18/7/2025 முதல் ஜீ 5 ல் வெளியான வெப் சீரிஸ் மீடியாக்களின் பாசிட்டிவ் விமர்சனங்களையும் , பொது மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்று வருகிறது .அறிமுக இயக்குனர் பாலாஜி செல்வராஜ் ஸ்டார் வேல்யூவை நம்பாமல் திரைக்கதையை நம்பி இயக்கி இருக்கும் வெப் சீரிஸ் இது .மிக யதார்த்தமான திரைக்கதை நம்மைக்கட்டிப்போடுகிறது . மொத்தம் 7 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் தலா 20 நிமிடங்கள் என்ற டைம் ட்யுரேஷனில் 140 நிமிடங்களில் ஒரு சினிமாப் படம் அளவு மட்டும் நீளம் கொண்டதாக இருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு வக்கீல் , ஆனால் கோர்ட்டில் அவர் இதுவரை வாதாடியதே இல்லை .கோர்ட் வாசலில் நோட்டரி பப்ளிக் ஆக டாகுமெண்ட் டைப் பண்ணித்தரும் ஆளாக இருக்கிறார் .இவருக்கு வீட்டிலும் பெரிய மரியாதை இல்லை, கோர்ட் வளாகத்திலும் இல்லை . டீன் ஏஜ் மகனும் ,மகளும் உண்டு பலரின் கேலி,கிண்டலுக்கு ஆளான இவருக்கு ஒரு பொது நலக்கேஸில் கோர்ட்டில் வாதிடும் வாய்ப்பு உருவாகிறது . அதில் அவர் வெற்றி அடைந்தாரா? என்பது தான் கதை
குப்புசாமி என்ற நபர் தன மகளை யாரோ கடத்திக்கொண்டு போய் விட்டனர் என போலீசில் புகார் தருகிறார் . ஆனால் போலீஸ் அதைக்கண்டு கொள்ளவே இல்லை .இதனால் மனம் வெறுத்த அவர் கோர்ட் வாசலில் தீக்குளித்து இறக்கிறார் . அவரது மரணத்துக்கு நியாயம் கேட்டு நாயகன் போராடுவதுதான் திரைக்கதை
நாயகன் ஆக பருத்தி வீரன் புகழ் சித்தப்பு சரவணன் அருமையான குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார் மகனிடம் அவமானப்படும்போதும் , கோர்ட்டில் வாதிடும்போதும் ஜொலிக்கிறார்
நாயகி ஆக நாயகிக்கு உதவி வக்கீல் ஆக அவரது மகள் போல் வரும் நம்ரிதா நடிப்பு பிரமாதம் .குரலும் , முக வசீகரமும் செம . ஆனால் சில இடங்களில் மட்டும் ஜோதிகா மாதிரி ஓவர் ஆக்டிங்க்
குப்புசாமியாக வரும் சண்முகம் நடிப்பு கலங்க வைக்கிறது . உருக்கமான நடிப்பு .குப்புசாமியின் மகள் வெண்ணிலாவாக வரு இனியா ராம் சோகக்காட் சிகளில் சுடர் விடுகிறார்
குப்புசாமியின் மனைவி வள்ளி ஆக வரும் விஜய ஸ்ரீ பிரமாதப்படுத்தி இருக்க வேண்டிய ரோல் . அனுபவமின்மை காரணமாக சுமாராகத்தான் நடித்திருக்கிறார் பெரும்பாலும் புதுமுகங்கள் தான் நடித்திருக்கிறார்கள்
அரசுத்தரப்பு வக்கீல் ஆக வரும் ஆரோனின் வில்லத்தனம் அருமை
விபின் பாஸ்கரின் பின்னணி இசை அருமை . தீம் இசை கலக்கல் ரகம் .திரைக்கதை சூரியப்பிரதாப்
சபாஷ் டைரக்டர்
1 குப்புசாமி மனநலம் பாதிக்கப்பட்டு 22 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தவர் என்பது அறிந்து இந்தக்கேஸ் கோர்ட்டில் நிற்காது என கலங்கும் இடம் அருமை
