Showing posts with label SATHYARAJ. Show all posts
Showing posts with label SATHYARAJ. Show all posts

Friday, September 23, 2011

ஆயிரம் விளக்கு - சனாகான் +சத்யராஜ் + சாந்தனு கே பாக்யராஜ் +கூட்டணி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoBOTOTfNIsHcX_GTj0LvQn191GzRssHEsm3K11bApumlKIYe9AJfyzm7utTwzAT9lhg6tujb0XkEAmcCgX83hyphenhyphenXbIrK-_h5iNWrhi7a6rB_WZB48uPAm3tifuP3hgdgdcCzIuTPACV4zH/s1600/av1.jpgசத்யராஜ் பாசத்துக்கும் அன்புக்கும் ஏங்கும் ஒரு தாதா.. சாந்தனு ஆள் நல்ல பர்சனாலிடியாக இருந்தாலும் மொக்க ஃபிகர் மோஹனா (சனாகான்)வை லவ்வும் ஒரு சாதா இளைஞன். இந்த சாதா இளைஞனை அந்த தாதா தத்துப்பிள்ளையாக வளர்க்க நினைக்கிறார்... அவர் தாதா என இந்த சாதாவுக்கு தெரியாது..  இருவருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை.. 


ஹீரோ சாந்தனு - நேர்ல பார்க்க சாக்லெட் பாய் மதிரி இருக்கும் கே பாக்யராஜ் வாரிசு இந்தப்படத்துல ஏன் தூங்கி எழுந்த விடியா வெள்ளி போல் இருக்கார்னு தெரில.. எப்பவும் ஆள் டல்லா இருக்கார்.. ஹீரோயின் கூட 3 டூயட்டும், சத்யராஜ் கூட ஒரு பாட்டும் பாடறார்.. 2 ஃபைட் போடறார்..  அவ்ளவ் தான்...!


ஹீரோயின் சனாகான் சாதாரண 40 மார்க் ஃபிகர்.. இவர் படம் முழுக்க நடிப்பையும் காட்டலை.....குணச்சித்திரத்தையும் காட்டலைன்னு சொல்ல வந்தேன் ஹி ஹி .. ஃபேஸ் எக்ஸ்பிரஸ்னா என்ன?ன்னு பாப்பாக்கு சுத்தமா தெரில பாவம்.. ஒரு சீன்ல வாய்க்கால்ல தண்ணியைப்பார்த்ததும் அசால்ட்டா எந்த தயக்கமோ, கூச்சமோ இல்லாம தாவணியை கழட்டி வீசிப்போட்டுட்டு வாய்க்கால்ல குதிச்சுடறார். அட ஆண்டவா!!! பார்க்கற மத்தவங்கதான் கூச்சப்படறாங்க.. ( நான் அக்மார்க் அப்பாவி என்பதால் அந்த சீனில் கண்களை க்ளோசிங்க். )இது அப்போ தெரிஞ்ச சனாகானின் லோஹிப் மேல சத்தியம்...

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/09/aayiram-vilakku-movie-still.jpg

கிளை வில்லன் சுமன்... அண்ணன் கேப்டன் மாதிரி எப்பவும் மப்புலயே இருப்பார் போல.  இவருக்கு கொடுக்கப்பட்ட வேலை என்னான்னா தனது போட்டி தாதாவை அப்பப்ப சவால் விடறது..உறுமுவது .... எமாந்த இ வா எவனாவது வந்தா அவனை கொலை பண்றது. . 

இணை வில்லன் சானா கான்க்கு மாமா பையன். இவருக்கு 24 மணி நேரமும் என்ன வேலைன்னா பைக் பெட்ரோல் டேங்க் உள்ளே ஒரு பெரிய அரிவாள் வெச்சு அலையறது.. எவனாவது தன் முறைப்பெண்ணை கையை ப்பிடிச்சு இழுத்தா அவன் கையை வெட்டறது..  டேய்.. திருந்துங்கடா...

