Showing posts with label நாஞ்சில் சம்பத். Show all posts
Showing posts with label நாஞ்சில் சம்பத். Show all posts

Tuesday, January 05, 2016

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெயலலிதாவுக்கு 3 கேள்விகள்!

பேச்சுதான் அரசியலுக்கு மூலதனம். 'பேசிப்பேசியே ஆட்சியை பிடித்தார்கள்' என திராவிடர் இயக்கத்தை சொல்வார்கள். ஆனால் இன்று மேடைப்பேச்சு சுவாரஸ்யம் இழந்து விட்டது.

இதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது பல மணி நேரம் காத்திருந்து மேடைப்பேச்சை ரசித்து கேட்ட தலைமுறை இப்போது ஓய்ந்து விட்டது. மற்றொன்று கொள்கையை பற்றி பேசிய மேடைகள் எல்லாம் இப்போது கட்சித்தலைமையை வரம்புக்கு மீறி புகழ்வது, எதிர்கட்சிகளை அளவு கடந்து விமர்சிப்பதுமாக மாறி விட்டது. தமிழகத்தில் பேச இப்போது ஆட்களில்லை. இருக்கும் சிலரும் கட்சியின் உத்தரவுக்கிணங்க (?) பேச வேண்டி இருப்பதால் அவர்களில் பேச்சு சுவாரஸ்யம் இழந்து விட்டது. 


நாவை சுழற்றி பேசியவர்கள் எல்லாம் இப்போது எதை பேசுவது என தெரியாமல் தத்தளிக்கும் நிலைதான் இன்று உள்ளது. அதில் ஒருவர்தான் நாஞ்சில் சம்பத். அபாரமான பேச்சாற்றலுக்கு சொந்தமானவர். பெரும்பாலும் கட்சி விட்டு கட்சி மாறும் பேச்சாளர்கள்,  தங்கள் சுயத்தை இழந்து விடுகிறார்கள். எந்த பேச்சால் பெரும்பாலானோரால் கவரப்பட்டாரோ அதே பேச்சால் இப்போது கட்சி பதவியை இழந்து, அவமானப்பட்டு நிற்கிறார் நாஞ்சில் சம்பத். 



'மதிமுகவில் நாஞ்சில் சம்பத்'



அரசியலில் பின்னால் நடக்கப்போகும் மாற்றங்களை முன்கூட்டியே அறிவிக்க கூடியவர்களாக கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் இருப்பார்கள். தங்களால் வெளிப்படையாக சொல்ல முடியாததை, கட்சியின் நம்பிக்கையான இரண்டாம் கட்டத்தலைவர்கள் மூலமாகத்தான் கட்சித்தலைவர்கள் வெளிப்படுத்துவார்கள். அப்படி ஒருவர்தான் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க.வில் இருந்த போது வைகோவின் போர்வாள் என புகழப்பட்டவர், கட்சியில் வைகோவுக்கு அடுத்தபடியாக அபாரமான பேச்சாற்றலுடன் வலம் வந்தவர் நாஞ்சில் சம்பத். நெருக்கடியான நேரங்களில் கட்சி எடுக்க கூடிய முடிவுகளை முன்கூட்டியே தெளிவுபடுத்துபவராகவும் அவர் இருந்திருக்கிறார்.



2006 சட்டமன்ற தேர்தல் நேரம் அது. தி.மு.க.வுடன் கூட்டணி என அறிவித்து, கலைஞரை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் இருந்தது ம.தி.மு.க. அப்போது அ.தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மதிமுகவோடு உறவு வைத்துக் கொள்ள, வைகோவின் கைது படலம் தடையாக இருக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார் காளிமுத்து.

'அதிமுக உடன் கூட்டு என்பதை முதலில் அறிவித்தவர்'


அந்த நேரத்தில் காளிமுத்துவின் அழைப்புக்கு நன்றி சொல்லி பேசியதோடு, தி.மு.க.வுக்கு தனது பேச்சின் மூலம் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார் நாஞ்சில் சம்பத். "மதிமுகவை அலட்சியப்படுத்திவிட்டு இனி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.  வைகோ கை காட்டுபவர்தான் அடுத்த முதல்வர், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதிமுகதான் எதிர்க்கட்சியாக அமரும், மதிமுகவுக்கு அதற்குரிய கெளரவம் கொடுக்காவிட்டால் தனித்துப் போட்டியிட நாங்கள் முட்டாள்கள் இல்லை, அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிடுவோம்" என அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து முதலில் பேசியது நாஞ்சில் சம்பத்தான்.



நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவிக்க, அதற்கு வைகோ வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அடுத்த சில நாட்களில் நாஞ்சில் சம்பத் பேசியபடியே போயஸ் கார்டனுக்கு சென்று அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தது ம.தி.மு.க. "நேற்று வரை தி.மு.க.வில் இருந்து கூட்டணி பேச்சு நடத்திக்கொண்டே, அ.தி.மு.க.விலும் கூட்டணி பேச்சை நடத்தியிருக்கிறார்" என வைகோ மீது விமர்சனங்கள் வந்து விழுந்தபோது அதையும் தன் பேச்சால் சமாளித்தவர் நாஞ்சில் சம்பத்.



"மு.க.முத்துவை முன்னிலைப்படுத்த எம்.ஜி.ஆரை நீக்கினார்கள். மு.க.ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வைகோவை வெளியேற்றினார்கள். இரண்டு இயக்கமும் ஒரே நோக்கத்துக்காக துவங்கப்பட்டவை. ஒரே நோக்கத்துக்காக துவங்கப்பட்ட இரு இயக்கங்கள் ஒன்றிணைவதில் என்ன தவறு இருக்கிறது?" என நாஞ்சில் சம்பத் எழுப்பிய கேள்விகள்தான் அதிமுக உடனான கூட்டணியை நியாயப்படுத்தியது. அதன் பின்னர் வைகோவின் பேச்சைப்போல் நாஞ்சில் சம்பத்தின் பேச்சை கவனிக்கத்துவங்கினர் அரசியல் விமர்சகர்கள்.



'நெருக்கடியை பேச்சால் சமாளித்த சம்பத்'



ம.தி.மு.க.வுக்கு அது ஒரு சோதனை காலம். கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்தடுத்து கட்சி மாறிய சூழலில், மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்தது ம.தி.மு.க. கட்சியின் எதிர்காலம் அவ்வளவுதான் என விமர்சனங்கள் முன்வந்தபோது தன் பேச்சால் சமாளித்தவர் நாஞ்சில் சம்பத். "கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது. கண்ணப்பன் போனார். அவர் வைகோவை விட சீனியர் பொலிட்டீசியன். அவர் கட்சியை விட்டு போகையில், அவருக்கு 40 ஆண்டுகாலம் காரோட்டிய கந்தனூர் கருப்பையா என்பவர் போகவில்லை. அதேபோல கண்ணப்பனை சார்ந்திருந்த ஆலாம்பாளையம் கிளைக்கழகத்தின் செயலாளர் போகவில்லை. செஞ்சி ராமச்சந்திரனும் போனார். ஒரு பாதிப்பும் இல்லை. ஆகவே எங்கள் கட்சியில் இருந்து யார் போனாலும் அவர்கள் அகதிகள் பட்டியலில் போய் சிக்கிக்கொள்கிறார்களே தவிர அரசியலில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. 



ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டு போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது. ஆகவே எங்கள் கட்சி ஒரு முடிவை எடுப்பதை ஏற்க முடியாதவர்கள், பதவி நல விரும்பிகள், ஆதாயத்தை நாடுபவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தால் அவர்கள் காணாமல் போவார்களே தவிர கட்சியின் கட்டுமானத்தில் ஒரு கல்லை கூட பெயர்க்க முடியாது," இப்படி நாஞ்சில் சம்பத் மேடைக்கு மேடை பேசிய பேச்சு, ம.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்தது. நாஞ்சில் சம்பத்தின் பேச்சு கட்சிக்காரர்களை கட்டிப்போட்டது.



