Showing posts with label தன்ஷிகா. Show all posts
Showing posts with label தன்ஷிகா. Show all posts

Saturday, September 21, 2013

யா யா - சினிமா விமர்சனம்

கோடம்பாக்க  காமெடி சினிமா ஃபார்முலாப்படி  ஹீரோ  ஒரு வெட்டாஃபீஸ், அவருக்கு ஒரு முறைப்பொண்ணு , முறைச்சிட்டு இருக்கற ஃபிரண்ட்.ஹீரோயினை  பார்க்கறாரு , பார்த்ததும் லவ் , ஹீரோயின் ஹேண்ட் பேக் ல  தன் ஃபிரண்ட்டோட செல் ஃபோனை போட்டுட்டு வேணும்னே  ஃபிரண்டுக்கு  ஃபோன் பண்ற மாதிரி கடலை போட்டுட்டு இருக்காரு ( இதைப்பார்த்து யாரும்  ட்ரை பண்ணாதீங்கய்யா , நிஜ வாழ்வுல சிம்மை கழட்டி வீசிட்டு ஃபோனை யூஸ் பண்ணிக்குவாங்க உதார் பார்ட்டிங்க பொண்ணுங்க ) 


ஒரு கம்ப்பெனியோட 45 வயசு  கன்னி ஆண்ட்டிக்கு ஹீரோ மேல லவ் . இண்ட்டர்வ்யூவுக்கு வநதவரை லைஃப் பார்ட்னரா செலக்ட் பண்ண  பிளான் போடறாங்க . ஹீரோவின்  ஃபிரண்ட்டை விலைக்கு வாங்கிடறாங்க . புரட்சித்தலைவி கேப்டன் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்குனதைப்போல . ஹீரோவின் ஃபிரண்ட்  கருணா மாதிரி கூட இருந்துட்டே குழி பறிக்கறாரு . ஹீரோ  , ஹீரோயின்  காதல் எப்படி என்ன ஆச்சு என்பதை  ரெண்டரை மணி நேரம்  சிரிக்க சிரிக்க  சொல்லி  இருக்காங்க . 


படத்தின் ஹீரோ கம் வில்லன் சந்தானம்  தான் .ஹீரோவின் காதலுக்கு ஆப்பு வெச்சு  தன் வாழ்க்கையை வளப்படுத்தும் கேரக்டர் . சும்மா அசால்ட்டா  ஊதித்தள்ளிடறார்.அவர் படம்  பூரா 55 ஜோக்ஸ்  சொல்றார்/  அதுல 12  ஜோக்ஸ்  ட்விட்டர்ல இருந்து சுட்டது . 8  ஜோக்ஸ் எஸ்  வி சேகர் காமெடி டிராமாக்களில் அடிச்சது . 6  ஜோக்ஸ் ஏர்செல் கம்ப்பெனி எஸ் எம் எஸ் ஜோக்ஸ், மீதி  29  சொந்த சரக்கு .  எப்படியோ   சிரிப்பு வருது , அதான் முக்கியம் , சுட்டாரா? சுடலையா?ன்னு எந்த சுடலைமுத்தும் உக்காந்து ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க டைம் இல்லை .  இந்தப்படம் ஆல்ரெடி எகிறி இருக்கும் சந்தானத்தின் சம்பளத்தை  இன்னும் உயர்த்தும் ( இப்போ  ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 10 லட்சம் ரூபாயாம் ) 




 படத்தின் 2 வது  ஹீரோ  சிவா .  டக் டக் என  டைமிங்க்  விட் அடிப்பதில் ஆள் கில்லாடி . கொஞ்சம் முகத்தில் பாவனைகள் கொண்டு வந்தால்  தேவலை . சந்தானத்தினுடனான காம்பினேஷன் காட்சியில் டம்மியாகிறார் சில காட்சிகளில் தாக்குப்பிடிக்கறார் . ரொமான்ஸ் காட்சிகளில் அவருக்கு  எந்த வித  ஃபீலிங்கும் கை கொடுக்கவில்லை 

