Showing posts with label மனைவி. Show all posts
Showing posts with label மனைவி. Show all posts

Saturday, September 19, 2015

யட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக புகார்!

ரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக திரைப்பட நடிகர் கிருஷ்ணா மீது அவர் மனைவி அளித்த புகாரின் பேரில், கோவை துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அலிபாபா, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி ஹேமலதா. இவர் கோவை மாவட்டம் சிறுமுகை, பெத்திக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் . 

இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாக நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது தாயார் மதுபாலா, தந்தை குணசேகரன் ஆகியோர் மீது கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஹேமலதா புகார் அளித்தார்.

அவர் அளித்துள்ள புகாரில், ''திருமணத்தின் போது 300 பவுன் நகை, 32 லட்சம் பணம் வழங்க வேண்டும் என கேட்டு கட்டாயப்படுத்தியதாகவும், இதை வழங்க எனது பெற்றோர் ஒப்புக்கொண்டதாகவும் ஹேமலதா தெரிவித்துள்ளார். திருமணத்தின் போது 118 பவுன் நகை, 35 லட்சத்தை பணத்தை கொடுத்ததாகவும்,பாக்கி வரதட்சணையை கேட்டு  கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார்.

புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார், நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் மீது, வரதட்சணை ஒழிப்பு மற்றும் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

நடிகர் கிருஷ்ணாவும் ஹேமலதாவும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

நன்றி-விகடன்

Saturday, February 23, 2013

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி திடுக் பேட்டி

வீரப்பனின் ஆன்மா மன்னிக்காது!
முத்துலட்சுமி சொல்லும் ரகசியம்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் என் கண​வருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் அவர்கள். அவர்களைத் தூக்குத் தண்டனையில் இருந்து எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும். இல்லை என்றால், என் கணவரின் ஆத்மா என்னை மன்னிக்காது'' உணர்ச்சிப் பிழம்பாக வெடிக்கிறார் சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. 



''உங்கள் கணவருடன் நீங்கள் காட்டுக்குள் இருந்தபோது மீசை மாதையன், ஞானபிரகாசம், சைமன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேரையும் பார்த்தது இல்லையா?''



''எங்களுக்கு 1990-ம் வருஷம் ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதில் இருந்து 93-ம் வருஷம் செப்டம்பர் மாதம் வரைக்கும் நான் அவரோடு காட்டில்தான் இருந்தேன். அவரோட கூட்டாளிகள் யார், அவருக்கு உதவி செய்தவர்கள் யார் என்பதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்.



 இப்போது தூக்குத் தண்டனைக் கைதிகளாக இருக்கும் அந்த நான்கு பேரையும் நான் காட்டுக்குள் பார்த்ததே இல்லை. என் வீட்டுக்காரரும் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நான் காட்டுக்குள் இருந்து வெளியில் வந்த பிறகு, 'வீரப்பன் கூட்டாளிகள் சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன், ஞானபிரகாசம் பிடிக்கப்பட்டனர்’ என்று ரேடியோவில் சொன்னதைக் கேட்டு எனக்கு குழப்பமாக இருந்தது. யார் இவர்கள் என்று யோசித்தேன். நினைவுக்கு வரவில்லை.''



''பாலாற்றுப் பாலத்தை வெடிவைத்து தகர்த்தபோது நீங்கள் வீரப்பனுடன் இருந்து இருக்கிறீர்கள்... அந்தத் தகவல் உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?''



''அந்தச் சம்பவம் 1993-ம் வருஷம் ஏப்ரல் மாதம் நடந்தது. அந்த நேரத்தில் நான் என்னுடையை குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தேன். அதைப்பற்றி என்னுடைய வீட்டுக்காரர் எதுவும் சொல்ல​வில்லை. எந்த ஒரு திட்டம் போடு​வதாக இருந்தாலும் சரி, அதை நிறைவேற்றுவதாக இருந்தாலும் சரி.. அது என் வீட்டுக்காரருக்கும் சேத்துக்குழி கோவிந்த​னுக்கும் மட்டுமே தெரியும். எல்லாம் முடிந்த பிறகுதான் எனக்குத் தெரியும்.''



