Showing posts with label case. Show all posts
Showing posts with label case. Show all posts

Thursday, January 24, 2013

கோர்ட்டில் கமல் அவசர வழக்கு, இன்றே ரிசல்ட் தெரியும் - கமல் பேட்டி

http://www.teluguone.com/tmdbuserfiles/kamal-hassan-andrea-stills.jpgகமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் நாளை (25-ந்தேதி) வெளியாக இருந்தது. இப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படத்தை ரிலீஸ் செய்ய இரண்டு வாரத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.
 
இந்த தடை உத்தரவை நீக்க கோரி கமல் சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க வேண்டும் என்று கமல் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டார்.
 
இதனை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இன்று பிற்பகல் நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.


கமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' ரூ.90 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கதாநாயகிகளாக பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். '3 டி ஆரவ்' ஒலி தொழில் நுட்பம் இதில் புகுத்தப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
 
கடந்த 11-ந்தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டார். 10-ந்தேதி டி.டி.எச்.களிலும் ஒளிபரப்பாக இருந்தது. டி.டி.எச்.சில் பார்க்க ஒரு இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் வசூலித்தனர்.
 
டி.டி.எச்.களில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்த்ததால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. பின்னர் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கமலுக்கும் பேச்சுவார்த்தை நடந்து.
 
அதில் ஜனவரி 25-ந்தேதி ரிலீஸ் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. 500 தியேட்டர்களில் படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது.
 
இரு தினங்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு துவங்கியது. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதையடுத்து முஸ்லீம் இயக்கத்தினருக்கு படத்தை கடந்த 21-ந்தேதி கமல் திரையிட்டு காட்டினார். படத்தில் முஸ்லீம்கள் பற்றியும், அவர்களின் தொழுகை முறைபற்றியும் தவறாக சித்தரித்து இருப்பதாக இஸ்லாமிய தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
 
விஸ்வரூபம் படத்தில் பின்லேடனுக்கு அடுத்து தலைவராக உள்ள அல்கொய்தா தீவிரவாதி முல்லா உமர் கோவை மற்றும் மதுரையில் தலைமறைவாக இருந்ததாக காட்சி இருப்பதையும் எதிர்த்தனர்.
 
'விஸ்வரூபம்' படத்தை திரையிடக்கூடாது என்று போலீஸ் கமிஷனரிடம் முஸ்லீம் அமைப்பினர் மனு அளித்தனர். படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.
 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகம் எதிரில் இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தி கமலின் கொடும்பாவியை எரிக்க முற்பட்டனர்.
 
இதையடுத்து சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிட 2 வாரங்களுக்கு தடை விதித்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் படத்துக்கு 2 வாரம் போலீசார் தடை விதித்தனர்.
 
இதுபோல் ஊர்வலம் போராட்டங்கள் நடத்த தடை விதித்து தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
 
இது குறித்து சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது 'விஸ்வரூபம்' படத்தை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார்.
 
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது போலீஸ் தடை உத்தரவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் 'விஸ்வரூபம்' படத்தை தியேட்டர்களில் இரண்டு வாரத்துக்கு திரையிடமாட்டோம் என்றார்.
 
கமல் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு இன்று 'விஸ்வரூபம்' படத்தை திரையிட்டு காட்டுகிறார். தமிழகத்தில் படத்துக்கு தடை விதிக்கப்பட்ட தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதையடுத்து அவர் அவசரமாக சென்னை திரும்புகிறார். மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடி படத்தை நாளை திரையிடலாமா அல்லது நிறுத்தி விடலாமா என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கிறார்.
 
வேறு மாநிலங்களில் படத்தை திரையிட்டால் தமிழகத்துக்கு திருட்டு வி.சி.டி. வந்து விடும் என அஞ்சப்படுகிறது. எனவே படத்தை 2 வாரங்களுக்கு திரையிடாமல் கமலஹாசன் நிறுத்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி - மாலை மலர் 
 
 

Kamal Haasan Talks About Vishwaroopam Being Banned

 



a



disci - தடை விதித்த தமிழக அரசுக்கு கமல் பதிலடி , மக்கள் அதிரடிhttp://www.adrasaka.com/2013/01/blog-post_294.html

Wednesday, January 23, 2013

கே பாக்யராஜ் VS சந்தானம் - ஜெயிக்கப்போவது யாரு?

லட்டு யாருக்குச் சொந்தம்?

வெடிக்கும் பாக்யராஜ்... துடிக்கும் ராம நாராயணன்...
பொங்கலுக்கு வந்த படங்களில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வசூலை வாரிக் குவிக்கிறது. அந்த லட்டு யாருடையது என்பதுதான் இப்போது பிரச்னை! 


''என்னுடைய 'இன்று போய் நாளை வா’ படத்தின் கதைதான் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இது கலைத் திருட்டு'' என்று போலீஸில் புகார் செய்தும் கோர்ட்டில் வழக்குப் போட்டும் அதிரடி கிளப்பி இருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.

a



பாக்யராஜை சந்தித்துப் பேசினோம். ''தலைவர் எம்.ஜி.ஆரோட 'நீரும் நெருப்பும்’ படத்தைத் தயாரிச்ச டெகரானி என்ற நார்த் இண்டியன்தான் என் 'இன்று போய் நாளை வா’ படத்துக்குத் தயா ரிப்பாளர். டெகரானியிடம் இருந்து ஓ.கே.மணி என்பவர் நெகட்டிவ் உரிமையை வாங்கினார். இது, முதலில் எனக்குத் தெரியாது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் சேது, 'அண்ணே இது உங்க படத்தோட கதை’ என்ற தகவலைச் சொன்னபோது அதிர்ந்துபோனேன். பிறகு, சந்தானமும் சீனிவாசனும் சேர்ந்து கொடுத்த ஒரு பேட்டியில், 'நாங்கள் நடிப்பது, 'இன்று போய்  


நாளை வா’ படத்தோட கதைதான்!’ என்று ஓபனாகச் சொன் னார்கள். திடீரென ஒரு நாள், ராம நாராயணன் என்னுடைய வீட்டுக்கு வந்தார். 'உங்களோட 'இன்று போய் நாளை வா’ படத்தை நாங்க ரீ-மேக் செய்றோம். எவ்வளவு வேணும்னு சொல்லுங்க’னு கேட்டார். 'இதுவரை சாந்தனு நடிச்ச படம் எதுவும் ஹிட் ஆகவில்லை. அதனால், நானே அந்தப் படத்தை சாந்தனுவை வைத்து இயக்கப்போறேன்’ என்று சொன்னேன். 


