Showing posts with label மலையாளம். Show all posts
Showing posts with label மலையாளம். Show all posts

Thursday, December 26, 2013

DRISHYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் -கலக்கல் க்ரைம் த்ரில்லர்)

 நாலாம் கிளாஸ் வரை மட்டும் படிச்ச , செலவு பண்ண கணக்குப் பார்க்கும் நடுத்தரவர்க்க சினிமா ரசிகன் தான் படத்தோட ஹீரோ . அவரோட சம்சாரம் பத்தாங்கிளாஸ் வரை படிச்ச அதே மிடில் கிளாஸ்.அவங்களுக்கு  2 பொண்ணுங்க.பர்ச்சேஸ்க்கு ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் கூப்பிட்டாக் கூட ஹீரோ பம்முறாரு. செலவு ஆகிடுமோன்னு.

இது மோகன் லால் நடிச்ச மலையாளப்படமா? வி சேகர்  இயக்கிய வரவு எட்டணா, செலவு பத்தணா வின் உல்டா ரீ மேக்கா? என யோசிச்சுட்டு இருக்கும்போது கதை அப்டியே வழக்கு எண் 18/9 க்கு மாறுது .

ஹீரோவோட முதபொண்ணு காலேஜ் டூர் போன இடத்துல  பாத்ரூம் ல குளிக்குது . அப்போ ஒரு வீணாப்போனவன் செல் ஃபோன் ல படம் எடுத்து வெச்சு  கில்மாக்கு ஓக்கே சொல்லலைன்னா இண்ட்டர் நெட்ல அந்த  ஃபோட்டோவை அப்லோடிடுவேன் அப்டினு  மிரட்டறான் .வீட்டுக்கே நைட் வந்துடறான்.பொண்ணு அவன் மண்டைல இரும்புக்கம்பியால  ஒரே போடு ஆள் க்ளோஸ் .

அந்தப்பையன் அல்ப சொல்பமானவன் இல்லை. போலீஸ் கமிஷன்ர் பையன் . டெட்பாடியை  வீட்லயே புதைச்சுட்டு .அவன் வந்த காரை ஒரு ஓடை;ல தள்ளி விட்டு கொலையை மறைக்கறாங்க . 


போலீஸ் விசாரணை ல இருந்து தப்பிக்க  ஹீரோ போடும் அபாரமான திட்டங்களும் ., போலீசின் விசாரணை நெருக்கடிகளும் தான் பிரமாதமான மிச்ச மீதி த் திரைக்கதை  



Jeethu Joseph  தான் படத்தோட திரைக்கதை , இயக்கம் எல்லாம் . இவர்தான்  படத்துக்கு  பக்க பலம். அட்டகாசமான  திரைக்கதை .கடந்த 10 வருடங்களில் வந்த முக்கியமான க்ரைம் த்ரில்லர்களைப் பட்டியல் இட்டால் இது  முதல் இடத்தைப்பெறும் , சபாஷ் இயக்குநர் .( டைட்டிலில்  அவர் பேர்போடும்போதும் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டின் போதும்  அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது) 


முந்தையபடமான   கீதாஞ்சலி(மணிச்சித்திர தாழ் -பாகம் 2 )  ஆல்ரெடி வந்த சாரு லதாவின்  உல்டா  ரீ மேக்  என்பதால் பெரியவெற்றியைப்பெறாத லாலேட்டன் எனும் மோகன் லாலுக்கு  பூஸ்ட்  கொடுக்கும் படம் . அவரது அடக்கி வாசிக்கும் இயல்பான நடிப்பு அருமை . ஓப்பனிங்க்சாங்க், பஞ்ச் டயலாக் , ஹீரோ இண்ட்ரோ பில்டப் என எதுவும்  இல்லாமல் சர்வசாதாரண மாக வந்து  பட்டையைக்கிளப்புகிறார் . மீனா விடம் காதல் காட்சிகளில் லந்து  செய்வது  , போலீஸ் ஸ்டேஷனில்   அடிவாங்குவது  என பல காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார் 


 ஹீரோயின் மீனா.சுறா மீன்மாதிரி ஆகிட்டார் . உடம்பைக்குறைத்தால் தேவலை . இவருக்குப்பெரிதாக வாய்ப்பில்லை . இவங்களின்  2 மகள்களும்  கொடுத்த  வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்

 லேடி போலீஸ் கமிஷனராக வரும் வில்லனின் அம்மா கேரக்டரில்  நடித்திருப்பவரின்  தெனாவெட்டான நடிப்பு  கலக்கல் . விஜய சாந்தியை நினைவுபடுத்துது




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 



1 இறந்த  வில்லனின்  செல்  ஃபோன்  சிம்மை  கழட்டி   வேறு ஒரு   ஃபோனில்  வைத்து   சைலண்ட் மோடில் போட்டு   அதை  வடக்கே செல்லும்  ஒரு  வேனில் அனுப்பி  வில்லன்  வேற  ஏரியாவில் இருக்கான் என   ட்விஸ்ட்   செய்யும் ஐடியா கலக்கல் 
2 டைட்டிலில்  வரும் சப்டைட்டிலான  VISUALS  CAN BE  DECEIVING  என்பதை நியாயப்படுத்த   இயக்குநர் மேற்கொண்ட  முயற்சிகள்  குட்


3 கொலை நடந்த அன்று ஹீரோ  ஃபேமிலியோடு   டூர் போய்ட்டாங்க என   போலீசை  நம்ப வைக்க   ஹீரோ   எடுக்கும் முயற்சி , போலியான ஆதாரங்கள்  எல்லாமே  அபாரம் 


4 லேடி  போலீஸ் கமிஷனர்  வரும்  ஒவ்வொரு காட்சியும்  விசில் அடிக்க வைக்கும்  நடிப்பு .


5  எல்லாவற்றுக்கும்  சிகரம்  வெச்சது  போல்  வீட்டில் புதைத்த டெட் பாடி  எப்படிகாணாமல்   போச்சு  என்பதற்கு க்ளைமாக்ஸில் வைத்த ட்விஸ்ட்  அபாரம் 


திரைக்கதையில்   சில ஆலோசனைகள், சில  சுட்டிக்காட்டல்கள்



1   பொதுவா இந்த மாதிரி   மிரட்டறவங்க பொண்ணு   வீட்டுக்கு போகமாட்டாங்க. தன்னோட இடத்துக்குதான் வரச்சொல்வாங்க. அதுதான் பாதுகாப்பு. பின் எப்படி வில்லன்  பொண்ணோடவீட்டுக்கு தைரியமா  போறான்?அதுவும்  அது ஒரு  கிராமம்,மிட் நைட் டைம்



2  முதல்ல பொண்ணை  கில்மாக்கு கூப்பிடும் வில்லன் அவ  ஓக்கே   சொல்லலைன்னதும் அவங்கம்மாவை(மீனாவை )  கூப்பிடறான் . பொண்ணு   முன்னாலயே அம்மாவை   கூப்பிட்டா யாராவது சம்மதிப்பாங்களா? 


3  அந்தப்பொண்ணை  பின்னாலவெச்சுக்கிட்டு   வில்லன்  மீனா  கிட்டே   வரம்பு மீற நெருங்கும்போது    பொண்ணு பின்னால   இருந்து தாக்கும்னு  யூகிக்க முடியாதா?அவளை கட்டிப்போட்டுட்டுதானே    இவன் அட்டெம்ப்ட்   ரேப்ல இறங்கி  இருக்கனும் ? 

4  வீடியோ   எடுத்த   கில்மா  சீனை ஒரு காப்பி எடுத்து  வெச்சுக்கிட்டு தானே பொதுவா  வில்லன் க மிரட்டுவாங்க . சிஸ்டத்துல   ஸ்டோர் பண்ணாம   ஒரே ஒரு ஒரிஜினல் வெச்சுஅதையும்   அம்போன்னு  தொலைக்க  அவன் என்ன லூசா? என்  கிட்டே இன்னொருகாப்பி  இருக்கு . என்னைத்தாக்கி  இதை நீங்க  எடுத்துக்கிட்டாலும்  நான்   குறிப்பிட்ட   டைம்க்கு என்  இடத்துக்குப்போகலைன்னாலும்  அந்த  இன்னொரு காப்பியை என்நண்பன்   ரிலீஸ் பண்ணிடுவான் அப்டினு  மிரட்டி  இருக்கலாமே?


5.கற்புக்கு பங்கம் வராம  இருக்க   ஒரு பெண்  தன்னை ரேப் பண்ண வந்தவனை தாக்கலாம்னுசட்டத்துல சொல்லுது . எதிர்பாராதவிதமான  விபத்து கேட்டகிரில தான் இது வரும்.அதிகபட்சம்   2 வருசம் தான் தண்டனைகிடைக்கும் . ஏன் அவ்ளவ் ரிஸ்க் எடுக்கறாங்க ?