''ஆனால், 'வனயுத்தம்’ படத்தில் பாலாற்றுப் பாலம் தகர்க்கும் காட்சியில் வீரப்பன், 'சைமா வெடி மருந்தை அதிகமா​ போடு’ என்று சொல்வதைப்போல காட்சிகள் வருகிறதே?



''அந்தப் படம் முழுக்க முழுக்க ஒருதலைபட்சமான கற்பனையான படம். படம் எடுப்பதற்கு முன், படத்தின் இயக்குநர் ரமேஷ், பெல்காம் சிறையில் இருக்கும் நான்கு பேரையும் சந்திக்கப் போயிருக்கிறார். சைமன் மட்டும் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார். அந்தக் கோபத்தில் சைமன் பெயரை என் கணவர் சொல்வதைப்போலக் காட்டி இருக்கிறார். 



அதிரடிப் படைக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படத்தில் எப்படி நியாயத்தையும் உண்மையையும் எதிர்பார்க்க முடியும்? அதிரடிப் படையால் பாதிக்கப்பட்டப் பெண்களைப் பற்றிய பதிவு எதுவுமே அந்தப் படத்தில் இல்லை. அதிரடிப்படை செய்த அட்டூழியங்களை நான் படமாக எடுத்தால், அவர்களால் தாங்க முடியுமா?



வீரப்பனுக்கு ரேஷன் வாங்கிக் கொடுத்​தவர் என்று பாலாறு விபத்துக்கு முன்பே பிலவேந்திரனை அதிரடிப் படையினர் பிடித்துத் தொல்லை கொடுத்திருக்கின்றனர். மீசை மாதையன் மீதும் இதேபோல ஒரு வழக்குப் போட்டிருக்கின்றனர். பாலாறு விபத்து நடந்த பிறகு மீசை மாதையன், அப்போதைய எஸ்.பி. கோபால​​கிருஷ்ணனை நேரில் சந்தித்து, 'எனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என்னை இதுல மாட்டி விட்டுடாதீங்க’ என்று அழுதிருக்கிறார். 



'உன் மேல எனக்கு சந்தேகமே இல்லை’ என்று சொன்ன கோபால கிருஷ்ணன், பிறகு மாதையனை வழக்கில் சேர்த்திருக்கிறார். இவர்கள் நால்​வரும் அப்பாவி மலைவாழ் மக்கள். பரம்பரைப் பரம்பரையாக மலையில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். அப்படிப்​பட்டவர்​களைப் பிடித்து பொய் வழக்குப் போட்டு, இன்று தூக்குக் கயிறு வரை கொண்டு​போய் நிறுத்தி இருக்கிறது போலீஸ்.''




''எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் பாலாற்றுச் சம்பவத்தில் இந்த நான்கு பேரும் இருந்ததாக சாட்சி சொல்லி இருக்​கிறாரே?''



''பாலாறு வெடி விபத்தில் கோபாலகிருஷ்​ணனுக்குக் காலில் பலத்த அடிபட்டது. அந்த இடத்திலேயே மயக்கமாகி விட்டார். மயக்கத்தில் இருந்த ஒருவர் எப்படி நான்கு பேரை அடையாளம் கண்டிருக்க முடியும்? அவருக்கு இந்த நால்வரையும் முன்கூட்டியே தெரியும் என்பதால், அப்பாவிகளை வழக்கில் சிக்கவைத்து​ விட்டார்.




 கோர்ட்டில், கோபால கிருஷ்ணனைத் தவிர வேறு யாரும், இந்த நான்கு பேரையும் பார்த்ததாகச் சொல்லவே இல்லை. அவர் ஒருவரின் சாட்சியை வைத்துதான் நீதி வழங்கப்பட்டு இருக்கிறது. செய்யாத தவறுக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டனர். ஏழைகள் என்பதால் அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இந்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக்​கொள்ள வேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. அந்தப் பாவம் சும்மா விடாது!''



