Showing posts with label தெலுங்கு. Show all posts
Showing posts with label தெலுங்கு. Show all posts

Wednesday, June 05, 2013

iddarammayilatho - சினிமா விமர்சனம் ( தினமலர்)



தினமலர் விமர்சனம்


தெலுங்கில் போக்கிரி, பிஸினஸ்மேன் படங்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனும், தேசமுத்ரு படத்திற்குப் பிறகு இணைந்துள்ள படம் தான் "இத்தரம்மாயிலதோ". 

கனிம ஊழலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அபேஸ் செய்யப்பட்ட அடிநாதத்துடன் கதை துவங்குகிறது. சென்ட்ரல் மினிஸ்டரின் மகள் அகான்ஷாவான காத்ரின் தெரஸா சைக்காலஜியில் முதுகலை படிப்பதற்காக ஐரோப்பா செல்கிறார்.  ஐரோப்பாவில் தங்கச் செல்லும் வீட்டில் அமலாபாலின் டைரி இவர் கையில் கிடைக்கிறது. 
டைரியை படிக்கும் காத்ரின், அமலாபாலுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையே இருக்கும் காதலை படித்து தெரிந்து கொள்கிறார்.  டைரியில் வைக்கப்பட்டுள்ள போட்டோவை வைத்து சன்ஜு ரெட்டியாகிய அல்லு அர்ஜுனை அடையாளம் காண்கிறார். அல்லு அர்ஜுனுக்கு அமலாபாலுடன் திருமணம் நிச்சயமான செய்தி வரை டைரியில் எழுதப்பட்டிருந்தது.. இதன் பிறகு இவ்விருவருக்கும் திருமணம் ஆனதா ?? ஆகவில்லையா ?? என்ற கேள்விக்கு விடையறிய அல்லு அர்ஜுனை நாடுகிறார். 


பறவைகளை தன் வீடியோ கேமராவில் அமலாபால் பதிவு செய்ய, வில்லன் செய்த ஒரு கொலையும் எதேச்சையாக அதில் பதிவாகிறது. இதனால் வில்லன்களால் அமலா பால் கொல்லப்படுகிறார். நிச்சயம் செய்யப்பட்டுள்ள காத்ரின், அல்லு அர்ஜுனின் சோகக் கதையை கேட்டு அனுதாபம் கொண்டு பின்பு காதலிலும் விழுகிறார். இறுதியில் இறந்ததாக எண்ணப்பட்ட அமலாபால் உயிருடன் வர க்ளைமாக்ஸில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள்.

கலர் கலராக காஸ்ட்யூம்கள், மாசு கிளப்பும் கார்கள், நீண்ட தாடியும் நீள முடியும் வைத்த வில்லன்கள் என்ற மாஸ் படத்திற்கு அமைத்திருந்த டெம்பிளேட்டிலிருந்து விலகி, மிக ஸ்டைலிஷாக அமைக்கப்பட்டிருந்த விதம் முதல் ஹைலைட். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணியும் பாடல்களும் இனிமையான பதிவு, குறிப்பாக வெஸ்டர்னும் கர்நாடக சங்கீதமும் சேர்ந்த சங்கராபரணம் பாடல்.
 ‘ஒன் ஒன் பாடலிலும், டாப் லேச்சு போயாலி பாடலிலும் அல்லு அர்ஜுனின் நடனம் டாப் டக்கர். இன்டர்வல் பிளாக்கிற்கு முன் வருகின்ற சண்டைக் காட்சி இந்தியன் சினிமாவில் படமாக்கப்பட்ட மிகச்சிறந்த சண்டைக்காட்சிகளில் ஒன்று எனக் கூறினால் அது மிகையல்ல. ‘ பிடில் பிரம்மாவாக ‘ பிரம்மானந்தம் காமெடியில் அசத்துகிறார். 

அல்லு அர்ஜுனின் அசத்தலான நடனமும் கண்ணாலேயே கொலை செய்ய கணக்குபோடும் வன்ம விழிகளும் இவரது கதாபாத்திரத்திற்கான தோரணையை சேர்க்கிறது. இவருடன் ஆடும் போது அமலா பால் சாதாரணமாகத் தான் தெரிகிறார். ஒன்றுக்கு இரண்டாக காத்ரின் அமலாபால் என இரு நாயகிகள். அமலாபாலை விட காத்ரின் தான் மனதில் பதிகிறார் நடிப்பிலல்ல கிளாமரில்.


மாடர்ன் உலகத்தில் ஸ்கைப் காலிலே நிச்சயதார்த்தம் செய்து கொள்வது, கிட்டாரை பெண்ணின் உடலாக வர்ணிக்கும் காட்சிகளில் பூரி ஜகன்நாத் ரசிக்க வைக்கிறார். இன்டர்வல் வரை காதல் காமெடி என அழகாக பயணம் செய்யும் படம், இடைவேளைக்குப் பிறகு வழக்கமான பழிவாங்கும் பாதையில் வியக்கத் தக்க அம்சங்கள் ஏதுமின்றி , நாம் எதிர்பார்த்தவாறே பயணிப்பது ஸ்வாரஸ்யத்தைக் குறைத்து, கடைசியில் இதுவும் வழக்கமானதெலுங்கு படம்தான் என்று தோன்ற வைத்துள்ளது.


மொத்தத்தில், "இத்தரம்மாயிலதோ" பழைய காலத்து பழிவாங்கும் கதை தான், வழக்கமான தெலுங்கு சினிமாதான். ஆனால் அதை ஸ்டைல் அம்சங்களுடன் வழங்கியுள்ள   விதம் தான் புதுமை.    
நன்றி - தினமலர்
 a





Tuesday, December 11, 2012

The Business man - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP6Et_zn021tUF89IeXB5H78fMuZhX8vesDBKnjFK78bqPYN_dchmwhGrP4VYWy655AAoe7ifMElkWqfTF9xPLOe5l24Z_TWHXNZRnsWvx52PK-K7jcp6uhoVa-sq07r4F470MfNSu8g8/s1600/businessman_5th_week_wallpapers_001.jpgமும்பைல  எல்லா தாதாக்களையும் ஒழிச்சாச்சுன்னு நிம்மதியா பெருமூச்சு விடறார்.கழக ஆட்சிகளில் ஊழலையும் , பெரு நகர வாழ்க்கைல தாதாக்களையும் அழைக்கவோ, ஒழிக்கவோ முடியாதுன்னு நிரூபிக்க ஹீரோ  மும்பைல காலடி எடுத்து வைக்கறார்.


சகுனி கார்த்தி மாதிரி நம்பவே முடியாத சாக்சங்களை எல்லாம் பண்றார். ஸ்லம் ஏரியாவான தாராவியில் அனைத்து மக்களின் பேங்க் லோன் க்ளியர் பண்ணித்தற்றேன்னு வாக்குத்தர்றார். அவங்க லோன் வாங்குன பேங்க்ல நைட்டோட நைட்டா போய் லோன் டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் அபேஸ் பண்ணிட்டு வந்து  மக்கள் கிட்டே எம் ஜி ஆர் ஆகறார்.


 கூடுதல் சப்போர்ட்டுக்கு போலீஸ் கமிஷனர் மகளான ஹீரோயினை லவ் பண்றார்.கார்ப்பரேட் கம்பெனி மாதிரி ஆக்டோபஸ் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நாடு முழுக்க தன் ஆக்ரமிப்பை நிகழ்த்தறார்.இந்தியாவின் நெம்பர் ஒன் தாதா ஆகறார். அவர் பிளான் என்ன? எதுக்காக அங்கே விஷால் மாதிரி ஊரு விட்டு ஊரு வந்தார் என்பதை வெண் திரையில் காண்க 


 சும்மா சொல்லக்கூடாது . மூளையைக்கழட்டி வெச்சுட்டு பார்த்தா பர பர என ஆக்‌ஷன் பட்டாசான படம் , ஒரு சீன் கூட போர் அடிக்கலை.. ஆனா லாஜிக் எல்லாம் பார்த்தா ரசிக்க முடியாது . லாஜிக் வேணுமா? எண்ட்டர்டெயின்மெண்ட் வேணுமா?


