Monday, November 19, 2012

காமெடி எக்ஸ்பிரஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் - சிறுகதை

காமெடி எக்ஸ்பிரஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கீர்த்தனாரம்பத்திலே, ஒபாமாவும் ரோம்னியும் முட்டிக் கொண்டிருந்த காலகட்டத்திலே, இந்தக் கதை ஆரம்பிக்கிறது. தனக்குகன்னா பின்னாவென்று தேர்தல் நிதி வாரிக் கொடுக்கும் NRI இந்தியர்களைக் குஷிப்படுத்த அதிபர் ஒபாமா வருடாவருடம் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுவது தெரிந்ததே.
நவம்பர் 6, 2012 எலெக்ஷன் ஜுரம் தொற்றிக் கொண்ட நிலையில் நவம்பர் 13ல் வரும் தீபாவளியை அக்டோபரிலேயே கொண்டாடிவிட அமெரிக்க அரசு உத்தரவு பறக்கிறது.
வெள்ளை மாளிகையில் எக்கச் சக்கமான இந்தியர்கள் கூட்டம்.
வடக்கத்தி சேட்டு ஒருவர் ஒபாமாவின் காதில் கிசுகிசுக்கிறார்: வழக்கமா அல்வா சாப்பிட்டுட்டு போட்டோ எடுத்துக்கிட்டு போயிடுவோம். அடுத்த தீபாவளிக்கு நீங்க இருப்பீங்களா போயிடுவீங்களான்னு தெரியல."
ஒபாமா சேட்டை ஒரு மாதிரியாக முறைக்க, சேட்டு தொடர்கிறார்.

மீன், அமெரிக்க ஜனாதிபதியா. அதனால இந்த வருஷம் நீங்க உங்க கையால ஒரு வெடியாவது கொளுத்தணும்னு எல்லாரும் ஆசைப்படறாங்க."
ஒபாமாவால் என்றைக்குத்தான் உடனடியாக முடிவெடுக்க முடிந்தது? புருவத்தைச் சுருக்கி யோசிக்கிறார். உடனடியாக உதவியாளர் ஒருவர் ஓடி வந்து, சார், எல்லாருமே ரூ. 10,000 ப்ளேட்வாலா ஆளுங்க. ஒரே ஒரு வெடி கொளுத்தினா ஒண்ணும் கொறைஞ்சிடாது. அதுக்கு வேணும்னா தனியா ஒரு ரேட்டு போட்டு கலெக்ஷன் பண்ணிடறேன்."
உடனே பிரகாசமான ஒபாமா ஒரு ஒத்தை வெடியை ரோஸ் கார்டனில் கொளுத்த ஆயத்தமாகிறார். எல்லோரும் போட்டோ பிடிக்க ரெடி. ஆனால் அந்த ஒத்தை வெடி வெடிக்காமல் நமுத்துப் போய் பிசுபிசுக்கிறது.
உதவியாளர் ஓடிவந்து அதைக் கையிலெடுத்துப் பார்த்து, சத்தமாக 'Made in China' என்கிறார்.
ஒபாமா உடனே தொண்டையைச் செருமியபடி,சீனர்கள் நம்மை ஏற்றுமதியில் ஏமாற்றுவது எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இனிமேல் ஒவ்வொரு நூடுல்ஸ் பாக்கெட்டிலும் எத்தனை நூடுல்ஸ் இருக்கிறது என்று அவர்கள் கண்டிப்பாகத் தெரிவித்தே ஆகவேண்டும். யாரங்கே? இது அரசாணை... உடனே தண்டோரா போடுங்கள்," என்று கர்ஜிக்கிறார்.
வழக்கம்போல் அவருடைய கட்சி ஜால்ரா கூட்டம் விசிலடிக்கிறது.
எந்த இந்தியனாவது இன்னொரு இந்தியனை முன்னால நிற்கவிடுவானா? ‘இதுதான் சமயம்என்று தமிழர் ஒருவர் சேட்டின் அடித்தொடையில்நறுக்கென்று கிள்ள, அவர் பயந்து விலக, அவருக்கு முன்னால் போய் நின்று, அது போனா போவட்டும், சார், இதை வெடிங்க. இது Made in Sivakasi, Tamil Nadu"
சிவகாசி கெடக்கட்டும்யா, தென்காசியில உங்க ஊரு அர்நால்ட் ஷ்வாசநெகர் இருக்காரே, அவரு சௌக்கியமா?"
மிஸ்டர் ப்ரசிடெண்ட், நெசமாவே உங்களுக்கு சரத்தைத் தெரியுமா?"
என்னது தெரியுமாவா? வேர்ல்ட் வைட் ஒரே நேரத்தில நெட்ல தமிழ்ப் படம் ரிலீஸ் பண்ணினஜக்கு பாய்அவருதானேயா?"
அடேடே, ஒபாமாவுக்கு அவ்வளவு தூரம் ஜெனரல் நாலட்ஜா?
போட்ரா போன சித்தப்புக்கு!
நெசமாவே போன்ல ஒபாமாதானுங்களா? நானு நாட்டாமை 2, கோச்சடையான் 3, ராணா 4 எல்லாத்திலயும் கும்பலோட கோவிந்தாவா நடிக்கிறேன்னு அவருகிட்ட சொல்லிட்டீங்களா?" - சமத்துவக்கட்சியின் சகலகோடி 11 உறுப்பினர்களும் ஒருங்கே தலையாட்ட, குஷியாகிறார் சரத்ஜி!
யூ ஸீ மிஸ்டர் ஒபாமா, மை சப்போர்ட் ஈஸ் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ. நானே 2011 தமிழ்நாட்டு சி.எம்.மா ஆகலாம்னு தான் இருந்தேன். சரி, அப்புறமா பார்த்துக்கலாம்னு இப்ப மறுபடியும் டெம்பரவரி பவ்யமாயிட்டேன். கேன் அரேஞ்ச் ஈவன் டன் க்ரோர் சப்போர்ட்டர்ஸ் ஃபார் யூ. ஆனாக்க இந்தக் குண்டுச்சட்டியில குதிரை ஓட்ற கூடங்குளம்வாலாஸ் எல்லாருமே யூஸ்லெஸ்னு நீங்க ஒரு பதில் ஸ்டேட்மென்ட் மட்டும் விட்ருங்க.
அப்படியே ஹாலிவுட்ல எதுனா ஒரு படத்துல பல்டி அடிக்கிற ஸ்டன்ட் சீனா இருந்தாலும் பரவாயில்ல, நீங்க சொல்லி அதை மட்டும் எனக்கு வாங்கிக் கொடுத்துட்டீங்கன்னா உலகநாயகனுக்கு மின்னாடியே நானும் உலக சினிமாவுல..."