- வீ.கே.ரமேஷ்,  


படம்: எம்.விஜயகுமார்

நன்றி - ஜூ வி 

Saturday, April 07, 2012

அகதா கிறிஸ்டி - க்ரைம் ஸ்டோரி சிருஷ்டி - பட்டது திருஷ்டி

http://static.cinemarx.ro/poze/postere/filme/2004/Agatha-Christie-A-Life-in-Pictur...-117245-460.jpg

ஒரு நாவல் உண்மையாக நடக்கிறது

அதிர்ச்சியூட்டும் உண்மைக் கதை


துப்பறியும் நாவல்களை நிறைய எழுதி உலகப் புகழ் பெற்ற அகதா கிறிஸ்டி  வயது 81 -ல் அவருக்கு ஒரு பேரிடி; பெரிய ஷாக். ஆள் ஒரேயடியாக அசந்து உட்கார்ந்துவிட்டார்.
 அப்படி என்ன அதிர்ச்சி?
பத்து வருடங்களுக்கு முன் அகதா ஒரு மர்ம நாவல் எழுதினார். நாவலின் தலைப்பு: 'தி பேல் ஹார்ஸ்’.
அந்த நாவலில் கிறிஸ்டி வுட்நிட் என்று ஓர் இளைஞன் வருகிறான். வில்லன். அதற்கு முன்னால் பிரிட்டனில் யாருமே உபயோகித்து அறியாத 'தாலியம்என்னும் விஷத்தைக் கொடுத்து சில தொழிற்சாலைப் பணியாளர்களைக் கொல்லத் திட்டம் போடுகிறான். கொல்லவும் செய்கிறான்.
கிறிஸ்டி வுட்நிட் செய்த அதே காரியத்தை கிரகாம் யங் என்கிற இளைஞன் இப்போது நிஜமாகவே செய்துவிட்டான். அவனைப் போலவே சில தொழிலாளர்களைக் கொன்றான்; அவனைப் போலவே இவனும் 'தாலியம்விஷம்.
தான் கற்பனை செய்த விஷமே நிஜத்தில் இரண்டு உயிர்களைக் குடித்துவிட்டது என்பதைக் கேட்டால், யாருக்குத்தான் அதிர்ச்சியாக இராது?

http://www.wearysloth.com/Gallery/ActorsW/43180.gif

கிரகாம் யங்குக்கு இப்போது 24 வயது. சென்ற ஆண்டில் புகைப்படக் கருவிகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான் அவன். ஸ்டோர் கீப்பருக்கு உதவியாள் வேலை.
அவன் வேலையில் சேர்ந்த 11-வது வாரம் ராபர்ட் ஈகிள் என்கிற 60 வயது சக தொழிலாளி இறந்துபோனார்.
எப்படி, எதனால் இறந்தார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால், அந்த ஃபேக்டரியில் வேறு சில தொழிலாளர்களை வேறுவிதமான நோய் பீடித்தது. சிலர் தலையில் உள்ள ரோமங்கள் எல்லாம் உதிர்ந்தன; சிலருக்குத் தற்காலிகமாகக் கை கால் பிடிப்பும் வாதமும் ஏற்பட்டன; வேறு சிலர் வாந்தி எடுத்தார்கள்.
முதலில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.
ஆனால், சில வாரங்களுக்குப் பின், சென்ற நவம்பர் மாதத்தில் இன்னொரு தொழிலாளியும் புதிராக இறந்துபோகவே தொழிற்சாலை மிரண்டது.
அந்தக் கூட்டத்தில் எல்லாரும் அவரவர் கருத்தைத் தெரிவித்துப் பேசினதுபோல யங்கும் பேச வேண்டி வந்தது. யங் எழுந்து பேசினான். எப்படி? ஒரு சாதாரண ஃபேக்டரி தொழிலாளிக்குக் கனவில்கூடத் தெரிந்திருக்க முடியாத வைத்திய பரிபாஷைகளும், ரசாயனங்கள், விஷங்களைப் பற்றிய விவரங்களும் அவன் வாயில் இருந்து சரமாரியாக வந்தன.

