Showing posts with label mnmalar. Show all posts
Showing posts with label mnmalar. Show all posts

Saturday, July 25, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24/7/ 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி  24/7/ 2015 ) 6 படங்கள் முன்னோட்ட  பார்வை

நன்றி - த இந்து , மாலைமலர் , ஆல் சினி வெப்சைட்

A village comedy film
1 நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்துவரும் படம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் 
படத்தின் பெயரிலிருந்தே இதுவொரு நகைச்சுவைப் படம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
எந்த குற்றமும் நடக்காத ஒரு கிராமத்தில் ஒரு காவல் நிலையமும், நாலு போலீசாரும் இருக்கிறார்கள். நாலில் ஒருவர் நாயகன் அருள்நிதி. எந்த குற்றமும் நடக்காத அந்த ஊரில் பிரச்சனை ஒன்று வரும்போது என்னாகிறது நிலைமை என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
அறிமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா எழுதி இயக்குகிறார். அருள்நிதியுடன் நடிப்பது ரம்யா நம்பீசன். இசையமைப்பாளர் ரஜின் என்ற புதுமுகம். சிங்கம்புலி, ராஜ்குமார் இவர்களுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பகவதி பெருமாளும் நடித்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் டைட்டில் டிசைனை வெளியிட்டனர். இந்த டிசைனே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.



C centre movie

3 குரு சுக்ரன்


குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குமுதவள்ளி ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘குரு சுக்ரன்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை செல்லத்துரையும், இசையை சந்தோஷ் சந்திரபோஸும் கவனிக்கிறார்கள். இந்தப் படத்தில் குரு, கமல்நாத் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகிகளாக திரிபுரா, சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ரவிராகுல், சிங்கமுத்து, சண்முகராஜன், ஆடுகளம் நரேன், அருள்மணி, சென்ராயன், சுதாசந்திரன், ஸ்ரீ ரஞ்சனி, கருத்தம்மா ராஜஸ்ரீ,அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.


இப்படத்தில் குரு, கமல்நாத் என்ற இரட்டையர்கள் அறிமுகமாகிறார்கள். சமீபத்தில் வில்லன் அருள்மணியுடன் குரு மோதும் சண்டைகாட்சி ஒன்று மீனம்பாக்கத்தில் உள்ள பின்னிமில்லில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. 48 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல் இந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாம். சினிமா அனுபவம் இல்லாத ஒரு புதுமுகம் 48 மணி நேரம் ஸ்டன்ட் காட்சியில் பங்குபெற்றது ஆச்சர்யமான விஷயம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்கள் இயக்குனர் ஆனந்தும் ஸ்டன்ட் இயக்குனர் மிரட்டல் செல்வாவும்.

A gilma film for c centre audience
4 காம பிசாசு





Action thriller
5 ANT MAN



ஸ்பைடர்மேன் , எக்ஸ்-மேன், அயன் மேன், சூப்பர் மேன் என ஹாலிவுட்டில் கில்லியாடிய மார்வெல் ஸ்டூடியோ, அடுத்ததாகக் கையில் எடுத்திருக்கும் படம் ஆன்ட்-மேன். எறும்பு மனிதனாக அரிதாரம் பூசி தீயவர்களை அழிக்கும் சூப்பர் ஹீரோவின் கதை இது. ஹாலிவுட் படங்களில் சாகசத்துக்கும் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது. ஆன்ட்-மேனில் கிராபிக்ஸ் காட்சி அமைப்புகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.
உலகை அழிக்கும் வில்லன்களைத் துவம்சம் செய்ய எறும்பு அவதாரம் எடுத்து உலகைக் காக்கிறார் நாயகன் பெளல் ரூட். எறும்பு உடையை அணிந்ததும் எறும்பு போலவே மாறி விடுகிறார் ஹீரோ ரூட். அதன் பின் நடக்கும் காட்சிகள் எல்லாம் அதிரி புதிரியாக திரையில் விரிகிறது.
நிஜ எறும்பு போலவே மாறி யானை சைஸ் வில்லன்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சாய்க்கிறார் எறும்பு ஹீரோ. எறும்பு புற்றில் குதித்து ஆயிரக்கணக்கான எறும்புகளுடன் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து எறும்பு மனிதன் ஓடும் காட்சியில் கிராபிக்ஸ் மிரட்டல் ரகமாக உள்ளது.
எறும்பு மனிதனை அழிக்க, வித்தியாசமான உருவத்தில் வில்லனைக் களமிறக்கிச் சண்டை போட வைத்திருக்கும் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சம். இதுவரை ஹாலிவுட் படங்களில் உலகை அழிக்க வரும் வில்லன்களை அழிக்க விதவிதமான உருவத்தில் வந்து வெற்றி கொள்ளும் சூப்பர் ஹீரோ கதைகள் வரிசையில், ஆன்ட்-மேன் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
காட்சி அமைப்பில் படத்தின் இயக்குநர் பீட்டன் ரீட்டின் உழைப்பு தெரிகிறது. ‘நான் ஈ’ படம் பார்த்த வியந்த தமிழ் ரசிகர்களுக்கு ஆன்ட்-மேன் இன்னொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம். குறிப்பாகக் குழந்தைகளை மிகவும் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.
படத்தின் ட்ரெய்லருக்கே அமெரிக்காவில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியாவில் மட்டும் இப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாகிவிட்டது. அமெரிக்காவின் பிற பகுதிகள் உள்பட உலகெங்கும் ஜூலை 14-ம் தேதி முதல் வெளியாக உள்ளது. இந்தியாவில் ஜூலை 17-ம் தேதி வெளியாகிறது.

