Saturday, September 01, 2012

ஜெ முன் ரஜினியின் சர்ச்சைக்குரிய மேடைப்பேச்சு

கலைஞரின் புகழ்!''

ஜெயலலிதா முகத்துக்கு நேரே கருணா நிதியைப் புகழ்ந்து பேசி, பரபரப்பு அரசியலுக்கு விதை போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!


மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் ஜெயா டி.வி-யின் 14-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்தது. விழா அழைப்பிதழில் ஜெயலலிதா பெயரைத்தவிர வேறு பெயர்கள் இல்லை.


 ரஜினி, கமல் மேடையேறுவதைக்கூட கடைசிவரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன்பே ரஜினி, கமல், கே.பாலசந்தர், இளையராஜா, ஏவி.எம்.சரவணன் ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டனர். ஜெயலலி தாவைச் சேர்த்து எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக் கைகள். எம்.எஸ்.வி-க்கும் ராமமூர்த்திக்கும் 'திரை இசை சக்கரவர்த்தி’ விருதை அளித்து பொற்கிழிகள் வழங்கி கார்களையும் பரிசளித்தார் ஜெயலலிதா.


இதில் ரஜினி பேச்சுதான் ஹைலைட்!



''ஜெயா டி.வி-யில் சோ எழுதிய 'எங்கே பிராமணன்’ நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த் தேன். திடீரென்று அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அதை தொடராமல் இருப்பது தெரியவர... அவரிடமே கேட்டேன். 'முதல்வர் ஜெயலலிதாவும் இதையே என்னிடம் கேட்டார். தொடர முடியாத காரணத்தை அவரிடம் சொல்லிவிட்டேன்’ என்றார். இதில் இருந்து தெரிவது என்னவென்றால், முதல்வர் சொல்லியும் கேட்காத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சோ மட்டும்தான்'' என்று ரஜினி சொன்னபோது எதிரே உட்கார்ந்திருந்தார் சோ. ரஜினியைப் பார்த்து கையை நீட்டிவிட்டு, அப்படியே சீரியஸாக தலையில் வைத்துக் கொண்டார் சோ. இதை அங்கே இருந்த திரையில் காட்ட... கூட்டத்தினர் ரசித்துச் சிரித்தனர்.






தொடர்ந்து பேசிய ரஜினி, ''ஒவ்வொரு மனிதனும் இரண்டு முறை இறக்கிறான். பேரும் புகழும் பெற்றவர்கள் அதை இழக்கும்போது அவர்களுக்கு ஒரு முறை மரணம் நேரும். இரண்டாவது, உடலில் இருந்து உயிர் பிரியும்போது ஏற்படும். சாகாவரம் பெற்றவர்கள் இறந்தாலும் அவர்களின் புகழ் மறையாது. தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் மறைந்தாலும் அவர்கள் புகழ் மறையவில்லை. அந்த வகையில் இப்போது அரசியலில் இருக்கும்....'' என்று லேசாக நிறுத்திய ரஜினி...



''என் ஆருயிர் நண்பர் கலைஞர்'' என்று சொல்லி அதிர வைத்தார். மேடையில் இருந்த முதல்வரின் முகம் மாற ஆரம்பித்தது. தொடர்ந்து பேசிய ரஜினி, அடுத்ததாக,




''புரட்சித் தலைவி போன்றவர்களின் புகழ் என் றும் அழியாது'' என்றும் சொல்லி வைத்தார். எப்போதும் ரஜினியின் வாய்ஸ் சர்ச்சைக் குரியதாகவே ஆகும். முன்பு, ஜெயலலிதாவை எதிர்த்து வாய்ஸ் வந்தது. இப்போது, ஜெயலலிதா முன்பே கருணாநிதியை புகழ்ந்து!



  - எம். பரக்கத் அலி

''கருணாநிதிக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது?''


''ஜெயலலிதாவை  மேடையில் வைத்துக் கொண்டு  கருணாநிதியைப் புகழ்ந்தாரே ரஜினி?'' என்று, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான பழ.கருப்பையாவிடம் கேட்டோம். ''அம்மா முன்னிலையில் ரஜினி பேசியதை நானும் கேட்டேன். 'புகழ் பெற்றவர்கள் இருமுறை சாகிறார்கள். ஒன்று உடலை விட்டு உயிர் நீங்கும் போது. இன்னொரு முறை புகழ்நிலையில் இருந்து சரிவுறும் போது.’ இப்படிச் சொல்லிக் கொண்டு வந்தவர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் என்று வரிசைப்படுத்தி, இவர்களுக்குகெல்லாம் ஒருமுறைதான் மரணம் ஏற்பட்டதென்றார்.



அவர்கள் வாழும் போது புகழை இழந்து மனஉளைச்சலுக்கு ஆகாதவர்கள் என்பதால், வாழும்போது சாகாதவர்கள் என்பது அதன் பொருள். இந்த வரிசையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் சேர்த்தார்.



ரஜினிகாந்த்தின் ஆராய்ச்சி சரியானதுதானா? தமிழுக்காகவும் தமிழனத்துக்காகவும் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, மைய ஆட்சியிலும், அங்கம் வகித்துக் கொண்டு, சோனியா காந்தியின் சொந்த நோக்கத்துக்குத் துணைபோய், கசாப்புக்கடைக்காரன் ராஜபக்ஷே ஈழத்தை சுடுகாடாக்கும் வேளையில் தமிழ்நாடு பொங்கி எழுந்து விடாமல் பல நாடகங்களை ஆடி, இன அழிவுக்குக் காரணமான கருணாநிதிக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது?



காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்து தி.மு.க-வை விலக்கிக் கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். போர் நின்றிருக்கும். ஈழத் தமிழினம் காக்கப்பட்டிருக்கும். அந்த ஒன்றைக் கருணாநிதி செய்திருந்தால் அரசியல் ரீதியான திறனாய்வுகள் அப்போதும் இருக்கும் என்றாலும் 'இனம் அழியக் காரணமானவர்’ என்னும் 'வரலாற்று இழிவுக்கு’ உள்ளாகி இருக்க மாட்டார்.



 ரஜினிகாந்த் சொல்லிய வாழும் போதே அடையும் இன்னொரு மரணம் இதுவாக இருக்கலாம். ஒரு கருதுகோளை முன்வைத்து அதைத் திறம்பட வளர்த்து முடிக்க ரஜினிகாந்த் பழக்கப்பட்டிருக்கவில்லை. உண்மையிலேயே ரஜினி நல்லவர். கருணாநிதி 'என் பெயரை ஏன் விட்டு விட்டாய்’ என்று கேட்டு வருத்தப்பட்டு விடுவாரோ என்னும் தாட்சண்யம் ரஜினியை அவ்வாறு சொல்ல வைத்து விட்டது!''



கழுகார் பதில்கள்

மா.சந்திரசேகர், மேட்டு மகாதானபுரம்.


ஜெயலலிதா, மாயாவதி, மம்தா போன்றவர்களைப் பார்க்கும்போது பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணமே அடிபட்டுப் போய்விடுகிறதே? 


  அதிகார போதை அனைவரையுமே மாற்றி விடுகிறது. இதில் ஆண், பெண் பேதம் இல்லை. அரசியலில் இருக்கும் ஆண்கள் எல்லாம் சரி யானவர்களா என்ன?


தேசிய இயக்கத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி யும், திராவிட இயக்கத்தில் மூவலூர் ராமாமிர்தமும், கம்யூனிஸ இயக்கத்தில் ஜானகி அம்மாளும் இருந்த தமிழ்நாட்டு அரசியல்தான் இது. அம்புஜம் அம்மாளின் தியாகம் இங்கு மறக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று. எனவே, அதிகார அரசியலில் ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது!


 போடி எஸ்.சையது முகமது, சென்னை-93.


  '2ஜி உள்ளிட்ட ஊழல்களுக்குப் பிரதமர் அரசியல் ரீதியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்தார்’ என்று பி.ஜே.பி. குற்றம் சாட்டுவதில் உண்மை உள்ளதா? 


  நிச்சயமாக! எந்த முறைகேட்டிலும் பிரதமருக்குப் பங்கு போனது என்று இதுவரை மன்மோகனின் அரசியல் எதிரிகள்கூடச் சொல்லவில்லை. ஆனால், அவரது மௌனம்தான் இங்கே விமர்சிக்கப்படுகிறது. தானே ஒரு காரியத்தைச் செய்வது அல்லது அந்தக் காரியத்தை யாரோ செய்யும்போது கண்டும் காணாமல் இருப்பது என இரண்டுமே தவறுதான். இரண்டாவது தவறைத்தான் இரண்டு முறை பிரதமராக இருக்கும் போதும்  மன்மோகன் அதிகமாகச் செய்திருக்கிறார்.


 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.


  நிலக்கரி ஊழலை அம்பலப்படுத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை, மத்திய மந்திரிகள் விமர்சிப்பது உரிமை மீறல்தானே? 



  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று தலை மைக் கணக்குத் தணிக்கை. அதை, அரசியல் ரீதியாக விமர்சிப்பது, உரிமை மீறல் மட்டுமல்ல, அந்த அதிகார அமைப்பை அரசியல் ரீதியாக அச்சுறுத்துவது ஆகும்.


ஆட்சியில் யார் இருந்தாலும், அரசாங்கப் பணம் முறையாகச் செலவு செய்யப்பட்டு உள்ளதா, விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பதைக் கண்காணிப்பவர்கள் அவர்கள். பாரதிய ஜனதாவின் எத்தனையோ நடை முறைகளை இவர்கள் கேள்வி கேட்டவர்கள்தான். எனவே, அந்த அமைப்பை காங்கிரஸ் அமைச்சர்கள் கொச்சைப்படுத்துவது, அரசியல் அமைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை யின்மையைத்தான் காட்டுகிறது!


 இரா.தோணி, தூத்துக்குடி.


பரவாயில்லையே... ஒழுங்கு நடவடிக்கைக்காக நோட்டீஸ்கூட அனுப்புகிறதே காங்கிரஸ்? 


  விவகாரம் ஜெயந்தி நடராஜன் சம்பந்தப்பட்டது என்பதால் அனுப்பு கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸில் எத்தனையோ ஒழுங்குமீறல்கள் தினமும் நடக்கின்றன. அதையெல்லாம் டெல்லி மேலிடம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. டெல்லியில் செல்வாக்கான ஜெயந்திக்கு ஒரு பிரச்னை என்றதும் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். மற்றபடி, 'ஒரு கண்ணில் வெண்ணெய்... இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்பதுதான் எப்போதும் டெல்லித் தலைமையின் ஃபார்முலா!