6   கிராமத்தில்  ஓடைக்குள்   மூழ்கிய வேனை   நீச்சலடிக்கும் இளைஞர்கள் கண்டு   பிடிக்கவாய்ப்பு இல்லை .அதுவும்   உடனே கண்டு பிடிப்பது    நம்பும்படி  இல்லை (  ஏன்னா   கிணறு என்றால்   மேலே இருந்து குதிக்கும்போது 10 அடி ஆழம் வரை செல்லும் வாய்ப்பு  உண்டு. ஓடை என்பதால்   உள் நீச்சல் அடிச்சாலும்  அதிக  பட்சம் 5 அடி வரை தான்  போவாங்க. 20 அடி ஆழம் வரை தரை  வரை  போக  தேவையே இல்லையே? 


7  எல்லா சம்பவங்களும்  26  நாட்களுக்குள் நடப்பதா  ஒரு இடத்தில்    வசனம் வருது.  கொலை நடப்பதற்கு   இரு நாள்  முன்பு   போலீஸ் ஸ்டேஷன்   இங்கே  புதுசா கட்டப்போறாங்க  என ஒருடயலாக் வருது .   26  நாட்களில்   எந்த   ஊரில்  ஒரு  போலீஸ் ஸ்டேஷன்   கட்டி  இருக்காங்க?மினிமம்  6 மாசமாகுமே? (க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட்க்கு இந்த   ஸ்டேஷன்   ஒரு முக்கிய துருப்புச்சீட்டு)

police officer Aasha

நச்  வசனங்கள்


1.  என்னங்க? ஷாப்பிங்க் என்னாச்சு ?  இந்த  டைம் டிரஸ்  வாங்கித் தரலைன்னா பாருங்க , டிரஸ்   இல்லாம  எதுவும் நடக்காது 



ஏன்நடக்காது ? அதுதான் சவுகர்யமும்  கூட , ஹி ஹி 




2  அப்பா , ஒரு ஆடி கார் வாங்கனும் 


 என்ன ரேட்  இருக்கும் ?


 10 லட்சம் 


 அதை என்ன தங்கத்துலயா  செஞ்சிருக்கப்போறாங்க ?




3  ஏங்க, குழந்தைங்க   இருக்கும்போது  டபுள்  மீனிங்க் ல பேசாதீங்க


 புரியாது  விடு  அவங்க வயசுல  நான் இருந்தப்ப  எனக்கு எதுவும்  புரியலை , அவங்களுக்கு மட்டும் எப்டி புரியும் ?


 ம்க்கும், இப்போமட்டும்  உங்களுக்கு எல்லாம் புரிஞ்சுடுதா? 


4 பொண்ணுங்க   கிட்டே  உள்ள   ஒரு கெட்ட பழக்கம் எங்கே  போனாலும் விதம்விதமா பாத்திரங்கள் வாங்குவாங்க . குக்கர்லயே 2 லிட்டர் குக்கர் , 3 லிட்டர் குக்கர் , 5 லிட்டர் குக்கர் ,னு வாங்கி அடுக்கிக்குவாங்க 



5 அப்பாக்கு   நீசொன்னது   புரியல

 அம்மாக்கு?


 அப்பாக்கே புரியலை , அம்மாவுக்குமட்டும்? 




6 ஃபோட்டோவில்   இருக்கும் மஞ்சள் மாருதி வேனை நீ பாத்தியா?



 பார்த்தேன் , ஆனா அந்த வேனான்னு சொல்ல முடியாது 



7  எல்லாக்குடும்பங்களிலும்  மத்தவங்களுக்குத்தெரியாத  சில  விசயங்கள் இருந்தே  தீரும் 



8 நமக்குப்பிரியப்பட்டதெல்லாம் நமக்கு  வேணும்னு   ஆசைப்படறதுதப்பு 

 



சி பி கமெண்ட் .  க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள்   அவசியம் பார்க்க வேண்டிய படம் . டோண்ட்மிஸ் இட் . லேடீசும் பார்க்கலாம் . கண்ணியமான் மேக்கிங்க். 


ரேட்டிங்க்  = 3.25  /5 


தியேட்டர்  மேட்டர் - கேரளா - திருவனந்த புரம்  ரயில்  நிலையம் எதிரேஉள்ள ஸ்ரீ  குமார் தியேட்டர்-ல்படம் பார்த்தேன் . சுமாரான தியேட்டர் .  சென்ட்டரான
இடத்தில்  ஏன் இப்டி சாதா  தியேட்டர்  இருக்கோ ? ஃபேமிலிஆடியன்ஸ்தான்   அதிகம்  . பால் கனி 83  ரூபா


Monday, December 10, 2012

HIT LIST -சினிமா விமர்சனம்

http://www.kerals.com/kerala/wp-content/uploads/2012/09/The-Hit-List-Malayalam-Movie-Stills-1.jpgபோலீஸ் ஆஃபீசர் பொண்ணுன்னு தெரியாம 4 ரவுடிங்க அவளை ரேப் பண்ணிடறாங்க . அவர் என்கவுண்ட்டர்ல 3 பேரை கொலை பண்ணிடறாரு.4 வது ஆள் ஓவர் நக்கலாப்பேச  அவனைக்கொலை பண்ணாம “பீஸ்” பிடுங்கி அனுப்பிடறாரு. அவன் செம காண்ட் ஆகி சீரியல் கில்லரா மாறி போலீஸ் ஆஃபீசரா போட்டுத்தள்ளறான். அவனை எப்படி ஹீரோ கம் போலீஸ் ஆஃபீசர் பிடிக்கறார் என்பதே கதை .


தவமின்றிக்கிடைத்த வரமே சூப்பர் ஹிட் மெலோடி தந்த அன்பு பட ஹீரோ பாலா தான் இதுலயும் ஹீரோ, இயக்கம், தயாரிப்பு  எல்லாம்.பீர் சாப்பிட்டு  ஓவரா வீங்குன முகம். காட்டான் மாதிரி இருக்காரு. அதனால போலீஸ் கெட்டப் நல்லா பொருந்தி இருக்கு. பாவம் நடிப்புக்குத்தான் கஷ்டப்படுறாரு . 


மனைவியா காதல் சந்தியா , 13 நிமிஷம் வர்றார். ஒரு பாட்டு சீன்ல  லோ கட் ஜாக்கெட்ல ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றார். அது போதும்..இன்னொரு ஹீரோயின் இருக்காங்க. புதுமுகம் போல. நல்லா தான் இருக்கு. தேறிடும் .


வில்லன் நடிப்பு டாப் கிளாஸ். படம் பூரா அவர் ராஜ்யம்தான். அபார்ட்மென்ட் வாட்ச்மேனா அல்லது செக்யூரிட்டியா வரும் சசி கலிங்கப்பாவும் ஓக்கே


http://www.top10cinema.com/dataimages/17896/30-11-2012-17896-1-1.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. சமுத்ரக்கனியை, நரேனை தலா 3 நிமிஷம் வர்ற காட்சிக்காக என்னமோ அவங்க தான் மெயின் ரோலே பண்ணின மாதிரி போஸ்டர்களில் , தியேட்டர் ஸ்டில்களில் , விளம்பரங்களில் மொள்ள மாரித்தனம் செய்தது .இது ஒரு மலையாளப்படம் என்ற வாசனையே தெரியாமல் பார்த்துக்கொண்டது 



2. ஹீரோ சாட்சியான வாட்ச்மேனை  கிளப் கூட்டிட்டுப்போய் சரக்கு அடிச்சுட்டு வாட்ச்மேனை பில் கட்டச்சொல்லும் எகத்தாளமான சீன்



3. தகதீனா தின்னா அப்டினு ஒரு குத்தாட்ட நைட் கிளப் பாட்டு செம கிக். 


4. வேட்டையாடு விளையாடு போலவே வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் குடுத்தது .. ஏன்னா ஹீரோவே தயாரிப்பாளரா இருந்தும் தங்கர் பச்சான் மாதிரி தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தாம  வில்லன் ரோலை கெத்தா காட்டினது



http://moviegalleri.net/wp-content/gallery/hit-list-movie-audio-launch/hit_list_movie_audio_launch_photos_stills_5a3f56d.jpg




மனம் கவர்ந்த வசனங்கள்



1.  எவன் கிட்டே மோதறோம்னு தெரிஞ்சுக்கிட்டு மோதுங்க . இப்படி ஆள் தெரியாம மோதுனா அட்ரஸ் இல்லாம போய்டுவீங்க ( நோ டவுட் , பஞ்ச் டயலாக்கேதான் ) 



2. பணம் கொடுக்கற மூஞ்சி எனக்குத்தேவை இல்லை. அது எவனா இருந்தா எனக்கென்ன? பணம் தான் தேவை 



3.  எல்லார் வாழ்க்கையிலும் நாம விரும்பும் சிலரும், நம்மை விரும்பும் சிலரும் இருப்பாங்க.. அவங்களை ஒரு நாள் நாம இழக்கத்தான் நேரிடும் 



4. நான் தண்ணி அடிக்கறது  எல்லாத்தையும் மறக்க , நீங்க தண்ணி அடிக்கறது  எதையும் மறக்காம இருக்க 




5. நஷ்டப்பரிகாரத்தை குடுத்துட்டாலும் நஷ்டம் ஆனது ஆனதுதானே? 