A neet ghost story
2 ஆவி குமார்





"ஆவி குமார்'

ஆவி இருப்பது உண்மையா? பொய்யா? அப்படியிருந்தால் அது நல்லது செய்யுமா? கெட்டது செய்யுமா? இப்படியொரு கருவை மையமாக வைத்து "ஆவி குமார்' என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் உதயா, நாசர், ஜெகன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் முனீஸ்காந்த், பாவா லட்சுமணன், ஷெரபுதீன் ஷா, அஃப்ஸல், கனிகா திவாரி, தேவதர்ஷினி, புனிதா சண்முகம், அக்னீஸ் ஷோங்கர், ஸ்ருதி ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு விஜய் ஆண்டனி - ஸ்ரீகாந்த் தேவா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு, ராஜேஷ் கே.நாராயணன். கதை, திரைக்கதை, வசனத்தை தாய்முத்துச்செல்வம் எழுத, படத்தை இயக்கியிருக்கிறார் கே.காண்டீபன். முழுக்க முழுக்க மலேசியாவிலேயே எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை "ஆக்ஷன் டேக் மூவிஸ்' படநிறுவனம் சார்பில் நாராயணன், எஸ்.சிவசரவணன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.



























Friday, July 10, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10/7/ 2015 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1 பாகுபலி
2 ஒரே ஒரு ராஜா மொக்கராஜா
3 மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
4 மகாராணி கோட்டை
5 காமராஜர்
6 காக்கம்மா # 10/7/15

Challenge to tiger
1 பாகுபலி


நான் ஈ வெற்றிப் படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கியுள்ள படம் பாகுபலி. சுமார் 250 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ், தமனா, அனுஷ்கா, நாசர் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. இந்நிலையில் பாகுபலி தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் இப்படம் வெளியாகும் எல்லாத் திரையரங்குகளிலும் ஒருவாரத்திற்கான டிக்கெட்டுகள் 90% முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. எல்லா திரையரங்குகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பால் டிக்கெட்டுகள் விலையும் வழக்கத்தை விட 30 சதவீதம் உயர்த்தியே விற்கப்படுகிறதாம்.
A mokka film to c centre audience
2 ஒரே ஒரு ராஜா மொக்கராஜா


தேவ கலா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் உல்லாஸ் கிளி கொல்லூர் டி.சுரேஷ் தயாரிக்கும் படம் ‘‘ஒரே ஒரு ராஜா மொக்கராஜா’’. இதில் நாயகனாக சஞ்சீவ் முரளி அறிமுகமாகிறார். நாயகிகளாக ஸ்ரீரக்ஷா, அஸ்வினி நடிக்கின்றனர். 

முக்கிய வேடத்தில் ரஞ்சித் வருகிறார். வில்லனாக சாகர் அறிமுகமாகிறார். தலைவாசல் விஜய், வனிதா, பாலாசிங், நான்கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி, விஜய்கணேஷ், நெல்லை சிவா, வெங்கட்ராவ், சிவநாராயண மூர்த்தி, சிசர் மனோகர், இந்திரன், அம்பிகா மோகன், எம்.ஆர்.கோபகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி சந்தோஷ் கோபால் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். 

வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் இளைஞன் ஊரில் தாதாவாகத் திரியும் வில்லனுடன் நட்பு பாராட்ட நினைக்கிறான். அதனால் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்து ஏற்படும் என்று நினைக்கிறான். கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போன்று அவன் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. 

கமர்ஷியலாக தயாராகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஒளிப்பதிவு: அய்யப்பன், இசை: அமன்பிச்சு, பாடல்: ஏகாதசி, எடிட்டிங்: சாஜன், நடனம்: சாந்தகுமார், ஸ்டண்ட்: ரன்ரவி, வசனம்: பொன்.பிரகாஷ், கதை: வினோத்லால்.

Mokka comedy film for c centre audience
3 மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க



 
தற்போது தமிழில் தயாராகி வரும் ஒரு படத்தின் பெயர், மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க.
 
படத்தை இயக்கும் தஞ்சை கே.சரவணன் படத்தைக் குறித்து என்ன சொல்கிறார் கேட்போம்.
 
இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக நான் பணியாற்றியதில்லை. சினிமா மீதான ஆர்வத்தால் இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பு, இசை ஆகிய பொறுப்பையும் நானே ஏற்றிருக்கிறேன். சுரேஷ்குமார் ஹீரோ. அஷதா ஹீரோயின். இவர்கள் தவிர பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர்இ கொட்டாச்சிஇ பிளாக் பாண்டிஇ குள்ள சங்கர்இ டி.பி.கஜேந்திரன், போண்டா மணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ, சுரேகா, கோவை பானு என 13 காமெடி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். 
 
ஆர்.எச்.அசோக் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் படத்தில் இருக்காது. கமர்ஷியல் என்ற போர்வையில் கிளாமரும் புகுத்தவில்லை. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
Horror movie Telugu dubbed
4 மகாராணி கோட்டை


தன மலர் கிரியேஷன்ஸ் சார்பில் மலர் சுப்பிரமணியம் தயாரிக்கும் படம் மகாராணி கோட்டை. இதில் ரிச்சர்டு பவர் ஸ்டார் சீனிவாசன், செந்தில், சங்கர்கணேஷ், கிங்காங், நெல்லை சிவா, கும்கிஅஸ்வின், கஞ்சா கருப்பு, வேல்முருகன், வையாபுரி, ஆகியோர் நடிக்கின்றனர். நாயகிகளாக ஹனி பிரின்ஸ், அஸ்வினி, நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி வினோத்குமார் இயக்கியுள்ளார்.

ஒரு கிராமத்து வீட்டில் திகிலான சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் அங்கு வசிப்பவர்கள் எத்தகைய பிரச்சினைகளில் சிக்குகிறார்கள் என்பது கதை. மர்மம், சஸ்பென்சும் இருக்கும்.

தூத்துக்குடி அருகே உள்ள கடல் பகுதியில் கப்பல் ஒன்றில் பரபரப்பூட்டும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, கேரளா, ஆந்திரா, பெங்களூர், பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இசை: யு.கே. முரளி, எடிட்டிங்: டான்பாஸ்கோ.
History of tamilnadu leader the great kamarajar

5 காமராஜர்


மறக்க முடியாத படம், சமுத்திரக்கனி கண்ணீர்
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2004ல் வெளியான திரைப்படம் காமராஜர். பத்தாண்டுகள் கழித்து டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகி மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது.
இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள காமராஜர் திரைப்படத்தில் காமராஜராக பிரதீப் மதுரம் மற்றும் சமுத்திரக்கனி, சாருஹாசன், வி.எஸ்.ராகவன், காந்தி கனகராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காமராஜரின் 112வது பிறந்த தினத்திற்காக ஜூலை 10ம் தேதி இந்தியளவில் வெளியாகவிருக்கிறது. இதற்கான டீஸர் வெளியீட்டு விழா நடந்தது. 

விழாவில் கலந்துகொண்டு சமுத்திரக்கனி பேசும் போது, “ நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்கையைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை இந்தப் படத்தை பள்ளிக்குழந்தைகள் பார்க்கவேண்டும்.  எதிர்காலத்தில் காமராஜர் போல் யாராவது வர மாட்டார்களா என்ற  ஏக்கம் எனக்கு  இருக்கிறது. இந்தப் படத்தில் நான் நடித்த போது, காமராஜரைப் பற்றிக் கேள்வி பட்ட விஷயங்கள் எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படம்” என்றார்.

இந்த திரைப்படம் உருவாக மூப்பனார் அவர்களும் ஜி.கே.வாசன் இருவரும் உதவியாக இருந்தார்கள். இப்போது காமராஜர் பேரைச் சொல்லி அரசியல் செய்கிறவர்களின் ஆதரவு சுத்தமாகக் கிடைக்க வில்லை. அப்படி அவர்களது ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இந்த படம் முழுமையாக மக்களிடம் சென்றடையும் என்று ஆதங்கத்துடன் கூறினார் படத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணன்.


Gilma film for b ,c centre audience
6 காத்தம்மா


பிரபல ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார் இயக்கும் படம் ‘காத்தம்மா’. இந்த படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார்.
மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜில்லன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.சுகுமாரே ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். M.D.சுகுமார் மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏறக்குறைய ஐம்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
நமது பெரும்பாலான படங்களில் பாதிக்கப் பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து காரணமானவர்களை கொள்வது, பழிவாங்குவது தான் கதைகளாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணான ”காத்தம்மா“ எப்படி பழிவாங்கினால் என்பது கதையாக்கப்பட்டுள்ளது.
இந்த கதைக்காக புதுமுகமான ஆதிரா பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார் படுத்திக் கொண்டார், அதன் பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்தார். இந்த படத்தின் கதை எல்லோராலும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றார்.


