Monday, September 19, 2011

நாளைய இயக்குநர் - கீர்த்திக்கு நோஸ்கட் விட்ட கே பாக்யராஜ் - விமர்சனம்

நாளைய இயக்குநர் ஆரம்பித்த நாள் முதல் கீர்த்தி செஞ்சுட்டு வர்ற கேலிக்கூத்துக்கள் உலகப்பிரசித்தம்... இயக்குநர்களாக வரும் இளைஞர்களிடம் அதி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து லூஸ்தனமாய் கேள்வி கேட்பது.. பின் வழிவது .. ஆனால் ஹாய் மதனோ, பிரதாப் போத்தனோ செய்யாத ஒரு வேலையை கே பாக்யராஜ் செஞ்சாரு.. அது என்னான்னா.......

1. ஸ்டீபன் - 1 4 3

கீர்த்தி - வாங்க ஸ்டீஃபன்.. உங்க படத்தோட பேரு என்ன?

1 4  3

லவ் சப்ஜெக்ட்டா?

கே பாக்யராஜ் - ஏம்மா , கீர்த்தி அவர் தான் தெளீவா டைட்டில் பேரை சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன லவ் ஸ்டோரியானு ஒரு கேள்வி.. ?

. சாரி. சார்.. தெரியாம கேட்டுட்டேன்.. 

படத்தோட கதை கவிதையா சொல்லப்பட்டிருந்தது./.. 

ஸ்கூல்   ஒரு கிறிஸ்டீன் டீச்சரை இந்து வாத்தியார் காதலிக்கிறார். அதை வெளிப்படுத்தும்போது. சாரி.. எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லி எஸ் ஆகறாங்க.. 

பல வருடங்களுக்குப்பிறகு ஒரு பேங்க்ல அவங்க 2 பேரும் மீட் பண்றாங்க. வாத்தியாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அந்த டீச்சர் காரணம் கேட்கறாங்க.. அப்போ கரெக்டா அவருக்கு டோக்கன் நெம்பர் வரிசை வந்துடுது.. நெம்பர் 143 .. எனக்கான அழைப்பு இப்போ வந்துடுச்சுனு சொல்லி அவர் எழறார்.. 

ரொம்ப நீட்டா கதை சொல்லப்பட்டிருக்கு..

1980 கதை நடக்கறதா காட்டுனாலும் பீரியட் ஃபிலிமுக்கான மெனக்கெடல் இருந்துச்சு.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. எனக்கு தெரிஞ்சு 1 4 3 என்பது 1994 தான் புழக்கத்துக்கு வந்தது.. ஆனா கதை நடக்கும் கால கட்டம் 1980...

2. ஹீரோயின் ஸ்டெல்லா கிறிஸ்டியனா இருந்தாலும் இந்து போலவே அழகாக பொட்டு வெச்சு பூ வைத்திருக்கிறார்.. எப்டி? ( அவர் தீவிர மதப்பற்று உள்ளவராக காட்டி விட்டதால் சமாளிஃபிகேஷனுக்கு வழி இல்லை.. )

3. அந்தப்பள்ளியில் உள்ள மாணவர்கள், மாணவிகள் , டீச்சர் என எல்லோருக்கும்  1 4 3 பற்றி தெரிந்திருக்கிறது, ஆனால் ஹீரோ வாத்தியாருக்கு மட்டும் தெரியவில்லை.. அவர் என்ன சின்னத்தம்பி பிரபுக்கு சின்னத்தம்பியா?

ரசிக்க வைத்த காட்சி - தனது காதலை சொன்ன வாத்தியார் டீச்சரிடம் வேணும்னா எங்க  அம்மா அப்பாவை உங்க கிட்ட வந்து பேசச்சொல்றேன்.. என பம்முவது.


கே பி கமெண்ட்  -  எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லிடறதோட முடிச்சிருக்கலாம், எதுக்காக அந்த டீச்சர் தான் கிறிஸ்டியன் .. அவர் ஹிந்துன்னு எக்ஸ்ட்ரா பிரச்சனையை கிளப்பனும்..?மத்தபடி படம் நீட். இசை அழகு.. மாண்டேஜ் ஓக்கே... 


2. பாரதி பாலா - அவள் பெயர் அழகி..

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு ஃபிகர் அலங்காரம் பண்ணிட்டிருக்கறதை ஸ்டெப் பை ஸ்டெப்பா காட்டறாங்க.. பார்க்கற ஆடியன்ஸ் பாப்பாவுக்கு மேரேஜ் போலன்னு நினைக்க வைக்குது.. ஒரு ஃபிளாஸ்பேக்.. பாப்பா ஒரு காலிப்பையலை லவ் பண்ணுது. வீட்ல முறைப்பையனை கட்டிக்க சொல்றாங்க.. அவளோட லவ்வர் வீட்டை விட்டு ஓடிப்போயிடலாம்.. உன் கிட்டே இருக்கற பணம் , நகை எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்கறான்

இந்த பொண்ணுங்களுக்கு அறிவே இல்லை.. எத்தனை படம் பார்த்தாலும் கரெக்ட்டா ஒரு கெட்டவன் கிட்டே மாட்டிக்குவாங்க.. நல்ல ஆணை மனம் புண் படற மாதிரி பேசுவாங்க

அவ்வளவுதான். அவன் மேரேஜ் பண்ணி அவளை அந்த மாதிரி இடத்துல வித்துடறான். இதெல்லாமே குறிப்பால் உணர்த்தப்படுது.. இப்போ அவ அலங்காரம் பன்றது மேட்டருக்கு ரெடி ஆக.. ஒரு குரல் கேட்குது.. ஏம்மா பொண்ணு ரெடியா? கஸ்டமர் ரெடி

இந்தப்படத்துல ஹீரோயின் செம ஃபிகர்.. நல்ல அமைதியான நடிப்பு.. அவளோட மாமன்  பையனா வர்றவர் காமெடி நடிப்பில் கலக்கறார்.. பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பாட்டுக்கு அவர் பொண்ணுக்கு வளையல்போட்டு விடுவதும், அதற்கு ஹீரோயின் காட்டும் ரி ஆக்ஷனும் கலக்கல்..

கே பி கமெண்ட் - ஹீரோயின் செலக்ஷன் ஓக்கே.. பிளசண்ட் & இன்னொசண்ட்
பொண்ணுக்கு மாமா பிடிக்கலைன்னு சொல்லத்தேவை இல்லை.. கதையோட நாட் ஹீரோயின் காதலனை பேஸ் பண்ணித்தானே இருக்கு?



3.  சஞ்சய் - சத்தியம்

ஒரு போலீஸ் ஜீப்ல 3 கொலைக்குற்றவாளீகளை கூட்டிட்டு போறாங்க.. ஒரு எம் எல் ஏவை கொன்ற கூலிப்படைகள் , யார் ஏவியதுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க.. 

ஒரு அடர்ந்த காட்டுப்பகுதில ஜீப் நிக்குது.. 3 பேர்ல ஒருத்தனை இன்ஸ்பெக்டர் தனியா கூட்டிட்டு போறார்... கேமரா அவங்க பின்னால போகலை.. ஜீப்லயே காட்சி நிக்குது.. டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது... 

அவ்ளவ்தான் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்.. இப்போ 2 வது ஆளை கூட்டிட்டு போறார்.. கொஞ்ச நேரத்துல அதே போல் டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது.. இப்பவும் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்...இப்போ 3வது ஆளுக்கு ஈரக்குலை எல்லாம் நடுங்குது.. 

கால்ல விழுந்து கதறிடறான்.. லோக்கல் வி பி ஒருத்தர் தான் கொலை செய்யத்தூண்டுனதா ஒத்துக்கறான்.. இப்போ இறந்ததா நினைக்கப்பட்ட 2 பேரும் உயிரோட வர்றாங்க. இப்போ தான் உண்மை தெரியுது,.. என்கவுண்ட்டர் நடக்கவே இல்லை.. உண்மையை வரவைழைக்க என்கவுண்ட்டர் பயம் மட்டும் ஊட்டப்பட்டிருக்கு.. 

போலீஸ் ஜீப்பில் கைதிகள் கலாய்த்த வசனங்கள்

1. சார்..போர் அடிக்குது பாட்டுப்போடுங்க.. அட்லீஸ்ட் கிரிக்கெட் ஸ்கோராவது போடுங்க கேட்போம்..

2. என்ன சார்.. மிரட்றீங்களா? 60 வயசு வரை வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்? ஐஸ்வர்யாராய் கூட குடும்பமா நடத்தப்போறேன்? உங்கே சுடுங்க சர்ர்.. இங்கே சுடுங்க.. 

3.  .. இவர் பெரிய ராகவன் பி எஸ்.. கால் பண்றார்... டேய் போடா..... 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. கான்ஸ்டபிளா வர்றவர் அவ்ளவ் லீனா மனோபாலாவுக்கு தம்பி மாதிரி இருக்காரே? கொஞ்சம் பாடி உள்ள ஆளை போட்டிருக்கக்குடாதா?