'கலைஞருக்கு வைகோ... வைகோவுக்கு சம்பத்...'



தொடர் தோல்விகளால் தி.மு.க. தொண்டர்கள் சோர்வுற்ற எம்.ஜி.ஆர் ஆட்சி காலம் அது. அ.தி.மு.க.வின் தலைவர்கள் ஒரு கோஷத்தை திரும்ப திரும்ப சொன்னார்கள். 'கருவாடு மீனாகாது. கறந்த பால் மடியேறாது. கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது' என்பதுதான் அது. அதற்கு பதில் சொன்னவர் கருணாநிதியின் போர்வாளாக இருந்த வைகோ. 'எங்கள் தலைவன் வெற்றிகளை இழந்திருக்கலாம். ஆனால் களம் காண்பதை நிறுத்தி விடவில்லை' என வைகோ பேசிய பேச்சு தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் கொடுத்தது போல, ம.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தது நாஞ்சில் சம்பத்தின் பேச்சுதான்.

ம.தி.மு.க.வில் தான் நினைத்ததை எல்லாம் பேசும் வல்லமை பெற்றவராக இருந்தார் நாஞ்சில் சம்பத். 2006 தேர்தலின்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை நாஞ்சில் சம்பத் பேசியது ஒன்றே அதற்கு சாட்சி. அதற்கு வைகோ மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டாரே தவிர, நாஞ்சில் சம்பத் மீது கட்சி நடவடிக்கை பாயவில்லை. ஆனால் ம.தி.மு.க.வில் இருந்து வெளியேறி அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்த பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், நெருக்கடிகளும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதன் உச்சம்தான் கட்சி பதவி நீக்கம். 


'பேச்சாளர்களை பற்றி கவலைப்படாத அதிமுக'



பொதுவாக பேச்சாளர்கள், கட்சியின் நடவடிக்கை குறித்து முழுமையாக அறிந்திருப்பார்கள். கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பேச்சாளர்களுக்கு கட்சித்தலைமை தெளிவாக விளக்கும். நெருக்கடியான சூழலில் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், மக்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக கட்சித்தலைமை சொல்லும். சில நேரங்களில் பயிற்சி பட்டறைகளை கூட நடத்தும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை பின்பற்றுவதில்லை. பேச்சாளர்களைப்பற்றி கவலைப்படாத கட்சி அ.தி.மு.க. கட்சி பொதுக்குழுவில் கூட யாரும் பேச அனுமதிக்காத கட்சியாகத்தான் அ.தி.மு.க. இருக்கிறது. 



கூட்டணி குறித்து தேவைக்கேற்ப முடிவு செய்வோம் என ஜெயலலிதா பேசியதோடு சரி. ஜெயலலிதா எதை நினைத்து அதை பேசினார் என்பது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாருக்கும் தெரியாது. இந்த சூழலில் பேச்சாளார்கள் என்ன முடிவெடுப்பார்கள்? மக்களிடம் எதை கொண்டு சேர்ப்பார்கள். கட்சித்தலைமையை புகழ்வதும், எதிர்கட்சிகளை எல்லை மீறி திட்டித்தீர்ப்பதும்தான் பேச்சாளர்களின் வேலை என நினைப்பதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.



'பாவம்... நாஞ்சில் சம்பத் என்ன செய்வார்?'



நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்ட விவகாரத்துக்கு வருவோம். நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டதற்கு சொல்லப்படும் ஒற்றை காரணம் தொலைக்காட்சி பேட்டிதான். இரு தொலைக்காட்சிக்கு ஒரே நேரத்தில் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், அதில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள்தான் காரணம். பேட்டியில் 3 சர்ச்சைகள் எழுந்தன. ஒன்று தமிழக முதல்வர் குறித்து அவர் தெரிவித்த கருத்து. இரண்டாவது அ.தி.மு.க. கூட்டணி அமைக்க கூடும் என்ற கட்சிகளை திட்டித்தீர்த்தது. மூன்றாவது ஏற்கனவே அ.தி.மு.க. மீது கோபத்தில் இருக்கும் மக்களை மேலும் கோபப்படுத்தும் வகையில் பேசியது.



முதலாவது முதல்வர் ஜெயலலிதா குறித்து நாஞ்சில் சம்பத் சொன்ன கருத்துகளை பார்ப்போம். நாஞ்சில் சம்பத்திடம், வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவில்லையே என கேட்டதற்கு, 'ஆம் முதல்வர் மக்களை நேரில் சந்திக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். சந்திக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அவரால் முடியும்போது சந்தித்தார்கள். இப்போது சந்திக்க முடியவில்லை" என பதிலளித்திருந்தார். இதில் என்ன பொய் இருக்கிறது?



மற்றொரு தொலைக்காட்சி பேட்டியில், ஏன் ஜெயலலிதாவை வரவேற்க இவ்வளவு ஆடம்பரம் என்ற கேள்விக்கு பதிலளித்த சம்பத், "அத்திப்பூ பூப்பதை போல எப்போதாவது வரும் ஜெயலலிதாவை கட்சியினர் ஆர்வம் காரணமாக ஆடம்பரமாக வரவேற்கிறார்கள்' எனசொல்லியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிலிலும் உண்மை இல்லை என சொல்லி விட முடியாது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஜெயலலிதா சந்தித்திருந்தால், அடிக்கடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஜெயலலிதா நிகழ்த்தி இருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது.

'கோபப்பட வேண்டியது சம்பத் மீது மட்டுமல்ல'


இரண்டாவது பாரதிய ஜனதா, ம.தி.மு.க., இடதுசாரிகள் போன்ற கட்சிகளை விமர்சித்தது. இந்த கட்சிகள் யாவும் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கின்றன. மறுபுறம் அ.தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது என்ற விவரம் முக்கிய நிர்வாகிகளுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை. இந்த சூழலில் கட்சியின் பேச்சாளராக தங்களை கடுமையாக விமர்சிக்கும் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் கடமையைதான் நாஞ்சில் சம்பத் செய்திருக்கிறார். யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை முதலில் தெளிவுபடுத்தியிருந்தால், நாஞ்சில் சம்பத் கவனமாக இருந்திருக்க கூடும். ஆனால் அந்தக்கட்சியில்தான் அந்த உரிமை யாருக்கும் கிடையாதே. அவரென்ன செய்வார்...பாவம்!



மூன்றாவது மக்களைப்பற்றி பேசியது. வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, ஒரு வீட்டில் இழவு விழுந்து விட்டது என்பதற்காக, இன்னொரு வீட்டில் கல்யாணம் நடக்காமல் இருக்குமா? யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் சாகத்தான் செய்யும் என்பன போன்ற பதில்கள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அது. 



நேரடியாக நாஞ்சில் சம்பத் இந்த பதில்களை சொல்லவில்லை. ஆனால் எப்படியோ சமாளிக்க முயன்று, தோற்றுபோன தருவாயில்தான் இந்த பதிலை நாஞ்சில் சம்பத் உச்சரித்தார். சென்னையில் பெரு வெள்ளம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அங்கு மிக பிரம்மாண்டமாய் பொதுக்குழுவை நடத்தியது தான் இதற்கெல்லாம் காரணம். எனவே கோபப்பட வேண்டியது நாஞ்சில் சம்பத் மீது மட்டுமல்ல.

