Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

Friday, July 05, 2013

தர்மபுரி இளவரசன் -கொலையா? தற்கொலையா?

தர்மபுரி: கலப்பு திருமணம் செய்த தர்மபுரி வாலிபர், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி அடுத்த நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த, நாகராஜன் கவுண்டர் மகள் திவ்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வன்முறை சம்பவங்கள்:

இதையடுத்து, தர்மபுரியில் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெண்ணின் தாய் தேன்மொழி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது, நீதிபதிகள் ஜெய்சந்திரன், சுந்தரேஷ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசராணைக்கு வந்தது. திவ்யாவிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம், வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆட்கொணர்வு மனுவை, தேன்மொழி வாபஸ் பெறுவதாக, வழக்கறிஞர் ரூபர்ட் பர்னபாஸ் தெரிவித்தார். நீதிபதிகள், வழக்கை இன்று, ஜூலை 5ம் தேதிக்கு, ஒத்தி வைத்தனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த திவ்யா, "எந்த சூழ்நிலையிலும் இளவரசனுடன் சேர்ந்து வாழத் தயாராக இல்லை. அம்மாவுடன் இருப்பேன். என் தந்தை இறந்ததை ஈடு செய்வேன்' என, தெரிவித்தார். இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம், ரயில்வே தண்டவாளத்தில், இளவரசன் உடல், நேற்று பிற்பகலில் கிடந்தது. அவர் ஓட்டிச் சென்ற, "பல்சர்' பைக், அந்த பகுதியில் இருந்தது.

தர்மபுரி ரயில்வே போலீசார், கூறியதாவது:

குர்லா எக்ஸ்பிரஸ் ரயில்:

கோவையில் இருந்து, பிற்பகல், 1:20 மணிக்கு, மும்பை செல்லும், குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து, இளவரசன் தற்கொலை செய்துள்ளார். ரயில் தண்டவாளத்தில், தலை வைத்து படுத்திருந்தால் மட்டுமே, உடல் துண்டாகும். ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்வோரின் உடல், தூக்கி வீசப்படும். இளவரசன், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்திருப்பது தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, போலீசார் கூறினர்.

இளவரசனின் தந்தை இளங்கோ கூறுகையில், ""திவ்யாவின் பேட்டியை, காலையில் படித்து, இளவரசன் கதறி அழுதான்; நாங்கள் ஆறுதல் கூறினோம். காலை, 10:00 மணிக்கு, செலவுக்கு பணம் கேட்டான். நான், வங்கி ஏ.டி.எம்., கார்டைக் கொடுத்தேன். அதன் பின், பிணமாக என் மகனைப் பார்க்கிறேன்,'' என்றார். இளவரசன், ரயிலில் அடிபட்டு கிடந்த இடத்தில், மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தண்டவாளம் அருகே கிடந்த உடலை, எடுக்க விடாமல், உறவினர்கள் தடுத்தனர். இதனால், மாலை, 4:30 மணி வரை, உடலை பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல், போலீசார் திணறினர். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சட்டை பாக்கெட்டில் காதல் கடிதங்கள்:

தற்கொலை செய்து கொண்ட இளவரசனின், சட்டை பாக்கெட்டில் இருந்து, இரண்டு கடிதங்களை, போலீசார் கைப்பறியுள்ளனர். கடந்த, 2011ல், திவ்யாவுக்கு, எழுதிய கடிதமும், திவ்யா, இளவரசனுக்கு எழுதிய கடிதமும் அவை. கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விவரங்களை, போலீசார் கூற மறுத்து விட்டனர். இந்த கடிதங்கள், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்கள் ஆகியவை, இளவரசன் ரயில் முன் பாய்ந்து இறந்திருப்பதை, உறுதி செய்வதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை, 5:10க்கு, பெங்களூருக்கு செல்ல, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், தர்மபுரி நோக்கி வந்தது. அந்த நேரத்தில், இளவரசனின் பிணத்தை எடுக்க விடாமல், உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டதால், ரயில் சிவாடியில் நிறுத்தப்பட்டது. மாலை, 5:45 மணிக்கு, தர்மபுரி ரயில் நிலையத்துக்கு வந்தது. டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் தலைமையில், ஐந்து மாவட்ட, எஸ்.பி.,க்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாயக்கன்கொட்டாய் உள்ளிட்ட மாவட்ட கிராமங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமல்:

கலப்பு திருமணம் செய்த தர்மபுரி இளவரசன், தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இளவரசனின் உறவினர்கள், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருப்பதாகக் கூறினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அங்கு திரண்டனர். இதனால், பதற்றம் அதிகரித்தது. சேலம் டி.ஐ.ஜி., சஞ்சய்குமார், எஸ்.பி.,க்கள் ஆஸ்ராகார்க், செந்தில்குமார் ஆகியோர், அங்கு கூடியிருந்தவர்களிடம், பேச்சு நடத்தினர். "பரிசோதனை மூலம் மட்டுமே, கொலைக்கான காரணத்தை, தெரிந்து கொள்ள முடியும். எனவே, பிணத்தை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்' என்றனர். தொடர்ந்து, மாலை, 5:45 மணிக்கு, உடலை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிலர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உள்ள, கடைகளை தாக்கினர். தொடர்ந்து, கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுதும், பதற்றம் நிலவி வருவதால், 144 தடை உத்தரவு விதித்து, கலெக்டர் லில்லி உத்தரவிட்டுள்ளார். போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை முதல், கிராமப் பகுதிகளுக்கு, பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளன.



மக்கள் கருத்து 



1. திரைக்கதையை போல சம்பவங்கள் நடந்தாலும் காதலர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு பாடம்...




2. நம்பமுடியவில்லை கொலையாகவும் இருக்க சந்தர்ப்பங்கள் உண்டு . இந்த காதல் தேவையா ...எத்தனை சண்டை, வீடுகள் நாசம் அடிதடி ...கடைசியில் எல்லாம் போச்சு வாழகத்துக்கங்கடா 



3. கொடுமையான வேதனை என்று தான் வர்ணிக்க தோன்றுகிறது. காதல் உன்னதமானது அதை முழுமையாக உணர்ந்தவர்களுக்கு. சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத இருவரின் இனக்கவர்ச்சி ஈர்ப்புக்கு பெயர் காதல் அல்ல. இந்த பெண்ணின் செயலும் இளைஞரின் முடிவும் ஒரு பாடம். காதல் வேறு. பருவ வயதில் ஏற்படும் இன கவர்ச்சி என்பது வேறு. 



4 எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் அத விட்டு இப்படி கோழை தனமாக உயிரை விடுவதால் என்ன பயன் போன உயிர் திரும்பி வருமா.இளவரசன் பொறுமையோடு இருந்திருந்தால் கண்டிப்பாக திவ்யா மனசு மாறி ஒரு நாள் திரும்பி வந்து இருப்பார்.மனதளவில் தைரியம் இல்லாமல் அவசரத்தில் எடுத்த முடிவாகவே கருதுகிறேன்...மிகவும் வருத்தமான செய்தி...


5. பள்ளி படிப்பை முடிக்கும் வரை ஜாதி பற்றி தெரியாத வரை பிரச்சனை இல்லை எப்போது இந்த 10 எக்ஸாம் வரும்போது ஜாதி செர்டிபிகாடே வாங்க அரம்பிதொமோ அப்பொழுது தான் ஜாதி வெறி வெளியில் வர அரம்பிர்கர்த்து..அதுவே வளர வளர அதிகமா ஆகிறது...முதலில் இந்த ஜாதியை certificate ஒழித்து வருமானத்தை அடிப்படையாக கொண்டு மற்றம் செய்ய வேண்டும்... ஆனால் அதை செய்தால் என்ன செய்வார்கள்????????? 


