Friday, April 27, 2012

என் தங்கச்சி எதை கேட்டாலும் ஓக்கே சொல்லிடுவா - கார்த்திகா பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvoCYk4VgqSdNrE-2dWv_8KRFr30Sg9gNodZ4FphJ5AVLvNrp-dKQ1WDTcIKlceUkxRAYkRJJtOu0BbGtf-Nnwzu_sYzW4a7U1JidL5pOJrGZFCIVSeQ-Z3q5WK4JkRRYRqysXK-P3EplD/s1600/Karthika-hot-ko-movie-photo-stills-005.jpg 

கார்த்திகா நடித்து இன்னும் தமிழில் இரண்டாவது படமே வெளியாகவில்லை. அதற்குள் கார்த்திகா தங்கை நடிக்க வருகிறார் என்று செய்திகள். 'அப்படியா?’ என்று கண்ணழகியிடம் விசாரித்தால், 'ஆமாவா... இல்லையா’ என்று புரியாத விதத்தில் அபிநயிக்கின்றன அவரது விழிகள்.  


சி.பி - இப்போ எனக்கு பயங்கரமான டவுட் என்னான்னா ராதா ஹீரோயினா நடிச்சப்ப நாம சைட் அடிச்சோம், இப்போ அவங்க பொண்ணு நடிக்கறப்ப அதே போல் சைட் அடிக்க முடியுமா? மக முறை ஆகாதா? 

 ''என் தங்கச்சி துளசி இப்பதான் நைன்த் படிக்கிறா. 'படிப்பா, நடிப்பா’னு எதைக் கேட்டாலும் 'ஓ.கே.’னு சொல்ற வயசு. முதல்ல அவ ஸ்கூலிங்கை முடிக்கட்டும். அப்புறம் பார்ப்போம். அதான் வீட்ல சினிமா சீனியர்ஸ் அம்மா, பெரியம்மா, நான்லாம் இருக்கோமே... பார்த்துக்குவோம்.''



சி.பி -  எதைக் கேட்டாலும் 'ஓ.கே.’னு சொல்ற வயசா?. முதல்ல அந்த ஆட்டிட்யூடை மாத்தச்சொல்லுங்க. ரொம்ப டேஞ்சர்.. சினி ஃபீல்டுல.. 


1. '' 'கோ’ ஹிட்டுக்குப் பிறகு ஹீரோ ஜீவாவே முழுசா மூணு படம் முடிச்சுட்டார். ஒரு ஹீரோயினா நீங்க அந்த வெற்றியைத் தக்கவெச்சுக்கலையே?''


சி.பி - அவங்க ஹிட் ஆகனும்னா முதல்ல இயற்கையான புருவம் வேணும்.. அது என்னவோ தகிடு தித்தம் பண்ணி வரைஞ்ச மாதிரியே இருக்கு..  ரொம்ப செயற்கையா தெரியுது.. எப்பவும் முகம் கோபமா இருக்கற மாதிரி இருக்கு.. பெரிய மைனஸ்.. 


''கரெக்ட்தான். ஆனா, நான் ஒண்ணும் சும்மா இல்லையே... 'மகரமஞ்சு’னு ஒரு மலையாளப் படத்தில் நடிச்சேன். நல்ல பேர் கிடைச்சது. அப்புறம் ஜூனியர் என்.டி.ஆர்.கூட 'தம்மு’னு ஒரு தெலுங்குப் படம் நடிச்சேன். 



 சி.பி - ஆமா, இன்னைக்கு காலைல  ரிலீஸ் ஆச்சு.. இன்னைக்கு மாலைல வேற படம் ரிலீஸ் ஆகுதாம், படம் படு குப்பையாம்.


'கோ’வுக்குப் பிறகு தமிழ்ல பளிச்சுனு பேர் சொல்ற மாதிரி படம் அமையலை. இப்ப 'அன்னக்கொடியும்  கொடிவீரனும்’ படத்துலதான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. தேனிப் பக்கம் சந்தோஷமா மாடு மேய்ச்சிட்டு இருக்கேன்!''


சி.பி - அன்னக்கொடி படம் ரிலீஸ் ஆச்சுன்னா உலகத்துலயே கிராமத்துக்கேரக்டர்ல ஓவர் மேக்கப் போட்ட ஓமனா விருது  உங்களூக்குத்தானாம்..
2. ''அப்படி என்ன அந்தப் படத்தில் ஸ்பெஷல் ஸ்கோப் இருக்கு?''



சி.பி - அவங்க திறமை முழுசா காட்டறாங்களாம்.  சென்சார் கட் போக ஓரளவுதான் வெளீல வருமாம். 

''என்னங்க இது? டைட்டில்லயே என் பேர் இருக்கு. பாரதிராஜா சார் படம். இதுக்கு மேல என்ன வேணும்? சிறுமி, இளம் பெண், மெச்சூர்ட் கேர்ள், அம்மானு நாலு ஸ்டேஜ்ல வர்ற கேரக்டர். படிச்சது, வளர்ந்தது, நடிச்சதுனு எல்லாமே சிட்டியிலேயே இருந்துட்டதால கிராமத்துச் சூழல் ரொம்பவே புதுசா இருந்துச்சு. ரொம்பக் கஷ்டப்பட்டேன்.


 ஆனா, 'உனக்கு அதுதான் ப்ளஸ். அந்தப் புதுச் சூழலுக்கு நீ இயல்பாவே வெட்கப்படுற. அதுதான் உன் கேரக்டரை ரசிக்கவைக்குது’னு அம்மா சொன்னாங்க. மிஸ் பண்ணவே முடியாத படம்.''  


சி.பி - கோ படத்துல நீங்க வெட்கப்படற சீன் பார்த்து நாங்க எல்லாரும் வெட்கப்பட்டோம் மேடம்.. ரொம்ப கேவலமா இருந்தது.. 

3. ''என்ன... திடீர்னு அமீர் - இனியா ஜோடியைப் படத்துல இருந்து நீக்கிட்டார் பாரதிராஜா?''



 சி.பி - மாற்றம் ஒன்றே இந்த சினிமா உலகில் மாற்றம் இல்லாததுன்னு அவர் நினைக்கறாராம்

''அமீர் சாரோட 'கட்டுவிரியன்’ கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல். அது ஒரு முழுப் படத்தையே தாங்கி நிக்கும். அதை இந்தப் படத்தோட சேர்த்தா, அந்த கேரக்டர் முழுசா வெளிப்படாமல் போயிருமோனு சார் நினைச்சிருப்பார். அப்படித்தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன். வேற காரணம் எதுவும் எனக்குத் தெரியலை!''

http://reviews.in.88db.com/images/karthika-gallery/Actress-Karthika-Latest-Stills-Pics-Photoshoot-Gallery-60.jpg


4. ''சினிமாவில் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா?''



சி.பி - லவ்வர் இருக்காங்களா?ன்னு நேரடியா கேட்க முடியுமா?

''என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? 'தம்மு’ படத்தில் த்ரிஷாவும் நானும் சேர்ந்துதான் நடிச்சோம். அப்ப ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். த்ரிஷா ஸோ ஸ்வீட். 10 வருஷத்துக்கும் மேல ஃபீல்டுல இருக்காங்க. ஃப்ரெண்ட்லியா என்ன கேட்டாலும் எல்லா வேலையையும் விட் டுட்டு பண்ணிக்கொடுப் பாங்க. 


கேரியரிலும் பெர்சனலாவும் அவங்க நல்ல ரோல் மாடல். தமிழ்ல அவங்க இடத்தை நான் பிடிக்கணும். அப்படி நான் யோசிக்கிறப்ப மட்டும் அவங்களை நான் எனிமியா நினைச்சுக்குவேன். அப்பத்தானே அவங்க இடத்தைப் பிடிக்க முடியும்!''


சி.பி - அப்போ சிம்பு கூடவும், ஆர்யா கூடவும் ரொம்ப ஃபிரண்ட்லியா இருப்பீங்களா? 

5. ''உங்க உயரம்தான் பல ஹீரோக்களை உங்களுடன் நடிக்கவிடாமப் பண்ணுதாமே?''


சி.பி - ஆமா, ஆனா ஒரு பயலும் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலைன்னு சொல்லிட முடியாது.ஏன்னா கைக்கே எட்டலையாம்

''உயரம்கிறது என் அடையாளம். தன் மீது நம்பிக்கை உள்ள ஹீரோக்கள் என்கூட சேர்ந்து நடிச்சிருக்காங்க; நடிக்கிறாங்க. அப்படி தன்னம்பிக்கை உள்ள ஹீரோக்கள்கூட நடிச்சாலே எனக்குப் போதும்!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilRpTTRCeUluCJZVPoiHaxVnkGUwyTbaH2ozQisgZTo8eu2Rty-iQsjoXJq1kd9xJqnNQIPx4c_EQeDCN4h2Xa5PVbXHxmFvUMUEMqEBZjETOWjxuihbWskOT2QW5tbO-0i6J8R3cFJA/s1600/karthika_Hot_in_white_saree_photo_stills+%25281%2529.jpg

டிஸ்கி -பதிவுலக நண்பர்களுக்கு இன்று புதிய திரட்டி ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறேன். இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி வரிசையில் புதிதாக களத்தில் குதித்திருக்கிறது http://www.hotlinksin.com

இந்த திரட்டியில் பதிவுகளை தொடர்ந்து இணைத்து வந்தால் நம் இணையதளத்திற்கு வருகிற வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது மட்டுமில்லாமல் பிளாக்கின் அலெக்ஸா ரேங்கின் மதிப்பும் உயரும் என்கிறார்கள். நீங்களும் முயற்சித்துத்தான் பாருங்களேன்...



அழகு நிலையங்கள் பெரும்பாலும் ஏன் பெண்களுக்கு மட்டுமே உள்ளது ? ( ஜோக்ஸ்)

மாப்புள்ள விட்டுறாத !! ,,இன்னும் கொஞ்சம்தான் ...ம்ம்ம்ம்ம்ம்ம்... தம்.. கட்டு ,,,,மேல போய்டலாம் :)) http://pic.twitter.com/pcopTqAJ-அண்ணே ஒரு விளம்பரம்
1. மெல்ல மெல்ல மாரி தூறுவது  என்பதே திரிந்து மொள்ள மாரி என அழைக்கப்பட்டதா?


-----------------------------

2.அழகு நிலையங்கள் பெரும்பாலும் ஏன் பெண்களுக்கு மட்டுமே உள்ளது ?


