Tuesday, December 07, 2010

சினிமாவில் ரஜினி போல் பதிவுலகில் நெம்பர் ஒன் ஆவது எப்படி?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy7MAEqX9sCzu7X51W_mWjrXZD_5-iNSwjHqvaufPyP7F8o-9obUODvJh0n8yvo87BHE_smUNg8TCwJ0mEVhqEYIsGZB4d4wS_RECuhzaQK6ciKTxpee0d0oLgA1B91zk04V_YgOwyG8k/s1600/Rajinikanth.jpg 
நெம்பர் ஒன் பதிவர் ஆவது எப்படி?

கோடம்பாக்கத்தில் ரஜினிதான் எப்பவும் நெம்பர் ஒன்னாக இருந்து வருகிறார்.
ஆனால் விஜய்,விஷால் போன்றவர்களுக்கு நெம்பர் ஒன் ஆசை வந்திருக்கிறது.அவரைப்போலவே பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி நம்மைக்கொன்னெடுக்கிறாங்க. பதிவுலகிலும் இப்போது எல்லோருக்கும் நெம்பர் ஒன் ஆசை துளிர்விட்டிருக்கிறது.

நெம்பர் ஒன் பதிவர் ஆக சில குறுக்கு வழிகள்.

1.பைக்,ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் செய்யும் கடைக்கு
போகவும்,அங்கே நெம்பர் ஒன் பதிவர் எனும் நேம் பிளேட் ஆர்டர் செய்யவும்.
அதைக்கொண்டு வந்து வீட்டு வாசலிலோ ஆஃபீஸ் வாசலிலோ மாட்டிக்கொள்ளவும். பார்க்கறவங்க நீங்கதான் நெம்பர் ஒன் பதிவர் னு நம்பிடுவாங்க.

2.  மிட்நைட் 1 மணிக்கு அல்லது மதியம் 1 மணிக்கு பதிவு போடும்
   பழக்கத்தை வைத்துக்கொள்ளவும்.அட,இவரு (எவரு?) ரெகுலரா
ஒன் ஒ க்ளாக்கிற்கு பதிவு போட்றாரே,என சிலாகித்துப்பேசி,காலப்போக்கில்
நெம்பர் ஒன் பதிவர்  என அழைக்கப்படுவீர்.

3. டாக்டர்கள் தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்தால் மனித உடலுக்கு
  நல்லது என அட்வைஸ் பண்றாங்க.நீங்கள் இனிமேல் தினமும் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.இதுல  2 மாங்கா அடிக்கலாம். 1.உடல்ல கிட்னில கல் வராது 2,அடிக்கடி நெம்பர் ஒன் போக பாத்ரூம் போவீங்க..அப்போ நீங்க
நெம்பர் ஒன் பதிவர் என ஆட்டோமேட்டிக்கா,டாக்ஸிமேட்டிக்கா ஆகிடுவீங்க.


4.  நீஙக எந்த வேலைல இருந்தாலும் சரி,உடனே அதை ரிசைன் பண்ணிடுங்க..
   சொந்தத்தொழில் பண்றவரா இருந்தா அதை இழுத்து மூடிடுங்க.நமக்கு
 ஏதாவது ஒன்னுலதான் முழு கவத்தையும் வைக்க முடியும்.
முழு மூச்சா பதிவு போடறதைப்பற்றியே சிந்திக்கனும்.

5. நீங்க கல்யாணம் ஆனவரா?உடனே உங்க மனைவியை டைவர்ஸ்
பண்ணிடுங்க.ஏன்னா அவங்க நச்சரிச்சுட்டே இருப்பாங்க.எப்ப பாரு கம்ப்யூட்டர், நெட்தானா?குடும்பத்தை கவனிக்க மாட்டீங்களா? என டார்ச்சர் பண்ணீட்டே இருப்பாங்க.கல்யாணம் ஆகாதவரா?அப்போ கண்டிப்பா ஒரு லவ்வர் அல்லது பல லவ்வர் இருக்கும்.தமிழ்ப்படத்துல வர்ற மாதிரி (லேட்டஸ்ட் உதாரணம் சிக்குபுக்கு) உங்க காதலியை யாருக்காவது தாரை வார்த்து குடுத்துடுங்க.எந்தத்தொந்தரவும் இல்லாம இனி பதிவு போடலாம்.மனைவியை டைவர்ஸ் பண்ணிட்ட்டா சாப்பாட்டுக்கு?
நமக்கு சோறா முக்கியம் ? பேருதான் முக்கியம்.

6. யாரையாவது வம்புச்சணடைக்கு இழுக்கவும்.பிரபலமான பதிவர் தளத்துக்கு போகவும். அவங்க பதிவு எவ்வளவு சூப்பரா போட்டிருந்தாலும் அதைப்பற்றி எதுவும் சொல்லாம அவங்க பர்சனல் லைஃப் பற்றி ஏதாவது வம்பு இழுக்கவும்.பார்ட்டி கோபம் ஆகி உங்களைத்திட்டி ஒரு பதிவு போடுவார்.உங்க பிளாக்கிற்கு லிங்க்கும் கொடுப்பார்.இப்போ அவர் பிளாக் வர்ற ரெகுலர் ஆளுங்க நம்ம பிளாக்கும் வர ஆரம்பிப்பார்.