6. நீ என் எதிர்காலத்தைப்பத்தி கேட்டுட்டு இருக்கே.. ஆனா நான் இன்னும் கடந்த காலத்துல வாழ்ந்துட்டு இருக்கேன் 


7. உன் வாழ்க்கைல நீ கடைசியாப்பார்க்கப்போகும் முகம் என முகம் தான் ( ஹீரோ வில்லன் கிட்டே சொல்லும் பஞ்ச் )



http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2012/11/hitlist-movie-stills-32-300x200.jpg



 இயக்குநரிடம் ஏகப்பட்ட கேள்விகள் , லாஜிக் மிஸ்டேக்ஸ் இன்ஃபினிட்டிஸ்




1. ஹீரோ மனைவி இறந்த துக்கத்துல 2 வருஷமா இருக்கார் ஓக்கே, சஸ்பென்ஷன் முடிஞ்சதும்  டியூட்டில ஜாயின் பண்ணும்போது நீட்டா ஷேவ் பண்ணிட்டு ஜம்முனு பொக வேணாம்? 2 வருஷ தாடியோட  பஞ்சப்பரதேசி மாதிரி ( மன்னிக்க - இயக்குநர் பாலா, அதர்வா)  படம் முழுக்க தேவதாஸ் மாதிரி வர்றார்.  சகிக்கலை.. ஆளைப்பார்த்தா நமக்கு சுறு சுறுப்பு வரனும். தூக்கம் தான் வருது 




2. சைடு வில்லன் ஹீரோயினை ரேப் பண்ணனும்னு முடிவு பண்ணீட்டா பண்ணிட வேண்டியதுதானே? கேனயன் போல 20 அடியாளுங்க கூட போய் அவ கிட்டே “ நான் நினைச்சா இப்பவே உன்னை ரேப் பண்ண முடியும், ஆனா பண்ண மாட்டேன், 7 நாள் கழிச்சுத்தான் பண்ணுவேன்னு கெடு குடுத்துட்டு வர்றானே? அது என்ன கோயில் கும்பாபிஷேகமா? நல்ல நாள் பார்த்து பண்ண? ஒன்றே செய் , நன்றே செய் , அதுவும் இன்றே செய்னு பெரியவங்க  சொல்லி இருக்காங்க இல்லை? ராஸ்கல்ஸ்.. 



3. ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர், அவரைத்தவிர மற்ற எல்லாரும் க்ளோஸ் கட்டிங்க் பண்ணி இருக்காங்க. அவர் மட்டும் ஃபங்க் விட்டிருக்கார் . கேட்க ஆள் இல்லை . அவர் தானே தயாரிப்பும்? 



4. முதல் கொலை நடந்தப்ப அந்த போலீஸ் ஆஃபீசர் சட்டை பூரா ரத்தம் , அப்புறம்  பொலீஸ் வந்தப்ப ஒரே ஒரு இடத்துல மட்டும் ரத்தம் 



5. ஹீரோ ஹையர் ஆஃபீசர் அவரே ஒரு ரவுடியை அடிச்சு தோள்ல வேதாளம் தூக்கும் விக்ரமாதித்தன் மாதிரி போறார். அவருக்குப்பின்னால் போகும் ரியாஸ்கான் அவருக்கு கீழே வேலை சேயும் ஆஃபீசர் சம்சாரம் கூட செல் ஃபோன்ல பேசிட்டு வர்றார் ஜாலியா... எந்த ஆஃபீசர் சும்மா இருப்பார்? 


6. அபார்ட்மெண்ட்ல 67  குடி இருப்பு இருக்கு. எல்லா வீட்டு டூப்ளிகேட் சாவியும் எங்காவது செக்யூரிட்டி கிட்டே இருக்குமா? தேவைன்னா  போய் வாங்கிட்டு வருவான். சாவி ஓனர் கிட்டேதான் இருக்கும்


7 . கதைப்படி அபார்ட்மென்ட் வாட்ச்மேன்  வீட்ல ஆள் இல்லாதப்போ ஒவ்வொரு வீடா திறந்து டேபிள்ல இருக்கும் பணத்தை 1000 , அல்லது 2000 அப்டி அடிச்சுட்டு இருக்கார். அந்த கணக்குப்படி  அவர் சராசரி வார வருமானம் மினிமம் 67,000 ரூபா. ஆனா அவர் ரிஸ்க் எடுத்து கொலையாளியை வேவு பார்த்து போலீஸ்ல தகவல் சொல்ல கேட்கும் பணம் ஜஸ்ட் ரூ 50,000 . அதுக்கு அவர் அபார்ட்மெண்ட்லயே திருடிக்கலாமே? இன்னும் அதிகப்ப்ணம் கேட்கற மாதிரி சீன் வெச்சிருக்கலாம் 



8.  படத்துல கொலையாளியை வேவு பார்ப்பது , ஆதாரங்கள் சேக்ரிப்பது எல்லாமே அந்த வாட்ச்மேன் தான், 2 ஹீரோயின்களையும் கரெக்ட் பண்றது தவிர ஹீரோ என்ன தான் செய்யறார்?



http://i.ytimg.com/vi/gEF1Tnh4dnI/mqdefault.jpg



9. ஹீரோ கொலையாளியை அவன் வீட்ல சந்திக்கும்போது “ சர்ச் வாரண்ட் இருக்கா?ன்னு கேட்கும்போது ஹீரோ பம்மறார். வீட்ல அவர் எதிர்பார்த்த ஆதாரம் இல்லைன்னதும் ஏன் ரிட்டர்ன் ஆகறார்? வாட்ச்மேன் சாட்சி இருக்கு. நீ கன் வெச்சிருந்தியே எங்கே? என அப்பவே 2 தட்டு தட்டலாமே?  ஏன் பம்முறாரு? 



10. ஒரு சீன்ல மழை வந்துட்டு இருக்கு , ஹீரோ ஜன்னல் ஓரமா உக்காந்து லேப்டாப்ல என்னமோ பண்ணிட்டு இருக்காரு . மழை சாரல் அடிச்சு  லேப்டாப் நனையுது , அவர் கண்டுக்கவே இல்லை.. 


11. ஹீரோயின் ஏன் கேன்ம் மாதிரி ஒயிட் & ஒயிட் டிர்ஸ் போட்டுக்கிட்டு துப்பட்டா போடாம மழைல நனைஞ்சு ஹீரோ வீட்டு வாசல்ல நின்னு குற்ற வாளியை சீக்கிரம் பிடிங்கன்னு சொல்லிட்டு போகுது.? அதை ஃபோன்லயே சொல்லி இருக்கலாமே? 


12. டம்மி வில்லன் படம் போட்ட 3 வது ரீல்லயே ஹீரோயினை ரேப் பண்ணப்போறதா மிரட்டிடறான். ஹீரோயின் ஹீரோ கிட்டே அதை ஏன் முதல்லயே சொல்லலை? படம் போட்டு `12 வது ரீல்ல போனா போகுது , பெட்ரோல் விலை 2 ரூபா ஏறி இருக்கு என்பது மாதிரி அசால்ட்டா சொல்றாரே? 



13. ஹீரோ ஹீரோயின் கிட்டே உன் பேரு என்னன்னு கூட எனக்குத்தெரியாதுங்கறார். ஆனா அந்த சீனுக்கு முன்னால ஹீரோயின் ஹீரோவுக்கு எஸ் எம் எஸ் அனுப்புது. இவர் கூப்பிட்டு கால் பண்றாரு. அதுல ஹீரோயின் பேர் இருக்கு 


14. படத்தோட மெயின் கதை என்ன? க்ரைம் த்ரில்லர், சீரியல் கில்லர். அதை விறு விறுப்பா சொல்ல சான்ஸ் இருந்தும்  ஹீரோவோட அப்பாவை இழந்து ஹீரோ படும் சோகம், மனைவியை இழந்து படும் சோகம், ஹீரோயின் அண்ணன் இழந்து படும் சோகம் இத்தனை செண்ட்டிமெண்ட் லொள்ஸ் எதுக்கு? படத்துக்கு பயங்கர ஸ்பீடு பிரேக்கர்ஸ் 


15.  ஹீரோயின் லூஸ் மாதிரி “ போராட்டத்துல என் உயிரையும் தரத்தயார்”  அப்டிங்கறார். அவர் என்ன சத்தியாகிரகப்போராட்டத்துல கலந்துக்கிட்டாரா? வில்லனைப்பிடிக்க ஏதும் உதவி பண்ணாரா? எதுவும் இல்லை 



16.  ஹீரோ பளார்னு அறை வாங்கிட்டு அடி வாங்கறதுல ஒரு சுகம் இருக்குன்னு லூஸ் மாதிரி  உளர்றாரே ஏன்?



http://www.cinegoer.com/navigation/telugu-cinema/movies/hit-list/hit-list-telugu-movie-stills-1-10.jpg



17.  கைல போட வேண்டிய வளையலை ஹீரோயின் காதுல போட்டிருக்கே ஏன்? அதுதான் ரிங்கா? நல்ல வேளை தொப்புள்ல போடலை 



18. ஊர்ல கல்யாணம் ஆகாத 1008 நல்ல பசங்க இருந்தாலும் இந்த கேன ஹீரோயின்கள் ஏன் ஆல்ரெடி மேரேஜ் ஆன செக்ண்ட்ஸ் ஹீரோ கிட்டே வலியனா போய் விழுதுங்க?