யங்கின் 'வைத்திய ஞானப் பேச்சைக் கேட்டுத் தொழிலாளர்கள் எல்லாரும் ஆச்சர்யம் அடைந்தார்கள். ஆனால், ஒரே ஒரு மனிதர் மட்டும் சந்தேகம் அடைந்தார். காதும் காதும் வைத்தாற்போல போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டார்.
போலீஸ் ரகசியமான விசாரணையைத் தொடங்கியது. வெகு சீக்கிரத்திலேயே கிரகாம் யங்கின் ரகசிய அறையை அது கண்டுபிடித்துவிட்டது.


http://www.providings.com/Images/2007/DEC/Providings.com_44_20071225111849.jpg
அந்த அறையில், ஒரு மாதத்துக்கு ஒரு பெரிய மருந்துக் கடைக்குப் போதுமான அளவு 'தாலியம்பாட்டில்களிலும் டின்களிலும் இருந்தது. பாட்டில்கள் எல்லாம் மிக அழகாக வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. அவற்றுக்குக் கீழே இருந்த ரகசிய டிராயரில் யங் எழுதிவந்த டைரி ஒன்று கிடைத்தது.
'தாலியம் விஷத்தை மனிதர்கள் மீது பிரயோகித்தால் என்ன விளைவு ஏற்படும்?’ என்பதை யார் யார் மீதெல்லாம் எப்படி எப்படி, எப்போது பரிசோதித்துப் பார்த்தான் என்கிற விவரங்களை எல்லாம் யங் அந்த டைரியில் குறித்திருந்தான்.
அந்த டைரியில் தன் நண்பர்களை எல்லாம் அவர்களுடைய பெயர்களின் முதல் எழுத்தைக்கொண்டு யங் குறிப்பிட்டு இருந்தான்.
தன்னுடைய 14 வயதில் விஷத்தைக் கொடுத்து மூன்று பேரை மேலுலகுக்கு அனுப்பப் பார்த்து இருக்கிறான் யங். அந்த மூன்று பேரும் வேறு யாரும் இல்லை... அவனுடைய தந்தை, சகோதரி மற்றும் பள்ளியில் உடன் படித்த ஒரு மாணவன்.
சிறு வயதில் இது நிகழ்ந்ததனால் யங்குக்கு 14 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து, மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். வெளியில் வந்த பின் அவன் நடத்திய கூத்துதான், போட்டோ தொழிற்சாலையில் அடுத்தடுத்துச் செய்த கொலைகள்.
யங்குக்கு இப்போது கிடைத்திருப்பது, ஆயுள் தண்டனை!இந்தப்பகுதி விகடன் பொக்கிஷம் பழைய அபூர்வ  கலெக்‌ஷன்

Friday, April 06, 2012

கொஞ்சி கொஞ்சிப்பேசி மதி மயக்கும்..,- சிறுகதை

                                                     
வெள்ளிக்கிழமை....,

ஹேய் கிஷோர், என்னப்பா நீ இன்னிக்கு நம்ம கல்யாண நாள் , நான் இங்க நம்ம வீட்டுல ரொம்ப நேரமா தனியா உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன் நீ என்னடான்னா ஆடி அசைஞ்சு வர்ற? என்னைப்பார்த்தா உனக்கு பாவமா தெரியலியாடா?

ம்ஹ்ஹும் ''உன்னைப்பார்த்தா எனக்கு பேரழகியாத்தான் தெரியுது, பாவமா தெரியலியேடி...,


--....................................... 
சனிக்கிழமை....,

 ஹைய்யோ உனக்கு வெட்கப்படவெல்லாம்கூட தெரியுமாடி?

 நீ எனக்கு எவ்ளோ ஐஸ் வச்சாலும் இன்னிக்கு உனக்கு தரவேண்டிய வழக்கமான லஞ்சம் கிடையவே கிடையாது. போடா, ஐ ஹேட் யூ 


என்றவாறே விறு விறுவென்று சமையலறை நோக்கி நடக்க ஆரம்பித்த ஜமுனாவை  பின் தொடர்ந்தபடியே போன கிஷோர்...,



 ''ஓஹ் பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ஓஹ் பியூட்டியின்னா பியூட்டிதான் பின்னழகை காட்டி சின்ன பையனைத்தான் வாட்டி செல்லும் மஞ்சள் நிலா என்னைக்கொல்லாதே'' 

 என்ற இதயம் திரைப்படத்தில் வரும் பாடலை பாடவும் எவ்வளவு வேகமாக நடந்தாளோ அவ்வளவு வேகத்தில் திரும்ப வந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.



