Showing posts with label Kamal Haasan. Show all posts
Showing posts with label Kamal Haasan. Show all posts

Tuesday, January 08, 2013

விஸ்வரூபம் - படத்தின் கதை வெளியானது !!!

He has a filmography of 150 and enjoys superstar status but actor-filmmaker Kamal Haasan says he is not satisfied. He wants to learn and achieve more on the creative front and also wants his movie business to flourish. "If I have the sense of satisfaction, I won't be working or giving this interview. There is a lot more to learn and I am a dissatisfied man. I am happy, but not content," Kamal Haasan told IANS.

"I came as a technician first and by default I became an actor. But I am happy and not complaining," he added.

The multi-faceted star, who is a National Award winner as well as a Padma Shri awardee, is afraid of losing his zeal to perform.

"Achievements are decided by people and I think necessity is the mother of invention. I live by the necessity, but somebody will call it as invention or achievement. What scares me most is when I lose the need to perform with the excitement of any creativity. If it happens, I will live with it too. I will find something else," he said.

He started as a child artist in 1960, and established himself with movies like Moondram Pirai, Saagar, Sadma and Pushpak.

Currently he is looking forward to the release of his next Tamil film Vishwaroopam, which will release as Vishwaroop in Hindi. Directed by Kamal Haasan, the film is coming out Jan 11 and the cast includes Shekhar Kapur and Rahul Bose.

Kamal Haasan, whose daughter Shruthi too is in showbiz, rues how almost all actors across the board have become "businessmen".

"Most stars are businessmen. The moment you become a star, you are talking about money and fame. It's not about the content or artists' skill any more. Always the collection matters. The numbers have now increased to match along with the population," he said.

Having said that, he admits that if Vishwaroopam doesn't cross Rs 150 crore, then it's a failure for him.

"If this film doesn't cross Rs 150 crore, then it is a failure for me. I would call it a weak attempt if it doesn't. It has to cross Rs 150 crore, and we really hope that we cross in the first week itself," said Kamal Haasan, who has made lavish films like Hey Ram and Dasavatharam.

"It's the most costly project and ambitious too by virtue of what we have tried to achieve and the ambition was realised because of the technicians. I have the best team working with me," he said.

At 58, he still feels he is a part of the competition.

"I feel the competition all the time. Well, I have competitors in various ages - from 18 to 65, I have competitors," he conceded.

The star culture is different in Bollywood and the southern film industry, he admits.

"Yes, it is different. People are the same. The love is unanimously the same," he said, adding that fans in the south show their love by "building a temple", while in Mumbai "we have some religious rituals".

"Pooja happened when Amitji (Amitabh Bachchan) was unwell. They don't make a big fuss about it because not all the actors here are politicians. There (south) politics and cinema are very closely related and that's why you feel the difference."

Do you discuss your films with family members?

"It depends on who is qualified. I have meetings with qualified people first and then take a general view because not everyone in my family is qualified to make films," said the actor candidly.



Vishwaroopam , is an upcoming Indian spy thriller  movie written,directed and co-produced by  
Legendary actor Kamal Haasan and also  featured by him on the lead role.The movie is bilingual  with Tamil and Hindi version named 'Vishwaroop'.




 The movie is a dream project of kamal Haasan.The movie was announced so early but it took

so long to complete  due to casting issues and overseas shooting delays.The movie was shot at US and Canada and some scenes at Chennai and Mumbai.

Vishwaroopam is the first Indian movie to be equipped with Auro 3D sound format.


Story line:

The story revolves around Ms.Nirupama(Pooja) ,a nuclear oncologist from Chennai and Vishwanath (Kamal),who runs a Kathak School in U S.

 Nirupama comes to U S to pursue her higher studies and marries Viswanath .After few years of marriage ,when she wants to break up with her husband she needed to find faults with her husband and employs a detective for that.

The rest of the story is about what happens when she finds out who he really is.
Direction:       Kamal Haasan
                  

produced by: Chandra haasan,Kamal Haasan

                   
Written by    :Kamal Haasan,Atul Tiwari

                 
Music:       Shankar-Ehsaan-Loy

Lyrics:        vairamuthu,Kamal Haasan,Javed Akthar

Expected release date:11 January 2013

 Bottom line:         
The movie is gotten into several controversies as Kamal Haasan decided to release the movie through DTH one day prior to the threatrical release and the theatre owners association raising protest against this move.

Also several Islamic organisations in Tamil Nadu also raised protests against the movie stating that the movie portraits Muslims as Terrorists.

With all these concerns the movie is scheduled to release on 11 january and  kamal is firm in his decision on DTH release and if it happened it would the first movie to be released on DTH and also he explains that the Movie noway degrades Muslims in anyway.


THANX - NetPowerInfo , NDTV



டிஸ்கி - ஃபிளாஸ் நியூஸ் .

Wednesday, January 02, 2013

மகாநதி எடிட்டிங்கில் வந்த பிரச்சனை +விஸ்வரூபம் பிரச்சனை - கமல் பேட்டி

  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh45z0m31P771jM5hHWrWvZ8H19qe8b7Ua4U5Twwl7KhAYWOkxQZWeHaWgmx3SDIHAwMJidMRfxUyt8lhdQktuYh_qRvPyIemt2GWxfEYJHXtXpq8Do_AZGMQoXfpSusEyyXDwicUSV_4g/s1600/viswaroopam_Poster1.jpg

தொழில் செய்யவிடாமல் தடுப்பது சட்டப்படி குற்றம்! : கமல் எச்சரிக்கை
 
 
Posted Date : 11:09 (30/12/2012)Last updated : 18:25 (31/12/2012)
விஸ்வரூபம் படத்தினை DTHல் ஒளிபரப்புவது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல்.
அச்சந்திப்பில் கமல் பேசியது
"DTH முயற்சியைப் பற்றிச் சொல்லும்பொழுது இது நிகழும் என்பது பல பேருக்குத் தெரியும். என்னவோ நான் தான் கண்டுபிடித்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது DTHச்சையே நான் தான் கண்டு பிடித்தேன் என்று நினைக்கிறார்கள்.



 அப்படி கிடையாது. இது இருக்கு. செல்போன் வந்தது, அதில் பேசலாம் என்று தெரியும், அதை கையில் எடுத்து பேசினார் சுட்டுடும் என்று பல பேர் பயந்தார்கள், நான் தைரியமாக எடுத்துப் பேசினேன். எனக்கு எதிர்முனையில் ஒருவர் பேசினார் அதனால் நான் பேசினேன் அவ்வளவு தான்.



 இது இதற்கு முன்பாக ஒரு வடநாட்டு நண்பர் ஒருவர் முயற்சி செய்து தோற்றுப்போன ஒன்று. அவர் என்ன பண்ணிட்டார்னா.. கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்பட்டு விட்டார். அதாவது இதில் என்ன பிழை என்றால்  தியேட்டர்காரர்களிடம் எம்ஜி வாங்கிவிட்டு டி.டி.ஹெச்சிலும் கொடுத்து விட்டார். அதனால் தியேட்டர்காரர்கள் அவருக்கு எதிராக திரும்பி விட்டார்கள். அது நியாயாமான ஒன்றுதான். அவர்களுக்கு எதிரான ஒரு விஷயம் என்றால் அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள்.



 ஆனால் நான் அப்படி இல்லை என்னை வாழ வைத்த இந்தச் சூழலை கெடுத்துக்கொண்டு நான் எந்த வேலையையும் செய்ய விரும்புவனில்லை. ஒரு விவசாயி வயலில் வேலை செய்வான். ஆனால் அதை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். அதைதான் நான் செய்கிறேன்.



 சாட்டிலைட் சேனல்கள் வந்தபொழுது அதற்கு நான் ஆதரவாக குரல்கொடுத்தேன், இது விஞ்ஞானம் வரத்தான் செய்யும் என்று சொன்னேன் என்பதற்காக என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் நான் தைரியமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னேன். அந்த தைரியம் தான் இன்று உங்கள் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கிறது.


 அதேபோலத்தான் சொல்கிறேன் இது பிழையல்ல, குற்றமல்ல அதனால் செய்கிறேன்.

 தியேட்டர்காரர்களுக்கு அது சொத்து, ஆனால் இந்தப்படம் எனக்கு செலவு. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் என்னால் செலவு செய்ததை எடுக்க முடியாது. யார் அந்த பொருளுக்கு சொந்தக்காரனோ அவன் தான் அந்தப்பொருளை பயன்படுத்த வேண்டும்.


 இது கசப்பு மருந்து தான். கசப்பு என்று தெரிந்து தான் சாப்பிடுகிறோம். ஆனால் இந்த கசப்பு மருந்து உடம்புக்கு நல்லது. வேம்பு கசக்கும் ஆனால் பாம்பு கடிக்கு போட்டால் சரியாகிவிடும். உங்களை கடித்திருக்கும் பாம்பு திருட்டு வி.சி.டி, அதற்கு கசப்பு மருந்தாக வந்திருப்பது தான் இந்த சிஸ்டம். இந்தக் கசப்பு மருந்து எந்தளவுக்கு குணமாக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.


 தியேட்டர்களை மூடி விட வேண்டியது தான் என்று சொல்கிறார்கள். ஆமாம், பராமரிப்பில்லாத தியேட்டர்களை மூடித்தான் ஆக வேண்டும். தியேட்டர்களுக்கு வருகிறவர்களுக்கு படம் பார்க்கக்கூடிய நல்ல சூழல் இல்லாத தியேட்டர்களை கண்டிப்பாக மூடிவிடுவார்கள். ஆனால் அதற்கு இதை ஒரு காரணமாக சொல்லாதீர்கள்.



 தொழில் செய்யும் உரிமையை இந்த அரசாங்கம் எனக்கு கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்டப்படி குற்றமாகும்.



 இப்படத்தினை  சன், வீடியோகான், ரிலையன்ஸ், ஏர்டெல், DSV,  ஆகியோருடன் இன்னொரு புதிய DTH ஆபரேட்டரும் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் டாடா ஸ்கை நிறுவனத்தினர் தான். அவர்கள் முதலில் வருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் DVR என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரில் இந்தப்படத்தை ரெக்கார்டிங் செய்யும் தொழில்நுட்பத்தை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்களுடன் நான் வியாபாரத்துக்கு வர மாட்டேன் என்று சொன்னேன்.



