Showing posts with label சன் டிவி. Show all posts
Showing posts with label சன் டிவி. Show all posts

Saturday, November 26, 2011

சன் பிக்சர்ஸாரின் ஆதிக்கம்- தியேட்டர்கள் கிடைக்காத அவலம் - இயக்குநர் காட்டம் !!பரபரப்புக்கடிதம்!!

http://www.musictub.com/Picture/Tamil_MusicTamil_Movie_SongsPaalai_(2011)cover.jpg

விஜய்-ன் காவலன் ரிலீஸின் போதே சன் பிக்சர்ஸாரின் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்தது.. அதாவது தமிழ்நாட்டின் பெரிய , செண்ட்டரான திரை அரங்குகளை ஆக்ரமித்து விடுகிறார்கள் . என்பதே அது.. இதனால் லோ பட்ஜெட் படங்களை திரை இட தியேட்டர்கள் கிடைப்பதில்லை.. தங்கள் கை வசம் மாஸ் மீடியா இருப்பதால் பெரும்பாலான படங்களை இவர்கள் வாங்கி நல்லா மார்க்கெட் பண்ணி தேத்தி விடுகிறார்கள்.. இதனால் வெளீயாகும் படங்கள் சன் பிக்சர்ஸாரின் தயாரிப்பாகவோ ,அல்லது அவர்கள் வாங்கும் படமாகவோ இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி..

கலைஞர் ஆட்சியில் அது ஓக்கே, இப்போ ஆட்சி மாறிய பின்னரும் அது தொடர்வது ஏன்?ஏன் ஜெ வால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை?என்பதே நம் மனதில் எழும் கேள்விகள்.. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் பாலை இயக்குநர் காட்டமாக ஒரு கடிதம் மீடியாக்களில் வெளீயிட்டும் , ஃபேஸ் புக்கில் அதை பகிர்ந்தும் வந்திருக்கிறார்.. அந்த கடிதம்

 http://tamil.oneindia.in/img/2011/05/05-shammu-palai300.jpg

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

பாலைஎன்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

பாலைபடத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாதுவாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்என்பது.

பாலைகுழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாதுஇப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் இந்தப் படத்தை நான் இயக்கவில்லையேஎன ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் செங்கோட்டை திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்


------------------------------------------------------------




-------------------------------------------------------------




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3q1ONHvokhIe9TCdTEXGWNMyerF4YC-XiJGHhzjp2uK0vU_Mq0vjX1HKaYjCxC-bQQIFoPfebRzhtxhSqZXwKSRtPa8wTqHStzIYQ8iyRNnaEJ3aWQmo1HuZjdaY2TK95m6OuzQEVdEA5/s1600/paalai_movie_stills.jpg
பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!
-------------------------------------------------------------------------------------------------------------------------


 
2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் "பாலை" திரைப்படம் நாளை (நவம்பர் 25) தமிழகமெங்கும் வெளியாகிறது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன.

இயக்குநர் தங்கர் பச்சான்

 ‘
இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்

 இயக்குநர் வெ.சேகர்

 ‘
இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்

 உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

 ‘
வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய, ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு, நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்

 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

 ‘
ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட

 ஓவியர் புகழேந்தி

மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம்
, ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை.

 குமுதம் கார்டூனிஸ்ட் பாலா

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக, ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையைப் பேசுகிறது இப்படம். நம்பவே முடியாத கிராபிக்ஸ் சாகச கதாநாயகக் காட்சிகளைப் பார்த்துக் காசைக் கரியாக்குபவர்கள் ஒருமுறை பாலைபடத்தைப் பார்க்க வேண்டும். புதிய அனுபவமாக இருக்கும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது.

 விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

 
இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

 
சங்க காலம் இப்படத்தில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று அரசியலும், மக்கள் கலையும், மாற்று திரைப்படமும் வெற்றி பெருதல் வேண்டும். நம் தோழர்களின் இம் முயற்சியை வெற்றியடையச் செய்வோம். இதுவே இந்தத் தலைமுறைத் தமிழர்களின் இயக்கம். மாற்றத்தை சாத்தியப்படுத்துவோம்

ஊடகங்கள்

புதிய தலைமுறை
வரலாற்றுத் திரைப்படமாக எடுக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகம். பாலை திரைப்படக் குழுவினர் முதல் முறையாக தமிழில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.


சன் தொலைக்காட்சி 
சமீப காலமாக பல வரலாற்றுத் திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் விஞ்சும் விதமாக 2300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் காட்டுகிறது பாலை.

குமுதம்
பாலை திரைப்பட இயக்குநர் செந்தமிழன் பேசுவதைக் கேட்கும் போது, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் நடைபோடுகிறது என்ற நம்பிக்கை பிற்கிறது.

The Hindhu
Extensive reasearch on Sangam period literature, of life and time around 2,300 years ago, enabled director M.Senthamizhan to write Paalai



http://reviews.in.88db.com/images/paalai-movie/paalai-movie-stills-pics-photos-gallery-7.JPG


டிஸ்கி -  எனவே நல்ல சினிமா ரசிகர்கள் , ஆரோக்யமான திரைப்படம் வரவேண்டும் , திறமைசாலிகளை ஊக்குவிக்கவேண்டும் என நினைக்கும் நல்ல உள்ளங்கள் பாலை படம் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நண்பர்களூக்கும் பகிரலாம் ஈரோட்டில் இந்தப்படம் ரிலீஸ் ஆகவில்லை.....கொங்கு மண்டலத்தில் திருப்பூரில் மட்டும் 2 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.. மெத்தப்படித்தவர்கள் மிக்க  கோவையில் கூட இந்தப்படம் ரிலீஸ் ஆகாதது வருத்தம் தர வைக்கும் ஆச்சரியம்

டிஸ்கி பார்ட் 2 -

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

 

மயக்கம் என்ன - செல்வா குடுத்த அல்வா - காமெடி கும்மி கலாட்டா

 

Wednesday, October 12, 2011

சன் டிவி பெண் ஊழியர் மர்ம மரணம் -அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்

சுமார் எட்டு மாதங்களுக்கு முன்  எங்கள் ஊர் பெண்ணின் மர்ம மரணம் குறித்து எனக்கு தோன்றிய சில கேள்விகளை கேட்டிருந்தேன்.. அவர் சன் டி வி யில் பணி புரிந்தவர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகி விட்டது..அது பற்றி படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கவும்

சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?



 பதிவு போட்டு 4 நாட்கள் கழித்து அந்த பெண்ணுடன் சென்னையில் பணி புரிந்தவர்கள் வாயிலாகவும், பெண்ணின் பெற்றோர், தோழிகளை விசாரித்த போதும் சில கசப்பான உண்மைகள் தெரிய வந்தன.. அப்போதே அது பற்றி விளக்கப்பதிவு போட நினைத்திருந்தேன்..ஆனால் பெண்ணின் பெற்றோர் கொஞ்ச நாளுக்கு அது பற்றி எதுவும் எழுத வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள். காரணம் துக்கம் விசாரிக்க வருபவர்கள் அது பற்றியே பேசி எங்கள் வேதனையை மேலும் அதிகரிப்பார்கள் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் நான் அது பற்றி பதிவு போடுவதை தள்ளி வைத்தேன்..

இப்போது எல்லாம் ஆறிப்போய் இருப்பதால் வெளியிட சரியான தருணம் என தோன்றியது


http://www.dexternights.com/wp-content/uploads/2011/01/Sun-TV.jpg

சன் டி வியில்   நிருபராக வேலை பார்த்த சங்கீதாவுக்கு அவரது அறைத்தோழி ஒருவருடன் ஓர் பால் உறவு ஏற்பட்டது.. தனது லெஸ்பியன் சிநேகம் குறித்து அவர் எந்த வித தயக்கமும் இன்றி தன் பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறார்.. எந்த பெற்றோர் தான் தமிழகத்தில் அதை ஒத்துக்கொள்வர்கள்?அவசர அவசரமாக அவருக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள்..

