Wednesday, December 05, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 21

Photo

அட்ராசக்க சி.பி. செந்தில்குமார் - சிறப்பு பேட்டி


வணக்கம் தமிழே....

  தமிழ் ப்பதிவுலகில் தனிமுத்திரையுடன் விளங்கிவரும் பதிவுலகின் நட்சத்திர பதிவர் சி.பி. செந்தில்குமார் அவர்களின் பேட்டி....இவரை பற்றி நா என்ன சொல்ல....

1. நகைச்சுவை
ஜோக் 1 -அஜித், விஜய் வெச்சு ஆமை , முயல் கதை எடுத்தா அஜித் வாக்கிங்க் போயே விஜயை ஜெயிச்சுடுவாரு # கி கி 


ஜோக் 2- நீங்க எப்ப ரொம்ப ரிலாக்ஸ்டா இருப்பீங்க? 


 சம்சாரம் ஊர்ல இல்லாதப்போ 


2. உங்கள் நகைச்சுவைகளுக்கு மிக சிறப்பான விமர்சகர் யார் ? ஏன்?


கிருஷ்ணகிரியை சேர்ந்த வி விஷ்ணுகுமார் , அம்பை தேவா . இருவரும் நீண்ட கால நன்பர்கள் . ஜோக் நல்லாருந்தா நல்லாருக்குன்னும் , மொக்கையா இருந்தா செம மொக்கைன்னும் ஓப்பனா சொல்லிடுவாங்க.. 

3. நீங்கள் எழுதிய முதல் நகைச்சுவை பற்றி?

சூப்பர் நாவல் எஸ் பி ராமு  நடத்திய சூப்பர் நியூஸ் எனும் மாதம் இரு முறை இதழில் ஜோக் போட்டி வெச்சிருந்தாங்க . அதில் எழுதிய  ஜோக்
 இவ்ளவ் பெரிய மீசை வெச்சிருக்கறவங்க எல்லாம் ஆஃபீஸ் ஹால்ல வெயிட் பண்றாங்களே, எதுக்கு?
 அரசுத்தூதர்க்கான இண்ட்டர்வ்யூ  ( நக்கீரன் கோபால் வீரப்பன் பீரியட்) 


ஆனந்த விகடன்ல வந்த முதல் ஜோக்தான் என்னை பலர்க்கும் அறிமுகம் செஞ்சது



ஜட்ஜ் - மணிபர்சை நீ பிக்பாக்கெட் அடிச்சியா? 

 கேடி - நோ யுவர் ஆனர், மணி பர்சை பாலு எடுத்தான், கந்த சாமி பர்சைத்தான் நான் அடிச்சேன் 


இனிய காலை வணக்கம் நண்பர்களே.....

4. நகைச்சுவையால் நோயால் உள்ளவரை சிரிக்க வைத்த அனுபவம்?

அந்த அளவுக்கு இன்னும் போகலைங்க.. என் ஜோக்ஸ் படிச்சுட்டு தலைவலி வந்தவங்க , வயித்தால போனவங்க , முகத்துல அடி பட்டவங்க வேணா இருக்காங்க ( விழுந்து விழுந்து சிரிச்சதால ) 

5.தமிழ் இணையத்தில் வளர்கிறதா?


 தமிழ் இணையத்தில் வளருது என்பதை விட தகவல்கள் வளருதுன்னு சொல்லலாம் .இன்னும் நிறைய பேருக்கு தமிழ் ஃபாண்ட் இருப்பதே தெரியாம இருக்கு 



6. சில இடங்களில் இரட்டை அர்த்தம் ஏன்?

டபுள் மீனிங் சங்க காலத்துல இருந்தே இருக்கு . அதையும் ரசிக்கறாங்க. கே பாக்யராஜின் பிரபலத்துக்கு மிக முக்கிய காரணம் பெண்களும் ரசிக்கும்படி டபுள் மீனிங் காமெடி செஞ்சதால


.நான் மிகவும் ரசிச்சது ஆராரோ ஆரிராரோ படத்துல மன நலம் குன்றிய பானுப்ரியாவை உப்பு மூட்டை தூக்கி விளையாடும்போது அவர் முதுகுல கிளு கிளுப்பா மெத் தேகம் பட்டதும் தர்ம சங்கடம் ஆகி ( தர்ம சந்தோஷம் !!)  மூட்டையை திருப்பிப்போட்டுக்கறேன்பாரு. ஒரே கிளாப்ஸ். அந்த டைம்ல தான் கதை வசனம் - கே பாக்யராஜ்னு போடுவாரு.



 அந்த அளவுக்கு வர முடியலைன்னாலும் குரு சென்ற பாதையில்.. 


விரைவில் உங்கள் வடிவில் புதிய முந்தானை முடிச்சு எதிர்பார்க்கலாமா ....!
Photo


7. புதிய தலைமுறையில் கூறியிருந்திர்கள் ஜோக் பற்றி சிந்திப்பதால் வீட்டில் திட்டு வாங்குகிறேன் என.. அந்த வகையில் வாங்கிய மிக பெரிய பல்பு


சமையல் பண்றப்போ சம்சாரம் காய்கறி நறுக்க சொல்ல கூப்பிட்டா ஜோக் எழுதனும்னு உக்காருவேன். ஜோக் எழுதி அறுக்கறதுக்கு காய்கறி அறுத்தாலாவது யூஸ்ம்பாங்க 


 என் பாப்பா  8 வயசுலயே போஸ்ட் கார்டு எடுத்து வெச்சுக்கிட்டு நானும் அப்பா மாதிரி ஜோக் எழுதறேன் அப்டிங்கும், அப்போ மச்சினி  அதாவது பாப்பாவோட சித்தி “ நீயாவது சிரிப்பு வர்ற மாதிரி ஜோக் எழுது , அப்பா மாதிரி மொக்கை போடாதேம்பாங்க.. 





8. முதல் பதிவு பதிவிட்ட அனுபவம்


முதல் பதிவு  நல்ல நேரம் பிளாக்ல நண்பர் சதீஷ் வழி காட்டுதலில்  ராவணன் பட விமர்சனம் எழுதுனேன். டைட்டில்லயே அட்டர் ஃபிளாப் என் தைரியமாக  கேப்சர் பண்ற மாதிரிஅவர் பிரமோட் பண்ணாரு. நல்ல ஹிட் ஆச்சு. அப்போதான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சுது ,  படம் ஃபிளாப் ஆனாலும் நாம எழுதும் பட விமர்சனம் ஹிட் ஆகனும்


9. பதிவுலகில் தாங்கள் பெற்ற முதல் நட்பு

 நல்ல நேரம் கே சதீஷ் குமார் சித்தோடு , சிரிப்புப்போலீஸ் ரமேஷ் சென்னை 



dei:: Jimpalakkadi Bambaaaa.... Apricaaa UNCLE :-)

10. இனையத்தால் நீங்கள் பெற்ற நன்மைகள் தீமைகள் என்ன?


 நன்மை  - உலகம் பூரா பலரது அறிமுகம் , பாராட்டுக்கள் வாழ்த்துகள். ஒரு கல்யாணத்துக்கோ ஆஃபீஸ் வேலையா எந்த ஊருக்குப்போனாலும் அங்கே ட்விட்டர் நண்பர்களை சந்திப்பது 


 தீமைகள் - உறவினர்களுக்கு அதிக நேரம் செலுத்துவதில்லை என குடும்பத்தார் குறை 



11. ஆரம்ப காலங்களில் உங்கள் பதிவை பிரபலபடுத்த உழைத்த அனுபவம்

அப்படி ஏதும் பெருசா உழைக்கலை.  சாதாரணமாத்தான் போஸ்ட் போடுவேன். இப்போதான் அதுக்காக மெனக்கெடறேன் 

12. உங்கள் ஜோக்கால் சிரிக்க வைக்க முடியாத நபர்

 தாலி கட்டிய என் சொந்த சம்சாரம் . படு சீரியஸ் பார்ட்டி 


படிக்கமாட்டங்களா தைரியமா சொல்லிட்டீங்க
13. கணக்கில் நீங்கள் புலியா? புளியா?

 பாடத்துல புலி  10, + 2 ல செண்ட்டம்


, வீட்டில் சமையல் அறையில்  புளி

14. புதிய பதிவர்களுக்கு

 பழைய பதிவர்களை பார்த்து நல்லதை கத்துக்குங்க. உங்க தனித்தன்மையை விட்டுடாதீங்க . எல்லார் பிளஸ்ஸையும் ஃபாலோ பண்ணூங்க. யாருடைய மைனசையும் ஃபாலோ பண்ணிடாதீங்க 

நன்றி - தினப்பதிவு



thir Rath shared Anjaana Anjaani's photo.



இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html


 இதன் 18 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/18.html

இதன் 19 ஆம் பாகம் படிக்காதவர்கள்   http://www.adrasaka.com/2012/10/19.html


 இதன் 20 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/11/20.html




ஜெ-வுக்கு வைக்கப்பட்ட ஐ க்யூ டெஸ்ட்


இனிய காலை வணக்கம் நண்பர்களே....
1.மழைகாலத்தில் ‘மின்சாரம்’ தாக்காமல் இருக்க என்ன செய்யனும்: ஈபி அட்வைஸ்! # மின்சாரமா? வழக்கொழிந்த வார்த்தை ஆச்சே? 




