Showing posts with label ஸ்வாதி. Show all posts
Showing posts with label ஸ்வாதி. Show all posts

Thursday, June 19, 2014

வடகறி - சினிமா விமர்சனம்

  

ஹீரோ  ஒரு மெடிக்கல்  ரெப் . சாதா பேசிக் மாடல்  மொபைல் வெச்சிருக்கார் . கூட இருக்கும் ஃபிரண்ட்ஸ் எல்லாம்  ஐ ஃபோன் வெச்சிருந்தாத்தான் ஃபிகர் உஷார்ப்படுத்த  முடியும்னு  உசுப்பேத்தி  விடறாங்க . ஆனா அவரால வாங்க  முடியலை. அப்போ அநாமத்தா ஒரு ஐ ஃபோன் இவர் கை ல மாட்டுது . அந்த ஃபோனை கமுக்கமா ஆ ராசா கணக்கா அமுக்கிடறாரு . அதனால அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் வருது என்பது தான் திரைக்கதை . 

நாட்ல  இப்போ  பெருகி வரும்  போலி மருந்து  தயாரிக்கும் கும்பல் பற்றிய  விழிப்புணர்வு கதையை  த்ரில்லர்  மூவியா கொடுத்திருக்காங்க . 

ஹீரோவா  ஜெய் . அவருக்கு அப்பாவியான  மிடில் கிளாஸ் இளைஞன்  வேடம் அட்டகாசமாப்பொருந்துது . அவரது   டயலாக்  டெலிவரி  , ஃபேஸ் எக்ஸ்பிரசன் எல்லாம்  டபுள்  ஓக்கே .  அடுத்த  கட்டத்துக்கு  தயார் ஆகிட்டார் . சபாஷ்  பாஸ் . 

  ஹீரோயின்  பலாச்சுளை க்கு ரோஸ் பவுடர்  போட்டு விட்ட  கோவைபழ உதட்டு அழகி ஸ்வாதி . தெத்துப்பல் தெரிய அவர் சிரிக்கும்போது  உங்க  டூத் பேஸ்ட் ல  சுண்ணாம்பு அதிகமா இருக்கா?னு கேக்கத்தோணுது . வழக்கம்  போல் ஆடை வடிவமைப்பு  கண்ணியம் . பாடல் காட்சிகளில் பாந்தம் . 


 ஹீரோயினுக்குத்தோழியாக  யாரோ  ஒரு புதுமுகம் . அடடே சொல்ல வைக்கிறார் . நாம எந்தக்காலத்தில்  பொண்ணுங்களை அடச்சே என சொல்லி  இருக்கோம் ? 

ஹீரோவின்  நண்பராக ரேடியோ  ஜாக்கி  ஆர் ஜே பாலாஜி   நல்ல  எண்ட்ரி .  லோ பட்ஜெட் சந்தானம் ஆக வாய்ப்பு  உண்டு . அவர் பேசும் ஸ்பீடு டயலாக்குகளைப்புரிந்து  கொள்ளவே  ஒரு பயிற்சி தேவை .  ஆனாலும்  ரசிகர்கள்  ஒரு குத்து மதிப்பா சிரிச்சு  வைக்கறாங்க . 


ஹீரோ  ஹீரோயின்  தோழியை   லவ்வுவது ,  பின்  தோழியை ஃபாலோ பண்ணுவது , பின் பல்டி அடிச்சு  ஹீரோயின் க்கு ரூட் விடுவது  , இதனால்  தோழிகளுக்கிடையே   ஈகோ வருவது என கலகலப்பான  காதல் கா மெடி  டிராக் படத்தின்   முற்பாதியை   மிகச்சுலபமாக நகர்த்தி  விடுகிறது 

பின் பாதியில்   கதை  த்ரில்லர்  மூவி , சேசிங்க் காட்சிகள் என பர பரப்புக்குத்தாவும் போது    விறு விறுப்பு 

பின் பாதியில் பாடல் காட்சிகள்      தேவையே இல்லை . கட் பண்ணி  ட்ரிம் பண்ணி இருக்கலாம்


 கஸ்தூரி   ஹீரோவுக்கு அண்ணியா பரிதாபமா வர்றார் . அய்யோ பாவம் . வில்லனுக்கு  எல்லாம்  பெரிதா  வேலை இல்லை

 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.    டைட்டிலுக்கும் , படத்துக்கும் சம்பந்தமே  இல்லை என அவங்களே படத்தில் வாக்குமூலம்  கொடுத்து  விட்டாலும்  அவர்கள்  சூசகமாக  யாரைச்சொல்கிறார்கள் என  புரிகிறது . சன்னிலியோனின்  குத்தாட்டம்   படத்துக்கு   நல்ல பிளவுஸ் சாரி  பிளஸ் . 


2   ரேடியோஜாக்கி பாலாஜியின்  டைமிங்க் சென்ஸ்  , ஹீரோவின்  சுறு சுறுப்பான நடிப்பு , ஸ்வாதியின் அழகு  பிளஸ் 


3   முன் பாதி   செம ஜாலி  காதல் காமெடி  கலாட்டா , பின் பாதி சேசிங்க் காட்சி என பிரித்து  சரியான கலவையில்   கதை அமைத்த விதம் 


4   செல் ஃபோன் ரிங்க்  டோனை வைத்து அமைக்கப்ட்ட இய்லபான காமெடி டிராக் கதையோடு ஒன்றி கலக்குகிறது 





இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.   15,000  ரூபா சம்பளம் வாங்கும்  மெடிக்கல்  ரெப்  2000  ரூபா  ஃபோனுகே வழி  இல்லாமல்  இருக்கார் , ஓக்கே , ஆனா அவர் 60,000  ரூபா  புது பைக்கில் வர்றார் , போறார் . போட்டிருக்கும்  டிரஸ் எல்லாம் 10,000  ரூபா சர் ட் ,  பேண்ட் . காஸ்ட்லி  லுக் வேற  , எப்படி ?  ரேபான்  கிளாஸ்  எல்லாம் போட்டுட்டு வர்றார் . 