'கட்சிகள் விரும்புவதில்லை'


வெள்ள பாதிப்பின் போது மக்களை நேரில் சென்று சந்தித்திருந்தால்... யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு, யாரை எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை கொள்கை பரப்பு செயலாளர்களுக்காவது தெரிவித்திருந்தால்...பொதுக்குழுவை குறைந்த பட்சம் விமரிசையாக நடத்தாமல் எளிமையாகவாவது நடத்தியிருந்தால், சர்ச்சைக்குரிய இந்த 3 கேள்விகளுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. பதில்களும் சர்ச்சைக்குரியதாகியிருக்காது. ஆக அந்த 3 கேள்விகள் ஜெயலலிதாவுக்குரியது!



அரசியல் பற்றி பேசும்போது பிழைகள் கூடாது என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பிழைகளுடன் பேசவே அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் நாக்கு பிறழாமல், ஒரு சொல் கூட மாறாமல், சொற்களை செதுக்கும் வல்லமை வாய்ந்தவராய் இருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் இப்போது அவர் அப்படியில்லை என்பது உண்மை. ஆனால் அதற்கு அவர் மட்டும் காரணமல்ல. எந்த பேச்சும் இதயத்தில் இருந்து வரும்போதுதான், மக்களை ஈர்க்கும் என்பார்கள். ஆனால் இப்போது இதயத்தில் இருந்து எந்த பேச்சாளர்களும் பேசுவதில்லை. காரணம் எந்த கட்சித்தலைமையும் அதை விரும்புவதில்லை.

- ச.ஜெ.ரவி

thanx - vikatan

Thursday, December 06, 2012

நாஞ்சில் சம்பத் பல்டி - மக்கள் கருத்து

சென்னை: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மனக்கசப்பில் இருந்தார்:




ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை.


இந்நிலையில் இவர் அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது விலகல் ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.


அ.தி.மு.க., வில் உயர்ந்த பதவி :


இன்று காலையில் அ.தி.மு.க.,வில் இணைந்ததும் சம்பத்துக்கு இந்த கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநில அரசின் சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் தனது பிரசார பயணத்தை விரைவில் துவங்குவார் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.


1.  - Kovilpatti,இந்தியா
05-டிச-201211:35:52 IST Report Abuse
Mariappan Krishnasamy சம்பத் ஐ பொறுத்த வரை இது அவருக்கு மாபெரும் இழப்பு. ஏனென்றால் இனி அவர் வைகோ அவர்களிடம் பயின்ற தன்மானம், சுய கௌரவம், கொள்கை பிடிப்பு....போன்ற அனைத்தையும் இழக்க வேண்டிவரும். இப்பவே முதுகு வளைய ஆரம்பிச்சிருச்சு.ஆம்... வைகோ ஒரு தொண்டரை இழந்து விட்டார் ... பாவம் திரு.சம்பத் அவர்கள் தன் சுயமரியாதை இழந்து விட்டார்.. பல நாஞ்சில்களை உருவாக்குபவர் வைகோ. இதற்கெல்லாம் கவலை கொள்ள போவதில்லை. 
 
 
 
 
2.  - doha,கத்தார்
05-டிச-201208:59:06 IST Report Abuse
saravanakumar அண்ணன் வைகோ அவர்களே தங்கள் பார்க்காத சோதனைகளா இந்த மனிதர் போனதால் என்ன ஆகிவிடும் எப்பவும் போல நீங்கள் செயல்படுங்கள் நிச்சயம் நீங்கள் வெல்வீர்கள் தங்களின் வெற்றி தமிழனின் வெற்றி, தமிழின் வெற்றி ( தயவுசெய்து சகுனி படம் பாருங்கள் ) விவேகமாக செயல்படுங்கள் சாதனை படைக்க தன் பலத்தை தான் நம்பவேண்டும் நீங்கள் சாதிப்பீர்கள் 
 
 
 
 
3.  - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-டிச-201201:41:04 IST Report Abuse
Matt 
pillai பேச்சு ஒன்றையே மூலதனமாக வைத்து அரசியல் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கும் இவர போன்றவர்கள் இப்படி தான் இருக்க முடியும் என்று தெரிகிறது. பத்தொன்பது ஆண்டுகளாக ம தி மு கவில் ஒட்டி கொண்டிருந்திகிறார். 
 
 
 
 
4.  - chennai,இந்தியா
05-டிச-201200:24:23 IST Report Abuse
Raju 
Sutham Dear fris how many of us will vote for good people.if one person doing good things we will not vote for them. we will see party e, religion,etc.but we can write lot of comments. last election all chennai people supported for saidai duraisamy. now where is he? personally he is a good person. but he cannot work individually. if any one of you or your family members in politics then you will know how good politicians are suffering to do a people basic needs. if they are hundred percent honest next election peoples will not support for him or his party will not gove seat for him. this is a fact. so no one ready to loose his own property . he has to do something for his family also. 
 
 
 
5.  தாயகம் சுரேஷ், பக்ரைனிலிருந்து, 
 
 
நாஞ்சில் சம்பத் வெளியேறியதால் இவ்வியக்கம் பாதாளத்திற்க்கு சென்று விடும் என்கிற எழுத்திலும் பேச்சிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அதற்கான அவசியமுமில்லை. வெற்றிடத்தை நிரப்பும் தகுதி காற்றிற்க்கு உண்டு.., காற்று தானே சுவாசம்.., ஆம் மறுமலர்ச்சி கூட்டத்தின் சுவாசமே வை.கோ என்கிற மையப்புள்ளி என்றிருக்கும் போது அந்த "வெற்றிடத்தையும்" வை.கோ அவர்கள் நிரப்பிவிடுவார் என்பதில் நம்பிக்கை உண்டு. கருணாநிதியின் ஆட்சியின் போது அதிமுக_விலிருந்து, அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, சின்னசாமி, செல்வகணபதி,சேகர்பாபு என்று தொடர் தொடராக பலர் ஒடினார்களே அப்போது இத்தகைய "கிண்டலான" கட்டுரையை தினமல்ர் வெளியிடவில்லையே?
 
 
 
 
 அப்படி ஒடிய கூட்டத்தினால் அதிமுக_தான் அழிந்து போய்விட்டதா என்ன? அதே போல் தான் இந்த சம்பத் ஓட்டத்தால் நாங்கள் தொய்ந்து விடவில்லை. எங்கள் தாய்(வை.கோ) உழைத்து எங்கள் வீட்டிற்க்குள்(தாயகம்) உட்கார வைத்து ஊட்டி விடும் "பழங்கஞ்சியே" எங்களுக்கு போதும் என்ற எண்ணம் உள்ள தொண்டர்கள் வை.கோ_வோடு இருக்கிறோம். ஆனால் பக்கத்து வீட்டுக்காரனின் "பிரியாணி"க்கு ஆசைப்பட்டு எஞ்சில் ஊற நாக்கை தொங்கப் போட்டு கொண்டு ஓடுபவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. 
 
 
 
எத்தனை சுவையான உணவெனினும் தாய் ஊட்டி விடும் "பழங்கஞ்சி"க்கு உள்ள சுவையை நேர்மையான மனிதன் மறக்கவே மாட்டான். வை.கோ_வின் தொண்டர்களாகிய நாங்கள் நேர்மையான மனிதர்கள். எவர் போயினும் யாம் வை.கோ_வோடிருப்போம்........, வை.கோ மேல் நாங்கள் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கை மட்டுமே எங்கள் "மூலதனம்"...., மறுமலர்ச்சி பயணத்தின் எல்லை வரை வர விழையும் இயக்க விசுவாசி. 
 
