Showing posts with label த சண்டே இந்தியன். Show all posts
Showing posts with label த சண்டே இந்தியன். Show all posts

Sunday, October 21, 2012

அனிருத் - கொலை வெறி ஹிட்டர்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtUnAjFOu6HR0sWEQywYCaXyNx9X8X3a-EubnvsMYH218iJTnGVESSZdMIOHyaz078RQJxtKQgCzaMWdMZGpOCwiIvkBibyPSG6emapOKqWwJM_ETlAmBTRnsap6V9Tru8zCCTSAbNrKQ/s1600/0.jpg 

கொலவெறி பாடலுக்கு இசை சேர்த்த அனிருத் ரவிச்சந்தர், தற்போதுதான் லயோலா கல்லூரியில் பி.காம் முடித்திருக்கிறார். இனி இசைதான் வாழ்க்கையின் பயணம். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத். ஐஸ்வர்யாவின் மாமா ரவிச்சந்தரின் மகன். தனது அத்தை மகள் இயக்கிய பத்து குறும்படங்களில் பள்ளியில் படிக்கும்போதிருந்தே பின்னணி இசை சேர்த்தவர் அனிருத். ஒரே பாடலில் உச்சத்தைத் தொட்ட அதிர்ஷ்டசாலி.

அனிருத்  நான்காவது வயதிலிருந்து பியானோவை கற்றுக்கொள்ளத் தொடங்கியவர். பதினோராம் வகுப்பில் படிக்கும்போது கர்நாடக இசையுடன் சேர்ந்த வெஸ்டர்ன் மியூசிக் பியூஷன் செய்திருக்கிறார். அவர் மேற்கத்திய இசை பயின்றது டிரினிட்டி மியூசிக் ஸ்கூலில்.


"பள்ளியில் படிக்கும்போதிருந்தே இசைதான் ஒரே நோக்கமாக இருந்தது. பத்மாசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் சிங்க்ஸ் என்ற பெயரில் பேண்ட் வைத்திருந்தோம். லயோலா கல்லூரி வந்ததும் ராக் பேண்ட் ஆரம்பித்தோம். அதற்காக நானே டியூன் போட்டு பாடல்கள் எழுதினேன். ஐநூறுக்கும் அதிகமான சிறு பாடல்களை எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் அவை வரிகளாக இருக்காது. டியூன்களாக இருக்கும். ஆனாலும் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பாடல்களுக்கான வடிவம் இருக்கும்" என்று பேசத் தொடங்கும் அனிருத், பதினொன்றாம் வகுப்பு  படிக்கும்போது ஏ.ஆர்.ரகுமான் நடுவராக இருந்த ஊ...ல...லா என்ற  சன் டிவி  போட்டியில் வென்றிருக்கிறார்.


"அந்தப் போட்டியில் கலந்து கொள்ளும்வரை விளையாட்டாகத்தான் இருந்தேன். ஏதோ இசைக்குழு வைத்திருந்தோம் என்பதைத்தவிர உருப்படியான முயற்சிகள் எதையும் செய்யவில்லை. ரகுமான்  கையால் பரிசு வாங்கிய கணத்திலிருந்தே இசையில் தீவிரமாக இருக்க ஆரம்பித்தோம். அதன் விளைவுதான் ஐஸ்வர்யாவின் குறும்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அது ஒய் திஸ் கொல வெறிடி  பாடலின் உச்சகட்ட வெற்றி வரை வந்திருக்கிறது" என்கிறார்.


3 படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. அதற்கான இசை வேலைகளில் கவனம் செலுத்திவரும் அனிருத், இந்தப் பாடல் அடைந்த வெற்றியை நம்பமுடியாமல் இருக்கிறார். "ஒரு பாடலில் இப்படியொரு புகழை யாரும் அடைந்த தில்லை என்று சொல்கிறார்கள். எனக்கு அந்த வரம் கிடைத்திருக்கிறது. ஆண்டவன் கருணையால் எனக்கு அது நடந்திருக்கிறது. இந்த அளவுக்கு பாடல் மக்களிடம் போய்ச் சேரும் என்று நினைக்கவில்லை. கீபோர்டில் விளையாட்டாக ஒரு ட்யூனை வாசித்துக்காட்டினேன். அதற்கு டம்மியாக தனுஷ் பாடிக்காட்டினார். அதுவே எல்லோருக்கும் பிடித்துப்போய் விட்டது. அந்தப் பாடலில் தமிழ் நாட்டுப்புற இசையின் கூறுகளும் இருக்கும். அந்தப் பாடலே காமெடியாக இருக்கும். இதை  ரஜினி சார் கேட்டுவிட்டு கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும் என்று சொன்னார். இது உண்மையில் நடந்துவிட்டது" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.


ஸ்காட்லாந்திலிருந்து 70 வயதான ஒரு மனிதர் அனிருத்துக்கு பேஸ்புக்கில் செய்தி அனுப்பியிருக்கிறார். ஒய் திஸ் கொலவெறிடி பாடலை ஆயிரம் தடவை கேட்டிருப்பேன். எனக்கு மொழி தெரியாது. ஆனாலும் அதை கேட்கும்போதெல்லாம் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லி யிருக்கிறாராம்.


"இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததும்  மனம் பரபரப்பாக இருந்தது. இரண்டு நாட்கள் அப்படி இருந்தேன். அதுவே எல்லாம் அல்ல என்¢று புரிந்துகொண்டேன். இப்போது இசையில் ஆத்மபூர்வமாக நான் ஈடுபடுகிறேன்" என்று ஞானம் பெற்ற இளைஞராகப் பேசுகிறார் அனிருத்.   
நன்றி - த சண்டே இந்தியன் 

Saturday, October 06, 2012

ஊறுகாய் - ஆந்திரா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFxYPMoKojLxp2zgIO7MOlqvggJS9tUmcftx0l6eashtp605L9afqPvX8UyuzC9w2ROnD3rseVoGN8MP7Dhfh0LuBT_L_M6hYsmoYAHheq0r0gCRJHGzfHlh2845b74YcG7edrx8__scI/s320/cucumber_pickle_andhra_dosavakaya.JPG
 