7.யாராவது உங்க பிளாக்கில் பதிவுக்கு கமெண்ட் போட்டா பொத்தாம் பொதுவாக  கமெண்ட் போட்ட 12 பேருக்கும் நன்றி என பின்னூட்டம் போட வேணாம்.தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் நன்றி என கமெண்ட் போடவும்.இதனால் நிறைய கமெண்ட் சேர்ந்து விடும்.அது உங்களை நெம்பர் ஒன் பிளாக்கர் ஆக்கி விடும்.
http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/ACTERSS/aishwarya-rai.jpg
8.உங்கள் பர்சனல் சேட்டிங்கை பின்னூட்டத்திலேயே நடத்தலாம்.யாராவது கமெண்ட் போட்டா அப்புறம் மாப்பு சாப்பிட்டியா?படத்துக்கு போலாமா என மொக்கை போடவும். அதைக்கண்டித்து யாராவது கமெண்ட் போட்டா மாட்டிக்கிச்சு பட்சி,அவரை திட்டி ஒரு பதிவு போடுங்கள்.பிரபலம் ஆகிடலாம்.

9.ஏதாவது ஒரு தமிழ் சினிமாவை வாய் கூசாமல் புகழவும்.அதில் நடித்த+
பங்கு பெற்றவர்கள் அனைவரும் உங்க பிளாக்கிர்கு வருவாங்க.ஹிட்ஸ் ஏறும்.

10. வே டூ ஃப்ரீ எஸ் எம் எஸ் . காம் போய் பதிவுலகில் உள்ள 1456 பதிவர்கள்
செல் நெம்பரையும் ஸ்டோர் பண்ணிக்கொள்ளவும்.பிறகு குரூப் மெசேஜ்
அனுப்பவும்.மாப்ளை  நான் வெளில இருக்கேன்,என் பிளாக் ஸ்டேட்டஸ் சொல்லுங்க என் மெசேஜ் அனுப்பவும்.அதில் 10% பேராவது உங்க பிளாக் போவாங்க 145 விசிட்டர்ஸ் எக்ஸ்ட்ராவா கிடைப்பாங்க.ஹிட்ஸ் அதிகம் ஆகும்.

11. சினிமா ஆனாலும் சரி அரசியல் ஆனாலும் சரி பெண்களின் கவனத்தை கவர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.உங்கள் பிளாக்கிற்கு பெண்களே வருவதில்லையா? (எப்படி வருவாங்க?பிட்டுபட விமர்சனம் போட்டா?) அவங்களை வர வைக்க ஒரு ஐடியா. உங்க பிளாக்கில் எஸ் கே அல்லது வந்தே மாதரம் சசி உதவியுடன் ஒரு கண்ணாடியை ஃபிக்ஸ் செய்யவும்.மேக்கப் போடவாவது வருவாங்க.

12.  தமிழனோட நாடித்துடிப்பே சாப்பாட்லதான் இருக்கு,வாரம் ஒரு சாப்பாடு பதிவு போடவும். அழையா விருந்தாளியாய் கல்யாண மண்டபத்துக்குபோய் ஓ சி சாப்பாடு சாப்பிட்ட அனுபவம் ஏதாவது எழுதவும்,பதிவு செம ஹிட் அகிடும்.

13. கிசு கிசுவை ரசிக்காத ஆட்களே இங்கே கிடையாது.சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சுருந்தாங்க?அந்த காரை வெச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்போ  யாரு வெச்சிருக்காங்க என்ற கரகாட்டக்காரன் காமெடி ஹிட் ஆனதை மனதில் நிறுத்திக்கொண்டு கோடம்பாக்கத்தில் யரு யாரை வெச்சிருகாங்க என புலனாய்வு செய்து ஒரு பதிவு போடவும்.
அடித்துப்பிடித்துக்கொண்டு ஆட்கள் வருவாங்க.சூப்பர் ஹிட் ஆகிடும் பதிவு

14.நாம் எல்லாத்தளங்களுக்கும் சென்று பின்னூட்டம் போட்டால்தான் அவர்கள் பதில் மொய்  வைக்க நம்ம பிளாக்கிற்கு வருவாங்க,ஆனா நமக்கு நேரம் கிடைக்காது,அதனால் ஒரு லேடியை 1000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு (மட்டும்) வைத்துக்கொள்ளவும்.உங்க யூசர் நேம்,  பாஸ்வோர்டு குடுத்து விடவும். 5 டெம்ப்ளேட் கமெண்ட் ரெடி பண்ணிக்கொள்ளவும்.
1.உங்க பதிவு சூப்பர்  2.ஆஹா அருமை.  3,சூப்பர் பதிவு தல  4.எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது? 5 ப்ளீஸ் விசிட் மை பிளாக்
மேலே சொன்ன கமெண்ட்ஸை போட்டு ஓட்டும் போட்டு வரவும்.ஒரு நாளில் 350 பின்னூட்டம்
போடலாம்.10 % திரும்பி வந்தாலே நமக்கு லாபம் தான்.

டிஸ்கி - மேலே சொன்னவை அனைத்தும் கேனத்தனமான ஐடியாக்களே.கண்ட நாய் பேச்சை  எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது.
நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.

127 comments:

ஜோதிஜி said...

அதிகாலை வந்த யோசனையா?

ப.கந்தசாமி said...

//டிஸ்கி - மேலே சொன்னவை அனைத்தும் கேனத்தனமான ஐடியாக்களே.கண்ட நாய் பேச்சை எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது.
நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.//

இப்படி சொல்லிப்பிட்டா எப்படி? பிரபல பதிவர் ஆகறது முக்கியமா? நிம்மதியான வாழ்க்கை முக்கியமா?
நான் பிரபல பதிவர் ஆகியே தீருவேன், அது எந்த நா* சொன்னாலும் சரி.

மாணவன் said...

செம கலக்கல் சார்
தொடருங்கள்.........

Unknown said...

நல்லாத்தான் இருக்கு. இதில் (நீங்க பிரபலமாவ) உள்குத்து ஒண்ணும் இல்லல்ல...

வெங்கட் said...