ஏன்னா ஆண் செயற்கை அழகில்  நாட்டம் கொள்வதில்லை


-----------------------------


 3.கண்மணியே பேசு!மவுனம் என்ன கூறு!  # நான் பேசுனா நீ தாங்க மாட்டே! 4 மாசம் தூங்க மாட்டே @ மயில் போல பொண்ணு ஒண்ணு (குரல்ல)

----------------------


4.  என்னதான்  சூப்பர் ஃபிகரா இருந்தாலும்  அவள் நெற்றியில் குங்குமம் இல்லை என்றால் தமிழனால் முழுமையாக ரசிக்க முடியாது # சைக்காலஜி


----------------------------

5. உடம்பை குறைக்க எளிய வழி

1. சாப்பாட்டை பாதியாக குறைக்கவும்

2.புரோட்டா,அசைவம் தவிர்க்க

3.வாக்கிங்க், ஜாக்கிங்


4. டெயிலி ------- ஹி ஹி ( அதாவது சிரிச்சுட்டே இருக்கவும் )

--------------------------------


6. ரவி - எப்பவும் முன்னாலயே போ.. பேக் அடிக்காத...


 பவி - அப்போ காரை ரிவர்ஸ் எடுக்கனும்னா?


---------------------------

7.  ஹாய் மிஸ்! நீங்க செம ஃபிகரா இருக்கீங்க.

ம்க்கும், இதெல்லாம் கேட்டு எனக்கு பழகிடுச்சு..


 தக்காளி, எல்லாப்பயலுகளும் பொய்யைதான் சொல்லி இருக்கான்


---------------------------

8. ஜட்ஜ் - உனக்கு ஜாமீன் தர முடியாது, நீ வெளில போனா பலருக்கு ஆபத்து.


கில்மா டீச்சர். குமுது - அப்போ உள்ளே இருந்தா யாருக்கும் ஆபத்து இல்லியா? ஹி ஹி


---------------------------

9. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால் நான் இறைவனிடம் கேட்க விரும்புவது  வருடம் ஒரு புது வரம் ஹி ஹி



---------------------------------

10. :ஐ.நா.பொதுச்செயலாளர் பான்-கீ-மூன், 3 நாள் பயணமாக  இந்தியா வருகை # எனக்கு தெரிஞ்ச ஹிந்தில பான் கி மூன் = பாக்கின் நிலா( பாகிஸ்தான்?)


-------------------------

இனி நடக்கபோற எல்லாத்துக்கும் ! உனக்கும் பங்கு இருக்கு ! ...;)))


11. கூட்டுறவுதுறையை அழித்தது தி.மு.க-  பன்னீர்செல்வம்#  ஓக்கே, தானிக்கு தீனி, நீங்க எதை அழிக்கப்போறீங்க?


--------------------------

12. ஆண்கள் ஐ க்யூ ஸ்பெஷலிஸ்ட்ஸ்.. பெண்கள் அந்த ஐ க்யூக்களையே க்யூவில் நிற்க வைக்கும் ஸ்பெசலிஸ்ட்ஸ்


----------------------------

13.திகார் சிறையில் அழகிரி , ஆ ராசா சந்திப்பு #


ஆ ராசா - நான் குற்றமற்றன்..

 அழகிரி - ஜட்ஜ் சொன்னாரா?

ராசா - இல்லை, நானே சொல்லி பார்த்தேன்


---------------------

 14. அன்பே! என் அன்பு ஆல் டைம் அட்ச திரிதியை.. நீ எப்போ எவ்ளவ் கொடுத்தாலும் அது பல்கிப்பெருகும், டவுட்னா உன் தங்கச்சிட்ட கேளு


----------------------

15. இம்சை அரசன் 23-ம் புலிகேசி பார்ட் -2! வடிவேலு-சிம்புதேவன் ஆயத்தம்!! # வில்லனா கேப்டனை போடுங்க, படம் பிச்சுக்கும்


--------------------


இது எனக்கு !,, http://pic.twitter.com/eQOsXFzW

16. என்னை அடக்க நினைந்தால் அழிந்து போவார்கள் - விஜயகாந்த் சாபம்#  அப்போ பிரேமலதாவுக்கு ஆயுசு கம்மியாண்ணே?


---------------------------

17. நெருக்க நெருக்க விலகிப்பொகிறது ஃபிகர் # பஸ்சில்


------------------------

18. உலகின் சிறந்த ஜோடி யார்?னு 1000 பேர்ட்ட கேட்டா ஒரு பய தன்னையும் தன் சம்சாரத்தையும் சொல்லலை, யோசிக்கறானுங்க..


-----------------------

19. கொள்ளையர்கள் முதலில் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக திருப்பி சுட்டனர்:ஜெ # அங்கேயும் போலீஸ்க்கு செகண்ட் ப்ளேஸ் தானா? அய்யோ பாவம்


--------------------------

20. தமிழகத்தில் மட்டுமே புகார் தருபவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் உள்ளன-ஜெ  # ஐ ஜாலி , ஒரு புகார் கொடு,.. ஒரு சேரை எடு, வீட்டுக்கு ஓடு?


-----------------------

டேய் யாருடா அது ! வெள்ளாமை பண்ணுரகாட்டுல அசிங்கம் பண்ணுறது ...? # அய்யா .!ஆனது ஆச்சு 5 நிமிஷம் ;))) http://pic.twitter.com/bUjC2fWd

Thursday, April 26, 2012

வீரப்பன் விவகாரத்தில் நடந்தது என்ன? பழ நெடுமாறன் பேட்டி

1. வீரப்பனை நேரில் சந்தித்தவர், அவர் மிகவும் நம்பியவர்களுள் நீங்களும் ஒருவர் என்ற முறையில் அவரைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உண்மையாக, நேர்மையாகச் சொல்லுங்கள்?'' 
''வீரப்பன் படிப்பறிவற்ற காட்டுவாசிதான். ஆனால், அவரிடம் மனிதநேயமும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சத்தியமும் இருந்தது. வீரப்பன், ராஜ்குமாரைக் கடத்தி வைத்திருந்தபோது, அவரை மீட்பதற்காக நான் உள்ளிட்ட குழுவினர் காட்டுக்குள் சென்றோம். 

அப்போது எங்களையும் வீரப்பன் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தால், யாராலும் எதுவும் செய்துஇருக்க முடியாது. எங்களை அனுப்பிவைத்த அரசாங்கமும் கண்டுகொள்ளாமல்தான் விட்டிருக்கும். நாங்கள் அரசை நம்பி அல்ல... வீரப்பன் என்ற தனி மனிதனின் நேர்மையை நம்பித்தான் காட்டுக்குள் சென்றோம். வீரப்பனும் கடைசி வரையில் அந்த நேர்மை யைக் காப்பாற்றினார்.


வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப் படையினர் சத்தியமங்கலம் பகுதி மலைவாழ் மக்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தன மான தாக்குதல்களை நாம் அறிவோம். ராஜ்குமார் கடத்தல் சமயத்தில் 'பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இழப்பீடு தர வேண்டும்’ என்பது வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. அதற்காக அவர் ஒரு பட்டியல் கொடுத்தார். அதில் ஊர் வாரியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பெயர்கள் குறிக் கப்பட்டு இருந்தன.


 அந்தப் பட்டியலில் வீரப்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர்கூட இல்லை. ஆனால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அதிரடிப் படை கொன்றிருந்தது. நான் இதைப் பற்றி வீரப்பனிடம் கேட்டபோது, 'என் குடும்பம் அழிந்தது... அழிந்ததுதான். நான் இழப்பீடு வாங்கி என்ன செய்யப்போறேன்? என் பெயரைச் சொல்லி அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தால் போதும்’ என்று சொல்லி அதில் உறுதியாகவும் இருந்தார். வீரப்பனிடம் இருந்த இந்தப் பெருந்தன்மை அவரை வேட்டையாடிய அதிகாரிகளுக்கு இல்லை.



அந்தச் சமயத்தில் நான் மொத்தம் ஐந்து நாட்கள் காட்டுக்குள் இருந்தேன். அந்த ஐந்து நாட்களும் எனக்காக எல்லோரும் சைவ சாப்பாடுதான் சாப்பிட்டனர். எந்த வசதியும் இல்லாத காட்டுக்குள் வீரப்பன் செய்த உணவு உபசரிப்பை என்னால் எப்போதும் மறக்க முடியாது!''



2. ''ஈழ அரசியல் பேசுவதே புலம்பெயர் ஈழத் தமிழர்களைவைத்து பிழைப்பு நடத்தத்தான் என்று பலர் உங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்களே?'' 


''அது ஓர் அபத்தமான குற்றச்சாட்டு. ஈழத் தமிழர்களை ஆதரிப்பதால், நாங்கள் எவ்வளவோ சொந்த இழப்புகளுக்கு ஆளாகிஇருக்கிறோம். காவல் துறையின் நெருக்கடி, பொய் வழக்குகள், உளவுத் துறையின் கண்காணிப்பு எனப் பல வகைகளிலும் எங்கள் அரசியல் வாழ்க்கையும் சொந்த வாழ்க்கை யும் சிக்கலில்தான் தள்ளப்பட்டு இருக்கிறது.


ஈழத் தமிழர்களைக் கொண்டு நாங்கள் ஆதாயம் அடைந்தோம் என்பது அபாண்டத்திலும் அபாண்டமான குற்றச்சாட்டு. அப்படி ஏதாவது ஆதாயம் அடைந்திருந்தால், எங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துவரும் மத்திய, மாநில அரசுகள் இத்தனை காலம் சும்மா விட்டுவைத்திருக்குமா? வழக்குப்போட்டு உள்ளே தள்ள எவ்வளவு நேரம் ஆகும்?''

3. ''ராஜபக்ஷேவை எந்தக் காலத்திலாவது தண்டித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?'' 


''நிச்சயமாக!


இரண்டாம் உலகப் போரில் 50 லட்சத்துக் கும் அதிகமான யூத மக்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தது ஹிட்லர் கும்பல். போரின் முடிவில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதும், மற்ற குற்றவாளிகளுக் குச் சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததும் வரலாறு.


செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006-ம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நான்கு ஆண்டு காலமாகவிசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறை யிலேயே உயிர் துறந்தார்.


அண்மையில் சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் கைதுசெய்யப்பட்டு, அவர் மீது  சர்வ தேச நீதிமன்ற விசாரணை நடைபெற்றுவருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.


ஒரு நாட்டின் அதிபராக இருப்பது, மக்களைக் கொல்வதற்கான உரிமம் அல்ல. அப்படிக் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும்போது, நாகரிகச் சமுதாயம் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் தண்டிக்கும். ஆகவே, சர்வதேச சமூகம் ராஜபக்ஷேவையும் போர்க் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்கும் காலம் நிச்சயம் வரும். அதற்கு ரொம்பக் காலமும் ஆகாது!''