'உங்க படத்தோட உரிமம் புஷ்பா கந்தசாமிகிட்ட இருக்கு. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்’னு கிளம்பி விட்டார். அதன்பிறகு வந்த புஷ்பா கந்தசாமி, படத்தோட உரிமம் தன்னிடம் இருப்பதாகப் பத்திரங்களைக் காட்டினார். 'நெகட்டிவ் ரைட்ஸ் உங்களிடம் இருந்தாலும், படத்தோட கிரி யேட்டர் நான்தான்’ என்பதை அவரிடம் தெளிவாகச் சொன்னேன். 'என் அனுமதி இல்லாமல் படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்பதையும் அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
 
இயக்குனர் சிகரம் பாலசந்தரின் மகள்தான் புஷ்பா கந்தசாமி. 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்


ராம நாராயணன். இந்த இருவருக்குமே நெகட்டிவ் ரைட்ஸ் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பது எப்படித் தெரியாமல் போனது? என்னிடம் பேசியதை மறைத்து, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை எடுத்து ரிலீஸ் செய்து விட்டனர். ஷூட்டிங் நடக்கும்போதே நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தேன்.


 நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து இருக்கிறேன். 'பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை’ என்கிறார் புஷ்பா. ராம நாராயணனோ, 'நான் படத்தோட தயாரிப்பாளர் மட்டும்தான். கதையைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது’ என்கிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்னுடைய படம். படத்தின் வசூலில் எனக்குப் பங்கு தரவேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்று கொந்தளித்தார்.


படத்தின் தயாரிப்பாளர் ராம நாரா யணன் என்ன சொல்கிறார்? ''ஒரு படத்தை அதே மொழியில் ரீ-மேக் செய்ய வேண்டும் என்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கினால் போதும். படத்தின் தயாரிப்பாளர் டெகரானியிடம் புஷ்பா கந்தசாமி உரிமம் பெற்று இருந்தார். அவரிடம்  அனுமதி வாங்கிய பிறகுதான் நாங்கள் படம் எடுத்தோம். 



நானும் இயக்குநர்தான். 100 படங்களுக்கும் மேல் இயக்கி இருக்கிறேன். அத் துடன் என் வேலை முடிந்து விடுகிறது. படத்தின் உரிமை தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ரஜினி நடித்த 'பில்லா’ படத்தின் ரீ-மேக்கில் அஜித் நடித்தார். அதற்கான உரிமத்தை தயாரிப்பாளர் பாலா ஜியிடம்தான் வாங்கினார்கள். 'முரட்டுக்காளை’ ரீமேக் செய்தபோது, ஏ.வி.எம். நிறுவனத்திடம்தான் உரிமம் வாங்கினார்கள். கட்டிய கட்டடத்தை விற்பனை செய்த பிறகு, வீடு எனக்குச் சொந்தம் என்று சொல் வதைப்போல இருக்கிறது பாக்யராஜ் சொல்வது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, அதிகம் பேசுவது சரியாக இருக்காது'' என்பதோடு முடித்துக் கொண்டார்.



தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமியிடம் இந்த விவகாரம் பற்றி பேசினோம். '' 'இன்று போய் நாளை வா’ படத்தின் நெகடிவ் உரிமையை ஓ.கே.மணி என்பவரிடம் அதன் தயாரிப்பாளர் டெகராணி விற்று விட்டார். கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன், நான் அவரிடம் இருந்து படத்தின் உரிமையை வாங்கினேன். ராம நாராயணன் என்னைச் சந்தித்து படத்தை ரீ மேக் செய்வதாகச் சொன்னார். நானும் ரீ மேக் செய்ய அனு மதித்தேன். பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை. விஷயம் நீதிமன்றம் வரை போய் இருக்கிறது. எனவே, நான் அதைப்பற்றி பேசுவது முறையல்ல'' என்றார்.



தியேட்டரில் காமெடியாய் ஓடும் படம், வெளியில் சீரியஸ் ஆகிவிட்டது!



மக்கள் கருத்து 


1. Dr A.Shyam Sundar5 Hours ago
இவையெல்லாம் தமிழ்த்திரையுலகின் கற்பனை வறட்சியை சுட்டிக்காட்டுகின்றன.

ரீமேக்குக்காகாவும், கோடிகளில் சம்பளம் கேட்க்கும் நடிகர்களுக்கும் காத்திருக்காமல் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும். 
2. Suresh8 Hours ago
நான் வேலை செய்யும் கம்பனியின் வியாபாரமாக்கப்பட்ட பல பொருட்களில் என்னுடைய கிரியேட்டிவிட்டி இருக்கிறது. அதற்கு எனக்கு சம்பளம் தந்துவிட்டார்கள். நான் அந்த கம்பனியின் உரிமையாளர் அல்ல. அந்த கம்பனி அவர்களுடைய பொருளை யாருக்கும் எவ்வளவு விலைக்கும் விற்க உரிமை உண்டு. அதில் போய் நான் எப்படி பங்கு கேட்க முடியும்? ஆனால் பாக்யராஜ் அதை தான் கேட்கிறார். இது நியாயமாக எனக்கு படவில்லை.
3. Sridhar7 Hours ago
சந்தானம் சன் டிவி பேட்டியில் இது நாங்கள் அப்படி டிஸ்கஸ் பண்ணி இப்படி டிஸ்கஸ் பண்ணி கதையை ரெடி செய்தோம் என்று சொன்னார்............... ஊருக்கே தெரியும் இது எந்த கதை என்று..........?.......... சந்தானம் திரையில் காமெடியன் , நிஜத்தில் வில்லனோ ...??!!
4. அசோகன், சிங்கப்பூர்7 Hours ago
பாக்யராஜுவுக்கு இது கசப்பு லட்டு... படம் வெற்றிபெற்று வாசூல் சாதனை செய்தவுடன் புலம்புபவர், பிரச்னையின் ஆரம்பத்திலேயே தனது மகனைக்கொண்டு போட்டியாக இதே கதையை வைத்து படம் தயாரித்திருக்கலாமே?!... தான் தயாரித்திருந்தால் இவ்வளவு சாவாரசியமாக படம் பண்ணமுடியாது என்பது தெரிந்திருக்கலாம்...
5. Venky7 Hours ago
இதில் பாக்யராஜ் குறை கூறி தன்னை தரம் தாழ்த்திகொண்டார் என்றே தோன்றுகிறது. தயாரிப்பவருக்கே எல்லா உரிமையும் உண்டு - இதனை சினிமா பாடல்களில் கண்டு இருக்கிறோம்.
ரஹ்மான் வந்த பிறகே அந்த பாடல்களின் உரிமத்தை தராமல், உபயோக்கிக்கும் அனுமதி (லைசன்ஸ்) தரும் முறை அறிமுகமானது என்று எண்ணுகிறேன்.