6. ஜாதி வெறி பிடித்து அலையும் மனிதர்களை கண்டால் சவுக்கடி கொடுக்க தோன்றுகிறது. பலர் இங்கே காதலால் தான் ரெண்டு உயிர்கள் போய்விட்டன என்று காதலை குற்றம் சாட்டுகின்றனர். அவர்களுக்கு ஜாதி வெறி கண்களுக்கு தெரியவில்லையா? காதல் புனிதமானது என்று பல அறிஞர்கள் உலகம் முழுவதும் கூறியுள்ளனர். எவரும் இதுவரை புனிதமான ஜாதி என்று எதையும் குறிப்பிடவில்லை. காதலிப்பதே தவறு என்று கூறிக்கொண்டு இருக்கும் பலர் கருத்தை மாற்றி கொள்ளவேண்டும். இந்த ஜாதி வெறி, வரதட்சணை பிணி ஒழிய, கலப்பு திருமணமே சிறந்த மருந்து. 


தமிழ்நாட்டினுடைய கோர முகம் தெரிகிறது இளவரசனுடைய ஆன்மா சாந்தி அடைய நான் வேண்டிகொள்கிறேன் . 


8. எல்லா மீடியாக்களும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து இளவரசன் "தற்கொலை" செய்துகொண்டான் என்று முடிவு செய்துவிட்டன. எதற்கு இந்த அவசரம்? கோர்ட் முடிவு செய்யட்டுமே இது கொலையா இல்லை தற்கொலையா என்று. அதுவரை மீடியாக்கள் பொறுமை காப்பது நல்லது.

Tuesday, January 08, 2013

ரேப் செய்ய வந்தால் கொலை செய்யலாம் -டி ஜி பி பர பரப்புப்பேட்டி

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் பயணிகளிடம் நூதன விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஏ.கே.கான் உத்தரவின் பேரில் கடப்பா மாவட்டத்தில் முதன்முதலாக விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது.

பஸ் நிலையத்தில் பெண் கண்டக்டர்கள் நின்று கொண்டு பஸ்சில் பயணம் செய்யும் பெண்களுக்கு ரோஜா பூ கொடுத்து துண்டு பிரசுரங்களை விநி யோகித்தார்கள். அதில், தனியார் பஸ்சில் பயணம் செய்ததால்தான் டெல்லியில் மருத்துவ மாணவிக்கு அந்த கொடூரம் நடந்துள்ளது.

அரசு பஸ்சில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. எனவே நீங்கள் அரசு பஸ்சில் பயணம் செய்யுங்கள். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மாநிலம் முழுக்க இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடக்க இருக்கிறது.

இதற்கிடையே ஐதராபாத் மாதாபூர் பகுதியில் உள்ள ஐ.டி. பார்க்கில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஆந்திர மாநில டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி கலந்து கொண்டார்.

ஆண்களின் கற்பழிப்பு கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பெண்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி பதில் கூறும்போது, பாலியல் செய்யும் ஆண் களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள அவர்களை கொலை செய்ய தயங்க கூடாது.

கொலை ஒரு குற்றமாக இருந்தாலும் எந்த பின்னணியில் கொலை நடந்தது என்பதை ஆராய்ந்துதான் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று கூறினார்.

ஈவ்டீசிங் சட்டத்தை கடுமையாக்க திட்டமிட்டு இருப்பதாக அரசு முதன்மை செயலாளர் மின்னிமாத்யூ கூறினார்.

குண்டூரில் உள்ள மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நகர போலீஸ் சூப்பிரண்டு ரவிகிருஷ்ணா கூறும்போது, உங்களுக்கு எதிராக கொடுமை செய்யும் ஆண்களை தைரியமாக எதிர்க்க வேண்டும். அவர்கள் முகத்தில் மிளகாய் பொடியை வீசிவிட்டு எங்களுக்கு தகவல் சொல்லுங்கள். தகவல் வந்த அடுத்த நிமிடத்தில் போலீசார் அங்கு நிற்பார்கள். பெண்களை நாம் சக்தியாக வணங்குகிறோம். அப்படிப்பட்ட உங்களுக்கு கொடுமை வரும்போது தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அனைவரும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மிளகாய் பொடி பொட்டலம் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
 
 
மாணவியை கற்பழித்தவர்கள் தற்கொலைக்கு முயற்சி?: திகார் ஜெயிலில் கண்காணிப்பு தீவிரம்
 
 
 
புதுடெல்லி, ஜன. 5-
 
டெல்லி மாணவியை ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்த ராம்சிங், முகேஷ்சிங், பவன், வினய், அக்ஷய் மற்றும் 17 வயது மைனர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இவர்களில் மைனர் மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். மற்ற 5 குற்றவாளிகளும் டெல்லி திகார் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
கற்பழிப்பு குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகள் தாக்கி விட கூடாது என்பதற்காக திகார் ஜெயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளியான ராம்சிங் மூன்றாம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
 
பவன், அக்ஷய் இருவரும் 4-ம் எண் ஜெயிலிலும், வினய், முகேஷ் இருவரும் 7-ம் நம்பர் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் மற்ற கைதிகள் யாருடனும் பேசுவதில்லை.
 
சாப்பிடும்போது இவர்கள் 5 பேரும் தங்களுக்குள்ளே பேசி கொள்கிறார்கள். கற்பழிப்பு குற்றவாளிகள் திகார் ஜெயிலுக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அவர்களது நடவடிக்கைகளும் இதை உறுதிபடுத்துவதாக உள்ளன.
 
இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகள் 5 பேர் மீதும் இரவு பகல் பாராமல் போலீசார் பார்வை திரும்பி உள்ளது. அவர்களது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது



குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படாததால் மரண தண்டனையில் இருந்து மைனர் தப்பிக்க வாய்ப்பு
 
 
டெல்லி, ஜன.4-
 
டெல்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த ராம்சிங், முகேஷ் சிங், பவன், வினய், அக்ஷய் ஆகிய 5 பேர் மீது போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
 
மிக கொடூரமான குற்றம் செய்துள்ளதால் 5 பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையில் வலியுறுத்தியுள்ளனர். எனவே 5 குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
6-வது குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மைனர் என்பதால் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே அவனது உண்மையான வயதை கண்டுபிடிக்க அவனுக்கு எலும்பு  மஜ்ஜை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
 
அவன் 18 வயதை பூர்த்தி செய்து மேஜர் ஆக இன்னும் 5 மாதம் இருப்பதாக தெரிகிறது. இது அந்த மைனருக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை மாற்றியுள்ளது.
 
தற்போதைய நிலையில் சிறுவர் குற்ற சட்டப்படி மாணவியை கற்பழித்த 17 வயது மாணவருக்கு அதிக பட்சமாக 3 ஆண்டுகள் வரைதான் ஜெயில் தண்டனை கொடுக்க முடியுமாம். இந்த காலக்கட்டத்தில் அவனுக்கு 18 வயது பூர்த்தி ஆகிவிட்டால், அவன் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவான்.
 