2  ஹீரோ  லபக்கிய   ஃபோன் அவருது இல்லை  என நிரூபிக்க் வழி இருந்தும் அவர் எந்த  முயற்சியும்  ஏன் எடுக்கலை ?  அந்த   சிம் மை வெச்சு அது யார் பேரில் எடுக்கப்பட்டிருக்கு ?  என்ன அட்ரஸ் கொடுக்கப்பட்டிருக்கு என பார்க்கலாமே? 


3 க்ளைமாக்ஸ் ல  ஹீரோயின்  ரயில்வே ஸ்டேஷன் ல வெய்ட்டிங்க் .  குறிப்பிட்ட டைம்க்கு ஹீரோ வர்லைன்னா த்ற்கொலை செஞ்சுக்கறதா மிரட்றாங்க . ஹீரோ வில்லன் க்ரூப் ல இருந்து எஸ் ஆக தாமதம் ஆகிடுது . அவர் பைக்ல வேக வேகமா வர்றாரு . அவர் ஏன் ஹீரோயினுக்கு  ஃபோன் பண்ணி இதோ வந்திட்டிருக்கேன்னு  சொல்லலை ? அட்லீஸ்ட் ஒரு எஸ் எம் எஸ்  கூட அனுப்பலை  ? 

4  பல பேர் எப்பவும்  அப்ரோச் பண்ணிட்டிருக்கும்  அழகு தேவதை  ஹீரோயின்    மிடுக்குடன்  இருக்கார் . திடீர்னு   லூஸ் மாதிரி  பிஹேவ் செய்வது ஏன் ?


 

 மனம் கவர்ந்த வசனங்கள்



1. எம் ஜி ஆர் FANனா நேர்மையா இருப்பீங்களா? நான் கூடத்தான் சிம்பு FAN.அதுக்காக அவர் பன்றதை எல்லாம் நான் பண்ணிட்டிருக்கேனா? #வடகறி

2. இந்தக்காலத்துப்பொண்ணுங்க பசங்க வெச்சிருக்கும் ரிச்சான போன் மாடல் பாத்துத்தான் உஷார் ஆவாங்க # வடகறி


ஒரு பிரச்னைனு வந்தா அதுல இறங்கி கேள்வி கேட்பவன் ,அதை தீர்க்க நினைப்பவன் லோ க்ளாசா இருந்தாலும் அவன் தான் ஹை க்ளாஸ்

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


1 அங்காடித்தெரு அஞ்சலியின் நேற்றைய லவ்வர் ஸ்டார் ,நாளைய சூப்பர் ஸ்டார் ஜெய் யின் வடகறி ஓப்பனிங் சீனே காமெடி கலக்கல்


2  குணச்சித்திரக்குன்று சன்னி லியோன் ன் குத்தாட்டம்.இதுக்கு யூ சர்ட்டிபிகேட் கொடுத்த கேனயன் யாரோ?

3  செல்போன் காஸ்ட்லியா வெச்சிருந்தா பிகர் செட் ஆகும் கற கேவலமான கான்செப்ட் ல திரைக்கதை போய்க்கிட்டு இருக்கு #,வடகறி


4  தெத்துப்பல் தேவதை அழகி ஸ்வாதி  தான் ஹீரோயின். # வ க


5 ஆர் ஜே பாலாஜி மொக்கை போடறார்.சொந்த ஜோக் போல . தியேட்டர் ல சி செண்ட்டர் ரசிகர்கள் கை தட்றாங்க . அடுத்த சந்தானம் ஆகிடுவார் போல 


6 காமெடி ,மொக்கை,கலாட்டா,காதல் னு போய்ட்டிருந்த திரைக்கதை த்ரில்லர் மூவி ட்ராக் ல் போகுது # வடகறி இடை வேளை






சி பி கமெண்ட் -வடகறி - போலி மருந்து கம்பெனி பற்றிய த்ரில்லர்  மூவி , முன் பாதி காமெடி, பின் பாதி ஸ்பீடு- விகடன் மார்க் = 41 , ரேட்டிங்க் = 2.5 / 5


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.5 / 5 


விருதாச்சலம் சந்தோஷ் குமார் பேலஸ்  


டிஸ்கி - 

வெற்றிச்செல்வன் - சினிமா விமர்சனம்



http://www.adrasaka.com/2014/06/blog-post_8644.html

நேற்று இன்று - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/06/blog-post_5435.html

 

 

சூறையாடல் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/06/blog-post_7814.html





விருதாச்சலம் சந்தோஷ் குமார் பேலஸ்
Embedded image permalinka

Saturday, December 31, 2011

DANGER - கிருஷ்ணவம்சியின் தெலுங்கு த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://moviegalleri.net/wp-content/gallery/abaayam-movie-stills/abaayam_movie_stills_3916.jpgடைரக்டர் கிருஷ்ணவம்சி எப்பவும் மாந்திரீகம், த்ரில்லர் ஓரியண்டட் சப்ஜெக்டா எடுப்பார்.. இந்தப்படமும் அதே லைன்தான்.. படம் பூரா ஓடிக்கிட்டே இருக்கற கேரக்டர்கள் கொண்ட STORY KNOT.

ராஜேஷ்குமாரின் நாவல்ல 3 லைன் வெவ்வேறா போகுமே, அது மாதிரி திரைக்கதை, ஊடால இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்ல வர்ற மாதிரி நரபலி மாந்திரீகம் கலந்து கதை சொல்லி இருக்கார்.. 