கால் கனெக்ஷனே சரியில்லயே," என்று காதைக் குடைந்தபடியே ஒபாமா லைனை டிஸ்கனெக்ட் செய்கிறார்.
வெள்ளை மாளிகையில் ராம்னிக்கு இல்லாத அல்லக்கைகளா? ஒபாமா - சித்தப்பு சமத்துவ மீட்டிங் நியூஸ் உடனே பரவி, அவரும் மேட்சிங்காகப் போடுகிறார் கேப்டனுக்கு ஒரு கால்!
ஹா, திஸ் ஈஸ் ராம்னி!"
ஏற்கெனவே கூடாரம் காலியானதில் பேஸ்தடித்துக் கிடக்கும் கேப்டன் போன் அடித்ததிலேயே செம கடுப்பாகிறார்.
வேட்டியை மடித்துக்கட்டி நாக்கைத் துருத்தி, , ஆர்ராது ராமுநீ, யார்கிட்ட விளையாடறீங்க, யாரோ மெனுவில இல்லாத வெள்ளைக்கார பேரையெல்லாம் சொன்னா நாங்க மெரண்ட்ருவமா?"
காலைத் தூக்கிச் சுவரில் வைத்து எகிறத் தயாராகும் தலைமையை, சோர்ந்து கிடக்கும் கட்சிக்காரர் ஒருவர் கூல் செய்கிறார்.
இல்லீங்க, நெசமாவே ராம்னிங்கறது அமெரிக்க அப்போசிஷன் லீடர்ங்க. ஒபாமாவை எதிர்த்து நிக்கிறாரு. உங்ககிட்ட ஏதோ ஆலோசனை கேட்கணும்கிறாரு."
, அதையெல்லாம் மொதல்லயே சொல்ல மாட்டீங்களாடா! உங்களுக்கெல்லாம் வெட்டிச் சம்பளம் அவனாடா கொடுக்குறான்?"
யூ ஸீ மிஸ்டர் ராம்னி, டோண்ட் வொர்ரி அபௌட் அம்மா, மீன் ஒபாமா. ஒபாமாவ ஒழிக்கணும்னு நீங்க நெனச்சீங் கன்னா மொதல்ல அவரோட கூட்டு வைக்கணும். ஜெயிச்சி வந்த உடனே அவருகிட்டயே பயங்கரமாய் மோதணும். அப்புறமா கூட்டும் கிடையாது, பொரியலும் கிடையாது எல்லாமே அவியல்தான்னு ஒரு ஸ்டேட்மென்டும் விடணும். நாட்ல அவனவனும் ஒண்ணும் புரியாம தலைய பிச்சிப்பான், நாம ஃபுல்பூஸ்ட்ல யாரையாவதுபளார் பளார்னு டைமிங்கா நாலு நெத்து நெத்திட்டுப் போயிட்டே இருக்கலாம்.
ஹலோ, ஹலோ, இருங்க, இருங்க, காலை கட் பண்ணிறாதீங்க. மொதல்ல அமெரிக்காவுல எங்க இந்தத் திராணி கிடைக்குதுன்னு மட்டும் கேட்டு வாங்கி பத்து ஃபுல் பெட்டி அனுப்புங்க. இங்ஙன ஒரு பயபுள்ளைக்கும் இந்த பெசல் நாலெஜ்ஜு பத்தாது. அக்காங்!"
ராம்னி தடாலென்று கீழே விழுந்து மூர்ச்சையாகிறார்!

 நன்றி - கல்கி 

நரேஷ் குப்தா ,குப்தர் பரம்பரையை சேர்ந்தவரா?




1. உங்க பையன் எல்லா பாடத்துலயும் பாஸ் ஆகிட்டான்

போலி பாஸ்ன்னு நினைக்குறேன்.

..............................
.......................

2. தலைவரே! மணல் கொள்ளை ஓவரா போனதால தமிழகமே பாலைவனமாப் போகுதுன்னு எல்லாரும் சொல்றாங்களே

ரொம்ப நல்லதா போச்சு. பாலைவனம்ன்னா ஏகப்பட்ட மணல் கிடைக்குமே.

.........................................................

3.தலைவர் பெயர் சூட்டு விழாவுல கலந்துக்கலையே ஏன்?

கோட்டு சூட்டு விழான்னா வர மாட்டாராம். வேட்டி விழான்னாதான் வருவாராம்.

......................................................

4. தலைவருக்கு மெமரி பவர் கம்மின்னு   Dr.  சொல்லிட்டாங்க.

அதனால என்ன?

அவர் தலைல ஆபரேஷன் பண்ணி மெமரி கார்டு இன்சர்ட் பண்ணிட்டா போதாதா?!

...........................................................

5. பெட்ரோல் விலையை இனிமே நிறுவனமே முடிவு பண்ணிக்கலாமாமே.

ஏதேது ?விட்டா பங்க்ல பெட்ரோல் போடுற பையனே விலையை தீர்மானிக்கலாம்ன்னு சொல்லிடுவாங்க போல.

.................................................................

6. மோஸ்ட்லி பொண்ணுங்க எதை விரும்புவாங்க?

காஸ்ட்லியா என்ன இருக்கோ அதை....,

............................................

7. தலைவர் பொண்ணுங்களை வலைவீசி பிடிக்குறாராம்.

ஆமா, இண்டெர்னெட்டுல சேட்டிங் பண்ணி செட் பண்றாரு. (ஒரு வழியா உண்மையை ஒத்துக்கிட்டான்பா)

...............................................................

8.விட்டு குடுத்து வாழ்ந்தா குடும்பம் நல்லா இருக்கும்.

எங்கே? மாதம் ஒரு முறை பட்டு எடுத்து குடுத்தாதான் (பட்டு புடவை) வாழ்ந்தாதான் ஒழுங்கா இருக்கா.

........................................................

9. இது தீவிர வாத குடும்பம்ன்னு எப்படி சொல்றே?!

குழந்தைகளுக்கு ஈசாப் கதைகள் சொல்லித்தராம கசாப் கதைகள் சொல்லித் தர்றாங்களே!?

..............................................

10. காலைல 10AMto 12pm  எங்க ஆஃபீஸ் அரட்டை அரங்கமா இருக்கும்.

அப்புறம்...,

12.30PM to 3PM குறட்டை அரங்கமா மாறிடும்.

...................................................

11. பொண்ணு பஞ்சவர்ண கிளி மாதிரி இருக்கா. ஏன் வேணாம்னுட்டே?!

பசல பூத்த மாதிரி (பச்சை) உடம்பு இருக்கே.

...........................................................

12. சாமியாரோட பையனை பார்த்தியா? சிங்க குட்டி போல இருக்கான்.

ரெய்டு வந்தப்ப பார்த்தியா? ஒரே தங்கட்டியா வந்ததே?!

...........................................................

13. தலைவர் ஒரு படிக்காத மேதைன்னு சொல்றாங்களே உண்மையா?!

பாதிதான் உண்மை. “படிக்காதவர்”

....................................................................

14. அவரு அரசியலுக்கு புதுசா?

ஆமா. ஆனா, ஊழலுக்கு பழசு.

......................................................................

15. தலைவருக்கு தாவரங்களை பத்தி எதுவுமே தெரியலைன்னு எப்படி சொல்றே?!

இலந்தப் பழம் இலங்கைல இருந்து இறக்குமதி ஆகுதான்னு கேட்குறாரே?!

............................................................

16. மேடம், நீங்க ஏன் டிடர்ஜெண்ட் சோப் யூஸ் பண்றதில்லை?

அது “ஜென்ட்ஸ்” யூஸ் பண்றதுன்னு நினைச்சேன்.

..........................................................

17. டாஸ்மாக்தான் தலைவர் குடி இருக்கும் கோயில் னு எப்படி சொல்றே?!

“குடி” இருக்குற இடத்துலதானே தலைவர் குடி இருப்பார்.

.............................................................

18. ஒரே ஆள் பல பேரை மேரேஜ் பண்ணிக்குற சம்பவங்கள் அதிகமாயிடுச்சே?!

பேங்க்ல வாங்குற லோனை ஒழுங்கா கட்ட மாட்டாங்க. கல்யாணம் மட்டும் கட்டிக்கிட்டே இருப்பாங்க.

.........................................................................

19.தலைவர் ரொம்ப அப்பாவின்னு எப்படி சொல்றெ.

தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தா ,குப்தர் பரம்பரையை சேர்ந்தவரான்னு கேட்குறாரே?

...................................................

20. தலைவர் மேடைல பேசும்போது அஜீத் மாதிரி..

எப்படி சொல்றே?

அவருக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு. ஆனா, முன்னாடி ஒரு பய இருக்க மாட்டான்.