 பவர் ஸ்டார்  மூணாவது காமெடி . படத்தில்  இவருக்கு  பல காட்சிகளில் பல ஹீரோக்களை கிண்டல் பண்ணி டூயட் பாடும் வாய்ப்பு . அந்தக்காலத்தில் எஸ் எஸ் சந்திரன் , எஸ் வி சேகர் ஆல்ரெடி எம் ஜி ஆர் படங்களை கிண்டல் செய்து இதே போல் அப்ளாஸ் அள்ளீ இருக்கிறார்கள் . ஆனால் இந்த டைப் காமெடி  ரொம்ப நாள்  நிலைக்காது . அழகே அழகே பாட்டுக்கு ( ஓக்கே ஓக்கே ) அவர் போடும் உதயநிதி ஸ்டெப் கலக்கல் ரகம் . இவருக்கு  ஒரு அட்வைஸ் , ஆல்ரெடி  நீங்களே சொன்ன மொக்கை காமெடியை ரிப்பீட் பண்ணாதீங்க .  போர் . 


 ஹீரோயின்   தன்ஷிகா .விஷால் , அஜித் மாதிரி ஜைஜாண்டிக் ஹீரோக்களுடன்  ஜோடி சேர வேண்டியவர் காலத்தின் கட்டாயத்தால்  சிவாவுடன்  ஜோடி சேர்கிறார். காதல் காட்சிகளில்  இன்னும் கெமிஸ்ட்ரி தேவை .  கலா மாஸ்டரிடம்  ட்யூஷன் போகவும் . ஹீரோவுடன் நெருக்கமாக  இருக்கும் காட்சிகளில் காட்டாத  நவரசத்தை பவர் ஸ்டாருடனான டூயட்டில் காட்டுகிறார். பவருடன் இவர் வரும்  17 செகண்ட்ஸ் லோ கட்  ஷாட் செம ஹாட் . தியேட்டரில்  விசில் 




காதல் சந்தியா  சந்தானத்துக்கு  ஜோடி . ஹீரோயினை விட இவர் அழகாகத்தெரிவது ஆச்சரியம். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷமா ?  மேக்கப் விமன் பர்சனலா வெச்சிருக்காரா? தெரியலை , கலக்கல் பிரசண்ட்டேசன் . சந்தானத்துடனான  முதல் இரவுக்காட்சிகள்  செம கிளு கிளு .


 டி வி புகழ் தேவதர்ஷினிக்கு  ஓல்டு லேடி கெட்டப்  அந்த  கல்யாண ராமன் பல் கெட்டப் எரிச்சல் . மற்றபடி அவர் நடிப்பு செம கலக்கல் , அவர் போர்ஷனை இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம் , சந்தானம் , சிவா வின் தலையீட்டால் எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கும் என அவதானிக்கிறேன் . 


இளவரசு சிவாவுக்கு அப்பா  கேரக்டர் ,  பெரிய வாய்ப்பில்லை  என்றாலும் வந்தவரை  ஓக்கே

 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படம்  முழுக்க  யாரையும் சிந்திக்க  விடாமல்  ஒவ்வொரு சீனுக்கும்  ஜோக்ஸ் மழையைத்தூவி விட்டுக்கொண்டே  திரைக்கதைப்பந்தலை அமைத்தது .  தியேட்டரில் ஆடியன்ஸ்   சிரிச்சுட்டே  இருக்காங்க . 


2.  படத்தில் வரும்  தன்ஷிகா , சந்தியா , ஸ்டெபி ( சிவாவின் தங்கை )  என எல்லாருக்கும்  உடை அலங்காரங்கள் அருமை . மிக ஆடம்பரமாக அதே சமயத்தில் கண்ணியமான கண்ணைக்கவரும் டிசைன்களீல்  சுடி , மிடி கள் கலக்கல் .  ஆடை வடிவமைப்பாளருக்கு  ஒரு ஷொட்டு 


3. படத்தில்  3 பாடல்கள்  கேட்கும்படி  இருக்கின்றன . பவர் ஸ்டாருக்கான காமெடி டூயட் செலக்‌ஷன் அருமை . அப்ளாஸ் அள்ளுது  





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 



1. ஹீரோ பிளான் பண்ணித்தான்  ஹீரோயினின்  ஹேண்ட் பேக்கில் நண்பனின் செல்ஃபோனை   போடறார்செல்ஃபோனை  ஹீரோயின் செக் பண்ணா கேலரியில் இமேஜஸில் சந்தானம் , சிவா  ஃபோட்டோஸ் இருக்கும் என இவருக்கு தெரியாதா? அதை எரெஸ் பண்ணிட்டு போட்டிருக்கலாமே? 