ஸ்வாதி காலேஜ் கேர்ள், ஃபாரீன் மாப்ளை  மேரேஜ்க்கு ஃபிக்ஸ் ஆயாச்சு,அவரோட காலேஜ் மேட்ஸ் ஷெரீன், மற்றும் 3 பசங்க மேரேஜ்க்கு முன்னே ஒரு டிஸ்கொத்தே பார்ட்டிக்கு போலாம்னு  கிளம்பறாங்க.. வழில ஒரு நரபலி சம்பவத்தை பார்த்துடறாங்க..ஒரு மினிஸ்டர் தன் ஜோசியர் கம் சாமியார் அட்வைஸ் படி ஒரு குழந்தையை நரபலி கொடுத்தா சி எம் ஆகிடலாம்னு நினைக்கறாரு.. அது படி ஏதோ குப்பத்துல இருந்து ஒரு குழந்தையை கடத்திட்டு வந்து நரபலி குடுக்கறப்பதான் ஹீரோயின் & குரூப் அந்த நரபலி  சம்பவத்தை ஹேண்டி கேமரால ஷூட் பண்ணிடறாங்க.. வில்லன் குரூப் அந்த வீடியோவை பறிமுதல் செய்ய நடத்தும் துரத்தல்கள்தான் படம்,.,.


http://moviegalleri.net/wp-content/gallery/abaayam-movie-stills/abaayam_movie_stills_3394.jpg
இயக்குநர் அந்த காலேஜ் ஃபிரண்ட்சை அறிமுகப்படுத்தி கதைக்குள்ள போகவே ஒரு மணி நேரம் எடுத்துக்கிட்டார்.. அது பெரிய மைனஸ்.. படம் இளமைத்துள்ளலோட இருக்கனும்னு நினைச்சு பண்ணார் போல.ஒரே காமெடி கலாட்டாவா ஓப்பனிங்க்ல கொடுத்துட்டோம்னு தப்பா நினைச்சுட்டார்.. கொட்டாவிதான் வருது.. அவங்க 5 பேரும் லொட லொடன்னு பேசிட்டே இருக்கறது செம அலுப்பு.. 

நரபலி சம்பவம், போலீஸ் ஜீப் ஆக்சிடெண்ட் இந்த 2ம் நடந்த பின் தான் படம் சூடு பிடிக்குது..  அதுக்குப்பின் திரைக்கதை இறக்கை கட்டிட்டு பறக்குது.. ஹீரோயிசம் இல்லாத படம்.. 

ஸ்வாதி தெத்துப்பல் சிரிப்பை பார்த்துட்டே  இருக்கலாம் போல.. வழக்கமா அவரோட டிரஸ்சிங்க் சென்ஸ் செமயா இருக்கும், ஆனா இந்தப்படத்துல மொத்தமே அவருக்கு 6 டிரஸ்தான்.. டூயட் சீனும் இல்லாததால் அவருக்கு தன் வெரைட்டி டிரஸ்ஸிங்க் காட்ட வழி இல்லை.. ஒரே ஒரு சீன்ல அழறார், மனசுக்கு கஷ்டமா இருக்கு ஹி ஹி ( அழகான பொண்ணுங்க அழுதா எனக்கு பிடிக்காது அவ்வ் ) நளினி, ஜீவிதா போன்ற நடிகைகளுக்குப்பிறகு முக பாவனையில் பயத்தை பிரமாதமா பதிவு செய்யற நடிகைகள் கண்ணுக்கே தட்டுப்படறதில்லை..

போராளி படத்துல வர்ற நரேஷ் 3 ஃபிரண்ட்ஸ்ல ஒருத்தரா வர்றார்.. பிரமாதம்னு சொல்ற அளவு இல்லைன்னாலும் நாட் பேடு.. இன்ஸ்பெக்டரா வர்றவர் நடிப்பு செம.. நயவஞ்சக சிரிப்போட அவர் ஆர்ப்பாட்டம் பண்ணாத அமைதி டைப் வில்லன் ரோலை நல்லா பண்ணி இருக்கார்.. அதே மாதிரி மினிஸ்டர் மகனா வர்ற மன நலம் குன்றிய துணை வில்லன் தோற்றம் , கெட்டப் எல்லாம் கவனிக்க வைக்குது.. 

பிரம்மானந்தம் நம்ம ஊரு வடிவேல் மாதிரி , அவர் வர்ற சீன் எல்லாம் செம சிரிப்பு.. ரொம்ப சீரியசா போய்ட்டிருக்கற திரைக்கதையை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்க அவர் காமெடி யூஸ் ஆகுது.. 

http://www.jointscene.com/ahtees/admin/customer/content/119_5_sherin18.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தில் 2 கிளாமர் ஹீரோயின்கள் இருந்தும் டூயட் வைக்காதது, திரைக்கதை வாய்ப்பு அளித்தும் இருவரையும் கண்ணியக்குறைவில்லாமல் படம் பிடித்துக்காட்டியது.. 

2. ஊரையே அல்லோலகல்லோலப்படுத்தும் அந்த சேசிங்க் சீனில் நடு ரோட்டில் பல வாகனங்கள் அணிவகுக்க நடுவில் மாட்டிக்கொண்ட கிரிக்கெட் ஆடும் சிறுவன் பந்தை கேட்ச் பண்ணும் சீன் கலக்கல்

3. போலீஸ் ஜீப் ஆக்சிடெண்ட்டை தத்ரூபமாக படம் பிடித்த விதம்

4. அடர்ந்த காடுகளில் படம் பிடித்த  ஒளிப்பதிவு நேர்த்தி, மற்றும் பின்னணி இசை.. கதையில் 3 பசங்க இருந்தும் ஃபைட் சீன் எதுவும் வைக்காதது..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRDLYVj2e-KhGj7VuGIUGC-F5eYA1ahUjpqkaSZQ2e656qjZT5I70WTrZLaEI_zfa4vRzsre1T6JaUpWxSol-JqqxiEP4ZtxnF3bIaVLUUu4c_W2XfxG9w9Km9e6pGT4rezr1XnVpsHBWO/s1600/Sherin_hot_latest.jpg

இயக்குநரின் சில சறுக்கல்கள்

1.  ஃபாரீன் மாப்ளை ஸ்வாதியை பெண் பார்க்க வர்றப்ப ஸ்வாதி குளீக்க மாட்டேன் , இன்னைக்கு சண்டே தானே என்கிறார், உடனே அவர் அம்மா இன்னைக்கு மாப்ளை உன்னை பொண்ணு பார்க்க வர்றார் போய் குளி என்கிறார், அடுத்த சீனில் ஷெரீன் தன் அம்மாவிடம் இன்னைக்கு சாட்டர்டே, என் ஃபிரண்டை பொண்ணு பார்க்க வர்றாங்க என்கிறார்.. ஒய்? 