கஞ்சா கறுப்பு. நல்ல குணச்சித்திர நடிகரும், ராம் படம் மூலம் அறிமுகம் ஆன காமெடி நடிகரும் ஆன இவர் இன்னும் எத்தனை நாளுக்கு உப்பு சப்பு இல்லாத படத்துல கிச்சு கிச்சு மூட்டுவாரோ... ஒரு சீன்ல கூட சிரிப்பே வர்ல பாஸ்.. சாரி.. 


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2374&option=com_joomgallery&Itemid=77

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. வாத்தியார் சார். பசங்க  தப்பு பண்ணுனா  நீங்க மார்க் கம்மியா போடுவீங்க.. நாங்க ஆளையே போடுவோம்..  ( டேய் ரவுடிங்களே.. முதல்ல குளியல் போடுங்கடா!)


2. மிஸ் .. ஐ லவ் யூ..

உங்க மணிபர்ஸ் குடுங்க.

எதுக்கு?

என்னை யார் லவ் பண்ணாலும் அவங்க மணிபர்ஸை செக் பண்ணுவேன். ( சோனாவை விட கேவலமான மைண்ட் தாட்டோ?!!)

3. மிஸ்... உங்க பேக்கை கொடுங்க..  ( யாரும் ஜெர்க் ஆக வேணாம்.. அவரு கேட்கறது ஹேண்ட் பேக்கை ஹி ஹி )

எதுக்கு?

எனக்கும் லவ் பண்றவங்க பேக்கை செக் பண்ணி பழக்கம் .. ( நல்ல வேளை... )

4.  நான் இந்த ஆத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கப்போறேன்..

உள்லே தண்ணிப்பாம்பு நிறைய இருக்குமே?

கொத்துமா?


தெரில.. கேட்டு சொல்றேன்.. ( அஞ்சாங்கிளாஸ் தமிழ் நான் டி டெயில்ல வர்ற கதை உல்டா... )



5. லிங்கத்துக்கும், உனக்கும் என்னா லிங்க்.. ?

அவருக்கு நான் தாங்க ரைட் ஹேண்ட்... ( அப்போ அவருக்கு பதிலா நீ தான் ஊட்டி விடுவியா? )


http://indiansamachar.in/wp-content/uploads/2011/09/Tamil-Actress-Sana-Khan-Hot-pictures1.jpg
6.  இவருதான் என் புது ஃபிரண்ட் கண்ணாயிரம்...

பாப்பா யாரு... உன் புது கேர்ள் ஃபிரண்டா..? ( அப்போ நிறைய பழைய கேர்ள் ஃபிரண்ட் இருக்கா? அவ்வ்வ்)


7. இந்த சட்டை எங்கப்பாவுது.. ஆனா நான் அவரைப்பார்த்ததே இல்ல.. அவர் சட்டையை நீ போட்டிருக்கறதைப்பார்க்கறப்ப அப்பா மாதிரிதான்யா என் கண்ணுக்கு தெரியறே..

8. அந்த கொதிக்கற பால் தேக்ஸாவை எடு..


எதுக்குங்கய்யா.. குடும்பத்தோட புரூ காஃபி போட்டு குடிக்கவா?

இல்ல... உன் தலை மேல கொட்ட....

9. பெத்தவங்களையே மத்தவங்களா நினைக்கற பசங்களுக்கு மத்தில மத்தவங்களைக்கூட  பெத்தவங்களா நினைக்கற மனுஷங்களும் இந்த உலகத்துல இருக்காங்கப்பா...

http://flicksbuzz.com/Assets/Images/Mollywood/Mollywood-News/Sana-Khan-Hot-Stills-Overview.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ரூ 2 லட்சம் மார்க்கட்ரேட் உள்ள இடத்தை ஃபேக்டரி கட்ட சாந்தனுவிடம் பேரம் பேசும் ரவுடி 5 லட்சம் தர்றதா சொல்றாரு.. ஓக்கே.. பேரம் படியாம 20 லட்சம் வரை இறங்கி வர்றாரே? அது எப்படி? அவனே ரவுடி... ஏன் பம்பனும்? மிரட்னா சைன் பண்ணிடறாரு.. ?

