Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Friday, March 25, 2011

நடமாடும் வாக்குச்சாவடி... இந்த கைல துட்டு.. அந்த கைல ஓட்டு......

Hilarious political cartoon images

1. நடிகர் வடிவேலு: தி.மு.க.,வில் உறுப்பினராக நான் இல்லை. ஆனால், மக்களில் ஒருவராக, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை பிரசாரத்தின்போது எடுத்துச் சொல்வேன். திருவாரூரில், கருணாநிதி தலைமையில் நடைபெறும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் என் பிரசாரத்தை துவக்க உள்ளேன்.


அதெல்லாம் சரிதான்.. இங்கே ஒரு மானஸ்தன் அடுத்த தேர்தல்ல கேப்டன் எங்கே போட்டி இடுவாரோ அங்கே  சுயேச்சையா நின்னே அவரை மண்ணை கவ்வ வைப்பேன்னு பேசுனாரே... அவரைப்பார்த்தா சொல்லுங்க.... 


--------------------------------------------------



2. தேசிய பேரிடர் நிர்வாக ஆணைய அதிகாரிகள்: இந்தியாவில், 38 நகரங்கள், நிலநடுக்கம் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் கட்டப்படும் கட்டடங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. ஜப்பானுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.

அப்படி பூகம்பம் வந்தாவது திராவிடக்கட்சித்தலைவர்களை காவு வாங்கிட்டா நாளை வரும் புதிய சந்ததியினராவது ஆரோக்ய அரசியலை எதிர் கொள்றாங்களா? பார்ப்போம்..

-----------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5Hyc_n1ggzMnWfYeuQW_5nsDrporis1TJcV2EpF0-677UOtqLUHHfyQPHsydKs_Q1BeGeb7pbaz9MFd7yNogC5zOibFhS2b6tzKCkScCrKUMAYE8ZQQNiaMb1xSn4WISURgnz5G1LOyI/s400/DN_12-02-09_E1_04-03%2520CNI2.jpg

3. பத்திரிகைச் செய்தி: நாகை அடுத்த வேளாங்கண்ணி, தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் கிலி என்ற தம்பியப்பன் (40). பா.ம.க., நாகை ஒன்றிய (கிழக்கு) செயலர். இவரது வீட்டில், பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனையில், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பார்த்தீங்களா? பா  ம க கட்சிக்காரங்களுக்கு நாட்டுப்பற்றே இல்லைன்னு யாரும் இனி சொல்லிட முடியாது..நாட்டுத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு... அப்படின்னு சுதேசி அயிட்டங்களா போட்டுத்தாக்கறாங்களே....

------------------------------------------

4. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி: மைசூரில் இருந்து வந்த ஜெயலலிதா, ஸ்ரீரங்கத்தில் நிற்கிறார்; அவருக்கு எதிராக மண்ணின் மைந்தனை நிறுத்தி உள்ளேன். சசிகலாவின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., வந்துவிட்டது. ஜெயலலிதாவை, சசிகலா ஆட்டிப்படைக்கிறார்.

வீட்டுலதான் பொம்பள ராஜ்யம்னா நாட்டுலயும் ..........
-----------------------------------
http://i51.tinypic.com/nmk9r4.jpg
5. ம.தி.மு.க., பொதுச் செயலர்வைகோ பேட்டி:தமிழகத்தில் இனி தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக ம.தி.மு.க., அமையும். இந்த முறை, ம.தி.மு.க., தேர்தலில் போட்டியிடாமல், வெளியில் இருந்து கவனிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்தபடி, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

முடிவில் மாற்றம் இல்லை.. ஆனால் மனதில் ஏமாற்றம் உண்டு.. சரி விடுங்க.. அடுத்த எலக்‌ஷன்ல 15 சீட் யாராவது தந்துடுவாங்க... 

-----------------------------------------

6. தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: டாஸ்மாக் மூலம், பனை, தென்னையில் இருந்து இறக்கப்படும் கள் விற்க நடவடிக்கை எடுப்பது குறித்து, அ.தி.மு.க., தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவை எதிர்த்தும் பொது வேட்பாளரை களமிறக்குவோம்.

