Showing posts with label ANANTH. Show all posts
Showing posts with label ANANTH. Show all posts

Sunday, June 10, 2012

முன்னணி வசனகர்த்தாக்களின் - 'நான் ரசித்த வசனம்'

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் திரைக்கதை - வசனகர்த்தாக்கள் சிலரிடம், ''நீங்கள் எழுதிய வசனங்களிலேயே, நீங்கள் ரசித்து மகிழ்ந்த வசனம் எது?'' என்று கேட்டோம். அவர்கள் ரசித்த சில வசனங்கள்: 



 'வியட்நாம் வீடு’ சுந்தரம்: 


பிரஸ்டீஜ் பத்மநாபன் ரிட்டையரான அன்று வீட்டுக்குள்ளே வந்ததும், தான் யூஸ் பண்ணின டிஃபன் கேரியர்வைத்த கூடையிடம் பேசுவார்: ''நாளைலேருந்து நீ ஆபீஸுக்குப் போக மாட்டே... இன்னி யோடு சரி!'' அடுத்து, கோட்டுகிட்டே சொல்வார்: ''இனிமே யூ ஆர் நாட் நெசஸரி... என் சர்வீஸே கம்பெனிக்கு நாட் நெசஸரின்னுட்டா... இவ்வளவு வருஷம் வேலை செஞ்சோம்... அட, வயசாயிடுத்துன்னு அவன் ஆத்துக்கு அனுப்பிச்சுட் டான்... நானாவது கேட்டிருக்கலாம். நேக்கு ஒரு பிரஸ்டீஜ். பிரஸ்டீஜ் பத்மநாபனோல்லியோ... வந்துடுத்து... குழந்தைகள்லாம் சின்ன குழந்தைகள்... விவரம் தெரியாம வளர்த்துட்டேன்... பொறுப்பு வரல்லே... சாவித்திரிக்கே இன்னும் பொறுப்பு வரலை...'' என்று சொல்லிவிட்டுத் தாயார் படத்தின் முன்னே நின்று, ''அம்மா! நான் ரிட்டையராயிட்டேன்... உன் குழந்தைக்கு 55 வயசாயிடுத்து... ஹி இஸ் கௌன்ட்டிங் ஹிஸ் டேஸ் டு தி க்ரேவ்''னு சொல்லிண்டே அழுவார் சிவாஜி.



கடைசியில் ஆஸ்பத்திரிக்குப் பத்மநாபன் கிளம்பும் முன், தன்னை வளர்த்து ஆளாக்கின அத்தையிடம் பணத்தைக் கொடுத்து... ''நீ காசிக்குப் போகணும்னு சொன்னே பார்... இந்தா, வெச்சுக்கோ'' என்பார். ''இப்ப எதுக்கப்பா?'' என்று அத்தை கேட்பாள்.


''இருக்கட்டும்... வெச்சிக்கோ... நீ முந்திண்டா நோக்கு... நான் முந்திண்டா நேக்கு...'' என்று குலுங்கக் குலுங்க அழுது மற்றவர்களையும் அழவைத்தார் பத்மநாபனாக வரும் சிவாஜி!



ஏ.எஸ்.பிரகாசம்: 


'புகுந்த வீடு’ படத்தில் மனைவி ஒரு புதிர் போடுகிறாள். விடுகதைபோலச் சொல்லி விடையும் சொல்லும் அந்த வசனம்: ''சேர்ந்தது ரெண்டு பேரு... சிக்கினது ஒரு புதையல்... ஒருத்தருக்குத் தெரியும், ஒருத்தருக்குத் தெரியாது... இதிலே சேர்ந்தது நீங்களும் நானும்... புதையலைத் தெரிஞ்சது நான். தெரியாதது நீங்க. புதையல்... இப்ப என் வயித்துலே வளர்ந்துக்கிட்டிருக்கற உங்கக் குழந்தை...''



'வீட்டு மாப்பிள்ளை’ படத்தில் மாமனார் சுந்தர்ராஜன் தன் இரு மாப்பிள்ளைகளில் பணக்கார மாப்பிள்ளையைத் தன் 'பைப்’புக்கும், ஏழை மாப்பிள்ளையைச் செருப்புக்கும் உதாரணம் காட்டு வார்.