2. ஓல்டு  லேடி எம் டி  யாக வரும் தேவதர்ஷினி யின் கெட்டப்பை சந்தானம் யூத்தாக மாற்ற ஐடியா தருவது ஓக்கே, அது சிவாவை கவர , ஆனால் கூடவே வரும் அந்த எடுபுடிகள் 3 பேர் எதுக்கு ?எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா? அவங்களுக்கும்  கெட்டப் மாத்துவது எல்லாம் ஓவர் . அந்த  3 கேரக்டரும் தேவையே இல்லை . ஏகப்பட்ட  கூட்டம் 



3. ஹீரோயினுக்கு  ஹீரோ மேல் எப்போ காதல் வந்ததுன்னு  மனம் தொடும்படி சொல்லவே இல்லை இயக்குநர். ஹீரோயின் எப்பவும்  ஒரே மாதிரி முகத்தை வெச்சிட்டுஇருக்கார் .

 ( ஹீரோவும் அப்படித்தான்  இருக்கார் ,ஆனால் அவர் சுபாவமே அபப்டி , ஃபேஸ் எக்ஸ்பிரஷன் வராது , ஆனால் ஹீரோயின் ஆல்ரெடி அரவானில் கலக்கியவர்தானே , ஏன் அவருக்கு நடிக்க வாய்ப்பு தரவில்லை ) 


4. ஹீரோ  ஹீரோயினைப்பற்றி  உயர்வாகப்பேசுவது, அதை  ஹீரோயின் ஒளிஞ்சிருந்து கேட்பது எல்லாம்  கே பாக்யராஜ்ன் டார்லிங்க் டார்லிங்க் கால டெக்னிக்குகள் . இதெல்லாம்  இப்போ அவுட் ஆஃப் ஃபேஷன். 


5. போலீஸ் காண்ஸ்டபிளாக வரும்  சந்தியா  ஓப்பனிங்க் சீன்ல  ஒரு காமெடிக்காக போலீஸ் ஸ்டேஷன்ல  யூனிஃபார்ம் ல இருக்கார்  மீதி எல்லாக்காட்சிகளிலும் பகல் டைம் ல  ஹீரோயின்  கூடவோ , சந்தானம்  கூடவோ சுத்திட்டு தான்  இருக்கார் .  வேலைக்கே போக மாட்டாரா? 


6 .ஓல்டு லேடி எம் டி   வேலை இல்லாத  சிவாவுக்கு தன் கம்ப்பெனியில்  வேலை  போட்டுக்குடுத்துட்டா இந்திர விழாவில் நமீதா ஸ்ரீகாந்த்தை கரெக்ட் பண்ணியது போல் ரொம்ப ஈசியா   தன் கண்காணிப்பில் , கட்டுப்பாட்டில் சிவாவை “ வெச்சிருக்கலாமே? *  எதுக்கு அவர் நாக்கை சுத்தி மூக்கைத்தொடனும் ?  சந்தானம் மாதிரி ஒரு ஆள் சப்போர்ட் எதுக்கு ? 



மனம் கவர்ந்த வசனங்கள்


1. நைட் 12 மணிக்கு மேல டாஸ்மாக் ல சரக்கு கூட ஈசியா கிடைக்குது.ஆனா கட்டிக்கப்போற பொண்ணு கிட்டே ஒரு கிஸ் கிடைக்க மாட்டேங்குது


2. நட்பும் காதலும் கொரியன் போன்ல இருக்கும் டூயல் சிம் மாதிரி.ஒரு சிம் க்கு கால் வரும்போது இன்னொரு சிம் வெய்ட்டிங் ல தான் இருக்கனும்


3. பியூச்சர் ல பி எம் ஆகப்போற என்னை பியூன் வேலைக்குப்போகச்சொல்றாங்க.



 என்னது? அப்போ நீ பியூன் வேலைக்குப்போற அளவு படிச்சிருக்கியா?


4. போலீஸ் கான்ஸ்டபிளையே லவ் பண்ணுவியா?



 அழகா இருந்தா கான்ஸ்டபிள் ,எஸ் ஐ னு பார்க்க மாட்டோம்


5. எங்க ஏரியா பொண்ணுக்கு உன் பிரண்ட் ஏன் லெட்டர் குடுத்தான்? 