18 வயதுக்கு பிறகு அவனை சீர்திருத்த பள்ளியில் வைத்திருக்க இயலாது. மேலும் மேஜர் என்று சுட்டி காட்டி தண்டனை அளிக்கவும் இயலாது என்கிறார்கள். சட்டத்தில் உள்ள இந்த சில பிரிவுகளினால் மைனர் சிறுவன் உயிர் தப்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மாணவியை கற்பழித்த 6 பேரில் இந்த மைனர்தான் மிக, மிக கொடூரமாக நடந்து கொண்டவன். மாணவியை 2 தடவை பலாத்காரம் செய்த அவன் அவர் வயிற்றில் கம்பியால் குத்தி மரணத்துக்கும் காரணமாக உள்ளான்.
 
இத்தகைய கொடூர மைனர் சில மாதங்களில் சுதந்திரமாக வெளியில் வந்து விடுவான் என்பதை பலராலும் ஜீரணிக்க இயலவில்லை. எனவேதான் அவனது உண்மையான வயதை உறுதி செய்ய டெல்லி போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
THANX - MALAIMALAR

Friday, December 07, 2012

ராஜீவ்காந்தி கொலைவழக்கு - X உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.கிருஷ்ணய்யர் பேட்டி

.ஆர்.கிருஷ்ணய்யர்... இந்தியாவின் மிக மூத்த, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி. நீதி, அரசியல், எழுத்து, சமூகம் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த ஆளுமை. கடந்த மாதம் 98-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கிருஷ்ணய்யரை எர்ணாகுளத்தில் உள்ள அவரது 'சத்கமய’ இல்லத்தில் சந்தித்தேன்.




 ''வயதாகிவிட்டதாக உணர்கிறேன். கேட்கும் திறனை வெகுவாக இழந்துவிட்டேன். முன்புபோல எழுத முடியவில்லை. நினைவுகளை மீட்டு எடுப்பதில் பெரும் யுத்தமே நடக்கிறது. நான் எதிர்பார்த்த முதுமை எனக்கு வாய்க்கவில்லை. அந்த வகையில் நான் துரதிர்ஷ்டசாலி!'' என்றபடி, எதிரே பிரமாண்டமாக ஃப்ரேம் செய்யப்பட்டு இருக்கும் தன் மனைவியின் புகைப்படத்தைப் பார்க்கிறார். தினமும் தன் மனைவியின் புகைப்படத்தோடு அரை மணி நேரத்துக்கும் குறையாமல் கிருஷ்ணய்யர் பேசு வதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.




''நீங்கள் அமைச்சராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சி இப்போது பகிரங்க கொலை மிரட்டல்களுக்கும் அரசியல் கொலைகளுக்கும் களம் அமைக்கிறதே... கம்யூனிஸ்ட்டுகள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள்?''




''என் தோழர்கள் கெட்டுப்போய்விட்டார்கள். நம்பூதிரிபாட் போன்ற தோழ‌ர்கள் வாழ்ந்த மண்ணிலா இப்படி ரத்தக் கறை படிய வேண்டும்? எளிமை, தியாகம், நேர்மை, நாணயம் எல்லாம் எங்கே போயின? கொலை... அடிதடி... ரத்தம்... மிரட்டல்!


இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் பலரின் நடத்தை மிகவும் மோசமாக இருக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. மார்க்ஸ் இருந்தால் நொந்துகொள்வார். ஆனாலும், சிலர் அத்திப்பூ மாதிரி ஆங்காங்கே பூத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!''



''சாமான்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமும் நீதிமன்றமும் இந்தியா குடியரசாகி 62 ஆண்டுகள் ஆன பிறகும் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருக்கின்றனவே?''



''மருத்துவமனைகளையும் கல்வி நிலையங்களையும் பார்த்துப் பயந்த மக்கள், இன்றைக்கு நீதிமன்றங்களையும் பார்த்துப் பயப்படுகிறார்கள். சின்ன வழக்கு தொடுப்பதில் தொடங்கி, வக்கீல் கட்டணம், தீர்ப்புக்கான காலம் என நினைத்தாலே மலைக்கவைக்கின்றன நீதிமன்ற நடவடிக்கை கள். அதுவும் உச்ச நீதிமன்றம் நாட்டின் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையை முற்றிலும் மாற்ற வேண்டும்!''




''மும்பைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் இன்னமும் பல சந்தேகங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்குள் ரகசியமாக அஜ்மல் கசாப்  தூக்கிலிட்டப்பட்டு இருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து?''




''காந்தி சொன்னதுபோல உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்தக் கேள்விக்கு விரிவான பதிலை நானே விரைவில் எழுதவிருக்கிறேன். நிச்சயம் என் பதிலுக்கு ஆதரவுக் குரலும் விமர்சன அலையும் பெருகும்!''




''ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கி... இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் பல நீதிபதிகளுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விரிவான கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கருணை மனுக்களுக்கு எந்தப் பதிலும் இல்லையே மத்திய அரசிடம் இருந்து?''




''எனக்கும் பல முறை கடிதம் எழுதி இருக்கிறார் கள். அவர்கள் தரப்பில் இருந்து வந்து என்னைச் சந்தித்து இருக்கிறார்கள். நானும் பல சமயங்களில் அவர்களுக்கு வழிகாட்டி இருக்கிறேன். ராஜீவ் காந்தியின் மனைவியே, 'இவர்களைத் தண்டிப்பதால் என் கணவர் திரும்பவும் வர மாட்டார்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். 



இதை அடிப்படையாக வைத்து உங்கள் வாதங்களை அடுக்குங்கள் என்றேன். அவர்கள் மூவரும் நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டார்கள். இனியும் அவர்களைத் தண்டிப்பது சரியல்ல. தூக்குத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தூக்குத் தண்டனையை ஒழிக்காமல் செத்துப்போனால், நான் தோற்றுப்போனவனாக உணர்வேன். அஹிம்சையைப் போதித்த காந்தியின் தேசத்தில் இப்படி ஓர் அவல நிலை நீடிப்பது வருத்தமாக இருக்கிறது. இது காந்திக்கு இழைக்கப்படும் மாபெரும் அவமானம்!''




''ஓர் அரசியல்வாதி என்ற முறையில் சொல்லுங்கள்... உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? இப்போது இருப்பவர்களில் யாரை நேர்மையானவர் என்று நினைக் கிறீர்கள்?''



''ஜவஹர்லால் நேரு. அவருக்குப் பிறகு வேறு யாரும் என் கண்ணுக்குத் தெரியவில்லை. இதனைச் சொல்வதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது!''




readers views

1. அன்பு4 Days ago
"காந்தி சொன்னதுபோல உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்."------------> கசாப்புக்கு மட்டும் 160 அப்பாவிகளை கொல்லும் உரிமை எப்படி வந்தது? அவன் மனித ஜன்மம் இல்லை என்பதால் தூக்கிலிட்டது சரியானது. வாலி வதைப்படலத்தில் ஒரு மிருகத்தை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம் என்று நீதி தர்மத்தை ராமர் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
2. இவரது பெயரிலேயே இரட்டை நிலை மனப்பான்மை பளீரென முகத்தில் அறைகிறது. பெயரிலேயே கிருஷ்ண ஐயர் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு எப்படி சமத்துவத்தை மார்க்ஸிய தத்துவங்களை இவரால் கட்சிக்குள்ளேயும், பொது மக்களுக்கும் பரப்ப இயலும். சென்ற தலைமுறையை சார்ந்த மனிதர்களை பார்க்கும்போதே வெளிப்படுவது இவர்கள் என்னவோ கலாச்சார ஒழுக்கசீலர்கள போலவும் வளர்ந்து வரும் இளைய தலைமுறை என்னவோ தறிகெட்டு அலையும் தறுதலைகள் போலவும் இவர்கள் காட்டிக்கொள்ளும் பாவ்லா.