Saturday, November 17, 2012

அம்மாவின் கைப்பேசி - சினிமா விமர்சனம்

http://chennaionline.com/images/gallery/2012/October/20121003060930/Ammavin_Kaipesi_Movie_Posters_Wallpapers_04.jpg 

ஒரு படத்தின் தயாரிப்பாளரோ , இயக்குநரோ அந்தப்படத்தில் தலை காட்ட ஆசைப்பட்டால்  பாலைவனக்கூடாரத்தில் தலைக்கு மட்டும் இடம் கேட்ட ஒட்டகத்தின் கதை ஆகி விடும், ஒரு நல்ல கதை கூட தேவையற்ற ஆக்ரமிப்பால் திசை மாறி திரைக்கதை தடுமாறிப்பயணித்து விழலுக்கு இரைத்த நீர் ஆகி விடும் என்பதற்கு சமீபத்திய நல்ல உதாரணம் தான் இந்த அம்மாவின் கைப்பேசி


படத்தோட கதையை தங்கர் பச்சான் சொன்ன மாதிரி அப்படியே சொல்லிட்டா அது தமிழ் இனத்தலைவரின்  ஈழப்பிரச்சனை பற்றிய தி முக நிலைப்பாடு மாதிரி குழப்பி அடிக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்தக்கதையை எப்படி சொல்லி இருக்கனுமோ அப்படி நேரா கதைக்கு வர்றேன். 


ஹீரோவுக்கு மாமன் பொண்ணு ( ஹீரோயின் ) மேல காதல். ஆனா அவர் வேலை வெட்டி இல்லாம ஊரைசுத்திட்டு இருப்பதால் காதலுக்கு தடை. ஹீரோயினின் அப்பா நடத்தும் மினர்ல் வாட்டர் கம்ப்பெனிலயே அவருக்கு வேலை போட்டுத்தர்றாரு. நல்லா சுமூகமா போய்ட்டு இருக்கும்போது வில்லங்கமா ஹீரோ மேல ஒரு திருட்டுப்பழி விழுது.


 பெத்த அம்மாவே ஹீரோவை நம்பலை. அதனால நல்ல நிலைமைக்கு வர்ற வரை இந்த ஊர்ப்பக்கம் தலை வெச்சு படுக்க மாட்டேன்னு சவால் அல்லது சபதம் எடுத்து ஹீரோ அம்மாவை அம்போன்னு விட்டுட்டு போயிடறார்.


 7 வருஷம் ஒரு  கல் குவாரில சூபர்வைசரா , மேனேஜரா வேலை செய்யறார்.அங்கே நடக்கும் ஊழலை கண்டு பிடிச்சு ஓனர்ட்ட காட்டிக்குடுக்கறார். பணி புரியும் ஆஃபீஸ் பணத்தை 65 லட்சம் ரூபாயை பேங்க்ல இருந்து எடுத்துட்டு வரும்போது அதே கல்குவாரில ஒர்க் பண்ணின ஆட்கள் 3 பேரால் ஹீரோ கொலை செய்யப்பட்டுடறார்.



தன் மகன் வருவான் வருவான்னு பார்த்துட்டு இருந்த அம்மா, மாமன் மகள் என்ன செஞ்சாங்க என்பது மிச்ச மீதிக்கதை 


ஹீரோ சாந்தனு. மிக அருமையான நடிப்பு. இதுவரை பிளே பாயாக நடித்தவர் முதல் முதலா குணச்சித்திர நடிப்பு. வெல்டன்.ஹேர் ஸ்டைலை எல்லாம் கிராமத்தான் போல் மாற்றி பாடி லேங்குவேஜிலும் அக்கறை காட்டி இருக்கிறார். அம்மாவிடம் விளக்குமாற்றால் அடி வாங்கும் காட்சியில் தாய்க்குலங்களின் அனுதாபத்தையும் , கமல் , விக்ரம்க்குப்பின் ஈகோ பார்க்காமல் அடி வாங்கும் 3 வது தமிழ் ஹீரோ என்ற அந்தஸ்தையும் பெறுகிறார்


இனியா அவருக்கு  ஜோடி. காதல் காட்சியிலும் சரி , சோகக்காட்சியிலும் சரி அளவான நடிப்பு. டூயட்  காட்சியில் இளமை கொப்புளிக்கிறது. ( பல் துலக்கற சீனா?ன்னு கேட்கக்கூடாது) 


 தங்கர் பச்சான் தான் படத்துல வில்லன் படத்துக்கும் வில்லன். அதாவது இந்தப்படம் போதிய வரவேற்புப்பெறாமல் போவதற்குக்காரணமே இவர் கேரக்டர் தான். இயக்குநருக்கான கேள்விகள் பகுதில இவருக்கு ஆப்பு காத்திருக்கு,. 


 ஒளிப்பதிவு , எடிட்டிங்க் , இசை எல்லாம் நிறைவாக இருக்கு. இந்த மாதிரி கிராமியக்கதைகளில் இளையராஜாவின் இசை இருந்தால் அது படத்துக்கு பிளஸ் ஆக இருக்கக்கூடும். ஆனால் இசை புதுமுகம்.

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Jul/16/Ammavin_Kaipesi_Latest_Movie_Stills/Ammavin_Kaipesi_Latest_Movie_Stillsfef194123a98e23594c841797206e7cc.jpg.


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தில் முடிந்தவரை தொழில் சம்பந்தப்பட்ட விவரங்களை படத்தின் தேவைக்கு மீறி விலாவாரியாக காட்டியது.  மினரல் வாட்ட்டர் பாக்கெட் தயாரிப்பு , மாம்பழ ஜூஸ் கம்ப்பெனி , கல் குவாரி ஃபேக்டரி சம்பந்தப்பட்ட காட்சிகள் 



2. படத்தின் மெயின் கதையிலோ, நாவலிலோ கல்குவாரி பற்றி இல்லை. ஆனாலும் பட ஷூட்டிங்க்கின் போது டாபிக்கல் மேட்டராய் கல்குவாரி பிரச்சனை ஓடியதால் மணி ரத்னம் பாணியில் அதை சாமார்த்தியமாய் உள் நுழைத்தது 



3..ஹீரோ - ஹீரோயின் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் இளமை ஊஞ்சல் , தூரி ஆடும் வகையில் படப்பிடிப்பு 



4. சைக்கிள் கேப்பில் கிராமத்து நடன வகைகள் , கிராமத்து இசை வாத்தியங்களை ஆங்காங்கே சேர்த்து இசையை ரசிக்க வைத்தது 


5. பெரும்பாலான கேரக்டர்களை கிராமத்து நிஜ மனிதர்களை நடிக்க வைத்தது. ஒரே கல்லுல 2 மாங்காய். நடிப்பு இயல்பா இருக்கும். சம்பளமும் தரத்தேவை இல்லை.. வேலை வாங்கும் சாமார்த்தியம் இருந்தா போதும் 


6. தங்கரின் மனைவியாக வருபவர் நடிப்பு அற்புதம். ரசிக்கத்தக்க நடிப்பு + இடுப்பு மடிப்பு 


http://mimg.sulekha.com/tamil/ammavin-kaipesi/stills/ammavin-kaipesi-movie-pics-0124.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. படத்தோட மெயின் கதை அம்மா , மகன் பாசம் , பிரிவு மீண்டும் அவர்கள் சேர்வது பற்றித்தான். ஆனால் திரையில் 60 % கதையை இயக்குநரான நீங்களே ஆக்ரமிச்சுட்டா மெயின் கதையின் தாக்கம் எபப்டி மக்களுக்குப்போய்ச்சேரும்? 