19 .வில்லன் லூஸா? ஹீரோயினை கொல்லனும்னா கொல்லனும், ரேப் பண்ணனும்னா ரேப் பண்ணனும். எதுவுமே பண்ணாம கேனம் மாதிரி ஹீரோவுக்கு ஃபோனைப்போட்டு உன் ஆள் என் கஸ்டடில இன்ன இடத்துல இருக்கா. உனக்கு 10 நிமிஷம் டைம் தர்றேன், கண்டு பிடிச்சா அவ உனக்கு, இல்லைன்னா எனக்கு அப்டீங்கரான். கண்ணா மூச்சி விளையாட்டா நடக்குது? இந்த லட்சனத்துல வில்லன் மைக்ல  அப்பப்ப ரன்னிங்க் கமெண்ட்ரி வேற செம காமெடி


20. கொலை செஞ்சது இவன் தான் என நல்லா தெரியுது, ஆனா எந்த ஆதாரமும் இல்லைன்னு போலீஸ் சொல்லுது. ஆனா வில்லன் கைல எந்த கிளவுசும் போடாமதான் வாட்ச் மேனை கழுத்தை நெரிச்சு கொல்றான். அவன் கைரேகை வாட்ச்மேன் டெட் பாடில இருக்குமே? மேட்ச் பண்ணி பார்க்கலையா?


21 ஹீரோவுகு டிரஸ்ஸிங்க் சென்ஸ்னா என்னன்னே தெரியாதா? போலீஸ் ஆஃபீசர் அதுவும் க்ரைம் பிராஞ்ச் ஆஃபீசர் சிவில் டிரஸ்ல இருக்கும்போது நீட்டா பிளெயின் சர்ட் தான் போடுவாங்க. டுட்டோரியல் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி ஸ்டோன் வாஸ் சர்ட்டும், கேவலமான பேண்ட்டும் போட்டிருக்காரு



22. வில்லனோட எண்ணம் போலீஸ்ங்க எல்லாரையும் போட்டுத்தள்ளுவது என்றால் அவர் ஏன் ராகுல் டிராவிட் மாதிரி கட்டை வெச்சு சிங்கிள் சிங்கிள் ரன்னா எடுக்கறாரு? பல இடங்கள்ல டோட்டல் டேமேஜ் பண்ண வாய்ப்பு இருந்தும் ஒரு ஒரு ஆளா ஏன் கொல்றார்?


23.வில்லன் ஒரு இன்ம்பொட்டண்ட். மேட்டருக்கு லாயக்கில்லை. அப்படிப்பட்டவர் ஒரு காட்சில லேடி எஸ் ஐ கிட்டே “ உன் பொண்ணை என் கிட்டே அனுப்பி வை அல்லது நீ வர்றியா?”ன்னு லூஸ் மாதிரி பேசறாரே? அவர்னாலதான் முடியாதே?


24. ஓப்பனிங்க் பில்டப்ல வில்லன் ஒரு ஹிட் லிஸ்ட் போட்டு 8 பேர் கொல்லப்போறேன், 2 பேரை கொன்னாச்சு, மீதி 6 பேர் பாக்கிங்கறார். ஆனா க்ளைமாக்ஸ்ல ஆல்ரெடி நான் பலரைக்கொன்னிருக்கேன், இன்னும் கொல்வேன் , கணக்கில்லைங்கறார். அப்புறம் அந்த 8 லிஸ்ட் என்ன இதுக்கோசரம் சொன்னார்? என்ன லிங்க் அந்த 8 பேருக்கும் ?


25.வாட்ச்மேனா வர்றவர் 8 வது மாடில இருந்து  2 கிமீ தூரத்துல இருக்கும் நீச்சல் குளத்துல இருக்கும் பெண்கள் குளிக்கும் காட்சியை நோக்கியா 62233 மாடல் ஃபோன்ல வீடியோ எடுக்கறார்.ரூ 9000 மதிப்புள்ள அந்த ஃபோன்ல அவ்வ்ளவு ரேஞ்ச் லாங்க் கவரேஜ் வசதி எப்போ வந்தது?அப்புறம் அவர் க்ளோசப்ல ஒரு லேடி குளிப்பதை 2 அடி தூரத்துல க்ளோசப்ல வாட்ச் பண்றார், அப்போ ஏன் வீடியோ எடுக்கலை?


http://www.cinespot.net/gallery/d/1006285-1/Hit+list+malayalam+movie+_11_.JPG




விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40 ( இது மலையாளப்படம் என்பதால் விமர்சனம் போட மாட்டாங்க )


 குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே




 சி பி  கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். மோசம் இல்லை.. லேடீஸ் நெளிய வைக்கும் சில காட்சிகள் உண்டு. அதனால் பெண்கள் இந்தப்படத்தை தியேட்டரில் பார்ப்பதை தவிர்க்கலாம்




Saturday, August 11, 2012

PUTHIYA MUKHAM -ப்ரியாமணியின் மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFr7q5ClhKpx6Vzlt71bIfQADoeU3_pMPBWEEIG_ORm2xRdujKvO5h8sr67qsfBiu_nXu-wRmh_Zq8kWovmu6dsG7HCtED8DypObqKmQKKkIvxNymDEQrxI9Kmy0CmL3M1MGSnpDEec_Y/s400/3645720933_c10007c0e4.jpg

கேரளாவின்  சூப்பர் ஸ்டார்ல 6 வது இடத்தில் இருக்கும் பிருத்விராஜ் நம்ம ஊர் கனா கண்டேன் ஹீரோ 2009 ல நடிச்சு 130 நாட்கள் ஓடி 15 கோடி கலெக்‌ஷன் ஆகி அந்த ஆண்டின் பெஸ்ட் மசாலா என்ற பட்டம் பெற்ற படம்.. ஆல்ரெடி நம்ம தமிழ்ல ரிலீஸ் ஆன சுரேஷ் மேனன் - ரேவதி நடித்த புதிய முகத்துக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நம்மாளுங்க இதை தமிழ்ல தில் தில் மனதில் அப்டினு டப் பண்ணி இருக்காங்க. 


ஹீரோ பிராமணர்..  ரொம்ப சாஃப்ட் டைப்..  காலேஜ்ல படிச்சுக்கிட்டே பார்ட் டைம்ல மிருதங்கம் கத்துத்தர்றார். இவர் தன் ஃபேமிலி ஃபிரண்ட் வீட்டு பொண்ணை லவ் பண்றார். 2 சைடிலும் ஓக்கே.. 

 வில்லன் அதே காலேஜ்ல  சீனியர் ஸ்டூடண்ட்.. அவங்கப்பா ஊர்ல பெரிய கேடி. அவருக்கு சப்போர்ட்டா ஒரு போலீஸ் ஆபீசர். அந்த ஆபீசருக்கு ஒரு பொண்ணு..  அதுதான் பிரியாமணி.. பிரியாமணியை  வில்லன் லவ்வி 2 குடும்பத்துலயும் பேசி 4 வருஷம் கழிச்சு படிப்பு முடிஞ்ச பின் மேரேஜ்னு பேசியாச்சு.. பிரியாமணிக்கு வில்லன் மேல லவ் எல்லாம் இல்லை, ஆனா வீட்ல ஓக்கே சொன்னதால்  கடனுக்கு ஓக்கே சொல்றார்..


http://cinespot.net/gallery/d/25443-1/Puthiya+Mukham+Malayalam+Movie+_10_.JPG


வில்லன் ஹீரோயினை டேட்டிங்க் கூப்பிடறார்.. அவ போகலை. 4 வருஷம் கழிச்சுத்தான் எல்லாம்னு சொல்லிடறா.. ஆனா ஹீரோ கூட பைக்ல சுத்துறா.. யாராவது இதை ஜீரணீச்சுக்குவாங்களா? அன்னா ஹசாராவே அரசியல்வாதி ஆகற கால கட்டம் இது.. உடனே வில்லன் செம காண்ட் ஆகி அண்ணன் அழகிரி மாதிரி ஆள்படை பலத்தோட ஹீரோவை போட்டு நொங்கு நொங்குனு நொங்கிடறார்.. 