 அதேபோல இதை கமர்ஷியலாக இல்லாமல் ஒரு தனி சேனலாக காட்ட வேண்டும் என்று சொன்னேன். மேலே உள்ள அந்த இரண்டு கண்டிஷன்களுக்கும் டாடாஸ்கை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வராமல் இருந்தார்கள் ஆனால் மற்றவர்கள் வந்து விட்டார்கள். இப்போது சுமார் 1 மணி நேரத்துக்கு முன்னதாக அவர்களும் இந்த கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டு நாங்களும் வருகிறோம் என்று வந்துவிட்டார்கள். ஆக இப்போது இந்தியாவில் இருக்கும் ஆறு DTHலும் இப்படம் ரிலீஸாகிறது.



 இதையெல்லாம் தியேட்டர்களை பாதுகாப்பதற்காகத்தான் நான் செய்தேன். இதைப்புரிந்து கொண்டு என் பின்னால் வருபவர்களுக்கு நான் வரவேற்பு செய்கிறேன். வராதவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.

 ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை, நடப்பதற்கு ஒரு தங்கப்பாதை’ என்று சொன்னார்கள். இதை கம்யூனிஸ்டு தோழர்கள் சொல்லியிருந்தார்கள். அது இப்போது வியாபாரத்துக்கும் பயன்படுகிறது.



 இந்த தங்கப்பாதைக்கு வாருங்கள் என்று நான் கூப்பிடுகிறேன், ஆனால் நீங்கள் செருப்பு தேய்ந்து விடும் என்று கவலைப்படுகிறீங்கள். இது தான் என்னுடைய வேண்டுகோள். வந்தவர்கள் வரைக்கும் எனக்கு சந்தோஷம்; வராதவர்கள் இருந்தாலும் ரொம்ப சந்தோஷம் " என்று பேசினார்
 
 
http://www.cinejosh.com/gallereys/movies/normal/viswaroopam_movie_stills_0806120245/viswaroopam_movie_stills_0806120245_026.jpg
 
 
ஆர் எஸ் அந்தணன் கட்டுரை 
 
சுற்றிலும் ராணி, குதிரை, யானை, சோல்ஜர்கள் இருந்தும் ராஜாவை காப்பாற்ற  முடியாமல் கமல் செஸ் ஆட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார். (இறுதி வெற்றி  எனக்கே என்ற அவரது தன்னம்பிக்கைக்கு விடை தெரிய இன்னும் முழுசாக ரெண்டு  வாரங்கள் காத்திருக்க வேண்டும்) எதிர் தரப்பில் ராணியும் இல்லை, குதிரையும்  இல்லை. யானையும் இல்லை. ஆனால் ராஜாவை குறிவைத்து நெருங்கிக்  கொண்டிருக்கும் அவர்களின் பக்கத்தில் துணையாக வைத்திருப்பது யாரை? அல்லது யார்  யாரையெல்லாம்?

அதை தெரிந்து கொள்வதற்கு முன் கமல் என்ற முன்மாதிரியை,முழு கலைஞனை,  கலியுகத்தின் கலிலியோவை பற்றி அறிந்து கொள்வது நல்லது.

'மகாநதி' திரைப்படம் தயாரிப்பில் இருந்த நேரம்.சென்னையிலிருக்கிற முன்னணி  சினிமா எடிட்டர்கள் பலர் ரூம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்."கமல் ஏதோ  'ஆவிட்'டுன்னு ஒண்ணு கொண்டு வராராம்.அஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹா...அதை  கொண்டு வந்து வச்சுகிட்டுதான் மகாநதியை எடிட் பண்ண போறாராம்.அதென்ன  ஆவிட்டோ, டேவிட்டோ? இங்க ஒருத்தனுக்கும் புரியல.தணிகாசலம் சாரு பிலிமை  கையில புடிச்சு ஸ்பாட் வச்சு நறுக்கிற வேகம் வருமா? இல்ல அந்த பர்பெக்ஷன்தான்  அதுல வந்துருமா? வௌங்கிரும்."

இவர்களின் பேச்செல்லாம் அப்படியே கமல் காதுகளுக்கும் போனது.ஆனால்"நம்ம  படத்துக்கு ஆவிட் எடிட்டிங்தான்.மூவியாலாவெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில்  இருக்காது.வேணும்னா அதையெல்லாம் மியூசித்துல பார்த்துக்கலாம்" என்ற கமல், இந்த  விஷயத்தையும் ஒரு கை பார்த்துக்கலாம் என்று தன்னம்பிக்கையோடு களம் இறங்கினார்.

மும்பையிலிருந்து ஸ்பெஷலாக ஒரு எடிட்டர் வந்துதான் மகாநதியை எடிட் பண்ண  வேண்டியதாயிற்று.இங்குள்ள யாரும் அதை கற்று கொள்கிற எண்ணத்திலேயே இல்லை.  அவ்வளவு ஏன்? இதை வேடிக்கை பார்க்கக் கூட யாரும் வரவேயில்லை அங்கு.

அது நடந்து சில பல வருடங்களில் ஒவ்வொரு எடிட்டிங் ஸ்டுடியோக்களிலும் ஆவிட்  புகுந்து கொண்டது. ஏதோ ஆமை புகுந்தது போல ஆவிட்டை பார்த்து அஞ்சிய அத்தனை  எடிட்டர்களும் தடவி தடவி கற்றுக் கொண்டார்கள் இந்த ஆவிட் தொழில் நுட்பத்தை.  அதுதான் கமல்ஹாசன்! படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்  கொண்டு ஸ்பாட் எடிட்டிங் செய்கிற அளவுக்கு தொழில் முற்றிப் போனதற்கு காரணமும்  கமல்தானே அய்யா?

அப்படியே இன்னொரு சம்பவம்...இன்று வீட்டுக்கு வீடு பரவிவிட்டது கம்ப்யூட்டர்  சாதனம்! பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன்,  பல பத்திரிகை அலுவலகங்களில் கூட அது இருந்ததில்லை. க் ச் ம் என்று  எழுத்துக்களை தேடி எடுத்து பொருத்தி கொள்கிற அவஸ்தையும் இருந்தது.ஒரு சில  மிகப்பெரிய பத்திரிகை அலுவலகங்களில் மட்டும் டிடிபி என்று சொல்லப்படுகிற அதிநவீன  தட்டச்சு இயந்திரத்தை பயன்படுத்தினார்கள்.ஏதோ பூச்சாண்டியை பார்ப்பது போலவே  கம்ப்யூட்டரை பலரும் கருதி வந்த காலம் அது.

பத்திரிகையாளர்களை சந்திக்கிற சினிமாக்காரர்கள் பத்திரிகை செய்திகளை கைகளால்  எழுதி,அதை ஜெராக்ஸ் எடுத்து விநியோகம் செய்வார்கள்.போட்டோக்கள்?  நூற்றுக்கணக்கான போட்டோக்களை பிரிண்ட் போட்டு மேக்ஸி, போஸ்ட் கார்டு சைஸ்  என்று விதவிதமாக தருவார்கள்.அதை ஒரு அட்டையில் ஒட்டி பிலிம் எடுத்து பிளேட்  போட்டு என்று...ஆறேழு பரீட்சைகளை தாண்டிதான் ஒரு துணுக்கு செய்தியாக  இருந்தாலும் பத்திரிகையில் இடம் பிடிக்கும்.

அந்த கால கட்டத்தில்தான் நான் கமல் பிரஸ்மீட் ஒன்றுக்கு சென்றிருந்தேன்.கேள்வி  பதில் நேரம் முடிந்து கிளம்பும்போது அழகாக வட்ட வடிவில் ஒரு பொருளை கையில்  கொடுத்தார்கள் கமல் அலுவலக ஊழியர்கள். அதுதான் குறுந்தகடு என்பதே தெரியாமல்  கையில் வைத்துக் கொண்டு திருதிருவென விழித்தார்கள் அநேக நிருபர்கள். (நானும்  கூட) இதுக்குள்ளேதான் கமல் சாரோட போட்டோ இருக்காம்.கொண்டு போய் ஆபிஸ்ல  கொடுங்கப்பா. அவங்க கம்ப்யூட்டர்ல போட்டு கண்டுபிடிப்பாங்க என்றெல்லாம்  ஆளாளுக்கு ஆம்ஸ்ட்ராங் ஆனார்கள்.

கமல் சொன்னார்,"இன்னும் கொஞ்ச நாளில் இப்படிதான் ஆகப்போவுது. போட்டோ  பிரிண்ட் போட்டு கொடுக்கிற வழக்கமெல்லாம் மறைஞ்சுரும்"என்று. ஆழ்வார்பேட்டை  ஏரியாவிலிருக்கிற இறைச்சி கடைகளில் 'தல'கறிக்கு அவ்வளவு விற்பனை இல்ல.  ஏன்னா கமல் மாதிரி ரொம்ப பேரு இங்க இருப்பாங்க போலிருக்கு என்று கமென்ட்  அடித்தபடியே கலைந்த கூட்டம்தான் நாங்கள் எல்லாம்.

எதையும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து...என யோசிப்பவர் கமல்.நாமெல்லாம்  பஞ்சாங்கத்தில் நல்லநேரம் பார்த்துக் கொண்டிருந்தால்,கமல் அண்டார்டிகாவுக்கு அந்த  பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்.அவரால்  நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களில் ஒன்றுதான் இந்த டிடிஎச் ஒளிபரப்பு.(கமல்  செய்யாவிட்டால் இதை வேறு யார் செய்து தொலைப்பதாம்?)

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது.அப்படி ஒளிபரப்பினால்  தியேட்டர்களை இழுத்து மூட வேண்டி வரும் என்று அவரவர் தொழில் குறித்து  அச்சப்படுவதும் நியாயம்தான். சின்னத்திரை வந்தபோதும் இதே அச்சத்தோடு  இருந்தவர்கள்தான் தியேட்டர்காரர்கள். ஆனால் அப்போதைவிட இப்போதைக்குதான்  படங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. எங்கள் படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர்  கிடைக்கவில்லை என்ற புலம்பலும் கூடியிருக்கிறது.இத்தனைக்கும் தினந்தோறும் மூன்று  படங்களையாவது ஒளிபரப்பிவிடுகின்றன முன்னணி சேனல்கள்.