2. என்கவுண்ட்டர் நாடகத்துல குண்டு சத்தம் மட்டும் தான் கேட்குது.. !! அய்யோ என மனித அலறல் சத்தம் கேட்கலை.. துப்பாக்கி முனைல மிரட்னா அவன் அலறிட்டு போறான்.. இன்னும் எஃபக்டா இருந்திருக்குமே?

கே பி கமெண்ட் - கொலைக்கைதிகளா ஜீப்ல அழைச்சிட்டு போகப்படறவங்க ஒரு பயம் இல்லாம ஜாலியா கமெண்ட்  அடிச்சுட்டே வர்றாங்க.. அது எப்படி?

சுந்தர் சி - நீங்க கீர்த்திட்ட பேசறப்போ ஜெயிச்சுடுவீங்களா?ன்னு கேட்டதுக்கு ம் ட்ரை பண்றோம்.. பார்க்கலாம்னு அசால்ட்டா பதில் சொன்னீங்க.. அது தப்பு நம்மால முடியும்கற கான்ஃபிடண்ட்டோட உழைக்கனும்,, அது லைஃப்லயும் சரி.. சினிமாலயும் சரி.. 


4. ராமானுஜம் - மீண்டும் ஒரு குழந்தை


 ஒரு ஆகாவளி தன்னோட நோயாளி அம்மாவை ஹாஸ்பிடல்ல நைஸா விட்டுட்டு எஸ் ஆகிடறான்..அந்தம்மாவுக்கு மேட்டர் தெரில.. பையன் வருவான் வருவான்னு வெயிட்டிங்க்.. ஹீரோ வந்து என்ன மேட்டர்னு கேட்டா அந்தம்மா இந்த சீட்டை என் பையன் என் கிட்டே கொடுத்து இங்கே விட்டுட்டு போயிருக்கான், வந்துருவான்குது. 

அந்த சீட்ல பையனோட ஃபோன் நெம்பர் எழுதப்பட்டு இந்தம்மா இறந்துட்டா மட்டும் இந்த நெம்பருக்கு ஃபோன் பண்ணுங்கன்னு எழுதப்பட்டிருக்கு,,

மேட்டர் தெரிஞ்சதும் அம்மா ஷாக் ஆகிடறாங்க.. என்னை ஏதாவது அநாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுடுங்கனு சொல்றாங்க.. ஹீரோ தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போறார்.. எனக்கு 2 குழந்தைங்க. 3 வதா நீங்களும் இருந்துடுங்க எங்களுக்கு குழந்தையாங்கறார்..

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. 50 லட்சம் பங்களாவில் வசிப்பவர் காரிலோ, பைக்கிலோ வராமல் ஏன் ஆட்டோவில் வர்றார்?


2. அந்தம்மாவை வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவு எடுத்தது ஓக்கே, அதைப்பற்றி ஃபோன்ல அவர் மனைவிக்கு தகவலாகக்கூட ஏன் சொல்லலை?

படத்தில் மனம் தொட்ட வசனங்கள்

1. எத்தனை வேலை இருந்தாலும், பிஸியா இருந்தாலும் பெத்தவங்களை காப்பாத்தறது முக்கியக்கடமை

2. லைஃப்ல எல்லாருமே குழந்தைகளா வர்றோம், அப்புறம் பெற்றோர் ஆகறோம், மீண்டும் குழந்தைகளா ஆகறோம்... குறிப்பிட்ட வயசுக்குப்பிறகு..

கே பி கமெண்ட் - படம் டாக்குமெண்ட்ரி எஃபக்ட் தருது.. ஒரு சாதாரண கம்பவுண்டர் அவ்ளவ் மெச்சூரிட்டியா வசனம் பேசறது நம்பற மாதிரி இல்லை

ஆட்டோ டிராவல் பண்றப்ப லைடிங்க் எஃபக்ட் அழகா கொடுத்திருக்காங்க.. டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட் அந்த வயசான அம்மாவுக்கு நல்லா குரல் குடுத்திருக்காங்க.. 

அம்மாவா நடிச்சவங்க ரொம்ப பழைய நடிகை.. புதிய தலை முறை மட்டும் அல்லது முதிய தலைமுறைக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி ஒரு ஏணியா இருக்கு.. 

மேலே சொன்ன துல முதல் படத்துக்கு சிறந்த படம் அவார்டும், சிறந்த நடிக்கான விருது அவள் பெயர் அழகி ஹீரோயினுக்கும், சிறந்த டெக்னீஷியனுக்கான விருது கடைசிப்படத்துல ஒளிப்பதிவாளருக்கும் கிடைச்சது. 

Living DOLL

சுவாமி கில்மானந்தாவின் டைரி வரிகள்

Large Lilly
1.நடிகை சோனா கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை  எஸ்பி.சரண்மீது போலீசார் வழக்கு # சோனா அவள்  அங்கம் தங்கம்தானா? பாடலுக்கு தடை!?

------------------------------

2. அனுஷ்கா, எமி ஜாக்சனுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் விக்ரம்...! # ஜிம்முக்குப்போய் உடம்பை ஏத்தப்போறீங்களா? உயரத்தை ஏத்தப்போறீங்களாண்ணே?

------------------------------------------

3. பருவ நிலைகளைப்பொறுத்து பனியும், மழையும் பொழிகின்றன!உன் அன்பு மட்டும் பொழியாமல் இருந்ததே இல்லை!

----------------------------

4. நான் சோகத்தில் இருக்கும்போது தாய் மடி நீ! நான் சந்தோஷத்தில் இருக்கும்போது தாயம் அடி நீ!

--------------------------------

5. நம் உள்ளங்கைகள் சேர்ந்து இருந்த போது நம் உள்ளங்கள் ஒரு நிமிடம் கூட சோர்ந்து போனதே இல்லை!

--------------------------------



6. உன் இமைகள் சேர்ந்திருக்கும் நேரம், அல்லது என் இமைகள் சேர்ந்திருக்கும் நேரம்,  நம் உள்ளங்கள் சேர்ந்திருக்கும் # தூக்கத்தில் வரும் ஏக்கங்கள்

---------------------------

7. மனதிற்குப்பிடித்த ஒருவரை,நேசிப்புக்குள்ளான ஒருவரை இழப்பதை விட மரணம் ஒன்றும் வலி நிறைந்தது அல்ல!

------------------

8.தனக்கென நிகழும் வரை இந்த உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களுமே வேடிக்கையானவையே!

----------------------------------

9. பிரியத்துக்கு உரியவளின் கண்ணுக்குப்புலப்படாத கண்ணீருக்கு நாம் ஒரு பொழுதும் காரணம் ஆகி விடக்கூடாது!

----------------------------------

10. இழந்தால் கிடைக்காதது 


1. சொல்லி விட்ட வார்த்தை 

2. கடந்து போன காலம்

3. நிராகரிக்கப்பட்ட நேசம்

4. முதல் காதல்

---------------------------------


11. சுவாமி கில்மானந்தாவின் டைரி வரிகள் - லவ் த லேடி, டோண்ட் டச் த பாடி, மீறி டச் பண்ணுனா யாராவது ரெடி பண்ணிடுவாங்க 3 D  சி டி

----------------------------------

12. பிஎஸ் சி எலக்ட்ரானிக்ஸ் படிக்கும் காதலனின் லவ் பஞ்ச் டயலாக் - கனெக்‌ஷன் விட்டுப்போக நாங்க ஒயர் இல்லைடி! உயிர்!!!

----------------------------------

13. ஒஸ்தி படத்தில் வரும்அந்தமுக்கியமான பாடலுக்கு மல்லிகா ஷெராவத் ஆட ஒப்புக்கொண்டுள்ளார் - சிம்பு # எப்படியோ படம் நாஸ்தி ஆகாம இருந்தா சரிதான்

----------------------------------------

14. வாழ்க்கை என்பது நம் இறப்பு வரை அல்ல! மற்றவர் மனதில் நாம் வாழும் வரை

--------------------------

15. உன் இதயத்துடிப்பை கேள்! ஒவ்வொரு துடிப்புக்கும் ஒரு அர்த்தம் சொல்லும்,என் இதயத்துடிப்பை கேள்! துடிப்பின் அர்த்தமே நீதான் என்று சொல்லும்

---------------------------------

16. சுனாமிஅலைல சிக்கி உயிர் பிழைச்சவன் இருக்கான், சுடிதார் வலைல சிக்கி உயிர் பிழைச்சவன்  எவனுமே இல்லை . திஸ் கேவலமான பஞ்ச் பை கோவலன் கோமேதகம்

-------------------------------------

17. என்னைப்பார்க்கும்போது உன் கண்கள் கவிதை பேசுகின்றன, என் கவிதைகள் கண்ணீர் வடிக்கின்றன

---------------------------

18. நிலவில் வாழ ஆசைப்படுகிறார்கள் கோடீஸ்வரர்கள், காதலியின் நினைவில் வாழ ஆசைப்படுகிறார்கள் காதலீஸ்வரர்கள்

-----------------------------

19. சுமைகளைக்கண்டு துவண்டுவிடாதீர்கள்!இந்த உலகத்தையே சுமக்கும் பூமி கூட நம் காலடியில் தான்!!!!