ஆனால் கதை, திரைக்கதை, வசனம் போன்றவை ஒட்டு மொத்தமாக இன்றும் தயாரிப்பாளர்களின் வசமே தரப்படுகிறது. சட்ட ரீதியாக பாக்யராஜ் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே. இது, இந்த செய்தி வசூலுக்கு உதவியது. அட 'இன்று போய் நாளை வா' - வா என்று படம் பார்த்த பலரின் நானும் ஒருவன். இல்லை எனில் சந்தானத்தின் வசன இமேஜூக்கு (அத்துடன் யார் சார் அந்த ஹீரோ?) யாராவது இந்த படத்தை பார்க்க போய் இருப்பார்களா என்ன? 
6.
Prathap Venugopal7 Hours ago
கண்ணா லட்டு தின்ன ஆசையா..இன்று போய் நாளை வாவில் உள்ள காமெடியில் பாதி அளவு கூட இல்ல.. கவலைப் படாதீங்க பாக்யராஜ்!
7.
Appan8 Hours ago
சினிமாவில் இதெல்லாம் சகஜம். இதன் தயாரிப்பாளர்கள் பாகியராஜிர்க்கு பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
 நன்றி - ஜூ வி  



Thursday, January 03, 2013

ரேப் செய்யப்பட்ட புதுவை + 2 மாணவி பேட்டி

புதுவை: மயக்கமருந்து கொடுத்து என்னை கற்பழித்தனர் - டாக்டரிடம் மாணவி கதறல்


 புதுச்சேரி, ஜன. 3-

கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு புதுச்சேரி அரசு மகளிர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் மாணவி கூறியதாவது:-

நான் 1-ந்தேதி வில்லியனூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பஸ் கண்டக்டர் முத்துகுமரன் என்னிடம் உன் அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. உடனே வா என்று கூப்பிட்டார். எனவே அவருடன் நான் சென்றேன். என்னை பஸ்சில் அழைத்து சென்றார். அப்போது ஏதோ ஒரு வகை பொடியை முகத்தில் வைத்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

இரவு ஒரு குடிசை வீட்டில் இருந்தேன். அங்கு கண்டக்டர் முத்துகுமரன் என்னை கற்பழித்தார். இதனால் நான் பாதி மயக்கத்தில் இருந்தேன். அப்போது இருட்டு அறைக்குள் இழுத்து சென்றனர். அங்கு 2 பேர் இருந்தனர். அதில் ஒருவன் என்னை கற்பழித்தான்.



அதன்பிறகு காலையில் விழுப்புரம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். நான் என் பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன். இவ்வாறு அவர் டாக்டரிடம் கூறியதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கஸ்தூரி தெரிவித்தார். மேலும் டாக்டர் கஸ்தூரி கூறும்போது "மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். அவருக்கு உடலில் வேறெங்கும் காயம் இல்லை என்றார்". 


 புதுவை மாணவி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது - என்ஜினீயரிங் மாணவர் தலைமறைவு

புதுச்சேரி, ஜன. 3-

புதுவை திருபுவனை அருகே உள்ள கொத்தபுரி நத்தத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் சுந்தரி வயது 17. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுவையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி முடிந்ததும் அவர் டியூசனுக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் புத்தாண்டு தினத்தில் அவர் டியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதுபற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் பஸ் நிலையத்தில் சுந்தரி மயங்கிய நிலையில் கிடந்தார். போலீசார் அவரிடம் விசாரித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பெற்றோர் காரில் சென்று அவரை அழைத்து வந்து புதுவை அரசு பெண்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தார்கள். அதில் சுந்தரி கற்பழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருபுவனை போலீசார் கற்பழிப்பு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் மாணவியை பஸ் கண்டக்டர் ஒருவர் கடத்தி சென்றது தெரியவந்தது. சுந்தரி தினமும் திருபுவனையில் இருந்து புதுவை பள்ளிக்கு தனியார் பஸ்சில் வருவார். இந்த பஸ்சில் கண்டக்டராக இருந்த முத்துக்குமரன் (23) என்பவருடன் சுந்தரிக்கு அறிமுகம் இருந்தது. முத்துக்குமாரின் சொந்த ஊர் திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனி ஆகும். முத்துக்குமரன் சுந்தரியை அழைத்து சென்று கற்பழித்தது தெரிய வந்தது.

சுந்தரியை அவர் திருவெண்ணைநல்லூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஒரு குடிசை வீட்டில் வைத்து அவரும், அவருடைய நண்பர் அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலபதி (23) என்பவரும் கற்பழித்துள்ளார். மேலும் ஒருவரும் கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் முத்துக்குமரன், வெங்கடாசலபதி இருவரையும் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள். அவருடைய பெயர் விபரம் இதுவரை தெரியவில்லை.

கற்பழிப்பில் ஈடுபட்ட வெங்கடாசலபதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவராவார். அவர் அரசூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். முத்துக்குமரன் சுந்தரியிடம் உனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி அழைத்து சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவெண்ணைநல்லூருக்கு பஸ்சிலேயே அழைத்து சென்றதாகவும், பின்னர் கற்பழித்துவிட்டு மீண்டும் பஸ்சிலேயே அழைத்து வந்து விழுப்புரம் பஸ் நிலையத்தில் விட்டு சென்றதாகவும் தெரிகிறது. 



நன்றி - மாலை மலர் 

புதுவையில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம்: மக்கள் போராட்டம்; பதட்டம் 
Posted Date : 12:55 (03/01/2013)Last updated : 13:01 (03/01/2013)
புதுச்சேரி :புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,அம்மாணவியின் தந்தை தீக்குளிக்க  முயற்சித்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே  உலுக்கியபோதிலும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்  கதையாகவே உள்ளது.

புதுவை திருபுவனை பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின்  மகள் தேவி (வயது 17,  பெயர் மாற்றப்பட்டுள்ளது). புதுவை நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து  வந்தார். புதுவையில் டியூசனும் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.ஆனால் இரவு  வரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் விழுப்புரத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவர், தன்னை தனியார்  பஸ் கண்டக்டர் முத்து உள்ளிட்ட 3 பேர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.



இதுதொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து  குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கண்டக்டர் முத்து மற்றும் வெங்கடாச்சலம் ஆகிய இருவரை கைது செய்தனர்.

டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் போராட்டம் அடங்குவதற்குள், புதுச்சேரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது.இதனால் புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள்  வெடித்துள்ளன.



இந்நிலையில் பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை நாகரஜ் இன்று திடீரென சாலைக்கு  ஓடிவந்து தம்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.அவரை அங்கு நின்றவர்கள் ஓடிவந்து, அவரை தடுத்து நிறுத்தினர்.இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.



நன்றி - விகடன்



செய்தி 3


கேரளா: மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்குத் தண்டனை! 

 திருவனந்தபுரம்: கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து,கொன்றுவிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம்,ஆட்டோ ஓட்டுனர் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றச்சாட்டு நிரூபணமானதால்,அவருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Saturday, December 22, 2012

கோர்ட்ட்டில் சசிகலா அசத்தல் , திணறினார் ஜட்ஜ் !!

http://www.thehindu.com/multimedia/dynamic/01305/20TH_SASIKALA_1305095f.jpgபெங்களூருவில் புது சசிகலா!

16 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு​கொண்டே போகும் சொத்துக் குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணா​வின் அதிரடிப் பாய்ச்சலால் மீண்டும் சூடு பிடித்து விட்டது. 


பெங்களூரு கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆஜராகி 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்தார் ஜெயலலிதா. அவரைத் தொடர்ந்து இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் கேள்வி கேட்டு முடிப்ப​தற்குள் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் ஓய்வு, அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவின் திடீர்
போன்ற காட்சிகள் அரங்கேறின. புதிய நீதிபதி நியமனம் நடந்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாகத் தாமதித்து வந்த சசிகலா, இப்போது பெங்களூரு கோர்ட்டில் 'பவ்யமாக’ பதில் சொல்கிறார். கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அரங்கேறிய‌ காட்சிகள் இங்கே...







