Saturday, August 20, 2011

ஜெ சவால்- உள்ளாட்சித்தேர்தல் வரும்போது தி முக வி ஐ பிங்க எல்லாரும் உள்ளே இருப்பாங்க!

'உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்!''

சீறிய ஜெ.! சிலுப்பும் அறிவாலயம்!

நில அபகரிப்புப் புகார் என்ற பெயரில் தி.மு.க-வினரைக் கைது செய்து பழி தீர்த்து வருகிறார் ஜெயலலிதா’ என்று கருணாநிதி ஒரு பக்கம் வெடித்துக்கொண்டு இருக்க... 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்...’ என்று பதில் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.


நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தமிழகம் முழுக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், நில அபகரிப்புப் புகார் சிறப்புக் காவல் பிரிவும் தொடங்க உத்தரவு இட்டு இருக்கிறார்.

''உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்கள் அத்தனை பேரும் உள்ளே இருக்கணும்'' என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. அதை சட்டரீதியாகத் தடுக்க முடியுமா என்று தி.மு.க-வும் சிலுப்பிக் கொண்டு தயாராகி வருகிறது!


தமிழ்நாடு முழுக்க நில அபகரிப்பு தொடர்பாக இதுவரை வந்த புகார்கள் 2,800-ஐத் தாண்டிவிட்டன. பெரும்பாலும் தி.மு.க. தொடர்புடையவர்கள் மீதுதான் குற்றச்சாட்டு. கடந்த மூன்று மாதங்களில் கைதான தி.மு.க. வி.ஐ.பி-கள் பற்றிய ஓர் அலசல் இது. போலீஸ் போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டன!

ஜெயலலிதா கோபமும்... வீரபாண்டியார் கைதும்... 

சேலத்தில் உள்ள பிரீமியர் ரோலர் ஃபிளவர் மில்லை மிரட்டி வாங்கியதாக அதன் உரிமையாளர் கொடுத்த புகாரில்தான், வீரபாண்டி ஆறுமுகம் மீது கொலை மிரட்டல், நிலத்தை அபகரித்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்தியக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் அவரைக் கஸ்டடியில் வைத்து விசாரித்தது போலீஸ். 

அந்த சமயத்தில் வெளியில் இருந்த தி.மு.க-வினர் சிலர் பச்சை சேலை உடுத்திய ஒருவரை அசிங்கப்படுத்துவதைப்போன்று சில சம்பவங்களை அரங்கேற்றவே, கடுப்பானார் ஜெயலலிதா. தாசநாயக்கன்பட்டி பால மோகன்ராஜ் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் உடனடியாகக் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் ஆறுமுகம். இன்னும் ஜாமீன் வாங்கவும் முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்.


 ஆப்பு வைத்த அரவை மில் அதிபர்! 

பெருந்துறையைச் சேர்ந்த கடலை அரவை மில் அதிபர் ராமசாமி, ஈரோட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியத்திடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 'அந்தக் கடனுக்காக, ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது மில்லை என்.கே.கே.பி.ராஜாவுக்குக் கொடுக்க வேண்டும் என ஈரோடு மேயரான குமார் முருகேஷ் மிரட்டினார். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, அந்த அரவை மில்லை அபகரித்துக்கொண்டார்கள்!’ என்பதுதான் ராமசாமியின் புகார். 

தி.மு.க. ஆட்சியில் பயந்துகொண்டு இருந்த ராமசாமி, ஆட்சி மாறியதும் போலீஸில் புகார் கொடுக்க... கொலை மிரட்டல், நில அபகரிப்பு உட்படப் பல பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜாவையும், மேயர் குமார் முருகேஷையும் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்தது ஈரோடு போலீஸ்.

கொலை மிரட்டல்.. ஆக்கிரமிப்பு.. மோசடி! 

சென்னை, நொளம்பூரில் அண்ணாமலை அவென்யூ என்ற 20 ஏக்கர் நிலத்தில் 120 குடும்பங்கள் வசித்து வந்தன. கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான ரங்கநாதன், அவர்களை மிரட்டிக் காலி செய்யவைத்தார் என்பதுதான் புகார். பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடி ரங்கநாதன் மீது புகார் கொடுக்க, விடுமா போலீஸ்? கொலை மிரட்டல், ஆக்கிரமிப்பு, மோசடி செய்தல் என 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ரங்கநாதனைத் தூக்கிவிட்டது. ரங்கநாதன் மீது ஏற்கெனவே நிலுவையில் இருந்த அத்தனை புகார்களும் தூசு தட்டப்படுகின்றன. இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் ரங்கநாதன்.


 
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 'பொட்டு’ சுரேஷ்! 

மதுரை மாவட்டத்தில் உள்ள வேங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பாப்பா என்ற பெண்தான் பொட்டு சுரேஷ§க்கு முதல் கொட்டு வைத்தவர். 'எனக்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 5.14 ஏக்கர் நிலத்தை, வெறும் 40 லட்சத்துக்கு பொட்டு சுரேஷ§ம், மதுரை மாநகர தி.மு.க. செயலாளர் தளபதியும் சேர்ந்து மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க!’ என்று புகார் கொடுத்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பட்டது. 

இருவரும் எஸ்.பி. ஆபீஸுக்கு வர... ஏற்கெனவே போட்டுவைத்த திட்டப்படி இருவரையும் கைது செய்தது போலீஸ். ஆடிட்டர் அமர்நாத் என்பவரின் இடத்தை அபகரித்துக்கொண்டதாக பொட்டு மீது இன்னொரு வழக்கும் பதிவானது. உடனடியாக மதுரை கலெக்டர் சகாயம், 'பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்பதால், பொட்டு சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில்வைக்க உத்தரவிடுகிறேன்!’ என்று ஆணை பிறப்பிக்க... வெளியில் வர முடியாதபடி சுரேஷ§க்குக் கிடுக்கிப்பிடி போடப்பட்டது.

 மதுரை குலுங்க.. குலுங்க..! 

தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர் 'அட்டாக்’ பாண்டி. மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு நேர் எதிராக இருக்கும், சுமார்  2 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு எடுத்துவிட்டு, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும்கூட, அதைக் காலி செய்யாமல் ஆக்கிரமித்துக்கொண்டு மிரட்டு வதாகத்தான் 'அட்டாக்’ மீது புகார். 

இதேபோல கல்பனா என்ற பெண்ணும், வாடகைக்கு விட்ட தன்னுடைய வீட்டை 'அட்டாக்’ பாண்டி திருப்பித் தராமல் மிரட்டுவதாகப் புகார் கொடுக்கவே, நில ஆக்கிரமிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளைப் போட்டு அமுக்கிவிட்டது போலீஸ். வீடு, கடைகளை அபகரித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான மதுரை வி.கே.குருசாமி மீதும் புகார்கள் எழுந்தன. ஏற்கெனவே சில வழக்குகள் அவர் மீது இருக்கவே, குருசாமியையும் குண்டர் தடுப்புச் சட்டத்திலேயே கைது செய்துவிட்டது போலீஸ்.

திருமங்கலத்தை சேர்ந்த சிவனான்டி என்பவர், தன்னுடைய நிலத்தை எஸ்ஸார் கோபி அபகரித்துக்கொண்டதாக புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை காரை ஏற்றிக் கொலை செய்ததாக அதிரவைக்கும் வழக்கு என அடுத்தடுத்த புகார்களால் கோபியின் தலையும் உருள ஆரம்பித்தது. நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினரான கோபியை உள்ளே தள்ளிவிட்டது போலீஸ்.

 சேப்பாக்கம் டு திருப்பூர் 

உடுமலை சீனிவாசனுக்குச் சொந்தமான ஜியான் பேப்பர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மீது புகார். இந்த வழக்கில் சன் டி.வி. சக்சேனா, அய்யப்பனும் சிக்க... எட்டுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அன்பழகனை எழுப்பிக் கைது செய்து, திருப்பூருக்குப் பறந்தது, போலீஸ். கண்டிஷன் பெயிலில் வெளியில் வந்த அன்பழகன், திருப்பூ ரில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.

 நகராட்சித் தலைவர்களும் உள்ளே... 

குளுகுளுப் பிரதேசமான கொடைக்கானல் நகராட்சித் தலைவராக இருப்பவர், தி.மு.க-வைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். இவர் மீதும் பண்ணை வீடு ஆக்கிரமிப்பு புகார். கொடைக்கானலில் ஜான் ரோஷன் என்பவர், 'எங்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் பண்ணை வீட்டை இடிச்சிட்டு அபகரிச்சுட்டாங்க. திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபருடன் சேர்ந்து முகமது இப்ராஹிம்தான் இதைச் செய்தார்.’ எனப் புகார் கொடுக்க... அதிரடி ஆக்ஷன்தான்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சித் தலைவரான கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டின் பேரில் கட்டுமானப் பணிகளுக்காக  45 லட்சம் கடன் வாங்கினார். கடனைத் திருப்பி கேட்டு வங்கியில் இருந்து பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கிருஷ்ணமூர்த்தி கண்டுகொள்ளவே இல்லையாம். கடனைக் கேட்கப் போன வங்கி அதிகாரிகளையும் கிருஷ்ணமூர்த்தி மிரட்டவே, அவர்கள் போலீஸில் புகார் கொடுக்க... அப்புறம் என்ன? ஜெயில்தான்!

 கரூரைச் சேர்ந்த மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வான வாசுகியின் கணவர் முருகேசன், தம்பி ரவிக்குமார் இருவரும் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். தளவாய்பாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கிரயம் செய்துகொண்டு, பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக இவர்கள் இருவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது.

திருப்பூர் அருகே முருகம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் பொங்கலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான மணி கைது செய்யப்பட்டதுதான் லேட்டஸ்ட்.

திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரான குடமுருட்டி சேகர், காரில் கஞ்சா கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கம்பி எண்ணுகிறார். 

கடைகளைச் சேதப்படுத்தியது, பள்ளி மாணவன் விபத்தில் இறந்து போனதற்குக் காரணம் எனப் பல்வேறு வழக்குகள் கலைவாணன் மீது பாய்ந்து இருக்கிறது. முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், கொலை முயற்சி வழக்கில் சிக்கியிருக்கிறார். தி.மு.க. நகரச் செயலாளரை கொலை செய்யத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்திருக்கிறது போலீஸ்.

''இத்தோடு முடியவில்லை... இன்னும் நிறை யவே இருக்கு. பார்க்கத்தானே போறீங்க..'' என்று கண் சிமிட்டிச் சிரிக்கிறார் காவல்துறை உயரதி காரி ஒருவர். தி.மு.க.வினர் வயிற்றில் இவை புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது!

thanx - ju.vikatan

Friday, August 19, 2011

மிட்டாய் - கில்மா படமா? கொல்மா படமா? - சினிமா விமர்சனம்

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/10748_17_Mittai.jpg 

ஒரு பெண் ஒரே சமயத்தில் 2  ஆண்களை காதலிப்பதும், பின் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்வதும் தான் இந்தப்படத்தின் சர்ச்சைக்குரிய கதை என்று இந்தப்படத்தின் இயக்குநர் மீடியாக்ளில் கொளுத்திப்போட்டார். நம்ம ஆளுங்க உடனே அது ஒரு கில்மாப்படமா இருக்கும்னு ஆர்வமா வெயிட்டிங்க். அதுக்கப்புறம் என்ன நடந்துச்சோ, பெண்ணியவாதிகளின் எதிர்ப்போ தெரில இயக்குநர் கதையை மாத்திட்டார் போல. 

பட ஷூட்டிங்க் நடக்கும்போது கூட ஹீரோயின் மணக்கோலத்தில் இரு ஆண்களுடன் மண மேடையில் இருப்பது போன்ற ஸ்டில்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. ஆனால் எல்லாம் டுபாக்கூர். 

