதை தான்..  சரியா 20 நிமிஷத்துக்கு ஒரு டர்னிங்க் பாயிண்ட்.. சுவராஸ்யமான சம்பவங்கள்னு படம் போர் அடிக்காம போகுது..


கே பாக்யராஜ் கிட்டே 2 பிளஸ் பாயிண்ட் 1. தன்னை முட்டாளா, அப்பாவியா சித்தரிச்சுக்கிட்டே அதுல புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவது.. 2. பெண்கள் ரசிக்கும் வண்ணம் இலை மறை காய் மறைவாக கிளு கிளு சமாச்சாரங்களை சாமார்த்தியமாகப்புகுத்துவது


முதியோர் கல்வித்திட்டத்தில் தீபா ஆ சொல்லித்தரும் காட்சியில் இவரது டச்.. அபாரம்.. தாலாட்டு பாடவா? என கேட்டு ஊர்வசி பாடும் விரகதாப வாய்ஸில் - ஆரிராரிரோ ஆராரோ எனும்போது இவர் காட்டும் முக பாவனைகள் , ரீ ஆக்‌ஷன் கல கல கலக்கல்.. 


பாடல் காட்சிகளில் இவர் எக்சசைஸ் பண்ணுவது கூட அனைவரையும் ரசிக்க வைக்கிறது. 


 ஊர்வசி - குறும்புத்தன நடிப்பிலும் சரி, செண்ட்டிமெண்ட் காட்சியிலும் சரி.. கலக்கி எடுத்துட்டார்.. ஆனா இவருக்கு ஹீரோ மேல காதல் வந்த மாதிரி காட்சிகள் சரியா, முறையா வைக்கப்படலைன்னு தோணுது. ஏதோ ஒரு பரிதாபத்தில் விரும்பற மாதிரி இருக்கு.. 



தவக்களை மற்றும் சுட்டிப்பசங்களோட அட்டகாசம் அழகு கிராமத்து எள்ளல்கள்.. கோவை சரளா  5 காட்சிகளில் வர்றார். அவரை இன்னும் நல்லா யூஸ் பண்ணி இருக்கலாம்.. 


http://www.tamilhitsmp3.com/img/movie/MundhanaiMudichu.jpg


அட்டகாசமான பாடல்கள்



1. டைட்டில் சாங்க் - வெளக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான்.. மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்


2. ஹீரோயின் சாங்க் - நான் புடிக்கும் மாப்பிள்ளை தான், நாடறிஞ்ச மன்மதன் தான். 


3. டூயட் சாங்க் - அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்.. 

4. தீபாவுடனான செம குத்தாட்டப்பாட்டு - வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி.. 

5. விரகதாப குரலில் வரும் தாலாட்டு போலிப்பாட்டு - ஆரிராரிரோ..ஆராரோ.. கண்ணைத்தொறக்கனும்  சாமி.. கையைப் புடிக்கனும் சாமி.. 


6. சோகப்பாட்டு - சின்னஞ்சிறு கிளீயே சித்திரப்பூவிழியே. 

 


படத்தின் சில பெருமைகள் 


1. இளைய ராஜா கே பாக்யராஜ் இணைந்த முதல் படம்

2. ஏ வி எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ் பி முத்துராமன் தான்.. அதை உடைத்து வேற்று ஆளை டைரக்டரா போட்டது இதுதான் முதல்.. 


3. முருங்கைக்காயை மார்க்கெட்டில் டிமாண்ட் ஏற்படுத்திய படம்.  ( ஆனால் கில்மா உணர்வுகளை அது தூண்டுவதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை )


4. மிகக்குறைந்த முதலீட்டில் மிக பிரம்மாண்டமான வசூல் பெற்ற படங்களில் ஏ வி எம்க்கு இதுவும் ஒன்று ( மற்ற 2 1. பாட்டி சொல்லைத்தட்டாதே, 2.  சங்கர் குரு)


5. அறுவடை நாள் ஆர் பி விஸ்வம்,( அசிஸ்டெண்ட் டைரக்டராக, வசனகர்த்தாவாக ), ஊர்வசி, தவக்களை, தீபா, கோவை சரளா  இதில் தான் புகழ் பெற்றார்கள்




http://www.123kerala.com/chithram/unnimeri/deepa19.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. பையனை அப்படியே விட்டுட்டு வர்றீங்க, எப்படி அவன் கிணத்துல இருந்து வெளில வருவான்?


 அவன் பல்லிக்கு பிறந்த பையன்ங்க. எப்படியாவது தொத்திக்கிட்டு வந்துடுவான்



2.  அப்பா, நம்ம சாதி சன மாப்ளை எனக்கு வேணாம். எல்லாரும் சின்ன வீடு வெச்சிருக்கானுங்க.. ஏன். நீயே வாரா வாரம் சனிக்கிழமை சின்னமனூர் போறீயே?