ஆமா.. அப்படியே இறக்கீட்டாலும்... அவருக்கு ஒரு குவாட்டர் வாங்கிக்குடுத்து பொது வேட்பாளரை மது வேட்பாளர் ஆக்கிட மாட்டாங்களா? எங்க கொட நாடு கோமளவல்லி..?
------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvwq9texoyipfA0xlJeYiHAPn8-9mzwOg8I2BrXaM0J8o-vEtRYkZbHLo-z1lsZB21JtYkqdfWfuAcogv2SF0UVWyx4ixkdxyCFX63Mm_AfbpZ1KmPitKsybrrnCnEk2b5k5k9-RyKqcU/s400/4.bmp
7. சிவசேன தலைவர் பால் தாக்கரே பேட்டி: இந்தியாவை சீரழிக்கும் இரண்டு விஷயங்கள், ஒன்று தேர்தல், மற்றொன்று ஜனநாயகம். ஊழலுக்கு அடித்தளமே தேர்தல் நடைமுறைகள் தான். எனவே, இவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டியது மிக அவசியம்.

ஆமாங்க... நடமாடும் வாக்குச்சாவடி வரனும்.. இந்த கைல காசு வாங்கிட்டு அந்த கைல ஓட்டு போடனும்.. ஒரு பய ஏமாத்த முடியாது 100 % ஓட்டு பதிவாகும்..

--------------------------------

8. இந்திய தேசிய லீக் மாநில தலைமை நிலைய செயலர் நாகூர் ராஜா பேட்டி:
அ.தி.மு.க., கூட்டணியில், 10 ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இரண்டு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டோம். ஒரு சீட்டாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், எங்களை அழைத்து பேசவில்லை. ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். அ.தி.மு.க.,வுக்கு எதிராக, 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம்.

அட போங்கப்பா.. ஆனானப்பட்ட வைகோவே அவமானப்பட்டு நிக்கறாரு.. வந்துட்டாங்க பெருசா.. இது டபுள் மீனிங்க் வேற.....

---------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYeJdbyCaihqNYxbf9O2Almbf4f-dljtyjKfqVjr1moTvzYpb3X52S8Btahsypfy4wHSkzectnzO4Gh_1ievPPztUPiN3X1vIq1_2uwNkjjRgEayc1ZePM3It3Ojg1n-UwcTFsQKrAiULO/s1600/tamilmakkakural_blogspot_man.jpg
9. சமத்துவ மக்கள் கட்சிநிறுவனர் சரத்குமார் பேட்டி: நாங்கள் கொள்கை அடிப்படையில் தான் அ.தி.மு.க.,வில் இணைந்திருக்கிறோம். ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து, தமிழகத்தை ஜெயலலிதா மீட்டெடுப்பார் என நம்புகிறோம்.

அது சரி.. உங்க கட்சிக்கு 3 சீட் குடுப்பவருடன் மட்டுமே கூட்டணி என்பது தானே உங்க கொள்கை? இதே எலக்‌ஷன்ல கலைஞர் 4 சீட் கொடுத்திருந்தா அவர் கால்ல விழுந்திருப்பீங்க.. பெரிய யோக்கியவான் மாதிரி நடிக்கறாங்கப்பா...


டிஸ்கி - இன்று 4 படங்கள் ரிலீஸ் ஆகுது. குள்ளநரிக்கூட்டம், சட்டப்படி குற்றம்,சாந்தி அப்புறம் நித்யா,அல்லி ராஜ்யம்... பார்ப்போம் எது முதல்ல மாட்டுதுன்னு.....

Thursday, February 17, 2011

நமீதா- கேரளா - டிஸ்ஸப்பாயிண்ட்மெண்ட்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbQroVVj6k8LXYAuE_9g2t9a5R6Lj1CLv8cuA1as9mCcG2GGQ2_-3aa3SNZpXcNOiRl6rMj3UL1sAFwR-Yjn-gCewJgpy1NqfBZ9qaBN1Op_dG2gnPOxXObAQcs1ghFv9qCIV_17anpVAx/s400/namitha_hot_11.jpg
1.அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகுதுன்னு யாராலும் சொல்ல முடியாது.

ஏன் முடியாது? நீரா ராடியாவுக்கு ஒரு ஃபோன் போட்டு, கேளுங்க.. ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுடும்.

-----------------------------------
2. என்னது? திருடுனது ஒரு லேடியா? துரத்திப்பிடிச்சீங்களா?

எஸ் ஸார்,  பிடிச்சேன், மெத் மெத்னு இருந்தது... மயக்கத்துல இருந்தப்ப நழுவி ஓடிட்டா...

----------------------------

3.எதுக்காக பைக்ல 120 கிமீ வேகத்துல போனே..?

என்னைத்துரத்திட்டு வந்த பைக்கோட ஓனர் 140 கி  மீ வேகத்துல வந்தாரு.. அதான்.