 6.  வருசமா எல்லாருக்கும் குடுத்துட்டு இருக்கான்.ஏன்னா அவன் போஸ்ட்மேன்   ( எஸ்  வி சேகர்  டிராமா  ஜோக் ( வால் பையன் ) 


7. செல்லுல பேலன்ஸ் இல்லைன்னா லவ்வை பேலன்ஸ் பண்ண முடியாது



8. ஸாரி சொன்னா எல்லாம் சரி ஆகிடுமா?



 சந்தானம் - அப்போ ஆளுக்கு ஒரு செட் பூரி சொல்லட்டா? 



9. பழகுன பொண்ணை புள்ளத்தாச்சி ஆக்கும் பசங்களைக்கூட நம்பிடலாம்.ஆனா புள்ளப்பூச்சி மாதிரி இருக்கும் பொண்ணுங்களை நம்பக்கூடாது.



10. சிவா - எதுக்காக என் பிரண்ட்சை அடிச்சே?



 சந்தானம் - காசு கொடுத்தா நான் என் பிரென்ட்ஸையே அடிப்பேன்  




11.  உனக்காக உன் பேரை என் கைல பச்சை குத்தி  இருக்கேன் 


 யாராவது  வெள்ளைக்கலர்ல  பச்சை குத்துவாங்களா? சாக்பீஸ் ல எழுதி வெச்சுக்கிட்டு  சீன் போடறியா? 



12/  உனக்கு வேலை  கிடைக்கனும்னா இண்டர்வ்யூவுல ஒயின் ஷாப் எப்போ திறப்பாங்க ? எந்த எந்த டாஸ்மாக்ல எந்தந்த சரக்கு கிடைக்கும்? இந்த மாதிரி கேள்விகளா கேட்கனும் 


13. எப்பேர்ப்பட்ட ராஜாவா  இருந்தாலும் அவங்களை ஆண்டி ஆக்க இந்த பொண்ணுங்களால மட்டும் தான்  முடியும்  


14.  காதலியை எப்பவும்  தேவதையாப்பார்க்க   ஆசைப்படுவோம் , ஆனா அவங்க  நம்மை தேவதாசாப்பார்க்க ஆசைப்படுவாங்க  ( ட்விட்டரில் சுட்டது ) 


15. சந்தானம்  - இவன் எதுக்கு எச்சி தொட்டு முஞ்சி கழுவறான் ? 



16. சந்தியா - வாவ் !!!

 சந்தானம் - யார் இங்கே இப்போ வாமிட் எடுத்தது ? 


17.   ஏய்  மிஸ்டர் . உனக்கு எப்படி கண் போச்சு ? 

  பக்கத்து  வீட்டுப்பொண்ணு குளிச்சுட்டு இருந்தது . அதை பார்த்தேன் கண்ணு போயிடுச்சு 

 அது எப்படி ? 


 அந்தப்பொண்ணு தீக்குளிச்சுட்டு இருந்தது . என்னன்னு கிட்டே போய் பார்த்தேன் , கண் அவுட்   ( எஸ் வி சேகரின்  டி வி டிராமா  வண்ணக்கோலங்கள் -ல் சுட்டது  ) 


18.  சந்தானம்  டூ சந்தியா  - டைனிங்க் டேபிள் ஹைட்  இருந்துட்டு   உனக்கெல்லாம் எப்படி போலீஸ் கான்ஸ்டபிள் வேலை  கிடைச்சது ? 



19 . சந்தியா  டூ சந்தானம்  - இந்த வாசல் உங்களுக்காக எப்பவும் திறந்தே  இருக்கும்  ( டபுள் மீனிங்க் ) 




20  சந்தானம் - அந்தப்பொண்ணு மேல உனக்கு என்ன  கோபம் டா ? கோயில் பிச்சைக்காரி மாதிரி வரைஞ்சு வெச்சிருக்கே? 



21,   புலிக்கு முன்னால போன மானும் , பொண்ணுங்க  பின்னால போன ஆணும்  உயிர்  பிழைச்சதா சரித்திரமே  இல்லை ( எஸ் எம் எஸ் ஜோக் , இது ஆல்ரெடி  ஒரு கல் ஒரு கண்ணாடி ல சந்தானமே சொல்லிட்டாரு ) 



22. இந்தக்கால பொண்ணுங்க கிட்டே மொபைல் நெம்பர் வாங்கறதும்  , கர்நாடகாவுல தண்ணீர் வாங்கறதும் ஒண்ணு , அவ்வளவு  சீக்கிரம் நடக்காது 


23. சந்தான்ம்  - என் மொபைலை ஏண்டா  அவ ஹேண்ட் பேக்ல போட்டே?  