நன்றி - மாலைமலர் , தினமணி , விகடன் மற்றும் ஆல் சினி வெப்சைட்ஸ்

Friday, July 03, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 3/7/ 2015 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1 பாபநாசம்
2 பாலக்காட்டு மாதவன்
3 ஒரு தோழன் ஒரு தோழி
4 பரஞ்சோதி’
5  பேபி
6 THE TERMINATOR  # 3/7/15


1 பாபநாசம்

தமிழ் திரையுலகில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆகும். இப்படத்தின் நடிகர் நடிகையாக கமல் ஹாசன் மற்றும் கௌதமி தடிமல்லா நடித்துள்ளனர். இப்படம் 2013-ம் ஆண்டு வெளியான மோகன் லாலின் திரிஷ்யம் என்ற மலையாள படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசெப்.
A family entertainer
Embedded image permalink
கமல் நடிப்பில் தயாராகியுள்ள பாபநாசம் படம் வருகிற 3ம் தேதி வெளியீடு என்று நேற்று முன்தினம் அறிவித்தனர். இன்றைய நாளிதழில் கூட இன்று முதல் Reservation என்று இருந்தது, ஆனால் திடிரென்று திரையரங்கு உரிமையாளர்கள் Reservationனை நிறுத்தி விட்டனர்.
ஏனெனில் "உத்தமவில்லன் ரிலீஸ் நேரத்தில் லிங்குசாமியின் கடன் பிரச்சனை குறுக்கே வந்தது. வெளிநாட்டில் இருந்த கமல், அவசரமாக சென்னை வந்தார். வந்த வேகத்தில் தனது சம்பளம் இல்லாமல் தானே ஹீரோவாக நடித்து 30 கோடி ரூபாயில் லிங்குசாமிக்கு ஒரு படத்தை உருவாக்கி தரவும் சம்மதித்தார்.
ஆனால் இன்று வரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடவில்லை கமல். இதனால் தான் பாபநாசம் படத்தை தடை போட்டு உள்ளனர் விநியோகஸ்தர்கள்.
படம் வெளிவருமா, வராதா என்று இன்றுதெரியும் என்கிறாகள் கோடம்பாக்கம் புள்ளிகள்.
A comedy film by vivek for b &c centre audience
2  
 பாலக்காட்டு மாதவன்
நான் தான் பாலா படத்தை தொடர்ந்து விவேக் நாயகனாக நடிக்கும் படம் பாலக்காட்டு மாதவன்.
அறிமுக இயக்குனர் சந்திரமோகன் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருக்க, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, ஆர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
காமெடி படம் என்றாலும் இப்படத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறாராம் சந்திரமோகன். தற்போது பாலக்காட்டு மாதவன் படம் வருகிற 26ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Melo drama movie for c centre audience
3 ஒரு தோழன் ஒரு தோழி