----------------------


2. அன்பே! இமயமலைக்கே பூட்டு போட்டாலும் உன் வாய்க்கு மட்டும் பூட்டு போட முடிவதில்லையே ,அடடே!! 



------------------------


3. டொக்கு பிகர் - ஐ மிஸ் சென்னை . 


சக்க பிகர் - அப்போ நான் யாரு?


  சென்னையை மிஸ் பண்றேன்னு சொல்ல வந்தேன் 



-----------------------


4. வங்கத்தில் புயல் சின்னம்.உன் அங்கத்தில் மையல் சின்னம்.நம் ஊடல்கள் சின்னாபின்னம் 



-----------------



5. பிரியாணியில் நான் தான் ஹீரோ: பிரேம்ஜி # ஹீரோயின் பிரியாமணியா ? 



----------------

சென்னிமலை அருள் மிகு காமாட்சி அம்மன்



6. ஹாலிவுட் ஜட்ஜ் - பாலத்தையே திருடிட்டியே? 


கைதி - ஆத்தையே திருடி இருப்பேன்.ஆத்துல இடம் இல்லை 



------------------


7.  நம்மை  பயமுறுத்தும்  பஞ்ச பூதங்கள் 

1சம்சாரம் 

2 டேமேஜர்


3.  மாமியார் 


4 மின்வெட்டு


 5 , நமீதாவின் உப்பி வரும் உடல் கட்டு 



------------------------


8. நம் உள்ளங்கைகள் ஒன்றுபட்டபோது உலகையே வென்றுவிட்டது போல மிதப்பு வந்தது 



------------------------


9. டீ குடிச்சுட்டு தெம்பா வந்தா அதுதான் டீ ஆக்டிவேஷனா? 



----------------------


10. மழை பெய்த பொழுதுகளில் ஆண்கள் குனிந்த தலை நிமிராமல் நடந்தால் எதிர் வரும் பெண்களின் கெண்டைக்கால்களை திருட்டுத்தனமாக ரசிக்கிறான்னு அர்த்தம் 



-------------------------



நீல வானம்.ஒற்றைப்பனை மரம் @ சென்னிமலை



11.  மழை பெய்த காலைப்பொழுதுகளில் இல்லத்தரசிகளின் சிற்றுண்டி உப்புமாவாகத்தான் இருக்கும்



---------------------


12. சாலையில் நடந்து செல்லும் பெண்கள் - சூர்யக்கதிர்களால் தொட முடியாத இடங்களையும் மழைத்துளிகள் தொட்டு விடுகிண்றன 



--------------------


13. வாரம் ஒரு முறைதான் தலைக்கு குளிப்பேன் என்ற மனிதனின் வைராக்யத்தை மழை தவிடு பொடி ஆக்கிவிடுகிறது 



-------------------------


14. மழை பெய்தால் வீட்டுக்கூரை வழி ஒழுகும் இடங்கள் பார்த்து பாத்திரங்கள் வைப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் குடிசை வாசிகளுக்கு 




---------------------------


15. முழுகும் என்பது முன் கூட்டியே தெரிந்தும் மெனக்கெட்டு அப்பாவிடம் கேட்டு காகிதக்கப்பல்கள் விட தவறுவதில்லை மழலைகள் 




---------------------------



நேற்று, தூத்துக்குடியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், 10,00,000 சங்குகளால் செய்யப்பட்ட தேசியகொடி. இது கின்னஸ் சாதனைக்கான் முயற்சி.


16. மழையை சாக்காக வைத்து காதலர்கள் குடைக்குள்ளும் ,தம்பதிகள் வீட்டுக்குள்ளும் நெருக்கம் காட்டுவது கிளுகிளுப்பு 




--------------------------


17. மனிதர்கள் செய்யும் பாவங்களை எத்தனை மழை பெய்தும் இயற்கை அன்னையால் கழுவி விட முடிவதில்லை 



----------------------


18. மழைப்புரட்சி தொடர்வதால் நடைப்பயிற்சிக்கு சனிப்பெயர்ச்சி 



----------------------



19. மனைவி சொல்லே மந்திரம் என நாம் எண்ணுவதாய் நம்ப வைப்பதே ஆண்களின் தந்திரம் 




---------------


20. இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் ,துணை பிரதமர் நமீதா # முன்னேற்றப்பாதையில் பாரத மாதா 




-----------------------------


நேற்று, தூத்துக்குடியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில்,வெட்டப்பட்ட பிரமாண்டமான கேக். இந்த விழாவின் ஹைலைட் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்கவிழாதான்.



21. காங்கிரசில் நமீதா # டேய் கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா டோய்@ கொள்கை முழக்கப்பாடல்




------------------------------



22.  10 வருடங்களாக உன் கூந்தலில் இருந்து முடியே உதிராத போது கவரி மான் பரம்பரை என நினைத்தேன். சவுரி மான் போல




----------------------


23. உண்டியல்ல போட்டதை திருப்பிக் கேட்க மாட்டேன் - நித்தி # கேட்டாலும் கிடைக்காது.ஒன் வே மாதிரி - ரஞ்சிதா 




------------------


24. 2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்படும்: மன்மோகன்சிங்# அதுக்குள்ளே 10 கோடி ஏறிடும் .மின் வெட்டு வேற 





--------------


25. மின் பற்றாக்குறைப் பற்றி எனக்கு தெரியவே தெரியாது-ஜெ! # மேடம் .இப்போ ஐ க்யூ டெஸ்ட்.தமிழ்நாட்டின் சி எம் யாரு? 



-------------------------------



கொலு 2 @ ஈரோடு டீச்சர்ஸ் காலனி

26. நான் வீடு ,ஆபீஸ் என்று குறுகிய வட்டத்தில் இருந்ததால் மின் வெட்டு பாதிப்பு பற்றி தெரியாமல் போய் விட்டது -ஜெ 



----------------------


27. பூரண மது விலக்கு கொணடு வருவதா சொல்லிட்டு செலக்டிவ் அம்னீஷியா காரணமாக பூரண மின் வெட்டு கொண்டு வந்த புரட்சித்தலைவி பூரண குணம் அடைவாராக 



---------------------------


28. இன்னும் 4 வருடங்களுக்குள் மின் வெட்டு சரி செய்யப்படும் - ஜெ @ முரசொலி 



---------------------


29. நான்தான் தமிழ் நாட்டின் சி எம் என்பதை எந்த அமைச்சரும் எனக்கு நினைவுபடுத்தவே இல்லை - ஜெ அதிரடி அறிக்கை 



--------------------------


30. ஈறு கெட்ட எதிர் மறை வினையெச்சம் உதாரணம் - சஹானா ,ரஞ்சிதா 




-------------------------



கொலு @ ஈரோடு

Tuesday, December 04, 2012

அ.தி.மு.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத் - கறுப்பு சரித்திரம்

சென்னை: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மனக்கசப்பில் இருந்தார்:

ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை.

இந்நிலையில் இவர் அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது இழப்பு ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.



மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், இன்று முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததாக தகவல் வெளியானது.


இது குறித்து அதிகார பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை ஆயினும், அவர் முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை: ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதை முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நன்றி - தினமல்ர்



ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலராக வெகுகாலம் செல்வாக்குடன் இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஆனால், அண்மைக்காலமாக அவருக்கும் மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கும் கருத்து மோதல்கள் இருந்துவந்தன. இதை அடுத்து, மதிமுகவில் ஓரங்கட்டப்பட்டார் நாஞ்சில் சம்பத். அவரை பொதுக்கூட்டங்களுக்கு பேசுவதற்கு அழைக்க வேண்டாம் என்று வைகோ வாய்மொழி உத்தரவு இட்டிருந்ததாக செய்திகள் வந்தன.



இந்நிலையில், நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையக்  கூடும் என்றும், திமுகவினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், தாம் திமுக பக்கம் போகப் போவதில்லை என்று நாஞ்சில் சம்பத் கூறிவந்தார். இத்தகைய சூழ்நிலையில் இன்று நாஞ்சில் சம்பத் அதிமுக.வில் இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


நன்றி - தினமணி

சென்னை: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.


மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.



ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.



சென்னையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத், அதிமுக உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.


இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சார பீரங்கி!


ஒரிஜனல் மதிமுக நாங்களே- உரிமை கோருகிறார் நாஞ்சில் சம்பத்- போட்டி மதிமுக உருவாகிறது!


சென்னை: தமிழக அரசியலில் கட்சிகள் உடையும் அல்லது உடைக்கப்படும் காலம் இது! மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரிய கட்சிகள் தங்களுக்கு அடுத்த கட்சிகளை உடைப்பது கால்ந்தோறும் தமிழக அரசியலில் நடைபெற்று வரும் ஒன்றுதான்! அண்மையில்தான் தேமுதிகவை அதிமுக உடைத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் ஓசையின்றி மதிமுகவும் உடையக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உருவாகப் போகும் போட்டி மதிமுகவின் தலைவராக தற்போதைய கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் இருக்கக் கூடும் என்றே தெரிகிறது.



மதிமுக பொதுசெயலர் வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத் இடையேயான கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வைகோவோ, நாஞ்சில் சம்பத்தே கட்சியைவிட்டு விலகட்டும் என்று எண்ணுகிறார். ஆனால் நாஞ்சில் சம்பத்தே. வைகோவை விட கட்சிக்காக அனைத்து வகைகளில் அதிகம் உழைத்த நான் ஏன் என் கட்சியைவிட்டு விலகுவேன்... அது நடக்காது.. வேண்டுமானால் நீக்கிப்பாருங்கள்..நடப்பது என்னவென்று தெரியும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.