// நான் வெளில இருக்கேன்,என் பிளாக்
ஸ்டேட்டஸ் சொல்லுங்க என் மெசேஜ்
அனுப்பவும்.அதில் 10% பேராவது உங்க
பிளாக் போவாங்க 145 விசிட்டர்ஸ்
எக்ஸ்ட்ராவா கிடைப்பாங்க.ஹிட்ஸ் அதிகம் ஆகும். //

இனிமே போவியா..?
இனிமே போவியா..?

சி.பி. செந்தில் SMS பண்ணினார்னு
அவர் Blog Status பாக்க அடிக்கடி
அவர் Blog பக்கம் போவியா..?!

( ஒண்ணுமில்ல.. சுவத்துல முட்டிட்டி
எனக்கு நானே பேசிட்டு இருக்கேன்.. )

a said...

ஹா ஹா ஹா.......

Philosophy Prabhakaran said...

மூணாவது ஐடியா செம கலக்கல்... ஈசியாவும் இருக்கும்...

Philosophy Prabhakaran said...

ஐந்தாவது ஐடியா நிதர்சனம்...

Chitra said...

நமக்கு சோறா முக்கியம் ? பேருதான் முக்கியம்.


....புல்லரிச்சு போச்சு...... உங்கள் "கடமை" உணர்ச்சியை பாராட்டுறேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

Philosophy Prabhakaran said...

// பதிவுலகில் உள்ள 1456 பதிவர்கள் //
உண்மையான புள்ளிவிவரமா...

Philosophy Prabhakaran said...

சில ஐடியாக்கள் சீரியசாவும் இருக்கு...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இது நல்லாயிருக்கே

அன்பரசன் said...

அந்த 14 டாப் ரகம் போங்க..

pichaikaaran said...

With reference to point 5 , காதலியை தாரை வார்த்து கொடுக்க முடிவு செய்து விட்டீர்களா ? ஆனால் யாருக்கு கொடுப்பது என்ற குழப்பமா ? கவலை வேண்டாம் . அணுக வேண்டிய நபர்
ஹி ஹி

ILA (a) இளா said...

தொடர்ச்சியா பதிவு போடுங்க. அடுத்தவங்களுக்கு பின்னூட்டம் போடுங்க. போதும் 6 வருச அனுபவத்துல சொல்றேன்.

நண்பன் said...
This comment has been removed by a blog administrator.
R. Gopi said...

\\ஒரு கண்ணாடியை ஃபிக்ஸ் செய்யவும்.மேக்கப் போடவாவது வருவாங்க.\\

:)

நண்பன் said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...
This comment has been removed by a blog administrator.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

வெங்கட் said...

// நான் வெளில இருக்கேன்,என் பிளாக்
ஸ்டேட்டஸ் சொல்லுங்க என் மெசேஜ்
அனுப்பவும்.அதில் 10% பேராவது உங்க
பிளாக் போவாங்க 145 விசிட்டர்ஸ்
எக்ஸ்ட்ராவா கிடைப்பாங்க.ஹிட்ஸ் அதிகம் ஆகும். //

இனிமே போவியா..?
இனிமே போவியா..?

சி.பி. செந்தில் SMS பண்ணினார்னு
அவர் Blog Status பாக்க அடிக்கடி
அவர் Blog பக்கம் போவியா..?!

( ஒண்ணுமில்ல.. சுவத்துல முட்டிட்டி
எனக்கு நானே பேசிட்டு இருக்கேன்.. )////

நானும்தான் வெங்கட். எங்க வீட்டு சுவரே உடைஞ்சி போச்சு. மவனே இனி sms அனுப்பும்போது கவனித்து கொல்கிறேன்.,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கண்ட நாய் பேச்சை எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது. நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.//

நான் உங்களை கண்டதே இல்லையே. அப்டின்னா இதை பாலோ பண்ணலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி சிபி சார் நீங்க பத்திரிகை காரர்தான? சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சுருகாங்க ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பைக்,ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் செய்யும் கடைக்கு
போகவும்,அங்கே நெம்பர் ஒன் பதிவர் எனும் நேம் பிளேட் ஆர்டர் செய்யவும்.///

சைக்கிள் வச்சிருக்குரவங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யாரையாவது வம்புச்சணடைக்கு இழுக்கவும்.பிரபலமான பதிவர் தளத்துக்கு போகவும். அவங்க பதிவு எவ்வளவு சூப்பரா போட்டிருந்தாலும் அதைப்பற்றி எதுவும் சொல்லாம அவங்க பர்சனல் லைஃப் பற்றி ஏதாவது வம்பு இழுக்கவும்.///

யோவ் உனக்கு வேற வேலையே இல்லியா? இதெல்லாம் ஒரு பதிவுன்னு போடுறதுக்கு பேசாம பிளாக்கை இழுத்து மூடிட்டு போயிடலாம்.(அப்பாட பிரபல பதிவரை திட்டியாச்சு)

நண்பன் said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...
This comment has been removed by a blog administrator.
வைகை said...

சினிமாவில் ரஜினி போல் பதிவுலகில் நம்பர் ஒன் போவது எப்படி?!! அவசரத்துல இப்படி மாத்தி படிச்சிட்டேன் சிபி!! இதுக்கு எதுவும் பரிகாரம் இருக்கா? சதீஷ்கிட்ட கேட்டு சொல்லுங்க!!!

வைகை said...

தலைவர் டாகூட்டர அவமானப்படுத்திய சிபி ஒழிக!! பதிவர்களை கின்டலடித்த சிபி ஒழிக!! நானும் திட்டிட்டேன்!! எல்லாரும் பாத்துக்கங்க! நானும் பதிவர்தான்!! நானும் பதிவர்தான்!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரெண்டாவதா சொன்னது நம்ம சிரிப்பு போலீசை தானே..

எழாவதா சொன்னது என்னை தானே..

இம்சைஅரசன் பாபு.. said...

