Showing posts with label அரவான். Show all posts
Showing posts with label அரவான். Show all posts

Monday, March 05, 2012

அரிதிலும் அரிதான படமான அரவான் - அழகியல் வசனங்கள்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/03/Aravaan_Movie_Review-300x300.jpg

1. தூக்கம் வர்றவன் காவலுக்கும், தும்மல் வர்றவன் களவுக்கும் வரக்கூடாது


-----------------------------------

2.  ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம்மளை ஏமாத்தி கம்மியான விலைக்கு களவுப்பொருள்களை வாங்கறானே இவன் வீட்ல களவாடனும்


-------------------------------

3. வெறும் வெத்தலை ( வெற்றிலை) போட்டா அது வீட்டுக்கு ஆகாது.. சுண்ணாம்பும் எடுத்துக்கறேன்..?

--------------------------

4. ராத்திரி 3ம் ஜாமம் தான்  கட்டில் காவிலி வரும் , மனுஷன் அடிச்சுப்போட்டு கிடக்கற மாதிரி தூங்கற டைம், அப்போதான் நாம களவாடப்போகனும் .. ( ஜெ ஆட்சில அந்த தொல்லை இல்லை, கரண்ட் கட் ஆகறதால விழிச்சுக்கறாங்க)


-----------------------------------

5. களவாணிப்பயலுக்கு அழகே புகுந்த இடத்துல ஏதாவது களவாண்டுட்டு வர்றதுதான்.. நீ என்னடான்னா வெறும் கையோட வந்திருக்கே?

அது சரி,.. நான் போனப்ப ஒரு பொண்ணு நாண்டுக்கிட்டு செத்துடுச்சு ( தூக்கில் தொங்கி) பழி எம் மேல வந்துடக்கூடாது பாரு.. 

----------------------------------

6.  களவுக்கும் காலம், நேரம், திசை எல்லாம் உண்டு.. 

---------------------------

7.  லேடி பெருசு - ஏலேய்.. இந்த நேரத்துல எங்க ஊர்க்கு எதுக்கு வந்திருக்கே? நீ சம்மணம் போட்டு  உக்காந்திருக்கற சாமியை கும்பிடற கோத்திரத்துல வந்தவன் தானே..இப்படி அர்த்த ஜாமத்துல இங்கே வந்தா  உனக்கு சாமானம் எந்திரிக்காது பார்த்துக்க.. 

 பாட்டி, வயசுக்கு தகுந்த பேச்சு பேசு.. 

----------------------------------

8.  கோட்டையூர் பற்றி உனக்கு தெரியலை.. எங்க ஊர் பொன்னை, பெண்ணை கொண்டு வர வேண்டாம்.. ஒரு பிடி மண்ணை கொண்டு வாங்கய்யா பார்க்கலாம்.. எவ்வளவு பாதுகாப்பு.. அரண்.. 

--------------------------------

9.  திறன் இருக்கறவன் என் கூட வா.. திறன் கெட்டவன் சொந்த ஊர்  திசை தேடி ஓடிப்போ . ஆபத்துல சிக்குன நண்பனை விட்டுட்டு என்னை மட்டும் காப்பாத்திக்க மாட்டேன்.. 

-------------------------------------

10.  களவுத்தொழில்ல இருக்கறவனுக்கு எவ்ளவ் வேணாலும் ரத்தம் வரலாம், ஆனால் கண்ணீர் வரக்கூடாது.. 

------------------
http://www.southgossips.in/wp-content/uploads/2011/10/actress-dhanshika-latest-hot-photoshoot-gallery-pics-6.jpg
குத்து விளக்குடன் நிற்கும் குத்தாட்ட கலக்கு விளக்கு தன்ஷிகா

11.  ஏய்யா.. எனக்கென்ன குறைச்சல்? கொப்பும் குலையுமாத்தானே இருக்கேன்.. பொம்பளை தானா இறங்கி வந்து கேட்டா இந்த ஆம்பளைங்களுக்கு எப்பவும் எளக்காரம் தான்..

--------------------------

12. குலம் தெரியாதவனை ஊர்ல சேர்க்கலாம், ஆனா குடும்பத்துல சேர்க்க முடியாது. 

-------------------------------

13.  என்னது, என் ,மாட்டை அடக்கிடுவியா.. என் மாட்டோட கொம்பை தொட வேணாம்.. ------------------ கை தொடுய்யா பார்க்கலாம்.. 


-------------------------------

14.  களவுல இருந்துதான் காவல் பிறக்கும்..  உங்கப்பன் வழில வந்திருந்தா நீ புல் தான் புடுங்கிட்டு இருந்திருப்பே. 


-------------------------------------------

15.  கொளுந்தியாளை வம்புக்கிழுக்கறது தப்பா?

 அப்படி இழுக்கற மாதிரி இருந்தா உன் கொளுந்தியாளை வம்புக்கிழு.. எதுக்கு என் கொளுந்தியாளை வம்புக்கிழுக்கறே?

--------------------------------------

 16. என்னதான் இருந்தாலும் மச்சினி, கொளுந்தியான்னா ஒரு போதைதான்

----------------------------

17.  சிங்கம்புலி - என் பொண்டாட்டி குளிக்கறப்ப ஒளிஞ்சிருந்து பார்த்தான்.. அங்கங்கே அப்பப்ப கிள்ளினான்.. அதைக்கூட பொறுத்துக்கிட்டேன்... ஆனா என் கொளுந்தியாவை எக்காரணம் கொண்டும் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்.. அவ எனக்குத்தான் ஹி ஹி பாதுகாப்பேன்..  இந்த ஊர்ல யாருக்கும் கொளுந்தியா பாசமே இல்லையா? ஏன் என்னை மட்டும் குறை சொல்றீங்க?

----------------------------------

18. காலைச்சுத்துன பாம்பு கணக்கா விதி நம்ம ஊரச்சுத்திக்கிடக்கு.. ஒவ்வொரு ஊரா   ரெண்டு ரெண்டு பேரா போய் தாக்கல் சொல்லிட்டு வந்துடுங்க ( இறந்த தகவல்)

---------------------------------

19.  எதா இருந்தாலும் நாம ஊர்க்காரங்க பேசித்தீர்த்துக்கலாம்.. 

 பேசிப்பேசியே தீர்த்துட்டீங்களே..  ஆளையே. அவன் என் தம்பிடா..

--------------------------------

20.  போரம் கேட்கப்போறப்ப பிரச்சனை வேணாம்னு பார்க்கறேன் (போரம் கேட்கப்போறப்ப - துக்கம் விசாரிக்க இழவு வீட்டுக்கு செல்லுதல்)

--------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYAPFAJntUtA9sgjhzwFsU30hI4yBMFVtWtISSBEgkieRxDshgUS3GLrz7c2vcsbdBraOQee5eG87cm_XCHHK11ystS2vpFjIhf58LKz0IrvYuDKOQzEiXtpMLcj6mzo-95hcfLumEaQ/s1600/swetha+menon-in-aravaan-movie-hot-stills.jpg

21.  புலியோட மீசை நரம்பு எடுத்து உன் கண்ல  ஒரு முடியை ஏத்துனா உன்  மூளை நரம்பு வெடிச்சு நீ செத்துடுவே..

-----------------------------

22.  விதவை ஆகப்போறேன்னு தெரிஞ்சும்  அப்பா கூட மல்லுக்கட்டி  உன்னை கட்ட நினைச்சேனே அது என் தப்பு.. 

---------------------------

 23.  உன்னை பார்க்கும்போதெல்லாம் 100 வருஷம் வாழ ஆசை வருது.. பலிக்கு பலி ஆடா நான் போகலை.. 

----------------------------

24.மதுர ராசா சாதாரண ஆளா? அவர் அரணாக்கொடியே என் கைல மாட்டி இருக்கு.. எம்புட்டு இடுப்பை பார்த்ததோ?


-------------------------------------

25.  மகா பாரதத்துல பாண்டவர்கள் போருக்கு முன்னால உயிர் பலி குடுத்தாங்களே.. அது மாதிரி தான் இதுவும்.. கலங்காதே..

--------------------

26.  மல்லுக்கட்டி 2 ஊரு மக்களும் போட்டி போட்டுக்கிட்டு சாகறதுக்கு ஒரு ஆளை மட்டும் பலி கொடுக்கறது தப்பே இல்லை..

----------------------

27.  உன்னை மந்தைல வெச்சு மொட்டை அடிச்சு விடனும்.. இல்லைன்னா டேஞ்சர்.

--------------------------------

28.  கோடாங்கி கண்ணீர் ஊரையே அழிச்சிடும்.

---------------------

29, சாகப்போறான்னு தெரிஞ்சும்  அவனை எப்படிம்மா உனக்கு கட்டி வைப்பேன்?

சரி.. அப்போ சாகாத ஆள் யார்னு காட்டுங்க.. அவனையே கட்டிக்கறேன்.. 

-------------------------

30.  யோவ்,.,. என்னைப்பற்றி என்னய்யா நினைச்சே.. நாளைக்கே வாந்தி எடுத்துக்காட்டவா?

---------------------

http://lh3.ggpht.com/-jdy3cWIj7jc/Tz9batCJs6I/AAAAAAAADhg/_9RZ0OI8uGM/aravaan_dhansika_exposing_boobs_in_saree_thumb%25255B3%25255D.jpg


31. சின்ன மகாராணி - மகாராஜா.. ஒண்ணு தெரிஞ்சுக்குங்க.. வெட்டி சாய்ச்சுத்தான் கொல்லனும்னு இல்லை.. விதைச்சும் கொல்லலாம்..

-----------------------------

32. ராணிக்கு அத்தர் வாசமும் பிடிச்சிருந்தது.. அத்தர் விற்க வந்தவனையும் பிடிச்சிருந்தது..

---------------------------------

33. மகா ராஜா - ஆடு கோழியைத்தான் பலி கொடுப்பாங்க.. யானையை எதுக்கு பலி கொடுக்கனும்? நான் ராஜா நான் எதுக்கு பலி ஆகனும்?

----------------------------

34. உன் நாக்கு புரளாத வரை உனக்கு மரணம் இல்லை..

--------------------------

35.  பலி ஆள் ஆனா என்ன? 10 வருஷம் தலை மறைவா இருந்துட்டு வந்துட்டா உனக்கு ஊரே மன்னிப்பு கொடுத்துடும்.. அப்படி ஒரு விதி இருக்கு.

--------------------------------------

Sunday, May 29, 2011

அரவான் ஹீரோயின்கள் 2 பேரும் செம மைலேஜ் -வசந்தபாலன் கலக்கல் பேட்டி VS விகடன் - காமெடி கும்மி

http://mimg.sulekha.com/tamil/aravaan/wallpaper/1024-768/aravaan-wallpapers08.jpgலைகளில், வனங்களில், கல்லாய், கதையாய் வாழ்ந்துகொண்டு இருப்பவன், எல்லா நூற்றாண்டுகளிலும் அதிகாரத்தின் கோரப் பிடியில் சிக்கி நசுங்கும் நியாயவான்கள் அத்தனை பேரும் அரவான்களே!''-

லேப்டாப்பில் விரிந்த ஆதி, பசுபதியின் புகைப்படங்களைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்த என் வியப்பை ஓரக் கண்ணால் ரசித்தபடியே பேசுகிறார் இயக்குநர் வசந்தபாலன். 

'வெயில், 'அங்காடித் தெரு’ படங்களின் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையைப் பேசியவர், 'அரவான்’ மூலம் 18-ம் நூற்றாண்டுக்குத் தமிழர்களைக் கடத்திச் செல்லும் முனைப்பில் இருக்கிறார்!   

சி பி - 2 படங்கள் தொடர்ந்து ஹிட் குடுத்துட்டாரு.. அதனால இந்தப்படம் ஊத்திக்கும்னு நினைக்கறேன்.. 

 1.''ஸ்டில்ஸ் அட்டகாசம்... எங்கே பிடிச்சீங்க 'அரவானு’க்கான பொறியை?''

'' 'வெயில்’, 'அங்காடித் தெரு’ ரெண்டுமே குட்டிக் கதைகள். சின்ன படங்கள். தெளிவான திட்டமிடலுடன் சின்னப் படம் எடுக்க முடிந்த உன்னால், பெரிய படங்களை உருவாக்க முடியாதா?’ன்னு எனக்குள்ளேயே ஏகப்பட்ட கேள்விகள். மிகப் பெரிய தாண்டல் வேண்டும்னு மனசுக் குள்ள பெரிய அலை.

 சி பி - இந்தப்படம் உங்களுக்கும் ,புரொடியூசருக்கும் பெரிய லாங்க் ஜம்ப்பா இருக்கும்னு சொல்லுங்க..


சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்’ நாவல் படிச்சுட்டு இருந்தேன்

 சி.பி - ஏன் வழக்கமா ஃபாரீன் டி வி ல இருந்துதானே  சுடுவீங்க:? திடீர்னு நாவலுக்கு போய்ட்டீங்க?

. படிக்கப் படிக்க... மனம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணித்தது. அதில் ஒரு அத்தியாயத்தில் இருந்த சம்பவத்தை சினிமாவுக்கான கதை ஆக்கினால் என்னன்னு திடீர்னு ஒரு மின்னல். சு.வெங்கடேசனிடம் தகவல் சொன்னேன். 'இது உங்க கதை தலைவா. தாராளமா எடுத்துக்குங்க’னு உற்சாகமாப் பரிமாறிக்கிட்டார்.

 சி .பி - ராயல்டியா ஐயாயிரமாவது குடுத்தீங்களா? இல்லை டைட்டில்ல பேர் வரும்னு ஒப்பேத்துனீங்களா?

அடுத்த சில மணி நேரங்களில் இருந்தே 'அரவான்’ வளரத் தொடங்கிவிட்டான். இது எங்களின் இமாலயத் தாண்டல்.

 சி பி - அய்யயய்யோ... அப்போ ஷூட்டிங்க் ஃபுல்லா எவரெஸ்ட்லயா? அவ்வ்வ்வ்


பட்ஜெட்டை மட்டும் மனதில்வைத்து இதைச் சொல்லலை. கதையின் விஸ்தீரணம், பிரமாண்டத்தின் நேரடி சாட்சி என்பதால் சொல்கிறேன்!''
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGdzQvBCRVMUhkmkgP4vN41SV6GnHWqcAiLtU6QtYMA5DM6jdCsUdSt_yNeRcqWQmS3Pllf4Fp5nUsyzGXRiz9cqtSfdM3ShZxzU5-JT0XhNPyUTUdhxGitIDfSIY7h5VZUYtaDHzM54ey/s1600/002-23-07-2010-5677-1-2.jpg

'2. ' 'காவல் கோட்டம்’ மிகப் பெரிய நாவலாச்சே.... அதை முழுமையா ஒரு சினிமாவுக்குள் அடக்க முடியுமா?''  

'' 'காவல் கோட்டம்’ ஆயிரக்கணக்கான கிளைக் கதைகளைக்கொண்ட மிகப் பெரிய வரலாற்று நாவல். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை மக்களின் வாழ்க்கையைப் பேசும் எழுத்துக் கடல். அதில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு துளிதான் 'அரவான்’.

அந்தத் துளிக்கும் காவல் கோட்டத்தின் முன் பின்னுக் கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த நாவலைப் படித்தால், 'அரவான் துளி’ எங்கே இருந்து எடுக்கப்பட்டதுன்னுகூடக் கண்டுபிடிக்க முடியாது. 

 சி பி - அடடா,, நைஸா அப்படியே விட்டிருக்கலாம்.. ராயல்டி செலவு மிச்சம். ஆகி இருக்கும்

அவ்வளவு பெரிய நாவலை சினிமாவுக்குள் அடக்குவது என்பதும் சாத்தியம் இல்லாத சாகசம். ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில், அடுத்த கதைக்கான தேடலில் இருந் தோம். ஒருநாள் இயக்குநர் வெளியே கிளம்பும்போது நடிக்க சான்ஸ் கேட்டு ராம்-லட்சுமணன் என்ற இரட்டையர்கள் வந்தனர். அவங்களைப் பார்த்துட்டு ஏதோ யோசனையுடனே வந்தவர், 'நம் அடுத்த படம் ட்வின் பிரதர்ஸ் பற்றியது’ என்றார். அதுதான் 'ஜீன்ஸ்’.

ரங்கநாதன் தெரு வைப் பார்த்த நொடியில் உருவானதுதான், 'அங்காடித் தெரு’. 'நாய்ச் சண்டை பற்றிய 'அமரோஸ் பெரோஸ்’னு ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தேன். அதைப்போல நம்ம ஊர்ல என்ன சண்டை இருக்குன்னு தேடினப்பதான் 'ஆடுகளம்’ உருவானது’ என்றார் நண்பர் வெற்றிமாறன். இரண்டரை மணி நேர சினிமா கதைக்கு அதிகபட்ச தேவை ஒரே ஒரு பொறிதான். அரவானுக்கான பொறி எனக்குக் காவல் கோட்டத்தில் கிடைத்தது. அவ்வளவுதான்!''


சி பி - மொத்தத்துல சொந்தச்சரக்கு யார் கிட்டேயும் இல்லைங்கறீங்க.. 
3. ''இவ்வளவு அழுத்தத்தை ஆதி, பசுபதி தங்கள் தோள்களில் தாங்குவாங்கன்னு உங்களுக்கு எப்படி நம்பிக்கை வந்தது?''


 சி.பி - அவர் தான் குடுக்கற சம்பளத்தை வாங்கிக்கிட்டு பேசாம இருப்பார்..
''படத்தில் 'வரிப்புலி’, 'கொம்பூதி’ன்னு இரண்டு முக்கியமான கேரக்டர்கள். காடு, மலை, இரவு, பகல்னு சுத்திய 18-ம் நூற்றாண்டு மனிதர்கள். இப்போ செருப்பு இல்லாம வெறுங்காலில் பத்து அடிகூட நம்மால் நடக்க முடியலை. பழக்கப்பட்ட குடிநீர் மாறினால், உங்களுக்கும் எனக்கும் வைரஸ் ஃபீவர் வந்துடுது. ஆனா, அன்றைய மனிதர்களின் அசாத்திய ஃபிட்னெஸ் நினைச்சாலே மலைக்கவைக்குது.

' 'வரிப்புலி’க்கு யார் சரியா இருப்பாங்க’ன்னு யோசிச்சப்ப 'மிருகம்’, 'ஈரம்’ தந்த பிம்பம் ப்ளஸ் 6.2 அடி உயரம் ஆதியை என் மனதில் நிறுத்தியது. கதை பத்திப் பேசிட்டு '8 பேக்ஸ் வைங்க’ன்னு சொன்னேன். ரெண்டு மாசத்துக்குள்ளேயே ஃபைபர் உடம்போடு 'வரிப்புலி’யா வந்து நின்னார்.

மரம் ஏறி, மலை ஏறி, கோட்டையைத் தாண்டின்னு படத்தில் ஆதியின் உழைப்பு அசாத்தியமானது. பசுபதி எப்பவும் என் மனசுக்குப் பிடித்த மனிதர், சிறந்த நடிகர். 'கொம்பூதி’யாகவே கிழித்து எறிந்திருக்கிறார்.


சி பி - பார்த்து.. படமும் கிழிச்சிடப்போகுது.. 
படப்பிடிப்பில் ஆதியும் பசுபதியும் ரத்தம் சிந்தாத நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உச்சி வெயிலில் செருப்பு அணியாமல், சட்டை போடாமல், வெற்றுடம்பில் ஒரே ஒரு அழுக்கு வேட்டியுடன், உடல் முழுக்க டாட்டூ வரைந்து என அவர்களுக்கு முதல் ஷாட் வைக்கவே 11 மணியாகிவிடும். அதுக்கு அவங்க அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கணும். எழுந்ததும் உடற்பயிற்சி, டாட்டூ, விக்னு தயாராகி, படப்பிடிப்பு முடிந்து வேடம் கலைத்துப் படுப்பதற்குள் நள்ளிரவு ஆகிவிடும். திரும்ப அதிகாலை 4 மணிக்கு அலாரம். ஒரு வார்த்தையில் சொல்லணும்னா, அவங்க உழைப்பு அபாரம்!''
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMXCQjAEUdHkASN0orSx6Mn7IF5KnbU6Td9q6XkuMvlBpQTSlN5vkgx4MBUZsofnj5-xNculQwDuby-fY8Q8fH_yuK1wthtREYW3ygslv1ICT8ER9lGTnAY1Z_-rqqaLvn-RF9OXjaEzU/s1600/aravaan-59.jpg

4. ''இப்படி ஒரு படத்துக்குப் பாடல்கள், பின்னணி இசைக்கு அனுபவம் அவசியம். ஆனால், பின்னணிப் பாடகர் கார்த்திக்கை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தி இருக்கீங்களே... ரிஸ்க் இல்லையா?''

சி பி - அறிமுகப்படுத்துனா சம்பளம் தர்ற வேலை இல்லை.. 
''நினைத்ததைச் சொல்லலாம் என்பதைத் தவிர, வேற எந்த நோக்கமும் இல்லை. கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழி சினிமாவிலும் பரபரப்பாக இருக்கும் பாடகர் கார்த்திக். 'பண்றீங்களா?’ன்னு கேட்டதும் ஆர்வமுடன் வந்து 18-ம் நூற்றாண்டு இசைக் கருவிகளைத் தேடிப் பிடித்து, பாட்டு, பின்னணி இசைன்னு இரண்டிலும் பிரமாதப்படுத்தி இருக்கார். எனக்குப் பாடல்கள் என்பது கதையைச் சொல்ல உதவும் இன்னொரு கருவி. அதாவது, கதைப் பாடல்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் ஆறு கதைப் பாடல்கள்!''

சி பி - அப்போ தம் பார்ட்டிங்களுக்கு செம ஜாலி தான் , மொத்தம் படத்துல 7 இடைவேளையா? 

5. ''ஹீரோயின்கள்பத்தியும் கொஞ்சம் சொல்லலாமே...''

சி பி - ஏன் கொஞ்சம்? நிறையா ஜொள்ளுங்க.. ஹி ஹி 

''தன்ஷிகா, அர்ச்சனா கவி ரெண்டு பேரும் 'வரிப்புலி’ ஆதிக்கு ஜோடிகள். அபிநயக் கண்கள், ஆச்சர்ய உயரம் ரெண்டும் தன்ஷிகாவின் வசீகரம். மலையாளியாக இருந்தாலும் அர்ச்சனாவுக்கு அழகிய தமிழ் முகம். படத்துக்கு ரெண்டு பேரும் நல்ல மைலேஜ் கொடுப்பாங்க!''  

 சி பி - என்னது நல்ல மைலேஜா? ஹா ஹா செக்கப் பண்ணீட்டீங்களா? 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPvu8M4ZE42taxezDbyPWo0LdmLBSUc5srt3GSUvOlOYuvJ29jwEFO-jLgKOeIo82vBjjF_MB85RjguIdW8B4t4kgu-GIDMKpu2jsOIMiSF6frCY3zvFnHeBf8otM97TQfHNsUCi9haEbI/s1600/Aravaan+_9_.jpg
6. ''லொகேஷன், ஆபரணங்கள், உடைகள்னு எல்லாமே அசரவைக்குதே... எப்படி சாதிச்சீங்க?''

 சி .பி -  புரொடியூசர் சிக்கிட்டாரு.. வேற என்ன சொல்ல.. ஹி ஹி 


''நினைத்துப் பார்க்க முடியாத மிரட்சியான உழைப்பு. படப்பிடிப்புத் தளம் தேடி மட்டுமே இந்தியா முழுக்கப் பயணித்திருப்போம்.

 சி பி - பாவம் புரொடியூசர் .கோரிப்பாளையமே தாண்டி இருக்க மாட்டாரு.. அவர் காசுல அண்ணன் பாதி உலகத்தை லொக்கேஷன் பார்க்கறேன்கற பேர்ல ரவுண்ட் அடிச்சுட்டார் போல.. 


கடைசியில், இங்கேயே பக்கத்தில், மதுரை அருகே 'ஓவா மலை’யைக் கண்டறிந்தோம். சமணக் குகைகள் நிறைந்த மலை. இன்னும் நவீன சிதைவுகள் எட்டாத எல்லையில் எங்களுக்கான தன்மையோடு இருந்தது.  

 சி பி - அடப்பாவிகளா.. இந்தியா ஃபுல்லா சுத்திப்பார்த்துட்டு அப்புறமா இதை  கண்டு பிடிச்சீங்களா?
அதேபோல் ஆர்ட் டைரக்டர்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அனுபவமும் விஜய முருகனின் துறுதுறு உழைப்பும் அரவானின் அசுரபலம். அப்போதைய ஸ்டைல் வேட்டிக் குக்கூட ஒரு வார உழைப்பு தேவைப்பட்டது. புதிதாக நெய்த வேட்டியை மண்ணுக்குள் புதைத்து பண்படுத்தித்தான் பயன்படுத்த முடியும். 

பளிச் பற்களுடன் வந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்குக் கறை படிந்த அழுக்கு பல் செட்டுகள் மாட்டினோம். நகம் வெட்ட தடா போட்டோம். குளிச்சாலும் மூணு நாட்களுக்கு அழியாமல் இருக்கும் ஸ்பெஷல் டாட்டூ மை உருவாக்கினோம்.

தெளிந்த வெள்ளைச் சேலை வாங்கி, 
ஆங்காங்கே கோத்த கொசுவத்தை நூலால் முடிச்சுப்போட்டு சாயத்தில் முக்கிக் காயப்போட்டு, பிறகு நூல் முடிச்சுகளை அவிழ்த்தால், ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகளுடன் 18-ம் நூற்றாண்டுச் சாயலில் சேலைகள் கிடைக்கும். இப்படி ஆராய்ச்சி ப்ளஸ் உழைப்புடன் அரவானுக்காக நாங்களே தயார் செய்த விஷயங்கள் ஏராளம். இதுபோக, படப்பிடிப்புக் கால சவால்கள் தனி அத்தியாயம்!''

 சி பி - படம் ரிலீஸ் ஆன பிறகு எல்லாருக்கும் என்னென்னெ சவால் இருக்கோ? அவ்வ்வ்வ்