Wednesday, January 25, 2012

தமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசாமிப்பிள்ளையும் - புதுமைப்பித்தன்


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpMkV42Cy1xcE8ph05ZpY-_0E6GdxjcKyLzFweaPalMCLWxo99LWplRckV5Tmahe3h5ZO_KbjdLWjbe-KVAd7WpDDUa9wDRFADJNVCjDUGy8Mh72znTm4Tz_jNwbg8N8tcNiTNVVX053Y/


 அமரர் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மானசீக குருவும், குதிரை வேக பாய்ச்சல் எழுத்துக்கு சொந்தக்காரரும் ஆகிய புதுமைப்பித்தன் எழுதிய இக்குறுங்கதை இக்கால இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய ஒரு படைப்பு..

மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். 'டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் 'கப்' காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...'

'கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.'
'இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.'
இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.
திடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, "இந்தா, பிடி வரத்தை" என்று வற்புறுத்தவில்லை.

"ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?" என்று தான் கேட்டார்.
"டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே" என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.
"நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப் போனால் சுருக்க வழி?" என்றார் கடவுள். இரண்டு பேரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

சாடி மோதித் தள்ளிக்கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி, செருப்பு ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.
மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதிதீட்சண்யமான கண்கள்; காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி, காரிக்கம் மேல் அங்கவஸ்திரம்.

வழி கேட்டவரைக் கந்தசாமிப் பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம்; அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.
தலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல் நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக் கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கறேலென்று, நாலு திசையிலும் சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கனிந்தது. சிரிப்பு? அந்தச் சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.

"ரொம்பத் தாகமாக இருக்கிறது" என்றார் கடவுள்.
"இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல்" என்றார் கந்தசாமிப் பிள்ளை. "வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம்" என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர்.

"சரி, வாருங்கள் போவோம்" என்றார். 'பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால்?' என்ற சந்தேகம் தட்டியது. 'துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான்' என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.

இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின் தொடர்ந்தார்.

இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங் கொடுக்காமல், "சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி!" என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.

"தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல்" என்றார் கடவுள்.

"அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்" என்று தமிழ்க் கொடி நாட்டினார் பிள்ளை.

முறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். "நல்ல உயரமான கட்டிடமாக இருக்கிறது; வெளிச்சமும் நன்றாக வருகிறது" என்றார்.

"பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ? கோவில் கட்டுகிறது போல என்று நினைத்துக் கொண்டீராக்கும்! சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள்" என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.

கோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.
"அப்படி என்றால்...?" என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. "சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும்?" என்று கேட்டார் கடவுள்.
"ஓ! அதுவா? மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்தியோகஸ்தர்கள் அபராதம் போடாமல் பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துதான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள்" என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகித்தார்.

கடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன காப்பியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தைவிட்டு வெளியே வர முயன்று கொண்டிருந்தது.

"இதோ இருக்கிறதே!" என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்துவிட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.

"என்ன ஐயா, எச்சிலைத் தொட்டுவிட்டீரே! இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும்" என்றார் பிள்ளை.

"ஈயை வரவிடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம்" என்று முனகிக் கொண்டார் கடவுள்.

பையன் இரண்டு 'கப்' காப்பி கொண்டுவந்து வைத்தான்.


கடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.
"நம்முடைய லீலை" என்றார் கடவுள்.

"உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கிறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே" என்று காதோடு காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்சனையைத் தீர்த்துவிட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு.

"சிக்கரிப் பவுடர் என்றால்...?" என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.

"சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சிலபேர் தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றிவருகிற மாதிரி" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

தெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.

பெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம்புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.

"சில்லறை கேட்டால் தரமாட்டேனா? அதற்காக மூன்றணா பில் எதற்கு? கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா?" என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.

"நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம்" என்றார் கடவுள்.

"அப்படியானால் சில்லறையை வைத்துக்கொண்டு வந்திருப்பீர்களே?" என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டுவிட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். "தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதின்மூன்று - சரியா? பார்த்துக்கொள்ளும் சாமியாரே!"

"நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது" என்றார் கடவுள்.

ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.

வெளியே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.

கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுக்களில் ஐந்தாவதை மட்டும் எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார்.

"கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன்" என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.

"என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக் கொண்டு வந்திருப்பேனே!" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டீரா இல்லையா? அந்த மாதிரி இதற்கு நான் உடன்பட்டேன் என்று வைத்துக்கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு; அதனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன்" என்றார் கடவுள்.


வலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடைபெற்றுக் கொள்வது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.

"திருவல்லிக்கேணிக்குத்தானே? வாருங்கள் டிராமில் ஏறுவோம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"அது வேண்டவே வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாமே" என்றார் கடவுள்.

"ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது; ரிக்ஷாவிலே ஏறிப் போகலாமே" என்றார் கந்தசாமிப் பிள்ளை. 'நாம்தாம் வழி காட்டுகிறோமே; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன?' என்பதுதான் அவருடைய கட்சி.

"நர வாகனமா? அதுதான் சிலாக்கியமானது" என்றார் கடவுள்.

இரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார்கள். "சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை ஏத்திக்கிறேன்" என்றான் ரிக்ஷாக்காரன்.

பொழுது மங்கி, மின்சார வெளிச்சம் மிஞ்சியது.

"இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகி விட்டோ மே! நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே இப்படிச் சந்திக்க வேண்டுமென்றால்..."

கடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. "நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன்" என்றார் அவர்.

கந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக்கொண்டால் விட்டுவைப்பாரா? கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.

"சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

"இல்லை" என்றார் கடவுள்.

"அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்றுதான் கொள்ள வேண்டும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"பரிச்சயம் உண்டு" என்றார் கடவுள்.

'இதென்னடா சங்கடமாக இருக்கிறது?' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. "உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிசயமுண்டு; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன் பரிசயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒரு முறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும்; அப்பொழுதுதான்..."

'பதினேழு வருஷ இதழ்களா? பதினேழு பன்னிரண்டு இருநூற்று நாலு.' கடவுளின் மனசு நடுநடுங்கியது. 'ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம்' என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.

"தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள் நாட்டுக்கு ரூபாய் ஒன்று; வெளிநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம்" என்று கடவுளைச் சந்தாதாராகச் சேர்க்கவும் முயன்றார்.

'பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓட ஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது' என்று யோசித்து விட்டு, "யாருடைய ஜீவியம்?" என்று கேட்டார் கடவுள்.

"உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல, பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக்கொண்டுதான் இருப்பார்; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

இந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.

வேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.

"என்னடா திரும்பிப் பார்க்கிறே? மோட்டார் வருது, மோதிக்காதே; வேகமாகப் போ" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா? வண்டியிலே ஆளே இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு" என்றான் ரிக்ஷாக்காரன்.

"வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

"தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான் அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப் போதும். இந்த இதழிலே ரசக்கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்; பாருங்கோ, நமக்கு ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம் சொல்லியிருக்கு" என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.

'ஏதேது, மகன் ஓய்கிற வழியாய்க் காணமே' என்று நினைத்தார் கடவுள். "தினம் சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர்?" என்று கேட்டார்.

"பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்றுவிடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாது என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும். மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை. இல்லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் விஷயம் புரிந்தவர் போலத் தலையை ஆட்டினார்.

"இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம்" என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"ஓடுகிற வண்டியில் இருந்துகொண்டா?" என்று சிரித்தார் கடவுள்.

"அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

நாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். "பித்தம் ஏறி அடிக்கிறது; விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டோ ?" என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை.

"நீ கெட்டிக்காரன் தான்; வேறும் எத்தனையோ உண்டு" என்று சிரித்தார் கடவுள்.

"ஆமாம், நாம் என்னத்தையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து" என்றார் கடவுள்.

"அடெடே! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும்?"

"கந்தசாமிப் பிள்ளையை!"

"சரியாய்ப் போச்சு, போங்க; நான் தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ? இனம் தெரியவில்லையே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"நானா? கடவுள்!" என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.

கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!

"பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி."

கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். "எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக்கூடாது" என்றார்.

"அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.

கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

"நல்லா இருக்கணும் சாமீ" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.

கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!

"என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது?" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

"அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன?" என்றார் கடவுள்.

"அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்!" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன், அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ, சாமி! நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா கண் பாக்கணும்" என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.

"மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன் தான்! தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை என்ன சொல்ல? கடவுளுக்குக் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான்" என்று சொல்லிக்கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.

கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.

"இதுதான் பூலோகம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இவ்வளவுதானா!" என்றார் கடவுள்.

இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.

கந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.

"பக்தா!" என்றார் கடவுள்.

எதிரில் கிழவனார் நிற்கவில்லை.

புலித் தோலாடநயும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.

"பக்தா!" என்றார் மறுபடியும்.

கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது.

"ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர் வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர்; இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல் வீட்டுக்கு ஒழுங்காக வாரும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப் பட்டது.

கந்தசாமிப் பிள்ளை வாசலருகில் சற்று நின்றார். "சாமி, உங்களுக்குப் பரமசிவம் என்று பேர் கொடுக்கவா? அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா?" என்றார்.

"பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம்."

http://www.thamizham.net/ithazh/oldmag/om/om028.jpg

"அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன்; உடன்பட வேணும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை" என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.

"அப்படி உங்கள் சொத்து என்னவோ?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான்" என்றார் கடவுள்.

"பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை" என்று கூறிக்கொண்டே நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.



வீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக் கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை. அதற்கப்புறம் என்னவோ? ஒரு குழந்தை, அதற்கு நாலு வயசு இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால் சடை வாலை வாளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார், கடமையில் வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடு போட முயன்று, வாழைநார் கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு, இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும் போது அப்பா உள்ளே நுழைந்தார்.

"அப்பா!" என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக்கொண்டது. அண்ணாந்து பார்த்து, "எனக்கு என்னா கொண்டாந்தே?" என்று கேட்டது.

"என்னைத்தான் கொண்டாந்தேன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது?" என்று சிணுங்கியது குழந்தை.

"பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இதுதான் உம்முடைய குழந்தையோ?" என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.

கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.

"சும்மா சொல்லும்; இப்பொவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால், தயிர்கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை" என்று சிரித்தார் கடவுள்.

"ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார்.

மனசிலே ஒரு துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.

"வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே?" என்று கைகளை நீட்டினார் கடவுள்.

ஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.

"எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா?" என்று கேட்டது.

அது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு மறு தென்பட்டது.


"அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு" என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.

"கூச்சமா இருக்கு" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.

"ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப் பட்டு பொத்துப் போச்சா? எனக்கும் இந்தா பாரு" என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப் போன கொப்புளத்தைக் காட்டியது.

"பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக்கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலெ இருந்து அது அங்கியே சிக்கிக்கிச்சு; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லியா?" என்று கேட்டார் கடவுள்.

"வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா?" என்று கூப்பிட்டது.

குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.

"தாத்தா, தோத்துப் போனியே" என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.

"ஏன்?" என்று கேட்டார் கடவுள்.

கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம்.

"முந்தியே சொல்லப்படாதா?" என்றார் கடவுள்.

"ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா?" என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.

அந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி பின்னே குடமும் இடுப்புமாக இருட்டிலிருந்து வெளிப்பட்டார்கள்.

"இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா, கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குத் தான் கொடுத்திருக்கு. தெரியாதா?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா? வாருங்க மாமா, சேவிக்கிறேன்" என்று குடத்தை இறக்கி வைத்துவிட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.

"பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும்" என்று ஆசீர்வதித்தார் கடவுள்.

காந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது. மனமும் குளிர்ந்தது. கண்ணும் நனைந்தது.

"வாசலில் இருக்கற அரிசி மூட்டையை அப்படியே போட்டு வச்சிருந்தா?" என்று ஞாபகமூட்டினார் கடவுள்.

"இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பந்தான் கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக மறதிக்குத்தான் மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னுதான் பார்க்கணும்" என்றாள் காந்திமதி அம்மாள்.


"பாத்துக்கிட்டுத்தான் நிக்காறே" என்றார் கடவுள் கிராமியமாக.

"பாத்துச் சிரிக்கணும், அப்பந்தான் புத்தி வரும்" என்றாள் அம்மையார்.

கடவுள் சிரித்தார்.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.

"இந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே" என்றார் பிள்ளை காதோடு காதாக.

"இனிமேல் இல்லை" என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார்; மூட்டை அசையவே இல்லை.

"நல்ல இளவட்டம்!" என்று சிரித்துக் கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார் கடவுள்.

"நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா பாத்துக்கிட்டே நிக்கியளே!" என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.

"நீ சும்மா இரம்மா; எங்கே போடணும்னு சொல்லுதெ?" என்றார் கடவுள்.

"இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க" என்று வழி மறித்தாள் காந்திமதியம்மாள்.

கந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி பதினொன்று.

"இனிமேல் என்ன யோசனை?" என்றார் கடவுள்.

"தூங்கத்தான்" என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.

"தாத்தா, நானும் ஒங்கூடத்தான் படுத்துக்குவேன்" என்று ஓடிவந்தது குழந்தை.

"நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர்?" என்று கேட்டார் கடவுள்.

"மனுஷாள்கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான் நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால் பேசாமல் படுத்துக்கொண்டிருங்கள். ராத்திரியில் நடமாடினால் அபவாதத்துக்கு இடமாகும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்து கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது.

"ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய வெந்நீருடனே கருடப் பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப்பச்சை என்றும் பாடம்)..." என்று எழுதிவிட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, "இன்றைக்கு பத்திரிகை போகாது" என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.

வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கை நிறைய மிட்டாய்ப் பொட்டலம்.


"தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம்" என்று துள்ளியது குழந்தை.

"எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது? என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ?" என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது.

"அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்துவிடுவார்களா? சிருஷ்டியின் அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்துவிடுகிறேன்; இன்று பத்திரிகை போய் ஆக வேணும்" என்று கையை நீட்டினார் பிள்ளை.

"இது யாரை ஏமாற்ற? யார் நன்மைக்கு?" என்று சிரித்தார் கடவுள்.

"தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால் தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டீர்களே! இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத் தெரியாதா?" என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் யோசனையில் ஆழ்ந்தார்.

"அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு மூலிகை உண்டா? அல்லது கருடப்பிச்சுதானா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

"பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே, இது நியாயமா? நான் என்னத்தைக் கண்டேன்? உம்மை உண்டாக்கினேன்; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான் தான் பழியா?" என்று வாயை மடக்கினார் கடவுள்.

"நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்துவிட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலை" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

பொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, "ஏன் தாத்தா அப்பாகிட்டப் பேசுதே? அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனிச்சுக் கெடக்கு" என்று கடவுளை அழைத்தது.

குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே, "பாப்பா, உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு!" என்றார் கடவுள்.

குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.

"தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு செல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா?" என்று கேட்டது குழந்தை.

கடவுள் விழுந்துவிழுந்து சிரித்தார். "அவ்வளவும் உனக்கே உனக்குத்தான்" என்றார்.

"அவ்வளவுமா! எனக்கா!" என்று கேட்டது குழந்தை.

"ஆமாம். உனக்கே உனக்கு" என்றார் கடவுள்.

"அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாங்களே! அப்பா லேவியம் குடுப்பாங்களே!" என்று கவலைப்பட்டது குழந்தை.