 ஹீரோ மகேஷ் , ஆந்திராவின் இளைய தளபதி . கொஞ்சம் ஏமாந்தா அப்பாஸ் மாதிரி மைதா மாவு ஆகி இருப்பார் , ஹேர் இழையில் எஸ் ஆகி ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டார்.. இவர் நடிப்பு படத்துக்கு பெரும் பலம்.  அசால்டான நடிப்பு , பாடி லேங்குவேஜ் , வசனம் பேசும் வேகம், நடன அசைவுகள் , ஸ்டண்ட் காட்சிகளில் உழைப்பு என அக்மார்க் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து இலக்கணங்களிலும் டிஸ்டிங்க்‌ஷன்.. 



ஹீரோயின் கா ஜில் அகர் வால்.இவர் நடிப்பு எப்படி?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது  .3 இடங்கள்ல ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றார். 6 இடங்கள்ல புற முதுகு காட்டும் புரவலர் ஆகறார். 4 இடங்கள்ல  லோ கட் லோக நாயகியா, 13 இடங்கள் ல லோ ஹிப்னாடிசம் பண்றார்,. இதை விட  ஒரு கிளாம்ர் ந்டிகை என்ன திறமையை காடட முடியும்கறீங்க? சென்சார் எல்லாம் இருக்கில்ல? 


 அப்புறம் பிரகாஷ் ராஜ், நாசர், பிரம்மாஜி எல்லாம் தலையை காட்டறாங்க. பெருசா சொல்லிக்க ஒண்ணும் இல்லை.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOpEy8YHjAYxPjbxuOeA-mNCIBAWv-XpliI3u32YGKkuR4N0O9T5qSOqDL0WXOpHOrTfhboVsAbf5fwid4f6EdzwcGaoam3bp1rmNGvCuwgpkQqfVdkNRagBd9i-WEbR5OHSGtjCy-BQ/s1600/sabhotcom+Kajal+Agarwal+Hot+Lip+Kiss+in+Businessman+movie+stills+%25281%2529.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1. தூக்குடு படம் மாதிரி இதுவும் மெகா ஹிட் படம், அதே மாதிரி பர பர திரைக்கதை , ஆனா நம்பகத்தன்மை  குறைவு


2. ஹீரோ ஸ்டெப் ஸ்டெப்பா எப்படி பெரிய ஆள் ஆகிறான் என்பதை தெளிவா சொன்ன விதம் 


3. படத்தில் திரைக்கதையில்  ஒரு சீன் ஆக்‌ஷன் பட்டாசு , அடுத்த சீன் நாயகியுடன் காதல் காட்சி  இந்த ஃபார்முலா மிகச்சரியா முதல் ஒன்றரை மணி நேரத்துக்கு மெயிண்ட்டெயின் பண்ணது அட்டகாசம் 


4.  தமனின் பின்னணி இசை கொஞ்சம் அங்கே இங்கே சுட்டிருந்தாலும்  3 பாட்டு செம ஹிட் .


5. திரையில் காட்சிகள் , ஆர்ட்டிஸ்கள் எல்லாரும் பிரமாண்டம் , பிஅரமிக்க வைக்கும் எடிட்டிங்க் , ஆர்ட் டைரக்‌ஷன்

6. ஹீரோ மும்பை வந்ததும் கைல 10 பைசா இல்லாமல் நண்பனிடம் நீ தான் என் பி ஏ , உனக்கு மாசம் ரூ 25,000 சம்பளம். என சொல்லும் கெத்தான காட்சி அதை நம்பும்படி செய்த திரைக்கதை 


7. பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ராவில் கொள்ளை அடிக்கும் காட்சி 


8. செம சூடு கிளப்பும் லிப் டூ லிப் கிஸ் சீன் பை காஜல்


http://movies.fullorissa.com/wp-content/uploads/2011/12/businessman_movie_pics.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்



1.  மும்பைல டெயிலி ஒரு லட்சம் பேரு வருவாங்க அதுல யாரோ ஒருத்தனுக்குத்தான் அதிர்ஷ்ட லட்சுமி அள்ளிக்குடுக்கும் 



2. உலகத்துலயே பெரிய ஸ்லம் ஏரியா மும்பைல இருக்கும் தாராவி தான் 


3. நம்ம ஊர்ல 10000 ரூபாய்க்கும்  டிஃபன் கிடைக்கும் ஜஸ்ட் 10 ரூபாய்க்கும் கிடைக்கும் 


4. பணம் சம்பாதிக்கறது ரொம்ப ஈசி , ஃபிகர் மடிப்பதுதான் கஷ்டம் 


5. நான் மும்பைல பொழப்புத்தேடி வர்லை, மும்பையை ஆள வந்திருக்கேன் 


6.  ஹாய்  மிஸ், ஏன் பெயிண்ட்டிங்கை கையால வரையறீங்க? பிரஷ் வாங்க காசு இல்லையா? 


 நோ நோ அது ஒரு வகை ஆர்ட்


7. பேசனும்னு  ஒரு மூடுல வந்ததால சரியா அடிக்க முடியல 


8. ஹீரோயின் - இப்படி எல்லாம் சொல்லிக்க உனக்கு வெட்கமா இல்லை? 


ஹீரோ - நோ , எனக்கு வெட்கப்பட்டு பழக்கம் இல்லை 


9. அவனவனுக்கு அவனவன் லைஃப்ல ஒரு சினிமா இருக்கும், அதுல அவன் தான் ஹீரோ 


10 கடவுளைக்கையெடுத்து கும்பிடறீங்களே அதுவும் ஒரு பிஸ்னெஸ் டீல் தான், எந்த வரமும் தராது , எந்த நல்லதும் நடக்காதுன்னா எவனாவது சாமி கும்பிடுவானா? 



http://www.cinemaaajtak.com/wp-content/uploads/2012/03/Kajal-Agarwal-In-Mahesh-Businessman-Movie-Exclusive-Images-4.jpg


11. இவனைப்பார்த்தா பாய் மாதிரி தெரியலை ,  மில்க் பாய் மாதிரி இருக்கான்


12.  அதானே, 2 கோடி ரூபா மதிப்புள்ள காரை கிஃப்டா கொடுத்தா எவ வேணாலும் ஐ லவ் யூ சொல்வா


 ஹலோ , நான் மனசுல நினைச்சதை  சொன்னேன், அப்போ நீங்க கிஃப்ட் குடுத்துட்டீங்க, அவ்ளவ் தான் 


13. யுத்தத்துக்கு பயப்படறவன் தான்   தர்மம் பற்றி பேசுவான்


14. இந்த உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு வரும், உன் கனவு எனக்கும், என் கனவு உனக்கும்  பிடிக்கனும்னு அவசியம் இல்லை. ஆனா பிடிச்சுது எப்டி? அதான் லவ் 


15. அப்பப்ப விநாயகர் பால் குடிச்சாத்தான் மதிப்பு , ஓடோடிப்போவாங்க. அதே ரெகுலராப்பால் குடிச்சா ஒரு பய மதிக்க மாட்டான் 



16. கவர்மெண்ட்க்கு சர்வீஸ் டாக்ஸ் , சேல்ஸ் டாக்ஸ் கட்டற மாதிரி  இனி மும்பைல எல்லாரும் சூர்யா டாக்ஸ் கட்டனும், யார் யார் கிட்டே என்ன வாங்கினாலும் 1 % டாக்ஸ் எனக்கு கட்டனும்


17.  சூர்யா பாய் நீயா? 


 சூர்யா பாய் நான் இல்லை, அது ஒரு பிராண்ட் 


18. பணம் நிரந்தரம் இல்லை , மனுஷங்க தான் நிரந்தரம்னு எந்த கேனயன் சொன்னான்? இந்த உலகத்துல  மனுஷங்க தான் செத்துப்போவாங்க.. கரன்சிக்கு சாவே இல்லை 


19.  சாகும்போது எவனும் பொய் சொல்ல மாட்டான் 




http://images.south365.in/2012/01/Kajal-Agarwal-in-Businessman-Movie-2.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. அம்மா , அப்பாவைக்கொன்னவங்களை ஹீரோ பழி வாங்கறார். கொன்னவன்  பெரும்புள்ளி. அதனால அவனும் பெரும்புள்ளி ஆகி கொல்றான். இதானே மெயின் கதை ? முடியல சார்.. இன்னும் 1950 லயே இருக்கீங்க..  பிரமாதமான திரைக்கதை 2 மணி நேரம் ஓட்டிட்டு க்ளைமாக்ஸ்ல இது மாமூல் ரிவஞ்ச் சப்ஜெக்ட்னு அடிச்சீங்க பாருங்க ஒரு அந்தர் பல்டி  மணிரத்னம் இதயக்கோயில் படம் பற்றி சொன்னது மாதிரி .. 