சென்னையை சேர்ந்த மாப்பிள்ளையிடம் பெண்ணின் ஆஃபீஸ் அட்ரஸ் சொல்லி பார்க்க சொல்லி விட்டார்கள்.. பெண்ணிடம் கண்டிப்பாக திருமணம் செய்தே தீர வேண்டும் என கொஞ்சம் அழுகை, நிறைய கண்டிப்புடன் மிரட்டி இருக்கிறார்கள்.. சங்கீதாவுக்கு ஆணுடனான திருமணத்தில் விருப்பம் இல்லை.இருந்தாலும் தனக்குப்பார்த்த மாப்பிள்ளையிடம் அவர் எந்த உண்மையையும் சொல்லாமல் பெற்றோரின் விருப்பம் போல் மாப்பிள்ளையுடன் பேசி இருக்கிறார்.. 

அது வரை சங்கீதாவுக்கு தினமும் வெளியே சென்று  ஃபீல்டு ஒர்க் வேலையாக இருந்த பணி அவரது பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க ஆஃபீஸ் விட்டு வெளியே போக முடியத படி ஆஃபீஸ் ஒர்க்காக மாற்றப்பட்டது.. சங்கீதாவின் தோழி சங்கீதாவின் பெற்றோரால் மிரட்டப்பட்டு வேறு இடம் அனுப்பப்பட்டார்.

சங்கீதாவால் அவரது தோழியை தொடர்பு கொள்ள முடியவில்லை.. திருமணத்தில் இஷ்டம் இல்லை.. எனவே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.. 

தற்கொலை என்றால் என்ன காரணம்? என வெளியே சொல்வது? என்ற நியாயமான ஒரு பெற்றோருக்கே உரிய அச்சத்தில் விபத்தாக மாற்றப்பட்டது.. மற்றபடி சன் டி வி நிர்வாகத்துக்கும், அந்தப்பெண்ணின் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை

19.02.2011 சனி அன்று தான் சம்பவம் நடந்தது.. ஞாயிறு அன்றே அவரது உடல் சென்னிமலைக்கு கொண்டு வரப்பட்டது.. அடுத்த நாளே அதாவது 21.02.2011 அன்றே அந்த பெண்ணின்  குடும்பத்தார் நடத்தும்  ஜவுளிகடை, ஃபேன்சி ஸ்டோர் எல்லாம் இயங்கியது.. பொதுவாக இது போல் துக்க சம்பவம் நடந்தால் குறைந்த பட்சம் 3 நாட்களாவது லீவ் விடுவார்கள். எனவே எனக்கு சந்தேகம் வந்து விசாரித்தபோது தான் மற்ற தகவல்கள் தெரிய வந்தன.. 

மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் அல்லது தனது தோழியுடன் எங்காவது போய் விடுவார் என எதிர்பார்த்தே அவர்கள் இருந்திருகின்றனர்.. 


நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. பையனோ, பெண்ணோ வெளியூரில் படிக்க வைப்பதை முடிந்த வரை தவிர்க்கலாம்.. தனிமை பல தவறுகளை செய்யத்தூண்டுகிறது.. 

2. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததாக தோன்றினாலும் குழந்தை நலன் கருதி படிக்கவோ, பணி புரியவோ வெளியூர் போகும் பெண்ணுடன் கூடவே அம்மாவும் போனால் நல்லது.. 

3. ஒரே அறையில் இரு ஆண்கள், அல்லது இரு பெண்கள் தங்குவது இந்தக்காலத்தில் தேவை அற்ற சர்ச்சைகள், பிரச்சனைகள் தோற்றுவிக்கும் என்பதை உணர வேண்டும்.. நான் எல்லாரையும் அப்படி சொல்லவில்லை.. 

4. வெளியூரில் வேலை செய்தால் ரூ 30,000 சம்பளம் , உள்ளூரில் வேலை செய்தால் ரூ 10,000 சம்பளம் என்றால் எல்லோரும் வெளியூர் செல்லவே ஆசைப்படுகிறோம்.. பணத்தை விட முக்கியமான விஷயங்கள் பல உள்ளன என்பதை உணர வேண்டும்.. 

5. எல்லாவற்றையும் மீறி இது போல் ஏதாவது நடந்தால் அவர்கள் போக்கில் விட்டு விடுவது நல்லது.. அவர்களே பட்டு தெரிந்து கொள்வார்கள்... இளம் வயதில் இப்போது தற்கொலை எண்ணங்கள் பட் பட் என வந்து விடுகிறது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கவுன்சிலிங்க் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 

6. மன உறுதியுடன் பல ஆண்களும், பெண்களும் தனிமையில் , அல்லது கம்பைன் ஸ்டடி, கம்பைன் ஒர்க் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. எல்லோரும் அப்படி அல்ல.. மன உறுதி இல்லாதவர்கள் தடம் புரள வாய்ப்பு உண்டு அவ்வளவுதான்

டிஸ்கி - ஓர் பால் உறவு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கான தளம் இது அல்ல... எனவே கமெண்ட் போடுபவர்கள் அந்த கோணத்தில் கருத்து சொல்வதை தவிர்க்கவும்.. ஒரு பெண்ணுக்கு தந்தை என்ற கோணத்தில் சிந்தித்து கமெண்ட் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Sunday, June 26, 2011

கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி? (ஆன்மீகம்)


கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

1. கோ தானம் எதற்காக... அதன் மகிமைகள் என்ன?

பசு மாட்டில் 14 உலகங்களும் அடங்கியுள்ளன. பசுவை தானம் அளித்தால், அகில உலகையும் தானம் அளித்த பலன் உண்டு. வேள்விக்குத் தேவையான நெய், இறைவனின் அபிஷேகத்துக்கு உகந்த பால், தயிர், நெய், பஞ்சகவ்யம் ஆகியன பசுவிடம் இருந்து கிடைக்கின்றன. பால், தயிர், நெய், கோமியம், சாணி ஆகிய ஐந்தின் கலவை பஞ்சகவ்யம் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து; கவ்யம் என்றால் பசுவிடம் இருந்து வந்தது என்று பொருள். இது, நமது எலும்பு மற்றும் தொடு புலனோடு இணைந்த பாபத்தை அழிக்கவல்லது என்கிறது சாஸ்திரம் (யத்வகஸ்திகதம்பாபம...).

கோமூத்திரம் வெள்ளைப்பாண்டை அறவே அகற்றும்; பஞ்ச கவ்யகிருதம் மனநோயைக் குணப்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் பால் முழு உணவு. உடல் மற்றும் உள்ளத்தைத் தூய்மையாக்குவதுடன், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது பசுவின் பால். நெய்யானது, ஜீரண சக்தியை வலுப்படுத்தி உடலுக்கு வலுவூட்டும். மருத்துவ குணமுடைய பொருள்களை மற்றவர்களுக்கு அளிப்பதால் உண்டாகும் பெருமை சொல்லில் அடங்காது. ஆறறிவு இல்லாதது, ஆறறிவு பெற்றவர்களை வாழ வைக்கிறது. பசுவின் பாலுக்கும் நெய்க்கும் ஈடான மற்றொரு பொருள் இல்லை. அதன் இழப்பை, தற்காலச் சூழலில் வாழும் ஆறறிவு பெற்றவர்களிடம் காணமுடிகிறது.



தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குத் தாய்ப்பாலாகச் செயல்படுவது பசும்பால்தான். இயற்கையின் படைப்பை கடைச் சரக்காக மாற்றக்கூடாது என்பதால், தானமாக (இனாமாக) அளிக்கச் சொன்னது தர்மசாஸ்திரம். பால் கொடுப்பது பசு; பணம் பெறுவது மற்றொருவர் என்று இருக்கக்கூடாது என்பதால், பசுவை தானமாக அளிக்கப் பரிந்துரைத்தது தர்மசாஸ்திரம். வேள்விக்குத் தேவையான நெய்யை அளிப்பதால், வேள்வி அரசன் கண்ணன், பசுக்களைப் பாதுகாக்கும் கோபாலனாகத் தோன்றினான்.




2. அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியம் என்பார்கள். ஆனால், அந்த அரிசி மாவை தின்ன வரும் எறும்புகள், நம்மையும் அறியாமல் காலில் மிதிபட்டு இறந்தால், பாபம் சேராதா?

அனுதினமும் மருந்தடித்துக் கொசுக்களைக் கொன்று குவிக்கிறோம். அது பாபம் இல்லையா? அதேபோல், நடக்கும் போது நமது செருப்புகளுக்கு அடியில் அகப்பட்டு ஈ- எறும்பு போன்றவை மடிகின்றனவே?! வெண்டைக்காயை நறுக்கும் போது, சில நேரம் எதிர்பாராதவிதமாக உள்ளிருக்கும் புழுக்களும் அறுபட்டுவிடுமே! மாவரைக்கும்போதும், அம்மியில் அரைக்கும் வேளையிலும் மிகச்சிறிய உயிரினங்கள் குழவியில் அடிபட்டு மடிந்துபோகலாம்; வரட்டி, விறகுகளில் ஒளிந்திருக்கும் உயிரினங்கள், அடுப்பு நெருப்பில் மடிய நேரிடுகிறதே? தேனுக்காக தேனீக்களைத் தெரிந்தே அழிக்கிறோமே?! வரையறை இல்லாத அஹிம்சையை ஏற்றால், பல நன்மைகளை இழக்க நேரிடும். எறும்பு வராமல் இருக்க, தெரிந்தே நாம் எறும்புப் பொடியை உபயோகிப்போம்.



விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோ, 'லக்ஷ்மண ரேகையை’ (சாக்பீஸ் கோடு போன்று) அறிமுகம் செய்து, எறும்புகளை அழிக்க வழி சொல்கிறது.



உங்கள் கவனத்துக்கு ஒரு விஷயம்... எறும்புக்கு உணவளிப்பதற்காக மாக்கோலம் போடுவதில்லை. தரையைச் சுத்தம் செய்து, கோலம் போட்டு, சுப காரியங்களை நிறைவேற்றும்படி பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம் (ரங்க வல்யாத்யலம் கிருதம்). கோலம் போட்டு அதில் விளக்கை வைப்போம். கோலத்தின் மீது கும்பம் வைப்பதும் உண்டு. கோலமிட்டு அதன்மீது தட்டு வைத்து, விருந்தினரின் கால்களை அலம்பிப் பணிவிடை செய்வோம். அக்னி குண்டத்துக்குக் கோலம் போட்டு அழகுபடுத்துவோம்.



மற்றபடி, எறும்புக்கு உணவளிக்கவே கோலம் பயன்படும் எனும் கூற்று, சாஸ்திரத்துக்குப் புறம்பானது. எறும்புகள் கோலத்தைத் தாறுமாறாக்கினால், வேறு கோலம் வரைந்து சரிசெய்ய வேண்டும். கோலத்தை அழிப்பது அபசாரம். ஈரம் காயும் வரை, நாமே கோலத்தை மிதித்து அழித்துவிடாமல் இருக்கக் கண்காணிப்போம் இல்லையா?!



அரிசி மாவால் கோலமிடுதல் என்பது, எறும்புகளுக்கு உணவளிக்கும் எண்ணத்தில் எழவில்லை. அரிசியில் விச்வே தேவர்கள் குடியிருக்கிறார்கள். கோலத்தில் நிரம்பியிருக்கும் அவர்களது சாந்நித்தியம், செய்யும் சடங்கின் நிறைவுக்குத் துணை புரியும் (தண்டுலா:வைச்வதேவத்யா:). ஆக, கோலத்தில் எறும்புகள் வராமல் பார்த்துக்கொண்டு, அதில் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும். கோலத்தைக் காலால் மிதிக்கக்கூடாது. அதில் கவனம் வேண்டும். சடங்கு முடியும் வரை கோலம் இருக்க வேண்டும். கஷ்டப்பட்டுக் கோலம் போட்டுத்தான் எறும்புகளுக்கு உணவளித்து மகிழவேண்டும் என்பதில்லை; அரிசியை ஒரு மூலையில் கொட்டி வைத்தால் போதும்; எறும்புகள் எடுத்துக்கொள்ளும்; கால்களில் மிதிபட்டு மடியாமலும் இருக்கும்.




3. எங்கள் மகன், மகள் இருவருமே கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எங்கள் அந்திம காலத்துக்குப் பிறகு, எங்களுக்கு இவர்கள் கர்ம காரியங்கள் செய்யலாமா? கூடாது எனில், வேறு யார் மூலம் செய்யலாம்?



பண்பு, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றை ஒதுக்கி, தன்னிச்சையாகக் கலப்புத் திருமணத்தைச் சந்தித்த பிறகு, மீண்டும் சம்பிரதாயத்தை எட்டிப் பார்ப்பது சரியல்ல. தற்காலச் சூழலில், விருப்பப்படி திருமணம் செய்யலாம் என்று வந்த பிறகு, பழைய சடங்குகளை நிறைவேற்ற நினைப்பது பொருளற்றது. கலப்புத் திருமணத்தை ஏற்காதவர்களுக்கு, மரபுப்படி செயல்படுவது சிறப்பான விஷயம். அதன் சட்டதிட்டங்கள் அப்படித்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றிருக்கக்கூடாது. மரபை மீறியவனுக்கு அந்தச் சட்டதிட்டங்கள் பொருந்தாது; விருப்பப்படி செயல்படலாம்.



தங்கள் பங்காளிகளில் எவரேனும் முன்வந்தால், அவர்கள் உங்களுக்கானதை நிறைவேற்றலாம். அவர்கள் மரபோடு இணைந் தவராக இருக்கவேண்டும். நாம் விருப்பப்படி செயல்படுவோம்; தர்ம சாஸ்திரம் அதை ஏற்கவேண்டும் என நினைக்கக்கூடாது. வரம்பு மீறிய செயலுக்கு என்றைக்கும் தகுதி இழப்பு உண்டு. கலப்பு மணத்தில் மற்றொருவரின் மரபுப்படி செயல்படலாம். கலப்பில் இரண்டுக்கும் சம அந்தஸ்துதான். ஆகையால், ஒன்று இல்லையெனில் மற்றொன்றைப் பின்பற்றலாம்!


4. நவக்கிரகங்களை எந்தெந்த திசையை நோக்கிப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்?



சூரியன் கிழக்கு முகமாக இருக்கலாம். சந்திரன்- மேற்கு; செவ்வாய்- தெற்கு; புதன்- வடக்கு; குரு- வடக்கு; சுக்கிரன்- கிழக்கு; சனி- மேற்கு; ராகு- தெற்கு; கேது- தெற்கு... இந்த முறையில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என பரிந்துரைக்கிறது, ஸம்ஸ்கார ரத்னமாலை எனும் நூல். அத்துடன், மற்ற எல்லா கிரகங்களையும் சூரியனை நோக்கி பிரதிஷ்டை செய்வதும் சிறப்பு என்றும் சொல்கிறது.