இன்று சன் நியூஸ தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டியில் அவரது "போட்டி மதிமுக" மனநிலை வெளிப்படையாகவே வெளிப்பட்டது. அந்தப் பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தாவது:



கடந்த 43 நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களில் செய்தி வருவது என்பது தானாக வெளியிடப்படுவதல்ல.. யாரோ பற்ற வைத்துவிட வெளிவரும் செய்திகள்தான். என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களே இப்படி செய்தியை கசியவிட்டிருக்கின்றனர். ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை இப்படி பேசவைக்கிறவனாக மாற்றியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.



கருத்து வேறுபாடுகளுக்கு கதவு திறந்து வைக்கிற பழக்கம் என்னிடத்தில் இருந்தது இல்லை. எந்த ஒரு அத்துமீறலையும் நான் செய்ததும் இல்லை. எந்த ஒரு சிபாரிசுக்கும் சென்றது இல்லை. எம்.எல்.ஏ. பதவிக்கோ எம்.பி. பதவிக்கோ கோரிக்கை வைத்ததும் கிடையாது. எனக்கு விதிக்கப்பட்ட கடமையை நான் செவ்வனே செய்து வந்திருக்கிறேன்.


என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வைகோ நீண்டகாலமாகவே திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஒத்திகைதான் தற்போது நடைபெற்று வருகிறது.


கடந்த 43 நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வந்த பிறகும் என் மகளின் மீது சத்தியமிட்டு என்னால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொன்ன பிறகும் சம்பத்துக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று வைகோ சொல்லாமல் சங்கொலி இதழில் என்னை இழித்தும் பழித்தும் எழுதுகிற வைகோவை ‘சாரைப் பாம்பு' என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?


தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் உட்கட்சி பிரச்சனையில் வெளியேற்றறப்பட்டிருக்கிறார். சிலர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது என் உருவப்பொம்மையை என் சொந்த ஊரிலேயே கொளுத்தியிருக்கின்றனர். நான் கொளுத்தியவன் மீது குற்றம்சாட்டவில்லை. என் உருவபொம்மையைக் கொளுத்தச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு என் சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதற்காகவே வைகோ திட்டமிட்டு நடத்திய நாடகம்தான் இது!



வைகோவுக்கு அதிமுக கூட்டணியைவிட்டால் வேறு கதி இல்லை. அதனால்தான் அதிமுக அரசு குறித்து விமர்சிப்பது இல்லை. அவர் அங்குதான் போய்சேருவார். அதற்காகத்தான் நாஞ்சில் சம்பத்துக்கு எம்.பி. பதவி கேட்டார் என்றெல்லாம் பரப்பிவிடுகின்றனர். செப்டம்பர் 7-ந் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட நடைபெற்றது. அப்பொழுது யாரும் இதுபற்றி பேசவில்லையே!



என்னை மதிப்பவர்களை மட்டுமே நான் மதிப்பேன்.. என்னை மதிக்காதவர்களை மதிக்க மனசு வராது. ஒவ்வொரு ஊரிலும் யார் யார் கட்சிக்காக உழைக்கிறவர்கள் என்று வைகோவால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியாது. என்னால் முடியும். வைகோ பரப்பிவிடுவது போல் மதிமுக மாவட்ட செயலாளர்களை ஓரணியில் திரட்டவெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.. முயற்சிக்கவும் மாட்டேன். என்னிடத்தில் நாள்தோறும் என் தம்பிமார்கள் ஆதரவு தெரிவித்து பேசினாலும் அவர்களை எனக்கு ஆதரவாக இருக்கச் சொல்லி கேட்பதும் இல்லை.


மதிமுகவுக்காக வைகோவைக் காட்டிலும் கடுமையாக உழைக்கிறேன். அவரைக் காட்டிலும் தொண்டர்களின் அன்பைப் பெறுகிறேன். கட்சி எல்லைகளைக் கடந்து இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்கிறேன். கடல் கடந்து நாடுகளிலெல்லாம் பேசிவருகிறேன். என் இமேஜ் ஏறி வருகிறது. அதை அவரால் பொறுத்துக் கொள்ளவில்லை.


தரம்கெட்ட, அடுத்தவர்களின் இருப்பை ஒத்துக் கொள்ளாத வியாதியின் விளைவுதான் இது. நான் ஒருபோதும் அவருக்கு போட்டியாக என்னைக் கருதியது இல்லை. நான் பிகராக இருப்பதுதான் இப்பொழுது பிரச்சனை.


என்னைப் பொறுத்தவரை என்னை ஆட்கொண்ட தலைவனின் பெருமையைத்தான் பேசுவேனே தவிர அவர்களின் சிறுமையை ஒருபோதும் கோடிட்டுக் காட்டியது கிடையாது. நான் நாகரிகமாக பேசுவேனே தவிர நாலாந்தரமாக பேசமாட்டேன்...


நான் பாலைவிட பரிசுத்தமாவன். நான்குபேர் நகைக்கும்படியாக நடக்கமாட்டேன். நான் அரசியல்வாதியைப் போல் நடந்து கொள்ளமாட்டேன். மனிதனைப் போல் நடந்து கொள்வேன்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நான் வளர்த்த இயக்கம்.. அதில் இருந்து விலகமாட்டேன்.. விலகமாட்டேன்.



நான் வைகோவைக் காட்டிலும் அதிக மேடைகளில் பேசியிருக்கிறேன். அதிக வழக்குகளை சந்தித்திருக்கிறேன். அதிக அளவு பயணம் செய்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போய் கூட்டம் நடத்தினால் 10 இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். மேடைப் பேச்சு பேசிக் கொண்டு தின்றுவிட்டு உறங்குகிறவன் அல்ல இந்த நாஞ்சில் சம்பத்! நஞ்சு அருந்தச் சொன்னால் முதல் ஆளாக நிற்பவன் நாஞ்சில் சம்பத்!



என்னால் மதிமுகவுக்கு எப்போதும் பிரச்சனை வந்தது. தள்ளாடிய நிலையில் தலைமை எடுத்த முடிவு. அதனால் தத்தளித்தவர் நாங்கள்.


நெஞ்சிலே வக்கிரமத்தை வைத்துக் கொண்டு கருப்பை தேக்கி வைத்துக் கொண்டு என் கொடும்பாவியை கொளுத்தச் சொன்ன மனசாட்சியற்றவர் என்பதை தெரிந்து கொண்டதால்தான் வைகோவை என் மகள் திருமணத்துக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.


என்னை கட்சியைவிட்டு வைகோ நீக்கிப் பார்க்கட்டும். அப்போது என் தம்பிமார்கள் அனைவருடனும் சேர்ந்து முடிவெடுப்போம். காலம்தான் அதை தீர்மானிக்கும் என்றார்.


தாம் உருவாக்கிய வளர்த்த மதிமுகவை விட்டு தாம் ஒருபோதும் விலகமாட்டேன் என்றும் தமக்குப் பின்னால் தம்பிமார்கள் இருக்கிறார்கள் என்று மதிமுக தொண்டர்களைக் குறிப்பிட்டு நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதும் வைகோவைவிட மதிமுகவுக்காக பாடுபட்டவன் நானே என்று பிரகடனம் செய்திருப்பதும் நாஞ்சில் சம்பத் ஒரு தெளிவான முடிவாக அதாவது போட்டி மதிமுகவை உருவாக்கத்தான் போகிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.


இதனை உணர்த்தும்விதமாகத்தான் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், நான் எடுக்கப் போகும் முடிவால் எதிரிகள் அச்சப்படுவர் என்று கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாகர்கோவில்: எனது சொந்த ஊரில், அதுவும் என் தாய் பிறந்த ஊரில் எனது கொடும்பாவியை எரித்துள்ளனர். சொந்த ஊரில் எனக்கு செல்வாக்கு இல்லை என்று காட்டுவதற்காக இப்படிச் செய்துள்ளனர். யாருக்கு சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதை கலிங்கப்பட்டியில் போய் விசாரித்தால் தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
வைகோ, நாஞ்சில் சம்பத் இடையே என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இந்த நிலையில் நக்கீரன் இதழுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், அவரை சாரைப்பாம்பு என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்த நிலையி்ல சம்பத்தின் சொந்த ஊரில் அவரது கொடும்பாவியை மதிமுகவினர் கொளுத்தினர்.


கலிங்கப்பட்டி போய்ப் பார்த்தால் வைகோவின் செல்வாக்கு தெரியும்.. சம்பத் கடும் தாக்கு


இதுகுறித்து ஒரு இதழுக்கு சம்பத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்று காட்டுவதற்காக சிலர் நடத்திய நாடகமே எனது கொடும்பாவி கொளுத்தப்பட்ட சம்பவம். இதை கொளுத்த சொன்னவர்களுக்கும், கொளுத்தியவர்களுக்கும் இதனால் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அந்த மகிழ்ச்சிக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன்.



ஆனாலும் பிதாவே இவர்களை மன்னியும். இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள் என்று பிரார்த்தனை செய்வேன்.

மதிமுகவில் இருந்து என்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை தேடுகிறேன். மதிமுக இயக்கத்தின் வளர்ச்சிக்காக போராடியவன். மதிமுகவில் கொள்கை பிடிப்போடு இருந்ததால் முதலில் கைது செய்யப்பட்டவனும், முதலில் வழக்கை சந்தித்தவனும், முதல் விபத்தில் சிக்கியவனும் நான்.

