Showing posts with label அருள்நிதி. Show all posts
Showing posts with label அருள்நிதி. Show all posts

Saturday, May 12, 2018

இரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்

Image result for iravukku aayiram kangal

ஹீரோ ஒரு கால் டாக்சி டிரைவர், ஹீரோயின் ஒரு நர்ஸ் . 2 பேரும் ஆல்ரெடி லவ்வர்ஸ் ( இப்டி காட்டிட்டா க்ரைம் கதைல காதல் எப்பிசோடை காட்டி டைம் வேஸ்ட் பண்ணத்தேவை இல்லை). நாயகியோட தோழியை நிர்வாணமா வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்றான் வில்லன். வில்லனைப்பார்க்க  அவன் வீட்டுக்குப்போகும் ஹீரோ அங்கே ஒரு பொண்ணு கொலை செய்யப்பட்டிருப்பதைப்பார்த்து ரிட்டர்ன் வர்றாரு. அதே சமயத்தில்  அதே வில்லனால் பாதிக்கப்பட்ட இன்னும் 2 பேரு அந்த வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். போலீஸ் ஹீரோவை சந்தேகபடுது. யார் கொலையாளி? என்பதை  ஒரு சுத்தல்ல்ல விட்டு திரைக்கதை அமைச்சிருக்காங்க



ஹீரோவா அருள்நிதி, கலைஞர் குடும்பத்துல இருந்து வந்தாலும் எந்த விதமான பந்தாவோ , பில்டப்போ பண்ணாத நல்ல மனிதர். இதே இவர் பொசிஷன்ல வேற யாராவது இருந்தா எனக்கு நயன் தாரா தான் நாயகியா வேணும், ஓப்பனிங் சாங் வேணும் அப்டி எல்லாம் பந்தா விட்டிருப்பாரு, அதை நிறைவேற்ற அவர் கிட்டே பணபலமும் இருக்கு , ஆனா அவர் நடிக்கற எல்லாப்படங்களுமே வித்தியாசமான கதைக்களம், ஹீரோயிசம் அதிகம் காட்டாத அடக்கி வாசிக்கும் ஹீரோ நடிப்பு  வெல்டன்.  ஆக்சன் காட்சிகளில் சைன் பண்றார் , இயக்குநர் சொல்படி நடிச்சிருக்கார்


ஹீரோயினா மகிமா நம்பியார். பெரிய ஃபிகர் ஒண்ணும் கிடையாது , ஆனாலும் ஹோம்லி லுக்.படத்தில் கிளாம்ர் காட்சிகள் ஏதும் இல்லை நல்லவேளை 


வில்லியாக பிக்பாஸ் சுஜா வருணி , பெரிய வாய்ப்பில்லை, இன்னும் இவர் பாத்திரம் நல்லா டெவலப் பண்ணி  இருகலாம், ஒரு வேளை எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கலாம்


 சாயா சிங் சின்ன கேரக்டர்ல வந்து போறார். ரைட்டரா லட்சுமி ராமகிருஷ்ணன் , இடைவேளை பிளாக் சீனுக்கு , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்கு பயன்பட்டிருக்கார்

 படத்தில் முக்கியமான இரு விஷயங்கள்  திரைக்கதை அமைத்த விதம் , பிஜிஎம் 2 ம் அருமை.. ஆனாலும் ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் வேணும்னு ஒரு லிமிட்டை தாண்டி தலை சுத்த வைக்கறாங்க

 ஜான் விஜய் காமெடியும் பண்ணிட்டு வில்லத்ஹ்டனமும் ரசிக்க வைக்கும் அளவு பண்றவர். இதிலும்  டிட்டோ

 ஆனந்தராஜ் எல்லாம் எப்டி கம்பீரமான வில்லன் ரோல் பண்ணுனவர், அவரை வடிவேல் மாதிரி காமெடி பீஸ் ஆக்கி வெச்சது கொடுமை. 