பெங்களூரு குளிர் பிடிச்சிருக்கு! 


18-ம் தேதி இரவே பெங்களூரு வந்து இறங்கினார் சசிகலா. அவருக்கு முன்பே பெங்களூரு வந்த வக்கீல் படை கேபிடல் ஹோட்டலில் காத்திருந்தனர். கடந்த முறை, தனியாக வந்த சசிகலா இந்த முறை சுரேஷ் என்பவரை உதவிக்கு அழைத்து வந்திருந்தார். சுதாகரனும் இளவரசியும் ஏனோ வரவில்லை. பெங்களூருவில் நிலவும் அதிகப்படியான குளிரை ரசித்துக்கொண்டே, 'பெங்களூரு குளிர் நல்லா இருக் குல்ல’ என அதிகாலையிலே உற்சாகமாக வாக்கிங் போனாராம். 



அதன்பிறகு, தன்னுடைய வக்கீல் மணி சங்கரிடமும் செந்திலிடமும் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்து விட்டு, சரியாக 10.35 மணிக்கு தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வெள்ளைக் காரில் உற்சாகமாக வந்து இறங்கினார். கடந்த முறை வாக்குமூலம் அளிக்க பெங்களூரு வந்தபோது, ஜெயலலிதாவுடன் பிரிவு என்பதால் சுணக்கமாகக் காணப்பட்ட சசி, இந்த முறை வைரக் கம்மல், புது டிசைன் நெக்லஸ், சிவப்பு ரத்தினக் கல் மோதிரம் எனப் புதுப் பொலிவோடு வந்திருந்தார். சசிகலாவை வரவேற்பதற்காக ஏராளமான வக்கீல்களும் கரை வேட்டி கட்டாத ரத்தத்தின் ரத்தங்களும் வந்திருந்தனர்.


நீதிபதியின் திடீர் கேள்வி! 



கோர்ட் ஹாலுக்குள் நுழைந்த சசிகலா சிறிது நேரம் வக்கீல்களிடம் பேசிவிட்டு, சரியாக காலை 11 மணிக்கு குற்றவாளிக் கூண்டில் அமர்ந்து கொண்டார். நீதிபதி 11.20-க்கு வந்ததும், 'ஏன் அங்கு அமர்ந்திருக்கிறீர்கள். முன்னாடி வாங்க’ என அழைத்ததும், நீதிபதியின் முன்பு போடப்பட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார். 


வழக்கமாக தன் னோடு கொண்டுவரும் கைக்குட்டை, சின்ன கைப்பை, கறுப்புக் கண்ணாடி, பிளாஸ்க், ஒரு ஃபைல், அதில் கட்டாக வெள்ளைத் தாள்களுடன் ஆஜராகி இருந்தார். இதுவரை 632 கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்த சசிகலாவிடம், 'எவ்வளவு படித்தி ருக்கிறீர்கள்?’ என நீதிபதி திடீரென ஒரு கேள்வி கேட்கவே ஷாக்காகி, பதில் சொல்ல முடியாமல் திணறினார்.



 உடனே அவரது வக்கீல் மணிசங்கர், 'எஸ்.எஸ்.எல்.சி.’ என்று எடுத்துக்கொடுத்ததும் சசிகலாவும் அப்படியே பதில் சொன்னார். 



'அப்போ உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது...


ஓகே.?’ என்றபடி சந்தேகக் கண்ணோடு சசிகலாவைப் பார்த்துவிட்டு, மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸை அழைத்தார் நீதிபதி.


மீண்டும் பிட்!
கோர்ட்டுக்கு உற்சாகமாக வந்த சசிகலா, நீதிபதி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும் செம அப்செட். முதல்நாள் முழுக்கவே ஜெ.ஜெ. பிரின்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர்., சசி என்டர்பிரைசஸ், வினோத் வீடியோ விஷன், ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான கேள்வி​கள் என்பதால், கேள்வியை ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்ட பின்னரே பதில் அளித்தார். 







பெரும்பாலான கேள்விகளுக்கு 'தெரியாது’ என்றும் 'உண்மை’ என்றும் பதில் சொன்ன சசிகலா, சில கேள்விகளுக்கு மட்டும் தன்னுடைய ஃபைலில் இருந்த வெள்ளைத் தாளின் ஒரு புறத்தில் மெலிதாக பென்சிலில் எழுதிக்கொண்டு வந்திருந்ததை லாகவமாகப்‌ பார்த்துப் பதில் சொன்னார் 'சசிகலா காப்பி அடிக்கிறார்’ என்று சொல்லி கோர்ட்டையே கலக்கிய அரசுத் தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யா அன்று இல்லை.  




'சுதாகரன்... இளவரசியா? ஐ டோன்ட் நோ!’ 



சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளி​யான சுதாகரன், நான்காவது குற்றவாளியான இளவரசி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு கண்களை மூடிக்​கொண்டு, 'தெரியாது’ என்ற பதிலையே சொன்னார். 


ஆனாலும் நீதிபதி விடாமல் சுதாகரன், இளவரசி தொடர்பான கேள்விகளையே 20-க்கும் மேல் கேட்க, 'ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், நெக்ஸ்ட் பிராப்பர்ட்டிஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சுதாகரனும் இளவரசியும் பங்குதாரர்கள். ஆனால் அவர்கள் செக் கொடுத்தது, டி.டி. கொடுத்தது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது’ என்றார் சசிகலா.



 இதைக் கேட்ட கன்னட மீடியாவினர், 'ஜெயலலிதாவிடம் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா கேள்வி கேட்டபோது, 'எனக்குத் தெரியாது. நான் சைலன்ட் பார்ட்னர் மட்டும்தான். சசிகலாவுக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்று சொல்லித் தப்பித்தார். இவரோ, 'எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொல்கிறாரே’ என்று சந்தேகம் கிளப்பினர்.



மேலிடத்து உத்தரவு? 



மதிய இடைவேளைக்குப் பிறகு, கேள்விகள் இன்னும் வேகமெடுத்தது. மதியம் 3 மணிக்குப் பிறகு ஜெயலலிதா சம்பந்தப்பட்ட கேள்விகளே கேட்கப்பட்டன. ஆனால், அத்தனை கேள்விகளுக்கும் 'எனக்குத் தெரியாது’ என்ற பதிலை மட்டுமே மீண்டும் மீண்டும் சொன்னார் சசிகலா.


 ஒரு சில கேள்விகளுக்கு மட்டும், 'முதல்வர் ஜெயலலிதாவும் நானும் பல நிறுவனங்களுக்குப் பங்குதாரர்களாக இருந்ததால், எங்கள் சொந்த வங்கிக் கணக்கு மட்டுமின்றி, நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளிலும் வியாபாரத்துக்குத் தேவைப்படும் பணம் அடிக்கடி பரிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கு குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது’ என்று தெளிவாகச் சொன்னார். 