--------------------------------

20. ஆனந்தக்கண்ணீர் என்ற வகையறாவில் கூட உன் கண்களில் கண்ணீர் வரக்கூடாது,உப்புச்சுவையை உன் கன்னங்களோ, உதடுகளோ ருசிக்கக்கூடாது

------------------------------------

Acuarelas

21. அழகான பெண்களுக்கும் , உண்மையான அன்பிற்கும் எதிர்மறைத்தொடர்பு உள்ளது.முற்றிய தேங்காய்பருப்பின் சுவைக்கும், அதன் தண்ணீருக்கும் உள்ள சுவைபோல

----------------------------------

22. பெரும்பாலான பெண்கள் கூந்தலை சரி செய்வதையும், ஆண்கள் மீசையை தடவுவதையும் தங்கள் மேனரிசமாக வைத்திருக்கிறார்கள் # அவ(ல)தானிப்பு

---------------------------

23. உயர்பதவியில் இருந்தாலும், செல்வச்சீமாட்டியாய் வள்ர்ந்தாலும்ஏட்டிக்குப்போட்டியாய் காதலி செய்யும் சில குழந்தைத்தனங்கள் அவளை தேவதைஆக்குகின்றன

------------------------

24. என் அருகாமையில் உன் கன்னங்கள் நாணுகின்றன. ஊற்றெடுக்கும் கவிதைகளை வடிக்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது

----------------------------

25. அழகால், திறமையால், வசதியால் பலர் உன்னை வசீகரித்தார்கள். அன்பால் நான் மட்டுமே உன்னை ஆகர்சித்தேன்

-----------------------------------

Saturday, September 17, 2011

'அணு சக்தி... அழிவு சக்தி! கூடங்குளம் குப்பைக்கூளம்!!!! ஜூ வி கட்டுரை..

கூடங்குளம் வேண்டாம்!''

உக்கிரமாகும் உண்ணாவிரதம்!
'அணு சக்தி... அழிவு சக்தி!’ என்ற கோஷம் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில்... நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யாவின் ஆதரவுடன் அணு உலைகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதை எதிர்த்து, கொதித்தெழுந்து நெருப்பைக் கக்குகிறார்கள் மக்களும், மக்கள் இயக்கங்களும்!


ரஷ்ய அரசின் ஒத்துழைப்புடன் 13,500 கோடி முதலீட்டில் நடந்து வரும் இந்த அணு உலைகளின் மெகா திட்டத்தை நிறைவேற்றி, அதன் மூலம் இந்த ஆண்டுக்குள் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.


இதை எதிர்த்து போராடிய மக்களின் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவற்றை ஒடுக்க, காவல் துறை அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்ய... கொந்தளித்த மக்கள், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜை சந்தித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் 127 பேர் கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகத்துக்குப் பெரும் தலைவலி!



உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் 'அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனிடம் பேசினோம். ''அணு சக்தியால் லாபத்தைவிடவும் இழப்பே அதிகம். 'நமக்கு மட்டும் அல்லாமல் வருங்கால சந்ததியையும் அழித்து ஒழிக்கக்கூடிய அணு உலையை இங்கே மட்டும் அல்ல, எங்கேயும் அமைக்க வேண்டாம்’ என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இந்த மக்களும், 'அணு உலையால் சாவதைவிடவும் பட்டினிகிடந்து அற வழியில் உயிரைவிடுவோம்’ என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்!' என்றார்.


இதற்கிடையே, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இடிந்தகரைக்கு வந்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பால பிரஜாபதி அடிகள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான குமாரதாஸ் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இது தவிர, அண்ணா ஹஜாரே, மேத்தா பட்கர் உள்ளிட்ட சமூகப் போராளிகளும் வருவார்கள் என்பதால், போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.


இதனிடையே, 'அணு உலை அமைக்கும் பணி முடிவடையும் சமயத்தில், இத்தகைய போராட்டங்கள் நடத்துவது நியாயமா? இதற்காகச் செலவிட்ட பணம் இழப்பாகிவிடுமே?’ என அணு மின் நிலையத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபற்றி போராட்டக் குழுவைச் சேர்ந்தவரும், தமிழகம் - புதுவை மீனவ மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான ஆண்டன் கோமஸிடம் கேட்டதற்கு, ''கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டோம் என்பதற்காக நாமே சாவைத் தேடிக்கொள்ள முடியுமா? ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் நிறையப் பேருக்கு புற்றுநோய் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

லட்சக்கணக்கில் செலவு செய்து மகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்த பிறகு, கடைசி நேரத்தில் மணமகனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தால், 'இவ்வளவு செலவு செஞ்சுட்டோமே... பரவாயில்லை’னு விட்டு விடுவோமா?' என்று எதிர் கேள்வி கேட்டார்.


அணு சக்தித் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் பிரதமரின் காதுகளுக்கு எட்டுமா இந்த அபலை மக்களின் கூக்குரல்?


-
 ''எவ்வித ஆபத்தும் இல்லை...''


கூடங்குளம் அணு மின் திட்டத்தின் வளாக இயக்குநர் எம்.காசிநாத் பாலாஜியிடம் மக்கள் கூறும் புகார்கள் பற்றி கேட்டபோது, ''இந்தியாவில் செயல்படும் 6 அணு மின் நிலையங்களைப் போன்றுதான் கூடங்குளத்திலும் செயல்படப் போகிறது. எதிர்பாராத விபத்து, கதிர்வீச்சு போன்ற எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை.


உலக அணு சக்தி கழகம் வகுத்துள்ள பாதுகாப்பு கோட்பாடுகளை இங்கே பின்பற்றுகிறோம். தற்போது பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிய சோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். இந்த சூழ்நிலையில் உள்ளூர் மக்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டுமோ என்றெல்லாம் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதுபோன்ற சூழ்நிலை எப்போதும் வராது.


உலகத்தில் எங்குமே இல்லாத விசேஷ பாதுகாப்பு ஏற்பாடு களாக,  40 மீட்டர் உயரத்தில் இயல்புநிலை குளிர்விப்பானை (ஹீட் எக்ஸ்சேஞ்சர்) வடிவமைத்து இருக்கிறோம். அதனால் கதிர் வீச்சு எந்தவகையிலும் வெளியேற வாய்ப்பே இல்லை. நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளை தாங்கக்கூடிய வகையில் கடல் மட்டத்தில் இருந்து ஏழரை மீட்டர் உயரத்தில் அணு மின் நிலைய கட்டடத்தை அமைத்துள்ளோம்.

அணு மின் நிலைய வளாகத்தின் ஒரு புறம் கடல் பகுதியை ஒட்டி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக 500 மீட்டர் வரை மீன் பிடிக்க வேண்டாம். அதற்கு அப்பால் தாராளமாக மீன் பிடித்துக் கொள்ளலாம். இதுகூட, நாட்டின் பாதுகாப்பு நலன் கருதிதான். கதிர்வீச்சு பாதிப்பு குறித்து ஆராய, பாபா அணு மின் நிலைய சுற்றுச்சூழல் ஆய்வகம் ஒன்று கூடங்குளம் ஏரியாவில் 2004 முதல் இயங்கி வருவது மக்களுக்குத் தெரியும்.

அணு மின் நிலையம் துவங்கியபிறகும் அந்த ஆய்வகம் தொடர்ந்து இங்கேதான் இயங்கப் போகிறது. புற்றுநோய் வரும் என்பதெல்லாம் வெறும் வதந்தியே. இங்கே கதிர்வீச்சு வெளியே வரவே வராது எனும்போது எப்படி பாதிப்புகள் ஏற்படும்?'' என்று கேள்விகளை எழுப்பினார்.





சி.பி - சுனாமி எல்லாம் வரவே வராதுன்னு சொல்லலையா?வந்த பின் திண்டாடுவதை விட வரும் முன் காப்போம்!!

நமது பதிவர் பாலா உண்ணாவிரதத்தில் உள்ளார். 

http://koodalbala.blogspot.com/2011/09/blog-post_17.html#comments


1. டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தால், குண்டு வெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்று கருத்துள்ளதே? 

சி.பி - மக்கள் சிந்தித்து வாக்களித்திருந்தால் காங்கிரஸ் ஆட்சி கூடத்தான் தவிர்க்கப்பட்டிருக்கும். யோவ்! நடந்து முடிஞ்சதைப்பற்றி என்ன பேச்சு? இனி ஆக வேண்டிய வேலையைப்பாருங்க!


அசம்பாவிதம் தடுக்கப்பட்டு இருக்கலாம்!

கண்காணிப்பு கேமரா மற்றும் ஸ்கேனர் இயந் திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற பார் கவுன்சில் கோரிக்கை விடுத்து இருந்ததாம். ஏல நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்தக் கருவிகள் இன்னமும் வந்து சேரவில்லை. டெல்லி போலீஸும் தங்களுக்குத் தேவையான சி.சி.டி.வி. கேமராக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை முடிவெடுக்க முடியாமல் நாட்களைக் கடத்தியது. இந்தக் காலதாமதமும் தான் இத்தனை உயிர்ப் பலிகளுக்குக் காரணம்!