இப்போது எனக்கு எதிராக கொடும்பாவி கொளுத்தியதன் மூலம் இன்னும் நான் இயக்கத்தில் இருக்கிறேன் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் என்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை.

நான் இதுவரை 4 பேர் நகைக்கும்படி, முகம் சுழிக்கும்படி, பழிச்சொல் பேசும்படி நடந்ததில்லை. கழகத்தின் நிர்வாகத்தில் தலையிட்டதோ, அத்துமீறி நடந்து கொண்டதோ இல்லை. யாருக்காகவும் சிபாரிசுக்கும் போய் நின்றதில்லை. இயக்கத்தை சேதாரமின்றி வழி நடத்த இரவு பகலாக, பகல் இரவாக உழைத்துள்ளேன். இதற்கு பின்பும் நான் புறக்கணிக்கப்படுவதற்கான காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.


மதிமுகவில் எனக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்று காட்டுவதற்காகவே திட்டமிட்டு எனது சொந்த ஊரில், அதுவும் எனது தாய் பிறந்த ஊரில் என் கொடும்பாவி கொளுத்தப்பட்டுள்ளது. இது வைகோ நடத்திய நாடகம். சொந்த ஊரில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது பற்றி கலிங்கப்பட்டியில் போய் விசாரித்தால் தெரியும்.

திராவிட இயக்கத்தின் சமகால தமிழக அரசியலில் இதுவரை யாரும் தொடாத உச்சத்தை தொட்டவன் நான். எல்லா கட்சிகளும் என்னை விரும்புவார்கள். ஆனால் இதுபற்றி முடிவு எடுக்க நான் பலமுறை யோசிக்க வேண்டும்.
ஆனால் என்னை விட காலம் முக்கியமானது. காலம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.

இன்னொன்று, அரசியலில் சேராமலேயே நான் சுடர் விட முடியும். அரசியல் எல்லை தாண்டி நான் இலக்கிய தளத்தில் கொடி பறக்கவிட்டவன். அந்த தளத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் என்னால் மேலும் உயர முடியும்.

எனது இல்ல திருமண விழாவில் பங்கேற்க வைகோவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தேன். இப்போது ஏற்பட்ட நிலைமைக்கு பிறகு அவர் என் வீட்டு திருமண விழாவில் பங்கேற்க வரவேண்டாம் என்று கூறுகிறேன் என்றார் அவர்.

வைகோவை ‘சாரைப் பாம்பு’ என்று கூறிய நாஞ்சில் சம்பத்தின் உருவபொம்மை எரிப்பு

திருவட்டார்: திருவட்டார் அருகே நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரில் அவரின் உருவபொம்மையை மதிமுகவினர் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


மதிமுகவின் முக்கிய பிரமுகரான நாஞ்சில் சம்பத் கடந்த வாரம் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், வைகோ சத்தமில்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.


இந்த பேட்டி வெளியான உடன் மதிமுக வினர் பலரும் நாஞ்சில் சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரு அருகே உள்ள வேர்கிளம்பியில் திருவட்டாரு ஒன்றிய செயலாளர் சேம்ராஜ் தலைமையில் கூடிய மதிமுகவினர், நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மதிமுகவை விட்டு வெளியேறு என்று கூறிய அவர்கள், நாஞ்சில் சம்பத்தின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.


இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த குமரி மாவட்ட பொறியியல் அணி அமைப்பாளர், சுரேஷ் குமார், தலைவர் வைகோவைப் பற்றி மதிமுக வில் இருந்து கொண்டே அவதூறு பரப்பி வருகிறார் நாஞ்சில் சம்பத் என்று கூறினார்.



அதிமுக ஆட்சிக் காலத்தில் நாஞ்சில் சம்பத்தின் வீட்டினை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அப்போது பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வைகோ சங்கொலியில் கடிதம் எழுதினார். இதனை கண்ட மதிமுக தொண்டர்கள் பணம் அனுப்பி நாஞ்சில் சம்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்தனர் என்றார். இதனைக் கூட மறந்துவிட்டு அவர் தலைவரைப் பற்றியே அவதூறாக பேசி வருகிறார் என்று கூறினார். இதன் காரணமாகவே அவரது சொந்த ஊருக்கு அருகிலேயே இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.



சென்னை: மலரக்கூடாது என்று மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் வைகோ என்று கூறியுள்ளார் மதிமுகவின் முக்கியப் பிரமுகரான நாஞ்சில் சம்பத்.



விரைவில் இவர் மதிமுகவிலிருந்து வெளியேறப் போகிறார் அல்லது வெளியேற்றப்படப் போகிறார் என்று ஒரு பேச்சு நிலவி வரும் நிலையில் 'நக்கீரன்' இதழுக்குப் பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார் சம்பத். அதன் சில துளிகள்...



என் தரப்பில் நான் குற்றம் நினைக்கவில்லை. இயல்பாகவே எந்தத் தவறும் இழைக்கிற மனோபலம் எனக்கில்லை. வைகோ மனம் சுழிக்கும்படி அவரிடம் நான் எதுவும் கேட்கவும் இல்லை


18 ஆண்டு கால ம.தி.மு.க. பயணத்தில் 3 சட்டமன்றத் தேர்தல், 3 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து ஒரு நாடறிந்த சொற்பொழிவாளன் என்ற நிலையில் எனக்கு ஒரு தொகுதி தாருங்கள் என்று கேட்கவும் இல்லை என்று கூறியுள்ள நாஞ்சிடம், ஒருவேளை நீங்கள் சீட் கேட்டிருந்தால் வைகோ தந்திருப்பாரா? என்ற கேள்விக்கு, அவர் முடிவை நம்பிக்கையோடு என்னால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் நாஞ்சில்.



மேலும் உங்களை வைகோ, கட்சியில் இருந்து நீக்கிவிடுவார் என்ற அரசல் புரசல் செய்திகளை நீங்கள் நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஆமாம். 18 ஆண்டுகளாக எதிர்நீச்சல் போடுற மதிமுக கரை சேர வேண்டுமென்று அக்கறையோடு கடமையாற்றிய என்னை வைகோ சங்கொலியில் நான் ஒரு குடிலன் என்றும், விஷ விதை தூற்றுகிறவன் என்றும் மனசாட்சியற்ற முறையில் எழுதியிருக்கிறார்.


இதேபோல மலரக்கூடாது என்று மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.


நீங்கள் தேமுதிகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நான் தேமுதிகவை ஒரு இயக்கமாகவே நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.



கடைசியாக இரண்டு தலைவர்களுக்கு (கருணாநிதி, வைகோ) தொண்டனாக இருந்திருக்கிறீர்கள். அந்த இரு கட்சிகளுக்குமிடையே உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்விக்கு, இது விரிவாக எழுத வேண்டிய ஒரு புத்தகம். ஒன்றுமட்டும் சொல்வேன்; கலைஞர் அரை நூற்றாண்டு கால தமிழகத்தின் தலைப்புச் செய்தி என்று கூறியுள்ளார் சம்பத்.



இதன்மூலம் மதிமுகவிலிருந்து விலகினால் அவர் திமுக பக்கம் வரக் கூடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அவரை அதிமுகவுக்கு இழுக்கவும் முயற்சி நடக்கிறதாம்.


நன்றி - நக்கீரன் , தட்ஸ் தமிழ்

சில பதிவுகள் நீக்கமும், அதற்கான என் விளக்கமும்

சில மாதங்களுக்கு முன் நான் குறிப்பிட்ட  சில பதிவுகளை என் வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டேன்.அதை ஒண்ணும் ரகசியமா செய்யலை. ட்விட்டர்ல காரணத்தை சொல்லி தான் நீக்கினேன். உடனே ஏகப்பட்ட விவாதங்கள், கேள்விக்கணைகள், அலை பேசியில் விசாரிப்புகள். எனவே ஒரு தன்னிலை விளக்கமாக இந்தப்பதிவு.


ராஜன் - சின்மயி சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தபோது ராஜனுக்கு ஆதரவாக  3 பதிவுகள் எழுதி இருந்தேன். அந்தப்பதிவு வெளியிட்டு ட்விட்டரில் லிங்க் கொடுக்கும்போதே மாயவரத்தான் “ அநாகரீகமான டைட்டில் “ என மென்ஷன் பண்ணி ட்வீட் போட்டிருந்தார். அப்போதே டைட்டிலை மாற்றி விடலாமா? என நண்பர்களிடம் கேட்டபோது வல்கராக எதுவும் இல்லை , வசீகரமான டைட்டில் தான் ,மேலும் பதிவின் சாராம்சம் பற்றி யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை , எனவே நீக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டனர். நானும் அப்படியே விட்டு விட்டேன்.


பதிவுகள் வெளியாகி  பல மாதங்கள் கழித்து சின்மயி அவர்களின் அம்மா என்னை  அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஒருவருடன் நடந்த அலை பேசி உரையாடலையோ , சேட்டிங்க் விபரங்களையோ அப்படியே வெளிப்படுத்துவது  நாகரீகமான செயல் அல்ல என்பதால் நான் அது பற்றி பதிவு ஏதும் இதுவரை எழுத வில்லை. ஆனால் இப்போது ஒரு நெருக்கடி. அதனால் இந்த கட்டுரைக்குத்தேவையான குறிப்பிட்ட அங்கத்தை மட்டும் சொல்கிறேன்.