அறிமுக நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களோடு அவ்வபோது தமிழ் சினிமாவில்  வெளியாகும் சில எளிமையான திரைப்படங்கள், ரசிகர்களின் புருவத்தை உயர்த்தச் செய்யும். அப்படி ஒரு படம் தான் 'ஒரு தோழன் ஒரு தோழி'.
தொழிற்சாலை ஒன்றில் வாரக் கூலி வேலை செய்கிறார்கள் நாயகர்கள் மீனேஷ் கிருஷ்ணா மற்றும் மனோ தீபன். இதில், மனோ தீபன் நாயகி அஸ்த்ராவை காதலிக்கிறார். மனோ தீபனின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டாலும், தனது ஏழ்மையான நிலைமையை நினைத்து காதலை தவிர்க்கும் அஸ்த்ரா, ஒரு கட்டத்தில் தனது கல்லூரி படிப்பு முடிந்து, தான் ஒரு வேளையில் சேர்ந்த பிறகே கல்யாணம், என்ற நிபந்தனையுடன் ஹீரோவின் காதலை ஏற்றுக்கொள்கிறார்.
இவர்களுடைய காதலுக்கு தூது செல்லும் மற்றொரு ஹீரோவான முரட்டு குணம் படைத்த  மீனேஷ் கிருஷ்ணாவும் தனது மாமன் பெண்ணான அபிநிதாவை காதலிக்கிறார்.
இந்த நிலையில், அஸ்த்ரா படிப்புக்காக வட்டிக்கு வாங்கிய பணத்திற்கு ஈடாக அவரையே  அடைய நினைக்கும் வில்லன், நாயகன் - நாயகி காதலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். இவரால் தான் பிரச்சினை வரும் என்று எதிர்ப்பார்க்க, யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில்,செல்போன் மூலமாக நாயகிக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அது என்ன பிரச்சினை, அதன் மூலம் இவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? என்பது தான் க்ளைமாக்ஸ்.
தென் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பலமே அதன் எளிமை தான். அதேபோல, படத்தில் நடித்த நடிகர்களும் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைவரும் மேக்கப் இன்றி நடித்துள்ளார்கள்.
குறிப்பாக, ஏழை வீட்டு பெண் என்று கூறிவிட்டு, நல்லா பளபளக்குற பெண்ணை நாயகியாக நடிக்க வைக்காமல், எளிமையான ஒரு அழகோடு உள்ள ஒரு பெண்ணை நாயகியாக்கிய  இயக்குனருக்கு ஆயிரம் அப்ளாஸ் கொடுக்கலாம்.
ஒளிப்பதிவாளர் சிவன்குமார் மற்றும் இசையமைப்பாளர் கே.ஜெயக்ரிஷ் ஆகியோரது பணி பிரம்மாண்டமான முறையில் தனித்துவத்தோடு இல்லை என்றாலும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு தடை ஏதும் ஏற்படுத்தாமல் பயணித்துள்ளது.
காதல், நட்பு என்று நாம் பலமுறை பார்த்த பாணியில் பயணிக்கும் படம் இரண்டாம் பாதியில் வேறு ஒரு களத்தில் நகர்ந்து, படத்துடன் நம்மை ஒன்றிவிடச் செய்கிறது.
மக்களின் தேவைக்காக கண்டுபிடிக்கப்படும் சில தொழில்நுட்பங்கள் எப்படி தவறாக பயன்படுத்தபப்டுகிறது என்றும், அதனால் சில அப்பாவி மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், ஒரு திரைப்படமாக பொழுபோக்கு அம்சத்துடன் படமாக்கியிருக்கும் இயக்குனர் பி.மோகன், அதே சமயம், எதார்த்ததன்மையை மீறாமலும் செயல்பட்டுள்ளார்.
இறுதியில் பாதிக்கப்பட்ட நாயகிக்காக ஹீரோக்கள் பழிவாங்கும் முறை, "பழைய குருடி கதவை திறடி" என்றாகிவிடுகிறது. இப்படி ஒரு படத்திற்கு சற்று மாறுபட்ட முடிவை வைத்திருந்தால், தமிழ் சினிமாவில் தாக்கத்தை எற்படுத்திய சில படங்களின் வரிசையில் இப்படமும் முக்கிய இடத்தில் இடம்பெற்றிருக்கும்.
இருப்பினும், 'ஒரு தோழன் ஒரு தோழி' யதார்த்தத்தை விரும்பும் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.
ஜெ.சுகுமார்.

http://tamil.chennaionline.com/cinema/movie-reviews/newsitem.aspx?NEWSID=52ad3b94-7101-413f-8cb1-d60436086f08&CATEGORYNAME=Rview

Violence movie for c centre audience
Embedded image permalink

4 பரஞ்சோதி’

தமிழ் சினிமாவில் ஷங்கர் மட்டும் பிரமாண்ட இயக்குநராக இருந்த நிலையில், தற்போது வரும் புதுமுக இயக்குநர்கள் கதைக்கு தேவைப்பட்டால், ஷங்கரை விடவும் பிரமாண்டத்தை காட்டிவிடுகிறார்கள். அந்த வகையில், 'பரஞ்சோதி' என்ற படத்திற்காக இயக்குநர் கோபு பாலாஜி, 100 ஏக்கரில் கிராமம் ஒன்றையே உருவாக்கி, அதில் நிஜமாகவே விவசாயத்தையும் செய்திருக்கிறார்.

ஐ.பி.எல் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் 'பரஞ்சோதி' படம், கதலிக்கிறது தப்பா? மனித சமுதாயம் காதலை கெளரவப்படுத்தாமல் கலவரப்படுத்துகிறதே ஏன்? என்ற கேள்விகளை முன்வைத்து உருவாகும் படமாகும்.

'பரஞ்சோதி' என்கிற ஒரு கிராமத்து இளைஞனின் சுயசரிதை தான் இப்படத்திக் கதை. "கிராமத்து காதல் படமாக உருவாகும் இப்படம் காதலை எதிர்ப்பவர்களுக்கு பாடம்" என்கிறார் இப்படத்தின் இயக்குநர் கோபு பாலாஜி.