 சிவா - என் மொபைலை போட்டா எங்கப்பா  திட்டுவாரு


24.  அது என்னாங்கடி உங்களுக்கு மட்டும் லவ் லாண்டரித்துணி மாதிரி இவ்ளவ்   லேட்டா   வருது ?



25. நான் மப்புக்காக பழகறவன் இல்லை , நட்புக்காக பழகறவன் , சரக்கு குடுத்து  என்னை  விலைக்கு வாங்க  முடியாது 

 இந்தா  3 லட்சம் 


 ஹி ஹி  இது ஓக்கேங்க 


26.  எக்ஸ்க்யூஸ் மீ லேடீஸ் , மே ஐ கம் இன்  டூ மை ஓன் ஹவுஸ் ? 



27. மாப்பி , இந்த  ஃபோனை வெச்சு  ஒரு  டிராமா பண்ணனும் 

 ஃபோனை வெச்சு கால் தான் பண்ன முடியும் , எப்படி  டிராமா பண்ன ? 


28. பவர் ஸ்டார் - கான்செப்ட்  ரொம்ப சின்னதா  இருக்கே?  அதான் நடிக்கலாமா>? வேணாமா?ன்னு யோசிக்கறேன்  

 சந்தானம்  - கல்கியின் பொன்னியின் செல்வன்  இருக்கு பண்றியா?  மணிரத்னமே பண்ண யோசிக்கறாராம் 


29 . சந்தானம்  டூ சிவா  - டேய் , நீ எல்லாம் சீரியசாப்பேசாத , காமெடியா  இருக்கு 


30 பிப்ரவரி 14 ல யாரோட காதல் புட்டுக்கிச்சுன்னாலும் கவலைப்படாதீங்க , அதுக்குப்பிறகு  பிப் 15 இருக்கு , வேற பொண்ணுங்களும் இருக்காங்க 





31. சிவா - என்னை யாராலும் ஏமாத்த  முடியாது

 சந்தானம் - டேய் , சீதா டா 


 சிவா - எங்கேடா? 

 சந்தானம் - இப்போத்தான்  யாராலும் ஏமாத்த முடியாதுன்னே? கி கி 


32. மாடு புல் சாப்ட்டாலும்  பால் தருது, பாம்பு  பால் சாப்ட்டாலும் விஷம் தான் தருது   ( ட்விட்டரில்  சுட்ட லைன் ) 



33. உனக்கு செலவுக்குப்பணம் வேணும்கறதுக்காக  நான் ஏண்டா  வேலைக்குப்போகனும் ? 


 எவனோ பாட்டு கேட்க நாம காசு கொடுத்து காலர் ட்யூன் வைக்கறதில்லையா>  அந்த மாதிரி 


34. எதுக்கு இத்தனை செக்யூரிட்டி ? அவர் என்ன ஃபிளைட்டா ஏறப்போறாரு ? முதல் இரவுதானே நடக்கப்போவுது ? 


35. அவதார் படம் எடுத்தவனுக்கும், அஜால் குஜால் படம் எடுத்தவனுக்கும்  ஒரே மூளை  தான் , யூஸ் பண்ணிக்கற விதம்  தான் வேற 


36.  விடிஞ்சா  எனக்கு கல்யாணம் , அதுவும்  முடிஞ்சா எனக்கு எனக்கு ஃபர்ஸ்ட் நைட்  


37.  உன்னால என்  மேரேஜை நிறுத்தவே  முடியாது 

 ஏன் ? 

 ஏன்னா  கல்யாண முகூர்த்தம்  காலைல 7 மணிக்கு  , அவ்ளவ்  சீக்கிரம் நீ எழுந்துடுவியா?  நீ எப்பவும்  10 மணிக்குத்தானே எந்திரிப்பே? 


38. நீ  உடனே  என் கிட்டே சாரி சொல்லனும் 


 சாரி , என் வாயால சாரி  சொல்லவே மாட்டேன் 

 அடடா, இப்போ சொல்லிட்டியேடா? 



39. இது என்ன கல்யாண மடமா?  மசாஜ் செண்ட்டரா> வரிசையா பொண்ணுங்க  3 பேரு வந்து தடவிட்டு போறாங்க  ? 