 பலரும் எள்ளி நகையாடுவது போல், கிண்டல் செய்வது போல் அவர் என்னை மிரட்டவில்லை. கூகுள் சர்ச்சில் சின்மயி என டைப் செய்து சர்ச் குடுத்தால் என் பதிவுதான் வருகிறது எனவும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது எனவும் சொன்னார். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் நீங்கள் அதே போல் ஒரு பெண்ணின் அம்மாவின் மனதைப்புரிந்து கொள்வீர்கள் எனவும் கூறினார்.அவராக நேரடியாக பதிவுகளை நீக்குமாறு சொல்லவில்லை.


 நானாக அவரிடம் “ இந்தப்பதிவு உங்கள் மனதை காயப்படுத்துகிறது என்றால் அதை உடனே நீக்கி விடுகிறேன்” என்றேன்.பதிவு எழுதி அடுத்த நாளே நீங்கள் இதே போல் ஃபோனில் பேசி உங்கள் ஆட்சேபத்தை தெரிவித்திருந்தால் அப்போதே நீக்கி இருப்பேன் என்றும் சொன்னேன். அதே போல் அடுத்த நாளே பதிவுகளை  நீக்கி விட்டு அது பற்றிய அறிவிப்பை ட்விட்டர் டைம் லைனில் தெரிவித்தேன்.


இந்த சம்பவம் நடந்து 5 மாதங்கள் கழித்துத்தான் ராஜன் கைது சம்பவம் நடந்தது.


ஸ்க்ரீன் ஷாட் பர பரப்பாக பேசப்பட்டது .அப்போது நேரடியாகவோ , மறைமுகமாகவோ  சி பி தான் அதை எடுத்திருப்பார் என  யார் யார் எல்லாம் அவதூறாக செய்தி பரப்பினார்கள் , அதற்கான பின் புலங்கள் என்ன என்பதை பார்ப்போம்




1. தளபதி 87 87  - இவர்தான் முதன் முதலாக டைம் லைனில் “ சி பி தான்  ஸ்க்ரீன் ஷாட் எடுத்திருக்க வேண்டும் “ என்று  சொன்னவர். காரணம் இவர் அடிபப்டையில் தீவிர விஜய் ரசிகர். நான் பல முறை விஜய் அவர்களை கலாய்த்து ட்வீட்ஸ் போட்ட போதெல்லாம் பயங்கரமாக பொங்கியவர்.என்னை அஜித் ரசிகர் என தவறாக நினைத்து என்னை கோபப்படுத்த  ஏதோதோ ட்வீட்டி யவர்.


 டைம்லைனை ரெகுலராக வாசிப்பவர்களுக்கு என்னைப்பற்றி நன்றாகத்தெரியும். நான் அனைத்து நடிகர்களையும் ரசிப்பவன். அதே சமயம் அவரவர் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்தப்படத்தை பிரமோட் பண்ணி வரும் நல்ல ட்வீட்ஸ்களை ஆர் டி செய்யும் அதே நேரம்  அந்த ஹீரோவை கலாய்த்தும் ட்வீட்ஸ் போடுவேன். அஜித் , கமல் ரசிகர்கள் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்வார்கள் , ஆனால் விஜய் ரசிகர்கள் ரொம்ப டென்ஷன் ஆகி கண்டபடி திட்டுவார்கள் . அலை பேசியில் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். பிளாக்கில்  கார சாரமான கமென்ட்கள் போடுவார்கள்.


விஜய் ரசிகர் என்ற ஒரே ஒரு காரணத்தினால்தான் அவர் இந்த சந்தர்ப்பத்த்தில் இப்படி என் மீது பழி சுமத்தினார்.



2. யுவ கிருஷ்ணா - லக்கி லுக் யுவா புதிய தலைமுறை பத்திரிக்கையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இவர் தமிழ் இனத்தலைவரும் ,  தன் குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் ஈழத்தமிழருக்காக  ஆட்சியையே துறக்க தயாராக இருப்பதாக சொல்லிக்கொள்ளும்  தனிப்பெரும் தலைவர் கலைஞரின் தீவிர அபிமானி .


நான் கடந்த 2 வருடங்களாகவே கலைஞரை தாக்கி , அவரது சந்தர்ப்பவாதத்தை நக்கல் அடித்து எழுதும் ட்வீட்களை , பதிவுகளை கடுமையாக எதிர்ப்பவர். கூகுள் பஸ்ஸில் ( இப்போ இல்லை முதல்ல ) என் பதிவுக்கான லிங்க் கொடுத்து “ இப்படியும் ஒரு கேவலமான , முட்டாள் தனமான பதிவா? “ என நக்கல் அடித்து கமெண்ட் போட்டு வருபவர் . ஒரு வகையில் எனக்கு அது உதவியாகவும் இருந்தது.

  காற்று வாங்கிக்கொண்டு இருந்த என் பிளாக் அவர் தாக்கி அடிக்கடி லிங்க் கொடுக்க கொடுக்க அதிகம் பேர் என் தளத்திற்கு வர ஆரம்பித்தார்கள் . கூகுள் பஸ்சில் அவருக்கு அதற்காக நன்றி தெரிவித்தேன். உடனே அவர் சுதாரித்துக்கொண்டார். அதற்குப்பின்  அப்படி லிங்க் ஏதும் தருவதில்லை .


 சினிமா விமர்சனங்கள் எழுதும்போது  இயக்குநருக்கு சில கேள்விகள் என்று ஒரு பகுதி வரும். அதில் லாஜிக் மிஸ்டேக்ஸ் பற்றி சொல்லி இருப்பேன். இவர் அவருக்கு  தமிழ் தெரியுமா? என்று நக்கல் அடிப்பார்.ஹாலிவு இயக்குநர் படிப்பதற்குத்தான் அந்த பகுதி என்று நம்பும் அப்பாவி .

 ராஜன் கைது நடந்த போது நான் ட்விட்டரில் இல்லை. என் பிளாக்கில் ஏதோ ஒரு போஸ்ட் போட்டு அதற்கான லிங்க்கை ட்விட்டரில் கொடுத்து விட்டு பின் ட்விட்டர் வந்த போது “ இழவு வீட்டில் சுண்டல் விற்காதீர் “  என்றார். எனக்கு சுருக் என்றது . என்ன விஷயம் என டைம் லைனை பார்த்த பின் தான் ராஜன் கைது விஷயமே எனக்குத்தெரியும்,


 அப்போதே  ராஜன் கைது என்ற போஸ்ட்டை போட்டேன்.


 அப்போது அபாரமான தன் புத்திசாலித்தனத்தை வெ:ளிப்படுத்தும் விதமாக் அவர் “ சி பி ஏன் கோழைத்தனமாக ராஜனுக்கு ஆதரவாக எழுதிய பதிவுகளை இப்போது நீக்கினார்? “ என்று கேள்வி எழுப்பினார். பாவம் அவருக்கு நான் நீக்கி  6 மாதங்கள் ஆன மேட்டர் தெரியவில்லை .


புலனாய்வு இதழ்கள் , நாளிதழ்கள் , ராஜ் டி வி யின் கோப்பியம் ஆகியவற்றில் ஒரு தலைப்பட்சமாக செய்திகள் வந்த போது  நான் யுவகிருஷ்ணாவிடம் டைம் லைனில் கேட்டேன் “ நீங்கள் ராஜனின் நெருங்கிய நண்பர் , புதிய தலைமுறையின் முக்கியப்பொறுப்பில் இருப்பவர் . நீங்கள் நினைத்தால் ஒரு கட்டுரை எழுதி மக்களுக்கு உண்மை நிலவரத்தை புரிய வைத்திருக்கலாமே? என்றேன். அதற்கு அவர் சாமார்த்தியமாக “ அபப்டி நான் முக்கிய பொறுப்பில் இல்லை “ என நழுவிக்கொண்டார். 


ஆக யுவ கிருஷ்ணா எனக்கு எதிராக பேசுவதற்கு இந்த 2 காரணங்கள் தான் .



