Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Wednesday, January 11, 2012

எனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார்வை

எங்கப்பா பேரு பழனிச்சாமி.. சொந்த ஊரு ஈரோடு மாவட்டம்  பெருந்துறை வட்டம் புங்கம்பாடி, புத்தூர்க்கு இடைப்பட்ட சாலப்பாளையம் என்னும் கிராமம்.. குலத்தொழில் நெசவு..சொந்தமா 8 கைத்தறி போட்டு தொழில் நடத்துனார்.. அவர் கூடப்பிறந்த அண்ணன்  1,தம்பி 1 ,நெசவு நெய்தது துண்டு மற்றும் பெட்ஷீட்..  4 மிதி தறிகள்.. 

அப்பா தீவிர எம் ஜி ஆர் ரசிகர்.. அந்த காலத்துலயே  கட் அடிச்சுட்டு சினிமா பார்ப்பாராம்.. சைக்கிள்லயே 14 கிமீ மேட்டுக்கடை வந்து படம் பார்ப்பாராம்.. அந்தக்காலத்துல சினிமா பாட்டு புக், வசன புக் எல்லாம் விக்கும்.. அதை வாங்கி பைண்டிங்க் பண்ணி வெச்சுடுவார்.. அந்த கலெக்‌ஷன்ஸ் எல்லாம் இன்னும் இருக்கு.. 

எங்கப்பா கிட்டே கெட்ட பழக்கம் எதுவும் இல்ல.. அப்பாவோட தம்பி செம சரக்கு பார்ட்டி.. பெரியப்பா 24 மணி நேரமும் சுருட்டு குடிச்சுட்டே இருப்பாரு.. எங்க தாத்தாவும் சுருட்டு பார்ட்டி தான்.. ஆனா எங்கப்பா எந்த கெட்ட பழக்கமும் இல்லாம வளர்ந்தது ஆச்சரியம்.. ஏன்னா ஒரு மனிதனின் நல்ல கெட்ட பழக்கங்கள் அவன் சூழ்நிலையை சார்ந்தே அமையுது.. எங்கப்பா ஊர்லயே எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆண் எங்கப்பாதான்னு ஊர் மக்கள் எல்லாம் ரொம்ப புகழ்வாங்க.. எனக்கு செம குஷியா இருக்கும்.. 

எம் ஜி ஆரின் ரசிகர் என்பதால் எங்கப்பா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதுவும் இல்லாம வளரனும்னு நினைச்சிருப்பார்னு யூகிக்கறேன்.. புங்கம்பாடில ஒரு வாய்க்கால் இருக்கும்.. அதனோட அகலம் பள்ளிபாளையம் ஆறு மாதிரி அகண்டு இருக்கும்.. எங்கப்பா நீச்சல்ல கில்லாடி.. ஓடி வந்து குதிச்சா அக்கறைல போய் தான் எந்திரிப்பார்.. உள் நீச்சல், கடப்பாறை நீச்சல் எல்லாம் கலக்குவார்.. 

எனக்கு நீச்சல் சென்னிமலைல பழக்கி விட்டார்.. சென்னிமலை வாய்க்கால் ரொம்ப அகலம் கம்மி.. முதல்ல சுரப்பரடை ( சுரைக்காயை காய வைத்து செய்தது) மூலம் , பிறகு வயிற்றில் கயிறு கட்டி, பின்  சும்மா ... ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டேன்.. 

எங்கே போனாலும் சைக்கிளில் தான் போவார்.. எங்கப்பா கிட்டே இருந்து கற்றுக்கொண்ட இன்னொரு நல்ல பழக்கம்  சிக்கனம்.. தேவை இல்லாம செலவு பண்ணமாட்டார்.. தேவை இருந்தா கொஞ்சமா செலவு செய்வார்.. 

எங்கப்பா வை நான் பெருமையா நினைவு கூறும் இன்னொரு சம்பவம்..  தாத்தா உடல் நிலை சரி இல்லாம இருந்தப்ப சொத்து பிரிச்சாங்க.. அப்போ அப்பாவோட அண்ணனுக்கும், தம்பிக்கும் ஒரு சண்டை.. தம்பிகாரர் அதாவது என் சித்தப்பா தனக்குத்தான் அதிக இடம் ஒதுக்கனும், நான் தான் கடைக்குட்டி என அடம் பிடிக்க, பெரியப்பாவோ நான் தான் மூத்தவன் எனக்கு தான் அதிக இடம் வேணும் என வாதிட கை கலப்பு ரேஞ்சுக்கு போச்சு.. 

எங்கப்பா கூலா சொல்லிட்டாரு.. ஏம்ப்பா அடிச்சுக்கறீங்க? என் பங்கை ரெண்டா பிரிச்சு ஆளுக்குப்பாதியா வெச்சுக்கங்க.. அவங்க ஸ்டன் ஆகிட்டாங்க.  ஆனாலும் ஏத்துக்கிட்டாங்க  ( மனிதர்கள் என்றும் சுயநலம் தான்) எங்கப்பா என் கிட்டே சொன்னாரு.. நாம சம்பாதிக்கற சொத்தே நமக்கு போதும்.. நம்ம அம்மா அப்பா சம்பாதிக்கற சொத்து நமக்கெதுக்குன்னு..அடுத்தவங்க சொத்துக்கோ .பொருளுக்கோ ஆசைப்படக்கூடாதுன்னு நான் அவர் கிட்டே இருந்து கத்துக்கிட்டேன். 

எங்கப்பா அதிர்ந்து பேசி நான் பார்த்ததில்லை.. ரொம்ப சாஃப்ட் கேரக்டர்.. சென்னிமலை சென் கோப் டெக்ஸ் சொசயிட்டில  மெம்பர் நெம்பர் 397.. ஜக்காடு பெட்சீட் நெசவு.. நின்னுக்கிட்டே தான் 10 மணி நேரமும் நெய்யனும்.. ஒரே ஒரு மிதி.. மாத்தி மாத்தி மிதிச்சுட்டே இருப்பாரு. சாலப்பாளத்தார்னா சென்னிமலைல எல்லாருக்கும் தெரியும்.. எங்கபாவோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் 2 பேரு . செந்தாம்பாளத்தார், குலத்தான் .நான் காலேஜ் முடிச்சு சொந்தமா கார்மெண்ட்ஸ் வைக்க முயற்சி செஞ்சப்ப எங்கம்மாவோட எதிர்ப்பையும் மீறி வீட்டு பத்திரத்தை வெச்சு லோன் வாங்கி கொடுத்தார்.. எங்கப்பாவுக்கு சுகர் இருந்தது.. ஹார்ட் அட்டாக்ல 5 வருடம் முன்பு ஜூலை 7 இறந்தார். எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.. 

கண்டிப்பை அவர் என் கிட்டே காட்னதே இல்லை.. அன்பு, பாசம், அரவணைப்பு மட்டுமே காட்டி இருந்தார்.. அவர் நல்ல குணங்களை பின்பற்றி அவர் பேரை காப்பாத்தனும் என்பதாவே என் கொள்கையா இருந்தது.. 

அடுத்து எங்கம்மா.. அவங்க ஈரோடு.. எங்கம்மா ஆன்மீகத்தில் அலாதி ஈடு பாடு.. நான் 5ங்கிளாஸ் படிச்சப்பவே என்னை தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் கோயில்ல படிக்க வெச்சு மார்கழி மாச பஜனைல கலந்துக்க வெச்சாரு.. ஈஸ்வரன் கோயில்  சுத்தி 4  ரோடுலயும் மார்கழியின் அதிகாலையில் நடந்த அனுபவம் இன்னும் நினைவு இருக்கு..

எங்கம்மா டெயிலர். லேடீஸ் டிரஸ் எல்லாம் பிரமதமா தைப்பார்.. ஜாக்கெட்க்கு ஹெம்மிங்க் பண்றது கொக்கி வைக்கறது எல்லாம் நான் செய்வேன்.. சின்ன வயசுல சிங்கள்க்கு முடி போடுவேன்..

எங்கம்மா பக்கா சைவம்.. அதே மாதிரி என்னையும், எங்கக்காவையும் வளர்த்தாங்க.. நோ டீ நோ காபி... நோ முட்டை,நோ மட்டன் சிக்கன்..  எங்கப்பா இறந்த பிறகு  எனக்கு ஆன்மீகத்துல நம்பிக்கை குறைஞ்சிருச்சு.. காரணம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரே 70 வயதில் திடீர்னு இறந்துட்டாரு.. ஆனால் ஊரை அடிச்சு உலையில் போடும் பல தீயவர்கள் 100 வயசு வரை உயிர் வாழறாங்க.. அதான்.. 

இப்போ அம்மா சென்னிமலைல நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருக்காங்க.. இந்தியா பூரா அனைத்து ஆன்மீக தலங்களும் சுத்தி பார்த்துட்டாங்க.. இலங்கை, சீனா எல்லாம் போய் இருக்காங்க..

இந்த நாளில் எங்கம்மா, அப்பாவுக்கு என்  வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfh1PEkDqHAsu386lDGyL5NPmCbC5i1tJ1NZZclEQs0okdh2WwwfhsiWtXmpdWDAynIlYWINuqN4V7KF_aRrgyCgkWBUrjSEe4z1Py4Nw7zfBKXWlYT7F6JtAqiq6R_BsNtem12A5vfz1P/

ஓக்கே ஃபிளாஸ்பேக் போதும்..  இப்போ  பிளாக் பற்றி பேசலாம்.. 2010 ஜூலை 17 தான் நான் பிளாக் உலகத்துக்கு வந்தேன். என்னை அறிமுகப்படுத்தியவர் நல்ல நேரம் சதீஷ்.. எனக்கு 12 வருஷ பழக்கம்..  அவர் சித்தோடு, நான் ஈரோடு.. 2 பேரும்பாக்யாவுல ஜோக்ஸ் எழுதுவோம். அப்போ பழக்கம்.. அவர் தான் எனக்கு எல்லா உதவியும் செஞ்சு கொடுத்தாரு... 

எங்க வீட்ல நெட் கனெக்‌ஷன் கிடையாது.. நேரம் இருக்கும்போது டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சுடுவேன்,..என் நண்பர்கள் 12 பேர்கிட்டே பிளாக் பாஸ்வோர்டு இருக்கு.. அவங்க யாராவது போஸ்ட் போடுவாங்க..

அலெக்ஸா ரேங்கிங்க் தான் தமிழ் வலைப்பூக்களின்  டிராஃபிக் ரேங்க்கை நிர்ணயிக்குது.. அதுல நெம்பர் குறைய குறைய நாம் முன்னேறிட்டு இருக்கோம்னு அர்த்தம்.. நான் வந்த புதுசுல என்னோட அலெக்க்ஸா ரேங்க் 13 லட்சம்.. இப்போ என்னுது- 66,000. கேபிள் சங்கர் - 65,860, ஜாக்கி சேகர்-86,180, சவுக்கு-48,711

நான் பதிவுலகத்துல வந்த புதுசுல முதல் 5 மாசம் எந்த சர்ச்சைகளும் இல்லாம போச்சு.. அதுக்குப்பிறகு விகடன் பத்திரிக்கைல வந்த சில பதிவுகள் என் பிளாக்ல போட்டதால காப்பி பேஸ்ட் பதிவர்னு எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க.. சரக்கு இல்லாம போடறான்னு சொன்னாங்க.. ஆனா உண்ஐ அதுவல்ல.. நான் கடந்த 18 வருடங்களில் எழுதிய 1லட்சத்து 2890 ஜோக்ஸ், கவிதைகள் 80, கட்டுரைகள் 70 , சிறுகதைகள் 34, ஒரு பக்க சிறுகதைகள் 45 , போன்றவை எல்லாம்  டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சிருக்கேன்..