2. ஷாயாஜி ஷிண்டே தன் எதிரி ஜெயில் கைதியை ஹீரோ கொலை பண்ணியதை பப்ளிக்கா பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ், மீடியாக்கள் முன்னால்யே பாராட்டி கட்டிப்பிடிக்கறாரே? இவ்ளவ் பப்ளிக்கா டி வி ஷூட் நடக்கும்போது சொல்லி எஸ் ஆக முடியுமா? 



3. பொதுவா ஒரு பேங்க்ல லோன் டாக்குமெண்ட்ஸ்  ஒரிஜினலை ஹெட் ஆஃபீஸ்க்கு அனுப்பிடுவாங்க. எங்கே லோன் வாங்கபட்டதோ அதே பேங்க்ல  10 வருஷமா இருக்கு என்பது செம ரீல் 


4. அப்படியே ஒரு வாதத்துக்கு டாக்குமெண்ட்ஸ் லோக்கல் பேங்க்ல இருந்தாலும் ஹீரோ & கோ அந்த டாக்குமெண்ட்ஸை எடுத்துட்டு வந்துட்டா  லோன் கேன்சல் ஆகிடுமா? 


5. ஹீரோ & கோ பேங்க்ல இருக்கும் சிஸ்டம் எல்லாத்தையும் உடைச்சுடறாங்க. அப்படி பண்ணிட்டா எல்லா விவரங்களும்  அழிஞ்சுடுமா? இது எப்படி இருக்குன்னா  என் மெயில் ஐடில  என் மெயிலுக்கு வந்த மேட்டர்சை அழிக்க  என் வீட்டில் புகுந்து அந்த சிஸ்டத்தை உடைப்பது போல் . வேற சிஸ்டம் ஓப்பன் பண்ணி என் மெயில் ஓப்பன் பண்ணினா தீர்ந்தது .. ஹய்யோ அய்யோ 


6. ஹீரோ தன் அடியாள்ங்க கிட்டே பேங்க்ல எந்த பொருள் , நகை , பணத்தை கை வைக்கக்கூடாதுங்கறார். அவங்க எப்படி அதை ஒபே பண்றாங்க? நீண்ட நாள் பழக்கமும் இல்லை. ஹீரோவுக்கும் , அவங்களுக்கும் ஜஸ்ட் அப்போதான் அறிமுகம்.. ஹீரோ அவங்க கூட போகலை..  தேனை எடுத்தவன் புறங்கையை ருசிக்காமலா இருப்பான்னு தானைத்தலைவர் , தமிழ் இனத்தின் விடி வெள்ளி விடி சனி  டாக்டர் கலைஞரே சொல்லி இருக்காரே? ஹீரோ எந்த நம்பிக்கைல அவங்களை தனியா விடறார்? 


7. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆளிடம் ஒரு பெரிய அரசியல் தலைவர் கொலைக்கு பிளான் போடுவது ஓவர் 


8. தமன் இசைஞானி இளையராஜாவை ஆங்காங்கே அப்பட்டமா சுடறார், குறிப்பா ஹீரோயின் ஓப்பனிங்க் சீன் , இருவருக்குமான ஊடல் காட்சிகளில் பி ஜி எம்  ராசாத்தி மனசுல என் ராசா பாட்டின் சரணத்தின் இசை உல்டா . 


9. அதே போல்  1964இல் ரிலீஸ் ஆன A FISTFUL OF DOLLARS படத்தில் வரும்  இசையின் உல்டா தான் ஹீரோ - ஹீரோயின் காதல் அரும்பும் காட்சியின் பி ஜி எம் - தகவல் உதவி -தமிழ் சினிமா உலகம்


http://4.bp.blogspot.com/-Xhsv2NewOjY/TvcbDPq9JXI/AAAAAAAAEyE/xeKwpccIoLo/s1600/business_man_movie_new_hot_stills_mahesh_kajal+%25281%2529.jpg


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43 


 குமுதம் ரேங்க் - ஓக்கே 


சி .பி கமெண்ட் -  மாமூல் மசாலா ஹிட் படம் பார்க்கும் ரசிகர்கள் , டைம் பாஸ் பண்ணனும்னு நினைக்கறவங்க , ரஜினி , விஜய் ரசிகர்கள்க்கு படம் பிடிக்கும். கமல் ரசிகர்கள் பார்த்தா செம காண்டாகிடுவாங்க.. லேடீஸும் பார்க்கலாம்.. ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqRlgDq4W21zY97RAAvS-mxPgMao2TycB6iaiLEhtMN-aGA_dfaXvMTHgnWy2xfxrLZsL3Pe0miQchwGwSODgYsVWyhbuDlyahjOfBrECbaNEfWgoIF32tG2SD3yUiJmbRNHOlhyphenhyphenna_mAD/s1600/businessman+telugu+movie.jpg




Wednesday, August 01, 2012

Bhale Dongalu - இலியானாவின் தெலுங்கு சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOg5hj3IZCPaxL7yLCSIu-zjY5u70Rf1qqVRcrFh-mSvAwrbysbzwyfqCH9VbQXdPpH4JhqfvjjklcR4pbXr-xgd3VKv6tYAfA1OJ1BJAJHlh7fcXWBdhXdzQq5V0upnQIcujk7bNkhZE/s400/1.jpg 






வழக்கம் போல் மரபு மாறா அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோவின் அடையாளமா ஹீரோ ஒரு வெட்டாஃபீஸ்.. அப்பா திட்டிட்டே இருக்காரு.. ஏதாவது ஒரு வேலைக்கு போ,.. இல்லை இடத்தை காலி பண்ணுன்னு ஜெ ராம்தாசை கேவலப்படுத்துன மாதிரி விரட்றாரு.. ஹீரோ பட்டணம் வர்றாரு.. 




ஹீரோயினும் ஒரு ஓடுகாலிதான்.. பாப்பா ஃபேஷன் கேர்ள் அல்லது மாடலிங்க் கேர்ள் ஆகனும்னு ஆசை.. வீட்ல மேரேஜ் ஏற்பாடு நடக்குது..  விட்டா போதும்னு இதுவும் ஓடி வந்துடுச்சு..


பாருங்க.. ஜாதகப்பொருத்ததை.. 10 பொருத்தமும் பொருந்துன மாதிரி

1. வீட்டுக்கு அடங்காதவங்க  2. கைல 10 காசு 2 பேர்ட்டயும் இல்லை  3. வீண் ஜம்பத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை..

இதுக்கு மேல என்ன வேணும்?

மார்வாடிக்கடைல ஹீரோயின் தங்கநகைன்னு சொல்லி  கவரிங்க் நகையை  விக்கறாங்க.. உலகத்துலயே அப்படி ஒரு ஏமாளி சேட் இருக்கா மாட்டார்..

அப்புறம் ஒரு ஷோ ரூம்ல போய் வாஷிங்க் மெஷினுக்குள்ளே 10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை அபேஷ்  பண்ணிட்டு வந்து  பிலாட்ஃபார்ம்ல வந்த ரேட்டுக்கு தள்ளி விடறாங்க..

அந்த ஷோ ரூம் ஓவர் தான் வில்லன்.. கோடி கோடியா சம்பாதிச்சாலும் இந்த பிசாத்து 10 லட்சம் ரூபா போனதுக்கு என்னமோ தன் குல கவுரவமே போன மாதிரி கவலைப்படறான்.. 

 http://mimg.sulekha.com/telugu/bhale-dongalu/events/bhale-dongalu/bhale-dongalushoot90.jpg




தேடுதல் வேட்டை நடக்குது.. இப்போ ஒரு போலீஸ் ஆஃபீசர் எண்ட்ரி.. எப்படியாவது இந்த 2 கேடிகளையும் பிடிச்சே தீருவேன்னு ஆடியன்ஸை பார்த்து சொல்றாரு.. இடைவேளை

வில்லன் போதை மருந்து பிஸ்னெஸ் பண்றவன்.. இண்டர் நேஷன்ல் கிரிமினல்..  கலைஞரை விட 10 மடங்கு டேலண்ட்டான ஆள்.. அப்படிப்பட்டவனை ஹீரோ மளிகைக்கடைல மைதா மாவு பாக்கெட் 5 வாங்கி அதை அபின்னு சொல்லி விக்கறார்.. அந்த கேன வில்லன் அதை வாங்கி கோடிக்கணக்கான பணத்தை லூஸ் மாதிரி தர்றார்..