அடுத்து நீதிபதி, 'நமது எம்ஜிஆர் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து உங்களுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்குக்குப் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதே?’ என்று கேட்டதும், 'அ.இ.அ.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளரின் அறிக்கைகள், செய்திகள் தொண்டர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக 'நமது எம்ஜிஆர்’ பத்திரிகை 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது ஜெயா பப்ளிகேஷனின் துணை நிறுவனம். 'நமது எம்ஜிஆர்’ நாளிதழைப் பெற தொண்டர்களிடம் 12 ஆயிரம் ரூபாய் சந்தாவாகப் பெறப்பட்டு, அதை வங்கியில் டெபாசிட் செய்தோம். மேலும் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்களில் கிடைத்த லாபமும் 'நமது எம்ஜிஆர்’ நாளிதழுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது’ என்றார்.



 முதல் நாள் முடிவில் சசி கலாவிடம் 110 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றார் நீதிபதி பாலகிருஷ்ணா.



அசமந்த வியாழன்! 


இரண்டாவது நாளும் முழுக்க முழுக்க ஜெயா பப்ளிகேஷன், ஜெயா பிரிண்டர்ஸ், சசி என்டர்பிரைசஸ், நமது எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளே கேட்கப்​பட்டன. தயாரித்து வந்திருந்த 'மறைப்பு’ குறிப்புகளைப் பார்த்து அலட்டிக் கொள்ளாமலே பதில் அளித்தார் சசிகலா. 


நீதிபதி பாலகிருஷ்ணா 1993 - 94 காலகட்டத்தில் நடந்த அத்தனை வங்கிக் கணக்குகளையும் சல்லடை போட்டு இரண்டரை பக்க அளவுக்குக் கேள்விகள் தயாரித்திருந்தார். ஆனால் சசிகலா கொஞ்சமும் மெனக்கெடாமல், 'தெரி யாது’, 'உண்மை’, 'உண்மையாக இருக்கலாம்’ என சர்வ சாதாரணமாகப் பதில் அளித்தார். 




 நீதிபதியின் நீண்ட கேள்விகளை எல்லாம் மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸ் தமிழில் சசிகலாவிடம் தெளிவாகச் சொல்லி, அதை அவர் சின்சியராகக் குறிப்பெடுத்துக் கொண்டார். ஆனால், ஒற்றை வார்த்தையில் கேசுவலாகப் பதில் சொன்னதுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில் சசிகலாவின் மனநிலையை முழுதாகப் புரிந்து கொண்ட நீதிபதி, 'என்ன.. இந்த கேள்விக்கும் பதில், தெரியாதுதானே?’ என்று சொல்லி சசிகலாவுக்கு ஷாக் கொடுத்தார்.



இரண்டாவது நாள் முழுக்க ஆமை வேகத்தில் பயணித்ததால் 83 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. ஆக மொத்தம் வியாழன் வரை சசிகலாவிடம் இருந்து 825 கேள்விகளுக்கான பதில்கள் பெறப்பட்டுள்ளன. இன்னும் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் இருப்பதால் வெள்ளியன்றும் விசாரணை தொடர்கிறது.



பகல் முழுவதும் கோர்ட்டில் இருக்கும் சசிகலா, மாலை நேரங்களில் வெளியே கிளம்பி விடுகிறார். கலர் கலராக சுடிதார், தொப்பி அணிந்து கொண்டு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கருடா மால் ஆகிய இடங்​களுக்கு ஹாயாக ஷாப்பிங் போகிறார். அதனால், கோர்ட்டுக்கு வரும்போது விதவித​மான வாட்சுகள், வளையல்கள், மோதிரங்கள் பளபளக்கின்றன.



இப்படியே போனால் வழக்கு இன்னும் மூன்றே மாதங்களில் முடிந்துவிடும் என்ற குரல் கோர்ட் வட்டாரத்தில் பலமாகக் கேட்கிறது. வேறு முட்டுக்கட்டை வராமல் இருக்குமா?



- இரா.வினோத் 


அட்டை மற்றும் படங்கள்: ந.வசந்தகுமார்


நன்றி - ஜூ வி  

 http://i.ytimg.com/vi/kUfD48xbFF8/0.jpg



பெங்களூரு: ""மாதம், ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவித்ததாக, சுப்பிரமணிய சாமி, பொய்யான புகார் கொடுத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடர்ந்தார். கொடநாடு டீ எஸ்டேட் அபிவிருத்திக்கு அதிக பணம் செலவழித்ததாக, போலீசார் தவறான தகவலை கூறியுள்ளனர்,'' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சசிகலா பதிலளித்தார்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 19ம் தேதியிலிருந்து, சசிகலாவிடம் கேள்வி கேட்கும் பணி துவங்கியது. 19ம் தேதி, 110, நேற்று முன்தினம், 82, நேற்று, 151 கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்தார்.நேற்று முற்பகல், 11:05 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வந்தவுடன், கேள்வி கேட்கும் பணி துவங்கியது.

நீதிபதி: கொடநாடு டீ எஸ்டேட்டுக்கு, மின் சாதன பொருட்களை, 5.83 லட்ச ரூபாய்க்கு வாங்கினீர்களா?

சசிகலா: கொடநாடு டீ எஸ்டேட் அபிவிருத்திக்காக, 2.48 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. போலீசார் மிகைபடுத்தி உள்ளனர்.

நீதிபதி: பையனூரில், 31.34 லட்ச ரூபாய் வீடு வாங்கினீர்களா?

சசிகலா: கட்டடமாகத்தான் வாங்கப்பட்டது. மின் சாதனம் பொருத்தவில்லை. பின்னர், சினிமா துறையை சேர்ந்தவருக்கு விற்கப்பட்டது.

நீதிபதி: ஈக்காட்டுதாங்கல்லில், நமது எம்.ஜி.ஆர்., ஆஞ்சநேயா பிரின்டர்சுக்கு, 47 லட்சம் ரூபாய்க்கு மின் சாதனம் வாங்கினீர்களா?


சசிகலா: ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், வாடகைக்கு தான் இருந்தனர். ஆனால், நிறுவனத்தின் சொத்து என்று போலீசார் இணைத்துள்ளனர். மின் சாதனம் வாங்கப்பட்டது. சோதனை குறித்து எனக்கோ, கட்டட உரிமையாருக்கோ நோட்டீஸ் அளிக்கப்படவில்லை.
\

நீதிபதி: போயஸ் கார்டனில், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, மின் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

சசிகலா: எனக்கு தெரியாது.

நீதிபதி: 1991-92ல், 2.62 லட்ச ரூபாய்க்கு, "ஹாலிடே ஸ்பாட்' வாங்கப்பட்டதா?

சசிகலா: இச்சொத்தை, சசி எண்டர்பிரைசஸ் வாங்கியது. 1990 ஏப்ரல், 23 ல், 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது; மீதி தொகையும் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தில் பங்கு தாரராக மட்டுமே இருந்தேன். மானேஜிங் டைரக்டரல்ல.

பின்னர், மதியம், 3:00 மணிக்கு நீதிமன்றம் கூடியவுடன், விசாரணை தொடர்ந்தது.

நீதிபதி: வருமான வரி சரியாக செலுத்தினீர்களா? மார்பிள் மார்வல்ஸ் நிறுவனத்துக்கு வரி செலுத்தாதது ஏன்?