அதனால கை வசம் சரக்கு இல்லாம இல்லை.. அவள் விகடன், நானயம் விகடன், பசுமை விகடன் போன்ற புக்ஸ் எல்லாரும் வாங்கறது இல்லை.. அவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னு அப்டி போட்டேன்.. இப்போ வந்த எதிர்ப்பால் அதையும் தவிர்த்துட்டேன்,..கீழே உள்ள படத்தை அனுப்பியவர் கார்த்தி கவி, நன்றி அவருக்கு



சினிமா விமர்சனத்துல வசனங்கள் போடறதை பற்றி ஒரு பேச்சு.. செல் ஃபோன் எடுத்துட்டு போய் அதுல ரெக்கார்டு பண்ணிக்கறார்னு.... என்னோட செல் ஃபோன் நோக்கியா பேசிக் மாடல் 1100.. அதுல அந்த வசதி எல்லாம் கிடையாது.. எதுக்காக வசனம் எழுதறேன்னா ஒரு அடையாளத்தை காட்டவும் , தனித்து நிற்கவும்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர், உண்மைத்தமிழன் மூவரும் சினிமா விமர்சனத்தில் விற்பன்னர்கள்... அவர்கள் ரேஞ்சுக்கு எழுத முடியலைன்னாலும்.. 4 வது இடத்தையாவது பிடிக்கனும் என்பதற்காக வசனம் எழுதும் பாணியை மேற்கொண்டேன்..


எனது தளங்களில் போடப்படும் சினிமா நடிகைகளின் ஸ்டில்கள் , கூகுளில் போடப்பட்ட கல்லூரி மாணவிகள் ஃபோட்டோக்கள் போடுவதை நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டினார்கள்.. அவற்றையும் தவிர்த்து வருகிறேன்..

பதிவுலகில் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை.. நண்பர்களை சம்பாதிக்கத்தானே வந்தோம் இந்த உலகுக்கு?

ஆனா ஒண்ணு.. நண்பர்கள்க்கு நன்றி சொல்ல ஆரம்பிச்சா அதுக்கு தனி பதிவே போடனும்.. முடிஞ்ச வரை நினைவில் நிற்பவர்களுக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லிக்கறேன்

http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thaks02.jpg
லே அவுட், டெம்ப்ளேட் விஷயங்களில் அடிக்கடி உதவி புரிந்து வரும் சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி, நிரூபன், கடம்பவனக்குயில்,ராஜி நால்வருக்கும் முதல் நன்றிகள்

பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவித்த சிரிப்பு போலீஸ் ரமேஷ்,ராம்ஜி யாஹூ,திருப்பூர் புரட்சித்தலைவன்க்கு என் நன்றிகள்

ஆரம்ப கட்டத்தில் தன் கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த பன்னிக்குட்டி ராம்சாமி & டெர்ர் குரூப் நண்பர்கள்க்கு நன்றி

பதிவுலகின் உயிர் நண்பர்களும், அவ்வப்போது உயிரை எடுக்கும் நண்பர்களுமான விக்கி உலகம் தக்காளி, நாஞ்சில் மனோ எனும் லேப்டாப் மனோ இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்

                
இராஜராஜேஸ்வரி- மணிராஜ்
ராம்வி-மதுரகவி
சித்ரா-கொஞ்சம் வெட்டிப்பேச்சு,
கடம்பவனக் குயில்- கடம்பவன பூங்கா
அம்பாளடியாள்- அம்பாளடியாள்
சாதாரணமானவள்- சாதாரணமானவள்
கீதா- கீதமஞ்சரி
மாலதி-மாலதியின் சிந்தனைகள்
ஹேமா- வானம் வெளித்த பின்னும்
ரூஃபினா செல்ல நாய்குட்டி
ஜோஸ்பின் -ஜோஸ்பின் கதைக்கிறேன்,
கல்பனா-
ஏஞ்சலின்-காகித பூக்கள்
லக்‌ஷ்மி-குறை ஒன்றும் இல்லை
சசிகா -மேனகா-
இந்திரா - மொக்கை இந்திரா 
thenammaiதேனம்மை லெக்ஷ்மணன் 

ஆஃபீசர்- உணவு உலகம்
சதீஷ்குமார்- நல்லநேரம்
பன்னிக்குட்டி ராம்சாமி- ஸ்டார்ட் ம்யூசிக்
ரமேஷ் சுப்புராஜ்- சிரிப்பு போலீஸ்
 மாத்தி யோசி -ஜீவன்
ராஜேந்திரன் - நண்டு நொரண்டு
மனோ- நாஞ்சில் மனோ
.விக்கி- விக்கியின் அகடவிகடங்கள்
பிரகாஷ்-தமிழ்வாசி பிரகாஷ்
ராஜா-ராஜபாட்டை
கருண்- வேடந்தாங்கல்
சௌந்தரபாண்டியன் கவிதைவீதிசௌந்தர்
.K.S.S.ராஜ்- நண்பர்கள்/நண்பர்கள்
துஷ்யந்தன்-
மனசாட்சி மனசாட்சி பஜ்ஜி கடை
மதுமதி- தூரிகையின் தூறல்
ரமணி- தீதும் நன்றும் பிறர் தர வாரா

ஆரூர் மூனா செந்தில்

சேட்டைக்காரன்


சேலம் தேவா, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன் எம் ஏ, நாய் நக்ஸ் நக்கீரன்

கணேஷ்- மின்னல்வரிகள்
சுரேஷ்குமார்-வீடு
சீனா அய்யா- வலைச்சரம்
ரத்தனவேல்- ரத்தனவேல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து,
கோவை நேரம்- கோவை நேரம்
நிரூபன் நாற்று
ரெவரி- மெல்ல தமிழ் இனி வாழும்
செல்வா- செல்வா கதைகள்
சென்னை பித்தன்
ரஹீம் கலாஸி
சங்கவி- சங்கவி
செங்கோவி- செங்கோவி
சூர்யஜீவா- ஆணிவேர்
ஐ.ரா.ரமேஷ்பாபு- உரைகல்
கும்மாச்சி- கும்மாச்சி
சசிகுமார்- வந்தேமாதரம்
சரியில்ல-
பெ.சொ.வி-
M.R.
கோவிந்தராகன். மதுரை
மதுரன்
ஹாலிவுட் ரசிகன்
கோகுல்- கோகுல் மனதில்
தனிமரம்
பிலாசபி பிராபகரன் - பிரபா ஒயின் ஷாப்
ரமேஷ் வெங்கடபதி
கேரளக்காரன் ஆனாலு அதிரி புதிரி
வைகை
சேலம் ரியாஸ், மொஹம்மத்

யானைக்குட்டி
அனைவருக்கும் என் நன்றிகள்.. 


வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.. 


ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் , கரூர் ஜெகன் @ ஆல்தோட்டபூபதி, ஈரோடு தங்கதுரை : )), , Senthil Nathan , jeevan , Parisalkaaran ,ராஜன் , , C.Kesavan,@ Sudha,, நையாண்டி,@ SeSenthilkumar,, மதுரை ரியாஸ், கரையான்,DKCBE, பாரத்...பாரதி...,, புலவர் தருமி, GiRa, vivaji,

சிங்கப்பூர் சாந்தி, பல்ஸ்மாலா, கோவை அரட்டைகேர்ள், கோவை சவுமி, மதுரை உமாகிரிஷ்,சென்னை மோஹனா,சோனியா, மங்கை,கோவை கிரேட் விஜி, @ sbnu , பூங்குழலி :) , :) , JanuShath அனைவருக்கும் என் நன்றிகள்





விடுபட்டவர்கள் பெயர்கள் அவ்வப்போது சேர்த்துடறேன்..டைம்லைனுக்கு வர வர அவங்க பேரை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடறேன் ( காபி பேஸ்ட் பதிவர்)

ஃபாலோயர்ஸ் 1000 கொண்டு வர முடியலை.. 8 குறையுது..  ஹிட்ஸ் 20 லட்சம் கொண்டு வர நினைச்சேன் .. அதும் 100000 குறைஞ்சுடுச்சு, இண்ட்லில் 210 ஃபாலோயர்ஸ்..

Monday, December 05, 2011

புரட்சிப்பதிவருடன் ஒரு நேர் காணல் - காமெடி கும்மி கலாட்டா

சார்.. இங்கே புரட்சிப்பதிவர் எங்கே குடி இருக்கார்? நான் அவரை பார்க்கனும்... 

அதோ நேரா போனா ஒரு காஃபி கஃபே வரும் பாருங்க.. அந்த கடைக்கு எதிர்ல தான் குடி இருக்கார்..

சபாஷ், பலே ,காபி பேஸ்ட்டுக்கு எதிரானவர்ங்கறதால காஃபி ஷாப்க்கு எதிர்லயே குடி இருக்கார் போல..

அக்கா, வணக்கம்க்கா ..அண்ணன் இருக்காருங்களா?

அவர் தூங்கிட்டு இருக்காருப்பா.. 

என்னது? தூங்கறாரா? அவர் ஒரு விழிப்புணர்வுப்பதிவர் ஆச்சே? எதுக்கு தூங்கறாரு?எழுப்புங்க.. 

தம்பி.. மதியாதார் தலை வாசல் மிதியாதேன்னு பழமொழி தெரியுமில்ல.. என் வீட்டுக்கு எதுக்கு வந்தே?

அண்ணே, அக்காவை கேட்டுப்பாருங்க.. நான் வாசப்படியை மிதிக்கலை, தாண்டித்தான் வந்தேன்.. 

சரி சொல்லு இன்னா மேட்டரு?

நீங்க தான்னே சொல்லனும்.. உங்க பிளாக்ல உங்க ஃபோட்டோ பார்த்தேன், சூப்பரா இருக்குண்ணே.. அது உங்க 25 வயசுல எடுத்ததுங்களா?

ச்சே, ச்சே  அது என் சொந்த முகம் கிடையாது.. கூகுள் ல போய் காபி பண்ணி என் பிளாக்ல பேஸ்ட் பண்ணிக்கிட்டேன்.

அடடா.. என்னண்ணே.. ஓப்பனிங்க்லயே டக் அவுட் ஆகி சொதப்பறீங்க? நீங்கதான் காபி பேஸ்ட்க்கு எதிரானவர் ஆச்சே.. சொந்த முகத்தையும், உங்க ஃபோன் நெம்பர் , அட்ரஸ் எல்லாம் போடலாமே? அதானே வீரனுக்கு அழகு? இப்போ பாருங்க நான் ஒரு டம்மி பீசு.. நானே என் ஃபோட்டோ , ஃபோன் நெம்பர் எல்லாம் தில்லா போட்டிருக்கேன், நீங்க ஏண்ணே பம்பறீங்க? ஆமா, இதானே உங்க டைரி.. என்னமோ எழுதி இருக்கே?

அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன்  முதற்றே உலகு-

இது திருக்குறள் ஆச்சே.. ஆல்ரெடி திருவள்ளுவர் எழுதிட்டாரே, நீங்க ஏன் மறுபடி அதை எழுதினீங்க?

லூஸ் ,மாதிரி பேசாதேப்பா.. நம்ம முன்னோர்கள் எழுதுன நல்ல விஷயங்கள் எல்லாருக்கும் போய்ச்சேர வேண்டாமா?

என்னண்ணே, உங்களுக்கு ஒரு நியாயம்  ஊருக்கு ஒரு நியாயம்.. வேடந்தாங்கல் கருணையும், கவிதை வீதி சவுந்தரையும் திட்டி  8 போஸ்ட் போட்டிருக்கீங்களே? அது ஏன்?

ஹி ஹி எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல் தான்.. ஈசியா ஹிட்ஸ் வாங்கறாங்க..மற்ற பதிவர்கள் எல்லாம் நல்ல போஸ்ட் எழுதியும் ஹிட் ஆக மாட்டேங்குது.. 

சரி... இதென்ன நோட்டு?

அதுவா? எங்க மேரேஜ்க்கு சொந்தக்காரங்க மொய் வெச்சாங்க இல்லையா அந்த நோட்டு, யார் யார் எவ்வளவு மொய் வெச்சாங்க?ன்னு கணக்கு.. நான் அவங்க வீட்ல விசேஷம் நடக்கறப்ப பதில் மொய் வைக்கனும் இல்லையா? அதுக்குதான்..