ஏற்கெனவே மே 25-ம் தேதி இதே வளாகத்தில் குண்டு வெடித்தது. இப்போது இரண்டாம் முறை. 'உலகில் எங்குமே பயங்கரவாதிகள் ஒரே இடத்தை இரு முறை குறிவைத்துத் தாக்கியது இல்லை. இது இந்தியப் பாதுகாப்பு அமைப்பில் இருக்கும் படுகேவலமான கேலிக்கூத்து’ என்று டெல்லிப் பத்திரிகையாளர் ஒருவர் எழுதி உள்ளார். ஒரே இடத்தில் எத்தனை தடவை குண்டு வைத்தாலும் இவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது எல்லா பயங்கரவாத அமைப்புகளுக்கும் தெரிந்திருக்கிறது.


பிரதமரும் உள்துறை அமைச்சரும்  கணக்கில் கெட்டிக்காரர்களாக இருக்கலாம், ஆனால், காவலுக்குக் கெட்டிக்காரர்கள் இல்லை!



2. 'திருக்குறளின் நல்ல கருத்தைக் கேட்டுவிட்டு சபையைவிட்டு வெளியே வந்துவிடுகிறோம்’ என்கிறார்களே தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்? 

திருக்குறளின் நல்ல கருத்துகளைக் கேட்டு நடந்திருந்தால், எதிர்க் கட்சியாகும் நிலைமையே வந்திருக்காதே!

 சி.பி - யோவ், அதுக்கு ஏன்யா அங்கே போறீங்க? கலைஞரின் குறளோவியம் படிச்சுட்டு கமுக்கமா வீட்லயே இருந்துக்க வேண்டியதுதானே?



3. 'மதுவிலக்கு கொண்டுவருவதுபற்றியும் மது விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்றும் வாய் கிழியப் பேசுபவர்கள்தான், கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள்’ என்று ஜெயலலிதா கூறி இருக்கிறாரே! யார் என்று தெரிகிறதா? 


இதில் ரகசியம் என்ன இருக்கிறது? ராமதாஸைத்தான் சொல்கிறார் ஜெயலலிதா. இதே வார்த்தைகளைக் கருணாநிதி சொல்லி இருந்தால் ராமதாஸ் என்ன கர்ஜனை செய்திருப்பார்? ஜெயலலிதா சொன்னதைக் கேட்டும்... கேளாதவர் மாதிரி ஆகிவிட்டார். டாக்டரிடம்தான் எவ்வளவு மாற்றம்?

 சி.பி - அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!!!!!!


4. எதிர்த்துப் பேசிப் பதில் அளிக்க... எந்த எதிர்க் கட்சியும் இல்லாத சட்டசபை நிகழ்ச்சிகள்பற்றி..? 


'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்கிறார் முதல்வர். அவர் இதைத்தான் எதிர்பார்த்தார். அதுவே நடக்கிறது!

சி.பி - உள்ளாட்சித்தேர்தல்ல கேப்டன்க்கு  அல்வான்னு கன்ஃபர்ம் ஆகிடுச்சு, இனி பாருங்க, களை கட்டும் ...கேப்டன் மப்புல புள்ளி விபரம் சொல்வார் பாருங்க!



5. இரும்பு மண்வெட்டி 'ஸ்டாலின்’, வெள்ளி மண்வெட்டி 'அழகிரி’, தங்க மண்வெட்டி 'கனிமொழி’... போன்ற கதைகளை அமைச்சர் பேசியது சரியா? 


அமைச்சர் ந.சுப்பிரமணியம் தனது ஆதிதிராவிடர் நலத் துறையில் செயல்படுத்த எத்தனையோ ஆக்கபூர்வமான திட்டங்கள் இருக்கின்றன. இதுபோன்ற வெட்டிக் கதைகளை விடுத்து உருப்படியான காரியங்களில் ஈடுபடு வது மட்டுமே... அவரின் பொது வாழ்வுக்கு நல்லது!


  சி.பி - அண்ணன் அஞ்சாங்கிளாஸ் வரை தான் படிச்சிருப்பார் போல!!!!!!!


6. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்து சாதித்தது என்ன? 


அதை அவர்தான் சொல்லவேண்டும். ஆனால், அவர்தான் எதையும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லையே!

பேரறிவாளன், சாந்தன், முருகன் விஷயத்திலும் அவர் மௌனமே பதில். தூக்கு போட தேதி குறித்த செய்தியைக் கேள்விப் பட்டதும் ப.சிதம்பரத்துக்கு வைகோ போன் செய்திருக்கிறார். லைனுக்கு வரவில்லை ப.சி. காலை முதல் மாலை வரை பல தடவை முயற்சித்தும் ப.சி. பேசவில்லையாம். 'செய்தி உண்மையா? இல்லையா? என்பதையாவது கேட்டுச் சொல்லுங்கள்’ என்று உதவியாள ரிடம் சொல்ல... அதற்கு மட்டும் 'உண்மைதான்’ என்று பதில் சொல்லச் சொல்லி இருக்கிறார்

. இதை எனக்குச் சொன்ன ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர், 'புலிகளை ஆதரித்ததற்காக பொடாவில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த வைகோவை, சிவகங்கை தொகுதி பிரசாரத்துக்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தவரும் இதே சிதம்பரம்தான்’ என்றார்.


அரசியலும் பதவிகளும்தான் மனிதர்களின் குணங் களைத் தீர்மானிக்கின்றன!

சி.பி - மார்க்கெட் வால்யூ என்பதையும் சேர்த்துக்குங்க. 


7. ஓட்டுக்குப் பணம் குற்றம்... ஓட்டுக்குப் பின் இலவசம் குற்றம் இல்லையா? 


அது அதைவிடப் பெரிய குற்றம்தான்! ஓட்டுக்கு பணம், இரவில் தரப்படுகிறது. இலவசங் கள், பட்டப்பகலில் கிடைக்கின்றன. அது ஒரு கட்சியின், தனி மனிதர்களின் பணம். ஆனால் இலவசங்கள்... அரசாங்கத்தின், அனைத்து மக்க ளின் பணம்!


ஓட்டுக்கு பணம் வாங்குவதற்குச் சிலர் வெட்கப்படுகிறார்கள். ஆனால், டி.வி., மிக்ஸி கிடைத்ததைப் பெருமையாக நினைக்கிறார்கள். இரண்டுமே பாவங்கள்தான்!


சி.பி - கோயிலுக்கு உள்ளே போய் பாவம் பண்ணுனாலும், வெளில வந்து பாவம் பண்ணுனாலும் பாவம் பாவம் தானே?


8. தொடர்ந்து என்னைக் கவலைகள் வாட்டுகிறதே? 


'கவலைகள் - பறவைகள். அவை உங்கள் தலைக்கு மேலே பறப்பதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால், உங்கள் தலையின் மேல் அவை கூடு கட்டவிடாமல் தடுக்க முடியும்’ என்கிறது சீனப் பழமொழி!

 சி.பி - ஒரு சம்சாரம்மட்டும் கட்டி இருந்தா ஒரு கவலை, பல சம்சாரம் கட்டி இருந்தா பல கவலை!


9. இன்றைய நிலையில் துணிச்சலான தமிழகத் தலைவர் யார்? 


தங்கபாலுதான்!


'நானும் எவ்வளவு நாள்தான் தலைவராவே நடிக்கிறது?’ எனத் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டும், எவ்வளவு தைரியமான 'தலைவராக’ வலம் வருகிறார்! அவரைவிடத் துணிச்சலானவர் உண்டா சொல்லுங்கள்?

 சி.பி - கலைஞர் தான். சன் டி வி , கலைஞர் டி விக்கு ஆப்புன்னு தெரிஞ்சும், தன் குடும்பமே ஜெயில் வாசத்துல இருந்தும் இன்னும் வலிக்காதது மாதிரியே நடிக்கறாரே? குருதிப்புனல்ல கமல் பேசும் வசனம் தான் நினைவு வருது.  தைரியம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாதது மாதிரி நடிக்கறது.

tks - ju vi


டிஸ்கி 1 -

எங்கேயும் எப்போதும் - அசத்தலான திரைக்கதை யுக்தி + அஞ்சலியின் அழகு நடிப்பு - சினிமா விமர்சனம்

டிஸ்கி 2 -

வந்தான் வென்றான் - சந்தானம் பகடி + தப்ஸியின் ஜிகிடி - சினிமா விமர்சனம்

 

எங்கேயும் எப்போதும் - அசத்தலான திரைக்கதை யுக்தி + அஞ்சலியின் அழகு நடிப்பு - சினிமா விமர்சனம்

http://i.indiglamour.com/photogallery/tamil/movies/2011/Aug03/Engeyum-Eppothum/normal/Engeyum-Eppothum_30405rs.jpg 

ஒரு படத்துக்கு திரைக்கதை எப்படி இருக்கனும்னு பார்க்க ஆசையா?ஒரு பஸ் பயணம் நம் மனசில் நீங்கா இடம் பெற நினைக்கறீங்களா.?ஒரே படத்தில் அழகிய 2 காதல் கதைகளை வேறு வேறு கோணத்தில் ரசிக்க எண்ணமா.? சாலை விதிகளை மதிக்காம வேகமா போகும் ஆட்களை திட்டும் நீங்கள் இனி என்றென்றும் அவர்கள் மேல் அனுதாபம் கொள்ள நினைப்பு இருக்கா? இறக்கப்போகும் மனிதர்களின் கடைசி கட்ட ஆசைகளை கண்ணீரோடு பார்க்க துடிப்பா? நீங்கள் அவசியம் காண வேண்டிய படம்தான் எங்கேயும் எப்போதும்.