 
 
6.  - Chennai,இந்தியா
04-டிச-201222:51:16 IST Report Abuse
Panchu Mani இதை சம்பத் முன்னாலே செய்திருக்க வேண்டும். அ தி மு க க்கு சம்பத் போன்றவர்கள் வேண்டும். கருணாநிதி, புரட்சி தலைவி இவர்களுக்கு அப்புறம் கருத்து குவிவது தமிழ் தாயின் தலை மகன்களில் ஒருவனான சம்பத்துக்கு மட்டும்தான். நெஞ்சில் நிறைந்த நாஞ்சிலே, கம்பன் தந்த சம்பத்தே தமிழ் தாயின் தலைமகனே வாழிய நீ பல்லாண்டு. - முகம் அறியா தம்பி 
 
 
 
 
7.
Poompattinaththaan - KaveriPoompattinam,இந்தியா
04-டிச-201222:37:39 IST Report Abuse
Poompattinaththaan போயும் போயும்.. அடச் சே.. இது ஒரு மானங்கெட்ட ஜென்மம். பழ கருப்பையா பழசாகிப்போனதுபோல் நாஞ்சில் நாவடைத்துப்போகும் காலம் விரைவில் எதிர்பார்க்கலாம். என்ன ஒரு காமெடி? இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வந்திருக்கிறாராம். மரை கழண்டுவிட்டதுபோலும். தமிழகமே இருண்டு கிடக்கும்போது இவருக்கு மட்டும் என்கிருந்து வெளிச்சம் வந்ததோ? ( ஒருவேளை பெட்டி மாறியதைத்தான் அப்படிச்சொல்கிறாரோ ) எது எப்படியோ.. முழ்கும் கப்பலில் புகுந்திருப்பதால் மூழ்கடிக்கப்படுவதென்னவோ உறுதி. 
 
 
8. - jeddah,சவுதி அரேபியா
04-டிச-201220:48:35 IST Report Abuse
Shaikh Miyakkhan ஏன்? நமக்கு தானே தூது விட்டு இருந்தார் பின்னே எப்படி அங்கே போய் சேர்ந்தார் ? என்று ஒரு பெரியவர் முக முக்கல் முனங்கள் சத்தம்கேட்கிறது. எங்கையோ தப்பு நடந்து இருக்கிறது ? வைர விழாவில் பெயரை தான் விட்டு விட்டார்கள் என்றால் கையில் கிடைக்க இருந்த பழத்தையும் தட்டி பறித்து விட்டார்களே அவருடைய முடிவு சரியானதே . திமுக வில் வாரிசு கோஷ்டியில் சிக்கி சின்ன பின்னமாவதை விட தன்னை மதிக்கின்ற கட்சில் சேருவது என்கின்ற அவரது முடிவு சரியானதே. 
 
 
9. - Chennai,இந்தியா
04-டிச-201217:29:01 IST Report Abuse
Suresh Rajagopal நாஞ்சில் சென்றதில் ம தி மு க எதையும் இழந்துவிடவில்லை. வைகோ இவர்மீது தி மு க ஆட்சில் போடப்பட்ட வழக்குகாக வைகோ இவருக்காக நீதிமன்றத்தில் வாதாடினார், வீடு, கார் என கட்சி தொண்டர் காசில் இவருக்கு கொடுக்கப்பட்டது. எந்த தொண்டனுக்கும் தலைவன் செய்யாததை வைகோ செய்தார். நன்றி மறந்துவிட்டார். இவர் சென்றதால் ம தி மு க விற்கு எந்த இழப்பும் இல்லை. இவரை போல் இன்னும் பல பேச்சாளர் உள்ளனர். நாட்டின் நலனை விரும்புவர்கள் வைகோ வின் உறுதியுடன். இப்பொழுது தான் மனிதர் வளைந்து இருக்கிறார். ஏன்டா சேர்ந்தோம் என்று எவர் நினைப்பர், ஏன்டா சேர்ந்தார் என்று ஜெயா நினைப்பர் இன்னும் சில மாதகலில். இது ம தி மு க விற்கு நன்மை. 
 
 
 
10.
saravanan tamil - chennai,இந்தியா
04-டிச-201215:09:15 IST Report Abuse
saravanan tamil சம்பத் அவர்கள் மதிமுக விலிருந்து விலகியது பெரும் தவறு, அதிமுக வில் இணைந்தது அதைவிட மாபெரும் தவறு. மதிமுக வை பொறுத்த வரை இது இழப்பு அல்ல. ஆனால் சம்பத் ஐ பொறுத்த வரை இது அவருக்கு மாபெரும் இழப்பு. ஏனென்றால் இனி அவர் வைகோ அவர்களிடம் பயின்ற தன்மானம், சுய கௌரவம், கொள்கை பிடிப்பு....போன்ற அனைத்தையும் இழக்க வேண்டிவரும். மாநில அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்வார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்தே மறைமுகமாக தெரிகிறது, அவருக்கு அங்கு எந்த வேலையும் இருக்காது என்று. சாதனை என்று ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு. தேவை எனில் ஜெயா டிவி நியூஸ் சேனல் கு நியூஸ் ரீடர் ஆகலாம். 
 
 
நன்றி - தினமலர்

Tuesday, December 04, 2012

அ.தி.மு.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத் - கறுப்பு சரித்திரம்

சென்னை: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மனக்கசப்பில் இருந்தார்:

ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை.

இந்நிலையில் இவர் அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது இழப்பு ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.



மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், இன்று முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததாக தகவல் வெளியானது.


இது குறித்து அதிகார பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை ஆயினும், அவர் முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை: ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதை முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நன்றி - தினமல்ர்



ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலராக வெகுகாலம் செல்வாக்குடன் இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஆனால், அண்மைக்காலமாக அவருக்கும் மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கும் கருத்து மோதல்கள் இருந்துவந்தன. இதை அடுத்து, மதிமுகவில் ஓரங்கட்டப்பட்டார் நாஞ்சில் சம்பத். அவரை பொதுக்கூட்டங்களுக்கு பேசுவதற்கு அழைக்க வேண்டாம் என்று வைகோ வாய்மொழி உத்தரவு இட்டிருந்ததாக செய்திகள் வந்தன.



இந்நிலையில், நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையக்  கூடும் என்றும், திமுகவினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், தாம் திமுக பக்கம் போகப் போவதில்லை என்று நாஞ்சில் சம்பத் கூறிவந்தார். இத்தகைய சூழ்நிலையில் இன்று நாஞ்சில் சம்பத் அதிமுக.வில் இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


நன்றி - தினமணி

சென்னை: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.


மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.



ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.



சென்னையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத், அதிமுக உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.


இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சார பீரங்கி!


ஒரிஜனல் மதிமுக நாங்களே- உரிமை கோருகிறார் நாஞ்சில் சம்பத்- போட்டி மதிமுக உருவாகிறது!


சென்னை: தமிழக அரசியலில் கட்சிகள் உடையும் அல்லது உடைக்கப்படும் காலம் இது! மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரிய கட்சிகள் தங்களுக்கு அடுத்த கட்சிகளை உடைப்பது கால்ந்தோறும் தமிழக அரசியலில் நடைபெற்று வரும் ஒன்றுதான்! அண்மையில்தான் தேமுதிகவை அதிமுக உடைத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் ஓசையின்றி மதிமுகவும் உடையக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உருவாகப் போகும் போட்டி மதிமுகவின் தலைவராக தற்போதைய கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் இருக்கக் கூடும் என்றே தெரிகிறது.



மதிமுக பொதுசெயலர் வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத் இடையேயான கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வைகோவோ, நாஞ்சில் சம்பத்தே கட்சியைவிட்டு விலகட்டும் என்று எண்ணுகிறார். ஆனால் நாஞ்சில் சம்பத்தே. வைகோவை விட கட்சிக்காக அனைத்து வகைகளில் அதிகம் உழைத்த நான் ஏன் என் கட்சியைவிட்டு விலகுவேன்... அது நடக்காது.. வேண்டுமானால் நீக்கிப்பாருங்கள்..நடப்பது என்னவென்று தெரியும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.