இப்போ ரிலீஸ் ஆன பின்னாடி படத்தோட கதை என்ன? 2 ஃபிரண்ட்ஸ், ஒருத்தன் ஒரு ஃபிகரை லவ்வறான், இன்னொருத்தன் படிக்காம அடிதடில சுத்திட்டு இருக்கான்,அவனை திருத்தறதுக்காக யாரோ ஒரு பொண்ணு எழுதற மாதிரி ஒரு ஃபோர்ஜரி லெட்டர் அனுப்பறான்.அதுல நீங்க நல்லா படிச்சு பெரிய ஆள் ஆகனும், அதுக்கப்புறம்தான் நாம் கல்யாணம் பண்ணிக்க முடியும்னு இருக்கு.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4LeJxgfG7qWoO2og9wbV9E1ioEP-YgGhSp-6U2x8URxaEugvfuEo4MIfVJhSsA_MqIwgR1P30tSPNwZFkl-QTUd3uz5wnKU9fdFh1gGYmiwZItntNwv8iB4rpbbAyU2uh0vyeheS9a8A/s400/mittai__5_.jpg
உடனே அவன் நல்லா படிச்சு காலேஜ் ஃபர்ஸ்ட் ஆகிடறான். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமா  லெட்டர் அனுப்புன ஃபிகர் தன் நண்பனோட காதலிதான்னு தப்பா நினைச்சுக்கறான்.ஆனா தன் நண்பன் காதலிக்கறது அவனுக்குத்தெரியாது. இதனால என்னென்னெ குழப்பம் வருதுங்கறதை முடிஞ்ச வரை பொறுமையை சோதிக்க வைக்கும் மகா மட்டமான திரைக்கதை உதவியுடன் இயக்குநர் போட்டு சொதப்பி எடுத்த படம் தான் மிட்டாய்.. 

டைட்டில் போடறப்ப  சன் நியூஸ் டி வி  ல வர்ற மாதிரி ஸ்க்ரீன்ல காட்டி டெக்னீஷியன் நேம் எல்லாம் போடும்போது ஆஹா , நல்லா புதுசா சிந்திக்கற இயக்குநர் கிடைச்சுட்டார்னு சந்தோஷப்படறோம்.. படம் போட்ட 4 வது ரீல்லயே வார்னிங்க் அலாரம் அடிக்குது. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

படத்துல வர்ற 2 ஹீரோக்களூமே ஏன் தாடியோட வர்றாங்கன்னு தெரில, அவங்க கேரக்டர்  மாதிரியே தாடியும்  கேவலமா இருக்கு. ஹீரோயின்  ஓக்கே, தேறிடும், ஆனா அவர் உதடு மகா மைனஸ். இதுல அடிக்கடி அந்த உதட்டை சில்க் ஸ்மிதா மாதிரி சுழிக்கறாரு. ஹய்யோ ஹய்யோ..

http://www.myfirstshow.com/img/2524_mittai_hori-11.gif-galleryimages-l.jpg

ரசிக்க வைத்த வசனங்கள்

1. எதுக்காக இங்க்கை என் மேல தெளிச்சே?

ஒரு பேனாவை சுட்டேன்,அதுல இங்க் இருக்கா?ன்னு செக் பண்ணுனேன்.

2.  காலேஜ் லெக்சரர் - முந்தி எல்லாம் நான் இருக்கற இடம்  தேடி வந்து டவுட்ஸ் கேட்பாங்க. இப்போ அவனுங்க இருக்கற இடம் தேடிப்போய் அட்டெண்டென்ஸ் எடுக்க வேண்டி இருக்கு..

3.  காலேஜ் லெக்சரர் - தம்பிகளா! கூச்சப்படாம  க்ளாஸ் வந்தா பாடம் எடுப்பேன் இல்ல! தயவு செஞ்சு வாங்கப்பா. 

 போர் அடிச்சா நாங்களே வருவோம் இல்ல? போங்க சார் வர்றோம்.

4.  மிஸ்! உங்க பேரு?

சொல்ல மாட்டேன், சொன்னா பூஜா அங்கே வா காபி சாப்பிடலாம், இங்கே வா பூஜா , பீஜ் போலாம்னு கூப்பிடுவீங்க. 

அப்போ. உங்க பேரு பூஜா தானே?  ( கொலம்பஸ் கண்டு பிடிச்சுட்டாரு. )

அய்யய்யோ. நானே உளறிட்டனா? ( ஆமாண்டி, பேக்குகள் எப்பவும் அப்படித்தான். )

5. படிக்காதவனைக்கூட காலேஜ்ல வெச்சுக்கலாம், ஆனா கொலைகாரனை வெச்சுக்கவே முடியாதுங்க. சாரி. பெத்த பிள்ளைக்காக நீங்க ஆர்கியூ பண்றீங்க, நான் மத்த  பையன்களுக்காக பார்க்கறேன். 

6. சாரிடா. நான் இப்போ குடிக்கறது இல்ல. 

என்னடா  ஆச்சு?

புரில, ? அண்ணன் இப்போ லவ்ல விழுந்துட்டார்,.,. 

7. சார்.. லீவ் வேணும்.. 

காலேஜ்க்கு வாரம் ஒரு தடவைதான் வர்றே. அதுல ஆஃப் டே லீவ் கேட்டா எப்படி?

8.  உன் மனசு எனக்கு பிடிச்சிருக்கு, கேட்டா தருவியோ, மாட்டியோ அதான் நானே எடுத்துக்கிட்டேன்.

9. க்ளாஸ் எப்போ முடியும்?

மணி அடிச்சா.. 


டேய் மணி அவரை அடிடா 


10.  லவ் ஸ்டார்ட் ஆகறப்ப பேரண்ட்ஸ்கிட்டசொல்லாம இருந்தா அது தப்பில்லை, ஆனா லவ் கண்டிநியூ  ஆகறப்பவும் அவன் சொல்லலைன்னா ஃபிராடுன்னு அர்த்தம்


http://www.filmics.com/gallery/d/20789-1/Mittai-Movie-Stills37.jpg


11.பொண்ணுங்க ஐ லவ் யூ சொல்ற வரை அவங்களை துரத்தி துரத்தி லவ் பண்ற பசங்க அவ OK சொன்ன பிறகு கண்டுக்காம இருக்கறதுல ஒரு உளவியல் காரணம் இருக்கு

சரி.. என்ன பண்ணனும்கறே?

டெயிலி ஃபோன் பண்ணனும், பார்க்கும்போதெல்லாம் கிஸ் பண்ணனும்..


12.  சுந்தரி. சுடிதார்ல நீ சூப்பரா இருக்கே.

நாயே.. அவ போட்டிருக்கற்து ஜீன்ஸ்ம் டாப்ஸூம்.

13.  வா மீட் பண்ணலாம்னு லவ்வர் கூப்பிட்டா போயிடாதீங்க பொண்ணுங்களே. வாமிட் பண்ண வெச்சுடுவானுங்க..  ( ஆனந்த விகடன் ஜோக் 2009 பை சி.  பி )

14.  நான் போய் என் ஆளை மீட் பண்ணப்போறேன்..

நாங்களூம் வர்றோம்டா.

நானே இப்போத்தான் அவளை முத முறையா மீட் பண்ணப்போறேன்.. உங்க முகரை எல்லாம் பார்த்தா அவ பயந்துடுவா..

15.  சரி.. விடுங்கடா. அவன் கூடப்போனாத்த்னே தப்பு..? அவனை ஃபாலோ பண்ணிட்டு போவோம்.

16. காதலுக்கு பர்சனாலிட்டி கூட அவ்வளவு முக்கியம் இல்லை, பங்க்சுவாலிட்டி தான் ரொம்ப முக்கியம்..


17. சரி.. நான் வேணா அவ கிட்டே நூல் விடவா?

நீ நூலும் விட வேணாம்.. .....................

டேய்.....!!!!!!!!!

பட்டமும் விட வேண்டாம்னு சொல்ல வந்தேன்..  ( இவ்வளவு மோசமான டபுள் மீனிங்க்  வசனம் உள்ள படம் எப்படி யூ சர்ட்டிஃபிகேட் வாங்குச்சு? )

18. தான் காதலிக்கற பையன் மற்றவங்களை விட பெஸ்ட்டா இருக்கனும்னு ஒவ்வொரு பொண்ணும் நினைச்சா எப்படி?

19.  காதலி கொடுக்கற கிஃப்ட்டை எந்த மடையன் தன் நண்பனுக்கு கொடுப்பான்?

20. புத்திசாலித்தனமாக ஆரம்பித்து முட்டாள் தனமாக முடிகின்றன காதல் திருமணங்கள்


http://www.filmics.com/gallery/d/20765-1/Mittai-Movie-Stills24.jpg

21. ஏமாற்றத்தையும், தோல்வியையும் தாங்கிக்கற சக்தி உள்ளவங்க மட்டும் காதலிங்கப்பா

22.  ஒரு ஃபிரண்டுக்கு பிரச்சனைன்னா காதலியையே கை நீட்டி அடிக்கிற நீ காதலிக்கே பிரச்சனைனா என்ன செய்வே? ( இதென்ன லாஜிக் இல்லா கேள்வி? ஃபிரண்டை அடிப்பான். )

23.  வர்லைன்னு நான் வருத்தப்பட்டாலும், வர முடியலைன்னு நீ வருத்தப்பட்டாலும் அது காதலுக்கு அழகா?

24.  ஒரு பொண்ணு அப்பா கிட்டே தனியா பேசணும்ப்பா அப்டின்னாலே அது லவ் மேட்டராத்தான் இருக்கும்மா.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து ‘மண்ணுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் அன்பு.


இவருடைய இரண்டாவது படம்தான் இந்த ‘மிட்டாய்’. இப்படத்தில் இரு சந்தோஷ், பிரபா என இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் கேரளத்து அழகியான மாயா உன்னி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

 http://3.bp.blogspot.com/_Zk6F7-r115Q/S6IwTmVU6bI/AAAAAAAACW0/Qom35gffJBk/s400/tamil-actress-maya-unni-in-saree-stills_actressinsareephotos.blogspot.com_32.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. டைட்டில் டிசைனும், ஒவ்வொரு தொழில் நுட்ப வல்லுநர்களை அறிமுகப்படுத்திய கண்ணியம் மிக்க மரியாதை சொற்களும் அழகு. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டரை கார மிட்டாய் எனவும், ஹீரோயினை ஸ்வீட் மிட்டாய் எனவும் குறிப்பிட்டது.

2. ஓப்பனிங்க் சாங்கில் ஹீரோவை ஒயிட் & பிளாக்கில் மற்ற நடன குழுவை கலரில் பின் நடன குழுவை  ஒயிட் & பிளாக்கில், ஹீரோவை கலரில் என ஒளிப்பதிவில் ரசிக்க  வைக்கும்  ஜாலம்

3. காலேஜ் பஸ்ஸில் வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே. பாட்டை அதகளப்படுத்தியது.

4.  போஸ்டர் டிசைனும் , தியேட்டரில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டில்ஸூம்

http://www.filmics.com/gallery/d/21336-1/Actress-Maya-Unni-latest-Stills10.jpg


இயக்குநரிடம்  பல கேள்விகள்

1. ஹீரோயின் ஹீரோவை வண்டில வந்து மோதறப்ப ஹீரோ கைல இருக்கற கிளிக்கூண்டு எகிறி விழற மாதிரி சீன் எடுக்கனும்.  நிந்த சீன்ல ஹீரோ தன் கைல இருந்து கிளீக்கூண்டை அவரே வீசற மாதிரி அப்பட்டமா இருக்கு..

2.  லவ் சீன்களில் ஹீரோயின் கிட்டே ஒரு வெட்கம், நளினம் ,இத்யாதிகளை பார்க்கவே முடியலை.. வந்து பக்கத்துல உக்காருன்னா பாப்பா படுத்துக்கும்போல. அட்வான்ஸ்டு கேர்ள் போல.

3.  கடலோரக்கவிதைகள் பட பாடல் ஆன அடி ஆத்தாடி இள மனசொன்னு பாட்டை எத்தனை படத்துல ரீ மிக்ஸ் பண்ணுவீங்க?