ஆந்திராவில் உள்ள கோனசீமா டெல்டா பகுதியைச் சேர்ந்த இரண்டு கிராமங்கள் நாக்கில் நீர் ஊறவைக்கும் ஊறுகாய்த் தொழில் மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்துள்ளன. அதுபற்றி கிருஷ்ணா சாய்ராம்


தென்னிந்திய உண வைப் பொறுத்த வரை காரசாரமான ஊறுகாய் இல்லா மல் நிறைவடைவதில்லை. ஆந்திரப் பிரதேச மாநிலத்தி¢ல் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோனசீமா பாசனப் பகுதியில் தயாராகும் ஊறுகாய்களுக்கு இணையாக வேறு இல்லை. அங்கம்பாலம் மற்றும் நற்கடிபள்ளி ஆகிய இரண்டு தீவுக் கிராமங்கள்தான் இரண்டு நூற்றாண்டு களாக ஊறுகாய்த் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆந்திரா வின் நீர்வளமுள்ள இப்பகுதியில் மாங்காய் மட்டுமின்றி பழங்கள், காய்கறிகள் எனப் பலவகைகளில் ஊறுகாய்கள் தயாராகின்றன.



ஆந்திர மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பாலிதீன் பைகளிலும், ஆந்திராவுக்கு வெளியேயும் பிற நாடுகளுக்கும் மண் ஜாடிகளிலும் ஊறுகாய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


அங்கம்பாலம், நற்கடிபள்ளி ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள எல்லா  வீடுகளிலும்  ஊறுகாய் மணம் வீசுகிறது. இந்த குடிசைத் தொழில் ஆண்டுக்கு 25  கோடி ரூபாய் வருவாயை அளிக்கிறது. ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிற மாநிலங் களுக்கும், நாடுகளுக்கும் வேலைக்காகக் குடிபெயர்ந்த மருத்துவர்களும், பொறியாளர்களும் தான்  கோனசீமா  ஊறுகாய்களைப் பிரபலப்படுத்தினார்கள்.



 ஏற்றுமதி அதிகரிக்கும்போது புதிய வாடிக்கையாளர்கள் உருவாகி இந்த இரு கிராமங்களும் ஊறுகாய் தொழிலில் செழிக்கத் தொடங்கின. இங்குள்ள மக்கள் தங்களது தொழில் முனைவுத் திறனாலும் சிறப்பான தொடர்பு கொள்ளும் திறனாலும் பாரம் பரியத் தொழிலான விவசாயத்தையே விட்டுவிட்டனர். “விவசாயம் வருவாயைத் தரவில்லை. அதனால் இங்கு ஊறுகாய்த் தொழிலை 170 ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கினோம்” என்கிறார் நற்கடிபள்ளியைச் சேர்ந்த கோபி ஹனுமந்து பலம்.



கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்கள் தொடர்ந்த வெள்ளங்களால் பாதிக்கப்படுபவை. இதனால் அங்குள்ள மக்கள் இயற்கைப் பேரிடர்களால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், 150 ஆண்டுகளுக்கு முன்பு சர். ஆர்தர் காட்டன்  மிகப்பெரிய  அணை ஒன்றை கட்டி இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த அணை கட்டப்பட்ட பிறகுதான் இம்மாவட்ட மக்கள் நிம்மதியையும், வளத்தையும் அடைந்தனர்.



“ஆண்டு முழுவதும் பயன் படுத்துமாறு பிட்லா வெங்கடேஸ்வரலு என்பவர்தான் முதலில் ஊறுகாய்களைத் தயார் செய்தார். தொடர்ந்த பஞ்சம் இந்த ஊறுகாய்த் தொழிலை வியாபாரமாக மாற்றுவதற்கு அவரை உந்தியது. இந்தத் தொழில் படிப்படியாக உறவினர்களால் விரிவுபடுத்தப்பட்டு, முழு கிராமத்திற்கும் பரவியது” என்கிறார் பலம்.


ஏழு தலைமுறைகளாக இத்தொழில் இக்கிராமங்களில் செழித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்  ஊறு காய்களைச் செய்யத் தொடங்கும்    போது சடங்குகள் செய்யப்படு கின்றன. வசந்த காலம் வரும்போது அங்காளம்மா என்ற கிராம தெய்வத்தை வணங்கி படையல் கொடுக்கின்றனர். சாதி, இன வித்தியாசமின்றி மாங்காய், எலுமிச்சை, மிளகாய், இஞ்சி, புளி, பாகற்காய், காட்டு நெல்லிக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை வெட்டி ஊறுகாய் போட பக்குவப்படுத்துகின்றனர். மாங்காய் ஊறுகாய்களில் மட்டும் 22 வகைகள் உள்ளன. இவற்றில் பிரபலமானது ஆவக்காய்!
 http://www.tribuneindia.com/2003/20031123/chd14.jpg


பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி சிறுதொழில் செய்பவர் களுக்கு ஆந்திர அரசு சலுகைகளை வழங்குகிறது. இதன்மூலம் கோனசீமா ஊறுகாய் தொழில் செய்பவர்கள் பயன் பெறுகின்றனர். இந்தத் தொழிலகங்கள் எப்பிஓ அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றன. வீடுகளில் தொழில் செய்பவர்களுக்கு தொழில் உரிமம் தேவையில்லை.



ஆனாலும் ஊறுகாய்த் தொழில் செய்பவர்களுக்கு பிரச்னை இல்லாமல் இல்லை. அரசு அதிகாரிகள் இந்தச் சிறுதொழிலாளர்களை பெரிய கார்ப்பரேட் வியாபாரிகளின் நலனுக் காகத் தொந்தரவு படுத்துகின்றனர். ஏனெனில் அந்தப் பெரும் வியாபாரிகள் ஊறுகாய் ஏற்றுமதிக்காக உரிமங்களை வைத்திருக்கிறார்கள்.     அங்கம்பாலத் தைச்  சேர்ந்த 30 வயதான கங்கா பவானி நம்மிடம் பேசுவதற்கே தயங்குகிறார். இவரது இரண்டு மாடி கட்டட வீட்டின் முற்றம் முழுவதும் மிளகாய் வத்தலால் சிவப்பாகி இருக் கிறது. 