பிடித்த தலைவர் என்று நேருவை சொன்னதாலேயே இவர் மேல் எந்த ஒரு உயர்ந்த அபிமானமும் ஏற்படவில்லை. -Kalpana 
3. BALA.S7 Days ago
என்ன செய்தால் நீதித்துறையை மக்கள் தயக்கமின்றி அணுகுவார்கள், அதன் மூலம் லஞ்சம் கொடுக்க மறுக்கும் சூழ்நிலை உருவாகும் என இது போன்றவர்கள் எழுதலாம். பழங்கதை பேசி பயனில்லை. காந்தி கால இந்தியாவில் தூக்கை ஒழிக்கலாம், சோனியாகாந்தி காலத்தில் அது இயலாது என்பதைவிட இன்னும் பல மடங்கு அதிகமாக வேண்டும்.
 thanx - vikatan

Saturday, November 17, 2012

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்ததா ஐ நா?

ஈழத் தமிழர்கள் கொலையை வேடிக்கை பார்த்ததா ஐ.நா.?

கேள்வி எழுப்பும் உள் பரிசீலனைக் குழு!
'இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறி விட்டது. மிக அபாயகரமான போர் சூழலில் வெகுதிறமையான முடிவை எடுத்திருக்க வேண்டும். மக்களைக் காப் பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் போனது இந்த அமைப்பின் செயல்பாடு மற்றும் அணுகுமுறைக்கான மிகப்பெரும் தோல்வி’ - ஐ.நா. மீது இப்படி பகீர் குற்றச் சாட்டை வைத்துள்ளது, அந்த அமைப்​பின் உள்பரிசீலனைக் குழு.




ஈழப்போர் சமயத்தில் ஐ.நா. எடுத்த நிலைப்பாடுகள் குறித்து ஐ.நா. அமைப்பின் உள்பரிசீலனைக் குழு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், அந்தக் குழு தயாரித்த முக்கிய அறிக்கையின் (இறுதி வடிவத்துக்கு முந்தைய நிலை அறிக்கை) நகல் ஒன்று பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு லீக் ஆனது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, மீண்டும் இலங்கைப் புயல் வீசுகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் பி.பி.சி-யின் செய்தி​யாளர் ஒருவர், ''26 ஆண்டுகள் நடத்தப்பட்ட போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.



 இறுதிக் கட்டப் போரின் கடைசி நான்கைந்து மாதங்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா-வின் முந்தைய அறிக்கை சொன்னது. ஐ.நா-வின் உறுப்பினர்கள் யுத்தக்களத்தில் தொடர்ந்து இருந்திருந்தால், இலங்கை அரசின் வீரியம் குறைந்து இருக்கும் என்பதே இப்போது வெளியாகி இருக்கும் அறிக்கையின் அடிப்படை சாராம்சம். ஐ.நா-வின் யுத்தக்கால செயல்பாடுகள் குறித்து அந்தக்குழு கடுமையான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.



 குறிப்பாக, 2008 செப்டம்பரில் ஐ.நா. தனது ஊழியர்களை யுத்தக்களத்தில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்ட முடிவு குறித்து அழுத்தமாக கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். 'உங்களுடைய பாதுகாப்பை இனிமேலும் நாங்கள் உறுதிப்படுத்த முடியாது’ என்று, இலங்கை அரசு எச்சரித்ததும், இந்த திரும்பப்பெறுதல் நடந்ததை கேள்வியாக்கி இருக்கிறார்கள்.



இப்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்து இருக்கும் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை, 'ஐ.நா. குழுவினர் யுத்தக் களத்தைவிட்டு கிளம்பியபோது, போக வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் அழுதும் கெஞ்சியும் பார்த்தோம். ஆனால், அவர்கள் எங்களது கோரிக்கைகளுக்கு காதுகொடுக்கவே இல்லை. அவர்கள் தொடர்ந்து யுத்தக் களத்தில் இருந் திருந்தால், இன்றைக்கு அப்பாவித் தமிழர்கள் பலரும் உயிரோடு இருந்திருப்பார்கள்’ என்று எங்கள் செய்தி​யாளரிடம் குமுறினார்.



'இலங்கை அரசு தொடர்ந்து பிரஷர் கொடுத்ததன் விளைவாக, மிகஅதிகமான மக்கள் ஷெல் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தை ஐ.நா. அழுத்தமாக எழுப்பவில்லையோ...’ என்ற விமர்சனத்தையும் அந்தக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது. அமைதிக் காப்பாளர்கள் தொடர்ந்து யுத்தக் களத்தில் இருந்திருக்க வேண்டும், அங்கே என்னென்ன நடக்கிறது என்பதையும் உலகுக்கு உடனுக்குடன் உணர்த்தி இருக்க வேண்டும் என்பதையும் அறிக்கை அழுத்திச் சொல்கிறது.


தமிழர்களுக்கு எதிரான யுத்தக் காலத்தின் இறுதி மாதங்களில், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் கூட்டம் ஒன்றுகூட நடத்தப்படவில்லை. ஐ.நா-வின் உயர்மட்டக் குழுவும் ஃபார்மாலிட்டி ஆலோசனை கூட செய்யவில்லை என்கிறார்கள். எங்களுடைய முன்னாள் ஸ்ரீலங்கா செய்தியாளர் ஒருவர், 'மிகக் குரூரமாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தது’ என்று கடுமையாகக் குறிப்பிட்டதையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டி இருக்கிறது.



அதேநேரம், இலங்கை அரசின் ராணுவம், பயங்கரவாதிகள் கூட்டம் போன்று மக்கள் வசிக்கும் பகுதிகளில் செயல்பட்டதைச் சுட்டிக்காட்டி, உலகப் போர்நடைமுறை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அந்த நேரத்தில் முயற்சி மேற்கொண்டதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனால், அந்த முயற்சிக்கு எந்தப் பலனும் இல்லை'' என்கிறார் அவர்.



ஐ.நா-வின் முன்னாள் உயர் அதிகாரியும் அறிக்கை அளித்திருக்கும் ஆய்வுக்குழுவின் தலைவருமான சார்லஸ் பெட்ரே, 'குழு கண்டறிந்த விஷயங்களை இந்த அறிக்கை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது’ என்று அதிர்ச்சிகளுக்கு வலுசேர்த்து இருக்கிறார். அறிக்கையின் உள்ளடக்கங்கள் வெளியான பிறகு பல தளங்களில் இருந்தும் விமர்சனங்களும் கண்டனங்​களும் கருத்துகளும் குவிந்த வண்ணம் இருக்​கின்றன. 'பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து ஐ.நா. தவறி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.



ஐ.நா-வின் கரங்கள் கட்டப்பட்டு இருப்பது புலன் ஆகிறது. சென்சிட்டிவான சமயங்களில் ஐ.நா. அமைப்புக்கு அரசியல் மற்றும் அதிகார ரீதியில் ஆலோசனைகளையும் அறிவுரை களையும் வழங்குவதற்கு ஆட்களே இல்லை’ என்று உலக நாடுகள் பலவற்றில் இருந் தும் கண்டன விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.



இந்த விவகாரத்தில் ஐ.நா-வின் பதில் என்ன? ''அறிக்கை நகல் வெளியானது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இறுதி அறிக்கை பொதுச்செயலாளரின் கரங்களுக்கு வந்து, அவர் அதை வாசித்த பிறகு வெளியிடப்படும்'' என்கிறார் ஐ.நா-வின் செய்தித்தொடர்பாளர் மார்டின் நெசிர்கி.