ஏ ஆர் முருகதாஸ்ட்ட இயக்குநர் ஒன் லைன் கதை சொல்லும்பொதே இது செம ஹிட் ஆகற சப்ஜெக்ட்னு அவர் புரிஞ்சிருப்பார் போல.. அதான் துணிச்சலா தயாரிச்சுட்டார்...

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே 2 பஸ் மோதறதை , அதன் பயணிகள் 80% பேர் இறப்பதை , பலர் படுகாயம் அடைவதை காட்டி விட்டு 4 மணீ நேரம் முன் என சப் டைட்டிலுடன் கதை சொல்லும் யுக்தியை தொடங்கும் போதே டெம்போ ஏறுது. இயக்குநர் சரக்குள்ள ஆள்னு தெரிஞ்சுடுது.

சென்னைக்கு முதல் முதலா இண்ட்டர்வியூவுக்கு வரும் அனன்யா - புது முகம் சர்வா ஒரு ஜோடி. அனன்யாவின் அநியாய அப்பாவித்தனமும்,ஓவர் முன் ஜாக்கிரதையும் ஹீரோவுக்கு எரிச்சலை கொடுத்தாலும் ஆடியன்ஸூக்கு
புன்னகையையே தருகின்றன...அனன்யா சென்னை வந்து ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி அக்கா வீட்டுக்கு போவதை மட்டும் போர் அடிக்காமல் 48 நிமிடம் சுவராஸ்யமான சம்பவங்களுடன் சொன்னதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.. 


http://3.bp.blogspot.com/-HUp5FGk92uA/TZ72th5mdCI/AAAAAAAAREg/YXaWMCp2CmA/s1600/Jai_Anjali_In_Engeyum_Eppothum_Tamil_Movie_Gallery_3.jpg
அதிலும் இருவரும் நடந்து போகும்போது அனன்யா தன் ஒரு கையை மட்டும் முதுகுப்பக்கம் மடக்கி போவது செம .. ( கை அவர் மேல் பட்டுடக்கூடாதாம்.. )மெல்ல மெல்ல அவர் மேல் காதல் கொள்வது அழகு... இவர்களது காதல் கதை நாம் பக்கத்தில் இருந்து பார்ப்பது போலவே பிரமதமாய் செட் ஆகி விடுகிறது.. 



அடுத்து ஜெய் - அஞ்சலி.. காதல்.. அஞ்சலி தெனாவெட்டான பொண்ணு, ஜெய் கொஞ்சம் அப்பாவி, பயந்தாங்கொள்ளி...தன்னை விட 4 மாதம் மூத்த ஃபிகரான எதிர்  வீட்டு அஞ்சலியை அவர் வாங்க போங்க என்று  அழைக்கும் அழகும், அஞ்சலி அவரை வா போ என அசால்ட்டாக அழைப்பதும் அசத்தல். 

அஞ்சலி ஜெய்யை ஹாஸ்பிடல் அழைத்துப்போய் எய்ட்ஸ் டெஸ்ட் எடுப்பது, ஜெய்யின் சம்பளப்பணத்திலேயே ஜெய்க்கே டிரஸ் எடுத்துக்கொடுப்பது,காபி ஷாப் போவது, அவர் வேலை செய்யும் இடத்துக்கே  போய் அலப்பறை செய்வது என அஞ்சலியின் ராஜாங்கம் படம் நெடுக.. அங்காடித்தெருவில் ஃபோர் அடிச்சவர் இதில் சிக்சர்!!!!!!!!!!!!!

எல்லோரையும் விட படத்துல எல்லார் மனதையும் பாதிக்கும் இரு கேரக்டர்கள் பற்றி சொல்லியே ஆகனும்.. மனைவி கர்ப்பம் ஆனதும் ஃபாரீன் வேலைக்குப்போகும் கணவன் 5 வருஷம் கழிச்சு திரும்பி வர்றான்.. அவர் அதுவரை நேரில் பார்க்காத தன் மழலையை ஃபோன் மூலம் மட்டும் பேசி கொஞ்சி மகிழ்பவர்...அடிக்கடி எப்போப்பா வருவே? என தன் குழந்தை கேட்கும்போது சமாளிப்பவர்.. அவர் விபத்தில் இறந்த பின் அந்த குழந்தை ஃபோன் செய்கிறது.. கல் நெஞ்சையும் கரைக்கும் காட்சி... 

மணமான தம்பதி- தன்  மனைவியை பஸ் ஏற்ற வரும்  கணவன் அவளைப்பிரிய மனம் இன்றி கொஞ்ச தூரம் வந்துட்டு பின் இறங்கிக்கொள்வதாய் சொன்னவன் பின் இறப்பது பயங்கரம்.!


http://g.ahan.in/tamil/Engeyum%20Eppothum%20Movie%20Stills/Engeyum%20Eppothum%20(52).jpg

எங்கேயும் எப்போதும் நம் காதில் ஒலிக்கும் வசனங்கள்

1.  XQS  மீ, உங்க பொண்ணுக்கு சாக்லெட் தரலாமா?

அவ புது ஆளுங்க யார் குடுத்தாலும் வாங்க மாட்டா!!!!

இல்லம்மா, வாங்கிப்பேன்!!!!!!!!!

2. மேடம், உங்களை சீட் மாறி உட்கார வைக்கறேன்.. வெயிட் ப்ளீஸ்!!!!

யோவ் கண்டக்டர்! அவ உன்னை கேட்டாளா? சரியான பி ஜே பி ய்யா!!

3. நீங்க தம் அடிப்பீங்களா?             ம்

தண்ணி அடிப்பீங்களா?        ம்

அப்போ அந்த 3 வது தப்பு? 

கொள்ளையா? கொலையா?

4. இங்கே பாரம்மா, சென்னைல எல்லாரும் பார்க்க டீசண்டா தான் இருப்பாங்க.. பழைய படத்துல வர்ற மாதிரி கன்னத்துல மருவும்,கழுத்துல கர்ச்சீப்பும் கட்டி இருக்க மாட்டாங்க.. 

5. ஆமா, நீ ஏன் சிவப்பு கலர் டிரஸ்?

என் ஆள் சிவப்பு கலர் டிரஸ்... அதான்.. ஆமா நீ ஏன் மறுபடி ஒரு கலர்  மாத்தறே?

எனக்கு 2 லவ்வர்.. 

நீ ஏன் காக்கி யூனிஃபார்ம்லயே வேலைக்கு வந்துட்டே?

ம், என் ஆள் பாலிடெக்னிக்ல படிக்கரா, அவளுக்கு இதான் யூனிஃபார்ம்.. 

6. ஏண்டா? அம்மாவுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாம சிக்னல் காட்டுவியா? லூஸா? நீ?

7. இங்கே பாரு.. இது வரை எப்படியோ? லவ் பண்ண ஆரம்பிச்சுட்டே இல்ல? இனி பர்மிஷன் லீவ் எல்லாம் இருக்கனும். எடுக்கனும்.. புரியுதா?

8.  ஆஃபீஸ்ல இருந்து வர்றப்ப சம்பள கவரை கொண்டாந்துடு.. 

எதுக்குங்க?

அதான் என்னை லவ் பண்றதா சொல்லிட்டியே?எதுக்கு கேள்வி எல்லாம்/

9. ஆமா.. என்ன உன் உதடு சிவப்பா இருக்கு? லிப்ஸ்டிக்கா போடறே? ஆம்பள அதை போடலாமா?

இல்லீங்க. குச்சி ஐஸ் சாப்பிட்டேன்.. 

10. என்னங்க.. இந்த பேண்ட் கிழிஞ்சிருக்கு.. வேணாம்.. வேற எடுங்க.. 

டேய் லூசு.. அதுதான் ஃபேசனே!!!


http://www.koodal.com/cinema/gallery/events/2011/666/engeyum-eppothum-movie-press-meet-stills_10_152630123.jpg

11.  என்னங்க? காஃபி சூடா இல்லாம ஜில்னு இருக்கு?


டேய் கேனை.. கோல்ட் (COLD)  காபி அப்படித்தான் இருக்கும்.. 


12. என்னது? ஒரு காபி 80 ரூபாவா/ அய்யோ..!!!பீரே 80 ரூபாதான்..

அப்போ நீ பீர் அடிப்பியா?

சத்தியமா இல்லீங்க!!!!