---------------------------------

4.நேத்து ஒரு ஃபுல் வாங்கி நானும், என் ஆளும் ஆளுக்கு ஒரு ஆஃப் அடிச்சோம்.


ஓஹோ... நீ பாதி , நான் பாதி கான்செப்டா?


-------------------------------------

5. மோஹனா.. காலைல எந்திரிச்சதும் ஒரு குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்ப இவ்வளவு நேரமா? நீ எல்லாம் ஒரு லவ்வரா?

அது சரி.. நீங்க பாட்டுக்கு ஈசியா சொல்லீட்டீங்க.. நான் 184 பேருக்கும் அனுப்ப வேண்டாமா?நீங்க 185 வது லவ்வர். குரூப் மெசேஜ் செட்டிங்க்ஸ் வேற கிடையாது. தனித் தனியாதான் அனுப்பனும்.

(வாழ்க உத்தம பத்தினி)

------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz8ggU7CkOLwisrDCz1mDRYgxUdRO_LXOuGoh2hykqE7wNWpTFjO1ZYQ01xaU62WhRpKxzSTLKHoWQi94_ysdLJncGQLnJb3oXsxuecd-ITCk_Tk1XRJZtRpLk1zF40iVorSAfg4gI2URI/s1600/namitha.jpg
6. பழையன கழிதலும் ,புதியன புகுதலும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே...

அதுக்காக நீ வருஷா வருஷம் லவ்வரை மாத்தறது சரி இல்லை.

--------------------------------------

7.டாக்டர்.. நர்ஸ் நமீதாவை நான் லவ் பண்றேன்..

யோவ்.. கஷ்டப்பட்டு கேரளா போய் நல்ல ஃபிகரா கூட்டிட்டு வந்து அப்பாயிண்ட் பண்றது  நான்... ஈசியா செட் பண்ணி கூட்டிட்டு போய் என்னை டிஸ்ஸப்பாயிண்ட் பண்றது நீயா..?

---------------------

8.பணத்துக்காகவும்,பதவிக்காகவும் அலையற ஆள் நான் கிடையாதுன்னு தலைவர் சொல்றாரே...

ஆமா.. அவர் அலையறதே மகளிர் அணித்தலைவி சொப்பன சுந்தரிக்காகத்தானே...

--------------------------------

9. எந்தக்கட்சியை சேர்ந்தவரா இருந்தாலும் தியாகிகளுக்கு பரிசு உறுதின்னு தலைவர் சொல்றாரே...?

அதாவது ... தான் இருக்கறது எந்தக்கட்சியா இருந்தாலும் அதை உதறிட்டு வந்து தலைவர் கட்சில சேர்ற தியாகிகளுக்குன்னு அர்த்தம்.

--------------------------------------------------

10.நம்ம தலைவர் பெண்களுக்கு நிறைய உதவிகள்  பண்ணி இருக்காராமே..?

ஆமா, அவரோட சின்ன வீட்டுக்குபெங்களூர்ல ஒரு பங்களா,அவரோட ஆசை நாயகிக்கு ஆக்ரால ஒரு இடம்னு வாங்கிப்போட்டிருக்காரே..

----------------------------------

டிஸ்கி - 1 உலக பதிவுலக வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதாவை பாவாடை தாவணியில் ஸ்டில் வைத்தது அட்ரா சக்க என்றுதான் நினைக்கிறேன். இதற்காக டீசண்ட் மேன் ஃபிரம் டீசண்ட் ஃபேமிலி விருதை எனக்கு யாராவது தருவதாக இருந்தால் அதை எந்த பிகுவும் இல்லாமல் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.

 டிஸ்கி 2 - முதல் ஸ்டில் அவரோட “சின்ன” வயசுல எடுத்தது... 2வது ஸ்டில் அவரோட பெரிய வயசுல எடுத்தது... ஹி ஹி ஹி

Saturday, February 05, 2011

.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR-YzGCgi98zn1Wb9B_SWom7iFynhi7mQ24pX3DwCiX1ffbhExpaDkodb-o3GSjt8ST_QageaHnf8cRVTFtev-fvg-tyA4TxxsAiaM7WSG8i1cbAjutRJ4IUllKeXq2ZLY60yA4K61M5X2/s1600/Thapsi+Desi+Pic+(2).jpg
1.தலைவரே...நாட்டுக்காக இதுவரை என்ன செஞ்சிருக்கீங்க..?