4.  முதன் முதலா காதலி மீட் பண்ண வர்றதா சொன்ன இடத்துக்கு வர்லைன்னு ஆனதும் காதலன் என்னமோ உலகமே அழிஞ்ச மாதிரி அப்டி ஒரு ஃபீலிங்க் குடுக்கறாரு,. பின்னணி இசைல  ஊருக்கே இழவு விழுந்த மாதிரி அப்டி ஒரு அநியாய சோகம்..

5. எக்ஸாம் எழுதும்போது ஹீரோ கை விரல்களை க்ளோசப் ஷாட்ல காட்றாங்க. அண்ணன் நகங்களை வெட்டாம ஃபுல்  அழுக்கோட நகங்களை மெயிண்டெயின் பண்ணாம வெச்சிருக்காரு. இதைக்கூட ஒளிப்பதிவாளர் கவனிக்க மாட்டாரா?அதை இயக்குநர் சரி பண்ணக்கூடாதா?

6. காலேஜ்க்கு வர்ற 1789 ஸ்டூடண்ட்ஸூம் சாதா சர்ட் போட்டுட்டு வர்றாங்க, ஆனா ஒவ்வொரு ஷாட்லயும் ஹீரோ மட்டும் டி சர்ட்  தான்  போடறார்,. அது ஏன்?

http://lh4.ggpht.com/_561gP6TDhvA/S23TR9uL_0I/AAAAAAAAi-U/aK5kTrd6VPg/actress.maya-unni.mitaai-movie-stills-002.jpg

7. காலேஜ் லேப்ல ஹீரோ கலாட்டா பண்றப்ப பொண்ணுங்க எல்லாம் பயந்து ஓடற மாதிரி சீன்ல எதுக்கு குறுக்கே , நெடுக்கே என்னமோ ஜப்பான்ல பூகம்பம் வந்த மாதிரி ஆளுங்க போய்ட்டும் வந்துட்டும் இருக்காங்க?

8.  ஹீரோயின் எழுதுன லெட்டரை ஹீரோ படிக்கறப்ப எதுக்கு ஊரையே தூக்கிட்டு போற மாதிரி ஹம்மிங்க்? வசனமே புரியலையே?

9. அதே மாதிரி இடைவேளை முடிஞ்ச பின்னால் விஜயகுமார் தன் மகன் பற்றி புலம்பும் காட்சில ஓவர் சத்தத்துல பின்னணி இசை. சோகம் வரலை நமக்கு , எரிச்சல்தான் வருது.

10.  தேவதையே நீ சூறாவளியா? தீபாவளியா? பாடல் வரிகள் ஏற்கனவே விஜய்யின்  தீபாவளி  தீபாவளி  நீ தாண்டி சூறாவளி சூறாவளி நான் தாண்டி பாடலில் வந்தவை தான்..

11. சின்னத்தம்பி குஷ்பூ மாதிரி ஹீரோ பாட்டில்களை அறை முழுது உடைத்துப்போட்டு நடந்து காலில் ரத்தக்களறி ஆவதெல்லாம் ஓவர்.. அடுத்த நிமிஷமே காலில் ரெண்டே இன்ச்சுக்கு பிளாஸ்திரி.. ஹய்யோ ஹய்யோ..

12.  காதல் படம் எடுக்கற எல்லா இயக்குநர்களும் கத்துக்க வேண்டிய முதல் பாடம் காதலை நண்பனுக்கு தாரை வார்த்து தர்ற மாதிரி சீன் வெச்சா நம்பற மாதிரி காட்டுங்க. சொதப்பாதீங்க..

13. க்ளைமாக்ஸ் செம சொதப்பல்.. ஹீரோயின் 2 பேருக்கும் இல்லை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதுல அக்கா பக்கம் பக்கமா டயலாக் வேற பேசுது..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1xmHodrwjtZZpCiIyT00kxTOx2YC9q4kcog3yvC4-OxYML1594IHofGndwebyCgw7J-yISmpA5kamx34P778lOY2ehmfwfbf6Ji6tzTA2OtzhfTkEBfyidqm3xQaIP1v5YulMWilx70CH/s1600/malayalam%25252Bactress%25252BVishnupriya%25252BWallpapers.jpg
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் தான் தாங்கும்..
ஈரோடு சங்கீதா வில் படம் பார்த்தேன்.


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி  கமெண்ட் - அய்யய்யோ...!!!!!!!!!!!!!!

கலைஞருக்கு ஜெ பகிரங்க அழைப்பு ! தி முக திகைப்பு!!!!!!!!!!!

1.பிரதமருக்கு தமிழே தெரியாது, ஆனா திருக்குறள் புக்கை கைல வெச்சிருக்காரே?

அவர் கிட்டே அதிகாரமே இல்லைன்னு எல்லாரும் கிண்டல் பண்றாங்களாம் #133

-------------------------------

2. தலைவரே!நான்,நீங்க,உங்க சம்சாரம் 3 பேருதான் கட்சில இருக்கோம், எதுக்கு 3வது அணின்னு பில்டப்? மூவர் அணின்னு சொன்னா போதாதா?

--------------------------

3.  மிஸ் ஜிகினா ஸ்ரீ,ஆகஸ்ட் 15 வெளில எங்கேயும் வர மாட்டீங்களாமே? ஏன்?

சுதந்திர தினத்தை வீட்டுக்குள்ளேயே ”சுதந்திரமா” கொண்டாட முடிவெடுத்துட்டேன்

-------------------------------


4.  காந்தி கண்ட கனவை  த்ரிஷா,ஸ்ரேயா தான் நிறைவேத்துறாங்களா? எப்படி?

பார்ட்டி முடிச்சுட்டு மிட்நைட்ல தைரியமா மவுண்ட்ரோட்ல தனியா வர்றாங்களே?

---------------------------

5. விஜய்காந்த் ஏன் ஜெவை பற்றி விமர்சிக்கறதே இல்லை?

அப்டி செஞ்சா அவரோட டப்பா படமான அரசாங்கம் பற்றித்தான் சொல்றதா யாராவது நினச்சுட்டா?

--------------------------



6.பகுத்தறிவுப்பகலவர் தலைவர் கலைஞர் தில் இருந்தால் கேரளா சென்று பத்மநாபா கோயில் 6 வது அறையை திறக்கவும் - ஜெ பகிரங்க அழைப்பு @ இமேஜினேஷன்


---------------------------

7. யார் வேண்டுமானாலும் என் மீது அன்பு செலுத்தி விட முடியும், ஆனால் உன் போல் அன்பை அப்படியே ஊற்றி விட முடியாது

---------------------


8. அன்பு தான் இந்த உலகை ஆட்சி செய்கிறது, நீ என் உலகம். நான் உன் அன்பு

--------------------

9. மேரேஜ்க்குப்பிறகு மாப்ளை ரொம்ப மாறிட்டரா?


முதல்ல எல்லாம்  மப்புல நடு ரோட்ல விழுந்து கிடப்பாரு, இப்போ பொறுப்பா பிளாட்ஃபார்ம்ல கிடக்காரே?

------------------------

10. தலைவரே!என்கொயரி கமிஷன் ஆஃபீசர் வந்திருக்காங்க.

என்னய்யா அநியாயம் இது? என்கொயரியும் பண்ணிட்டு என் கிட்டேயே கமிஷன்ம் வாங்கிக்குவாங்களா?

--------------------



11. சினிமாவை விட விளம்பரங்கள்ல தான் ரசிகர்கள் டெயிலி என் முகத்தை ரசிக்கறாங்க. -அனுஷ்கா # முகத்தையா? தேகத்தையா? டவுட்டு

------------------

12. தலைவருக்கு தமிழ்க்குடிமகன்னு ஏன் பட்டப்பேரு?

இனிமே சரக்கு அடிக்க மாட்டாராம், கள் மட்டும் தானாம்.


---------------------

13.  உங்க படத்துக்கு ஏன் யூ அப்டின்னு டைட்டில் வெச்சிருக்கீங்க?  யூத்னு அர்த்தமா?


ஏ படங்களுக்கு வரி விலக்கு இல்லையாம், அதான்

-----------------------

14. சாந்திங்கற ஃபிகரை கல்யாணம் பண்ணினவங்களுக்கு மட்டும் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்னு நினைக்கறவன் தான் உலகமகா அப்பாவி # மஞ்சமாக்கான் ஸ்டேட்மெண்ட்

-------------------------

15. உன் காதலி ஃபோன் நெம்பருக்கு எப்போ ட்ரை பண்ணாலும் கிடைக்கறதே இல்லை, பிஸின்னே வருது..

ஹூம், அவ எனக்கே கிடைக்கறது இல்லை..

-----------------------


hansika motwani indian
Hansika-Motwani-New-photos-from-latest-movie-0gfc01.jpg (700×861)

16. நில மோசடித்திட்டத்துல பாரதியார் பேரும் இருக்கே? தலைவரே?

காணி நிலம் வேணும்னு பாடுனாரே?

-------------------------

17.உனக்கு நான் அறிமுகம் ஆன தினத்திலிருந்து ஒரு நாள் கூட  நீ என்னை நினைக்காமல் இருந்ததில்லை என்றே நான் கற்பனை செய்து கொள்கிறேன்

-------------------


18. டியர், டெயிலி ஒரு ரிங்க்  கிஃப்டா தருவேன்னு லவ் பண்றப்ப சொன்னீங்களே?

ஆமா, நான் சர்க்கஸ்ல ரிங்க் மாஸ்டர், அந்த ரிங்கை சொன்னேன்.

-----------------------


19. என்னை மறந்து விடு என்று நீ சொன்ன ஆணையை புறக்கணிக்கிறேன், உன் மனம் மாறும் என்றே கணிக்கிறேன்

---------------------



20. உன்னை விட உயர்ந்தது உலகில் ஏதும் இல்லை என்றே நினைத்திருந்தேன், உன் கண்களில் கண்ணீரைக்காணும் வரை

---------------------







Thursday, August 18, 2011

கனிமொழி சவால் ‍‍ நான் ஸ்டேட்மெண்ட் கொடுத்தா எல்லாருக்கும் செட்டில்மெண்ட் தான்

நான் வாய் திறந்தால் யாராலும் தாங்க முடியாது!

கம்பிகளுக்குள் கர்ஜிக்கும் கனிமொழி


100-வது நாள் நெருங்குகிறது. 'குற்றச் சதிக்கு உடந்தை’ எனச் சொல்லி, கடந்த மே மாதம் 21-ம் தேதி ஸ்பெக்ட்ரம் வழக்கில் வளைக்கப்பட்ட கனிமொழிக்கு இன்று வரை பெயில் கிடைக்கவில்லை.

சி பி  - அப்பா கிட்டே இருந்து உயிலும் வரலை, கோர்ட்டிலிருந்து பெயிலும் தரலை.

தந்தையின் தவிப்பு, தாயின் போராட்டம், கணவரின் கையறு நிலை எனக் கம்பிகளுக்குப் பின்னால்  கனிமொழியின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த பாசப் போராட்டம் ஒருபுறம் என்றால், கட்சியில் அவருக்கான இடம் என்ன என்கிற போராட்டத்துக்கும் குறைவு இல்லை.


 சி.பி‍‍‍ ‍‍: கணவர்தான் கைவிட்டுட்டார்னா...., 


பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகளைக்கூட தன்னைச் சுற்றி அனுமதிக்காத கனிமொழி, 15-க்கு 10 என்கிற சிறு அறைக்குள் இத்தனை நாட்களைக் கடந்ததே பெரிய ஆச்சர்யம். கனிமொழி அடைக்கப்பட்டு உள்ள 8-ம் எண் அறையில், ஏ.சி. வசதி இல்லை. மூன்று பக்கமும் சுவர், முகப்பில் கம்பி வலை என்பதால் எப்போதும் அந்த அறை புழுக்கமாக இருக்கும். ஒற்றைக் காற்றாடி... அதில் இருந்து காற்று வருகிறதோ இல்லையோ... கடுமையான சத்தம் வருகிறதாம். புத்தகம் படிப்பதற்கு அந்தச் சத்தம் மிகுந்த இடைஞ்சலாக இருப்பதால், காற்றாடியைப் பெரும்பாலான நேரங்களில் கனிமொழி பயன்படுத்துவது இல்லை.