1990ஆம் ஆண்டு நடக்கும் கதையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால், சிதம்பரம் அருகே 100 ஏக்கர் நிலத்தில், ஒரு பழைய கிராமத்தையே உருவாக்கியுள்ளார்கள். மேலும் களத்துமேடு, இஞ்ஜின் கொட்டகை, மெகா சைஸ் வைக்கோல் போர், செம்மண் ரோடு என்று அதனுல் விவசாய இடத்தையும் செட் அமைத்து, அதில் 3 மாத காலம் படப்பிடிப்பிற்காக நிஜமாகவே விவசாயமும் செய்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ஹீரோவாக சாரதி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 'கிழக்குச் சீமையிலே' விஜயகுமார் மாதிரி பாசமுள்ள தாய்மாமனாக கஞ்சா கருப்பு நடிக்கிறார். 'பிதாமகன்' விகரம் கெட்டப்பில் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட் நடிக்கிறார். ஹீரோயினாக அன்சிபா நடிக்கிறார். இவர்களுடன் நாட்டு நாய் ஒன்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. 10 நாட்கள், 1 மாதம், 2 மாதம் இறுதியில் 14 வருடம் வளர்ச்சி என்று அந்த நாயை காண்பிடித்துள்ளார்கள். அதற்காக ஒரே சாயலில் உள்ள 4 நாய்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோபு பாலாஜி இயக்குகிறார். சபேஷ்-முரளி இசையமைக்க, எஸ்.சந்திரசேகரன் ஒளிப்பதிவு செய்கிறார். சுதாகர் படத்தொகுப்பு செய்ய, ஸ்பீடு சையத் சண்டைப் பயிற்சியளிக்கிறார். வினோத் கலை துறையை கவனிக்க, ஏ.ஆர்.சந்திரமோகன் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

என்.கோபலகிருஷ்ணன், என்.தமிழ்ச்செல்வன், என்.மணிகண்டன் ஆகியோரின் இணைத் தயாரிப்பில், என்.லட்சுமணன் 'பரஞ்சோதி' படத்தை தயாரிக்கிறார்.
Ghost thriller for b &c centre audience

5  பேபி


6 THE TERMINATOR 

Action chasing thriller by Arnold Schwarzenegger

Friday, June 26, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26/6/ 2015 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை


1 இன்று நேற்று நாளை
2 காவல்
3 யாகாவாராயினும் நா காக்க
4 லொடுக்கு பாண்டி
6 DEMONIC (டெமானிக்)
5 மூணே மூணு வார்த்தை
7 INSIDIOUS-3 #26/6/15



Science fiction film

1 இன்று நேற்று நாளை


மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சகமான படங்களையும், சிறந்த கதை களம் உள்ள வெற்றி படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமாரின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்”.  அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் புதிய கதை களத்துடன் தயாரித்துள்ள படம் தான் “இன்று நேற்று நாளை”.
சொந்த தொழில் தான் செய்வேன் எவன் கிட்டயும் கைகட்டி வேலை செய்யமாட்டேன் என்ற கொள்கையில் வாழும் இளங்கோ கேரக்டரில் விஷ்ணுவும், அரைகுறை ஜோதிடனாக பிழைப்பு நடத்தும் புலிவெட்டி ஆறுமுகம் கேரக்டரில் கருணாகரன். இவர்கள் இருவரும் தங்கள் கையில் கிடைக்கும் டைம் மிஷினை வைத்துக்கொண்டு ஏற்படுத்தும் பிரச்சனையை அதே டைம் மிஷின் உதவியோடு தீர்ப்பதே “இன்று நேற்று நாளை” படத்தின் கதை. ‘விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். இப்படத்தை ரவி இயக்கி வருகிறார். ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இசையமைத்து வருகிறார். வசந்த் ஒளிப்பதிவை செய்கிறார். இப்படத்தின் இசை வெளியிடு இந்த மாதம் (ஜீன்) 12 அன்று நடைபெறவுள்ளது

Action film
2 காவல்



ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தைத் தொடர்ந்து தற்போது விமல் கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றன. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவான ‘ரெண்டாவது படம்’ மற்றும் பசுபதியுடன் விமல் இணைந்து நடித்திருக்கும் ‘அஞ்சல’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர ‘நீயெல்லாம் நல்லா வருவடா’, ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஆகிய படங்களிலும் விமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


எஸ்.ஜி. ஃபிலிம்ஸ் நிறுவனமும், கிளாப் சினிமாவும் இணைந்து உருவாக்கிவரும் ‘நீயெல்லாம் நல்ல வருவடா’ படத்தின் தலைப்பை தற்போது ‘காவல்’ என மாற்றி வைத்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி போலீஸாக நடிக்கும் இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். மேலும் கீதா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி உட்பட பல நட்சதிரங்கள் நடிக்கும் இப்படத்தை நாகேந்திரன் இயக்குகிறார். வித்தியாசமாக உருவாகிவரும் இந்த ஆக்ஷன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஏப்ரலில் பாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது..