"பசிக்கும்; பயப்படாதே!" என்றார் கடவுள்.


"பிள்ளையவர்களா! வரவேணும், வரவேணும்; பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே; உங்களைக் காணவில்லையே என்று கவலைப் பட்டேன்" என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான் பகதூர் ஓடி வந்தது. எல்லோரையும் கும்பிட்டுக்கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.

"உட்காருங்கள், உட்காருங்கள்" என்றார் திவான் பகதூர்.

கந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, "பரவாயில்லை; சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணி வைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம்; உங்கள் நிருத்திய கலாமண்டலியில் வசதி பண்ணினா சௌகரியமாக இருக்கும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

திவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள்வாங்கின. கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும் மோவாய்க்கட்டையிலுமாக வைத்துக்கொண்டு "உம்", "உம்" என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

"இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள்" என்று உறவைச் சற்று விளக்கிவைத்தார் கந்தசாமிப் பிள்ளை.

"நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா?" என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.

கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் "நாங்கள் ஆடாத இடம் இல்லை" என்றாள் தேவி.

"என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்று தான் யோசிக்கிறேன்" என்றார் வர்ணபேத திவான் பகதூர்.

"பெண் பார்க்க வந்தீரா அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ?" என்று கேட்டாள் தேவி.

"அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும் கானாவுக்கு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே பிரஸிடெண்டாக இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள் தான் கறுத்திருக்கும்."

"உம்ம மண்டலியுமாச்சு, சுண்டெலியுமாச்சு!" என்று சொல்லிக் கொண்டே தேவி எழுந்திருந்தாள்.

"இப்படி கோவிச்சுக்கப்படாது" என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.

"இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்த மாதிரி இந்தப் பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை வாங்க வேணும். ஒரு முறை தான் சற்றுப் பாருங்களேன்" என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை.

"சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம்?" என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். "சரி, நடக்கட்டும்!" என்று சொல்லிக்கொண்டு இமைகளை மூடினார்.

"எங்கே இடம் விசாலமாக இருக்கும்?" என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.

"அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே" என்றார் கடவுள்.

"சரி" என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.

சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.

மயான ருத்திரனாம் - இவன்
மயான ருத்திரனாம்!

கதவுகள் திறந்தன.

கடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.

மறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோ ட, காலைத் தூக்கினார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.

"ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும்."

"சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு" என்று அதட்டினார் திவான் பகதூர்.

ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார் கடவுள்.

"ஓய்! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும்? புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும்; புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொள்ள வேணும்; கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும்! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதல்லே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை!" என்றார் திவான் பகதூர்.

ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டுவிடவில்லை. "கந்தசாமிப் பிள்ளைவாள், நீர் ஏதோ மருந்து கொடுத்துக்கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் பார்க்க முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட வேண்டாம்?"

கால் மணி நேரங்கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு பேரும் மௌனமாக இருந்தார்கள். "தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே!" என்றார் கடவுள்.

"நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப் பிடிக்கவில்லை; வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே!"

கடவுள், 'ச்சு' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.

"அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ!"

"உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்" என்றார் கடவுள்.

"உங்களைப் பார்த்தாலோ?" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்றார் கடவுள்.

"உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.

மேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது.

"கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து" என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.

"தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை.


 நன்றி - கலைமகள், அக்டோ பர், நவம்பர் 1943 ,விக்கி பீடியா

Tuesday, January 24, 2012

கூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ்)

1.பூ பறிக்கும் நோம்பியாம்.. ஒரு பூவை செடியில் இருந்து பிரிக்கறதைக்கூட ஒரு விழாவா கொண்டாட தமிழனாலதான் முடியும்

-----------------------------------

2. சினிமா டாக்டர்ஸ் எப்புடி நாடி புடிச்சே கர்ப்பமானு கண்டுபுடிக்கிறாங்க ? 

இன்னமும் கூட கிராமங்களில் நாட்டு வைத்தியர்கள் நாடிபார்த்து சொல்வதுண்டு

-----------------------------------

3. நாடாளும் மன்னனிவன் காவியத்தில் ஓர் தலைவன்.. நாட்டில் உள்ள அழகர்களில் ஆயிரத்தில் இவன் ஒருவன்#happyBdayMGR

-------------------------------

4.  monkey குல்லாவின் பெயர்க் காரணம் எதுனா இருக்கா?? 


கில்லி படத்துல அணில் அதை போட்டுக்கிட்டு கபடி கபடினு ஒரு ஃபைட் போட்டாரு, அதுல இருந்து??

----------------------------------

5. ஜெ ஒரு அபூர்வ சிந்தாமணி - இரா .செழியன் #உங்க இயற்பெயர் ஜால்ரா மணியா?

-----------------------------


6.ஜல்லிக்கட்டுக்கும்  ஜல்லிக்கல்லுக்கும் என்ன வித்தியாசம்?


ஜல்லிக்கட்டு சேலைகள் வேடிக்கை பார்க்க காளைகளின் வீர விளையாட்டு.. ஜல்லிக்கல்லு சாலைகள் ஓரம் குவித்து  வைத்து அரசு நடத்தும் பம்மாத்து

----------------------------------

7. முக நூல்ல என்ன செஞ்சுட்டு இருந்தீங்க மேடம்?


ஹி ஹி ஒரு லூசுப்பையனுக்கு நூல் விட்டுட்டு இருந்தேன்.. ஆனா அவன் முகம் கொடுத்து பேசலை


-------------------------------------

8. பெண்ணின் மனதில் இடம் பிடிக்க,  ஆண் அவன் மூளையை செயல் படுத்த வேண்டும்


.அதெப்பிடி? மூளை வேலை செஞ்சா லவ் பண்ணுவானா? லாஜிக் இடிக்குதே?

---------------------------------------

9. டாக்டர், உடம்பு கொதிக்குற மாதிரியே இருக்கு பட் பீவர் மாதிரி இல்ல,இதுக்கு என்ன பண்ணலாம்?

யோவ், இது ஹாஸ்பிடல் , மைண்ட் இட்

-------------------------------------

10. கூகுள் பிளஸ் பற்றி சொல்லு


18 + மேட்டர் ஏதாவது கேட்டா கொஞ்சம் ட்ரை பண்ணலாம், ஏன்னா எனக்கும் 19 வயசுதான் ஆகுது. ஆனா கூகுள் பிளஸ் பற்றி கேட்டா எனக்கு என்ன தெரியும் ?

-----------------------------------------

11..இரும்பு மனிதர்னு பேர் எடுத்த தலைவர் எப்படி லவ்வுல மாட்னாரு?


மகளிர் அணித்தலைவிக்கு காந்தக்கண்களாம்

-----------------------------------

12. என்னதான் புதுமுக நடிகைன்னாலும் இப்படியா பேர் வைப்பாங்க?

என்ன சார் நீங்க? அமலா பால் வைக்கலாம், விமலா ஹார்லிக்ஸ் வைக்கக்கூடாதா?

--------------------------------------


13.  தலைவர் அணு உலைக்கு ஆதரவா பேசறாராமே?

 பின்னே? அவர் சம்சாரம்  அனு சமையல் பண்றதும், உலை வைப்பதுவுமே  பெருசு, இதுல..?


------------------------------------

14. .சசிகலாவுக்கு  மட்டுமே கட்டுப்பட்டவனாக நான் இருக்கிறேன் - நடராஜன் #  ஏகப்பட்ட அடி வாங்கி கட்டு போட்டவன்னு வெளில பேசிக்கிட்டாங்களே?


--------------------------------

15. பிரபல ட்வீட்டர் -கண்ணாடிய கழட்டுங்க. ஹீரோயினுக்கு டாடி மாதிரி இரு்ககு.

மொக்கை ட்வீட்டர் - கிளாஸ் கழட்டுனா தாத்தா மாதிரி இருக்கும், OKவா?

--------------------------------


  16. ட்விட்டர்னால பெண்களுக்கு எந்த யூஸ்ம் இல்லைன்னு எவனும் இனி சொல்ல முடியாத

எப்படிசொல்றீங்க?

சாம்பார், ரசம் செய்வது எப்படி?னு ட்விட்ஸ் வருதே

------------------------------


17. சமையல் குறிப்பில் ஆண்களுக்குத்தானே யூஸ்?

நோ நோ , ஆண்கள் ஆல்ரெடி அனைத்தும் அறிந்தவர்கள். இந்தக்கால பெண்களுக்குத்தான் அதன் யூஸ் அதிகம்

-----------------------------------


18 . சசி' தரப்பு, தி.மு.க.,வுக்கு ஆதரவு ! : அடுத்து நடக்கப் போவது என்ன? # புதிய பார்வை இதழில் நடராஜன் கலைஞரை பாராட்டி ஜால்ரா அடிப்பார்


-------------------------------


19. . அர்ஜூனின் காட்டுபுலிக்கு ஏ சான்று! # டைட்டில் COTடுப்புலியா?

--------------------------


20. தாண்டவம் படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோயினாகிறார் எமி ஜாக்சன்! # இனி டாமி ஜாக்ஸன் வள் வள் லொள் லொள்?

என் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை

Illusion picture 
                                                         
ரத்னா புடவை கடையே செல்வாவுக்காக காத்திருந்தது. செல்வா வந்தபின்தான் கடையை திறக்கனும்னு முதலாளி சொல்லிட்டார். செல்வா அந்த கடையின் சேல்ஸ்மேன்.


ஒரு சேல்ஸ்மேனுக்காகவா கடை திறப்பதில் தாமதம் பண்றார் முதலாளி. . ஆனாலும்,  முதலாளி செல்வாவுக்கு ரொம்பதான் இடம் குடுக்குறார். ன்னு மற்ற சேல்ஸ்மேன்கள் முணுமுணுக்க தொடங்கிய சமயத்தில் அவசர அவசரமாக கடைக்குள் நுழைந்தான் செல்வா.


வழிகின்ற வியர்வையை துடைத்தபடியே முதலாளி அறைக்குள் சென்ற செல்வா, சார் இன்னிக்கு என் மனைவிக்கு பிறந்த நாள். அதனால கோவிலுக்கு போயிட்டு வர கொஞ்சம் லேட்டாகிடுச்சு. மன்னிச்சுக்கோங்க சார் என்றான்.

 சரி சரி போய், வேலையை பாரு. குடோனுக்கு போய் நல்ல சேலையா பார்த்து செலக்ட் பண்ணி, அதை பொம்மைகளுக்கு கட்டின பிறகுதான் கடையை திறக்கனும். ம் ம் சீக்கிரம் போய் வேலைகளை பாரு. சாய்ந்தரம் வீட்டுக்கு போகும்போது என்னை பார்த்துட்டு போ.


சரி சார் என்று சொல்லி அறையை விட்டு வந்து குடோனுக்கு போய் இருப்பதிலேயே நல்ல புடவையாய் தேர்ந்தெடுத்து வேகவேகமாக பொம்மைகளுக்கு கட்ட ஆரம்பித்தான்.

மத்த கவுண்டர்களைவிட இவன் கவுண்டர்லேயே பெண்கள் சேலையை எடுக்க போட்டியிட்டனர். அண்ணா இந்த சேலையை எப்படி கட்டுறதுன்னு கொஞ்சம் கட்டி காட்டுகங்கண்ணா, தம்பி இந்த முந்தானையை எப்படி சொருகனும்ன்னு கொஞ்சம் செஞ்சு காட்டேன்.  சார், இந்த சேலை சாயம் போகுமான்னு ஆளாளுக்கு கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி அவர்கள் கேட்கும் புடவையை எடுத்து தந்து வியாபாரத்தை கவனித்தான்.

மணி எட்டடித்ததும் எல்லாரும் துணிகளை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, வீட்டிற்கு செல்ல துவங்கினார்கள். ரவியும், செல்வாவும் பேசிக்கொண்டெ முதலாளி அறை நோக்கி செல்ல துவங்கினர்.

டேய் ரவி! எதுக்குடா என்னை முதலாளி வீட்டுக்கு போகும்போது பார்த்துட்டு போக சொன்னார்.

ம்ம்ம் துரை சொல்லாம கொள்ளாம லேட்டா வந்தீங்களே, அதுக்கு பாராட்டு பத்திரம் வசிக்கத்தான் வர சொல்லியிருக்க போறாரு. உன் சீட்டை டர்ருன்னு கிழிக்கத்தான்

அப்பிடியா ரவி! எனக்கு பயமாயிருக்குடா. நீயும் கூட வாடா,

டேய் செல்வா உன்கூட வந்தா என் சீட்டும் கிழியும். நீ போ. முதலாளி ரொம்ப திட்டினால் நீ பட்டுன்னு கால்ல விழுந்துடு என்ன? நான் வரட்டா நாளைக்கு பார்க்கலாம்.

சரிடா என்று உதடு உச்சரித்தாலும் ஊரில் இருக்கும் கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டு முதலாளி அறைக்குள் நுழைந்தான் செல்வா.

சார், வீட்டுக்கு போகும்போது பார்த்துட்டு போக சொன்னீங்க. இன்னிக்கு மனைவிக்கு பொறந்த நாள் என்பதால்தான் லேட்டாகிட்டுது. இனி இதுமாதிரி லேட்டா வர மாட்டேன் சார், மன்னிச்சுடுங்க சார்.

அட மன்னிப்புலாம் எதுக்கு செல்வா. பத்து நிமிஷம் லேட்டா கடை திறந்ததுனால ஒண்ணும் குடி முழுகிடாது. நீ பொம்மைகளுக்கு சேலை கட்டிவிடும் அழகை பார்க்குறதுக்காகவே பொண்ணுங்கள்லாம் நம்ம கடைக்கு வராங்க.   சாயம் போன புடவைக்கூட நீ பொம்மைகளுக்கு கட்டினால் அந்த புடவைக்கு அழகு கூடி அது போல புடவைதான் வேணும்ன்னு அடம்புடிச்சு பொண்ணுங்க வாங்கிக்கிட்டு போறாங்க.

உண்மையை சொல்லப்போனால், நீ வந்தப்பின்  புடவை விக்குறது அதிகம்தான். அதனால, இன்னிக்கு உன் பொண்டாட்டிக்கு பொறந்த நாள்ன்னு சொன்னியே இந்தா இந்த புடவை கொண்டு போய் உன் பொண்டாட்டிக்கு கட்டிவிடு அதுக்காகத்தான் உன்னை வர சொன்னேன் போய் பொண்டாட்டி கூட ஜாலியா இரு.

அட வெட்கப்படாதே செல்வா, வெறுங்கையோட போகாதே இந்தா இந்த ரூபாயில கொஞ்சம் ஸ்வீட்டும், நிறைய பூவும் வாங்கிக்கிட்டு போ பொண்டாட்டி சந்தோஷப்படுவா. கூச்சப்படாதேடா  நீ என் மகன் போல எனக்கூறி ஐநூறு ரூபாய் தாளை திணித்தார்.

சரிங்க சார் என்று கூச்சப்பட்டவாறே வாங்கிகொண்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். ஸ்வீட் ஸ்டாலை கண்டதும் முதலாளி சொன்னது நினைவுக்கு வர, அவளுக்கு ரசகுல்லான்னா ரொம்ப பிடிக்கும் என்பது நினைவுக்கு வர, ஒரு கிலோ ரசகுல்லா வாங்கி கொண்டான். 