 உண்மை தெரிஞ்சதும் கேப்டன் மாதிரி கண் எல்லாம் சிவக்குது.. எப்படியாவது ஹீரோவை பிடிச்சே தீருவேனு சொல்லிட்டே இருக்கார்..

 இப்போ திடீர்னு டைரக்டர்க்கு ஒரு டவுட்.. இவ்ளவ் கேனத்தனமா திரைக்கதை இருக்கே.. செண்ட்டிமெண்ட் கொஞ்சம் சேர்த்தா என்ன? உடனே ஹீரோ ஏமாத்தி சேர்த்த பணத்தை எல்லாம் பஸ்ல பார்த்த முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஒரு 8 வயசுப்பொண்ணோட ஆபரேஷன் செலவுக்கு உதவி பண்றாங்க ( ராபின் ஹூட் இமேஜ்)

இந்த மொள்ளமாரி ஹீரோவை, முடிச்சவுக்கி ஹீரோயினை அந்த கேன வில்லனோ, லூஸ் போலீஸ் ஆஃபீசரோ பிடிச்சாங்களா? இல்லையா? என்பது தான் கேவலமான க்ளைமாக்ஸ்,..

 இதுல செம காமெடி என்னன்னா  க்ளைமாக்ஸ்க்கு 2 ரீல் முன்னால ஹீரோயின் சசிகலா மாதிரி திடீர்னு திருந்திடுது.. ஹீரோ கிட்டே சொல்லுது.. இதுவரை நாம செஞ்ச தப்பு எல்லாம் போதும்.. இனிமே தப்பு பண்ணக்கூடாது.. ( தப்புன்னா கில்மா தப்பு இல்லை.. திருட்டு )

 ஹீரோவும் மண்டையை மண்டையை ஆட்டறான்..


ஹீரோ எனக்கு 20 உனக்கு 18 உன் தங்கச்சிக்கு 16 , உங்கம்மாவுக்கு 38 அப்டினு ஒரு படம் த்ரிஷா நடிக்க வந்ததே அந்த ஹீரோ தருண்.. நடிக்க எல்லாம் வாய்ப்பே இல்லை.. இருக்கற கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்துக்குவாரு.. ஹீரோவுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன்..  நல்ல படம் கிடைச்சு நல்ல பேரு வாங்கறதை விட முக்கியம் ஏதோ சான்ஸ் கிடைக்குதேன்னு குப்பைப்படத்துல நடிச்சு கெட்டபேர் வாங்கிக்க கூடாது

ஹீரோயின் உடுக்கு இடை அழகி இலியானா.. இவரு தம்னா மாதிரி எழுமிச்சை நிறத்தவர் அல்ல.. இருந்தாலும் இவர் ஒரு லெமன் அழகிதான் .. ஹி ஹி .. இலந்தைப்பழச்சிவப்பு உதட்டு அழகி, தொப்பை போடாத மிகச்சில நடிகைகளில் இவரும் ஒருவர்.. மற்றபடி நடிப்பு பற்றி எல்லாம் மூச்

வில்லன் கஜினி படத்துல வில்லனா வந்தாரே அவர் தான் அவர் சம்சாரம் இந்தப்படத்தை பார்த்தா கண்டிப்பா அவருக்கு  உதை தான் விழும்.. அவ்ளவ் கேனத்தனமான கேரக்டரைசேஷன்.. .. , Jagapati Babu- இவர் தான் போலீஸ் ஆஃபீசர்.. ஹய்யோ அய்யோ
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivvkVgsJ1yGVzx_T5pwPdYNMZdJ0qSrJj9aM1gvClwqBznC1tQo21u-lmXbpvC4Vxj9m1mutBLiBMFCcvaCpex04XGYS3-PNfwEhpdfZizdrkIydq0I0TcuJUM1MBwTXijcWNpO7iXW5c/s1600/ileana-latest-most-cute+(1).JPG

இந்த கேவலமான படத்துலயும் ரசிக்கும்படி இருந்த சில பல வசனங்கள்


1.  வேலைக்கு போகலை?

சம்பளம் ரொம்ப கம்மி

 படிச்சதும் கம்மிதானே? பி காம் 3 வது வருஷம் , வித் ஏகப்பட்ட அரியர்ஸ்.. அவ்ளவ் தான் வரும்.. 




2.திருடனை பிடிக்க போலீஸ்க்கு மிஷின் கன் கொடுப்பாங்க.. உங்களுக்கு மட்டும் வாஷிங்க் மிஷின் குடுத்திருக்காங்க?




3.  ஒரு சாதாரண பால் (BALL)  பிடிக்கத்தெரியாத நீ என்னை பிடிக்க போறியா? 




4. பொண்ணு எப்படி இருப்பா?


 அஜந்தா சிலை மாதிரி


 காம சூத்ரா கதையா சொல்லிட்டு இருக்கே?






5. சாதாரணமா நான் யார் கிட்டேயும் உண்மையை சொல்ல மாட்டேன். ஆனா நீங்க மிரட்டி கேட்கறதால உங்க கிட்டே மட்டும் சொல்றேன்..  ஹி ஹி 




6.  யூ ஆர் ஏன்  இடியட்

 தாங்க்க்ஸ்


7.  உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?

 சொன்னாத்தானே தெரியும்?

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6AdTgIvdl4c4HYElbGpkA4-oPn8wdlDHgJNy8fObHHxnesBzhYJ5dkvRmpbSHyTLCYUzTIhr_w2dGcCiWn4F8-h9mI0hmzHHv6Ps-jcH33CymxWMuYK0-I49gnNmPQ1enL8PTuwbgtLA/s400/Bhale+Dongalu.jpg


8. ஏம்மா,, அவன் என்ன பண்றான்? பார்த்து சொல் பார்க்கலாம்?

 பொக்கே விக்கறான்




 நோ, கொக்கே ( போதைப்பொருள்) விக்கறான், அதை  அதிகமா யூச் பண்ணா ஆபத்து.


 ஆமா, கொக்கே சாப்பிட்டா உயிர் போயிடும் பிஸ்கட் சாப்பிட்டா பசி போயிடும்




9. சாதாரணமா இருக்கும்போது என் முகம் சும்மா தான் இருக்கும்.. பொண்ணுங்க வந்துட்டா சுறு சுறுப்பு ஆகிடும்,.,. ம்


10.அவங்க ஏன் உன்னை துரத்திட்டு வர்றாங்க?



திரும்பிப்பார்க்கறப்ப என்னை பார்த்துட்டாங்க .. கடத்திட்டு போகப்போறாங்க .. அழகா இருக்கேன் இல்லையா?

 ம், தப்புதான்

 எது ? அழகா இருக்கறதா?


 ம்ஹூம், கடத்தறது



11. சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஏன் டைவர்ஸ் பண்றாங்க? ( பெருசா எதிர்பார்த்து ஏமாந்திருப்பாங்க ஹி ஹி )


இப்போ அது தான் ஃபேஷன்.. ஃபாரீன்ல எல்லாம் ஆ-ன்னா ஊன்னா டைவர்ஸ் தான்


12.  உன் சம்சாரம் நெருப்பு மாதிரி

 ஆமா அவ சூடா இருக்கா..  தொட்டுப்பார்த்தேன்


13.  நம்ம 2 பேருக்கும்  ஒரே அளவு செல்வம், மதிப்பு,அந்தஸ்து, எல்லாம் சமம். என் கிட்டே இல்லாதது அப்படி என்ன உன் கிட்டே இருக்கு? 