புது படம் ஒன்னும் இறங்கலன்னு இப்படி ஒரு பதிவ போட்டு ......எல்லோரையும் கொன்னுடீங்க

sathishsangkavi.blogspot.com said...

அனைத்தும் அருமையான ஐடியாக்கள்.. இதனால தான் நீங்க தமிழ்மணம் டாப்20ல இருக்கறீங்களா..

THOPPITHOPPI said...

இவ்வளவு டிப்ஸ் கொடுத்துட்டு எதுக்கு டிஸ்கில இப்படி போட்டிங்க

Unknown said...

ஐடியா கொடுக்கறதே நீங்கதான பாஸ், அப்புறம் டிஸ்கில ஏன் அப்படி போட்டீங்க? புரியலியே

karthikkumar said...

\\ஒரு கண்ணாடியை ஃபிக்ஸ் செய்யவும்.மேக்கப் போடவாவது வருவாங்க.\\
என்ன ஒரு கேவலமான எண்ணம். ஆணாதிக்கவாதி செந்திலை என்ன செய்யலாம்?... இதுதான் என் அடுத்த பதிவு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி - மேலே சொன்னவை அனைத்தும் கேனத்தனமான ஐடியாக்களே.கண்ட நாய் பேச்சை எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது.
நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.////

இத நெனச்சாத்தான் பயமா இருக்கு? நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு, ஏன் இப்பிடி ஒரு டிஸ்கி, நமக்கு ஏன் இந்த வெளம்பரம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் என்னய்யா இது என்பேருல எநத நாதாரியோ வெளையாடி இருக்கான்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது நீங்க நெ.1 ஆகுறதுக்குக் கண்டுபுடிச்ச வழின்னு சொல்லுங்க (எப்பூடி....?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பைக்,ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் செய்யும் கடைக்கு
போகவும்,அங்கே நெம்பர் ஒன் பதிவர் எனும் நேம் பிளேட் ஆர்டர் செய்யவும்.///

சைக்கிள் வச்சிருக்குரவங்க?////

நடந்து போறவங்க?

Venkat Saran. said...

கண்டிப்பா இதுல ஒன்ன நானும் பலோ பண்றேன் ... ஒரு சுறாவளி கிளம்பிடுச்சே ..

ஐயையோ நான் தமிழன் said...

ஹி....... ஹி... ஹி.....
நல்ல பதிவு.
நான் புதுசு இதை பாலோ பண்ணா முன்னுக்கு வந்திடலாமா அண்ணா?.......................

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இது நீங்க நெ.1 ஆகுறதுக்குக் கண்டுபுடிச்ச வழின்னு சொல்லுங்க (எப்பூடி....?)

வந்துச்சுனா போகவேண்டியதுதான கவுண்டரே

தினேஷ்குமார் said...

ஐயையோ நான் தமிழன் said...
ஹி....... ஹி... ஹி.....
நல்ல பதிவு.
நான் புதுசு இதை பாலோ பண்ணா முன்னுக்கு வந்திடலாமா அண்ணா?.......................

கண்டிப்பா வந்துவிடலாம் கலக்குங்கங்க

சசிகுமார் said...

//நீங்க கல்யாணம் ஆனவரா?உடனே உங்க மனைவியை டைவர்ஸ்
பண்ணிடுங்க.ஏன்னா அவங்க நச்சரிச்சுட்டே இருப்பாங்க.எப்ப பாரு கம்ப்யூட்டர், நெட்தானா?குடும்பத்தை கவனிக்க மாட்டீங்களா? என டார்ச்சர் பண்ணீட்டே இருப்பாங்க.கல்யாணம் ஆகாதவரா?அப்போ கண்டிப்பா ஒரு லவ்வர் அல்லது பல லவ்வர் இருக்கும்.தமிழ்ப்படத்துல வர்ற மாதிரி (லேட்டஸ்ட் உதாரணம் சிக்குபுக்கு) உங்க காதலியை யாருக்காவது தாரை வார்த்து குடுத்துடுங்க.எந்தத்தொந்தரவும் இல்லாம இனி பதிவு போடலாம்.மனைவியை டைவர்ஸ் பண்ணிட்ட்டா சாப்பாட்டுக்கு?
நமக்கு சோறா முக்கியம் ? பேருதான் முக்கியம்.//

சாமி உறுப்புட வழி சொல்லிவீங்கன்னு பார்த்தா கிடைக்கிற ஒருவேளை சோறும் உங்களுக்கு பிடிக்கலையா

Unknown said...

ஹா ஹ ஹா.. சூப்பர் போங்க..

Unknown said...

14 வது பாயிண்டுள சொன்னமாதிரி மொய் வைக்கறமாதிரிதான் ஆயிப்போச்சு..

Arun Prasath said...

நீஙக எந்த வேலைல இருந்தாலும் சரி,உடனே அதை ரிசைன் பண்ணிடுங்க..///

நீங்க எப்டி?

Arun Prasath said...

49

Arun Prasath said...

vadai vadai

Anonymous said...

பன்னிகுட்டி ராமசாமி,ராஜராஜ சோழன் பெயரில் வந்துள்ள பின்னூட்டங்கள்,ஏதோ ஒரு போலி....அவர்களுக்கும் மேலே இருக்கும் பின்னூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை

Anonymous said...

பன்னிகுட்டி ராமசாமி அன்னே இது எப்படி சாத்தியம்?உங்க மெயில் ஐடி ஹேக்கிங் செய்யப்பட்டதா?விளக்கம் ப்ளீஸ்

'பரிவை' சே.குமார் said...

செம கலக்கல்.

அருண் பிரசாத் said...