ஏழை மாப்பிள்ளையான ஏவி.எம்.ராஜன் சொல்வார், ''மாமா!... நீங்க கையிலே பிடிச்சுக்கிட்டிருக்கிற 'பைப்’ உங்களைத் தேச்சிக்கிட்டு இருக்கு... நீங்க கால்லே போட்டிருக்கற செருப்போ உங்களுக்காகத் தேஞ்சிக்கிட்டிருக்கு...''



விசு: 'அவன்... அவள்... அது’ படத்தில் 'குழந்தை மேல் பாசம்கொண்டு சொந்தம் கொண்டாடக் கூடாது’ என்று கண்டிஷன் போடும் லட்சுமியிடம், ஸ்ரீப்ரியா பதில் சொல்வார்: ''பெத்த பொண்ணை ரயில்வே லைன்லே போட்டுட்டுப் பக்கத்து வீட்டுக்காரனோட ஓடினவளுக்குப் பொறந்தவம்மா நான். என் பரம்பரைக்கே பாசம் கிடையாது... நீ என்னை நம்பலாம்...''


'சதுரங்கம்’ படத்தில் லஞ்சம் வாங்காத ரஜினியை லஞ்சம் வாங்கத் தூண்டுவார் பிரமீளா.


பிரமீளா: உங்க ஆபீஸ் கிளார்க் சிவகுமார் தன் பொண்டாட்டிக்கு வைர மூக்குத்தி வாங்கிக் கொடுத்திருக்கார்... என்ன மூக்குத்தி... வைர... வைர... மூக்குத்தி...


ரஜினி: சிவகுமாரோட பொண்டாட்டி ஊர்லே கண்டவனோட போறாளாம்... நீயும் போறியா..? அப்ப நானும் வைர மூக்குத்தி வாங்கித் தரேன்...



மணிவண்ணன்: 


'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்:


அம்மா: ஏண்டா விச்சு, பேச முடியாம படுத்துண்டிருக்கியா..? இல்லே, பேசக் கூடாதுன்னு படுத்துண்டிருக்கியா?


விச்சு: அம்மா... அவ இல்லாம என்னாலே இருக்க முடியாதும்மா... பசிக்குது... என்னாலே சாப்பிட முடியலே... தூக்கம் வருது... என்னாலே தூங்க முடியலே... நா அவளைப் பார்க்கணும்... அவளோட பேசணும்... அவளோட வாழணும்... இல்லே, அவளோட சாகணும்மா...


அதே படத்தில் இன்னொரு சீன்ல...


பாதிரியார்: கவலைப்படாதீங்க... கர்த்தரோட ஆசீர்வாதத்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்மா...



அம்மா: எல்லாம் நல்லபடியா நடந்தா சரிங்க... அது கர்த்தரோட ஆசியிலே நடந்தாலும் சரி, கந்தனோட கருணையாலே நடந்தாலும் சரி...



மௌலி: 


பள்ளிப் பருவத்தில் தன் தந்தை மிகவும் கண்டிப்பாகத் தன்னை வளர்த்ததைத் தனக்கு இழைத்த கொடுமையாக எண்ணிக்கொண்டு தன் மகனுக்கு அளவுக்கு மீறி வசதிகள் செய்துதருகிறார் தந்தை. இதனால் பாட்டனார் உள்ளே இருக்கும் ரூமில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து வாசல் கதவு வரை வந்துவிடுகிறார்.



வாய் மூடிக்கிடக்கும் பாட்டனாரைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டுக்கு வரும் குடும்ப நண்பன் கான் ஆச்சர்யப்பட்டுக் கேட்கிறான்.


கான்: என்ன பெரியவரே... இங்க மூலையிலே குந்தியிருக்கீங்க...?


பெரியவர்: பேரனுக்கு விவரம் தெரியாம இருந்தப்ப உள்ளாற இருந்தேன். விவரம் தெரிஞ்சுது - ஹாலுக்கு வந்தேன். வேலைக்குப் போனான் - இங்கே வந்துட்டேன். நாளைக்கு வெளியே வராந்தாவில் போடறதுக்குள்ளாற போயிடணும்பா...