 உன் சம்சாரம்  இப்போ என் கிட்டே தான் இருக்கா. ஹி ஹி 


14. பணம் இல்லாம கூட என்னால வாழந்துட முடியும் , ஆனா நீ இல்லாம வாழ்ந்துட முடியாது ( ஏன்னா அவ பேர்ல தான் எல்லா சொத்தும் இருக்கா?) 



இந்தப்படத்தோட உல்டா தான் அது.. ஹி ஹி 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwGv36WMoXzXRKskb7wXPQ0gKkuRhsyZxsa1rrxHYdPDLnShXtUlqFa90NkyKVs5bnH3niWPpEqBpDk7sa8-gIFv5ZCX2m-UcED01p1TUJAvK6hTIibDHZ3FbJspH35qN_q97zkJLYs08/s400/BUNTY+P.jpg

 இயக்குநரிடம் நக்கலாக சில கேள்விகள்


1.அண்ணே, எந்த ஊர்ல நாய் மைதா மாவு சாப்பிட்டு இருக்கு?  அப்டியே சாப்ட்டாலும் ரெகுலரா  வில்லன் நாயை அபின் சாப்பிட வைத்து பழக்கி இருக்கான்.. அது கண்டு பிடிக்காதா? கொஞ்சம் அபின் கொஞ்சம் மைதா கொடுத்தா அதுக்கு தெரியாதா>?



2. எங்கோ இருக்கும் பேபியோட ஆபரேஷனுக்கு பணம் கட்ட ஹீரோ ஹாஸ்பிடல் வந்து வில்லன் கிட்டே மாட்டிக்கறாங்க.. இது மணி ட்ரான்ஸ்ஃபர் காலம்.. அந்த ஹாஸ்பிடல் அக்கவுண்ட் நெம்பர் வாங்குனா உலகின் எந்த மூலைல இருந்தும் யார் வேணாலும் பணம் கட்டலாமே? எதுக்கு மெனக்கெட்டு ஹீரோ அங்கே வரனும்?


3. அந்த போலீஸ் ஆஃபீசர் படம் பூரா என்ன தான் பண்றார்? சம்பளம் எதுக்கு தண்டமா கொடுத்தீங்க..?


4. இவ்வளவு கேனத்தனமா லாஜிக் இல்லாம வெட்டியா நடிக்க சாரி வந்துட்டுப்போக வில்லன் எப்படி சம்மதிச்சாரு..?


இந்த ஹாலிவுட் படம் தான் இதனோட மூலம் -

http://jumpinblack.com/wp-content/uploads/2010/02/23mv5o4.jpg




 சி. பி கமெண்ட்  - இந்த கேவலமான படத்தை ஈரோடு சங்கீதாவில் பார்த்தேன்..


 தொழில் நுட்பக்கலைஞர்கள்  

Directed by K. Vijaya Bhaskar
Produced by Sakhamuri Panduranga Rao
Bellamkonda Suresh
Written by Abburi Ravi
Starring Tarun Kumar
Ileana D'Cruz

Jagapati Babu
Music by K.M. Radha Krishnan
Release date(s) April 11, 2008
Country India
Language Telugu              

Thursday, June 21, 2012

DUBAI SEENU -நயன் தாரா வின் தெலுங்கு சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWDJwiOThIT9EpMT5Bw9UVTwcipVw2fukJIMpUf-z6fccjU6mrN4cZSdinxX0Nl8UPm23AI6_QH92cGeAiH_sZKYqXVv1wa8WrUQi23b_8RlGqcAJR1mm9mbSVBQxvOoayTqykxIy5Mkdq/s1600/wall_800x600_2.jpg கதைக்களம் ஹைதராபாத்ல , ஹீரோ வழக்கம் போல வெட்டாஃபீஸ்.. துபாய் போனா  பாய்ல சும்மா படுத்துக்கிட்டே சம்பாதிக்கலாம்னு கனவோட மும்பை போறார்.. அங்கே ஏஜெண்ட் பணத்தை எல்லாம் சுருட்டி ஏமாத்திடறான்.. விக்ரமன் படத்துல வர்ற மாதிரி ஹீரோ தன் கேங்க்கோட பிளாட்ஃபார்ம் கடை வெச்சு பொழப்பை ஓட்டறார்.. 

ஹீரோயின் தன் அண்ணனைத்தேடி அங்கே வர்றார்.. அண்ணன், அண்ணி 2 பேரும் ஹீரோவுக்கு ஃபிரண்ட்.. செம க்ளோஸ்,.. ஆனா பாருங்க அந்த மேட்டர் டைரக்டரைத்தவிர யாருக்கும் தெரியாது.

 படத்தோட கதை இடைவேளைக்குப்பிறகுதான் ஆரம்பிக்குதுங்கறதால  ஹீரோவும், ஹீரோயினும் கேனம் மாதிரி பேசிக்கிட்டு, லவ் பண்ணிக்கிட்டு, மொக்கை ஜோக்கா சொல்லி கடுப்பேத்திட்டு திரியுதுங்க.. இந்த லட்சணத்துல டூயட் வேற ..


ஹீரோயின் ஒரு ரேடியோ ஜாக்கி, அவருக்கு ஒரு நாய் மாமன் . அதாவது அவரையே நாய் மாதிரி சுத்திட்டு இருக்கும் தாய் மாமன்.. அவன் கண்ல மண்ணைத்தூவி லவ் பண்ணும் ஹீரோ..


ஹீரோயினோட அண்ணன் வேலை செய்யறது மாறு வேஷத்தில் இருக்கும் ஒரு தாதா.. போலீஸால் என்கவுண்ட்டருக்காக தேடப்படும் ஆள்.. 

ஹீரோயினோட அண்ணன் அதை கண்டு பிடிக்கறாரு.. அதை வில்லன் கண்டு பிடிச்சு போட்டுத்தள்ளிடறாரு 2 பேரையும்.. உடனே வில்லனை கொன்னுட்டா படம் 8 ரீல்லயே முடிஞ்சுடுமே. அதனால ஹீரோ டைரக்டர் சொல்லிக்குடுத்த மாதிரி வில்லனோட தம்பியை போட்டுத்தள்ளறார்.. 

ஹீரோ - வில்லன் மோதல்ல ஹீரோதான் ஜெயிப்பார்னு உலகத்துக்கே தெரிஞ்சாலும் எப்படி எல்லாம் கேவலமா பஞ்ச் டயலாக் பேசி கொலையா கொல்லப்போறார் என்பது தான் மிச்ச சொச்ச கதை


ஹீரோ ரவி தேஜா.. ஆள் நல்ல சுறு சுறுப்பு ... முகம் தான் முற்றலா இருக்கு.. வாய்ஸ் மாடுலேஷனில் ரஜினியையும், சீண்டல்களில், குறும்புகளில் விஜயையும் ட்ரை பண்றார்.. படத்துல நயன் தாராவை ட்ரை பண்றார்.. க்ளைமாக்ஸ் பாடல் காட்சி அதகள டான்ஸ்.. 



 ஹீரோயின் நயன் தாரா அதிகம் வேலை இல்லை.. 3 டூயட்..  24 காட்சிகள்ல தலையை , லோ கட்டை, லோ ஹிப்பை காட்டிட்டு போறார்.. அவ்ளவ் தான்

படத்தில் 2 காமெடியன்ஸ்.. 1 . எப்பவும் போல் பிரம்மானந்தம்.. நம்ம ஊர் வடிவேல் மாதிரி .. ஆள் வந்தாலே சிரிப்புத்தான்.. 


 இன்னொருவர் சியாஜி ஷிண்டே. பாரதியாருக்கு நேர்ந்த கொடுமை பாருங்க.. இவர் காமெடி பண்ண ட்ரை பண்றது கூட ஓக்கே, ஆனா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கேரக்டர் பண்றப்போ அந்த பதவிக்குண்டான மரியாதையை தூக்கி போட்டுட்டு ஏதோ வாட்ச் மேன் மாதிரி கூத்து அடிப்பது மகா கேவலம்.. 

http://www.extramirchi.com/gallery/albums/south/movies/DubaiRani/dubai-rani_(24).gif


மனம் கவர்ந்த வசனங்கள்



1. முகத்துல சுருக்கம் வராம இருக்க  நான் சில ஃபேஸ் எக்சசைஸ் பண்றேன்..

 ஓஹோ,அதை எல்லாம் செஞ்சா சுருக்கம் வராதா?