இன்று சன் நியூஸ தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டியில் அவரது "போட்டி மதிமுக" மனநிலை வெளிப்படையாகவே வெளிப்பட்டது. அந்தப் பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தாவது:



கடந்த 43 நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களில் செய்தி வருவது என்பது தானாக வெளியிடப்படுவதல்ல.. யாரோ பற்ற வைத்துவிட வெளிவரும் செய்திகள்தான். என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களே இப்படி செய்தியை கசியவிட்டிருக்கின்றனர். ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை இப்படி பேசவைக்கிறவனாக மாற்றியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.



கருத்து வேறுபாடுகளுக்கு கதவு திறந்து வைக்கிற பழக்கம் என்னிடத்தில் இருந்தது இல்லை. எந்த ஒரு அத்துமீறலையும் நான் செய்ததும் இல்லை. எந்த ஒரு சிபாரிசுக்கும் சென்றது இல்லை. எம்.எல்.ஏ. பதவிக்கோ எம்.பி. பதவிக்கோ கோரிக்கை வைத்ததும் கிடையாது. எனக்கு விதிக்கப்பட்ட கடமையை நான் செவ்வனே செய்து வந்திருக்கிறேன்.


என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வைகோ நீண்டகாலமாகவே திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஒத்திகைதான் தற்போது நடைபெற்று வருகிறது.


கடந்த 43 நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வந்த பிறகும் என் மகளின் மீது சத்தியமிட்டு என்னால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொன்ன பிறகும் சம்பத்துக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று வைகோ சொல்லாமல் சங்கொலி இதழில் என்னை இழித்தும் பழித்தும் எழுதுகிற வைகோவை ‘சாரைப் பாம்பு' என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?


தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் உட்கட்சி பிரச்சனையில் வெளியேற்றறப்பட்டிருக்கிறார். சிலர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது என் உருவப்பொம்மையை என் சொந்த ஊரிலேயே கொளுத்தியிருக்கின்றனர். நான் கொளுத்தியவன் மீது குற்றம்சாட்டவில்லை. என் உருவபொம்மையைக் கொளுத்தச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு என் சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதற்காகவே வைகோ திட்டமிட்டு நடத்திய நாடகம்தான் இது!



வைகோவுக்கு அதிமுக கூட்டணியைவிட்டால் வேறு கதி இல்லை. அதனால்தான் அதிமுக அரசு குறித்து விமர்சிப்பது இல்லை. அவர் அங்குதான் போய்சேருவார். அதற்காகத்தான் நாஞ்சில் சம்பத்துக்கு எம்.பி. பதவி கேட்டார் என்றெல்லாம் பரப்பிவிடுகின்றனர். செப்டம்பர் 7-ந் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட நடைபெற்றது. அப்பொழுது யாரும் இதுபற்றி பேசவில்லையே!



என்னை மதிப்பவர்களை மட்டுமே நான் மதிப்பேன்.. என்னை மதிக்காதவர்களை மதிக்க மனசு வராது. ஒவ்வொரு ஊரிலும் யார் யார் கட்சிக்காக உழைக்கிறவர்கள் என்று வைகோவால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியாது. என்னால் முடியும். வைகோ பரப்பிவிடுவது போல் மதிமுக மாவட்ட செயலாளர்களை ஓரணியில் திரட்டவெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.. முயற்சிக்கவும் மாட்டேன். என்னிடத்தில் நாள்தோறும் என் தம்பிமார்கள் ஆதரவு தெரிவித்து பேசினாலும் அவர்களை எனக்கு ஆதரவாக இருக்கச் சொல்லி கேட்பதும் இல்லை.


மதிமுகவுக்காக வைகோவைக் காட்டிலும் கடுமையாக உழைக்கிறேன். அவரைக் காட்டிலும் தொண்டர்களின் அன்பைப் பெறுகிறேன். கட்சி எல்லைகளைக் கடந்து இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்கிறேன். கடல் கடந்து நாடுகளிலெல்லாம் பேசிவருகிறேன். என் இமேஜ் ஏறி வருகிறது. அதை அவரால் பொறுத்துக் கொள்ளவில்லை.


தரம்கெட்ட, அடுத்தவர்களின் இருப்பை ஒத்துக் கொள்ளாத வியாதியின் விளைவுதான் இது. நான் ஒருபோதும் அவருக்கு போட்டியாக என்னைக் கருதியது இல்லை. நான் பிகராக இருப்பதுதான் இப்பொழுது பிரச்சனை.


என்னைப் பொறுத்தவரை என்னை ஆட்கொண்ட தலைவனின் பெருமையைத்தான் பேசுவேனே தவிர அவர்களின் சிறுமையை ஒருபோதும் கோடிட்டுக் காட்டியது கிடையாது. நான் நாகரிகமாக பேசுவேனே தவிர நாலாந்தரமாக பேசமாட்டேன்...


நான் பாலைவிட பரிசுத்தமாவன். நான்குபேர் நகைக்கும்படியாக நடக்கமாட்டேன். நான் அரசியல்வாதியைப் போல் நடந்து கொள்ளமாட்டேன். மனிதனைப் போல் நடந்து கொள்வேன்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நான் வளர்த்த இயக்கம்.. அதில் இருந்து விலகமாட்டேன்.. விலகமாட்டேன்.



நான் வைகோவைக் காட்டிலும் அதிக மேடைகளில் பேசியிருக்கிறேன். அதிக வழக்குகளை சந்தித்திருக்கிறேன். அதிக அளவு பயணம் செய்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போய் கூட்டம் நடத்தினால் 10 இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். மேடைப் பேச்சு பேசிக் கொண்டு தின்றுவிட்டு உறங்குகிறவன் அல்ல இந்த நாஞ்சில் சம்பத்! நஞ்சு அருந்தச் சொன்னால் முதல் ஆளாக நிற்பவன் நாஞ்சில் சம்பத்!



என்னால் மதிமுகவுக்கு எப்போதும் பிரச்சனை வந்தது. தள்ளாடிய நிலையில் தலைமை எடுத்த முடிவு. அதனால் தத்தளித்தவர் நாங்கள்.


நெஞ்சிலே வக்கிரமத்தை வைத்துக் கொண்டு கருப்பை தேக்கி வைத்துக் கொண்டு என் கொடும்பாவியை கொளுத்தச் சொன்ன மனசாட்சியற்றவர் என்பதை தெரிந்து கொண்டதால்தான் வைகோவை என் மகள் திருமணத்துக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.


என்னை கட்சியைவிட்டு வைகோ நீக்கிப் பார்க்கட்டும். அப்போது என் தம்பிமார்கள் அனைவருடனும் சேர்ந்து முடிவெடுப்போம். காலம்தான் அதை தீர்மானிக்கும் என்றார்.


தாம் உருவாக்கிய வளர்த்த மதிமுகவை விட்டு தாம் ஒருபோதும் விலகமாட்டேன் என்றும் தமக்குப் பின்னால் தம்பிமார்கள் இருக்கிறார்கள் என்று மதிமுக தொண்டர்களைக் குறிப்பிட்டு நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதும் வைகோவைவிட மதிமுகவுக்காக பாடுபட்டவன் நானே என்று பிரகடனம் செய்திருப்பதும் நாஞ்சில் சம்பத் ஒரு தெளிவான முடிவாக அதாவது போட்டி மதிமுகவை உருவாக்கத்தான் போகிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.