அட இப்படியா... ரகசியத்தை வெளிய சொல்லுவீங்க... நீங்கதான் எப்பவுமே நெ 1

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
பன்னிகுட்டி ராமசாமி அன்னே இது எப்படி சாத்தியம்?உங்க மெயில் ஐடி ஹேக்கிங் செய்யப்பட்டதா?விளக்கம் ப்ளீஸ் ////

இல்லை என் மெயில் ஐடி ஹேக் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் மேலே உள்ள போலி பெயரில் ப்ரொபைல் செக் பண்ணவும், வேறு என்னவோ காட்டுகிறது. !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம சிபி அகில ஓலக பிரபல பதிவராயிட்டு வராருன்னு நெனக்கறேன், மிரட்டல்கள் ரெகுலரா வருது!

சி.பி.செந்தில்குமார் said...

நம்ம சிபி அகில ஓலக பிரபல பதிவராயிட்டு வராருன்னு நெனக்கறேன், மிரட்டல்கள் ரெகுலரா வருது//
நீங்களும்தான்..மிரட்ட உங்க பேரைத்தானே யூஸ் பண்றாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
நம்ம சிபி அகில ஓலக பிரபல பதிவராயிட்டு வராருன்னு நெனக்கறேன், மிரட்டல்கள் ரெகுலரா வருது//
நீங்களும்தான்..மிரட்ட உங்க பேரைத்தானே யூஸ் பண்றாங்க////

ஹி.ஹி... சரி இவனுகள என்ன பண்ணலாம்?

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ஆர்.கே.சதீஷ்குமார் said...
பன்னிகுட்டி ராமசாமி அன்னே இது எப்படி சாத்தியம்?உங்க மெயில் ஐடி ஹேக்கிங் செய்யப்பட்டதா?விளக்கம் ப்ளீஸ் ////

இல்லை என் மெயில் ஐடி ஹேக் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் மேலே உள்ள போலி பெயரில் ப்ரொபைல் செக் பண்ணவும், வேறு என்னவோ காட்டுகிறது. !

கவுண்டரே நான் இப்பதான் செக் பண்ணேன் profil not available நு வருது

Unknown said...

நம்பர் ஒன்னாக வாழ்த்துக்கள் ...

செல்வா said...

// கிடைக்காது,அதனால் ஒரு லேடியை 1000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு (மட்டும்) வைத்துக்கொள்ளவும்.உங்க யூசர் நேம், பாஸ்வோர்டு குடுத்து விடவும். 5 டெம்ப்ளேட் கமெண்ட் ரெடி பண்ணிக்கொள்ளவும்.//

இது நல்லா இருக்கே ..!!

செல்வா said...

//அனுப்பவும்.மாப்ளை நான் வெளில இருக்கேன்,என் பிளாக் ஸ்டேட்டஸ் சொல்லுங்க என் மெசேஜ் அனுப்பவும்.அதில் 10% பேராவது உங்க பிளாக் போவாங்க 145 விசிட்டர்ஸ் எக்ஸ்ட்ராவா கிடைப்பாங்க.ஹிட்ஸ் அதிகம் ஆகும்.//

நீங்க இப்படித்தான் பண்ணுறீங்களா ..?

ம.தி.சுதா said...

ஆகா என்ன ஒரு கடமை உணர்ச்சி... வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

யாருக்கும் பதில் கருத்திடாத தங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

ம.தி.சுதா said...

ஆகா 50 வது சுடு சோறு.. இல்லை இல்லை வாக்கு..

Anonymous said...

சங்கவி சந்ரு கிட்ட பணம் வாங்கிட்டான் ...இனி அவனை நம்பாதிங்க ..,.

Anonymous said...

சங்கவி ஒரு சந்தர்ப்பவாதி

Anonymous said...

இனி யாரும் சங்கவியை நம்பாதிங்க

THOPPITHOPPI said...

என்னங்க பாஸ் உங்களை ஆளையே காணோம். உங்களை மூன்று முறை எதிர்ப்பார்த்தேன். ஏதாவது கோபமா?

சி.பி.செந்தில்குமார் said...

ஜோதிஜி said...

அதிகாலை வந்த யோசனையா?

HI HI ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

DrPKandaswamyPhD said...

//டிஸ்கி - மேலே சொன்னவை அனைத்தும் கேனத்தனமான ஐடியாக்களே.கண்ட நாய் பேச்சை எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது.
நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.//

இப்படி சொல்லிப்பிட்டா எப்படி? பிரபல பதிவர் ஆகறது முக்கியமா? நிம்மதியான வாழ்க்கை முக்கியமா?
நான் பிரபல பதிவர் ஆகியே தீருவேன், அது எந்த நா* சொன்னாலும் சரி.

ellaarum vaangka daaktar saar ennai waaynu thittittaar

எல்லாரும் வாங்க டாக்டர் என்னை நாய்னு திட்டிட்டார்

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

செம கலக்கல் சார்
தொடருங்கள்.........

பாகம் 2 போட்டுடலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கலாநேசன் said...

நல்லாத்தான் இருக்கு. இதில் (நீங்க பிரபலமாவ) உள்குத்து ஒண்ணும் இல்லல்ல...

ஹி ஹி ஹி லைட்டா

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

// நான் வெளில இருக்கேன்,என் பிளாக்
ஸ்டேட்டஸ் சொல்லுங்க என் மெசேஜ்
அனுப்பவும்.அதில் 10% பேராவது உங்க
பிளாக் போவாங்க 145 விசிட்டர்ஸ்
எக்ஸ்ட்ராவா கிடைப்பாங்க.ஹிட்ஸ் அதிகம் ஆகும். //

இனிமே போவியா..?
இனிமே போவியா..?

சி.பி. செந்தில் SMS பண்ணினார்னு
அவர் Blog Status பாக்க அடிக்கடி
அவர் Blog பக்கம் போவியா..?!