 சேது விக்ரம் மாதிரி ஹீரோ மனநலக்காப்பகத்துல ட்ரீட்மெண்ட் எடுத்து வர்றார்..  ஆல்ரெடி நிச்சயம் செஞ்ச தன் லவ்வர் கம் ஃபேமிலி ஃபிரண்ட் வீட்ல மேரேஜை கேன்சல் பண்ணீடறாங்க.. மாப்ளை மெண்ட்டல்னு அதுக்கு காரணம் சொல்றாங்க.. உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெடு என்ற தமிழனின் உயர்ந்த கொள்கைப்படி ஹீரோ வில்லனுக்கு நிச்சயம் ஆன பிரியாமணியை  வில்லன் கண் முன்னால கையை பிடிச்சு ( நல்ல வேளை கையை பிடிச்சாரு ) சவால் விடறார்.. என் ஆளை மேரேஜ் பண்ணிக்க முடியாதபடி நீ எப்படி பழி வாங்கினியோ அதே மாதிரி உன் ஆளை நீ மேரேஜ் பண்ணிக்க முடியாதபடி நான் பழி வாங்கறேன்.. 



 காலேஜ் மொத்தமும் பார்த்துட்டு இருக்கு.. ஹீரோயின் கெக்கே பிக்கேன்னு சிரிக்குது.. எவனா இருந்தா எனக்கென்ன? எவனாவது தாலி கட்னா சரிங்கறது அவங்க பாலிஸி போல.. 

 இந்த கேவலமான சவால்ல ஹீரோ எப்படி ஜெயிக்கிறார்ங்கறது இந்த டப்பா படத்தோட கதை.. இந்தப்படம் அங்கே ஹிட் ஆகி இருக்குன்னா அங்கே எந்த அளவு கதைப்பஞ்சம் இருந்திருக்கனும்?



http://www.zonkerala.com/movies/gallery/puthiya-mukham/meera-nandan-and-prithviraj-49.jpg

கல்லூரி வாசல் படத்தை லைட்டா உல்டா பண்ணி இருக்காங்க.. அவ்ளவ் தான்..



ஹீரோ பிருத்விராஜ் மிருதங்க சக்ரவர்த்தி சிவாஜி ரேஞ்ச்க்கு பில்டப் கொடுத்திருக்காங்க..  அவர் படத்துல 2 சீன்ல மட்டும் தான் அதை வாசிக்கற மாதிரி பாவ்லா காட்றார்..  மைதா மாவு என்று வில்லன் அவரை கிண்டல் செய்வது சரி  என்றே தோணுது.. கனா கண்டேன் படத்தில்  கலக்கலான வில்லனாக பட்டாசு கிளப்பியவரா இப்படி? சோ சேடு././ இடைவேளை வரும்போது அவர் திடீர் பாட்ஷா ஆகி 45 பேரை ஜஸ்ட் லைக் தட் தூக்கி வீசி துவம்சம் செய்வதெல்லாம் ஓவர்..


ஹீரோயின்  2 பேரு பிரியாமணி மீரா நந்தன்.. பிரியாமணி படம் பூரா பொட்டே வைக்காம என்னமோ இலவசமா ரேஷன் கடைல அரிசி போடறப்போ பணியாள் ஒரு அலட்சியம் காட்டுவானே அப்படி காமா சோமான்னு வந்துட்டுப்போறாங்க.. போனா போகுதுன்னு ஒரு டூயட் இருக்கு.. சொல்லிக்கற மாதிரி ஜொள்ளிக்கற மாதிரியோ எதுவும் இல்லை..


 மீரா நந்தன்  மொத்தமே 13 காட்சிகளில் தான் வர்றார்.. வர்ற சீன்கள் எல்லாம் ஆம்பளையையே  பார்க்காத ஆள் மாதிரி ஹீரோ மேல விழுந்து பாய்கிறார்.. ம்ஹூம்.. கேரக்டரைசேஷன் சரி இல்லை..


அன்பு பட ஹீரோதான் இதுல வில்லன்.. வந்தவரை ஓக்கே..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtqwAElKp0Na5i99FSBsz8FhUFeb7IBK9w_BuqFD_EDNvkffpQDVfi97L1Hb_pvB4R1lUaTR2QT3q6oj6tQA172h5nQP7XV4fhC0Tcv2KpOAxRO6ji6qBo7GW3-rFeuiIrfXjucc8kQTA/s1600/priyamani_hot_saree_stills_pics_01.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1.  உன் தம்பி காலேஜ்ல இருந்த நாளை விட லாக்கப்ல இருந்த நாள் தான் அதிகம்



2. டீக்கடையில் - ஹாய் கேர்ள்ஸ்.. உங்களுக்கு பால் வந்தாச்சா?


 நோ.. நாங்க டீ சொல்லி இருக்கோம்.. ( அடங்கோ)



3. அந்தப்பொண்ணுக்கு நான் தான் லோக்கல் கார்டியன் மாதிரி..



நீ லோக்கல்னு  அவளுக்கு தெரியுமா?



4.  நீங்க மிருதங்கம் வாசிக்கறதை நான் நேர்ல பார்க்கனும்./. ( நல்ல வேளை, ஹீரோ அதுக்கு பதிலுக்கு நீ நாதஸ்வரம் வாசிச்சு நான் பார்க்கனும்னு சொல்லலை.. அடேய் அடேய் )


5. காலேஜ் பொண்ணுங்க எல்லாருக்கும் உங்க மேல தான் கண்ணு.. கண்ணடி பட்டா உடம்பு தாங்காது..



6. இந்த வீட்டுல மேரேஜ் பண்ணிக்கப்போறது யாரு?



எங்க 2 பேருக்கும் ஆகிடுச்சு.. மிச்சம் இருக்கறது எங்க பொண்ணு நீ தான்..


 அப்புறம் ஏன் என்னைக்கேட்காம இந்த முடிவு எடுக்கறீங்க?



7. தோக்கறது சுருண்டு விழ அல்ல, நிமிர்ந்து எழ..


8. நம்ம 2 பேர்ல யாரோ ஒருத்தர் தான் உயிரோட இருப்பாங்க.. அது நிச்சயம் நீயா இருக்காது.. ( பஞ்ச் டயலாக்காம்.. )



9. மண்ணையும், பொண்ணையும் வலுக்கட்டாயமா  வாங்கக்கூடாது. விருப்பப்பட்டு சந்தோஷமா வரனும்../



10. தேவை இல்லாத விஷயங்கள் மனசுக்குள்ளே  கஷ்டப்படுத்தும்.. அதனாலதான் உன் கிட்டே அந்த மேட்டரை நாங்க சொல்லலை..


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/06/Priyamani-Hot-pics-19.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோயின் நாய் சேகரோட பொண்ணு போல.. என் நினைவு உனக்கு எப்போதும் இருக்கட்டும்னு ஹீரோ கையை பிடிச்சு நறுக்னு கடிச்சு வைக்கறா.. நல்ல வேளை கையை கடிக்குது.. அந்த பொண்ணு கேனமா? இல்லை அதி தீவிரக்காதலா? கேரக்டரைசேஷன் சரி இல்லை..  அப்படி அட்டாச்மெண்ட்டா இருக்கற பொண்ணு  திடீர்னு  பெற்றோர் வந்து “ மாப்ளை மனநிலை சரி இல்லை, வேணாம்”னு சொன்னதும் பெருசா ஏதும் எதிர்ப்பு காட்டலையே?



2. இன்னொரு  ஹீரோயின் பிரியாமணி  வீட்ல பார்த்த மாப்ளைக்கு ஓக்கே சொல்லிடுச்சு.. அவன் கூட வெளீல போக மாட்டாளாம்.. ஆனா ஹீரோ பைக்ல உக்காந்து போவாளாம்.. என்ன கேனத்தனமான லாஜிக்? இது?


3. வில்லன் ரவுடித்தனம் பண்றான், அதனால அவனை பிடிக்கலைனு ஹீரோயின் க்ளைமாக்ஸ்க்கு 20 நிமிஷம் முன்னால சொல்லுது.. ஆனா அந்த வில்லன் பண்ற அதே ரவுடித்தனத்தை ஹீரோ பண்றப்ப  ஒண்ணும் சொல்லலை.. என்னய்யா இது?


4. ஹீரோ என்ன தான் பெரிய புடுங்கி ஆக மாறி இருக்கட்டும்.. ஒரு ஃபைட் சீன்ல 7 பேர் வரிசையா வர்றாங்க.. இவர் ஒரே ஒரு ஆள் மேல காலை வெச்சு எத்தறார்,... உடனே 7 பெரும் அந்தரத்துல 12 தடவை சுத்தி விழறாங்க.காமரா நல்லா அதை படம் பிடிச்சுருக்கு.. படு காமெடி சீன் அது..


5. வில்லன் பிரியாமணி பின்னால சுத்துனா அதுல ஒரு நியாயம் இருக்கு.. ஆனா அவன் எப்போ பாரு ஹீரோ போற இடத்துக்கு எல்லாம் போய் ஹீரோவை  ஃபாலோ பண்றான்.. அவன் என்ன ஹோமோவா?



6. ஹீரோயின் படிச்சவ.. வில்லனை பெற்றோர் பார்த்து பேசி முடிக்கும்போதே அவன் ஒரு மொள்ளமாரின்னு தெரியும்.. அப்போ எதுவும் சொல்லாம க்ளைமாக்ஸ் டைம்ல இப்போதான் எனக்கு அவன் வில்லன்னு தெரியும் வேணாம்கறாளே?