ஓஹோ.. இதே ஃபார்முலாவை அவங்க ஃபாலோ பண்ணுனா மட்டும் ஏன் திட்டறீங்க? பிளாக் உலகம் ல 10 பேர் பிளாக் போய் நாம கமெண்ட் போட்டாத்தான் அவங்க நம்ம பிளாக் வருவாங்க.. நாம ஓட்டு போட்டாத்தான் அவங்க ஓட்டு போடுவாங்க.. இதுல என்ன தப்பு கண்டு பிடிச்சீங்க?

அதில்லை, 1689 பேர் பிளாக் உலகத்துல இருக்காங்க, ஆனா இந்த 3 பேர் மட்டும் டாப் 20 ல வந்துடறாங்க, அதான் வயிற்றெரிச்சலா இருக்கு.. அதுவும் காபி பேஸ்ட் போஸ்ட்டா இருக்கு.. 

சரி, காபி பேஸ்ட் சரியா தப்பா?ங்கற விவாதம் அப்புறம் வெச்சுக்கலாம், உண்மைத்தமிழன் அண்ணன் கூட ஜூனியர் விகடன் போஸ்ட்டை ரெகுலரா போடறார்..  ஆரூர் மூனா செந்தில் கூட ஒரு போஸ்ட் சொந்த போஸ்ட், ஒரு போஸ்ட் காபி பேஸ்ட் போடறார்.. அவங்களை எல்லாம் எதுவுமே சொல்லாம ஏன் குறிப்பிட்ட இந்த 3 பேரை மட்டும் குறி வைக்கறீங்க?

நீ லூஸாப்பா.. அவங்க 2 பேரையும் பார்க்கவே பயமா இருக்கு.. எனக்கு பயந்த சுபாவம் வேற.. ஆனா கருண், சவுந்தர் எல்லாம் புள்ளப்பூச்சிங்க.. பயந்துக்குவாங்க.. அதான்

சரி.. நீங்க இதுவரை எத்தனை  போஸ்ட் போட்டிருக்கீங்க?

23

அதுல மக்கள்க்கு யூஸ் ஆகற மாதிரி போஸ்ட் எத்தனை?

ஹி ஹி  எல்லாமே அடுத்தவனை குறை சொல்லி போட்ட போஸ்ட் தான் 

சரி, என் போஸ்ட் இதுவரை எத்தனை தெரியுமா? 912.. அதுல ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன், அவள் விகடன்  காபி பேஸ்ட் பதிவு மொத்தம் 230.. மீதி எல்லாமே சொந்தப்பதிவுதான் ஜோக்ஸ், சினிமா விமர்சனம் , கட்டுரைன்னு போகுது..இதுல உங்களுக்கென்ன கஷ்டம்? சொல்லுங்க?

அதாவது ஒருத்தனே நெம்பர் ஒன்னா வர்றது எனக்குப்பிடிக்கலை... எல்லாருக்கும் வாய்ப்பு வேணும்.. 

அண்ணே, ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வரனும்னா முதல்ல ஓடி வர்றவனை விட வேகமா ஓடனும்.. அதை விட்டுட்டு அவன் காலை வாரக்கூடாது.. எங்களுக்கும் குடும்பம் இருக்கு, ஆஃபீஸ் வேலை இருக்கு.. எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு பிளாக் வேலையையும் பண்றோம்.. சும்மா திடீர்னு யாரும் ஜெயிக்க முடியாது.. இதுலயும் உழைப்பு இருக்கு.. 2010 ஜூலை 17 ல பிளாக் உலகத்துக்கு வந்தேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு எழுதிட்டு இருக்கேன்.. அடுத்தவங்க வம்பு தும்புக்கு போறதில்லை.. நீங்க ஏண்ணே இப்படி இருக்கீங்க? ஏதாவது மன வியாதியா? டாக்டரை போய் பாருங்கண்ணே?

ஆங்க்.. ஒரு குறை கண்டு பிடிச்சுட்டேன்,,.. டைட்டில் ஏன் கிளாமரா வைக்கறே?இதுக்கு பதில் சொல்லு.. 

அண்ணே.. ஒரு சினிமாக்கு டைட்டில் எப்படி முக்கியமோ.. போஸ்டர் டிசைன் எப்படி முக்கியமோ அதே மாதிரி ஒரு பதிவுக்கு டைட்டில் ரொம்ப முக்கியம், மக்களை சுண்டி இழுக்கற மாதிரி டைட்டில் வைக்கனும்.. இது எல்லாம் பேசிக் லெசன்.. அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமாண்ணே. கருண், கவிதை வீதி சவுந்தர் 2 பேரும் ஆவரேஜ் பிளாக் ஹிட்ஸ் 1000 டூ 2000 தான், நீங்க அவங்களை தாக்கி போஸ்ட் போட்ட அன்னைக்கெல்லாம் 3000 ஹிட்ஸ் ஆகிடுச்சாம்.. 

அய்யய்யோ.. எனக்கு வயிறு எரியுதே.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் அவங்களை தாக்கியே இருக்க மாட்டேனே..

இன்னும் சொல்றேன் கேளுங்க . ஒரு பிரபல பதிவர் தன்னோட பஸ்ல என் போஸ்ட் லிங்க் குடுத்து எவ்வளவு மோசமா விமர்சனம் எழுதி இருக்கான் பாருங்க.. அப்டினு கமெண்ட் போட்டாரு.. உடனே அதுல அப்படி என்ன இருக்குன்னு பார்க்க அவரோட ஃபாலோயர்ஸ் 2000 பேரும் வந்து என் ஹிட்ஸ்ஸை ஏத்துனாங்க.. ரொம்ப நன்றிண்ணே அப்டின்னு நான் கமெண்ட் போட்டேன் , உடனே உங்களை மாதிரியே அவரும் பதறி அந்த லிங்க்கை அவர் பஸ்ல இருந்து தூக்கிட்டார்..

என் நல்ல எண்ணத்தை புரிஞ்சுக்காம பேசாதே.. நல்ல நல்ல பதிவுகள் அடையாளம் காணப்படாமலேயே இருக்கு.. உன்னை மாதிரி குப்பை ஆளுங்கதான் திரும்ப திரும்ப சூடான இடுகைல வர்றீங்க.. அதை தடுக்கனும்..

ரைட்டு.. அதுக்கு ஒரு ஐடியா இருக்கு.. உங்களூக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு.. நீங்க நல்ல இடுகைகளை மக்களூக்கு அடையாளம் காட்டுங்க.. எதெல்லாம் நல்ல இடுகையோ அதுக்கு லிங்க் கொடுத்து வலைச்சரம் மாதிரி செயல்படுங்க, 4 பேருக்கு நல்லது நடக்கும், அவங்களூக்கும் ஹிட்ஸ் கிடைக்கும்..

சாரி , அது என் வேலை  இல்லை.. எனக்கு யாரையாவது ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கனும்.. இப்போ உன் பிளாக்ல சினிமா விமர்சனம் போடறப்ப எதுக்கு கூகுள்ல போய் நடிகைங்க ஃபோட்டோவை போடறே?


அண்ணே, இதுக்காக நான் சென்னையோ, மும்பையோ  போயா ஃபோட்டோ எடுக்க முடியும்.. கூகுள்ல தான் எடுக்க முடியும்..


சரி.. எல்லாரும் வாரம் 5 போஸ்ட்  போடறாங்க, நீ மட்டும் ஏன் டெயிலி 2 போஸ்ட் போடறே? உன்னால பல தரமான பதிவர்கள் வெறுத்துப்போய் பிளாக் எழுதறதையே விட்டுட்டாங்க..

அண்ணே.. லூஸ் மாதிரி பேசாதீங்க.. ராமநாராயணன் மாசம் ஒரு  படம் எடுத்து ரிலீஸ் பண்றதால ஷங்கரோ, மணி ரத்னமோ சினி ஃபீல்டை விட்டு போய்ட்டாங்களா? அவங்கவங்களுக்கு உள்ள மரியாதை அப்படியே தான் இருக்கும்.. டெயிலி 2 போஸ்ட் போடறதால ஒருத்தன் நல்ல பதிவர்னு பேர் வாங்கிட முடியாது.. குறிஞ்சி மலர் போல் அரிதாக பதிவு போடுவதால் ஒரு நல்ல பதிவரை யாரும் குறை சொல்லவும் முடியாது

ஓஹோ, இத்தனை வியாக்கியானம் பேசறியே.. அப்புறம் ஏன் தமிழ்மணம் ரேங்கிங்க் வேணும்னு அலையறே.. அதை விட்டுட்டு நீ பாட்டுக்கு இருந்தா எனக்கு வயிறு எரியாதுல்ல?


அண்ணே.. ஸ்கூல்ல படிக்கறப்பதான் ஒழுங்கா ரேங்க் எடுக்க முடியல.. இங்கயாவது எடுக்கலாம்னுதான் , இதெல்லாம் ஒரு ஜாலிதான்.. இதுனால யாருக்கும் 10 பைசா லாபம் இல்ல.. அப்படி ஏதாவது வருமானம் இருந்தாலாவது உங்க குய்யோ முறையோ அரற்றலுக்கு ஒரு  காரணம் சொல்லலாம்..

சரி.. என் பிளாக்ல ஒரு எதிர் பதிவு போடறேன்.. அங்கே சந்திக்கலாம்..

Tuesday, October 25, 2011

பிரபல பதிவர்கள்-ன் தீபாவளி அட்டூழியங்கள்

 தீபாவளி அன்னைக்கு நம்ம பதிவுலக புலிகள் எல்லாம் என்ன செய்வாங்க? எந்த மாதிரி பதிவு போடுவாங்க?ன்னு ஒரு ஜாலி கற்பனை.. 
இது சும்மா காமெடிக்காக போடப்பட்டதுதான்.. யாரும் அரிவாள், கம்பு , கப்டா தூக்கிட்டு வரவேணாம்னு அன்போட கேட்டுக்கறேன்.. 




1. பன்னிக்குட்டி ராம்சாமி


சி.பி - அண்ணே, வணக்கம்னே..

பன்னிக்குட்டி ராம்சாமி  -  வாடா, தகர டப்பா தலையா.. நீ ஏன் இங்கே சுத்திட்டு இருக்கே.. தீபாவளியும் அதுவுமா ஏதாவது சினிமா தியேட்டர்ல தானே பொறுக்கிட்டு இருப்பே?

சி.பி -அது வேற ஒண்ணும் இல்லைண்ணே, தீபாவளிக்கு ஒரு பதிவு போடப்போறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி  -ஆ, பொல்லாத பதிவு.. நீ என்ன பதிவு போடுவேன்னு எங்களுக்குத்தெரியாதா?சினிமா விமர்சனம் கற பேர்ல ஒரு டப்பா படத்துக்கு ஏதாவது கதை  , வசனம் எழுதுவே.. அதுல 5 ஸ்டில்ஸ் போட்டு பக்கத்தை நிரப்புவே.. இல்லைன்னா 10 மொக்கை ஜோக்ஸ் போடுவே.. சுத்தமா சிரிப்பே வராது..
சி.பி - அண்ணே பப்ளிக் பப்ளிக்…. நீங்க என்ன பதிவு போடப்போறீங்க?


பன்னிக்குட்டி ராம்சாமி  -அதை நீ கேட்டு என்ன பண்ணப்போறே?
சி.பி - அண்ணே, கைவசம் சரக்கு இல்லை… அதனால எல்லாரும் என்ன பதிவு போடுவாங்கன்னு ஒரு பதிவு போட;லாம்னு..


பன்னிக்குட்டி ராம்சாமி  -அடங்கோ..சரி.. விடு சொல்லித்தொலையறேன்.. நாயா பேயா பழகிட்டே..நரகாசுரன் – ஒரு பய(ங்கர) டேட்டா இதுதான் தலைப்பு

சி.பி - அய்யோ, அண்ணே, ஏற்கனவே நீங்க போட்ட ஒரு பதிவால பதிவுலகமே ரெண்டா பிரிஞ்சு இருக்கு , மறுபடி ஒரு பய டேட்டா பதிவா?