இதனை உணர்த்தும்விதமாகத்தான் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், நான் எடுக்கப் போகும் முடிவால் எதிரிகள் அச்சப்படுவர் என்று கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாகர்கோவில்: எனது சொந்த ஊரில், அதுவும் என் தாய் பிறந்த ஊரில் எனது கொடும்பாவியை எரித்துள்ளனர். சொந்த ஊரில் எனக்கு செல்வாக்கு இல்லை என்று காட்டுவதற்காக இப்படிச் செய்துள்ளனர். யாருக்கு சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதை கலிங்கப்பட்டியில் போய் விசாரித்தால் தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
வைகோ, நாஞ்சில் சம்பத் இடையே என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இந்த நிலையில் நக்கீரன் இதழுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், அவரை சாரைப்பாம்பு என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்த நிலையி்ல சம்பத்தின் சொந்த ஊரில் அவரது கொடும்பாவியை மதிமுகவினர் கொளுத்தினர்.


கலிங்கப்பட்டி போய்ப் பார்த்தால் வைகோவின் செல்வாக்கு தெரியும்.. சம்பத் கடும் தாக்கு


இதுகுறித்து ஒரு இதழுக்கு சம்பத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்று காட்டுவதற்காக சிலர் நடத்திய நாடகமே எனது கொடும்பாவி கொளுத்தப்பட்ட சம்பவம். இதை கொளுத்த சொன்னவர்களுக்கும், கொளுத்தியவர்களுக்கும் இதனால் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அந்த மகிழ்ச்சிக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன்.



ஆனாலும் பிதாவே இவர்களை மன்னியும். இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள் என்று பிரார்த்தனை செய்வேன்.

மதிமுகவில் இருந்து என்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை தேடுகிறேன். மதிமுக இயக்கத்தின் வளர்ச்சிக்காக போராடியவன். மதிமுகவில் கொள்கை பிடிப்போடு இருந்ததால் முதலில் கைது செய்யப்பட்டவனும், முதலில் வழக்கை சந்தித்தவனும், முதல் விபத்தில் சிக்கியவனும் நான்.

இப்போது எனக்கு எதிராக கொடும்பாவி கொளுத்தியதன் மூலம் இன்னும் நான் இயக்கத்தில் இருக்கிறேன் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் என்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை.

நான் இதுவரை 4 பேர் நகைக்கும்படி, முகம் சுழிக்கும்படி, பழிச்சொல் பேசும்படி நடந்ததில்லை. கழகத்தின் நிர்வாகத்தில் தலையிட்டதோ, அத்துமீறி நடந்து கொண்டதோ இல்லை. யாருக்காகவும் சிபாரிசுக்கும் போய் நின்றதில்லை. இயக்கத்தை சேதாரமின்றி வழி நடத்த இரவு பகலாக, பகல் இரவாக உழைத்துள்ளேன். இதற்கு பின்பும் நான் புறக்கணிக்கப்படுவதற்கான காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.


மதிமுகவில் எனக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்று காட்டுவதற்காகவே திட்டமிட்டு எனது சொந்த ஊரில், அதுவும் எனது தாய் பிறந்த ஊரில் என் கொடும்பாவி கொளுத்தப்பட்டுள்ளது. இது வைகோ நடத்திய நாடகம். சொந்த ஊரில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது பற்றி கலிங்கப்பட்டியில் போய் விசாரித்தால் தெரியும்.

திராவிட இயக்கத்தின் சமகால தமிழக அரசியலில் இதுவரை யாரும் தொடாத உச்சத்தை தொட்டவன் நான். எல்லா கட்சிகளும் என்னை விரும்புவார்கள். ஆனால் இதுபற்றி முடிவு எடுக்க நான் பலமுறை யோசிக்க வேண்டும்.
ஆனால் என்னை விட காலம் முக்கியமானது. காலம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.

இன்னொன்று, அரசியலில் சேராமலேயே நான் சுடர் விட முடியும். அரசியல் எல்லை தாண்டி நான் இலக்கிய தளத்தில் கொடி பறக்கவிட்டவன். அந்த தளத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் என்னால் மேலும் உயர முடியும்.

எனது இல்ல திருமண விழாவில் பங்கேற்க வைகோவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தேன். இப்போது ஏற்பட்ட நிலைமைக்கு பிறகு அவர் என் வீட்டு திருமண விழாவில் பங்கேற்க வரவேண்டாம் என்று கூறுகிறேன் என்றார் அவர்.

வைகோவை ‘சாரைப் பாம்பு’ என்று கூறிய நாஞ்சில் சம்பத்தின் உருவபொம்மை எரிப்பு

திருவட்டார்: திருவட்டார் அருகே நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரில் அவரின் உருவபொம்மையை மதிமுகவினர் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


மதிமுகவின் முக்கிய பிரமுகரான நாஞ்சில் சம்பத் கடந்த வாரம் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், வைகோ சத்தமில்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.


இந்த பேட்டி வெளியான உடன் மதிமுக வினர் பலரும் நாஞ்சில் சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரு அருகே உள்ள வேர்கிளம்பியில் திருவட்டாரு ஒன்றிய செயலாளர் சேம்ராஜ் தலைமையில் கூடிய மதிமுகவினர், நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மதிமுகவை விட்டு வெளியேறு என்று கூறிய அவர்கள், நாஞ்சில் சம்பத்தின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.


இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த குமரி மாவட்ட பொறியியல் அணி அமைப்பாளர், சுரேஷ் குமார், தலைவர் வைகோவைப் பற்றி மதிமுக வில் இருந்து கொண்டே அவதூறு பரப்பி வருகிறார் நாஞ்சில் சம்பத் என்று கூறினார்.



அதிமுக ஆட்சிக் காலத்தில் நாஞ்சில் சம்பத்தின் வீட்டினை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அப்போது பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வைகோ சங்கொலியில் கடிதம் எழுதினார். இதனை கண்ட மதிமுக தொண்டர்கள் பணம் அனுப்பி நாஞ்சில் சம்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்தனர் என்றார். இதனைக் கூட மறந்துவிட்டு அவர் தலைவரைப் பற்றியே அவதூறாக பேசி வருகிறார் என்று கூறினார். இதன் காரணமாகவே அவரது சொந்த ஊருக்கு அருகிலேயே இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.



சென்னை: மலரக்கூடாது என்று மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் வைகோ என்று கூறியுள்ளார் மதிமுகவின் முக்கியப் பிரமுகரான நாஞ்சில் சம்பத்.



விரைவில் இவர் மதிமுகவிலிருந்து வெளியேறப் போகிறார் அல்லது வெளியேற்றப்படப் போகிறார் என்று ஒரு பேச்சு நிலவி வரும் நிலையில் 'நக்கீரன்' இதழுக்குப் பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார் சம்பத். அதன் சில துளிகள்...



என் தரப்பில் நான் குற்றம் நினைக்கவில்லை. இயல்பாகவே எந்தத் தவறும் இழைக்கிற மனோபலம் எனக்கில்லை. வைகோ மனம் சுழிக்கும்படி அவரிடம் நான் எதுவும் கேட்கவும் இல்லை


18 ஆண்டு கால ம.தி.மு.க. பயணத்தில் 3 சட்டமன்றத் தேர்தல், 3 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து ஒரு நாடறிந்த சொற்பொழிவாளன் என்ற நிலையில் எனக்கு ஒரு தொகுதி தாருங்கள் என்று கேட்கவும் இல்லை என்று கூறியுள்ள நாஞ்சிடம், ஒருவேளை நீங்கள் சீட் கேட்டிருந்தால் வைகோ தந்திருப்பாரா? என்ற கேள்விக்கு, அவர் முடிவை நம்பிக்கையோடு என்னால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் நாஞ்சில்.