 சி.பி‍: நாட்டுக்காக போராடுன தியாகி சிறையில் ரொம்ப சிரமப்படுறாங்க! உப்பை தின்னவன் தண்ணிக்குடிக்கனும், தப்பை செஞ்சவன் களி சாப்பிடனும்.







இரவு 11 மணிக்குத் தூங்கி, காலை 5.30 மணிக்கு எழுவது வழக்கம். சில நாட்களில் மட்டும் இரவு 1 மணி வரை வாசிப்பு, எழுத்து எனக் கழிகிறதாம். மிக முக்கிய ஆட்களுக்கு இதர கைதிகளால் பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாக்க போலீஸார் நியமிக்கப்படுவது திகாரின் வழக்கம். கனிமொழிக்கு 24 மணி நேரமும் இந்த கண்காணிப்புத் தொடர்கிறது.

 சி.பி: கனிமொழிக்கு இருக்குற கண்கானிப்பு அவங்க பாதுப்புக்காக இருக்குற மாதிரி தெரியலை. ஜெயிலுக்குள்ள அவங்களுக்கு "வேண்டியப்பட்டவங்க" யாரையும் போய் பார்த்துடக் கூடாதுனுதான் போல இருக்கு.


பக்கத்து அறைகளில் இருக்கும் பெண் கைதிகளிடம் பேச, கனிமொழிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில் சிக்கிய உளவு அதிகாரி மாதுரி குப்தா, கனிமொழிக்குப் பக்கத்து அறையில்தான் அடைக்கப்பட்டு இருக்கிறார். அதற்குப் பக்கத்து அறையில் டெல்லி கவுன்சிலரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாரதா என்ற பெண்.


சி.பி ‍ - அடடா!! கொள்ளைக்கார குற்றவாளியை சுற்றி கொலைகாரக் குற்றவாளிகள்!!!! 

திகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கைதிகள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கனிமொழியுடன் பேச அவ்வளவு ஆர்வம். கனிமொழியிடம் கோரிக்கை மனு கொடுத்து கண்ணைக் கசக்கி இருக்கிறார் ஒரு பெண். இதனாலேயே, அடிக்கடி இந்தப் பெண் கைதிகளோடு உரையாடுவதும், அவர்கள் மேற்கொள்ளும் சுய தொழில் பயிற்சிகளைச் செய்து  பார்ப்பதும் கனிமொழியின் பொழுதுபோக்கு!


சி.பி : அப்பாவுக்கும் ,பிள்ளைக்கும் இருக்கற தமிழ் ஆர்வம் புல்லரிக்க வைக்குதே?

ஜெயிலுக்கு வந்த புதிதில், மூன்று வேளையுமே வெளியே இருந்து வந்த உணவுகளையே சாப்பிட்ட கனிமொழி, இப்போது வெளி உணவுகளைப் பெரும்பா லும் தவிர்த்துவிடுகிறார். இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடும் வழக்கம்கொண்டவர் கனிமொழி. ஆனால், மாலை 6 மணிக்கே இரவு உணவை ஜெயிலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனாலேயே பல நாட்கள் இரவு உணவை கட் செய்துவிடுகிறார் கனிமொழி. ஆ.ராசாவின் மனைவி மூலமாக ஸ்பெஷல் சாப்பாடு எப்போதாவது வருகிறது. துணி மணிகள் சரத்தின் சகோதரி மூலமாக கனிக்குக் கிடைக்கிறது.


சி.பி ‍ : ஸ்பெஷல் மீல்ஸ் ஃப்ரம் ஸ்பெசல் பர்சன்

டெல்லியில் இப்போதுதான் மழை சீஸன் தொடங்குகிறது. அதனால், அந்த அறைக்குள் அநியாயப் புழுக்கம் நிலவுகிறதாம். ஆனால், அதிகாலையில் கடுமையாகக் குளிர் அடிக்கிறதாம். இந்த சூழல் மாற்றமும் கொசுக் கடியும் கனிமொழியைப் படுத்தி எடுப்பதாகச் சொல்கிறார்கள்.


சி.பி ‍: எத்தனையோ இலங்கைத்தமிழர்கள் வாழ்வு புழுக்கத்தில் இருக்க காரணமாக இருந்த குடும்பத்தில் இருந்தவர் இப்போது செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கிறார், இதுல வருத்தப்பட என்ன இருக்கு?  


கோர்ட் விசாரணை நடக்கும் நாட்களில்தான் கனிமொழியின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிகிறதாம். திகாரில் இருந்து பாட்டியாலா வரும் வழியில் டிராஃபிக் நெருக்கடி அதிகம் இருப்பதால், குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீஸார்தான் கனிமொழியை கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களோடு மிகுந்த உற்சாகமாகப் பேசிச் சிரித்தபடி கோர்ட்டுக்கு வரும் கனிமொழி, அங்கே காத்திருக்கும் உறவினர்களைப் பார்த்ததும் உற்சாகமாகிறார். பல நாட்கள் டெல்லியிலேயேதங்கி இருந்த கனிமொழியின் தாய் ராஜாத்தி அம்மாள், உடல் நலக் கோளாறால் சென்னைக்குத் திரும்பிவிட்டார். தி.மு.க- வின் மகளிர் அணி நிர்வாகிகளும் எம்.பி-க் களும்தான் அடிக்கடி கனிமொழியைச் சந்தித்து ஆறுதல் சொல்கிறார்கள். பாட்டியாலா கோர்ட் அறைகளில் முழுக்க ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருப்பதால், விசாரணை இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா என ஏக்கமோடு பார்ப்பார்களாம் கனி உள்ளிட்ட ஸ்பெக்ட்ரம் புள்ளிகள்.

 சி.பி ‍: ஸ்பெக்ட்ரம் புள்ளிகளா? கரும் புள்ளிகளா?

ஆரம்பத்தில் கருணாநிதி தொடங்கி சகோதரி செல்வி வரையிலான அத்தனை சொந்தங்களும் டெல்லிக்கு வந்து கனிமொழியைச் சந்தித்தார்கள்; கட்டித் தழுவிக் கதறினார்கள். ஆனால், இப்போது மனைவி காந்தியுடன் டெல்லியிலேயே இருக்கும் அழகிரிகூட, கனிமொழியைக் காணச் செல்லவில்லை.


சி.பி ‍: யாரெல்லாம் கனிமொழியை சந்திக்கறாங்களோ, அவங்களை எல்லாம் நோட் பண்ணி வை, அவங்களையும் உள்ளெ தள்ளிடலாம்னு மேலிடத்துல இருந்து உத்தரவு வந்ததோ என்னவோ? 


'கட்சி நினைத்திருந்தால், நிச்சயம் என்னைக் காப்பாற்றி இருக்கலாம்’ என ஆரம்பத்தில் ஆதங்கப்பட்ட கனிமொழி, இப்போது தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அது குறித்துப் பேசுவதே இல்லை.


 சி.பி ‍: கட்சியையே காப்பாற்ற முடியாம கிடக்கு, இதுல கட்சி எப்படிம்மா உங்களை காப்பாற்றும்?நீச்சல் தெரியாதவன் முழுகிட்டு இருக்கறப்ப  அவன் அவனையே காப்பாத்த முடியாது, அவன் மற்றவர்களை காப்பாற்றுவான்னு எப்படி எதிர்பார்க்க முடியும்?


மாறாக, தமிழ்நாட்டு நிலவரங்களை ஆர்வமாகக் கேட்கிறார். தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி இழுபறி, அதிரடிக் கைதுகள்பற்றி எல்லாம் பேசி, 'அம்மையார் ஆட்சியில் இதெல்லாம் நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்’ எனச் சிரிக்கிறார்.

சி.பி ‍: தமிழ்நாட்டு நிலவரங்களை ஆர்வமாகக் கேட்கிறாரா? அதாவது நாட்டு மக்கள் எப்படி இருக்காங்கன்னு எல்லாம் கேட்டிருக்க மாட்டார்,, கோவை பொதுக்கொழுவுல என்ன முடிவாச்சு? ஸ்டாலின் , அழகிரி 2 பேர்ல யார் இப்போ லீடிங்க.. அப்டி விசாரிச்சிருப்பாரு.. நாம எந்தக்காலத்துல மக்களை நினைச்சு கவலைப்பட்டோம்?




''பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தபோதுதான் கனிமொழியைப் பார்த்தேன். ஆதங்கம், வேதனை, குற்றச்சாட்டு என அவரிடம் இருந்து சிறு வார்த்தைகூடப் புலம்பலாக வெளிப்படவில்லை. சில விஷயங்கள் குறித்துப் பேசியபோது, சத்தம்போட்டுச் சிரித்தார். 2ஜி விவகாரம் குறித்துக் கேட்டபோது, 'கலைஞர் டி.வி-க்காக 200 கோடி வாங்கப்பட்டதுபற்றி எனக்கு அறவே தெரியாது. அதுபற்றி எல்லாம் நான் சொன்னால், இப்போ யார் நம்புவாங்க? ஸ்பெக்ட்ரம்பற்றி நான் வாய் திறந்தால் நிச்சயம் யாராலும் தாங்க முடியாது.

 சி.பி ‍: ஆமா, ஏற்கனவே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி தொகையை கேட்டே பலரால் தாங்க முடியலை, இதுல இவர் வேற புதுசா எதையாவது உளறி பிரச்சனையை கொண்டாந்திட‌ப்போறாரு.. கண்டு பிடிச்சது கடுகளவு, கமுக்கமா அமுக்குனது கடல் அளவுன்னு.. சொல்லிடப்போறாரு..

ஆனால், அது மீடியாக்களுக்குத்தான் தீனியாக இருக்குமே தவிர, கட்சிக்கு நல்லதா இருக்காது’னு சொன்னார். இந்த அளவுக்குப் படுபக்குவமான பேச்சை கனியிடம் இருந்து நான் இது வரைக்கும் கேட்டது இல்லை!'' என்கிறார் சமீபத்தில் கனியைச் சந்தித்துத் திரும்பிய தமிழக அரசியல் புள்ளி.



சி.பி ‍: அடிங்கொய்யால.. இதுதான் பக்குவமான பேச்சா?பச்சோந்தித்தனமான பேச்சு..  


''ஸ்பெக்ட்ரம் வழக்கில் பலரை நோக்கியும் கை காட்டச் சொல்லி தி.மு.க-வைச் சேர்ந்த சிலரே கனிமொழியைத் தூண்டினார்கள். இது தெரிந்துதான் திடீரென இரண்டாவது முறையாக டெல்லி வந்து கனிமொழியைச் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். 'கட்சிக்கு எதிராக நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன்’ என ஸ்டாலினிடம் உறுதி சொன்னார் கனிமொழி.



சி.பி ‍: ச்சே.. அண்ணன் , தங்கை 2 பேரும் கூடி காட்டிக்கொடுக்கறதைப்பற்றித்தான் பேசுனாங்களா? அது சரி.. 

அந்த வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் சாதாரணமானவை அல்ல. ராஜ்யசபா எம்.பி. என்கிற பதவியைத் தவிர, கட்சியில் கனிமொழிக்கு வேறு பதவி இல்லை. கனியின் இடம் இது தான் எனக் கட்சியில் சிறப்பு அங்கீகாரத்தை அவருக்கு ஸ்டாலினே வாங்கிக் கொடுப்பார் பாருங்கள். கனியோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்த செல்வி, இப்போது அடிக்கடி தங்கையின் நிலையை நினைத்து அடிக்கடி தழுதழுக்கிறார். இந்தத் தலைகீழ் மாற்றங் களைவைத்தே மகளுக்கான மகுடத்தை கருணாநிதி கச்சிதமாகச் சூட்டுவார்!'' என்கிறார்கள் தி.மு.க-வின் டெல்லி புள்ளிகள்.