விண்வெளியில் இருக்கும் கிரக வரிசைப்படியும் பிரதிஷ்டை செய்யலாம். கோள வடிவில்... சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி என்கிற ஏழு கிரகங்கள் வரிசையாக இருக்கும். இவற்றுடன் சேர்த்து ராகு- கேதுவையும் பிரதிஷ்டை செய்யலாம். கிரகங்கள் காலத்துடன் இணைந்திருக்கும்; காலம், எப்போதும் நம்முடன் இணைந்திருக்கும். ஒவ்வொரு சுப காரியத்திலும் கிரக வழிபாடும் இணைந்திருப்பதால், நவக்கிரகங்களுக்கென தனி வழிபாட்டு முறை தலை தூக்காத காலம் இருந்தது. தினமும் நீராடியதும், கை நிறைய தண்ணீரை அள்ளி 3 முறை கிரகங்களுக்குத் தர்ப்பணம் செய்யும் நடைமுறையை, வேத காலத்திலி ருந்தே வேதம் ஓதுபவர்கள் கடைப்பிடிப்பது உண்டு.



பிற்காலத்தில் வந்த சிந்தனையாளர்கள், நவக்கிரகங் களை ஆலயப் பிரவேசம் செய்வித்து, பிரதிஷ்டை செய்யும் முறையையும் பரிந்துரைத்தனர். இன்றும் பல கோயில்களில் நவக்கிரக சந்நிதி இருக்காது. ஆலயத்தில் உறைந்திருக்கும் (மூலவர்) திருவுருத்திலேயே நவக்கிரக சாந்நித்தியம் இருப்பதாகச் சொல்வார்கள். இந்தக் கோயில் ராகு ஸ்தலம், இது கேது ஸ்தலம் என்று சுட்டிக் காட்டுவதும் உண்டு. தற்போது பக்தர்களின் விருப்பம், பொருளாதாரம் ஆகியவற்றை முன் வைத்து, மற்ற மூர்த்தங்களுடன் சேர்த்து, நவக்கிரகங்களும் கோயிலில் இடம் பெற்றுள்ளனர்.



முன்பு கோயிலைத் தேடிச் சென்று பக்தன் வழிபடுவான். இப்போதெல்லாம் பக்தனுக்கு வசதியான இடங்களில் கோயில் வந்துவிடுகிறது. தனித்தன்மை மாறி, வியாபார ஸ்தலமாகக் காட்சியளிக்கும் கோயில்களும் உண்டு. இந்த மாதிரியான சிக்கலைத் தவிர்க்க, நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய முனையவில்லை முன்னோர்கள்.



எதிலுமே ஒரு புதுமை- ஒரு வித்தியாசம் இருந்தால், மக்களுக்கு ஈடுபாடு ஏற்படும். அதை அறிந்த அறிஞர்கள், புதுமையாகத் தோற்றுவித்ததே நவக்கிரக பிரதிஷ்டை. அதன் பிறகு, குறிப்பிட்ட திசைகள்வாரியாக அவர்களை பிரதிஷ்டை செய்யும் முறை பிரபலமானது.



5. வடநாட்டில், பெரியவர்களை வணங்கும்போது தலையில் முக்காடு போட்டுக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? அதேபோல், நம் கோயில்களில் நைவேத்தியம் செய்த பிறகே ஆரத்தி காட்டுகிறோம்; ஆனால், அங்கெல்லாம் ஆரத்திக்குப் பிறகே நைவேத் தியம் சமர்ப்பிக்கிறார்கள். ஏன் அப்படி?


தேசத்துக்கு தேசம் நடைமுறையில் மாறுபாடு தென்படும். இதை தேசசாரம்... அதாவது, நாட்டு நடப்பு அல்லது சம்பிரதாயம் என்பார்கள். சாஸ்திர சட்டதிட்டங்களுக்குக் குந்தகம் விளைவிக் காதவற்றை சம்பிரதாயம் என்று ஏற்று, நடைமுறைப்படுத்துவார்கள்.



திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பு- ஜானுவாசம் என்றொரு சம்பிரதாயம் உண்டு. அதேநேரம், மணப்பெண் அழைப்பு எனும் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்படும். மாமன் மகள்- அத்தை மகன் இவர்களின் திருமணம் நடந்தேறும்; முறைப்பெண் என்று அதைக் கடைப்பிடிப்பார்கள். தலையில் முக்காடு இடுவது, வடநாட்டு சம்பிரதாயம். பிற பெண்களைக் கூர்ந்து கவனிக்கக் கூடாது. அதற்கு உகந்த வகையில் முக்காடு பயன்படும். ஸ்ரீராமனுடன் வனவாசம் செல்லும்போது, முக்காடு போட்டுக் கொண்டிருந்தாள் சீதை. 'மக்கள் உன் முகத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். அதை நிறைவேற்ற வேண்டும்; முக்காடை அகற்றி, முகத்தைக் காட்டு’ என சீதைக்கு ஸ்ரீராமன் கட்டளையிட்டதாகத் தகவல் உண்டு.



சம்பிரதாயம் என்றால், எல்லோரும் கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று அல்ல. நைவேத்தியத் துக்குப் பிறகு ஆரத்தியும், ஆரத்திக்குப் பிறகு நைவேத்தியமும் சம்பிரதாயத்தில் விளைந்தது. கோயிலுக்கு பெரிய மனிதர்கள் விஜயம் செய்யும்போதெல்லாம் ஆரத்தி எடுக்கும் சம்பிரதாயம் தமிழ்நாட்டில் உண்டு. எனவே, சம்பிரதாயங்கள் குறித்த ஆராய்ச்சியைக் கைவிட்டு, வழிபாட்டில் கவனம் செலுத்துவதே நல்லது!


- பதில்கள் தொடரும்

நன்றி - சக்தி விகடன்

Monday, June 20, 2011

சாருநிவேதிதா - வாசகி @சேட்டிங்க் VS சீட்டிங்க் - காமெடி கும்மி

1.ஆண்களை பல பெண்கள் தவிர்க்க நினைக்கிறார்கள்,ஆனால் ஆண்கள் எந்தப்பெண்னையும் தவிர்க்க நினைப்பதில்லை#நீதி - பெண்ணை விட ஆண் நல்லவன்

----------------------------------

2. என்னுடன் எப்போதும் இருக்கும் தோழிகள் யாரையும் அடையாளம் தெரியாதா? ஏன்? என்றாள் காதலி.நிலா இருக்கும்போது நட்சத்திரங்களை யார் ரசிப்பது?

----------------------

3. கனிமொழிக்கு ரிலீஸ்ஆர்டர் கி‌டைக்கவில்லைசுப்ரீம் கோர்ட் கைவிரித்தது #கை விரிச்சா அப்போ உதய சூரியன் சின்னத்துக்கு ஆதரவுன்னு தானே அர்த்தம்?

---------------------

4.  சாருநிவேதிதா ON LINE -பெண் வாசகிகள் எச்சரிக்கை-யூ டியூப் நியூஸ்#அவர் ஆண்லைன்ல இருந்தா பெண்கள் ஏன் எச்சரிக்கையா இருக்கோணும்?டவுட்டு

--------------------

5. அடிக்கடி விடப்படுவதால் பெண்களின் கண்ணீருக்கு மதிப்பு கம்மி தான்,எப்போதாவது வருவதால் ஆணின் கண்ணீருக்குத்தான் மதிப்பு அதிகம்#அழகிய அழுகை

-----------------------\\

6. காதல் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு மந்திரக்கயிறு,அது காதலர்களை பிடித்துக்கொள்வதில்லை,காதலர்கள் தான் அதை பிடித்துக்கொள்கிறார்கள்#லவ்நெட்

-----------------------------

7. கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்காதீங்க: விஜயகாந்த் கண்டிப்பு#கமிஷன்னா கான்ட்ராக்டர்ட்ட தான் கேட்கனும்.. கண்டக்டர்ட்டயா கேட்க முடியும்?