நடைப்பாதை கடையில் வழக்கமாக பூ விக்கும் பாட்டியிடம் அவளுக்கு முல்லைன்னா ரொம்ப பிடிக்கும் என்பது நினைவுக்கு வர பத்து முழம் மல்லி குடு பாட்டின்னு கேட்கும்போது என்ன  வழக்கத்தைவிட அதிகமா பூ வாங்குறே,  இன்னிக்கு என்னடா விசேஷம்ன்னு கேட்ட பாட்டிக்கு,  இன்னிக்கு என் பொண்டாட்டிக்கு பொறந்த நாள் பாட்டி. 

பார்த்துடா பத்து முழம் மல்லிப்பூ வாங்கிட்டு போறே, நாளைக்கு நீ வேலைக்கு போகனும் பொங்கல் நெருங்குறதால உடம்பு டயர்டாகி லீவு போட்டே முதலாளி வேலையை விட்டே தூக்கிடுவார். ச்சீ போ பாட்டின்னு சொல்லி ”மல்லிகை இந்த மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா”ன்னு ஹம்மிங்க் செய்தவாறே, கதவை திறந்து வீட்டுக்குள் சென்றான்.

நிர்மலா, இன்னிக்கு நான் உன் பொறந்த நாள்ன்னு கோயிலுக்கு போயிட்டு வேலைக்கு போக லேட்டாகிட்டுது. கடை திறக்காமல்ன்னு ஆரம்பிச்சு மூச்சு விடாமல் காலையில் ஆரம்பித்து பூக்கார பாட்டியின் கிண்டல் வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தவாறே.. முதலாளி தந்த சேலை நீ ரொம்ப நாள் ஆசையா கேட்டியே அந்த கலர் அந்த டிசைன். கடையில இருக்குற பொம்மைக்குலாம் நான் புடவை கட்றேன் என் ஆசை பொண்டாட்டி உனக்கு நானே இன்னிக்கு புடவை கட்டிவிடப்போறேன் என்றவாறே..,மளமளவென புடவைக்கு மடிப்பு எடுத்து அமரர் ஆன  மனைவியின் சிலைக்கு சேலை கட்ட ஆரம்பித்தான் செல்வா...,

Monday, January 23, 2012

விஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா

http://tamilnewsa2z.com/uploaded_files/news_images/1323322753831.jpgஏ.ஆர்.முருகதாஸ் படத்தில், விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
சி.பி - அட துர்பாக்கியமே.. 

வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். படத்தில்

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார். 
சி.பி - அண்ணன் தாணு  விளம்பர மன்னன்.. படத்தை பிரமாதமா புரொமோட் பண்ணுவாரு, ஆனா திரைக்கதைல கோட்டை விட்டுடுவாரு..  டைரக்டர் கிட்டே அது பற்றி டிஸ்கஸ் பண்ண மாட்டார்..



கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது.

விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி - 65 கோடி அரோகரா அரோகரா அரோகரா  
http://farm8.staticflickr.com/7009/6486956193_71e69ac832_z.jpg
1. விஜய் - இனி முருகதாஸ் படத்தில் நடிக்க மாட்டேன்

நிருபர் - சார், சும்மா காமெடி பண்ணாதீங்க, வேற யார் படத்துல நடிச்சிருக்கீங்க?

-------------------------

2. முருகதாஸ் - இந்த சீன்ல நீங்க கண்டிப்பா நடிச்சே ஆகனும்

விஜய் - இது டூயட் சீன். எதுக்கு கண்டிப்பு? அன்பா நடிக்கறேனே?

-------------------------------------
3. நடிக்க சொல்லி வற்புறுத்திய முருகதாஸ்- மூட் அவுட் ஆனா விஜய்! # இயல்பா இருக்கனும், நடிக்க கூடாதுங்கறது அவர் பாலிஸி போல

---------------------------------------
4. ஆக்‌ஷன் படத்துல எதுக்கு சந்தோஷ் சிவனை ஒளிப்பதிவாளர் ஆக்குனீங்க?  

முருகதாஸ் - அப்டியாவது ஹீரோ அழகா தெரியறாரா?ன்னு பார்க்க

----------------------------------------

5. முருகதாஸ் - துப்பாக்கில காஜல் அகர்வால் தான் உங்களுக்கு ஜோடி 

விஜய் -  காஜல் மட்டும் ஓக்கே, அகர்வால் வேணாம்

-----------------------------------

6. தல போதித்தது - வாக்கிங்க் போறது  ஆரோக்யத்துக்கு நல்லது 

அணில் போதித்தது - உம்மணாம்மூஞ்சியா இருந்தா சினிமால ஜெயிக்கலாம்

---------------------------------

7. முருகதாஸு  - நீங்க சூர்யா அளவுக்கு நடிக்கலை

விஜய் - அப்போ நான் ஓரளவாவது நடிச்சேன்கறீங்க? சக்சஸ் , எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க

--------------------------------------

8.தல - நடப்பதெல்லாம் நன்மைக்கே  ( பில்லா)

அணில் - யாரோ டேலண்ட்டா படம் எடுக்கறாங்க, எனக்கு நல்ல பேர் வந்துடுது ( நண்பன் , குஷி ,ஃபிரண்ட்ஸ்)

----------------------------------------

9. உங்க முதல் இரவு எப்படி இருந்துச்சு?

விஜய் ரசிகன் -  ALL IS WELL ,

அஜித் ரசிகை - ஹூம் “நடந்துட்டே” இருக்கு

--------------------------------------

10. துப்பாக்கி படத்துல  புல்லட் நான் தான் - விஜய் # புல்லட் புரூஃப் ஜாக்கெட் எங்கே கிடைக்கும்?


-------------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzLNCoYn0sWTWof8ynmMkJsEKaz569F2cSjpo9oR469b2YWqFjwZBT5sxEmf0Z0QU4wSO6g0CpOrymUZHFZzKvFFkyHq81x3UC7SXdtIACAwMNXgU4lzGAm9POun6mGygESK4o96VBQsg/s1600/0.jpg
11. இனி வரும் படங்களில் என் ரசிகர்களை குஷிப்படுத்துவேன் - விஜய் # படுத்துவேன்னு சுருக்கமா சொல்லி இருக்கலாம்


----------------------------------------

12. ஷங்கரின் முதல்வன் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் வருத்தம் தான் - விஜய் # அண்ணே, அதுல ரகுவரன் 6 அடி , மணீஷா  67 கிலோ யோசிங்க


--------------------------------------------

13. 1000 சொல்லுங்க. அஜித் எவ்ளவோ கஷ்டப்பட்டு, ஏகப்பட்ட கெட்டப் சேஞ்ச் எல்லாம் செஞ்சுதானே ஜெயிச்சாரு? எங்காளு விஜய் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்  நோ கெட்டப் சேஞ்ச்

-------------------------------------

14. என் படங்களில் பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன்:விஜய் # நீங்க புடுங்கறது எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான் அண்ணே


---------------------------------------------

15. ரஜினி படத்துக்கு equalஆ ஒரு படம் எடுக்கணும்-விஜய்# நாட்டுக்கு ஒரு நல்லவன், பாபா மாதிரியா?

-------------------------------------


http://tollywoodicon.com/wp-content/uploads/2011/05/kajal-agarwal1.jpg
16. அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார்-விஜய் # ஓஹோ, அதுதான் படத்துல இப்படி அறுக்கறீங்களா?

--------------------------------

17.என் படத்தில் பஞ்ச் டயலாக்குகளை திணிக்க மாட்டேன். சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன்-விஜய் # அண்ணே, சீன் ஓடறப்ப எதுக்கு வசனம்?

-----------------------------------

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 1

நான் அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சுட்டிருந்தேன். சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல் நிலைப்பள்ளி.. எங்க வீடு பிராட்டி அம்மன் கோவில் அருகே இருந்துச்சு.. எங்க வீட்டுக்குப்பின்னால ஆண்டவர் பவர் பிரஸ் என ஒரு அச்சகம் இருந்துச்சு.. ஸ்கூல்க்கு போக 3 கிமீ நடக்கனும். ஃபிரண்ட்ஸ் சிலர் சைக்கிள்லயும், சிலர் பஸ்லயும் அவங்கவங்க வசதிக்கு தக்க படி போய்ட்டு இருந்தாங்க.. டெய்லி அப் &; டவுன் நடக்க எனக்கு ரொம்ப போர் அடிச்சுது.. அதுக்கு ஒரு ஐடியா கண்டு பிடிச்சேன்.. ஆண்டவர் பவர் பிரஸ்ல ராஜாமணி அண்ணன் இருந்தார்.. அவரை ஃபிரண்ட்ஷிப் பிடிச்சுக்கிட்டேன்.. அங்கே பைண்டிங்க்கு வரும்  லயன் காமிஸ், முத்து காமிக்ஸ் , அம்புலி மாமா, ரத்னபாலா, பால மித்ரா போன்ற புக்ஸ் எல்லாம் டெயிலி ஒண்ணா எடுத்துட்டு போய் வாக்கிங்க் ரீடிங்க் பண்ணிட்டு இருந்தேன்..


ஆர்ச்சி, ஸ்பைடர்மேன், இரும்புக்கை மாயாவி என்னை கவர்ந்த கதா பாத்திரங்கள்.. துப்பறியும் சாம்பு, சங்கர்லால் ரொம்ப பிடிக்கும்.. 3 வருடங்கள் ஏகப்பட்ட புக்ஸ் படிச்சாச்சு. பிளஸ் ஒன் படிக்கறப்ப சென்னிமலை லைப்ரரில தென்றல் என்ற பெயர்ல ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பிச்சோம்.. அதுக்கு கூட்டாளிங்க அய்யப்பன் ( இவர் பின்னாளில் ஆனந்த விகடன் சொல் வனத்தில் 6 கவிதைகள் , கணையாளியில் 4 கவிதைகள் எழுதினார்), அப்புறம் அங்குராஜ்.. இருவரும் கவிதை கார்னரை கவனிச்சுக்கிட்டாங்க. இதுல அங்குராஜ் பற்றி சொல்லியே ஆகனும்.. அவர் எழுத்துக்கள் அச்சில் பார்ப்பது போலவே இருக்கும்.. இவர் தான் புக்ல தென்றல் கை எழுத்துப்பிரதில எழுதுவாரு.. அங்குராஜ் காதல் கவிதைகள் எழுதுவாரு.. அய்யப்பன் மரணம், வறுமை இந்த மாதிரி வெரைட்டியா எழுதுவாரு.. அதுல பாதி கவிதைகள் எனக்கு புரியாது..  நான் பனிப்பூக்கள் என்னும் தொடர் கதை, இது மழைக்காலம் என்னும் கட்டுரைத்தொடர் எழுதி வந்தேன்

மாதம் ஒரு முறை வெளியிட்டோம்.. வாசகர்கள் தங்கள் கருத்துக்களை வெளீயிட அந்த புக்கின் கடைசியில் 10 பக்கங்கள் இடம் விட்டோம்.. வாரா வாரம் ஞாயிறு அன்று லைப்ரரி போய் யாராவது கமெண்ட்ஸ் போட்டிருக்காங்களா?ன்னு ஆர்வமா பார்ப்போம்.. 6 மாசம் இப்படியே போச்சு.. சக்திவேல் என்னும் நண்பர் வேர்கள் என்ற பெயரில் புதுசா ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பிச்சார்.அதே போல் ராஜ் மோகன் என்பவர் இதயம் என்னும் புக் ஆரம்பித்தார்.. இப்போ போட்டி வந்தாச்சு ஒரே லைப்ரரி 3 புக்ஸ் .. இதயம் ராஜ் மோகன் பற்றி ஒரு தகவல் உயிரின் எடை21 அயிரி என்னும் படத்தில்  விதவை ஹீரோயினின்.  குழந்தையாக ஒரு மழலை வருமே அந்த பாப்பா ராஜ்மோகனின் வாரிசு..


 பிளஸ் டூ படிக்கறப்ப ஸ்கூல்ல லஞ்ச் டைம்ல  க்ளாஸ் போர்டுல கவிதை எழுதறது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு.. அவனவன் அவன் ஆள் பேர் சொல்லி அவளுக்கு புரியற மாதிரி கவிதை எழுத சொல்லுவான். நானும் போர்டுல ஏதாவது கிறுக்குவேன். அப்போ எல்லாம் ஜோக் எழுதற ஐடியா எல்லாம் வர்லை. கவிதை, கட்டுரை, தொடர் கதை மட்டும் தான்..

கே எஸ் சண்முக சுந்தரம் என் பிளஸ் டூ கிளாஸ் மேட்.ஆள் செம ஷோக்குப்பேர்வழி. இவர் யார்னா தென்றல் பத்திரிக்கையோட  தூண்களான அங்குராஜ், அய்யப்பன் இவங்களோட அண்ணன்.. ( மூவரும் சகோதரர்கள்) ஈரோட்ல தேவி ஹாஸ்பிடல்ல ( சவீதா பஸ் ஸாப் அருகே, மாமன் பிரியாணி ஸ்டால்) ஒரு மெடிக்கல் ஷாப் ஓனர் அவர்.. அவர் கே பாக்யராஜின் தீவிர ரசிகர்.. பாக்யா வார இதழ் ரெகுலரா வாங்குவார்.. அதுல அட்டைப்பட கமெண்ட் போட்டி வைப்பாங்க.. அதுல கலந்துக்குவார்.. மாசம் 4 புக் வருதுன்னா அதுல 2 புக்ஸ்ல இவர் கமெண்ட் வந்துடும்..


நாங்க எப்போ அவர் கடைக்குப்போனாலும் அந்த புக்கை காட்டி அவர் கமெண்ட்டை சிலாகிச்சு ஏதாச்சும் சொல்வார்.. ஆரம்பத்துல எனக்கு அதுல அவ்வளவா விருப்பம் இல்ல. போகப்போக கொஞ்சம் ஆர்வம் வந்துச்சு.நாங்களே வாலண்ட்ரியா அவரை கேட்க ஆரம்பிச்சோம். ஒரு தடவை பேச்சு வாக்குல அவர் ஒரு சவால் விட்டார். பாக்யா வார இதழ்ல உன்னால ஒரு அட்டைப்பட கமெண்ட் வர வைக்க முடியுமா?ன்னார். நான் சிரிச்சுக்கிட்டே இதெல்லாம் நமக்கு ஜூஜூபி மேட்டர் அப்டின்னேன் ( ஜூஜூபின்னா என்ன அர்த்தம்னு எனக்கு சரியா தெரியாது.. இருந்தாலும் சொல்லி வெச்சேன்.)

அப்போ இருந்து 6 மாசங்கள் தொடர்ந்து முயற்சி செஞ்சும் ஒண்ணு கூட வர வைக்க முடியல.. அப்புறமாத்தான் பாக்யாவை நுணுக்கமா கவனிக்க ஆரம்பிச்சேன். இத்தனை நாளா சித்தன் போக்கு சிவன் போக்குன்னு எழுதிட்டு இருந்தேன்.. இப்போதான் அவங்க என்ன ஸ்டைல்ல கமெண்ட்சை பிரசுரம் பண்றாங்கன்னு நோட் பண்ணேன்.. அப்புறம் அதே ஸ்டைல்ல எழுத ஆரம்பிச்சேன். 4 வது வாரமே ஒரு கமெண்ட் வந்தது.

இப்போ நான் பாக்யா சர்க்குலேஷன் எவ்ளவ்னு கடைக்காரர்ட்ட விசாரிச்சேன்.. அப்போ 3 லட்சம் சொன்னாங்க.. 3 லட்சம் பேரு இதை பார்க்கறாங்க அப்டின்னு அவர் கிட்டே சொன்னேன்.. அப்போ அவர் சொன்னாரு. இதென்ன பெரிய அதிசயம்? ஆனந்த விகடன்,குமுதம் இந்த ரெண்டும்தான் லீடிங்க் புக்ஸ்.. 8 லட்சம் டூ 10 லட்சம் சேல்ஸ்.. அதுல வர வைக்க முடியுமா?ன்னு சவால் விடும் தோரணைல கேட்டார்.. ஓக்கே வர வைக்கறேன்னு சொல்லிட்டு நேரா லைப்ரரி போனேன்..