சி.பி ‍: பெரிய பதவி இல்லாதப்பவே இவ்வளவு அமுக்குனவரு, பதவி கொடுத்துட்டா எவ்வள‌வு அமுக்குவாரு? 


சிறப்பு நீதிமன்றத்துக்குச் சமீபத்தில் அழைத்து வரப்பட்டார் கனிமொழி. அன்றைய தினம் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய, நீதிபதியோடு அதிகாரபூர்வமற்ற முறையில் தனியாக மனம் திறந்து பேசுகிற சந்தர்ப்பம் கனிமொழிக்குக் கிடைத்தது. ''கலைஞர் டி.வி-க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அங்கே என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுபற்றி எல்லாம் எனக்குத் தெரியாது!'' எனச் சொன்னார் கனிமொழி. நீதிபதியின் நெஞ்சில் அந்த வார்த்தைகள் எத்தகைய விளைவை உண்டாக்கினவோ?!

 சி.பி ‍: நல்ல வேளை , கலைஞர் டி விக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னாரு, அந்த ஸ்டேட்மெண்ட்ல டி வி மட்டும் கட் ஆகி இருந்திருந்தா..!!!!!!!?????

கலைஞர் டி.வி. முடக்கம், இன்னும் சில கைதுகள் என்றெல்லாம் அரங்கேறிய பிறகே, கனிமொழி வெளியே வருவது சாத்தியம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.



கனிமொழி கைது செய்யப்படப்போவதாக மீடியாக்களில் பரபரப்பு கிளம்பிய வேளையில், அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சொன்ன விளக்கம்தான் இப்போதும் நினைவுக்கு வருகிறது...


''நடக்காது என நினைத்த எல்லாமும் நடக்கிறது. நான் கைதாகப்போவதாகக் கிளம்பும் பரபரப்பும் அப்படியே அமையட்டும். ஆரம்பத்தில் அரசியல் ஆர்வமே இல்லாமல் இருந்த என்னைச் சுற்றி இன்றைக்கு இவ்வளவு பெரிய அரசியல் நடக்கிறது. இந்த விசித்திரத்தை நினைத்துச் சிரிப்பதா... அழுவதா?''



சி.பி ‍: நீங்க அழுங்க, மக்கள் உங்களைப்பார்த்து சிரிக்கட்டும்..  


தன் - vikatan

கைப்புள்ளயின் காதல்

Just for Smile.....
3352909583_17cb8e6888_o.jpg


1. டியர், முந்நூற்று நாப்பத்தி ஒண்ணுன்னு ஏன் என்னை கூப்பிடறே?

டேய் லூசு, நீதானே என்கிட்டே 143 சொல்லி என்னை திருப்பி சொல்லச்சொன்னே?

---------------------------

2. மேரேஜ்க்கு முன் குண்டாஇருந்த நீ ஒல்லி ஆகிட்டே, ஒல்லியா இருந்த உன் சம்சாரம் குண்டாகிட்டா!ஏன்?

சக்தி ட்ரான்ஸ்ஃபர் ஆகுதுன்னு நினைக்கிறேன்.


------------------------------

3. சதீஷ்,என்னைத்தவிர வேற யாரையும் நீ தொட்டதில்லையே?


ச்சே ! ச்சே! மீறித்தொட்டாக்கூட மனசுக்குள்ளே உன்னை நினச்சுக்கறேன்,ஓக்கே?

------------------------

 Most Beautiful amazing Places arround World





4.  மாப்ளே! ஆடி மாசம் முடியற வரை என் பொண்ணை பார்க்க வராதீங்க!

மாமா!மொத பொண்ணுக்குத்தானே தாலி கட்டி இருக்கேன், பாக்கி 3 பொண்ணுங்களை பார்க்க வரலாம்தானே?

----------------------------

5. என் இடுப்புல ஒரு அதிர்ஷ்ட மச்சம் இருக்கறதை கரெக்ட்டா ஜோசியர் சொல்லிட்டார்.

அடியே, முதல்ல நீ சேலை லோ ஹிப்ல கட்டறதை நிறுத்திட்டு சுடிதார் போடு.


--------------------

6.  மாசாமாசம் உங்க சம்சாரம் கிட்டே சம்பளம் ரூ 5000 வாங்கிக்கறீங்களே,எதுக்கு?

அவ சேலை துணிமணிகளை துவைச்சுப்போட்டு அவளை ஆஃபீஸ்க்கு டிராப் பண்றேனே?

-------------------------------





7. அத்தான், நான் கண்ணகி பரம்பரை!


ரொம்ப நல்லதாப்போச்சு, மாதவியை ஏத்துக்கற மனப்பக்குவம் உனக்கு இருக்கும். ஐ லைக் இட்

--------------------------------

8.  ஆண்கள் தவறு செய்யக்காரணம் வெரைட்டியை முன்னிட்டு, பெண்கள் தவறு செய்யாததற்குக்காரணம்  சேஃப்டியை உள்ளிட்டு


----------------------------

9. என் கழுத்துல தாலி எப்போகட்டுவீங்க?

நீ எப்போ கடைக்குப்போய் தாலியை வாங்கிட்டு வந்தாலும் அப்பவே கட்டிடறேன் டியர் # பவுன் விலை ரூ 20000

-----------------------------

10. டியர், லவ் பண்றப்ப நான் செம அழகுன்னு கொஞ்சுவீங்களே?


அது போன மாசம்.. ... # கைப்புள்ளயின் காதல்


Wednesday, August 17, 2011

சாந்தி முகூர்த்தம் VS அழையா விருந்தாளி

1.பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'வெடி' # இந்தப்படம் டைரக்டர், ஹீரோ 2 பேர் மார்க்கெட்டுக்கும் வெடி வைக்க வாழ்த்துக்கள்!!!

----------------------

2. கணக்கை வெறுக்கும் ஸ்டூடண்ட்டின் கடிதம் -

டியர் மேத்ஸ், உன் பிராப்ளத்தை நீயே சால்வ் பண்ணிக்கோ,

அடுத்தவங்களை சார்ந்திருக்காதே!

----------------

3. காயப்படாத இதயம் என்று எதுவும் இல்லை,

எல்லா இதயங்களிலும்  சில காயங்கள் உண்டு

--------------------------

4. தோள் கொடுக்க ஒரு தோழன்,

தோளில் சாய ஒரு தோழி

இவை இரண்டும் வேண்டும் மண்ணில் வாழும் உயிர்க்கு

---------------------------

5. உள்ளத்தில் இருக்கும் சோகத்தை மறைக்க உதடுகள் மூலம் மனிதன் நடத்தும் நாடகமே புன்னகை

--------------------------




6. உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் என நாம் நினைச்சுட்டு இருக்கோம்,ஆனா எது நடந்தாலும் கை கட்டிட்டு வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான் காரணம்

----------------


7. எல்லா விரல்களும் ஒரே நீளம் அல்ல, ஆனா மடங்கி இருக்கும்போது எல்லாமே ஒரே நீளம். சூழ்நிலைகளைப்பொறுத்து வளைந்து கொடுத்தால் வாழ்வும் சுலபம்

-------------------------

8. ஆண்களுக்கு ஒரு அழகிய அறிவிப்பு - கண்ணுல மண்ணு பட்டாலும், பொண்ணு பட்டாலும் கண்ணில் கண்ணீர் வருவது நிச்சயம் # SMS

--------------------------

9. சாமான்யன் விடுமுறையை ஓய்வெடுத்து கொண்டாடுகிறான், படைப்பாளி படைப்புகள் படைத்துக்கொண்டே கொண்டாடுகிறான்

-----------------------


 

10. பணக்காரன் ஆக 2 வழிகள்

1. நீ என்ன வேணும்னு நினைக்கறியோ எல்லாவற்றையும் அடைவது

2. உனக்கு என்ன கிடைச்சுதோ அதை வெச்சு திருப்தி அடைவது

-------------------

11. ஒரு ஆணின் கனவு, ஒரு பெண்ணின் புன்னகை இவை இரண்டும் உலகில் எதையும் சாதிக்கும் சக்தி படைத்தது

----------------------


12. இனியாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்'- விஜயகாந்த்.# எப்படிங்க உருவாகும்? உங்க பையன் வேற ஹீரோவா நடிக்கறாரே?

------------------------

13. தலைவரே! ஆகஸ்ட் 15 ஏன் கொண்டாடலை?

கலைஞர் - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதே தம்பி ! என் குடும்பமே  உள்ளே!

-------------------------

14. வாரிசுஅரசியலின் தவிர்க்கமுடியாத உதாரணம் கலைஞர்- ஸ்டாலின்,அழகிரி ,வாரிசு சினிமாவின்  தவிக்க வைக்கும் உதாரணம் விஜய்காந்த்,சண்முகபாண்டியன்

------------------

15. சாந்தி முகூர்த்தம் நைட் 9 டூ 10 நேரம் நல்லாருக்கு...


ஜோசியரே! வெறும் ஒரு மணி நேரம் மட்டும் தானா?

-----------------------------




16.  பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்கனும், ஃபோட்டோல தலைல இருந்து கால் செருப்பு வரை தெரியனும்.


அப்போ உன் தலைல செருப்பை வெச்சுக்கிட்டு போஸ் குடு


-------------------------


17. லவ்மேரேஜ் செஞ்சா உங்களுக்கு கிடைப்பது உங்களோட லவ்வர்,அரேஞ்ச்டு மேரேஜ் செஞ்சா உங்களுக்குகிடைப்பது அடுத்தவனோட லவ்வர்,  இது தான் லைஃப் # 2021

--------------------------

18. உலகிலேயே ஆணுக்கு கஷ்டமான விஷயம் தன் முத காதலை காதலியிடம் முதன் முதலில் வெளிப்படுத்தும் தருணம்தான், இஷ்டமான விஷயமும் அதுதான்


--------------------------

19. ஆணை விட பெண் தான் செம சுறு சுறுப்பு, மனசை மாற்றிக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை

-------------------


20. தன்னுடையது, காதலியினுடையது, காதலியின் தோழியினுடையது  ( தூதுக்காக )என 3 செல் பில் கட்ட வேண்டிய கடமை ஒரு காதலனுக்கு இருப்பது கொடுமை

---------------------------------




21. ஆண்களிடம் கலகலப்பாக பேசும் பெண்கள் எண்ணிக்கையில் குறைவு,ஆனால் பெண்களிடம் கலகலப்பாக பேசும் ஆண்கள் எண்ணிக்கை அதிகம் # நீதி  - ஆண் ஜாலி டைப்

-----------------------
22. பெண்ணைவிட ஆண் 2 விஷயங்களில் பின் தங்கி இருக்கிறான்

1. நாசூக்காக சைட் அடிப்பது

2. யாராவது சைட் அடிச்சாக்கூட அது தெரியாதமாதிரியே இருப்பது

-----------------------

23. ஆண்களின் அகராதியில் 2 வகைப்பெண்கள் தான்

1.அவனிடம் நல்லா பேசுனா அது நல்ல ஃபிகர் 

2. கண்டுக்காம இருந்தா ராங்கிக்காரி

--------------------

24. காதலை பெண் முதலில் வெளிப்படுத்த தயங்க காரணம் ஆணின் சந்தேக புத்திதான்

-----------------

25.  சீக்கிரமாக காதலில் ஆண்கள் விழுந்து விடுகிறார்கள்,காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர நீண்ட காலம்  எடுத்துக்கொள்கிறார்கள்,பெண்கள் உல்டா

-------------------------




அழகிரிக்கு ஆப்பு வைக்க அம்மாவோட அம்மா வந்தாலும் முடியாது - மிஸஸ் அழகிரி பகிரங்க சவால் - ஜூ வி பேட்டி - காமெடி கும்மி

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/a/ganthi%20azhakiri.jpg 
ஜெ.வுடன் சமாதானமா?