சின்னத்திரையில் படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தபோது, சினிமாக்காரர்கள் திரண்டு  சென்று அப்போதைய முதல்வர் கலைஞரை சந்தித்து முறையிட்டார்கள்."ஏன்யா...  உங்க சினிமா வந்து நாடகத்தை அழிக்கலையா? அதுமாதிரிதான் இதுவும்.இந்த  விஞ்ஞான வளர்ச்சியை ஏத்துகிட்டுதான் ஆகணும்" என்றார் கலைஞர். அதே  போன்றதொரு 'உரத்த குரல்' இப்போது தேவைப்படுகிறது கமலுக்கும்!

ஆடியோ மார்க்கெட் ஒழிஞ்சுருச்சே என்று சினிமாக்காரர்கள் அலறும்போதுதான் அதைவிட  பல மடங்கு கொட்டிக் கொடுக்கிறதே,சேனல் ரைட்ஸ்...அத பற்றி ஏம்ப்பா பேச  மாட்டேங்கிறீங்க? என்ற எதிர் கேள்வி பிறக்கிறது இங்கே.

சரி விவாதத்தை விட்டுவிட்டு கமல் பிரச்சனைக்கு வருவோம்.சுமார் எழுபது கோடியை  இந்த படத்திற்காக இறைத்திருக்கிறார் அவர்.நேற்று வந்த நடிகர்கள் எல்லாம், முப்பது  கோடி சம்பளம் கேட்கும்போது சாதனையாளர் கமல்,படத்திற்கு ஆன செலவு போக  பதினைந்து கோடியாவது இப்படத்தின் மூலம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று  நினைப்பது தவறா?

இப்படத்தின் முதல் தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்ட பிவிபி நிறுவனம்,  போட்ட பணத்தை திரும்ப கேட்கிறது.சுமார் ஐம்பது கோடி ரூபாயை அவர் தரவேண்டிய  நிலையிலிருக்கிறார்.ஆனால் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து இந்த படத்தின் மொத்த  விலையுமே ஐம்பது கோடியாகதான் நிர்ணயிக்கிறார்களாம்.அதை மேலும் குறைக்கிற  விதத்தில் நடுவில் வந்து சேர்ந்தது முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக  கிசுகிசுப்பு எழுந்ததுமே படத்தின் வியாபார தொகையும் பாதிக்குமேல் குறைக்கப்பட்டதாக  கூறுகிறார்கள்.

தீப்பிடிக்கிற நேரத்தில் தப்பி ஓடுகிற வழியில் அழகான கோலம் போட்டிருக்க வேண்டும்  என்றோ, அது கிழக்கு வாசலாக இருக்க வேண்டும் என்றோ நினைக்க முடியாது.  நடுநிலையோடு நோக்கினால் கமலின் நிலையும் அதுதான். போட்ட பணத்தை  எடுப்பதற்காக அவர் புதிதாக திறந்த புழக்கடைதான் இந்த டிடிஎச் என்று கருத  வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் சுயலாபத்துக்காக உயிராக நேசிக்கும் சினிமாவை  காவு கொடுக்கிறவரல்ல கமல் என்பதையும் அவரது கடந்த கால சினிமா வரலாறுகள்  நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான சினிமா நிறுவனங்கள் எல்லாம் எங்கே போயின? சத்யா மூவிஸ் எங்கே,  தேவர் பிலிம்ஸ் எங்கே? சூப்பர்குட் எங்கே, எல்.எம்.எம் எங்கே? ஏ.வி.எம் நிறுவனம்  ஏன் வருடத்திற்கு ஒரு படத்தை கூட எடுக்க மாட்டேன் என்கிறது? இன்னும் இதுபோன்ற  முக்கிய நிறுவனங்கள் எல்லாம் ஏன் ஒதுங்கின? சினிமா ஆரோக்கியமாக இல்லை.  பணம் போடுகிற முதலாளி அப்படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் ஓடி ஒளிகிற அவல நிலை  இங்கு தொடர்கிறது.

ரியல் எஸ்டேட் புரோக்கர்களும், கள்ளப்பண முதலாளிகளும் ஆசைக்கு ஒரு படம்  எடுத்து அதிலும் தானே ஹீரோவாக நடித்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.அவ்வளவு ஏன்?  பல்லாயிரம் கோடிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்து  கோலி குண்டு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்களே கூட விழிபிதுங்கி கிடக்கின்றன.

எல்லாவற்றுக்கும் காரணம் வியாபாரத்தை இங்கே சுதந்திரமாக செய்ய முடிவதில்லை  என்பதுதான். சூழ்ச்சியும் அசந்த நேரத்தில் கால்களை வாரிவிடும் கலையும் இங்கே  சகஜமாக இருக்கின்றன. படப்பெட்டிகளை டெலிவரி செய்யும்போது பேசிய பணத்தை  எண்ணி வைக்கிற விநியோகஸ்தர்கள் இங்கே இருப்பதே இல்லை. இங்கு எல்லா  படங்களின் டெலிவரியும் ரத்தக்கறையோடு நடப்பதை லேப் பக்கம் சென்றால் நடுங்க  நடுங்க கவனிக்க முடியும்.

'விஸ்வரூபம்' விஷயத்தில் கூட கமலுக்கு எதிரான சில சினிமா பிரமுகர்கள் முஸ்லீம்  அமைப்புகளையும், தியேட்டர்காரர்களையும் தூண்டி விடுவதாக கூறப்படுகிறது. ஒரு  படம் தோல்வியடைந்தால் இதே சினிமாவிலிருக்கும் பெரும்பாலனோர் பார்ட்டி வைத்து  கொண்டாடுகிறார்களே, சினிமா எப்படி பிழைக்கும்?

ஒரு சங்கத்தின் சட்டதிட்டங்கள் இன்னொரு சங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆனால்  சினிமாவில் முடியும். விருப்பமே இல்லாவிட்டாலும் இந்த கட்டுக்கோப்பான  சட்டதிட்டங்களை எல்லாரும் மதித்தே ஆக வேண்டும் என்கிற முரட்டு சிந்தனை இங்கே  பல வருடங்களாக இருக்கிறது.வேதனை என்னவென்றால் பணம் போடுகிற முதலாளியும்  இங்கே கைகட்டி நிற்க வேண்டி இருக்கிறது.

கமல் என்ற முதலாளியின் நிலைமையும் இன்று அப்படிதானிருக்க வேண்டும் என்று  நினைக்கிறார்கள் பலர்.'உன் தியேட்டரில் முறுக்கு விற்க கூடாது.சுண்டல் விற்க  கூடாது' என்று சொல்ல எப்படி எந்த பட முதலாளிக்கும் அதிகாரம் இல்லையோ,  அப்படிதான் 'உன் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது என்று இவர்கள் சொல்வதற்கும்  அதிகாரம் இல்லை.

இந்த சின்ன உண்மையை புரிந்து கொண்டால் போதும்... விஸ்வரூபம் பிரச்னை,  இவ்வளவு பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கவேண்டிய தேவையே இருக்காது! 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-g9hhlMlEYA-kmziFC2D2RSbM9B4zAaBnh0zxGMzYfGpD3ulOoJte1rOWHGwCm6xuD_D0I5yUHbA3F1MVTan8NHPCZTDsibHiX4ilfExsbKnKkqgIL40E40AQLm04nzEVoTq7UBM9c9Y/s1600/viswaroopam_movie_latest_stills_005.jpg
 

மக்கள் கருத்து


தமிழ்ச் சினிமா மிகபெரிய பரிணாமத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.

படித்த இளஞர்கள் புதிய சிந்தனையுடன் விதம் விதமான அணுகுமுறையுடன் நடிகர்களாக,இயக்குநர்களாக, இசையமைப்பளர்களாக சினிமாவிற்குள் பிரவேசித்துள்ளார்கள்.


கமலஹாசனின் இந்த முயற்சி தமிழ்ச்சினிமாவை வேற்றுமொழியினரும் பார்த்து ஆச்சரியப்பட வைக்கப் போகின்றது.


டிரிஎச் ஒளிபரப்பு முறை சர்வதேசத்தை தமிழ்ச்சினிமா சென்றடைய ஒரு பாதையுமாகும்.


திரையரங்க உரிமையாளர்கள் விஸ்வரூபத்தை திரையிடுவதன் மூலம் நட்டமடையவே மாட்டார்கள்.


பலரால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.திருட்டு விசிடியால் தயாரிப்பாளர்கள் நட்டமடைவதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் திரையரங்க உரிமையளர்களே.திரையரங்கிலிருந்துதான் திருட்டு விசிடி வெளிவருகின்றது என்பதும் உண்மை.


கமலஹாசனின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 

 

2. இதைத்தான் தைரியம், துணிச்சல் என்பது. ஒரு முடிவு எடுத்தபின்னர் பின்வாங்குவதும் அதைத் தவிர்ப்பதும் கோழைத்தனம். அந்த முடிவு தவறானதாக இருக்கும் பட்சத்தில் பின்வாங்குவது தேவைதான். ஆனால், சரியான முடிவை எடுத்துவிட்டு துணிச்சலோடு சவால்களை எதிர்கொள்ள தனித்துவம் வேண்டும்! சினிமா என்பது ஒரு வியாபாரம். அதில் முதல் போடுபவர்கள் இலாபம் கிடைக்காவிட்டாலும், ஆகக் குறைந்தது நட்டமாவது ஏற்படாமல் இருக்கவே முயல்வார்கள். ஒரு படம் வெளிவரும்போது அதனை வெற்றிபெறவைத்து இலாபம் எடுத்துத் தருகிறோம் என்று எந்தத் தியேட்டர்காரராவது உறுதிகூறமுடியுமா? ஆனால், படம் ஓடாவிட்டால் பணத்தைத் திருப்பித்தா என்று கேட்கமட்டும் வந்துவிடுவார்கள்.

 

3. இந்தியாவில் ஐம்பது சதவிகிதமாக கட்டணம் குறைக்கும் நிலையில், இந்த முயற்சி நிச்சயம் பலன் தரும்.