2. அதே நிலத்தை சாந்தனு அவர் அவசரத்தேவைக்கு விற்க முன் வரும்போது மார்க்கெட் ரேட்டை விட பாதி விலைக்குத்தர்றாரே.. ஏன்? நிலமும், தங்கமும்  எப்போதும் மதிப்பை இழக்காதே?


3. ஹீரோயினை ஹீரோ தான் புளூ கிராஸ் மெம்பர்னு ஏமாத்தி லவ் பண்றாரு ஓக்கே.. அதுக்குப்பிறகு 2 மாசம் கழிச்சு ஹீரோயின் ஹீரோ வீட்ல இல்லாதப்ப ஹீரோ வீட்டுக்கு போறப்ப இந்தா பார்த்துக்கோன்னு சொல்ற மாதிரி அந்த ஏமாத்துனதுக்கான ஆதாரங்களை டேபிள் மேலயே வெச்சிருக்காரே? அது ஏன்?


4. பெரும்பாலான ஹீரோயின்கள் சமூக சேவை செய்யும் ஆண்கள், தாதாக்கள் ரவுடிகளைத்தான் லவ் பண்றாங்க. அப்போ என்னை மாதிரி 3000 ரூபா சம்பளத்துக்கு வேலைக்குப்பொறவங்களுக்கு எல்லாம் ஜோடியே கிடைக்காதா?


http://7blues.com/wp-content/gallery/sana-khan/sana-khan-movies-stills.jpg
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களீலும் 7 நாட்கள் ஓடும்.. ஏன்னா அடுத்த வெள்ளீக்கிழமை வரை வேற படம் எதுவும் வர்லை.

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 35

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. என் மார்க் - 25

ஈரோடு சண்டிகாவில் இந்தப்படம் பார்த்தேன்

பிப்ரவ‌ரி 14 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹோசிமின் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவதுப் படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படம் இயக்குனதுக்கு அண்ணன் சும்மாவே இருந்திருக்கலாம்.




Saturday, March 26, 2011

சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம்

http://movies.vinkas.in/files/2011/03/Sattapadi-Kutram.jpg 

சீன் 1 டேக் 1 

விஜய் - அப்பா ,ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்க பழைய பாணில ஒரு படம் பண்ணறீங்க.. மறுபடி ஃபார்ம்க்கு வந்துடுவீங்களா?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.. மறுபடியும் கலைஞர் ஃபார்ம்க்கு வந்துடக்கூடாது.. அதுதான் முக்கியம்.

விஜய் - பல வருஷங்களா அந்த கட்சில இருந்துட்டு இப்படி திடீர்னு பல்டி அடிக்கறீங்களே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஆமா , என்ன பிரயோஜனம்.. ஏதாவது தேறும்னு பார்த்தேன்.. ஒண்ணும் பப்பு வேகலை.. சரி ரூட்டை மாத்துன்னு இப்போ அம்மா பக்கம் சாய ஆரம்பிச்சுட்டேன்..


விஜய் - சரி படத்தோட கதை என்ன?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அரசியல்வாதியின் இழுப்புக்கு இணங்காத ஒரு நேர்மையான போலீஸ் ஆஃபீசர் குடும்பத்தை பலி ஆக்கிய அரசியல்வாதியை அந்த ஆஃபீசர் பழி வாங்கறதுதான் கதை...

விஜய் - அட போங்கப்பா.. இந்த புளிச்சுப்போன கதையை எத்தனை படத்துல பாக்கறது?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அது தமிழனோட தலை எழுத்து.. சாவட்டும் எனக்கென்ன?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD-wNrGLDlgY0pHpIbcXx9ZdO7DqcYBTAc293CXuKankrGNGyrW0iVfG3AalE3z1eksvCiwZcbv1IQtk36Ug0tJf6bI7DsyrzVq8QlWPfEgv1skz_w1suSTs7mK2lRSqNO4S2PI4MKNN4/s320/sattapadi_kutram_movie_stills_010.jpg
விஜய் - சரி ,இந்த டப்பா கதைல எப்படி கலைஞரை தாக்குவீங்க?