பொன்விழி, அன்னூர்.


சுவிஸ் வங்கியில் பணம் போட என்ன தகுதி வேண்டும்? 


  சுயசம்பாத்தியமாக இருக்கக் கூடாது!


 வி.ஜி.சத்தியநாராயணன், நங்கநல்லூர்.


  'நிலக்கரி ஒதுக்கீட்டில் அரசுக்கு எவ்விதமான நஷ்டமும் இல்லை’ என்று ப.சிதம்பரம் கூறிவிட்டாரே? 


  அப்படிச் சொல்லவில்லை என்றும் சிதம்பரம் சொல்லி விட்டாரே. இப்படித்தான் சில நாட்களுக்கு முன், விலைவாசி உயர்வு பற்றி ஒரு கருத்தைச் சொன்னார். அது சர்ச்சை ஆனதும் அப்படிச் சொல்லவில்லை என்றார். பொதுவாக, எந்தச் செய்தியைச் சொன்னாலும் அழுத்தம் திருத்தமாக வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசக்கூடியவர் சிதம்பரம். அவரது வார்த்தைகளை பத்திரிகைக்காரர்கள் மாற்றி எழுதி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.


க.ராமராஜ், கோவில்பட்டி.


முந்தைய பி.ஜே.பி. ஆட்சிக்கும் இன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கும் நாளைய பி.ஜே.பி. ஆட்சிக்கும் இடையே இந்தியாவின் முன்னேற்றம்..? 


நாளை பி.ஜே.பி. ஆட்சி என்பது உங்களது எதிர்பார்ப்பு. அதுபற்றி இப்போது கருத்துச் சொல்ல முடியாது!


முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் ஒரு சில துறைகளில் மட்டும்தான் இருந்தன. ஆனால் இன்று, பெரும்பாலான துறைகளுக்கும் பரவி விட்டது. லட்சம், கோடி என்று பரிணாமம் அடைந் துள்ளது. விலைவாசியும் எகிறிவிட்டது. அதைவிட மிகமுக்கியமான வேறுபாடு, பொதுமக்கள் மீது இன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அலட்சியம், பாரதிய ஜனதா தலைவர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் மக்களைப் பார்த்துப் பயந்தார்கள். அந்தப் பயம், இன்றைய மத்திய மந்திரிகளுக்கு இல்லை!


 அ.ராஜா ரஹ்மான், கம்பம்.


  மறைந்த பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனிடம் தங்களைக் கவர்ந்த அம்சம் எது?
  எதையும் சுவாரஸ்யமாய்ச் சொல்வது. நேரடிப் படைப்பா அல்லது மொழிபெயர்ப்பா என்று தெரியாதது மாதிரி இயல்பாக இருக்கும் அவரது மொழிபெயர்ப்புகள். 'பட்டாம்பூச்சி’ அவரது மொழிபெயர்ப்புகளில் சிறந்த ஒன்று. 'நான் கிருஷ்ணதேவராயர்’ அவரது எழுத்தின் மகுடம். கிருஷ்ணதேவராயரே தனது சொந்தக் கதையைச் சொல்வதாக அது அமைந்திருக்கும். தொழிலுக்காகவோ, சம்பளத்துக்காகவோ இல்லாமல் எழுத்துக்காகவே எழுதியவர்!


 இ.சிகாமணி, அத்தனூர்.


  பயப்படாமல் சொல்லுங்கள்... அழகிரி, ஸ்டாலின் ஆகிய இருவரில் யார் திறமைசாலி? 


  டெஸ்ட் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் இருவரும். ரிசல்ட்டை அவுட் பண்ணக் கூடாது!

hared Junior Vikatan's photo.




நன்றி - ஜூ வி

JOKER - பாலிவுட் சினிமா விமர்சனம்

http://movies.ndtv.com/images/reviews/joker.jpgஹீரோ நாசாவில் பணி புரியும் ஒரு ஆராய்ச்சியாளர்.வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சி. அவங்களோட எப்படி தொடர்பு கொள்வது? இதை கண்டுபிடிக்கறதுதான் அவர் வேலை.. அவர் பண்ணிட்டிருக்கற இந்த பிராஜக்ட் ஒரு மில்லியன் டாலர் மதிப்பு உள்ளது.. 


ஹீரோவோட அப்பா இந்தியாவுல இருக்கார். அவர் கிட்டே இருந்து ஒரு தகவல்.. சீரியஸ்.. உடனே வரவும்னு.. ஹீரோவுக்கு போக இஷ்டம் இல்லை.. ஆனா ஹீரோயினுக்கு அந்த ஊரை பார்க்க ஆசை. ஏன்னா ஹீரோ ஹீரோயின்கிட்டே தான் ஒரு அநாதைன்னு டகால்டி விட்டிருக்கார்.. உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க  ஹீரோயினுக்கு ஆசை.. 


பொதுவா ஆம்பளைங்க யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.. ஆனா தன் மனைவி, அல்லது காதலி, அல்லது கேர்ள் ஃபிரண்ட் யாராவது சொன்னா கேட்டுடுவாங்க.. கேட்டே ஆகனும்.. அப்படி கேட்கலைன்னா என்ன ஆகும்?கறது பட்டினி இருந்தவங்களுக்கு தெரியும்.. 


இந்தியா கிளம்பறாங்க.. பாக்ளாபூர் தான் அவங்க ஊர்.. 600 பேர் மட்டும் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமம் அது.. நோ மின்சாரம், நோ தண்ணீர். அங்கே போன பிறகுதான் தெரியுது ஹீரோவோட அப்பா கலைஞரை விட  திறமையா டிராமா போட்டிருக்காருன்னு.. .


அவர் சீரியஸா எல்லாம் இல்லை.. தான் வாழும் கிராமம் ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு ..உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி  அதை முன்னேற்றனும்.. அதுக்கு தன் மகன் உதவி செய்யனும்.. இதான் அவர் எண்ணம்.. 




http://bollyspice.com/wp-content/uploads/2012/08/12aug_joker-musicreview02.jpg



ஹீரோ அரசியல்வாதிகளை போய் பார்க்கறாரு.. தூள் விக்ரம் மாதிரி  கோரிக்கை வைக்கறாரு,.. ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போக மாட்டான், ஆதாரம் இல்லாம போலீஸ் யாரையும் லாக்கப்ல போட மாட்டான்ன்னு ஒரு பழமொழி இருக்கு, அது மாதிரி ஹீரோ சந்திச்ச அரசியல்வாதி ஆ ராசா மாதிரி தூய்மையான கரங்களுக்கு சொந்தக்காரர்.. வேலை நடக்கலை. 


ஹீரோ ரிட்டர்ன் ஆகி யோசிக்கறாரு.. சிட்டிசன் படத்துல அஜித் அத்திப்பட்டி கிராமத்தை  உலக மக்கள் கவனத்தை திசை திருப்ப ஐடியா பண்ண மாதிரி இவரும் ஒரு ஐடியா பண்றாரு..


 அதாவது வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுல அங்கே வந்து இறங்கி இருக்காங்க அப்டினு ஒரு புரளியை கிளப்பி விடறாரு. உடனே மீடியாவுல இருக்கற பறக்கா வெட்டிகள் எல்லாம் வீடியோ கேமராவை தூக்கிட்டு முதல்வன் படத்துல குவியற மாதிரி குவிஞ்சிடறாங்க..


பூசணிக்காய், தர்பூசணி ( கோசாப்பழம்) , பாகற்காய் இதை எல்லாம் யூஸ் பண்ணி ஏலியன்ஸ் மாதிரி ஒரு ஆளை செட் பண்ணி டிராமா பண்றாங்க.. மிலிட்ரி, போலீஸ் எல்லாம் அங்கே குவிஞ்சுடுது.. என்ன நடக்குது என்பதை காமெடியா சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க.. 



இந்தப்படத்தை நான் ஈ எடுத்த ராஜ்மவுலி கையிலோ ஷங்கர் கையிலோ கொடுத்திருந்தா பட்டாசை கிளப்பி இருப்பாங்க.. ஏன்னா  சி ஜி ஒர்க் எனப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் படத்துக்கு மெயினா ப்ளே பண்ணறதால அவங்க தான் குட் சாய்ஸ்.

http://timesofindia.indiatimes.com/photo/15376027.cms


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கிராமத்தில் ஹீரோ நுழைந்ததும் அங்கே இருக்கும் அப்பாவி  மக்கள் எல்லாம்  மரத்தின் கிளை நுனியில் அமர்ந்து  அடி பாகத்தை வெட்டுவதும் எல்லாம் பொத் பொத் என கீழே விழுவதும்1980 இல் 7ஆம் கிளாஸ் பாடத்தில் வந்த பழைய காமெடி என்றாலும் சிரிக்க முடிகிறது


2. மின்சாரம் இல்லாத கிராமம் என்பதால் ஒளிக்காக பெரிய பெரிய கண்ணாடித்தொட்டிகளில்  மின்மினிப்பூச்சிகளை விட்டிருப்பது கொள்ளை அழகு..  ஸ்ரீ ராம் ஆல்ரெடி மீரா படத்துல் அந்த மாதிரி காட்டி இருந்தாலும் பார்க்க நல்லா இருக்கு.. 


3. படத்தோட ஓப்பனிங்க் பாடல் காட்சில அந்த மூங்கில்களால் வேயப்பட்ட அரங்கம் அட்டகாசம்.. ஆர்ட் டைரக்டர்க்கு ஒரு சல்யூட்.. அதை ரெடி பண்ண 100 பேர் கொண்ட குழு வேலை செஞ்சாலும் ஒரு வாரம் ஆகி இருக்கும்.. 


4. மீடியாவில் இருந்து மிடி போட்டு வரும் ஜிகிடி மழையில் நனைந்து ஆடுவது செம கிளு கிளு..  அந்த சீனில் கேமரா தனது பணியை செவ்வனே செய்து இருக்கு.. 