3.  லாரிக்காரன் - இவர் ஒரு ட்விட்டர் லாங்கரில்  சென்னை பதிவர் சந்திப்புக்குப்பின் ராஜன் சி பி யை தாக்கி போட்ட பதிவின் காரணமாக  அவர் உளவு வேலை பார்த்திருக்கக்கூடும் என யூகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்பி இருந்தார். இவருக்கும் , எனக்கும் எந்தபப்கையும் இல்லை . ஆனால் டைம் லைனில் கோவை ஆண்ட்டனி  ஒரு ட்வீட்டில் “ நடுநிலை வகிப்பதாக சொல்லும் சி பி ,லாரிக்காரன், ரைட்டர் சி எஸ் கே மூவரின்  ட்வுசர் கிழிகிறது” என டைம் லைனில் போட்ட ட்வீட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதச்மாக அந்த ட்வீட் லாங்கர் அமைந்தது . எனவே அது ஒரு தற்காப்புக்காக போடப்பட்டது என யூகிக்கிறேன், மற்ற அப்டி லாரிக்காரன் அவர்களுக்கும், எனக்கும் எந்த வித முன்பகையும் இல்லை 



4. ராஜனின் நண்பர்கள்  - ராஜன் கண்டிஷன் பெயிலில் வெளிவந்த அடுத்த நாள் சேட்டைக்காரன் அவர்கள் “ உங்களைப்பற்றி இப்போதான் தெரிந்து கொண்டேன், உங்களைப்பின் தொடர்ந்ததற்கு வருத்தப்படுகிறேன் என்று ட்வீட் போட்டு அன் ஃபாலோ செய்தார். அதை வழி மொழிந்து ஃபிரியாவிடு டேவிட் , புது மாப்ளை ரகு  உட்பட 5 பேர் அன்ஃபாலோ செய்தார்கள் . அவர்கள் ஏன் அபப்டி செய்தார்கள் என்று தெரிய்வில்லை.ஆனால் அவர்களுக்கும் எனக்கும் முன் விரோதம் ஏதும் இல்லை .(சேட்டைக்காரன் என்பவர் பதிவுலகில் உள்ள நாகேஷ் டி பி வைத்தவர் அல்ல, ட்விட்டர் அக்கவுண்ட்டில் கவுண்டமணி டி பி வைத்தவர், நேரில் அறிமுகம் இல்லை)



5. சென்னை செந்தில் CHN -இறுதியாக இந்த லிஸ்ட்டில் வருபவர் சென்னை செந்தில் . இவருக்கும் , எனக்கும் நல்ல பழக்கம் இருந்தது. நேரில் இருவரும் இரு முறை சந்தித்து இருக்கிறோம். நல்ல புரிதல் உண்டு. கருத்து வேற்றுமை எப்போ நிகழந்ததுன்னா கசாப் தூக்கில் இடப்பட்டபோது “ நான் அசைவர்கள் ஆடு கோழி ஆகியவற்றை வெட்டி கொலை செய்து  அந்த டெட் பாடியை சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு மரண தண்டனை பற்றி பேச தகுதி இல்லை “ என கருத்து தெரிவித்தேன்.


மனித நேயர்கள் நாளை தீவிரவாதிகள்  ஒரு விமானத்தை கடத்தி வைத்து “ இந்த பயணிகளை விடுவிக்க  கசாப்பை விடுவிக்கச்சொன்னால் என்ன செய்வார்கள்? என கேட்டேன். அதில் அவருக்கு மனஸ்தாபம் .


அவர் நேற்று ஒரு பெண்ணுடன் டைம் லைனில் பேசிய ஒரு ட்வீட்டை ஃபேவரைட் செய்து வைத்தேன். அது வருக்குப்பிடிக்கவில்லை. இப்படி ஃபேவரைட் செய்து வைத்தால் பின்னால் எனக்குத்தான் ஆபத்து. மாடரேட் செய்து ஜாலிக்காக சில ஆர் டி கள் செய்வது , தனிப்பட்ட உரையாடல்களை ஃபேவரைட் செய்வது சரி அல்ல என்றார். நான் உடனே “ ஓக்கே “ என்று சொல்லி விட்டேன் .


 இந்த மனத்தாங்கல்கள் தான் அவரை எனக்கு எதிராக பேசத்தூண்டியது




இப்போ பதிவுகளின் நீக்கம் பற்றி ஒன்றைக்குறிப்ப்ட வேண்டும் .இது எனக்கு முதல் அல்ல . ஆல்ரெடி பல சந்தர்ப்பங்களில் பல பதிவுகளை நீக்கி இருக்கிறேன். நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்கள் என என்றுமே நான் அடம் பிடித்ததில்லை . யாராவது மனம் புண்படுமாறு இருக்கு என கருத்து தெரிவித்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் , தனி நபர் தாக்குதலாக இருந்த பலவற்றை நீக்கி இருக்கிறேன், வலுவான காரணங்கள் இல்லாமல் நீக்கச்சொன்ன பதிவுகளை நீக்க முடியாது என்று சொல்லி இருக்கிறேன் .



1. 2010 ஆம் ஆண்டு கடைசில் எல்லா செல் ஃபோன்களில் வந்த , பரவிய ஜோக்  ஒன்று - அது கலைஞர் , ஆ ராசா சமப்ந்தப்பட்ட ஜோக். அதை ஜோகஸ் பதிவாக 20 ஜோக்ஸ் கொண்ட ஒரு பதிவாக போட்டிருந்தேன். அது வரம்பு மீறியதாக இருக்கிறது என சென்னிமலை திராவிட முன்னேற்றக்கழக ஒன்றியச்செயலாளர் அலை பேசியில் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அந்த குறிப்பிட்ட ஜோக்கை மட்டும் நீக்கி விட்டேன் .


2. சிங்கப்பூரைச்சேர்ந்த பிரபல ட்வீட்டர்  கோவை வந்த போது நடந்த சம்பவங்களை கிண்டல் பண்ணி ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டிருந்தேன். தனி மெயிலில் அவர் அந்தப்பதிவு தன் மனதை பாதிப்பதாகவும் , தனி மனித தாக்குதல் இருப்பதாகவும் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்தபப்திவை நீக்கி விட்டேன்


3. சென்னை ட்வீட்டர் சந்திப்பில் ஒரு ட்வீட்டரைப்பற்றிய வர்ணனைகள் அவருக்குப்பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து அவர் ஏதும் என்னிடம் கேட்டுக்கொள்ளாமலேயே குறிப்பிட்ட வரிகளை மட்டும் நீக்கி விட்டேன் .



4. ட்விட்டர் டைம்லைனில் பிரபல ட்வீட்டர் டி பி பற்றி நான் அடித்த கமெண்ட் அவருக்கும், அவர் நண்பருக்கும் பிடிக்க வில்லை என்பதை அறிந்ததும் அந்த கமெண்ட்டை நீக்கி விட்டு அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.


5. கருங்காலி என்ற படத்தின் சினிமா விமர்சனத்தில் அந்தபப்டம் ஒரு கில்மாபப்டம் என்ற வரியை அகற்றுமாறு அதன் இயக்குநர்  மு களஞ்சியம் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் என்னையும் , கேபிள் சங்கரையும் தனித்தனியே கிட்டத்தட்ட மிரட்டினார், ஆனால் நாங்கள் அந்த  வ்ரிகளை நீக்க ஒத்துக்கொள்ளவில்லை .


6. நடு நிசி நாய்கள் பட விமர்சனம் வந்த  போது  2 பதிவுகள் இயக்குநரை தாக்கி எழுதி இருந்தேன். கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களின் உதவி இயக்குநர் என தன்னை அறிமுகம் செய்த நபர்  அந்த பதிவை அகற்றுமாறு மிரட்டினார், நான் ஒத்துக்கொள்ளவில்லை. அனானி பெயரில் கேவலமாக கமெண்ட் போட்டார்.


 இதை எல்லாம் எதற்காக இப்போது சொல்கிறேன் என்றால் நான் செய்தது தவறு என்று தெரிந்தால்  அதை ஒத்துக்கொண்டு அதற்காக மன்னிப்புக்கேட்கத்தயங்க மாட்டேன் என்பதையும் , அதே சமயத்தில் செய்யாத தவறுக்காக அவதூறை சுமக்க மாட்டேன் என்பதையும் தெளிவு படுத்தவே..


அட்ராசக்க ஒரு செய்தி ஊடகம். பர பரப்பான செய்திகள் அதில் பகிரபப்டும் . ராஜனின் நண்பர்களுக்கு உள்ள வருத்தம் நான் ராஜனுக்கு எதிராக பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை எல்லாம் போஸ்ட்டாகப்போடுகிறேன் என்பதே .


 அது தவறு. இதுவரை 11 பதிவுகள் ராஜனுக்கு ஆதரவாக , எதிராக கலந்து கட்டி போட்டிருக்கிறேன். ஆல்ரெடி எங்களுக்குள் கருத்து வேறு பாடு இருந்ததால் என் கருத்து மட்டும் நான் எழுதவே இல்லை. அப்படி எழுதினால் அது ஒரு தலைப்படசமானதாக பார்க்கப்படும் என்பதாலாயே அதை தவிர்த்தேன்.

 நெல்லை டேவிட் ( ஃபிரியா விடு மாமு ) ராஜனுக்கு ஆதரவான பதிவுகளான  துணுக்கு எழுதிய கட்டுரை , விமலாதித்த மாமல்லன் எழுதிய கட்டுரையை எல்லாம் சி பி ஏன் வெளியிட வில்லை என கேட்ட போது ஒரு மணி நேரத்தில் அந்த பதிவை வெளியிட்டேன்.



நேரில் சந்தித்துப்பழகிய பரிசலுக்கும், ராஜனுக்கும் என்னைப்பற்றித்தெரியும், சுற்றி இருப்பவர்கள் தான் சந்தேகங்களை எழுப்புகிறர்கள்.


 கடைசியாக ஒரு வரி - ராஜனுக்கு நான் நண்பனா? எதிரியா? என்பதை காலம் சொல்லும். ஆனால் கண்டிப்பாக துரோகி இல்லை என்பதை உறுதியாக நான் இப்போது சொல்கிறேன். மேலும் எனக்கும் இந்த ஸ்க்ரீன் ஷாட் மேட்டருக்கும் எந்த சமப்ந்தமும் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்



டிஸ்கி -  1 - மிரட்டலுக்குப்பின்னும் நான் நீக்காத பதிவுகள்

1 கருங்காலி - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2011/08/blog-post_2810.html


2 இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஒரு கடிதம் -http://www.adrasaka.com/2011/02/blog-post_7783.html

3 நடுநிசி நாய்கள் - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2011/02/18_18.html
  டிஸ்கி 2 - இதுவரை என் ட்விட்டர் வாழ்க்கையில் அன்ஃபாலோ, பிளாக் ஏதும் இருந்ததே இல்லை. யாரையும் நான் அப்படி செய்ததில்லை. வீட்டில் , ஆஃபீசில் ஏற்படும் மன அழுத்தத்தை மறக்க ஜாலியாக இருக்கவே இங்கே வருகிறோம், இங்கேயும் பிரச்சனை என்றால்?