எனக்காகவே இன்னும் செஞ்சு முடிக்கல.....

-------------------------------------------

2.ரவுடின்னு தெரியாம கை மாத்து கேட்டது தப்பா போச்சு..

ஏன்?

செம மாத்து கிடைச்சது..

--------------------------------------------

3.மன்னா.! நம் நாட்டில் ஏழைகளே இல்லாம பண்ணப்போறீங்களாமே..?

ஆம் ,அமைச்சரே... எல்லா ஏழைங்களையும் அண்டை நாட்டுக்கு துரத்தி விட்டுட வேண்டியதுதான்.

-------------------------------------

4.கோதுமைத்தோட்டம் 10 ஏக்கரா  மாப்ளைக்கு இருக்கு..

அப்போ WHEAT டோட மாப்ளைன்னு சொல்லு.. ( WHEAT - வீட் -கோதுமை)

-----------------------------------

5. டாக்டர்.. கீழே விழுந்துட்டேன்..

அடடா.. எப்படி விழுந்தீங்க?

மறுபடி ஒருக்கா விழுந்து காண்பிச்சா மறுபடி அடிபட்டுடுமே.. டாக்டர்.

------------------------------------
http://2.bp.blogspot.com/_MjCKDkRXAD0/SjO0ld6ju2I/AAAAAAAAB2g/hHI2S24M63o/s400/Tamanna.jpg
6.உங்க பையன் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றீங்க..?

ஜில்லுன்னு இருக்கற பொருட்களுக்கு உதாரணம் சொல்லுன்னா பெப்ஸி , தப்ஸி அப்படின்னு சொல்லி இருக்கான்.

------------------------------------------------------

7.டாக்டர்.. உங்க கிளினிக்ல கூட்டமே வர்லைன்னாக்கூட கிளினிக்கை மூடிட்டு பியூட்டி பார்லர் ஆரம்பிச்சு பொழப்பு நடத்திக்கலாம்..

எப்படி சொல்றீங்க?


எல்லா நர்ஸூங்களும் சூப்பர் ஃபிகர்ஸா இருக்காங்களே..

-----------------------------------------------------------

8.ஆன்மீகத்துல தலைவருக்கு அவ்வளவு ஈடுபாடா..?ஆலயம் கட்ட ரூ 2 கொடி நிதி உதவி செஞ்க்சிருக்காரே..?

அட நீ வேற .. அவரு நடிகை தமனாவுக்கு கோயில் கட்டத்தானே நிதி உதவி தந்தாரு.?

------------------------------------

9.சார்.. நீங்க எப்போ வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம்.. வர்றதுக்கு முன்னே ஒரு ஃபோன் பண்ணி தகவல் மட்டும் சொன்னா போதும்..

எதுக்கு? முன் ஜாக்கிரதையா வீட்டை பூட்டி வெளில கிளம்பத்தானே..?

---------------------------------------

10.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?

ஆண்கள்தான் மதிப்பு தர்றாங்க.. பெண்கள் மிதிப்புதான் தர்றாங்க..( ஒண்ணா அண்ணனை விட்டு மிதிக்க வெச்சுடறாங்க.. இல்லைன்னா காதலையே மிதிச்சிட்டு டாட்டா காட்டிடறாங்க..)

--------------------------------------------

டிஸ்கி  1- 6 -ம் நெம்பர் ஜோக்கும், 8- ம் நெம்பர் ஜோக்கும் நமக்கு  சொல்ற நீதி என்ன?

டிஸ்கி 2 - நமக்கு நடிகைங்க ஸ்டில்ஸ் போடனும்னு ஆசையா இருந்தா இப்படி வலுக்கட்டாயமா அவங்க பேர் வர்ற மாதிரி ஜோக் ரெடி பண்ணிக்கனும்?

டிஸ்கி 3 - டிஸ்கி 2 நமக்கு  சொல்ற நீதி என்னன்னா நம்ம மைனஸ் பாயிண்ட் எதுன்னு பார்த்து எப்படி கமெண்ட் வரும்னு யூகம் பண்ணி அதை நாமே நக்கல் அடிச்சுக்கிட்டா வெளி ஆட்கள் கமெண்ட் போடறப்ப வேற வழி இல்லாம ஜோக் நல்லர்ருக்கு.. பதிவு சூப்பர்னு கமெண்ட் போட்டுடுவாங்க.. ஹி ஹி ஹி