 ஒரு ரஃப் நோட்ல எல்லா வார இதழ்கள், மாத இதழ்கள்  முகவரியை குறிச்சுக்கிட்டேன்.. எல்லா புக்ஸும் என்ன ஸ்டைல்ல படைப்புகள் வெளியிடறாங்கன்னு நோட் பண்ணேன்.. லைப்ரரிக்கு வர்றவங்க எந்த படைப்புகளை அதிகம் படிக்கறாங்கன்னு பார்த்தேன்..

சினிமா, அரசியல் கட்டுரை முதல் இடம் பிடிச்சது-- சிறுகதைகள் சிலர் தான் படிச்சாங்க.. அதிகம் பேர் வாரமலர் அன்புடன் அந்தரங்கம் பகுதியை படிச்சாங்க. கிசு கிசு செய்திகள் விருப்பமா படிச்சாங்க.. அப்போவே முடிவு செஞேன் , நம்ம படைப்புகள்ல சினிமா மேட்டர் , நடிகைகள் சம்பந்தப்பட்ட யூகங்கள்,. கிசு கிசுக்கள் இருக்கனும்னு..

எஸ் பி ராமு விவேக் பப்ளிகேஷன்ஸ் ல சூப்பர் நியூஸ் ல ஒரு ஜோக் போட்டி வெச்சிருந்தார். அந்த டைம்ல நக்கீரன் கோபால் வீரப்பன் விவகாரத்துல அரசுத்தூதரா போன நேரம்.. அதை வெச்சு ஒரு ஜோக்

இண்டர்வியூவுக்கு வந்திருக்கறவங்க எல்லாம் அரிவாள் மீசையோட இருக்காங்களே..ஏன்?


அரசுத்தூதர் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாம்.. ( இதுதான் நான் எழுதி பிரசுரம் ஆன முதல் ஜோக்)

இந்த ஜோக் முதல் பரிசு வாங்குச்சு ரூ 15 பரிசு .. ( பொதுவா சன்மானத்தொகை கம்மியா இருந்தாலும் போட்டில கலந்துக்கிட்டு ஜெயிக்கற சந்தோஷம் தான்  டாப்பா இருக்கும்)

ஆனந்த விகடன் ல ஜோக் வர வைக்க தலை கீழா நின்னு தண்ணி குடிக்க வேண்டியதா இருந்தது


ஏன்னா அந்த காலத்தில் பாஸ்கி,  ( ஜெயா டி வி  அரி கிரி அசெம்ப்ளி ) மிமிக்ரி சேகர், சிம்பு தேவன் ( இம்சை அரசன் 23ம் புலிகேசி இயக்குநர்) இந்த மாதிரி ஆட்கள் தான் ரெகுலரா எழுதிட்டு இருந்தாங்க.. வி சாரதி டேச்சு என்பவர் ஜோக்ஸ் 2 பக்கம் வரும்.. வார்த்தை ஜாலம் தான் இருக்கும், ஆனா சிரிப்பு அதிகம் வராது.. ஆனாலும் தொடர்ந்து அவருது வந்துட்டே இருந்துச்சு.. நான் ஆனந்த விகடன் ஸ்டைல்ல பல ஜோக்ஸ் அனுப்பினேன் எதும் வர்லை.. 6 மாசம் வாரா வாரம் 20 ஜோக்ஸ் அனுப்புவேன். ம்ஹூம் வந்த பாட்டை காணோம்.. அப்புறம் 6 மாசம் கழிச்சு அத்தி பூத்தது போல் ஒரு ஜோக் வந்துச்சு .. அப்போ அத்திப்பூ ஆறு மாசத்துக்கு ஒரு தடவை தான் பூக்குமா?ன்னு கேட்கக்கூடாது. சும்மா ஒரு பேச்சுக்கு..

அந்த ஜோக்




கோர்ட்டில் ஜட்ஜ் - மணிபர்சை அடிச்சது நீங்க தானே?




இல்லை யுவர் ஆனர், மணி பர்சை பாலு அடிச்சான். கந்த சாமி பர்சைத்தான் நான் அடிச்சேன்

இந்த ஜோக் வந்தது சென்னிமலை சி .பி செந்தில்குமார் என்ற பெயரில். ஒரே சந்தோஷம் .. காம்ப்ளிமெண்ட்ரி காப்பி வீட்டுக்கு வந்துச்சு . செம ஜாலி தான்.. ஒரு படைப்பாளியின் உச்ச பட்ச சந்தோஷம் அவன் பெயரை அச்சில் பார்ப்பதும், அவனது படைப்புகளை மற்றவர் அதுவும் முகம் தெரியாதவர்கள் பாராட்டுவதும் தான். சன்மானம், காசு பணம் எல்லாம் சும்மா.. அங்கீகாரம் தான் ரொம்ப முக்கியம்..

அந்த சந்தோஷத்துல ஒவ்வொரு சண்டேயும் ஜோக்ஸ் எழுத ஆரம்பிச்சேன்.. வாரா வாரம் 50 ஜோக்ஸ்.. இந்த ஜோக்குக்கான KNOT எங்கே பிடிப்பது? அதுக்கு ஒரு ஐடியா செஞ்சேன்.. எல்லா புக்ஸூம் வாசிப்பது.. அதுல வர்ற ஏதாவது ஒரு வரில இருந்து ஜோக் எடுப்பது.. அல்லது ஆல்ரெடி வந்த ஜோக்கை கொஞ்சம் மாற்றி உல்டா பண்ணுவது.. சில ஜோக்ஸ் படிச்சா சிரிப்பே வராது.. அதை சிரிப்பு வர்ற மாதிரி கொஞ்சம் மாற்றி போடுவது என ஆரம்பிச்சேன்.

இந்த சமயத்துல சில நண்பர்கள் வெறும் ஜோக்னே போய்ட்டு இருந்தா உன் படைப்புத்திறன் மழுங்கிடும் , இலக்கியப்பத்திரிக்கைகளில் கவனம் செலுத்துன்னாங்க.. சரின்னு பல பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிச்சேன்.. கணையாளி -ல வந்த என் முதல் கவிதை.. 





ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி

ஜோடனை இல்லாத பிம்பமாய்

உன் முகம் இருக்கும்.

சொர்க்கத்துக்குப்போடப்பட்ட

ஒற்றையடிப்பாதை மாதிரி

உன் தலை வகிடு இருக்கும்.


பளிங்குக்கற்களில் ஊற்றிய

பாதரசம் போல்

அலை பாய்ந்து கொண்டே

உன் கண்கள் இருக்கும்.

நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில்

இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில்

உன் கூந்தல் இருக்கும்.

ஓஜோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்

உன் நாசி இருக்கும்.

தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல்

உன் உதடுகள் இருக்கும்.


 பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும்

வைத்துக்கட்டியது போல்

நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான

 மென்மையில்


 உன் கன்னக்கதுப்புகள் இருக்கும்.

இருக்கிறதா,இல்லையா என்ற சந்தேகத்தில்

கடவுளுக்கு அடுத்த சர்ச்சையாய்

நாத்திகவாதிகளுக்கு சவால் விடும்

சர்ச்சைப்பொருளாய்,

இல்பொருள் உவமை அணிக்கு

மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்


உன் இடை இருக்கும்.

குயில்கள் வெட்கப்பட்டுக்கூட்டுக்குள்

ஒளிந்து கொள்ளும் விதமாய்

உன் குரல் இருக்கும்.



நல்லவரோ,கெட்டவரோ

எல்லா மனிதரிடத்தும்

ஒரு மனித நேயம் மறைந்து கிடப்பது மாதிரி



ஒரு இதயம் இருக்கும்.

அதில் எனக்கு ஒரு இடம் இருக்குமா?

- தொடரும்..

டிஸ்கி - 1  அட்ரா சக்க லே அவுட் டிசைன், டைட்டில் டிசைன் வீடு சுரேஷ் குமார் செஞ்சு குடுத்தார், அவருக்கு நன்றிகள்.. மற்ற எல்லா வேலைகளையும் தமிழ் வாசி பிரகாஷ் செஞ்சிட்டு இருக்கார்.. அவருக்கும் நன்றிகள்.. ஏதாவது ஆலோசனைகள், மாற்றங்கள் வேணும்னா சொல்லுங்க..

டிஸ்கி -2 இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்

டிஸ்கி -3 - அட்ரா சக்க லே அவுட்ல காலியான இருக்கைகள் கொண்ட சினிமா தியேட்டர் ஏன்?னு கேட்டதுக்கு சுரேஷ் சொன்னாரு.. நீ போற படம் எல்லாம் மொக்கையாத்தானே இருக்கு.. அந்தப்படத்துக்கு கூட்டம் எப்படி வரும்?னு கேட்டு என்னை கேவலப்படுத்திட்டாரு சுரேஷ் அவ்வ்வ்

டிஸ்கி 4 - நேற்று மாலை 6 மணிக்கு  சேட்டிங்க் வந்து லே அவுட் மாற்றித்தர்றேனு வாக்கு குடுத்து சரக்கு அடிச்சு மட்டை ஆன விக்கி தக்காளிக்கு என் கண்டனங்கள்.. ஹி ஹி ஹி

Sunday, January 22, 2012

ரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த சண்டே இந்தியன்

http://lh4.ggpht.com/_3dVzeCbqCSw/Syo66vKLFMI/AAAAAAAABog/JP6fLY0XFfc/charu_thumb%5B3%5D.jpg 

இலக்கிய உலகில் பல சர்ச்சைகளில் சிக்கியவரும் , லட்சக்கணக்கான வாசகர்களைக்கொண்டவருமான சாரு நிவேதிதா பேட்டி த சண்டே இந்தியன் வார இதழில் வந்திருந்தது.. பேட்டி கண்டவர்கள் சுந்தரபுத்தன், ஷங்கர்ராமசுப்ரமணியன்

1. தமிழின் முக்கியமான சிறுகதைகளைத் தொகுத்தால் அதில் உங்கள் கதைகளும்    இடம்பெறும்..ஆனால் தற்போது சிறுகதைகள் எழுதுவதில்லையே?



சமீபத்தில் மொராக்கோ எழுத்தாளர் Tahar ben jelloun  எழுதிய Leaving tangier என்ற அருமையான நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  அதில் உள்ள பல அத்தியாயங்கள் நான் எழுதும் கட்டுரைகளைப் போலவே இருப்பதை எண்ணி ஆச்சரியம் அடைந்தேன்.  மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.  நான் எழுதும் பெரும்பாலான எழுத்துக்கள் புனைகதை, கட்டுரை என்ற இரண்டுக்கும் நடுவில் இருப்பதாகவே கருதுகிறேன். 

என் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே ஏதோ மாயாஜாலக் கதைகளில் வருவதைப் போல் என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கின்றன.  கட்டுரை, கதை என்று எல்லாமே சேர்ந்து மலையிலிருந்து விழும் அருவியைப் போல் கொட்டுகிறது.  ஒரு சமயத்தில் மூன்று மலையாள வார இதழ்களில் எழுதி வந்தேன்.  ஒன்றில் ராஸ லீலா.  இன்னொன்றில், உலக இசை.  மூன்றாவதில், இலக்கியம், அரசியல், சினிமா என்று பொது விஷயங்கள்.  இந்த மூன்றையும் படித்த என் மலையாள நண்பர் ஒருவர் “மூன்றுமே ஒன்று போல் இருக்கிறது. அனுப்பும் போது மாற்றி அனுப்பி விடாதீர்கள்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.

அமெரிக்க எழுத்தாளர் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி பற்றியும் இப்படித்தான் சொல்வார்கள்.  என் எழுத்து புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையே ஊடாடிக் கொண்டிருப்பதால் என்னைப் பொறுத்தவரை சிறுகதை, நாவல் என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லை.  என் நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையுமே ஒருவர் சிறுகதைகளாக வாசிக்க முடியும்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதிக்கு நான் எழுதி மலையாள இதழ்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட என் கடிதமே மரியோ பர்கஸ் யோசாவின் நாவலில் ஒரு அத்தியாயமாக எழுதப் பட்டிருக்கும்.  இருந்தாலும் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதாக இருந்தால், இப்போது என் மனம் ஒரு பரந்து விரிந்த கேன்வாஸில்தான் யோசிக்கிறது.  200 பக்கங்களுக்குக் குறைவாக என்னால் ஒரு புனைகதையை இனிமேல் உருவாக்க முடியும் என்று தோன்றவில்லை. காரணம் எனக்குத் தெரியவில்லை.  


2. எக்சிஸ்டென்சியலிசமும், ஜீரோ டிகிரியும் கூர்மையும், அங்கதமும், புதிய வடிவமும் கொண்ட நாவல்கள்..ஆனால் அவற்றைத் தொடர்ந்து நீங்கள் எழுதிய நாவல்கள் வெறும் செய்திக்குறிப்புகள் மற்றும் டைரிக்குறிப்புகளைப் போல் உள்ளதே?


டைரிக் குறிப்புகள் அல்ல.  ஆட்டோ பிக்ஷன்  சர்வதேச அளவிலேயே ஆட்டோஃபிக்‌ஷனை இதுவரை எழுதிப் பார்த்தவர்கள் என்று இரண்டு மூன்று பேரை மட்டுமே குறிப்பிட முடியும்.  செர்கி டெப்ரோவ்ஸ்கி என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் அவர்களில் ஒருவர்.  ஆனால் அவருடைய நாவல்கள் எதுவும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.  மொழிபெயர்க்கப்பட முடியாத ஒரு ஃப்ரெஞ்சை அவர் எழுதுவதாகச் சொல்கிறார்கள்.  என்னுடைய ஸீரோ டிகிரியைப் படித்து விட்டு அது அவருடைய எழுத்துக்கு மிக நெருக்கமாக இருப்பதாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

ஆட்டோஃபிக்‌ஷன் என்ற இலக்கிய வகையே சர்வதேச இலக்கியத்துக்குத் தமிழ் கொடுத்த கொடை என்று சொல்ல முடியும்.  அப்படிப்பட்ட இலக்கிய வகைமை என் மூலமாகவே வெளியே சென்றது.  இது ஏதோ சுயம்புவாக என் மூளைக்குள் உதித்தது அல்ல.  இந்த வகைமைக்காக நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.  ஒருவர் நகுலன்.  இன்னொருவர், ஃப்ரெஞ்ச் இயக்குனர் கொதார்.  