2. மூன்று நண்பர்களில் ஒருவர் வில்லனின் பிடியில், துப்பாகி முனையில், மீதி 4 பேரும் ஒளிந்திருக்கும் இடத்துக்கு வில்லன் வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறான், அப்போ ஒரு வார்னிங்க் குடுக்கறதுக்காக வில்லனுக்கு தெரியாம டேஞ்சர் டேஞ்சர் என 8 முறை டைப் பண்ணி அனுப்பறார், மற்ற 4 பேரும் குழம்பறாங்க, ஏன் அவ்ளவ் கஷ்டம்? டேஞ்சர், ரன் ரன் டோண்ட் ஸ்டே ஹியர்னு மெசேஜ் அனுப்பினா வேலை முடிஞ்சது..

3. ஒரு சின்ல வில்லனா வர்ற எஸ் ஐ  காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தனோட பாதத்துல சுடறார், ஆனா அவர் அடுத்த ஷாட்ல கெண்டைக்கால்ல காயம்+ரத்தம்???

4. க்ளைம்மாக்ஸ்ல இன்ஸ்பெக்டர் கைல வெச்சிருந்த ரிவால்வரை  காலேஜ் பசங்க பிடுங்கிக்கராங்க, அதுக்குப்பிறகு அரைமணி நேரம் கழிச்சு அவர் தன் கால்ல ஸாக்ஸ்ல மறைச்சு வெச்சிருந்த ரிவால்வரை எடுத்து சுடறார். ஏன்? அப்போதான் நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுதா? ( நல்ல நேரம் சதீஷ், விளம்பர சார்ஜ் ஆக ஒரு வெஜ் பப்ஸ்  ப்ளீஸ் ஹி ஹி )

5. போலீஸ் ஜீப் ஆக்சிடெண்ட் ஆனதும் அதுல இருந்து படு காயங்களோட எஸ் ஆன போலீஸ் 3 பேர் சீரியசா இருக்காங்க, 50,000 ரூபா குடுத்தா நான் கண்டுக்காம போயிடறேன்னு சொல்றாரே? இந்தக்காலத்துல ஆடு மாடு அடிச்சாலே அந்த தொகை கறந்துடுவாங்களே, 4 போலீஸ் ஆஃபீசர்ஸ் ஆக்சிடெண்ட்ல படு காயம் அடைஞ்சிருக்கங்க, அதுக்கான காம்பன் ஷேஷன் தொகை அவ்வளவு கம்மியாவா கேப்பாங்க?

6. ஸ்வாதி & குரூப் வீட்ல பேரண்ட்ஸ் கிட்டே  நைட் 11 மணிக்கு வீட்டுக்கு ரிட்டர்ன் ஆகிடுவோம், சினிமா போறோம்னு பொய் சொல்லி நைட் பார்ட்டிக்கு போறாங்க, இன்னொரு சீன்ல 11 மணிக்குதான் பார்ட்டி ஸ்டார்ட் ஆகுதுன்னு ஒரு வசனம் வருது.. 

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/05/colours-swathi-hot-photo-10.jpg

மனதில் நின்ற வசனங்கள்

1.  குழந்தையை சாப்பிட விடுங்க.. 

யானைக்கு தீனி போடற மாதிரி நீ சமைச்சு போடு, அவன் கழுதை மாதிரி ஊர் மேஞ்சுட்டு வரட்டும்.. 

2. கில்மா லேடி - அய்யய்யோ, என் ஹஸ்பெண்ட் வந்துட்டாரு, நீ கிளம்பு சீக்கிரம்..

அவர் எதுக்கு இங்கே வந்தாரு?

வாட் நான்சென்ஸ், இது அவர் வீடுடா,, ( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

3. டேய், அரை மணி நேரமா கால் பண்றேன், எங்கேடா இருந்தே?

தூங்கிட்டு இருந்தேன்

யார் பெட்ரூம்ல? யார் கூட ? ( குறவன் ஜாடை மறவனுக்குத்தானே தெரியும்?)

4. உனக்கு எவன் லைசன்ஸ் தந்தான்?

பிரம்மானந்தம் - நினைவில்லை.. 

நேஷனல் பர்மிட் இருக்கா?

பிரம்மானந்தம் - அப்டின்னா என்ன?

5. பிரம்மானந்தம்- எனக்கு ஒண்ணும் புரியலை.. 

நாங்க பேசுனது ஹிந்தி.. 

சொல்லிக்குடுங்க, நானும் புரிஞ்சுக்கறேன்

6. கில்மா லேடி - நீ சுத்த வேஸ்ட்ய்யா..

எப்படிடி கண்டு பிடிச்சே?


http://www.dailomo.com/tamil/content_images/1/images1/sherin-hot-stills/sherin-hot-pics-2.jpg

7.  குழந்தை அழற சத்தம் இந்த காட்ல கேக்குது.. 

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?

குழந்தையோட அப்பா கிட்டே கேட்டு சொல்றேன்.. 

8. பிரம்மானந்தம்-எதுக்குய்யா போலீஸ் உங்களை ஷூட் பண்றாங்க..?

நாங்க ஒரு தப்பு பண்ணிட்டோம், போலீஸ் ஜீப்பையே ஆக்சிடெண்ட் பண்ணிட்டோம்..