மேலும் உங்களை வைகோ, கட்சியில் இருந்து நீக்கிவிடுவார் என்ற அரசல் புரசல் செய்திகளை நீங்கள் நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஆமாம். 18 ஆண்டுகளாக எதிர்நீச்சல் போடுற மதிமுக கரை சேர வேண்டுமென்று அக்கறையோடு கடமையாற்றிய என்னை வைகோ சங்கொலியில் நான் ஒரு குடிலன் என்றும், விஷ விதை தூற்றுகிறவன் என்றும் மனசாட்சியற்ற முறையில் எழுதியிருக்கிறார்.


இதேபோல மலரக்கூடாது என்று மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.


நீங்கள் தேமுதிகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நான் தேமுதிகவை ஒரு இயக்கமாகவே நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.



கடைசியாக இரண்டு தலைவர்களுக்கு (கருணாநிதி, வைகோ) தொண்டனாக இருந்திருக்கிறீர்கள். அந்த இரு கட்சிகளுக்குமிடையே உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்விக்கு, இது விரிவாக எழுத வேண்டிய ஒரு புத்தகம். ஒன்றுமட்டும் சொல்வேன்; கலைஞர் அரை நூற்றாண்டு கால தமிழகத்தின் தலைப்புச் செய்தி என்று கூறியுள்ளார் சம்பத்.



இதன்மூலம் மதிமுகவிலிருந்து விலகினால் அவர் திமுக பக்கம் வரக் கூடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அவரை அதிமுகவுக்கு இழுக்கவும் முயற்சி நடக்கிறதாம்.


நன்றி - நக்கீரன் , தட்ஸ் தமிழ்

Sunday, November 11, 2012

சன் நியூஸ் - வை கோ எனக்கு அல்வா குடுத்தது ஏன்? - நாஞ்சில் சம்பத் பேட்டி

நாஞ்சில் சம்பத் உருக்கம்

‘‘கண்கள் பூக்கும்வரை காத்திருப்பேன்!’’

ப்ரியன்

வைகோ, என்னைக் கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்துவிட்டார். விசாரணை இல்லாமலே எனக்குத் தண்டனை கொடுக்க நினைக்கிறார் வைகோ," என்று உருகுகிறார் நாஞ்சில் சம்பத்.
எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. கருத்து வேறுபாடுகளுக்குக் கதவு திறந்து வைக்கின்ற பழக்கமும் எனக்கு இல்லை. எப்போதும் தொலைபேசியில்கூட நான் அவரைத் தொடர்பு கொள்வதில்லை. ஏதாவது சொல்ல வேண்டுமென்று கருதினால் நேரில் சந்தித்துச் சொல்வதுதான் என் வழக்கம். கடந்த ஆகஸ்ட் திங்கள் 24ம் தேதி, அவருடைய தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு, உதவியாளர் சந்துருவிடம், ‘பொதுச் செயலாளர் வீட்டுக்கு நான் வந்துகொண்டிருக்கிறேன்,’ என்று சொல்லிவிட்டுச் சென்றேன்.


வீட்டில் அவர் இல்லை. காத்திருந்தேன். வந்தவுடன், ‘மகள் திருமணம், 2013, மே.12 அன்று நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. வர வசதியாக இருக்குமா?’ என்று கேட்டேன். ‘அதனாலென்ன வந்து விடுகிறேன்என்று டயரியில் குறித்துக் கொண்டார். ‘சாப்பிடுங்கள்என்று வற்புறுத்தினார். தவிர்க்கப் பார்த்தேன். முடியவில்லை. அவரே, ‘உங்களுக்கு மீன் பிடிக்குமேஎன்று பாசத்துடன் பரிமாறினார். வயிறாரச் சாப்பிட்டேன். ‘மாப்பிள்ளை யார்என்றெல்லாம் விசாரித்தார். பின்னர் விடை பெற்றேன். அதுதான் வைகோவுடனான கடைசி விருந்தாக அமையுமென்று கனவில்கூட நினைக்கவில்லை.


கல்யாணத் தேதியும் வாங்கி வைத்துக் கொண்டு மகனுக்கு மெடிக்கல் சீட் வேண்டும் என்ற கோரிக்கையையும் அவரிடத்தில் கொடுத்துவிட்டு 47 வழக்குகளையும் சந்தித்துக் கொண்டு ஏங்குகிற நான் இனி வேறு ஒரு இயக்கம் என்று எப்படிச் சிந்திக்க முடியும்? நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதுதான் வினைப்பயனோ என்று எண்ணி, எண்ணி கலங்குகிறேன். நான் மட்டுமல்ல; தென்திசை குமரி முதல் திருத்தணி எல்லைவரை இந்த இயக்கத்தைக் காப்பாற்ற களத்தில் நிற்கிற எல்லா தொண்டர்களும் வேதனைப்படுகிறார்கள்.



கடந்த செப்டெம்பர் 28ம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்னை ஒரு மாதம் தாண்டியும் இழுத்துக் கொண்டே போகிறது என்றால் எனக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் முடிவெடுத்து விட்டார் என்பதுதான் புரிகிறது.


மேலப்பாளையம், சத்திரப்பட்டி பொதுக் கூட்டம், மதுரை திருமணம்; இப்படி நான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. உட்கட்சி ஜனநாயகம் உளுத்துவிட்டது. கேள்வி கேட்க யாரும் இல்லை. கேட்டாலும் பதிலில்லை. மௌனத்தின் மூலமே என் மீது மண்ணை அள்ளிப் போடுவதற்குத் தீர்மானித்துவிட்டார். எது வருகிறதோ அதை எதிர்கொள்ள நான் தயாராகிவிட்டேன். காலம் என்ன கோலம் போடுகிறதோ தெரியவில்லை. நான் காத்திருக்கிறேன். கண்கள் பூத்துப் போகிறவரை காத்திருப்பேன்."


வைகோவுடன் கடைசி விருந்து என்று எப்படிச் சொல்கிறீர்கள்?


அவர் பேசாவிட்டாலும் பரவாயில்லை. மற்ற கழக முக்கியஸ்தர்கள்கூட என்னிடத்தில் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டார்கள். ‘நாடாளுமன்றத்தில் வைகோ குரல்என்ற புத்தக அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கு எந்த மாவட்டத்திலும் நான் அழைக்கப்படவில்லை. எனவே நிராகரித்துவிட்டார்கள் என்பதை அவர் நினைத்தாலும் மறுக்க முடியாது."



வேறெந்த இயக்கம் போவதாக உத்தேசம்?


வேதனைகளும் விலங்குகளும் வருத்தமும் வலியும் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன்!"


நன்றி - கல்கி 

சென்னை: தமிழக அரசியலில் கட்சிகள் உடையும் அல்லது உடைக்கப்படும் காலம் இது! மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரிய கட்சிகள் தங்களுக்கு அடுத்த கட்சிகளை உடைப்பது கால்ந்தோறும் தமிழக அரசியலில் நடைபெற்று வரும் ஒன்றுதான்! அண்மையில்தான் தேமுதிகவை அதிமுக உடைத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் ஓசையின்றி மதிமுகவும் உடையக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உருவாகப் போகும் போட்டி மதிமுகவின் தலைவராக தற்போதைய கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் இருக்கக் கூடும் என்றே தெரிகிறது.




மதிமுக பொதுசெயலர் வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத் இடையேயான கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வைகோவோ, நாஞ்சில் சம்பத்தே கட்சியைவிட்டு விலகட்டும் என்று எண்ணுகிறார். ஆனால் நாஞ்சில் சம்பத்தே. வைகோவை விட கட்சிக்காக அனைத்து வகைகளில் அதிகம் உழைத்த நான் ஏன் என் கட்சியைவிட்டு விலகுவேன்... அது நடக்காது.. வேண்டுமானால் நீக்கிப்பாருங்கள்..நடப்பது என்னவென்று தெரியும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.