கங்கா பவானி தனது நாற்பது ஊழியர்களுடன் மிளகாய் வத்தலை மாவாகப் பொடி செய்வதற்குத் தயா ராகிறார். அவரது வியாபாரச் செழிப்பு அந்தச் சூழலிலேயே தெரிகிறது. “பெரிய எந்திரங்கள் வைத்து தொழில் செய்பவர்களுடன் போட்டி போடுவது சிரமமாகவே உள்ளது. எங்கள் ஊறுகாய்கள் மலிவாகவும் தரத்துடனும் இருந்தாலும் பிரியா பிக்கிள்ஸ் மற்றும் ஈநாடு குழு மத்தினருடன் போட்டியிடுவது சிரம மாக உள்ளது” என்கிறார் கங்கா பவானி.



செயற்கை வேதிப்பொருட்களை ருசிக்காகவோ, நீண்டகாலம் நிலைத்திருக்கவோ பயன்படுத்து வதில்லை என்கிறார் நற்கடிபள்ளியைச்  சேர்ந்த நரசிம்ம மூர்த்தி. இந்தக் கிராமத்தில் இருந்து திருமணம் செய்து வெளியேறும் பெண்கள் தங்களோடு ஊறுகாய் தொழிலையும் எடுத்துச் செல்கின்றனர். இக்கிராமத்தின் சுமார் 150 மருமகன்கள் இத்தொழிலில் உள்ளனர். 
 
 
தொடர்ந்து வரும் போட்டி களாலும் சவால்களாலும் இளம் தலைமுறையினர் உயர்கல்விக் குச் செல்லாமல் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு இத் தொழிலில் ஈடுபடத் தொடங்குகின்றனர். இது அந்தக் கிராமத்திற்கு நல்லதா? கெட்டதா? என்று அவர்களைக் கேட்டால் தெரியவில்லை.   
 
நன்றி - த சண்டே இந்தியன்



http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-98/stin7.jpg

Thursday, October 04, 2012

விஜய் ஆண்டனி பேட்டி @ த சண்டே இந்தியன்

http://topnews.in/files/Vijay-Antony.jpg 

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஹீரோவாக ‘நான்’ படத்தில் நடிக்கிறார். நாக்கமுக்க, ஏ உச்சி மண்டையில என அதிரடி குத்துப்பாட்டு ரகங்களின் தந்தையான அவரோ, தான் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என்று அடக்கம் காட்டுகிறார்.




சுக்ரன் தொடங்கி வேலாயுதம் படம் வரையிலான அனுபவத்தில் நீங்கள் அடைந்திருக்கிற வளர்ச்சி என்ன? 



நான் எதுவுமே செய்யவில்லை என்ற மனநிலை இருப்பதால்தான், புதுமை யாகச் செய்யவேண்டும் என்று நினைத்து நடிக்கவே வந்திருக்கிறேன். வளர்ச்சியடைந்து விட்டேன்  என்ற உணர்வே எனக்கு வரவில்லை. இன்னும் அடையவேண்டிய எல்லைகள் நிறைய இருக்கின்றன. எதையும் சாதித்துவி¢ட்டதாகவும் நினைக்கவில்லை. நான் வளர்ந்தேன் என்ற நினைப்பும் இல்லை. என்னுடைய திறமைக்கு இன்னும் அதிகம் செய்யவேண்டியுள்ளது.. இன்னும் செல்லவேண்டிய தூரம் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுகிறேன்.


நீங்கள் இசையில் அடைந்திருக்கிற இடம்... 



ஆரம்பத்தில் என்னுடைய இசையை மக்கள் அறியவில்லை. இப்போது தெரியத் தொடங்கியிருக்கிறது. எல்லாவகையான இசையும் செய்கிறேன் என்று அவர்களிடம் ஒரு கருத்து இருக்கிறது. குத்துப்பாட்டு, மெலடி, வெஸ்டர்ன், கர்நாடக இசை எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசமான இசையைத் தருகிறேன் என்று நினைக்கிறார்கள். அப்புறம் வார்த்தையை வைத்து விளையாடுகிறார் என்ற பேச்சும் இருந்தது. எல்லா பாடல்களிலும் அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாதிரி அமையும்.


இசையில் பரிசோதனை முயற்சிகள் செய்வதற்கான சுதந்தரம் கிடைத்திருக்கிறதா? 


நிறைய கிடைத்திருக்கிறது. எனக்கு எங்கே சுதந்தரம் கிடைக்கிறதோ அங்குதான் இதுபோன்ற பரிசோதனை களை இயக்குநர்களிடம் பேசி செய்துபார்க்கிறேன். எல்லோருமே வித்தியாசமான பாடல்களைத் தருவதற்கான முயற்சியை உற்சாகப்படுத்துகிறார்கள். யாரும் தடை சொல்வதில்லை.


நீங்கள் அதிரடியான சூப்பர்ஹிட் குத்துப்பாட்டுகளைத் தந்திருக்கிறீர்கள். அதுதான் உங்கள் தனித்துவமா?


அப்படியில்லை. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்பது குத்துப்பாட்டு கிடையாது. அழகாய் பூத்ததே என்பது குத்துப்பாட்டு இல்லை. நெஞ்சாங்கூட்டில் நீயே குத்துப்பாட்டு அல்ல. வேலாயுதம் படத்தில் இடம்பெற்ற முளைச்சு மூணு எல விடலை குத்துப்பாட்டு கிடையாது இப்படி நிறைய மெலடிகள் சொல்லிக்கொண்டே போகலாம். குத்துப்பாட்டைத் தாண்டி நல்ல மெலடிகளையும் கொடுத்திருக் கிறேன். பலதரப்பட்ட வகையிலான பாடல்களைத் தருவதில்தான் எனக்கு விருப்பம். நாக்க முக்க... பாடல் பெரிய உயரத்தைத் தொட்டதால் அதனால் எனக்குக் கிடைத்த இமேஜை அழிக்க முடியவில்லை. அதைவிட பல பாடல்கள் செய்துகொண்டிருக்கிறேன். உலகக்கோப்பை கிரிக்கெட், ஐபிஎல் போட்டி, டர்ட்டி பிக்சரில் அந்தப் பாடலைப் பயன்படுத்தியுள்ளனர். அதுபற்றிய ஒரு பேச்சு  இன்றும் இருந்துகொண்டே இருக்கிறது.