5. பாக்ளாபூர் மக்கள் எல்லாம் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஆஃப் லூஸ் என்று  காட்டி விட்டதால் பல லூஸ்தனங்கள் செய்வது மாதிரி காமெடி செய்ய ரொம்ப சவுகரியம்.. 


http://image3.mouthshut.com/images/ImagesR/2012/8/Joker-Movie-925642540-5234382-1.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள், மார்க்கெட்டிங்கில் சில  யோசனைகள்



1. போஸ்டர் டிசைன் மகா மட்டம்.. படத்தோட போஸ்டர் தான் ஆடியன்சை தியேட்டருக்கு இழுத்துட்டு வரும்.. ஆனா இது சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமா? காமெடி படமா? என்று குழம்பி ரெண்டுங்கிட்டானாக போஸ்டர் அடிச்சிருக்கீங்க..  ஹாலிவுட் படத்தை எதுக்கெல்லாமோ காப்பி அடிக்கிறோம்.. போஸ்டர் டிசைன்ல காப்பி அடிச்சா என்ன? 


2. கோடாலியால மரத்தை வெட்டி எல்லாரும் பொத் பொத்னு கீழே விழும் காமெடி காட்சியில் என்னமோ ஹெலிகாப்டர் தரைல இறங்கற மாதிரி கிழே விழறாங்க.. தலை குப்புற த்தானே விழுவாங்க? படு மோசமான காட்சி அது.. 


3. ஹீரோதான் தன் சொந்த ஊருக்கு வர்றார்..  அப்பாவை பார்க்கறார்.. அவர் தான் முகத்துல சந்தோஷ எக்ஸ்பிரஷன் காட்டனும், ஆனா அவரை விட ஹீரோயின் தான் வாங்குன காசுக்கு மேலயே எல்லாத்தையும் காட்டறாங்க.. ஓவரோ ஓவர் ஆக்டிங்க்.. அண்ணன் அக்‌ஷய் ரொம்ப ரொம்ப அடக்கி வாச்சிங்க்.. சம்பளம் சரியா தரலையா? 


4.  என்னதான் ஹீரோயின் யூ எஸ் ரிட்டர்னா இருந்தாலும் அப்படியா டிரஸ்சிங்க் பண்ணி இருப்பாங்க.. எங்க ஊர் கரகாட்டக்காரிங்க கூட முந்தானையை  அப்பப்ப மூடுவாங்க.. அது என்னமோ பப்ளிக் பார்க் மாதிரி 24 மணி நேரமும் ஓப்பனாவே இருக்கு.. படு கண்றாவி. ( கிளுகிளுப்பே வர்லை யுவர் ஆனர் )


5. ஹீரோ எல்லாரையும் ஏமாத்த வயல்வெளில ஒரு செவ்வக இடம் மார்க் பண்ணி அங்கே விண்கலம் வந்த மாதிரி காட்ட எல்லா புற்களையும் கட் பண்றாரு.. பின் அந்த எல்லை வகுத்த கயிறை அப்படியா லூஸ் மாதிரி விட்டு வைப்பாங்க? 


6. ஹீரோ நாசாவுல ஒர்க் பண்றார்.. மீடியாக்கள் கேமராவுடன் வருது.. அட்லீஸ்ட் முகத்துல ஒரு மரு மச்சம் கூட ஒட்டிக்க துப்பில்லையா? முழு மாறு வேஷம் தான் போட கையாலாகலை.. 


7. ஹீரோவுக்கு எந்த மாமா பெண்ணோ, முறைப்பெண்ணோ இல்லை.. ( 2ம்  1 தான் ) பின் ஏன் தனக்கு மேரேஜ் ஆகிடுச்சு, இவதான் அவன்னு அப்பாவுக்கு அறிமுகம் பண்ணாம ஜஸ்ட் ஃபிரண்ட்னு அறிமுகம் பண்றார்? ஆனா எல்லார் கண் முன்னாலயும் 2 பேரும் ஜோடியா எப்போ பாரு சுத்திட்டே இருக்காங்க.. 



8. நாட்டோட ராணுவம் வந்த பின் வேற்றுக்கிரக வாசி மாதிரி வேஷம் போட்டு காமெடி பண்ணிட்டு இருப்பது மகா எரிச்சல்..  அவங்களும் ஷூட் பண்ணாம என்னமோ  ஜெயமாலினி டான்ஸ் பார்க்கும் ஆர்வத்துடன் வாயை ஆ-ன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க ( ஏன் பழைய உதாரணம்னா. அந்தக்காலத்துல அது ஆச்சரியம், இப்போ எல்லாம்  அது சர்வ சாதாரணம் ஆகிடுச்சு )


9. பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் அந்த கிராமத்துக்கு வந்த பின் ஹீரோ அவங்க முன் கால் மேல கால் போட்டு பேசறது எல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.. அடக்கி வாசி அண்ணாத்தே.. அண்ணன் அழகிரியே அடங்கி இல்லை? 


10. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டாக நிஜமாவே  ஏலியன்ஸ் வருவது நல்ல சீன் தான்.. ஆனா ஜீன்ஸ் எலும்புக்கூடு டான்ஸ் மாதிரி அது  5 நிமிஷம் ஒரு குத்தாட்டம் ஆடிட்டு பின் விண்கலம் ஏறி தாயகம் திரும்புவது  கேட்கறவன் கேனயனா இருந்தா  கே டி விக்கு ஓனரே கே ஆர் விஜயா தான்னு  ஐ கிருஷ்  சொல்ற மாதிரி இருக்கு 

11. எங்கூர்ல 25 வது படத்துக்கே ஓவரா சலம்பல் பண்ணுவாங்க. அக்‌ஷய் குமாரின் 100 வது படம்னு பட்டாசா போஸ்டர் ஒட்டவேணாமா? அட 100 வது படமா? அப்போ ஏதாவது வித்தியாசமா இருக்கும்னு சில ஏமாளிங்க  வர  வாய்ப்பு இருக்கே? 

12. தமிழ்ல ஜி வி பிரகாஷ் குமார் செம ஃபேமஸ். அவர் ஹிந்திப்படத்துக்கு இசை அமைச்சதை  டி வி விளம்பரங்கள்ல அண்டர்லைன் பண்ணி காட்ட வேண்டாமா?

http://www.bolegaindia.com/images/gossips/akshay_sonakshi_joker_trailer_post_1342084543.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்


 காட்சி ரீதியான மொக்கை காமெடி என முடிவு செஞ்சதால இயக்குநர் வசன காமெடி தேவை இல்லைன்னு முடிவு பண்ணுனது படு முட்டாள்த்தனம். இந்தப்படத்துல கிரேசி மோகனை விட்டுருந்தா தாளிச்சிருப்பாரு.. அவரை தமிழ்ல எழுதச்சொல்லி ஒரு துபாஷை விட்டு ஹிந்தில மொழி பெயர்த்து இருக்கலாம்.. 

1.  உன் மேல இவ்வளவு பாசம் வெச்சிருக்கும் பெற்றோரை விட்டுட்டு உன்னால எப்படி இங்கே ஃபாரீன்ல டைம் பாஸ் பண்ண முடியுது?


2. கண்ணா.. உங்க கிராமம் வளர்ச்சி அடைஞ்சா அதுல எனக்கு என்ன லாபம்? எந்த வேலை செஞ்சாலும் அதுல ஒரு ஆதாயம் பார்க்கறவன் தான் உண்மையான அக்மார்க் அரசியல்வாதி 


3. Hamara mazaak mat udaao"( எங்க சந்தோஷத்தை  கெடுக்காதே)


அய்யய்யோ துபாஷ் - Don't fly our jokes." 


http://www.glamsham.com/music/reviews/images/joker.jpg

சி.பி கமெண்ட் - படம் குழந்தைத்தனமா இருக்கு. அதனால குழந்தைங்களை கூட்டிட்டு போலாம், ஜாலியா சிரிப்பாங்க.. நீங்க இதை இப்படி கேவலமா எடுத்து இருக்காங்களேன்னு சிரிச்சுட்டு வரலாம் .. அக்‌ஷய் குமாரின் 100 வது படம் ஊ ஊ ஊ ஊ - ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன், மொத்தமாவே 36 பேர்தான் இருந்தாங்க ,அதுல 28 பேர் சேட்டுகள், அவ்வ்வ்

Star Cast: Akshay Kumar, Sonakshi Sinha, Prakash Raj, Sreyas 

Talpade, Minisha Lamba

Director: Sirish Kunder

Producer: Farah Khan, Akshay Kumar


Music: G.V. Prakash Kumar

Genre: Adventure Fantasy

http://timesofindia.indiatimes.com/photo/15200153.cmsa



டிஸ்கி -

முகமூடி -சினிமா விமர்சனம்

Friday, August 31, 2012

முகமூடி -சினிமா விமர்சனம்

http://reviews.in.88db.com/images/Mugamoodi-first-look/Mugamoodi-Jiiva-Narain-First-look-posters.jpga

நாட்ல முகமூடி போடாத கொள்ளைக்காரர்கள் நிறைய பேர் இருக்காங்க, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் ,பிரதமர்கள், என் நீளும் பட்டியல்கள். ஆனா பாருங்க அவங்க கிட்ட அதிகாரம், அரசியல் செல்வாக்கு, அரசாங்க பாதுகாப்பு, ஒத்துழைப்பு இதெல்லாம் இருக்கு.. சோ அவங்களை ஒண்ணும் பண்ண முடியாது.. போலீசோட வேலை என்ன?  அஞ்சு பத்து திருடுனவன், பேங்க்ல கொஞ்சமா கொள்ளை அடிக்கறவன் இவங்களைத்தானே பிடிக்க முடியும்?



 கோடிக்கணக்குல ஊழல் பண்ணுனவங்க வாய்தா ராணிகளாகவும், நம்ம குடும்பத்தை தவிர வேற யாருக்கும் தமிழ் நாட்டின் சொத்து போயிடக்கூடாதுன்னு நினைக்கும் மனசும், , மற்றவர்கள்க்கு வாய்ப்புத்தராத தலைவர்கள் இருக்கும் தேசம் இது..


