Showing posts with label அனிருத். Show all posts
Showing posts with label அனிருத். Show all posts

Saturday, July 18, 2015

மாரி - மாஸ் ஹிட்டா? மீடியமா? சொதப்பலா?-மக்கள் கருத்து

தனுஷ் நடிப்பில் 'தர லோக்கல்' படம் என்ற அறிவிப்பு, 'காதலில் சொதப்புவது எப்படி?', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் மூன்றாவது படம் என்ற இந்த இரண்டு காரணங்களே மாரி படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
'மாரி' ரசிகர்களின் மனதை மகிழ வைத்ததா? 'வேலையில்லா பட்டதாரி', 'அனேகன்' படங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆகி இருக்கும் மாரி, தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?
'மாரி' டைட்டில் போடும்போதும், தனுஷ் பெயரை போடும்போதும் தியேட்டரில் விசில் தெறிக்கிறது. எழுந்து நின்று ரசிகர்கள் கொடுக்கும் அப்ளாஸ் தியேட்டரையே அதிர வைத்தது.
சென்னையில் லோக்கல் டானாக இருக்கிறார் மாரி (தனுஷ்). சின்ன சின்ன அட்ராசிட்டிகள், அலப்பறைகள் செய்பவரை போலீஸ் முக்கிய குற்றவாளியாக கைது செய்கிறது. அதற்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் தனுஷ் என்ன செய்கிறார்? என்பது 'மாரி' கதை.
லோக்கல் டான் 'மாரி' கேரக்டருக்கு தனுஷ் அவ்வளவு பொருத்தம். அறிமுகக் காட்சியில் டான்ஸ் பீட்டில் ஆடும்போது அதகளம் செய்கிறார்.
ஸ்லோமோஷனில் நடந்து வருவது, ரஜினி பாணி ஸ்டைல் காட்டுவது, டான்ஸில் பின்னிப் பெடல் எடுப்பது, ஏரியா ஜனங்களிடம் இம்சை செய்வது, சின்ன சின்ன சேட்டைகளில் ஈடுபடுவது, சண்டைக் காட்சியில் காட்டும் வேகம், புறாக்களிடம் காட்டும் பாசம், எமோஷன் காட்சிகள், என தன்னை ஒரு நடிகனாக நிரூபித்திருக்கிறார்.
''இவ்ளோ டிவி இருக்குது. ஒரு டிவில கூட ஏன் இந்தியா ஜெயிக்கலை?''
''கலப்படமான நல்லவனா இருக்குறதை விட, சுத்தமான கெட்டவனா இருக்குறதே மேல்.''
''ஒருத்தன் தூங்கிட்டு இருக்கும்போது ஒரு கொசு வந்து கடிச்சுதுன்னு வெச்சுக்கயேன். அந்த கொசு பெரிய ஆள் ஆகிடாது. ஒரு நாள் முழிச்சிக்கினு இருக்க சொல்ல கடிக்கும்போது, பட்னு அடிச்சா பொட்னு போய்டும். ஒரு நாள்...''
இப்படி பன்ச் பேசும்போது தனுஷ் ஸ்கோர் செய்கிறார்.
ரோபோ ஷங்கரை அருகில் அழைத்து கலாய்க்குறியா? என்று கேட்பது, விஜய் ஜேசுதாஸிடம் நல்லா பண்ற என்று சொல்வது, செஞ்சிருவேன் என்று கை நீட்டி விரல்களை திருப்பி சொல்வது என தனுஷ் தூள் கிளப்புகிறார்.