2. படத்துல 3 வில்லன்க. அதுல ஒருத்தர்தான் இயக்குநரான நீங்க.. அதென்ன உங்களூக்கு மட்டும் ஏகப்பட்ட காட்சிகள் , ஒரு டூயட் வேற . சகிக்கலை.. இந்த லட்சணத்துல இயக்குநருக்கு ஒரு கில்மா சீனும், ஏய் இன்னொருக்கா அப்டினு கேட்கும் கிளு கிளு காட்சியும், படத்துல மகா எரிச்சலை வரவைக்கும் காட்சி.. ஏய்யா , கதை எவ்ளவ் சீரியஸா போய்ட்டிருக்கு.. அதுல போய் கில்மா காட்சியா? அப்டியாவது ஹீரோ - ஹீரோயினுக்குன்னா கூட பரவாயில்லை.. 


3. க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனான நீங்க ஒரு கொலையை பண்ணிட்டு சாமி கோயில்ல ஆணி செருப்புல நடந்து தாய்க்குலத்தின் இரக்கத்தை சம்பாதிக்க முயற்சி பண்ணிய சீனுக்காகவே உங்களை  ஜெயில்ல போடனும் . படு கேவலமான , அனுதாபத்தை பிச்சை கேட்கும் காட்சி// 



4. ஹீரோ அம்மாவுக்கு ஃபோன் பண்றார். அம்மா செல்ஃபோனை வந்து எடுக்கறதுக்குள் கட் ஆகிடுது. ஏன் அவர் 2 வது டைம் பண்ண மாட்டாரா>? 7 வருஷம் பிரிஞ்சு இருப்பவர் இப்படித்தான் பொறுப்பில்லாம இருப்பாரா? 



5. அம்மா - மகன் செண்ட்டிமெண்ட் காட்சியை பிழிஞ்சு எடுக்க  நினைத்ததெல்லாம் ஓக்கே. அதுக்கு  என்ன பண்ணி இருக்கனும்? அம்மா - மகன் பாசத்தை ஆல்ரெடி ஓப்பனிங்க்ல காட்டி இருக்கனும்.. ஒரு சீன் கூட அம்மா மகன் பாசக்காட்சியே ஆழமா காட்டலை./. உங்களூக்கு உங்களை முன்னிலைப்படுத்தவே நேரம் சரியா இருக்கு 


6.  மாமன் மக்ளை பிரிஞ்சு போன ஹீரோ அவருக்கு ஒரு கடிதம் கூட போட மாட்டாரா?  அட்லீஸ்ட் ஹீரோயின் தோழி, பக்கத்து வீட்டுக்காரம்மா யார் மூலமாவது தொடர்பு கொள்ள முயற்சிக்க மாட்டாரா>? 



http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Jul/16/Ammavin_Kaipesi_Latest_Movie_Stills/Ammavin_Kaipesi_Latest_Movie_Stillse7cee2300ad768707777b28d444c8bba.jpg



7. மாமன் மகளுக்கு மேரேஜ் வேற ஒருவர் கூட ஆகிடுது. அதுக்கு அவர் சொல்ற காரணம் செம காமெடி . உங்க கிட்டே இருந்து தகவலே வர்லை என்பதால் நீங்க செத்துட்டீங்கன்னு நினைச்சேன். டெட் பாடி பார்க்காம எப்டி அப்டி ஒரு முடிவுக்கு வர்றது? 


8. கல் குவாரில அப்போதான் முதல் நாள் வேலைக்கு சேரும் ஹீரோ சட்டசபையில் கேப்டன் மாதிரி ரணகளப்படுத்துவது எப்படி? முதல் நாள்ல எல்லாருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். அந்த காட்சி படு செயற்கை 



9. ஆண்டாண்டு காலமாய் ஊழல் செய்யறவன், கோடிக்கணக்குல சம்பாதிச்சவன் தனக்கு இடையூறாய் ஒருத்தன் வந்தா  டக்னு ஆளை கொலை செஞ்சு விபத்து மாதிரி காட்டுவானே தவிர நீயும் கூட்டாளீயா சேருன்னு கோடிக்கணக்குல பணத்தை லாஸ் ஆக்க மாட்டான்.. 


10. கல்குவாரில நல்ல வேலைக்கு சேர்ந்ததும் ஹீரோ ஏன் அம்மாவுக்கு தகவல் சொல்லலை? மாமன் மகள் இடம் தன் சந்தோஷத்தை பகிர்ந்துக்கலை. காதலியிடம் தான் இப்படிப்பட்ட சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்க முடியும். அதை ஏன் அவர் செய்யலை? 



11.  பத்துநாளா உனக்கு ஃபோன் பண்ணிட்டே இருக்கேன், ஏன் எடுக்கலை?னு ஹீரோயின் கேட்டப்ப ஹீரோ சொல்லும் டயலாக் சிறுபிள்ளைத்தனமானது. “ நான் இங்கே ஒரு பிரச்சனைல மாட்டி இருக்கேன்” அதான்.   10 நாளா அவர் குளிக்காம , சாப்பிடாம இருந்தாரா? ஃபோன் அட்டெண்ட் பண்ணக்கூட டைம் இல்லையா?


12. பேங்க்ல 65 லட்சம் கேஷ் தர்றாங்க.அதை எத்தனை கட்டு இருக்குன்னு கூட செக் பண்ணாம எந்த  மடையனாவது பேக்கை திறந்து கூட பார்க்காம வாங்கிட்டு வருவானா? காட்டுப்பாதைல அவ்ளவ் கேஷ் வெச்சுக்கிட்டு  தனியா பயணம் செய்வாங்களா? எங்க ஆஃபீஸ்ல ஒரு லட்சம் வித்ட்ரா பண்ணிட்டு வர்றதுன்னாலே மேனேஜர் 2 பேரை கூட கூட்டிட்டுப்போங்கறார். 65 லட்சம் அப்படி அநாமத்தா விட்டுடுவாங்களா? 


http://www.breezemasti.com/gallery/data/media/201/iniya_in_ammavin_kaipesi_movie_stills_2.jpg


13. முக மூடி போட்டு வழிப்பறி பண்றவங்க ஏன் திடீர்னு அதை கழட்டி ஹீரோ கிட்டே தங்களை அடையாளப்படுத்திக்கறாங்க? துப்பாக்கில வந்த மாதிரி சஸ்பென்சோட  சாவுன்னு ஏன் சொல்லாம இடம் சுட்டி பொருள் விளக்கி டைம் வேஸ்ட் பண்றாங்க?



14. ஹீரோவை  2 பேர் சூழ்ந்ததும் என்னை விட்டுடு , பணத்தை வேணா எடுத்துக்க அப்டினு ஹீரோ சொல்றது எப்படி? 10 பேர் சேர்ந்த கும்பல்னா ஓக்கே , ஜஸ்ட் 2 பேர். சமாளிக்கலாமே? ஏன் முயற்சியே பண்ணலை? 


15. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பணத்துக்காக தன்னை துரத்தும் 2 வில்லன்க கிட்டே இருந்து தப்பிக்க அந்த பள்ளத்தாக்குல இருந்து ஜஸ்ட் தண்ணீரில் ஜம்ப் பண்ணி இருக்கலாமே? ஏன் செய்யலை? ( நீச்சல் தெரியாதுன்னு சாக்கு சொல்ல வழி இல்லை.. கிராமங்களில் நீச்சல்  தெரியாத ஆளே இல்லை )



16. க்ளைமாக்ஸ் ஓவர் இழுவை.. சீக்கிரம் முடிங்கப்பா  என தியேட்டர்ல அவனவன் கதறிட்டு இருக்கான்.. 


17. யார் நம்பலைன்னாலும் பெத்த அம்மா மகனை நம்புவா.அப்படியே நம்பலைன்னாலும் வெளீல சொல்லிட்டு இருக்க மாட்டா. ஊர் மக்கள் முன்னாடி விளக்கு மாற்றால் அடிப்பது எல்லாம் ஓவரோ ஓவர் 



http://masscinema.in/wp-content/gallery/ammavin-kaipesi-movie-stills/ammavin-kaipesi-movie-stills-11.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. சும்மா இருக்கும் ஆம்பளையை எந்த பொண்ணுக்கும் பிடிக்காது # ( சும்மா = வேலைக்குப்போகாம)


2. இன்னைக்கு உலகத்துல இருக்கும் பெரும்பாலான பணக்காரர்கள் எல்லாருமே ஒரு கால கட்டத்துல ஒரு வேளை சாப்ப்ட்டுக்கூட வழி இல்லாம கஷ்டப்பட்டவங்களே.. 