'ஒரு வாரிசு உருவாகிறது’ படத்தில் இடம்பெறும் இந்த வசனத்தை வயதானவர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்!



நன்றி - விகடன் 

Saturday, June 09, 2012

ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் அதிரடிப்படங்கள் 4 - முன்னோட்டம்

சும்மாச்சுக்கும் இல்லை... நிஜமாகவே உலகம் முழுக்க வெளியாகி திரையரங்குகளை அதிரடிக்கவிருக்கும் மெகா சினிமாக்கள் குறித்த கலர்ஃபுல் டிரெய்லர் இங்கே... -ஜாக்கிசான்,ஜேம்ஸ்பாண்ட்,ஸ்பைடர் மேன் -லேட்டஸ்ட் படங்கள் ஒரு பார்வை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjb6qt7JlXkMSs-DZjTDbHWnfGksOCP8LlErDRkECHj30yauePg6JmWr80yHQnYcd_XQ6DGNi0_Qxno0D6f4tSo5xMqEBU5jr-iG1xgpNUrwaxhAPpGM0_lD6lrB5xa1S21QW_EvBN1SCc/s1600/Skyfall+Movie+Poster.jpg

ஸ்கை ஃபால்

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 23-வது படம். டேனியல் க்ரேய்க்கின் மூன்றாவது பாண்ட் அவதாரம். ''டபுள் ஓ செவன்... நீ என் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவன்னு உனக்குத் தெரியாதா?'' என அடிக்கடி பாண்டின் மீது செல்லக் கோபம் காட்டும் 'மிஸ் எம்’ அப்பத்தா ஓர் இக்கட்டில் சிக்கிக்கொள்கிறார். அது அவர்களின் 'எம்16’ (MI6) புலனாய்வு அமைப்புக்கே சிக்கலாகும் சமயம் பாண்ட் என்ன செய்கிறார் என்பதுதான் படம்.


'மிஸ் எம்’ வேடத்தில் முந்தைய படங்களில் நடித்த ஜூடி டென்ச்சின் கணவர் இறந்த பிறகு, 'இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்’ என்று அறிவித்திருந்தார். ஆனால், பிறகு 'பாண்ட் படங்களுக்கு என் ஆயுள் முழுக்க நடிக்கக் கடன்பட்டு இருக்கிறேன்’ என்று தன் முடிவை மாற்றிக்கொண்டு, அடங்காத குதிரை பாண்டை மிரட்டி வேலை வாங்கும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.


''மிஸ்டர் ஜேம்ஸ்... யார்கிட்ட இருந்து எப்படி உண்மையை வரவழைக்கணும்னு உங்களுக்குச் சொல்லியா தரணும்?'' என்றபடி ஆடைகளைக் களையும் ஹீரோயின்களாக நவோமி ஹாரிஸும்  பெரினிஸ் மார்லோவும் நடித்திருக்கிறார்கள். கறுப்பழகி நவோமி ஹாரீஸுக்கு படத்தில் பாண்டுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகள் உண்டு. பாண்டுடன் நவோமி உருண்டு புரளும் சமயமே ஹிட் ஹாட் கெமிஸ்ட்ரியும் அரங்கேறுமாம்.


முன்னெப்போதையும்விட, இந்த பாண்ட் படத் தயாரிப்பில் ஏகப்பட்ட சிக்கல். ஆரம்பத்தில் எம்.ஜி.எம். நிறுவனம்தான் படத்தைத் தயாரித்தது.


ஆனால், வங்கிக் கொள்ளையில் பணத்தைப் பறிகொடுத்து மிகப் பெரிய இழப்பில் தவித்த அந்த நிறுவனம், படத்தை சோனி நிறுவனத்துக்குக் கை மாற்றியது. இதனால் உப தயாரிப்பாளர்கள்  நம்பிக்கையிழந்து கழன்றுகொண்டனர். இந்தியாவில் கொங்கன் ரயில்வேயின் அதீத வளைவுகளில் படம் பிடித்த சமயம் ரசிகர்கள் கூட்டத்தால் ரத்தான படப்பிடிப்பு, விபத்து காரணமாக டேனியல் க்ரேய்க்கின் ஓய்வு என ஏகப்பட்ட தடைகள். அத்தனையையும் தாண்டி உள்ளம் கொள்ளைகொள்ள வருகிறான் பாண்ட்!