நாக்க முக்க...  போன்ற கேள்விப்படாத புதிய வார்த்தைகளை உருவாக்குவதில் நீங்கள் பங்குவகிக்கிறீர்களா?


ஐம்பது சதவிகிதம். நாக்க முக்க என்கிற வார்த்தை அந்தப் படத்தின் இயக்குநரே கொடுத்த வார்த்தை. டைலமோ என்பது நான் கொடுத்தது. உஸ்மிலாரசே என்னுடைய வார்த்தை. ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொருவர் தருகிறார்கள்.


ஒய் திஸ் கொலைவெறிடி போன்ற பாடல்களால் பாடலாசிரியர்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமா?


அப்படியெல்லாம் இல்லை. எப்போதும் திறமைசாலிகளுக்கான வாய்ப்புகளை யாரும் பறிக்கமுடியாது. அவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். திறமைசாலி எப்போதுமே திறமைசாலிதான். எது நல்லா இருக்கோ அதை மக்கள் வரவேற்பார்கள். மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி எழுதுங்கள்.


சினிமாவில் இசையமைப்பாளராவதற்கு என்னென்ன அவசியம்? 


இசை அறிவு முதல் தேவை. அடுத்து தைரியம். அதற்கடுத்து பாமர மக்களின் நாடித்துடிப்பு. படித்தவர்கள் பற்றிய புரிதல். எல்லாவிதமான மக்களுடைய விருப்பம். இந்தப் பாடல் இவர்களுக்குப் பிடிக்கும். அந்தப் பாடல் பாமரர்களுக்குப் பிடிக்கும் என்ற தீர்மானம் வேண்டும். இதெல்லாம் முக்கியம் என்று நினைக்கிறேன்.


இசையறிவு இருந்தாலும் ஒரு புதிய ட்யூனை உருவாக்குவதற்கு கற்பனை தேவையில்லையா?


எல்லாம் உண்மைதான். ட்யூனை உருவாக்கும் திறனைக் கொண்டு வருவது கற்பனையா ரசனையா அறிவா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் தைரியம் நிச்சயம் வேண்டும். நல்ல இசை தெரிந்தவர்களாக இருப்பார்கள். ட்யூன் என்று உட்காரும்போது தயக்கத்துடன் இருப்பார்கள். அந்த இடத்தில் துணிச்சலாக இருந்தால்தான் ஒரு புதிய ட்யூனைக் கொண்டுவரமுடியும். என்னைவிட ஐம்பது மடங்கு திறமைசாலிகள் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கம்போசிங் என்று உட்காரும்போது பயந்துவிடுவார்கள். என்னமோ பெரிய விஷயம் போலிருக்கு என்று கருதுவார்கள். ஆனால் அது பெரிய விஷயமே கிடையாது. பெரிய கம்பெனிகள் பலவும் வீடு கட்டுகிறார்கள். சின்னப் பையனும் மணலில் வீடு கட்டிப் பார்க்கிறான். பெரிய வீடுகள் மணல்வீட்டிருந்துதான் கனவாகத் தொடங்குகின்றன. அதனுடைய வளர்ச்சிதான். ரசனையும் சேரும்போதுதான் அந்தப் பாடல் மக்களைப் போய்ச் சென்றடைகிறது. நம்முடைய ரசனையும் பொதுமக்களின் ரசனையும் ஒன்றாக இருக்கும் போதுதான் இசை வெற்றிபெறுகிறது.



உங்களுக்குப் பிடித்த மெலடிகள், இசையமைப்பாளர்கள் பற்றி...


இளையராஜாவின் இசையும் அவருடைய மெலடிப் பாடல்களும் எனக்குப் பிடித்தமானவை. அதேபோல ஏ.ஆர்.ரகுமானின் இசையும் குரலின் தரமும் பிடிக்கும். பிறகு ஆர்.டி.பர்மன், எஸ்.டி.பர்மன். ஜனனி ஜனனி... ஜெர்மனியின் செந்தேன் மலரே... இந்தக் கண்மணிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது... தெய்வீக ராகம்... ராஜாவின் பழைய மெலடி பாடல்கள் அனைத்துமே இனிமையானவை. 


ஹிந்தித் திரைப்பட இசை, தமிழ்த் திரைப்பட இசை எப்படி இருக்கிறது? 


எல்லாமே தனிப்பட்ட திறமையைப் பொறுத்தது. அதுதான் இது. இதுதான் அது. தமிழ் சினிமாவிலிருந்து ஒருவர் போய் அங்கு பெரிதாகச் செய்யமுடியும். அதேபோல அங்கிருந்து ஒருவர் வந்து இங்கு செய்யமுடியும். ட்யூன் நன்றாக இருக்கும்போது மொழி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் ரசிக்கிறார்கள். நல்லா இருந்தால் கேட்கிறார்கள். அப்படி இல்லையென்றால் கேட்கமாட்டார்கள். எல்லா இடங்களிலும் எல்லாமே ஹிட்டாகிறது. எல்லாமே ப்ளாப் ஆகிறது. அந்தந்த படைப்பின் தரத்தைப் பொறுத்தது.


நீங்கள் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் குடும்பவழியைச் சேர்ந்தவர். அதுபற்றி? 


ஆமாம். அவருடைய கொள்ளுப்பேரன் நான். என்னுடைய தாத்தா மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் மகன். அவ்வளவுதான் அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருடைய மகன், என்னுடைய தாத்தா திருச்சியில் வேலைபார்த்தார். எங்க அப்பாவும் திருச்சியில்தான் இருந்தார். நான் திருநெல்வேலியில் படித்தேன். இன்றைக்கு ட்யூன் கம்போஸ் செய்யும்போதும், ஒரு பாடலாசிரியரைத் தேர்ந்தெடுக்கும்போதும் அவருடைய ரத்தம் எனக்குள் ஓடுவதாக நினைத்துக்கொள்கிறேன். இது நல்ல வரி என்றும், இது இசைக்குள் இருக்கிறது என்றும் தீர்மானிக்க முடிவது அவரால்தான் என்று நினைக்கிறேன். அவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் படித்ததில்லை. நானும் உங்களைப்போலத்தான்.