டிஸ்கி 4 - நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என் சுவாசக்காற்றே புகழ் இஷா கோபிகர் நடித்த அஜால் குஜால் படமான மின்சாரக்காதலி ப்பார்த்தாச்சு.அதை விமர்சனமா போடறதுல சில சர்ச்சைகள்
இருக்கு. அது பத்தி ஆலோசிக்க இன்று கூடும் ரகசியக்கூட்டத்தில் அட்ராசக்க இணைய தளத்தின் அதிகாரபூர்வமான வக்கீல் நண்டு நொரண்டு ராஜா,சித்தோட்டு சிறுத்தை நல்ல நேரம் சதீஷ்,007 ஜேம்ஸ்பாண்ட் சதீஷ் மூவரும் கூடி முடிவு எடுப்பாங்க

 ..

Friday, February 04, 2011

எட்டுப்பட்டியும் எள்ளி நகையாடிய ராசா - காமெடி கும்மி

http://www.tamilcnn.com/images/stories/tamilcnn/january2011/india/anchalii.gif 
.1. ஊழல் வழக்குல கைதான தலைவரை எல்லோரும் பாராட்டறாங்களே..?

கைதாகி  24 மணி நேரம் ஆகியும்  அவருக்கு இன்னும் நெஞ்சு வலி வர்லையே..

---------------------------------------

2.கூட இருந்தே குழி பறிக்கறவங்க நம்ம கட்சில ஜாஸ்தினு எப்படி சொல்றீங்க தலைவரே,..?


பின்னே என்னய்யா..?நான் கைதானதும் எல்லாருக்கும் ஸ்வீட் குடுத்து  நம்ம கட்சி ஆளூங்களே கொண்டாடுனா...?

--------------------------------------------------

3 தலைவரோட அலம்பலுக்கு ஒரு அளவே இல்லைன்னு எப்படி சொல்றே,,?

என்னை கைது செய்தது இயற்கைக்கே பொறுக்கலை..அதனாலதான் என்னை அரெஸ்ட் பண்ணுன அதே நாள் ஜப்பான்ல எரிமலை வெடிச்சுதுன்னாரே..?

----------------------------------------

4.தலைவர் எப்பவும் தன்னையும்,தன் குடும்பத்தையும் ஏழையாவே நினைச்சுக்கறார்..

எப்படி சொல்றே..?

இறுதி மூச்சு உள்ளவரை ஏழை மக்களுக்காக பாடுபடுவேன்னாரே...

--------------------------------------------------------------------------------


5.தலைவரே.. நீங்க கைது ஆனதா பேப்பர்ல நியூஸ் பார்த்தேன்,பதட்டமே இல்லாம இருக்கீங்களே..?

விடப்பா.. நாளைக்கே நான் ஜாமீன்ல வந்ததா நியூஸ் வரும் பாரு..

--------------------------------------------
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/06/neetu-chandra-17a.jpg

6. தலைவரு இப்படி எல்லாம் பெருமை அடிச்சுக்கக்கூடாது...

ஏன்?


சின்ன வயசுல இருந்தே நான் ஊழல் பண்ண ஆரம்பிச்சுட்டேன் அப்படிங்கறாரே?

------------------------------------------------------------

7.கபாலிக்கு லொள்ளு ஜாஸ்தி ஆகிடுச்சு..

ஏன்?

நான் ஒரு தலீத் அப்படிங்கறதாலதான் என்னை லாக்கப்ல போட்டீங்க அப்படின்னு கேட்டு  பிரச்சனையை திசை திருப்பறானே...

-------------------------------------------

8.பாட்டுப்போட்டிக்கு வந்தவன் ரஜினி ரசிகன் போல ...

எப்படி  சொல்றே..?

ஸாரி.. நான் வாய்ஸ் தர மாட்டேன்கறானே..

-----------------------------------------------------


9.தலைவரே. உங்க லட்சியம் என்ன?

எல்லாரும் இந்த 1 3/4  லட்சம் கோடி ஊழலையே பெரிசா பேசறாங்க..அதை பிரேக் பண்ற மாதிரி ஊழல் பண்ணனும்.,

---------------------------------------------

10. நடிகை - முதல்லயே சொல்லிடறேன்.. எனக்கு ழ சரியா வராது...

டைரக்டர் - முதல்லயே வராதுன்னா கடைசில வருமா?