 இந்த சின்ன சந்தோஷத்திற்க்கு பாட்டெல்லாம் படிக்க வச்சுட்டியே செல்லம் என்று கமல் ஸ்டைல்லில் கிஷோர்  சொல்ல, 


அதுக்கு பரிசா இந்தா வச்சுக்கோ வழக்கமா தர்ற லஞ்சம்தான் ஆனா இது கொஞ்சம் ஃப்ரஞ்ச் மெத்தட் என்று ஜமுனா சொல்லவும்



 ஓஹ் ''ஆனா இது கையூட்டு கிடையாது வாயூட்டு'' ஹ ஹ ஹா என்று சிரிக்க ஆரம்பித்தான் கிஷோர் அதிகப்படியாக வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள் ஜமுனா..!!!!


>>>>>>>>>>>>


ஞாயிற்றுக்கிழமை..., 


ஹாலில் உட்கார்ந்திருந்த கிஷோர்...,

ஹேய் ஜம் இன்னிக்கு ஜம்ம்னு இருக்க என்னடி விசேஷம் என்றான் 

ஒண்ணுமில்லடா  என்றவளிடம் 


இங்க பாரு நான் உன்னோட பெயரை சுருக்கி எவ்ளோ அழகா ஜம் ஜம்ன்னு கூப்பிடறேன் நீ என்னோட பெயரை செல்லமா சுருக்கி கூப்பிட மாட்டியா? 

ஓஹ் அப்படியா? சரி கூப்பிடறேன் கிஷ் என்று கூப்பிட்டு முடிந்ததும் நாக்கை கடித்துக்கொண்டு

 அய்யய்யோ நீ ப்ளான் பண்ணித்தான் என்னை அப்படி கூப்பிடச்சொன்ன இல்ல நான் கூப்பிட மாட்டேன்ப்பா இப்போவே உன் இம்சை தாங்கலை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா எத்தனை தடவை கூப்பிட்டேனோ அத்தனை கிஷ் கொடுத்து என்னை ஒரு வழி பண்ணிடுவ ஆள விடு சாமி



 என்று ஜமுனா ஓடி ஒளிய


 சரி சரி இப்போ இரண்டு தடவை கூப்பிட்டதுக்கு என்ன பண்றது என்று கிஷோர் கிண்டல் பண்ணியபடியே அவளை நோக்கி சென்று அந்த இரண்டு கிஸ்ஸையும் பெற்றுக்கொண்டான்..! 


>>>>>>>>

திங்கட்கிழமை....,

ஒரு விளையாட்டு இருக்குஅதில் நான் ஜெயித்தால் நான் சொல்லுவதெல்லாம் நீ கேட்க வேண்டும் நீ ஜெயித்தால் நீ சொல்வதெல்லாம் நான் கேட்பேன் 
என்று கிஷோர் ஜமுனாவிடம் சொல்லவும்...,

 என்ன விளையாட்டுடா?! என்று ஆர்வமாக கேட்டவளிடம்

 ''உனக்கு பிடிச்ச Munch சாக்லேட் இருக்கு இல்லியா அதை அப்படியே முழுசா வாய்ல இருந்து வெளிய எடுக்காம கைகளால் தொடாம கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு முடிக்கணும் ரெடியா?'' என்றான்.

 சரி என்றவளிடம்...,

 லேடீஸ் ஃபர்ஸ்ட்

 என்றபடி ஒரு சாக்லேட் எடுத்து கொடுத்தான் வாயில் சாக்லேட் வைத்து சாப்பிட ஆரம்பித்தவள் ஒரு லெவலுக்கு மேல் சாப்பிட இயலாமல் முழித்தவளிடம் 


கேன் ஐ ஹெல்ப் ?


என்றான் .ம்ம்ம் என்ற சத்தம் மட்டும் வந்தது சாக்லேட்டின் மறுமுனையை கிஷோர் சாப்பிட ஆரம்பிக்க சாக்லேட் தீர ஆரம்பித்திருந்தது இருவரின் உதடுகளும் இணையும் வேளையில் அவர்கள் முத்த சாக்லேட் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்..! 