திடீரென ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். எப்போது ‘நான்’ வெளிவரும்? 


பிப்ரவரியில் கண்டிப்பாக வெளிவந்து விடும். என் வகுப்புத்தோழர்தான் இந்தப் படத்தின் இயக்குநர். ஏதாவது வித்தியாசமாக செய்துபார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருந்தது. நடிப்பது என்பது எந்த இசையமைப்பாளருக்கும் புதிய விஷயம் கிடையாது. மைக்கேல் ஜாக்சன், மடோனா வரையில் எல்லோருமே நடித்திருக்கிறார்கள். இளையராஜா, ரகுமான் வரையில் மூன்று நாள் கால்ஷீட்டில் விளம்பரத்தில் நடிக்கிறார்கள். நான் சினிமாவில் நடிக்கிறேன். அவ்வளவுதான். சினிமாவில் நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏன் கூடாது என்று தோன்றியது. தியாகராஜ பாகவதர் காலத்தில் பாட்டுப் பாடி நடித்திருக்கிறார்கள். நானே ஏதோ புதிதாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியாது. இங்கு என்னைவிட பெரிதாகச் செய்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது நானும் நடிக்கிறேன். நான் நடிக்கிறேன் என்பதை புதிதாகப் பேசுகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும்.


இந்தப் படத்தில் நடிப்பதற்காக பயிற்சிகள் ஏதும் உண்டா?



ஒன்றும் அவசியமில்லை. நடிக்கிறோம் என்ற கவனம் இருந்தால்தான் பிரச்னை. எதுவுமே தேவையில்லை. படப்பிடிப்பில் கோபப்படுங்கள், அழுங்கள் என்று சொன்னால் நீங்கள் இயல்பில் எப்படி இருப்பீர்களோ அதைச் செய்தால் போதுமானது. அதற்காக கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டால் சரிவராது.


பாடல்கள் இல்லாமல் படங்கள் வரவேண்டும் என்கிறார்கள். அதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


அது நல்ல விஷயம்தான். அப்படி பாடல்களே இல்லாமல் படங்கள் தமிழில் வரும்போது அவை உலகளவில் பேசப்படும். எதுவரைக்கும் பாடல்கள் வருகிறதோ அதுவரைக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைக்காது. பாடல்கள் இல்லாததுதான் படம். இசையமைப்பாளர்களுக்கு அதனால் ஒன்றும் பிரச்னையில்லை. பின்னணி இசை இருக்கிறது. ஆல்பம் செய்துவிட்டுப் போய்விடுவோம். நீங்கள் காதலிக்கிறீர்கள். எப்போதாவது மனைவியோடோ காதலியோடோ சேர்ந்து ஆடியிருக்கிறீர்களா? பாடல் என்பது சுத்தமாக வெறும் கதைதான். நடைமுறையில் இல்லாத மலிவான ஒரு பிலிம்மேக்கிங்தான் இது. ஜிகினா உடைகள் போட்டுக்கொண்டு ஆடுவதெல்லாம் நல்ல படத்திற்குரிய அடையாளம் கிடையாது. 

Sunday, January 22, 2012

ரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த சண்டே இந்தியன்

http://lh4.ggpht.com/_3dVzeCbqCSw/Syo66vKLFMI/AAAAAAAABog/JP6fLY0XFfc/charu_thumb%5B3%5D.jpg 

இலக்கிய உலகில் பல சர்ச்சைகளில் சிக்கியவரும் , லட்சக்கணக்கான வாசகர்களைக்கொண்டவருமான சாரு நிவேதிதா பேட்டி த சண்டே இந்தியன் வார இதழில் வந்திருந்தது.. பேட்டி கண்டவர்கள் சுந்தரபுத்தன், ஷங்கர்ராமசுப்ரமணியன்

1. தமிழின் முக்கியமான சிறுகதைகளைத் தொகுத்தால் அதில் உங்கள் கதைகளும்    இடம்பெறும்..ஆனால் தற்போது சிறுகதைகள் எழுதுவதில்லையே?



சமீபத்தில் மொராக்கோ எழுத்தாளர் Tahar ben jelloun  எழுதிய Leaving tangier என்ற அருமையான நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  அதில் உள்ள பல அத்தியாயங்கள் நான் எழுதும் கட்டுரைகளைப் போலவே இருப்பதை எண்ணி ஆச்சரியம் அடைந்தேன்.  மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.  நான் எழுதும் பெரும்பாலான எழுத்துக்கள் புனைகதை, கட்டுரை என்ற இரண்டுக்கும் நடுவில் இருப்பதாகவே கருதுகிறேன். 

என் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே ஏதோ மாயாஜாலக் கதைகளில் வருவதைப் போல் என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கின்றன.  கட்டுரை, கதை என்று எல்லாமே சேர்ந்து மலையிலிருந்து விழும் அருவியைப் போல் கொட்டுகிறது.  ஒரு சமயத்தில் மூன்று மலையாள வார இதழ்களில் எழுதி வந்தேன்.  ஒன்றில் ராஸ லீலா.  இன்னொன்றில், உலக இசை.  மூன்றாவதில், இலக்கியம், அரசியல், சினிமா என்று பொது விஷயங்கள்.  இந்த மூன்றையும் படித்த என் மலையாள நண்பர் ஒருவர் “மூன்றுமே ஒன்று போல் இருக்கிறது. அனுப்பும் போது மாற்றி அனுப்பி விடாதீர்கள்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.