கமிங்க் டூ த பாயிண்ட், பணக்கார வீடுகள்ல கொள்ளை அடிக்கும் முகமூடிக்கொள்ளைக்காரர்களை பிடிக்க ஒரு போலீஸ் ஸ்பெஷல் டீம்.. நாசர் தான் அதுக்கு லீடர்.. அவர் பொண்ணு தான் ஹீரோயின். ஒரு வேலையும் செய்யாம தறுதலையா இருக்கும் ஹீரோ ஜீவா அந்த டொக்கு ஃபிகரை பார்த்ததுமே ஒரு தலையா லவ்வறாரு.. 


http://tamil.cinesnacks.net/photos/movies/Mugamoodi/mugamoodi-movie-stills-016.jpg

பால் வடியும் முகமா இருக்கும் ஹீரோ எப்படி இப்படி ஃபைட் போடறார்னு எந்த நாயும் கேள்வி கேட்டுடக்கூடாதே.... அதனால அவர் குங்க்ஃபூ மாஸ்டர்ட்ட  ஃபைட் கத்துக்கிட்ட ஆளா ஓப்பனிங்க்லயே காட்டிடறாங்க.. 


வில்லன்களை பிடிக்கும் முயற்சில நாசர் கிட்டத்தட்ட கொலை செய்யப்படறார்... அதாவது கொலை முயற்சில ஆள் எஸ்.. ஆனா ஹீரோதான் கொலை செஞ்சதா ஹீரோயின் நம்பற மாதிரி ஒரு சிச்சுவேஷன்..  இடைவேளை ( பயங்கர டர்னிங்க் பாயிண்ட் )


அதுக்குப்பின் எல்லா பட ஹீரோ மாதிரி ஹீரோ தான் கொலையாளி இல்ல..  அப்டினு நிரூபிக்க ஒரிஜினல் கொலையாளியை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைப்பதே இந்த டப்பா படத்தின் கேவலமான கதை. 



ஹீரோ ஜீவா நல்ல அர்ப்பணிப்போட உழைச்சிருக்கார்.. குங்க்ஃபூ ஃபைட் நிஜமாவே கத்திட்டு வந்திருப்பார் போல .. ஓக்கே.. ஆனா  அடுத்த  கவுதம் படத்து கெட்டப்பே இதுக்கும் போட்டது எடுபடலை.. அந்த பிஞ்சு மூஞ்சி எப்படி ஆக்‌ஷன் ஹீரோவுக்கு செட் ஆகும்? மீசை இல்லாமல் மழு மழு முகம் இருந்தா தமிழ் சினிமால ஆக்‌ஷன் ஹீரோவா காட்ட முடியாது.. ( குருதிப்புனல் கமல் விதி விலக்கு )கோ படத்துக்குப்பின் வந்தான் வென்றான் , ரவுத்திரம் போல  ஜீவாவுக்கு இதுவும் ஒரு சறுக்குப்படமே.


 ஹீரோயின் பூஜா ஹெக்டே..தானா வந்து அவர் நம்மை ஹக் பண்ணாக்கூட வேணாம் விலகம்மா என சொல்ல வைக்கும் சுமார் அழகுதான்..  பாடல் காட்சில ஃபுல் முதுகை காட்டறார்..  ஒரு சோகக்காட்சில  லோ ஹிப் காட்றார்..  ஒரு காதல் சீன்ல லோ கட் காட்டறார்.. ஆனா நடிப்பை மட்டும் கடைசி வரை காட்டவே இல்லை.. எல்லாத்தையும் இப்பவே காட்டிட்டா எப்படி? அடுத்த படத்துல நடிப்பைக்காட்டலாம்னு பெண்டிங்க் வெச்சிருக்காராம்.. 60 மார்க் போடலாம்.. லிப்ஸ். கண் எல்லாம் நல்லாருக்கு.. கனகாம்பரப்பூ கலர்ல அவர் உதடுகள் வசீகரிக்கிறது.. தொப்பை போடாத அவர் இடை அழகு.. மற்றபடி  அவர் வந்து போகும் 13 காட்சிகளில் இயக்குநர் சொல்லிக்குடுத்ததை செய்கிறார்.. 


 வில்லனாக நரேன்.. இயக்குநருக்கு என்ன கோபமோ தெரில .. நல்லா பழி வாங்கிட்டார்..  இவர் வரும் ஆரம்ப காட்சிகள் நல்லா இருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சிகள் படு சொதப்பல். என்னமோ கார்பெண்டர் மாதிரி சுத்தியலோட அவர் சுத்துவதும், ஹீரோவை நக்கல் அடிப்பதாக நினைத்து இவரே கேவலப்படுவதும் சகிக்கல.. 


நாசர் கனகச்சிதமான நடிப்பு.. 


http://mimg.sulekha.com/tamil/mugamoodi/stills/mugamoodi-movie-012.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்



1. முதல் குங்க் ஃபூ ஃபைட் சீன் ஷார்ப் அண்ட் கலக்கல்..  ஹாலிவுட் படம் போல் காட்சி அமைப்பு.. 


2. எஃப் எம்மில் செம ஹிட் ஆன வாயைப்பொத்தி சும்மா இரு பாட்டு படப்பிடிப்பு அம்சம்.. ஒளிப்பதிவு, கேமரா ஆங்கிள் எல்லாம் ரசிக்கும் விதத்தில் 


3. ஹீரோயின் ஹீரோவை துப்பு சுல்தானி மாதிரி கேவலமா துப்பியதை நினைத்து புலம்பும் ஹீரோ  தன் தாத்தா எதார்த்தமா துப்பும் போது  ஜெர்க் ஆவது கலக்கல்.. 


4. ஹீரோ வில்லன் சேசிங்க் சீனில் நள்ளிரவில் ஒரு கள்ளக்காதல் ஜோடி கொஞ்சுவதும்.. கண் மூடி சொக்கிய நிலையில் இருக்கும் அந்த ஜிகிடியின் கன்னத்தில் ஹீரோ ஒரு தட்டு தட்டி செல்லும்போது அது தன் கள்ளக்காதலன் தான் என அந்த கற்புக்கரசி நினைத்து புளகாங்கிதம் அடைவதும் செம காமெடி சீன். 


5. படு மொக்கை படத்தை என்னமோ பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படம் மாதிரி போஸ்டர் டிசைன், ட்ரெயிலர் எல்லாவற்றிலும் கலக்கலான ஓப்பனிங்க் கொடுத்த மிஸ்கினின் திறமை.. 


 6. டைட்டில் டிசைன் மார்வெல் பிக்சர்ஸின் ஸ்டைலை சுட்டிருந்தாலும்
 ரசிக்கும்படி இருப்பது



http://tamil.cinesnacks.net/photos/events/Mugamoodi-Press-Meet-02/mugamoodi-meet-stills-051.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ,



1. யுத்தம் செய் படத்தில் ஃபைட் சீன்க்கு பேக்கிரவுண்ட் மியூசிக் நல்லா இருந்ததுன்னு எல்லாரும் சொன்னாங்க.. ஓக்கே அதுக்காக அதே இசையை எடுத்து இதுக்கும் போடனுமா? 


2. தமிழ் நாடே கொண்டாடும் ஹீரோ முகமூடியை பார்க்கனும்னு வில்லன் போலீஸ்ட்ட கோரிக்கை வைக்கறான்.. எப்போ தமிழ் நாடு கொண்டாடுச்சு? அவர் இருக்கும் தெருவுக்குக்கூட தெரியாது.. அபப்டி ஒரு சீனே வைக்கலையே? 


3. வில்லன் ஆசாரியா? கார்பெண்டரா? ஏன் லூஸ் மாதிரி கைல ஒரு சுத்தியை வெச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கான்?


4. ஸ்பைடர் மேன், பேட் மேன், அயர்ன்மேன், சூப்பர்மேன் என்று வில்லன் ஹீரோவை  நக்கல் அடிப்பது படு கேவலம். அதுவும் 5 முறை அப்படி பண்றார்.. க்ளைமாக்ஸ் சீரியஸா இருக்க வேண்டாமா?  கோபம் வற்ற மாதிரி காமெடி பண்ணாதீங்கன்னு எத்தனை டைம் சொல்றது?


5. ஹீரோயின்க்கு ஹீரோவை 6 டைம் நேருக்கு நேர் பார்த்தப்ப வர்லை.. முக மூடி போட்டுட்டு வேன் கிட்டே யூரின் போறப்ப எதார்த்தமா ஹீரோயின் ஹீரோவை அந்த கேவலமான கோலத்துல பார்த்த பின் காதல் பொங்கிட்டு வருது.. யோவ்,, இது என்ன கில்மா படமா? 


6.  க்ளைமாக்ஸ்ல வில்லன் ஸ்கூல் குழந்தைங்க இருக்கும் வேன்ல உள்ளே போக நினைச்சா கதவைத்திறந்து போக மாட்டாரா? ஏன் லூஸ் மாதிரி டாப்பை சுத்தியால அடிச்சுட்டு இருக்கார்? அவருக்கும் டாப் அதாவது மேல் மாடி காலியா?


7. ஹீரோயின் ஹீரோகிட்டே லவ்வை வெளிப்படுத்த பல வழி இருந்தும் ஏன் கேனம் மாதிரி ஹீரோ  நெஞ்சை தடவி தடவிப்பார்க்கறாரு? ஆண்ட்டி மாதிரி.. 

( நல்ல வேளை.. )


8. குங்க் ஃபூ மாஸ்டர்  ஹீரோவுக்கு  எல்லாத்தையும் கத்துக்குடுக்காம  இன்ஸ்டால்மெண்ட்ல வித்தைகள் கத்து தர்றாரே, அது ஏன்? 


9. க்ளைமாக்ஸ் ஃபைட் சீன் தான் பொதுவா இந்த மாதிரி ஆக்‌ஷன் படத்துக்கு முக்கியம்.. ஆனா ஏன் சொதப்பல் ஃபைட்?


 10. ஹீரோ அந்த குழந்தைங்க முன்னால பல்டி, குட்டிக்கரணம் எல்லாம் அடிச்சு டாக்டர் ராமதாசை விட  பெரிய காமெடியன் ஆக ட்ரை பண்றது  படு கேவலமா இருக்கு.. ஆக்‌ஷன் ஹீரோ இமேஜையே அது உடைக்குது.. 