----------------------------


டிஸ்கி 1 -  இன்னைக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகுது. தூங்கா நகரம் பட அஞ்சலி ஸ்டில் தான் முதல்ல இருக்கறது.. யுத்தம் செய் பட நீது சந்திரா ஸ்டில்தான் 2வது..இஷா கோபிகர் நடிச்ச சீன் படமான மின்சாரக்காதலி  பட ஸ்டில் ரொம்ப ஓவரா இருந்ததால போடல. இன்னைக்கு ஆஃபீஸ்க்கு ஓபி அடிக்க வாய்ப்பு கிடைச்சா மூணுல ஏதாவது ஒரு படம் பார்த்து விமர்சனம் போடலாம்னு ஒரு ஐடியா..


டிஸ்கி 2 -  கடைசியா போட்ட நடிகை ஜோக்குக்கும் ,நீது சந்திராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.

Wednesday, February 02, 2011

2011 எலக்‌ஷன் ஜோக்ஸ்

http://www.thenee.com/assets/images/kushpu.jpg 
1.தலைவரே.. எப்படி வெட்கமே இல்லாம மறுபடி அதே கட்சி கூட கூட்டணி வெச்சுக்கிட்டீங்க?

மான அவமானம் பார்த்தா அரசியல்ல குப்பை கொட்ட முடியுமா?

------------------------------------------------------

2.இன்ஸ்பெக்டர்.. நிறைய பேர் டெயிலி என்னை ஃபாலோ பண்றாங்க..


விளையாடாதீங்க மேடம்.. ட்விட்டர்லயும்,ஃபேஸ்புக்லயும் அக்கவுண்ட் வெச்சா ஃபாலோ பண்ணத்தான் செய்வாங்க...

---------------------------------------------------

3.தலைவர் தொழில்ல ரொம்ப சுத்தம்னு எப்படி சொல்றே,,?

ஊழல் பண்றப்ப,. மக்கள் பணத்தை கொள்ளை  அடிக்கறப்ப  கைல கிளவுஸ் போட்டுக்குவாரு..

-----------------------------------------

4. உன் மனைவிக்கு தாடி வளர்ந்திருக்கே..?

பொண்ணு  பார்க்கப்போனப்பவே பொண்ணு பரம சாதுன்னு சொன்னாங்க... இப்ப தான் அர்த்தம் தெரியுது...

----------------------------------------

5.பேச்சு வார்த்தை நடக்குதுன்னு தலைவர் சொல்றாரே,,,?

அதாவது பேரம் நடந்திட்டிருக்குன்னு அர்த்தம்.

------------------------------------------------------
http://3.bp.blogspot.com/_f4APu1ZJrOY/SzM8iOShRQI/AAAAAAAAALM/dGZEG08_t4Q/s400/i+news+roja22.jpeg
6.தலைவரே.. தனியாத்தான் போட்டி இடுவேன்ன்னு சொன்ன நீங்க திடீர்னு இப்படி அந்தர் அல்டி அடிப்பீங்கன்னு எதிர்பார்க்கலை.

ஆக்‌ஷன் ஹீரோன்னா  அப்படி டூப் போடாம பல்டி அடிச்சுதான் ஆகனும்.

------------------------------------------

7.எடிட்டர் சார்.. வயசான நடிகையின் பேட்டின்னு உங்க பத்திரிக்கைல போட்டு என்னை அவமானப்படுத்தீட்டீங்களே..

ஹி ஹி சின்ன மிஸ்டேக் நடந்துடுச்சு  மேடம்.. 18 வய்சான நடிகையின் பேட்டின்னு வந்திருக்கனும்... 18 +  போட்டாலே பிரச்சனை வந்துடுதுன்னு அதை மட்டும் கட் பண்ணிட்டோம்.

-----------------------
8. வேலை வெட்டி இல்லாத பையனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்களே..?

அதனால என்ன? மேரேஜ்க்குப்பிறகு என் பொண்ணுக்கு  சமையல் செஞ்சு போடறது, அவ துணி மணியை துவைச்சு போடறதுன்னு மாப்ளை பிஸி ஆகிடுவாரு..


--------------------------------------

9.ஏய் மிஸ்டர்.. எனக்கு இந்த காதல் கத்திரிக்காய்னாலே பிடிக்காது..


மிஸ்.. பி டி கத்திரிக்காய்தான் எனக்கு தெரியும்.. அதென்ன காதல் கத்திரிக்கா..?


----------------------------------------

10.டாக்டர்.. நீங்க சொன்ன டூத் பேஸ்ட் தான் வாங்குனேன்.. ஆனா வாய் துர்நாற்றம் சரி ஆகல..

அட நாயே.. டூத் பேஸ்ட் வாங்குனே ஓக்கே.. பல் துலக்குனியா?