இறுதி அறிக்கை வெளியாகும்போது, ஐ.நா-வின் இந்த பலவீனப் பக்கங்கள் எடிட் செய்யப்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். ஆபத்தில் அலறும் மக்களைக் காப்பாற்ற முடியாத ஓர் அமைப்பு இருந்து என்னதான் பயன்?



- எஸ்.ஷக்தி



இலங்கைக்கு எதிராக 93 நாடுகள்!

நம்பிக்கை தரும் உலகத் தமிழர் மாநாடு
லங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கட்டுப்பாடுகளையும் சதிகளையும் மீறி, ஈழ விடுதலைப் போராட்​டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.


ஈழ விவகாரத்தில் எதிரும் புதிருமாக இருக்​கும் அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, லண்டனில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் முக்கிய சில தீர்மானங்களை நிறை​வேற்றி இருக்கிறது, பிரித்தானிய தமிழர் பேரவை. இங்கிலாந்து பாராளு​மன்றக் கட்டட‌த்தில் நிகழ்ந்த‌ இந்த மாநாட்டில், இங்கிலாந்தின் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதும், உலகெங்கும் வாழும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதும் சிறப்பு அம்சம். காலங்காலமாக ஈழத்துக்காகக் குரல் கொடுத்துவரும் வைகோவும், பழ.நெடுமாறனும் இந்த மாநாட்டை புறக்கணித்திருக்கும் நிலையில், தி.மு.க-வின் சார்பாக‌ ஸ்டாலின் முக்கியப் பங்கெடுத்து உள்ளார்.



மாநாட்டை நடத்திய பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம்.


''2009-ம் ஆண்டு ஈழப் போரில் வகைதொகை இல்லாமல் கொடூரமாக‌க் கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்களை நினைத்துத் தினம் தினம் அழுகிறோம். நாம் தனித்தனியாகப் போராடி களைத்து விட்டோம். சர்வதேச சமூகத்தின் காதுகளுக்கு நமது குரல் கேட்கவே இல்லை. அதனால்தான் ஒற்றுமையாக, ஒரே குரலில் 30 லட்சம் தமிழர்களின் பிரச்னையை இங்கிலாந்தின் 78 பாரளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைத்தோம்.


கட்சிக் கருத்தியல் பாகுபாடுகளை மறந்து உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் அனைத்துப் பிரதிநிதிகளையும் மேடை ஏற்றினோம். இதுவரை தமிழகத்திலும் தாயகத்திலும் அரங்கேறாத அதிசயம் லண்டனில் நடந்திருக்கிறது. கட்சிப் பாகுபாடு​களைக் களைந்து ஒரே குரலாக ஒலித்தால் மட்டுமே நம்முடைய சோகம், சர்வதேச சமூகத்தின் காது​களுக்குப் போய்ச் சேரும் என்பதை உணர்த்தவே இந்த மாநாடு.''


''உச்சக்கட்ட போரைக் கண்டுகொள்ளாத கட்சிகளையும், தீவிர ஆதரவுக் கட்சிகளையும் ஒரே மேடையில் நிற்க வைத்திருக்கிறீர்கள். ஏடா​கூடம் ஆகவில்லையா?''



''தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் மாநாட்டுக்கு அழைக்க வேண்டும் என முடிவெடுத்தபோதே, எங்களுக்குள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துக்​கள் வெளிப்பட்டன. ஆனால் தமிழர்களின் குரல் சர்வதேச அளவுக்குக் கேட்க வேண்டும் என்றால், முதலில் நமக்குள் ஒற்றுமை வேண்டும். அதற்காகத்தான் கட்சி பேதங்களைக் கடந்து அனைவரையும் அழைத்தோம்.


ஆனால், எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அனைவரும் தார்மீகப் பொறுப்புடனும், மிகுந்த அக்கறையுடனும் நடந்து கொண்டனர். தமிழக எல்லைகளைக் கடந்து இந்தியா முழுக்க ஈழப் பிரச்னையைக் கொண்டு போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்போது எங்களுக்குப் புதிய நம்பிக்கை பூத்திருக்கிறது.


அன்று ஈழப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாதவர்கள், இன்று எங்களுடன் நின்று எம்மக்களுக்காவும் மண்ணுக்காகவும் ஆதரவு தருகிறார்கள் என்றால் நல்ல மனமாற்றம்தானே... யாரையும் உதாசீனப்​படுத்தவோ, வெறுக்கவோ செய்யாமல் அனைவரையும் அரவணைத்துப் போகவே விரும்புகிறோம்!''




''மு.க.ஸ்டாலினை, ஈழ மக்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பியதாகச் சொல்​கிறார்களே?''



'’நாங்கள் அறிந்தவரை அப்படி எதுவும் நடக்க​வில்லை. மாநாட்டுக்கு வந்திருந்த நிறைய ஜனங்களும், அமைப்புகளும் அவர்களோடு பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்!''



''வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் உங்களுடைய மாநாட்டை புறக்கணித்து இருக்​கிறார்களே?''


''வைகோ அண்ணாவையும், நெடுமாறன் அய்யாவையும் வரவழைக்க பல்வேறு வடிவங்களில் நாங்கள் தொடர்புகொண்டோம். வைகோவுக்கு டெல்லியில் முக்கிய வழக்குகள் இருந்தமையாலும், நெடுமாறன் சார்பாக வர இருந்தவருக்கு கடைசி நேரத்தில் கடவுச் சீட்டில் சிக்கல் இருந்தமையால் வர இயலவில்லை என்று அறிகிறோம்.!''



''உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?''


''2012 மார்ச் மாதம் ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவந்த‌ தீர்மானம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் தானாக அமைத்துக்கொண்ட 'எல்.எல்.ஆர்.சி’ அமைப்பு இதுவரை எவ்வித ஆக்கப்​பூர்வமான செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 2008 உச்சக்கட்ட போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறலைத் தடுப்பதிலும் கண்காணிப்பதிலும் ஐ.நா. மன்றமே தோற்றுப்போய் இருப்பதாக, அதன் உள்அறிக்கை கசிந்திருக்கிறது.



இலங்கையில் மனித உரிமை மீறல், வெள்ளை வேன் கடத்தல் போன்ற பிரச்னைகளைச் சேகரித்து, 2013 மார்ச் மாதம் ஐ.நா. மன்றத்தில் மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இன்னும் அழுத்தம் கொடுப்போம். இந்த முறையும் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் நல்ல ஒத்துழைப்பு தருவார்கள் என்றே நம்புகிறோம்.


 கடந்த முறை 24 நாடுகள் மட்டுமே மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையைக் கேள்வி கேட்டன. இப்போது 93 நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இருக்கின்றன. இது இலங்கைக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். அடுத்த ஆண்டு, 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்று இங்கிலாந்து சொல்வதற்குக் காரணம் எங்கள் லாபிதான். 30 லட்சம் தமிழர்களின் போராட்டத்தை சிதைத்தது போன்று 10 கோடி தமிழர்களின் போராட்டத்தை அழிக்க முடியாது. எங்களது புதிய, வித்தியாசமான போராட்ட முறைகளால் இலங்கை தோற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை!''
நம்பிக்கை ஜெயிக்கட்டும்!


- இரா.வினோத் 


சீனத் தோழன்' இலங்கையை நம்பலாமா?

கேள்வி எழுப்பும் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
ந்தியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை​யுடன் நெருக்கமான உறவைப் பேணி ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டு வரும் நிலையில் ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறோம் நாம். அவர்களது சீனப் பாசத் துக்கு அடிப்படைக் காரணம், இந்தியாவின் மீதான வெறுப்புத்தான்!