தன்னுடைய எல்லா திரைப்படங்களையும் மறுமுறை பார்த்து தேவையற்ற காட்சிகளை நீக்கி விட்டு டி.டி.ஹெச் சில் திரையிட்டால் ராஜ் கமல் ப்ரொடக்ஷன்ஸ் தானே ஒரு சானல் அமைக்க முடியும்.

கமலின் இந்த முயற்சி, நிச்சயம் வெற்றி பெறும்.

வாழ்த்துக்கள்.
 

 

 

 

Kamal Haasan exclusive interview on Vishwaroopam - Tv9


ரூ 95 கோடியை ரூ 175 கோடி ஆக்கும் கமல்-ன் கால்குலேஷன்

  • (LtoR) Actor Pooja Kumar, Vikas Singh, CEO, Bharti Airtel Kerala 
and Tamil Nadu, actor Kamal Haasan, Shashi Arora, CEO DTH and Media, 
Bharti Airtel, and actor Andrea Jeremiah at the launch of innovative 
marketing initiative around the premier of Kamal Haasan spy thriller 
Vishwaroopam on the Airtel DTH platform. Photo: R. Ravindran
    The Hindu (LtoR) Actor Pooja Kumar, Vikas Singh, CEO, Bharti Airtel Kerala and Tamil Nadu, actor Kamal Haasan, Shashi Arora, CEO DTH and Media, Bharti Airtel, and actor Andrea Jeremiah at the launch of innovative marketing initiative around the premier of Kamal Haasan spy thriller Vishwaroopam on the Airtel DTH platform. Photo: R. Ravindran 
  • Vishwaroopam, that has cost Kamal Haasan Rs. 95 crores 
approximately will hit an unprecedented number of homes before its 
theatrical release.
    Special Arrangement Vishwaroopam, that has cost Kamal Haasan Rs. 95 crores approximately will hit an unprecedented number of homes before its theatrical release.
Kamal Haasan’s film will hit many homes before its theatrical release, a first in the world for a mainstream film.


Unnerved by the controversy of a section of exhibitors boycotting his film, Kamal Haasan has tied up with over 400 cinema halls in the State and the six big DTH providers — Tata Sky, Dish TV, Sun Direct, Videocon D2h, Airtel Digital TV and Reliance Digital TV in the country to release his film Vishwaroopam during the Pongal. season. 



The one-time DTH premiere of the film will begin at 9.30 p.m. on January 10 and is priced at Rs.1,000 per home (Rs. 500 for the Hindi version Vishwaroop). Vishwaroopam, that has cost Kamal Haasan Rs. 95 crores approximately will hit an unprecedented number of homes before its theatrical release, a first in the world for a mainstream film. 



With 50 million DTH homes in India, if it reaches out to target five per cent of the DTH base, it could potentially collect Rs. 175 crores. After tax and revenue sharing with DTH providers, it could make about Rs. 50 crores. 



As Vanita Kohli-Khandekar, media expert and author of the Indian Media Business estimates, “Maybe a one or two per cent reach is a more realistic estimate especially with this pricing. What DTH creates is a long tail, particularly for the migrant agglomerations of regional populations in the metros.



 There is a huge Tamil population in Delhi and Mumbai where the number of screens for regional cinema are limited,” adds Vanita. The move will help beat piracy. “Pricing, timing and quality are the three gaps that pirates exploit. The moment you start breaking down the windows between theatrical, home video and TV, you plug the gaps and piracy dies,” she explains. 


As Kamal Haasan himself clarified on the piracy issue, “It’s easier to track down the person who has made a print from DTH than any theatre,” he said. What he didn’t say — that it can be tracked down to the home/address of the pirate because films flash a unique code generated by the set top box assigned to each home. This is the first time that all DTH competitors have come on board together to premiere a film on TV. “I would like to congratulate all competitors who have come together,” Kamal Haasan said at a recent press conference to announce the release. 


Good backing

 
The actor was backed by representatives from all DTH providers, South India Film Chamber of Commerce, Director’s Union, Producer’s Council and even exhibitors from Coimbatore who pledged support and lauded him on the brave, risky move of releasing his film without collecting a single rupee as minimum guarantee from the exhibitors. 



“I am not a visionary. I just know that when someone invents a cell phone and brings it to the market, you can pick it up. Yes, there maybe people who are scared if the cell phone will heat up and explode who are hesitant to touch it but I am just the guy who decided to take the call when it rang,” said Kamal Haasan to dispel fears that DTH will eat into theatre revenues. 



“I do not want to disturb my ecosystem. I am very protective of it. Which is why I took all the efforts to ensure that I don’t sign up with DTH players before they promised me that the Digital Video Recorder would be disabled and that the film will not be available in commercial establishments. An hour ago, Tata Sky too has come on board,” he announced recently. 


“When a tractor is available, a farmer needs to embrace it instead of saying he will only use the bull. Only I have everything to lose. When I produce a film, it’s at my expense. If you are releasing it, it’s an asset. I find it silly to even say don’t be scared,” he said, referring to the exhibitors who have refused to release his film on the grounds that a DTH premiere may set a bad precedent and result in shutting down of more cinema halls. 



As R. Panneerselvam, general secretary of Tamil Nadu Film Exhibitors’ Association, told MetroPlus a few days ago: “There used to be over 2,600 theatres in 1984. Now, there are only about 1,250 cinema halls because many of them shut down due to the growth of cable and satellite TV.” But Kamal Haasan pointed out “Only the theatres that have been in bad shape have shut down over the years.” 



Tiruppur Subramaniam, Coimbatore-based exhibitor, speaking on behalf of exhibitors of his region, said that they didn’t have the slightest hesitation before signing up to release the film. “Theatres have been shutting down because of the scourge of minimum guarantee that had taken over the business over the last five-six years. Mr. Kamal Haasan was the first to introduce us to digital cinema and thanks to digital cinema, the print cost has reduced from Rs.50,000 to Rs.10,000,” he said. “Karnan even today runs for a hundred days despite being screened on TV, despite availability of DVDs in the market,” he added. 



“When moving pictures were first screened, people thought the moving train would run over them. When talkies came, they were scared of sound. Eastman colour came and replaced black and white and digital have replaced film rolls. Yet labs survived by adapting and so has cinema. Scientific progress is inevitable and has to be embraced,” said director Bharathirajaa. 



“I have seen the film and I can say that it is truly world class. A film we can be proud of. So far you only know of him as Kamal the artiste, with Vishwaroopam, you’ll see Kamal the technician,” he added. 


நன்றி -  த ஹிந்து

Tuesday, August 07, 2012

சிவப்பு ரோஜாக்கள் - சினிமா விமர்சனம்

http://img.filmlinks4u.net/2010/07/Sigappu-Rojakkal-1978.png

என் இனிய தமிழ் மக்களே புகழ் பாரதிராஜா மண்வாசனை கிளப்பும் கிராமத்துப்படங்களைத்தான் திறம்பட இயக்குவார்  என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கிய க்ரைம் த்ரில்லர் தான் சிவப்பு ரோஜாக்கள் , பின்னாளில் வந்த பல க்ரைம் படங்களுக்கு முன்னோடி.. கே பாக்யராஜின் திரைக்கதை (உதவி), வசனத்தில் ( முழு) தயாரான படம். வடிவுக்கரசி இதில் கிளாமராக நடித்திருப்பது, கவுண்டமணி, பாக்யராஜ் சின்ன கேரக்டரில் வந்து போவது என சிற்சில ஆச்சரியங்கள் உண்டு.. .


ஹீரோ கமல் ஒரு பிஸ்னெஸ் மேன்.. அவரோட மெயின் வேலை என்னான்னா  ஃபிகரை கரெக்ட் பண்றது, மேட்டர் முடிச்சதும் கொலை செஞ்சு அவர் வீட்டுத்தோட்டத்தில் புதைப்பது.. இந்த மாதிரி சைக்கோ ஆக அவருக்கு  ஒரு ஃபிளாஸ்பேக் இருக்கு.. அது அப்புறம்.. 

ஒரு ஜவுளிக்கடைல ஹீரோயினை பார்க்கறார்.. லவ் @ ஃபர்ஸ்ட் சைட்.. சைக்கோவுக்கு லவ் வருமா? பத்து பைசா சம்பாதிக்க வக்கில்லாத பொடிப்பசங்களுக்கே லவ் வர்றப்போ கோடியில் புரளும் சைக்கோவுக்கு லவ் வராதா என்ன?


ஹீரோ பெருசா ரிஸ்க் எல்லாம் எடுக்கலை.. அதே ஜவுளிக்கடைக்கு 3 டைம் போறார்.. ஃபிகர் செட் ஆகிடுச்சு.. 365 நாள் போனாலும் நமக்கு செட் ஆகறதில்லை. கார்ல ரைடு கூட்டிட்டுப்போறார், சினிமாவுக்கு கூட்டிட்டு போறார்.. மேரேஜ் பண்ணிக்க புரப்போஸ் பண்றார்.. ஃபிகர் ஓக்கே சொல்லிடுது. 


 ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல மேரேஜ்.. இவ்ளவ் வசதி உள்ள அப்பாடக்கர் ஏன் எந்த சொந்தம் பந்தம், ஆஃபீஸ் நண்பர்கள் யாரும் இல்லாம தனியா மேரேஜ் பண்ண வந்திருக்கீங்களேன்னு அந்த கேனம் பூனம் கேட்கலை.. எப்படியோ புளியங்கொம்பா.  ஒருத்தன் சிக்கிட்டான்னு மேரேஜ் பண்ணிக்குது..


http://www.cinemastrikesback.com/news/new%20dailies/SivappuRojakkal1.jpg


பங்களாவுக்கு கூட்டிட்டு போறான்.. சுத்தி காட்டிட்டு கில்மாவுக்கு முத அடியை எடுத்து வைக்கறப்போ கம்ப்பெனில இருந்து ஃபோன்;./. கம்பெனில வேலை பார்த்த ஒரு ஃபிகர் காணாம போனது தொடர்பா ஒரு பிரச்சனை.. ஃபிகரோட அண்ணன்காரன் வந்திருக்கான்.. இவரு புது சம்சாரத்தை விட்டுட்டு  கம்ப்பெனிக்கு போறாரு


அண்ணன்காரன்  தன் தங்கயை இந்த ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற ஆள் யாரோ ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் இருக்கான், சாட்சி இருக்கு, சர்வர் சொன்னான்கறான்..  உடனே ஹீரோ அந்த ஹோட்டல் போய் அந்த சர்வரை க்ளோஸ் பண்ணிட்டு வர்றான்

 இந்த சைக்கிள் கேப்ல  ஹீரோயின் என்ன பண்றா?  ஏவாள் மாதிரி ஆப்பிளை அப்படியே சாப்பிடாம கத்தியால கட் பண்ணி சாப்பிடறா.. அப்போ விரல் ல லைட்டா காயம் ஆகி ரத்தம் கொட்டுது.. ஹீரோவோட பூனை அந்த ரத்தத்தை டேஸ்ட் பாக்குது,. 