இன்று சன் நியூஸ தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டியில் அவரது "போட்டி மதிமுக" மனநிலை வெளிப்படையாகவே வெளிப்பட்டது. அந்தப் பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தாவது:




கடந்த 43 நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களில் செய்தி வருவது என்பது தானாக வெளியிடப்படுவதல்ல.. யாரோ பற்ற வைத்துவிட வெளிவரும் செய்திகள்தான். என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களே இப்படி செய்தியை கசியவிட்டிருக்கின்றனர். ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை இப்படி பேசவைக்கிறவனாக மாற்றியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.



கருத்து வேறுபாடுகளுக்கு கதவு திறந்து வைக்கிற பழக்கம் என்னிடத்தில் இருந்தது இல்லை. எந்த ஒரு அத்துமீறலையும் நான் செய்ததும் இல்லை. எந்த ஒரு சிபாரிசுக்கும் சென்றது இல்லை. எம்.எல்.ஏ. பதவிக்கோ எம்.பி. பதவிக்கோ கோரிக்கை வைத்ததும் கிடையாது. எனக்கு விதிக்கப்பட்ட கடமையை நான் செவ்வனே செய்து வந்திருக்கிறேன்.



என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வைகோ நீண்டகாலமாகவே திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஒத்திகைதான் தற்போது நடைபெற்று வருகிறது.



கடந்த 43 நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வந்த பிறகும் என் மகளின் மீது சத்தியமிட்டு என்னால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொன்ன பிறகும் சம்பத்துக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று வைகோ சொல்லாமல் சங்கொலி இதழில் என்னை இழித்தும் பழித்தும் எழுதுகிற வைகோவை ‘சாரைப் பாம்பு' என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?





தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் உட்கட்சி பிரச்சனையில் வெளியேற்றறப்பட்டிருக்கிறார். சிலர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது என் உருவப்பொம்மையை என் சொந்த ஊரிலேயே கொளுத்தியிருக்கின்றனர். நான் கொளுத்தியவன் மீது குற்றம்சாட்டவில்லை. என் உருவபொம்மையைக் கொளுத்தச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு என் சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதற்காகவே வைகோ திட்டமிட்டு நடத்திய நாடகம்தான் இது!



வைகோவுக்கு அதிமுக கூட்டணியைவிட்டால் வேறு கதி இல்லை. அதனால்தான் அதிமுக அரசு குறித்து விமர்சிப்பது இல்லை. அவர் அங்குதான் போய்சேருவார். அதற்காகத்தான் நாஞ்சில் சம்பத்துக்கு எம்.பி. பதவி கேட்டார் என்றெல்லாம் பரப்பிவிடுகின்றனர். செப்டம்பர் 7-ந் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட நடைபெற்றது. அப்பொழுது யாரும் இதுபற்றி பேசவில்லையே!



என்னை மதிப்பவர்களை மட்டுமே நான் மதிப்பேன்.. என்னை மதிக்காதவர்களை மதிக்க மனசு வராது. ஒவ்வொரு ஊரிலும் யார் யார் கட்சிக்காக உழைக்கிறவர்கள் என்று வைகோவால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியாது. என்னால் முடியும். வைகோ பரப்பிவிடுவது போல் மதிமுக மாவட்ட செயலாளர்களை ஓரணியில் திரட்டவெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.. முயற்சிக்கவும் மாட்டேன். என்னிடத்தில் நாள்தோறும் என் தம்பிமார்கள் ஆதரவு தெரிவித்து பேசினாலும் அவர்களை எனக்கு ஆதரவாக இருக்கச் சொல்லி கேட்பதும் இல்லை.



மதிமுகவுக்காக வைகோவைக் காட்டிலும் கடுமையாக உழைக்கிறேன். அவரைக் காட்டிலும் தொண்டர்களின் அன்பைப் பெறுகிறேன். கட்சி எல்லைகளைக் கடந்து இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்கிறேன். கடல் கடந்து நாடுகளிலெல்லாம் பேசிவருகிறேன். என் இமேஜ் ஏறி வருகிறது. அதை அவரால் பொறுத்துக் கொள்ளவில்லை.



தரம்கெட்ட, அடுத்தவர்களின் இருப்பை ஒத்துக் கொள்ளாத வியாதியின் விளைவுதான் இது. நான் ஒருபோதும் அவருக்கு போட்டியாக என்னைக் கருதியது இல்லை. நான் பிகராக இருப்பதுதான் இப்பொழுது பிரச்சனை.



என்னைப் பொறுத்தவரை என்னை ஆட்கொண்ட தலைவனின் பெருமையைத்தான் பேசுவேனே தவிர அவர்களின் சிறுமையை ஒருபோதும் கோடிட்டுக் காட்டியது கிடையாது. நான் நாகரிகமாக பேசுவேனே தவிர நாலாந்தரமாக பேசமாட்டேன்...


நான் பாலைவிட பரிசுத்தமாவன். நான்குபேர் நகைக்கும்படியாக நடக்கமாட்டேன். நான் அரசியல்வாதியைப் போல் நடந்து கொள்ளமாட்டேன். மனிதனைப் போல் நடந்து கொள்வேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நான் வளர்த்த இயக்கம்.. அதில் இருந்து விலகமாட்டேன்.. விலகமாட்டேன்.



நான் வைகோவைக் காட்டிலும் அதிக மேடைகளில் பேசியிருக்கிறேன். அதிக வழக்குகளை சந்தித்திருக்கிறேன். அதிக அளவு பயணம் செய்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போய் கூட்டம் நடத்தினால் 10 இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். மேடைப் பேச்சு பேசிக் கொண்டு தின்றுவிட்டு உறங்குகிறவன் அல்ல இந்த நாஞ்சில் சம்பத்! நஞ்சு அருந்தச் சொன்னால் முதல் ஆளாக நிற்பவன் நாஞ்சில் சம்பத்!
என்னால் மதிமுகவுக்கு எப்போதும் பிரச்சனை வந்தது. தள்ளாடிய நிலையில் தலைமை எடுத்த முடிவு. அதனால் தத்தளித்தவர் நாங்கள்.



நெஞ்சிலே வக்கிரமத்தை வைத்துக் கொண்டு கருப்பை தேக்கி வைத்துக் கொண்டு என் கொடும்பாவியை கொளுத்தச் சொன்ன மனசாட்சியற்றவர் என்பதை தெரிந்து கொண்டதால்தான் வைகோவை என் மகள் திருமணத்துக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.



என்னை கட்சியைவிட்டு வைகோ நீக்கிப் பார்க்கட்டும். அப்போது என் தம்பிமார்கள் அனைவருடனும் சேர்ந்து முடிவெடுப்போம். காலம்தான் அதை தீர்மானிக்கும் என்றார்.



தாம் உருவாக்கிய வளர்த்த மதிமுகவை விட்டு தாம் ஒருபோதும் விலகமாட்டேன் என்றும் தமக்குப் பின்னால் தம்பிமார்கள் இருக்கிறார்கள் என்று மதிமுக தொண்டர்களைக் குறிப்பிட்டு நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதும் வைகோவைவிட மதிமுகவுக்காக பாடுபட்டவன் நானே என்று பிரகடனம் செய்திருப்பதும் நாஞ்சில் சம்பத் ஒரு தெளிவான முடிவாக அதாவது போட்டி மதிமுகவை உருவாக்கத்தான் போகிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.



இதனை உணர்த்தும்விதமாகத்தான் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், நான் எடுக்கப் போகும் முடிவால் எதிரிகள் அச்சப்படுவர் என்று கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 thanx - thatstamil