நான் மட்டும் ஆம்பளையா இருந்தா உலகத்துல இருக்கற எல்லா சரக்கும் டேஸ்ட் பார்த்திருப்பேன்.. 

13.  இப்போ பார்த்துட்டு வந்தியே? அவர் யார்னு தெரியுமா? உனக்கு?

ஏட்டு?

அது உனக்கு.. எனக்கு?

ஏங்க.. எனக்கு ஏட்டுன்னா உங்களூக்கும் ஏட்டாத்தானே இருக்க முடியும்?உங்களூக்கு மட்டும் டி ஐ ஜியாவா இருக்கப்போறார்?

ஜோக்கு?

இல்ல, உங்களூக்குப்பிடிக்குமேன்னு......

அவர் தான் எங்கப்பா!!!!!!!!

14.  உங்க ஊர்ல எல்லாம் பொம்பளைங்க சமைக்க மாட்டாங்களா?

ஏன் கேட்கறே?

ஹோட்டல்ஸ்ல இத்தனை பொம்பளைங்க?

அவங்க எல்லாம் வேலைக்குப்பொறவங்க.. 

எங்க ஊர்லயும் வேலைக்குப்போற பொண்ணுங்க சமைச்சு , புருஷனுக்கு சாப்பாடும் குடுத்து விடுவாங்க.. 

15. முதல்ல உங்களை நம்பல்.. அதனால பயமா இருந்தது.. இப்போ உங்களை நம்பறேன் ஆனா என்னை நம்பலை.. எனக்கே என்னைக்கண்டு பயமா இருக்கு.. அதான் உங்களோட ஆட்டோல ஒண்ணா வர்லை.. 

16. இங்கே பாருங்க.. இப்போ நீங்க சிரிக்காதீங்க.. என் ஆஃபீஸ் கொலீக்ஸ் கேட்டா என்னை தப்பா நினைப்பாங்க.. 

டேய் நாயே.. அவங்க சிரிக்கலைன்னாலும் தப்பா தான் நினைப்போம்.. 

17. உங்க ஆள் ரொம்ப நல்லவன்.. எனக்குத்தெரிஞ்ச எல்லா மொழிலயும் அப்ரோச் பண்ணிட்டேன். ஆள் கண்டுக்கவே இல்லை.. அப்புறம் என்னைப்பற்றி நல்லாத்தெரிஞ்ச  ஒரு கேனையை கட்டிக்கிட்டேன்.. அது அதோ அவன் தான்.. 

18.  நான் செம அழகு இல்லைதான். தனியாப்பார்த்தா.. ஆனா அவன் கூட வெச்சு கம்ப்பேர் பண்ணிப்பாருங்க.. நான் ஓரளவு அழகுதான்,,

19. ம்.. சரி சரி.. என்னை கட்டிக்கோ!!!

இல்லைங்க , கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கறேன்.

சரி.. நீ வேணா கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ. நான் இப்பவே கட்டிக்கறேன்.. 

20. சரி என் மேல கோபப்படு பார்க்கலாம்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglFHEmevCZszYozLMJYsh-kUmMX2pYQAOD8XplISaa6efKzCJAtjkI_Uqxb_LhMyDB9_KmAw5YYJO3p4hsMkf3CrffQGTUbtz376-qARmO_Q-WzOZ4XeWEAs9v-AltUQrbcyEpBSgf5Xk/s1600/ananya+tamil+movies00-9.jpg

சாரிங்க.. முடியாது.. 

1.உன் பேரே தெரியாது. 2.  சொட்ட சொட்ட நினைந்துவிட்டாய்3. கோவிந்தா என 3 பாடல்கள் ஆல்ரெடி ஹிட் லிஸ்ட்டில்.

ஒளிப்பதிவு கலக்கல்.. பெரும்பாலான காட்சிகள் பஸ்ஸுக்குள் தான் என்றாலும் நீட் ஃபோட்டோகிராஃபி..  2 பஸ்களும் மோதும் காட்சிகள், விபத்து நடக்கும் சந்தர்ப்பம் 2ம் அசத்தல்..

படத்துக்கு பின்னணி இசை பக்க பலம்..

கே பாலச்சந்தர் படம் போல் ஒவ்வொரு கேரக்டரையும் மனசில் தங்க வைக்கும் டெக்னிக் ஓக்கே!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijr9d9Gt9sogoDsrGbixE10HxhjkIlguwTgaopTrVCC0GmkN6RcHxzKL9SMmrnkZApm_19oSQ0m2_SnnyPDJpdUM0RrNJlg-Eb5L4XV9VSocAQGiRPdqFA-69bwnv2X37XyJIBykoMfihv/s1600/1296908491-tamil-hot-actress-anjali-in-saree-photosactressinsareephotos.blogspot.com7.jpg

இயக்குநரிடம் சில சந்தேகங்கள்

1. ஓப்பனிங்க்லயே பஸ் ஆக்சிடெண்ட் ஆகப்போகுதுன்னு சொல்லிட்டதால நிதானமா வர்ற காதல் காட்சிகள் கொஞ்சம் பட படப்பை ஏற்படுத்துது.. அதாவது அழகான காதல் காட்சிகள் வந்தாலும் மனம் அதுல ஒன்றிட முடியல்.. அதுக்குப்பதிலா விபத்து நடக்கப்போவதை முன் கூட்டியே சொல்லாம விட்டிருந்தா சஸ்பென்ஸுக்கு சஸ்பென்ஸூம் ஆச்சு.. காதல் காட்சிகளில் ஆடியன்ஸ் இன்னும் நிதானமா மனம் லயிச்சு பார்த்திருக்கலாம்.. 

2. உடல் தானம் பற்றிய விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட காட்சி தான் என்ராலும் ஒரு பெண் அவள் என்னதான் நர்ஸா இருந்தாலும் லவ் புரொப்போஸ் பண்ண அடுத்த நிமிஷமே அவனை உடல் தானம் பண்ண ஹாஸ்பிடல் அழைத்துச்செல்வாளா?

3. ஜெய் அஞ்சலிக்கு சிக்னல் காட்டிட்டு பல் துலக்கும் காட்சியில் சுவர்க்கடிகாரம் 6.30 என காட்டுது.. அடுத்த ஷாட்ல 7.40 என காட்டுது.. அதுக்கு அடுத்த காட்சில மறுபடி 6.35 காட்டுது.. எடிட்டிங்க் ஃபா;ல்ட்டா?

4. க்ளைமாக்ஸில் ஜெய்க்கு தலையில் அடிப்பட்டு காதில் ரத்தம் வந்து சீரியஸ் என தெரிந்தும் அஞ்சலி அவருடன் செல்லாமல் இங்க்ர்ர்யே தங்கி மற்ரவர்களுக்கு உதவி செய்வது செயற்கையா இருக்கே? தனக்கு மிஞ்சித்தானே தான தர்மம்?

5. க்ளைமாக்ஸில 2 செட் லவ் ஜோடிகள்ல அந்த சைடுல ஒரு ஆண், இந்த சைடுல ஒரு பெண்ணை உயிர் இழக்க வைத்து விட்டு ஆல்ட்டர்நேடிவ் ஜோடியை ஜோடி சேர்க்கலாமா? என திரைக்கதையில் தடுமாறியிருக்கத்தேவை இல்லை.. 

6.அனன்யாவுக்கு அவர் லவ்வர் பற்றி எந்த விபரமும் தெரியாது.. ஊர்ப்பெயர் மட்டும் தான் தெரியும்.. ஆனா அவரைப்பார்க்க எப்படி கிளம்பறார்? ஆனா அவர் ஏன் அனன்யாவைப்பார்க்க அவரோட ஊர்க்கு வர்லை?


http://mimg.sulekha.com/anjali/images/wallpaper/1024-768/anjali-desktop-wallpapers028.jpg

சாலை வாகனங்களின் வேகத்தைப்பற்றிய நல்ல விழிப்புணர்வுப்படம் ,கமர்ஷியலாய்!!!!!!!

ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள் பி செண்ட்டர்களில் 50 நாட்கள். சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும்... 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 

சி.பி கமெண்ட் - மென்மையான மனம் கொண்ட காதலர்கள் பார்க்க வேண்டிய அசத்தலான திரைக்கதை . மார்க் - 50

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9sd5dEWp0thF6R6MAY5HXILqlEh8ExwqLKk3e6LOnYX01gP0YGrvw8AoX0JxjI_ZyGi3qnEzeK6qXaDScFTH6QVs96en4igSfjmvUlAo85bqNFqKb-vVokI-b7pFdesuvcIdgg1JGxMo/s1600/Tamil-Actress-Anjali-latest-stills-photos-09.jpgA

டிஸ்கி - பட விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர்.. அனன்யா பார்க்க நெக்ஸ்ட் டோர் கேர்ள் போல இருந்தாலும் அவரை ரசிக்க  முடியவில்லை.,. ஏதோ சித்தி பொண்ணு, பெரியப்பா பொண்ணு போல இருக்கார்.. ஃபிகர்னா பார்த்ததும் மாமா பொண்ணு எஃப்க்ட் வேணும். பை சமந்தமில்லாம டிஸ்கி போடுவோர் சங்கம்

டிஸ்கி 2 -

வந்தான் வென்றான் - சந்தானம் பகடி + தப்ஸியின் ஜிகிடி - சினிமா விமர்சனம்

Friday, September 16, 2011

வந்தான் வென்றான் - சந்தானம் பகடி + தப்ஸியின் ஜிகிடி - சினிமா விமர்சனம்

http://caribbeanboys.weebly.com/uploads/8/2/4/5/8245516/207920543.jpg?497

தியேட்டர்ல இருக்கற 1268 பேர்ல ஹீரோ ஜீவா அறிமுகத்தப்ப 300 பேர் கைதட்ட, ஹீரோயின் தப்ஸி அறிமுகத்தின்போது 500 பேர் மனம் மயங்க, சந்தானம் அறிமுகம் ஆகும்போது 1000 பேர் ஆர்ப்பரிக்க  அப்போதே தெரிந்து போனது இது ஜீவாவுக்கான ஹீரோயிச படம் இல்லை என..!!!!!!

சமீபத்தில் ரிலீசான உதயன் பத்தின் கதை தான்.. ஹீரோவின் அண்ணன் மும்பைல தாதா ..அவரை போலீஸ்ல சரண்டர் ஆக வெச்சு திருத்தி தன் ஊருக்கே கூட்டிடு வர்ற வேலை ஹீரோவுக்கு...

அண்ணன்க்கு ஒரு பழைய காதல் தோல்வி இருக்குன்னு வீக் பாயிண்ட்டை பிடிச்சு,வாலி அஜித் இல்லாத ஜோதிகா கேரக்டரை சிம்ரன் கிட்டே சொல்ற மாதிரி ஜீவா இல்லாத தப்ஸி கேரக்டரை தன் காதலியா சொல்லி படம் பூரா ரீல் ஓட்டி உஷ் அப்பா சாமி.. ரீல் அந்து போச்சு!!!!!!!!!!

ஆறு பட சூர்யா மாதிரி விறைப்பா வரும் நந்தா ஒரேமாதிரி நடித்திருந்தாலும் அவரது 3 நிமிட ஃபிளாஸ்பேக் காதல் ஒரு அழகிய சிறு கதை.. ஒவ்வொரு முரட்டு மனிதனுக்குள்ளும் ஒரு காதல் ஒளிந்திருக்கும் என்ற உண்மையை சொல்வது அப்ளாஸ் வாங்குகிறது..

ஜீவாவுக்கு அண்டர்ப்ளே ஆக்டிங்கா? அல்லது யாரோ எப்படியோ போங்கப்பா.. சந்தானம், தப்ஸி, நந்தா என 3 பேரை தாண்டி எனக்கு 4 வது இடம் தானே? என்ற விரக்தியில் கிண்டல்ப்ளே ஆக்டிங்க் பண்றாரா? தெரில...

தப்ஸி என்னதான் பாப்பா ஃபிகரா இருந்தாலும் கலரா இருந்தாலும் பாப்பா கிட்டே ஏதோ மிஸ்ஸீங்க்.. பாடல் காட்சிகளில் தேறி விடுகிறார். நடிப்புக்கும் இவருக்கும் ரொம்ப தூரம் போல. யார் நடிப்பை எதிர்பார்த்தா? என்று இயக்குநர் நினைத்திருப்பார் போல!!!

படத்தில் சிக்ஸர் அடிப்பது சந்தானம் தான். கேப் கிடைக்கும் இடம் எல்லாம் கிடாதான்.....

http://www.filmics.com/tamil/images/stories/news/May/26-5-11/Vandhan-Vendran.png
சந்தானம் காமெடியில் களை கட்டிய இடங்கள் + பட்டுக்கோட்டை பிரபாகர்  பளிச் வசனங்கள்

1. சார்... எழுதி வெச்சுக்குங்க.. நம்ம டீம் தான் ஜெயிக்கும்.. 

ஏதோ உங்களை வெச்சுத்தான் மெட்ராஸ் சுத்தி பார்க்கனும்..

2.  உன் தம்பியோட வீக்னெஸை ஏன் என் கிட்டே சொல்லி என்னை ஜெயிக்க வைக்கறே? இதுல உனக்கென்ன லாபம்?

ம்... உன் தங்கச்சியை எனக்கு கட்டி குடுப்பேன்னுதான்.. போடாங்க்க்க்...

3.  சார்... நீங்க தமிழா?

சந்தானம் -  கஷ்டப்பட்டு ஹிந்தில பேசுனேன். எல்லாம் வேஸ்ட்.. எப்படி சார் கண்டு பிடிச்சீங்க..?

கஷ்டப்பட்டு ஹிந்தில பேசுனீங்களே? அதை வெச்சுத்தான்... 

4. சந்தானம் -  டிரெயிலரைப்பார்த்து படம் நல்லாருக்கும்ன்னு முடிவு பண்ணாதீங்கடா!!

5. மிஸ்டர்  டான்


சந்தானம் -  சொன்னா நம்புங்கடா! நான் டான் இல்ல. வெறும் டண்டணக்கா டாண் தான்.... 

6. ஏண்ணே.. தமிழன் டூ தமிழன் நம்ப மாட்டீங்களா?

சந்தானம் - ஆமா.. இவரு பெரிய வ உ சி நான் ம பொ சி .. டேய் நாயே காசைகொடுத்துட்டு இடத்தை காலி செய்டா!!!

7. சந்தானம் - என்னை இப்போ சும்மாதானே அடிச்சீங்க? அவனையும் அப்படிஅடிச்சதா நினைச்சுக்கக்குடாதா? எதுக்கு 3 லட்சம் பணம் கேட்கறீங்க?

8. சந்தானம் -  அண்ணே, இவரு நம்ம ஃபிரண்டு.. சென்னைல கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இவர் பேரு வைக்கலைன்னு கோவிச்சுகிட்டு வந்துட்டாரு.

9. சந்தானம் - கசாப்புக்காரன் வண்டில காய்கறி இறங்கற மாதிரி நம்ம டாண் ரமணா வண்டில இவன் வந்து இறங்கறானே?

10. சார். நாம 2 நிமிஷம் யூஸ் பண்ற டூத்பேஸ்ட் கலர் சேஞ்ச் பண்றோம்.. டேஸ்ட் சேஞ்ச் பண்றோம்.. அப்படி இருக்கறப்ப பல வருஷம் இருக்கப்போற வீடு பிளானிங்க்ல சேஞ்ச் பண்றதுல என்ன தப்பு?


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=5241&option=com_joomgallery&Itemid=76

11. ஹாய் மேடம்.. நீங்க போட்டிருக்கற இந்த டிரஸ் உங்களுக்கு செம மேட்சிங்க். 
என்னால உனக்கு என்ன காரியம் ஆகனும்?

12. விதி இருக்கற எல்லா இடத்துலயும் விதி விலக்குகளும் இருக்கும்.. 

13. ஏன்? ஆம்பிஷன் உள்ள ஆளுங்க எல்லாம் லவ் பண்ணக்கூடாதா?

14. ஹலோ.. ஃபிரண்ட். என் ஆளோட ஜட்டி அவ பேண்டை தாண்டி வெளில தெரியுது.. ரயில்ல எல்லாரும் பார்க்கறாங்க. இப்போ நான் என்ன பண்ண?

டேய். இது மிட் நைட்டுடா.. என் தூக்கத்தை கெடுத்துட்டு கேக்கற டவுட்டாடா? இது?நான் ஒண்ணு சொல்றேன். செய்வியா?

கண்டிப்பா.. சொல்..

ஃபோனை வெச்சிடு.. 

15.  உயிரைக்காப்பாத்தற மருந்துக்குக்கூட எக்ஸ்ப்யரி டேட் இருக்கு.. ஆனா நமக்கு?

16. மிஸ்.. உங்க கிட்டே சொல்லனும்னும் இருக்கு.. சொல்லக்கூடாதுன்னும் இருக்கு./...

நான் அழகா இருக்கேன்.. அதானே?

ச்சே.. ச்சே.. அந்தப்பொய் எல்லாம் நான் சொல்ல மாட்டேன்.. 

17. உங்களுக்கு ஏன் லவ் பிடிக்காது?

அது அர்த்தம் இல்லாதது. பஸ்ஸூக்காக 2 நிமிஷம் வெயிட் பண்ணாதவன் எல்லாம் கிஸ்ஸுக்காக 8 மணிநேரம் கூட வெயிட் பண்றான்..

18. என்னைப்பொறுத்தவரை லவ் என்பது காலை கட்டிக்கிட்டு 500 கி மீ நடக்கற மாதிரி. 

19. இந்த உலகத்துல அண்ணன், தம்பி, அம்மா, அப்பா செத்தா அழுவாங்க. யாரும் தற்கொலை செஞ்சுக்க மாட்டாங்க. ஆனா காதலி இறந்தா தற்கொலை செஞ்சுக்கறாங்களே? அது ஏன்? அதான் லவ்.... சாமி, பேய் , காதல் மூணும் 1 தான், உணராதவரை அது இல்லை..