இதுவரை இந்தியாவில் இருந்து சென்ற முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சிங்கள வெறியர்​கள் தாக்கி இருக்கிறார்கள் என்பதே வரலாறு. இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பண்டித ஜவஹர்லால் நேரு, கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், ராஜீவ் காந்தி. ஆனால், நமக்கு ராஜீவ் தாக்கப்பட்டது மட்டும்தான் தெரியும்!


1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொருட்டு இலங்கைக்குச் சென்றார் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி. அவரைத் தனது கடற்படை வீரன் விஜேமுனி விஜித ரோகன டி சில்வா  மூலமாக கொலை செய்ய முயற்சித்த இலங்கை அரசின் செயல், இங்குள்ள அதிகார வர்க்கத்தினருக்கு மறந்து​ போயிருக்கலாம். இலங்கை நீதிமன்றம் அந்தக் கொலைக்காரனுக்கு சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால், 1990-ல் அந்தக் கயவனுக்கு மன்னிப்பு அளித்து 'பெருந்தன்மையுடன்’ நடந்து கொண்டது இலங்கை அரசு.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே, ஆட்சி​யில் இருந்த சிங்களத் தலைவர்கள் அனைவருமே இந்தியாவின் மீது மரியாதை செலுத்துவதைப் போல பாசாங்கு செய்தபடி, இந்தியாவுக்கு விரோதமான அத்தனை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்கூட, கொழும்பு நகர மையப்பகுதியில் காலே சாலையில் இந்தியத் தூதரக அலுவலகத்துக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை சீன விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு விற்பனை செய்து, ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது இலங்கை.



இலங்கையின் தென்கோடியில் உள்ள கெம்பன் தோட்டா துறைமுகத்தை 7,500 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவுக்கு எதிராக சீனா உருவாக்கி உள்ளது. இதனால், வரும் காலத்தில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களின் வர்த்தக முக்கியத்துவம் குறைந்து போகும். அது மட்டுமல்லாமல் சிறிய கப்பல்கள் மட் டுமே தூத்துக்குடி, சென்னைக்கு வரக்கூடிய சூழலை இலங்கை உருவாக்கி விட்டது.



இந்தியா மீது நல்ல எண்ணம் இல்லாத மியான்மர், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள்தான் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றன. இந்த நாடுகளுடன் எல்லாம் அதீத நட்பு பாராட்டுகிறது இலங்கை. இப்போது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்து பிரம்மபுத்ரா நீரோட்டத்தைத் தன்வசம் திருப்ப முயன்று வருகிறது சீனா. அப்படிப்பட்ட சீனாவுடன் இலங்கை 14 புதிய ஒப்பந்தங்களுக்குக் கையெழுத்துப் போட்டுள்ளது.





 அதன்படி 4,180 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சீனா மேற்கொள்ள இருக்கிறது. மேலும், தொழில்நுட்ப ஒத்து ழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, புதிய முதலீடுகள், விசா நடைமுறைகள் தளர்வு, கடல்சார் துறைகளை வலுப்படுத்த உதவி போன்றவற்றையும் இலங்கைக்கு சீனா அளிக்க இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிபர் ஹு ஜிண்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவரான வு பாங்ஜு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளார்.



 அதைத்தொடர்ந்து, இலங்கை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சீன வங்கிகள் கடன் வழங்க இருக்கின்றன. அருணா​சலப் பிரதேசத்தை உரிமை கொண்​டாடுவது, எல்லையில் விமானத் தளங்களை அமைப்பது என்று இந்தியாவுக்கு பல்வேறு பிரச்னைகளைக் கொடுக்கும் சீனாவுக்கு, இலங்கை நெருங்கிய நட்பு நாடாக மாறுவது ஆபத்தானது. அதனால், எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளும் சேர்ந்து இந்தி​யாவுக்கு நெருக்கடி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.



இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்​காமல் தொடர்ந்து தாக்கி வருகிற இலங்கை, அம்பாறை பொத்துவில் கடலில் மீன்பிடிக்க சீன நிறுவனங்​களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மீனவர்கள் மீன் பிடிப்பதற்குப் பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன மீனவர்கள் சுதந்திரமாக அந்தக் கடலில் மீன் பிடிக்கிறார்கள். நமது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்​படவும், கைதியாகப் பிடிக்கப்​பட்ட நேரத்திலும் சீன நாட்டினரையும் இலங்கைக் கடற்படையினரோடு பார்த்ததாகச் சொல்லி இருக் கிறார்கள்.



தான் உற்பத்தி செய்யும் பொருட்களை இலங்கை, பாகிஸ்தான், அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு இந்து மகா சமுத்திரம், தன் ஆளுகைக்கு உட்பட வேண்டுமென்று தந்திரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது சீனா. இந்தியாவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சீனா பயன்படுத்தி வருகிறது. அதற்குக் கடல் ஆதிக்கமும் தேவைப்படுகிறது.



பங்களாதேஷில் சிட்டகாங், பாகிஸ்தானில் கோத்தார் ஆகிய துறைமுகங்கள் சீனாவின் பிடியில் வந்து விட்டன. தைவானை தன் வசமாக்கிக்கொண்ட பிறகு, ஆசிய கண்டத்தையே தன் ஆளுமைக்குக் கொண்டுவர சீனா திட்டமிட்டு உள்ளது. இதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போட்டி நிலவுகிறது. இந்தச்சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அபாயம் தரும் நிலை ஏற்பட்டு இருப்பதற்கு ஒட்டுமொத்தக் காரணம் இலங்கை சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்ஷேவும்தான்.



இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராகச் செயல்​பட்ட பசீது வாலி முகம்மதுவின் உதவியோடு பாகிஸ்தான், இரண்டு கப்பல் நிறைய ஆயுதங்களை வழங்கியது. இந்தியாவுக்குள் நடைபெறும் பல்வேறு தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் ஐ.எஸ்.ஐ-யின் முன்னாள் தலைவராகச் செயல்​பட்டவர் பசீது வாலி முகம்மது. மேலும், இவர் கோவை குண்டு வெடிப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 இந்தி​யாவின் தலைப் பகுதியான காஷ்மீரில் கண்மூடித்தனமான தீவிரவாதத்தை முன்னெடுக்கும் பாகிஸ்தான், சிங்கள இலங்கை வழியாக தென்னிந்தியப் பகுதிகளிலும் மத வன்முறையைத் தூண்ட முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் இறை யாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயலுக்கும் சிங்கள அரசு துணை போகக்கூடும். ஈழத்தின் சம்பூர் மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கிவிட்டு, இலங்கை அரசு அதை நிறைவேற்றவிடாமல் மழுப்பி பாகிஸ்தானுக்குக் கொடுக்கத் திட்டமிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.



பலாலி விமான நிலையத்தை இந்தியா சீர் அமைத்துக் கட்டித்தர சம்மதித்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டுவிட்டார் ராஜபக்ஷே. சமீபத்​தில் வர்த்தக ஒப்பந்தங்களை நடை முறைப்படுத்த இலங்கைக்குச் சென்ற இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மாவுக்குத் தெளிவான பதிலை இலங்கை அரசு கூறவில்லை.



போர் முடிந்த பின்னரும் சிங்கள அரசு சீனா, பாகிஸ்​தான் ஆயுதங்களோடு ராணுவத்தினரைக் குவித்து, தமிழர்களை அச்சப்படுத்துகிறது.