மேலும், தமிழில் ஒரு பழக்கம் உண்டு.  எல்லா எழுத்தாளர்களிடமுமே இப்படி ஒரு கேள்வி கேட்கப் படுகிறது.  “உங்களுடைய முந்தைய கவிதைத் தொகுப்பு நன்றாக இருந்ததே?  இப்போது வந்திருப்பது அப்படி இல்லையே?” உண்மையில் இப்படிப்பட்ட கேள்வி ஒரு எழுத்தாளனை அவமானப்படுத்தவே செய்கிறது.  இதன் பொருள் ஒன்றுதான்.  தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை தீண்டத் தகாதவர்களைப் போல் கருதுகிறது.  அந்த அவமதிப்பின் அடையாளமே இப்படிப்பட்ட கேள்விகள்.  இன்னும் குறிப்பாகச் சொன்னால், ஸீரோ டிகிரி வந்த காலத்தில் அதை என் சக எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதி தவிர வேறு ஒருத்தர் கூட  அதை சிலாகித்து ஒரு வார்த்தை சொன்னதில்லை.  இப்போது அந்த நாவலுக்கு ஒரு கல்ட் ஸ்டேட்டஸ் வந்து விட்டதால் தவிர்க்க முடியாமல் அதைத் தங்களின் பட்டியலில் சேர்க்கிறார்கள்.  என்னுடைய மற்ற நாவல்களுக்கும் இது நடக்கும்; ஆனால் 20 ஆண்டுகள் ஆகும்
http://www.andhimazhai.com/account/news/new%208.1.09%20003.jpg

3. கேரளச்சூழலை சுந்தர ராமசாமி தொடங்கி நீங்கள் வரை தொடர்ந்து புகழ்ந்து வருகிறீர்கள். அங்கு பரந்த வாசகத்தளம் இருக்கிறார்கள். ஆனால் தமிழளவுக்கு ஆழமாக இலக்கிய, விமர்சனச் செயல்பாடுகளும் விவாதங்களும் நடந்திருக்கிறதா...தமிழுடன் ஒப்பிடத்தகுந்த அளவில் சமகால எழுத்தாளர்கள் மலையாளத்தில் உள்ளார்களா? 

இல்லை.  மலையாளத்தில் மட்டும் அல்ல; இந்தியாவிலேயே இல்லை.  அருந்ததி ராயை விட சிறப்பாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள் தமிழில் 50 பேர் இருப்பார்கள்.  ஆனால், தமிழ்நாட்டில் சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டுமே மதிக்கப்படுகிறார்கள். கேரளத்தில் எழுத்தாளர்களுக்குத்தான் முதல் மரியாதை.  அங்கே ஒரு டஜன் இலக்கியப் பத்திரிகைகள் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகின்றன.  அதுவும் அவை வாரப் பத்திரிகைகள்.  இங்கே வாசகர் எண்ணிக்கை கம்மி.  இதுவே வித்தியாசம். 

4. இணையம் சார்ந்த வாசகர்களை ஏராளமாக வைத்திருப்பவர் நீங்கள். அவர்கள் ஆழமான வாசகர்கள் என்று கருதுகிறீர்களா?

இல்லை.  ஆனால் இணையம் இல்லாவிட்டால் அவர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொண்டு ஒரு மிடில் க்ளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  அதைவிட இது பரவாயில்லை.  ஆனால் எல்லோரையும் அப்படிச் சொல்லி விட முடியாது.  எனக்குத் தெரிந்து பல்வேறு சீரியஸான விஷயங்கள் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன.  முன்பு சிறுபத்திரிகைகள் இருந்த இடத்தை இன்று இணையம் எடுத்துக் கொண்டிருக்கிறது.  இணையத்தைப் பற்றிய சரியான பரிச்சயம் இல்லாதவர்களே இணைய எழுத்தாளர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  பதர்கள் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் நெல்மணிகளும் இங்கே ஏராளம் என்பதை மறந்து விடக் கூடாது.

5. தமிழில் இணையம் வழியாக முதலில் அதிக வாசகர்களை எட்டியவர் நீங்கள்.. ஆனால் தொடர்ந்து சுயதம்பட்டமும் சுயபெருமையும் அதிகமாக உங்கள் எழுத்துகளில் தொடர்கிறது..ஒரு மொழியில் இயங்கும் முக்கியமான எழுத்தாளன் இந்தளவு தனது ஆளுமையை பெரிதாக்கிக் காட்ட அலட்டிக்கொள்ள வேண்டுமா?


ஒரு கதை சொல்கிறேன்.  வெளியுலகத் தொடர்பே இல்லாத ஒரு பட்டிக்காடு.  அங்கே பிறந்து வளர்ந்த ஒருவன் வெளியே போய் படித்து விளையாடி ஒரு ஒலிம்பிக் மெடலையும் வாங்கினான்.  அதை எடுத்துக் கொண்டு தன்னுடைய பட்டிக்காட்டுக்கு வந்தான்.  தன் தாய்க் கிழவியிடம் காண்பித்துப் பெருமை கொண்டாடினான்.  ஒரு நாணயத்தைப் போல் இருந்த அந்த மெடலை எடுத்துக் கொண்டு போய் பெட்டிக்கடையில் கொடுத்துக் கொஞ்சம் புகையிலை கேட்டாள் கிழவி.  கடைக்காரனோ அதை செல்லாத காசு என்று திருப்பி கொடுத்து விட்டான்.  அந்த ஒலிம்பிக் மெடல் வாங்கியவனின் நிலையில் நான் இருக்கிறேன்.  அந்த கிராமம்தான் தமிழ்நாடு.   நான் வாங்கிய மெடல்களின் பெருமையை அறியாத இந்த ஊரில் நான் தானே அதைப் பற்றிப் பேச வேண்டும்?

உலக ஆட்டோஃபிக்‌ஷனை அறிமுகப் படுத்தியதால் ஒரு ஆங்கில தினசரி அதன் அகில இந்தியப் பதிப்பின் முதல் பக்கத்தில் என் பேட்டியைப் போட்டது. பிரதம மந்திரி போன்றவர்களின் பேட்டிதான் அப்படி வரும் என்று சொன்னார்கள்.  பிறகு, கடந்த பத்தாண்டுகளின் சிறந்த பத்து சாதனையாளர்கள் என்ற பட்டியலில் ஒருவனாக வெளியிட்டது.  அந்தப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்ற இருவரில் நானும் ஒருவன்.  இன்னொருவர், ரஜினிகாந்த்.  கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரியை மாடர்ன் ஏசியன் க்ளாசிக்ஸ் என்ற பிரிவில் பாடமாக வைத்திருக்கிறது.  இதையெல்லாம் நான் யாரிடம் போய் சொல்ல?  ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சினிமாக்காரர் தும்மினால் கூட அது தலைப்புச் செய்தியாக வருகிறது.

  எழுத்தாளனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.  அதனால்தான் இதையெல்லாம் நானே சொல்லித் தீர வேண்டியிருக்கிறது.  மேலும், எனக்குப் போலிப் பணிவு பிடிக்காது.  ஒரு மருத்துவர் தான் வாங்கிய பட்டங்களைப் போட்டுக் கொண்டுதானே மருத்துவம் பார்க்கிறார்?  அதைப் போலவேதான் நானும் செய்கிறேன்.  மேலும், நான் என்னைப் பற்றி எதையும் பெரிதாக்கிக் காட்டவில்லை.  உள்ளது எதுவோ அதை மட்டுமே சொல்கிறேன்.  எழுத்தாளர்களைக் கொண்டாடும் கேரளத்தில் இப்படி நானே என் பெருமையைச் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்ததில்லை.


6. தமிழ் சினிமா தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக எழுதியும் விவாதித்தும் வருபவர் நீங்கள் . இன்றைய தமிழ்சினிமா பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?


தமிழ் சினிமாவில் மிக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் கருணாநிதியின் குடும்பத்தினர் சினிமாத் துறையில் செய்த அராஜகத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது முடங்கிக் கிடந்தது.  இனிமேல் நிலைமை திருந்தி விடும்.  இது ஒருபுறம் இருக்க, விஷ விருட்சத்தைப் போல் பரந்து விரிந்து கிடக்கும் வணிக சினிமாதான் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆபத்து.  நல்ல சினிமா எடுப்பவர்கள் கூட வணிக சினிமாவின் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி சில பல சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.  இன்னொரு பிரச்சினை, தணிக்கைத் துறை.  சினிமா பற்றி எதுவுமே தெரியாத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சினிமாவை மதிப்பீடு செய்ய என்ன தகுதி இருக்கிறது?  இவர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமாவை யாராலும் காப்பாற்ற முடியாது.  உடனடியாக இந்த அதிகாரிகள் தணிக்கைத் துறையிலிருந்து விரட்டப்பட்டு அங்கே கலைஞர்களும், புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்.  இது உடனடியாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப கட்ட வேலை.    
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin1lZ703JltrRmx7vIUUL1o81IEpWaUVE1k6JX_j5XHuw2eYV0xvsruRfwSeZ3JrO5xCwZI4nQ6YR29qhmDTxUxG8evRr7jKTxKDQNnUbF3MDHunjSjyg7w3aW91AyFh5VyAPIX3hyphenhyphenegM/s400/CIMG0427.JPG
 
7.ஒரு ஆளுமையை திடீரென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், தூற்றுவதும் உங்களுடைய செயல்பாடுகளில் தொடர்வதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?

 என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது.  நகுலன், ஆதவன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கோபி கிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், தர்மு சிவராமு என்று என் முன்னோடி எழுத்தாளர்களை கடந்த 38 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாராட்டி வந்திருக்கிறேன்.  யாரையும் தூற்றியதில்லை.  கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன்.  என்றைக்குமே பாராட்டியதில்லை.  ஆனால் ஒரு சாமியாரைப் பாராட்டினேன்.  அவர் ஒரு போலிச் சாமியார் என்று பிறகுதான் தெரிந்தது.  அப்படித் தெரிந்த பிறகும் நான் ஏற்கனவே பாராட்டியவர் ஆயிற்றே என்பதற்காகத் தொடர்ந்து பாராட்டிக் கொண்டிருக்க முடியுமா?  இன்று என் மனதுக்கு உகந்தவனாக இருக்கும் ஒரு கவிஞன் நாளையே நடிகர் விஜய்யைப் பாராட்டி கவிதை எழுதினால் அவனைத் தூற்றத்தானே வேண்டியிருக்கும்?

8. உங்களது எழுத்துவாழ்க்கை உங்களுக்கு தந்தது என்ன?

இழந்தைதைச் சொன்னால்தானே பெற்றதைச் சொல்ல முடியும்? இழந்தவை: எழுத்துலக நண்பர்கள், குடும்பம், அன்றாட வாழ்வின் கொண்டாட்டங்களும் சுக துக்கங்களும், பணம், செக்ஸ்.  பெற்றது ஒன்றே ஒன்று: வாசக நண்பர்கள்.  மைக்கேல் ஜாக்ஸனைப் போன்ற ஒரு பாப் ஸ்டாரின் ரசிகர்களைப் போல் என் மீது உயிரையே வைத்திருக்கும் வாசகர்களும் அவர்களோடு நான் கொண்டுள்ள உறவும்தான் இந்த எழுத்து எனக்குத் தந்தது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAsayE5O8A_GSNw-r18O7XPF6CcZ22tDF3ASN3OYZHR2lAD95SzvlBGBetD4mq3aIWVXuexkXay-V6voy2etWEuJaekZtHo-IEuiMf-uoqn4EPwRK-3B8M7ONOz8IMiv8N1YY_v3nQEmU/s400/soro1.jpg


9. இளைஞர்கள் தான் உங்கள் வாசகர்கள் என்கிறீர்கள். ஆனால் உங்கள் எழுத்துகளுக்குள் நவீன வாழ்க்கையின் வேகமயமான மாற்றங்கள் சார்ந்து குறிப்பாக பாலியல் பண்பாடு சார்ந்து ஒரு அசூயை தொடர்ந்து வெளிப்படுகிறதே..இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அசூயை வெளிப்படுவது உண்மைதான்.  ஆனால் இது பாலியல் ஒழுக்கம் சார்ந்தது அல்ல.  அன்பும், அறிவார்த்தத் தேடலும் இல்லாமல் வெறும் உடல் கவர்ச்சி ஒன்றையே ஆதாரமாகக் கொண்ட இன்றைய ஆண்/பெண் உறவையே நான் கடுமையாக விமர்சிக்கிறேன்.  இருந்தும் ஏன் இளைஞர்கள் என் எழுத்தைப் படிக்கிறார்கள் என்றால் நான் அவர்களின் உலகில் இருந்து கொண்டு இந்த விமர்சனத்தைச் செய்கிறேன்.  வெளியில் இருந்து அல்ல.  அதன் காரணமாகவே அவர்கள் என் விமர்சனத்தை ஆர்வத்தோடும் பதற்றத்தோடும் எதிர்கொள்கிறார்கள். காமரூப கதைகள் மற்றும் ராஸ லீலா ஆகிய இரண்டு நாவல்களும் இளைஞர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நாவல்கள்.   இதை அவர்கள் ஒரு உரையாடலாகவே எடுத்துக் கொண்டார்கள்.  மற்ற எழுத்தாளர்கள் இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தாமல் வெளியே நின்று கொண்டு போதனைகளும் அறிவுரைகளும் செய்வதால் இந்த இளைஞர்கள் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள்.


10. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கனிமொழி பெயர் சர்ச்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரை உங்கள் புத்தக வெளியீடுக்கு அழைத்துவிட்டு பின்னர் அவரை ஊழல்வாதி என்று விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?

உங்கள் கேள்வியில் ஒரு சிறிய தகவல் பிழை உள்ளது.  கனிமொழியையும் ராசாவையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து நான் கடுமையான மொழியில் விமர்சித்து வருகிறேன்.  கனிமொழி என்னுடைய புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய அன்றுதான் ஒரு பிரபல பத்திரிகையில் ’இப்படிப்பட்ட ஊழல் செய்பவர்கள் தேசத் துரோகிகள்; இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று எழுதினேன். அதையும் படித்து விட்டுத்தான் அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்தார்.

ஆனால் இப்பேர்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை என் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என்றே நான் விரும்பினேன்.  தனிப்பட்ட முறையில் அது என் கொள்கைக்கும் வாழ்வியலுக்கும் முரணானது.  ஆனால் நான் இந்த விஷயத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.  என்னுடைய புத்தக வெளியீட்டாளரின் விருப்பத்தின் பேரிலேயே கனிமொழி அழைக்கப்பட்டார்.  இனிமேல் இது போன்ற பிழைகள் நடக்காது.  இனிமேல் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்கள் என்னுடைய வாசகர் வட்ட நண்பர்களால் மட்டுமே நடத்தப்படும்.  இனிமேல் என்னுடைய  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிய முடிவுகளை நான் மட்டுமே எடுப்பேன்.

11. ஜெயலலிதா சுயநலமில்லாதவர் என்று சமீபத்தில் துக்ளக்கில் எழுதியிருந்தீர்கள்..அது மிகையான கூற்றாக உங்களுக்குப் படவில்லையா?


 இல்லை.  ஜெயலலிதா சுயநலம் இல்லாதவர் என்றே நான் நினைக்கிறேன்.  கருணாநிதியின் குடும்பத்தில் சுமார் 500 பேர் இருப்பார்கள்.  தமிழகத்தின் அத்தனை துறைகளும் அவர்கள் கையில்தான் இருந்தன; இருக்கின்றன.  ஜெயலலிதா ஒரே ஆள்.  உலகில் தனித்து வாழும் மனிதர்கள் சுயநலம் கருத வேண்டிய அவசியமே இல்லை.