எஸ்.ஜி.பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘காவல்’. விமல் நாயகனாகவும், மலேசியாவைச் சேர்ந்த ‘புன்னகை பூ’ கீதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, தேவா, பார்பி ஹண்டா, பாஸ்கர், இமான் அண்ணாச்சி, நமோ நாராயணன், சிங்கமுத்து ஆகியோரும் உள்ளனர்.
நாகேந்திரன் இயக்கியுள்ளார். முதலில் இதற்கு ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என பெயரிட்டு இருந்தனர். அந்த தலைப்பிலேயே படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது. பின்னர் காவல்துறை அதிகாரிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்குப் படத்தின் சிறப்புக் காட்சி திரையிட்டுக் காட்டப்பட்டது.
படம் பார்த்த எல்லோரும் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினர். தலைப்பை மாற்றிவிட்டு வேறு பொருத்தமான தலைப்பு வைக்க அறிவுறுத்தினராம். பல தரப்பில் ஆலோசித்து இறுதியில் ‘காவல்’ என பெயரிடப்பட்டு திரை காண்கிறது. இது காதல், சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் என்கிறார் நாகேந்திரன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

Crime thriller
3 யாகாவாராயினும் நா காக்க


மிருகம், ஈரம், அரவான் படங்களின் கதாநாயகன் ஆதி, டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘யாகாவாராயினும் நா காக்க’.


இந்த படம் நாளை மறுநாள்(26–ந் தேதி) ரிலீசாகிறது. இதையொட்டி ஆதி, நிக்கி கல்ராணி ஆகியோர் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆதி கூறியதாவது:–



2000–ம் ஆண்டில் இருந்து 2001–ம் ஆண்டு பிறக்க இருந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 4 நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் தான் கதை.



டைரக்டர் சத்யபிரபாஸ் எனது அண்ணன். சிறு வயதில் இருந்தே என்னைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் மட்டும் நடித்தேன். எனது தந்தை இப்படத்தை தயாரித்துள்ளார். எங்களது சொந்த படம் என்பதால் கடுமையாக உழைத்திருக்கிறேன். காமெடி, காதல், ஆக்சன், திரில்லர் கலந்து படமாக உருவாகி உள்ளது.



3 முறை தேசிய விருது பெற்றுள்ள இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, நாசர், கிட்டி, பசுபதி என மூத்த நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரிச்சா பல்லோட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தில் ஒரு பாடலை நான் பாடி உள்ளேன்.



எல்லா கதாநாயகர்களும் பாடுகிறார்கள் என்பதற்காக நான் பாடவில்லை. காதலி மீதான ஆதங்கத்தில் பாடும் பாடல் என்பதால் நானே பாடினால் நன்றாக இருக்கும் என்பதால் பாடினேன். இந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்றார்.



நிக்கி கல்ராணி கூறியதாவது:–



தமிழில் நான் நடித்த முதல் படம் இதுதான். ஆனால் ‘டார்லிங்’ படம் முதலில் வெளியாகி விட்டது. டார்லிங் எனக்கு பெயர் வாங்கித் தந்ததை போலவே இந்த படமும் நல்ல பெயரை பெற்றுத் தரும். இப்படத்தின் எனது கதாபாத்திரம் எனது நிஜ கேரக்டரை போலவே இருந்தது.



ஆனால் ஒரு காட்சியில் நான் டாஸ்மாக் பாருக்கு செல்வது போல இருக்கும். கதைக்கு தேவைப்பட்டதால் மட்டும் இந்த காட்சியில் நடித்தேன். நிஜத்தில் நான் எந்த பாருக்கும் செல்ல மாட்டேன் என்றார்.


Mokkai comedy film
4 லொடுக்கு பாண்டி


வி விக்டரி கிரியேசன்ஸ் – ஜி பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “லொடுக்கு பாண்டி”.
இந்தப் படத்தில் கருணாஸ் நாயகனாக நடிக்கிறார். கருணாஸ் அறிமுகமான நந்தா படத்தில் அவரது கேரக்டரான லொடுக்கு பாண்டி என்ற காதாப்பாத்திரப் பெயரையே இந்த படத்திற்கு சூட்டி காமெடி படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர். கருணாஸ் ஜோடியாக நேகா சக்சேனா நடிக்கிறார். மற்றும் இளவரசு, மனோபாலா, சென்ட்ராயன், ரிஷா, ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரஜனீஷ் இதனை இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் ரஜனீஷிடம் கேட்டோம்... அடுத்தவர்களை ஏமாற்றுவது, இன்னொருவரது வாழ்கையை தட்டி பறிப்பது என்று திருட்டு வாழ்க்கை வாழ்வதை விட்டு நேர்மையாக வாழ்ந்தால் வெற்றியின் உச்சத்தை தொடலாம். நேர்மையில்லாமல் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானதே! நிரந்தரமல்ல. என்கிற கருத்தை படு சுவாரஸ்மாக, காமெடியாக உருவாக்கி உள்ளோம்.
படத்திற்காக பதினைந்து லட்சம் செலவில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது “ லொடுக்கு பாண்டி” என்றார் இயக்குனர் ரஜனீஷ். ஜெய்ஆனந்த் ஒளிப்பதிவை கவனிக்க படத்துக்கு இசையமைக்கிறார் எம்.எஸ்.தியாகராஜன்.