 புதுசா வராது


அப்போ பழசு?

 அது அப்படியேதான் இருக்கும்



2. புள்ளி ராஜா கோஷ்டில வந்த ஒல்லி ராஜா நீ , மறந்துடாதே


3. எனக்கு பசிக்குது, ஆனா சாப்பிட முடியல, தாகம் எடுக்குது, ஆனா எதையும்  குடிக்க முடியலை..இதுதான் காதலா?

 இல்லை, இது சிக்குன் குன்யா.. 



4. துபாய் ஃபிளைட்  லேட்.. வர 2 மணி நேரம் லேட் ஆகும்னு சொன்னாங்க, நீ எப்படி வந்தே?

 ஹி ஹி வேற ஃபிளைட் பிடிச்சு வந்துட்டேன்

 காது குத்தாதே.. அதெப்பிடி.. நடு வானில் விமானம் மாத்த முடியும்?



5.  நீ ஏம்மா இங்கே நிக்கறே..?

 பைக் ரிப்பேர் மாமா

 அடடா.. ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி இருந்தா நான் பிக்கப் பண்ண வந்திருப்பேனே?

 ஏன்?

 வேற எவனும் உனை பிக்கப் பண்ணிடக்கூடாது பாரு.. அதான். 


6. அவ பிறந்ததே எனக்குத்தான்.. 

 உங்க ஊர்ல குழந்தை  பிறந்தா மேரேஜ் பண்ணி வெச்சுடுவாங்களா? எங்க ஊர்ல எல்லாம் லவ் பிறந்தாதான் மேரேஜ் பண்ணி வைப்பாங்க


7.  மதுவுக்காக நான் சாக ரெடி.. நீ சுடுறீயா?.. இப்போ நான் உன்னை சுடறேன்.. நீ சாக ரெடியா? 


8. எந்த உண்மையை சொல்றே?

 அவர் சொன்ன பொய்யை..

 குழப்பாதே.. 

 அதாவது அவர்  என்னை லவ் பண்றதா பொய் சொன்னதா சொன்னாரே அது பொய் இல்லை, உண்மை

 தெளிவா குழப்பிட்டே.. 


9. சார்.. துபாய் போற ஃப்ளைட்ல உக்கார சீட் கிடைக்குமா? ஸ்டேண்டிங்க் தானா?


ஃப்ளைட்ல ஏ சி இருக்குமா? 

 அட்சிஸ்டென்ட் கமிஷனர் வேணா இருப்பார்.. அவரும் ஏ சி தானே?


10. என்னது? இதுதான் வீடா? என்னமோ கூடாரம் மாதிரி இருக்கு?



நீங்க எல்லாரும் இங்கே உக்காந்து பேசிட்டு இருந்தா அது ஹால், சமையல் செஞ்சா அது கிச்சன் ரூம், படுத்தா அது பெட் ரூம், 


அப்போ மழை வந்தா..?

 ஹி ஹி ஸ்விம்மிங்க் பூல்.. ஏன்னா கூரை ஒழுகும்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIeGkEpdFo9xQD-_kC5HrwKsL1n2eqYn8iNJ_jtOp-Xxk1srjOZ3qdj-fd0mjMfE4jzStBG8klMUBd5n9fygK4gdOwKzQBhS06sEafSdA94PZAJh3v_y0bj25_wQoESEkD4d8hsI-V5ii8/s1600/Dubai+seenu+2007+-+DVDRIP+movie+torrent+free+download+by+www.tellwtuwant.blogspot.com+(5).png

11.  நீ என்ன செய்வே..?

 கீழே வைக்காம ஒரு ஃபுல் அடிப்பேன்.. 

 கீழே வெச்சா?

 அவன் எடுத்து குடிச்சுடுவான்.. 



12. நீங்க எங்கே வேலை செய்யறிங்க?

சாஃப்ட்வேர் கம்ப்பெனில


எந்த கம்பெனில வேலை?

 ம்.HP  கம்ப்பெனில 

 அது கேஸ் கம்ப்பெனி ஆச்சே?

 ஹி ஹி .. அவங்க பேரை ஃபேமஸ்க்காக இவங்க எடுத்துக்கிட்டாங்க


13.  அவ ஏன் என் கண்ல அடிக்கடி படனும்..? இதை எல்லாம் வெச்சுப்பார்க்கறப்போ , நடந்த சம்பவங்களை கூட்டிக்கழிச்சு வகுத்து, பெருக்கி பார்த்தா ... 

 குப்பை தான் வரும்.. காதல் வராது.. 



14. உங்களை திருமானி அம்பாய் ஆக்கலாம்னு பார்த்தா பீர் பாய் அம்பானி ஆகாம போக மாட்டீங்க போல.. எப்போ பாரு சரக்குத்தானா?



15. இவன் மாமூலா இருக்கும்போது  எம் ஜி ஆர்.. சரக்கு அடிச்சுட்டா நம்பியார்.. 


16.  உன் ஃபிளாஸ்பேக் ஏண்டா இவ்ளவ் கேவலமா இருக்கு? உன் லவ் ஸ்டோரில ஒரு கிஸ் இல்லை.. ஒரு கில்மா இல்லை.. செம போர்



17.  மாப்பிள்ளை ராஜா லெவல்ல இருந்தவராம்

 ம்க்கும். நல்லா விசாரிங்க ராஜா டிராவல் ல இருந்திருக்கப்போறார்


18.  என் தண்ணியை அடிச்சுட்டு என்னையே அடிக்கறியா? சரக்கு ஓசில வாங்குனா நன்றி உணர்ச்சி வேணாமா?



19.  அவன் கிட்டே என்ன இருக்கு? என் கிட்டே என்ன இல்லை?

 என் கிட்டே கேட்டா? போய் அவ கிட்டே கேளுங்க.. 




20.  நாம எந்த பொண்னையும் லவ் பண்ணதே இல்ல


நம்மை எந்த பொண்ணும் லவ் பண்ணலைனு சொல்லுங்க 

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3496.jpg



21. பர்சனலாவும் சரி , புரொஃபசனலாவும் சரி  நான் மெண்டல் ஆகிட்டே வர்றேன், காரணம் அவ தான்


22.  டென்ஷனும் பயமும் எப்பவும் நமக்கு வரக்கூடாது, நம்ம எதிரிங்களுக்கு வரனும்


23.. இவனெல்லாம் ஒரு ஆர்ட்டிஸ்ட். நாம சொல்றதை இவன் செய்ய மாட்டான், இவன் ஆடறதை அட்ஜஸ்ட் பண்ணி நாம ஷூட் பண்ணிக்க வேண்டியதுதான்

 சுவத்துல பல்லி ஊறுதே அது போல ஸ்டெப் சொல்லிக்குடுங்க, பக்கி கரெக்ட்டா செய்யும்.. 


24.. இன்னொரு டைம் இங்கே வந்தே கு க ஆபரேஷன்  பண்ணி விட்டுடுவேன்


25. இன்ஸ்பெக்டர், இவன் மும்பைல எங்களை சீட்டிங்க் பண்ணினான்.. 

 அங்கே தானே சீட் பண்ணினான்.. இங்கே சொன்னா எப்படி? ஏன் இங்கே வந்து கலாட்டா பண்றீங்க? 


26. உங்க கையை பார்த்தா தரித்திரம் பிடிச்ச ஜாதகமா இருக்கே?

 நான் கையை பார்க்காமயே சொல்வேன். இது என்ன பெரிய ஜோசியம்?

http://2.bp.blogspot.com/-JIYES52Hm3Q/TcwdtdyWXsI/AAAAAAAAAJw/n65_GrtSg-c/s1600/nayanthara-hot.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. பிரம்மானந்தம் மும்பை ஏஜண்ட் கிட்டே ஃபோன்ல தான் பேசி இருக்கேன், ஆனா ஆளை நேர்ல பார்த்ததில்லைன்னு ஒரு ஆள்ட்ட ஏமாறும்போது சொல்றார்.. அவர் ஏன் நேர்ல பார்க்காத நபரை சந்திக்கும்போது அவருக்கு ஃபோன் பண்ணி அதே நபரா?ன்னு கேட்கலை?