 ஹீரோயின் பயந்துடறா,.. அப்படியே ஜன்னல் வழியா பார்க்கறா.. கரெக்டா மழை வருது. தோட்டத்துல புதைக்கப்பட்ட ஒரு டெட் பாடியோட கை மட்டும் மேல வருது..  திகில் கொடுக்கும் கை. வீல்னு கத்தறா.. ( ஹேண்ட்னு தானே கத்தி இருக்கனும்)


ஹீரோவோட வளர்ப்புத்தந்தையும் , தோட்டக்காரனும் அவுட் ஹவுஸ்ல  டி வி ல ஹீரோ நடிச்ச ஐ மீன் ரியலா எடுத்த லைவ் பிட்டுப்படம் பார்த்துட்டு இருக்காங்க. ஹீரோயின் அதை பார்த்துடறா.. பிட்டுப்படத்தை, அதை அவங்க பார்த்துட்டு இருந்ததை.. 


 ஹீரோ கரெக்டா வர்றான்.. ஒரே சேசிங்க் தான்/. துரத்தல் தான் (  2ம் 1 தான்) போலீஸ் வந்து பிடிச்சுடுது.. ஹீரோ மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்க்கப்பட நலம்.. 


படத்துல முதல் ஹீரோ திரைக்கதையும்,  இளையராஜாவின் பின்னணி இசையும்.. மிகச்சிறப்பா பண்ணி இருக்காங்க.. 


கமல்க்கு லவ் சப்ஜெக்ட் சொல்லியே தர வேணாம்.. காதல் இளவரசர்..   ஹீரொயினை கரெக்ட் பண்றது, அதுல கூட ஒரு பணக்காரத்தனம்,  கெத்து காட்டுவது, அப்பப்ப ஹீரோயின் கிட்டே பிட்டு போடறது ஒரே ரொமான்ஸ் மயம் தான்.. கல்லறையில் துரத்தும் காட்சியில் திகில் கலக்கல்.. 


 ஸ்ரீதேவி.,. அந்தக்கால இடை அழகி.. இவர் கிட்டே என்ன ஸ்பெஷாலிட்டின்னா இவர் உதடு , கன்னம், இடை இன்ன பிற சமாச்சாரங்களை எல்லாம் தனித்தனியாவும் ரசிக்கலாம், டோட்டலாவும் ரசிக்கலாம்.. அவ்ளவ் அழகு..  ஹீரோ ஏ ஜோக் சொல்லும்போது, கில்மாவுக்கு பிட் போடும்போது இவர் ச்சீ சொல்லும் அழகே தனி.. ஒண்ணுந்தெரியாத பாப்பா மாதிரியே முகத்தை வைத்துக்கொள்வதில் பாப்பா பி ஹெச் டி போல.. 


அடுத்து வடிவுக்கரசி.. வர்ணிக்கவே கூச்சமா இருக்கு.. ஏன்னா  முதல் மரியாதை, படையப்பாவில் எல்லாம் வயசான கேரக்டர்ல பார்த்து பழகிடுச்சு.. இருந்தாலும் இதுல கிளுகிளுப்பாத்தான் இருக்கு.. லோ கட்  ஜாக்கெட்ல இவர் கமலிடம் டபுள் மீனிங்கில் பேசும்போது செம கிளு கி்ளு.. ( ஏன்னா டபுள் மீனிங்க் டையலாக்கை லேடீஸ்  பேசும்போது கிக் டபுள்  மடங்கு ஆகிறதுன்னு சென்னிமலை சித்தர் சொல்லி இருக்காரு )


கவுண்டமணி கலக்கல் மணி எப்பவும் போல.. சார்  சார் என பம்பும்போது, இண்ட்டர்வ்யூவுக்கு வந்த ஃபிகர்களிடம் வழியும் போது கலக்குகிறார்.. கே பாக்யராஜ்  சர்வராக சில காட்சிகளில் வருகிறார். ( பாரதிராஜா தான் இவரை வற்புறுத்தி நடிக்க வைத்தாராம்)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCOuiOGO5xyGhigeElp7udhUYI419vpdey6Q3QTux02dJi2k6pC2HHv6noenOfxAFJ8KdWGtymjzyFJh4po3rybdlE59B9I8ofgY1txiUpfgQizqzSTGMIou5nu3JGE6KuvpxU1TayREU/s1600/Sridevi+Kamal+Haasan+Sreedevi.jpg




இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்



1. ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகள் அவ்வளவு யதார்த்தம்.. ஹீரோயின் தோழி சீண்டுகையில் ஹீரோயின் வெட்கம்.. செம.. சிலுவையை சுமந்து க்ளைமாக்ஸில் ஹீரோயினை துரத்தும் ஹீரோவின் கண்களில் கொலை வெறி எல்லாம் கலக்கல்.. 



2. படத்தில் லாஜிக் மீறலையும் மீறி மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிகள் - பூனை ரத்தம் சுவைப்பது, தோட்டத்து மண்ணில் இருந்து பிணத்தின் கை வெளியே வருவது.. அந்தக்கட்சிகளில் இளையராஜாவின் பி ஜி எம் கலக்கல்.. 


3. நத்திங்க் நத்திங்க் என டென்ஷன் ஆகி கமல் கத்தும் டெரர் சீன்.. ஹீரோயினுக்கு முதன் முதலாக ஹீரோவின் இன்னொரு கோர முகம் தெரிய வரும் சீன்,.. பின்னாளில் கே எஸ் ரவிக்குமார் எடுத்த க்ரைம் த்ரில்லர் படமான புரியாத புதிர் படத்தில் ரகுவரன் சொல்லும் ஐ நோ ஐ நோ என்ற புகழ் பெற்ற காட்சி இந்த காட்சியின் உல்டாவே,.,.

4. இளையராஜாவின் அட்டகசமான பின்னணி இசை, தீம் மியூசிக் சாங்க், 2 சூப்பர் ஹிட் பாடல்கள், ஒளீப்பதிவு என டெக்னிக்கல் மேட்டர்ஸ் ஆல் பர்ஃபெக்ட் ( 1978)





http://www.shotpix.com/images/46224764671477334604.png
இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஒரு கம்ப்பெனி ஓனர் தன் கம்பெனில ஒர்க் பண்ற லேடீஸை கரெக்ட் பண்றது எல்லா இடத்திலும் நடப்பதுதான்.. ஆனா இந்தக்கதைல வர்ற ஹீரோவோட எய்மே ரேப் அண்ட் மர்டர் தான்.. எப்படியும் கொலை பண்ணப்போறோம்னு தெரிஞ்சே தான் எல்லாம் பண்றான்.. அப்படி இருக்கறவன் ஏன் தன் கம்பெனி ஆள் மேல கை வைக்கனும்? பின்னால போலீஸ் பிரச்சனை வரும்னு தெரியாதா?  கார் எடுத்துட்டு பஸ் ஸ்டாப் போனா 1000 ஃபிகர்கள் படியும், பிக்கப் பண்ணிட்டு மேட்டரை முடிச்சுட்டு மர்டர் பண்ணிட்டா ரிஸ்க் இல்லை, போலீஸ் ட்ரேஸ் அவுட் பண்ண வழியும் இல்லை ( இதை ஐடியாவா சொல்லலை, கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்ப்தால் சொன்னேன்)


2. சின்ன வயசுல தனக்கு இழைக்கபட்ட  பாலியல் கொடுமைக்கெதிரா சைக்கோ ஆகும் ஹீரோ தவறான பெண்களை கொலை பண்றது ஓக்கே, எதுக்கு கில்மா?  ( தன் வளர்ப்புத்தந்தை வீடியோவில் பார்க்க என்று சால்ஜாப்பு சொல்லப்பட்டாலும் ஏற்கும்படி இல்லை, அதுக்கு பி எஃப் இருக்கே?)


3. தன் பங்களா தோட்டத்துல  ஏகப்பட்ட பிணம் இருக்கு, அவுட் ஹவுஸ்ல  வளர்ப்புத்தந்தை டி வி ல  பிட்டுப்படம் பார்க்கறார், தன்னைப்பற்றிய சுய விபரக்குறிப்புகள் எழுதபட்ட ரூம் இருக்கு- இத்தனை மைனஸ் இருந்தும் எந்த லூசாவது அந்த பங்களாவுக்கு ஹீரோயினை கூட்டிட்டு போவானா? அவ்லவ் வசதி உள்ளவன் ஏதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல முதல் இரவை முடிச்சுடுவானே?


4. ஹீரோ ஹீரோயினை காலம் பூரா வெச்சு காப்பாத்த லவ்வறாரா? அல்லது அவரையும் மேட்டரை முடிச்சுட்டு க்ளோஸ் பண்ண திட்டமா? என்பதும் தெளிவா சொல்லப்படலை.. 