பன்னிக்குட்டி ராம்சாமி  -அட ஆமண்டா.. நரகாசுரன் நமீதாவோட கொள்ளுப்பாட்டியை வெச்சிருந்தான்.. அதுக்கான ஆதாரம் கிடைச்சிருக்கு..
சி.பி - சும்மா கதை விடாதீங்கண்ணே.. சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிருக்காங்கண்ணே இன்னும் யாரும் கண்டு பிடிக்கலை.. அதுக்குள்ள நமீதா கொள்ளுப் பாட்டியை யார் வெச்சிருந்தாங்கன்னு எப்படி கண்டு பிடிக்க முடியும்?


பன்னிக்குட்டி ராம்சாமி  - அதெல்லாம் உனக்கெதுக்கு?
சி.பி - சரி… மக்கள் அதை விரும்பி படிப்பாங்களா? அட்லீஸ்ட் நமீதாவை யார் வெச்சிருக்காங்கன்னாவாவது ஆர்வமா படிப்பாங்க,, பாட்டி பற்றி யார்ணே படிக்கப்போறாங்க?


பன்னிக்குட்டி ராம்சாமி  - அட உலகம் தெரியாதவனே.. த்ரிஷா தெரு நாயை வளர்த்ததை 2 பக்கத்துக்கு நியூஸ் போட்டாங்க , படிச்சீங்க, ஏஞ்சலினா ஜூலி  தடுக்கி விழுந்தப்ப நைட்டில ஒரு கிழிசல்னு நியூஸ் வந்தது படிச்சீங்க. இதை படிக்க மாட்டாங்களா? தமிழனுக்கு சினிமா நியூஸ்னு ஒண்ணு இருந்தா போதும் விழுந்து விழுந்து படிப்பாஙக..
 Dean McDowell
Dean McDowell

2.  சிரிப்புப்போலீஸ் ரமேஷ் -

சி.பி - ஹாய் ரமேஷ், ஹேப்பி தீபாவளி….

சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - என்னது ரமேஷா? டேய் தம்பி.. நீ என்ன வேலை செய்யறே?

சி.பி - ஒரு ஃபைனான்ஸ் கம்பெனில எடுபுடி வேலைண்ணே….

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - நான்?

சி.பி - ஒரு கம்ப்யூட்டர் கம்ப்பெனில டேமேஜர்  சாரி மேனேஜர் வேலைண்ணே..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ்  - நீ என்ன கூலி வாங்கறே?

சி.பி - டெயிலி 30 ரூபா தர்றாங்க..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - நான் எவ்வளவு சம்பளம் வாங்கறேன்?

சி.பி - மாசம் ரூ 42,000 ணே

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - அப்புறம் என்ன இதுக்கோசரம் என்னை பேர் சொல்லிக்கூப்பிட்டே?

சி.பி - சரி, இனி கூப்பிடலை.. மேட்டருக்கு வர்றேன்..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - என்னது மேட்டரா? எங்கெ? எங்கே? ( வாசலை தேடறார்.. )

சி.பி - அதில்லண்ணே, தீபாவளி அன்னைக்கு என்ன பதிவு போடுவாங்கன்னு ஒரு பதிவு  போடறேன்.. நீங்க என்ன பதிவு போடறீங்க?

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - சாரி அது கம்பெனி சீக்ரெட்,, வெளீல சொல்லக்கூடாது

சி.பி - ப்ளீஸ்ணே

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - கம்ப்பெனி செக்ரட்ரியை வெளில வாக்கிங்க் கூட்டிட்டுப்போனவனும், கம்பெனி சீக்ரெட்டை வெளில வாமிட் பண்ணுனவனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் தரித்திரம் எதுவும் கிடையாது..

சி.பி - சரி யார்ட்டயும் சொல்ல மாட்டேன் , சொல்லுங்க..

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - யார்ட்டயும் சொல்ல மாட்டியா?நம்பலாமா?

சி.பி - தாரளாமா நம்புங்க..
சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - தீபாவளி அன்று ஓ சி சோறு சாப்பிடுவது எப்படி? அப்டினு ஒரு பதிவு போடறேன்..

சி.பி - அண்ணே, நீங்க வழக்கமா எல்லா பக்கமும் ஓ சி சாப்பாடு சாப்பிடறது வழக்கம் தானே.. இதுல என்ன ஸ்பெஷல்?

சிரிப்புப்ப்போலீஸ் ரமேஷ் - தம்பி/.. ஓ சி சாப்பாடு சாப்பிடறது ஈசி.. ஆனா பண்டிகை நாள்ல ஓசி சாப்பாடு சாப்பிடறது ரொம்ப  சிரமம் ,எப்படி ஆளை பிடிக்கறது? எப்படி மடக்கி ஹோட்டல்க்கு கூட்டிட்டு போறது? இதெல்லாம் தனி டெக்னிக்.. அது பற்றி ஒரு பதிவு போடறேன்..

 Leonid Afremov

3.  விக்கி உலகம்  தக்காளி

சி.பி - எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்.. ஐ வாண்ட் டூ சி மிஸ்டர் வெங்கட்….

ரிசப்ஷனிஸ்ட் -   ப்ளிஸ் வெயிட் சார்.. அவர்  உள்லே பிஸியா இருக்கார்..

சி.பி -யார் கூட?

ரிசப்ஷனிஸ்ட் - வாட்?

சி.பி - அது வந்து… டோண்ட் மிஸ்டேக்கன் மீ.. அவர் பெரிய கம்பெனி எம் டி.. எதாவது வி ஐ பிங்க வந்திருப்பார்.. அதான் யார் கூட பிஸியா இருக்கார்னு…

ரிசப்ஷனிஸ்ட் - அவர் உள்ளே அவர் பி ஏ கூட பிஸியா இருக்கார்..

சி.பி - நினைச்சேன்/  ஆஃபீஸ் வேலை 18 மணீ நேரம்னா அவன் 17 மணீ நேரம் பி ஏ கூட தான் இருக்கான்.. ராஸ்கல்ஸ்!! நான் வந்திருக்கேன்னு போய் சொல்லுங்க..

அந்தப்பெண் உள்ளே போகிறார்
ரிசப்ஷனிஸ்ட் - சார்.. உங்களைப்பார்க்க ஒரு ஆள் வந்திருக்கார்..

வீடியோ விக்கி - நான் பிசியா இருக்கேனு சொல்லி அனுப்பிடம்மா, ஆம்பளைங்க யார் வந்தாலும் நான் அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு சொல்லி அனுப்பு, பொண்ணுங்க வந்தா மட்டும் என்னை பார்க்க உள்ளே அனுப்பு.. அதுக்காக என் சம்சாரம் வந்தா அனுப்பிடாத, நான் என்ன கோலத்துல யார் கூட இருக்கேனோ.. எனக்கு ஒரு வார்னிங்க் பெல் அடிச்சுட்டு அப்புறம் அனுப்பு..

ரிசப்ஷனிஸ்ட் - ஓக்கே சார்…அய்ய்ய்யய்யோ சார்.. அந்தாள் உள்ளே வந்துட்டாரு..

வீடியோ விக்கி - அண்ணே , வணக்கம்ணே.. இப்போத்தான் உன்னை உள்ளே அனுப்ப சொல்லி பாப்பா கிட்டே சொல்லிட்டு இருந்தேன்..

சி.பி - யாரு? நீ? நம்பிட்டேன்.. தம்பி.. தீபாவளி அன்னைக்கு ஆஃபீஸ்ல என்ன பண்ணிட்டு இருக்கே?

வீடியோ விக்கி - சரி சரி விட்றா விட்றா.. தொழிலாளர்களூக்கு போனஸ் பிரச்சனை பற்றி பேசிட்டு இருந்தேன்..

சி.பி - அப்படியா? உன் சட்டை பாக்கேட்ல ரோஜாப்பூ சிதறி இருக்கு? காலர்ல குங்குமம் இருக்கு/..?

வீடியோ விக்கி - அது வந்து… அது எதுக்கு இப்போ?உனக்கு என்ன வேணும்?

சி.பி - தீபாவளிக்கு என்ன பதிவு போடறே?

வீடியோ விக்கி - வியட்நாம் ஃபிகர்கள் VS  இந்தியா கிச்சிலிக்காஸ்.

சி.பி - ரொம்ப நாளா உன்னை கேக்கனும்னு நினைக்கறேன் , வாரா வாரம் கிச்சிலிக்காஸ். அப்டின்னு ஒரு பதிவு போடறியே? கிச்சிலிக்காஸ். அப்டின்னா என்ன?

வீடியோ விக்கி - யாருக்குத்தெரியும்?சும்மா வாய்க்கு வந்ததை வைக்க வேண்டியதுதான்.. என்னமோ என் பதிவு நல்லா புரிஞ்ச மாதிரியும் டைட்டில் மட்டும் தான் புரியாத மாதிரியும் ஃபிலிம் காட்டறியே?

சி.பி - தம்பி.. மத்தவங்களுக்கு வேணா உன் பதிவு புரியாம போகலாம், ஆனா எனக்கு அப்படி இல்லை..

வீடியோ விக்கி - நிஜமாவா? எழுதற எனக்கே புரியாதது, படிக்கற உனக்கு புரிஞ்சுடுதா?

சி.பி - அவசரப்படாத.. நான் உன் பதிவை படிக்கறதே இல்லை… நீ எப்படி எல்லார் பதிவுக்கும் போய் படிக்காமயே அண்ணே வணக்கம்ணே,  பகிர்வுக்கு நன்றி மாப்ளே.. அப்டின்னு டெம்ப்ளேட் கமெண்ட் போடறியோ அதே மாதிரி நானும் ஹி ஹி

வீடியோ விக்கி - அடப்பாவி….

Simple Life of Simple Things 3 by Larina Natalia (LarinaNatalia)) on 500px.com

4. லேப் டாப் மனோ எனும் நாஞ்சில் மனோ

சி.பி - தம்பி லேப்டாப் மனோ என்ன பண்ணிட்டிருக்கே?

லேப்டாப் மனோ  - பார்த்தா தெரில? போராடிட்டிருக்கேன்..

சி.பி - என்னமோ கூடங்குளம் அணு உலைக்கு எதிரா போராடர மாதிரியே பில்டப் தர்றியே..

லேப்டாப் மனோ - அதில்லடா..என் பிளாக் ஓப்பன் ஆக மாட்டேங்குது

சி.பி - ஐ ஜாலி, உன்னால பதிவு போட முடியாது.. சரி ஏன் ஓப்பன் ஆகலை?

லேப்டாப் மனோ - அதான் தெரில.. நீ வேணா ட்ரை பண்ணேன்..

சி.பி - ம்க்கும். ஃபிகர்க்கு மட்டும் தனியா கன்யா குமரி வரை போய் ட்ரை பண்ணிட்டு வந்துடு…. இதுக்கு மட்டும் என்னை கூப்பிடு,… சரி பழகுன பாவத்துக்கு பண்ணி தொலைக்கிறேன்.. யூசர் நேம் சொல்லு

லேப்டாப் மனோ - லேப்டாப்

சி.பி - அடங்கோ.. சரி.. பாஸ்வோர்டு சொல்லு..

லேப்டாப் மனோ - அருவா, கத்தி, கப்டா, சுத்தி, கடபாறை, கத்திரி, வேல், வில் அம்பு..

சி.பி - டேய்.. தம்பி.. இது நீ வழக்கமா போடற ஓப்பனிங்க் கமெண்ட் டூ அதர்ஸ் பிளாக்.. அதை கேட்கல.. பாஸ்வோர்டு கேட்டேன்..

லேப்டாப் மனோ - அதுவும் இதுவும் ஒண்ணுதான், இதை அறியாதவங்க வாய்ல மண்ணு தான்

சி.பி - விளங்கிடும்.. எப்படியோ போ.. தீபாவளிக்கு என்ன போஸ்ட்?

லேப்டாப் மனோ - வீடியோ விக்கியின் ஆடியோ அம்பலம்….

சி.பி - அடப்பாவி.. என்ன அது?