பிரம்மானந்தம் -அய்யய்யோ, எனக்கு 4 சம்சாரம்யா, அதுல ஒண்ணை உங்களுக்கு தள்ளி விட்டுடறேன், என்னை எப்படியாவது எஸ் ஆக விடுங்கடா..

ஏன் ,? நாலையும் தந்துடலாமே? மனசு வராதே?

9. பிரம்மானந்தம்- சுத்தம், போலீஸ் துரத்துது.. இந்த கார் ஏன் அங்கப்பிரதட்சணம் பண்ணுது? அவ்வ்வ்வ்

10.  புல்லட் பட்டா ரத்தம் வரும் தெரியும்.. ஆனா போலீஸ் வருதே?

பிரம்மானந்தம்- ஹூம், பிரச்சனையும் கூடவே வரும்.. இனி 

11. டாக்டர் - உதவிக்கு கம்பவுண்டர் நோ, நர்ஸ் நோ , எனக்கு ஃபேமிலியும் நோ.. 

12.  நான் அரசியலே இல்லாத இந்தியாவை பார்க்க ஆசைப்படறேன்

சி.பி கமெண்ட் -  த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், டி வி ல போட்டா 

http://www.dailomo.com/wp-content/uploads/2011/12/actress-Swathi-cute-stills-441.jpg

இது டப்பிங்க் படம் என்பதால் விகடன் ல விமர்சனம் போட மட்டாங்க, இருந்தாலும் தர நிர்ணயிப்புக்காக எதிர்பார்ப்பு மார்க் - 41

குமுதம் ரேங்க் - ஓக்கே

 ஈரோடு ஸ்ரீகிரு்ஷ்ணால பார்த்தேன் ( தமிழ்ல அபாயம் கற பேர்ல டப் ஆகி இருக்கு )

டிஸ்கி 1 - கஷ்டப்பட்டு விமர்சனம் எழுதி இருக்கேன், யாராவது விமர்சனத்தை விட ஸ்டில்ஸ் தான் நல்லாருக்குன்னு கமெண்ட்ஸ் போட்டா செம காண்ட் ஆகிடுவேன் ஹி ஹி 

டிஸ்கி 2 -

மகான் கணக்கு - ஐ சி ஐ சி ஐ பேங்க்கின் அடாவடிக்கு ஆப்புடி - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி -3 - எதிர்காலத்தில் யாருக்கும் புற்றுநோயே வராமல் தடுக்க- http://nesampeople.blogspot.com/2011/12/blog-post_29.html?showComment=1325265343969#c3536983278402745761

 

Thursday, December 01, 2011

போராளி - ஹிட் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRpbiz-544ZRauuqmvEc1mCvHMbNfqb7GojRFnDKzgxEw54PZ9DVRYJ7UzKXx287OPzSk7Y6X9vwj64vjUL_NFqbk_I2MQ0v4F96BTleXQwNqyjL0qQlBkMRKSaRBF9WArEzgw5kXlzA/s1600/02.jpg

எம் சசிகுமார்க்கு சினி ஃபீல்ட்லயும் சரி, தனி மனித வாழ்க்கைலயும் சரி ஒரு நல்ல பேர் இருக்கு.. அது என்னான்னா அவர் நட்புக்கு முக்கியத்துவமும் மரியாதையும் தருவார், இயக்குநர் சமுத்திரக்கனியோட  அவர் கை கோர்த்த சுப்ரமணியபுரம், நாடோடிகள் படங்கள் நட்பை பேஸ் பண்ணுன படங்கள் தான் .இந்தப்படத்துலயும் அதே கருத்துதான், சொந்த பந்தங்களை நம்பாதே, நட்பு தான் கை கொடுக்கும்ங்கறது தான் ஒன் லைன்.. அது எந்த அளவு ஒர்க் அவுட் ஆகி இருக்குன்னு பார்க்கலாம்..

சசிகுமாரும், அல்லாரி நரேஷும் ஒரு அபார்ட்மெண்ட்ல புதுசா குடி வர்றாங்க.. அங்கே குடி இருக்கற எல்லாருக்கும் உதவி செய்யறார் சசி... ஹவுஸ் ஓனரே தன் பெண்ணை கல்யாணம் கட்டிக்குடுக்கற அளவு  க்ளோஸ் ஆகி நல்ல பேர் எடுக்கறார்..அந்த சமயத்துலதான் இவங்க 2 பேரும் பைத்தியங்கன்னு ஒரு குரூப் வந்து சொல்லுது.. 

இப்போ இடைவேளை.. அதுக்குப்பிறகு ஃபிளாஸ்பேக்.. அவங்க 2 பேரும் ஏன் அப்படி ஆனாங்க?கிராமம் , சொந்த பந்தம் , உறவு ,அடிதடி வெட்டு குத்து , துரத்தல் எல்லாம் முடிஞ்ச பின் சுபம்.. உஷ்  அப்பா மூச்சு வாங்குது.. படம் பார்த்த நமக்கே இப்படி மூச்சு வாங்குதே படம் பூரா ஓடிட்டே இருந்த ஆட்களுக்கு எம்புட்டு மூச்சு வாங்கி இருக்கும்?

சமுத்திரக்கனிக்கு ஒரு வார்த்தை முதல்ல உங்க பேட்டர்ன் மாத்துங்க.. ஒரே மாதிரி கதை, ஒரே யூனிட் ஆட்கள் ,சேசிங்க் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம் ஆகிடுச்சு..

http://www.metromatinee.com/gallery/a3827/large/Nivedita25688.jpg

சசிகுமார் நடிப்பில் நல்ல முன்னேற்றம்.. பொண்ணுங்களை சரியா கண்டுக்காம இருந்தவர் இந்தப்படத்துல கொஞ்சம் கண்டுக்கறார்..அவர் ரெட்டைக்குதிரையில் ஸ்லோமோஷனில் எம் ஜி ஆர் கணக்காய் வருவதெல்லாம் ஓவர்.. ஃபிளாஸ்பேக் கதையில் கொஞ்சம் மனதை தொடும் கதை இருந்தாலும் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. 