காந்தி அழகிரி சீறல் பேட்டி

'மதுரை மீட்பு’ நடவடிக்கைகளில் ஜெயலலிதாவின் கிடுக்கிப் பிடி நாளுக்கு நாள் வலுக்கிறது. 

சி.பி - மதுரை மீட்பா? மதுரைக்கு ஆப்பா?

மத்திய அமைச்சர் அழகிரியைச் சுற்றி நின்றவர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட... 

சி.பி - நின்றவர்கள் மட்டும் தானா? உட்கார்ந்தவங்க, படுத்தவங்க எல்லாரும் தான்...

அடுத்த கைது, காந்தி அழகிரிதான் என காச்மூச் கிளம்பி விட்டது. 


சி.பி - அப்படி கிளப்பி விட்டதே விகடன் குரூப்தான்னு நினைக்கறேன்.. ஹா ஹா 

இதற்கிடையில் கைது நடவடிக்கைக்குப் பயந்து அழகிரியின் குடும்பத்தார் வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டதாகவும் பரபரப்பு. 'பரபர செய்திச் சுரங்கமாக’ அழகிரியின் குடும்பம் மாறிவிட்ட நிலையில், ஜூ.வி-க்கு காந்தி அழகிரி அளித்த பிரத்யேகப் பேட்டி... 


சி. பி - ஆமா, இந்த இக்கட்டான சூழல்ல இவங்க கிட்டே பேட்டி எடுக்கறீங்களே? இதனால உங்களுக்கு ஆபத்து வருமா? இதை கும்மி அடிக்கறதால எனக்கும் ஆபத்து வருமா? அய்யய்யோ!!!!!!  

http://kovai24x7.com/wp-content/uploads/2011/05/p105.jpg


1. ''கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியை தி.மு.க. சந்திக்கும் என எதிர்பார்த்​​தீர்களா?''

சி.பி - அண்ணன் அழகிரி தேர்தலுக்குப்பின் அதிமுகவே இருக்காதுன்னாரு, அம்மா தேர்தலுக்குப்பின் திமுக ஆளுங்க யாரும் வெளில இருக்கக்கூடாதுன்னு நினைக்கறாங்க..  


''இல்லை!
ஆனாலும், மக்களின் தீர்ப்பைத் தலை வணங்கி ஏற்கும் பக்குவமும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. அதனால், தோற்று விட்டதை நினைத்து வருத்தப்படும் நிலையில் நாங்கள் இல்லை!''


சி.பி - அப்புறம் ஏம்மா உங்க ஆத்துக்காரர் புலம்பிட்டே இருக்கார்? 

2. ''ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது வழக்கமானதுதான். ஆனால், 'மதுரை மீட்பு’ என அறிவித்து அதிரடி கிளப்புகிற அளவுக்கு மதுரையை நோக்கி ஜெ. ஆவேசம் காட்டுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''


சி.பி - ஆபரேஷன் மதுரைன்னு சொல்லி அம்மா குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்திட்டாங்க..


''தேர்தலுக்கு முன்னரே மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் எனது கணவர் பெயரையும், அவருடைய நண்பர்கள் பெயர்களையும் பட்டியல் போட்டு பழிக்குப் பழி வாங்குவேன் என ஆவேசமாக முழங்கினார் அந்த அம்மையார். அதைத்தான் இப்போது செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

சி.பி - சொல்வதைச்செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்னு உங்க மாமனார் சொன்னதை அம்மா ஃபாலோ பண்ணீட்டாங்க போல.. 

கட்சிக்கும் என் கணவருக்கும் நெருக்கமான ஆட்களைச் சிறையில் தள்ளுவதன் மூலமாக, தான்  நினைத்ததைச் சாதித்துவிட முடியும் என்பது அவருடைய நம்பிக்கை. கைதுகளை அரங்கேற்றுவதும், குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுவதும் மதுரையின் வழக்கமான காட்சிகளாகத் தொடர்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

சி.பி - இது முதல்லயே தெரிஞ்சிருந்தா அண்ணன் ஜிம்முக்குப்போய் டயட்ல இருந்து ஒல்லி ஆகி இருப்பார். குண்டர் சட்டம் ஒண்ணும் பண்ண முடியாதே?

அடிப்படைத் தேவைகளையும் ஆக்கப்பூர்வத் திட்டங்களையும் எதிர்பார்த்துதான் மக்கள் ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அவற்றைப் பரிபூரணமாகச் செய்யவேண்டியவர்கள், இப்படிப் பழிவாங்கும் போக்கையே முதன்மையான வேலையாகச் செய்கிறார்கள். செய்யட்டும்... இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்!''


சி.பி - டம் ,டம் ,மேடம், மக்களோட  அடிப்படைத்தேவையே மின்சாரம் தான், அதை எப்படி நிறைவேத்துனீங்கன்னு ஊருக்கே தெரியுமே?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0b0EwKoY8x5D_cGxo8xbpel9mRHGVIixvXKvpNGW9l5rQcGYNQ3u7Is5RiWwZOECxVrrZJqFJJFY85M9tTbcmQwPAUyYcHPp-5y3fgBjT5XrmbbIq57-2r-81dNY5j8ze-ebjwU2K4v8O/s1600/Durai+Dhayanithi+Marriage+Invitation.jpg


3. ''பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி என அரசியலுக்கு உட்பட்டவர்கள் மட்டும் அல்லாது, உங்களை நோக்கியும் போலீஸ் நடவடிக்கைகள் தீவிரமாகிறதே..?''


சி.பி - ஒவ்வொரு ரவுடியும் பேருக்குப்பின்னால அடை மொழி வெச்சுக்கறானுங்க, இதுக்காகவே அவனுங்களை உள்ளே தள்ளி டேய் , இனி இப்படி பேரு வெச்சுப்பியா? வெச்சுப்பியா? ன்னு கேட்டு லாடம் கட்டனும்.. லாக்கப்ல.. ராஸ்கல்ஸ்


''விசுவாசிகளைச் சிறையில் தள்ளுவதன் மூலமாக, என் கணவரைத் தனிமைப்படுத்தி சங்கடத்தில் ஆழ்த்தலாம் என்பது அவர்களின் கனவு. அதன் அடுத்த கட்டமாகத்தான் ஒரு குடும்பத் தலைவியான என்னை நோக்கியும் போலீஸை ஏவி விடுகிறார்கள். இதன் மூலமாக என் கணவரை நிலைகுலைய வைக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அதற்காகப் பொய்யான ஜோடிப்புகளைச் செய்து, அடாவடி, மோசடி என என்னென்னவோ கிளப்பி விடுகிறார்கள். பொய் வழக்குகளைப் போடச் சொல்லி, போலீஸைத் தூண்டிவிடுகிறார்கள்''


சி.பி - முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி பொய்யர்களை பொய் வழக்கு போட்டு அடைச்சாலும் தப்பில்லைன்னு அம்மா நினைக்கறாங்களோ என்னவோ?


4.''இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் உங்கள் கணவரை எத்தகைய மன நிலையில் வைத்திருக்கின்றன?''

 சி.பி - ஹா ஹா அண்ணன் அரண்டுட்டாரு, வெளியே வடிவேல் மாதிரி உதார் விட்டாலும் உள்ளே கைபுள்ள மாதிரி பம்பிட்டு தான் இருக்காரு.. 

''எப்போதுமே அவர் எதையும் எதிர்கொள்ளும் மன நிலையில்தான் இருப்பார். 


 சி.பி - ச்சே ச்சே உங்க மேரேஜ்ஜை வெச்சு அப்டி ஒரு முடிவு எடுக்கப்படாது.. 



ஆட்சி மாறினால் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார். 


 சி.பி - அதான் ஃபாரீன்ல பணப்பரிவர்த்தனை எல்லாம் நடந்து சேஃப் பண்ணிக்கிட்டீங்களா? 


http://www.makkalmurasu.com/wp-content/uploads/2011/08/gandhi.jpg

எதிர்பார்த்ததையும் தாண்டி அடக்குமுறை நடவடிக்கைகள் இப்போது தீவிரமாக நடக்கின்றன. கைதுக் களேபரங்களை அரங்கேற்றினால், கட்சியையும் என் கணவரையும் அழித்துவிடலாம் என அந்த அம்மையார் நினைப்பது தவறு. எத்தனையோ சூறாவளிகளையும் போராட்டங்களையும் கடந்து வந்தவர்தான் என் கணவர். 


சி.பி - ஆமாமா, சுயநலத்துக்காக அண்ணன் எதுவும் பண்ணுனதே இல்ல. எல்லாம் பொது நலம் தான் ... மதுரையை ஆட்டையைப்போட்ட அட்டகாசப்பாண்டியன் ஆச்சே அவரு?




அம்மையாரின் அடக்குமுறைகள் எங்கள் கட்சியை இன்னும் வளர்க்கவே செய்யும். கடைக்கோடித் தொண்டன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் படிக்கல்லாக மாறும். இந்த அம்மையார் நடத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பார்த்து கட்சிக்குள் இருந்த சிறுசிறு பூசல்களைக்கூட மறந்துவிட்டு, அனைவரும் ஒருமித்துக் கைகோத்து நிற்கிறார்கள்.

சி.பி - இந்த லைன் மட்டும் தலைவர் கலைஞர் எழுதிக்கொடுத்திருப்பாரு போல.. 


உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா... வெற்றி, மகிழ்ச்சி என சாதகங்கள் மட்டுமே நிலவும் நேரத்தைக் காட்டிலும், இந்த மாதிரியான இக்கட்டான சூழலில்தான் என் கணவர் படு ஆக்டிவாகவும், 'வரட்டும் பார்க்கலாம்’ என்கிற வைராக்கியத்துடனும் இருப்பார். அவருடைய ஆதரவாளர்கள் கைதான உடனேயே முதல் ஆளாகப் போய்ப் பார்த்தார். 'நான் இருக்கேன். தைரியமா இருங்க’ எனச் சொன்னார்.

 சி.பி - உடனே அவங்க , அண்ணே, நீங்க இருப்பீங்க, நாங்க இருப்போமா? அப்டின்னு கேட்டிருப்பாங்களே?




பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தைரிய மன நிலையில்தான் அவர் இருக்கிறார்!''


சி.பி - அதாவது மக்கள் பணத்தை எடுப்பது எப்படின்னு எடுத்துக்காட்டாக.?
5. ''நிலம் வாங்கிய விவகாரத்தில் உங்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதே... உண்மையில் அந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது?''


சி.பி - பச்சப்புள்ள மாதிரி கேள்வி கேட்டுட்டு. எல்லா நிலத்தையும் அண்ணன் பேர்லயே எழுதிட்டா கனக்கு காட்ட வேணாமா? அதான் பாதி அண்ணி பேர்ல.. 
''ஒரு பாமரனுக்கும் தெரிந்த விஷயத்தைக் கேட்கிறேன்... ஒரு சொத்தை வாங்கும்போது, அதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதைத்தானே பார்த்து வாங்குவோம்.

சி.பி - அதானே, பிரச்சனை என்னன்னா வில்லங்கமே நீங்க தான், இப்போ உங்களுக்கே அம்மா ஒரு வில்லங்கமா .. 


நாங்கள் வாங்கிய சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை. விற்பவர்களின் முழு ஒப்புதல், முறையான விலை, உரிய ஆவணங்கள் எனப் பத்திரப் பதிவுக்குப் பின்பற்றக்கூடிய அனைத்தையும் முறையாகக் கடைப்​பிடித்தே அந்த நிலத்தை வாங்கினோம். அதில், திடீரென இப்போது எங்கே இருந்து வில்லங்கம் வந்தது?


சி.பி - மிரட்டி கையெழுத்து வாங்கிட்டா அது முழு ஒப்புதல் ஆகிடுமா?