அமெரிக்க எழுத்தாளர் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி பற்றியும் இப்படித்தான் சொல்வார்கள்.  என் எழுத்து புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையே ஊடாடிக் கொண்டிருப்பதால் என்னைப் பொறுத்தவரை சிறுகதை, நாவல் என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லை.  என் நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையுமே ஒருவர் சிறுகதைகளாக வாசிக்க முடியும்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதிக்கு நான் எழுதி மலையாள இதழ்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட என் கடிதமே மரியோ பர்கஸ் யோசாவின் நாவலில் ஒரு அத்தியாயமாக எழுதப் பட்டிருக்கும்.  இருந்தாலும் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதாக இருந்தால், இப்போது என் மனம் ஒரு பரந்து விரிந்த கேன்வாஸில்தான் யோசிக்கிறது.  200 பக்கங்களுக்குக் குறைவாக என்னால் ஒரு புனைகதையை இனிமேல் உருவாக்க முடியும் என்று தோன்றவில்லை. காரணம் எனக்குத் தெரியவில்லை.  


2. எக்சிஸ்டென்சியலிசமும், ஜீரோ டிகிரியும் கூர்மையும், அங்கதமும், புதிய வடிவமும் கொண்ட நாவல்கள்..ஆனால் அவற்றைத் தொடர்ந்து நீங்கள் எழுதிய நாவல்கள் வெறும் செய்திக்குறிப்புகள் மற்றும் டைரிக்குறிப்புகளைப் போல் உள்ளதே?


டைரிக் குறிப்புகள் அல்ல.  ஆட்டோ பிக்ஷன்  சர்வதேச அளவிலேயே ஆட்டோஃபிக்‌ஷனை இதுவரை எழுதிப் பார்த்தவர்கள் என்று இரண்டு மூன்று பேரை மட்டுமே குறிப்பிட முடியும்.  செர்கி டெப்ரோவ்ஸ்கி என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் அவர்களில் ஒருவர்.  ஆனால் அவருடைய நாவல்கள் எதுவும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.  மொழிபெயர்க்கப்பட முடியாத ஒரு ஃப்ரெஞ்சை அவர் எழுதுவதாகச் சொல்கிறார்கள்.  என்னுடைய ஸீரோ டிகிரியைப் படித்து விட்டு அது அவருடைய எழுத்துக்கு மிக நெருக்கமாக இருப்பதாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

ஆட்டோஃபிக்‌ஷன் என்ற இலக்கிய வகையே சர்வதேச இலக்கியத்துக்குத் தமிழ் கொடுத்த கொடை என்று சொல்ல முடியும்.  அப்படிப்பட்ட இலக்கிய வகைமை என் மூலமாகவே வெளியே சென்றது.  இது ஏதோ சுயம்புவாக என் மூளைக்குள் உதித்தது அல்ல.  இந்த வகைமைக்காக நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.  ஒருவர் நகுலன்.  இன்னொருவர், ஃப்ரெஞ்ச் இயக்குனர் கொதார்.  


மேலும், தமிழில் ஒரு பழக்கம் உண்டு.  எல்லா எழுத்தாளர்களிடமுமே இப்படி ஒரு கேள்வி கேட்கப் படுகிறது.  “உங்களுடைய முந்தைய கவிதைத் தொகுப்பு நன்றாக இருந்ததே?  இப்போது வந்திருப்பது அப்படி இல்லையே?” உண்மையில் இப்படிப்பட்ட கேள்வி ஒரு எழுத்தாளனை அவமானப்படுத்தவே செய்கிறது.  இதன் பொருள் ஒன்றுதான்.  தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை தீண்டத் தகாதவர்களைப் போல் கருதுகிறது.  அந்த அவமதிப்பின் அடையாளமே இப்படிப்பட்ட கேள்விகள்.  இன்னும் குறிப்பாகச் சொன்னால், ஸீரோ டிகிரி வந்த காலத்தில் அதை என் சக எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதி தவிர வேறு ஒருத்தர் கூட  அதை சிலாகித்து ஒரு வார்த்தை சொன்னதில்லை.  இப்போது அந்த நாவலுக்கு ஒரு கல்ட் ஸ்டேட்டஸ் வந்து விட்டதால் தவிர்க்க முடியாமல் அதைத் தங்களின் பட்டியலில் சேர்க்கிறார்கள்.  என்னுடைய மற்ற நாவல்களுக்கும் இது நடக்கும்; ஆனால் 20 ஆண்டுகள் ஆகும்
http://www.andhimazhai.com/account/news/new%208.1.09%20003.jpg

3. கேரளச்சூழலை சுந்தர ராமசாமி தொடங்கி நீங்கள் வரை தொடர்ந்து புகழ்ந்து வருகிறீர்கள். அங்கு பரந்த வாசகத்தளம் இருக்கிறார்கள். ஆனால் தமிழளவுக்கு ஆழமாக இலக்கிய, விமர்சனச் செயல்பாடுகளும் விவாதங்களும் நடந்திருக்கிறதா...தமிழுடன் ஒப்பிடத்தகுந்த அளவில் சமகால எழுத்தாளர்கள் மலையாளத்தில் உள்ளார்களா? 

இல்லை.  மலையாளத்தில் மட்டும் அல்ல; இந்தியாவிலேயே இல்லை.  அருந்ததி ராயை விட சிறப்பாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள் தமிழில் 50 பேர் இருப்பார்கள்.  ஆனால், தமிழ்நாட்டில் சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டுமே மதிக்கப்படுகிறார்கள். கேரளத்தில் எழுத்தாளர்களுக்குத்தான் முதல் மரியாதை.  அங்கே ஒரு டஜன் இலக்கியப் பத்திரிகைகள் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகின்றன.  அதுவும் அவை வாரப் பத்திரிகைகள்.  இங்கே வாசகர் எண்ணிக்கை கம்மி.  இதுவே வித்தியாசம். 

4. இணையம் சார்ந்த வாசகர்களை ஏராளமாக வைத்திருப்பவர் நீங்கள். அவர்கள் ஆழமான வாசகர்கள் என்று கருதுகிறீர்களா?

இல்லை.  ஆனால் இணையம் இல்லாவிட்டால் அவர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொண்டு ஒரு மிடில் க்ளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  அதைவிட இது பரவாயில்லை.  ஆனால் எல்லோரையும் அப்படிச் சொல்லி விட முடியாது.  எனக்குத் தெரிந்து பல்வேறு சீரியஸான விஷயங்கள் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன.  முன்பு சிறுபத்திரிகைகள் இருந்த இடத்தை இன்று இணையம் எடுத்துக் கொண்டிருக்கிறது.  இணையத்தைப் பற்றிய சரியான பரிச்சயம் இல்லாதவர்களே இணைய எழுத்தாளர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  பதர்கள் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் நெல்மணிகளும் இங்கே ஏராளம் என்பதை மறந்து விடக் கூடாது.