சமுத்திரக்கனிக்கு கிராமத்து மணிரத்னம் ஆகலாம்னு ஒரு முடிவோட தான் கிளம்பி இருக்கார் போல.. பாதி படம் இருட்டு தான்.. எனக்கென்ன டவுட்னா நார்மல் வெளிச்சத்துல இயல்பான கிராமத்தை காட்னா யாராவது ஊரை விட்டு ஒதுக்கி வெச்சுடுவாங்களா?

ஸ்வாதி சொல்லவே வேணாம்.. செம ஃபிகர், அவர் சிரிக்கறப்ப அந்த தெத்துப்பல் அழகுக்கே அம்பது ரூபா சரியாப்போச்சு.. ஆரம்பத்துல அநியாயத்துக்கு முறுக்கிட்டு இருக்கற அவர் ஹீரோ கிட்டே காதல் வந்ததும் என்னமோ ரொம்ப அர்ஜெண்ட்டா செவ்வாய் கிரகத்துக்குப்போற கடைசி பஸ்ஸை பிடிக்கற அவசரம் மாதிரி என் ;லவ்வுக்கு பதில் சொல்லுங்க அப்டிங்கறதெல்லாம் ஓவர்.. பெண்களை குறை சொல்லக்கூடாதுங்கற உயர்ந்த (!!!!) லட்சியம் வெச்சிருக்கறதால ஸ்வாதி சில சமயம் தேவையே இல்லாம சிடுமூஞ்சியா வர்றது பற்றிய விமர்சனத்தை அவைக்குறிப்பில இருந்து நீக்கிடறேன் ..

நரேஷ் நடிப்பு செம.. கேவலமான கவிதையை ரெடி பண்ணி ரூட் போடறப்பவும் சரி , செகன்ட் ஆஃப்ல மன நிலை பாதிக்கப்பட்டவரா காட்டும்போதும் சரி செம நடிப்பு..  தன் சொந்த தயாரிப்பா இருந்தாலும் சக நடிகருக்கு இந்த அளவு வாய்ப்பு கொடுத்ததற்கு சசிகுமாரை பாராட்டலாம்.. 

50 புரோட்டா சாப்பிட்ட காமெடியனும், கஞ்சா கறுப்பும் அவங்க பங்குக்கு சிரிக்க வைக்கறாங்க.. அப்புறம் நிவேதா , வசுந்த்ரராக்‌ஷாயப் ( பேரே வாய்ல நுழைய மாட்டேங்குது) 2 பேரும் படத்துல பெரும்பாலும் உம்மணாமூஞ்சியாவே வர்றாங்க .நல்ல ஸ்மைலிங்க் ஃபேஸ் இருந்தும் கோபக்கார பொண்ணா , சிடு சிடு கேரக்டரா அவ்ளவ் தூரம் காட்டி இருக்க தேவை இல்லை

பாடல்கள் பாஸ் ரகம்.. நாடோடிகள் படத்துல வர்ற மாதிரியே ஒரு சேசிங்க் பாட்டு இருக்கு ( ஜகடம் ஜெகடம் ஜெக ஜெகஜம் ஜம் சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ)



http://reviews.in.88db.com/images/Swathi/actress-swathi-saree-photos27.JPG

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  விலங்குகள் சத்தத்தை வெச்சே அவங்க குணத்தை சொல்லிடலாம்.. ஆனா மனுஷன் எப்போ எந்த குணத்துல  இருப்பான், காட்டுவான்னு சொல்லவே முடியாது.. அப்படிப்பட்ட மனுஷங்களோட வாழ்க்கை நடத்தும் எல்லாருமே போராளிங்கதான்..

2. இந்த உலகத்துலயே  லெட்டர் போட்ட அட்ரஸ்க்கே வந்து அவங்க எழுதுன லெட்டரை பிரிச்சுப்படிக்கற ஒரே ஆள் நீங்க தான்

3.  பேச்சிலர்க்கு வீடு தரமாட்டேன்.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கு...

வீட்டைத்தானே வாடகைக்கு கேட்டோம், பொண்ணையா கேட்டோம்?

( பாக்யா ஜோக்  2008 வலங்கை மான் நூர்தீன்)

4. அவங்களைப்பார்த்தா உருப்படற மாதிரியே தெரியுது.. ஒரு ஒளிவட்டம் தெரியுது..

5. அவங்க யார்னு தெரியுமா?

சாரிங்க, எனக்கு என் சம்சாரம் சாந்தியைத்தவிர வேற யாரையும் தெரியாது..

6.  போடா.. போ போய் வேலையைப்பாரு.. 

ஹலோ, வேலை கிடைச்சா போய் இருக்க மாட்டோமா? வேலை இல்லாததால தானே இப்படி வெட்டியா சுத்திட்டு இருக்கோம்?

7. படிச்சவனுக்கு ஒரு வேலை, படிக்காதவனுக்கு பல வேலை.. 

8. டேய் பார்த்துடா, படிச்சு கிடிச்சு கலெக்டர் ஆகிடப்போறானுங்க

( சேம் டயலாக் இன் அறைஎண் 305 இல் கடவுள் பை த சேம் பர்சன் கஞ்சா கறுப்பு )

9.  கட்ன பொண்டாட்டி மேலயும், பெத்த பொண்ணு மேலயும் நம்பிக்கை இல்லாதவன் தான் பேச்சிலர்க்கு ரூம் தர யோசிப்பான்

(ம்க்கும், நீங்க கிண்டிக்கிட்டு போய்டுவீங்க)


10. பெட்ரோல் பேங்க் இல் - ஃபிகரு - நீ  செட் செஞ்சியா?


நான் எதும் செட் செய்யலை..

நீ ஏதும் கரெக்ட் செஞ்சியா? 

ம்ஹூம், நான் எதும்  கரெக்ட் செய்யலை.