 போலீஸ் ஆஃபீசரா வர்ற அந்த  லேடி யாரு?னு தெரியல ., நல்ல கட்டைனு பெஞ்ச் ஆடியன்ஸ்ல இருந்து சில குரல்கள் எழுந்தன ( இப்டி சொல்லிட்டா பிரச்சனை இல்லை, நாமா கமெண்ட் பண்ணுன மாதிரி இருந்தா 4 பேர் 4 விதம பேசுவாங்க, 484 = 16 விதம் ஆகிடும் அப்றம் )




 எடிட்டிங் , ஒளிப்பதிவு எல்லாம் கனகச்சிதம்

Image result for mahima nambiar

நச் டயலாக்ஸ்

1  இப்டி தான் உறுத்தற மாதிரி ஒரு பொண்ணை பார்ப்பீங்களா?

உறுத்தற மாதிரி பார்க்கல,மனசுல இருத்தற மாதிரி பார்க்கேன்


இதுக்கு முன்னால நீ பொண்ணுங்களைப்பார்த்ததே இல்லையா?
பாத்திருக்கேன்,ஆனா உங்களை மாதிரி அழகான பொண்ணை பாத்ததில்ல


ஞாபக மறதி க்கு ஒரு போட்டி வெச்சா நான்தான் நெ1



Image result for suja varunee
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

பங்களா வீட்ல குடி இருக்கற தம்பதி.புருசன் கொடுமைப்படுத்தற மாதிரி யும் பொண்டாட்டி பயந்து நடுங்கற மாதிரியும் காட்றாங்க.இதெல்லாம் புரியாத புதிர் ரகுவரன் காலத்தோட முடிஞ்சுது.இப்பவெல்லாம் புருசன்தான் பொண்டாட்டியைப்பாத்து பம்மறான்


2  புலன்விசாரணை,மாநகரக்காவல் கெத்து வில்லன் ஆனந்த்ராஜ் வடிவேல் பாணி காமெடி நடிப்பு ட்ரை பண்றாரு,சில இடங்களில் சிரிப்பு ,பல இடங்களில் கடுப்பு


3  வில்லன் அஜ்மல் பண்ற மிரட்டல்கள் ,பணம் பறிப்பு எல்லாம் பச்சைக்கிளி முத்துச்சரம் ல எப்பவோ வந்தாச்


Image result for suja varunee


சபாஷ் டைரக்டர்


1  ஒரு சிறுகதையோட முதல் வரிலயே கதையை ஆரம்பிச்சுடனும்னு அமரர் மேஜிக் ரைட்டர் சுஜாதா சொல்லி இருக்கார், அந்த மாதிரி படத்தோட முதல் சீனிலெயே கதை ஆரம்பிச்சுடுது


2  ஒரு கில்மா , சைபர் க்ரைம் த்ரில்லராக படத்தை எடுத்திருந்தாலும் வல்கரான காட்சியோ , பெண்கள் முகம் சுளிக்கும் வசனமோ ஒரு சீனில் கூட இல்லை, சபாஷ் இயக்குநர்


3  ஆடியன்சில் யாருக்காவது ஃபோன் கால் வந்தால் கூட அதை அட்டெண்ட் பண்ண குறுக்க வெளில போக முடியாதை அளவு ரொம்ப டைட்டான ஸ்க்ரீன் ப்ளே அமைச்சது. 10 நிமிசம் வெளில போய்ட்டு வந்தாலும் புரியாது (உள்ளேயே இருந்தாலும் சரியா சிலது புரியலைங்கறது வேற விஷயம் )


4 இயக்குநர் ராஜேஷ் குமார் , பட்டுக்கோட்டை பிரபாகர் ரசிகர் போல . திரைக்கதை அமைத்த விதம் ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல் உத்தி . நாயகன் பேரு பரத் , நாயகி பேரு சுசீலா ( பிகேபி )


Image result for saya singh hot


லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


லாஜிக் மிஸ்டேக் 1 − ஒரு பெண்ணை கரெக்ட் பண்ண நல்லவன் வேஷம் போடறவன் தன் நோக்கம் நிறைவேறும் முன் தன் சுயரூபத்தைக்காட்டி அவனா மாட்டிக்குவானா?