3. இன்னும் 10 வருஷத்துல இந்த நாடே குடிகார நாடா மாறப்போகுது


4. சுத்த பத்தமா இருந்தா எங்கேயும் சாப்பிடலாம். கையேந்தி பவன்ல கூட .


5.  தமிழ்ல இருக்கறதுலயே உயர்வான வார்த்தை அய்யா தான்.
சார் எல்லாம் வெள்ளைக்காரன் கண்டு பிடிச்சது.


6. ஒரு வெள்ளைக்காரன் இன்னொரு வெள்ளைக்காரனை சார்னு கூப்பிட்டு பார்த்திருக்கிங்களா? 


7. கிழவன் தான் கரும்பு ஜூஸ் குடிப்பான், குமரன் கரும்பைத்தான் கடிப்பான் ( டபுள் மீனிங்க் )


8. குவாரிங்கறது தங்க முட்டை இல்லை இல்லை வைர முட்டை இடும் வாத்து



9. அம்மா அலங்காரம், நீயே ஒரு அலங்காரம் , உனக்கு எதுக்கும்மா இன்னும் அலங்காரம்? 


 http://tamilmaxs.com/wp-content/gallery/ammavin-kaipesi-tamil-movie-stills/thangar-bachan-and-meenal-at-ammavin-kaipesi-movie-stills-3.jpg



 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 


  எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 



 எதிர்பார்க்கும்   டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேட்டிங்க் -  5 /10



சி.பி கமெண்ட் - தாய்க்குலங்கள் , டி வி சீரியல் ரசிச்சுப்பார்க்கறவங்க பார்க்கலாம். மற்ற யாராவது போனீங்க அவ்ளவ் தான். இல்லை அழகி , ஒன்பது ரூபாய் நோட்டு என நல்ல படம் எல்லாம் குடுத்திருக்கார். ஏமாற்ற மாட்டார்னு அடம் பிடிக்கறவங்க போங்க , படுங்க ஐ மீன் பட்டுத்தெளிங்க.ஈரோடு தேவி அபிராமியில் பார்த்தேன் .


http://filmiparadise.com/upload/stills/1628_wallpaper202813257.jpg

 

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்ததா ஐ நா?

ஈழத் தமிழர்கள் கொலையை வேடிக்கை பார்த்ததா ஐ.நா.?

கேள்வி எழுப்பும் உள் பரிசீலனைக் குழு!
'இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறி விட்டது. மிக அபாயகரமான போர் சூழலில் வெகுதிறமையான முடிவை எடுத்திருக்க வேண்டும். மக்களைக் காப் பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் போனது இந்த அமைப்பின் செயல்பாடு மற்றும் அணுகுமுறைக்கான மிகப்பெரும் தோல்வி’ - ஐ.நா. மீது இப்படி பகீர் குற்றச் சாட்டை வைத்துள்ளது, அந்த அமைப்​பின் உள்பரிசீலனைக் குழு.




ஈழப்போர் சமயத்தில் ஐ.நா. எடுத்த நிலைப்பாடுகள் குறித்து ஐ.நா. அமைப்பின் உள்பரிசீலனைக் குழு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், அந்தக் குழு தயாரித்த முக்கிய அறிக்கையின் (இறுதி வடிவத்துக்கு முந்தைய நிலை அறிக்கை) நகல் ஒன்று பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு லீக் ஆனது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, மீண்டும் இலங்கைப் புயல் வீசுகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் பி.பி.சி-யின் செய்தி​யாளர் ஒருவர், ''26 ஆண்டுகள் நடத்தப்பட்ட போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.



 இறுதிக் கட்டப் போரின் கடைசி நான்கைந்து மாதங்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா-வின் முந்தைய அறிக்கை சொன்னது. ஐ.நா-வின் உறுப்பினர்கள் யுத்தக்களத்தில் தொடர்ந்து இருந்திருந்தால், இலங்கை அரசின் வீரியம் குறைந்து இருக்கும் என்பதே இப்போது வெளியாகி இருக்கும் அறிக்கையின் அடிப்படை சாராம்சம். ஐ.நா-வின் யுத்தக்கால செயல்பாடுகள் குறித்து அந்தக்குழு கடுமையான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.



 குறிப்பாக, 2008 செப்டம்பரில் ஐ.நா. தனது ஊழியர்களை யுத்தக்களத்தில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்ட முடிவு குறித்து அழுத்தமாக கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். 'உங்களுடைய பாதுகாப்பை இனிமேலும் நாங்கள் உறுதிப்படுத்த முடியாது’ என்று, இலங்கை அரசு எச்சரித்ததும், இந்த திரும்பப்பெறுதல் நடந்ததை கேள்வியாக்கி இருக்கிறார்கள்.



இப்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்து இருக்கும் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை, 'ஐ.நா. குழுவினர் யுத்தக் களத்தைவிட்டு கிளம்பியபோது, போக வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் அழுதும் கெஞ்சியும் பார்த்தோம். ஆனால், அவர்கள் எங்களது கோரிக்கைகளுக்கு காதுகொடுக்கவே இல்லை. அவர்கள் தொடர்ந்து யுத்தக் களத்தில் இருந் திருந்தால், இன்றைக்கு அப்பாவித் தமிழர்கள் பலரும் உயிரோடு இருந்திருப்பார்கள்’ என்று எங்கள் செய்தி​யாளரிடம் குமுறினார்.



'இலங்கை அரசு தொடர்ந்து பிரஷர் கொடுத்ததன் விளைவாக, மிகஅதிகமான மக்கள் ஷெல் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தை ஐ.நா. அழுத்தமாக எழுப்பவில்லையோ...’ என்ற விமர்சனத்தையும் அந்தக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது. அமைதிக் காப்பாளர்கள் தொடர்ந்து யுத்தக் களத்தில் இருந்திருக்க வேண்டும், அங்கே என்னென்ன நடக்கிறது என்பதையும் உலகுக்கு உடனுக்குடன் உணர்த்தி இருக்க வேண்டும் என்பதையும் அறிக்கை அழுத்திச் சொல்கிறது.


தமிழர்களுக்கு எதிரான யுத்தக் காலத்தின் இறுதி மாதங்களில், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் கூட்டம் ஒன்றுகூட நடத்தப்படவில்லை. ஐ.நா-வின் உயர்மட்டக் குழுவும் ஃபார்மாலிட்டி ஆலோசனை கூட செய்யவில்லை என்கிறார்கள். எங்களுடைய முன்னாள் ஸ்ரீலங்கா செய்தியாளர் ஒருவர், 'மிகக் குரூரமாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தது’ என்று கடுமையாகக் குறிப்பிட்டதையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டி இருக்கிறது.



அதேநேரம், இலங்கை அரசின் ராணுவம், பயங்கரவாதிகள் கூட்டம் போன்று மக்கள் வசிக்கும் பகுதிகளில் செயல்பட்டதைச் சுட்டிக்காட்டி, உலகப் போர்நடைமுறை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அந்த நேரத்தில் முயற்சி மேற்கொண்டதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனால், அந்த முயற்சிக்கு எந்தப் பலனும் இல்லை'' என்கிறார் அவர்.