இந்த டபுள் மினிங்க்ல பேசறது எல்லாம் வேணாம்..


http://3.bp.blogspot.com/-jp0QrkQOIBY/TcqjGQfcYlI/AAAAAAAABGA/Cxkns-UVO3Q/s1600/swathi_in+porali.jpg

11.  என் காதல்  கவிதையை கேளு.. நிலவே நிலவே நீ நில்லு.. என் மனசில நீதான் பாறாங்கல்லு.. எப்பவும் போதையா இருக்கற பனைமரக்கள்ளு.

. ( இந்த மாதிரி கவிதை எழுதுனா செட் ஆகற ஃபிகரும் செட் ஆகாது)

12.  எப்பவோ கிடைக்கற  பால்கோவாவை விட இப்போ கிடைக்கற பப்பர்மெண்ட் மிட்டாய் தான் முக்கியம்..

13. ஆமா ரஜினி படமா ரிலீஸ் ஆகுது? டாஸ்மாக்ல எதுக்கு இவ்ளவ் கூட்டம்?

சம்பாதிக்கற பணத்தை எல்லாம் இங்கே தானே கொண்டுவந்து கொட்றாங்க?

( விக்கி தக்காளீ, லேப்டாப் மனோ கவனிக்க)

14. வேடிக்கை மட்டும் பாருங்க.. ஏதாவது உதவி  கேட்டா ஒதுங்கிடுங்க..அப்புறம் என்ன இதுக்கோசரம்டா இங்கிலீஷ் படிச்சீங்க? 

15.  ஹீரோயின் - சிலோன் புரோட்டா வேணும்..

எனக்கு சிலோனே பிடிக்காது

16. சொந்த பந்தம் எல்லாம் சும்மா.. அவங்கவங்க லைஃபை அவங்கவங்க தான் பார்த்துக்கோனும்..


17. உன்னை நானே தூக்கிட்டு போகட்டா.. அப்படி பார்க்காதே. அண்டாவை தூக்கற ஃபீலிங்க்லதான் உன்னை தூக்குவேன்..


இல்ல, என்னை தூக்கற ஃபீலிங்க்லயே தூக்குங்க..


உன்னை தூக்கறதும் அண்டாவை தூக்கறதும் ஒண்ணுதான்

( பருத்திப்பூ போல் லேசாக இருக்கும் ஸ்வாதியை அண்டா என வர்ணித்ததை அகில இந்திய ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி )

 18.  என்னடி.. அங்கே பார்த்துட்டே ஆர்டர் பண்றே?

போய் ஒரு லிட்டர் இண்டியன் ஆயில் கொண்டு வா..


அது எங்க கம்பெனி நேம்..

சரி பெனாயில் கொண்டு வா,,

19.  உன் முகத்துல 3 புள்ளி.. அப்புரம் ஒரு ஆச்சரியக்குறி...

( 2 கண்கள், உதடு புள்ளீயாம், மூக்கு ! வாம் அய்யோ ஹய்யோ)


20. நாம் விரும்பற கிளியை விட நம்மை விரும்பற குரங்கு மேல்..


http://www.bujjigadu.com/wp-content/uploads/2011/11/allari-naresh-porali300.jpg

21.  டேய் நல்லா பாரு அவன் தான் பெருமாள்..

அப்போ நான் ?

அம்மா தாயே பார்ட்டி ( பிச்சைக்காரனாம்)

22.  ஹீரோயின் - நான் இப்படி எல்லாம் யார் கிட்டேயும் இப்படி வழிஞ்சதில்லை


ஹீரோ - அப்போ நாங்க மட்டும் பார்ட் டைமா இதை பண்ணீட்டிருக்கற ஆளா?

23. மாமா, அக்காட்ட ஐ லவ் யூ சொல்லுங்க..

பாப்பா.. உன் வயசுக்கு இதெல்லாம் நீ பேசக்கூடாது..

அப்போ போய் பாட்டியை அனுப்பட்டா?

24. என்னடா பொண்டாட்டி கிட்டே வழிஞ்சிட்டு? எடுக்கற முடிவை முதல் இரவுக்கு முன்னாலயே எடுங்கடா.. அப்போ விழுந்திடுங்க..  ( ஏப்பா, அங்கே போய் சோலியை பார்ப்பாங்களா? ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்களா?)


25.  சுகர் இருந்தா நான் சுகர் பேஷண்ட்-னு பெருமையா சொல்லிக்கறோம், ஆனா  மன ரீதியா ஏதாவது பிரச்சனைன்னா அதை வெளீல சொல்ல கூச்சப்படறோம்

26. தான் மட்டுமே நல்லாருந்தா போதும்னு நினைக்கறவங்களூம் இந்த உலகத்துல இருக்காங்க, தன்னை சுத்தி இருக்கறவங்களூம் நல்லாருக்கனும்னு நினைக்கறவங்களூம் இருக்காங்க.

27.  டேய்.. அதிகமா யோசிக்கக்கூடாது டா. அப்புறம் நம்மை மக்குன்னு வாத்தியார் சொல்லிடுவாரு..

இந்த எழவுக்குத்தாண்டா நான் யோசிக்கறதே இல்ல..

28.  நிலாவுல காலை வெச்சது யாரு?

ஆர்ம்ஸ்ட்ட்ராங்க்

அவர் இடது காலைத்தான் வெச்சாரு.. நான் கேட்டது வலது காலை முதல்ல வெச்சது யாரு?

( அண்ணே, இந்த ஜோக்கை நான் பேச நினைப்பதெல்லாம் கற விக்ரமன் படத்துல விவேக் பேசிட்டாருங்கோவ்)

29. நாங்க எல்லாம் அப்பவே அந்த மாதிரி..

எந்த மாதிரி..?

இப்படி தானா வந்து மாட்டிக்கறதுதான்..