4. ''இலங்கையில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் இப்போதைய நிலை என்ன?'' 


''நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. முகாம்களில் இருந்து வெளியேறிப் போகச்சொல்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், வெளியில் சென்று அந்த மக்களால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில், அவர்களின் நிலங்களில் எல்லாம் சிங்களர்கள் குடியேறிவிட்டார்கள். முகாம்களிலும் இருக்க முடியவில்லை. குழந்தைகள், வயதான பெரியவர்கள் எல்லோரும் நல்ல உணவோ, தங்கும் இடமோ கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கின் றனர். இப்படித் தமிழர்கள் பட்டினியாலும் நிர்க்கதியாலும் சாக வேண்டும் என்றுதான் ராஜபக்ஷே அரசு எதிர்பார்க்கிறது!''




5. ''வாடகைக்கு வீடு கிடைப்பதில் உங்களுக்குச் சிக்கல் என்று கேள்விப் பட்டேன். அது உண்மையா?'' 


''எங்கள் கட்சி அலுவலகத்துக்கு ஒரு வாடகைக் கட்டடத்தைப் பிடித்து முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் எல்லாம் போட்ட பின்னர், கட்டட உரிமையாளர் 'தர முடியாது’ எனப் பின்வாங்கிவிட்டார். காரணம், உளவுத் துறை அவரை மிரட்டி இருக்கிறது. இப்படி எத்தனையோ சம்பவங்கள். சென்னை நகர எல்லையைக் கடந்து பல்லாவரத்தில் எங்கள் அலுவலகம் இருப்பதற்கு இந்த வீட்டுப் பிரச்னையும் ஒரு காரணம்.

 இவற்றையும் தாண்டி எங்களுக்கு வீடு தருபவர்களும் அலுவலகத்துக்கு இடம் தருபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், இது எனக்கு மட்டுமான பிரச்னை இல்லை. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த எல்லோருமே இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறோம். மறைமுகமாகவும் சமயங்களில் நேரடியாகவும் மிரட்டப்படுகிறோம். எங்கள் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் அரசியல் வாழ்வின் ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப் பழகிக்கொண்டுவிட்டேன்!''



6. '' 'ஈழத் தமிழர்கள்’ என ஏன் பிரித்துச் சொல்ல வேண்டும்? தமிழர்கள் என்று சொன்னால் போதாதா?'' 


''அப்படிப் பொதுவாகச் சொல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்தபோதிலும், ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் ஆஸ்திரேலியர்கள், கனடாவில் வாழ்ந்தால் கனேடியர்கள், அமெரிக்காவில் வாழ்ந்தால் அமெரிக்கர்கள். அந்த நாட்டுப்பற்றை விட்டுக்கொடுக்க முடியாது. மலேசியா வில் வாழ்பவர்கள் மலேசியத் தமிழர்கள், இந்தியாவில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர்கள், ஈழத்திலே வாழ்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான்.

 தேச எல்லைகளைக் கடந்து நம்மை மொழி ஒன்றிணைக்கிறது என்பதுதான் இதில் முக்கியம். இந்த வித்தியாசங்களை ஏற்றுக்கொண்டுதான் நாம் ஒன்று சேர முடியுமே தவிர, அதை அழித்துவிட்டு முடியாது. ஆகவே, 'எல்லோரும் தமிழர்கள்’ எனப் பொதுவாக வரையறுப்பது பொறுத்தமற்றது!''


7. '' 'ஏன்தான் இந்த அரசியலுக்கு வந்தோமோ?’ என்று நொந்துகொண்ட தருணங்கள் உண்டா?'' 


''அரசியலில் சலிப்புக்கு ஒருபோதும் இடம் இல்லை. மக்களுக்குத் தொண்டு புரியத்தான் வந்திருக்கிறோம். அதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவது இல்லை. என் அரசியல் வாழ்க்கையில் எத்த னையோ பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறேன். தடாவில் சில நாட்கள், பொடாவில் 18 மாதங்கள் என ஐம்பதுக்கும் அதிகமான முறை என்னை இந்த அரசுகள் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கின்றன. ஒருமுறைகூட அதற்காக வருந்தியதோ, சோர்வு அடைந்ததோ இல்லை.

 மாறாக, மேலும் உற்சாகத்துடன் மக்கள் பணிபுரியும் உந்துதலே ஏற்படும். பதவிக்காகவும்  பணத்துக்காகவும் அரசியலுக்கு வருபவர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய சலிப்புகள் ஏற்படலாம். மக்கள் நலனை மனதில்கொண்டு அரசிய லுக்கு வருபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உற்சாக தினம்தான்!''


8.  ''ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்கு எதை, யாரைக் காரணம் என்பீர்கள்?''   


''பின்னடைவுக்கு முக்கியமான முதல் காரணம், சர்வதேசச் சூழல்தான். அமெரிக் காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட 9/11 சம்பவத்துக்குப் பிறகு, உலக நாடு களின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையே வேறுபாடு காணப் பல நாடுகள் விரும்பவில்லை. 


எல்லா நாடுகளும் மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதன் ஓர் அங்கமாகத்தான் விடுதலைப் புலிகளும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இப்படி ஒன்றுசேர்ந்த நாடுகளின் உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவை எடுத்துக்கொண்டால், காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், நாகாலாந்து போன்ற பல இடங்களில் தேசிய இனப் போராட்டங்கள் நடக்கின்றன.

 சீனாவில் திபெத் மக்கள் நீண்டகாலமாக தனிநாடு கேட்டுப் போராடி வருகின்றனர். பாகிஸ்தானில் சிந்து மாநில மக்களும், எல்லைப்புறத்தைச் சேர்ந்தவர்களும் விடுதலைக்காகப் போராடுகின்றனர். இவர்களை எல்லாம் ஒழித்துக்கட்ட இந்த நாடுகள் முயற்சி செய்கின்றன. அதனால்தான், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதத்தின் பெயரால் கொச்சைப்படுத்தி சிங்கள அரசுக்குத் துணை நிற்கின்றன. உலக அளவிலான ஆளும் வர்க்கங்கள் தமக்குள் அமைத்துக்கொண்ட கள்ளக்கூட்டும் சூழ்ச்சியான நடவடிக்கைகளும்தான் ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்கு முக்கியக் காரணம்!''  


-அடுத்த வாரம்... 


 '' 'நம்மைவிட பிரபாகரனுக்கு 'அலர்ட்னஸ் - உஷார்தன்மை’ அதிகம்!’ என்கிறார் எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போ தேனும் உணர்ந்திருக்கிறீர்களா?'' 




 ''உங்கள் தந்தை காந்தியடிகளிடம் கையெழுத்து கேட்டு, அதற்கு அவர் காசு கேட்டார் என்று படித்த ஞாபகம். அது உண்மையா?'' 


 ''எதிர்காலத் தமிழகம் குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? முன்னேற்றப் பாதையில்தான் தமிழர்கள் செல்கிறார்களா?'' 


- இன்னும் பேசலாம்...

thanx - vikatan 


வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27.4 .2012) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

1. லீலை -
பல வருடங்களாக காத்திருந்த படமான லீலை தற்போது திரையரங்கை முற்றுகையிட உள்ளது.2008 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2010 இல் வெளியிடப்பட இருந்த இப்படமானது சுமார் இரண்டு வருடங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.


இரண்டு வருடங்கள் எதற்காக இவ்வாறு கிடப்பில் போடப்பட்டிருந்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.எவ்வாறாயினும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று லீலை படம் திரையிடப்படவுள்ளது.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் அவர்களே இப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டியிருந்தார்.இப்போது அவர் தலைமையிலேயே லீலை படம் திரையரங்குகளை அலங்கரிக்கவுள்ளது.
http://l.yimg.com/bt/api/res/1.2/qAsmgYzt79kyHaCPJ_2TWg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15093886067.jpg


லீலை படத்தில் ஷிவ் பண்டித்,மனசி பரேக் கோகில்,சுஹாசினி ராஜு மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.மென்பொருள் துறையில் வேலை செய்யும் இளைஞர், யுவதிகளின் கொண்டாட்டம் நிறைந்த வாழ்க்கை அவர்களுக்கிடையே மலரும் காதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது லீலை திரைப்படம்.


இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசை வடிவம் கொடுத்துள்ளார் சதீஷ் சக்கரவர்த்தி.ஈரோடு தேவி அபிராமில ரிலீஸ்.

http://www.kollytalk.com/wp-content/gallery/narasimhan-ips-movie-stills/narasimhan-ips-movie-stills-15.jpg 

2 நரசிம்மன் ஐ.பி.எஸ் - சரத்குமார் நடிக்கும் நரசிம்மன் ஐ.பி.எஸ் திரைப்படம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது.கொலிவுட் சூப்பர் நாயகன் சரத் குமார் கம்பீரமாக 'நரசிம்மன் ஐ.பி.எஸ்' என்ற படத்தில் பொலிஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.அச்சண்ட ஆண்மகன் என்ற பெயரில் இப்படம் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதாக திரையுலகம் கூறுகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0j4-Cnpm9-wheuPmfUO3bvpXvPrOK0gGo-FU1V4Uhw6xUYB9fdiV0am4Kc0kYFRUuQx6R9U4iTcYQPg9hv0oyuQE3H2NrFDXRhJ97FdqlD9b016i-G30v2t9_g_dGzwd3xSEgo8uPIzE/s1600/meghana-raj-narasimhan-ips-stills-3.jpg


சரத்குமாருக்கு சீனியராக இப்படத்தில் நெடுமுடி வேணு நடித்துள்ளார். அவருக்கு இரு மகள்கள், அவர்களில் ஒருவரான மேக்னாராஜ்ஜை நாயகன் சரத்குமார் மணக்கிறார்.


மேலும் மாமனாரின் எதிரிகளை சரத்குமார் எப்படி பழி வாங்குகிறார் என்பதை சுவாரஸ்யமாக இயக்குனர் கூறியுள்ளார்.

சி.பி - ஓஹோ மலையாள டப்பிங்க் படம் போல..  படம் ஈரோடு ராயல், ஸ்டாரில் ரிலீஸ்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicggz6YqkD5szN416UuyOmD56ueYC5jQ-b46b7Wc1Jhzn4c2jgbq3g2pi770pV52LXzEFtkHiIfQ_3QASgULm_5-1lj2zBxnfJAK9GnF-TEI4W9uewQTRYhXvsAz63SA1MazW9bPzxnupm/s1600/Padam+Parthu+Kadhai+Sol+Movie+Posters+Mycineworld+Com+%25281%2529.jpg

3.  படம் பார்த்து கதை சொல் -  பென்ஜமின் பிரபு படத்தை இயக்கியுள்ளார். டெய்சி என்ற கொ‌ரியன் படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.பி.எம்.புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.மணி, எஸ்.ரங்கராஜ் இணைந்து ‘படம் பார்த்து கதை’ சொல் என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கின்றனர்.