டிஸ்கி - அரசியல் ஜோக்ஸ்ல எதுக்கு சினிமா நடிகைங்க ஸ்டில்ஸ்..? சினிமால பாலிடிக்ஸ் புகுந்திருக்கற மாதிரி இப்போ அரசியல்ல சினிமா புகுந்திருக்கு..அரசியல் பிரச்சார கூட்டங்களுக்கு ஒரு கிளாமருக்காக நடிகைகளை மேடை ஏத்தப்போறாங்க.. ஆனானப்பட்ட அவங்களே அப்படி செய்யும்போது ஆஃப்டர் ஆல் நான் அவஙக ஸ்டில்லை போடக்கூடாதா?              ( எதுக்கு நடிகைங்க ஸ்டில் போடனும்..? எதுக்கு 7 லைனல் இப்படி ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கனும்?)

Tuesday, February 01, 2011

ஓ ! தமிழர்களே.. தமிழர்களே..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2rGaOIFumDTRnZLexOosDQL53Np2pm3HwPuFmoHhcbGaHMPKeOIrPj0UUcwFLSnnrggRylBQpym5CvUAn-ETk5DzInCEtWcQN6KnI8AptIEKKXHMx2dKDsNCtdAtg_7sh7eIuqzGqrWTG/s1600/000.jpg
1. தலைவர் திடீர்னு தன்னோட சம்சாரத்தை டைவர்ஸ் பண்றாரே..?

யாருடனும் கூட்டணி கிடையாது ,நான் தனி அப்படின்னு சொன்னதை மெயிண்ட்டெயின் பண்றாரு..

------------------------------------------------------------------

2. டாக்டர்.. உங்க கிளினிக் நாய் என்னைக் கடிச்சிருச்சு...

விளையாடாதீங்க.. அது வாய் இல்லாத ஜீவன் ஆச்சே..

-------------------------------------------

3.இங்கிலீஷ் வாத்தியார் ஏன் அரண்டு போய் இருக்காரு..?

  A  .. E.. I ..O..U    இந்த 5 எழுத்துல ஒரு எழுத்து கூட தன் பேர்ல இல்லாத ஒரு ஃபிகர் பேருசொல்லுங்க பார்க்கலாம் அப்டின்னு பசங்க சவால் விட்டாங்களாம்.

------------------------------------
4. இந்த கடைல திருடுனவனோட நடத்தை சரி இல்லைன்னு எப்படி சொல்றீங்க?

பின்னே என்னங்க.. மெடிக்கல் ஷாப்ல காண்டம் பாக்கெட் திருடி இருக்கான்.

--------------------------------------------------------

5.தமிழர்களே.. தமிழர்களே.. நீங்கள் என்னை கடலில் தூக்கிபோட்டாலும்...

கொஞ்சம் பொறுங்க தலைவரே.. இன்னும் 4 மாசம் தான்.. அப்புறம் உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்..

------------------------------------------------------
6. கல்யாணத்துக்கு வந்த தலைவரு என்ன சொல்லி வாழ்த்துனாரு..?

 2 ஜி அலை வரிசையும் ,ஊழலும் போல் இணைந்து வாழுங்கள்னு வாழ்த்துனாரு.

-------------------------------------------------

7. தலைவரோட தத்துப்பிள்ளையாம் இவரு..

ஓஹோ.. அதுக்காக சுனில் தத்துன்னு பேர் வைக்கனுமா?

-----------------------------------------------

8. தலைவர் இதுக்கு முன்னால டி வி ல சமையல் குறிப்பு சொன்னவர் போல..

எப்படி சொல்றே..?

டாஸ்மாக் கிட்டே பேரணி போறப்ப.. இருங்க தேவையான அளவு மப்பு சேத்திட்டு வர்றேண்ட்டு போனாரே...?

------------------------------------------


9.உங்க பொண்ணை அழ விட மாட்டேன்னு மாப்ளை சொல்றாரே.. எப்படி?

அளவிட முடியாத சொத்து அவ பேர்ல இருக்குன்னு சொன்னோம்...

--------------------------------------------------

10.  பெட்ரோல் விலை ,வெங்காயம் விலை இவ்வளவு ஏறும்னு தெரிஞ்சிருந்தா.....

முதல்லயே ஸ்டாக் வாங்கி வெச்சிருப்பீங்களோ...

ம்ஹூம்..ஒரு ஓட்டுக்கு ரூ 2000னு வாங்குனதுக்குப்பதிலா ரூ 10000 வாங்கி இருப்பேன்..