ஐ.நா-வின் முன்னாள் உயர் அதிகாரியும் அறிக்கை அளித்திருக்கும் ஆய்வுக்குழுவின் தலைவருமான சார்லஸ் பெட்ரே, 'குழு கண்டறிந்த விஷயங்களை இந்த அறிக்கை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது’ என்று அதிர்ச்சிகளுக்கு வலுசேர்த்து இருக்கிறார். அறிக்கையின் உள்ளடக்கங்கள் வெளியான பிறகு பல தளங்களில் இருந்தும் விமர்சனங்களும் கண்டனங்​களும் கருத்துகளும் குவிந்த வண்ணம் இருக்​கின்றன. 'பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து ஐ.நா. தவறி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.



ஐ.நா-வின் கரங்கள் கட்டப்பட்டு இருப்பது புலன் ஆகிறது. சென்சிட்டிவான சமயங்களில் ஐ.நா. அமைப்புக்கு அரசியல் மற்றும் அதிகார ரீதியில் ஆலோசனைகளையும் அறிவுரை களையும் வழங்குவதற்கு ஆட்களே இல்லை’ என்று உலக நாடுகள் பலவற்றில் இருந் தும் கண்டன விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.



இந்த விவகாரத்தில் ஐ.நா-வின் பதில் என்ன? ''அறிக்கை நகல் வெளியானது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இறுதி அறிக்கை பொதுச்செயலாளரின் கரங்களுக்கு வந்து, அவர் அதை வாசித்த பிறகு வெளியிடப்படும்'' என்கிறார் ஐ.நா-வின் செய்தித்தொடர்பாளர் மார்டின் நெசிர்கி.



இறுதி அறிக்கை வெளியாகும்போது, ஐ.நா-வின் இந்த பலவீனப் பக்கங்கள் எடிட் செய்யப்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். ஆபத்தில் அலறும் மக்களைக் காப்பாற்ற முடியாத ஓர் அமைப்பு இருந்து என்னதான் பயன்?



- எஸ்.ஷக்தி



இலங்கைக்கு எதிராக 93 நாடுகள்!

நம்பிக்கை தரும் உலகத் தமிழர் மாநாடு
லங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கட்டுப்பாடுகளையும் சதிகளையும் மீறி, ஈழ விடுதலைப் போராட்​டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.


ஈழ விவகாரத்தில் எதிரும் புதிருமாக இருக்​கும் அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, லண்டனில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் முக்கிய சில தீர்மானங்களை நிறை​வேற்றி இருக்கிறது, பிரித்தானிய தமிழர் பேரவை. இங்கிலாந்து பாராளு​மன்றக் கட்டட‌த்தில் நிகழ்ந்த‌ இந்த மாநாட்டில், இங்கிலாந்தின் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதும், உலகெங்கும் வாழும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதும் சிறப்பு அம்சம். காலங்காலமாக ஈழத்துக்காகக் குரல் கொடுத்துவரும் வைகோவும், பழ.நெடுமாறனும் இந்த மாநாட்டை புறக்கணித்திருக்கும் நிலையில், தி.மு.க-வின் சார்பாக‌ ஸ்டாலின் முக்கியப் பங்கெடுத்து உள்ளார்.



மாநாட்டை நடத்திய பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம்.


''2009-ம் ஆண்டு ஈழப் போரில் வகைதொகை இல்லாமல் கொடூரமாக‌க் கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்களை நினைத்துத் தினம் தினம் அழுகிறோம். நாம் தனித்தனியாகப் போராடி களைத்து விட்டோம். சர்வதேச சமூகத்தின் காதுகளுக்கு நமது குரல் கேட்கவே இல்லை. அதனால்தான் ஒற்றுமையாக, ஒரே குரலில் 30 லட்சம் தமிழர்களின் பிரச்னையை இங்கிலாந்தின் 78 பாரளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைத்தோம்.


கட்சிக் கருத்தியல் பாகுபாடுகளை மறந்து உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் அனைத்துப் பிரதிநிதிகளையும் மேடை ஏற்றினோம். இதுவரை தமிழகத்திலும் தாயகத்திலும் அரங்கேறாத அதிசயம் லண்டனில் நடந்திருக்கிறது. கட்சிப் பாகுபாடு​களைக் களைந்து ஒரே குரலாக ஒலித்தால் மட்டுமே நம்முடைய சோகம், சர்வதேச சமூகத்தின் காது​களுக்குப் போய்ச் சேரும் என்பதை உணர்த்தவே இந்த மாநாடு.''


''உச்சக்கட்ட போரைக் கண்டுகொள்ளாத கட்சிகளையும், தீவிர ஆதரவுக் கட்சிகளையும் ஒரே மேடையில் நிற்க வைத்திருக்கிறீர்கள். ஏடா​கூடம் ஆகவில்லையா?''



''தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் மாநாட்டுக்கு அழைக்க வேண்டும் என முடிவெடுத்தபோதே, எங்களுக்குள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துக்​கள் வெளிப்பட்டன. ஆனால் தமிழர்களின் குரல் சர்வதேச அளவுக்குக் கேட்க வேண்டும் என்றால், முதலில் நமக்குள் ஒற்றுமை வேண்டும். அதற்காகத்தான் கட்சி பேதங்களைக் கடந்து அனைவரையும் அழைத்தோம்.


ஆனால், எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அனைவரும் தார்மீகப் பொறுப்புடனும், மிகுந்த அக்கறையுடனும் நடந்து கொண்டனர். தமிழக எல்லைகளைக் கடந்து இந்தியா முழுக்க ஈழப் பிரச்னையைக் கொண்டு போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்போது எங்களுக்குப் புதிய நம்பிக்கை பூத்திருக்கிறது.


அன்று ஈழப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாதவர்கள், இன்று எங்களுடன் நின்று எம்மக்களுக்காவும் மண்ணுக்காகவும் ஆதரவு தருகிறார்கள் என்றால் நல்ல மனமாற்றம்தானே... யாரையும் உதாசீனப்​படுத்தவோ, வெறுக்கவோ செய்யாமல் அனைவரையும் அரவணைத்துப் போகவே விரும்புகிறோம்!''




''மு.க.ஸ்டாலினை, ஈழ மக்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பியதாகச் சொல்​கிறார்களே?''



'’நாங்கள் அறிந்தவரை அப்படி எதுவும் நடக்க​வில்லை. மாநாட்டுக்கு வந்திருந்த நிறைய ஜனங்களும், அமைப்புகளும் அவர்களோடு பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்!''



''வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் உங்களுடைய மாநாட்டை புறக்கணித்து இருக்​கிறார்களே?''


''வைகோ அண்ணாவையும், நெடுமாறன் அய்யாவையும் வரவழைக்க பல்வேறு வடிவங்களில் நாங்கள் தொடர்புகொண்டோம். வைகோவுக்கு டெல்லியில் முக்கிய வழக்குகள் இருந்தமையாலும், நெடுமாறன் சார்பாக வர இருந்தவருக்கு கடைசி நேரத்தில் கடவுச் சீட்டில் சிக்கல் இருந்தமையால் வர இயலவில்லை என்று அறிகிறோம்.!''



''உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?''


''2012 மார்ச் மாதம் ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவந்த‌ தீர்மானம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் தானாக அமைத்துக்கொண்ட 'எல்.எல்.ஆர்.சி’ அமைப்பு இதுவரை எவ்வித ஆக்கப்​பூர்வமான செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 2008 உச்சக்கட்ட போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறலைத் தடுப்பதிலும் கண்காணிப்பதிலும் ஐ.நா. மன்றமே தோற்றுப்போய் இருப்பதாக, அதன் உள்அறிக்கை கசிந்திருக்கிறது.



இலங்கையில் மனித உரிமை மீறல், வெள்ளை வேன் கடத்தல் போன்ற பிரச்னைகளைச் சேகரித்து, 2013 மார்ச் மாதம் ஐ.நா. மன்றத்தில் மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இன்னும் அழுத்தம் கொடுப்போம். இந்த முறையும் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் நல்ல ஒத்துழைப்பு தருவார்கள் என்றே நம்புகிறோம்.