5. அவுட் ஹவுஸ்ல பிட்டுப்படம் பார்க்கும் ஹீரோவின் வளர்ப்புத்தந்தை தாழ்ப்பாள் போடாம கதவை அப்படி திறந்து போட்டுட்டா பார்த்து ஹீரோயின் கிட்டே மாட்டிக்குவார்? ( ஏன்னா கில்மாப்படம் பார்ப்பதின் பால பாடமே சவுண்ட் வராம மியூட்ல வைப்பதும் வாசல் கதவை தாழ் போடுவதும் தான் )


http://www.shotpix.com/images/02010586592183352455.png


6. நம்ம வீட்ல ஒரு பெருக்கானோ, எலியோ செத்தா அருவெறுப்பா அதை தூக்கி டிச்சுல ஐ மீன் சாக்கடைல போட்டுடுவோம்.. ஆனா இதுல சஸ்பென்ஸை கூட்ட பெருக்கானை தோட்டத்துல புதைக்கற மாதிரி சீன் வெச்சிருக்காங்க.. தேவை இல்லாத சீன்


7. ஹீரோவின் ஃபிளாஸ்பேக் சீன்ல அந்த காலேஜ் ஃபிகரு கில்மா புக்ஸ் எல்லாம் படிச்சதால சூடாகி ஹீரோவை வலியனா ரேப்புக்கு பிட் போடுது.. கரெக்ட்டா அம்மா வந்துடறாங்க.. பொதுவா இந்த மாதிரி எதுக்கும் துணீஞ்ச கட்டைங்க எதையும் பிளான் பண்ணீ செய்வாங்க.. வாசல் கதவு, வீட்டுக்கதவு தாள் போடாமயா செய்வாங்க.. அம்மா பக்கத்துல கோயிலுக்கு போய் இருக்கா, எந்நேரமும் வர்லாம்னு இருக்கும் சிச்சுவேஷன்ல லைட் மீல்ஸ் சாப்பிட்டா ஓக்கே, ஆற அமர ஃபுல் மீல்ஸ் சாப்பிடறது நாட் ஓக்கே..


8. அந்த காலேஜ் ஃபிகரோட அம்மா ஹீரோ கிட்டே கோயிலுக்கு போறதா சொல்லிட்டு மட்ட மத்தியானம் கிளம்பி போகுது.. எந்த ஊர்ல அந்நேரத்துல கோயில்ல விஷேஷமோ? ஒரு வேளை ஆண்ட்டியும்  கில்மாவுக்கு வேற எங்கேயோ போயிடுச்சு போல.  


9. பயங்கர திகிலா வந்திருக்க வேண்டிய  பூனை காட்சி சரியா எடுக்கலை.. ஒவ்வொரு டைமும் பூனையை யாரோ தூக்கி ஹீரோயின் மேல வீசுவது நல்லா தெரியுது.. இன்னும் பெட்டரா பண்ணி இருந்திருக்கலாம்..


10. கை படாத ரோஜாவா வரும் ஹீரோயின் ஹீரோ பல களம் கண்டவர்னு தெரிஞ்சும் அவருக்காக உருகுவது, குணம் அடைய பிரார்த்திப்பது அக்மார்க் சினிமாத்தனம்.. கொஞ்சம் கூட தார்மீக கோபம் வராதா?


11. ஹீரோ சாட்சியான  சர்வரை கொலை பண்றது ஓக்கே.. அதை ஹோட்டல்லயே செய்யறது டேஞ்சர் ஆச்சே.. ரிமோட்டான ஏரியாவுக்கு வரச்சொல்லி பேரம் பேசி பின் படியலைன்னா அங்கே போட்டுத்தள்ளிட்டா நாளைக்கு போலீஸ் விசாரனை வந்தா ஹீரோ மேல பழி விழாதே..


12. பேரம் பேசும்போது சர்வர் ரூ 50,000 கேட்கறார்.. 1978ல ஒரு பவுன் ரூ 2300  அந்த கணக்கு பிரகாரம் பார்த்தா மார்க்கெட் ரேட் படி ரூ  50 லட்சம்.. ஒரு சாதாரண சர்வர் ஒரு மர்டரர் கிட்டே அவ்ளவ் பணம் கேட்பானா? தன்னையே அவன் கொலை பண்ணிட்டா? என சிந்திக்க மாட்டானா?


http://123tamilforum.com/imgcache2/2011/09/6-11.jpg



அட்டகாசமான பாடல்கள்


1. இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது


2. நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை..


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. வர்றேன்


 போறேன்னு சொல்லிட்டு போங்க, ஏன்னா நீங்க வந்துட்டுப்போற இடம்  ஜெயில்


 நோ வர்றேன், என் அடுத்த பிறந்த நாளுக்கு இதே ஜெயிலுக்கு..





2. கூண்டுக்கு உள்ளே இருக்கறவங்க எல்லாரும் குற்ற வாளிங்களூம் இல்லை, வெளீல நடமாடிட்டு இருக்கற எல்லாரும் நல்லவங்களும் இல்லை..


3. கவுண்டமணி - சாப்ட்ட்டாச்சா?


யா

 ஆல் ஆஃப் யூ கம் டூ இண்ட்டர்வியூ?நான் தான் மேனேஜர்.. எந்திரிக்க மாட்டீங்களே? ஏன்னா உங்க வயசு அப்படி, என் வயசு இப்படி, வேலை உனக்கு கன்ஃபர்ம்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுதே.. டேலண்ட் டேலன்.ட் ஹி ஹி



4. கவுண்டமணி - இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கும் லேடீஸ்ல  நீங்க பாதிப்பேரு, நான் பாதிப்பேரு பார்க்கலாமா? ஏன்னா நிறைய பேரு வந்திருக்காங்க..ஆளுக்குப்பாதின்னா வேலை சுளுவா முடியும்.. வேற ஏதும் இல்லை


5. இந்த மாதிரி தான் டிரஸ் பண்ணிட்டு ஆஃபீஸ்க்கு வருவீங்களா?


 (கட் ஷாட் - கனெக்‌ஷன் )- சில நேரங்கள்ல இதுவும் போடறது கிடையாது


6. உங்க பொழுது போக்கு என்ன மிஸ்?


(கட் ஷாட் - கனெக்‌ஷன் )-  பி எஃப் பார்ப்பது, ட்ரிங்க்ஸ் பார்ட்டிஸ்..



7. மிஸ்.. உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா?

 எதுல? ஐ மீன் ஸ்டெனோ, பி ஏ இப்படி பல வேலை பார்த்திருக்கேன்..


எந்த இடத்துலயும் ஏன் பர்மனெண்ட்டா இல்லை?



8.  உங்களுக்கு வேலை இல்லைன்னு சொல்லிட்டா வாட் யூ ஃபீல்?


 நோ வே..  நோ ஒர்ரி.. இந்த கம்பெனி நல்ல திறமையான  நபரை இழக்கும்



9.  ஓக்கே, நான் உன்னை வெச்சுக்கறேன், ஐ மீன் வேலைக்கு



10. ஹீரோயின் - புது வெரைட்டீஸ் நிறைய வந்திருக்கு, பார்க்கறீங்களா?


 யா யா



http://s3images1.filmorbit.com/media/15/88/35/1588355.jpeg



11. பியூட்டி ஃபுல்..  ஐ டாக் அபவுட் த கர்ச்சீஃப்


12.  ஐ லைக் தட் கலர்.. உங்க இடுப்பு ஓரமா இருக்கே. ஐ லைக் இட்..  பியூட்டி ஃபுல்.. இப்பவும் நான் கர்ச்சீபை தான் சொன்னேன்



13.  பிரேசியர் வேணும்


 என்ன சைஸ்?\


 ஏதோ ஒரு சைஸ் குடுங்க/

 ஓஹோ, உங்க மனைவி சைஸ் சொல்லி விடலையா?



14. எனக்கு இன்னும் மேரேஜ் ஆகலை..  ஹி ஹி


 சரி சரி புரியுது புரியுது



15. சித்ரா 2 நாளா  ஆஃபீஸ் வர்லையே?

 கவுண்டமணி - அந்த ஒரே கவலைதான் சார் எனக்கும்,. 2 நாளா சோறே இறங்கலை



16. ஹீரோயின் தோழி - யூ வாண்ட் பனியன்?

 யா


 கை வைச்சதா? கை வைக்காததா?

 எனக்கு எப்பவும் கை வைக்காததுதான் பிடிக்கும்



17. ஹாய் சினிமாவுக்கு போலாமா?


 அப்போ வார்டன்?

 அவரையும் கூட்டிட்டுப்போகமுடியாதே?



18.நான் ரெகுலரா உங்க கடைக்கு வர்றதால ஆர் யூ மிஸ்டேக்கன் மீ?


ச்சே, ச்சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை



முன் பின் அறிமுகம் இல்லாம  உங்களுக்கு கர்ச்சீஃப் எல்லாம் கிஃப்ட் பண்ணுனனே அதனால ஏதும் விகல்பா நினைக்கலையே?




ச்சே, ச்சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை







வர்றப்போ எல்லாம் உங்க டேபுளுக்கே வர்றேனே? அதனால ஏதும் தப்பா நினைக்கலையே?




ச்சே, ச்சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை


இப்போ நான் உங்க கிட்டே ஐ லவ் யூ சொன்னா தப்பா நினைப்பீங்களா? 




ச்சே, ச்சே அதெல்லா.......அவ்வ்வ்வ்வ்



17. படம் ஓக்கேவா?


 ரொம்ப செக்சியா இருந்துது


 வைகுண்ட ஏகாதசி எப்போ?

 எதுக்கு ?

 அப்போதான் சம்பூர்ண ராமாயணம் போடுவான், போலாம்..



18. முன் அனுபவம் இல்லாம ஒரு காரியத்துல இறங்குனா அது சரி வருமா?

 நோ நோ எந்த காரியத்துலயும் முன் அனுபவம் கண்டிப்பா தேவை

 அதான் நானும் சொல்றேன்.. எப்போ ஆரம்பிக்கலாம்?

 ச்சீய்



19.  என்ன சிரிப்பு?


 கவுண்டமணி - நீங்க முதலாளி, சிரிச்சீங்க, அதான் நானும் சிரிச்சேன்



20. பிரார்த்தனைல உங்களுக்கு நம்பிக்கை இல்லை?

 பரீட்சைக்கு போறப்ப சாமி கும்பிட்டுட்டு போறதை விட நல்லா படிச்சுட்டுப்போகனும்னு நினைக்கறவன் நான்



http://s3images1.filmorbit.com/media/15/88/36/1588361.jpeg



21. சாமி சிலை எவ்ளவ்?

 10 ரூபா


 ரொம்ப சீப்பான சாமி போல./.  சரி சரி முறைக்காத



22. இதுதான் டைனிங்க் டேபிள்.. இதுல நான் உக்காந்து சாப்பிட்டதா நினைவே இல்லை, ஏன்னா  ஐ ஆம் எ லோன்லி மேன், எல்லாம் பெட்ரூம்ல தான்


23.  ஆஃபீஸ்லயே ஒரு டபுள் பெட்ரூம் ரெடி பண்ண சொல்லட்டா?