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்தத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதாவது தமிழர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் சிங்கள ராணு​வம் அதன் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்து இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் மூன்று பிரிவுகளும், கிளி நொச்சியில் மூன்று பிரிவுகளும், முல்லைத் தீவில் மூன்று பிரிவுகளும் வவுனியாவில் ஐந்து பிரிவுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கு மாகாணத்திலும், தென்பகுதியில் மூன்று பிரிவுகளும் வைக்கப்பட்டு உள்ளன.



இதுகுறித்து, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கர்னல் ஆர்.அரிகரன், 'இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் பரவலாக நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, போருக்குத் தயார் நிலையில் இருப்பதுபோன்று காட்சி அளிக்கிறது’ என்று அச்சம் தெரிவித்துள்ளார். அண்மையில் அதிபர் ராஜபக்ஷே, 'தமிழ்ப் புலி களுக்கு எதிரான போரில் பாகிஸ்தானும் சீனாவும் உதவியதற்காக நன்றி’ என்று பட்டவர்த்தனமாக அறிவித்து இருக்கிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகம் முழுவதும் தனது வணிகத்தை பெருக்க சீனா திட்டமிட்டு உள்ளது. வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளோடு உறவுகொள்ளத் துடிக்கிறது.


சீனா வுக்கு எரிவாயு, கச்சா எண்ணெய் வருவதற்கு பர்மா வழியாக பைப் லைன் போட்டு அந்தமான், இலங்கை வழியாக ஊடுருவும் திட்டங்கள் உள்ளன. வங்கக் கடலோரத்தில் இருக்கிற கொக்கோ தீவுகள், பர்மாவுக்கு இந்தியா விட்டுக் கொடுத்து ஆஸ்திரேலியா உரிமை கொண்டாடியது. இப்போது அந்த இரண்டு தீவுகளையும் சீனா பர்மாவிடம் குத்தகை எடுத்துக்கொண்டு, அங்கே கப்பல் படைத் தளத்தை நிறுவ உள்ளது.  மேலும், எலக்ட்ரானிக் பொருட்களையும், துணிகள், பீங்கான் பாத்திரங்கள், பிளாஸ்க் போன்ற சீனப் பொருட்களை உலகத்தின் அத்தனை பகுதிகளுக்கும் இறக்குமதி செய்ய வேண்டும் என்று பேராசைப்படுகிறது சீனா. இதன் மூலம் இந்தியாவின் ஆளுமையை தென் கிழக்கு ஆசிய மண்டலத்தில் ஒழிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறது.


இப்படிப்பட்ட சீனாவுடன் நட்பு பாராட்டுகின்ற சிங்கள அரசை, நம்பக் கூடாது என்பதை இந்தியா எப்போது புரிந்துகொள்ளுமோ?


நன்றி - ஜூ வி

Monday, September 17, 2012

திருச்செங்கோடு விவேகானந்தா காலேஜ் மாணவி கேங்க் ரேப் & மர்டர் , மறைக்கப்பட்ட உண்மைகள்

http://mmimages.maalaimalar.com/Articles/2012/Sep/86573ad0-bf78-4bae-b9db-e71f5c0ebd88_S_secvpf.gif 

 ஈரோட்டில் இருந்து 19 கிமீ  தொலைவில் உள்ளது திருச்செங்கோடு.அங்கிருந்து 7 கிமீ தொலைவில் எளையாம்பாளையம் என்னும் ஊர் உள்ளது. புகழ் பெற்ற  உலகப்பம்பாளையம் பஸ் ஸ்டாப்புக்கு முந்திய ஸ்டாப். அங்கே தான் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி . இருக்கிறது.

Address:

Elayampalayam,
Tiruchengode Tk,
Namakkal - 637205,
Tamil Nadu.





23000 மாணவிகள் படித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கான கல்வி நிறுவனம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி .மிக நல்ல பெயர் கொண்ட காலேஜ். இங்கே கல்வித்தரம் மிகச்சிறப்பாக இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை இங்கே படிக்க வைக்க போட்டி போட்டு காலேஜில் சேர்க்கிறார்கள். 


கடந்த  2 வருடங்களில் இந்த காலேஜ் பல மர்ம மரணங்களின் தாயகமாக இருந்து வருகிறது.  தற்கொலை  செய்யும் மாணவிகள் பெருகி வருகிறார்கள்.அவை எல்லாம் நிஜமான தற்கொலையா? கொலை செய்து தற்கொலை நாடகமா என்பது விசாரனைக்குரியது.


இங்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவியை 7 மர்ம நபர்கள் கல்லூரிக்குள் வைத்து கற்பழித்துக் கொன்றுள்ளனர். இதனை மறைக்க கல்லூரி நிர்வாகம் ,மாணவியின் பெற்றோருக்கு 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.



போலீசாரிடம் கல்லூரி நிர்வாகம் இது ஒரு தற்கொலை தான் என்று விசாரணையை மூடிவிட பேரம் பேசி உள்ளார்கள். . இதனை ஏற்றுக்கொள்ளமுடியாத மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .இது போல்  சம்பவம் நடப்பது இது மூன்றாம் முறையாம்.



http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898184859200_medical.jpg




விவேகானந்தா கல்லூரியில் படிக்கும்  பல  மாணவிகள் ஃபேஸ்புக்கில் புலம்பி இருக்கிறார்கள். ஒரு மாணவி ட்விட்டரில் இருக்கும் பாடல் ஆசிரியர் விவேகாவிடம் இந்த தகவலை சொன்னார்கள்.
அவர்  ஜூனியர் விகடனுக்கு தகவல் சொல்லி இருக்கிறார். ஆனால் இது சம்பந்தமான உண்மையான தகவலோ , செய்தியோ எந்த ஒரு தமிழ் ஊடகத்திலும் வந்ததாகத்தெரியவில்லை.. நாளிதழ்களிலும் வரவில்லை.. வந்ததெல்லாம் தற்கொலை என்ற செய்தியே..


 தங்கள் மகளின் பாதுகாப்பிற்காக பெண்கள் கல்விநிலையத்தை நாடி வரும் பெற்றோர்களின் நிலை என்ன ?


கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் காயத்ரி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அந்த காலேஜிலேயே மிக அழகானவர் என்றும் பலர் கண் இவர் மேல் என்றும் சொல்லப்படுகிறது.


 கெமிஸ்ட்ரி லேப் அசிஸ்டென்ஸ் 4 பேர் , ஒரு ஆஃபிஸ் கிளார்க் , ஒரு லெக்சரர் ,மற்றும் ஒரு HOD  மொத்தம் 7 பேர் சேர்ந்து கல்லூரி வளாகத்துலேயே ரேப் செஞ்சிருக்காங்க.. பின் கொலைசெஞ்சிருக்காங்க 

 காயத்ரியிடம் ஒரு லெக்சரர் அடிக்கடி வழிந்ததாகவும், தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும்  மாணவிகள்  சொல்கிறார்கள்


பெண்ணின் பெற்றோரிடம் தூக்கு மாட்டிக்கிட்டு இறந்துடுச்சு என்று சொல்லி இருக்காங்க. 2 கோடி பேரம் பேசி இருக்காங்க.. போலீஸ்க்கு பணம் எவ்வளவு போச்சுன்னு தெரியல.. பாடி போஸ்ட்மார்ட்டமே பண்ணலை../ பின் பெற்றோரின் பிரஷருக்குப்பின் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மையாக நடந்தது என்பது தெரியவில்லை


பெண்ணின் உறவினர் நாமக்கல் கலெக்டராம். அவர் மூலம் பெண்ணின் பெற்றோர் நீதி கிடைக்க போராடி உள்ளனர்.. ஆனால் விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் திமுக முக்கியப்பெரும்புள்ளியாம்.. அதனால் பல மேலிட பிரஷர் வந்திருக்கு.  