11. ஹீரோவுக்கு அந்த ப்ளூ கலர் பனியன் லெக்கின்ஸ் டிரஸ் படு கேவலமா இருக்கு.. பார்த்தா சிரிப்பு தான் வருது.. அதுக்கு மேல சிவப்பு கலர் ஜட்டி வேற .. அவ்வ்வ்வ்.. ராமராஜன் நடிச்சிருக்கனும் 
http://3.bp.blogspot.com/-awG8r-wdTKI/UD5CP548PZI/AAAAAAAA72Q/IVZ3RitUtUE/s1600/Mugamoodi-Movie-Stills-%2B(1).jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1. யாரையும் நம்பாதீங்க.. கமிஷனர் உட்பட.. எப்பவும் சிவில் டிரஸ்ல வாங்க.. யூனிஃபார்ம் வேண்டாம்.. , இந்த ஃபார்மாலிட்டி சார்.. மோர் எல்லாம் கட் பண்ணுங்க , டியூட்டியை பாருங்க.. 


2.  அதென்ன மாப்ளை 18 வயசுல இருந்து 81 வயசு வரை எல்லாரும் டாஸ்மாக் வந்துடறாங்க?


3. அதெப்பிடிடா தண்ணி அடிக்க உன் கிட்டே மட்டும் காசு வந்துடுது?



4. புரூஸ்லி யார் மாதிரியும் ஆகணும்னு நினைக்கலை..தான் என்னவா ஆக
நினைச்சாரோ அப்படியே ஆனார். அதனால நீயும் அவர் மாதிரி வரணும்னு
நினைக்காதே..உனக்கு என்ன ஆகத் தோணுதோ அப்படி ஆகு’


5. எங்கேடா போறே?


 அவளைப்பார்க்கனும்


 பார்த்து?


 கன்னத்துல அறையனும். 

 அவ கமிஷனர் பொண்ணுடா.. 

 அப்போ 2 டைம் அறையனும்.. 



6. இப்போதான் சாமி மலை ஏறி இருக்கு..  திரும்பவும் ஏற வெச்சுடாதீங்க.. 



7. அங்கே என்னடா பண்றே?


 டாடி, பைக்கை ரிப்பேருக்கு குடுத்திருக்கேன்.. மெக்கானிக் பார்த்திட்டு இருக்கான்.. ( பில்டப் ஹீரோயின் முன்)



 உன்கிட்டே சொந்தமா ஒரு சைக்கிள் கூட இல்லையேடா.. சரி சரி.. நைட் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு.. சரக்கு அடிச்சு வாமிட் எடுத்துட்டு இருக்காதே.. 



8.  ஏண்டா மூடு அவுட்டா இருக்கே? 


 என்னால முடியல.. 

 அப்போ நல்ல டாக்டராப்பாரு


 அய்யோ தாத்தா.. அதில்லை.. அந்த முடியல அல்ல.. இது வேற.. சோகம்.. 


 9. லவ் ஒரு டெஸ்ட் மாதிரி டா.. 

 ம்க்கும், நான் ஸ்கூல் டெஸ்ட்டே பாஸ் பண்ணலை.. 



10. குனிஞ்சு நடக்காத.. என்னை மாதிரி ஆகிடுவே.. 

 உன்னை மாதிரி இருந்தா நான் அவளை பார்க்காமயே இருந்திருப்பேன்.. 

http://www.koodal.com/cinema/gallery/events/2011/771/mugamoodi-movie-launch-stills_23_190750123.jpg


11. தாத்தா.. ஏதாவது ஐடியா குடு ப்ளீஸ்;. 

 எல்லாத்தையும் நானே சொல்ற மாதிரி இருந்தா நானே அந்தப்பொண்ணை லவ் பண்ணிடலாமே? நீ எதுக்கு ? 


12.  நீ என்னமோ தப்பு பண்றே? உனக்கு என்னமோ நடக்கப்போகுது.. 


13. டேய்.. இப்போ நீ என்ன பண்ணப்போறியோ.. எனக்கு வயிற்றை கலக்குது.. 


 எனக்கும் தான்.. 


14. வில்லன் - என் நிழல் கூட என் பின்னால் வராது.. ஆனா நீ வந்துட்டே..  எனக்கு போலீஸ் வாசனை பிடிக்காது, ஆனா சாவு வாசனை பிடிக்கும்.. 






எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 ( 37 தான் போடனும் நியாயப்படி பார்த்தா, ஆனா விகடன்ல மிஸ்கின்னா ஒரு சாஃப்ட் கார்னர், அள்ளி வீசுவாங்க )

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - வேலை வெட்டி இல்லாதவங்க, பொழுது போகாதவங்க யாரா இருந்தாலும் டி வில அடுத்த வாரம் போட்டுடுவாங்க.. அது வரை வெயிட் பண்ணவும் . இந்த டப்பாவை . ஈரோடு அபிராமியில் பார்த்தேன்






http://kollywoodgalatta.com/wp-content/uploads/2012/08/tamil-movie-mugamoodi-photos.jpg a


விழா மாலைப் பொழுதில்- அசோகமித்திரன் -சிறுகதை

அறை வெளியே நிறைய நடமாட்டம் கேட்டது. நான் வெளியே வந்தேன். ஒரு அதிகாரி என்னைத் தடுத்து நிறுத்தி, ”இனாகுரேஷனுக்கு முந்தி ஒரு இன்டர்வியூவும்  கிடையாது என்று உனக்குத் தெரியாது? உன் கார்டைத் தடுத்து நிறுத்தி  விடுகிறேன் பார், நீ ·பெஸ்டிவல் உள்ளேயே நுழைய முடியாது” என்றான்.

அப்போது புடைசூழ ஜெயதேவியும் வெளியே வந்தாள். என்னைப் பார்த்து,
”மறக்காதீங்க சார். கட்டாயம் ஹோட்டலுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு
என்னைக் கடந்து போனாள். அந்த அதிகாரி அவளைப் பின் தொடர்ந்து போனான்.

துவக்க விழா கலாட்டாவும் கூத்தாகவும் இருந்தது. சாலையில் போலீஸ்காரர்கள்  கூட்டத்தைக் கலைக்க தடியடி செய்திருக்கிறார்கள்.

மேடையில் அடுத்தடுத்து அபத்தமும் உளறலும். சினிமாத்துறைத் தலைவர்கள் கையை  வீசிப் பிதற்றினால் மத்திய மாநில மந்திரிகள் அசையாமல் நின்று
பிதற்றினார்கள். இதெல்லாம் எனக்குப் பழக்கமாகிப் போனவை. மந்திரி ஒருவர்
காது கொடுக்கக் கிடைத்தால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு சினிமாப்
பிரமுகர் தவறாமல் சினிமாத் தொழிலே நசித்துச் செத்துக்கொண்டிருக்கிறது
என்றும், அந்த மந்திரி உடனே அத்தனை வரிகளையும் ரத்து செய்து அவர்கள்
அடுத்த நிமிடம் உயிர் வாழ அரசாங்கம் இன்னும் உதவிகள் புரிய வேண்டும்
என்பார்கள். மந்திரிகள் தேசிய ஒருமைப்பாடு, கலாச்சார பாரம்பரியம், எப்படி
மூலை முடுக்கெல்லாம் சினிமாவும் சினிமா நடிகர்களும் பாட்டுகளும் ஊடுருவி இருக்கின்றன என்றும், நாட்டின் அத்தனை இடர்பாடுகளையும் தீர்க்கும்படியான கருத்துப் படங்களையே சினிமாத் தயாரிப்பாளர்கள் தயாரிக்க வேண்டும் என்பார். அதே மந்திரி மேடையில் நடிகை என்று ஒருத்தி இருந்துவிட்டால், அவர் உரையில் பாதி அவளுக்குத்தான் என்பதுபோலத் திரும்பித் திரும்பிப் பார்த்துப் பேசுவார். அந்த நடிகை எழுந்தால் அவர் எழுந்துவிடுவார். அவள் அவருக்கு மாலை அணிவித்தால் அவருடைய உயரம் அரை அடி உயரும் அல்லது குறையும். இதெல்லாம் அங்கிருப்போருக்குத் தேச முக்கியத்துவம் உடையதாகத் தோன்றக் கூடும். உண்மையிலேயே அதுதான் உண்மையோ என்னவோ?

என் கண்களுக்கு எல்லாமே அபத்தக் களஞ்சியமாகத்தான் தோன்றியது. அஷோக்குமார் சற்று முதிர்ச்சியுடன் பேசக்கூடும் என்று நினைத்தேன். ஆனால் அவரும் தடுமாறினார். அவருக்கு அது திரைப்பட விழா ஒன்றின் துவக்க நிகழ்ச்சி என்றே மறந்துவிட்டது. சட்டென்று நினைவுக்கு வந்து திரைப்பட விழாக்களின்
இன்றியமையாதத் தன்மையை அவர் எப்போதும் உணர்ந்ததாகக் கூறினார்.

முன்னர் இதே மாதிரி ஒரு நிகழ்ச்சியில் வேறோர் நகரில் தேவிகாராணி பேசியது எனக்கு நினைவுக்கு வந்தது. விழாவுக்கு வராத அயல்நாட்டு டைரக்டர்களை எல்லாம் அவள் வரவேற்றாள். அந்த டைரக்டர்கள் வரவில்லை, அவர்கள் படங்களைத்தான் காட்டப் போகிறது என்று விழா நெறியாளர் அவளுக்கு மேடையிலேயே சொன்னார். ஏன் எனக்கு முன்னமேயே இதெல்லாம் சொல்லவில்லை என்ற அவள் சிறிது
கடுகடுத்தாள். ஒரு வைபவத்துக்காக யாரையாவது அழைத்தால் அந்த நபரிடம்
முன்கூட்டியே முக்கிய விவரங்களைத் தெரிவித்துவிட வேண்டும் என்றாள்.
எனக்கு அஷோக்குமாரே தேவிகாராணியாக மாறிவிட்டது போலிருந்தது. அவரும் அவளும் சேர்ந்து நடித்த ‘அச்சுத் கன்யா’ கண்முன் தோன்றியது. செக்கச் செவேலென்று இருக்கும் வதனத்துடன் படிப்படியாக வாரிப் பின்னப்பட்ட கறுத்த கேசத்துடன் அவள் ஹரிசனப் பெண்ணாக நடித்தாள். அப்போது அவள் காதலன் யாராக இருக்க முடியும்? பிராமணப் பையனாக அஷோக்குமார். யாராவது தேவிகாராணிதான் பிராமணப் பெண், அஷோக்குமார் ஹரிஜன இளைஞன் என்று கூறியிருந்தால் தயங்காது
நம்பிவிடலாம். அந்தப் படத்தை ஒரு ஜெர்மன் டைரக்டர் டைரக்ட்
செய்திருந்தார். ஆதலால் தேவிகாராணியும், அஷோக்குமாரும் சர்வதேசத்
திரைப்பட விழாவைத் துவக்க மிகவும் பொருத்தமானவர்கள். பிராமணப் பையன், ஹரிஜனப் பெண் எப்படிப் பார்த்தாலும் காதல் நிறைவேறாது. ‘அச்சுக்
கன்யா’வில் நிறைவேறவில்லை. ஆனால் அதன் பிறகு வந்த பல படங்களில் அத்தகைய காதல் கைகூடிவிடும் ஒரே ஒரு வில்லன் எதிர்க்க எட்டுப் பேர் கதாநாயகனையும் கதாநாயகியையும் மணமுடித்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று செயல்படுவார்கள். இந்த எட்டுப் பேரில் காமெடியனும் ஒருவனாக இருப்பான். முடிவில் அவனும் அவனுடைய ஜோடியை மணந்துகொள்வான்.