எங்கள் மீது புகார் கொடுத்த விவசாயி ஒருவரே போலீஸ் ஸ்டேஷனைத் தேடி வந்து, 'சிலருடைய தூண்டுதலால் புகார் கொடுத்துவிட்டேன். இப்போது புகாரை வாபஸ் பெற விரும்புகிறேன்!’ எனச் சொல்கிறார். புகார் கொடுத்தவரே பின்வாங்கிய நிலையிலும், போலீஸ் நடவடிக்கைகள் தீவிரம் ஆகிறது என்றால், இது அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கைதானே!

சி.பி - எத்தனை படம் பார்த்திருக்கோம், புகார் கொடுத்தவர் வாபஸ் வாங்கறார்னா மிரட்டப்பட்டிருக்கார்ன்னு தெரியாதா?



நாங்கள் சொத்துக்களை வளைத்து​விட்டதாகப் பரப்பியவர்கள், புகார் கொடுத்​தவரே எங்களுக்கு ஆதரவாகப் பேசுவதை கண்டுகொள்வது இல்லை!''
 http://www.viduthalai.periyar.org.in/20101118/photo03.jpg


6. ''கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்குப் பறந்து ​விட்டதாகப் பரபரப்பான பேச்சு அடிபட்டதே?''

சி.பி - பேச்சு மட்டுமா அடிபட்டுது? அண்ணனே  அடி பட்டார்னு ஒரு கிசு கிசு.. 



''வெளிநாடுகளுக்குப் போவது தவறு என்கிற சட்டம், எனக்குத் தெரிந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. இப்போது புதிதாக யாரும் அப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்களோ என்னவோ? இப்போதும் எப்போதும் நாங்கள் இங்கேதான் இருப்போம். எங்கேயும் பறக்க மாட்டோம். எங்களுக்கு எதிராக ஏதாவது நடக்காதா எனப் பறப்பவர்கள்தான், இப்படிப் பரப்புகிறார்கள். இதை எல்லாம் எங்கள் மீதான அக்கறையாக எடுத்துக்கொண்டு, சிரிக்கவே செய்கிறோம்!''


சி.பி - அட!!!! இந்த லைனும் மேடம் சொந்தமா சொன்ன மாதிரியே இல்லையே? கலைஞரும் கூடவே இருந்திருப்பாரோ? டவுட்டு.. 


7. ''கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து, ஜெயலலிதாவுடன் உங்கள் கணவர் சமாதானம் பேசியதாகக்கூட செய்தி பரவியதே?''

சி.பி - பம்புனதை இப்டியா பப்ளிக்கா கேட்பது? 


''சரியான கட்டுக்கதை அது! எதிர்க் கட்சியினரோடு சரண்டர், சமாதானம் என்பது எல்லாம் என் கணவரின் சரித்திரத்திலேயே இல்லாதது. ஜெயலலிதாவுடன் சமாதானம் என்பது எப்போதுமே கிடையாது... நெவர்!''


சி.பி - தரித்திரம் வந்து சகுனி ஆடும்போது சரித்திரங்கள் உருவாகும்.. செய்த பாவங்கள் விடாது துரத்தும் என்று முன்னோர் சொன்ன முது மொழிக்கு அது கருவாகும்.. 

8. ''இதை எல்லாம் மீறி, உங்களின் மீது கைது நடவடிக்கை பாய்ந்தால், அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?''

சி.பி - ஹா ஹா இது கூடவா தெரியாது..? அய்யய்யோ .. கையைப்பிடிச்சு இழுத்துட்டான். பெண் என்றும் பாராமல் நள்ளிரவில் கைதுன்னு ஃபிளாஸ் நியூஸா சன் டி வி ல போட்டு தாளிச்சிட மாட்டாங்க.. ?

''சட்டப்படி, நீதிமன்றத்தில் தைரியமாக எதிர்கொள்வேன். கைதுக்கோ, சிறைக்கோ அஞ்சாத தைரியத்தை, அவரைக் கரம் பிடித்த நாளில் இருந்தே கற்றுவைத்து இருக்கும் ஆள் நான். அவருடைய நான்கு எழுத்துக்களே என் நம்பிக்கைக்கும் தைரியத்துக்கும் போதுமானது... ஆமாம்!''


சி.பி - அண்ணி செம டேலண்ட் போல இருக்கு, போற போக்கை பார்த்தா அழகிரி எப்பவாவது சி எம் ஆனா அண்ணி டெபுடி சி எம் ஆகிடுவாரு போல.. 


9. ''உங்கள் கணவருக்கும், ஸ்டாலினுக்கும் மறுபடியும் மனக் கசப்புத் தொடங்கி விட்டதா என்ன?''

சி.பி - எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கிட்டே ஒண்ணுமே தெரியாத பச்சப்புள்ள மாதிரி கேள்வி கேட்கறதைப்பாரு.. 

''என்றுமே இணைந்திருக்கும் சகோதரர்கள் அவர்கள். அவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படாதா என ஏங்குபவர்கள் கிளப்பி விடும் வழக்கமான வதந்தி அது. புரியாமல்தான் கேட்கிறேன்... இதே வதந்தியை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிளப்புவாங்களோ... ஏதாவது கொஞ்சம் வித்தியாசமா யோசிங்கப்பா!''


சி.பி - வித்தியாசமா யோசிப்பது, எகனை மொகனையா யோசிப்பது எல்லாம் அரசியல்வாதிகளுக்குத்தான் பழக்கம் ஆச்சே?  எங்களுக்கென்ன?

http://4.bp.blogspot.com/_tLiBAL1NJYE/SFaRoCgrFgI/AAAAAAAABLM/DKXLSpJ0E0c/s1600/Khyber+Girls.gif

டிஸ்கி 1- மேலே உள்ள ஃபோட்டோ ஒரு ரிலேக்‌ஷனுக்காக மட்டுமே..


டிஸ்கி 2 - நம் வருங்கால சந்ததிகள் காந்தி அழகிரி என்றால் மஹாத்மா காந்தி பரம்பரை என தவறாக நினைச்சுடப்போறாங்க. அவங்களுக்கு விளக்கவேண்டியது நமது கடமை.

டிஸ்கி 3 - பிரேமலதா விஜய்காந்த், காந்தி அழகிரி 2 பேரும் தோற்றத்துலயும் சரி, பேச்சுலயும் சரி.. ஒரே சாயல்.. எதிர்காலத்துல 2 பேரும் அரசியல்ல ஒரு ரவுண்ட் வரலாம்.. கபர்தார்..

thanx - ju vi

Tuesday, August 16, 2011

சகாக்கள் - சினிமா விமர்சனம்


http://www.ariviththal.net/events/uploads/4816.jpg

சூர்யா காதலே நிம்மதின்னு ஒரு படம் பண்ணுனார். ஹீரோ ஹீரோயின் 2 பேரும் காதலிக்கவே மாட்டாங்க, ஆனால் மத்தவங்க எல்லாம் அவங்க 2 பேரும் காதலிக்கறதா நினைச்சுக்குவாங்க,வெறுத்துப்போய் 2 பேரும்  நிஜமாவே காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க.. அதே கதையை கொஞ்சம் தூசு தட்டி இயக்குநர் ஒரு படம் பண்ணி இருக்கார்.அந்தப்படமே ஓடலை! இது மட்டும் ஓடவா போகுது?

ஹீரோ ஹீரோயினை பஸ் ஸ்டாப்ல பார்க்கறார், உடனே லவ்வாகுது, ஆனா ஹீரோயின் அவரை கண்டுக்கவே இல்லை. ஃபிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் லவ்வற மாதிரி இவரே வாலி அஜித் சிம்ரன் கிட்டே சோனா கதையை எடுத்து விடுவது மாதிரி இவரும் கற்பனையா சம்பவங்களைஅள்ளி விடறாரு, இந்த மேட்டர் ஹீரோயினுக்கு தெரிய வரும்போது. இடைவேளை

http://www.thedipaar.com/pictures/resize_20110615040616.jpg

அப்பத்தான் டைரக்டருக்கு நாம சகாக்கள்னு டைட்டில் வெச்சது நினைவு வருது, உடனே ஹீரோ ஹீரோயின் காதலுக்கு எப்படி உதவறாங்க, காதலர்கள் சேர்ந்தாங்களா? சோர்ந்தாங்களா? என்பதை தில் உள்ளவங்க டி வி ல பார்த்து தெரிஞ்சுக்கோங்க.....

ஹீரோ புதுமுகம் மீசை தாடி வெச்ச அப்பாஸ் கணக்கா  இருக்கார்.. தேறுவது ரொம்ப கஷ்டம்.  ஹீரோயின் அத்வைதா (அழகர்சாமியின் குதிரை)லட்சணமா, குடும்பப்பாங்கா இருக்கார். சான்ஸ் இருக்கு..




http://www.cinemaexpress.com/Images/article/2011/3/1/sagakkal.jpg

பாஸ்கர் சக்தியின்  பேனாவில் மனதில் பதிந்த வசனங்கள்

1.  சார்.. வாங்க , என்ன சாப்பிடறீங்க?

வெண்ணிற ஆடை முர்த்தி - அதை விடுங்க, நான் எதை கொடுத்தாலும் சாப்பிடுவேன். 


2.  வெண்ணிற ஆடை முர்த்தி - நானும் அந்தக்காலத்துல பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கேன்.பாதாளப்பேட்டை பைரவில இருந்து,கன்னிச்சுரங்கம் காஞ்சனா வரை பல பேரை புதுசா ..

 3. கண்டக்டர் சார். ஆலமரம் 1.

ஆலமரம் நிக்காது.. 

ஆலமரம் அங்கேயே தான் நிக்கும் பஸ் தான் அங்கே நிக்கனும்.. 

ஏம்மா, உன் கூட ரோதனையா போச்சு.. 

யூ ஆர் எ பப்ளிக் சர்வெண்ட் யூ நோ?

ஆமாம்மா, உன் பாவாடை , தாவணியை கழட்டிக்குடு, துவைச்சு பப்ளிக் சர்வீஸ் பண்றேன்.. 

4.  பொண்ணு நிறைய யோசிக்குதே..?

ஏன் இந்த இத்துப்போனவனை செலக்ட் பண்ணுனோம்னா?

5. ஆணின் காதல் இன்ஸ்டண்ட் காஃபி மாதிரி,டேஸ்ட் சீக்கிரம் போயிடும்,பெண்ணின் காதல் மலைத்தேன் மாதிரி 50 வருஷம் ஆனாலும் கெடாம இருக்கும்





http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2010/08/saghakkal-9-300x199.jpg
6. வெண்ணிற ஆடை முர்த்தி - இந்தப்பொண்ணுக்கு மட்டும் அழகு ஏன் இப்படி பீறிட்டிக்கிட்டு வருது?!!!!!!!!

7. உங்க ஊர்ல சாப்பாடு எப்படி இருக்கும்..?

ஓ. பிரமாதமா.....


அது உங்க முகத்தைப்பார்த்தாலே தெரியுதுங்க. 

8.  நம்ம ஊர்ல மேரேஜ்க்குப்பிறகு தன் மனைவியை லவ் பண்ணும் ஆளே கிடையாதுங்க. 

9. ஏண்டா என்னை காட்டிக்குடுத்தே?

 தனியா அடி வாங்க பயமா இருந்துச்சு

10. காதலிக்கற மனசு காதலை மட்டும் தான் யோசிக்கும் , மத்த எதைப்பற்றியும்  அதுக்கு கவலை இல்லை.. 

11.  டேய், நீ கேட்கறப்ப எல்லாம் 50,   100ன்னு குடுத்துட்டுத்தானே இருந்தேன், ஏண்டா கட்சி மாறுனே?

இயக்குநர் பல காட்சிகளில் நாடோடிகள், காதல், சுப்ரமணிய புரம் என கலந்து கட்டி அடிக்கிறார்.யுகபாரதியின் பாடல்களில் நீ எனை நினைக்கையிலே புரை ஏறுது, நான் உன்னை நினைக்கையிலே மனம் தடுமாறுது அழகு கவிதை வரிகள்



http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/17221789149.jpg

இயக்குநரிடம் பொதுவா விமர்சனம் எழுதும்போது ஏன் இந்த காட்சிகள்னு 5 கேள்விகள் கேட்பது பழக்கம். இந்தப்படத்துல அதுக்குப்பதிலா ஏன் இந்த மாதிரி படம்?ன்னு கேட்கலாம்..