40  பவர் ஸ்டார் -  சின்னப்பையன் மனசுல ஆசையை வளர்த்துட்டீங்க 


தன்ஷிகா   - யோவ் ,  நீ சின்னப்பையனா?  பாக்க தாத்தா மாதிரி இருக்கே 


 நீ  கூட ஆயா  மாதிரி தான் இருக்கே  , நான் ஏதாவ்து  சொன்னேனா? 


41. சந்தானம்  - டேய்  தகப்பா , முதல்  இரவு கட்டில்ல  பூவை டக்னு தூவிட்டு கிளம்பாம  எதுக்கு டா  புறாவுக்கு தீனி  போடற மாதிரி பண்ணிட்டு  இருக்கே? 

 மவனே , உன் கிட்டே மனம்  விட்டுப்பேசுவதற்காக வெயிட்டிங்க் 

  டேய் நாயே  உன் கிட்டே பேசறதுக்கா  மெனக்கெட்டு மேரெஜ் பண்ணி ஃபர்ஸ்ட் நைட்  வரை வந்திருக்கேன் ? 


42 . என் மாமா பையனை காணோம் , தேடனும் , எபப்டின்னு நான் திங்க் பண்ணிட்டு இருக்கேன் , தொந்தரவு பண்னாதீங்க  


 சரி வா , படுத்துட்டே 2 பேரும்  திங்க் பண்ணலாம் 

 ச்சீய் 


43 . அடியேய் , நகருங்கடி 2 பேரும் , அவன் என்ன புயல்ல  விழப்போற  கரண்ட் கம்பமா? 2 பேரும் ஆளுக்கொரு பக்கம்  தாங்கிட்டு நிக்கறீங்க  தள்ளுங்கடி

 
 


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  41


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =  3 / 5


சி பி கமெண்ட் -  ஏ செண்ட்டரில்  இது  ஹிட் ஆகிடும் . இந்தப்படத்தை  விட அழுத்தமான கதை அம்சம் , மேக்கிங்க் ஸ்டைல் பிரமாதமா  இருந்த 6 படத்துக்கு  கூட்டமே இல்லை . இதுக்கு செம கூட்டம் . படம் சர்வ சாதாரணமா 3 மடங்கு லாபம் சம்பாதிச்சுக்கொடுத்துடும் . ஜாலியா கல கலன்னு ஒரு டைம் பாஸ் படம் , எல்லாரும் பார்க்கலாம் . ஈரோடு அபிராமி தியேட்டர்ல படம் பார்த்தேன் 

diski -

6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/6.html





Monday, March 05, 2012

அரிதிலும் அரிதான படமான அரவான் - அழகியல் வசனங்கள்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/03/Aravaan_Movie_Review-300x300.jpg

1. தூக்கம் வர்றவன் காவலுக்கும், தும்மல் வர்றவன் களவுக்கும் வரக்கூடாது


-----------------------------------

2.  ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம்மளை ஏமாத்தி கம்மியான விலைக்கு களவுப்பொருள்களை வாங்கறானே இவன் வீட்ல களவாடனும்


-------------------------------

3. வெறும் வெத்தலை ( வெற்றிலை) போட்டா அது வீட்டுக்கு ஆகாது.. சுண்ணாம்பும் எடுத்துக்கறேன்..?

--------------------------

4. ராத்திரி 3ம் ஜாமம் தான்  கட்டில் காவிலி வரும் , மனுஷன் அடிச்சுப்போட்டு கிடக்கற மாதிரி தூங்கற டைம், அப்போதான் நாம களவாடப்போகனும் .. ( ஜெ ஆட்சில அந்த தொல்லை இல்லை, கரண்ட் கட் ஆகறதால விழிச்சுக்கறாங்க)


-----------------------------------

5. களவாணிப்பயலுக்கு அழகே புகுந்த இடத்துல ஏதாவது களவாண்டுட்டு வர்றதுதான்.. நீ என்னடான்னா வெறும் கையோட வந்திருக்கே?

அது சரி,.. நான் போனப்ப ஒரு பொண்ணு நாண்டுக்கிட்டு செத்துடுச்சு ( தூக்கில் தொங்கி) பழி எம் மேல வந்துடக்கூடாது பாரு.. 

----------------------------------

6.  களவுக்கும் காலம், நேரம், திசை எல்லாம் உண்டு.. 