லாஜிக் மிஸ்டேக்2 − பொண்ணுங்களை ஏமாத்தி வீடியோ க்ளிப் எடுத்து பென்ட்ரைவ்ல ஏத்தி வெச்சிருக்கும் வில்லன் ஒரு சேப்டிக்கு 1+1 காப்பி எடுத்து வெச்சுக்க மாட்டாரா?அந்தக்கால ரஜினி பில்லா க்ளைமாக்ஸ் டைரி பைட் மாதிரி பென்ட்ரைவ்க்கு அடிச்சுக்கறது ஏனோ?


3  நாயகியை நிர்வாணமா வீடியோ எடுக்கும் வில்லன் ஏன் மயக்க நிலைல இருக்கும் நாயகியை வாய்பிருந்தும் ரேப்பலை?


4  லாஜிக் மிஸ்டேக் 4 −நாயகியை போலீஸ் ஆபிசர் அடிச்சு விசாரிக்கறாரு.சட்டப்படி பெண் போலீஸ் மூலமா தான் விசாரிக்கனும்


லாஜிக் மிஸடேக் 5 − பலர் ரகசிய க்ளிப்கள் அப்லோடின சிஸ்டத்துக்கு பாஸ்வோர்டு லாக் போடாம வில்லி அனாமத்தா விட்டு வைக்குமா?


6 க்ளைமாக்ஸ்ல ஒரு டயலாக், ஹீரோ சொல்றாரு “ என் ஆளை நிர்வாணமா வீடியோ எடுத்த விவகாரம் அவளுக்கு தெரிய வேண்டாம்.  அதெப்டி அவருக்கு தெரியாம இருக்கும். ஒரு சமயம் நாயகியை வில்லன் ஸ்ப்ரே அடிச்சு மயங்க வைக்கறார். நினைவு வந்ததும் வில்லன் மிரட்டி அனுப்பறார். அப்போ நாயகிக்கு தன் உடைகளை ஒருவன் களைந்து பின் அணிவித்த விஷயம் தெரியாம இருக்குமா? ஒரு சந்தேகம் கூடவா வராது


7  வில்லன் கோ படத்துல இயற்கையான நடிப்பை வழங்கினவர் இதுல செயற்கையா சிரிக்கறாரு, எடுபடலை


8  க்ளைமாக்சில் லட்சுமி ராம கிருஷ்ணன் கொலை செய்யப்படுவது , அப்போ க்ளோசப்ல அவர் புருசன் ஃபோட்டோவைக்காட்டுவது தேவை இல்லாத எக்ஸ்ட்ரா குழப்படிகள், ஆடுகளம் நரேன் பாத்திரைப்படைப்பிலும் சில தெளிவுகள் இல்லை

Image result for saya singh hot


சி.பி கமெண்ட்- இரவுக்கு 1000 கண்கள் − ராஜேஷ்குமார் நாவல் போல 3 லேயர்களில் கதை சொல்லும் உத்தி அருமை.ஆனால் ஏ சென்ட்டர் ஆடியன்சுக்கு மட்டுமே புரியும்.விகடன் 42 !ரேட்டிங் 3 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 42


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)= 3.5 / 5



ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன்

Sunday, April 06, 2014

நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும் - முழுநீள காமெடி படம்?- அருள் நிதி பேட்டி

தன் குடும்பத்தைச் சுற்றி நடந்துவரும் தேர்தல் களேபரத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது அடுத்த படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் அருள்நிதி. கோடம்பாக்க இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…



‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படம் என்ன மாதிரியான கதை?


முழுப் படமும் காமெடிதான். இயக்குநர் சிம்புதேவனைப் பற்றி உங்களுக்கே தெரியும். எப்போதுமே கதையோட ஹியூமர் வந்துகிட்டே இருக்கும். அதை நீங்க இந்தப் படத்துலயும் பார்ப்பீங்க. மொத்த படப்பிடிப்பையும் 43 நாட்கள்ல முடிச்சுட்டோம். அந்த அளவிற்கு பக்காவா எல்லாத்தையும் ப்ளான் பண்ணினார். நாசர், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, வி.எஸ்.ராகவன் இப்படிப் பல சீனியர் நடிகர்களை நடிக்க வச்சு 43 நாட்கள்ல ஷுட்டிங் முடிச்சது எவ்வளவு பெரிய விஷயம்!