2. பொதுவா இந்த மாதிரி பண பரிவர்த்தனை எல்லாம் ஆஃபீஸ்ல தான் பண்ணுவாங்க.. ஆனா சும்மா நடு ரோட்ல ஏமாறுவது நம்ப்ற மாதிரி இல்லை.. லட்சக்கணக்குல பணம் குடுத்துட்டு அதுக்கு ரசீது கூடவா கேட்கமாட்டாங்க?


3. நயன் தாரா தன் அண்ணனை தேடி மும்பை போறார். அவர் ஃபோட்டோவை ஏதோ லைப்ரரில கொடுத்து ஆள் வந்தா தகவல் கொடுங்கறார்.. அவர் ஏன் பேப்பர்ல, மீடியாக்கள்ல விளம்பரம் தர்லை?


4. வில்லன் தன் ஆஃபீஸ்ல வேலை செய்ய்ற ஆள் தான் தான் தாதா என்பதை கண்டு பிடிச்சுட்டாங்கனு தெரிஞ்சதும் அங்கேயே, ஸ்பாட்லயே போட்டுத்தள்ளாம நல்ல நேரம் ராகு காலம் பார்த்துட்டு 4 நாள் கழிச்சி தேடுவது காமெடி


5. படத்தோட திரைக்கதைல நேரா கதையை சொல்லாம எதுக்கு தேவை இல்லாம இத்தனை ஃபிளாஸ்பேக், திருப்பங்கள்? இது என்ன பெரிய சஸ்பென்ஸ் த்ரில்லரா? மாமூல் மசாலாக்குப்பைதானே?

6. நயன் தாராவின் அண்ணன் தன் உயிர் நண்பன் கிட்டே கடைசி வரை தன் தங்கை ஃபோட்டோவை காட்ட்ட்லை, அதே போல் நயன் தாராவும் இவர் தான் எங்க அண்ணன் என தன் காதலன் கிட்டே ஃபோட்டோ காட்டலை.. ஏன்?

7. ஹீரோயின் நயன் தாராவின் கூடவே வரும் தோழி நல்ல ஃபிகர் தான்  ஆனா அதுக்காக ஹீரோ ஹீரோயின் கிட்டே பேசறப்போ, சிரிக்கறப்போ, லவ்வறப்போ எல்லாம் என்னமோ அவர் தான் ஹீரோயின் மாதிரி ஓவர் எக்ஸ்பிரஷன் குடுக்கறாரே? ஏன்?


8. படத்துல வெட்டியா பானுச்சந்தர் உட்பட பலர் வீனடிக்கப்பட்டிருக்காங்களே? ஏன்?


9. எல்லாரும் அஞ்சி  நடுங்கும் ஜின்னா பாய் வில்லன் மாதிரியே இல்லை, காமெடி பீஸ் மாதிரி இருக்கார்.. 


http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-actress/nayantara/nayanthara_cute_blue_half_saree_photos_stills_super_movie_4300.jpg i

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. சாயாஜி ஷிண்டே கூட வரும் காமெடி நடிகர் அடிக்கும் கவுண்ட்டர் டயலாக்  ஒவ்வொன்றும் நச் ரகம்.. காமெடி கலக்கல்


2.  துபாய் கூட்டிப்போவதாக சொல்லி ஏமாற்றி தானும் ஏஜென்ட்டிடம் ஏமாந்து பின் ஹீரோ அண்ட் கோவிடம் வடிவேல் போல் அடி வாங்கி பின் எடுபுடி வேலைக்கு சேருவது


3. ரேடியோ ஜாக்கியாக வரும் நயன் தாரா தன் மாமாவை லவ் வர வெயிட் பண்ணனும் என சொல்லிக்கொண்டே அவர் கண் முன் ஹீரோவை லவ் பண்ணுவதும் அவரை கலாய்ப்பதும் ஜாலி பட்டாசு


4. பாடல் காட்சிகள் பிரம்மாண்டம்.. அதுவும் அந்த கடைசி பாடலும், அதற்கு முந்திய பாடலும் ஆரவாரம்.. நடன வடிவமைப்பு செம..


5. பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன இந்த தெலுங்குப்படத்தை  புதுப்படம் போல் துபாய் ராணி என டைட்டில் வெச்சு நயன் தாரா படம் போல் போஸ்டர் ஒட்டிய டெக்னிக் 


சி.பி கமெண்ட் - படம் ஓவர் மொக்கை எல்லாம் இல்லை, விஜய் படம் மாதிரி கொஞ்சம் ஜாலியா, ஆக்‌ஷன் மசாலா எல்லாம் கலந்து போகுது.. டி வி ல போட்டா பார்க்கலாம்.. ஈரோடு ஸ்டாரில் படம் பார்த்தேன்

ஃபுல் படமும் பார்க்க - http://www.youtube.com/watch?v=8_nUQEMjFY0

Tuesday, March 27, 2012

நந்தா நந்திதா - கோவிந்தா கோவிந்தா - சினிமா விமர்சனம்

http://incinema-images.s3.amazonaws.com/indiancinema/wp-content/uploads/2012/03/nandha_hme.jpgஹீரோ ஒரு பொறுக்கி.. ஹீரோயின் ஒரு கிறுக்கி.. பின்னே பொறுக்கியை லவ் பண்ற சிறுக்கியை எப்படி கூப்பிட? ஹீரோவை ஹீரோயின் எதனால லவ் பண்றா-ன்னு டைரக்டர் காட்டறப்ப  ஆல் ஆடியன்ஸ் கிளாப்ஸ்.. அது இன்னான்னா ஹீரோ பல் துலக்கறப்ப பிரஷ் யூஸ் பண்ணாம கை விரலாலயே பல் துலக்கறாரு.. ஈரோடு மாவட்டத்துல பாதிப்பேரு அப்படித்தான் துலக்கறாங்க.. ஆனா பாருங்க பாப்பா அதை பார்த்து எஸ் வி சேகர் நாடகம் பார்த்த எஃபக்ட்ல சிரியோ சிரின்னு சிரிக்குது.. லவ் ஸ்டார்ட் ஆகுது.. 

எங்க ஏரியாவுல விடியாமுகரைன்னு சொல்வாங்க. அதாவது எப்போ பாரு முகத்தை உம்முன்னு வெச்சிருப்பான்.. குளிக்கவே மாட்டான்.. தாடியோட இருப்பான்.. அவனை பார்த்துட்டு போனா எந்த காரியமும் விளங்காது.. அந்த விடியா முகரை மாதிரி தான் ஹீரோ இருக்காரு .. ஹி ஹி 

ஹீரோ லோக்கல் ரவுடி.. 2 தாதாக்கள் மோதல்ல ஒரு தாதாவை போட்டுத்தள்ள நியமிக்கப்படறாரு.. அவர் எஸ் ஆகி எதிராளியை போட்டு தள்ள வர்றப்ப ஹீரோயின், அவங்கம்மா, அவங்க தம்பி... எல்லாரையும் க்ளோஸ்... 

 கடைசில எண்ணிப்பார்த்தா படத்துல மொத்தம் 89 கொலைகள்.. 113 வெட்டு குத்து

 ஹீரோ பேரு ஹேமச்சந்திரனாம்.. நாமச்சந்திரன்னு வைக்கலாம்.. தேறவே மாட்டார். 

 ஹீரோயின்  மேக்னா. ஆல்ரெடி பாணா காத்தாடில நடிச்சவர் தான்.. மெழுகு பொம்மை மாதிரி  மொழு மொழுன்னு இருக்கார். ஒரு சீன்ல ஹீரோ துரத்தும்போது ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றப்ப ஹி ஹி ஹி 

http://mimg.sulekha.com/tamil/nanda-nanditha/images/stills/nanda-nanditha-images-045.jpg

. மனதில் நின்ற வசனங்கள்


1.  எவ்ளவ் படிச்சிருக்கீங்க?

எம் பி ஏ படிக்கனும்னு நினைச்சேன்.. ஆனா அஞ்சாங்கிளாஸ் தான் படிச்சேன்.. நீங்க? 

மீ சிக்ஸ்த். 

 பேக் எல்லாம் வெச்சிருக்கீங்க.. பெரிய படிப்பு படிச்சு இருப்பிங்கன்னு நினைச்சேன். 

2. புனித யாத்திரை போறீங்களா?