3. பையன் நம்ம பையனா?

 எம் பையன்


4. பையன் சிவப்பா , துறுதுறுப்பா அழகா இருக்கான். 


 அவன் என் பையன்


 அதான் சந்தேகமா கேட்டேன்


5. எங்கப்பாவையா பார்க்க வந்திருக்கீங்க?

 உங்கப்பா யார்னு எல்லாம் எனக்கு தெரியாது, இந்த ஊர் நாட்டாமையை பார்க்க வந்திருக்கேன் ( பஞ்சாயத்து தலைவர்)


 அவர் தான் எங்கப்பா 




6. நல்ல முட்டையை கடைல வாங்க ஒரு வழி இருக்கு.. 3 முட்டையை வரிசையா ஒன்றன் மேல் ஒன்று அடுக்குனா நல்ல முட்டையா இருந்தா  நடுவால இருக்கற முட்டை சுத்தும் ( தலை சுத்துது)


7.  அய்யா சாமி...... ( பிச்சைக்காரனின் குரல்)


என்ன? கத்திரிக்காய் சாம்பாரா?

 ஆமாங்க, முருங்கைக்காய் கூட்டு எல்லாம் இருக்கு 

 ஹூம்



8. ஏங்க.. அந்த வழியா யாராவது பாத்திரத்தோட போறதை பார்த்தீங்களா?

அட போய்யா, நானே  என் பொண்டாட்டியை  காணோம்னு தேடிட்டு இருக்கேன். 


ஓ! நம்மளை விட  கஷ்டம் உள்ள ஆளுங்க எல்லாம் இருக்காங்க போல . 



9.  குழந்தை சாப்பிட்டாச்சா? 


 நல்ல வேளை பால் புட்டியை இங்கே வெச்சிருந்தேன், இல்லை, பசங்க இதையும் ஒரு ஆத்து ஆத்தி இருப்பாங்க 



10. என்னய்யா வாத்தி நீ? வணக்கம் சொல்றப்போ ஒரு கையை மட்டும் தூக்கி. என்ன படிப்போ..?


சரிங்க.. இனி அப்படி பண்ணிடறேன்


என்னய்யா வாத்தி நீ? வணக்கம் சொல்றப்போ என்னமோ திருப்பதி ஏழுமலையானை கும்பிடற மாதிரி 2 கையையும் தூக்கி சொல்லிட்டு . சும்மா வாய்ல வணக்கம் சொன்னா போதாதா?


11. ரொம்ப நன்றி.. 


 தாங்க்ஸ். நாங்களும் டென் த் வரை படிச்சிருக்கோம்


12. அத்தை.. பழைய மாப்ளையா உரிமையோட என்னை பார்க்க எப்போ வேணாலும் வாங்க, ஆனா புது மாப்ளை ஆக்க ஏதாவது திட்டம் இருந்தா தயவு செஞ்சு இந்தப்பக்கமே வராதீங்க


13.  அக்கா, வாத்தியார் மயக்கமா இருக்கார்.. தண்ணி தெளி


. தண்ணி தெளிச்சா உடனே எந்திரிச்சு போயிடுவார்.. கொஞ்ச நேரம் இருக்கட்டும் அப்படியே. 


14. டேய். நான் எப்படி இருக்கேன்?


 ஹூம்.. எனக்கு வயசு பத்தலையேன்னு வருத்தமா இருக்குக்கா.. 



15. பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்ளை. 


16. மகாத்மா காந்தி நம் நாட்டுக்கு..... 


 வாத்யாரய்யா மணீ எவ்ளவ்? மாட்டை சினைக்கு ஓட்டிட்டுபோகனும்.. 

இதுக்குத்தான் ஸ்கூல் பெல்லா?


 சொல்லாட்டிப்போய்ய்யா , என்னமோ இந்தாள்ட்ட  மட்டும் தான்மணி
இருக்கற மாதிரி அலட்டிக்கறீரே?


மகாத்மா காந்தி நம் நாட்டுக்கு..... 


 சுதந்திரம் வாங்கித்தராமலே இருந்திருக்கலாம்


17.  புருஷன் கிழிச்ச கோட்டை தாண்டுனா பொண்டாட்டிக்கு கேடுன்னு ராமாயணத்துல படிச்சிருக்கேன்

 அது ராமர் கிழிச்ச கோடில்லை. லட்சுமணன் கிழிச்ச கோடுங்கோவ்.. 