படத்துக்கான பட்ஜெட்...? 150 மில்லியன் டாலர்கள் மட்டுமே! நம்மூர் மதிப்பில் கிட்டத்தட்ட 838 கோடி ரூபாய். படத்தில் வில்லனுக்கே 100 கோடி சம்பளமாம். அப்போ க்ரேய்குக்கு..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvazIv0HWuUK8xDyTsg_CWYCaUU27M7y8ieU_BSQ3Gw9zX0_w3KRmRoKoNo3E31oHVSHJhz1sSLwauS6UX6y8UxhszNfw78SwcKo8ad6OzQyoP1TodBcJQRSJbibBL0Pt22_HbltUvlavY/s1600/cz12+poster+cannes.JPG



சைனீஸ் ஸோடியாக்
''இந்தப் படத்தோடு ஆக்ஷனில் இருந்து ஓய்வுபெறப்போகிறேன். இனி, என் வயதுக்குத் தகுந்த மென்மையான படங்களில் மட்டுமே நடிப்பேன்'' என ஜாக்கிசான் அறிவித்திருப்பதால், எதிர்பார்ப்பை மில்லியன் டாலருக்கு எகிறவைத்துள்ள படம்... 'சிஇசட்12’ (CZ12) என்று குறிப்பிடப்படும் சைனீஸ் ஸோடியாக்.


12.12.12-ல் வெளியாகவிருக்கும் இந்தப் படம், ஜாக்கியின் ஹிட் சீரிஸ் படமான 'ஆர்மர் ஆஃப் காட்’ படத்தின் மூன்றாவது பாகம். சகட்டுமேனிக்குக் காயங்கள், 58 வயதுக்கே உரிய தளர்ச்சி, காதல் மனைவி லின் ஃபெங்கின் தொடர் அறிவுரை கள்தான் காரணம், 'ஆக்ஷன் ரிட்டையர்மென்ட்’ முடிவுக்கு.


படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, ஆக்ஷன் என அத்தனையும் ஜாக்கி சான். சீன அரசின் பொக்கிஷத்தை ஸ்பெயின், பிரிட்டிஷ் படைகளின் பாதுகாப் பில் இருந்து மீட்டு வரும் முந்தைய பாகக் கதையின் தொடர்ச்சிதான் என்றாலும், நவீன டெக்னாலஜியோடு ஆக்ஷன் காட்சிகளை அலேக்காக அமைத்திருக்கிறார் ஜாக்கி.

 க்ளைமாக்ஸ் சண்டைக்கு மட்டும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாம். புவி ஈர்ப்புக்கு எதிராகக் காற்றில் பறந்து மோதும் சாகசக் காட்சிகளில் தன் டிரேட் மார்க் குறும்புத்தனம் சேர்த்து ஷூட் செய்திருக்கிறார். ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் என உலகின் அத்தனை சாகசங்களையும் உள்ளடக்கிய பேக்கேஜாக வரும் இந்தப் படத்திலும் வழக்கம்போல டூப் போடாமல் நடித்து இருக்கிறார் ஜாக்கி. 'என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது நீயல்லவா’ என்று ரசிகர்களை நோக்கிப் பாடுவதற்கு மிகப் பொருத்தமான ஜாக்கி... இனி, 'ஒரு பவுன் வியர்வை’ சிந்த மாட்டார் என்பது அகில உலக ரசிகர்களுக்கும் வருத்தமே!



தி அமேஸிங் ஸ்பைடர் மேன்
டம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. முந்தைய ஸ்பைடர் மேன் படங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ என்ற ஹிட் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் படம். ஸ்பைடர் மேனின் பீட்டர்பார்க்கர் கதாபாத்திரத்தில் இந்த முறை நடித்திருப்பவர் ஆண்ட்ரூ.

http://emma-stone-photos.yesyada.com/wp-content/uploads/2012/04/the-amazing-spider-man-poster.jpg


 'தி சோஸியல் நெட்வொர்க்’ படத்தில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸக்கர்பெர்க்கின் ஆருயிர் நண்பன் சாவ்ரின் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஆண்ட்ரூ. இப்போது 'ஸ்பைடர் மேன் படத்துக்காக ஜிம்னாஸ்டிக்ஸ், நடனம், சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு சின்சியராக நடித்தவரை, இரண்டாம் பாகத்துக்கும் கமிட் செய்துவிட்டார்கள். ஆண்களின் மனம் கவர்ந்த டாப் 100 செக்ஸி அழகிகளில் ஆறாவது இடம் பிடித்த எம்மா ஸ்டோன்தான் இந்த வலை மனிதனுக்கு வலை விரிக்கும் அழகி!