 அது பொழப்பத்தவங்க செய்யறது


3.  காட்டிக்கொடுக்கிறவன்களுக்கும், கூட்டிக்கொடுக்கிறவங்களுக்கும்  ஒரு மைனஸ் பாயிண்ட் கண்டிப்பா இருக்கும்.. அவன் மைனஸ் என்ன?

 சரக்கு அடிக்கும்போதும், பொண்ணோட இருக்கறப்பவும் தனியா தான் இருப்பான். 


4. பொண்ணுங்க தலை வாரி பூச்சூடி இருக்க 1000 காரணங்கள் இருக்கலாம்.. ஆனா ஆம்பளை தலை சீவி பவுடர் அடிச்சு அலங்காரம் பண்ண ஆரம்பிச்சா அதுக்கு ஒரே அர்த்தம் தான்..


5.  பசங்க புது டிரஸ் போடறதே பொண்ணுங்க பார்க்கத்தானே?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjWVjSLjZHelxI7NddMArdgTthhbmfraZgZqwKmMDnWnuZ-fggNorLrvjCMSqwPMxUMpFxYLwgUTg-Pjt6vXfzqEDojyNiIIadofs2nk3s7IM8UCXWJTOIYfMt3ApUVjEeUnX1EeJSYVE/s1600/nanda-nanditha-high-resolution10.jpg

6. கடவுள் எனக்காக என்னங்க செஞ்சாரு?அம்மா இறந்தாச்சு.. அப்பா என்னை துரத்தி விட்டாரு.. 

 செய்வார் செய்வார்.. வெயிட்

 முதல்ல அவர் செய்யட்டும். அப்புறமா கோயில்க்கு வர்றேன்.. 


7. நம்மளை மாதிரி அரசியல் வாதிங்க சினிமா, ரசிகர் மன்றம் இதை எல்லாம் கைக்குள்ள போட்டு வெச்சுக்கனும்.. யூஸ் ஆகும்.. 


8. லவ் பண்ற எல்லாரும் ஒரு நாள் சரக்கு அடிச்சு மட்டை ஆகியே தீரனும்.. 

9. அரசியல் பண்றது ஈசி.. ரவுடியிசம் பண்றது தான் கஷ்டம்.. எப்போ எங்கே இருந்து எதிரிங்க வருவாங்கன்னு தெரியாது..  யார் எதிரியா மாறுவாங்கன்னும் தெரியாது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL47jWS3P-56gkQmhb1LPOozLdYW2K_zxFv0kgvnZikzvVW4U30or9udN29JKACWBksgoRtOKeHJuh5SZGRYhdz0QFIbyXJo7sIDf2Gy0QsNqvA4xLOFwrDmpJ9ONffpOQyl-KmuT8Rk0/s1600/Nanda+Nanditha+Tamil+Movie+Songs+3.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ரிலேட்டிங்க் லாஜிக் சொதப்பல்கள்


1. ஹீரோ தன் அப்பாவைப்பற்றி குறை சொல்றப்ப< “  எங்கம்மாவை நீ தான் கொன்னேன்னு எனக்கு தெரியும்கறாரு.. சித்தி கிட்டே நீ எங்கப்பாவை மயக்கி எங்கம்மாவை துரத்துனே அப்டிங்கறார்.. ஆனா ஃபிளாஸ் பேக் சீன்ல ஹீரோவோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குடிப்பழக்கம் பற்றி சண்டை வருது.. அதுல மண்ணெண்ணெய் ஊற்றி அம்மா தற்கொலை.. அதுக்குப்பின் தான் சித்தி வருகை.. 


2. ஹீரோயின் சரவ சாதாரணமா வர்றாங்க. ஹீரோயின் கூட வர்ற தோழி ( கல்லூரி படத்துல தமனா கூட தோழியா வருமே அந்த ஃபிகரு) படத்துல வர்ற 19 சீன்ல  13 சீன்ல மல்லிகைப்பூ சரம் சரமா வெச்சுட்டு வருது.. 


3. ஹீரோ வில்லனை ஒரு சேரி ஏரியாவுக்கு கூட்டிட்டு வர்றான்.. அங்கே 2 கிமீ நடக்கறாங்க.. ஏன் கார்ல போகலை? வில்லனோட ஆளுங்களை விலைக்கு வாங்குன ஹீரோ ஏன் வில்லன் இடத்துல போடலை? மெனக்கெட்டு அவ்ளவ் தூரம் ஏன் வரனும்?

4. ஹீரோயின் எங்கே குடி இருக்காளோ அதே இடத்துல எந்த மாங்கா மடையனாவது வந்து கொலை செஞ்சு  ஹீரோயின் கிட்டே மாட்டுவானா? இத்தனைக்கும் அது ஆத்திரமா செய்யற கொலை அல்ல. பிளான் பண்ணி பண்ற கொலை.. 

5. காலேஜ்ல டிகிரி படிச்ச ஹீரோயின் தம்பி அடிக்கடி “ நான் கூலி வேலை செஞ்சாவது.... அப்டினு ஏன் டயலாக் பேசனும்? படிக்காதவங்க தான் அப்படி பேசுவாங்க.. 

http://www.thedipaar.com/pictures/resize_20110925042213.jpg

6.  ஹீரோ - ஹீரோயின் ஊடல் டைம்ல தோழி கிட்டே ஹீரோ ஹீரோயின் ஏன் ஊறுகாய் கம்பெனிக்கு வேலைக்கு வர்லை?ன்னு கேட்கறார்.. அதுக்கு தோழி தெரியாதுங்கறா.. அப்புறம் ஒரு சீன்ல ஹீரோயின்  அந்த தோழி கிட்டே ஹீரோவை பார்த்தியா?ன்னு கேட்கறப்ப “ உன்னைத்தான் கேட்டாரு”ன்னு சொல்லலை.. நான் அவரைப்பார்க்க;லைன்னு சொல்றாரு  ( ஒரு வேளை அந்த தோழி.. ஹீரோவை கரெக்ட் பண்ண பிளான் போட்டு அந்த கிளைக்கதை எடிட்டிங்க்ல கட்டோ?)

7. வில்லன் அடியாளுங்க மண்டபத்துல  ரகளை பண்றப்ப அவனவன் கதறிட்டு ஓட வேணாம்? அவனவன் கைல வெச்சிருந்த பார்சலை பத்திரமா எடுத்திட்டு ஓடிட்டிருக்காங்க.. அவ்வ்வ்வ் 

8.ஹீரோ கேரக்டர் சரியா சித்தரிக்கப்படலை ... அதே போல் ஹீரோயின் ஒரு டைம் ஹீரோ ரவுடி என்பதால் வெறுக்கறார்.. இன்னொரு டைம் அது பற்றி எல்லாம் கவலையே படலை..

9. ஹீரோயின் நைட் ஓ டி முடிச்சுட்டு கம்பெனில இருந்து வர்றப்ப என்னை ரவுடிங்க தூக்கிட்டு வந்துட்டாங்க அப்டிங்கறார்.. அப்போ எப்பவும் கூடவே வரும் தோழி எங்கே? 5 ரவுடிங்க சேர்ந்து 2 பேரை தூக்கிட்டு வர முடியாதா? ஏன் தோழியை விட்டுட்டு வந்துட்டாங்க?


10. இந்தப்படத்து மூலமா நீங்க சொல்ல வர்ற கருத்து வன்முறை கூடாது என்பதா? அதுக்கு ஏன் இத்தனை வன்முறை படத்துல?

http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2011/11/&file=1320923871662184.jpg


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35 ( இது ஒரு தெலுங்கு டப்பிங்க் என்பதால் நோ விமர்சனம் இன் விகடன் .. ஒரிஜினல் டைட்டில் நந்தா லவ்ஸ் நந்திதா)

 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்


சி.பி கமெண்ட் -  டி வி ல போட்டா க்ளிப்பிங்க்ஸை கூட பார்த்துடாதீங்க 

 இந்த குப்பையை ஸ்ரீ கிருஷ்ணாவில் கூட்டினேன்.. அடச்சே பார்த்தேன்.


http://4.bp.blogspot.com/-w6MCYughKBY/TwWZITLrOQI/AAAAAAAAcoc/LRd0VoU9Yx0/s1600/Meghana+Actress+hot+stills.jpg.