இதில் நாயகனாக  தருண் சத்திரியா நாயகியாக ஷிகா மற்றும் தர்ஷனி, ஹாரிஸ், ஐசக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.பென்ஜமின் பிரபு இயக்குகிறார்.

படம் பற்றி அவர் சொல்கிறார்.

http://www.thedipaar.com/pictures/resize_20111224061510.jpg

நாயகன் கரடுமுரடான வாழ்வை தேர்ந்தெடுத்து தவறான பாதையில் செல்பவன் கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களுக்கு வருபவர்களை போட்டோ எடுப்பவள் நாயகி. நாயகனுக்கு அவள் மேல் காதல் மலர்கிறது. ஆனாலும் அதை சொல்ல தயங்குகிறான். இந்த காதலை வைத்து நாயகனையும் அவனை ஆட்டி வைக்கும் வில்லனையும் பிடிக்க போலீசார் வியூகம் வகுக்கின்றனர். இத்தகு விறுவிறுப்பான கதையில் படம் பயணப்படும். கன்னியாகுமரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இசை: கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு: தீபு எஸ். உன்னி, வசனம்: நாகராஜ், எடிட்டிங்: பாலா.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை

 http://mp3scorner.com/wp-content/uploads/2009/10/aadhi-narayana-tamil-mp3s.jpg


4. ஆதிநாராயணா'. - தமிழ் சினிமாவில் ஆச்சர்யமான நிகழ்வு ஒன்று சப்தமின்றி நடந்தேறி இருக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் ""சிறந்த கதையமைப்புடன் கூடிய பாத்திரம் இருந்தால் நடிக்க தயார்'' என்று, எந்த பிரச்சினையும் செய்யாமல் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்து நடித்து, முடித்துக் கொடுத்திருக்கிறார் பிரபல நடிகையான மீரா ஜாஸ்மின். (கேரள நடிகர்களின் மீதுள்ள மரியாதையை மேலும் உயர்த்திட்டீங்க மீரா, வாழ்த்துக்கள்) 


அந்தப் படம் "ஆதிநாராயணா'. கதாநாயகனாக நடித்திருப்பவர் கஜன். இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருப்பவர் ஜெ. வெற்றிவேந்தன். இவரது முதல் படம் இது. இப்படத்தை "பாக்ஸ் ஆஃபிஸ் புரொடக்ஷன்' சார்பில் எஸ்.பாலாஜி தயாரித்திருக்கிறார்.நிறைய புது முகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்தது பற்றி அதன் இயக்குனரிடம் கேட்டபோது,""மீரா ஜாஸ்மினை தொடர்பு கொண்டு இப்படத்தைப் பற்றி சொன்னபோது அவர் கூறியது, 


 ""கதாநாயகன், இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இவற்றையெல்லாம் நான் பார்ப்பதில்லை. படத்தின் கதை எப்படி இருக்கிறது? அதில் என் பாத்திரம் எப்படியிருக்கிறது? என்றுதான் பார்ப்பேன்'' என்றார். மேலும், ""படத்தின் கதையை எனக்கு அரைமணி நேரத்தில் சொல்லுங்கள்'' என்றார்.ஆனால் கதையைச் சொல்ல ஆரம்பித்ததும், கதையில் இன்வால்வ் ஆனவர் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகக் கேட்டார். 


அது மட்டும் இன்றி எந்த இடைஞ்சலும் இன்றி விரைவாக படப்பிடிப்பிற்கு வந்து முழுப் படத்திலும் நடித்து, முடித்துக் கொடுத்தார்.படத்தின் கதையைப் பற்றி...?சராசரி வாழ்க்கையை தொலைத்துவிட்டதாக எண்ணும் ஒரு இளைஞன், தன் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றிக் கொள்ள முற்படும்போது எதிர்பாராமல் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகளே இந்தப் படத்தின் கதை. 

http://lh5.ggpht.com/_561gP6TDhvA/S23PZE3DdmI/AAAAAAAAis0/o2guD674G98/actress.meera-jasmine.aadhinarayana-movie-stills-005.jpg


உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை இது.படத்தோட ஸ்பெஷல்?படத்தின் டபுள் பாசிட்டிவ் பார்த்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, படத்தை அதே உயிரோட்டத்துடன் தரவேண்டும் என்பதற்காக ஏற்காடு மலையில் தங்கியிருந்து நோட்ஸ் எடுத்து பின்னணி இசையை அமைத்திருக்கிறார்.பாடல்கள்?


 சினேகன் எழுதிய, "டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டாருடா... அட நீயும் நானும் மிங்கிள் ஆனா சூப்பர் ஸ்டாருடா...' என்று சுசித்ரா, கார்த்திக் பாடிய பாடல் ரசிகர்களின் மனதை அள்ளும்.மேலும் பழனிபாரதி, கபிலன் ஆகியோரும் பாடல்கள் எழுதியிருக்கின்றனர். அதேபோல விவேகாவின் வரிகளுக்கு சிம்பு பாடியிருக்கும், "கருப்பாயி கருப்பாயி எங்கே போற...' பாடல் தியேட்டரில் ரசிகர்களை ஆடவைக்கும்.படத்தின் இன்னொரு கதாநாயகனாக கருணாஸ் நடிக்கிறார்.


 மேலும் யோஹிதா, மயில்சாமி, முத்துக்காளை, விஜய்பாபு, ராஜலெட்சுமி, மதன்பாப், ஷோபனா, "காதல்' சுகுமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு -ஆர்.செல்வா, படத்தொகுப்பு -உதயசங்கர். மல்லியம்பட்டி மாதவன் தயாரிப்பு மேற்பார்வையில் படம் உருவாகி வருகிறது.ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்


5.AVENTURES - - http://moviestalk.doyouknow.in/images/201203231226395261919.pnga


Nick Fury is director of S.H.I.E.L.D, an international peace keeping agency. The agency is a who's who of Marvel Super Heroes, with Iron Man, The Incredible Hulk, Thor, Captain America, Hawkeye and Black Widow. When global security is threatened by Loki and his cohorts, Nick Fury and his team will need all their powers to save the world from disaster

I'm happy to report that everything established in previous movies pays dividends in a big way. It's not that anyone needs to see those other Avenger solo films before seeing this gem but it certainly adds depth and texture to this amazing product. Not having to intro big main characters deeply allows the action to flow but also allows for better development. This also allows them to probe deeper into the character's personalities. This heightens the tension, so often missing from comic-book movies, and adds real weight to the story as well as the action sequences which are thrilling and often mesmerizing. The result is a film that's just flat out exceptional.

Of course all the phenomenal heroes got to shine and the story accommodated them all perfectly. What I loved is that Marvel did it again with their main villain. Loki was just so wonderful and complex in this amazing movie. Spurned Loki masterfully dances on the fault lines of villainy and redemption. He always keep people guessing and. Again, that's just shear perfection coming from the god of mischief. He has such a mixture of emotional psychological complexity. You have somebody who's capable of thinking and strategizing at the speed of light, but underneath that is a deep well of pain that at any moment threatens to boil over and Tom Hiddleston plays it like the master he has become. This is Oscar worthy villain performance good.


http://horrornews.net/wp-content/uploads/2012/02/The-Avengers-2012-movie-stills-14.jpg

The performances in this movie are as good as any I've ever seen in an adventure film. The great actors say that acting akin to playing tennis. The rally that they play with a new partner is completely different from one to the other. Each of these GREAT actors have such specific talents that it's fun to see them play off each other at different times in this movie. I think Whedon realized this as both director and writer and shuffled things around on purpose to play to strengths. It's just another wonderful aspect of this spectacular movie event.
ERODE VSP , AANOOR 2 THEATERS RELEASE


6.F E 77 ( HINDI) - ajaydevghaan movie
http://www.beatoon.com/covers/?small&1&06b0fed87477060f6eb687e352f924ad


7. ராஜா போக்கிரி ராஜா -
Shriyas Raja Pokkiri Raja release in april 27 பெரும் பஞ்சாயத்துக்களைத் தாண்டி போக்கிரி ராஜா படம் வருகிற 27ம்தேதி ரிலீஸ் ஆகிறது. நடிகை ஸ்ரேயா மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த படம் போக்கிரி ராஜா. இதில் மம்முட்டி, ப்ருதிவிராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். மம்முட்டி மதுரை தாதா கெட்டப்பில் தமிழ் பேசி நடித்துள்ளார். இப்படத்தை தமிழில் ராஜா போக்கிரிராஜா என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன் ஏற்பாடு செய்தார். இதற்கு ஸ்ரேயா எதிர்ப்பு தெரிவித்தார். மலையாள படத்துக்குதான் சம்பளம் வாங்கி நடித்தேன். அதை தமிழில் டப்பிங் செய்யக்கூடாது என்று கூறினார். தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்தார். இதனால் ஸ்ரேயா மீது நஷ்டஈடு வழக்கு தொடர மலேசியா பாண்டியன் முடிவு செய்தார்.

இதற்கிடையில் ஸ்ரேயாவுக்கும், மலேசியா பாண்டியனுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய ஸ்ரேயா சம்மதித்தார். இதையடுத்து வருகிற 27-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ராஜா போக்கிரி ராஜா படம் ரிலீஸ் ஆகிறது.

 சி. பி . - 4 நாள் ஓடி டப்பா ஆகர படத்துக்கு ஏன் இவ்ளவ் பில்டப்?


http://bookmarks.cinemamasti.com/wp-content/uploads/2012/04/Dammu9.jpg
8. சிங்கமகன் - தெலுங்கு ஹீரோக்களுக்கு தமிழில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசை. இங்குள்ள அ‌ஜித், விஜய், சூர்யா படங்கள் ஆந்திராவில் வசூலை அள்ளும் போது தமிழில் நம் படம் ஓட வேண்டும் என்று அவர்கள் நினைப்பது சகஜம்தான்.

ராம் சரண் தேஜாவின் ரட்சா படம் ரகளை என்ற பெய‌ரில் இப்போதுதான் வெளியானது. ரட்சா இதுவரையான ஆந்திரா ‌ரிக்கார்டுகளை அடித்து நொறுக்கியிருக்கிறது. இந்நிலையில் ரட்சாவின் வசூலை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் ஜுனியர் என்டிஆ‌ரின் படம்தான் தம்மு.

http://gallery.tamilkey.com/wp-content/themes/transcript_new/timthumb.php?src=http://gallery.tamilkey.com/wp-content/uploads/2012/04/DAMMU-Telugu-Movie-2012-SPECIAL-STILLS-1.jpg&q=90&w=629&zc=1


சி.பி - எங்க ஊர்ல கரண்ட் கம்பத்தை பார்த்தா நாய்ங்க காலை தூக்கும்.. இவங்க ஏன் ஒரு காலை மட்டும் தூக்கறாங்கனு தெரியலை ..