லேப்டாப் மனோ - அதாவது விக்கி தக்காளி கூட சேட் பண்றப்ப அவன் மைக் ஆன் பண்ணிட்டான். பேசி முடிஞ்ச பிறகு ஆஃப் பண்ண மறந்துட்டான்.. மைக்  பாட்டுக்கு ஆன்லயே இருக்கு.. அவன் பி ஏ கூட பேசறது எல்லாம் ரெக்கார்டு ஆகிடுச்சு..

சி.பி - சும்மா கதை விடாத.. அவன் நல்லவன் ஆச்சே..

லேப்டாப் மனோ - ஆமா மாலை 7 டூ விடிகாலை 6 மணி வரை நல்லவன் தான் வீட்ல இருக்கும்போது.. ஆஃபீஸ் வந்துட்டா லீலை ஆரம்பிச்சுடுவான்

சி.பி - சரி.. இப்படி பதிவு போட்டா அவன் கோபிச்சுக்க மாட்டானா/?

லேப்டாப் மனோ - ம்ஹூம்… என் மேல கோபப்பட மாட்டான்..

சி.பி - என்ன தைரியத்துல அப்படி சொல்றே?

லேப்டாப் மனோ - எனக்கு இந்த ஆடியோ க்ளிப்பிங்கை தந்ததே சி.பி தான்னு சொல்லி உன்னை மாட்ட வெச்சிடுவேனே..




5. இலங்கை  இருபத்திநாலு மணிநேர பதிவர் நிரூபன்

 

 

சி.பி - நிரூபன்.. வணக்கம் , நல்லாருக்கீங்களா?

நிரூபன் - வணக்கம் சகோதரம், இனிய காலை ,கையை ,உடம்பை வணக்கம்.. கொஞ்சம் இருங்க பதிவை படிச்சுட்டு வந்துடறேன்..

சி.பி - ஹலோ , நான் இன்னும் பதிவே போடலை,.. அப்புறம் எதை படிப்பீங்க?

நிரூபன் -  ஓ மன்னிக்க

சி.பி - என்ன யோசனைல இருக்கற மாதிரி இருக்கு?

நிரூபன் - ஒரு காத்திரமான பதிவு போடனும் தீபாவளிக்கு அது பற்றி யோசனை..

சி.பி - அண்ணே, நீங்க போடற எல்லாப்பதிவும் காத்திரமான பதிவுதான், இலங்கை அரசு மேல ஆத்திரமான  பதிவுதான்..

நிரூபன் - திடகாத்திரமா ஒரு பதிவு போடப்போறேன்..

சி.பி - போடுங்க போடுங்க.. எனக்கு ஒரு டவுட்டு,

நிரூபன் - கேளுங்க…

சி.பி - நீங்க ஒரு நாளுக்கு எத்தனை பிளாக் போறீங்க?

நிரூபன் - 189 பேர் பிளாக் போறேன்

சி.பி - ஓக்கே , எத்தனை பின்னூட்டம்  போடறீங்க?

நிரூபன் - புது ஆளுங்கன்ன்னா 10 கமெண்ட் மட்டும் போடுவேன்..கொஞ்சம் பழகுன ஆளுங்கன்னா 29 கமெண்ட் போடுவேன்.. செங்கோவி, காட்டான், துஷ்யந்தன் இவங்க பதிவுன்னா மட்டும் 80 கமெண்ட் போடுவேன்

சி.பி - ஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் -  சி பி ஏன் மயங்கி விழுந்துட்டீங்க?

 The One 100-Th Seconds
The One 100-Th Seconds

டிஸ்கி 1   - மூன்றாம் கோணம் இணைய தளத்தில் ஒரு காமெடி ஆர்ட்டிகிள் கேட்டாங்க, கொடுத்தேன்..நேற்றே அது பப்ளிஸ் ஆகி விட்டது.. நாளை வேலாயுதம், 7ஆம் அறிவு,  ரா ஒன் , முமைத்கான் இன் அவளுக்கு அது புதுசு (கில்மா) போன்ற படங்களை பார்க்க வேண்டி இருப்பதால் பதிவு டைப் பண்ண சரக்கு கை வசம் இல்லை/.. சோ , நாகேஷ், அந்த பதிவை இங்கே போட்டிங்க்..



டிஸ்கி 2 - எந்த பிளாக் போனாலும் தீபாவளி வாழ்த்துக்களா இருக்கு.. சோ ப்ளீஸ் அவாய்டு டெம்ப்ளேட் கமெண்ட்


டிஸ்கி 3 - மூன்றாம் கோணம்-ல் வந்த ஆர்ட்டிகிள் லிங்க் - http://moonramkonam.com/deepavali/?p=9#comment-40
 

Sunday, July 17, 2011

வெற்றிகரமான 366 வது நாள் -அட்ரா சக்க -2ஆம் ஆண்டு துவக்க விழா

http://www.thedipaar.com/pictures/resize_20110322194501.jpg 

எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னே தெரில.. (அப்போ விட்டுடு)..சும்மா விளையாட்டாக எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் பூர்த்தி ஆகிறது.. இந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள்,நான் வளரக்காரணமாக இருந்தவர்கள் அனைவரையும் ஒரு முறை நினைவு படுத்திக்கொள்வது எனக்கு நானே என்னை  புதுப்பித்துக்கொள்ள உதவும்..

640 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 89) ,  643 ஃபாலோயர்ஸ் ,10,80,000 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 49,000 & ட்விட்டர்ல 3290 ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 655 ,இண்ட்லியில் 603 போஸ்ட்கள் ஹிட் (சப்மிட்டட் 658)என  முன்னேற்றப்பாதையில் ....செல்ல உறு துணையாக இருந்தவர்கள்...

1.நல்லநேரம் சதீஷ்குமார் - http://www.astrosuper.com/பத்திரிக்கைகளில் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் எனக்கு பழக்கம். நிரஞ்சனா,ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களில் இருவரும் பணி ஆற்றினோம்.. இருவருக்கும் உள்ள பொதுவான அம்சம் நகைச்சுவை உணர்வு,கலாய்த்தல்...இருவருக்கும் உள்ள வேறுபாடு கடவுள் நம்பிக்கை,ஜோதிடம்.. அவருக்கு 2லும் அளவு கடந்த நம்பிக்கை....கால ஓட்டத்தில் அவர் ஜோதிடராகவே ஆகி விட்டார்.. எனக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை வரவில்லை.. அவர் பிளாக்கில் களவாணி பட விமர்சனம் முதன் முதலில் எழுதினேன்..படம் சூப்பர் ஹிட் என்று ரிலீஸ் ஆன அன்றே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்..  பிறகு 2 மாதங்களில் தனி பிளாக் அவரே ஓப்பன் பண்ணிக்கொடுத்தார்.. நான் ஈரோடு,அவர் சித்தோடு என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்க வாய்ப்பு உண்டு. அளவளாவுவோம்.. கருத்துப்பரிமாற்றங்கள் காரசாரமாக நடக்கும்.. 

2. ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா -   http://sirippupolice.blogspot.com/2011/07/1.htmlநான் எழுதிய 640 போஸ்ட்களில் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் என கமெண்ட் போட்டவர்..ஆரம்ப நாட்களிலேயே இவர் எனக்கு அளித்த ஊக்குவிப்பு என் எழுத்தை மேம்படுத்த உதவியது.. செம காமெடியான ஆள்.. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்.. சென்னை சென்ற போது ஒரு முறை சந்தித்து எங்கள் நட்பை பலப்படுத்திக்கொண்டோம்..பிறகு விகடன் காப்பி பேஸ்ட் போஸ்ட்,பிளாக்கில் ஃபிகர்கள் ஃபோட்டோ போடுவது என அவருக்கு சில விஷயங்கள் பிடிக்காத போது, ஓப்பனாக ஃபோன் பண்ணி எதிர்ப்பு தெரிவித்தார்.. என்னை நேரடியாக தாக்கி 3 பஸ்கள் விட்டார்.. இருந்தாலும் இன்னும் நட்பு நீடிக்கிறது.. அவரது ஆசைப்படி அந்த இரண்டையும் முழுதாக என்னால் தவிர்க்க முடியா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறேன்..

3. திருப்பூர் புரட்சித்தலைவன் - இவரும் ஆரம்ப கட்ட நண்பர் + வாசகர்.. என் பதிவுகள் நன்றாக இருந்தால் ஓக்கே என்பார், குறை இருந்தால் ஓப்பனாக சொல்வார்.. இந்த மாதிரி ஓப்பன் மைண்ட் வாசகர்கள் தான் ஒரு படைப்பாளிக்குத்தேவை.. கண்ணாடி போல.. ஏன்னா நாம எது எழுதுனாலும் அது செம அப்டின்னு தான் நாம் நினைப்போம்.. ஆனா மற்றவர்களுக்குத்தான் உண்மை நிலவரம் புரியும்.. 

4. பன்னிக்குட்டி ராம்சாமிhttp://shilppakumar.blogspot.com/ ஒரே அலை வரிசை எண்ணம் கொண்ட இருவர் நண்பராக அமைந்து விட்டால் அதை விட ஒரு நல்ல கொடுப்பினை ஒரு மனிதனுக்குக்கிடைக்காது.. என்னை விட படிப்பு,அனுபவம்,திறமை அனைத்திலும் முன்னே இருந்தாலும் எங்களை கண்ணுக்குத்தெரியாத ஒரு பாச வலையால் கட்டியது இருவருக்கும் பொதுவான காமெடி உணர்வு, கலாய்க்கும் கலாட்டாத்தனம்.. என் பதிவுகளுக்கு இவரது கமெண்ட்கள் மேலும் மெருகு சேர்த்தது.. பல வாசகர்கள் ஃபோன் பண்ணி இதை தெரிவித்தார்கள்..ஈரோட்டில் இவர் ஒரு முறை வந்த போது நேரில் சந்தித்தோம். அது பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் போடுவேன்..எனது பஸ்கள் களை கட்ட இவரது கமெண்ட்ஸ் முக்கிய காரணம்..

5. விக்கி உலகம் தக்காளி  http://vikkiulagam.blogspot.com/
காதல் கோட்டை படத்தில் வருவது போல் இருவரும் பார்க்காமலேயே நட்பு வளர்த்தோம்.. தினமும் 8 டூ 9 ஃபோனில் பேசுவார்.. (அவர் தான் பேசுவார் ஹி ஹி )பதிவுலகம் பற்றி பரிமாறிக்கொள்வோம்.. இவர் ஒரு ராணுவ வீரர் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது.என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது..வியட்நாமில் இருக்கிறார்.. நான் பழகிய வரை தன் மனைவியைத்தவிர எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காத அபூர்வ மனிதர்.. ஆனால் நான் சும்மா கமெண்ட்ல கலாய்ப்பேன்.. இப்போது அவர் மனைவி வியட்நாம் வந்த பிறகு சரியாக என்னிடம் பேசுவதில்லை.. ( மனைவிட்ட திட்டு வாங்கவே நேரம் சரியா இருக்காம்)

http://edesibabes.com/wp-content/uploads/2009/02/superior_college_girls.2q7woacrj9yc0w4csowgkkww8.agtqkzp57u8sw4wcokksok0g0.th-595x394.jpg

6. லேப்டாப் மனோ - http://nanjilmano.blogspot.com/பதிவுலகில் என்னை டேய் என உரிமையுடன் அழைக்கும் ஒரே பதிவர். (இதுதான் சாக்குன்னு ஆளாளுக்கு அப்படி கூப்பிடக்கூடாது)நெல்லை பதிவர் சந்திப்பில் தான் நேரில் சந்தித்தோம்.. ஆள் புரோஃபைலில் கேப்டன் மாதிரி மிரட்னாலும் நேரில் உதய கீதம் மோகன் மாதிரி சாஃப்ட் டைப். 

7.இலங்கை அதிரடிப்பதிவர் நிரூபன்http://www.thamilnattu.com/
எனது பிளாக் பாஸ்வோர்டு இவரிடம் உண்டு.. எப்போ வேணும்னாலும் உதவின்னு கேட்டா செஞ்சு குடுப்பார், (ஆளாளுக்கு தொந்தரவு  பண்ணாதீங்கப்பா.. அப்புறம் எனக்கு பண்ண மாட்டார்)நல்ல மனிதர்.. இவரது பல கட்டுரைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.. 