 எப்பவும் உங்களுக்கு பெட்ரூம் நினைவு தானா?


 சரி, இனி சோபாலயே வெச்சுக்குவோம்



24. இத்தனை புக்ஸும் நீங்க படிச்சவையா?

 யா, இனிமே நோ தியரி, ஒன்லி பிராக்டிகல்.

 அப்போ இவை எல்லாமே.....

 ஹி ஹி எஸ்



25. வாழ்க்கை பூரா நானே ஜெயிக்கனும்கறதுக்காக  யாரையும் விளையாட்டுல சேர்த்துக்கறதில்லை



26. சில பேரோட விதியை வேதனைப்படறதால மாத்திட முடியாது


27. என் பிரார்த்தனைல எனக்கு நம்பிக்கை இருக்கு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK5-sAenDxFm9BNqyXEKjGf6G7Acg2313rqwI8euszIHWIaLOaJoNJFKmqjHUnoV4RBOQt-owPKHTSYBA1q33IkrMuyBqJv1PhA03Pz-vsHh6alGLjmNAIpkVGbJZ8AIbeYRuQLPg5HvjP/s320/bharathiraja.jpg



பாடல்கள்



இந்தப்படம் 1980ல ஹிந்தில ரீ மேக் ஆச்சு.. அப்புறம் ஜப்பான் மொழில டப் பண்ணி அங்கே ரிலீஸ் ஆச்சு..

Wednesday, July 18, 2012

Pushpaka Vimanam -பேசும்படம் - கமல்-ன் மைல் கல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdIlagKUDv2VR7OdHJs-_Ea4ZgoOdrbAAGKWKejquE-xoc3-miPRLdYBH22lz_b3OOnKZsBhh45NaQr45kCrLBln9UyVquuMNeXr0XIfiW0ZCWfsuzTjNEmK-WiJK8bWYbO5bXmv4FC9qV/s1600/358c3cy.jpg

பரீட்சார்த்தமான முயற்சிகளை எடுப்பதிலும்,தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதிலும் கமல் ஒரு நல்ல கலைஞர்.அவரது சினிமா உலக சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. அதுவும் நாயகன் படத்தில் இயக்குநர் மணி ரத்னத்துடன் இணைந்து பணி ஆற்றிய பின் அவரது கலை தாகம் அதிகரித்தது. ஒவ்வொரு படத்துக்கும் புதிய கெட்டப், கேரக்டருக்காக தன் உடலை, முகத்தை மாற்றிக்கொள்வது என பயணப்பட்டார்.. அப்படிப்பட்ட உன்னத கலைஞனின் உலகப்படம் தான் பேசும் படம்.,.


டைட்டிலில் தான் பேசும் படம் ,படத்தில் வசனங்களோ, பாடல்களோ இல்லை, சில காட்சிகளில் மட்டும் ரேடியோ வாசகங்கள் வந்தன,.. ஆனால் பக்கம் பக்கமாக வசனம் பேசி புரிய வைக்க முடியாததை காட்சிகள் மூலமாகவே புரிய வைக்க முடியும்,மக்களை ரசிக்க வைக்க முடியும் என நிரூபித்தவர் சிங்கீதம் சீனிவாசராவ்.


கன்னடத்தில் புஷ்பக விமான , தெலுங்கு, மலையாளத்தில் புஷ்பக், தமிழில் பேசும் படம் என ரிலீஸ் ஆச்சு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9ONt5AgWRzQED8L43XU27MvP-ZvGHLzM0fyVxow1Sk9UqW69Mg0yr2myU6S132gG27pneuZkDbFWp_y0KSoUvtZ__oNJ_koAP35sCDqNzid_op04-xalN7cMU7K3ZJ0W4ZcL9iN2G4e-R/s400/4.png


 படத்தோட கதை என்ன? ஹீரோ வேலை வெட்டி இல்லாத வெட்டாஃபீஸ்.. இண்ட்டர்வியூவுக்கெல்லாம் போய்ட்டு இருக்கார்.. ஹீரோயின் ஒரு மேஜிக் மேன் உடைய பொண்ணு.. 2 பேரும் சந்திக்கறாங்க. அன்பை பரிமாறிக்கறாங்க.

ஒரு கோடீஸ்வரர் , சரியான தண்ணி வண்டி.. சரியா தன் சம்சாரத்தை கவனிக்காம எப்போ பாரு பிஸ்னெஸ் பிஸ்னெஸ்னு சுத்திட்டு இருக்கார்.. அதனால அவர் சம்சாரம் டிராக் மாறிடுது. அவர் மனைவியின் கள்ளக்காதலன் கோடீஸ்வரரை  கொலை பண்ணிட்டா இந்த சொத்துக்களை எல்லாம் ரூட் விட்டுடலாம்னு மூணாறுத்தனமா திட்டம் போடறாரு.. அதுக்கு ஒரு ஆளை நியமிக்கறாரு..


 அந்த கோடீஸ்வரர் ஒரு ஹோட்டல்ல தங்கறார்.. ஏதோ வேலையா வெளீல போறப்போ மப்பு ஜாஸ்தி ஆகி  ரோட்டோரம் விழுந்து கிடக்காரு விக்கி மாதிரி.. அந்த வழியா வந்த ஹீரோ அவர் பேண்ட் பாக்கெட்ல ஹோட்டல் சாவி பார்த்து ஒரு திட்டம் போடறார்.. அதன் படி அவரை தன் ரூம்க்கு கொண்டு போய் கட்டில்ல கட்டி வெச்சுட்டு அவர் ஹோட்டல் ரூமுக்கு போறார். ஆள் மாறாட்டம்.. ஹோட்டல் ரூம்ல  லட்சக்கணக்குல பணம்.. ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு இருக்கார்..

 அந்த வாடகைக்கொலையாளி ஹீரோவை  கோடீஸ்வரர்னு நினைச்சு கொலை பண்ண முயற்சி பண்றாரு.. அதுல இருந்து ஹீரோ எப்படி தப்பிக்கறாரு? க்ளைமேக்ஸ்ல என்ன நடந்தது?இதெல்லாம் படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDLtzyXo28uPpAHqV8KIwEQup4x7ui_GSYS1q2j0hPSkkALwgZ89ZoWBFDDE8EGymP0iE_WjtrI_OIAKueLTRwFtYPG3MMxbNu0AwKiDrKF8L-7ZizVxs3Zr1Y2PrC7rlYBTNWUqMj0nZ7/s400/push.jpg



படத்தோட முதல் ஹீரோ இயக்குநர் தான்.. படத்துல வசனம் இல்லைன்னு முடிவு பண்ணுனதுமே டிஸ்கஷன்ல எப்படி எல்லாம் காட்சிகள் வெச்சா போர் அடிக்காம போகும்? ஆடியன்சுக்கு புரியும்? சிரிக்க வைப்பது எப்படி? என்று ஹோம் ஒர்க் பக்காவா பண்ணிட்டு படத்தை எடுத்ததுக்கு.. சரியான பாத்திரத்தேர்வுக்கு ஒரு சபாஷ்..



அடுத்து கமல். பிச்சைக்காரனிடம் அவமானப்படும் சீன், மீண்டும் கைக்கு பணம் வந்ததும் முதல் வேலையாக பிச்சைக்காரனிடம் அதை காட்ட முனைவது, காதலியிடம் சைகை மூலமே உரையாடுவது என பல காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன..இந்தப்படத்தில் ஹிந்திப்பட ஹீரோக்களுக்கு சவால் விடும் பர்சனாலிட்டி..


அமலா.. ஏசியில் வைத்த ரோஸி மாதிரி இவர் கண்களும் , கலரும் கலக்கல்.. அசால்ட்டான நடிப்பு. கமல் கடையில் இருக்கும்போது கம்மல் வாங்கி தன் காதில் வைத்து ஓக்கே? என கண்களாலேயே கேட்பதும் பின் அவர் பார்க்கும்போது யதேச்சையாக மரைப்பது போல் தன் கூந்தல் இழைகளால் காதுகளை மறைத்து வெட்கப்படுவதும் ஆஹா!!!


கொலையாளி வில்லனாக டினு ஆனந்த் , காமெடி வில்லன்,, வந்த வரை ஓக்கே. கோடீஸ்வரராக வரும் சமீர்க்கு நடிக்க அதிக வாய்ப்பு இல்லை.. ஆனாலும் படத்தில் பாதி நேரம் இவரை காட்டித்தான், கட்டிப்போட்டுத்தான் கதையே நகருது.


கோடீஸ்வரரின் மனைவியாக வரும் ரம்யா கிருஷ்ணன், கள்ளக்காதலனாக வரும் பிரதாப் போத்தன் என எல்லாருக்கும் நடிக்க கொஞ்சம் கொஞ்சமே வாய்ப்பு.. 4 காட்சிகளில் வந்தாலும் பிச்சைக்காரராக வரும்  பி எல் நாராயணா கலக்கிட்டார்.. படத்தின் டர்னிங்க் பாயிண்ட் கேரக்டர் வேற..


அந்த கிளு கிளு கில்மா வேலைக்காரி என்னா தெனாவெட்டு?

http://www.our-kerala.com/newgallery/images/photos/images/old_actress_amala_hot_stills1.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல வேலைக்காரி கேரக்டரையும், ரேடியோ வாசகத்தையும் மேட்ச் பண்ணி எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான காட்சி அமைப்பு..


2. ஹீரோ ரூமுக்கு வரும் முன் சாவித்துவாரம் வழியே வேலைக்காரி நோட்டம் இடுவதும், கில்மா புக்ஸை பார்த்து ஹீரோவுக்கு தெரியாமல் ரசிப்பதும்..


3. முதன் முதலாக ஏகப்பட்ட பணத்தை பார்த்ததும் ஹீரோ அந்த பணக்கட்டின் மேல் படுத்துக்கொள்ளும் சீன்..

4. மேஜிக் கலைஞரான அமலாவின் அப்பா தன் மனைவிக்கு டிமிக்கு கொடுத்து சரக்கு அடிக்கும் லாவகம்.. அது போக படம் பூரா ஆங்காங்கே மேஜிக்கை உபயோகித்துகொண்ட விதம்..