------------------------------

8. கண்ணகி சிலை பஸ்ஸ்டாப் கூரை இடிந்தது#செண்ட்டிமெண்ட் சரி இல்லை, ஜெ ஆட்சி முடிந்தது-கலைஞர் ஆரூடம்

------------------------

9.  முழு நீள கவர்ச்சிப்படத்தில் நடிக்க ரெடி ஆகி விட்டேன் - நடிகை அனுயா #அப்படியும் சான்ஸ் லேதுன்னா முழுநீல கவர்ச்சிப்படத்துல நடிப்பீங்காளா? டவுட்டு

-----------------------

10.ஊழலால் இந்தியாவில்  ஆண்டுக்கு, 72,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.-கிரண்பேடி #மிஸ்கால்குலேஷன்  மிஸஸ். தமிழகத்துலயே அவ்வளவு வந்துடுமே?

------------------------

-----------------------

11. சாருநிவேதிதா- வாசகி அம்புட்டு நல்லவரா இருந்தா வா சகி என நான் அழைத்தபோதே எஸ்கேப் ஆக வேண்டியதுதானே? எஸ் நோ கேப்  (YES ,NO GAP) என சொன்னது ஏன்?#இமேஜினேஷன்

------------------------ 

 12. நாளை மீடியாக்கள் தலைப்பு செய்தி -பெண்லைன் -ல் குறுக்கிட்ட ஆண் லயன் சாரு,சாட்டிங்க்கில் நடந்த அக்கப்போரு#இமேஜினேஷன்@டேமேஜினேஷன்

--------------------------
 13/.  ட்விட் உலகின் சாரு நிவேதிதா யார்? என ஒரு வதந்தி உலா வருது.. அவர்க்கும் கலைஞருக்கும் ஜென்மப்பகை.மஞ்சள் முகமே வருக@க்ளூஸ்#கிசு கிசு

---------------------------

Sunday, June 19, 2011

கண்ணன் ஏமாந்தான்.... இளம் கன்னிகளாலே.....(ஆன்மீகம்)

http://guppic.com/uploads/2009/Oct/1256621501-1_406443875l.jpg 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

'பகவானுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அப்படியெனில் அந்த ஆயிரம் திருநாமங்களையும் சொன்னால்தான், பாபம் தீருமா?’ என்று கேட்கின்றனர் பக்தர்கள். 'தேவையில்லை. கேசவா எனும் திருநாமத்தை ஒருமுறை, ஒரேயரு முறை சொன்னாலே, நம் அத்தனைப் பாபங்களும் விலகிவிடும்’ என்கிறது கீதை.

அதற்காக ஒரேயரு திருநாமத்தை மட்டும், ஒரேயரு முறை சொன்னாலே போதுமானது என்று தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு, செயல்படக்கூடாது. 'கேசவா’ எனும் திருநாமத்தை மனதார ஒருமுறை சொன்னாலே, நாம் சேர்த்து வைத்திருக்கிற பாபங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்றால், அவனுடைய நாமங்கள் அனைத்தையும் சொல்லி வந்தால்... அதுவும் அனுதினமும் சொல்லி வந்தால்... பகவான் நமக்கு எவ்வளவு பலன்களைத் தருவார், எத்தனை புண்ணியங்கள் நம்மை வந்தடையும் என்று யோசிக்க வேண்டும்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்கினால், நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் வளமுடன் வாழ்வோம்!

'அது சரி... பகவானின் திருநாமத்தைச் சொன்னால், நம் ஊழிக்காலம் முதல் இன்று வரையிலான சகல பாபங்களும் தொலையும் என்கிறீர்கள். சுமார் ஆயிரம் வருடப் பாபம் என்றால், ஆயிரம் வருடங்கள் திருநாமத்தைச் சொல்ல வேண்டாமோ? அப்படிச் சொல்வதற்கு, ஆயிரம் வருடங்கள் நாம் உயிருடன் இருப்பது எவ்விதம்?’ என்றும் கேட்கலாம், 
சிலர்.
மிகப் பெரிய மலைப் பாறை. அங்கே, மிகச் சிறிய குகை ஒன்று. அந்தக் குகைக்குள் இதுவரை எவரும் சென்றதில்லை. குகையின் கதவை இதுவரை எவரும் திறக்கவும் இல்லை. ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, குகையின் கதவைத் திறந்து, உள்ளே நுழைந்ததும் என்னாகும்? பல்லாயிரக் கணக்கான வருடங்களாக அந்த குகைக்குள்ளேயே இருந்த இருட்டானது, சட்டென்று விலகிவிடும். 

http://farm1.static.flickr.com/133/352867983_87f8c184b6.jpg
அங்கே நம் கையில் உள்ள தீப்பந்தமானது, குகையின் இண்டு இடுக்குகளிலும் வெளிச்சப் பாய் விரித்திருக்கும். 'அதெப்படி... ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்த இருட்டை விரட்டுவதற்கு, ஆயிரம் தீப்பந்தங்கள் தேவை இல்லையா? அல்லது, அந்த இருளை அகற்றுவதற்கு ஆயிரம் வருடங்களேனும் வேண்டாமா?’ என்று கேட்பது புத்திசாலித்தனம் இல்லைதானே?

எத்தனை வருடங்களாக இருந்தால் என்ன... அந்த குகையின் கும்மிருட்டை விலக்குவதற்கு, ஒரு சின்ன தீப்பந்தமே போதுமானது. அதேபோல், நம் அத்தனைப் பிறவிகளின் பாபங்களும், அன்றைய பாபங்களும், ஏன்... இனி வரப் போகிற பாபங்களும்கூட, கண்ணனின் திவ்விய திருநாமம் ஒன்றைச் சொல்ல, பறந்தோடிவிடும். லட்சம் தீப்பந்தங்களுக்கு இணையானவன், பகவான் ஸ்ரீகிருஷ்ணன். எனவே, நம் பாபங்களை ஒரு நொடியில் பொசுக்கிவிடுவான், அவன்!

கேசவா எனும் திருநாமத்தைப் போலவே, 'ஹரி’ எனும் திருநாமமும் உசத்தியானதுதான்! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கச் சொல்கின்றனர், ஆச்சார்யர்கள். இன்றைய காலத்தில், நமக்கெல்லாம் பிரம்ம முகூர்த்தம் என்பதே காலை ஏழு, ஏழரை என்றாகிவிட்டது. பிரம்ம முகூர்த்த வேளை என்று சொல்லப்படும், நாலு நாலரை மணிக்கு எழுந்திருங்கள். 'ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி...’ என்று பகவானின் திவ்விய நாமத்தை ஏழு முறை உச்சரியுங்கள்; மனதாரச் சொல்லுங்கள். நம் ஏழேழு ஜென்மத்துப் பாபங்களும் நம்மை விட்டு நீங்கி விடும் என்பது உறுதி. ஹரி என்றாலே பாபங்களை அபகரிப்பவன் என்று அர்த்தம்.

ஒரேயரு விஷயம்... பகவானுக்காக அவனது திருநாமத்தை நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்காக, உங்களின் நலனுக்காகத்தான் அவனது திருநாமத்தைச் சொல்கிறீர்கள். ஆகவே, அவனுடைய திருநாமத்தை, அனுதினமும் சொல்லவேண்டும்; 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKcd5N_2iydpcE98o7KEZxCl0Quvt8xEIxpUHGhuio4d9Xir4pZe7K4I8O2QrAVPFrIMGmFvc6sTEpBmfNcP6hHUEcXBkCk8hslNaFtF4uaOTOtdnojDMcWHBEHZN7YuOxSK7FCXTxQhE/s1600/playing-vina.jpg

சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் மனதார ஆசைப்பட வேண்டும். ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். இத்தனைக்கும் அந்தப் பொருள், மிகமிகச் சாதாரணமானதாக இருக்கலாம்; கீழே விழுந்தால், சுக்குநூறாக உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். ஆக, நிலையற்ற ஒரு பொருளை அடைவதற்கு, எவ்வளவு ஆசைப்படுகிறோம்! 