எஸ்.ஏ. சந்திரசேகர் - இது ஒரு பெரிய விஷயமா?ஆ ராசா மேட்டர்,நித்யானந்தா மேட்டர் அப்படின்னு இப்பத்த ட்ரெண்ட்ல எதெல்லாம் பரபரப்பா இருக்கோ அதை எல்லாம் தாக்கற மாதிரி பிட் பிட்டா சீன் எடுக்க வேண்டியது.. சம்பந்தமே இல்லைன்னாலும் அதை எடிட்டிங்க்ல சமாளிச்சு கதைல இணைச்சுட வேண்டியது.. எவனாவது பத்திரிக்கக்காரன் மானம் கெடற மாதிரி விமர்சனம் எழுதுனா லாஜிக் இல்லா மேஜிக் அப்படின்னு சமாளிச்சுடலாம்...

விஜய் - சரி.. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல மாறு வேஷத்துல போலீஸ் கிராமத்துல வர்ற மாதிரி காட்றீங்களே.. எந்த மாங்கா மடையனாவது அப்படி  ரிவால்வரை பப்ளிக்கா வெச்சிருப்பானா? 

எஸ்.ஏ. சந்திரசேகர்- என்னப்பா சேம் சைடுல கோல் போடுறே...?

விஜய் - அதைக்கூட மன்னிச்சிடலாம்.. கிராமத்துல இறங்குனதும் திடு திப்னு ஒரு பொண்ணு கிட்ட ஏம்மா இங்கே தீவிரவாதிங்க இருக்காங்களா? அப்படின்னு கேப்பாங்களா? என்னமோ மளிகைக்கடைல துவரம்பருப்பு இருக்கா?ன்னு கேக்கற மாதிரி...

எஸ்.ஏ. சந்திரசேகர் -அதை விடப்பா.. போலீஸ் ஆஃபீசர் எம் பியை செருப்பால் அடிக்கற சீன் எப்படி? கலக்கீட்டமில்ல?

விஜய் - அட போங்கப்பா.. வால்டர் வெற்றிவேல்லயே அதை அவர் பண்ணீட்டாரே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - சத்யராஜை சேர்ல கட்டிப்போட்டு வில்லன் குரூப் அவரோட குடும்பத்தை சிதைக்கற சீன் எப்பூடி?

விஜய் - ம்க்கும்.. அது கமல் நடிச்ச அபூர்வ சகோதரர்கள்லயே வந்துடுச்சே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... சத்யராஜோட சேகுவாரோ கெட்டப் எப்படி?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgliv13pzOjbwynAO3wVAppRVGqbSXTok8pnMDAkSklOX7Ah0VcJ-3U7DcNwUWAIpUQPM2iknalvGEj9hDlQzplJAkMKlVLrjujA_C2V1KqNxMTxjGNVnvcUO7HFfu9uLaCIoqyIayExz8/s1600/sattapadi_kutram_movie_stills_02.jpg
விஜய் - நல்ல வேளை அவர் உயிரோட இல்லை... ஏம்ப்பா.படத்துல சத்யராஜூக்கு 38 சீன் இருக்கு அதுல 42 சுருட்டு குடிக்கராரு.. 4 பஞ்ச் டயலாக் பேசறாரு, வேற பெருசா அவர் என்ன செஞ்சாரு?

எஸ்.ஏ. சந்திரசேகர் -சரி கோர்ட் சீன்ல சீமான் வக்கீலா எப்படி?

விஜய் - இந்தப்படத்துலயே உருப்படியான ஒரு விஷயம்னா அது சீமான் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும், அவரது வசன் உச்சரிப்பும் தான்...

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஏம்ப்பா ..தாமிரபரணில விஷால்க்கு ஜோடியா நடிச்ச  பானு நல்ல உருப்படி இல்லையா?