8. மாத்தி யோசி ஜீவன் - http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/ஃபிரான்சில் பணியாற்றிய இவர் என் ஆத்மார்த்த நண்பர். பதிவுலகில் விக்கி தக்காளிக்கு என் நட்பில் முதல் இடம் என்றால் இவருக்கு அடுத்த இடம்.. நான் பல சமயம் மனம் கலங்கிய நாட்களில் எல்லாம் எனக்கு ஆறுதல் அளித்து உதவி செய்தவர்.. ஒத்தடம் கொடுத்தவர்.

எனது பிளாக்கிற்கு பின்னூட்டம் போட்டது மூலம் அறிமுகம் ஆனவர்.. நான் ஆஃபீஸ் வேலையாக வெளியே ஃபீல்டு ஒர்க்கில் இருக்கும்போது என் பிளாக்கில் பதிவு போடுபவர் இவர் தான். கோவை பெண் பதிவர் கொலை வழக்கு என்னும் ஒரு தொடர் பதிவுக்கு காரண கர்த்தா இவரே.. அந்தப்பதிவு விரைவில் வெளிவரும்.. உண்மைக்கதை அது..

10. சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி - http://siththarkal.blogspot.com/இவர் ஒரு இலங்கைப்பதிவர்.என் பிளாக்கில் பல லே அவுட் மாற்றங்களை கொண்டு வந்தவர். நான் மற்ற விகடன் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்தாலும் என் பதிவை யாரும் காப்பி பேஸ்ட் பண்ணி விடக்கூடாது (!!!!) எனும் உயர்ந்த கொள்கைக்கு உதவி செய்தவர்..  

( ரொம்ப தொல்லைப்பா)

இந்தக்கட்டுரை நீண்டு கொண்டே போய் விடும் அபாயம் இருப்பதால் இத்துடன் நன்றி நவிலல் நிகழ்ச்சியை நிறுத்துகிறேன்.. 

காமெடி,சினிமா,கலாய்த்தல் என்ற பாதையிலிருந்து கொஞ்சம் விலகி இனி சமூகம் சார்ந்த  விழிப்புணர்வுப்பதிவுகள்,அனுபவப்பதிவுகள் அதிகம் போட உத்தேசித்து உள்ளேன்..  கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் கருத்தை கூறவும்.. 

 அன்பு உள்ளங்கள்க்கு நன்றி 

கருண்,உணவுலகம்அண்ணன், செங்கோவி, ம தி சுதா ,டகால்டி,ஹேமா, மைந்தன் சிவா பட்டா பட்டி,வைகை,கவிதைக்காதலன்,யாதவன்,ராஜபேட்டை ராஜா,டெரர் கும்மி குரூப்ஸ்,உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,அப்துல்லா அண்ணன்,ராஜராஜேஸ்வரி,சங்கவி,ஜேம்ஸ்பாண்ட் சதீஷ், ஃபிலாசஃபி பிரபாகரன்,தமிழ்வாசி,,பாபு,சேட்டைக்காரன்,பிரகாஷ்,கூடல்பாலா,ராம்வி,கடம்பவனக்குயில்,மணிவண்னன்,ராஜராஜெஸ்வரி,
ஆஞ்சலின்,சவுந்தர்,குணசேகரன்,கோவை நேரம் ,மதுரன்,காங்கேயம் நந்தகுமார்,செல்வா,சசிகுமார்,ரமேஷ்பாபு,ஜீ,அமைதி அப்பா,ரியாஸ் அகமது ,கோகுல்,மைந்தன் சிவா,ஷிவா ஸ்கை,சரியல்ல,சத்யா,நிகழ்வுகள்,கானோ வரோ,கல்பனா ,உமாகிருஷ்,சசிகா மேனகா,லக்‌ஷ்மி,ஹேமா, சித்ரா, நாய்க்குட்டி மனசு ரூபினா,ஜோசஃபின் ,துஷ்யந்தன்,மற்றும் விடுபட்ட உள்ளங்கள் என்னை மன்னிக்கவும் ( சி பி பிளாக்ல மன்னிப்பு கேட்காம இருந்தா எப்படி? ஹி ஹி )

தொடர்ந்து ஆதரவு அளிக்க அனைவரையும் வேண்டி  விரும்பி கேட்டுக்கொல்கிறேன்.. அடச்சே கொள்கிறேன்....


டிஸ்கி - மேலும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் போடவும் ( பண உதவி  எல்லாம் கேட்கக்கூடாது ஹி ஹி )

Friday, April 15, 2011

பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் பாகம் 2 - 18 பிளஸ்

 http://img.dinamalar.com/data/more_pic_gallery/hfmalarnews_27741640807.jpg

1. நாஞ்சில் மனோ - கட்டில்,மெத்தை, பூ, பழம், பால்... தலகாணி,ஆப்பிள், ஆரஞ்சு,ஜிலேபி,திராட்சை........லட்டு.. மைசூர் பாக்...

பொண்ணு - யோவ்.. வந்த வேலையை பார்க்காம இங்கே இருக்கற பொருளை எல்லாம் லிஸ்ட் போட்டுட்டு இருக்கே..? இதுக்குத்தான் தாலி கட்டுனியா?இப்போ நான் இருக்கவா? போகவா?

. நாஞ்சில் மனோ- இப்படித்தான் பஹ்ரைன்ல ஒரு நாளு என் மேனேஜரு..... 

பொண்ணு - நீ விடற கதையை பிளாக் படிக்கறவங்க வேணா நம்பலாம்.. நான் நம்பலை.. இதென்னய்யா இது மிலிட்ரி டிரஸ்ல கூலிங்க் கிளாஸ் போட்டு வந்திருக்கே?முதலிரவுக்கு வர்ற லட்சணத்தை பாரு.. பெரிய கேப்டன்னு நினைப்பா..?

. நாஞ்சில் மனோ - அவ் அவ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
http://3.bp.blogspot.com/_K4Wj-LHVGL4/TP9Q-Y_jSBI/AAAAAAAAAkg/-RTVANyvPaQ/s1600/love_is_in_the_air.jpg

2. விக்கி உலகம் - டியர்... இந்த பதிவுலகத்துல 1789 பேர் இருக்காங்க.. அதுல நான் மட்டும் தான் யோக்கியன்.. சொன்னா நம்ப மாட்டே.... ( அப்போ சொல்லாதே..)நான் இதுவரை யாரையுமே தொட்டதில்லை..

பொண்ணு - ஏன்? நீங்க குஷ்ட ரோகியா?

விக்கி உலகம் - சரியான  டியூப்லைட் நீ... நான் கலியுக ராமன்.. ஒரு இல், ஒரு சொல் ஒரு செல் என வாழ்பவன்.. ஆனா தக்காளிங்க யாரும் நம்ப மாட்டேங்கறாங்க... 

பொண்ணு - அத்தான்.. நீங்க ஆஃபீஸ் போனா 19 மணி நேரம் வேலை செய்வீங்களாமே? அங்கே 23 ஃபிகர்ங்க இருக்காங்களாமே? உண்மையா?

விக்கி உலகம் - இந்த மேட்டர் எல்லாம் உனக்கு யார் சொன்னது? சரி சரி.. அதை காலைல பேசிக்கலாம்.. இப்போ லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு.. நான் பதிவு ரெடி பண்னனும்.. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilRtPIvFSLdq9GdwP3hlEcBE7dY6OeXUF0rIvC6nVL_Q_XbigBESP3RnZfMoqFKppPuswmRkydvG1YKsJVAVNQA4o5AXlMAjWInI52UNWOd_DkQ1_Yo_nbTT7W8bS-hAk5Vx14pg5vx1BL/s1600/black-love-art-intimacy1.jpg

3. சக்தி ஸ்டடி செண்ட்டர் கருண் - ஸ்.. அப்பாடா.. வந்தாச்சு.. நறுக்குன்னு நாலு கிஸ் குடுத்தாச்சு.. கிளம்பியாச்சு.. 

பொண்ணு  - அடப்பாவி.. இதுதான் உங்க ஊர்ல முதல் இரவு கொண்டாடற லட்சணமா?

சக்தி ஸ்டடி செண்ட்டர் கருண் - நான் இன்னும் 30 இடங்களுக்கு போக வேண்டி இருக்கு.. சாரி... ஒரு இடத்துல 40 செகண்ட்ஸ்க்கு மேல நான் ஸ்பெண்ட் பண்றதில்லை.. பை பை.. வரட்டா..
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-60/mar1.jpg
 4. கவிதை வீதி சவுந்தர் - டியர்.. என் பேரு சவுந்தர்.. எனக்கு இன்னோரு பேரு இருக்கு... 

பொண்ணு  - என்னாது அது?

கவிதை வீதி சவுந்தர் - பாட்டி ரசிகன்

பொண்ணு  - அடப்பாவி.. கிழவியைக்கூட ரசிப்பியா? நீ? 

கவிதை வீதி சவுந்தர் - சாரி.. டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு.. பாட்டு ரசிகன்... 

இப்போத்தானே அவர் வந்துட்டுப்போனாரு.. 

கவிதை வீதி சவுந்தர் - குழப்பாதே... நான் என்ன டபுள் ரோலா?

 பொண்ணு  - விளையாடாதீங்க.. மணி இப்போ என்ன? மிட் நைட் 12 மணி.. அவர் நைட் 8 மணிக்கே வந்துட்டுப்போய்ட்டாரு... 

கவிதை வீதி சவுந்தர் - அடிப்பாவி... தாலி கட்றது நான்... ஜாலி கட்றது அவனா? அவ்வ்வ்வ்வ்வ்.. ஏண்டி? அப்படி பண்ணுனே..?

பொண்ணு  - சாரிங்க.. ஸ்பெக்ட்ரம் அலை வரிசை மாதிரி முதலில் வருபவருக்கே முன்னுரிமை.. ஹி ஹி

http://img.webme.com/pic/y/yaalakathiyan/52045779be7.jpg
5. நிரூபன் - வணக்கம் சகோதரம்

 பொண்ணு  -நாசமாப்போச்சு.. யோவ்.. நான் உன் பொண்டாட்டி...

 நிரூபன் - சாரி.. எல்லார்ட்ட்யும் அப்படி பேசி பழகிடுச்சு....

பொண்ணு  -மணி விடிகாலை 5 மணி ஆகுது.. இதான் ஃபர்ஸ்ட் நைட்க்கு நீங்க வர்ற லட்சணமா?

 நிரூபன் -  மண்டபத்துல சொந்தக்காரர்கிட்ட நலம் விசாரிச்சுட்டு இருந்தேன்... 

பொண்ணு  -சுத்தம்.. நலம் விசாரிக்கறது 4 லைன்ல முடிக்கனும்.. நீங்க சும்மா ஊர்க்கதை எல்லாம் பேசிட்டு இருந்திருப்பீங்க.. சரி சரி.. வாங்க.. 

நிரூபன் - எங்கே வர்றது.. நான் வழக்கமா இப்போ நெட்ல நலம் விசாரிக்கற நேரம்.. மீதியை நாளைக்கு பார்க்கலாம்....

பொண்ணு  - கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.... என்னமோ 58% டை இப்போ பார்த்த மாதிரியும் மீதி 42%ட்டை நாளைக்குப்பார்க்கலாம்கற மாதிரி சொல்றீங்களே.. 

 http://www.internetphotos.net/wp-content/uploads/2008/04/romantical-love-painting-photo.jpg
6. ஃபிலாசஃபி  பிரபாகரன் - வா நாம ஒயின் ஷாப் போகலாம்..

பொண்ணு  -யார் கிட்டே வந்து என்ன பேச்சு பேசறீங்க.. லேடிஸ் அங்கே வருவாங்களா?

 ஃபிலாசஃபி  பிரபாகரன் - அதுக்கில்லை.. எனக்கு ஒயின் ஷாப் தான் ராசி.. எந்த வேலை செய்யறதா இருந்தாலும் ராசியான அந்த இடத்துக்குப்போய்தான் ஆரம்பிப்பேன்..