---------------------------

7.  லேடி பெருசு - ஏலேய்.. இந்த நேரத்துல எங்க ஊர்க்கு எதுக்கு வந்திருக்கே? நீ சம்மணம் போட்டு  உக்காந்திருக்கற சாமியை கும்பிடற கோத்திரத்துல வந்தவன் தானே..இப்படி அர்த்த ஜாமத்துல இங்கே வந்தா  உனக்கு சாமானம் எந்திரிக்காது பார்த்துக்க.. 

 பாட்டி, வயசுக்கு தகுந்த பேச்சு பேசு.. 

----------------------------------

8.  கோட்டையூர் பற்றி உனக்கு தெரியலை.. எங்க ஊர் பொன்னை, பெண்ணை கொண்டு வர வேண்டாம்.. ஒரு பிடி மண்ணை கொண்டு வாங்கய்யா பார்க்கலாம்.. எவ்வளவு பாதுகாப்பு.. அரண்.. 

--------------------------------

9.  திறன் இருக்கறவன் என் கூட வா.. திறன் கெட்டவன் சொந்த ஊர்  திசை தேடி ஓடிப்போ . ஆபத்துல சிக்குன நண்பனை விட்டுட்டு என்னை மட்டும் காப்பாத்திக்க மாட்டேன்.. 

-------------------------------------

10.  களவுத்தொழில்ல இருக்கறவனுக்கு எவ்ளவ் வேணாலும் ரத்தம் வரலாம், ஆனால் கண்ணீர் வரக்கூடாது.. 

------------------
http://www.southgossips.in/wp-content/uploads/2011/10/actress-dhanshika-latest-hot-photoshoot-gallery-pics-6.jpg
குத்து விளக்குடன் நிற்கும் குத்தாட்ட கலக்கு விளக்கு தன்ஷிகா

11.  ஏய்யா.. எனக்கென்ன குறைச்சல்? கொப்பும் குலையுமாத்தானே இருக்கேன்.. பொம்பளை தானா இறங்கி வந்து கேட்டா இந்த ஆம்பளைங்களுக்கு எப்பவும் எளக்காரம் தான்..

--------------------------

12. குலம் தெரியாதவனை ஊர்ல சேர்க்கலாம், ஆனா குடும்பத்துல சேர்க்க முடியாது. 

-------------------------------

13.  என்னது, என் ,மாட்டை அடக்கிடுவியா.. என் மாட்டோட கொம்பை தொட வேணாம்.. ------------------ கை தொடுய்யா பார்க்கலாம்.. 


-------------------------------

14.  களவுல இருந்துதான் காவல் பிறக்கும்..  உங்கப்பன் வழில வந்திருந்தா நீ புல் தான் புடுங்கிட்டு இருந்திருப்பே. 


-------------------------------------------

15.  கொளுந்தியாளை வம்புக்கிழுக்கறது தப்பா?

 அப்படி இழுக்கற மாதிரி இருந்தா உன் கொளுந்தியாளை வம்புக்கிழு.. எதுக்கு என் கொளுந்தியாளை வம்புக்கிழுக்கறே?

--------------------------------------

 16. என்னதான் இருந்தாலும் மச்சினி, கொளுந்தியான்னா ஒரு போதைதான்

----------------------------

17.  சிங்கம்புலி - என் பொண்டாட்டி குளிக்கறப்ப ஒளிஞ்சிருந்து பார்த்தான்.. அங்கங்கே அப்பப்ப கிள்ளினான்.. அதைக்கூட பொறுத்துக்கிட்டேன்... ஆனா என் கொளுந்தியாவை எக்காரணம் கொண்டும் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்.. அவ எனக்குத்தான் ஹி ஹி பாதுகாப்பேன்..  இந்த ஊர்ல யாருக்கும் கொளுந்தியா பாசமே இல்லையா? ஏன் என்னை மட்டும் குறை சொல்றீங்க?

----------------------------------

18. காலைச்சுத்துன பாம்பு கணக்கா விதி நம்ம ஊரச்சுத்திக்கிடக்கு.. ஒவ்வொரு ஊரா   ரெண்டு ரெண்டு பேரா போய் தாக்கல் சொல்லிட்டு வந்துடுங்க ( இறந்த தகவல்)

---------------------------------

19.  எதா இருந்தாலும் நாம ஊர்க்காரங்க பேசித்தீர்த்துக்கலாம்.. 