>>>>>


செவ்வாய் கிழ்மை....,

அழகான முன்னிரவு வேளயில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த ஜமுனாவின் அருகில் அமர்ந்து அவளின் முகத்தில் விழுந்திருந்த தலை முடியை ஒதுக்கிவிட்டபடி இருந்தான் கிஷோர் ஜமுனாவோ விசும்பியபடியே இருந்தாள் ,

 அறையில் ''இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ'' பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது பாடலின் இடையில் ''மானிடப்பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பதே சிறப்பு'' என்ற வரியோடு தானும் பாடினான் கிஷோர்

 அதெப்படி முடியும் என்று சிணுங்கலாய் கேட்டவளிடம் போர்வையை விலக்கி உன் கால்களைப்பார் என்றான் அவளின் இரண்டு கால்களின் பெருவிரல் நகங்களிலும் அவனுடைய சின்ன ஸ்டாம்ப் சைஸ் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டியிருந்தான்

 அதைப்பார்த்து ஹைய்யைய்யோ என்றபடியே ஏன் இது மாதிரிலாம் பண்ற கிஷோர் ப்போ எனக்கு வெட்கமா இருக்கு என்றபடி அவன் கன்னங்களில் செல்ல முத்தமிட்டு தோள்களில் சாய்ந்து கொண்டாள்..!

>>>>>>


புதன் கிழமை...,

கிஷோர் ஜமுனா இருவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து அலை பாயுதேவில் வரும் சிநேகிதனே சிநேகிதனே பாடல் பார்த்துக்கொண்டிருந்தனர் அதில் ஷாலினி பாடும் பாடல் வரிகளை அவளிடம் சொல்லி விளக்கிக்கொண்டிருந்தவன் ''உப்பு மூட்டை சுமப்பேன்'' என்ற வரிகளை சொன்னதும் சிரிக்க ஆரம்பித்தாள் ஜமுனா என்னால முடியாதுப்பா நீ என்னை விட 30 கிலோ ஜாஸ்தி என்றாள், நீ சுமக்காட்டின்னா என்ன நான் உன்னை உப்பு மூட்டை சுமப்பேனே என்றான்


 பதிலுக்கு வீ வில் ட்ரை என்றான் ஜமுனாவைப்பார்த்து ம்ஹ்ஹும் மாட்டேன்ப்பா நீ தூக்கி கீழ டொம்முன்னு போட்டாலும் போட்ருவ, இல்லம்மா அப்டிலாம் பண்ண மாட்டேன் என்றவனின் ஆசைக்கு கட்டுப்பட்டவளை உப்பு மூட்டை சுமந்து நேராக பெட்ரூம் சென்றவன் டொம்மென்று பெட்டில் விட்டான் .

செல்ஃபில் இருந்த ஆலிவ் ஆயிலை எடுத்தவனிடம் எதுக்கு இப்போ அது என்றாள், ''ஐவிரலிடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவகம் செய்ய வேண்டும்'' என்று பாட ஆரம்பித்திருந்தான்

 அவள் ஹைய்யைய்யோ என்றபடி அவனிடமிருந்து விலகி ஓடி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தாள்...


>>>>>>



       என் வயிற்றில் ஆடும் தாமரை கையசைக்க  காலசைக்க காத்து வளர்ப்பேன் ன்னு என் ராசாவின் மனசுல வரும் பாடலை ஹம் செய்தவாறே...,  பிள்ளை சுமக்க போகும் வயிற்றை தடவியவாறே, நாட்டைக்காக்க எல்லைக்கு செல்லும்  கிஷோருக்கு கையசைத்தவாறு அவன் வருகைக்காக்காக நாட்களை எண்ணி காத்திருக்க தொடங்கினாள்.


Tuesday, January 24, 2012

என் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை

Illusion picture 
                                                         
ரத்னா புடவை கடையே செல்வாவுக்காக காத்திருந்தது. செல்வா வந்தபின்தான் கடையை திறக்கனும்னு முதலாளி சொல்லிட்டார். செல்வா அந்த கடையின் சேல்ஸ்மேன்.