Monday, December 03, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - சினிமா விமர்சனம்

http://starmusiq.com/movieimages/Naduvula-Konjam-Pakkatha-Kaanom_B.jpg 

தமிழ் சினிமாவின் கலக்கலான காமெடி படங்கள் என ஒரு லிஸ்ட் எடுத்தால் இளைய தலைமுறையின் கண்களுக்கு உள்ளத்தை அள்ளித்தா முதல் இடத்தில் இத்தனை நாள் வந்தது .இனி இந்தப்ப்டமும் அந்த லிஸ்ட்டில் இடம் பிடிக்கும்.ஸ்டார் வேல்யூ இல்லாமல் லோ பட்ஜெட்டில் இப்படி ஒரு தரமான வெற்றிப்படம் கொடுத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள் .


ஹீரோவுக்கு இன்னும் 2 நாள்ல கல்யாணம் .ஃபிரண்ட்ஸ் கூட ரூம்ல அவர் கவலையா இருக்காரு . பல டென்ஷன்ஸ், ஏன்னா அது ஒரு லவ் கம் அரேஞ்ச்டு மேரேஜ் . ரிலாக்ஸா இருக்க கிரிக்கெட் விளையாடறாங்க.ஹீரோவுக்கு தலைல அடிபட்டு கடந்த 2 வருட வாழ்க்கையை மட்டும் மறந்துடறாரு .அவங்க ஃபிரண்ட்ஸ் ஹீரோவுக்கு வந்த வியாதியை மறைச்சு மேரேஜை நடத்த போடும் காமெடி கலக்கல் டிராமா தான் கதை . 


முத்ல்ல இயக்குநரை எழுந்து நின்று மரியாதையுடன் மான்சீகமா கை குலுக்கிக்கறேன்.என்னா ஒரு தன்னம்பிக்கை ? தமிழ் சினிமாவின் கிளிஷேக்கள் இதுல கம்மி . இல்லைன்னு கூட சொல்லலாம். கதையோட ஒன் லைன் கேட்பவங்க இது சாதா கதைதானே? அப்டினு நினைப்பாங்க. ஆனா  ரெண்டே முக்கால் மணி நேரம் இவர் நடத்திய காமெடி  ராஜாங்கம் ஆஹா!!! 

http://cdn4.supergoodmovies.com/FilesFive/naduvula-konjam-pakkatha-kaanom-movie-stills-598909a4.jpg

 ஹீரோ விஜய் சேதுபதி அபாரமான அண்டர் ப்ளே ஆக்டிங்க். படம் முழுக்க இவர் பேசும் ஒரே வசனம் 17 முறை வருது - “ நீ பால் போட்ட, இவன் அடிச்சான். பால் மேல போச்சா.நான் கேட்ச் பிடிக்கப் போனேன். அப்ப கால் ஸ்லிப் ஆயிருச்சா? அதுக்கப்புறம் என்னாச்சு?  பின்னாடி அடிபட்டிருச்சு இல்லையா?  அதான் இப்படி ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும் -இதை சீரியசாக அவர் சொல்ல அதற்கு நண்பர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு புது ரீ ஆக்‌ஷன் குடுக்க  பி ஜி எம்மில் கலக்கி விட்டார்கள் .


 க்ளைமாக்சில் ரிசப்ஷனில் ஹீரோயின் ஓவர் மேக்கப் முகத்தைப்பார்த்து “அய்யய்யோ , பேய் , மாதிரி இருக்காடா. யார் இவ? என கேட்கும் காட்சிகள் குபீர் ரகம் .

 ஹீரோயின் காயத்ரி   காஜில் அகர்வாலுக்கு சித்தி பொண்ணு மாதிரி ஒரு முகச்சாயல் .செம கலர் . ஹோம்லி லுக் . நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு . குட் ஆக்டிங்க் . நல்ல எதிர்காலம் உண்டு . 


நண்பர்களாக வரும் மூவரும் நடிப்பில் கலக்கல் .யாருமே செயற்கையாக நடிப்பது போல் தெரியலை . 


http://moviegalleri.net/wp-content/gallery/gayathri-hot-stills/tamil_actress_gayathri_hot_stills_ponmaalai_pozhudhu_audio_release_0463.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தோட ஓப்பனிங்க் கில் நிதானமாக வரும் கிரிக்கெட் மேட்ச் காமெடி செம காமெடி . படத்தைப்பற்றிய கவலையே இல்லாமல் கிரிக்கெட் ஆட்டம் பிடிக்காதவர்கள் கூட சிரித்துப்பார்க்கும் அளவு சிச்சுவெஷன் காமெடி.. அதிலும் ஒவ்வொரு முறை அவுட் ஆகும்போதும் அதை ஒத்துக்கொள்ளாமல் சாக்கு சொல்வது செம 


2. படத்தின் சீரான திரைக்கதை அமைப்பு அபாரம் .ஹீரோ - ஹீரோயின் டூயட்டோ , அவங்களுக்கான காதல் எபிசோடை காட்ட ஏகப்பட்ட வாய்ப்பு இருந்தும் புத்திசாலித்தனமாக அதைத்தவிர்த்த விதம்  அருமை .


3. காரில் அட்ரஸ் கேட்டு வந்த ஆளிடம் உள்ளங்கையில் மேப் போட்டு குழப்பும் இடம் 


4. ஹாஸ்பிடலில் ஹீரோவின் நண்பர் ஃபோனில்  பேசும்போது ஹாஸ்பிடலில் உள்ள அனைவரும் அவரை மெண்டல் என எண்ணுவது போல் வசனம் பேசும் காட்சி  அதகளம்


5. ஹீரோ சலூனில் ஃபேசியல் பண்ணும்போது   சலூன்காரர் , நண்பர்கள் அடிக்கும் அலப்பறை காமெடி 15 நிமிஷம் கலக்கல் 


6. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் க்ளைமாக்சில் ரிச்பஷன் சீன், மேரேஜ் எபிசோடு செம காமெடி .. சீரியசாக முகத்தை வைத்து அனைவரும் சோக வசனம் பேசறாங்க, ஆனா ஆடியன்ஸ்க்கு செம சிரிப்பு . இந்த வகைக்காமெடி கமல் மும்பை எக்ஸ்பிரஸ்ல முயற்சி பண்ணி இருந்தார். தமிழ் மக்களுக்கு இது புது வகை அனுபவம் 


7. ஹாஸ்பிடலில் ஜே பி க்ளினிக் ரிசப்ஷன் ஆக வரும் ஃபிகர் , தோழி  லக்‌ஷ்மியாக வரும் ஃபிகர் இரண்டு பேருக்கும் தனி ஹீரோயினாக நடிக்கும் அள்வுக்கு அழகு இருக்கு பிளிச் பிளிச்  சாரி பளிச் பளிச்


8. க்ளைமாக்ஸ் முடிச்சை அவிழ்த்த விதம் அருமை. நான் கூட பீட்சாவில் வருவது போல் ஹீரோவின் டிராமா என சொல்வாங்க என எதிர்பார்த்தேன். ஆனா நிகழ்தக்வு , தற்செயல் சாத்தியக்கூறுகள் மூலம் பிரச்சனையை முடித்த விதம் அழகு 


9. நீ என் பேச்சை கேட்பியா? மாட்டியா? என நண்பன் கேட்கும் 13 முறையும்  ஹீரோ “ டேய். நீ சொன்னா பில்டிங்க்ல இருந்து கூட குதிப்பேண்டா” என சொல்வதும் அதை அங்குசமாக வைத்தே காரியத்தை சாதிப்பதும் கலக்கல் காட்சிகள் 


10 . அதே நண்பன் சந்தர்ப்ப வசத்தால் மேடையை விட்டு செல்ல நேரும்போது இன்னொரு நண்பன் அதே டயலாக் மூலம் கட்டுப்படுத்த நினைக்கும்போது “ நீ யார்டா? நான் ஏன் உன் பேச்சை கேட்கனும்? என ஹீரோ திரும்புவது வெடிச்சிரிப்பு . அவர் ஏன் அவரிடம் மட்டும் கட்டுப்படறார் என்பதற்கான ஃபிளாஸ்பேக் கதை செம காமெடி 


11. ஒளிப்பதிவாளர் பிரேமின் வாழ்க்கையில் நடந்ததைத்தான் படமாக்கியிருக்கிறார்கள் , உண்மைசம்பவம் என்பது படத்துக்கு கூடுதல் பிளஸ்.  