7. இந்தக்காலத்துல பட்டா போடாத நிலத்துலயே அவனவன் வேலி கட்டி சொந்தம் கொண்டாடுறான். ஆனா 2 தரப்பு வீட்டிலும் பேசி முடிவான பின்  மாப்ளை கூப்பிட்டு அவன் கூட பொண்ணு போகாம இருக்கறதுக்கு வலுவான காரணம் சொல்லப்படலை... ஆனா ஹீரோ பின்னால கூட்டணீக்கட்சி மாதிரி ஒட்டி உறவாடறார்



சி பி கமெண்ட் - இந்த குப்பை படத்தை யாரும் பார்த்துடாதீங்க.. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் பார்த்தேன்







https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY_TSqDEs6fIyZVWWBe2qx_15Dbx9UYAXx31kfQauFb90-JzfGH6dnxl5ER5-385OUUyhpMoDZU6nuI7t6UvZz-eDcwpRG8cVoc-pVXKPKqBmWPRquBI_PaUz-cGgYJyoh57fmbZwXl0o/s1600/priyamani-latest-spicy-hot-sexy-stills-pictures-photo-gallery-08.jpg
























Tuesday, May 08, 2012

YAKSHIYUM NJANUM -மேக்னாராஜ் -ன் மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzVEOW5enkMWyxqfz4wi4ik3R8ePuz8kS6_TGHj-W1b3gyQtLb4X5I15-wWW7k4n-oF63LMLw5zazX2KWo9mX28mhSvi1HqHXhedFZZJVSN3ris5qnkBHih7MtrLDpa4kI3mnGD8tip2_4/s1600/Yakshiyum-Njanum.jpg 

யக்‌ஷியும் ஞானும்  படம் 2011  ஏப்ரல் 8 ந்தேதி கேரளாவுல ரிலீஸ் ஆச்சு.. மேக்னா ராஜ் நடிச்ச இந்தப்படம் கிட்டத்தட்ட ராம நாராயணன் ஃபார்முலாவு;ல வந்த ஒரு பேய்ப்படம்தான்.. ஆனா இயக்கம் மட்டும் வினயன்.. இதை சத்தம் இல்லாம  2012ல தெலுங்குல லங்கேஸ்வரி என்ர பெயரிலும், தமிழ்ல ஜக்கம்மா என்ர பெயரிலும் ரிலீஸ் பண்ணிட்டாங்க.. 3ம் ஒரே படம் தான்.. மொழி மட்டும் தான் வேற.. இதை ஏன் நான் சொல்றேன்னா நம்ம ஆளுங்க போஸ்டரை பார்த்தோ, மேக்னா ராஜை பார்த்தோ 3 டைம் ஒரே படத்தை பார்த்து ஏமாறக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துல சொல்றேன்.. ஏன்னா 3 பட போஸ்டர் டிசைனும் வேற வேற மாதிரி இருக்கு.. 



ஒரு வனாந்திரம்.. அங்கே ஒரு அல்லக்கை வர்றான்.. இவன் ஒரு அரசியல்வாதியின் எடுபுடி.. யாருமே இல்லாத அந்த காட்டுல மேக்னா ராஜ் ஒரே ஒரு பாவாடை, ஒன்லி ஒன் ஜாக்கெட்டு போட்டுக்கிட்டு குளிக்குது, பாட்டுப்பாடுது, குனியுது, சிரிக்குது.. அந்த 50 மார்க் ஃபிகரை பார்த்து இவன் பல்லைக்காட்டறான்.. பாப்பா கவர்ச்சி காட்டுது..

 இதை இப்படியே 3 ரீல்க்கு இழுத்த பின்னாடி ஃபிளாஸ்பேக்.. 


http://nowrunning.com/content/movie/2011/Lankeswari/stills/Lankeswari10.jpg



அந்த ஊர்ல ஒரு வீணாப்போன நாட்டாமை கம் கிராம தலைவரு.. அங்கே அவர் வெச்சதுதான் சட்டம்.. அவரு பண்ற அராஜகத்தை ஒருத்தன் தட்டி கேட்கறான்.. அவன் தான் ஹீரோ.. அவனுக்கு ஜோடி தான் இந்த மேக்னா ராஜ்.. சுப்ரமிணியம் சாமி மாதிரி அவன் ஓவரா வாய் பேசுனதால ( பொதுவா நியாயமாப்பேசுனாலே ஓவர் வாய்னு சொல்ற தேசம் இது) ஹீரோவை போட்டுத்தள்ளிடறாங்க.. 

 ஹீரோவைப்போட்டுத்தள்ளுன வில்லன்க 3 பேரும் கெக்கே பிக்கெக்கேன்னு சிரிச்சுட்டு இருக்கறப்ப அந்த பேக்கு ஹீரோயின் அங்கே வருது.. விவரமான ஃபிகரா இருந்தா கிராமத்துல ஜனங்க யாரையாவது கூட்டிட்டு வரும்.. தனியே தன்னந்தனியா நான் மாட்ட மாட்ட வந்தேன்னு பாட்டு பாடாத குறையா அந்த பாழடைஞ்ச பங்களாவுக்கு வந்து பாப்பா மாட்டிக்குது.. 

 அந்த பேக்குப்பாப்பாவை விட படு பேக்கா வில்லன்க 3 பேரும் இருக்காங்க.. ஏன்னா யாருமே இல்லாத அந்த பங்களாவுல தனியா வந்து மாட்டுன ஃபிகரை  ரேப் பண்ணாம மர்டர் பண்ணிடறாங்க.. சீன் போச்சேங்கற ஆதங்கத்துல நான் இதை கேட்கலை..  3 மொள்ளமாரிகளும் தண்ணி அடிச்சுட்டு மப்புல தான் இருக்கானுங்க.. ஃபிகர் வேற  சந்தனக்கட்டை மாதிரி இருக்கு.. பாப்பா ஒண்ணும் குணச்சித்திர நடிகையும் கிடையாது.. 20% கவர்ச்சி காட்டுன்னா 60 % கவர்ச்சி காட்டும் மசாலா கஃபே ஓவியா மாதிரி  தாராள மனசுள்ள ஃபிகர் தான் இந்த மேக்னா ராஜ்.. 

 ஆனாலும் டைரக்டர் விபரம் இல்லதவரா இருப்பதாலும், அநியாயத்துக்கு நல்லவரா இருப்பதாலும் ரேப் சீன் இல்லை.. ஒன்லி மர்டர்,... 

 இப்போ அந்த 3 வில்லன்களை மேக்னா ராஜ் பழி வாங்கற துதான் மிச்ச சொச்ச கதை..


படத்தோட முதுகெலும்பே பாப்பா மேக்னா ராஜ் தான்.. பாப்பாவுக்கு காஸ்ட்யூம் ஒரே ஒரு பாவாடை, ஒரு ஜாக்கெட் மட்டும் தான் படம் பூரா சுதந்திரமா திரியுது.. 12 தடவை குனியுது.. 29 தடவை சிரிக்குது.. அவ்ளவ் தான்.. நடிப்பெல்லாம் எவன் பார்த்தான்.. 

சாஜன் மாதவ் தான் அவருக்கு ஜோடி.. ஆக்ரோஷமா அவர் வில்லன்க கிட்டே டயலாக் பேசறப்ப மீசை வெச்ச அப்பாஸ் மாதிரி இருக்கு.. ஜூபின் ராஜ், கேப்டன் ராஜ், திலகன் என வி ஐ பிங்க எல்லாம் இருக்காங்க.. எல்லாம் வேஸ்ட்.. அதுவும் திலகன் பிரமாதமான நடிகர்.. அவருக்கே சான்ஸ் ரொம்ப கம்மிதான்.. 

கிராஃபிக்ஸ் காட்சிகள் மகா மட்டம்.. காமெடி காட்சிகள் படு கேவலம்..  சண்டைக்காட்சிகள் உஷ் அப்பா முடியல ரகம்.. 



http://moviegalleri.net/wp-content/gallery/meghana-raj-hot-wet-in-jakkamma/meghana_raj_hot_wet_pics_stills_jakkamma_0900.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. ரெண்டு லாரிக்கு நடுவே மாட்டுன எலி மாதிரி  அவன் ரெண்டு பொண்டாட்டிங்க கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கறான்.. ஆமா... ஒரு டவுட்.. இவனால அவளுங்களுக்கு என்னா யூஸ்?


பிப்பெடுத்தா சொறிஞ்சு விடுவான்னு நினைக்கறேன்.. மற்றபடி எந்த யூசும் இருக்கற மாதிரி தெரியலை.. 


2. நல்லவன் தான் வாசல்ல உக்காருவான்.. ரவுடிங்க, பேய் எல்லாம் வீட்டுக்குள்ள தான் இருக்கும்.. 


3. டேய்.. நாயே.. சட்டை போடாம எக்சசைஸ் பண்ணாதே.. இப்போ எல்லாம் பேய்ங்களுக்கு உரிச்ச கோழிங்க தான் ரொம்ப பிடிக்குதாம்

4. செஞ்சபாவங்களை மறக்க  காலம் பூரா  குடிச்சுட்டே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்  ( மனசுக்குள்ள கோவை தீபக்னு நினப்பு)

5.  எப்போ பாரு  எரிஞ்சு விழறியே.. நீ என்ன ஜென்மம்?