 



 கல்லூரி நிர்வாகத்திடம் சில கேள்விகள் 


1. மடில கனம் இல்லைன்னா வழில  பயம் இல்லை. உங்க மேல தப்பில்லைன்னா  தன்னிலை விளக்கம் கொடுக்கலாமே? ஏன் தர்லை?கல்லூரி வளாகத்துக்குள் ஏன் மீடியாக்களை வர விடுவதில்லை? 




2. கல்லூரி பெயர் கெட்டுப்போயிடும் என்று சொல்கிறீர்கள், அப்போ இதே போல்  தொடர்ச்சியாக  மாணவிகள் கெட்டுப்போனால் பரவாயில்லையா? 


3. இது ஒண்ணும் எக்ஸாம் டைம் இல்லை. எக்சாம்ல ஃபெயில் , அரியர்ஸ் விழுந்துடுச்சு அதனால மனம் உடைந்து தற்கொலை செய்துட்டான்னு ரீல் விட.. 



4. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஊழியர்களை அப்படியே பணியில் இருக்க அனுமதித்தால் அவர்கள்  ருசி கண்ட பூனைகள் ஆகி தங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள், நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு  நட்ட ஈடு கொடுத்துக்கொண்டே இருப்பீர்களா? 



5. இப்போது இருக்கும் களங்கத்தை போக்க அனைத்து ஆண் ஊழியர்களையும் நிறுத்தி விட்டு பெண் ஊழியர்களை நியமித்தால் தான் மாணவிகளின் பயம் போகும்.. அவர்கள் கோரிக்கையை ஏன் ஏற்கவில்லை?



6. சீல் வைக்கப்பட்டிருக்கும் காலேஜால் உங்களுக்கு நேரடி பாதிப்பு இப்போ இல்லை. ஆனா 20,000 மாணவர்கள் கதி என்ன? அவங்க எப்படி கல்வியை தொடருவாங்க?


இது பற்றி தினமணியில் வந்த செய்தி 


http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898023866917_hostel.jpg


நாமக்கல்லில் மாணவி தற்கொலை : மாணவிகள் போராட்டம், கல்லூரிக்கு விடுமுறை

First Published : 08 Sep 2012 01:59:02 PM IST


நாமக்கல், செப்., 08 : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி கல்லூரி விடுதியில், மாணவி காயத்ரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மர்மம் இருப்பதாகக் கூறி கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால், தேர்வில் தோல்வி அடைந்ததால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த சூழ்நிலையில், கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மாலை மலர் செய்தி 

http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898312311423_mess.jpg
 திருச்செங்கோடு கல்லூரி மாணவி இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள காட்டேரி, வேப்பனம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக்.ஐடி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2-ந் தேதி இவர் கல்லூரி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த நிலையில் மாணவி காயத்ரி சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாணவி காயத்ரியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டது. டீன் வள்ளிநாயகம் தலைமையில் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பரிசோதனை அறிக்கையை நேற்று மாலை மாணவியின் உறவினர்களிடமும் திருச்செங்கோடு ரூரல் போலீசாரிடமும் சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளியநாயகம் வழங்கினார். அந்த அறிக்கையில் மாணவி காயத்ரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி படுத்தப்பட்டு உள்ளது. மாணவியின் உடலில் ரத்தக் காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தபோதிலும் மாணவியின் உடல் பாகங்கள் தடயவியல் சோதனைக்கும், ரசாயன பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் கிடைத்த பிறகு தான் மாணவி எப்படி இறந்தார் என்பது உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயத்ரி சாவுக்கு பிறகு மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் கல்லூரி நிர்வாகம் கல்லூரியை காலவரையின்றி மூடி உள்ளது. கல்லூரி திறக்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.



ட்விட்டர் நண்பர்


இந்த ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டவர்  கூறியது

Murugesan Vijayakumar அன்பின் நண்பர்களுக்கு, கடந்த மூன்று தினங்களாக திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் செல்போன்கள் வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் பரவி வருகிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையிலும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்து விசாரித்து வருபவன் என்ற முறையிலும் சில விளக்கங்களை இங்கே தர கடமைப்பட்டுள்ளேன்.
 சில அரசியல் ஆதயம் தேடும் அமைப்புகளாலேயே இந்தபிரச்சனை தற்பொழுது பெரிதுபடுத்தப்பட்டுள்ளது என்பது எங்களது விசாரணையில் தெரியவந்தது.ஒவ்வொரு மீடியா நிறுவனங்களுக்கும் அனாமேதய போன் கால்கள் வந்தன. பேசுபவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.இதில் எங்களுக்கு சந்தேகம் எழவே தீவிர விசாரணையில் இறங்கினோம். 
மாணவியின் உடல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பொழுது அவரது உடலை நேரில் பார்த்தேன்.இறந்த மாணவி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் சில இயக்கங்கள் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்களையும் சேர்த்துக் கொண்டு மருத்துவமனையின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். 
 இதனையடுத்து மாணவி காயத்ரியின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டீன் வள்ளிநாயகம் தலைமையில் மூன்று மருத்துவர்கள் இறந்து போன மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பிரேத பரிசோதனை முழுமையும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று மாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன் நகல் மாணவியின் தாய் மாமா பழனிசாமியிடம் திருச்செங்கோடு ரூரல் போலீசார் ஒப்படைத்துள்ளனர். 
அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை நானும் வாசித்தேன். அதில் மாணவியின் மரணம் சம்பவம் நடந்த அன்று (2.9.2012) 23-36 மணி நேரத்திற்குள் நடந்திருக்கலாம் என்றும், மாணவியின் மரணம் தூக்கிட்டு கொண்டதால் கழுத்து எழும்பு முறிவு ஏற்பட்டும், மூச்சுகுழாய் உடைந்தும் மரணம் ஏற்பட்டுள்ளது என்றும், மாணவியின் உடல் தூக்கில் தொங்கியதால் இரத்த ஓட்டம் நின்று அவரது கால் பகுதியில் ரத்தம் தேங்கி பாதங்கள் நீண்டு வளைந்துள்ளன என்றும், ரத்தம் ஆங்காங்கே நின்றதால் உடல் கறுத்து,தோல்களில் நிற மாறுதல் ஏற்பட்டுள்ளதாகவும் ,மாணவியின் உடலில் காயங்களோ, பலாத்காரத்திற்கான தடையங்களோ இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 இது முழுமையான தற்கொலை என முதல் கட்ட பிரேதபரிசோதனை அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. ##




டிஸ்கி - இந்த பதிவில் குறிப்பிட்ட கல்லூரி சம்பந்தப்பட மாணவிகள் யாராவது கமெண்ட் போட்டால்  உங்கள் உண்மையான பெயரை போட வேண்டாம். அது உங்கள் பாதுகாப்புக்கு ஏற்றது அல்ல



திருச்செங்கோடு வித்ய விகாஸ் பள்ளிக்கூடத்தில்  இதே போல் ஒரு மாணவி போன வாரம் , ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதை  தன் கையில் குத்திக்கொண்டார் என்று  ஒரு கேஸ் ஒன்றும் உள்ளதாகவும் ஒரு மாணவியின் பெற்றோர் என்னிடம் கூறினர். அது பற்றி விபரம் தெரிந்த  மாணவ மாணவிகள்   9842713441 , 94863 13441 செல்லிலோ  [email protected]  என்ற மெயிலிலோ விபரம் தெரிவிக்கவும்..