விஜய் - ஹூம் அப்பா மாதிரியா பேசறீங்க?..அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...கமிஷனர் மனைவியா ஒரு பொண்ணை காட்றீங்களே , வேலைக்காரி மாதிரி இருக்கா.. பாத்திரத்தேர்வுல கவனம் வேணும்..

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஹூம்.. எல்லாம் என் நேரம்.. அதை நீ சொல்றே.. ஒரே மாதிரி கேரக்டர்ல 19 படம் பண்ணுன நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றே... சரி படத்தோட வசனங்கள் அனல் கக்குமே.. அதைப்பற்றி எதுவுமே சொல்லலையே....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaj8PHZ2fZSetyR61sByQ7Vr2a5pEsBczmaQtgDJZ3FVIlbpdqDrnU31AXDradSO-tiV6ZzMTg8UvvsJHIdkBsHmHP-ER5f6ZQsW5nljO3Gg_8L59cOgKSlDQuSXRBeafDlMWnQGtX2zvU/s1600/Sattapadi+Kutram+Audio+Launch+Gallery+%25282%2529.jpg
படத்தின் உயிரோட்டமாய் அமைந்த வசனங்கள்

1.  என் பொண்ணை மட்டுமல்ல.. அவனையே அவன் மறக்கனும்.. புரியலை..? அவனை அடிக்காதீங்க.. அடிக்ட் ஆக்குங்க...


2. நீ காதலை இழந்ததை நினைச்சு கவலைப்படாதே.. நம்பிக்கையை இழக்காதே..


3. தோழர்களே. உங்கள் பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் உங்கள் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் . ( சேகுவாரா ,பிரபாகரன் வீர உரையிலிருந்து சுட்டது)

4.  நீங்க உளவுத்துறையா?

ஹூம்.. அந்தப்படத்தைக்கூட நான் பார்க்கலை.. ( நல்ல வேளை தப்பிச்சாரு)

5.  தீவிரவாதியா? அது ஊரை ஏமாத்த நீங்க எனக்கு வெச்ச பேரு.. நான் போராளி.. காட்டுக்குள்ள கூடி இருக்கற கந்தகக்கோட்டை...

6.  அரிசியைக் கடத்துனாங்க, சாராயத்தை கடத்துனாங்க.. இப்போ அரசாங்க ஆஃபீசரையே கடத்தறாங்களே..

7. எம் பி சார் உங்களை பார்க்க ஆசைப்படறார்... 

நான் என்ன சமைஞ்ச பொண்ணா? ( சத்யராஜின் இந்த நக்கல் கமெண்ட்டுக்கு செம கிளாப்ஸ்)

8. தலைவரே.. அந்தாள் கூட எதுக்கு சாவகாசம்..? சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுக்கிட்டீங்க

நம்ம இலாகா (POOR ) புவரா இருக்கலாம்.. ஆனா நான் எப்பவும் பவரா (POWER) இருப்பேன்..

9. டியர்.. நான் ஒரு கவிதை சொல்லட்டா?

ம்.. ( முதல்ல நீ சொல்லு.. கவிதையா.. கருமாந்திரமா?ன்னு நாங்க சொல்றோம் # பக்கத்து சீட் ஆள்)

உன் கண்களில் இவ்வளவு மின்சாரம் இருக்கிறதே.., நீ என்ன நிலக்கரிக்கு பிறந்தவளா?   ( அடங்கோ.... அப்பாவை அவமானப்படுத்திட்டு பேச்சைப்பார்...)

10. இதயத்துக்கும்,மூளைக்கும் நடக்கற போராட்டத்துல உருவாகறதுதான் காதல்.. இந்த உலகமே அதுலதானே இயங்கிட்டு இருக்கு..?

11. ஒரு மினிஸ்டர் என் மேலயே நீ கை வைக்கறியா?

நீ மட்டும் மக்கள் பணத்துல கை வைக்கலாமா?

12. ராசாவை  போலீஸ் எங்கே வெச்சிருக்காங்க இப்போ..?