பொண்ணு  -அது சரி.. ஸ்டார்ட்டிங்க் அங்கே.. அப்போ ஃபினிஷிங்க் எங்கே?பார்லயா?

 ஃபிலாசஃபி  பிரபாகரன் - என்னை எதிர்த்து யார் பேசினாலும் எனக்குப்பிடிக்காது...ஆள் பார்க்கத்தான் தனுஷ் மாதிரி இருக்கேன்.. பளார்னு ஒரு அறை விட்டேன்னு வெச்சுக்க.. அப்புறம் 20 நாள் நீ எந்திரிக்க மாட்டே.....

பொண்ணு  -ஹா ஹா ஹா 

ஃபிலாசஃபி  பிரபாகரன்- நான் கோபமா பேசிட்டு இருக்கேன் சிரிக்கறே..

பொண்ணு  - அதில்லை.. என்னை எந்திரிக்க விடாம 20 நாள் படுக்க வெச்சுட்டா... நீங்க என்ன பாடுபடுவீங்கன்னு நினைச்சேன்..

-------------------------------------------

 டிஸ்கி 1 - இதன் முதல் பாகம் படிக்காதவர்களுக்காக 

பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள்

 

டிஸ்கி 2 -  இன்னைக்கு தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் ஆனமாதிரி தெரில.. ஜீன் கிளாடு வேண்டம் நடிச்ச யுனிவர்சல் சோல்ஜர் பார்ட்3, இலியானா நடிச்ச ஒரு கில்மா படம், அது போக லோக்கல் கில்மா படங்கள் 3 ( அப்போ மற்ற படங்கள் எஸ் டி டி யா? ) மொத்தம் 5 படங்கள் ரிலீஸ் ஆகுது.. இன்று காலை 11 டூ 4 நெட்டுக்கு லீவ் .. ஹி ஹி ..

Tuesday, January 11, 2011

திரும்பிப்பார்க்கிறேன் (தொடர்பதிவு)

http://farm3.static.flickr.com/2395/2323943729_a075be5afc.jpg 
2010 ஜூலை 17-ம் தேதி அன்றுதான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்.
ஏ டூ இஜட் நல்ல நேரம் சதீஷ்தான் பார்த்துக்கொண்டார்.டைப்பிங்க் மட்டும்
என் வேலை.அவருக்கும், இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த சவுந்தருக்கும் நன்றி கூறி இந்தக்கட்டுரையை தொடர்கிறேன்.

நான் பிளஸ் டூ படிக்கும்போது ,ஸ்கூல் கணக்கு மாஸ்டர் எதற்கோ ,”
“ஊர்ப்பெயரை ஏம்ப்பா கெடுக்கறே..” என திட்டி விட்டார்.அப்போது
ஆவேசத்துடன் ஊர்ப்பெயரை காப்பாற்றுவேன் என சினிமா ஹீரோ
மாதிரி சபதம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன்.

முதலில் கவிதைகள்,சிறுகதைகள்தான் எழுதினேன்.சென்னிமலை சி பி
செந்தில்குமார் என்ற பெயரை அச்சில் பார்க்கும்போது மனதுக்குள்
பெருமையாக இருக்கும்.பதிவுலகுக்கும்,பத்திரிக்கை உலகுக்கும்
அடிப்படையில் உள்ள முக்கியமான வேற்றுமை என்ன?

நாம் அனுப்பும் படைப்புகள் எடிட் செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுபவை
மட்டுமே பிரசுரம் ஆகும்.10 கவிதை அனுப்புனா 1 செலக்ட் ஆகும்.
வாரா வாரம் புக் வந்ததும் படைப்பு வந்திருக்கா?ன்னு ஆவலா
புக் பார்ப்போம்..இந்த சஸ்பென்ஸ் எல்லாம் பிளாக் -கில் இல்லை.

நானே ராஜா நானே மந்திரி கான்செப்ட்தான்,நாம என்ன நினைக்கிறோமோ
அதுதான் எழுத்து,நாம என்ன எழுதறோமோ அதுதான் படைப்பு.பத்திரிக்கை
உலகில் உள்ள படைப்பாளிகளை விட பதிவுலகில் உள்ள படைப்பாளிகளின்
எண்ணிக்கை அதிகமாக இருக்க இதுதான் காரணம்.

பத்திரிக்கைகளில் வந்த ஒரு கவிதையை படித்து விட்டு எங்க ஊர்க்காரர்
நல்லா ஜோக்கா இருக்குப்பா என்றார் ஊர்க்காரர்.. கவிதையே சிரிப்பா இருந்தா
ஜோக் எழுதுனா எப்படி இருக்கும்? என்று நினைத்து ஜோக் எழுத ஆரம்பித்தேன்.

மள மளவென ஜோக் எழுத ஆரம்பித்து கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.
http://images.rottentomatoes.com/images/spotlights/2008/rtuk_feature_baillie_walsh_03.jpg
பதிவுலகில் என் பிளாக்கிற்கு ரெகுலராக கமெண்ட் போட்டு என்னை ஊக்குவித்தது ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா.என் மனதைக்கவர்ந்த எழுத்துக்கள் பன்னிக்குட்டிராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன்,குசும்பன்.காரணம் அடிப்படையில் இவர்களும் காமெடியில் கலக்கலான படைப்புகளை தந்ததுதான்.

போட்டியும் ,பொறமையும் எல்லா படைப்பாளிகளுக்கும் வரும்.எனக்கும்
சிலரைக்கண்டு பொறாமை வரும்.பொறாமையின் விகிதம் அதிகம் ஆகும்போதெல்லாம் நான் ஹாஸ்பிடல்,சுடுகாடு,அநாதை இல்லங்கள் சென்று வாழ்க்கையின் நிலை இல்லாமை தத்துவத்தை எனக்கு நானே உணர்த்திக்கொண்டு என்னை நானே புதுப்பித்துக்கொள்வேன்.

பதிவுலகில் பழக்கம் ஆனவர்களை எல்லாம் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது காலம் அனைவரையும் சந்திக்க வைக்கும் என எதிர்பார்க்கிறேன். சவுந்தர் தமிழ்மணம் டாப் 20 இல் 10 வது இடம் பெற்றதும்.அதற்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போடலையா?என சவுந்தரிடம் கேட்டேன்.இதுக்கெல்லாமா பதிவு போடுவாங்க? என அவர் என்னையே திருப்பிக்கேட்டு சிரித்தார். நான் முதல் வாரம் தமிழ்மணம்
தர வரிசையில் 13வது இடம் பிடித்த போது செய்த அலப்பரைகளை நினைத்துப்பார்த்தேன். இதுல ரமேஷ் வேற  உசுப்பேத்தி தூண்டி விட்டாரு.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும் என்ற அறிஞர்கள் சொன்னது போல் நானும் பதிவுலகில் ஒவ்வொருவரிடமும் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.

கலியுகம் தினேஷின் நண்பர் எழுதிய மைனா படத்தின் பாட்டு ஒன்றின் ரீமிக்ஸ் என் மனதைக்கவ்ர அதை இசை அமைப்பாளரும், தேநீர் விடுதி படத்தின் இயக்குநரும் ஆன எஸ் எஸ் குமரன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.திரை உலகில், பத்திரிக்கை உலகில் உள்ள என் பழக்கம், நட்பு இவற்றை பயன்படுத்தி பதிவுலகில் உள்ள திறமைசாலிகளை ,நல்ல படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எண்ணம் உள்ளது. 

வழக்கம் போல் பதிவு நீளம் ஆகி விட்டதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்
தேவைப்பட்டால் இதன் அடுத்த பாகத்தை மீண்டும் எழுதுவேன்.இந்த தொடர்
பதிவுக்கு நான் அழைப்பது என் ஆதர்ச எழுத்தாளர்களான
பன்னிக்குட்டி ராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன், ஆகியோரை.
குசும்பன் எனக்கு பழக்கம் இல்லை.எனவே அவரைத்தவிர மற்ற 3 பேரையும்
அழைக்கிறேன்.

Monday, January 10, 2011

கைவசம் சரக்கில்லாதபோது பதிவு போடுவது எப்படி?

http://www.freefoto.com/images/11/12/11_12_9---Compact-Disc_web.jpg?&k=Compact+Disc 
டிஸ்கி

டிஸ்கி 1 - பதிவை விட டிஸ்கி ரொம்ப நல்லாருக்குன்னு ஏகோபித்த ஆதரவு கிடைச்சிருக்கு. சரி சரி ரெண்டே ரெண்டு பேர் அப்படி சொன்னாங்க,1.கோமாளி செல்வா 2.விக்கி உலகம்காத்து வாங்கிட்டிருக்கற.படத்தோட பேப்பர் விளம்பரத்துல மக்களின் ஏகோபித்தஆதரவு பெற்ற அப்படின்னு விளம்பரம் போடறது இல்லையா?அந்த மாதிரி....(டேய் ,மரமண்டை..பதிவு நல்லாலைன்னு இதை விட நாசூக்கா எப்படி சொல்ல முடியும்?)

டிஸ்கி 2 - பதிவின் டைட்டிலில் 18+ அப்படின்னு போடறதுல 2 டேஞ்சர் இருக்கு.
ரொம்ப நல்லவங்க (?!) யாரும் பிளாக் பக்கம் வர்றதில்லை.அப்புறம் வர்றவங்க
அவங்க எதிர்பார்க்கற மேட்டர்(!!!)இல்லைன்னதும் ஏமாற்றம் அடைஞ்சு திட்டறாங்க. ஏ படத்துக்கு போய்ட்டு அதுல சீன் எதுவும் இல்லைன்னா சரி சரி அடுத்த டைம் பார்த்துக்கலாம்னு சமாதானம் அடையறதில்லையா..அப்படி ஒரு பக்குவத்துக்குநாம வந்துடனும்.

டிஸ்கி 3 - பொண்ணு பாக்கப்போறப்ப பொண்ணை விட பொண்ணோட தங்கச்சியோ, பொண்ணோட தோழியோ,(சில சமயம் பொண்ணோட அம்மாவோ)செமயா இருக்கும், அதை மனசுக்குள்ளயே வெச்சுக்கனும்,வெளில சொல்லக்கூடாது..அந்த மாதிரிதான்.. பதிவுங்கறது பொண்ணு மாதிரி..டிஸ்கி கொழுந்தியா மாதிரி (கண்டு பிடிச்சுட்டாருய்யா துரை)

டிஸ்கி 4 - போணி ஆகாத தமிழ்ப்படத்துல கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு
குத்தாட்ட பாட்டு வரும்.அது படத்துக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட்..அந்த மாதிரிதான் பிளாக்ல போடற இமேஜ் (ஃபோட்டோ).சும்மா கிளாமருக்கு...ஆனா கமெண்ட் போடறவங்க 24 பேரா (PARAGRAPH)எழுதி இருப்பதைக்கண்டுக்காம ஸ்டில் சூப்பர்,ஃபோட்டோ அருமைன்னு கமெண்ட் போட்டு வெறுப்பேத்தறாங்க..

டிஸ்கி 5 - எப்படி கமெண்ட் போடறதுன்னு நானே சொல்லித்தர்றேன்.
ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது..இப்படி டெம்ப்ளேட் கமெண்ட்டாபோடனும்..(ஹி ஹி ஹி )
http://upload.wikimedia.org/wikipedia/commons/0/04/Key_to_the_City_of_London,_Charles_Lindbergh.JPG
டிஸ்கி 6 - சினிமா விமர்சனம் போடறதை சிலர் நக்கல் அடிக்கறாங்க. அது எவ்வளவு பெரிய தியாகம்னு உங்களுக்கு தெரியுமா?ரெண்டரை மனி நேரம் ஒரு மொக்கைப்படத்தை பொறுமையா உக்காந்து பாக்கனும்.அதுக்கு ஒரு மணி நேரம் விமர்சனம் மாங்கு மாங்குன்னு எழுதனும்,அப்புறம் நல்ல ஸ்டில்லா தேடனும்.விமர்சனம் போட்ட பிறகு அந்தப்பட உதவி
இயக்குநர்களிடம் இருந்தோ,சினி ஃபீல்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வரும் திட்டுக்களை எல்லாம் வாங்கனும்..நான் எவ்வளவு பெரிய தியாகி?ன்னு இப்பவாவது புரிஞ்சுக்குங்க..