 கடந்த முறை 24 நாடுகள் மட்டுமே மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையைக் கேள்வி கேட்டன. இப்போது 93 நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இருக்கின்றன. இது இலங்கைக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். அடுத்த ஆண்டு, 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்று இங்கிலாந்து சொல்வதற்குக் காரணம் எங்கள் லாபிதான். 30 லட்சம் தமிழர்களின் போராட்டத்தை சிதைத்தது போன்று 10 கோடி தமிழர்களின் போராட்டத்தை அழிக்க முடியாது. எங்களது புதிய, வித்தியாசமான போராட்ட முறைகளால் இலங்கை தோற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை!''
நம்பிக்கை ஜெயிக்கட்டும்!


- இரா.வினோத் 


சீனத் தோழன்' இலங்கையை நம்பலாமா?

கேள்வி எழுப்பும் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
ந்தியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை​யுடன் நெருக்கமான உறவைப் பேணி ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டு வரும் நிலையில் ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறோம் நாம். அவர்களது சீனப் பாசத் துக்கு அடிப்படைக் காரணம், இந்தியாவின் மீதான வெறுப்புத்தான்!



இதுவரை இந்தியாவில் இருந்து சென்ற முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சிங்கள வெறியர்​கள் தாக்கி இருக்கிறார்கள் என்பதே வரலாறு. இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பண்டித ஜவஹர்லால் நேரு, கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், ராஜீவ் காந்தி. ஆனால், நமக்கு ராஜீவ் தாக்கப்பட்டது மட்டும்தான் தெரியும்!


1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொருட்டு இலங்கைக்குச் சென்றார் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி. அவரைத் தனது கடற்படை வீரன் விஜேமுனி விஜித ரோகன டி சில்வா  மூலமாக கொலை செய்ய முயற்சித்த இலங்கை அரசின் செயல், இங்குள்ள அதிகார வர்க்கத்தினருக்கு மறந்து​ போயிருக்கலாம். இலங்கை நீதிமன்றம் அந்தக் கொலைக்காரனுக்கு சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால், 1990-ல் அந்தக் கயவனுக்கு மன்னிப்பு அளித்து 'பெருந்தன்மையுடன்’ நடந்து கொண்டது இலங்கை அரசு.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே, ஆட்சி​யில் இருந்த சிங்களத் தலைவர்கள் அனைவருமே இந்தியாவின் மீது மரியாதை செலுத்துவதைப் போல பாசாங்கு செய்தபடி, இந்தியாவுக்கு விரோதமான அத்தனை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்கூட, கொழும்பு நகர மையப்பகுதியில் காலே சாலையில் இந்தியத் தூதரக அலுவலகத்துக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை சீன விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு விற்பனை செய்து, ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது இலங்கை.



இலங்கையின் தென்கோடியில் உள்ள கெம்பன் தோட்டா துறைமுகத்தை 7,500 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவுக்கு எதிராக சீனா உருவாக்கி உள்ளது. இதனால், வரும் காலத்தில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களின் வர்த்தக முக்கியத்துவம் குறைந்து போகும். அது மட்டுமல்லாமல் சிறிய கப்பல்கள் மட் டுமே தூத்துக்குடி, சென்னைக்கு வரக்கூடிய சூழலை இலங்கை உருவாக்கி விட்டது.



இந்தியா மீது நல்ல எண்ணம் இல்லாத மியான்மர், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள்தான் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றன. இந்த நாடுகளுடன் எல்லாம் அதீத நட்பு பாராட்டுகிறது இலங்கை. இப்போது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்து பிரம்மபுத்ரா நீரோட்டத்தைத் தன்வசம் திருப்ப முயன்று வருகிறது சீனா. அப்படிப்பட்ட சீனாவுடன் இலங்கை 14 புதிய ஒப்பந்தங்களுக்குக் கையெழுத்துப் போட்டுள்ளது.





 அதன்படி 4,180 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சீனா மேற்கொள்ள இருக்கிறது. மேலும், தொழில்நுட்ப ஒத்து ழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, புதிய முதலீடுகள், விசா நடைமுறைகள் தளர்வு, கடல்சார் துறைகளை வலுப்படுத்த உதவி போன்றவற்றையும் இலங்கைக்கு சீனா அளிக்க இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிபர் ஹு ஜிண்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவரான வு பாங்ஜு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளார்.



 அதைத்தொடர்ந்து, இலங்கை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சீன வங்கிகள் கடன் வழங்க இருக்கின்றன. அருணா​சலப் பிரதேசத்தை உரிமை கொண்​டாடுவது, எல்லையில் விமானத் தளங்களை அமைப்பது என்று இந்தியாவுக்கு பல்வேறு பிரச்னைகளைக் கொடுக்கும் சீனாவுக்கு, இலங்கை நெருங்கிய நட்பு நாடாக மாறுவது ஆபத்தானது. அதனால், எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளும் சேர்ந்து இந்தி​யாவுக்கு நெருக்கடி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.



இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்​காமல் தொடர்ந்து தாக்கி வருகிற இலங்கை, அம்பாறை பொத்துவில் கடலில் மீன்பிடிக்க சீன நிறுவனங்​களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மீனவர்கள் மீன் பிடிப்பதற்குப் பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன மீனவர்கள் சுதந்திரமாக அந்தக் கடலில் மீன் பிடிக்கிறார்கள். நமது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்​படவும், கைதியாகப் பிடிக்கப்​பட்ட நேரத்திலும் சீன நாட்டினரையும் இலங்கைக் கடற்படையினரோடு பார்த்ததாகச் சொல்லி இருக் கிறார்கள்.



தான் உற்பத்தி செய்யும் பொருட்களை இலங்கை, பாகிஸ்தான், அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு இந்து மகா சமுத்திரம், தன் ஆளுகைக்கு உட்பட வேண்டுமென்று தந்திரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது சீனா. இந்தியாவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சீனா பயன்படுத்தி வருகிறது. அதற்குக் கடல் ஆதிக்கமும் தேவைப்படுகிறது.



பங்களாதேஷில் சிட்டகாங், பாகிஸ்தானில் கோத்தார் ஆகிய துறைமுகங்கள் சீனாவின் பிடியில் வந்து விட்டன. தைவானை தன் வசமாக்கிக்கொண்ட பிறகு, ஆசிய கண்டத்தையே தன் ஆளுமைக்குக் கொண்டுவர சீனா திட்டமிட்டு உள்ளது. இதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போட்டி நிலவுகிறது. இந்தச்சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அபாயம் தரும் நிலை ஏற்பட்டு இருப்பதற்கு ஒட்டுமொத்தக் காரணம் இலங்கை சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்ஷேவும்தான்.



இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராகச் செயல்​பட்ட பசீது வாலி முகம்மதுவின் உதவியோடு பாகிஸ்தான், இரண்டு கப்பல் நிறைய ஆயுதங்களை வழங்கியது. இந்தியாவுக்குள் நடைபெறும் பல்வேறு தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் ஐ.எஸ்.ஐ-யின் முன்னாள் தலைவராகச் செயல்​பட்டவர் பசீது வாலி முகம்மது. மேலும், இவர் கோவை குண்டு வெடிப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 இந்தி​யாவின் தலைப் பகுதியான காஷ்மீரில் கண்மூடித்தனமான தீவிரவாதத்தை முன்னெடுக்கும் பாகிஸ்தான், சிங்கள இலங்கை வழியாக தென்னிந்தியப் பகுதிகளிலும் மத வன்முறையைத் தூண்ட முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் இறை யாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயலுக்கும் சிங்கள அரசு துணை போகக்கூடும். ஈழத்தின் சம்பூர் மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கிவிட்டு, இலங்கை அரசு அதை நிறைவேற்றவிடாமல் மழுப்பி பாகிஸ்தானுக்குக் கொடுக்கத் திட்டமிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.



