Showing posts with label puthuvai. Show all posts
Showing posts with label puthuvai. Show all posts

Thursday, January 03, 2013

ரேப் செய்யப்பட்ட புதுவை + 2 மாணவி பேட்டி

புதுவை: மயக்கமருந்து கொடுத்து என்னை கற்பழித்தனர் - டாக்டரிடம் மாணவி கதறல்


 புதுச்சேரி, ஜன. 3-

கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு புதுச்சேரி அரசு மகளிர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் மாணவி கூறியதாவது:-

நான் 1-ந்தேதி வில்லியனூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பஸ் கண்டக்டர் முத்துகுமரன் என்னிடம் உன் அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. உடனே வா என்று கூப்பிட்டார். எனவே அவருடன் நான் சென்றேன். என்னை பஸ்சில் அழைத்து சென்றார். அப்போது ஏதோ ஒரு வகை பொடியை முகத்தில் வைத்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

இரவு ஒரு குடிசை வீட்டில் இருந்தேன். அங்கு கண்டக்டர் முத்துகுமரன் என்னை கற்பழித்தார். இதனால் நான் பாதி மயக்கத்தில் இருந்தேன். அப்போது இருட்டு அறைக்குள் இழுத்து சென்றனர். அங்கு 2 பேர் இருந்தனர். அதில் ஒருவன் என்னை கற்பழித்தான்.



அதன்பிறகு காலையில் விழுப்புரம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். நான் என் பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன். இவ்வாறு அவர் டாக்டரிடம் கூறியதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கஸ்தூரி தெரிவித்தார். மேலும் டாக்டர் கஸ்தூரி கூறும்போது "மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். அவருக்கு உடலில் வேறெங்கும் காயம் இல்லை என்றார்". 


 புதுவை மாணவி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது - என்ஜினீயரிங் மாணவர் தலைமறைவு

புதுச்சேரி, ஜன. 3-

புதுவை திருபுவனை அருகே உள்ள கொத்தபுரி நத்தத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் சுந்தரி வயது 17. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுவையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி முடிந்ததும் அவர் டியூசனுக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் புத்தாண்டு தினத்தில் அவர் டியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதுபற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் பஸ் நிலையத்தில் சுந்தரி மயங்கிய நிலையில் கிடந்தார். போலீசார் அவரிடம் விசாரித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பெற்றோர் காரில் சென்று அவரை அழைத்து வந்து புதுவை அரசு பெண்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தார்கள். அதில் சுந்தரி கற்பழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருபுவனை போலீசார் கற்பழிப்பு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் மாணவியை பஸ் கண்டக்டர் ஒருவர் கடத்தி சென்றது தெரியவந்தது. சுந்தரி தினமும் திருபுவனையில் இருந்து புதுவை பள்ளிக்கு தனியார் பஸ்சில் வருவார். இந்த பஸ்சில் கண்டக்டராக இருந்த முத்துக்குமரன் (23) என்பவருடன் சுந்தரிக்கு அறிமுகம் இருந்தது. முத்துக்குமாரின் சொந்த ஊர் திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனி ஆகும். முத்துக்குமரன் சுந்தரியை அழைத்து சென்று கற்பழித்தது தெரிய வந்தது.

சுந்தரியை அவர் திருவெண்ணைநல்லூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஒரு குடிசை வீட்டில் வைத்து அவரும், அவருடைய நண்பர் அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலபதி (23) என்பவரும் கற்பழித்துள்ளார். மேலும் ஒருவரும் கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் முத்துக்குமரன், வெங்கடாசலபதி இருவரையும் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள். அவருடைய பெயர் விபரம் இதுவரை தெரியவில்லை.

கற்பழிப்பில் ஈடுபட்ட வெங்கடாசலபதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவராவார். அவர் அரசூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். முத்துக்குமரன் சுந்தரியிடம் உனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி அழைத்து சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவெண்ணைநல்லூருக்கு பஸ்சிலேயே அழைத்து சென்றதாகவும், பின்னர் கற்பழித்துவிட்டு மீண்டும் பஸ்சிலேயே அழைத்து வந்து விழுப்புரம் பஸ் நிலையத்தில் விட்டு சென்றதாகவும் தெரிகிறது. 



நன்றி - மாலை மலர் 

புதுவையில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம்: மக்கள் போராட்டம்; பதட்டம் 
Posted Date : 12:55 (03/01/2013)Last updated : 13:01 (03/01/2013)
புதுச்சேரி :புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,அம்மாணவியின் தந்தை தீக்குளிக்க  முயற்சித்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே  உலுக்கியபோதிலும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்  கதையாகவே உள்ளது.

புதுவை திருபுவனை பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின்  மகள் தேவி (வயது 17,  பெயர் மாற்றப்பட்டுள்ளது). புதுவை நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து  வந்தார். புதுவையில் டியூசனும் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.ஆனால் இரவு  வரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் விழுப்புரத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவர், தன்னை தனியார்  பஸ் கண்டக்டர் முத்து உள்ளிட்ட 3 பேர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.



இதுதொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து  குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கண்டக்டர் முத்து மற்றும் வெங்கடாச்சலம் ஆகிய இருவரை கைது செய்தனர்.

டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் போராட்டம் அடங்குவதற்குள், புதுச்சேரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது.இதனால் புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள்  வெடித்துள்ளன.



இந்நிலையில் பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை நாகரஜ் இன்று திடீரென சாலைக்கு  ஓடிவந்து தம்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.அவரை அங்கு நின்றவர்கள் ஓடிவந்து, அவரை தடுத்து நிறுத்தினர்.இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.



நன்றி - விகடன்



செய்தி 3


கேரளா: மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்குத் தண்டனை! 

 திருவனந்தபுரம்: கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து,கொன்றுவிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம்,ஆட்டோ ஓட்டுனர் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றச்சாட்டு நிரூபணமானதால்,அவருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.