( ஒண்ணுமில்ல.. சுவத்துல முட்டிட்டி
எனக்கு நானே பேசிட்டு இருக்கேன்.. )

ஆஹா ,என்னையும் அறியாம உளறிட்டனோ

சி.பி.செந்தில்குமார் said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ஹா ஹா ஹா.......

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

மூணாவது ஐடியா செம கலக்கல்... ஈசியாவும் இருக்கும்...

ஓஹோ

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

ஐந்தாவது ஐடியா நிதர்சனம்...

நீங்க சொன்னா சரிதான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Chitra said...

நமக்கு சோறா முக்கியம் ? பேருதான் முக்கியம்.


....புல்லரிச்சு போச்சு...... உங்கள் "கடமை" உணர்ச்சியை பாராட்டுறேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

கடமை கண்ணியம் கட்டுப்பாடு,

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

// பதிவுலகில் உள்ள 1456 பதிவர்கள் //
உண்மையான புள்ளிவிவரமா...

நான் என்ன கேப்டனா?சும்மா ஒரு குத்து மதிப்ப விடரதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

சில ஐடியாக்கள் சீரியசாவும் இருக்கு...

காமெடி பாதி சீரியஸ் மீதி

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இது நல்லாயிருக்கே

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

அந்த 14 டாப் ரகம் போங்க..

ஹி ஹி நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

பார்வையாளன் said...

With reference to point 5 , காதலியை தாரை வார்த்து கொடுக்க முடிவு செய்து விட்டீர்களா ? ஆனால் யாருக்கு கொடுப்பது என்ற குழப்பமா ? கவலை வேண்டாம் . அணுக வேண்டிய நபர்
ஹி ஹி

நீங்க நல்லவர்னாங்க?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ILA(@)இளா said...

தொடர்ச்சியா பதிவு போடுங்க. அடுத்தவங்களுக்கு பின்னூட்டம் போடுங்க. போதும் 6 வருச அனுபவத்துல சொல்றேன்.

சீனியர் சொன்ன கேட்டுக்கனும்,ஓக்கே சார்

சி.பி.செந்தில்குமார் said...

Gopi Ramamoorthy said...

\\ஒரு கண்ணாடியை ஃபிக்ஸ் செய்யவும்.மேக்கப் போடவாவது வருவாங்க.\\

:)

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

This post has been removed by a blog administrator.

December 7, 2010 8:07 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

வெங்கட் said...

// நான் வெளில இருக்கேன்,என் பிளாக்
ஸ்டேட்டஸ் சொல்லுங்க என் மெசேஜ்
அனுப்பவும்.அதில் 10% பேராவது உங்க
பிளாக் போவாங்க 145 விசிட்டர்ஸ்
எக்ஸ்ட்ராவா கிடைப்பாங்க.ஹிட்ஸ் அதிகம் ஆகும். //

இனிமே போவியா..?
இனிமே போவியா..?

சி.பி. செந்தில் SMS பண்ணினார்னு
அவர் Blog Status பாக்க அடிக்கடி
அவர் Blog பக்கம் போவியா..?!

( ஒண்ணுமில்ல.. சுவத்துல முட்டிட்டி
எனக்கு நானே பேசிட்டு இருக்கேன்.. )////

நானும்தான் வெங்கட். எங்க வீட்டு சுவரே உடைஞ்சி போச்சு. மவனே இனி sms அனுப்பும்போது கவனித்து கொல்கிறேன்.,

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கண்ட நாய் பேச்சை எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது. நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.//

நான் உங்களை கண்டதே இல்லையே. அப்டின்னா இதை பாலோ பண்ணலாமா?

ஹாஹாஹா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி சிபி சார் நீங்க பத்திரிகை காரர்தான? சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சுருகாங்க ?

ராம்சாமி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பைக்,ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் செய்யும் கடைக்கு
போகவும்,அங்கே நெம்பர் ஒன் பதிவர் எனும் நேம் பிளேட் ஆர்டர் செய்யவும்.///

சைக்கிள் வச்சிருக்குரவங்க?

நீங்க யாரை சாரி எதை வெச்சிருக்கீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யாரையாவது வம்புச்சணடைக்கு இழுக்கவும்.பிரபலமான பதிவர் தளத்துக்கு போகவும். அவங்க பதிவு எவ்வளவு சூப்பரா போட்டிருந்தாலும் அதைப்பற்றி எதுவும் சொல்லாம அவங்க பர்சனல் லைஃப் பற்றி ஏதாவது வம்பு இழுக்கவும்.///

யோவ் உனக்கு வேற வேலையே இல்லியா? இதெல்லாம் ஒரு பதிவுன்னு போடுறதுக்கு பேசாம பிளாக்கை இழுத்து மூடிட்டு போயிடலாம்.(அப்பாட பிரபல பதிவரை திட்டியாச்சு)

மொக்கை பதிவரை திட்டுனா பிரபலம் ஆக முடியாது,வேனும்னா உங்களை நீங்களே திட்டிக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சினிமாவில் ரஜினி போல் பதிவுலகில் நம்பர் ஒன் போவது எப்படி?!! அவசரத்துல இப்படி மாத்தி படிச்சிட்டேன் சிபி!! இதுக்கு எதுவும் பரிகாரம் இருக்கா? சதீஷ்கிட்ட கேட்டு சொல்லுங்க!!!

சதீஷ் ரஜினி ரசிகரு ,என்னை உதைக்க வந்துடுவரு

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

தலைவர் டாகூட்டர அவமானப்படுத்திய சிபி ஒழிக!! பதிவர்களை கின்டலடித்த சிபி ஒழிக!! நானும் திட்டிட்டேன்!! எல்லாரும் பாத்துக்கங்க! நானும் பதிவர்தான்!! நானும் பதிவர்தான்!!

பிரபல பதிவர் சிங்கப்பூர் சிங்கக்குட்டி வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

ரெண்டாவதா சொன்னது நம்ம சிரிப்பு போலீசை தானே..