முதல்ல இதை இயக்குநர் பாண்டிராஜ்தானே தயாரிப்பதாக இருந்தார்?


இந்தப் படம் ஆரம்பிச்சதுக்கு காரணமே இயக்குநர் பாண்டிராஜ் சார்தான். முதல்ல அவரே தயாரிப்பதா இருந்துச்சு. பிறகு அவர் வேறு படங்கள், இயக்கப் போயிட்டதால, நானும் ‘தகராறு' முடிச்சுட்டு ஆரம்பிக்கலாம்னு உடனே எங்களோட பேனர்லேயே பண்ணிட்டோம்.



‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்', ‘நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும்' இப்படி காமெடி படங்கள் பக்கம் போயிட்டீங்க போல?


அப்படிச் சொல்ல முடியாது. என்னோட படங்கள் எல்லாமே வெவ்வேறு வகையாதான் இருக்கும். ‘வம்சம்',‘உதயன்', ‘மெளன குரு', ‘தகராறு' இப்படி எல்லாப் படங்களுமே வேற வேற கேரக்டர்கள்தான் பண்ணியிருப்பேன். நான் சிட்டி படங்கள் பண்ணாம இருந்தேன். முழுக்க தாடியோடயே சுத்திட்டு இருந்தேன். அப்படியிருக்கும்போதுதான், சிம்புதேவன் சார் இந்தக் கதையைச் சொன்னார். காமெடி கதை இதுவரைக்கும் நான் பண்ணதில்லை. இப்ப பண்ணலாமேன்னு தோணிச்சி.


அடுத்த படமான ‘நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும்' படத்தில் கதை செம ஸ்டராங். அதை காமெடின்னு சொல்ல முடியாது. நாங்க சீரியஸா பண்ற விஷயங்கள், உங்களுக்கு காமெடியா தெரியும். ரொம்ப வித்தியாசமான கதை. இந்த ரெண்டு படங்களையும் பார்த்தீங்கன்னா ரெண்டுமே வித்தியாசமான படங்களாதான் இருக்கும்.


அந்த ஹீரோ மாதிரி ஆகணும், இந்த ஹீரோ மாதிரி ஆகணும்னு நான் சினிமாத் துறைக்குள்ள வரல. 10 படங்கள் பண்ணினத்துக்கு அப்புறம், இவன் வித்தியாசமான படங்களா பண்றான் அப்படிங்கிற பேர் கிடைச்சா போதும். ஆக் ஷன், காமெடி, த்ரில்லர் இந்த மாதிரியான படங்கள் மட்டும்தான் பண்ணனும்னு எனக்குக் கிடையாது. கதை நல்லாயிருக்கா அதுல ஆக் ஷன், காமெடி எதுவானாலும் பண்ணுவேன்.


முழுநீள காமெடி படம் பண்றது கஷ்டமா இல்லயா?


யாராவது என்கிட்ட பேசினாங்கன்னா, இயல்பாவே உடனுக்குடன் கவுண்டர் கொடுத்துக் கிட்டே இருப்பேன். அது ஒவ்வொருத்தங்க பேசுற விதத்துல இருக்கு. என்கிட்ட நல்லா பழகிட்டாங்கன்னா, பேசப் பேச கவுண்டர் கொடுத்துக்கிட்டே இருப்பேன். ‘வம்சம்' படத்துல முதல் பாதி காமெடிதான். ‘தகராறு' படத்துலயும் அப்படித்தான். காமெடி பண்றது எனக்குக் கஷ்டமா தெரியல. சிம்புதேவன் சார் படத்துல அவரோட வசனத்தை நாம சாதாரணமா சொன்னாலே காமெடி ஒர்க் அவுட்டாயிடும். ஏன்னா, அவரோட வசனங்கள் அவ்வளவு ஸ்ட்ராங்.



அரசியலில் அருள்நிதியை எப்போது எதிர் பார்க்கலாம்?