 ஏதோ ஒண்ணு




இலை மறை காய் மறைவாக சொல்லப்பட்ட கிளு கிளு கில்மா வசனங்கள்
1. வாத்தியாரே, புதுசா வந்திருக்கீங்க. அப்படி என்ன தான் செய்யறீங்கன்னு ஆசையா வந்து பார்த்தா ரொம்பத்தான் சலிச்சுக்கறீங்களே?ஹூக்க்ம்
2.  யோவ், உனக்கு ஏதாவது பண்ணனும் போலவே இருக்குயா. 
 நீ எதுவும்  பண்ண வேணாம்.. இடத்தை காலி பண்ணு போதும்.. 
3.  போம்மா போ.. நாட்டாமை கூப்பிடறார் இல்ல? உள்ளே போ..  ஹூம், போன வருஷம்  நான் தான் நாட்டாமை. 
4.  பொண்ணை பார்க்கறதுன்னா மூஞ்சியை பார்த்து பேசனும். எங்கெங்கோ பார்த்துப்பேசுனா?
5. ஸ்ஸ்ஸ்சார்.. உங்க கிட்டே புது சாக்பீஸ் இருக்கா? எனக்கு வேணும்..
6. கல்யாணம் புதுசா ஆனவரு ஹோட்டல்ல சாப்பிட வந்திருக்காரே?
 பொண்டாட்டியை சமைக்க விட்டா நைட்ல களைப்புல அது தூங்கிடும். அதான்.. வாத்தியாரு விபரமானவருதான்
7. நீ எதுக்காக இங்கே டிரஸ் சேஞ்ச் பண்றே?
 உனக்குத்தான் இதெல்லாம் ஆகாதே, ஏன் வேடிக்கை பார்க்கறே?
8.  ஏய்.. முந்தானையை ஒழுங்கா போடு.. 
 தூக்கத்துல அப்டி இப்டி விலகறதுதான்
9. எப்படி ஆ போடறதுன்னு சொல்லித்தர்றேன்
 ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
 டீச்சர். இன்னொருக்கா?
 ஆமாமா, ஒரு டைம்லயே எல்லாத்தையும் கத்துக்க முடியாது//
10.  டீச்சர், நான் போட்டா கோனையா (க்ராஸ்) வரும்ங்க
 கொஞ்சம் கூட சொந்தமா முயற்சியே பண்ண மாட்டேங்கறீங்களே?
இளைய ராஜாவின் கலக்கல் பின்னணி இசை ( இடைவேளை ட்விஸ்ட் )
இயக்குநரிடம் சில சந்தேகங்கள்
1. ஹீரோயின் ஹீரோவால கெடுக்கப்பட்டதா பஞ்சாயத்துல பொய் பிராது கொடுக்கறா. படத்தோட மெயின் முடிச்சு இது. வெர்ஜினிட்டி டெஸ்ட் பண்ணிட்டா மேட்டர் தெரிஞ்சுடும். கிராமத்துல ஏது அந்த வசதின்னு சொல்லி எஸ் ஆக முடியாது.. ஏன்னா க்ளைமாக்ஸ்ல அதே ஹீரோயின் கன்னி கழியாம கருத்தடை ஆபரேஷன் பண்ணபோறப்ப டாக்டர் அவருக்கு ஆபரேஷன் பண்ணாம மயக்கப்ப்படுத்தி வெச்சிருந்து ஹீரோ கிட்டே ஹீரோயின் இன்னும் கன்னி கழியாதவர்னு சொல்றார்..  
இந்த லாஜிக் மிஸ்டேக்கை சரி பண்ண படத்துல ஒரு கிராமத்து மருத்துவச்சி ஹீரோயின் கிட்டே பணம் வாங்கிட்டு உடந்தையா இருந்த மாதிரி காட்டி இருக்கலாமே?
2. ஹீரோ  மனைவியை இழந்தவர் என்ற செய்தி கேட்டு ஹீரோயின் திடுக்கிடுவது ஓகே.. ஆனா அதுக்கான எக்ஸ்பிரஷன் ஓவர் ரீ ஆக்‌ஷன். 
3. சாமியார்னா அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை காவி டிரஸ் தான். ஏன் மஞ்சள் கலர் டிரஸ் போட்டுட்டு வர்றாரு ஹீரோ இன் கண்ணைத்தொறக்கமுன் சாமி பாட்டுல ..  ( சித்து பிளஸ்டூ ல  இதே ரீமேக்  ரீ மிக்ஸ் சாங்க் ல அந்த தப்பை சரி பண்ணி இருப்பீங்க.. )
4. படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் வலியனா புகுத்தப்பட்டவை.. அவை இல்லாமலேயே விறு விறுப்பு கூட்டி இருக்க முடியும்.. 
1983 இல் இந்தப்படம்  ரிலீஸ் ஆச்சு.