எழாவதா சொன்னது என்னை தானே..

நினைப்புத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

புது படம் ஒன்னும் இறங்கலன்னு இப்படி ஒரு பதிவ போட்டு ......எல்லோரையும் கொன்னுடீங்க

ஹி ஹி ரொம்ப மொக்கையோ?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சங்கவி said...

அனைத்தும் அருமையான ஐடியாக்கள்.. இதனால தான் நீங்க தமிழ்மணம் டாப்20ல இருக்கறீங்களா..

இல்லை அது ஏதோ டெக்னிக்கல் கோளாறு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger THOPPITHOPPI said...

இவ்வளவு டிப்ஸ் கொடுத்துட்டு எதுக்கு டிஸ்கில இப்படி போட்டிங்க

சும்மா காமெடிக்கு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இரவு வானம் said...

ஐடியா கொடுக்கறதே நீங்கதான பாஸ், அப்புறம் டிஸ்கில ஏன் அப்படி போட்டீங்க? புரியலியே

ஹி ஹி சும்மா தமாஷ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

\\ஒரு கண்ணாடியை ஃபிக்ஸ் செய்யவும்.மேக்கப் போடவாவது வருவாங்க.\\
என்ன ஒரு கேவலமான எண்ணம். ஆணாதிக்கவாதி செந்திலை என்ன செய்யலாம்?... இதுதான் என் அடுத்த பதிவு

சாரி மன்னிச்சுக்கப்பா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி - மேலே சொன்னவை அனைத்தும் கேனத்தனமான ஐடியாக்களே.கண்ட நாய் பேச்சை எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது.
நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.////

இத நெனச்சாத்தான் பயமா இருக்கு? நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு, ஏன் இப்பிடி ஒரு டிஸ்கி, நமக்கு ஏன் இந்த வெளம்பரம்?

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் என்னய்யா இது என்பேருல எநத நாதாரியோ வெளையாடி இருக்கான்?

நான் கூட நீங்கதானோன்னு நிமைச்சேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது நீங்க நெ.1 ஆகுறதுக்குக் கண்டுபுடிச்ச வழின்னு சொல்லுங்க (எப்பூடி....?)

நமக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை ராம்சாமி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பைக்,ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் செய்யும் கடைக்கு
போகவும்,அங்கே நெம்பர் ஒன் பதிவர் எனும் நேம் பிளேட் ஆர்டர் செய்யவும்.///

சைக்கிள் வச்சிருக்குரவங்க?////

நடந்து போறவங்க?

ம் ம் நடத்துங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Venkat Saran. said...

கண்டிப்பா இதுல ஒன்ன நானும் பலோ பண்றேன் ... ஒரு சுறாவளி கிளம்பிடுச்சே ..

ஆஹா,போட்டி க்கு ஆள் வந்துடுச்சே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஐயையோ நான் தமிழன் said...

ஹி....... ஹி... ஹி.....
நல்ல பதிவு.
நான் புதுசு இதை பாலோ பண்ணா முன்னுக்கு வந்திடலாமா அண்ணா?.......................

யருக்கு யார் அண்ணன்?எனக்கு 21 வயசுதான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இது நீங்க நெ.1 ஆகுறதுக்குக் கண்டுபுடிச்ச வழின்னு சொல்லுங்க (எப்பூடி....?)

வந்துச்சுனா போகவேண்டியதுதான கவுண்டரே

அது சரி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

ஐயையோ நான் தமிழன் said...
ஹி....... ஹி... ஹி.....
நல்ல பதிவு.
நான் புதுசு இதை பாலோ பண்ணா முன்னுக்கு வந்திடலாமா அண்ணா?.......................

கண்டிப்பா வந்துவிடலாம் கலக்குங்கங்க

போட்டிக்கு ஆள் சேத்தறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சசிகுமார் said...

//நீங்க கல்யாணம் ஆனவரா?உடனே உங்க மனைவியை டைவர்ஸ்
பண்ணிடுங்க.ஏன்னா அவங்க நச்சரிச்சுட்டே இருப்பாங்க.எப்ப பாரு கம்ப்யூட்டர், நெட்தானா?குடும்பத்தை கவனிக்க மாட்டீங்களா? என டார்ச்சர் பண்ணீட்டே இருப்பாங்க.கல்யாணம் ஆகாதவரா?அப்போ கண்டிப்பா ஒரு லவ்வர் அல்லது பல லவ்வர் இருக்கும்.தமிழ்ப்படத்துல வர்ற மாதிரி (லேட்டஸ்ட் உதாரணம் சிக்குபுக்கு) உங்க காதலியை யாருக்காவது தாரை வார்த்து குடுத்துடுங்க.எந்தத்தொந்தரவும் இல்லாம இனி பதிவு போடலாம்.மனைவியை டைவர்ஸ் பண்ணிட்ட்டா சாப்பாட்டுக்கு?
நமக்கு சோறா முக்கியம் ? பேருதான் முக்கியம்.//

சாமி உறுப்புட வழி சொல்லிவீங்கன்னு பார்த்தா கிடைக்கிற ஒருவேளை சோறும் உங்களுக்கு பிடிக்கலையா

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பதிவுலகில் பாபு said...

ஹா ஹ ஹா.. சூப்பர் போங்க..

நன்றி பாபு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பதிவுலகில் பாபு said...

14 வது பாயிண்டுள சொன்னமாதிரி மொய் வைக்கறமாதிரிதான் ஆயிப்போச்சு..

ம் ம் நக்கலு?

சி.பி.செந்தில்குமார் said...

Arun Prasath said...

நீஙக எந்த வேலைல இருந்தாலும் சரி,உடனே அதை ரிசைன் பண்ணிடுங்க..///

நீங்க எப்டி?