அந்த ஆசையை, பகவானின்மீது வையுங்கள்; அவனை நினைப்பதில் விருப்பமாக ஈடுபடுங்கள்; அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் கிடைக்கிற ஆத்மதிருப்தியை நேசியுங்கள். பகவானின் திருநாமத்தை ஆசையுடனும் பிரியத்துடனும், அன்புடனும் நேசத்துடனும் நீங்கள் சொல்லச் சொல்ல, அவனது பரிபூரணமான ஆசீர்வாதம் உங்களையும் உங்களின் சந்ததியையும் வந்து அடையும் என்பதில் மாற்றமில்லை!  

முக்கியமாக ஒன்று... 'பகவானின் திருநாமத்தை 21 நாட்கள் சொல்லி வந்தால், செல்வம் சேரும்; 14 நாட்கள் உச்சரித்து வந்தால், கல்யாணம் கைகூடும்’ என்கிற கொடுக்கல்- வாங்கல் வியாபாரமாக, பக்தியையும் பிரார்த்தனையும் ஆக்கிவிடாதீர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி, ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்வதில், ஆழ்ந்த ஈடுபாடு காட்டி னால், உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவை அனைத்தையும் தருவான், ஸ்ரீகண்ணபிரான்!

கற்பக விருட்சம், காமதேனு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் எதைக் கேட்டாலும், அவை கொடுக்கத் தயாராக இருக்கும். ஆனால், 'என் தோட்டத்துக்கு வந்துவிடு’ என்று சொன்னால், கற்பக விருட்சமும் வராது; காமதேனுவும் சம்மதிக்காது. இந்த ஆசையால் துன்பப்பட்டவர்களின் கதைகளை, புராணத்தில் அறிந்திருக்கிறோம். 


http://www.dinamani.com/Images/article/2010/8/27/ve.jpg
ஆனால், ஸ்ரீகிருஷ்ணர்தான் கற்பக விருட்சம்; அவர்தான் காமதேனு என்பதை நாம் உணருவதே இல்லை. அப்படிக் கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் திகழ்கிற ஸ்ரீகிருஷ்ணரிடம், 'என் செல்லக் கண்ணா, நீ என் வீட்டுக்கு வந்துவிடேன்’ என்று அழைத்துப் பாருங்களேன்... மிகச் சந்தோஷமாக உங்கள் வீட்டுக்கு  ஓடி வந்துவிடுவான்! அது மட்டுமா? கேட்டதை, கேட்டதும் கொடுக்கிற கண்ணபிரான், அவனையே நமக்குத் தருவதற்குச் சித்தமாக இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.


மீன் பிடிக்கும் தொழிலாளி ஒருவன், ஒரு முறை கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தான். அவன் பிடித்த மீனின் வயிற்றுக்குள் விலை மதிப்பற்ற ரத்தினக் கல் இருந்தது. அவனுக்கு மீனின் அருமையும் ருசியும் தெரியும்; ஆனால் ரத்தினக் கல் பற்றித் தெரியவில்லை. அதை வெறும் கல் என்றே நினைத்தான், அவன்.

எதற்கும் இருக்கட்டும் என்று, அந்த ஊரில் இருந்த நகை வியாபாரியிடம் சென்று அந்தக் கல்லைக் காட்டினான். வியாபாரி, அது ரத்தினக் கல் என்பதையும், இந்த விஷயம் மீனவனுக்குத் தெரியவில்லை என்பதையும் தெரிந்துகொண்டான். 'இந்தக் கல்லோட விலை 20 ரூபாப்பா’ என்று சொல்லி, அந்தப் பணத்தைக் கொடுத்து, கல்லை வாங்கிக் கொண்டான். அந்தக் கல்லை அப்படித் திருப்பினால் நீல நிறமாகவும், இப்படித் திருப்பினால் பச்சை நிறமாகவும், இந்தப் பக்கம் திருப்பினால் சிவப்பு வண்ணத்திலும், அந்தப் பக்கமாகத் திருப்பிப் பார்த்தால் வேறொரு நிறத்திலுமாகத் தெரிய... குதூகலத்தில் திக்குமுக்காடிய வியாபாரி, விறுவிறுவென அரண்மனைக்குச் சென்று, மன்னனிடம் ரத்தினக் கல்லின் மகிமையைச் சொல்லி, அதன் விசேஷங்களை எடுத்துரைத்து, 'அதன் விலை ஒரு கோடி ரூபாய்’ என்றான். 

உடனே மன்னனும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து, அந்த ரத்தினக் கல்லை வாங்கிக்கொண்டான். அதை ஆபரணமாக்கி, ராணியின் கழுத்தில் போட்டான். ஆக... மீனவன், வியாபாரி, மன்னன்... இவர்களில் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள்?

அதாவது, அந்த மீனவனைப் போல, ரத்தினத்துக்கு இணையான பகவானின் சகஸ்ரநாமங்களை அறியாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது, 'நோயிலிருந்து விடுதலை வேணும்; கல்யாணம் சீக்கிரமே நடக்கணும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டு, அந்த ரத்தினத்தை அந்த வியாபாரி ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதுபோல, செயல்படப் போகிறீர்களா? அல்லது, அந்த ரத்தினத்தை ஆபரணமாக்கித் தன் மனைவி கழுத்தில் போட்டு அழகு பார்த்த ராஜாவைப்போல, 'எனக்கு எதுவுமே தேவையில்லை. அனுதினமும் பகவானின் திவ்விய நாமத்தைச் சொல்வதே ஆனந்தம்; நிறைவு’ என்று வாழப் போகிறீர்களா?


அதாவது, நீங்கள்... மீனவனா? நகை வியாபாரியா? மன்னனா? இதை உணர்ந்து தெளிந்து நடப்பதில்தான், வாழ்வின் மொத்த இன்பமும் இருக்கிறது.
கோயிலில், நமது பெயர், நட்சத்திரம், கோத்திரமெல்லாம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். எதற்கு இது? அவசியமே இல்லை. 'நான் இன்னார்... என் பெயர் இது... கோத்திரம் இதுவே’ என்று நீங்கள் யாரிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்கள்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuIhmZn8dmfSJC1HQmU5Ox05sgDhCLg6E2kAm6hwnSuL0rsWlaljjswUWtltBuZE9-CDO7QorJ1oLTvXNbXStP3ZyAevKEBumOiYG7w4aeXosPmeem97H3yEm4n0eFob8GKCyxBOj4Pa2Q/s1600/krishna_lotusfeet.jpg
விடிந்ததும் எழுந்து, பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற அப்பாவிடம், 'ஹலோ... என் பேரு கிருஷ்ணன்; எனக்கு இத்தனை வயசு; என் கோத்திரம் இதுதான்!’ என்று தினமும் சொல்லிக்கொண்டா இருக்கிறோம்? ஒருவேளை மூப்பு காரணமாக, பிணி காரணமாக, மறதி காரணமாக, அப்பாவிடமே நம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிற சூழலும்கூட ஒரு கட்டத்தில் ஏற்படலாம். ஆனால், நம் அப்பனுக்கெல்லாம் அப்பனாக, உலகத்துக்கே தந்தையாக, கடவுளாகத் திகழ்கிற பகவானிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், அவனுக்குப் பிணியும் இல்லை; மூப்பும் இல்லை; மறதியும் கிடையாது!

எனவே, பகவானின் நாமங்களை, ஒரு கடமையாக, ஒரு தவமாக, சந்தோஷமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். யார் கண்டது... உங்கள் வீடு தேடி அந்தக் கண்ணனே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

நன்றி - சக்தி விகடன்

Saturday, May 28, 2011

காஞ்சிபுரம் நர்சிங்க் கல்லூரி மாணவியுடன் ஜி ஹெச் ஊழியர் சல்லாபம்... விடுதியா? லாட்ஜா? மக்கள் ஆவேசம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAciu6w_Fqc5DWQ5nmgzdn1JBGHy_dtJrBXfPTLTi94jZ_xH4Ltx3KYOgPQtJ6iKX_kkdFr4wdUp9C1wT3yP0eOkz_6Tae9Hg4rGhM-P9eLkBetyktIRxzJtucMN0t9aNDn-jvXwEbBug/s400/74179536.jpg 

ர்ஸிங் கல்லூரியில் ஒரு மாணவி​யுடன், அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்டதாக எழுந்துள்ள புகாரால், அசிங்கப்பட்டுக் கிடக்​கிறது காஞ்சிபுரம் அரசு மருத்துவ​மனை! 