 புலி ஜென்மம்

6. உனக்குத்தான் ஊருக்கு ஒரு பொம்பள இருக்கே.. எதுக்கு இந்த பங்களாவுல ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருக்கே?


7.  சண்டை போட்டுக்கிட்டோம்னு லவ்வர்ஸ் சொல்றாங்க.. ஆனா எப்போ பாரு சந்தோஷமாவே இருக்காங்களே.. ( நல்லா பாருய்யா.. கட்டிப்பிடிச்சு விளையாடிட்டு இருக்கறதை பார்த்துட்டு சண்டைன்னு முடிவு பண்ணிட்டியோ என்னவோ?


8.. நீங்க எங்களுக்கு தெய்வமா இருக்கீங்க.. 

 அதெல்லாம் எதுக்கு..? நீங்க மனசாட்சியோட இருந்தா போதும்.. 


 9.  என்னப்பா? ஜோலி முடிஞ்சுதா? 

 ( கோழியை பார்த்தாலே ஜோலி முடிஞ்சதா?னு கண்டு பிடிக்க மாட்டீங்களா? )




http://g.ahan.in/malayalam/Meghana%20Raj/Meghna-Raj-hot%20(45).jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அநியாயத்தை தட்டிக்கேட்க புறப்படும் ஹீரோ பார்க்க பரிதாபமா இருக்கார்.. ஒல்லி.. ஆனா வில்லன்க 3 பேரும் கில்லி மாதிரி இருக்காங்க.. எந்த தைரியத்துல அவர் தனியா போனாரு?


2. அதைக்கூட ஏத்துக்கலாம்.. ஹீரோயின் ஏன் லூஸ் மாதிரி தனியா போய் மாட்டிக்கனும்? வில்லன்க பாத பூஜை பண்ணி கும்பிடுவாங்கன்னு நினப்பா?


3. சரி.. ஆனது ஆச்சு.. ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் செத்தாச்சு.. ஆவியான பின் உடனே டக்னு பழி வாங்காம எதுக்கு ஹீரோயின் படம் பூரா அரைகுறையா அலையனும்:? அடிக்கடி குளிக்கனும்? நம்ம டார்கெட் வில்லனை பழி வாங்கறதா? சீன் காட்டறதா?


4.  சந்திரமுகி எஃபக்ட் கொண்டு வர ஏன் அவ்வளவு சிரமப்படறீங்க?

5. அந்த 3 பேரு காமெடிக்காட்சிகள் மகா எரிச்சல்...  ஒரு திகில் படத்துக்கு, பேய்ப்படத்துக்கு இந்த மாதிரி லூஸ் தனமான காமெடிகள் எதுக்கு?

6. பின்னணி இசை மகா மட்டம்.. ஒளிப்பதிவும் சுமார் ரகமே.. 



http://kerala-zone.com/entertainment/actress/malayalam/meghana-raj/meghana-raj-103.jpg


எதிர் பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37 ( விகடன் டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம்.. இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக)

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - டி வில போட்டா மட்டும் பாருங்க.. மேக்னா ராஜ்க்காக பார்க்கற அளவுக்கு புதுசா எதும் இல்லை.. ஆல்ரெடி அவர் பல பழைய படங்கள்ல காட்டுனதுதான்.. ஐ மீன் நடிப்பில் ஹி ஹி ஹி

 ஈரோடு ராயல், அன்னபூரணி என 2 தியேட்டர்ல ஓடுது...,. நான் ராயல்ல பார்த்தேன்


http://cinetara.com/photos/files/2012/2012/03/26/8864/Meghana-Raj-Latest-Hot-Stills_024.jpg
a

diSki -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது http://www.hotlinksin.com
.
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன்  திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>


http://www.lateststills.com/wp-content/uploads/2011/04/Meghna_Raj_photos_8_-300x300.jpg

Friday, October 21, 2011

FOUR FRIENDS - மீரா ஜாஸ்மின் -ன் கண்ணியமான மலையாளப்படம் - சினிமா விமர்சனம்

http://www.mmdbonline.com/photos/Four%20Friends.jpgசாஜி சுரேந்திரன் கேரளாவின் சூப்பர் ஹிட் ஹாட்ரிக் ஹிட் டைரக்டர்...அவரது முதல் படம் ”இவர் விவாஹித்தவரையில்" ,  அவரது 2வது படம் ” ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ் “  அவரது 3 வது படம் தான் இது.. கேரளாவுல போன வருஷமே ரிலீஸ் ஆகி  சுமாரா ஓடுச்சு.. இப்போ தமிழ்ல அன்புள்ள கமல் அப்டிங்கற டைட்டில்ல வந்திருக்கு. கமல் ஒரே ஒரு சீன்லதான்  வர்றாரு, ஆனா போஸ்டர்ல அவர் தான் ஹீரோ என்பது போல் பில்டப்பு...

விமர்சனத்துக்குள்ள போறதுக்கு முன்னே இந்தப்படத்தை ரீமேக் பண்ற ஐடியா யாருக்காவது இருந்தா அவங்களுக்கு ஒரு வார்னிங்க் குடுத்துக்கறேன்.. இது தமிழ்ல ரீமேக்குனா சத்தியமா ஓடாது..  ஏன்னா ஆல்ரெடி பல வருஷங்களுக்கு முன்னால விஜய் காந்த் நடிச்ச தழுவாத கைகள் உட்பட 27 படங்கள் இதே கான்செப்ட்ல வந்துடுச்சு...இங்கே எடுபடாது.. 

படத்தோட கதை என்ன? கோடீஸ்வரர் கம் தொழில் அதிபர் ஜெயராம்,லோக்கல் ரவுடி  ஜெயசூர்யா, போபன் ஒரு இசைக்கலைஞர், மீராஜாஸ்மின் தனது சித்தியால் கொடுமைப்படுத்தப்பட்டு மன நிலை பாதிக்கப்பட்ட (மெண்டல் அல்ல) மன அழுத்தம் கொண்ட பெண்.. வெவ்வேறு பேக் கிரவுண்ட் உள்ள 4 பேரும் ஒரு புள்ளியில் இணையறாங்க.. 4 பேருக்கும் கேன்சர்..( (blood, liver, bone, stomach cancer) ஒரே ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் நடக்குது..


4 பேருக்கும் என்ன என்ன ஆசை இருக்கோ அதை நிறைவேற்ற ஒண்ணா கிளம்பறாங்க ( அப்போத்தானே கதை நகரும்?) ஒருத்தர்க்கு தன் காதலிக்கு கிடார் பரிசாத் தர்னும்னு ஆசை , அதுக்காக மலேசியா போறாங்க,இன்னொருத்தர்க்கு கமல்ஹாசனை நேர்ல பார்க்க ஆசை ( படத்தோட ஸ்டார் வால்யூ ஏத்திக்க).. 4 பேரும் ஜாலியா கிளம்பி போறாங்க.. என்ன நடக்குது? என்பதே திரைக்கதை.. 


ஜெயராம் தான் ஹீரோன்னு சொல்லவும் வேணுமா? பொண்ணுங்க எப்பவும் புத்திசாலிங்க என்பதை மீரா ஜாஸ்மின் கேரக்டர் மூலமா சொல்றார் டைரக்டர்.. அதாவது பாப்பா கோடீஸ்வரரான ஜெயராமை லவ்வுது.. ஏன் அதே ஹாஸ்பிடல்ல இருக்கற ஒரு பரதேசியை லவ்வலை? அட்லீஸ்ட் கூட இருக்கற மற்ற 3 பேரை லவ்வலை?


இடைவேளை கார்டு போடறப்ப கமல் வர்றாரு. தன்னம்பிக்கை வரிகள், தத்துவம் சொல்லிட்டு கிளம்பிடறாரு.

http://searchandhra.com/english/wp-content/uploads/2010/10/Four-Friends-Malayalam-Movie-Photo-Gallery-6.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. முடியைப்பிச்சுடுவேன்.. 

அது வளர்ந்திடும் பல்லைப்பிடுங்கிடுங்க, வளராது.. 

அடப்பாவி, போட்டுக்குடுக்கறியா?

2. என் கிட்டே 30 ஜோக்ஸ் கை வசம் இருக்கு.. எல்லாரையும் சிரிக்க வைக்கப்போறேன்.

எல்லாம் எனக்கு மனப்பாடம். நீ நெம்பரை மட்டும் சொல்லு, நான் நினைவு படுத்திக்கிட்டு சிரிச்சுடறேன்..


3. என் கடைசி நாட்களை நான் கொஞ்சம் எஞ்சாய் பண்ணிக்கறேன்..

அப்டி சொல்லாதே.. இயற்கையை ரசிக்க கிளம்பறேன்னு சொல்லு..


4. உன்னோட சாவு நெருங்கிட்டு இருக்கறதா நினைக்காதே, காப்பாத்த வழி இருக்கு..