எனக்குத்தான் வேலையே இல்லையே

சி.பி.செந்தில்குமார் said...

Arun Prasath said...

vadai vadai

நீங்களும் செல்வா மாதிரியா?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பன்னிகுட்டி ராமசாமி,ராஜராஜ சோழன் பெயரில் வந்துள்ள பின்னூட்டங்கள்,ஏதோ ஒரு போலி....அவர்களுக்கும் மேலே இருக்கும் பின்னூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை

அதானே பார்த்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

பன்னிகுட்டி ராமசாமி அன்னே இது எப்படி சாத்தியம்?உங்க மெயில் ஐடி ஹேக்கிங் செய்யப்பட்டதா?விளக்கம் ப்ளீஸ்

இது வழக்கமா எல்ல பக்கமும் நடக்கறதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

செம கலக்கல்.

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger அருண் பிரசாத் said...

அட இப்படியா... ரகசியத்தை வெளிய சொல்லுவீங்க... நீங்கதான் எப்பவுமே நெ 1

நன்றி அருண்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
பன்னிகுட்டி ராமசாமி அன்னே இது எப்படி சாத்தியம்?உங்க மெயில் ஐடி ஹேக்கிங் செய்யப்பட்டதா?விளக்கம் ப்ளீஸ் ////

இல்லை என் மெயில் ஐடி ஹேக் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் மேலே உள்ள போலி பெயரில் ப்ரொபைல் செக் பண்ணவும், வேறு என்னவோ காட்டுகிறது. !

விட்டுத்தள்ளுங்க,அதைப்பாக்கற நேரத்துல ஒரு பதிவை தேத்துவோம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம சிபி அகில ஓலக பிரபல பதிவராயிட்டு வராருன்னு நெனக்கறேன், மிரட்டல்கள் ரெகுலரா வருது!

நக்கலு>?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
நம்ம சிபி அகில ஓலக பிரபல பதிவராயிட்டு வராருன்னு நெனக்கறேன், மிரட்டல்கள் ரெகுலரா வருது//
நீங்களும்தான்..மிரட்ட உங்க பேரைத்தானே யூஸ் பண்றாங்க////

ஹி.ஹி... சரி இவனுகள என்ன பண்ணலாம்?

கண்டுக்காம விட்டுட வேண்டியதுதான்.அலட்சியம் மிகப்பெரிய அவமானம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ஆர்.கே.சதீஷ்குமார் said...
பன்னிகுட்டி ராமசாமி அன்னே இது எப்படி சாத்தியம்?உங்க மெயில் ஐடி ஹேக்கிங் செய்யப்பட்டதா?விளக்கம் ப்ளீஸ் ////

இல்லை என் மெயில் ஐடி ஹேக் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் மேலே உள்ள போலி பெயரில் ப்ரொபைல் செக் பண்ணவும், வேறு என்னவோ காட்டுகிறது. !

கவுண்டரே நான் இப்பதான் செக் பண்ணேன் profil not available நு வருது

பினாமியா?

சி.பி.செந்தில்குமார் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நம்பர் ஒன்னாக வாழ்த்துக்கள் ...

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

// கிடைக்காது,அதனால் ஒரு லேடியை 1000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு (மட்டும்) வைத்துக்கொள்ளவும்.உங்க யூசர் நேம், பாஸ்வோர்டு குடுத்து விடவும். 5 டெம்ப்ளேட் கமெண்ட் ரெடி பண்ணிக்கொள்ளவும்.//

இது நல்லா இருக்கே ..!

லேடின்னாலே நல்லாத்தான்யா இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//அனுப்பவும்.மாப்ளை நான் வெளில இருக்கேன்,என் பிளாக் ஸ்டேட்டஸ் சொல்லுங்க என் மெசேஜ் அனுப்பவும்.அதில் 10% பேராவது உங்க பிளாக் போவாங்க 145 விசிட்டர்ஸ் எக்ஸ்ட்ராவா கிடைப்பாங்க.ஹிட்ஸ் அதிகம் ஆகும்.//

நீங்க இப்படித்தான் பண்ணுறீங்களா ..?

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

ஆகா என்ன ஒரு கடமை உணர்ச்சி... வாழ்த்துக்கள்...

இன்னைக்கு சுடுசோறு மிஸ்ஸா/

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

யாருக்கும் பதில் கருத்திடாத தங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

சாரி சுதா மன்னிச்சுக்குங்க,ஆஃபீஸ்ல 4 நாளா ஆணி புடுங்கற வேளை அதிகம்

சி.பி.செந்தில்குமார் said...

யாருக்கும் பதில் கருத்திடாத தங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

December 7, 2010 9:28 PM
Delete
Blogger ம.தி.சுதா said...

ஆகா 50 வது சுடு சோறு.. இல்லை இல்லை வாக்கு..

இண்ட்லியில் நான் வாங்கும் அதிக பட்ச ஓட்டு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வழிகாட்டி said...

இனி யாரும் சங்கவியை நம்பாதிங்க

அப்படி நினைக்கவேணாம்,விசாரிக்கலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger THOPPITHOPPI said...

என்னங்க பாஸ் உங்களை ஆளையே காணோம். உங்களை மூன்று முறை எதிர்ப்பார்த்தேன். ஏதாவது கோபமா?

கோபம் எனக்கு வரவே வராது,
சாரி மன்னிச்சுக்குங்க,ஆஃபீஸ்ல 4 நாளா ஆணி புடுங்கற வேளை அதிகம்

MANO நாஞ்சில் மனோ said...

//மேலே சொன்னவை அனைத்தும் கேனத்தனமான ஐடியாக்களே.கண்ட நாய் பேச்சை எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது.
நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்//
அந்தர் பல்டி'யில நம்பர் ஒன் பல்டி இதுதானப்பா....:]]