சி.பி- சரி.. விடுங்க அவர் டியூட்டி டைம்லயா பண்ணுனாரு..?தன்னோட டியூட்டியை  முடிச்சுட்டுத்தானே செஞ்சாரு.. பாவம்.. 


மருத்துவமனை வளாகத்திலேயே அரசு நர்ஸிங் கல்லூரியும், மாணவி​களுக்கான விடுதியும் உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படிக்கிறார்.

சி .பி. ஹா ஹா நான்காம் ஆண்டு படிக்கிறாரா? படுக்கிறாரா? #டவுட்டு
கடந்த 22-ம் தேதி இரவுப் பணியில் இருந்த மருத்துவமனை துப்புரவு ஊழியர் சண்முகமும், நர்ஸிங் மாணவி சுனிதாவும் விடுதி யின் ஓர் அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

சி.பி- துப்புரவு ஊழியர் என்பதால் வேலையை சுத்தமா க்ளீன் பண்ணீட்டார் போல.. ஹா ஹா 


மறுநாள்... மருத்துவமனை வட்டாரத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட... மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் குமரேஷ், போலீஸில் புகார் கொடுத்து விட்டார். 

சி.பி- அவருக்கு என்ன பொறாமையோ?  டாக்டருக்கே செட் ஆகலை.. அவனுக்கு செட் ஆகிடுச்சுனு கோபத்துல போட்டுக்குடுத்துட்டார் போல..

சண்முகம் இப்போது இருப்பது சிறையில். அவமானத்தில் வெதும்பிய மாணவி சுனிதா, தூக்க மாத்திரைகளை விழுங்கித் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சக மாணவிகளால் காப்பாற்றப்பட்ட அவர், இப்போது அவசரச் சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறார்.

சி.பி - பார்த்துக்குங்க ஜாக்கிரதையா..அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிற  கம்பவுண்டரையும் பாப்பா கணக்கு பண்ணிடப்போகுது.. 

இந்த சம்பவம் குறித்து இணை இயக்குநர் குமரேஷிடம் விசாரித் தோம். ''நள்ளிரவு 2 மணிக்கு சிறுநீர் கழிப்பதற்காக 2 மாணவிகள் கீழே வந்துள்ளனர். அப்போது, ஆய்வு அறைக்குள் சத்தம் கேட்டுள்ளது. உள்ளே திருடன் புகுந்திருப்பானோ எனப் பதற்றம் அடைந்த இரு மாணவிகளும், வார்டன் மேரியை எழுப்பி விஷயத்தைக் கூறியுள்ளனர். அவர் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, அறைக்குள் அரை நிர்வாண நிலையில் சுனிதாவும் சண்முகமும் இருந்துள்ளனர். சண்முகத்தை மட்டும் உள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டு, எனக்கு போன் செய்தனர்.

 சி.பி - ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமா?ஏன் 2 பேரையும் அதே அறைல வெச்சு பூட்டலை?ன்னு யாரும் கேட்றாதீங்க.. அப்புறம் அவங்க 2 பேருக்கும் இன்னும் சவுகர்யம் ஆகிடும்.. 

நான் வந்து விசாரித்தேன். சுனிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் சண்முகம். எனவே, போலீஸில் சண்முகத்தை ஒப்படைத்தோம்...'' என்றார்.

சி.பி- ஹா ஹா அந்த ஃபிகர் ஒண்ணோட முடிச்சுக்கலாம்னு சொல்லி இருக்கும். அண்ணன் ரெண்டாவது லட்டு திங்க ஆசைப்பட்டிருப்பார்..  
ஆனால், சண்முகத்தின் தரப்பு நேர் எதிராகச் சொல்கிறது. ''அவங்க சொல்றது அத்தனையும் பொய். ஆஸ்பத்திரியில, ரொம்ப நாளாவே சண்முகத்துக்கு எதிரா ஒரு குரூப் வேலை செய்கிறது. 

 சி.பி - அடச்சே.. ஒரு குரூப்பேவா? எதுக்காலயேவா? அவ்வ்வ்வ்வ்வ்


அதை அவனும் சொல்லி வந்தான். அவன்கிட்ட இருக்கிற ஒரே கெட்ட பழக்கம், வேலைக்கு லேட்டா போறது தான்.

 சி.பி - இது கெட்ட பழக்கம் இல்லையே .. பெரும்பாலான கவர்மெண்ட் ஸ்டாஃப்ஸ் கிட்டேயும் தொத்திக்கிட்ட பழக்கம் தானே?


பல தடவை சொல்லியும் கேட்கலை. அதுக்காக, 6 மாசத்துக்கு முந்தி தாம்பரத்துக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்தாங்க. 

சி.பி - அண்ணன் அங்கே எத்தனை முடிச்சாரோ?
அங்கேயிருந்து, ஒரே மாசத்துல திரும்ப காஞ்சிபுரத்துக்கே வந்துட் டான். அந்தப் பொறாமையிலதான், பொம்பள விவகாரத்துல அவனை சிக்க வெச்சிட்டாங்க...'' என்கிறார் சண்முகத்தின் தாய் சரோஜா.

சி.பி - அவன் ஹோமோவா இருந்திருந்தா ஆம்பள விவகாரத்துல சிக்க வெச்சிருப்பாங்க.. உங்க பையன் நார்மல் போல.. அதான் பொம்பள மேட்டர்ல மாட்டிக்கிட்டான் ஹா ஹா 

சண்முகத்தின் வக்கீல் ரமேஷ், ''இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 448-ன் படி, சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்தானே புகார் கொடுத்திருக்க வேண்டும். மருத்துவமனை இணை இயக்குநர் குமரேஷ் ஏன் புகார் செய்துள்ளார்?

சி. பி. அதான் ஏற்கன்வே சொன்னமே.. அவருக்கு என்ன காண்டோ?


என்பதில்தான் பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது. சுவர் ஏறிச் சென்று, விடுதியில் உள்ள அறை ஒன்றில் மாணவியுடன் தகாத உறவு கொண்டதாக எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. 

 சி.பி - நல்லா விசாரிக்க சொல்லுங்க.. வாட்ச் மேன்க்கு லஞ்சம் குடுத்து போயிருப்பாரு,..


பெண்கள் விடுதியில் அதுவும் மருத்துவமனையை ஒட்டியுள்ள மாணவிகள் தங்கியுள்ள விடுதிக் கட்டடம், யார் வேண்டுமானாலும் சாதாரணமாகச் சென்று வர முடியும் என்ற அளவுக்குப் பாதுகாப்பு குறைவானதாகவா இருக்கிறது? 

 சி.பி - ஜொள் பார்ட்டிகள் எல்லாம் நோட் பண்ணிக்குங்கப்பா


அந்தக் கட்டடத்துக்கு, இரவு வாட்ச்மேன் இருக்கிறார். அது மட்டுமல்லாமல், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவது மாணவிகளின் ஆய்வு அறை.

 சி.பி - சம்பவம் ,சம்பவம்னு சொல்றாங்களே.. அது ஆய்வு அறையில் நடந்ததால இனி அந்த அறைக்கு டிமாண்ட் ஆகிடும் பாருங்க.. செண்ட்டிமெண்ட் பார்ப்பாங்களே நம்ம ஆளுங்க.. 


மாலையில் வகுப்பு முடிந்ததும், அந்த அறை பூட்டப்பட்டு விடும். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தைக் குறிப்பிட்டுள்ள போலீஸ், நேரில் பார்த்த சாட்சியாக யாரையும் குறிப்பிடவில்லை. உள்நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு எடுபடாது!'' என்றார் உறுதியாக.