Saturday, January 21, 2012

UNDERWORLD -4 AWAKENING - ஹாலிவுட் ஆக்‌ஷன் பட விமர்சனம்

http://scifimafia.com/wp-content/uploads/2012/01/Underworld-Awakening-IMAX-Poster-2.jpg

நம்ம தமிழ் நாட்ல 3 தீய சக்திகள் இருப்பது எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் படத்தோட கதையை விளக்க ஒரு முறை மீண்டும் ஞாபகப்படுத்திக்கலாம்..நாடு எப்படி நாசமா போனாலும் பரவாயில்லை.. இங்கே இருக்கற தமிழனும் சரி , இலங்கைல இருக்கற ஈழத்தமிழர்களும் சரி எப்படியோ போகட்டும் தானும், தனக்குப்பிறகு தன் குடும்பமும் சாரி குடும்பங்களும் மட்டும் நல்லா இருந்தா போதும்னு நினைக்கற கலைஞர் மாதிரி  வேம்ப்பயர் குரூப் ஒரு பக்கம்.. எல்லா ஊழல்களும், தப்பும் ஒண்ணா சேர்ந்து பண்ணிட்டு கோர்ட் , கேஸ், பிரச்சனை, தண்டனைன்னு வர்றப்ப தோழியை கழட்டி விட்டு எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம் தனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லி இன்சிடெண்ட் நல்ல தங்காள் ஆன புரட்சித்தலைவி மாதிரி லைகான் குரூப் இன்னொரு பக்கம், தமிழ் நாட்டில் ஜாதி பிரச்சனையை தூண்டி விட்டு அதில் குளிர் காய நினைக்கும் ராம்தாஸ் மாதிரி அயோக்கியர்கள் மாதிரி மனிதர்கள் ஒரு குரூப்னு இந்த படத்துல மொத்தம் 3 குரூப் இருக்கு..

வேம்ப்பயர் குரூப்ல இருந்து வந்தவதான் ஹீரோயின்.. இவங்களுக்கு 13 வயசுல தமனாவுக்கு தங்கச்சி மாதிரி ஒரு பொண்ணு.. அந்த பொண்ணை வேம்ப்பயர்ல அடுத்த கிரேடு மாதிரி இருக்கற லைகான் குரூப் தேடுது.. அவங்க கிட்டே இருந்து அந்த பொண்ணை காப்பாத்த ஹீரோயின் ஒரு போலீஸ் ஆஃபீசர் உதவியோட பண்ற போராட்டம் தான் இந்த படம்.

படத்துல மொத்தம் 178 கேரக்டர்ஸ்.. அதுல 160  பேரை டமால் டுமீல்னு சுட்டு கொல்றாங்க..  எத்தனை கேஸ் போட்டாலும் அசராம ஆஜர் ஆகற புரட்சித்தலைவி மாதிரி  கேட் பெக்கின்சேல்  சூப்பர் விமனா நடிச்சிருக்காங்க.. சாரி சூப்பர் வேம்ப்பயர்.. அவங்க விஜய சாந்தி மாதிரி தெனாவெட்டான நடை, அதிரடி ஆக்‌ஷன்னு பார்க்க நல்லா தான் இருக்கு.. ஒரு கட்டத்துல போர் அடிச்சுடுது..


http://wgtccdn.wegotthiscovered.netdna-cdn.com/wp-content/uploads/underworld_awakening_little_girl.jpg

ஹீரோயினின் பெண்ணா வர்ற சுட்டிப்பொண்ணோட நடிப்பு ஓக்கே ரகம். ஆனா டாக்டரோட ரத்தத்தை அந்த பொண்ணு கடிச்சு உறிஞ்சறதெல்லாம் ஓவர் உவ்வே... ரத்தத்தை காட்றதுலயே நளினம் வேண்டும்.. இந்த படம் எப்படி எல்லாம் ரத்தத்தை காட்டக்கூடாது என்பதற்கு ஒரு உதாரண பாடம் கம் படம்..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. நம்மை யோசிக்கவே விடாமல் பர பரவென நகரும் திரைக்கதை, அதிரடி சண்டைக்காட்சிகள் ஹீரோயின், ஹீரோயின் பெண் கேரக்டர் நடிப்பு..

2. ரொம்ப சோதிக்காம ஒண்ணே கால் மணி நேரத்துல படத்தை முடிச்சது..

http://ak.c.ooyala.com/xpMTNiMzp6NqtMYxCYp7xhqUz2Qn2Uml/promo151183322



இயக்குநர் இடம் சில கேள்விகள் - சும்மா காமெடிக்கு


1.  எங்க கேப்டன் மட்டும் தான் லெக் ஃபைட் போடவும் ஓடி வந்து ஸ்லோ மோஷன்ல சுவர்ல காலை வெச்சு கிக் கொடுக்கவும் ஆல் இந்தியா பர்மிட் எடுத்திருக்காரு.. அப்படி இருக்க ஹீரோயின் அதுவும் ஒரு வேம்ப்பயர் எப்படி அந்த மாதிரி ஃபைட் எல்லாம் போடலாம்?

2.  வேம்ப்பயர்னாலே சூர்ய வெளிச்சத்துல பஸ்பமாகிடுவாங்க. ஆனா ஹீரோயின் ஒரு சீன்ல சொல்றாங்க. நான் ஸ்பெஷல், அப்டி சன் லைட் என்னை பாதிக்காதுன்னு சொல்றாங்க.. அவங்க என்ன அப்படி ஸ்பெஷல்? வேம்ப்பயர் அவங்க?

3.  வெற்றி விழா படத்துல கமல் பழசை எல்லாம் மறக்கற மாதிரி 12 வருஷங்களுக்கு முன்னால நடந்த மேட்டரை எல்லாம் ஹீரோயின் மறந்துடறாங்க.. மனுஷனுக்குதான் அந்த வியாதி.. பேய்க்குமா?

4.  படத்துல  வர்ற 2 பேயுமே நல்லா பறக்கறாங்க.. 80 மாடிக்கட்டடத்தை சர்வ சாட்தாரணமா தாண்டறாங்க, ஆனா ஒரு சேசிங்க் சீன்ல வேன்ல டிரைவ்.. ஏன்? பறந்தே போலாமே? பெட்ரோல் செலவு மிச்சம்//

5.  ஒரு சீன்ல வேம்ப்பய்ர் ஆன பேய் ஹீரோயின் அழுது அய்யோ பாவம் .. விட்டா சோகப்பாட்டு கூட பாடும் போல.

6.  வேம்ப்பயர் பொண்ணா வர்ற சின்ன பேய் ஏன் எப்பவும் ஒயிட் & ஒயிட் சுடிதார்ல யே எப்பவும் இருக்கு?



7.   ஒரு சீன்ல  லைகான் ரக பேய் ராட்சச உருவம்  எடுக்குது.. அப்போ குறுகலான ஒரு சந்து வந்ததும் உள்ளே நுழைய முடியாம அவஸ்தைப்படுது.. ஏன் பழைய படி சின்ன உருவம் எடுத்து உள்ளே போய்க்கலாமே?

8.  இது சும்மா கலாய்ப்பதற்காக - ஹீரோயின் ஒரு சீன்ல  ஏவாள் போஸ்ல இருக்காங்க, அந்த டைம் பார்த்து லைட்டிங்க் அடிச்சு எல்லாத்தையும் ஏன் மறைச்சுட்டீங்க? டைரக்டர், ஃபோட்டோ கிராஃபர் , ஹீரோ எல்லாரும் நைஸா பார்த்துக்கிட்டீங்க? 50 ரூபா டிக்கெட் எடுத்த ஆடியன்ஸ் பார்க்கக்கூடாதா என்னங்கடா நியாயம் ? ஹி ஹி


http://beflicky.com/uploads/gallery/1281.jpg
 ரசித்த வசனங்கள்

1.  நீ வேலைக்கு சேர்ந்து எத்தனை நாள் ஆச்சு?

3 மாசம்..

இது வேற பிரச்சனை.. உனக்கு இது புரியாது, அமைதியா வேடிக்கை மட்டும் பாரு.

2.  ஏய்.. டோண்ட் சவுட்..

ஏன்?

ஏன்னா நானும் உங்க இனம் தான்..  ( நாய் தான் சத்தம் போடும் பேயும் கூடவா? )

3.  உன் பேரென்ன?

சப்ஜெக்ட் 2..   உன் பேரென்ன?

 சப்ஜெக்ட் 1 ( வேம்ப்பயர்ங்க கூட சிலபஸ் ஆகிடுச்சு போல அவ்வ்)

4.  அது மனித இனத்தை சேர்ந்ததும் இல்ல.. உன் குழந்தையும் இல்ல. அப்புறம் ஏன் பாசம் கட்டுறே?

5. நான் எதுக்காக போராடுறேன்னே இப்போ எனக்கு தெரியலை..

தயவு செஞ்சு யாரும் படத்துக்கு போயிடாதீங்க, தலைவலி தாங்கலை. முதல் 3 பாகங்களை விட ரொம்பவே மொக்கை..

ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்..

நின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்? ஜிகிடிக்கு ரவுடியின் பதில் ( ஜோக்ஸ்)



1.பெண்களை சமைக்க சொல்லி வற்புறுத்துவது ஆணாதிக்கம்; ஆண்களை அதை சாப்பிட சொல்லி வற்புறுத்துவது பெண்ணாதிக்கம் :


----------------------------------------
2. காதலிக்கிறத போல தப்பான விஷயம் இந்த உலகத்துல வேற எதுவும் இல்ல.. 

யூ ஆர் ராங்க் மேடம், மேரேஜ் பண்ணிக்கறது தான் தப்பு

------------------------------------
3. பெண்ணுரிமை பேசும் பெண்கள் ஒப்பனை செய்யக்கூடாதா? 

அழகு படுத்துதலுக்கும், உரிமை கோரலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது அவரவர் விருப்பம்

--------------------------------------
4. மேடம், சர்க்கரைப்பொங்கல்ல ஏன் உப்பு கலக்கறீங்க? 

உப்பு இல்லா பண்டம் குப்பையிலேன்னு நான் நாலாங்கிளாஸ் ரெண்டாவது வருஷம் படிச்சப்ப சொன்னாங்க

-----------------------------
5. டாக்டர்,கரும்பு திண்ணா ஒரு பத்து நாள் பல் விளக்க வேண்டாமாமே?உண்மையா? 


ஆமா, அதே போல மழைல நனைஞ்சா குளிக்க தேவை இல்ல.:)

----------------------

6. கோம்ஸ் - ராமராஜன் எந்த தைரியத்துல ஹீரோவா நடிக்கறாரு?

மாம்ஸ் - ஹீரோவா நடிக்க தைரியம் தேவை இல்ல, ஒரு இ வா புரொடியூசர் போதுமே?

-
----------------------------------

7. கிளி மாறி பொண்டாட்டி இருந்தாலும் ஆண்களுக்கு குரங்கு மாறி வப்பாட்டி தேவைப்படுவதன் ரகசியம் என்ன ?

1. ஆண்கள் வெரைட்டி லைக்கிங்க் 2 கொழுப்பு

---------------------------------------
8. வெடக்கோழி என்றால் என்ன?

பவர் ஸ்டார், டவுசர் ஸ்டார் ராமராஜன் கூட எல்லாம் ஜோடியா நடிக்க வேண்டி இருக்கே என வெட வெட என நடுங்கும் ஹீரோயின்ஸ்

-----------------------------------

9.ஓட்டல் தொழிலில் ஈடுபட முடிவு - காஜல் அகர்வால்! # வேணாம் மேடம், ஓட்”டல்”  டல் அடிக்கப்போகுது

------------------------------

10  "நின்னுக்கோரி வர்ணம்" என்றால் என்னப்பா அர்த்தம்?


ஹாய் ஜிகிடி,உன் கிட்டே இருக்கற கலரை எனக்கு குடுத்துடு, ப்ளீஸ், நான் கறுப்பு, நீ சிவப்பு.

-----------------------------------





11.  சொர்க்கம்,நரகம் ரெண்டுலயும் ஆண்,பெண் விவாதங்கள் நடக்குமா.?

சொர்க்கத்துல அந்த விவாதம் நடக்காது, ஏன்னா நரகத்துல தான் பெண்கள் இருப்பாங்க

---------------------------------------

12. சார், நீங்க முற்போக்குவாதியா? பிற்போக்குவாதியா?

ரெண்டும் இல்ல, நான் வெறும் கோக்கு மாக்கு பேக்கு

--------------------------------------


13. @ActorPOWERSTAR - டைட்டானிக் ரீமேக் செஞ்சா நான் அதுல நடிக்க தயாரா இருக்கேன் # புரொடியூசர் கூட படம் ரிலீஸ் ஆன பின் தான் சாவாரு, ஹீரோயின்?


------------------------------------

14. ஏன் சாருவை இலக்கிய வட்டத்துல கொண்டாடுறாங்க.?

பவர் ஸ்டாரைக்கூடத்தான் கொண்டாடறாங்க:)

---------------------------------

15.உன்னை 456 பேர் ஃபாலோ பண்றாங்களாமே? நீ கண்டிக்க மாட்டியா அவங்களை?

மொக்கைகள் INDIRA - அய்யோ டாடி.. அவங்க எல்லாம் என் பிளாக் ஃபாலோயர்ஸ்

--------------------------------------

16. பஸ் கட்டணம் எல்லாம் உயரும் என்று தெரிந்துதான் நடையின் மகத்துவத்தை தல அன்றே உணர்த்தி இருக்கார்

--------------------------------

17. ஜட்ஜ்- நீ எல்லாம் ஒரு மினிஸ்டரா?னு விழா மேடைலயே மினிஸ்டரை மரியாதை இல்லாம பேசுனியாமே?

கேடி லேடி - எருமையை ஒருமைல தானே பேச முடியும்?

----------------------------------

18. தலைவரே, டிக்‌ஷனரின்னா எனக்கு சுத்தமா பிடிக்காதுனு எதுக்கு அறிக்கை விடறீங்க?

அகராதி பிடிச்சவன்னு யாரும் என்னை சொல்லிடக்கூடாதே?

-------------------------------

19. அஜித் சினி ஃபீல்டு ஷாலினியை மேரேஜ் செஞ்சாரு, விஜய் ஃபாரீன் சங்கீதாவை மேரேஜ் செஞ்சாரு.. அப்போ யாரு புத்திசாலி? # கொளுத்திப்போடு

--------------------------------------------

20. என் மனைவி வெங்காய வியாபாரிகள் சங்கத்துல மெம்பரா இருக்காங்க..

ஓஹோ.. ஆனியன் யூனியன் சனியன் -னு சொல்லுங்க

-----------------------------------

Friday, January 20, 2012

விஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்ச்சி, அம்பலம் ஆனது கடிதம் ஜாலி கலாட்டா

http://tube.tamilcloud.com/wp-content/uploads/2011/11/3.jpg

 ட்விட்டர் நண்பர் கட்டதுரை காமெடி கலக்கல் மன்னன்.. அவர் நம்ம நண்பர் மாயவரத்தான் அவர்களின் கட்டுரை.காம்ல காமெடியா நண்பன் விமர்சனத்தை எள்ளல் பாணில எழுதுனாரு.. அது செம ஹிட் ஆகி  ரெக்கார்டு பிரேக் பண்ணிடுச்சு.. அட்ரா சக்க இணய தளத்தோட  முக்கியமான , முக்காதமான கொள்கை (!!) என்னான்னா சொந்தமா ஒரு ஹிட் போஸ்ட் போட ட்ரை பண்ணனும்.. அது முடியாத பட்சத்துல ஆல்ரெடி ஹிட் ஆன போஸ்ட்டை ரீ மிக்ஸ் பண்ணி போடனும்.. ஹி ஹி ஹி

அன்புத் தலைவா விஜய். உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது.

கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு பொங்கல் வாழ்த்தை சொல்லிடுறேன்!

சி.பி - வீழ்த்துவதற்கு முன் வாழ்த்தா? அவ்வ்வ் நடக்கட்டும்.. 

முதல்ல யாரைக் கேட்டு இந்த படத்திலே நடிக்க நீ ஒத்துக்கிட்டே? நீ ரீமேக்ல மட்டும்தான் நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும். ஆனா  இப்புடி செத்தவன் வாயில வெத்தலையை வெச்ச மாதிரியான ஒரு கேரக்டர்லே உன்னை பார்க்க முடியாம பாப்கார்னை வாய்ல திணிச்சுகிட்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும் தலைவா!