த்‌ரிஷா, கார்த்திகா நடித்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஆந்திராவில் சூப்பர்ஹிட். சண்டைக்காட்சிகளும் பிரமாதம் என்கிறார்கள். 3000 தியேட்டர்களுக்கு குறையாமல் வெளியாகவிருக்கும் இப்படம் சிங்கமகன் என்ற பெய‌ரில் தமிழிலும் வெளியாகிறது. மரகதமணி இசையமைக்க ஆர்தர் ஏ.வில்சன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.


ஜுனியர் என்டிஆருக்கு தமிழகத்தில் மார்க்கெட் உள்ளதா என்பதை வரும் 27 ஆம் தேதி படம் வெளியாகும் போது தெ‌ரிந்து கொள்ளலாம். அநேகமா டப்பா மசாலாவா இருக்கும்னு நம்பலாம்.. 

 

பில்லா -2 - ( BILLA -2 ) தல அஜித் கல கல பேட்டி - ”தல”ப்பாக்கட்டு பிரியாணி

http://123tamilgallery.com/images/2012/01/Billa-2-34.jpgஜீத் எப்போதும் ஆச்சர்யம்! '' 'பில்லா-2’ முடிஞ்சிடுச்சு சார். இப்போதான் ரிலாக்ஸ் ஆனேன். கொஞ்சம் பேசலாமா?'' என்று அஜீத் கேட்டது நள்ளிரவு 2 மணிக்கு. நிறையவே பேசினோம்...


சி.பி - மிட் நைட் மசாலா பார்க்கற டைமில் பேட்டியா? விளங்கிடும்



1.  ''இலங்கை அகதியாக நடிக்கிறீர்கள் என்பது உட்பட 'பில்லா-2’ பற்றி நிறையச் செய்திகள். எது உண்மை?''


''நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''


சி.பி - கவுண்டமணிக்குப்பிறகு தன் சொந்த லாபத்துக்காக சின்னத்திரையில் பேட்டி கொடுப்பதோ, பிரமோஷன் விளம்பரத்துக்கு எதையாவது உளறுவதோ கூடாது என்பதில் நல்ல கொள்கை கொண்டவர் அஜித்

2. ''பத்திரிகைகள், சேட்டிலைட் சேனல், சோஷியல் மீடியானு எக்கச்சக்கமா புரொமோஷன் பண்ற டிரெண்டுக்கு மத்தியில், நீங்க படத்தைப் பத்திப் பேச மாட்டேன்னு சொல்றது சரியான முடிவா?''


சி.பி - என்னைப்பொறுத்தவரை இது சரியான முடிவுதான்.. ஏன்னா எப்பேர்ப்பட்ட டப்பா ப்டமா இருந்தாலும் சரி, நம்மாளுங்க  “ ஆஹோ ஓஹோ பேஷ் பேஷ்.. இந்த மாதிரி ஒரு ப்டம் ஒலகத்துலயே வந்ததில்லை.. வித்தியாசமான கதை, மாறுபட்ட நடிப்பு அப்டினு ரீல் விட  வேண்டியது அப்புரம் படம் ரிலீஸ் ஆகி டப்பா ஆனதும் நான் எதிர் பார்த்த வெற்றியை மக்கள் அளீக்கவில்லை.. நல்ல படத்தை தமிழர்கள் ஆதரிப்பதில்லைனு கலைஞர் மாதிரி பழியை நம்ம மேலயே தூக்கிப்போட வேண்டியது.. ம் ம் 
''இது என் பெர்சனல் முடிவு. எது சரி, எது தப்பு, இதுதான் டிரெண்ட்னு சொல்ற தகுதி எனக்கு இல்லை. 'எ குட் ஃபிலிம் இஸ் புரொமோஷன் பை இட்செஃல்ப்’னு சொல்வாங்க. என்னைத் தீவிரமா விமர்சனம் பண்றவங்க, திட்டுறவங்க நிச்சயம் என் படத்தைப் பார்க்கப்போறது இல்லை.

சி.பி - அங்கே தான் நீங்க தப்பு பண்றீங்க.. விஜய் படம் ரிலீஸ் ஆனா அஜித் ரசிகர்களூம், அஜித் படம் ரிலீஸ் ஆனா விஜய் ரசிகர்களும் முத நாளே படம் பார்ப்பாங்க. அப்போத்தானே படம் சரி இல்லைன்னு நெகடிவ் விமர்சனம் பரப்ப முடியும்?


என்னைப் பத்தித் தெரிஞ்சவங்க, 20 வருஷமா என்கூடவே பயணிக்கிறவங்க, அஜீத்தின் நிறைகுறைகளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்கதான் படம் பார்க்கப்போறாங்க. அவங்க விமர்சனங்களுக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்!''


3. '' 'அமராவதி’ அஜீத்துக்கும் 'பில்லா-2’ அஜீத்துக்கும் என்ன வித்தியாசம்?''


சி.பி - அமராவதில வாக்கிங்க் போன தூரம் சும்மா ஒரு பர்லாங்க தான். ஆனா பில்லா 2 ல 5 கி மீ வாக்கிங்க் போயிருக்காராம்.. .. தல நடையா நடப்பாரு,. படம் ஓட்டமா ஓடும்.  சிலர் படம் பூரா ஓடிட்டே இருப்பாங்க, ஆனா படம் ஓடாது ஹி ஹி 


''கொஞ்சம் பக்குவம், நிதானம் வந்திருக்கு. ஆனா, பேஸிக் கேரக்டர் மாறலை. அனோஷ்கா பிறந்த பிறகு பொறுப்பு இன்னும் கூடியிருக்கு. நிறைய அனுபவங்கள்... பல கசப்பானவை. ஆனா, எந்த நிலைமையிலும் நான் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்பட்டதே இல்லை. அதனால், நோ ரிக்ரெட்ஸ்!''



4. ''பாலிவுட்போல இங்கேயும் மாஸ் ஹீரோக்கள் டி.வி. நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. உங்களை அப்படி ஒரு டி.வி. ஷோவில் பார்க்கலாமா?''


சி.பி - 6 மாசம் ஷூட்டிங்க் நடத்தி கஷ்டப்பட்டு சம்பாதிக்கற காசு சும்மா ஜஸ்ட் 2 நாள் ஷூட்டிங்க்ல கிடைக்குதுன்னா யாருக்கு கசக்கும்?
''சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதெல்லாம் எனக்கு செட் ஆகும்னு தோணலை. அதுக்கு சில முன் அனுபவங்களும் காரணம்!''


சி.பி - அது என்ன மேட்டர்னு சொல்லி இருக்கலாம்.. 


5. ''உங்களை மிகவும் பாதிக்கிற விமர்சனம் என்ன?''


''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன். நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''


சி.பி - காய்ச்ச மரம் தான் கல்லடி படும்.. மார்க்கெட் இல்லாத ஆளை யாரும் கண்டுக்க மாட்டாங்க.. எப்போ ஒருத்தனைப்பற்றி விமர்சனங்கள், வாக்குவாதங்கள் வந்துட்டே இருக்கோ, அவன் டாக் ஆஃப் த டவுன், வில்லேஜ் ஆக இருக்கானோ அவன் டாப்ல இருக்கான்னு அர்த்தம். இது சினிமா  ஃபீல்டுக்கும் பொருந்தும்..  


http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_vertical/article-images/billa_0.jpg.crop_display.jpg


6. ''ஆரம்பத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து, பிறகு நீங்கள் விலகி வேற ஹீரோ நடிச்ச எல்லாப் படங்களுமே ஹிட். 'மிஸ் பண்ணிட்டோமே’னு வருத்தப்பட்டு இருக்கீங்களா?''


''நாம சாப்பிடுற ஒவ்வொரு அரிசியில யும் நம்ம பேர் எழுதி இருக்கும்னு சொல்வாங்க. அதை நான் நம்பறேன்!''


7.''உங்க பலம், பலவீனம் என்ன?''


''தெரியாது. தெரிஞ்சுக்கவும் ஆசைப்படலை!''


சி.பி -  பல நல்ல படங்கள் ஓடாம இருக்கறது  தலயின் பலம், படம் ஓடுனாலும் ஓடாட்டியும் பொது வாழ்வில் அவரது நடத்தை பற்றி மக்கள் நல்ல மதிப்பு வெச்சிருக்கறது பலம்.. 


8. ''பாலிவுட்டில் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடிக்கிறாங்க; சேர்ந்து பட புரொமோஷன்களில் கலந்துகொள்றாங்க. ஆனா, அந்தச் சூழல் இங்கு இல்லையே?''


'' 'அமராவதி’ படத்துல ஹீரோவா நடிச்சுட்டு, அடுத்து அரவிந்த்சாமி படத்துல ஒரு சீன்ல வந்து நடிச்சேன். விஜய் ஹீரோவா நடிச்ச 'ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அவரோட நடிச் சிருக்கேன். முதலில் 'நேருக்கு நேர்’ படத்தில் நானும் விஜயும்தான் சேர்ந்து நடிச்சோம். சில காரணங்களால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியலை. 'உல்லாசம்’ படத்தில் நானும் விக்ரமும் சேர்ந்து நடிச்சிருக்கோம். அவசியம் வரும் போது சேர்ந்து நடிக்கத்தான் செய்றோம்!''

சி.பி - நல்ல வேளை நேருக்கு நேர் படம் கை மாறுச்சு.. இல்லீன்னா தியேட்டர்ஸ் எல்லாம் ரண களம் ஆகி இருக்கும். 2  பேர் ரசிகர்களூம் அடிச்சுக்கிட்டு இருந்திருப்பாங்க. 



http://www.moviephotos.in/stills/billa-2-17.jpg
9. ''படம் வெளியாகி முதல் ஷோ முடிவதற்குள்ளேயே நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பிடுதே?''


சி.பி - முன்னே எல்லாம் படம் ரிலீஸ் ஆகி 7 நாள் கழிச்சுத்தான் பத்திரிக்கைகள்ல விமர்சனம் வரும், இப்போ தான் இண்டர்நெட்ல படம் ரிலீஸ் ஆகி 3 மணீ நேரத்துல வந்துடுதே.. மவுத் டாக் மூலமா ரிசல்ட் பரவிடுது. 

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். 


கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''  

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/04/Billa-2-Movie-Onlocation-Stills-12-300x268.jpg


10. ''இத்தனை வருஷத்தில் இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும் உங்க ரசிகர்களின் எண்ணிக்கை குறையலையே?''