ரோபோ ஷங்கர் கிடைத்த இடங்களில் கேப்பில் கெடா வெட்டி வெடித்து சிரிக்க வைக்கிறார். காஜல் அகர்வால் போலீஸ் ஸ்டேஷன் போகப் போவதாக சொல்ல, அடுத்த கலெக்‌ஷனே அங்கேதான் என்கிறார்.
''அந்தப் பொண்ணுக்கு கரெக்ட் நீ இல்லைன்னு எங்களுக்குத் தெரியுது. அந்த பவுடர் மூஞ்சிக்கு தெரியலையே.''
''பார்த்தவே பிடிக்கலை. பார்க்க பார்க்க பிடிக்குமா?'' என்று தனுஷையே கலாய்க்கும் அளவுக்கு ஸ்கோர் செய்கிறார்.
தமிழும் ஆங்கிலமும் கலந்து ரோபோ ஷங்கர் கொடுக்கும் கவுன்டர்களுக்கும், உடல் மொழிக்கும் தியேட்டர் அதிக அளவில் குலுங்கியது.
முதல் பாதி முழுக்க ரோபோ ஷங்கருக்கு கொடுத்த முக்கியத்துவத்துக்காக இயக்குநரையும், அதற்கு இடம் தந்ததற்காக தனுஷையும் பாராட்டலாம்.
'பேர்ட்' ரவியாக வரும் மைம் கோபி, வேலுவாக வரும் சண்முக ராஜா, அடிதாங்கியாக வரும் கல்லூரி வினோத் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனாக அறிமுகம் ஆகியிருக்கும் விஜய் ஜேசுதாஸ் பேசும்போது மட்டும் வாயில் பாக்கை போட்டு கொதப்பிய மாதிரியே பேசுகிறார். இன்னும் நடிக்க முயற்சித்திருக்கலாம்.
காஜல் அகர்வாலுக்கு பெரிதாக ஏதும் வேலையில்லை. ஒரு காட்சி மூலம் படத்தை நகர்த்த உதவுகிறார். மற்றபடி வந்து போகிறார் அவ்வளவே.
அனிருத் இசையில் மாரி நல்ல மாரி, டானு டானு, தப்பாதான் தெரியும் ஆகிய மூன்று பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் சென்னை ஏரியா முழுக்க பளிச்சிடுகிறது. பிரசன்னாவின் எடிட்டிங் கட்டிங் ஓஹோ என சொல்ல வைக்கிறது.
தர லோக்கல் படத்துக்கான எல்லா முகாந்திரங்கள் இருந்தும் படத்தின் கதையோ, திரைக்கதையோ பெரிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை.
ஜாலியாக நகரும் முதல் பாதி, சரியான நேரத்துக்காக காத்திருந்து பழிவாங்கும் இரண்டாம் பாதி என்று வழக்கமான கமர்ஷியல் சினிமாவில் பேக்கேஜ் கொஞ்சம் குறைவு தான்.
தனுஷின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் ரசிக்க வைக்கிறது. அந்த ஸ்க்ரீன் பிரசன்ஸ் முன்னால் மெயின் வில்லன்கள் காணாமல் போய்விடுவதும் திரைக்கதைக்கு சுவாரசியத்தைக் கூட்டவில்லை.
எனினும், இந்த மசாலா 'மாரி'யை - தனுஷ் ரசிகர்கள் சூப்பர்னு தான் சொல்வாங்க. தனுஷ் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம்; திருப்தியைக் கொடுக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு..?
'காதலில் சொதப்புவது எப்படி?', 'வாயை மூடி பேசவும்' படங்கள் மூலம் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்ட இயக்குநர் பாலாஜி மோகனுக்கு..?
மாரி - கொஞ்சம் ஸாரி தான்!