2 குப்புசாமியின் மகள் காணாமல் போனது 27 வருடங்களுக்கு முன் என்பதும் அவர் காணாமல் போய் 5 வருடங்களில் அம்மாவிடம் ஒப்படைக்கப்பட் டார் என்பதும் தெரிய வந்ததும் இனி எப்படிக்கேஸை மூவ் செய்வது என்று தடுமாறும் இடம் அருமை
3 குப்புசாமியின் மனைவி இன்னொரு திருமணம் செய்து கொள்வதும் , மகள் வெண்ணிலாவை அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுவதும் திருப்பங்கள்
4 குப்புசாமியின் மகள் வெண்ணிலா வுக்கு என்ன ஆனது என்ற டிவிஸ்ட் குட்
5 கோர்டடில் நடக்கும் வாதங்கள் யதார்த்தம்
ரசித்த வசனங்கள்
1 என்னை மாதிரி பெய்லியர் கேஸ்க்கு கோபமும் ஆதங்கமும் எதுக்கு ?
2 எல்லாருக்கும் எல்லாம் வராது , ஒருத்தருக்கு இருக்கும் திறமை இன்னொருத்தருக்கு இருக்காது
3 மக்கள் மனசு வைத்தால் இந்த அரசாங்கம் மட்டும் அல்ல , ஆண்டவனால் கூட இந்த நிலத்தை எதுவும் செய்ய முடியாது
4 எல்லா இடங்களிலும் சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் நம் குரலுக்கு மரியாதை இருக்காது
5 நாம் பதட்டமா இருந்தா எதிரிக்கு டதைரியம் உருவாகும் , நாம அமைதியா, பொறுமையா , நிதானமா இருந்தா எதிரிக்கு பயம் வரும்
6 எமோஷன்ஸ்க்கு மதிப்பு இல்லை , எவிடென்ஸ் தான் முக்கியம்
7 நீங்க வாங்கும் லஞ்சப்பணம் தப்பு பண்ண மட்டும் இல்லை , மாட்டிக்காம இருக்கவும் தன
8 சட்டம் ஊருக்கு ஊர் மாறும் , ஆனா நீதி எல்லா இடங்களிலும் ஒன்று தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 குப்புசாமியின் மகள் வெண்ணிலாவின் வளர்ப்புத்தந்தையை சந்திக்கும் நாயகன் வெண்ணிலாவின் போட்டோ கொடுங்கள் எனக் கேட்கவே இல்லையே? கோர்ட்டில் ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டாமா?
2 கோர்ட் வாசலில் போலீஸ் யூ னிபார்முடன் அப்படியா பப்ளிக்காக லஞ்சம் வாங்குவார்கள்?
3 கவுன்சிலரின் மகன் ஒரு வில்லனாக உருப்படியாக எதுவும் செய்யவில்லை . ஈசியாக தப்பி இருக்கலாம்
4 சிவப்பு விளக்குப்பகுதியில் ஒரு விலை மாதிடம் விசாரிக்க வரும் நாயகன் விபரங்கள் கிடைக்கும் முன்பே பணத்தைத்தருவது எதனால் ?
5 போலியாக ஒரு வெண்ணிலா வை ஆஜர்படுத்த்தும் வில்லனின் ஐ டியா சொதப்பல் ரகம் . டி என் ஏ டெஸ்ட் காட்டிக்கொடுக்கும் என்பது தெரியாதா? ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - கிளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது ஒரு நிஜ சம்பவத்தின் உருவாக்கம் என சொல்லப்படுகிறது , நேர்த்தியான திரைக்கதை , மேக்கிங்க்காக பார்க்கலாம் .ரேட்டிங்க் 3 / 5

0 comments:
Post a Comment