''எல்லாம் கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லா மலும் போவேன்.

 ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க. உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தா வது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். 

http://images.news.pluzmedia.in/slide/big_Ajith_heroines_in_Billa_2_calendar-315a60037a9eda5b6d7771d48e2e97c9.jpg


ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''


http://www.dailomo.com/wp-content/gallery/billa-2-item-song-actress-meenakshi-dikshit-stills/billa2-item-song-actress-meenakshi-dikshit-stills-8.jpg

நெல்லை பதிவர் சந்திப்பு + ஆஃபீசர் மகள் திருமண விழா

 

24.4.2012 அன்னைக்கு நைட் 10 மணிக்கு ட்ரெயின்.. வீடு சுரேஷ், கோவை சம்பத் 2 பேரும் ஆல்ரெடி கோவைல, திருப்பூர்ல ஏறிட்டாங்க.. நாகர் கோயில் எக்ஸ்பிரஸ்.. ஆல்ரெடி டிக்கெட் ரிசர்வ்.. நான் பிளாட் ஃபார்ம்  டிக்கெட்டும் எடுத்துட்டேன்.. அவ்ளவ் நேர்மை ஹி ஹி .என்னா ஒரு ஆச்சரியம்னா ட்ரெயின் கரெக்ட் டைம்க்கு வந்துடுச்சு..


சுரேஷ்க்கு ஃபோன் அடிச்சு எந்த கோச்னு கேட்டா “ மாப்ஸ்,.. நீ அங்கேயே இரு , நாங்க வர்றோம்”னு சொன்னாரு.. அவ்ளவ் மரியாதையா? நம்ம மேலன்னு பார்த்தா அவங்க கோச்ல 2 ஃபிகர்ஸாம்.. நான் அங்கே வந்தா பார்த்திடுவேனாம். யாம் பெற்ற இன்பம் பெறக்கூடாது இவ்வையகம்னு நினைக்கறாங்க தமிழருங்க.. அடங்கோ..

2 பேரும் பேண்ட் சர்ட் போட்டுட்டு இன் பண்ணி வருவாங்கன்னு பார்த்தா என்னமோ காலைல பீச்ல வாக்கிங்க் போற யூத்ஸ் மாதிரியே வந்தாங்க.. வந்து நான் இருந்த S6 கோச்சை ஒரு பார்வை பார்த்தாங்க.. அங்கே எதுவும் தேறலை.. ( நம்ம ராசி அப்படி. எங்கே போனாலும் ஒரு வெற்றிடம்)அப்டினு தெரிஞ்சதும் S1 TO S 12 வாக்கிங்க் கிளம்பிட்டாங்க.. டேய் டேய் வைகோ மாதிரி நடைப்பயணம் நைட் 11 மணிக்கா?ன்னு கேட்டா நம்ம பேச்சை எவன் கேட்கறான்.. ( தாலி கட்ன சம்சாரமே சொல் பேச்சு கேட்க மாட்டேங்குது)


 அப்புரம் டி டி ஆர் வந்து அவங்களை பேக் பண்ணி அவங்க கோச்சுக்கே அனுப்பின பின் தான் 2 பேரும் அடங்குனாங்க.. அவங்க கோச்ல இருந்த 2 ஃபிகர்ஸ் கூட இவங்க என்ன கடலை போட்டாங்கன்னு தனியா ஒரு 10 பக்ககட்டுரை போடலாம்.. ஆனா இப்போ டைம் இல்லை.. 

 காலைல 5.30 மணிக்கு  நெல்லை போய்ச்சேர்ந்தோம்..  நான் என்னமோ பெரிய அப்டேட் ஆறுமுகம் மாதிரி ட்விட்டர்ல  ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றேன்..  

dear nellai twitters ,i am in nellai.bharani hotel .morning 6 to 9 @room no-109. 9 to10 selvi mahaal .if u interest contact 9842713441. 


. அது எதுக்குன்னா நெல்லைல ஆண் நண்பர்கள் யாராவது இருந்தா சந்திக்கலாம்னு .. ஆனா ஒரு பய கண்டுக்கலை.. ரொம்ப கேவலமாப்போச்சு.. நெல்லையில் இருக்கும் 4 பெண் பதிவர்கள், 2 பெண் ட்வீட்டர்கள், 6 பெண் ட்வீட்டர்கள் மொத்தம் 12 பேரு ( 4 + 2 + 6 = 12 பார்த்தீங்களா? பி எஸ் சி மேத்ஸ் ஹி ஹி ) வந்து நெல்லை ரயில்வேஸ்டேஷன்ல ஆரத்தி எடுப்பாங்கன்னு பார்த்தா யாரும் வர்லை.. அவ்வ்வ் 

i dreamed all female twitters will stand in q and take aarathi to me .but nobody honour me .avvv


நெல்லை ஹோட்டல்ஸ் எல்லாம் வேஸ்ட்.. எல்லாமே ஆண் ரிசப்ஷனிஸ்ட்தான்.. நோ கேர்ள்ஸ்.. 

i dislike nellai hotel .all hotel receptionists r males .how can i time pass ?cm j u have to answer to it .

மனசை தேத்திக்கிட்டு குளிச்சு ரெடி ஆனோம்.. 


 லேப் டாப் மனோ ஃபோன் பண்ணான்.. அவன் ஃபேமிலியோட வர்றானாம்.. ங்க்கொய்யால நாங்க மட்டும் பேமானிங்க கூடவா வர்றோம்? 

இன்னொரு ரூம்ல செம மப்புல நாய் நக்ஸ் பிளாக் ஓனர் நக்கீரன் வந்தார். போலீஸ் வேலை செஞ்சேன்.. ஊர்க்காவல் படைல அப்டினு சொன்ன கவிதை வீதி பிரகாஷ் வந்தார்.. ஆள் அசல் ரவுடி மாதிரியே இருக்காரு.. இந்தாளை பார்த்தா பயம் தான் வரும்,. ஆனா பாருங்க கவிதை எழுதியே 12 ஃபிகர்ஸை கரெக்ட் பண்ணிட்டாரு/ ( நான் சொன்ன நிலவரம்  அவர் பிளஸ் டூ - டூ காலேஜ் படிச்ச டைம் மட்டும் , அதுக்குப்பிறகு எத்தனைன்னு இன்னும் கண்டு பிடிக்கலை.. ஒரு தனிக்குழு அமைச்சு தான் கவுண்ட் பண்னச்சொல்லனும். )


வேடந்தாங்கல் கருண் நடிகர் கரண் மாதிரி இருந்தார்.. டீ குடிச்சுட்டு இருந்தார். கேட்டா காபி பேஸ்ட் பதிவர்னு பேர் வந்துடக்கூடாதுன்னு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாம்.. அடங்கோ.. அப்புறம் தாதா தமிழ்வாசி பிரகாஷ் வந்தார்.. அவர் திருப்பூர்  பனியன் 2 போட்டு ஒரு டி சர்ட் போட்டு அதுக்கு மேல ஒரு சர்ட் போட்டு வந்தார்.. யோவ் என்னய்யா இதுன்னா அதுதான் ஃபேஷனாம்.. அடப்பாவி.. 



 ராஜபேட்டை ராஜா  பிளாக் ஃபோட்டோவுல பார்த்தா ஆள் ஜம்முனு மாப்ளை மாதிரி பெரிய ஆள் மாதிரி இருந்தாரு , நேர்ல பார்த்தா குணால்க்கு மீசை வெச்ச மாதிரி சின்னப்பையனா இருந்தாரு.. 


எல்லாரும் கோயிலுக்கு போனோம்.. சாமி கும்பிட அல்ல.. எல்லாரையும் பார்த்தா திருடனுங்க மாதிரியே ஒரு லுக்.. திருநீறு, குங்குமம், சந்தனம் வெச்சா கொஞ்சம் கவுரமான தோற்றம் வரும் பாருங்க.. அதான்.. போற வழில மெடிக்கல்ஷாப்ல கேமராவுக்கு  செல் 2 வாங்கி போட்டாச்சு.. கோயில்ல அர்ச்சகர் எங்க கூட்டத்தை பார்த்து எப்படியும் 50 ரூபா தேத்திடலாம்னு நினச்சிருப்பார்.. ஒரு பய 10 பைசா போடலை. ராஸ்கல்ஸ் ஹி ஹி 

எல்லாரும் மண்டபத்துக்கு போனோம்.. அங்கே மண்டப வாசல்ல மனதோடு மட்டும் கவுசல்யா பச்சைக்கலர் புடவை, பச்சைக்கலர் ஜாக்கெட்டு,  எல்லாம் பச்சை பச்சையா டிரஸ்சிங்க்ல சந்தனம் குடுத்துட்டு இருந்தாரு.. விசாரிச்சா ( நான் விசாரிக்கலை. மனோவை விட்டு விசாரிக்கச்சொன்னேன்.. மீ கூச்ச சுபாவம்,.,. நோ டாக்கிங்க் வித் லேடீஸ் ஹி ஹி மை ஓன் சம்சாரம் கூடவே ஆஃப்டர் மேரேஜ்  30 நாள்கழிச்சு தான் டாக் ஹி ஹி )

பசுமை விடியல்னு ஒரு அமைப்பாம்.. அதை இவங்க நடத்தறாங்க போல .. மரம் அதாவது மரக்கன்று நடும் அமைப்பு போல .. அதை பிரபலப்படுத்த அப்படி டிரஸ்சிங்க்காம்// ஆனா புதுமையான விஷயம் ஒண்ணு பார்த்தேன்.. அதாவது மேரேஜ்க்கு வந்தவங்க எல்லாத்துக்கும் தலா ஒரு மரக்கன்று பரிசா தர்றாங்க.. நல்ல முயற்சி.. ஆரோக்யமான விஷயம் ( ஆனா தாம்பூலப்பைல  தேங்காய் வாங்கிட்டுப்போய் வீட்ல சட்னி செய்யற மாதிரி வருமா? ஹி ஹி )



ஆஃபீசரை பார்த்தோம்.. என்னமோ அவருக்கே கல்யாணம் மாதிரி பட்டு வேட்டி பட்டு சட்டை எல்லாம் போட்டு கலக்கிட்டு இருந்தார்.. பியூட்டி பார்லர் போய் மேக்கப் வேற.. தலைக்கு டை அடிச்சு, முகத்துக்கு ஃபேரன் லவ்லி, ரோஸ் பவுடர் போட்டு ஜம்முன்னு இருந்தார்.. ( நல்ல வேளை லிப்ஸ்டிக் போடலை) 

எங்களை எல்லாம் வரவேற்று போய் டிஃபன் சாப்பிட்டு வாங்கன்னார்.. இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, சாப்பாட்டு ராமான்னு மனசுல  சொல்லிக்கிட்டு  போய் டிஃபன் சாப்ப்பிட்டு வந்தோம்.. 