நன்றி -த இந்து

  • Venugopal S  
    ரோபோ சங்கரை நன்றாக பயன் படுத்தி இருக்கிறார்கள். அவரும் அதில் ஸ்கோர் செய்கிறார். டிவி நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள படக்குழுவினர் பாரட்டிற்கு உரியவர்கள்..இடைவேளைவரை இருந்த வேகம் அதற்க்குபின்பும் இருந்திருந்தால், திரு.பாலாஜி மோகன் "ஹாட்ரிக்" அடித்துப்பார்.என் செய்வது ? இருப்பினும் திரு.தனுஷின் பண்பட்ட நடிப்பிற்க்காக ஒருமுறை திரை அரங்கிற்கு சென்று பார்க்கலாம்.
    about 6 hours ago
     (0) ·  (0)
     
    • SShankar  
      விஜய் போன்றவர்கள், நடிப்பில் சுத்த ஜீரோ ,சூபர் ஸ்டார் என்றால், தனுஷ் பரவ இல்லை நடிக்கவாவது செய்கிறார். ஆனால் படம் மொக்கை.இது அஜித் அல்லது விக்ரமுக்கு தோதான கதை.
      Points
      20680
      about 7 hours ago
       (1) ·  (4)
       
      Manikandan Up Voted
      Kmag · NELLAI · Sundar · Kombaiah Down Voted
      • SSundar  
        அஜித், விக்ரம் கைதேர்ந்த நடிகர்கள், விஜயின் நடிப்பும் இப்போது மெருகு எரிவருகிறது. ஆகையால் மொக்கை படத்தை இந்த முன்னணி நடிகர்களோடு ஒப்பிடாதீர்கள்.
        about 5 hours ago
         (0) ·  (0)
         
      • PParthi  
        செஞ்சுரிவேன் செஞ்சுரிவேணு சொல்லி படம் பாக்க வந்தவங்கள வெச்சி செஞ்சுட்டாரு .ஒரே ஆறுதல் ரோபோ சங்கர் தான்
        Points
        3100
        about 9 hours ago
         (0) ·  (0)
         
        • AAnandan  
          படம் சூப்பர். பார்க்கலாம். வர வர தனுஷ் நடிப்பு மெருகேறி வருகிறது. வெல்டன் திரு தனுஷ்.
          Points
          6365
          about 11 hours ago
           (0) ·  (0)
           
          • KKishore  
            movie average....
            about 19 hours ago
             (0) ·  (0)
             
            • GKG K  
              பதிரிகைக்காகவா படம் எடுக்கறாங்க. அப்பப்ப ரசிகர்களுக்கவும் படம் எடுக்கணும் சாமி.
              Points
              450
              about 20 hours ago
               (0) ·  (0)
               
              • Andy Andu  
                மாரி படம் டைரக்ட் பண்ணது பாலாஜி மோகனா இல்ல தனுசா.....தமிழ் நாட்ல ஹீரோ க்கு பில்டப் வேணும் தான்... ஆனா ஓவரா பில்டப் பண்றது தேவ இல்ல ...என்ன தனுஷ் சார் .. நல்ல படம் பண்ற நீங்க ...சீன் க்கு சீன் .. நான் சூப்பர் ஸ்டார் மருமகன் .. னு prove பண்றீங்களே ...நான் உங்க நல்ல படத்துக்கு ரசிகன் ...இது மாதிரி படத்துக்கு உங்கள் அறிவுரையாளன் ...நன்றி .. (பி.கு: இது தனுசின் தீவிர ரசிகனுக்கு பொருந்தாது ..எனவே மன்னிக்கவும் நண்பா ...)

              Monday, April 20, 2015

              'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு ! அடங்கொன்னியா

              ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இமான், அனிருத், தயாரிப்பாளர் நந்தகோபால், பாடலாசிரியர் ரோகேஷ் ஆகியோருக்கு டி.ராஜேந்தர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
              அறிமுக இயக்குநர் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ரோமியோ ஜுலியட்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்காக 'டன் டணக்கா' என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். அப்பாடலை ரோகேஷ் எழுதியிருக்கிறார்.
              ஏற்கனவே இப்பாடலுக்கு டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் கூறியிருப்பது:
              "சென்னையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் தயாரிக்கும் படம் 'ரோமியோ ஜூலியட்'. படத்தின் இயக்குனர் லட்சுமணன். இசையமைப்பாளர் டி. இமான். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்-‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று ஆரம்பமாகிறது. இந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை காப்பியடித்து, ‘இமிடேட்’ செய்து பாடியிருக்கிறார்.
              பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம் அவர் குரலிலேயே ஒலிக்கிறது. இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.
              இது, பல ஆண்டுகளாக பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனிநடை ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், ‘காபிரைட்’ உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள் என்று டி.ராஜேந்தர் சார்பில் வாரான் அண்ட் சாய்ராம்ஸ் நிறுவனம் (வழக்கறிஞர்கள் தியாகேஸ்வரன், ராமகிருஷ்ணன்) வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
              இதே பாட்டும், பதிவு செய்யப்படும் காட்சிகளும் ‘யூ ட்யூப்’ தளத்திலும், சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டுள்ளது (ஆடியோ_வீடியோ வடிவில்). படம் திரையிடப்படுவதற்கு முன்னால் இப்படி ஒரு வெளியீடு ‘பெருமைக்குரிய’ என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.
              இந்நிலையில், இந்தச் செயலுக்காக, சட்டத்துக்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் முறையான அனுமதியில்லாமல் அவர் பெயரையும், இமேஜையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தர வேண்டும்.
              மேலும் யூ ட்யூப், சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