படத்தில் இந்தி நடிகர் இர்ஃபான் கான் ('ஸ்லம் டாக் மில்லினியர்’ பட இன்ஸ்பெக்டர்!) ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 'நான் வில்லன் இல்லை. ஆனால், படத்தில் என்னுடைய ஆராய்ச்சிகள் ஸ்பைடர் மேனுக்கு வில்லத்தனமாகத் தெரியும்!’ என்கிறார் இர்ஃபான். படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2010-ல் தொடங்கி ஏப்ரல் 2011-லேயே முடிவடைந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக 'போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகள் மட்டும் நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் வெளியான 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ வீடியோ கேம் மெகா ஹிட் அடித்திருக்கிறது.

http://moviecarpet.com/wp-content/uploads/celebrities/the-amazing/spider-man-character-posters/The%20Amazing%20Spider-Man%20Character%20Posters-03.jpg


இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில்... இந்தியாவில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூன் மாதம் வலை விரிக்கப்போகிறான் இந்த ஸ்பைடர் மேன்!



வேர்ல்டு வார் இஸட்
மெரிக்க எழுத்தாளர் மார்க்ஸ் ப்ரூக்ஸின் 'தி வேர்ல்டு வார் இஸட்’ நாவல் அப்படியே சினிமாவாகி இருக்கிறது. 2006-ல் வெளியான அந்த நாவலில் கவரப்பட்ட ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், தானே படத்தைத் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.


கதை? 'ஸோம்பீஸ்’ (zombies) எனப்படும் மரணம் இல்லா மந்த மனிதர்களால்தான் உலகம் அழியும் என்பதே ஒன் லைன்!


ஆட்கொல்லி வைரஸால் தாக்கப்படும் மனிதர்கள் தங்கள் சிந்திக்கும் திறனை இழந்து வெறும் சதைப் பிண்டங்களாக அலைகிறார்கள். அந்த மந்த மனிதர்களின் மூளையில் பதிந்துள்ள ஒரே பழக்கம்... இயல்பான மனிதர்களைக் கொன்று தின்பது மட்டுமே. இந்த ஸோம்பிக்களின் மூளையைச் சிதைப்பது மட்டுமே அவைகளை அழிக்கும் ஒரே வழி. நிஜத்திலும் இதுபோன்ற ஸோம்பிக்களால்தான் உலகம் அழியப்போகிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டுள்ள ப்ரூக்ஸ், 'ஸோம்பிக்களால் கடி வாங்குபவர்களும் ஸோம்பிகளாக மாறிவிடுவார்கள்.

http://farm5.staticflickr.com/4116/4759295551_3baa1e8cca_z.jpg


இந்தக் கதையை நான் கற்பனையில் மட்டுமே  உருவாக்கவில்லை. இந்த நாவலுக்காக நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது, சில ராணுவ ரகசியங்களை  தெரிந்துகொண்டேன். அமெரிக்க ராணுவம் ஸோம்பிக்களைத் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறது’ என்று அதிர்ச்சி அளிக்கிறார் ப்ரூக்ஸ்.


 படத்தில் எதிரி நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க ஸோம்பிக்களை உருவாக்கும் அமெரிக்க, சீன ராணுவத்தின் கோர முகத்தைப் பதிவுசெய்திருக்கிறார்களாம். தீவிரவாதத்தின் இன்னொரு பக்கத்தை 125 மில்லியன் அமெரிக்க டாலர்களில் செலவுசெய்து காட்டுகிறார்கள். ஸோம்பிக்கள் நிஜத்தில் வந்தால், நாமெல்லாம் என்னாவோம்?!



 நன்றி - விகடன்