ராசா யாரை வெச்சிருக்காருன்னு வேணா சொல்றேன்.. அவரை போலீஸ் எங்கே வெச்சிருக்கார்னு எனக்கு தெரியாது..(அப்படிப்போடு.. சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ )

. 13.  எங்களை மாதிரி ஒரு போராளி சாகலாம்.. ஆனா உங்களை மாதிரி ஒரு லீடர் சாகக்கூடாது..அப்புறம் நம்ம இயக்கமே இல்லாம போயிடும்..

14. எனக்காக ஒருத்தி வாழறதை விட , 4 பேருக்காக நான் வாழ ஆசைப்படறேன்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Sattapadi-Kutram-Audio-Launch/Sattapadi-Kutram-Audio-Launch-0022.jpg

கோர்ட் சீனில் சீமான் அனல் கக்கும் வசனங்கள்

1,  நம்ம தலைவருக்கு திருக்குறள் ஏன் பிடிக்கும் தெரியுமா?

அதுல அதிகாரம் இருக்கே..? ( பாவம் கலைஞர்)

காமத்துப்பால் கூட இருக்கு...

அது அவரோட தனிப்பட்ட விஷயம்...

2.  நாட்டைக்காட்டிக்கொடுப்பதை விடக்கொடுமையானது மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது.. ( ராசா... யுவர் அட்டென்ஷன் பிளீஸ்)

3. எல்லாம் தெரிஞ்சவன் வக்கீல்.. எதுவுமே தெரியாதவன் அமைச்சர்.. 

4. யுவர் ஆனர்.. என்னால இந்த குற்றவாளிக்கூண்டுல நிக்க முடியல... ஒரு சேர் குடுங்க ..

யுவர் ஆனர்.. இவருக்கு CHAIR  குடுத்தா உங்களுக்கும் SHARE குடுக்க ட்ரை பண்ணுவாரு...

5. ஒரே ஏரியாவுல 86 சின்ன வீடு இருக்கற ஒரே தலைவர் அந்த மினிஸ்டர் தான்.. ஊர் கன்யா குமரி.. ( யாரப்பா அந்த மன்மத குஞ்சு?)

6. முட்டாப்பசங்க எல்லாம் ஓட்டுப்போட்டு அயோக்கியப்பசங்களை ஆள வைப்பதுக்குப்பேருதான் தேர்தல்னு பெரியார் சொல்லி இருக்காரு.. ( அது எங்களுக்கே தெரியும்.. நீ என்ன சொல்றே # ஆடியன்ஸ்)

7. இப்பவாவது விழிச்சுக்குங்க.. இப்பவும் மக்கள்ட்ட விழிப்புணர்வு வர்லைன்னா அப்புறம் அவங்களுக்கு விழிக்க விழிகளே இல்லாம  போயிடும்.


எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... இந்தப்படம் எத்தனி நாள் ஓடும்?

விஜய் - படத்தோட மேக்கிங்க் ஸ்டைல்  மகா மட்டமா இருந்தாலும் செகண்ட் ஆஃப்ல வர்ற சில வசனங்களுக்காக 30 நாட்கள் ஓடும்... அதுவும் பி செண்ட்டர்ல தான்.. ஏ செண்ட்டர்ல 20 நாள் தான்.. சி செண்ட்டர்ல ஒரு வாரம்..

எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி.. ஆனந்த விகடன் மார்க்?

விஜய் - 35. ஆனா விகடன் குரூப் இப்போ தி மு க மேல செம காண்ட்டா இருக்கறதால 40 போடக்கூட சான்ஸ் இருக்கு.. பார்ப்போம் அவங்க நடு நிலைமையை....

எஸ்.ஏ. சந்திரசேகர் - குமுதம் ரேங்க்கிங்க்..?

விஜய் - ஓக்கே என ரேங்க்  போடனும். ஆனா அவங்க இப்போ டி எம் கே சப்போர்ட் என்பதால் விமர்சனம் போடறதே டவுட் தான்... 

. ஈரோடு சண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்.. ( இது மட்டும் சி பி வாய்ஸ்)

டிஸ்கி - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்