5 மூணே மூணு வார்த்தை


எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூணே மூணு வார்த்தை படத்தில் நடித்துள்ளார். நடிப்பதற்கான வாய்ப்புகளை மறுத்து வந்தவர், இந்தப் படத்தில் நடிக்க இரண்டு காரணங்கள். ஒன்று படத்தின் கதை. இன்னொன்று படத்தை தயாரித்திருப்பது எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி.சரணின் கேப்பிடல் ஃபிலிம்ஸ் வொர்க்ஸ்.
மூணே மூணு வார்த்தையில் எப்படி கமிட்டானீங்க?
இந்தப் படத்தில் நான் முதலில் நடிப்பதாக இல்லை. நானும் லட்சுமியும் நடித்த மிதுனம் தெலுங்குப் படத்தைப் பார்த்த இயக்குனர் மதுமிதா, வயதான மூத்த தம்பதியர் கதாபாத்திரத்தில் நடித்தே ஆகணும் என்று கேட்டார். அப்படிதான் இந்தப் படத்தில் நடித்தேன்.
கதையில் உங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டதா?
ஆரம்பத்தில் நாயகன் அர்ஜுனின் பெற்றேnராக இருந்த கதாபாத்திரத்தை எங்களுக்காக தாத்தா, பாட்டி என்று மாற்றியமைத்தார் மதுமிதா. 
இயக்குனர் மதுமிதா பற்றி...?
ரொம்பவும் திறமைசாலி. எப்படி ஒரு நடிகரிடம் வேலை வாங்குவது என்பதை நன்றாக தெரிந்தவர். 
படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
இந்தப் படத்தில் நடித்தது நல்ல புதிய அனுபவமாக இருந்தது. இக்கால தலைமுறையினரிடமிருந்து பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிற வாய்ப்பாகவும் அமைந்தது. 
படத்தை முழுமையாக பார்த்தீர்களா?
நான் நடித்த போர்ஷனை மட்டும் டப்பிங்கில் பார்த்தேன். நல்ல திறமையான இளைஞர்கள். நல்ல படத்தை எடுத்திருக்காங்க. இனிமேல்தான் படத்தை முழுமையாக பார்க்கணும்.
படத்தில் அறிமுக இசையமைப்பாளரை பயன்படுத்தியிருக்கிறார்களே?
அறிமுக இசையமைப்பாளர் கார்த்திகேயமூர்த்தி தனது இசையால் இந்தப் படத்துக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார். இவர் பழம்பெரும் மிருதங்கக் கலைஞர் மூர்த்தியின் பேரன் என்பது எனக்கு பிறகுதான் தெரியும்.
நீங்கள் பாடியிருக்கிறீர்களா?
வாழும் நாள் என்ற பாடலை இந்தப் படத்தக்காக பாடியிருக்கிறேன். கார்த்திகேயமூர்த்தி இசையில் அந்த வரிகளைப் பாடும்பொழுது என் கண்கள் கலங்கியது. 
படத்தை தயாரித்திருக்கும் உங்கள் மகன் எஸ்.பி.பி.சரணைப் பற்றி...?
பல இளைஞர்களின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கும்ரிஎஸ்.பி.பி.சரண் என் மகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
படத்தைப் பற்றி மூணே மூணு வார்த்தையில்...?
இப்போது தமிழில் வரும் கமர்ஷியல் படங்களில் இது வித்தியாசமான முயற்சி. மூணே மூணு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு ஹைக்கூ கவிதை.


6 DEMONIC (டெமானிக்)


A police officer and a psychologist investigate the deaths of five people who were killed while trying to summon ghosts.

In Louisianna,Detective Mark Lewis is summoned to attend a call from the notorious Livingston House and he finds three bodies and one survivor, John, who is in shock. He calls for backup and also the police psychologist Dr. Elizabeth Klein to interrogate John. They learn that the team of ghost-busters Bryan, John's pregnant girlfriend Michelle, Jules, Donnie and Sam decided to perform a séance in the house, where the owner Marta Livingstone had committed a violent slaughter, to summon their spirits. The séance went wrong and released evil spirits that killed Jules, Donnie and Sam; however Michelle and Bryan are missing. While Elizabeth interrogates John, Mark and the technical team tries to retrieve the hard disks with the footages from the house to find where the other two survivors may be, Detective Lewis discloses a dark supernatural secret about John


7 INSIDIOUS-3

A prequel set before the haunting of the Lambert family that reveals how gifted psychic Elise Rainier reluctantly agrees to use her ability to contact the dead in order to help a teenage girl who has been targeted by a dangerous supernatural entity.

After trying to connect with her dead mother, teenager Quinn Brenner, ask physic Elise Rainier to help her, she refuses due to negotiate events in her childhood. Quinn starts noticing paranormal events happen in her house. After a vicious attack from a demon her father goes back and begs Elise Rainier to use her abilities to contact the other side in hope to stop these attacks by this furious demon content for a body.


thanx - dinamani   web thuniyaa all web sites, maalaimalar