அஷோக்குமார் மேலும் மேலும் தடுமாற எனக்கு ‘அச்சுத் கன்யா’ அப்படியே
சென்னை வரையில் விரிவடைந்தது.

ஒரு வழியாக அஷோக்குமார் அவர் பேச வேண்டியதையும் பேச வேண்டாததையும் பேசி முடித்துவிட்டார். அடுத்துக் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். இந்த சினிமாக்காரர்களுக்கு புத்தி ஏதாவது இருக்கிறதா? ஒரு ஆர்க் லாம்ப்பை ஏற்றச் சொல்லக்கூடாது? குத்துவிளக்காம் குத்துவிளக்கு! எல்லாம் பத்திண்டு
எரியும்.

சூட்டும் டையும் அணிந்த அஷோக்குமார் மேடையோரத்தில் வைக்கப்பட்ட பெரிய குத்துவிளக்கருகே சென்றார். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து திரி. ஒரு திரியை ஏற்றினால் போதாது. ஐந்தையும் ஏற்றவேண்டும்.

சூட்டும் டையும் அணிந்த திரைப்பட விழா அதிகாரியும் குத்துவிளக்கருகே
சென்றார். அது போதாது என்று மாநில முதலமைச்சர். அவர் ராஜரிஷி, அல்லது
பக்கிரிராஜா அல்லது கோலோச்சும் சந்நியாசி. அவருடைய கஷாயத்தைவிட
நெற்றியில் தரித்திருந்த குங்குமப் பொட்டு பயமுறுத்தியது.

அஷோக்குமார் குத்துவிளக்கை ஏற்றத் தயாராக இருந்தார். ஆனால் அவராக
ஏற்றிவிடக் வடாது. ஜெயதேவி துணைபுரிந்தபடிதான் அவர் ஏற்ற வேண்டும்.
அப்படித்தான் செய்தி ஒலிபரப்பு இலாகாவும், திரைப்பட விழா நெறியாளர்
அலுவலகமும், மந்திரியும், முதல் மந்திரியும் நிர்ணயித்தார்கள். ஜெயதேவிக்
குச்சியை கிழிக்க அதை வாங்கிக் கொண்டு அஷோக்குமார் திரிகளை ஏற்றுவார். ஆனால் நெருப்பை ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் வாங்கலாமா? பெருத்த அபசகுனமாச்சே! அதிலும் எடுத்ததற்கெல்லாம் சகுனமும் ஜோசியமும் பார்க்கும் சினிமாக்காரர்கள் விழாவில் அபசகுனமாக ஒன்றும் நடக்கக்கூடாது. முதலிலும் முடிவிலும் திருப்பதி சாமிக்குப் பூஜை நடத்தியாக வேண்டும். அந்த நாளில் வேறு எந்த கோயிலருகே சாமியார் பிரபலமாயிருக்கிறாரோ அவருடைய ஆசியைக் கோர வேண்டும். இங்கே ஹைதராபாத் பிரபல சாமியார் யார்?

எங்கிருந்தென்ற தெரியாமல் ஜெயதேவி மேடையில் தோன்றினாள். முன் நான்கைந்து வரிசைகள் தவிர இதரப் பார்வையாளர் மத்தியில் கரகோஷமும் சீட்டியடித்தலும் நிகழ்ந்தன. ஜெயதேவி சிலைக்குரிய முகத்தை மிகுந்த தேர்ச்சியோடு நிலைத்து வைத்துக் கொண்டிருந்தாள். இதைத்தானே ‘சஸ்டெயிண்ட் எக்ஸ்பிரஷன்’ என்பார்கள்?

ஒரு பெண்மணி மெழுகுவர்த்தி ஒன்றைக் கொண்டுவந்தாள். அது சிவப்பு
வர்ணத்தில் முறுக்கேறியதாக இருந்தது. ஜெயதேவி நெருப்புக் குச்சியால் பற்ற வைக்க முயன்றாள். மூன்று குச்சிகளாலும் முடியவில்லை. அஷோக்குமார் முதல் குச்சியிலேயே மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்துவிட்டார். எவ்வளவு லட்சம் சிகரெட்டுகளைப் பற்ற வைத்திருப்பார்? விழா நெறியாளர்கள் கைகாட்ட அஷோக்குமார் குத்துவிளக்குத் திரிகளைப் பற்ற வைப்பதில் முனைந்தார். ஒன்று எரித்தால் முந்தையது அணைந்தது. கடைசியாக எல்லாத் திரிகளையும் ஏகமாக வெளியே இழுத்துப் பற்ற வைக்க ஒரு தீவட்டி போல எரிந்தது. நான் உட்கார்ந்திருந்த மூலையிலிருந்து ‘ஹாஹா’ வென்று சிரித்தேன். அரங்கம் முழுவதும் கரகோஷம் செய்தது. ஜெயதேவி முதலில் என்ன செய்வதென்று நின்றாள். அப்புறம் அவளும் கைதட்டினாள்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (31. 8..2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.tamil.cinebuzzz.com/img_articles/323b.jpg 

1.முகமூடி - மிஷ்கினின் கே‌ரிய‌ரில் முகமூடி முக்கியமான படம். முதல் மெகா பட்ஜெட், முதல் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். கொஞ்சம் ஸ்லிப்பானால் சூப்பர் ஹீரோ சி‌ரிப்பு ஹீரோவாகவும் வாய்ப்புண்டு. முகமூடியின் இன்னொரு பெயர் ‌ரிஸ்க்.

ீவா சூப்பர் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் - சூப்பர் ஹீரோவுக்கான - காஸ்ட்யூம் மிக அருமை என்று படத்தை தயா‌ரிக்கும் யு டிவி-யின் நிர்வாகி தனஞ்செயன் கூறியிருக்கிறார். ஆள் பாதி ஆடை பாதி என்றால் சூப்பர் ஹீரோ விஷயத்தில் ஆள் கால், ஆடை முக்கால். 



அடுத்து சண்டைக் காட்சிகள். இங்கு மிஷ்கின் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளார். அவ‌ரின் சூப்பர் ஹீரோ மசில் பவரைவிட மைண்ட் பவரை அதிகம் சார்ந்திருப்பவன். அதை வைத்தே அனைத்தையும் சாதிப்பதாக மிஷ்கின் கூறுகிறார். அதற்காக சண்டைக் காட்சிகள் இல்லாமலில்லை. அதுவும் தாரளமாகவே உள்ளது.


முகமூடிக்கு கே இசையமைக்கிறார்.


சென்டிமெண்ட் சிக்கலில் தமிழ் சினிமா சிக்கிக் கொண்டிருக்கிறது. சாதாரண சிக்கல் இல்லை இடியாப்ப சிக்கல்.


முகமூடி 31 ஆம் தேதி வெளியாகிறது. ‌‌‌ீவாவால் தாங்க முடியாத பட்ஜெட். விளம்பரத்தை முடிந்த மட்டும் முடிக்கிவிட்டு முதல் வாரத்தில் கலெக் ஷன் பார்த்தால் தப்பிக்கலாம். இந்த நிலையில் யுடிவி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தனஞ்செயன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதாவது முகமூடி நூறாவது படமாம். 




இந்த வருடத்தில் 99 படங்கள் வெளியாகியிருக்கின்றனவாம். நூறாவதாக வெளியாகப் போவது முகமூடியாம். இது எதேச்சையாக நடந்தது. இதை ஒரு அதிர்ஷ்மாக நினைக்கிறோ‌ம் என்றெல்லாம் புல்ல‌ரித்திருக்கிறார்.ஈரோடு அபிராமி, சண்டிகாவில் ,அன்னபூரணியில் ரிலீஸ் 

முகமூடி -சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_3296.html

 
 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/ec/New_Joker_movie_poster.jpg/220px-New_Joker_movie_poster.jpg

2. JOKER - (HINDI) ரவுடி ரத்தோர் படத்துக்கு பின், அக்ஷய் குமார்-சோனாக்ஷி சின்கா, மீண்டும் ஜோடி சேரும் படம், ஜோக்கர். இது, அக்ஷய் குமாரின் 100வது படமும் கூட. 40 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுரவ் டகோன்கர், இசை அமைக்கின்றனர். அக்ஷய் குமாரின் அதிரடியான சண்டை காட்சிகளும், கிளு கிளுப்பான காதல் காட்சிகளும் நிறைந்திருப்பதாக கூறப்படுவதால், இந்த படம், பாலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்.

 


3.LAWLess - காட்ஃபாதர், நாயகன், பில்லா  டைப் கேங்க்ஸ்டர் படம் தான். அண்ணன், தம்பிங்க 3 பேர் சாராயம் பல்க் பிஸ்னெஸ் பண்றாங்க.டாக்டர் ராம்தாஸ் மாதிரி மது எதிர்பாளர்களால், மது விலக்கு அமுலில் இருப்பதால் சட்ட அதிகாரிகளால் வரும் பிரச்சனைகள் தான் கதை.. வேறு சிலர் இதே கேவலமான தொழிலை செய்வதால் குரூப் ஸ்டடி மாதிரி க்ரூம் மோதல்,. அடிதடி, வெட்டு , கொலை நடக்குது.. கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்.   நினைவு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.. பயங்கர வன் முறைக்காட்சிகள் கொண்ட படம், பெண்கள் தவிர்க்க வேண்டிய படம் . ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 



4.  வாலிபன் சுற்றும் உலகம் -எம்.ஜி.ஆர் பெயரை கெடுக்கும் போலி எம்.ஜி.ஆர் படம்

A new movie discouraging MGRs filmதமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர்தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர்தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமாக இருப்பவர்.



அவரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிகர்களுக்கு அத்துபடி. இன்றைக்கும் அவரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத்தோடு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்து விட்டதைகூட நம்பாத முதியவர்கள் இப்போதும் உண்டு.


 அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் பெயரும், அவரது வாழ்க்கை ஸ்டைலும் இன்றைக்கு பலபேரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர் புகழ்பாடுவதாக நினைத்துக் கொண்டு அவரையே கேலிக்கூத்தாக்குகிற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் தயாராகி உள்ள படம்.


 சினிமாவில் அதிக தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.  இன்றைக்கு வெளிவரும் பிரமாண்ட பொழுதுபோக்கு படங்களுக்கு அதுதான் பிள்ளையார் சுழி போட்ட படம். இப்போதும் தமிழ்நாட்டில் எந்த தியேட்டரில் போட்டாலும் ஒருவாரம் கலெக்ஷனை அள்ளிக் கொடுக்கிற படம்.


 அந்தப் படம் எத்தனை இடையூறுகளை சந்தித்து வெளிவந்தது.  அது எத்தனை பெரிய வெற்றி பெற்றது என்பது அந்தக் காலத்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு ஜனரஞ்சக சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதனை பாடமாகவே வைக்கலாம். அப்படிப்பட்ட அற்புதமான படத்தை உல்டா செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.  எம்.ஜி.ஆர் சிவா என்பவர் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்திருக்கிறார். தாடி வைத்தவன் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? மொட்டை அடித்து கண்ணாடி போட்டவன் எல்லாம் காந்தி ஆகிவிட முடியுமா?



தொப்பி வைத்து கூலிங் கிளாஸ் போட்டவன் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. அப்படித்தான் முயற்சித்திருக்கிறார் சிவா.  எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடையில் ஆடட்டும் பாடட்டும், அதனால் சிறு வருமானம் கிடைத்து பிழைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவரையே கேலிப்பொருளாக்கி ஒரு திரைப்படம் எடுத்திருப்பதை எப்படி சகித்துக் கொள்வான் எம்.ஜி.ஆர் ரசிகன். வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் சிவா எம்.ஜி.ஆர் போலவே நடக்கிறர்.


 அவர் பல படங்களில் செய்த ஸ்டைலை இவர் ஒரே படத்தில் செய்கிறார். டூயட்டில் எம்.ஜி.ஆர் போலவே ஆடுகிறார். எம்.ஜி-.ஆரின் ஒவ்வொரு அசைவும் ஒரு ஸ்டைல் அதைப் பார்த்து பார்த்து ரசித்து வாழ்ந்தவன் அவரது ரசிகன். ஆனால் இந்தப் படத்தில் அதையே ஒரு வரைமுறையின்றி செய்து எம்.ஜி.ஆரின் ஸ்டைல், மேனரிசங்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். கதையும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் உல்டாதான்.



 தொற்று நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார் ஒருவர். வில்லன் கூட்டம் அந்த மருந்தின் ரகசியத்தை அழிக்க நினைக்கிறது. இதனால் வில்லன்கள் நடத்தும் தாக்குதலில் குடும்பம் பிரிகிறது. ஒரு மகன் தாயுடனும், இன்னொரு மகன் வேலைக்காரனுடனும், மகள் தந்தையுடனும் செல்கிறார்கள். பிற்காலத்தில் மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை. ஈரோடு ஆனூரில் ரிலீஸ்


http://www.allbestwallpapers.com/wallpaper/movie/image/king_kong,_2005,_naomi_watts,_jack_black,_adrien_brody.jpg

 5. KING KONG - ஒரு கொரில்லாவுக்கும், ஒரு ஃபிகருக்கும் ஏற்படும் அன்பு தான் கதை. 1933ல தான் முதல் கிங்க் காங்க் ரிலீஸ் ஆச்சு.. செம ஹிட்,அப்புறம் 1976, 2005, 2011 என போட்டு துவைச்சு எடுத்டுட்டாங்க, ரீமேக் வரிசையில் இது சாதனை.. இப்போ வந்திருக்கும் தமிழ் வெர்ஷன் அநேகமா 2005ல் வந்த படம்னு நினைக்கறேன்.  ஈரோட்டில் ஸ்டாரில் ரிலீஸ்.

அடி பழைய ஜிகிடி கதவைத்திறடி" -3டி

1.ஜட்ஜ் - உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன். 



கைதி - யாரை தூக்கனும்? நமீதா? கலா மாஸ்டர்? குஷ்பூ?


-------------------------


2. கசாப் தூக்கு உங்க கருத்து என்ன? ஆதரவா? எதிர்ப்பா?


 மு க - கசாபுக்கு தமிழ் நாட்டில் வாக்குரிமை இல்லை, எனவே  என் நிலைஎன்னஎனசொல்ல தேவைஇல்லை


---------------------


3. ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் - போலீஸ் # தகவலுக்கு நன்றி! நாங்கள் சுதாரித்தோம் - குற்றவாளிகள்



------------------


4.  படம் பூரா ஹீரோ முகத்தையும், உடம்பையும் மூடி இருப்பார், ஹீரோயின் அவருக்கு நேர் எதிரா இருப்பார் # முகமூடி ஸ்டேட்”டச்”



------------------------


5. லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும்: கிரண்பேடி # ரேப் நடந்துடப்போகுது



-----------------------------






6. மிஸ்டர் கசாப், தீர்ப்பை கேட்டு ஏன் நீங்க அதிர்ச்சி அடையல ?



எப்படியும் கேஸ் இன்னும் 10 வருஷம் இழுக்கப்போகுது, கருணை மனு எதுக்கு இருக்கு?



-------------------------


7. பெண்கள் தங்கள் மழலை ஃபோட்டோ வைப்பது ஒரு பாதுகாப்புக்கு, ஆண்கள் சொந்த ஃபோட்டோ வைப்பது ஒரு வாய்ப்புக்கு # டி பி



------------------------



8. பெண்கள் சாரி சொல்லும்போது அவங்க முக அழகு கூடும்,சாரி கட்டும்போது நாம பார்த்தா நம்ம முக அழகு கூடும் # பிரைட் ஃபேஸ்



------------------------


9. எம் ஜி ஆர் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆனா வைக்க வேண்டிய  டைட்டில் ஓ”நம் நாடு”




-----------------------


10. காலைல ஊரே கண் விழித்துவிட்டாலும் 9 மணி வரை போர்வை போர்த்தி கண்மூடும் பயங்கர சோம்பேறி நீ!



-----------------------






11. இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்!.சம்சாரம் காணாம போய்ட்டா எவ்ளவ் நல்லாருக்கும் என மனசுக்குள் ஆசைப்பட்டால் நீயும் தமிழனே!



---------------------


12. உனக்காக நான் காத்திருப்பது தவம்.நீ என்னைப்பார்ப்பது வரம்.எனக்கான உன் புன்னகைகள் எனக்கு பிரசாதம்



--------------------


13. கஞ்சன் ீவீட்டுக்கு விருந்தாளியா போனா வாழை இலைக்குப்பதிலா வெற்றிலைலதான் (வெத்தலை) உணவு பரிமாறுவாங்களாம்



-----------------------


14. நானும் ராணாவும் 10 வருஷ்மா பக்கத்து பக்கத்து வீட்ல தான் குடி இருக்கோம் - 3 ஷா # குடி இருக்கீங்களா? குடித்தனமா இருக்கிங்களா?



-------------------------


15. குழந்தை பிறக்கணுமா? உடம்பை... மனசை கூலா வச்சுக்கங்க! -செய்தி # அப்போ சூடேத்த வேணாமா?


-------------------------


ல்.ஏ.'s photo.
சேர நாட்டு இளவரசிகளுக்கும் அவர்களின் சேட்டன்களுக்கும் என் இனிய ஓணம் வாழ்த்துக்கள்!



16. எனது முதல் குறும்பட டைட்டில் " அடி பழைய ஜிகிடி கதவைத்திறடி" -3டி



--------------------------


17. உலகத்துலயே என் மூளை தான் FRESH னு எப்படி சொல்றீங்க அத்தான் ,?




ம்.இதுவரை யூஸ் பண்ணாம அப்படியே வெச்சிருக்கியே?



----------------------------


18. கடுமையான சொற்கள் மெண்மையான இதயத்தை தொடாது.ஆனால் மென்மையான சொற்கள் கடுமையான இதயத்தையும் தொட்டு விடும்



----------------------


19. டியர்.தமிழ்ல பேச மாட்டியா?



தமிழ்னா அவ்ளவ் இஷ்டமா?



ம்க்கும் ,இங்க்லீஷ் புரியாது



-------------------------

20. உங்கப்பா ஏழையா இருந்தா அது உன் தலை எழுத்து.உன் மாமனாரும் ஏழையா இருந்தா அது உன் கொழுப்பு,# அமீர் அவுரத் பக்டோ



--------------------------------


Thursday, August 30, 2012

அணையா நெருப்பு- கமல்ஹாசன்- சிறுகதை

http://www.itimes.com/files/rsz/fit_s_400x600/files/11-2009/92/0af9a91fd626d7766fd9112a0061e021_1257493942.jpg


வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை;

 வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது,  பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும்,
எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன… தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்…?’’

நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’

‘‘சிறுசு’’ என்றார்.

‘‘கதாநாயகனா? நாயகியா?’’

‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’

‘‘உண்மைதான். காலம்?’’


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCI8eDWdYLRml51Bkc2T-Jxi-wGvnwE_IAG5A0dTUWQdtpNfMqn-JTs0eDLYSX-htFvHSDZaBzSeanYKQiZyhGwTWctU4nOXRnOu1jrPnrgIfF9lQZYih3x5haFiBMAVlO3RCR3Rl97GQ/s1600/Kamal+Hassan+With+His+Family.jpg

‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’

‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’

‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, ‘‘How about முன்பு ஒரு காலத்துல?’’

‘‘Why not?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.

‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்… ‘சீதையின் வாழ்வில்
ஒரு நாள்’ – எப்படி?’’

‘‘அம்மாடியோவ்!’’

‘‘ஏன்?’’

‘‘Why not?’’

‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’

‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.






‘‘Agreed. சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச்
சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’

‘‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க?
சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’

‘‘அப்பிடின்னா?’’

‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’

‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

‘‘இல்ல… சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’

‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’

‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப்  போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’

‘‘Wow! hot gossip?’’

‘‘No, a warm tale’’ என்றேன்.

துவங்கினேன்… ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’

http://www.8pmnews.com/wp-content/uploads/2010/06/Kamal-marrigae.jpg

‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில்
செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது
சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை
எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள்
உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.

சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி. விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!

ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான். மிச்சம்…’’

‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை,
ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.

தடங்கலின் எரிச்சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்…

‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன்
அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன்
கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு
எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப்
பார்த்தாள்… என் வெளிச்சத்தில்.

சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.

அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன்
முதன்முதலாகப் பேசினாள்.

‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை
ஆட்கொள்’’ என்றாள்.

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.

அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச்
சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த
அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட
வந்தது பதில்.

‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன்.

காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ-qT9mtDqSLXtcs2M8Kecz8RYytkRXFAvq77-eLr6IqnD5wrzG4ilgMwkePXSZrtG85vmyw-fjOXGB_6mL1gn_tdCBihcC7xTpO7ttR4XefPnUQPhMB6N1plIHgu14wtuIy8PUwZ7jNQ/s1600/Actresses-who-were-Pregnant-before-Marriage-1583.jpg

என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.

‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல்
இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம்
உள்ளது காதல்.

என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி
அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய்.
மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை  எனக்கு.

என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.

என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில்,
நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தியைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது.

உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன்
நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில்
அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை,
பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச்
செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.

அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின.

அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’

தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என்
குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.

விவாதம் தொடர்ந்தது.

- வெளியான தேதி: 28 மே 2006


http://i.ytimg.com/vi/fOnfqEy5JNo/0.jpg

பாத்ரூம் மேட் 3 ஷா கும் கும் பேட்டி @ விகடன் - கிடா வெட்டு

"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiexysn0BNlnDsLeqxS3fs-BbUbx56n69WjeSwQFzVsC3ds93ARbsUcN8FTMjdpTXW8CKqCB1XH6d9oY6Ra5Ot1U35EzBtf59xkwda3pliADQCcH_FyPyi3jyiHvgmMxYdRCOOf5rGNdHM/s1600/Trisha%252Bhot%252Bphotos%252B%2525289%252529.jpg 
ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!"

நா.கதிர்வேலன்
'த்ரிஷாவுக்குக் கல்யாணம்... கன்ஃபர்ம்!’ - இண்டஸ்ட்ரி வதந்தி. த்ரிஷாவிடமே கேட்டுவிடலாமே!


சி.பி - என்னமோ இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சு ஏய்ய்ய்ய்.-னு கொண்டாடுற மாதிரியே இருக்கே?






    ''எப்போ கல்யாணம்?''


சி.பி - டைவர்ஸ்க்கு  2 மாசத்துக்கு முன்னாடி  ஹி ஹி 



''கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? நாளாக நாளாக எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்குது. இன்னும் நிறையப் படம் பண்ணணும், நல்ல நல்ல கேரக்டர் பண்ணணும்னு ஆசையா இருக்கு. அதனால இப்போ கல்யாணம் இல்லவே இல்லை. ஆனா, நிச்சயம் ஒரு நாள் பண்ணிப்பேன்!''



 சி.பி - பாப்பா , இப்பவே உனக்கு 39 வயசு ஆகுது, >>> நிச்சயம் ஒரு நாள் பண்ணிப்பேன்!'' நிச்சயம் மட்டும் பண்ணிக்கிட்டா மேரேஜ் எப்போ?


http://cdn3.supergoodmovies.com/FilesFive/trisha-hot-stills-58081ec2.jpg


''சரி... யாரைக் கல்யாணம் பண்ணிப்பீங்க?''



சி.பி - சத்தியமா உங்களை இல்லையாம். கிளம்புங்க காத்து வரட்டும் 



''ம்ம்ம்... ஓ.கே... என் வாழ்க்கையில் ஒருத்தருக்கு ரொம்ப ஸ்பெஷல் இடம் இருக்கு. அது உண்மை. ஆனா, இப்போ இதுக்கு மேல எதுவும் பேச வேணாம். இப்பவே பல விஷயங்களைப் பேசினா, அது ரொம்ப சீக்கிரமாப் பேசுற மாதிரி இருக்கும். சில விஷயங்கள் என் மனசுக்குள் இருக்கு. இன்னும் தெளிவா சொல்லணும்னா, சில விஷயங்களில் எனக்கே கொஞ்சம் தெளிவு தேவைப்படுது. நான் எதையும் மறைக்க மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்!''




சி.பி - ஆமா, நீங்க எதையும் மறைக்க மாட்டீங்கன்னு  அந்த வீடியோ மூலம் தெரிஞ்சுக்கிட்டோம்.. 


''தெலுங்கு நடிகர் ராணாவும் நீங்களும் எந்த அளவுக்கு நெருக்கம்... உங்க ரெண்டு பேரையும்தான் விடாமத் துரத்துது வதந்தி...''


 சி.பி - எந்த அளவுக்கு நெருக்கம்...னு அவங்க  டீட்டெயிலா சொல்லத்தயாராம், ஆனா டக் இன் சர்ட் பண்ணி இருக்கும் உங்க சர்ட்டை எடுத்து வெளீல விட வேண்டி இருக்குமாம், பரவாயில்லையா? 





''10 வருஷமா நாங்க ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். தி.நகர்ல அடுத்தடுத்த வீட்ல இருக்கோம். யெஸ்... ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, எதையும் அவர்கிட்ட என்னால ஷேர் பண்ணிக்க முடியும்.



 சி.பி - அட, என்னங்க 10 வருஷமா திக் ஃபிரண்ட்சாவே இருந்தா எப்படி? சட் புட்டுனு அடுத்த கட்டத்துக்கு வாங்க..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKZ8m4Sb1W8efv1RHl1zxU0k9pZzMg9k8XA3VUIK_8jijMsgUk4JAQGTUleB0RNB8uhgsLQl4V3T8N2ggi_OX8In0IPThBhB1NmCC5R8DumSkbwCQsLuqrcv8Ux-6IyVRrn_tov6NEbPcs/(6)%255B5%255D.jpg



என்னைப் பத்தி அவருக்கு எல்லாமே தெரியும். எனக்கும் அவருக்கும் நல்ல வேவ்லெங்த் இருக்கு.


சி.பி - ரொம்ப லெங்க்த் போல 




என் கேங்கும் அவர் கேங்கும் சேர்ந்து இப்ப ரொம்பப் பெரிய கேங்க் ஆகிட்டோம்.


 சி.பி - அதாவது க்ரூப் ஸ்டடி மாதிரி க்ரூப் சரக்கு அடிச்சு க்ரூப் மட்டை ஆகி க்ரூப்பா போலீஸ்ல மாட்டறது?



கிட்டத்தட்ட 10 வருஷமா சேர்ந்தேதான் வளர்ந்தோம்.



சி.பி - சேர்ந்தே வளர்ந்தீங்களா? அப்போ அண்ணன்  தங்கச்சி முறை ஆகுதுன்னு அண்ணன் கழடி விட்றப்போறாரு கபர்தார்



ஆனா, இப்போதான் நாங்க சேர்ந்து சாப்பிட்டாக்கூட நியூஸ் ஆகிடுது. அவர் சினிமாவில் நடிக்கிறதுக்கு முன்னாடி இருந்தே அவரோட நான் இப்ப இருக்குற மாதிரிதான் பழகிட்டு இருக்கேன். ஆனா, இப்போ அதை ஸ்கூப் நியூஸ் மாதிரி சொல்றாங்க. தெலுங்கு சினிமாவின் லெஜன்ட் ராம்நாயுடு சாரோட பேரன் ராணா. ஆனா, அந்தக் குடும்பத்தின் எந்த அடையாளமும் இல்லாம ரொம்ப ஈஸியா இருப்பார். ராணாவை நான் நம்புற மாதிரியே, அவரும் என்னைப் புரிஞ்சுட்டு இருக்கார்.''




''உங்க பாலிவுட் என்ட்ரி எதிர்பார்த்த வெற்றி அடையலையே, ஏன்?''





''என்னை சினிமாவுக்குக் கொண்டுவந்தவர் பிரியதர்ஷன் சார். அவரோட ஒரு இந்திப் படத்தில் வேலை பார்க்கக் கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டேன். அப்போ எனக்கு அங்கே கொஞ்சம் நண்பர்கள் கிடைச்சாங்க. அவ்வளவுதான். மத்தபடி அடுத்தடுத்து பாலிவுட் படம் நடிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. அங்கே ஜெயிக்க அங்கேயே தங்கி இருக்கணும். அதில் எனக்கு விருப்பம் இல்லை. இங்கே இப்படி நான் இருக்கிறதே எனக்குப் போதும்!''


http://www.cinetara.in/photos/files/2012/2012/05/07/13836/trisha-hot-in-dammu_005.jpg



''உங்களுக்கும் நயன்தாராவுக்கும் ஏதேதோ பிரச்னைனு சொன்னாங்க. ஆனா, இப்ப திடீர்னு நீங்க நெருக்கமாகிட்டீங்கபோல?''

சி.பி - ஆமா 2 பேரும் தீபா மேத்த டைரக்ட் பண்ணீன படங்கள் எல்லாம் வரிசையா பார்த்திருக்காங்க.. அதுல அண்டர்ஸ்டேண்டிங்க் ஆகி அண்டர்வெட் ஆகிடுச்சாம். 




''அப்படி ஒண்ணும் எங்களுக்குள்ள பெரிய சண்டை எதுவும் இல்லை. சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ணிட்டாங்க.



சி.பி - அடடா, சைஸ் மாத்தி குடுத்துட்டாங்களா? 


அந்தச் செய்தி மேலும் மேலும் டெவலப் ஆகாம நாங்களே ஃபுல்ஸ்டாப் வெச்சிட்டோம். பழகினா நயன் மாதிரி ஒரு ஃப்ரெண்ட்டைப் பார்க்க முடியாது. இனி நாங்க எப்பவும் ஃப்ரெண்ட்ஸ்!''



http://voteji.com/wp-content/uploads/2009/01/trisha-8.jpg A



நன்றி - விகடன்