              நன்றி- த இந்து

              • N Krishnamoorthy  
                இலவச விளம்பரம்
                Points
                36600
                about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                   
                • ALFONS  
                  எங்க தல எங்க தல டி ஆர் ரூஊஉ
                  Points
                  440
                  about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • Ganesan  
                    தமிழ்நாட்டில் கற்பனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது!பழையபடத்தின் தலைப்பை காப்பியடிப்பது, ரீமிக்ஸ் என்ற பெயரில் மக்கள் மனம் கவர்ந்த பாடல்களை கொலை செய்வது, பாடல் எழுத தெரியாமல் ஐய்யயோ ஐயையோ என கூப்பாடு போடுவது கர்நாடக,இந்துஸ்தானி ராகங்களில் மெட்டு போட தெரியாமல் ஆங்கில பாணியில் கூச்சல் இடுவது என தமிழ் திரையுலகம் அழிவை நோக்கி நடை போடுகிறது!!
                    Points
                    630
                    about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Senthil  
                      உண்மை தான் கேலி நடவடிக்கைகளை இது போல தட்டிக் கேட்காவிட்டால் இதுவும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள் டி ராஜேந்தர் தன் படங்களில் இப்படித்தான் மூத்த கலைஞர்களை கேலி செய்தாரா ? இல்லையே ! எதற்கும் ஒரு அளவு இருக்கிறது இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும் இனி இப்படி முயற்சி செய்பவர்களுக்கு
                      about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                      • Shree Ramachandran  
                        அற்பத்தனமான செய்தி. அதற்க்கு இந்த பத்திரிகை இலவச விளம்பரம் கொடுக்கிறது.
                        Points
                        3465
                        about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                        • Gnanasekaran  
                          இவர்கேட்பதிலும் நியாம் இருக்கத்தான் செய்கிறது. ஒருவருடைய பொருளை எடுத்து மற்றவர்கள் காசு பார்க்கும்போது அந்த பொருளுக்கு உரியவருக்கு நிச்சயம் மனசங்கட்டம் வரத்தானே செய்யும். அதனால் திரு டி ஆர் சொல்வது நியாயமே.
                          Points
                          3915
                          about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                          • R.M.Manoharan Manoharan  
                            டி.ஆருக்கு பேரும்கிடையாது இமேஜும் கிடையாது. அவருடைய படமெல்லாம் எப்போவோ டப்பாவுக்குள் போய் விட்டது. அவருடைய டண்... டணக்கா பாடல் என்ன பெரிய புரட்சிகரமான கருத்துக்களையும், இலக்கிய சொற்றொடர்களையும் கொண்டதா? விலாசமற்ற ராஜேந்தர் விளம்பரத் திற்காக அலைகின்றார். இந்த வழக்கு விசாரணைக்கு வரவேண்டும், ராஜேந்தர் முகத்தில் கோர்ட் நிச்சயம் கரிபூசும். .
                            Points
                            7325
                            about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                            PonrajPethanan  Up Voted
                            • Prabhu  
                              டன் டணக்கா என்ற வார்த்தைக்கு இவர் காபி ரைட் வங்கி இருக்கிறாரா.... அய்யகோ இது தெரியாமல் நான் பல முறை சொல்லி இருக்கிறேனே? என் மீது வழக்கு போடுவாரோ? பயமாக இருக்கிறது,,,,,
                              Points
                              520
                              about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                              PonrajPethanan  Up Voted
                              • Kilikkaadu  
                                அட..திள்ளண்டோம்மாரிடப்பங்குத்து ஆட்டம் ஆடுவேன்..பாட்டு பாடுவேன்..அஜக் தா..அஜக் தா..
                                Points
                                1040
                                about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                • Sangili Karuppan  
                                  அடுத்து t ராஜேந்தர் கு மதிப்பே இருக்காது
                                  about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                  • LINGESH  
                                    அதென்ன வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்". ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடுக்கப்படும் வழக்கிற்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் செலவாகுமா?