சசிகலா: ஆம். மார்பிள் நிறுவனத்தில் வருமானமில்லை.

நீதிபதி: ஜெயலலிதா, மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறி, ஏராளமான சொத்துகள் சேர்த்துள்ளார் என்று, பார்லிமென்டில் புகார் செய்த சுப்பிரமணிய சாமி, இங்கு வழக்கு தொடர்ந்துள்ளாரே.

சசிகலா: பொய்யான புகாருடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி: 1995-96ல், உங்கள் நிறுவனங்கள், 36 போயஸ் கார்டன் என்ற முகவரியில் அலுவலகமாக செயல்பட்டதா?

சசிகலா: 36, போயஸ் கார்டனில், ஒரு பகுதி வீடாகவும், மற்றொரு பகுதி, அலுவலகமாகவும் செயல்பட்டது.

நீதிபதி: ஜெயலலிதா வீட்டில், நீங்களும், சுதாகரனும் தங்கியிருந்தீர்களா?

சசிகலா: ஆமாம்.

நீதிபதி: நாதள்ளா தங்க நகை கடையில், 3 லட்ச ரூபாய்க்கு செக் கொடுத்து, 47 காரட் வைர நகைகள் வாங்கினீர்களா?

சசிகலா: 17 காரட் நகை தான் வாங்கினேன்.

நீதிபதி: 1996ல், ஜெயலலிதா, சசிகலா, உங்கள் உறவினர்களின் பெயரில், வங்கி டாக்குமெண்டுகளை, போலீஸ் அதிகாரி லத்திகா கைப்பற்றி விசாரணை நடத்தினாரா?

சசிகலா: சுப்பிரமணிய சாமி கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது. வாக்குமூலம் மட்டும் வாங்கினர். அதன் பின், விசாரணை நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இன்று மீண்டும் விசாரணை தொடர்கிறது. இன்றுடன் கேள்விகள் முடிவடையும் என்று நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்தார்.



http://www.thehindu.com/multimedia/dynamic/00896/18TH_SASIKALA_896317e.jpg



பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், மீதமுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, சசிகலா, நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். 110

கேள்விகளுக்கு பதிலளித்தார்; இன்றும் விசாரணை தொடருகிறது."தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், டிச., 19ம் தேதி முதல், சசிகலாவிடம் கேள்வி கேட்கும் பணி துவங்கும்' என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார்.இதுவரை, சசிகலாவிடம், 632 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 633 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், நீதிபதி உத்தரவுபடி, கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, சசிகலா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏழு மாதங்களுக்கு பின், நீதிபதியின் கேள்விகளுக்கு, சசிகலா பதிலளித்தார்.நேற்றைய விசாரணையில், அரசு தரப்பில் சந்தேஷ் சவுட்டா, முதல்வர் ஜெயலலிதா வக்கீல் கந்தசாமி, சசிகலா வக்கீல் மணிசங்கர், சுதாகரன் வக்கீல் மூர்த்தி, இளவரசி வக்கீல் அசோகன் மற்றும் வக்கீல் பரணி குமார் உட்பட, பலர் ஆஜராகினர்.

முற்பகல், 11:20 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வருகை தந்தார். கேள்விகளுக்கு பதிலளிக்க வசதியாக, தன் முன், நாற்காலியில் அமரும்படி சசிகலாவிடம் கூறினார்.நீதிபதி கேட்ட கேள்வியும், அதற்கு சசிகலா அளித்த பதிலும் வருமாறு:நீதிபதி: கல்வி தகுதி என்ன?சசிகலா: பத்தாம் வகுப்பு.நீதிபதி: ஆங்கிலம் தெரியுமா?சசிகலா: சரியாக தெரியாது.இதேபோன்று பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.சுதாகரனின் வங்கி பரிமாற்றம் பற்றிய கேள்விகளுக்கு, "தெரியாது' என்றே பதிலளித்தார். 



இது போன்று, இளவரசி சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கும், "தெரியாது' என்று பதிலளித்தார்.மதியம், 3:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, "ஆமாம், தெரியாது' என்று பதிலளித்தார்.கேள்வி கேட்பது முடிவடையாததால், "வழக்கு விசாரணை இன்று காலை, 11:00 மணிக்கு துவங்கும்' என்று, நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்தார்.முதன் முறையாக கேள்வி கேட்கும் பணிசிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்பேற்ற பின், சொத்து குவிப்பு வழக்கில், முதன் முறையாக கேள்விகள் கேட்கும் பணியை துவக்கியுள்ளார்.

சசிகலா, நேற்று காலை, 11:20 மணியிலிருந்து மதியம், 1:45 மணி வரை, 82 கேள்விகளுக்கும், மதியம், 3:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை, 28 கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அவர் பதிலளிக்க வேண்டிய, 633 கேள்விகளில் நேற்று, 110 கேள்விகளுக்கு பதிலளித்தார். இன்னமும், 523 கேள்விகள் மீதமுள்ளன.நேற்றைய விசாரணை முடிந்ததும், சசிகலா பெங்களூரிலேயே தங்கினார்.


பெங்களூரு: ""எனக்கு சொந்தமான, "வினோத் வீடியோ விஷன்' மூலம், அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளின் மூலம், பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது,'' என்று சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா பதிலளித்தார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிடம், கடந்த, 19ம் தேதியிலிருந்து கேள்வி கேட்கும் பணி துவங்கியது. 


 நேற்று முன்தினம், 110 கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார்.நேற்று முற்பகல், 11:00 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வருகை தந்தவுடன் கேள்விகள் கேட்க துவங்கினார்.



 http://www.ndtv.com/news/images/story_page/Sasikala_in_court_295.jpg


நீதிபதி கேட்ட கேள்வியும், சசிகலா அளித்த பதிலும்:



நீதிபதி: பேக்ஸ் யூனிவர்சலுக்கு, லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதே.



சசிகலா: என் சார்பு நிறுவனம். வியாபார நிமித்தமாக செய்யப்பட்டுள்ளது.நீதிபதி: வங்கியில் கணக்கு தொடர, 36, போயஸ் கார்டன், சென்னை முகவரியை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் அதில் வசிக்கிறீர்களா?



சசிகலா: வங்கியில் கணக்கு துவங்கும் போது, அந்த முகவரியில் இருந்தேன்.




நீதிபதி: சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து, பல லட்சம் ரூபாய் ஜெயலலிதா, சுதாகரன் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதே.



சசிகலா: சசி எண்டர்பிரைசஸில், அவர்கள் இருவரும் பங்குதாரர்கள்.நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன், நமது எம்.ஜி.ஆர்., நிறுவனங்களிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. 





உங்களுக்கும், அந்த நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு.



சசிகலா: நிறுவனங்களில் பங்குதாரர்.



நீதிபதி: உங்களது வங்கி கணக்கிற்கு, ராம் விஜயன் என்பவர், பல லட்சம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளாரே.