 மனோ ஃபோன் பண்ணுனான்.. ஹோட்டல்ல இருக்கானாம்.. அடப்பாவி.. நாங்க இங்கே மண்டபத்துல கடமை ஆற்றிட்டு இருக்கோம்னேன்.. திட்டிட்டே ஃபோனை கட் பண்ணிட்டு பஸ் ஏறி மண்டபம் வந்தான்.. கடைசி வரை கண்ல கூலிங்க் கிளாஸ், கைல  லேப் டாப் விட்டு பிரியவே இல்லையே அவன்.. 

கல்யாண முகூர்த்தம் காலை 9 டூ 10.30.. மாப்ளை ஜம்முனு சேட் பையன் கணக்கா இருந்தார்.. பொண்ணு ஆஃபீசர் ஜாடை.. நானும், பிரகாஷூம் மனசுக்குள்ள ஸ்ரீராம்னு நினச்சுக்குட்டு வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்தோம்.. 



ரத்னவேல் அய்யா , அவங்க ஃபேமிலியோட வந்திருந்தார்.. அவர் கிளி பொம்மஒ மாதிரி ஒண்ணு நல்ல கைவினைப்பொருள் மாதிரி வெச்சிருந்தாரு.. குட் கிரியேட்டிவ்,..

 நாய்க்குட்டி மனசு ரூபினா மேடம் வந்தாங்க..


கூடல் பாலா வந்தார்.. கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் மக்களூக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மிக முக்கிய பதிவர்.. அவர் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு 11 மணிக்கு மறுபடி ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுத்தோம். 

 நான், ராஜா, மனோ,கருண் 4 பேரும்  ஒரு ரூம்ல டி வி பார்த்துட்டு இருந்தோம் ( சிரிப்புச்சேனல்).. நாய் நக்ஸ் நக்கீரன்,பிரகாஷ்,வீடு சுரேஷ், கோவை சம்பத், சவுந்தர் 5 பேரும்  வேற ஒரு ரூம்ல சரக்கு அடிச்சு மட்டை ஆகிட்டாங்க........... 

 இந்த டைம்ல ஒரு கூத்து.. சவுந்தர் மட்டும் நைஸா எங்க ரூம்க்கு வந்து இண்டர்காம்ல நக்கீரனை கூப்பிட்டு ஆஃபீசர் மாதிரி மிரட்னாரு.. “ ஹலோ ரூம் நெம்பர் 107?  3 பேர்தாந்தங்கனும் நு சொன்னோம்.. 5 பேர் இருக்கீங்க.. இங்கே சரக்கு அடிக்கக்கூடாதுன்னோம், ஆனா அந்த ரூல்ஸையும் மீறிட்டீங்கன்னாரு.. நக்கீரன் அரண்டுட்டாரு... சார் சார் அப்படின்னு பம்பிக்கிட்டு இருந்தாரு.. 

 மணீ 1 மணீக்கு நாங்க கிளம்பி மறுபடி மண்டபம் போனோம்..லஞ்ச் ஒரு கட்டு கட்டிட்டு மறுபடி ரூம்.. ரெஸ்ட் .. 6 மணிக்கு கிளம்பி மறுபடி மண்டபம்.. 

 இப்போ ஃபேஸ் புக் புகழ் கே ஆர் விஜயன் வந்திருந்தார்.. ஆள் சினிமா ஹீரோ மாதிரி ஜம்முன்னு இருந்தார்.. அவர் போட்டிருந்த சுடிதாரே சாரி பைஜாமா மாதிரி ஏதோ ராமராஜன் டிசைன் சர்ட்டே ரூ 8000 இருக்கும்..  ( மீ ஒன்லி 250 ரூபா சர்ட் ஹி ஹி )செண்ட் எல்லாம் அடிச்சிருந்தாரு.. 

 யானைக்குட்டி ஞானேந்திரன் வந்தார்.. 2 பேரும் ஃபேமிலியோட தான் வந்தாங்க.. ஆனா ஃபேமிலியை எங்களூக்கு அறிமுகப்படுத்தவே இல்லை.. ட்விட்டர்ல ஜாலியா ட்வீட்ஸ் போடறதை பார்த்து பொறுக்கி பசங்கனு நினச்சிருப்பாங்க.. போல.. நாங்க அப்படி இல்லீங்கோவ்.. 

 எறும்பு ராஜகோபால், வந்தார் பேசிட்டு இருந்தோம்.. ஜோசஃபின் கதைக்கிறேன் பிளாக் ஓனர் அவர் கணவர், குழந்தையுடன் வந்தாங்க.. 






ஆர்க்கெஸ்ட்ரா அரெஞ்ச் பண்ணி இருந்தாங்க..  கிரண் டி வில ஒர்க் பண்ற ஃபிகரு ( 28  வயசு, 55 மார்க் )  செமயா டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாம் குடுத்து பாடுனாங்க.. அது போக கறுப்புக்கலர் சர்ட் போட்டுட்டு ஒரு ஆள் ஜாலிவாலா பட்டசா வெடிச்சுட்டு இருந்தார்.. சிவப்புக்கலர் சட்டை போட்ட மாற்றுத்திறனாளி பாடகர் கலக்கலா பாடுனார்.. 

 க்ளைமாக்ஸ் குத்தாட்ட பாட்டுக்கு சலா சலா சல சல பாட்டுக்கு ஆடியன்ஸ், கவிதை வீதி சவுந்தர் எல்லாம் ஆடுனாங்க.. 

எல்லாம் முடிஞ்சதும் ஆஃபீசரிடம் விடை பெற்றுக்கிளம்பினோம்..  மண மக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்


 ரிட்டர்ன் ட்ரெயின்ல வர்றப்ப டைம் வேஸ்ட் பண்னக்கூடாதுன்னு ட்விட்டர்ல போட்ட ட்வீட்ஸ்

 1.when compare with erode and kovai ,nellai is seemed to be a dry area agriculture wise and figure culture wise


2. railway department must be malesavonist ,because all of the ttr r men .i recommend railway minister to appoint ladies as ttr

3. ttr sir ,i get only upper berth ,but i want lower berth,pls change . sorry sir i can't .because high class figure like u always u b 


4. the trains and youths are the same ,both are waiting for signals 




ஐ டி ல ஒர்க் பண்ற ஃபிகருங்க ரொம்ப ஏழைங்க போல...எப்படி கண்டுபிடிச்சேன்ன்னா.... ( ஜோக்ஸ்)

Saw this in a Auto. Interesting. :)
1.இன்ஸ்பெக்டர், சில பன்னாடை பசங்க டி சர்ட்ல போலீஸ்னு அவனுங்களா போட்டிருக்காங்க. என்ன நடவடிக்கை எடுக்கப்போறிங்க?


  ஹி ஹி மாமூல் கறந்துட வேண்டியதுதான்


--------------------------


2. ஜெ., சசி இணைந்து பவுர்ணமி வழிபாடு # ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசை ஆச்சு, போடு நிலா சோறு,நான் போயஸ் தோட்ட சேறு


--------------------------

3. எதுவுமே தெரியாத அப்பாவி -அங்காடித்தெரு அஞ்சலி - ”எல்லாமே” தெரிய வைக்கும் அடப்பாவி -மசாலா கஃபே அஞ்சலி


----------------------------------


4. கம்மல்க்கும் , கம்மர் கட் மிட்டாய்க்கும் வித்தியாசம் தெரியாத பசங்க, அதைப்போய் கடிச்சு வெச்சுடறாங்க.. # காதல் கிறுக்கு, கம்மல் ஆச்சு முறுக்கு


------------------------

5. ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் பிடுங்குவதால் என் மீது மஞ்சள் நீர்ஊற்ற காத்திருக்கும் மகராசிகள் வரிசையில் வரவும், நோ அடிதடி


-----------------------------


6.தமிழ்நாட்டின் சி எம் ஆகனும்னா நல்லா பேசத்தெரியனும், அல்லது ஆல்ரெடி சி எம்மா இருக்கறவர் கூட ஜோடியா நடிச்சிருக்கனும்


--------------------------------

7. ராத்திரி 2.30 மணி வரை கடலை போட்டோம்னு பெருமை பேசும் காதல் ஜோடிட்ட நான் கேட்க விரும்புவது, சும்மா பேசிட்டு இருந்ததுக்கே இந்த பில்டப்பா?


---------------------------------


8.  ஃபிரீயா விடாதே அத்தை - 3 படத்துக்கு போலாமா? 

 ஃபிரியா விடு மாமு - அது டப்பா படம், நான் வர்லை . 

 அத்தை - டாப்பா ஃபிகர் கூட வருதே

-------------------------------

9. ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை #  அடடா, இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?னு முதல்லியே உங்க ஜாதகத்தை பார்க்கலையா?


--------------------------------

10. ஃபேஸ்புக்ல ஃபோட்டோஸ் ஷேர் பண்ற ஃபிகரு  எல்லா ஃபோட்டோலயும் ஏன் தலையை சாய்ச்ச மாதிரியே வெச்சிருக்கு? ஸ்டைலா? சுளுக்கா?


-----------------------------




11. ஐ டி ல ஒர்க் பண்ற ஃபிகருங்க ரொம்ப ஏழைங்க போல.. ரப்பர் பேண்ட் வாங்கக்கூட காசில்லாம  பாவம் அலை பாயுதே ஸ்டைல்ல கூந்தல்


-----------------------------


12. பேக் டூ ஃபிகரா?ன்னு கேட்கறவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு நான் சொல்லிக்கறேன்.. ஐ லைக் ஃபிகர்ஸ் அஸ் ஃபிரண்ட்ஸ் அண்ட் ஆல்சோ ஃப்ரான்ட்ஸ்


----------------------------------------

13. எனது சமையல் குரு - சாட்சாத் என் மனைவிதான். என் மையல் குரு என் காதலி தான் 


-----------------------------

14. சார், நீங்க எங்கே போனாலும் ஜாக்கிங்க், நோ வாக்கிங்க் ஒய்?


 ஃபிகரு அண்ணா-ன்னு  கூப்பிடற மாதிரி நாம எப்பவும் “நடந்துக்க” கூடாதாம்


------------------------------------

15. காதலிக்கு நகம் கடிக்க பிடிக்கும்னா அவளை நல்ல டாக்டர்ட்ட கூட்டிட்டு போய் காட்டுங்கப்பா.. எதுக்கு நகத்தை மெனக்கெட்டு வளர்க்கனும்?