20.  ஒண்ணு சொல்றேன் கோவிச்சுக்க மாட்டீங்களே.. அரை மணி நேரமா சரக்கு அடிக்கறேன். சைடு டிஸ் இல்ல.. ஊறுகாய் வாங்கிக்கவா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfPFf-JcFN9cKz61vX3eD5MpF7Yt2mW6olpJw1z_L7jVZ3lgEXUOhSp4AHy7xsl6ROzGtoA2XUhmlO-q5y_FmPHOLTXqk0wV5sox68Tj9-HjmSpnF8EhMUYu7ma2BG4piohmMZdFqZEk/s1600/tapsi+%25284%2529.jpg

21. நாயை கண்டு ஏன் பயப்படறீங்க? நீங்க ஒரு பாக்ஸர் ஆச்சே?

அது உங்களுக்கு தெரியும். அந்த நாய்க்கு தெரியுமா? ( குமுதம் ஜோக் 1998 - வி சாரதி டேச்சு)

22. அவ சிரிச்சா அழகா இருப்பா.. சிரிக்கலைன்னா இனும் அழகா இருப்பா!!

23. இப்போ 2 பேரு எங்கே இருக்கீங்கடா?

நான் கீழே படுத்திருக்கேன்.. அவ மேலே படுத்திருக்கா. 

மேரேஜ்க்கு முன்னே இதெல்லாம் தப்புடா.

நான் கிரவுண்ட் ஃப்ளோர்ல , அவ ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர்ல. ( எஸ் வி சேகரின் தத்துப்பிள்ளை நாடகத்திலிருந்து சுடப்பட்ட காமெடி )

24. டேய்.. அவர் கிட்டே சொல்லிட்டு போலாமா?

டேய் நாயே. நாம என்ன இப்போ சினிமாக்கா போறோம்.. பர்மிஷன் வாங்கிட்டு போக.. உயிரை காப்பாத்த ஓடறோம். 

25. என்ன வெடிக்கற சப்தம் கேக்குது? தீபாவளி அதுக்குள்ள வந்துடுச்சா?

26. என் பொண்ணை லவ் பண்றியா மேன்?

சாரி.. சார்.. உங்க பொண்ணுன்னு தெரியாது. நான் லவ் பண்ற பொண்ணு  உங்களுக்குப்பிறந்ததுன்னு இப்போ தான் தெரியும்.. 

27. லேடி - இந்த சி டியை உங்க கிட்டே குடுக்கச்சொன்னார். 

சாரி மேடம்.. இது நீங்க2 பேரும் நடிச்ச அந்த மாதிரி சி டியா? நான் பார்க்கறதில்லையே?

28.காதலுக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு நானா செஞ்சுக்கிட்ட கல்யாணம் என்னை தண்டிச்சிடுச்சு..

29.  ரயில் கிளம்புது.. நான் கிளம்பட்டா/?

இரு, நான் முதல்ல கிளம்பிடறேன்.. அதுக்குப்பிறகு நீ போ.... நீ போறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது

30. சரி..நான் ஒண்ணு கேக்கறேன்.. ரமணா ஜெயிலுக்கு போய்ட்டா நீ என்ன செய்வே?

அரிசில ஒரு ஆழாக்கு கம்மியா உலைல போடுவேன்..

http://andhramirchi.files.wordpress.com/2011/02/tapasee3.jpg?w=249

31. டேய்.. எப்படிடா ரமணா மாதிரியே மிமிக்ரி பண்ண முடியுது? உன்னால?

அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.. மூக்கை உறிஞ்சின மாதிரி பேசுனா ரமணா வாய்ஸ் வந்துடும்..

மூக்கை உறிஞ்சின மாதிரி பேசுனா ரமணா வாய்ஸ்னா.. அப்போ மூக்கை சொறிஞ்ச மாதிரி பேசுனா தமனா வாய்ஸ் வருமா? ( செம கிளாப்ஸ் இந்த சீன்ல)

32. ஒரு கோடு வோர்டு.. அந்த ஆல் கிட்டே போய் வெள்ளீக்கிழமை காலைல மழை வரும்னு சொல்லி..

ஓ.. அவர் என்ன செய்வாரு?

 வியாழக்கிழமை மாலைலயே துவைச்சு காய வெச்ச துணியை எல்லாம் எடுத்து உள்ளே வெச்சிடுவாரு..

33. எதுக்கு ரிவால்வரை கிளவுஸ் போடாம எடுத்தே?

டேய், நான் என்ன பைல்ஸ்  ஆபரேஷனாடா பண்ணப்போறேன்?

34. கமிஷ்னர் டிரான்ஸ்ஃபர் ஆனா நீ தானே சிட்டி கமிஷ்னர்? அப்புறம் ஏன் அது வரை வெயிட் பண்ணனும்? போட்டுத்தள்ளிட்டா?


35. லவ்வுல தோத்தவன் இன்னொருத்தன்  லவ் தோத்துப்போக விட மாட்டான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI6mhjydGf-e52Tekyc9e5OX0Bm7I0G-sXYmtRn2JsuozNSZ_Eye-l_6a6dv1xV8AenBsBnCN6I_EBUSuuW-kf-AqRc303msRdQEa9vZDZX_hc5hZXAMNKwQAmdkOz7caoTeIhiX68eM1o/s1600/tapsi-hot-images0217.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. அஞ்சனா அஞ்சனா , காஞ்சனா மாலா ( கேரளா), இதயத்தில் கம்பிதனை நுழைக்காதே 3 பாடல்களை படமாக்கிய விதமும் , கவிஞர்களிடம் வரிகளை வார்த்தெடுத்த அழகும்....

2.  க்ளைமாக்ஸ்சில் ஜீவா சொல்லும் தப்ஸி கதை ட்விஸ்ட்..

3. இந்தப்படத்தில் சந்தானம், தப்ஸி கால்ஷீட் வாங்கியது.

இயக்குநரிடம் சில கேள்விகள்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYMQgx5r8LeYS8wieiVMtmCoO3s9ZVUGkQNadfI9D3FR5RHlcp5gQ8ND9YJxCv6QE1wlNIcVBW2PqaP5wX8vzMN-h9LpgRMtx7q_bdFC1EC3siK_Q6kN1tX7STgGQe9C0_Flwhe_egvT0/s1600/tapsi+%2528110%2529.jpg

1.  தன்னிடம் ஒரே ஃபோட்டோ தான் அப்பாவினுடையது இருப்பதாக சின்னப்பையன் சொல்றான்... ஏன்? அம்மாவின் கல்யாண ஆல்பத்தில் அப்பா இருப்பாரே?

2. நந்தா இடது கைப்பழக்கம் இருப்பவராக காட்டப்படுகிறது.. ஆனால் சிறு வயதில் அப்படி காட்டப்படவில்லை..

3. நந்தா ஷூட் பண்றப்ப ரிவால்வரை அவர் இடுப்பு மட்டத்தில் தான் சுடறார்.. குண்டும் அதே மட்டத்தில் தான் போகுது.. ஆனா குண்டு நின்று கொண்டிருக்கும் எதிராளியின் நெற்றியில் படுதே எப்படி?

4. ஜீவா நந்தாவை மிரட்ட தன் வலது கையில் ஒரு வெட்டு, இடது கையில் 2 இடங்களில் வெட்டு போட்டுக்கறார் கத்தில .... ரோட்ல அவரை விட்டுட்டு நந்தா போய் அரை மணி நேரம் கழிச்சு சந்தானம் & குரூப் ஓடி வர்றப்ப கொஞ்சம் கூட ரத்தம் லீக் ஆகாம அப்படியே இருக்கே?ஏன்? அந்த சீன்ல சந்தானம் ஏன் ஆட்டோல வராம அரை கி மீ ஓடியே வர்றார்?

5. நந்தா இரும்புக்கம்பியால் ஆட்கள் மேல் அடிக்கும்போது ஏன் இரும்புக்கேடயத்தில் படுவது போல் நங்க் நங்க் என்ற பின்னணி சத்தம்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtBAE4ZwezRMpy4TM8ahqjkjomlHtiRtJoKCoHDpKqCzKyZ_6xBod3J3OgPsFHv2zJKv5AfcT3PubgDxuORr7kv1UeKsqzjwkUF0-INo00ylSvhVJcp-d_9Uda1taU6NXqecVJvhZXWYg/s1600/tapsee_pannu+movie+hot+wallpapers.jpg
படம் ஏ பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  39

எதிர்பார்க்கப்படும்குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி மார்க் - 35

சி.பி கமெண்ட் - வந்தான் வென்றான் - நொந்தான் சென்றான் என்று சொல்ல வழி இல்லாமல் சந்தானம் காப்பாற்றுகிறார்

ஈரோடு ஆனூரில் இந்தப்படம் பார்த்தேன்...


டிஸ்கி - எங்கேயும் எப்போதும் - அசத்தலான திரைக்கதை யுக்தி + அஞ்சலியின் அழகு நடிப்பு -