இப்போதைக்கு எனக்கு அரசியல் ஆசையே கிடையாது. வருங்காலத்தில் என்ன நடக்கும்னு இப்போ எப்படிச் சொல்ல முடியும். ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும், இந்தக் கேள்வி வந்துகிட்டே இருக்கு. எங்கப்பாவே இப்ப அரசியல்ல கிடையாதே.


உங்களோட சினிமா வளர்ச்சிக்கு தயாநிதி அழகிரி, உதயநிதி ஸ்டாலின் எந்த அளவிற்கு உதவியா இருந்தாங்க?


ரெண்டு பேருமே எனக்கு உதவியாதான் இருந்தாங்க. பாண்டிராஜ் சாரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது உதயநிதி அண்ணன் தான். இப்போவும் ஞாபகம் இருக்கு, ‘வம்சம்' இசை வெளியீட்டு விழாவுல இடம் இல்லாம, துரை அண்ணன் நின்னுக்கிட்டே பாத்தாங்க. ஏன்னா, என் மீது அவ்வளவு பாசம். ‘தகராறு' பாத்தீங்கன்னா, தயாரிச்சது துரை, ரிலீஸ் பண்ணது உதய் அண்ணன்.


வீட்டுல நடிக்கப் போறேன்னு சொன்ன போதும், இப்பவும் என்ன சொல்றாங்க?



நடிக்கப் போறேன்னு சொன்ன உடனே ஏன் அரசியலுக்கு வரப் போறியானு கேட்டார் அப்பா. ஏன்னா அப்பா என்னை அரசியல்ல ஈடுபாடு காட்ட விட மாட்டார். என்னை ஒதுக்கியே வைச்சிருப்பார். ‘கோபுர வாசலிலே' உள்ளிட்ட நிறைய படங்கள் பண்ணிட்டு, சினிமாவுல இருந்து விலகிட்டார். அரசியலும் ஈடுபடாம, முழு நேரமா பிசினஸை மட்டும் பாத்துக்கிட்டு இருக்கார். அப்பாகிட்ட பேசி, ஒத்துக்க வைச்சதுக்கு அப்புறம் தாத்தாவைப் பார்த்துப் பேசினேன். நடிக்கிற வேலை மட்டும் பார், அரசியலுக்கு எல்லாம் வராதேன்னு சொல்லிட்டார். இன்னமும் நல்ல நடிக்கணும்னு சொல்லிட்டே இருக்கார். கூடிய சீக்கிரத்தில் “பிரமாதமா நடிச்சிருக்கடா” அப்படின்னு அவர் கிட்டேயிருந்து பாராட்டு வாங்கணும். வாங்குவேன்.


thanx - the hindu

Wednesday, March 13, 2013

தயாநிதி தகராறு வித் அருள்நிதி - என்ன நடந்தது? அருள் நிதி பேட்டி

போட்டி பலமா பயங்கரமா இருக்கு!''


க.நாகப்பன்
லயோலால பி.காம். சேரும்போது, 'ஸ்டூடன்ட் யூனியன்ல சேரமாட்டேன்’னு நான் உத்தரவாதம் கொடுத்த பிறகுதான் என்னை காலேஜ்லயே சேர்த்துக்கிட்டாங்க. அங்கே படிச்சு முடிக்கிற வரை நான் கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில்கூடக்கலந்துக் கிட்டது இல்லை. அப்படி ஒரு அப்பாவி. இப்போதான் சினிமா பக்கம் வந்திருக்கேன். ஒவ்வொண்ணாக் கத்துக்கிறேன்... ஒவ்வொரு படமும், ஒவ்வொரு நாளும் புதுசா இருக்கு!'' - 'தகராறு’ படத்துக்காக வளர்த்திருக்கும் தாடி தடவிச் சிரிக்கிறார் அருள்நிதி.


 '' 'தகராறு’னு டைட்டிலே தாறுமாறா இருக்குதே?''