30. முன்னே பின்னே தெரியாதவங்க கூட கை கொடுத்து உதவுவான், ஆனா இந்த சொந்தக்காரங்க இருக்காங்களே.. ( செம கிளாப்ஸ் தியேட்டர்ல)



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSGUktj7hQw9K-AMjO89graKrYz2nzVde28lJfIqGw9-0CpC9ZSoFrqxnnaTabJ9R5E61t5Ki8RpXJ_f9v1LrF0o7xwQJ7gt5EJ5CKv3BNGbI3QVM73KC3B5PHXiSOGjIH_3nFsd5Ozw/s1600/swathi-hot6.jpg

31. நீ இன்னும் உயிரோடவா இருக்கே? ஊர்ல  அத்தனை பஸ் லாரி எத்தனை ஓடுது.. அதுல எல்லாம் சாகாம எப்படி எஸ்கேப் ஆனே? ( எஸ் வி சேகரின்  வண்னக்கோலங்கள் நாடகத்துல வந்த ஜோக்)

32.  உலகம் பூரா இருக்கற எல்லா போலீசும்  இதைத்தானே சொல்றீங்க? இன்னார்தான்னு முதல்லயே சொல்லி இருக்கலாமில்ல?ன்னு எங்கேடா சொல்ல விடறீங்க? அடிச்சுட்டுத்தானே ஆரம்பிக்கறீங்க?

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பின் பாதி க்ளைமக்ஸில் ஹீரோவை காட்ட வேண்டும் என்ற குறுக்கீடோ நிர்ப்பந்தமோ இன்றி சிறு வயசு காட்சிகளை அதிகம் வைத்தது..

2. டி வி நடிகை சாண்ட்ரா சாந்தியாக வந்து படவா கோபியுடன் அலப்பறை செய்யும் காமெடி காட்சிகள் கலக்கல், கூடவே பொய்யல்ல போட்டுக்குடு பார்ட்டியும் அதகளம் பண்றாங்கப்பா..

3. கஞ்சா கறுப்பு காமெடி காட்சிகளை  திரைக்கதையில் சமயம் பார்த்து புகுத்திய விதம் அழகு..

4. சந்தனம் பூசி வந்த சப்பாத்திக்கள்ளியே பாடல் காட்சியில் நடன அமைப்பு அசத்தல்.. சிம்பிள் மூவ்மெண்ட் தான், ஆனால் வெகுவாக ரசிக்க வைத்தது.

5. பெட்ரோல்பங்கில் வரும் ரெகுலர் பிச்சைக்காரனை டெயிலி டீ வாங்கிக்குடுத்து  நண்பன் ஆக்குவது, அவரை குளிக்க வைத்து ஹேர் கட் பண்ணி விட்டு நிட் டிரஸ் போட வைத்து ஆளையே மாற்ற வைப்பது  எல்லாம் செம ( வசூல்ராஜா எம் பி பி எஸ் சீனை நினைவு படுத்தினாலும்..)



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2RuviPfXlbOCkHdA_VmkkpZekRdQcNMgYe2umPpOGHfTgBtE2wnQFOn-gvef5UE5cF9abc20h-DCkytH8BAhKrB3vFrYusPJINel6HX3KpdrIyt2cXbyh6vSuSohV33Wtv2mQvrrk0shJ/s1600/Swathi__37_.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ,லாஜிக் மீறல்கள்

1. பெட்ரோல் பங்குக்களில் பெட்ரோல் அடிக்கும் தொழிலாளர்கள் டியூட்டி டைம் 12 மணி நேரம் தான்// ஒரு இடத்தில் 8 மணி நேர வேலை தானே, ஏதாவது பார்ட் டைம் ஜாப் பண்ணலாமே?னு வசனம் வருது.. ( எந்த பிரைவேட் வேலையும் 8 மணி நேரம் கிடையாது)

2.  அதே போல் பெட்ரோல் அடிக்கும் தொழிலாளர்கள் தினமும் இரவு போறப்பதான் எல்லா வசூல் பணத்தையும் கணக்கு பார்த்து செட்டில் செய்வார்கள், இதில் ஹீரோ ஒரு கார்க்கு பெட்ரோல் அடிச்சுட்டு, அந்த பணத்தை இன்னொரு தொழிலாளரிடம் கொடுத்து இதை மேனேஜர்ட்ட கொடுத்துடுங்கறார்.. அவர் என்ன அவருக்கு பி ஏவா?

3.  ஒரு சீனில் ஹீரோ காரில் போறார், அப்போ வழில ஒரு தம்பதி கைல குழந்தையோட வழில நிக்கறாங்க, பைக் ரிப்பேர்.. உடனே ஹீரோ ஹெல்ப் பண்ணி பைக்கை ஸ்டார்ட் பண்ணி தந்துடறார், அப்புறம் அந்த லேடியை கார்ல வரச்சொல்லிட்டு பைக்ல ஹீரோ வர்றார், டிராப் பண்ற இடம் வந்ததும் அந்த ஜோடி விடை பெறும்போது அந்த மனைவி கைல குழந்தை இல்லை அவ்வ்வ் ஹாயா பின்னால உக்காந்துட்டு போறாங்க..அந்த அட்டுக்குழந்தை டர்க்கு டவல் போர்த்தப்பட்டு முன்னால இருக்கற மாதிரி காட்டி இருக்காங்க

4. வன்முறை, அடிதடி , வெட்டுக்குத்து எல்லாம் ஓவர்.. ஒரு கட்டத்துல போர் அடிச்சிடுது... சீக்கிரம் படத்தை முடிங்கப்பா என சொல்ல வைக்குது..



http://www.chitramala.in/photogallery/d/475712-1/Swathi-hot-Pics003.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 42




எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - எம் சசிகுமாருக்காக,ஸ்வாதிக்காக ஆண்கள் பார்க்கலாம், பெண்கள் பார்க்கறது சிரமம் தான்.. நாடோடிகளை விட, சுப்ரமணியபுரம் விட ஒரு மாற்று கம்மிதான்

ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள் , பி - 30 , சி - 20 நாட்கள் ஓடலாம்..