------------------------------------




16. "அண்ணா"னு கூப்பிடும் பெண்களை ஆண்கள் தங்கையாகத்தான் நினைப்பாங்கன்னு சொல்லி விட முடியாது, 

------------------------

17. அனைவரும் ஆரோக்கியமான மன நிலையை அடைய டி வி யை செய்தி “ கேட்க” மட்டுமே  உபயோகப்படுத்துவீர்


-----------------------------

18. நயன் தாரா - நான் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டேன் #  சிம்பு கிட்டேயும் போக மாட்டீங்களா?


----------------


19. இது தான் என் ஆளுன்னு பசங்க உரிமை கொண்டாடறாங்க. ஆல் ஈஸ் மை ஆள்னு பொண்ணுங்க லைட்டா எடுத்துக்கறாங்க 


---------------


20. அன்புள்ள ஆண்களே! உங்கள் புரப்போசல்கள் பெண்களை வெறுக்க வைக்கும் அளவு தீவிரமாய் போக வேண்டாம் :(


--------------------





Wednesday, April 25, 2012

நாளைய இயக்குநர் 22.4.2012 - விமர்சனம்

கே பாக்யராஜ் நடுவரா  அல்லது ஜட்ஜா இருந்த டைம்ல அவர் டி எம் கே ல இருந்தாரு.. அவர் அம்மா கட்சிக்கு வரப்போறார்னு பேச்சு அடிப்பட்ட அடுத்த நாளே விக்ரமன் , வெற்றி மாறன் கூட்டணி.. இப்போ மறுபடி சுந்தர் சி உள்ளே வந்துட்டாரு.. சுந்தர் சி எப்பவும் சிரிச்ச முகம், வெற்றி மாறன் கடு கடு முகம்.. ஹூம்.. 


1. குறும்பட இயக்குநர் பெயர் - அஸ்வத்  - குறும்படத்தின் பெயர் - குழந்தையின் வயது 75

டைட்டிலை பார்த்ததுமே செண்ட்டிமெண்ட்ல பிழியப்போறாங்கனு நினைச்சேன்.. 100% சரி.. ஒரு அப்பா, பையன் நடுவில் உள்ள தவமாய் தவமிருந்த உறவு பற்றிய கதை.. படம் ஃபுல்லா 2 பேர் உரையாடல்லயே முடிஞ்சுடுது.. 

அப்பாவும், பையனும் லொட லொடனு பேசிட்டே இருக்காங்க.. அப்பா பேச்சு வாக்குல அது என்ன?னு கேட்கறார்.. பையன் சொல்றான் - அது அணில்ப்பா.. 
மறுபடி அதே கேள்வி.. மகன் அதே பதில். இந்த மாதிரி 4 டைம் ரிப்பீட் ஆனதும் பையன் கடுப்பாகி ஏன்பா திருப்பு திருப்பி கேட்கறீங்க?ங்கறார்.. அப்பா உடனே ஃபிளாஸ் பேக் சொல்றார்.. பழைய டைரி எடுத்து அதுல ஒரு பேஜ் படிக்க சொல்றார்.. அதுல பையன் 20 டைம் மாடு இருக்கறதை காட்டி அது என்னப்பா? என கேட்பதும், அப்பா அதற்கு சலிக்காமல் பதில் சொல்வதும் அதுல பதிவு பண்ணப்பட்டிருக்கு.. 

 மகன் அதை கேட்டு கண் கலங்கறான்.. அதாவது நம் பெற்றோர்கள் நாம குழந்தைகளா இருந்தப்போ காட்டுன அக்கறையை, பொறுமையை நாம் நம் பெற்றோர்களிடம் காட்டுவதில்லை என்ற கரு.. க்ளைமாக்ஸ்ல அந்த பையனின் மகள் அதே போல் லவ் பேர்ட்ஸ் கூண்டை காட்டி அது என்ன ? என 2 முறை கேட்க அவன் பொறுமையா  பறவை என்கிறான்..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அப்பா அந்த டைரியை எடுத்து டிசம்பர் 31 ஆம் பக்கம் எடுத்து படி என்கிறார்.. ஆனால் பையன் டைரியின் கடைசி பக்கம் பார்க்காமல் முதல் 25 வது பக்கம் பார்க்கிறான்

2. அப்பா 1985 ஆம் வருஷ டைரியை எடுன்னு சொன்னதும் பையன் உள்ளே போய் தேடி எடுக்காமல் ரெடியாக டக் என்று அவர் தலை மாட்டில் இருந்து எடுக்கிறான்

3.  அப்பாவின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் மகன் கேரக்டர் செயற்கையான நடிப்பு + சிரிப்பு. நாடகம் பார்ப்பது போல்.. இருக்கு

 இப்படி சில குறைகள் இருந்தாலும் இது ஒரு நல்ல படமே.. ஆனா ஜட்ஜ்ங்க  2 பேரும் இந்த படத்தை குறை தான் சொன்னாங்க..


2.குறும்பட இயக்குநர் பெயர் - ஸ்ரீ கணேஷ் - குறும்படத்தின் பெயர் - டைம் அவுட்.


அசோகமித்திரன் எழுதுன சிறுகதையான காலமும் 5 குழந்தைகளும் தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன்.. எதைத்தொட்டாலும் துலங்காத ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவனைப்பற்றிய ஜாலியான நகைச்சுவைக்கதை.. 

கதையை சொல்றதுக்குப்பதிலா மனம் கவர்ந்த வசனங்கள் சொன்னாலே ஓரளவு கதை புரிஞ்சுடும்



1. ஆட்டோ.. அடையாறு போகனும்.. வர்றீயா?



 நான் மவுண்ட்ரோடு தான் போறேன்.. அங்கே வேணா வர்றியா?


2.  தலைவரே.. எப்படியாவது எனக்கு இந்த வேலையை வாங்கிக்கொடுத்துடுங்க.. 

 போலி எம் எல் ஏ - கவலையே படாதே. பணம் கொடுத்தாச்சு இல்ல? நீ தான் அடுத்த வி ஏ ஓ.. ஆமா ஏய்யா பி ஏ.. வி ஏ ஓ அப்படின்னா என்ன?


3. ஒரு 5 நிமிஷம் இந்த உலகம் சுத்தறதை நிறுத்திட்டு ரெஸ்ட் எடுத்தா என்ன?எப்போ பாரு பரப்பாவே இருக்கே..?ரெஸ்ட் எடுக்கவே மாட்டாங்களா?

4.  எங்கே ஓடறோம்? ஏன் ஓடறோம்? எவ்ளவ் தூரம் ஓடறோம்..? எதுவும் தெரியலை. திரும்பிப்பார்த்தா டோட்டல் வோர்ல்டும் ஓடிட்டே இருக்கு.. 


5. யோவ்.. ஆட்டோ சீக்கிரம் போய்யா. 

 இருங்க.. ஒரு சவ ஊர்வலம்..

 அடடா.. யோவ்.. ஒரு 5 நிமிஷம் லேட்டா செத்திருக்கக்கூடாதா?


6.  ஜோசியரே. என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

 10 வருஷம் நாய் படாத பாடு படுவீங்க.. 

 அதுக்குப்பிறகு என் நேரம் நல்லாருக்குமா?

 ம்ஹூம், அதுக்குப்பிறகு அது பழகிப்போயிடும்


படத்தோட ஹீரோ கடவுளையே ஒரு டைம் நேர்ல சந்திச்சும் அவனுக்கு அது யூஸ் இல்லாம போயிடுது அப்டிங்கற மாதிரி கொண்டு போனாங்க..

 இந்தப்படத்துக்கு இயக்குநர் எடுத்துக்கிட்ட முயற்சிகள், உழைப்பு பிரம்மிக்க வைத்தது.. 89 கட் ஷாட்ஸ்..  120 கேமிரா ஆங்கிள்ஸ்

உழைப்பு வீண்போகலை.. இந்த வாரத்துக்கான பெஸ்ட் ஃபிலிம், பெஸ்ட் ஆக்டிங்க், பெஸ்ட் கேமரா மேன் என 3 விருதும் ஒரே படமே வாங்குனது 10 மாதங்களூக்குப்பின் இதுவே முதல் முறை


3. குறும்பட இயக்குநர் பெயர் - ஷபி   குறும்படத்தின் பெயர் - இருட்டு


எனக்கு பேய், பிசாசுல நம்பிக்கை இல்லைன்னாலும் அந்த மாதிரி ஹாரர் ஃபிலிம்ஸை ரொம்ப ரசிப்பேன்.. த்ரில்லர் ஃபிலிம், ஹாரர் ஃபிலிம், காமெடி ஃபிலிம் இந்த 3 ம் தான் என் சாய்ஸ்.. ( கில்மா ஃபிலிம்? பப்ளிக் பப்ளிக்)

ஒரு கிராமம்.. அதுல ஆவி இருக்கறதா சொல்லப்படும்  வலையல் காரி வீட்டில் தங்குனா பரிசுன்னு ஒரு பந்தயம்.. 4 ஃபிரண்ட்ஸ் போய் தங்கறாங்க.. நைட் ஃபுல்லா எதுவும் ஆகலை.. விடிஞ்சதும்  அந்த 4 பேர்ல ஒருத்தன் ஒரு இடத்துல விழுந்து கிடக்கறான்.. அவனை விசாரிச்சா அவன் நைட்ல இருந்து அங்கே தான் மயங்கி இருக்கான்னு சொல்றான்.. அப்போ நைட் பூரா அவங்க கூட இருந்தது, பேசுனது எல்லாம் அந்த பெண் பேய் தான் அதுவும் அந்த நண்பன் ரூபத்துல.. உடனே பயந்து போய் அவனை அம்போன்னு அங்கேயே விட்டுட்டு ஓடிடறாங்க..


இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  பேய் தான் வெளில போயிடுச்சு././ இப்போ இவங்க பார்த்தது அவங்க நண்பனைத்தானே..? ஏன் பயந்து ஓடறாங்க?

2. நைட் பூரா நண்பர்களுடன் ஆண் வேடத்தில் இருந்த பெண் பேய் சாதிச்சது என்ன? ஒரு கொலை இல்லை, ஒரு ரேப் இல்லை.. சும்மா கடலை ஒன்லி??


3. இந்தக்கதையின் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? பேய்கள் யாரையும் கொல்லாதுன்னா?

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இந்தக்காலத்துலயும் பேய், பிசாசு எல்லாம் இருக்கா?

 ஏன்? சாவு நடந்துட்டுத்தானே இருக்கு?


2. செயினைக்காணோம்டா..

 இங்கே எங்கேயும் இருக்காதுடா.. நாம முதல்ல இங்கே இருந்து கிளம்பலாம்.. அங்கே போய் தேடிக்கலாம்..