5. ஹீரோவிடம் சுத்தமா பணம் இல்லை என தெரிந்து பிச்சைக்காரன் நக்கலாக தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக்காட்டி ஹீரோவை வெறுப்பேற்றுவது.. அதே ஆள் இறந்த பின் மக்கள் அவனை கண்டுக்காம பணத்தை பங்கு போட அடிச்சுக்குவதைப்பார்த்து ஹீரோ மனம் மாறுவது சினிமாத்தனம் என்றாலும் நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி


6. வில்லன் உபயோகிக்கும் ஐஸ் கத்தி செம ஐடியா. எனக்குத்தெரிஞ்சு எந்த படத்திலும் வர்லை.. ( பேசிக் இன்ஸ்டிங்க்ட்ல அப்படி ஒரு சீன் லைட்டா வரும். )


7. அமலா பின்னால் நிற்கும் சின்னப்பையன் ஐஸ் கட்டியை அவர் முதுகில் போட்டுட்டு ஓடி விட கமல் தான் அதைச்செய்தார் என அவர் மேல் அமலா கோபப்படுவதும், பின் உண்மை உணர்ந்து வெட்கப்படுவதும் ரொமாண்டிக் காட்சிகள்

http://www.teakada.com/wp-content/uploads/2012/02/PesumPadam.png


இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  ஒரு ஆளை கொலை செய்யனும்னா முதல் வேலை அவன் ஃபோட்டோவை கொலையாளியிடம் காட்டனும், அல்லது நேர்ல லாங்க் ஷாட்லயாவது இவன் தான் நீ கொலை பண்ண வேண்டிய ஆள்னு சொல்லனும்.. இதுதான் நடை முறை, இதை விட்டுட்டு ஹோட்டல் ரூம்  நெம்பர் சொல்லி அங்கே தங்கி இருக்கறவன் தான் கொலை செய்யப்பட வேண்டிய ஆள்னு மொட்டையா சொன்னா எப்படி?அப்போதான் ஆள் மாறாட்டக்காமெடி வரும்னாலும் வேற மாதிரி திங்க் பண்ணி இருக்கனும்


2. ஹீரோ அந்த கோடீஸ்வரரை கை காலை கட்டி கட்டிலில் போட்டுட்டு வெளீல போயிடறார்.. அது டேஞ்சர் ஆச்சே? அவர் அப்படியே ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி வந்து கதவு அருகில் வந்து தட தடன்னு தட்டுனா என்ன ஆகி இருக்கும்? ( ஆனா அவர் அபப்டி செய்யலை)


3. அடை பட்ட கைதி நெம்பர் 1 , நெம்பர் 2 போக அவனை பாத்ரூம் போக விட்டா வேலை முடிஞ்சது. அதை விட்டுட்டு காமெடி பண்றதா நினைச்சுட்டு ஹீரோ பண்ற சீனெல்லாம் உவ்வே,,


4, முதன் முதலா பிரதாப் போத்தனும், டினு ஆனந்த்தும் டீலிங்க் பேச ஹோட்டல் ல சந்திக்கறாங்க. அப்போதான் கொலை பற்றியே பிளான் வருது.. எதுக்கு சம்பந்தமே இல்லாம ஃபிளாஸ்க்கும் கையுமா அவர் வரனும்?கொலை செய்யப்போகும்போதுதானே ஐஸ் கத்தி வைக்க ஃபிளாஸ்க் தேவை?



5. கொலையாளி டினு ஆனந்த் ஹோட்டல்ல நைட் டைம்ல கூட கூலிங்க் கிளாசோட சுத்துவது ஏன்?


6. ஹீரோ, ஹீரோயினை  சந்திக்கறார், பழகறார்.. அப்பவெல்லாம் விட்டுட்டு  ஹீரோயின் திடீர்னு கிளம்பறப்போ அட்ரஸ் கேட்பதும், அவர் வீசி எறியும் அட்ரஸ் பேப்பர் தொலைவதும் வலியத்திணிக்கப்பட்ட மென் சோகம்


7. கோடீஸ்வரர் மனைவி மனம் மாறுவது ஏன்? என்பதற்கு அழுத்தமா சீன் வைச்சிருக்கனும்.. அவர் திடீர்னு மனம் மாறுவது கமல் மனம் மாறுவது போல்  மனதில் பதிவது  இல்லை...


8, க்ளைமாக்ஸ்ல ஹீரோ மனம் திருந்துனதும் கோடீஸ்வரர் கண் விழிச்ச பின் அவர்ட்டயே உண்மையை சொல்லிட்டா  வேலை முடிஞ்சது.. அதை விட்டுட்டு எங்கே அவரைப்பார்த்தாரோ அதே இடத்தில் விட்டு வந்தால் அவரை மாதிரியே இன்னொருத்தன் அவரை மிஸ் யூஸ் பண்ண சான்ஸ் இருக்கே?


9. ஹீரோ வேலை இல்லா பட்டதாரி , அவரை வறுமையின் நிறம் சிவப்பு கமல் மாதிரி ஓப்பனிங்க்ல காட்டி இருக்கனும், அப்புறமா அவர் பணக்காரர் கெட்டப் காட்டி இருந்தா பார்க்க நல்லாருக்கும்.. ஆனா ஓப்பனிங்க்லயே அவர் கெட்டப் ஜமீன் தாரர் மாதிரி காட்டிட்டாங்க.


10. தன்னைக்கொலை செய்ய வந்த டினு ஆனந்த்தை ஹீரோ. போலீஸ்ல காட்டிக்குடுக்கவே இல்லை..


11.திரைக்கதைல தொய்வு விழும் இடமே கமல்- கோடீஸ்வரர் சம்பந்தபப்ட்ட காட்சிகள் தான், அதனால கோடீஸ்வரர் மனைவியை கடத்தற மாத்தி எடுத்திருந்தா இன்னும் கிளுகிளுப்பு கூடி இருக்கும்

http://i14.lulzimg.com/i/a45742.jpg




படத்தில் வசனம் இல்லை என்றாலும் சைகை மூலம், ரேடியோ மூலம் காட்சியால் இயக்குநர் உணர வைத்த வசனங்கள் ( விட மாட்டோமில்ல)



1. வேலைக்காரி ஒரு திமுசுக்கட்டை ( திமுக கட்டை என படிச்சுடாதிங்க, வேற ஒரு பிராப்ளம் வந்துடும்).. அவர் குனிஞ்சு கூட்டும்போது ஒரு பெருசு ஜொள் விட்டுட்டே வேடிக்கை பார்க்குது, அப்போ ரேடியோவில் -


பின்னோக்கி செல்லும் இந்தியாவை முன்னோக்கி கொண்டு வர நாம் பாடுபடுவோம்.சமூகத்தில் ஏற்ற இறக்கங்களை சரி செய்து மேடு பள்ளங்கள் இல்லாத சம தளமாய் அனைத்தையும் சரி செய்வோம்


2. இந்தக்கமமல் நல்லாருக்கா?

ம்ஹூம்

 இது?

ம்ஹூம், உவ்வே

 அட போப்பா எதை காட்னாலும் குறையே சொல்லிட்டு..


 ஆஹா.. இது சூப்பர்..



3. ஹீரோயின் - எங்கம்மா , அப்பா எல்லாம் வெளீல போறாங்க வர 2 மணி நேரம் ஆகும், நாம மீட் பண்ணலாமா?.


எங்கே?

 கோயில்ல

ம், ஓக்கே



4. உங்கம்மா என்ன பண்றாங்க?

 ஹவுஸ் ஒயிஃப்

 அப்பா?

 மேஜிக் மேன்.. சரி உங்கம்மா?


 அவங்க மேலே போய் இருக்காங்க..

 மொட்டை மாடிக்கா?

 அடங்கோ, அவங்க இறந்துட்டாங்க..

 அப்பா?

 போய்ட்டாரு


 யூ மீன், அம்மா மாதிரியே அவரும்  செத்துட்டாரா?


 ம்ஹூம், எங்களை எல்லாம் விட்டுட்டு வேற ஒரு பொண்ணை கூட்டிட்டு ஓடிப்போய்ட்டார்.


 ஓ! சாரி..

 இட்ஸ் ஓக்கே./.


4. ஹீரோ -  உங்க ஃபேஸ் செமயா இருக்குங்க..

 ஹீரோயின் - உங்க கார் கூட நல்லா இருக்கு ( ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் வித்தியாசம் பாருங்க. ஹீரோ முகத்தை பார்த்து ரசிக்கறப்ப ஹீரோயின் காரை ரசிக்குறா..)


அய்யோ, அது என் காரு இல்லைங்க, சும்மா நிக்கறேன்.. பக்கத்துல


http://shotpix.com/images/97375489296903738286.png



சி.பி கமெண்ட் - சமீபத்தில் கலைஞர் டி வியில் படம் போட்டாங்க பார்த்தேன் (14.7.2012  மதியம்  1.30 மணிக்கு ) சான்ஸ் கிடச்சா டோண்ட் மிஸ்.. நல்ல படம்.. பார்க்க வெண்டிய படம். டைட்டிலுக்கான விளக்கம், ஹீரோ தங்கும், ஆள் மாறாட்டம் செய்யும் ஹோட்டல் பெயர் புஷ்பக்.இந்தப்படத்திற்கு நான் பரிந்துரைக்கும் அல்லது தேர்வு செய்யும் டைட்டில் - ஐஸ் கத்தி
National Film Award
  • Best Popular Film Providing Wholesome Entertainment


Actor/Actress Character
Kamal Haasan Unemployed youth
Amala Magician's daughter
Tinu Anand Killer
P. L. Narayana Beggar
Farida Jalal Magician's wife
Sameer Khakhar The millionaire
Ramya Krishnan Millionaire's wife
Loknath Hotel owner
K. S. Ramesh Magician
Prathap K. Pothan The lover




Official DVD cover
Directed by Singeetham Srinivasa Rao
Produced by Shringar Nagaraj
Written by Singeetham Srinivasa Rao
Starring Kamal Haasan
Amala

Tinu Anand

Farida Jalal

P. L. Narayana

K.S Ramesh
Pratap Pote
Loknath
Music by Vaidhyanathan
Release date(s) September 10, 1987
Running time 131 min
Language Silent Film