என் கிட்டே டாக்டரா நடந்துக்காதே.. ஒரு நண்பனா நடந்துக்கோ..

5.  I AM NOT OBJECT TO ENTERTAIN......

பாப்பாவுக்கு தமிழ் தெரியாது போல... ( எல்லாம் தெரியும், பசங்களூக்கு முன்னால ஃபிலிம் காட்டும்ங்க..)

6.  நான் அவ திமிரை அடக்கறேன்...

லேடி - வாடா.. நான்.. ரெடி.. அடக்கு/... ( அடங்கோ)

7.  பதுங்கி தாக்குற புலி மாதிரி மரணம் நமக்காக காத்திருக்கு

8. நெகடிவ்வை பாசிட்டிவ்வா பார்க்கனும், இனிமே கேன்சர் வியாதி உள்ள எல்லாரையும் குழந்தையா பார்ப்போம் நாம்..

9. சிம்ப்பதி ( இரக்கம்) அவளுக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை ..


http://enchantingkerala.org/gallery/albums/four-friends/four-friends-malayalam-movie-stills%20(13).jpg

10.  மனசுல தைரியம் உள்ளவன் எந்த வியாதி வந்தாலும் ஃபேஸ் பண்ணுவான்..

11. இப்போ எல்லாம் இன்னும் வாழனும்கற ஆசை எனக்கு ரொம்ப வந்திருக்கு..

12. கிளம்பறப்ப தான் பிரிவோட வலி தெரியுது..

13. வெளிநாடு போய் சம்பாதிக்க வேணாம்டா மகனே.. 100 ரூபாய் சம்பாதிச்சாலும் எங்க கூடவே இருடா..

14.  டேய்.. அது ஏசியா இல்லடா.. மலேசியா..

ஓ.. ஏசியாவோட தலைநகரம் மலேசியாவா?

15.  அவங்க எப்படி ரீ ஆக்ட் பண்ணுவாங்கன்னு தெரியல..

அவங்க மட்டும்தான்  ரீ ஆக்ட் பண்ணுவாங்களா?நாங்களும் தான்  ரீ ஆக்ட் பண்ணுவோம்..

16. பாடம் சொல்லிக்குடுத்த ஐடியல் டீச்சர்ஸ், அம்மா, அப்பா இவங்க கால்ல மட்டும் தான் நான் விழுவேன், ஆசீர்வாதம் வாங்குவேன், வேற எவன் கால்லயும் எதுக்காகவும் விழமாட்டேன்.


17. மலையாள நடிகர் சத்யன் இருக்காரே, அவரைப்பற்றி ஒரு தகவல்.. அவர் அடிக்கடி செல்ஃப் டிரைவ் பண்ணி ஹாஸ்பிடல் போய் பிளட் ட்ரான்ஸ்ப்ளேண்ட்டேஷன் பண்ணிட்டு அவரே ரிட்டர்ன் வண்டி ஓட்டிட்டு ஷூட்டிங்க் ஸ்பாட் வருவாராம்.. எந்த அளவு மனோ தைரியம் வேணும் இதுக்கு..


18. இந்த உலகம் ஒன்லி ஃபார் மில்லியனர்ஸ்.....

19. நீங்க இருக்கற இடம் தேடி வர்றவங்க தான்  உண்மையான ஃபிரண்ட்ஸ்..

20. வினிதாவுக்கு காலேஜ் லீவ்.. இனி மண்டே (MONDAY) தான் அவளை பார்க்க முடியுமாம்..

வினிதா மண்டையை பார்த்து என்ன யூஸ்? எல்லாத்தையும் பார்ப்போம்.. ( அடப்பாவி!!)

21. அவனுக்கு வந்திருக்கற கேன்சர் நோய்க்கு மருந்து இருக்கு.. உனக்கு வந்திருக்கற இந்த சேஃப்டி லைஃப் போதும், லவ் வேணாம்கற சுய நல நோய்க்கு மருந்தே இல்லை..

22. கமல் - எனக்கு நெருக்கமான பல ஃபிரண்ட்ஸ் நோயால இறந்திருக்காங்க.. ஸ்ரீவித்யா கூட கடுமையா நோய் கூட போராடி இறந்தாங்க.. என் கவுதமிக்கு கூட புற்று நோய் இருக்கு.. ( இது புது தகவல்)


http://1movieoneday.com/wp-content/uploads/2009/06/ever-vivahitharayal-malayalam-movie-stills-gallery-_12_.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கமர்ஷியல் சக்சஸ்க்கு சான்ஸ் இல்லை என தெரிந்தும் துணிச்சலாக இந்த கதை கருவை எடுத்துக்கொண்டது,,

2. கமலை கரெக்ட்டாக யூஸ் பண்ணிகொண்டது..

3. மீரா ஜாஸ்மின் - ஜெயராம் காதலை கண்ணியமாக காட்டியது..

4. இறக்கப்போகும் தருவாயில் உள்ளவர்களை ஆறுதல்படுத்தும் விதம் காட்சிகளை அமைத்து, தன்னம்பிக்கை டானிக் வசனங்கள் சேர்த்தது

http://mimg.sulekha.com/malayalam/four-friends/stills/four-friends-stills034.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள், ஆலோசனைகள்

1.கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே ஹாஸ்பிடலில் என காட்டும்போதே அனைவருக்கும் இந்த ஹாஸ்பிடலில் இருப்பவர்கள் கேன்சர் பேஷண்ட்ஸ் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல ,நயன் தாராவின் தெளிவற்ற காதல் போல புரிந்து விடுகிறது.. பிறகு எதற்காக ஒவ்வொருவருக்கும் கேன்சர் என்று சொல்லும்போதும் ஒரு அதிர்ச்சி இசையை பின்னணியில் காட்டுவதும், அதை கேட்கும் கேரக்டர்கள் ஜெர்க் ஆவதும்?

2. மீரா ஜாஸ்மின் ஒரு பர்த்டே பார்ட்டியில் கலந்து கொள்கிறார்.. அந்த பர்த்டே பேபி மீரா ஜாஸ்மினுக்கு கேக் ஊட்ட ஓடி வருகிறார்.. அப்போ பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட ஆர்ச் 6 இடங்களை அவர் கடந்து ஸ்லோ மோஷனில் ஓடி வர்றார். பின் கேக் ஊட்டும்போது 2வது ஆர்ச்சில் 2 பேரும்.. எப்படி? கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்?

3. ஜெயராம் ஒரு கோடீஸ்வரர்.. அவர் ஏன் குறிப்பிட்ட 4 பேரை மட்டும் செலக்ட் செய்து டூர் போகனும்? எல்லாரையும் கூட்டி செல்லலாமே?அல்லது அவர்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம் ( பட்ஜெட் எகிறிடுமே..)

4. போபனின் காதலி போபனுக்கு கேன்சர் என்பது தெரிந்ததும் அவனை அவாய்ட் பண்ண மலேசியா போயிடறதா சொல்றார். அப்படி அவாய்டு பண்ணனும்னு நினைக்கறவ எதுக்காக அவளோட பேரண்ட்ஸ்கிட்டே தன் அட்ரஸ் குடுத்து அவன் வந்தா குடுங்கன்னு சொல்லனும்? ரகசியமா எஸ் ஆக வேண்டியதுதானே?

5. போபன் மரணப்படுக்கைல இருக்கறப்ப அவனோட காதலியை கடைசியா ஒரு தடவை பார்க்க ஏன் ஆசைப்படலை?

6. மீரா ஜாஸ்மின் கேரக்டர் படம் பூரா ஒரு சீன்ல கூட பொட்டு வைக்கலை.. ஏன்? அதுக்கான எந்த விளக்கமும் படத்துல இல்லை.. அவர் ஒண்ணும் விதவை கிடையாது..

7. இடைவேளை வரை கேரக்டர் அறிமுகத்துலயே படம் நகருது... ஆனா அதுக்குப்பிறகு திரைக்கதை தடுமாறுது..

8. சாகறாங்கன்னு தெரிஞ்சதும் எல்லாரும் அவங்கவங்க பேரண்ட்ஸ்கூடத்தானே இருக்க ஆசப்படுவாங்க?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_o7hrSF42ZJpMlOKC9eMUnt43cnj1vBWsJVR8zz8XonMr9E_KjPD5vd_-WOraJ16t_OD8CpMN231ziX2Fnd7jWHFpeWXcGm2SqbtgDuT7q9yTLw-BuwrkuylxoCZNBS2zMoa3M7fEqYn_/s640/meera_jasmine_meera_jasmine006.jpg


சி.பி கமெண்ட் - இந்தப்படம் மரண பயம் சம்பந்தப்பட்ட படம் என்பதால் ஆண்கள் அதிகம் ரசிக்க மாட்டார்கள். பொறுமை ரொம்ப அவசியம்..  பெண்களுக்குப்பிடிக்கலாம்..

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் இந்தப்படம் பார்த்தேன்


http://www.topnews.in/files/Meera-Jasmine-74610.jpg