சி.பி - ஆமா எங்கண்ணன் கொள்கையே யார் மேக்காக இருந்தாலும் அது ரீ மேக்காக இருக்கனும்


கதை – அந்த கருமத்தை நான் என் வாய்ல வேற சொல்லணுமா?


சி.பி - சும்மா கை சிக்னல்லயே சொல்லுங்கண்ணே, 2 லைன் கதைக்கு எதுக்கு வீர உரை?

புள்ளைங்க விருப்பப் படுறதை படிக்க வைங்க – இதான் ஒன் லைனர், முழுக் கதை எல்லாமே!
தலைவா, உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு. உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை எல்லாம் ஹிட்டு படமாக்கினோம்.  இப்ப வந்து விருப்பப்பட்டதை படின்னு அட்வைஸ் பண்ணினா நாங்க எங்க போறது?  முதியோர் கல்வியிலே ஏது தலைவா விருப்பப் பாடம்?!


சி.பி - அவர் படிக்கலைன்னு யார்யா சொன்னது? வாரா வாரம் குமுதம் விகடன் எல்லாம் படிக்கறவராம்.. 

காட்டு காட்டுன்னு காட்டுவியே, இதுல ஒரு தடவை கூட பஞ்ச் டயலாக்கை நீ காட்டவே இல்லியே. நீ ஏன் தலைவா, இப்படி ஒரு படத்தை ஒத்துகிட்ட?


சி.பி - ஷங்கர் புக் பண்றப்பவே வாயை திறக்கவே கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டுதான் அட்வான்ஸே குடுத்தாராம்..

சீனுக்கு சீன், கேமரா ஆங்கிள் கூட துளிக்கூட மாத்தாம எடுக்க ஷங்கர் எதுக்கு தலைவா? டெய்லி 200 ரூவா பேட்டா வாங்குற அசோசியேட்டு டைரக்டர் கூட இதை எடுக்கலாமே!? இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் நீ எதுக்கு தலைவா ஒத்துக்கிட்ட?


சி.பி - சத்யன் மேடைல பேசி ஒரு காமெடி பண்றாரே.. அந்த ஒரு சீன் புதுசுங்கோவ்.. 

வழக்கமா ரோலிங் ஷட்டரை பொளந்துக் கிட்டு வர நீ,சைலண்டா ஒரு கோல்ஃப் விளையாடுறவன் பையை முதுகிலே சொமந்து கிட்டு வர! அதிலேயே என் மனசு நொறுங்கி போய்டுது.


தலைவா, அது மட்டும் இல்லாம, உன்னை ராகிங் பண்ணறதுக்காக,  உன் ஜீன்ஸ்குள்ளேயே ஒருத்தன் தண்ணியை ஊத்துறான்.  ஏர்லே டைவ் அடிச்சு அவன் குரல் வளையைக் கடிச்சுத் துப்பாம, ரூமுக்குள்ள போய், கரண்டு ஷாக் குடுக்குற! உன் கண் பார்வையிலேயே ஆயிரம் மெகா வாட் ரெடி பண்ணி க்ரிட்ல குடுக்கலாம். அதை விட்டுட்டு நீ என்னடான்னா குண்டு பல்பைப் புடுங்கி எதிரிக்கு ஷாக் குடுக்குறே. எதிரிக்கு மட்டுமா, எங்க எல்லாத்துக்கும் தான்! அந்த சீனிலேயும் தியேட்டரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்குது. ஆனா உன் உண்மை ரசிகன் வயிரு எரியுது. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - உங்களுக்கென்னா ஈஸியா கேட்டுப்புட்டீங்க.. 5 ஃபெயிலியர் தொடர்ந்து குடுத்தாச்சு.. ஒரு ஹிட் அவசியம் தேவை.. வேற வழி இல்லை.. 

http://www.envazhi.com/wp-content/uploads/2011/01/shankar-new.jpg

ஹிந்தியில சூப்பர் ஹிட்டுன்னு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் எடுத்தவங்க எல்லாம் பேசிக்கிறாங்க. அமிர்கான் அதுல இன்னும் சூப்பரா நடிச்சுருப்பாருன்னும் பேசிக்கிறாங்க. அதெல்லாம் 30 ரூவா டிக்கட் எடுத்து வந்து ஸ்கிரினுக்கு பக்கத்துல பாக்குற எனக்குத் தெரியாது தலைவா.


சி.பி - ஹிந்தி அளவுக்கு இது ஹிட் ஆகலைன்னாலும் இது ஒரு ஹிட் படம் தான் 

நீ ’நடிக்கற’துனால எவ்வளவு பிரச்னை பாத்தியா? பேரே தெரியாத இன்னொருத்தனைப் பாத்து உன்னை கம்பேர் பண்றாங்க. என்னைக்காச்சும் பேரரசு இப்படி ஒரு கெட்ட பேரை உனக்கு உண்டு பண்ணிருப்பாரா. யோசி தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - பேரரசா? அவர் இப்போ பரத் , அர்ஜூன் அப்டி இறங்கி ரொம்ப வருஷம் ஆகுது..ஊரரசா இருந்தவரு மனைவிக்கு அல்வா குடுத்த பாவத்துக்கு ஊசிப்போன அரசு ஆகிட்டார்..





விண்வெளியில பென்சிலிலா எழுதலாமே, எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி பேனா கண்டுபுடிக்கணும்னு நீ கேட்கும் போது, தியேட்டரே கைதட்டுது. ஆனா பக்கத்து சீட்டுக்காரனுங்க, ’இந்தப் படத்தை டப்பிங் பண்ணி உட்டுருக்கலாமே.. எதுக்கு இம்புட்டு செலவு பண்ணி ரீமேக் பண்ணிருக்கானுங்க’ன்னு கேட்குறாங்க. விவ(கா)ரமான பயலுங்க போல! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி -  அண்ணன் நடிக்கறது 90% ரீ மேக் தான்.. எல்லாத்தையும் டப் பண்ணி இருக்கலாம்னு  கேட்டுட்டா அப்போ பாவம் அவர் என்னதான் செய்வாரு.. சும்மா ஜுவ்வல்லரி விளம்பரமே நடிச்சுட்டு இருக்க வேண்டியதுதான்.. 


ஸ்க்ரின்ல வந்து போற எல்லா பயமக்களுக்கும் நல்லது பண்றியே.உன்னையே நம்பி இருக்குற, என்னைய மாதிரியான ‘சுறா’ ரசிகன் நிலைமையை நினைச்சுப் பாத்தியா? ஹிந்தியில கரினா கபூர் ஜீரொ சைஸ்ல இருந்தாங்கங்குறனால, பத்து நாள் டயரியால அடிபட்ட மாதிரி இருக்குற இலியானவை புடிச்சு போட்டிருக்காங்க. ஹன்சிகா மாதிரி பல்கியான ஃபிகரோட உன்னைப் பாத்துபுட்டு, இந்த மாதிரி பாக்க வயித்தெறிச்சலா இருக்கு தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?



சி.பி - அண்ணன் சைக்காலஜியே தெரில.. வேட்டைக்காரன்ல அனுஷ்காவை ஹீரோயினா போட்டதுல எல்லாரும் அனுஷ்கா பற்றியே பேசுனாங்களாம்.. அதனால யாரும் தன்னை டாமினேட்டோ, டைகர் மேட்டோ , ரோஸி மேட்டோ ( டாமி, டைகர், ரோஸி - ஆல் டாக் நேம்ஸ் ) பண்ணிடக்கூடாதுன்னு அடக்கி வாசிக்கற நடிகையை ஜோடி ஆக்கிட்டாரு போல.. 

அம்பது பேரு உன்னைச் சுத்தி நின்னாலும் கரண்டு கம்பத்தைப் புடுங்கி அம்பது செகண்டுலே எல்லாரையும் சாய்ச்சுப் புடுவியே தலைவா, இதுல வரவன் போறவன்கிட்ட எல்லாம் அறை வாங்குறியே தலைவா. இந்த கண்ராவிய பார்க்கவா நான் காசு குடுத்து உன்னைப் பார்க்க வந்தேன். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - புக் பண்றப்ப ஷங்கர் சாமார்த்தியமா உங்களுக்குன்னு தனியா 8 அறை உண்டுன்னாராம்.. அண்ணன் ரூம்னு தப்பா நினைச்சு அக்ரீமெண்ட்ல சைன் பண்ணிட்டாராம்.. 


நீ ஸ்பெல்லிங்க மாத்தி சத்யன் அதை ஸ்டேஜ்ஜிலே படிச்சு எல்லாரும் கைதட்டி சிரிக்குறாங்க. அந்த மொக்கையைப் பாக்க சகிக்காம சீட்டுக்கு கீழே படுத்துகிட்டு நான் அழுதேன் தலைவா.  நான் என்னவோ வயிறு குலுங்கி சிரிக்கிறதா எல்லா பயலும் நினைச்சுக்கிட்டு குமுறி குமுறிச் சிரிக்கிறானுங்க தலைவா. உன் உயிர் ரசிகனுக்கு இந்த அவமானம் தேவையா? நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - சத்யன் ரோல் இப்படி ஹிட் ஆகும்னு தெரிஞ்சிருந்தா அந்த ரோல்லயும் அவரே நடிச்சு காமெடி பண்ணி இருப்பாரு அடடா ஜஸ்ட் மிஸ்னு இப்போ புலம்பறாராம்.. 

http://img.bollywoodsargam.com/albumsbolly/Ileana_Hot_Saree_Fashion/Ileana_Hot_Saree_Fashion_BollywoodSargam_laughing_479522.jpg

இண்டர்வெல் ப்ளாக்ல , பஞ்சவன் பாரி வேந்தன் (உன் பேருதான் தலைவா) ஃபோட்டோ பக்கத்துல சூர்யா போட்டோவைப் பாத்து பதறிப் போய் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் நீ காணம போய்ட்டியோன்னு திகைச்சுப் போய் நிக்குறாங்க. அதைப் பாத்துபுட்டு இண்டர்வெல்லுக்கு அப்புறம் நீ வரமாட்டியோன்னு நினைச்சு உன் ரசிகர்கள் பாதிப் பேரு தியேட்டரை விட்டு வெளியே போய்ட்டாங்க தலைவா. இந்த மாதிரி அப்பாவி ரசிகன் வாயில மண்ணை அள்ளிப் போட்டியே. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - படத்துல தான் பன்ச் இல்ல, கேரக்டர் நேம்லயாவது பஞ்ச் இருக்கட்டும்னு தான் அப்படி வெச்சாங்களாம். ( பஞ்ச் அவன் பாரி = பஞ்சவன் பாரி)

பொதுவா கனவு சீன் ஃபாரின் பாட்டுலே எல்லாம் தனியா நீ மட்டும் போய் மலை பக்கம் ஆடிக்கிட்டு இருப்பியே தலைவா. இதுலே கும்பல் கும்பலா வந்து உன் ஆட்டத்த காலி பண்ணி புட்டாய்ங்களே தலைவா. உன் குத்தாட்டத்த பாத்து ரசிகனானவன் வாயிலேயே குத்தி பழிவாங்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - நல்ல வேளை டான்ஸ் சீன்ல கிராஃபிக்ஸ் இருக்குன்னு ஒரு பயலும் கண்டு பிடிக்கலை.. 

நீ ஸ்கிரின்ல வந்த உடனே கை தட்டின உன் உயிர் ரசிகன் நாலு பேர்ல நானும் ஒருத்தன். இது உன் படம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா, டிக்கட்டு காசுல மானங்கெட்ட மானிட்டர ஒரு குவார்ட்டர் குடிச்சுப்புட்டு, குப்புறப் படுத்து தூங்கிருப்பேனே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - டைட்டில்லயே ஷங்கரின் நண்பன்னு தானே போஸ்டர் இருக்கு.. ? நீங்க கவனிக்கலை.. அதுக்கு அவர் எப்படி பருப்பு ஆக முடியும் ? சாரி பொறுப்பு ஆக முடியும்?


க்ளைமாக்ஸ்ல நீ குறுந்தாடி வச்சுகிட்டு வரப்பவே நீ தான் அந்த கொசகசா பஸபுகழ் விஞ்ஞானின்னு தியேட்டரில டயர்டாயி தூங்குற குழந்தைப்புள்ள கூட சொல்லிப்புடும். (இந்த விஞ்ஞானி பேரை சரியா சொல்றவனுக்கு ஏதாவது பரிசு குடு தலைவா!) சரி..படம் ஃபுல்லா அரை வாங்கியிருக்கியேங்கிற கடுப்புல உட்காந்த உன் ரசிகனை , க்ளைமாக்ஸ்லயும் மிதி வாங்கி  சின்னா பின்னமாக்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - வழக்கமா அண்ணன் படம் தான் சின்னா பின்னமாகும், இதுல ஒரு மாறுதலுக்கு அண்ணன் அப்படி ஆகி படத்தை காப்பாத்திட்டார். 
நீ விஞ்ஞானியா நடிக்குற துணிச்சல் உனக்கு இருக்கலாம் தலைவா. ஆனா 30 ரூவா குடுத்து முன்னாடி சீட்ல உட்காந்து பாக்குற என்ன மாதிரி ரசிகர்களுக்கு அந்த தைரியம் எல்லாம் இல்லை தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

சி.பி - அந்த துணிச்சல் இல்லாட்டி என்ன? இலியானாவுக்கும், குரூப் டேன்சர்களுக்கும் துணியே இல்ல, ரொம்ப கம்மிதான்.. அதை ரசிக்கறது.. 



எல்லாரும் முழு டவுசரைக் கழட்டிட்டு அடிக்கடி கால்ல உழுரானுங்க. நல்லவேளை, இலியானாவுக்கு அப்படி ஒரு சீன் வெக்கலை! நான் வீட்டுக்கு வந்து பேண்ட் கழட்டும் போது படம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது. இது உண்மையிலேயே டைரக்டருக்கு வெற்றிதான் தலைவா. ஆனா உன் படத்துக்குப் போயிட்டு வந்தா மந்திரிச்சு உட்டா மாதிரி படம் முழுக்க வரும் உன் மூஞ்சி தானே தலைவா நாலு நாளைக்கு நியாபகத்து வந்து பயமுறுத்திட்டே இருக்கணும். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - ஆனாலும் அண்ணன் மாஸ் தான்.. ஆனானப்பட்ட ஷங்கர் படமா இருந்தாலும் அண்ணன் கடைசி வரை அவர் பேண்ட்டை கழட்டவே இல்லை பார்த்தீங்களா?  அங்கே தான்  நிக்கறான் சந்திரன்..

குருவி படத்த பாத்து சட்டைய கிழிச்சுட்டு ஓடின பயமக்கள் எல்லா கைதட்டி படத்த ரசிக்குதுங்க. குருவி படத்தையும் ஹிட்டாக்கின என்ன மாதிரி ரசிகர்கள் மூட் அவுட்டு ஆய்டுவாங்கன்னு புரிஞ்சிக்க தவறிட்டியே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - குருவி ஹிட்டா? 2012ல உலகம் அழிஞ்சுடும்யா//

இதே ரேஞ்சிலே இன்னொரு படம் நீ குடுத்தா நாங்க எல்லாம் ‘தல’ ரசிகரா மாறிடுவோம். அப்புறம் ‘ஆல் ஈஸ் வெல்’ அப்படீன்னு நீ சொல்ல முடியாது. புரியுதா தலைவா?!

 சி.பி - ஆல் ஈஸ் ஹெல் ( ALL IS HELL )

(ஹிந்தி படம் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் ஒரு பொங்கல் விருந்து என்பதில் சந்தேகமே இல்லை. பொதுவான விஜய் ரசிகர்களின் உள்ளக்கிடங்கை தான் இங்கே எழுதியிருக்கிறேன். யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை!)