 பேசிப்பேசியே தீர்த்துட்டீங்களே..  ஆளையே. அவன் என் தம்பிடா..

--------------------------------

20.  போரம் கேட்கப்போறப்ப பிரச்சனை வேணாம்னு பார்க்கறேன் (போரம் கேட்கப்போறப்ப - துக்கம் விசாரிக்க இழவு வீட்டுக்கு செல்லுதல்)

--------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYAPFAJntUtA9sgjhzwFsU30hI4yBMFVtWtISSBEgkieRxDshgUS3GLrz7c2vcsbdBraOQee5eG87cm_XCHHK11ystS2vpFjIhf58LKz0IrvYuDKOQzEiXtpMLcj6mzo-95hcfLumEaQ/s1600/swetha+menon-in-aravaan-movie-hot-stills.jpg

21.  புலியோட மீசை நரம்பு எடுத்து உன் கண்ல  ஒரு முடியை ஏத்துனா உன்  மூளை நரம்பு வெடிச்சு நீ செத்துடுவே..

-----------------------------

22.  விதவை ஆகப்போறேன்னு தெரிஞ்சும்  அப்பா கூட மல்லுக்கட்டி  உன்னை கட்ட நினைச்சேனே அது என் தப்பு.. 

---------------------------

 23.  உன்னை பார்க்கும்போதெல்லாம் 100 வருஷம் வாழ ஆசை வருது.. பலிக்கு பலி ஆடா நான் போகலை.. 

----------------------------

24.மதுர ராசா சாதாரண ஆளா? அவர் அரணாக்கொடியே என் கைல மாட்டி இருக்கு.. எம்புட்டு இடுப்பை பார்த்ததோ?


-------------------------------------

25.  மகா பாரதத்துல பாண்டவர்கள் போருக்கு முன்னால உயிர் பலி குடுத்தாங்களே.. அது மாதிரி தான் இதுவும்.. கலங்காதே..

--------------------

26.  மல்லுக்கட்டி 2 ஊரு மக்களும் போட்டி போட்டுக்கிட்டு சாகறதுக்கு ஒரு ஆளை மட்டும் பலி கொடுக்கறது தப்பே இல்லை..

----------------------

27.  உன்னை மந்தைல வெச்சு மொட்டை அடிச்சு விடனும்.. இல்லைன்னா டேஞ்சர்.

--------------------------------

28.  கோடாங்கி கண்ணீர் ஊரையே அழிச்சிடும்.

---------------------

29, சாகப்போறான்னு தெரிஞ்சும்  அவனை எப்படிம்மா உனக்கு கட்டி வைப்பேன்?

சரி.. அப்போ சாகாத ஆள் யார்னு காட்டுங்க.. அவனையே கட்டிக்கறேன்.. 

-------------------------

30.  யோவ்,.,. என்னைப்பற்றி என்னய்யா நினைச்சே.. நாளைக்கே வாந்தி எடுத்துக்காட்டவா?

---------------------

http://lh3.ggpht.com/-jdy3cWIj7jc/Tz9batCJs6I/AAAAAAAADhg/_9RZ0OI8uGM/aravaan_dhansika_exposing_boobs_in_saree_thumb%25255B3%25255D.jpg


31. சின்ன மகாராணி - மகாராஜா.. ஒண்ணு தெரிஞ்சுக்குங்க.. வெட்டி சாய்ச்சுத்தான் கொல்லனும்னு இல்லை.. விதைச்சும் கொல்லலாம்..

-----------------------------

32. ராணிக்கு அத்தர் வாசமும் பிடிச்சிருந்தது.. அத்தர் விற்க வந்தவனையும் பிடிச்சிருந்தது..

---------------------------------

33. மகா ராஜா - ஆடு கோழியைத்தான் பலி கொடுப்பாங்க.. யானையை எதுக்கு பலி கொடுக்கனும்? நான் ராஜா நான் எதுக்கு பலி ஆகனும்?

----------------------------

34. உன் நாக்கு புரளாத வரை உனக்கு மரணம் இல்லை..

--------------------------

35.  பலி ஆள் ஆனா என்ன? 10 வருஷம் தலை மறைவா இருந்துட்டு வந்துட்டா உனக்கு ஊரே மன்னிப்பு கொடுத்துடும்.. அப்படி ஒரு விதி இருக்கு.

--------------------------------------