சசிகலா: கடந்த, 1996ல் வினோத் வீடியோ விஷனை, நான் துவக்கினேன். தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகளை படம் பிடிப்பது உட்பட பல தனியார் நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை, நிறுவன பொறுப்பாளரான ராம் விஜயன், என் வங்கி கணக்கில் செலுத்துவார். இது மட்டுமின்றி, எனக்கு சொந்தமான, இரும்பு மாடி படிகள், கேட் கிரில்கள், இரும்பு சேர் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமும் உள்ளது. இதில் கிடைக்கும் பணத்தையும் செலுத்துவார்.



நீதிபதி: சசி எண்டர்பிரைசஸ், ஜெயா எண்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர்., பேக்ஸ் யூனிவர்சல் ஆகிய நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதில், யார், யார் பங்குதாரர்கள்?




சசிகலா: இவைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்பு நிறுவனங்கள். ஜெயலலிதா, நான் (சசிகலா), சுதாகரன், இளவரசி, திவாகர், தினகரன் ஆகியோர் பங்குதாரர்கள்.நீதிபதி: சசி எண்டர்பிரைசஸிலிருந்து, சுதாகரன், இளவரசி, ஜெயலலிதா ஆகியோரின் வங்கி கணக்கிற்கு, பல லட்சம் ரூபாய் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.




சசிகலா: அனைவரும் நிறுவன பங்குதாரர்கள்.



பல கேள்விகளுக்கு, "இருக்கலாம்' என்றும், ஒரு சில கேள்விகளுக்கு, "ஞாபகமில்லை' என்றும், ஒரு சில கேள்விகளுக்கு, எழுத்து பூர்வமாக எழுதி கொடுப்பதாகவும் பதிலளித்தார்.விசாரணை இன்று தொடர்வதால், சசிகலா பெங்களூருவில் தங்கி உள்ளார். இன்று, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.


 நன்றி - தினமல்ர்

Saturday, December 08, 2012

புனித வில்லி புவனேஷ்வரி - வழக்குகள்

சதியில் சிக்கினாரா புவனேஸ்வரி?

ஆளும் கட்சிப் புள்ளி மீது அதிரடிப் புகார்
 
 
திரையில் அடிக்கடி தலைகாட்டா​விட்டாலும், நடிகை புவ​னேஸ்வரியை தமிழ் ரசிகர்களால் அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது. சில வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் கைதானபோது, நடிகைகள் சிலரின் பெயரைப் பட்டியல் போட்டதாக விவகாரம் கிளம்பி, கோடம்பாக்கமே கொந்தளித்தது. வழக்கில் இருந்து வெளியே வந்தவர், ஒரு கட்டத்தில் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கினார். இந்தநிலையில் மீண்டும் வம்பு, வழக்கு என்று சிக்கிக் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பாய்கின்றன.



 என்ன ஆச்சு?


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள டிரைவ்-இன் தியேட்டருக்கு நடிகை புவனேஸ்வரி தன் நண்பர்களுடன் கடந்த 25-ம் தேதி இரவு படம் பார்க்கச் சென்றார். தியேட்டரில் கார் பார்க்கிங் செய்வதில் புவனேஸ்வரியுடன் வந்த வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணனுக்கும் சேலையூர் குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விஷயம் காவல் நிலையத்துக்குப் போனது. தப்பி ஓடிய புவனேஸ்வரி உட்பட ஏழு பேரை நீலாங்கரை போலீஸார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.



புவனேஸ்வரி கோஷ்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணை, கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் தாமோதர கிருஷ்ணனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்க, மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், அன்றைய தினமே கார் மோசடி வழக்கு ஒன்றில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருந்த புவனேஸ்வரிடம், நேரில் சென்று கைது விவரத்தை போலீஸார் கூறினர்.




இன்னொரு பக்கம், மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் புவனேஸ்வரி மீது ஏற்கெனவே பதிவாகி இருந்த வழக்குகளை போலீஸார் தூசி தட்ட ஆரம்பித்தனர். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த குருநாதன் கொடுத்து இருந்த ஒன்றரைக் கோடி ரூபாய் மோசடி வழக்கில், கடந்த 5-ம் தேதி புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். மூன்றாவதாகக் கைது செய்யப்பட்ட விவரத்தையும் புழல் சிறைக்குச் சென்று போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி சைதாப்பேட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முருகன் முன்பு புவ னேஸ்வரியை போலீஸார் ஆஜர் படுத்தினர். மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்டதற்கு, இரண்டு நாட்கள் மட்டும் அனுமதித்தார்.



கோர்ட் வளாகத்தில் இருந்த புவனேஸ்​வரியிடம் பேசினோம். ''கேட்பதற்கு ஆள் இல்லை என்று அடுக்கடுக்காக வழக்குகளைப் போடுகின்றனர். நடிகை என்றால் கிள்ளுக்கீரையா? எங்களுக்கு ஆதரவு இல்லையா? தியேட்டர் வளா கத்தில் அடிதடி ரகளையில் நான் ஈடுபடவே இல்லை. ஒரு சாதாரணப் பிரச்னையை ஏதோ பெரிய வன்முறை சம்பவம்போலச் சித்திரிக்கின்றனர். தீவிரவாதியைப் பிடிப்பதுபோல ஸ்பெ ஷல் டீம் போட்டு என்னைக் கைது​செய் துள்ளனர். சினிமாவில் கடன், கைமாற்று வாங்காமல் தொழில்செய்ய முடியாது. இவை எல்லாம் சிவில் பிரச்னைகள். ஆனால், கொலை மிரட்டல் விடுத்தேன் என்று பொய் வழக்குப் போடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராகச் சதி நடக்கிறது. விரைவில் உண் மைகள் வெளிவரும்'' என்றார்.



சினிமா தியேட்டர் அடிதடி வழக்கில் ஜாமீன் பெற்றவரும், புவனேஸ்வரியின் வக்கீலுமான தாமோதர கிருஷ்ணனிடம் பேசினோம். ''தியேட்டரில் எங்கள் கார் மீது இன்னொருவர் கார் மோதியது. அப்போது நடந்த வாக்குவாதத்தில் பிரச்னை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த நீலாங்கரை போலீஸார், லத்தியால் என் நெஞ்சில் குத்தி, அடித்தனர். காயத்துக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். போலீஸார் அடித்தது பற்றி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். புழல் சிறை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளேன்.



'பணப் பிரச்னைகளில் கொலை மிரட்டல்கள் விடுக்கும் எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று 2011-ம் ஆண்டு ஜனவரியில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புவனேஸ்வரி புகார் அளித்தார். ஆனால், இப்போது ஏதோ உள்நோக்கத்தில் பழைய புகார்​களைத் தூசி தட்டி எடுக்​கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முக்கியப் புள்ளியின் குடும்பத்​தைச் சேர்ந்தவருக்கும்  புவனேஸ்​வரி குடும்பத்துக்கும் கடந்த 18 வருடங்களாகவே பிரச்னை உள்ளது. அதில் இருந்து புவனேஸ்வரி ஒதுங்க வேண்டும் என்றுதான் இந்தகைய டார்ச்சர்களை போலீஸ் மூலம் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. தேவைப்பட்டால் அந்த பிரச்னையை வெளிப் படையாகத் தெரிவிக்கத் தயாராகவே இருக்கிறோம்'' என்றார்.



இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசியபோது, ''பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து, பின்னர் அவர்களை அடியாட்கள் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில்தான் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது போடப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் இன்றோ, நேற்றோ பதிவான வழக்குகள் அல்ல. எல்லாம் பழைய வழக்குகள்தான்'' என்றனர்.



கடந்த 10 நாட்களில் மூன்று வழக்குகளில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6-ம் தேதி மட்டும் அவர் மீது 10 புகார்கள் சென்னை மாநகர போலீஸில் கொடுக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரி விவகாரத்தில் போலீஸ் காட்டும் வேகத்தைப் பார்த்தால், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் போலவே தெரிகிறது.



- எஸ்.முத்துகிருஷ்ணன் 


படம்: ஜெ.வேங்கடராஜ்

நன்றி - ஜூ வி 


Thursday, November 01, 2012

கோவை இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு , கேஸ் விபரம்

 மாலை மலர் செய்தி

கோவை, அக். 29-
கோவை ரங்கே கவுடர் சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின். ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிகளின் செல்ல மகள் முஸ்கின் (வயது 10). அருமை மகன் ரித்திக் (7).
கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக புறப்பட்டு வந்தனர். அவர்களை கடத்தி பணம் பறிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த டிரைவர் மோகனகிருஷ்ணன் என்ற மோகன்ராஜ் தனது திட்டப்படி கால் டாக்சியில் அவர்களை கடத்திச் சென்றான்.
திட்டத்தை அரங்கேற்ற பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோகரனையும் சேர்த்துக் கொண்டான். உடுமலையை அடுத்த தீபாலப்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர்கள் சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
எங்கே நாம் செய்த தவறு வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முஸ்கின், ரித்திக்கை கால்வாயில் தள்ளி கொன்றனர். இந்த கொடூரங்களை செய்த மோகன்ராஜ், மனோ கரனை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.
கொலை நடந்தது எப்படி என்று விசாரிக்க 2010 நவம்பர் 9-ந்தேதி கோவையில் இருந்து வேனில் அழைத்து சென்றனர். வேன் செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றபோது போலீசை தாக்கிவிட்டு மோகன்ராஜ் தப்ப முயன்றான். அவனை போலீசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.
இதைத் தொடர்ந்து மனோகரன் மீதான வழக்கு விசாரணை 2011 ஜூன் மாதம் 23-ந் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. 7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கு கோவை மகளிர் கோட்டுக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் 121 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 47 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன.எதிர் தரப்பில் 5 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 2 ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி தொடர்ந்து 3 நாட்கள் சாட்சியம் அளித்தார். கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம் வழக்கு தொடர்பாக 155 கேள்வி கேட்டு பதிலை பதிவு செய்தார்.
கடந்த 15-ந்தேதி சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கர நாராயணனும், 22-ந்தேதி எதிர்தரப்பில் வக்கீல் சர்மிளாவும் வாதாடினர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று (29-ந்தேதி) தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட இருந்ததால் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மனோகரன் இன்று காலை 10 மணி அளவில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 10.30 மணி அளவில் நீதிபதி சுப்பிரமணியம் கோர்ட்டுக்கு வந்தார். முதல் வழக்காக முஸ்கின்- ரித்திக் கொலை வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம், உன் மீது கூட்டு சதி, குழந்தைகளை கடத்துதல், கூட்டாக சேர்ந்து கற்பழித்தல், கொலை செய்தல், பிணையாக வைத்து பணம் பறிக்க கடத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உனக்கு வழங்கப்படவுள்ள தண்டனை குறித்து தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு மனோகரன் தெரியாது என்றார். அதைத் தொடர்ந்து மனோகரனின் வக்கீல் ஷர்மிளாவிடம் நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு ஷர்மிளா இல்லை என்று பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து வருகிற 1-ந்தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் கூறினார்.

 

 தினமணி

கோவையில் இரட்டைக் கொலை: மனோகரனுக்கு தூக்கு தண்டனை


கோவையில், இரண்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.


கோவையில் 2010ஆம் ஆண்டு முஸ்கான், ரித்திக் ஆகிய குழந்தைகளைக் கடத்திச் சென்று, முஸ்கானை பாலியல் பலாத்காரம் செய்து பிறகு இருவரையும் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து அக்டோபர் 29ம் தேதி, இந்த வழக்கில் மனோகரன் என்பவர் குற்றவாளி என்று நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன் தீர்ப்பளித்திருந்தார். குற்றவாளிக்கான தண்டனையை இன்று அறிவித்த நீதிபதி, மனோகரனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் சாகும் வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்தார்.




கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும், காந்திபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், 2010 அக்டோபர் 29-ஆம் தேதி குழந்தைகள் இருவரும் கடத்தப்பட்டனர். இதில், சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர், பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.



இந்த இரட்டைக் கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி, அங்கலங்குறிச்சியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2010 நவம்பர் 9-ஆம் தேதி குழந்தைகளைக் கொலை செய்த இடத்தைக் காட்டுவதற்காக மோகனகிருஷ்ணனை போலீஸார் வேனில் அழைத்துச் சென்றனர். கோவை செட்டிபாளையம் அருகே போலீஸ் வேன் சென்றபோது, தப்ப முயன்றதால் என்கவுன்ட்டரில் மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார்; மனோகரன் சிறையிலடைக்கப்பட்டார்.



மனோகரன் மீதான இந்த வழக்கு விசாரணை 2011 ஜூன் 23-ஆம் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கில் மொத்தமாக 121 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருள்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.



7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை அரசுத் தரப்பில் 47 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், 9 பேரிடம் மறு குறுக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. எதிர்த்தரப்பில் 6 பேர் சாட்சிகளாக அனுமதிக்கப்பட்டு 5 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.



அக்டோபர் 22-ஆம் தேதியுடன் அரசுத் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன், அக்டோபர் 29-ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலையில் நீதிபதி முன், மனோகரனை போலீஸார் ஆஜர்படுத்தினர். அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சங்கரநாராயணன் ஆஜரானார். எதிர்த்தரப்பில் வழக்குரைஞர் ஷர்மிளா ஆஜரானார்.



இந்த வழக்கில் ஆள் கடத்தல், கூட்டுச் சதி, கற்பழித்தல், கொலை செய்தல், சாட்சியங்களை சிதைத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ், சாட்சிகளின் விசாரணை அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மனோகரனைக் குற்றவாளி என்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இத் தீர்ப்பு குறித்து தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என நீதிபதியைப் பார்த்து மனோகரன் கூறினார்.



மனோகரனுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை அளிக்க வேண்டுமென அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.



அரசு வழக்குரைஞர் சங்கர நாராயணன், ஏற்கெனவே இதுபோன்று குழந்தைகளைக் கடத்தி, கற்பழித்துக் கொலை செய்த 2 வழக்குகளில் உயர் நீதிமன்றமும், 5 வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்துள்ளது. மேலும், இதேபோல் ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதை, உச்ச நீதிமன்றம் விசாரித்து தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது என்றார்.

நன்றி - தினமணி , மாலை மலர்