சி.பி - ஆமா, இந்த விஷயத்துல நாங்க எல்லாருமே நக்கீரன் கோபால் மாதிரி... முடிஞ்ச வரை துவைச்சு காயப்போடுவோம்.. கடைசில பிரச்சனைன்னு வந்தா மன்னிப்பு கேட்போம்.. ஏன்னா எங்க ஊர்ல 5 ரூபாவுக்கு 12  மன்னிப்பு..  

original post link -

அழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா? ஜெ அதிர்ச்சி ( காமெடி)

http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/pictures_videos_63021486998.jpg
1.தாண்டவம் படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோயினாகிறார் எமி ஜாக்சன்! # இனி எமி ஜாக்சன்  டாமி ஜாக்ஸன் வள் வள் லொள் லொள்?

---------------------------

2. டாக்டர் என் ஃபிரண்ட் அடிக்கடி டிபி மாத்தறாங்க, எதனால?

அவங்களுக்கு டிஃப்ரண்ட்டோ சேஞ்சோ போபியா மாஃபியா வியாதி

----------------------------


3. மேடம், எதுக்காக  உங்க ட்விட்டர் டி பி ல அமலா பால் ஃபோட்டோவை யூஸ் பண்ணி இருக்கீங்க?

பார்க்கறவங்க பால் வடியும் முகம்னு சொல்லட்டும்னுதான்

------------------------------


4.மேடம், உங்களை பற்றி தமிழ் இலக்கணத்துல ஒரு பாடம் வெச்சிருக்காங்க?

இலியானா - எதுல?

இல் பொருள் உவமை அணில

-----------------------------------

5. தலைவரே, தம் அடிக்கனும் , மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ் ..

நெருப்புத்தலைவா!-ன்னு கூப்பிடறதே இதுக்குத்தானா? அடங்கொய்யால

---------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5a6HI2NI-K-UkMIzSzH-N8Ohxfy9PVhdTtGa8a0a4ZPmKe0GwPAC-6q4_seAGJAN5bCSJKKi_4IUrmdzADew9Fxdo8NqzhPL_DftYWiKJUFi-ZQfDuAVbD9r1m03xAVK-RVWT8sbNkH_d/s1600/9-11-11a.jpg
6. ஜிகிடி - என்னை தொடற வேலை எல்லாம் வெச்சுக்காதே, ஒன்லி கடலை..

ரவுடி - தொடறது ஹாபி தான், அதையே வேலையா வெச்சுக்க முடியுமா?

----------------------------------

7. டியர்,உன் இதயத்துல ஒரு இடம் கொடு..


ஸாரி.. இடம் காலி இல்ல.. ஃபுல்...

அப்போ உன் தலை காலியாத்தானே இருக்கு, அதுலயாவது இடம் குடு

-------------------------------------

8. டோரா - கொண்டுவந்த நொறுக்குத்தீனிலாம் முடிஞ்சு போச்சு.இப்போ நான் என்ன செய்ய?

பொரி ஒரு பக்கா, கடலை 20 ரூபாய்க்கு வாங்கவும்,பக்காவா டைம் பாஸ் ஆகும்

------------------------------------

9. சுமி - இருக்கறதுலயே செம போர் காய்ஞ்சு போன துணியை மடிச்சு வைக்கறதுதான்.

கணவர் - ஊற வைக்கறது, துவைக்கறது, காயப்போடறது நான், இந்த ஒரு வேலை கூட போரா?

---------------------------------

10. லேடி MGR -புடவை வேணாம்,சுடிதார் போட்டு வாங்க என எப்ப  ஆஃபீஸ்ல சொல்லுவாங்க?

அப்படி ஒரு முட்டாள்தனமான ஆர்டரை எந்த ஆணும் மஸ்ட்நாட் டேக்:)

-------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJZ3IPxzicxpGu42D2qsNmdW-JhU73B5_63m9QzxQlNMWlK7wwZOnsWqOe1kA3TQK4spsaQsSnzcbdj2LyDWbyLBNeemUzYvSigzSZk7nSNncBq3sVu9H8WDOAGvBxDsHuAs0nRTzLyZHJ/s1600/Kalainar+Photo.jpg

11.உன் மாமா புலிக்கு ஆதரவா பேசுபவராமே?


அட நீ வேற.. குழந்தைங்க எல்லாரும் பால மித்ரா , அம்”புலி” மாமா அவசியம் படிக்கனும்னாரு

--------------------------------

12.இரும்பு மனிதர்னு பேரடுத்த தலைவர் எப்படி லவ்ல மாட்னாரு?

மகளிர் அணித்தலைவிக்கு காந்தக்கண்கள் ஆச்சே?

--------------------------------------

13.  தலைவர் ரொம்ப சென்சிட்டிவ் டைப்././

எப்படி சொல்றே?

யாராவது அவரை தாக்கி பேசுனா உடனே அழுதுடுவார்..

-----------------------------------------

14. மேடம், டிராயிங்க் கிளாஸ் போறீங்களே, எதுக்கு?

நடிகை - குணச்”சித்திர” நடிகை ஆக ஆசை

-----------------------------------

15. உங்க பட விளம்பரத்துல” சிவன் ”ஆண்ட வெற்றின்னு போட்டிருக்கே, ஏன்?

“பிரம்மா”ண்ட வெற்றின்னு இன்னும் எத்தனை நாளுக்கு போடறது?

--------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5oZtwb7q9Qf-aMeG1hXr9d-h9J-qP9CKDa0696ARezsbfVk1-YOfOOsHhlMYguEprywhK9oqana93Q5c65Dp4Uxm-9AxQ27mEAbTR_nBruBKhNwpwehWaIxkKPBVAL4JUOv91UHyIejSD/s1600/Sun+Pictures.jpg

16. ஸாரி சார், டான்ஸ் மட்டும் தான் பண்ணுவேன், நோ கிளாமர் ..

மனசுக்குள்ள கவரி மானாட மயிலாட நிகழ்ச்சி  பண்றதா நினப்பு?

--------------------------------

17. உங்களுக்கு கேன்சர் வந்திருக்கு...
\
டாக்டர்.. அதை வர வேணாம்னு கேன்சல் பண்ணி அனுப்பிடுங்க

--------------------------------

18. தலைவர் ஒரு காலத்துல மதுரைல பெரிய தாதாவாம்.

. அதுக்காக தாதா சாகிப் பால்கே விருது வேணும்னா எப்படி? # டெடிகேட்டட் டூ அழகிரி அண்ணன்

--------------------------------

19. தலைவர் - ஐ ஆம் பார்ன் இன் செண்ட்டர் குவாலிட்டி ஃபேமிலி( I AM BORN IN CENTRE QUALITY FAMILY)

நிருபர் - அப்டின்னா?

நடுத்தரக்குடும்பம்

------------------------------------------

20. புதிய படத்தின் பெயர் மதுபானக்கடை! #  படம் பார்க்க வரும் குடி மக்களுக்கு ஒரு குவாட்டர் இலவசமா?

----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv4w6uqtkCj1MOmOs5mgDbnhVFxX2iuaqnG6gai1-oFDUuLA7zj3WR7T9wTQz70_oLIjnVJ1ba_CU7sG9-YXuNAHe5pLyGFhap6UUH-WGWO1g0rciLjHX6Vxy_Ey_94DlAwwECdnMRD-kH/s1600/30-11-11c1.jpg

Thursday, January 19, 2012

சந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0Rj3Ru_HpgSbiBcKGyJnk2ZOG9hAo5veDWyOD63FYaS2PG8JNdpeAzsm3PqOy1vTxkQFRprxQWCTkfXrrMG_b0MfiJf78HUYikrXZhoYHpN3bmr3vTi1JspP-Wlvj0dSR8MCByj93Os65/s1600/vinayaka-movie-review-6140854c.jpg 

1. ஃபாரீன் ஜிகிடி - தமிழர்கள் நீங்க தான் தமிழை மறந்துட்டீங்க.நான் தமிழ் கத்துக்கிட்டேன்.. ஏன் விசித்திரமா பார்க்கறீங்க?

2.  நாம கண்ணை மூடறப்போ  கண்ணுக்குள்ள என்ன கலர் தெரியுதோ  அதை வெச்சு நாம என்ன மூடுல இருக்கோம்கறதை சொல்லிடலாம்..  மஞ்சள் கலர் தெரிஞ்சா ஹேப்ப்பி மூடு, சிவப்பு கலர் தெரிஞ்சா டிஸ்டர்ப்பான மூடு, ஆரஞ்ச் கலர்னா குழப்பமான மன நிலை..  ( எனக்கு ஒண்ணு தான் புரியலை.. கண்ணை திறந்து வெச்சாத்தானே எதிர்ல கலரோ, ஃபிகரோ நிக்கறது தெரியும்,, அதையும் மூடிட்டா எப்படி தெரியும்?)

3.  சந்தானம் - டேய் , கொத்தனாரை கூட்டிட்டு வந்து  குறட்டை விடற அந்த வாயை குதறி எடு

4. கணவன், மனைவி 2 பேரும் ஒரே மன நிலைல இருந்தா ( SAME MENTALITY) வாழ்க்கை ரொம்ப நல்லாருக்கும்.. ( வாஸ்தவம் தான், மேரேஜ் ஆனாலே பாதிப்பேரு மென்ட்டல் ஆகிடறாங்களே, அப்புறம் எப்படி அந்த மெண்ட்டாலிட்டி வரும்?)

5.  என் கிட்டே ஏகப்பட்ட கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.. எல்லாரும் செம அழகு.. 


அப்படியா? ஷேர் பண்ணிக்கலாமா? ஹி ஹி ( அடேய் அதென்ன ஒன் பை டூ டீ சாப்பிடற மாதிரியாடா?)



6.  1942 ல தேசியக்கொடி வெச்சிருக்கற மாதிரி ஒரு ஷாட் எடுத்திருக்கீங்க, அந்த  டாக்குமெண்ட்ரில ஆனா பாருங்க 1947ல தான் நேஷனல் ஃப்ளாக் வடிவமைச்சதே..( நீங்களே லாஜிக் மிஸ்டேக் சொல்லிட்டா அப்புறம் ஆடியன்ஸ் எங்களூக்கென்ன வேலை?

7. சானியா மிர்சா சொல்லி இருக்காங்க  FREE MARITAL SEXஸை நான் வரவேற்கிறேன் அப்டினு. ஆனா இங்கே நம்ம நாட்ல அதை ஒத்துக்க மாட்டாங்க.. 

அப்படியா? சரி... நீ மேரேஜ்க்கு முன்னால கில்மா பண்ணி இருக்கியா? இல்லையா?

வாட்?

கேட்ட கேள்விக்கு பதில், செய்வியா? மாட்டியா?


8. டேய்.. வாட்டர் டேங்க்ல இருந்து எந்திரிச்சு வர்றீங்களே, 2 பேரும் என்னடா பண்ணிட்டு இருந்தீங்க?

 கம்பைன் ஸ்டடி ஹி ஹி 

ம்க்கும், அவ மார்க் எடுக்க மாட்டா, 3 மாசம் கழிச்சு வாமிட் தான் எடுப்பா.. 


9.  அவனைப்பார்த்ததும் ஏண்டி பயப்படறே?

அலர்ஜி டி


10.  பேய் இல்லைன்னு எனக்குத்தெரியும், ஆனாலும் இருட்டுன்னா எனக்கு பயம் தான் ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD-eGjomU8S10blm-Jygt9yyx4ggeRmIfPU9L3TagtKuMUB3vmOXem2-e1_fOxvgo2bAKD8hNw8meRxb9XtEJS1P3LQVrmQyFZeK7sOY5XwA5g6R8ZpCjrRcXi8gNmUMzjf57tsMb3y1fT/s1600/Vinayaka-movie-stills-4.JPG

11. எவனுக்கு தன்னை பிடிக்குதோ அவன் தன் மனைவியை நல்லா பார்த்துக்குவான்.. 


12.  ஜிகிடி - நம்ம 2 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு

என்னது?

நம்ம 2 பேரும் கே-ல ஸ்டார்ட் ஆகுது

அப்போ 2 பேரும் கேனையா?

13. நீ தான் இப்போ காஃபி போட்டியா?

ஆமா, ஏன்?என்னை பொண்ணு பார்க்க வந்தா ஆளூங்களை விரட்ட இப்போ இருந்தே ட்ரெயினிங்க் எடுக்கறேன்


14.  ஏண்டா, நான் குண்டா இருக்கறது என் தப்பா? குண்டா இருக்கறவங்க லவ் பண்ணக்கூடாதா?

அவ தாங்க மாட்டாடா..

15.  நோ சொல்றதுக்குத்தான் டைம் எடுத்துக்கறேன், அவன் கிட்டே எப்படி இதை சொல்றதுன்னு தான் தெரியல.. 


16. மியாவ் மியாவ் பூனை.. பர்ஸை போட்டுட்டு போகுது யானை..

17. அய்யய்யோ, இங்கே வெச்ச்சிருந்த மஞ்சள் கலர் ஃபைல் காணோம்.. 


இவ்ளவ் தானே, அதுக்கு ஏன் பதர்றே? இருக்கற ஃபைலுக்கு மஞ்சள் கலர்  அடிச்சு எடுத்துட்டு போ..

18.  உன் பாய் ஃபிரண்ட் ஃபயர் சர்வீஸ்ல இருக்கானா? எதுக்கு மிஸ்டு கால் தர்றே?

19. சந்தானம் - டேய் நாய் நக்குன நாரை மாதிரி ஏண்டா இருக்கே? 

20.. பொண்ணுங்க லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகுதான் ஓவரா சீன் போடறாங்க.. 
( எப்படியோ சீன் இருந்தா நல்லதுதான் ஹி ஹி )

http://timesofindia.indiatimes.com/photo/5883504.cms

21.  லேடீஸ் மாதிரி காதலை எக்ஸ்போஸ் பண்ண ஜெண்ட்ஸ்க்கு தெரியறதில்லை ( ஆமாங்க.. நாங்க எப்பவும் தத்தி,, நீங்க தான் அதுல புத்தி)

22.  அவ தான் க்ரீன் சிக்னல் குடுத்துட்டாளே.. ஏன் பேக் அடிக்கறே?

23. ஜிகிடி -  கிஸ் தர்லைன்னு புலம்புவானுங்க.. தந்தா அட்வாண்டேஜா எடுத்துக்குவானுங்க.. ( ஹி ஹி ஹி )

24.  வீட்ல நீ கண்ணாடியை பார்க்கறதே இல்லையா?

ஆ ஆ ஆ ஆ , மேக்கப் போட்டது பத்தாது போல..

25.  என் ஆல் செம குண்டு சுமோ மாதிரி இருப்பா.. 

26.  குட் ஃபிரண்ட்ஷிப்க்கு ஈகோ ஒரு தடையா இருக்கக்கூடாது.. 

27. உண்மையான காதலா இருந்தா மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் வரவே கூடாது.. 

28. கணவன் மனைவிக்குள்ள  சண்டையே போடாம இருந்தா அது என்ன தாம்பத்யம்? (சின்ன சின்ன ஊடல்களும் அதற்குப்பின்னான கூடல்களும் தான் வாழ்க்கையை சுவராஸ்யம் ஆக்குகின்றன)

29. கோபத்துல இருக்கறப்ப தான் மனசுக்குள்ள இருக்கறது வெளீல வரும்.. ( அப்போ நாம வாயே திறக்கக்கூடாது போல )

30.  நான் இது வரை யார் கிட்டேயும் சாரி கேட்டதே இல்லை..

ஓஹோ சுடி மிடி தாவணி யாவது கேட்டிருக்கியா?