பலாலி விமான நிலையத்தை இந்தியா சீர் அமைத்துக் கட்டித்தர சம்மதித்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டுவிட்டார் ராஜபக்ஷே. சமீபத்​தில் வர்த்தக ஒப்பந்தங்களை நடை முறைப்படுத்த இலங்கைக்குச் சென்ற இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மாவுக்குத் தெளிவான பதிலை இலங்கை அரசு கூறவில்லை.



போர் முடிந்த பின்னரும் சிங்கள அரசு சீனா, பாகிஸ்​தான் ஆயுதங்களோடு ராணுவத்தினரைக் குவித்து, தமிழர்களை அச்சப்படுத்துகிறது.



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்தத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதாவது தமிழர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் சிங்கள ராணு​வம் அதன் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்து இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் மூன்று பிரிவுகளும், கிளி நொச்சியில் மூன்று பிரிவுகளும், முல்லைத் தீவில் மூன்று பிரிவுகளும் வவுனியாவில் ஐந்து பிரிவுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கு மாகாணத்திலும், தென்பகுதியில் மூன்று பிரிவுகளும் வைக்கப்பட்டு உள்ளன.



இதுகுறித்து, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கர்னல் ஆர்.அரிகரன், 'இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் பரவலாக நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, போருக்குத் தயார் நிலையில் இருப்பதுபோன்று காட்சி அளிக்கிறது’ என்று அச்சம் தெரிவித்துள்ளார். அண்மையில் அதிபர் ராஜபக்ஷே, 'தமிழ்ப் புலி களுக்கு எதிரான போரில் பாகிஸ்தானும் சீனாவும் உதவியதற்காக நன்றி’ என்று பட்டவர்த்தனமாக அறிவித்து இருக்கிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகம் முழுவதும் தனது வணிகத்தை பெருக்க சீனா திட்டமிட்டு உள்ளது. வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளோடு உறவுகொள்ளத் துடிக்கிறது.


சீனா வுக்கு எரிவாயு, கச்சா எண்ணெய் வருவதற்கு பர்மா வழியாக பைப் லைன் போட்டு அந்தமான், இலங்கை வழியாக ஊடுருவும் திட்டங்கள் உள்ளன. வங்கக் கடலோரத்தில் இருக்கிற கொக்கோ தீவுகள், பர்மாவுக்கு இந்தியா விட்டுக் கொடுத்து ஆஸ்திரேலியா உரிமை கொண்டாடியது. இப்போது அந்த இரண்டு தீவுகளையும் சீனா பர்மாவிடம் குத்தகை எடுத்துக்கொண்டு, அங்கே கப்பல் படைத் தளத்தை நிறுவ உள்ளது.  மேலும், எலக்ட்ரானிக் பொருட்களையும், துணிகள், பீங்கான் பாத்திரங்கள், பிளாஸ்க் போன்ற சீனப் பொருட்களை உலகத்தின் அத்தனை பகுதிகளுக்கும் இறக்குமதி செய்ய வேண்டும் என்று பேராசைப்படுகிறது சீனா. இதன் மூலம் இந்தியாவின் ஆளுமையை தென் கிழக்கு ஆசிய மண்டலத்தில் ஒழிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறது.


இப்படிப்பட்ட சீனாவுடன் நட்பு பாராட்டுகின்ற சிங்கள அரசை, நம்பக் கூடாது என்பதை இந்தியா எப்போது புரிந்துகொள்ளுமோ?


நன்றி - ஜூ வி

ஸ்விஸ் பேங்க்கில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்துக்கணக்கை வெளியிட்ட கெஜ்ரிவால்

தொடரும் சர்ச்சையில் முகேஷ் அம்பானி- விடுவதாக இல்லை கெஜ்ரிவால்




 Ambanis Deny Kejriwal S Charges

மும்பை: சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ளனர் என்ற சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினரின் குற்றச்சாட்டை அம்பானி சகோதரர்கள் உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் நிராகரித்துள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் சுவிஸ் வங்கியானது முகேஷ் அம்பானியின் கடிதத்தை வைத்து மீண்டும் புயலைக் கிளப்பி வருகிறார் கெஜ்ரிவால்.



இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் பலரும் ரூ6 ஆயிரம் கோடி அளவுக்கு சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ளனர் என்பது அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினரின் குற்றச்சாட்டு. ஒவ்வொரு தொழிலதிபரும் எவ்வளவு தொகையை பதுக்கியுள்ளனர் என்ற விவரத்தையும் கெஜ்ரிவால் குழுவினர் நேற்று வெளியிட்டிருந்தனர்.



முகேஷ் அம்பானி மறுப்பு


இதனை மறுத்துள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், உலகின் எந்த பகுதியிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசுக்கோ, முகேஷ் அம்பானிக்கோ சட்டவிரோதமான எந்த வங்கி கணக்கும் கிடையாது. வழக்கமான வணிகத்தின் அங்கமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு எச்எஸ்பிசி உள்ளிட்ட பல்வேறு உலக வங்கிகளில் கணக்குகள் உண்டு. ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. தீய சக்திகளின் தூண்டுதலால் அவை சுமத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.



அனில் அம்பானி நிராகரிப்பு



இதே போன்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டினை மறுக்கப்பட்டிருக்கிறது. ஜெனிவா எச்எஸ்பிசி வங்கியில் அனில் அம்பானிக்கு கணக்கு கிடையாது. இருப்பினும் தீய சக்திகளின் தூண்டுதலால் இத்தகைய குற்றச்சாட்டினை சுமத்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



அனு டான்டன்



இதேபோல் காங்கிரஸ் கட்சி எம்.பியான அனு டான்டன் சுவிஸ் வங்கியில் தாம் பணத்தை பதுக்கியிருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதை நிராகரித்திருக்கிறார். கெஜ்ரிவால் குழுவினரின் குற்றச்சாட்டு அனைத்தும் ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளார். மேலும் தமது கணவர் இறந்துவிட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நான் ஏதும் சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.


ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், டாபர் குழுமத்தின் பர்மன் சகோதரர்கள் ஆகியோரும் இதனை மறுத்துள்ளனர்



ஹெச்.எஸ்.பி. மன்னிப்பு ஏன்?



இதனிடையே ஹெச்.எஸ்.பி. நிறுவனமானது இந்த ஆண்டு ஜனவரி மாதமே முகேஷ் அம்பானிக்கு ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியிருப்பதாகவும் அதில் அவரது பெய தவறாக இடம்பெற்றுவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது என்றும் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியிருக்கிறார்.



கம்ப்யூட்டரே தானாக தப்பு செய்ததா?



அதாவது சுவிஸ் நாட்டின் ஹெச்.எஸ்.பி. வங்கியானது கடந்த ஜனவரியில் ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது. அதில், வெளிநாட்டில் பணம் பதுக்கியோர் பட்டியலில் முகேஷ் அம்பானியின் பெயர் இடம்பெற்றிருப்பது தவறானது. ஆனால் இந்த பட்டியலை ஹெச்.எஸ்.பி. தயாரிக்கவும் இல்லை.. கொடுக்கவும் இல்லை..


 இந்தப் பட்டியலை தயாரித்தது பிரான்சு அரசுதான். அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? பிரான்சு அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். ஹெச்.எஸ்.பி. சர்வரில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன என்று கூறியுள்ளதாக தெரிவித்திருக்கும் கெஜ்ரிவால், அப்படியானால் அந்த வங்கியின் கணிணியே தானாக முகேஷ் அம்பானியின் பெயரை பதிவு செய்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.