12. மன்ஸ்தாபத்தால் பிரிந்த அண்ணன்  வேண்டா வெறுப்பாக திருமணத்துக்கு வருவதும் பழசை மறந்த ஹீரோ அவரைக்கொஞ்சுவதும் அதைக்கண்டு அண்ணன் உருகுவதும் காமெடி கலட்டாக்கள் 


13. கஜினியில் ஏ ஆர் முருகதாஸ் கொண்டு வந்த ஷார்ட் டைம் மெம்மரி லாஸ் மேட்டரை இப்படியும் காமெடி ஆக்க முடியும் என்று நிரூபித்த விதம் மார்வலஸ்

http://www.lateststills.com/wp-content/uploads/2012/05/Mathappu-Actress-Gayathri-Cute-Photos1-300x300.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1. கிரிக்கெட் கிரவுண்ட்டில் ஹீரோ நிற்கும் இடத்தை லாங்க் ஷாட்டில் காட்டும்போது மணல் இருக்கு. பின் க்ளோசப்பில்  கேட்ச் பிடிக்கும் காட்சியில் செங்கல் இருக்கு, அதில் தட்டி விழுந்து  அடி படுது. பொதுவா கிரிக்கெட் மேட்ச் ஆடும் முன் க்ளீனாக கல் எல்லாம் பொறுக்கி போட்றுவாங்க 



2. ஹீரோவின் நண்பர் வீட்டில் ஒரு ரூமில் 4 பேர் இருக்காங்க. அங்கே அடிக்கடி மீட் பண்ற இடம். அங்கே ஒரு வாட்டர் கேன் கூட இருக்காதா? அடிக்கடி வெளீல வந்து தண்ணீர் எடுத்துட்டு வருவாங்களா? 



3. ஹீரோவை அந்த ஹாஸ்பிடலில் இல் இருந்து எஸ் ஆக வைக்கும் சீன் நம்ப முடியலை . ஃபீஸ் ஏதும் கட்டாம எப்படி விடறாங்க? இத்தனைக்கும் அந்த நர்ஸ் வாசல்ல அவங்களை பார்த்துடறா. பார்த்ததும்,  செக்யூரிட்டி கிட்ட சொன்னா பிடிச்சுடப்போறான், அதை விட்டுட்டு உள்ளே ஓடுது 


4. ஹீரோவுக்கு பழசு எல்லாம் மறந்துடுது . ஹீரோயின் ஃபோட்டோவைக்காட்டினா நினைவு வருமா? என பார்க்க அறை முழுவதும் தேடுறாங்க ஏன்? ஹீரோ செல் ஃபோன்ல இருக்காதா? இந்த காலத்துல நேத்து பார்க்கும் நல்ல சைட்டின் ஃபோட்டோவைக்கூட ஸ்க்ரீன் சேவரா வெச்சிருக்காங்க.. தான் கட்டிக்கப்போகும் காதலியின் ஃபோட்டோ செல் ஃபோன்ல இருக்காதா? 


5. ஹீரோவுக்கு நினைவு தப்புன மேட்டரை பொண்ணு வீட்டுல சொல்லாம இருப்பது ஓக்கே , மேரேஜை நிறுத்திட்டா என்ன பண்ண? ஒரு காரணம் இருக்கு. ஆனா உயிருக்கு உயிரா பழகிய காத்லியும் மணப்பெண்ணுமான ஹீரோயின் கிட்டே ஏன் சொல்லலை? அது கூட தேவலை. ஹீரோவின் பெற்றோருக்கு சொல்லலை ஏன்? 


6. ஹீரோயின் 86 மிஸ்டு கால் விட்டும் ஹீரோவை ஃபோனை எடுக்க விடாம சைலன்ட் மோடில் போட்டிருக்காங்க நண்பர்கள். ஓக்கே , ஆனா ஹீரோயினுக்கு டவுட் வராதா? நண்பர்களை தொடர்பு கொள்ள முடியுது, நாயகனை பிடிக்க முடியலை  ஏன்னு?


7. ரிசப்ஷன் ல  ஹீரோயின் பக்கம் ஹீரோ நிக்கும்போது பார்க்கும் நமக்கே டவுட் வருதே . லவ் பொண்ணுன பொண்ணால ஏதோ வித்தியாசம் தெரியுதே? என்ன? என உணர முடியலையா? 


8. கல்யாண முகூர்த்தத்துக்குத்தான் பொண்ணுக்கு அதீத மேக்கப் போடுவாங்க, ரிசப்ஷனுக்கு அதை விடக்கம்மியா இருக்கும். இது பொது. ஆனா ஹீரோயின் ரிசப்ஷன்ல செம மேக்கப் , மேரேஜ் முகூர்த்தத்தின் போது சோ சிம்ப்பிள் ,ஏன்?


9. மேரேஜ் டைம்ல ஹீரோயின் கைல மருதாணியோ , மேஹந்தியோ வைக்கவே இல்ல. மற்ற பட்ங்களுக்கு ஓக்கே. ஆனா படத்தின் பெரும்பகுதி மேரேஜ் ரிலேட்டடா ஓடும்போது இது முக்கியம் இல்லையா?


10. ஹீரோயின் அத்தனை டைம் கால் பண்ணியும் ஹீரோ அட்டெண்ட் பண்ணலை. ஏன் என்னாச்சு என் மேல கோபமா? என ஒரு டைம் கூட ஹீரோயின் மெசேஜே அனுப்பலையே? ஏன்?


11. ஹீரோவிடம் அவர் காதலியுடன் இருக்கும் ஃபோட்டோவைக்காட்டி இதுதான் உன் லவ்வர் , நீ பழசை எல்லாம் மறந்துட்டே என்று சொன்னால் மேட்டர் ஓவர் , ஏன் யாருமே அதை ட்ரை பண்ணலை? 

http://tamil.cinesnacks.net/photos/actress/Gayathri/gayathri-actress-054.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1.நீங்க மட்டும் சரியான ஆம்பளைங்களா இருந்தா ஃபர்ஸ்ட் எங்களை வின் பண்ண விடுங்கடா பார்ப்போம் 


2. ஏ ஆர் ரஹ்மான் மியூசிக்ல சிவாஜியா? அது எப்போடா நடந்துச்சு? 

சிவாஜிதான் செத்துப்போய்ட்டாரே?

 என்னது? சிவாஜி செத்துட்டாரா? அது எப்போ? 



3. தெரிஞ்ச டாக்டரைப்போய் பார்ப்போமா? 


 நமக்கு ஏதுடா தெரிஞ்ச டாக்டர்?



4. டாக்டர் -  கிரிக்கெட் ஆடும்போது கீழே விழுந்து அடி பட்டுடுச்சு, அவ்ளவ் தானே? இதுக்கு ஏன் இப்படி இழுத்து சொல்றீங்க? 


5. வாய்ல எதுக்கு வெள்ளரிக்கா?

 குளிர்ச்சிக்கு


 கண்ல தானே வைப்பாங்க? 


அது வந்து ம் வாய் சிவக்கும் 



6. என் பிள்ளை எப்பவும் இப்படித்தான். எதையும் மனசுல வெச்சுக்க மாட்டான் , எல்லாத்தையும் மறந்துடுவான் 



7. உள்ளே தாழ்ப்பாழ் போட்டு மாப்ளை என்ன பண்ணிட்டு இருக்கார்? 


 குளிச்சுட்டு இருக்கார் 


 ஆனா  கதவை தட்டுற சத்தம் கேட்குதே? 

 ஹி ஹி வெ:ளி;ல தாழ்ப்போட்டு உள்ளே குளிக்கிறார்



8. லைஃப்ல செட்டில் ஆகறீங்களோ இல்லையோ கல்யாணத்தை மட்டும் கரெக்டா பண்ணிடுங்கடா 



9. மச்சி , டிரஸ் எடுத்து தர்றியா? அவ்ளவ் நல்லவனா உன்னால இருக்க முடியுமாடா?



10 . அய்யய்யோ , பேய் , மாதிரி இருக்காடா. யார் இவ? 

 அண்ணே, அவர் என்ன சொல்றாரு?

 ஒண்ணுமில்லை, பாப்பாவை 

 ஓ பொண்ணு பேரு பாப்பா வா? 


11. எங்க வழக்கப்படி பொண்ணு மாப்ளை மேரேஜ்க்கு முன்பே ஒண்ணா உக்காந்து சாப்பிட  விட மாட்டோம் 


ம்க்கும் , ஒண்ணா சேர்ந்து ஊரையே சுத்தியாச்சு 



12. டாக்டர் - உண்மையை சொல்ல மாட்டேன், அதே சமயம் பொய்யும் சொல்ல மாட்டேன் 


http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/c116.0.403.403/p403x403/77041_500008860032248_1951892264_n.jpg



ஆனந்த விக்டன் எதிர்பார்ப்பு மார்க் - 45

 குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங்க் - நன்று


சி பி கமெண்ட் - கமல் கிரேசிமோகன் கூட்டணியில் எடுக்கப்பட்டிருந்தால் நகொப காணோம் இன்னும் பிரம்மாண்டமான காமெடி ஹிட் மூவி ஆகி இருக்கும். ஆனாலும் இது தமிழ் சினிமாவில் முக்கியமான படம் , டோண்ட் மிஸ் இட் . 2012 இன் டாப் டென் படங்கள் லிஸ்ட் எடுத்தால் அவசியம் இடம் பிடிக்கும் படம் . ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்

அட்ரா சக்க: நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/11/blog-post_9009.html
 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD__Qhv-ZWDezNA81HENNEjM9d3Ja2_Kb9gnUkf8UIiqVVaUlkYxhd3_S_ejseuGd2PNeOZV-hWkOuBURK4rAuAW050q_ENClFWFAuwbuT1vijR8tQejpyMR_Qp2GMkUdE64lrFGZYn4eW/s640/Naduvula+Konjam+Pakkatha+Kaanom+Movie+Stills+Gallery+(2).JPG