ஒரு சேல்ஸ்மேனுக்காகவா கடை திறப்பதில் தாமதம் பண்றார் முதலாளி. . ஆனாலும்,  முதலாளி செல்வாவுக்கு ரொம்பதான் இடம் குடுக்குறார். ன்னு மற்ற சேல்ஸ்மேன்கள் முணுமுணுக்க தொடங்கிய சமயத்தில் அவசர அவசரமாக கடைக்குள் நுழைந்தான் செல்வா.


வழிகின்ற வியர்வையை துடைத்தபடியே முதலாளி அறைக்குள் சென்ற செல்வா, சார் இன்னிக்கு என் மனைவிக்கு பிறந்த நாள். அதனால கோவிலுக்கு போயிட்டு வர கொஞ்சம் லேட்டாகிடுச்சு. மன்னிச்சுக்கோங்க சார் என்றான்.

 சரி சரி போய், வேலையை பாரு. குடோனுக்கு போய் நல்ல சேலையா பார்த்து செலக்ட் பண்ணி, அதை பொம்மைகளுக்கு கட்டின பிறகுதான் கடையை திறக்கனும். ம் ம் சீக்கிரம் போய் வேலைகளை பாரு. சாய்ந்தரம் வீட்டுக்கு போகும்போது என்னை பார்த்துட்டு போ.


சரி சார் என்று சொல்லி அறையை விட்டு வந்து குடோனுக்கு போய் இருப்பதிலேயே நல்ல புடவையாய் தேர்ந்தெடுத்து வேகவேகமாக பொம்மைகளுக்கு கட்ட ஆரம்பித்தான்.

மத்த கவுண்டர்களைவிட இவன் கவுண்டர்லேயே பெண்கள் சேலையை எடுக்க போட்டியிட்டனர். அண்ணா இந்த சேலையை எப்படி கட்டுறதுன்னு கொஞ்சம் கட்டி காட்டுகங்கண்ணா, தம்பி இந்த முந்தானையை எப்படி சொருகனும்ன்னு கொஞ்சம் செஞ்சு காட்டேன்.  சார், இந்த சேலை சாயம் போகுமான்னு ஆளாளுக்கு கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி அவர்கள் கேட்கும் புடவையை எடுத்து தந்து வியாபாரத்தை கவனித்தான்.

மணி எட்டடித்ததும் எல்லாரும் துணிகளை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, வீட்டிற்கு செல்ல துவங்கினார்கள். ரவியும், செல்வாவும் பேசிக்கொண்டெ முதலாளி அறை நோக்கி செல்ல துவங்கினர்.

டேய் ரவி! எதுக்குடா என்னை முதலாளி வீட்டுக்கு போகும்போது பார்த்துட்டு போக சொன்னார்.

ம்ம்ம் துரை சொல்லாம கொள்ளாம லேட்டா வந்தீங்களே, அதுக்கு பாராட்டு பத்திரம் வசிக்கத்தான் வர சொல்லியிருக்க போறாரு. உன் சீட்டை டர்ருன்னு கிழிக்கத்தான்

அப்பிடியா ரவி! எனக்கு பயமாயிருக்குடா. நீயும் கூட வாடா,

டேய் செல்வா உன்கூட வந்தா என் சீட்டும் கிழியும். நீ போ. முதலாளி ரொம்ப திட்டினால் நீ பட்டுன்னு கால்ல விழுந்துடு என்ன? நான் வரட்டா நாளைக்கு பார்க்கலாம்.

சரிடா என்று உதடு உச்சரித்தாலும் ஊரில் இருக்கும் கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டு முதலாளி அறைக்குள் நுழைந்தான் செல்வா.

சார், வீட்டுக்கு போகும்போது பார்த்துட்டு போக சொன்னீங்க. இன்னிக்கு மனைவிக்கு பொறந்த நாள் என்பதால்தான் லேட்டாகிட்டுது. இனி இதுமாதிரி லேட்டா வர மாட்டேன் சார், மன்னிச்சுடுங்க சார்.