5. தமிழில் இணையம் வழியாக முதலில் அதிக வாசகர்களை எட்டியவர் நீங்கள்.. ஆனால் தொடர்ந்து சுயதம்பட்டமும் சுயபெருமையும் அதிகமாக உங்கள் எழுத்துகளில் தொடர்கிறது..ஒரு மொழியில் இயங்கும் முக்கியமான எழுத்தாளன் இந்தளவு தனது ஆளுமையை பெரிதாக்கிக் காட்ட அலட்டிக்கொள்ள வேண்டுமா?


ஒரு கதை சொல்கிறேன்.  வெளியுலகத் தொடர்பே இல்லாத ஒரு பட்டிக்காடு.  அங்கே பிறந்து வளர்ந்த ஒருவன் வெளியே போய் படித்து விளையாடி ஒரு ஒலிம்பிக் மெடலையும் வாங்கினான்.  அதை எடுத்துக் கொண்டு தன்னுடைய பட்டிக்காட்டுக்கு வந்தான்.  தன் தாய்க் கிழவியிடம் காண்பித்துப் பெருமை கொண்டாடினான்.  ஒரு நாணயத்தைப் போல் இருந்த அந்த மெடலை எடுத்துக் கொண்டு போய் பெட்டிக்கடையில் கொடுத்துக் கொஞ்சம் புகையிலை கேட்டாள் கிழவி.  கடைக்காரனோ அதை செல்லாத காசு என்று திருப்பி கொடுத்து விட்டான்.  அந்த ஒலிம்பிக் மெடல் வாங்கியவனின் நிலையில் நான் இருக்கிறேன்.  அந்த கிராமம்தான் தமிழ்நாடு.   நான் வாங்கிய மெடல்களின் பெருமையை அறியாத இந்த ஊரில் நான் தானே அதைப் பற்றிப் பேச வேண்டும்?

உலக ஆட்டோஃபிக்‌ஷனை அறிமுகப் படுத்தியதால் ஒரு ஆங்கில தினசரி அதன் அகில இந்தியப் பதிப்பின் முதல் பக்கத்தில் என் பேட்டியைப் போட்டது. பிரதம மந்திரி போன்றவர்களின் பேட்டிதான் அப்படி வரும் என்று சொன்னார்கள்.  பிறகு, கடந்த பத்தாண்டுகளின் சிறந்த பத்து சாதனையாளர்கள் என்ற பட்டியலில் ஒருவனாக வெளியிட்டது.  அந்தப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்ற இருவரில் நானும் ஒருவன்.  இன்னொருவர், ரஜினிகாந்த்.  கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரியை மாடர்ன் ஏசியன் க்ளாசிக்ஸ் என்ற பிரிவில் பாடமாக வைத்திருக்கிறது.  இதையெல்லாம் நான் யாரிடம் போய் சொல்ல?  ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சினிமாக்காரர் தும்மினால் கூட அது தலைப்புச் செய்தியாக வருகிறது.

  எழுத்தாளனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.  அதனால்தான் இதையெல்லாம் நானே சொல்லித் தீர வேண்டியிருக்கிறது.  மேலும், எனக்குப் போலிப் பணிவு பிடிக்காது.  ஒரு மருத்துவர் தான் வாங்கிய பட்டங்களைப் போட்டுக் கொண்டுதானே மருத்துவம் பார்க்கிறார்?  அதைப் போலவேதான் நானும் செய்கிறேன்.  மேலும், நான் என்னைப் பற்றி எதையும் பெரிதாக்கிக் காட்டவில்லை.  உள்ளது எதுவோ அதை மட்டுமே சொல்கிறேன்.  எழுத்தாளர்களைக் கொண்டாடும் கேரளத்தில் இப்படி நானே என் பெருமையைச் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்ததில்லை.


6. தமிழ் சினிமா தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக எழுதியும் விவாதித்தும் வருபவர் நீங்கள் . இன்றைய தமிழ்சினிமா பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?


தமிழ் சினிமாவில் மிக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் கருணாநிதியின் குடும்பத்தினர் சினிமாத் துறையில் செய்த அராஜகத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது முடங்கிக் கிடந்தது.  இனிமேல் நிலைமை திருந்தி விடும்.  இது ஒருபுறம் இருக்க, விஷ விருட்சத்தைப் போல் பரந்து விரிந்து கிடக்கும் வணிக சினிமாதான் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆபத்து.  நல்ல சினிமா எடுப்பவர்கள் கூட வணிக சினிமாவின் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி சில பல சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.  இன்னொரு பிரச்சினை, தணிக்கைத் துறை.  சினிமா பற்றி எதுவுமே தெரியாத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சினிமாவை மதிப்பீடு செய்ய என்ன தகுதி இருக்கிறது?  இவர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமாவை யாராலும் காப்பாற்ற முடியாது.  உடனடியாக இந்த அதிகாரிகள் தணிக்கைத் துறையிலிருந்து விரட்டப்பட்டு அங்கே கலைஞர்களும், புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்.  இது உடனடியாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப கட்ட வேலை.    
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin1lZ703JltrRmx7vIUUL1o81IEpWaUVE1k6JX_j5XHuw2eYV0xvsruRfwSeZ3JrO5xCwZI4nQ6YR29qhmDTxUxG8evRr7jKTxKDQNnUbF3MDHunjSjyg7w3aW91AyFh5VyAPIX3hyphenhyphenegM/s400/CIMG0427.JPG
 
7.ஒரு ஆளுமையை திடீரென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், தூற்றுவதும் உங்களுடைய செயல்பாடுகளில் தொடர்வதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?