''நிறைய டைட்டில் யோசிச்சோம். எந்த டைட்டில் வெச்சாலும் அதுல முதல் பாதியோ, ரெண்டாவது பாதியோ ஏற்கெனவே ரிஜிஸ்டர் ஆகியிருந்தது. 'எல்லா டைட்டிலும் ஒரே தகராறா இருக்கே?’னு யோசிச்சப்ப, துரை தயாநிதி அண்ணன்தான் டக்குனு 'தகராறுன்னே டைட்டில் வெச்சிரலாம்’னு சொன்னான். பேப்பர்ல 'தயாநிதி தகராறு வித் அருள்நிதி’னு நியூஸ் வந்துச்சா... எல்லாரும் பரபரப்பாகிட்டாங்க. வில்லங்கமான டைட்டில்வெச்சா, வேகமா ரீச் ஆகிடலாம்போல!''


''என்ன தகராறு பண்ணப்போறீங்க?''



''நான் நடிச்ச படங்கள்ல இதில் காமெடிக்கு ஸ்கோப் அதிகம். நானும்... பவன், முருகதாஸ், தருண் சத்யானு என் மூணு நண்பர்களும் பீரோ திருடுறது தான் கதை. ஒரு தடவை திருடும்போது ஹீரோயினைப் பார்த்து, லவ் பண்ண ஆரம்பிச்சிருவேன். படம் பாருங்க... ரொம்ப ஜாலியா இருக்கும்!''



''உதயநிதியும் நீங்களும் சேர்ந்து படம் பண்றதா பேச்சு வந்ததே?''



''சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தா, அண்ணனோட நிச்சயம் நடிப்பேன். ஆனா, உதயநிதி அண்ணனைப் பார்த்தா, பயமா இருக்கு. முதல் படத்திலேயே அவ்ளோ பெரிய ஹிட் கொடுத்துட்டார். இப்போ 'இது கதிர்வேலன் காதல்’ படத்தில் பிஸியாகிட்டார். அவர்கிட்ட இருந்து நான் நிறையக் கத்துக்கணும்!''



''நீங்க நிஜத்துலயும் 'மௌனகுரு’தான்னு இனியா கிண்டல் பண்ணி இருந்தாங்களே?''



''பொதுவா, பெண்கள்கிட்ட பேசும்போது ரொம்பக் கூச்சப்படுவேன். ஆனா, இப்போ பரவாயில்லை. படத்தில் கூட நடிக்கும் ஹீரோயின்கள் ஏதாவது பேசினா, பதிலுக்குப் பதில் பேச ஆரம்பிச்சிட்டேன். அதே சமயம் தேவை இல்லாமப் பேசமாட்டேன். மௌன குருவா இருப்பதில் தப்பில்லையே!''
''நீங்க நடிக்க வந்த பிறகு நிறைய ஹீரோக்கள் அறிமுகமாகிட்டாங்க. யாரையெல்லாம் கவனிக்கிறீங்க?''



''அதர்வாகிட்ட ஒரு ஃபயர் தெரியுது. ஸ்கூல்ல அதர்வா என்னை விட மூணு வருஷம் ஜூனியர். ஆனா, சினிமாவில் நானும் அதர்வாவும் ஒரே நேரத்தில்தான் என்ட்ரி ஆனோம். சடசடனு முன்னேறி மூணாவது படத்துலயே பாலா சார் டைரக்ஷன்ல நடிக்கும் அளவுக்குத் தன்னை மெருகேத்திட்டார் அதர்வா. என்னை இம்ப்ரெஸ் பண்ண இன்னொருத்தர் 'அட்டகத்தி’ தினேஷ். 


'மௌனகுரு’வில் ஃபாத ரோட மகனா சின்ன ரோல் நடிச்சி ருப்பார். ஆனா, விடாமப் போராடி 'அட்டகத்தி’ சான்ஸ் பிடிச்சு அசத்திட்டார். 'கும்கி’ படத்தில் விக்ரம் பிரபுவே கண்ணுக்குத் தெரியலை. பாகன் பொம்மனாதான் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் இருந்தார்.  'கடல்’ படத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பும் பிடிச்சிருந்தது. போட்டி பலமா, பயங்கரமா இருக்குங்க!''



நன்றி - விகடன்