சி.பி - நேரில் 2 பொண்ணுங்க பார்த்திருக்காங்க.. அவங்க எப்படி சாட்சி சொல்வாங்க? அப்புறம் கோர்ட் வரை அவங்க பேரும் ரிப்பேர் ஆகுமே..

மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தால் விஷயம் வேறு மாதிரியாக இருக்கிறது. விடுதியின் அறைகளைச் சுத்தம் செய்வது சண்முகத்தின் வேலை. சுனிதாவின் அறைக்கு அப்படி அடிக்கடி சென்று வந்த போதுதான், இருவருக் கும் நட்பு ஏற்பட்டுள்ளது. 

சி.பி - என்னது ? நட்பா? ஹி ஹி 
இதுபற்றி அப்போதே டீனுக்கு தெரிந்துள்ளது. இருவரையும் பல முறை கண்டித்ததார்கள்.

சி.பி - ஓஹோ .. பல முறை கண்டிச்சாங்கன்னா பல முறை தப்பு நடந்திருக்குன்னுதானே அர்த்தம்?

ஆனால், அதை இருவரும் பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது போல, பல முறை அவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டிருந்தாலும், இப்போது போலீஸில் புகார் செய்திருப்பதற்குக் காரணம்... சக மாணவிகள் பார்த்தது தான். நிர்வாண நிலையில் பிடிபட்ட அவமானத்தில், தற்கொலை முயற்சி செய்த சுனிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறதாம். ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால்... என்று பதறிய மருத்துவமனை நிர்வாகம், போலீஸுக்கு போய் விட்டதாம். மாணவியின் எதிர்காலம் கருதி, அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறது போலீஸ்.

விடுதியில் தங்கியிருப்பவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து சீர்படுத்த வேண்டிய வார்டன், இனியாவது விழிக்கட்டும்!


சி பி - பேசாம வார்டனுக்கு காமிரா செல்ஃபோனும்,2 ஜி பி மெம்மரி கார்டும் வாங்கி குடுத்துடுங்க.. நல்லா கண்காணிப்பாரு.. அவருக்கும் பொழுது போகும்.. போலீஸ்கும் ஆதாரம் ஈசியா சிக்கும்.. 


நன்றி - ஜூ வி

Sunday, May 15, 2011

சிட்டுக்குருவி லேகியம் ஏன் கிடைப்பதில்லை?

http://farm3.static.flickr.com/2771/4330801825_827fa6f366.jpg
 சிட்டுக்குருவி... நம்மில் பெரும்பாலானவர்களின் உயிரோடும்... உணர்வோடும் உறவாடிய ஒரு ஜீவன் என்றால்... அதில் அதிசயம் ஏதுமில்லை! ஆம்... சின்னஞ்சிறு வயதில் சிட்டுக்குருவிகளோடு விளையாடாதவர்கள் மிகக் குறைவே! அதன் முட்டைகளைத் தேடிப்பிடித்து கையில் வைத்து விளையாடுவது, அதன் குஞ்சுகளை ஆசையோடு வருடிக் கொடுப்பது, சிறகடித்து விர்ரென்று பறக்கும் அந்த அழகை ரசிப்பது... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தகைய அனுபவம்தான், இலக்கியம், சினிமா என்று எல்லா இடங்களிலும் சிட்டுக்குருவியை ஆசை ஆசையாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆனால், இதெல்லாம் எதிர்கால தலைமுறைக்கு கொஞ்சம் கூட கிடைக்காமல் போய்விடக்கூடிய ஆபத்து துரத்திக்கொண்டே இருப்பதுதான் கொடுமை!


மைனா, பருந்து, ஆந்தை... என அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில் சிட்டுக்குருவியும் சமீபகாலமாக சேர்ந்திருக்கிறது. யாருக்கும் சிறு தீங்கும் இழைக்காத அந்த சின்னஞ்சிறிய ஜீவன், ஏதேதோ காரணங்களுக்காக வேட்டையாடப்படுவது காலகாலமாக நடக்கிறது. ஆனால், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, சமீப வருடங்களில் அவை அழிவின் விளிம்புக்கே துரத்தப்பட்டிருப்பதுதான் பெருங்கொடுமை!'' என்று நடுங்கும் குரலில் எச்சரிக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!


!

இத்தகைய நிலையில், சிட்டுக்குருவிகளைப் பற்றிய விழிப்பு உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ம் தேதியை 'சிட்டுக்குருவிகள் தினம்’ என்று கொண்டாடி வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

 பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இயற்கை ஆர்வலரான சதீஸ்முத்துகோபால், பழனிமலை பாதுகாப்பு இயக்கத்தோடு இணைந்து, பழனியில் உள்ள அக்ஷயா பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் சிட்டுக்குருவிகள் தினத்தைக் கொண்டாடினர்.


அதில், 'சிட்டுக்குருவி’ என்ற குறும்படத்தைத் திரையிட்டு, குருவிகள் பற்றிய பல விஷயங்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. குருவிக் கூடுகளையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள். 

 
அது பற்றிப் பேசிய, சதீஸ்முத்துகோபால், ''ஒரு காலத்தில் வீட்டு முற்றங்களிலெல்லாம் அமர்ந்து உறவு பாராட்டி வந்த சிட்டுக்குருவிகளை இன்று பார்ப்பதே அதிசயமாக இருக்கிறது. அந்த ஜீவன் அழிந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட நாம் உணராமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.

 பாரம்பர்ய விவசாய முறைகளை விட்டொழித்து ரசாயனத்தைப் பயன்படுத்துவதுதான் இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம். ரசாயனத்தின் எச்சம் மிஞ்சிய தானியங்களை உண்ணும்போது அதன் வீரியத்தை அந்த சின்னஞ்சிறு ஜீவனால் தாங்க முடியாமல் மடிந்து போகின்றன.
http://2.bp.blogspot.com/_WDqhbHM_0Zo/S_p_W9KSgyI/AAAAAAAAAYk/A7qo6oDNHgw/s1600/2.jpg
 அலைபேசிக் கோபுரங்களின் கதிர் வீச்சு, வாகனங்களின் ஒலி, பட்டாசுச் சத்தம் என்று அந்தக் குருவிகளின் அழிவுக்குக் காரணமான விஷயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்'' என்றவர்,

''வீடுகளில் உயரமான இடங்களில் சின்னச்சின்ன சட்டிகளை வைத்து, அதில் கம்பையும், சிறிது நீரையும் ஊற்றி வைத்தால்... சிட்டுக்குருவிகள் தேடி வந்து உண்ணத் தொடங்கும். அதேபோல செம்பருத்தி, மல்லிகை போன்ற செடிகளை வளர்த்தால், அவற்றில் குருவிகள் கூடுகட்டிக் கொள்ளும். முடிந்தளவுக்கு விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்க முன்வர வேண்டும்'' என்று அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் சொன்னார்.

நிறைவாக, ''பெங்களூருவில் ஒவ்வொரு வருடமும் சிட்டுக்குருவிகள் தினத்தன்று, குருவிகளைப் பாதுகாக்கும் எண்ணம் மக்களுக்கும் வரவேண்டும் என்பதற்காக, விலங்குகள் ஆணையம் மூலமாக, குருவிக் கூடுகளை இலவசமாக அரசாங்கம் வழங்கி வருகிறது. அதுபோல தமிழக அரசும் கூடுகளை வழங்கி, குருவிகளைக் காப்பாற்றும் எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்'' என்ற கோரிக்கையையும் வைத்தார் சதீஸ்முத்துகோபால்.

 நன்றி - விகடன்

நன்றி - சன் டி வி
http://10000birds.com/wp-content/uploads/2009/10/savannah-sparrow-3.jpg