 லாஜிக் மீறல்கள்


1. ஹீரோ தனது காதலியை எங்கே முதல் முறை மீட் பண்ணேன் என ஒரு கற்பனை கதை  சொல்வார், அதில் ஹீரோயின் ஆண் டாய்லெட்டில் தெரியாமல் போவது போலவும், இவர் வெளியே காவலுக்கு நிற்பது போலவும் ஒரு சீன் வருது, மகா மட்டம்.. எந்த ஊரில் ஹை க்ளாஸ் ஃபிகர்  இலவச பப்ளிக் டாய்லெட் போகுது? அப்டியே போனாலும் ஆண், பெண் வித்தியாசம் தெரியாம போயிடுமா?


2. ஹீரோ  காதலை சொல்லும்போது ஹீரோயின் வேண்டா வெறுப்பாய் யோசிப்பவர், பின் ஓக்கே சொல்லி அடுத்த செகண்டே ஆரத்தழுவுவது எப்படி?

3. ஹீரோவுக்கு தேவை இல்லாமல் எப்போதும் 2 ஃபிரண்ட்ஸ் கூடவே இருக்காங்களே? எதுக்கு ? ( நல்ல வேளை டூயட் பாடறப்ப நைஸா கழட்டி விட்டுடறாங்க )

4. ஹீரோவுக்கு 20 வயசு போலவும் , ஹீரோயினுக்கு 28 வயசு போலவும்  முகங்கள் சொல்லுது.. ஹீரோ செலக்‌ஷன் ல கோட்டை விட்டுட்டீங்களா?

5. ஹீரோயின் தன் தோழியை ஹாஸ்பிடலில் சேர்த்து நைட் வீட்டுக்கு வர லேட் ஆகும் என அப்பாவுக்கு ஏன் ஃபோன் பண்ணி சொல்லலை?




http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/08/sagakkal.jpg

 இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் தான் ஓடும்..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 34

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க்  - ம்ஹூம்

சி .பி கமெண்ட் - அய்யய்யோ...

ஈரோடு மாணிக்கம் தியேட்டர்ல இந்த குப்பைப்படத்தை பார்த்தேன்

http://3.bp.blogspot.com/-xrmh_YClcuM/TfTs_JedZTI/AAAAAAAAFec/SBtZOs9n7FM/s1600/26.jpgடிஸ்கி - அத்வைதாவிடம் பர்சனலா ஒரு கேள்வி, லிப்ஸ்டிக் போடாமயே உங்க உதடு நல்லாத்தான் இருக்கு, எதுக்கு வாடாமல்லி கலர்ல கேவலமான டார்க் ஷேடோல போடறீங்க? 

கேரளா ஃபிகரை லவ் பண்றதால இன்னா பிரச்சனைன்னா........

Green Pepper Reaction
1.உன் கண்ணுக்கு பாஸிட்டிவ் பார்வை இருந்தால்  நீ உலகை நேசிப்பாய், உன் நாக்குக்கு பாஸிட்டிவ் பார்வை இருந்தால் உலகம் உன்னை நேசிக்கும்

---------------------------

2. மக்கள் ஏன் சந்தோஷமா இல்லை? தெரியுமா? மத்தவங்க எல்லாம் எப்படி சந்தோஷமா இருக்காங்கன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருக்கறதாலதான்


----------------------------

3. கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் மனிதனுக்கு பொராடும் எண்ணமே வந்திருக்காது

----------------------------

4. நம்மோட டெம்ப்ரவர் லைஃப்ல எல்லாமே பர்மணண்ட்டா இருக்கனும்னு நினைக்கறமே இதைத்தான் கேனத்தன்ம்னு சொல்வாங்க

-----------------------

5. யாருக்காக சிரிக்கிறோமோ  அவரை எளிதில் மறந்து விடலாம், ஆனால் யாருக்காக அழுகிறோமோ அவரை வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது

----------------------


Eye Drop Photography

6.  சத்யராஜ் - நான் எவ்வளவோ கேர்ஃபுல்லா இருந்தும் என் காதலி என்னை விட்டு ஓடிட்டா.


சந்தானம் - CAREFULL லா இருந்தா மட்டும் போதாது,தலைல HAIRFULL லாவும் இருக்கனும்

-----------------------

7. விஜயகாந்த் மகன் படத்தில் காமெடியன் யார்? புது குழப்பம்!!  # இதுல குழம்ப என்ன இருக்கு?விஜய்காந்த்தே செம காமெடியன் தானே?

---------------------

8. வீட்டுக்குள்ள வரும்போது வலதுகாலை எடுத்துவெச்சு உள்ளே வாங்கறாங்களே? ஏணில ஏறும்போது எந்த காலை வெச்சுஏறுனாலும் முன்னேற்றத்தைநோக்கித்தானே?

------------------------

9. அவள் கொலுசு ஜல் ஜல் என்றது, என் மனசு அவளை நோக்கி செல் செல் என்றது,ஆனா என்ன கொடுமைன்னா அவ வீட்டு நாய் வள் வள் என்றது

------------------------

10. உன்னை எப்பவும் பார்த்துட்டே இருக்கனும்னு கடவுள்ட்டே வரம் கேட்டேன்,கடவுள் கேட்டாரு - ஏன் உங்க வீட்டுல டிஸ்கவரி சேனல் எடுக்காதா?

-------------------------

Graffiti Artist

11. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபுதேவாவுக்கு உதவி செய்த நயன்தாரா!  # இதெல்லாம் ஒரு நியூஸா? வெட்டிங்க் ஸ்பாட்ல என்னநடந்தது?ன்னு ரிப்போர்ட்குடுங்க

-------------------------------

12. ஏப்ரல், மே மாச கேப்ல டீச்சர் ஸ்டூடண்ட்க்கு  SMS அனுப்புனாரு - ஐ மிஸ் யூ , அதுக்கு ஸ்டூடண்ட் ரிப்ளை அனுப்பினான் - ஐ ஸ்டூடண்ட் யூ

-------------------------

13. ஜீவா ரசிகர்கள் கோ தானம்!  # நல்ல வேளை ,ஜீவா காதலிங்கற டைட்டில்ல படம் பண்ணலை!!!

--------------------------

14. காதலின் ரகசியமே காதலியிடம் முட்டாள் தனமாக நடந்து கொள்வதுதான், உன் டேலண்ட்டை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு லவ் பண்ணு

--------------------------

15. நினைவுகள் என்பது கடல் அலை போல,  அருகில் வரும்போது விலகத்தோன்றும், தொலைவில் இருக்கும்போது ரசிக்கத்தோன்றும்

------------------------


 



16. நீ விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாது, உன்னை விரும்பும் உயிருக்கு உன்னைத்தவிர வேறொன்றும் ஒரு பொருட்டாய் தெரியாது

---------------------

17. சன் டிவிக்கு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் எச்சரிக்கை # பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு நலமும் விசாரிக்கும்,வார்னிங்கும் குடுக்கும் போல

--------------------------

18.மச்சி, காலேஜ் ;லைஃப் முடிஞ்சதும் நீ என்னை மறந்துடுவியா? என்ன மாம்ஸ்? நான் என்ன உன் காதலியா? டக்னு மறக்க? # நண்பேண்டா

--------------------------
19. சாப்பிட்டியா?  நல்லாருக்கியா?ன்னு சில சமயம் கேட்காமல் இருந்திருக்கலாம். உன்னை நேசிக்கலைன்னு அர்த்தம் இல்லை, நானும்உன்னைமாதிரிசோம்பேறி

---------------------

20. எதுக்கெடுத்தாலும் சாரி சொல்ல நினைச்சா வெற்றியை மறந்துடு, வெற்றி பெற விரும்பினால் சாரி கேட்கும்படி நடந்துக்காதே

--------------------------




21. உன்னை வெறுக்க யாராலும் முடியாது, உனக்கு நேசிக்கத்தெரிந்திருந்தால்

---------------------

22. பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் மதுரை வாலிபர் # உயிரோட இருந்தப்போ அந்த பொண்ணு கழுத்தறுத்திருக்கும், தானிக்கு தீனி 

--------------------

23. நீ உன் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொண்டால், நீ நல்லவன் என யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்காது

---------------------

24. அவ பார்வைக்கு அர்த்தம் தெரிஞ்ச  எனக்கு அவ பேசுன வார்த்தைக்கு அர்த்தம் தெரில , கேரளா ஃபிகர், மலையாளத்துலயே பேசறா!!

-------------------------

25. இருள் என்பதால் கருவறையை வெறுத்தவரும் இல்லை, நிம்மதி என்பதால் கல்லறையை விரும்பியவரும் இல்லை

---------------------------

Flamingos run through shallow water before taking flight in the muddy wetlands of the Yucatán Peninsula, along the coast of the Gulf of Mexico.
mexico-flamingos_6839_600x450.jpg
26.எச்.ஐ.வி., பாதிப்பு இந்தியா 10-வது இடம் #நாங்க ஆட்சிக்கு வந்தா இந்தியா அதுல நெம்பர் ஒன் ப்ளேஸ் பிடிக்கும்னு யாரும் கூவாம இருந்தா சரிதான்

------------------------------

27. ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: இன்ஸ்பெக்டர் கைது #பதவிக்கு ஏத்த மாதிரி லஞ்ச நிர்ணயத்தை ஹைக் பண்ணுங்கய்யா.. விலை வாசி எல்லாம் எம்புட்டு ஏறிக்கிடக்கு

----------------------------



28. யோகா குரு ராம்தேவ்விடம் மத்திய அமைச்சர்கள் கெஞ்சல்: ஊழல் எதிர்ப்பு போரை கைவிட வலியுறுத்தல் #அப்பவும் ஊழலை விட்டுத்தள்ள யாருக்கும் நோஐடியா

----------------------

29. .விளாத்திகுளம் ஆம்னி பஸ்சில் நகை திருட்டு#செயின் திருடர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை,அவர்கள் ஆந்திரா போய்ட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே?

-------------------------

30.எங்களை குறை கூறியவர்கள் இப்போது பாராட்டுகின்றனர்: கருணாநிதி வேதனை#இந்தத்தமிழனுங்களே இப்படித்தான் தலைவரே,எதையும் முழுசா செய்ய மாட்டாங்க

--------------------------

amazing..........
eagle%201.jpg

31. மருத்துவமனையில் கணவர் இறப்பை நம்பாத மனைவி#பேச்சு மூச்சே இல்லாம தானே இருக்காருன்னு சொன்னதுக்கு என் எதிரே அவர் எப்போ பேசி இருக்காரு? மூச்.

-------------------------

32  இலவச கிரைண்டர்  திட்டத்துக்கான கிரைண்டர்களை கோவை உற்பத்தியாளர்களிடமிருந்தே பெற வேண்டும்#2016ல கோவையில் போயஸ் பாவை ஊழல் நியூஸ் கன்ஃபர்ம்

---------------------------

33 .தன் நட்பு வட்டாரத்தை திருமணத்துக்குப்பின் சடார் என துறக்க பெண்களால் மட்டுமே முடிகிறது#பச்சோந்திப்பாவைகள்

---------------------------

34. பெரும்பாலான சிநேகிதிகள் ஆண்களுடனான சந்திப்பில்,பேச்சில் சாப்பிட்டாச்சா? என்ன சாப்பிட்டீங்க? என நலம் விசாரிக்கிறார்கள்#தாய்மைப்பண்பு


---------------------------

35. பெண்கள் புகை பிடிக்கக்கூடாது-நடிகை சமீரா ரெட்டி அட்வைஸ்#நடிகைகள் அட்வைஸ் செய்யக்கூடாது-ஆணாதிக்கவாதிகள் அறிவிப்பு

---------------------------------

Whale & Penguins
whalesssss.jpg