டிஸ்கி7-அவ்வளவுகஷ்டப்பட்டுஏன்அந்ததியாகத்தைசெய்யனும்?அதுலயும்ஒருசுயநலம் இருக்கு.கவிதை,ஜோக்,சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள்
40% ஆதரவும் (ஹிட்ஸ்),அரசியல் சமூக விழிப்புணர்வு பதிவுகளுக்கு 60% ஆதரவும், வம்பு சண்டைக்குப்போய் அடுத்தவங்களை தாக்கி போடற பதிவுகளுக்கு 75% ஆதரவும் கிடைக்கறப்ப சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளுக்குத்தான் 100% ஆதரவு கிடைக்குது,வாழ்க தமிழனின் ரசனை.

டிஸ்கி 8 - இந்த லட்சணத்துல ஹிட்ஸுக்கு நான் அலைகிறேனா?அப்படின்னு
ஏன் பதிவு போட்டேன்னா அன்னைக்கு நிஜமாவே என் கைவசம சரக்கில்லை.
சரி ,இதை வெச்சு அன்னைக்த்த (என்ன மோசமான ஒரு  சொல்லாடல்?)பொழுதை ஓட்டிடலாம்னுதான்.

டிஸ்கி 9 -என் மேல சொல்லப்படற சில குற்றச்சாட்டுக்கள் என்னன்னா நான்
சில சமயம் மத்தவங்க பிளாக்ல கமெண்ட்ஸ் போடறப்ப இங்கிலீஷ்ல போடறேன்.அது ஏன்னா நான் காலைல,நைட்ல மட்டும்தான் வீட்ல இருந்து நெட் யூஸ் பண்றேன், பகல் டைம்ல ஃபீல்டுல இருக்கறப்ப (ஆன் டியூட்டி) நெட் செண்ட்டர்ல இருந்துதான் கமெண்ட் போடறேன்,தமிழ் ஃபாண்ட் இருக்காது...

டிஸ்கி 10 - என் பிளாக்ல கமெண்ட்ஸ் போடறவங்க அதுக்கான பதில்
கமெண்ட்ஸை மறுபடி அன்னைக்கு நைட்டோ அடுத்த நாள் காலைலயோ
வந்து பாத்துக்குங்க..(ரிப்பீட் ஆடியன்ஸை வரவழைக்க இப்படி ஒரு ஐடியாவா?)

டிஸ்கிக்கே ஒரு டிஸ்கி - இன்னைக்கு ஏன் எந்த மேட்டரும் இல்லாம ,வெறும்
டிஸ்கியாவே போட்டு கொல்றேன்னு பாக்கறீங்களா? ஹி ஹி இன்னைக்கும்
கைவ்சம சரக்கில்லை. DISC + KEY = DISKY (ஃபோட்டோவுக்கு விளக்கம்)

நேத்து நெட் பக்கமே வராதவங்களுக்கும், எப்போ பாரு மொக்கை பதிவாவே போடறியே, உருப்படியா என்னைக்காவது எழுதி இருக்கியா? என திட்டுபவர்களும் படிக்க

பெண்மையை கேவலப்படுத்தும் BSNL-ன் அத்து மீறிய விளம்பரம்

Saturday, December 25, 2010

ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

http://image53.webshots.com/753/7/32/93/2387732930101238484NhdqOl_ph.jpg

    வருகின்ற  26.12.2010 ஞாயிறு  அன்று ஈரோடு வலைப்பதிவாளர்
சந்திப்பு நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே.அதே போல் நான் ஒரு
தனியார் வங்கியில் பணி புரிவதும் அனைவரும் அறிந்ததே,பொதுவாக ஃபைனான்ஸ் ஃபீல்டில்,தனியார் வங்கிகளில் இயர் எண்டிங்க் க்ளோஸிங்க் நடப்பதால் மாதத்தின்  கடைசி ஞாயிறு அன்று வேலை நாள் வைத்து விடுவார்கள்.

காலை 10 டூ 5 வேலை நேரம்.எனவே நான் கலந்து கொள்வது கடினம் என்றாலும்வெளியூரிலிருந்து வரும் பதிவர்கள் காலை ஈரோடு வந்ததும் என் செல்லுக்கு அழைத்தால் அவர்களை சந்திக்க காலை 6 டூ 9-30 வரை வருகிறேன்.மேலும் மாலை ஈரோடு பஸ் ஸ்டேண்ட் எதிரே உள்ள பிருந்தாவன்  ஹோட்டல் பார்க் நாம் தனிப்பட்ட முறையில்  சந்திப்போம். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி  வரை நான் ஃபிரீ.நானும் நல்ல நேரம் சதீஷும் வருவோம்.சந்திப்போம், கலந்துரையாடுவோம்.

வலைப்பதிவாளர் மீட்டிங்க் நடைபெறும் இடத்தில் விழா நடக்கும் என்பதாலும்
சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்பீச் நடைபெறும் என்பதாலும் நம்மால் அவர்களுக்கு
தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதாலும் இந்த ஐடியா.

ஈரோடு,திருப்பூர்,கோவை,சேலம் ,சென்னை மற்றும் வெளியூர் பதிவர்கள்
அனைவருக்கும் இது பொதுவான அழைப்பு.விருப்பம் உள்ளவர்கள்
தொடர்பு கொள்ளலாம்.

எனவே கூட்டம் முடிந்த பிறகு நாம் மாலை ஈரோடு பிருந்தாவன்
ஹோட்டல் பார்க்கில் சந்திப்போம்.இது பற்றிய உங்கள் ஆலோசனைகள்,
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன,

Saturday, October 23, 2010

பிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவர்



சமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.

கோர்ட்டில்

ஜட்ஜ் - கேசோட டீட்டெயிலை சொல்லுங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)

யுவர் ஆனர்,அந்த கேஸ்க்கு வயசு 28, பாடி சைஸ் 36,28,38.டைவர்ஸ் கேஸ்,ரூட் போட்டா சீக்கிரம் மடங்கிடும்.

ஜட்ஜ் - யோவ்,வாசல்ல பராக்கு பார்த்துட்டு நிக்குதே அந்த கேஸ் பற்றி கேட்கலை,கோர்ட்ல நடக்கற கேஸ் டீட்டெயிலு பற்றி கேட்டேன்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - யுவர் ஆனர்,அதை என் கட்சிக்காரரே சொல்வார்,டேய் நாயே,என்ன வேடிக்கை,வாயைத்திறந்து பேசுய்யா.


சி பி - ஐயா,சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என்னை அவமானப்படுத்திட்டாரு,அவர் மேல நான் மான நஷ்ட வழக்குபோடனும்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - டேய்,அதெல்லாம் மானம் இருக்கறவன் போட வேண்டியது,நீ மேட்டரை மட்டும் சொல்லு.


சி பி - ஒரு வாரத்துக்கு முன்ன நான் ஒரு பதிவு போட்டேன்,அது கலைவாணர் கிருஷ்ணன் வாழ்க்கைல நடந்த சம்பவம்.அதை நான் லைப்ரரில இருந்து சுட்டுட்டு வந்த புக்ல இருந்து எடுத்தது.நான் சுட்ட மேட்டரை ஏற்கனவே 5 வருஷத்துக்கு முன்பே தான் பதிவு போட்டுட்டதா என் பிளாக்லயே ஒரு கமெண்ட் போட்டு என்னை சந்தி சிரிக்க வெச்சுட்டார்.


வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை,வழக்கமா நீ டப்பா படத்துக்கு விமர்சனம் போடுவே,இல்லைன்னா ஜோக்குங்கற பேர்ல கடிப்பே,அதையே செய்யவேண்டியதுதானே,ஏன் ரூட் மாறுனே?

சி பி - 2 ரீசன்ங்க,1. சரக்கு இல்லை,தீந்துடுச்சு .2.எப்பவும் டைம் பாஸ் மேட்டர் தான் போடறே,ஏதாவது சமூக சீர்திருத்தக்கருத்து போடலாமேனு எல்லாரும் சொன்னாங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உன்னைத்திருத்தவே ஒரு ஊர் வேணும்,நீ ஊரைத்திருத்தறியா?

 ஜட்ஜ் - நிறுத்துங்க,நீங்க 2 பேருமே பேசிட்டு இருந்தா எப்படி?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - சரி நீங்க கொஞ்ச நேரம் பேசுங்க.


ஜட்ஜ் - பிரதிவாதி ரமேஷ் கிட்ட விசாரிப்போம்,அவரை வரச்சொல்லுங்க.

டவாலி - ரமேஷ்,ரமேஷ்,ரமேஷ்

ஜட்ஜ் - என்ன ஆளைக்காணோம்?

சி பி - அவர் சிரிப்புப்போலீசுங்க,அதனால மாமூல் குடுத்தாதான் வருவார்.

ரமேஷ் - வணக்கம் ஜட்ஜ் ஐயா.

ஜட்ஜ் - வனக்கம் எல்லாம் நல்லாத்தான் போடறீங்க.

ரமேஷ் - கமெண்ட்டும் நலா போடுவேங்க.யார் எந்த டைம் ல பதிவு போட்டாலும் சரி ,அது மிட் நைட்டோ ,கட் நைட்டோ சரியா முத ஆளா மீ த ஃபர்ஸ்ட் அப்படினு கமெண்ட் போட்டுடுவேன்.

ஜட்ஜ் - நீங்க எதுக்காக சி பி மேல,இம்சை அரசன் பாபு மேல அப்படி ஒரு குற்றச்சாட்டு வெச்சீங்க?

ரமேஷ் - யுவர் ஆனர்,அவங்க எந்தப்பதிவு போட்டாலும் உடனே நான் ஓட்டு போட்டு கமெண்ட்டும் போட்டுடறேன்,ஆனா அவஙக  ரொம்ப லேட்டாதான் என் பிளாக்குக்கே வர்றங்க,என்னை அவமானப்படுத்துன அவங்களை நான் அவமானப்படுத்த வேண்டாமா?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா? ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.

ரமேஷ் - ஓக்கே,இனிமே யார் எந்தப்பதிவு போடறதா இருந்தாலும் என் கிட்டே காட்டி அப்ரூவல் வாங்கிக்குங்க,அப்ப நான் உங்க வழிக்கே வரமாட்டேன்.

ஜட்ஜ்  - எப்படியோ பிரச்சனை சுமூகமா தீந்தது,கோர்ட் கலைகிறது.



வக்கீல் கன்னி குட்டி காமசாமி -கோர்ட் என்ன அபார்ஷன் ஆன நடிகையோட கர்ப்பமா?கலைய?டேய் சி பி ஃபீஸை எடு.

சி பி  - ஃபீஸா?ஆளை விடுங்க எஸ்கேப்,என் கிட்ட காசு இல்ல ,வேணும்னா என் கிட்ட இருக்கற 870 டி வி டிக்கள்ல ஏதாவது ஒண்ணு எடுத்துக்குங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - இதையே நீ எத்தனை வருஷமா சொல்லீட்டு அலைவே,கொண்டா ,அந்த 870 டி வி டியையும் தீ வெச்சு கொளுத்திடறேன்,அப்பத்தான் அடங்குவே.

டிஸ்கி 1 - நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை

டிஸ்கி 2 - டைட்டிலில் பெண் பதிவர் என இருக்கே எனகேட்பவர்களூக்கு நான் எப்போதும் பேனாவும் கையுடனுமே இருப்பேன்,ஏதாவது ஜோக் ஸ்ட்ரைக் ஆச்சுன்னா உடனே டைரியில் குறித்து வைத்துக்கொள்வேன்,ஏன் எனில் எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி,எனவே PEN பதிவர் என எல்லோரும் என்னை கிண்டல் அடிப்பர்,பென் பதிவர் என போட்டிருக்க வேண்டியது தமிழ் அறிவு குறைவு என்பதால் பெண் பதிவர் என போட்டு விட்டேன்.

டிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

டிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு?