Showing posts with label டி.ராஜேந்தர். Show all posts
Showing posts with label டி.ராஜேந்தர். Show all posts

Wednesday, September 02, 2015

‘இது நம்ம ஆளு’-மாமனார் டி ஆர் க்கும் ,மருமகள் நயன் தாரா க்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பாக்குது

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா
'இது நம்ம ஆளு' படத்தின் 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்திருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'இது நம்ம ஆளு'. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்து வருகிறார்.
'வாலு' வெளியீட்டு பணிகள் முடிந்தவுடன், 'இது நம்ம ஆளு' படத்தின் 2 பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு சார்பில் தெரிவித்திருந்தார்கள்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில் டி.ராஜேந்தர் தெரிவித்திருப்பது, "என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது.
‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் (செப்டம்பர்) ஐந்து நாட்களும், அடுத்த மாதம் (அக்டோபர்) ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார்.
பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம். நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்.
நயன்தாராவிடம், சிம்பு ‘கால்ஷீட்’ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தைப் பொருத்தவரை சிம்பு நடிகர்தான். அவர் மீது வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.” என்று அப்புகாரில் டி.ஆர் தெரிவித்திருக்கிறார்.


நன்றி -த இந்து

Wednesday, August 12, 2015

தன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது.......

'வாலு' படத்துக்கு விஜய்யின் தார்மீக ஆதரவு பெரிய உதவியாக இருந்தது என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 14ம் தேதி 'வாலு' படத்தை வெளியிட இருப்பதால், செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி.ராஜேந்தர். அச்சந்திப்பில் டி.ஆர் பேசியது:
"சினிமா துறை எக்கச்சக்கமாக மாறியுள்ளது. படத்துக்கான மினிமம் கேரண்டி தொகையை தர திரையரங்க உரிமையாளர்கள் தயாராக இல்லை. எனவே விநியோகஸ்தர்கள் தான் அனைத்து பணத்தையும் செலவழிக்க வேண்டியுள்ளது.
நேற்று வரை ’’வாலு’’ தயாரிப்பாளருக்கு பணப் பிரச்சினை இருந்தது. ஒரு வழியாக அனைத்தையும் நாங்கள் சரிகட்டியுள்ளோம்.
எனக்கு நடிகர் விஜய்யின் பால் பெரிய மரியாதை உள்ளது. அவர் நல்ல இதயம் கொண்ட தமிழர். விஜய் எனது பெரிய ரசிகர் என்பதை அவரது நண்பர்கள் சிலர் மூலம் அறிந்து கொண்டேன். நானும் அவருக்கு உண்மையிலேயே ஒரு ரசிகன்.
சினிமாவைச் சேர்ந்த யாரும் எந்த உதவியும் செய்யாத போது, விஜய் தனது மேனேஜர் பிடி செல்வகுமார் மூலமாக ’வாலு’ படத்துக்கு உள்ள சிக்கல்களை கேட்டறிந்தார். அவரது தார்மீக ஆதரவு பெரிய உதவியாக இருந்தது. பிடி செல்வகுமார் மற்றும் கோவையைச் சேர்ந்த விநியோகர் சிவாவிடம் பேசி ’வாலு’ படம் எந்த சிக்கலுமின்றி வெளியாக உதவி செய்யச் சொன்னார்.
அவர்கள் இருவரும் விஜய்க்கு தூதுவர்களைப் போல. அவர்கள் என்னுடன் நேற்று இரவு வரை இருந்து அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவியாக இருந்தனர்.
நான் யாரையும் குற்றம் சாட்டப் போவதில்லை. அடிக்கடி படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுப்பது வழக்கம் தான். எனவே அவர்கள் இன்னொரு படத்துக்கு அதிக அரங்குகளை ஒதுக்கியுள்ளனர். சென்னையை தவிர மற்ற ஊர்களில் ’வாலு’ படம் பெரிய அரங்குகளில் வெளியாகும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் பல படங்களை வெளியிடத் திட்டங்கள் உள்ளன. எனக்கு விஜய் நடித்து வரும் 'புலி' படத்த்தின் சேலம் மற்றும் திருநெல்வேலி வெளியீடு உரிமையை வாங்க ஆசையும் உள்ளது" என்று பேசினார் டி.ராஜேந்தர்.

நன்றி - த இந்து

Tuesday, June 23, 2015

'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்?- டி.ராஜேந்தர் பதில்

'விழித்திரு' இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் பேசிய போது..
'விழித்திரு' இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் பேசிய போது..
'ரோமியோ ஜூலியட்' பட வெளியீட்டை தடுக்காதது ஏன் என 'விழித்திரு' இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் விளக்கம் அளித்தார்.
கிருஷ்ணா, வித்தார்த், தன்ஷிகா, பேபி சாரா, இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் வெங்கட்பிரபு, அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்க மீரா கதிரவன் இயக்கியிருக்கும் படம் 'விழித்திரு'. சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேவி திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்டு டி.ராஜேந்தர் பேசும்போது, "வாழ்க்கையில் தொலைஞ்சு போகுது என்று சொல்பவர்களால் ஜெயிக்கவே முடியாது. தொலைந்ததை எவன் ஒருவன் விடாமல் தேடிக் கொண்டிருக்கிறானோ அவன் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிப்பான். காதலில் தோற்றவன் தேடிக்கொண்டே இருந்தால், தேடிக் கொண்டே இருப்பான். அது ஒரு தேடல். கடமைக்காக போராடிவிட்டு ஈழத்தை இன்றைக்கு வரைக்கும் தேடிக்கிட்டே இருக்கிறானே. அதே போல தான், தேடிக் கொண்டே இருந்தால் தேடல் ஒரு நாள் கிடைக்கும். அந்த விடியல் ஒரு நாள் பிறக்கும்.
அந்த தேடல் என்ற உணர்வுமிக்கவனாக, இந்த படத்திலே மீரா கதிரவனிடம் இருந்த அந்த துடிப்பைப் பார்த்து மட்டும் தான் இப்படத்தில் நான் பாடினேன். 'ரோமியோ ஜூலியட்' பட இயக்குநர் லஷ்மன் தன்னை என்னுடைய ரசிகர் என்று சொன்னார். படத்திலே ஜெயம் ரவியை என் ரசிகராக காட்டியிருந்தார். என்னுடைய உரிமையை பெறாமல் பயன்படுத்திய என் வசனத்தை வெட்டி விட்டேன். பாட்டைக் கூட வெட்ட வேண்டும் என்றால் வெட்டி இருக்கலாம். ஆனால், அந்த பாட்டை என் உயிராக நினைக்கிறேன் என்று இயக்குநர் லஷ்மன் மற்றும் ஜெயம் ரவி தெரிவித்தார்கள்.
ஒரு தயாரிப்பாளரை புண்படுத்த வேண்டாம் என்று சங்கத் தலைவர் தாணுவும் கேட்டார். தயாரிப்பாளர் கஷ்டப்படக்கூடாது என்று தான் அப்பாட்டை பெருந்தன்மையோடு விட்டேன்.
’அரைச்ச மாவை அரைப்போமா’ என்று இயக்குநர் பேரரசு எழுதிய பாட்டு 'வல்லவன்' படத்தில் இடம்பெற்றது. அப்பாடல் மூலமாக என்னுடைய மகன் சிம்பு இந்த தலைமுறைக்கு என்னைக் கொண்டு சேர்ந்துவிட்டார். என்னுடைய படத்திற்கு மட்டும் பாட்டு எழுதிவிட்டு, யாருடைய படத்திற்கு போய் எழுதாதவன் நான். இயக்குநர் கேட்டுக் கொண்டதற்காக 'விழித்திரு' படத்தில் எழுதினேன்.
எனக்கு இனிமேல் வெளிச்சம் எல்லாம் தேவையில்லை. யாராவது இருளில் இருந்தால், அவர்களுக்கு என்னுடைய வெளிச்சத்தை காட்டி, அவர்களுக்கு வெளிச்சம் தர வேண்டும் என நினைக்கிறேன். ஒரு நாள் இரவில் ஒரு கதையைச் சொல்ல முடியும் என்ற இந்தப் படத்திற்கு, நான் ஒரு சின்ன மெழுகுவர்த்தியாக இருக்க வேண்டும் என இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். " என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

thanx - the hindu 

Monday, April 20, 2015

'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு ! அடங்கொன்னியா

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இமான், அனிருத், தயாரிப்பாளர் நந்தகோபால், பாடலாசிரியர் ரோகேஷ் ஆகியோருக்கு டி.ராஜேந்தர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அறிமுக இயக்குநர் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ரோமியோ ஜுலியட்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்காக 'டன் டணக்கா' என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். அப்பாடலை ரோகேஷ் எழுதியிருக்கிறார்.
ஏற்கனவே இப்பாடலுக்கு டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் கூறியிருப்பது:
"சென்னையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் தயாரிக்கும் படம் 'ரோமியோ ஜூலியட்'. படத்தின் இயக்குனர் லட்சுமணன். இசையமைப்பாளர் டி. இமான். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்-‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று ஆரம்பமாகிறது. இந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை காப்பியடித்து, ‘இமிடேட்’ செய்து பாடியிருக்கிறார்.
பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம் அவர் குரலிலேயே ஒலிக்கிறது. இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.
இது, பல ஆண்டுகளாக பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனிநடை ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், ‘காபிரைட்’ உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள் என்று டி.ராஜேந்தர் சார்பில் வாரான் அண்ட் சாய்ராம்ஸ் நிறுவனம் (வழக்கறிஞர்கள் தியாகேஸ்வரன், ராமகிருஷ்ணன்) வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இதே பாட்டும், பதிவு செய்யப்படும் காட்சிகளும் ‘யூ ட்யூப்’ தளத்திலும், சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டுள்ளது (ஆடியோ_வீடியோ வடிவில்). படம் திரையிடப்படுவதற்கு முன்னால் இப்படி ஒரு வெளியீடு ‘பெருமைக்குரிய’ என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இந்தச் செயலுக்காக, சட்டத்துக்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் முறையான அனுமதியில்லாமல் அவர் பெயரையும், இமேஜையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தர வேண்டும்.
மேலும் யூ ட்யூப், சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


நன்றி- த இந்து

  • N Krishnamoorthy  
    இலவச விளம்பரம்
    Points
    36600
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • ALFONS  
      எங்க தல எங்க தல டி ஆர் ரூஊஉ
      Points
      440
      about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Ganesan  
        தமிழ்நாட்டில் கற்பனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது!பழையபடத்தின் தலைப்பை காப்பியடிப்பது, ரீமிக்ஸ் என்ற பெயரில் மக்கள் மனம் கவர்ந்த பாடல்களை கொலை செய்வது, பாடல் எழுத தெரியாமல் ஐய்யயோ ஐயையோ என கூப்பாடு போடுவது கர்நாடக,இந்துஸ்தானி ராகங்களில் மெட்டு போட தெரியாமல் ஆங்கில பாணியில் கூச்சல் இடுவது என தமிழ் திரையுலகம் அழிவை நோக்கி நடை போடுகிறது!!
        Points
        630
        about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Senthil  
          உண்மை தான் கேலி நடவடிக்கைகளை இது போல தட்டிக் கேட்காவிட்டால் இதுவும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள் டி ராஜேந்தர் தன் படங்களில் இப்படித்தான் மூத்த கலைஞர்களை கேலி செய்தாரா ? இல்லையே ! எதற்கும் ஒரு அளவு இருக்கிறது இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும் இனி இப்படி முயற்சி செய்பவர்களுக்கு
          about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Shree Ramachandran  
            அற்பத்தனமான செய்தி. அதற்க்கு இந்த பத்திரிகை இலவச விளம்பரம் கொடுக்கிறது.
            Points
            3465
            about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Gnanasekaran  
              இவர்கேட்பதிலும் நியாம் இருக்கத்தான் செய்கிறது. ஒருவருடைய பொருளை எடுத்து மற்றவர்கள் காசு பார்க்கும்போது அந்த பொருளுக்கு உரியவருக்கு நிச்சயம் மனசங்கட்டம் வரத்தானே செய்யும். அதனால் திரு டி ஆர் சொல்வது நியாயமே.
              Points
              3915
              about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • R.M.Manoharan Manoharan  
                டி.ஆருக்கு பேரும்கிடையாது இமேஜும் கிடையாது. அவருடைய படமெல்லாம் எப்போவோ டப்பாவுக்குள் போய் விட்டது. அவருடைய டண்... டணக்கா பாடல் என்ன பெரிய புரட்சிகரமான கருத்துக்களையும், இலக்கிய சொற்றொடர்களையும் கொண்டதா? விலாசமற்ற ராஜேந்தர் விளம்பரத் திற்காக அலைகின்றார். இந்த வழக்கு விசாரணைக்கு வரவேண்டும், ராஜேந்தர் முகத்தில் கோர்ட் நிச்சயம் கரிபூசும். .
                Points
                7325
                about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                PonrajPethanan  Up Voted
                • Prabhu  
                  டன் டணக்கா என்ற வார்த்தைக்கு இவர் காபி ரைட் வங்கி இருக்கிறாரா.... அய்யகோ இது தெரியாமல் நான் பல முறை சொல்லி இருக்கிறேனே? என் மீது வழக்கு போடுவாரோ? பயமாக இருக்கிறது,,,,,
                  Points
                  520
                  about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                  PonrajPethanan  Up Voted
                  • Kilikkaadu  
                    அட..திள்ளண்டோம்மாரிடப்பங்குத்து ஆட்டம் ஆடுவேன்..பாட்டு பாடுவேன்..அஜக் தா..அஜக் தா..
                    Points
                    1040
                    about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Sangili Karuppan  
                      அடுத்து t ராஜேந்தர் கு மதிப்பே இருக்காது
                      about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                      • LINGESH  
                        அதென்ன வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்". ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடுக்கப்படும் வழக்கிற்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் செலவாகுமா?