அட மன்னிப்புலாம் எதுக்கு செல்வா. பத்து நிமிஷம் லேட்டா கடை திறந்ததுனால ஒண்ணும் குடி முழுகிடாது. நீ பொம்மைகளுக்கு சேலை கட்டிவிடும் அழகை பார்க்குறதுக்காகவே பொண்ணுங்கள்லாம் நம்ம கடைக்கு வராங்க.   சாயம் போன புடவைக்கூட நீ பொம்மைகளுக்கு கட்டினால் அந்த புடவைக்கு அழகு கூடி அது போல புடவைதான் வேணும்ன்னு அடம்புடிச்சு பொண்ணுங்க வாங்கிக்கிட்டு போறாங்க.

உண்மையை சொல்லப்போனால், நீ வந்தப்பின்  புடவை விக்குறது அதிகம்தான். அதனால, இன்னிக்கு உன் பொண்டாட்டிக்கு பொறந்த நாள்ன்னு சொன்னியே இந்தா இந்த புடவை கொண்டு போய் உன் பொண்டாட்டிக்கு கட்டிவிடு அதுக்காகத்தான் உன்னை வர சொன்னேன் போய் பொண்டாட்டி கூட ஜாலியா இரு.

அட வெட்கப்படாதே செல்வா, வெறுங்கையோட போகாதே இந்தா இந்த ரூபாயில கொஞ்சம் ஸ்வீட்டும், நிறைய பூவும் வாங்கிக்கிட்டு போ பொண்டாட்டி சந்தோஷப்படுவா. கூச்சப்படாதேடா  நீ என் மகன் போல எனக்கூறி ஐநூறு ரூபாய் தாளை திணித்தார்.

சரிங்க சார் என்று கூச்சப்பட்டவாறே வாங்கிகொண்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். ஸ்வீட் ஸ்டாலை கண்டதும் முதலாளி சொன்னது நினைவுக்கு வர, அவளுக்கு ரசகுல்லான்னா ரொம்ப பிடிக்கும் என்பது நினைவுக்கு வர, ஒரு கிலோ ரசகுல்லா வாங்கி கொண்டான். 

நடைப்பாதை கடையில் வழக்கமாக பூ விக்கும் பாட்டியிடம் அவளுக்கு முல்லைன்னா ரொம்ப பிடிக்கும் என்பது நினைவுக்கு வர பத்து முழம் மல்லி குடு பாட்டின்னு கேட்கும்போது என்ன  வழக்கத்தைவிட அதிகமா பூ வாங்குறே,  இன்னிக்கு என்னடா விசேஷம்ன்னு கேட்ட பாட்டிக்கு,  இன்னிக்கு என் பொண்டாட்டிக்கு பொறந்த நாள் பாட்டி. 

பார்த்துடா பத்து முழம் மல்லிப்பூ வாங்கிட்டு போறே, நாளைக்கு நீ வேலைக்கு போகனும் பொங்கல் நெருங்குறதால உடம்பு டயர்டாகி லீவு போட்டே முதலாளி வேலையை விட்டே தூக்கிடுவார். ச்சீ போ பாட்டின்னு சொல்லி ”மல்லிகை இந்த மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா”ன்னு ஹம்மிங்க் செய்தவாறே, கதவை திறந்து வீட்டுக்குள் சென்றான்.

நிர்மலா, இன்னிக்கு நான் உன் பொறந்த நாள்ன்னு கோயிலுக்கு போயிட்டு வேலைக்கு போக லேட்டாகிட்டுது. கடை திறக்காமல்ன்னு ஆரம்பிச்சு மூச்சு விடாமல் காலையில் ஆரம்பித்து பூக்கார பாட்டியின் கிண்டல் வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தவாறே.. முதலாளி தந்த சேலை நீ ரொம்ப நாள் ஆசையா கேட்டியே அந்த கலர் அந்த டிசைன். கடையில இருக்குற பொம்மைக்குலாம் நான் புடவை கட்றேன் என் ஆசை பொண்டாட்டி உனக்கு நானே இன்னிக்கு புடவை கட்டிவிடப்போறேன் என்றவாறே..,மளமளவென புடவைக்கு மடிப்பு எடுத்து அமரர் ஆன  மனைவியின் சிலைக்கு சேலை கட்ட ஆரம்பித்தான் செல்வா...,