 என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது.  நகுலன், ஆதவன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கோபி கிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், தர்மு சிவராமு என்று என் முன்னோடி எழுத்தாளர்களை கடந்த 38 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாராட்டி வந்திருக்கிறேன்.  யாரையும் தூற்றியதில்லை.  கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன்.  என்றைக்குமே பாராட்டியதில்லை.  ஆனால் ஒரு சாமியாரைப் பாராட்டினேன்.  அவர் ஒரு போலிச் சாமியார் என்று பிறகுதான் தெரிந்தது.  அப்படித் தெரிந்த பிறகும் நான் ஏற்கனவே பாராட்டியவர் ஆயிற்றே என்பதற்காகத் தொடர்ந்து பாராட்டிக் கொண்டிருக்க முடியுமா?  இன்று என் மனதுக்கு உகந்தவனாக இருக்கும் ஒரு கவிஞன் நாளையே நடிகர் விஜய்யைப் பாராட்டி கவிதை எழுதினால் அவனைத் தூற்றத்தானே வேண்டியிருக்கும்?

8. உங்களது எழுத்துவாழ்க்கை உங்களுக்கு தந்தது என்ன?

இழந்தைதைச் சொன்னால்தானே பெற்றதைச் சொல்ல முடியும்? இழந்தவை: எழுத்துலக நண்பர்கள், குடும்பம், அன்றாட வாழ்வின் கொண்டாட்டங்களும் சுக துக்கங்களும், பணம், செக்ஸ்.  பெற்றது ஒன்றே ஒன்று: வாசக நண்பர்கள்.  மைக்கேல் ஜாக்ஸனைப் போன்ற ஒரு பாப் ஸ்டாரின் ரசிகர்களைப் போல் என் மீது உயிரையே வைத்திருக்கும் வாசகர்களும் அவர்களோடு நான் கொண்டுள்ள உறவும்தான் இந்த எழுத்து எனக்குத் தந்தது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAsayE5O8A_GSNw-r18O7XPF6CcZ22tDF3ASN3OYZHR2lAD95SzvlBGBetD4mq3aIWVXuexkXay-V6voy2etWEuJaekZtHo-IEuiMf-uoqn4EPwRK-3B8M7ONOz8IMiv8N1YY_v3nQEmU/s400/soro1.jpg


9. இளைஞர்கள் தான் உங்கள் வாசகர்கள் என்கிறீர்கள். ஆனால் உங்கள் எழுத்துகளுக்குள் நவீன வாழ்க்கையின் வேகமயமான மாற்றங்கள் சார்ந்து குறிப்பாக பாலியல் பண்பாடு சார்ந்து ஒரு அசூயை தொடர்ந்து வெளிப்படுகிறதே..இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அசூயை வெளிப்படுவது உண்மைதான்.  ஆனால் இது பாலியல் ஒழுக்கம் சார்ந்தது அல்ல.  அன்பும், அறிவார்த்தத் தேடலும் இல்லாமல் வெறும் உடல் கவர்ச்சி ஒன்றையே ஆதாரமாகக் கொண்ட இன்றைய ஆண்/பெண் உறவையே நான் கடுமையாக விமர்சிக்கிறேன்.  இருந்தும் ஏன் இளைஞர்கள் என் எழுத்தைப் படிக்கிறார்கள் என்றால் நான் அவர்களின் உலகில் இருந்து கொண்டு இந்த விமர்சனத்தைச் செய்கிறேன்.  வெளியில் இருந்து அல்ல.  அதன் காரணமாகவே அவர்கள் என் விமர்சனத்தை ஆர்வத்தோடும் பதற்றத்தோடும் எதிர்கொள்கிறார்கள். காமரூப கதைகள் மற்றும் ராஸ லீலா ஆகிய இரண்டு நாவல்களும் இளைஞர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நாவல்கள்.   இதை அவர்கள் ஒரு உரையாடலாகவே எடுத்துக் கொண்டார்கள்.  மற்ற எழுத்தாளர்கள் இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தாமல் வெளியே நின்று கொண்டு போதனைகளும் அறிவுரைகளும் செய்வதால் இந்த இளைஞர்கள் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள்.


10. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கனிமொழி பெயர் சர்ச்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரை உங்கள் புத்தக வெளியீடுக்கு அழைத்துவிட்டு பின்னர் அவரை ஊழல்வாதி என்று விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?

உங்கள் கேள்வியில் ஒரு சிறிய தகவல் பிழை உள்ளது.  கனிமொழியையும் ராசாவையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து நான் கடுமையான மொழியில் விமர்சித்து வருகிறேன்.  கனிமொழி என்னுடைய புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய அன்றுதான் ஒரு பிரபல பத்திரிகையில் ’இப்படிப்பட்ட ஊழல் செய்பவர்கள் தேசத் துரோகிகள்; இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று எழுதினேன். அதையும் படித்து விட்டுத்தான் அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்தார்.

ஆனால் இப்பேர்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை என் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என்றே நான் விரும்பினேன்.  தனிப்பட்ட முறையில் அது என் கொள்கைக்கும் வாழ்வியலுக்கும் முரணானது.  ஆனால் நான் இந்த விஷயத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.  என்னுடைய புத்தக வெளியீட்டாளரின் விருப்பத்தின் பேரிலேயே கனிமொழி அழைக்கப்பட்டார்.  இனிமேல் இது போன்ற பிழைகள் நடக்காது.  இனிமேல் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்கள் என்னுடைய வாசகர் வட்ட நண்பர்களால் மட்டுமே நடத்தப்படும்.  இனிமேல் என்னுடைய  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிய முடிவுகளை நான் மட்டுமே எடுப்பேன்.

11. ஜெயலலிதா சுயநலமில்லாதவர் என்று சமீபத்தில் துக்ளக்கில் எழுதியிருந்தீர்கள்..அது மிகையான கூற்றாக உங்களுக்குப் படவில்லையா?


 இல்லை.  ஜெயலலிதா சுயநலம் இல்லாதவர் என்றே நான் நினைக்கிறேன்.  கருணாநிதியின் குடும்பத்தில் சுமார் 500 பேர் இருப்பார்கள்.  தமிழகத்தின் அத்தனை துறைகளும் அவர்கள் கையில்தான் இருந்தன; இருக்கின்றன.  ஜெயலலிதா ஒரே ஆள்.  உலகில் தனித்து வாழும் மனிதர்கள் சுயநலம் கருத வேண்டிய அவசியமே இல்லை.