ஹூம்.. எத்தனை  பெரியாருங்க வந்தாலும் தமிழனை திருத்தவே முடியாதப்பா

--------------------------------------------

டிஸ்கி -1.  மேலே உள்ள முதல் படத்தில் தோன்றுவது தூங்கா நகரம் படத்தில் அஞ்சலி (அங்காடித்தெரு).. 2 வது படத்தில் உள்ளது யுத்தம் செய் படத்தில் நீது சந்திரா.. படத்தில் இந்தப்படம் சென்சார் கட்.. எனவே ஒரு சமூக சேவையா இந்தப்படத்தை உங்களுக்கு வழங்கறேன்.. பிடிக்காதவங்க அந்த ஸ்டில் கிட்டே வரும்போது மட்டும் கண்ணை மூடிக்குங்க.. ஹி ஹி

டிஸ்கி 2 - நடிகைங்க பேட்டில எல்லாம் இந்தப்படத்துல என்னோட முழுத்திறமையையும் காட்டி நடிச்சிருக்கேன்னு பேட்டி குடுக்கும்,போது எனக்கு அர்த்தம் புரியல..இப்போ நீது சந்திரா ஸ்டில் பார்த்ததும் புரிஞ்சிடுச்சு.

டிஸ்கி 3 - முறைமாமன் கார்த்திக்கின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க 2 வது ஸ்டில் எடுக்கப்பட்டது.( கிட்டத்தட்ட மிரட்டுனாரு)..அதனால பாராட்டறவங்க என்னையும் , திட்டறவங்க கார்த்திக்கையும் திட்டவும் ஹி ஹி ..கிட்டத்தட்ட அட்ரா சக்க கூட சீன்படம் மாதிரி .. ரிலீஸ் அப்ப பார்த்தாதான் உண்டு.. லேட்டா போனா கட் ஆகிடும் சில.. ஹி ஹி

Thursday, January 20, 2011

தேரடி வீதியில் தேவதை வந்தால்.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAWIz8G8mj2kl2HF5TnAg7albf2dDaDo_6sHP5of4TJ3GEHGcsZXlgRRdZMWQxGn0k6g1dh_-h97NDfVR2zhhpE2xQkwxVcx7X-sxKCllyd-W0F1Om1Vozr6lf399mNWZEBAkJb6oEsWMi/s1600/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D.jpg

தைப்பூசத்திருவிழா ஸ்டார்ட் ஆகிடுச்சு. இனி ஒரு வாரத்துக்கு மஜாதான். எங்க ஊரோட மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு லட்சம்தான் இருக்கும். ஆனா இந்த விழாவுக்கு 4 லட்சம் மக்கள் கூடிடுவாங்க. இந்ததேர்த்திருவிழா பற்றி சொல்றதுக்கு முன்னே எங்க ஊர்ப்பெருமையை பற்றி 4 லைன் தம்பட்டம் அடிச்சுக்கறேன்.


தமிழ்நாட்லயே அதிக அளவில் பெட்சீட்  தயார் ஆவது இங்கேதான்.சென்குமார்,சென்கோப்டெக்ஸ்,சென்டெக்ஸ் உட்பட இங்கே ஏகப்பட்ட தறிப்பட்டறை இருக்கு. நெசவாளிகள் குடும்பம் அதிகம் உள்ள ஊர். எங்கப்பாவும் ஒரு நெசவாளிதான்.ஜக்காடு பெட்ஷீட் நெசவு நெய்வாரு.. நின்னுக்கிட்டே ஒரே ஒரு மிதியை அழுத்திக்கிட்டே இருக்கனும்..

மாட்டு வண்டி மலை ஏறுன கதை 20 வருஷத்துக்கு முன்னே ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. சென்னிமலைல 1350 படிகள். சாதாரண வேகத்துல ஏறுனா 28 நிமிஷம் ஆகும், அதே இறங்க 7 நிமிஷம் தான் ஆகும்.நல்லா கொழு கொழுன்னு வளர்க்கப்பட்ட 2 காளைகள் மாட்டு வண்டியில் பூட்டப்பட்டு மலை ஏறுச்சு. அதை 8 லட்சம் ஜனங்க பார்த்தாங்க.அதுக்கப்புறம்தான் எங்க ஊர் ஃபேமஸ் ஆச்சு.

மலை மேல ஒரு சுரங்கப்பாதை இருக்கு. அது மன்னர் காலத்துல கட்டப்பட்டது. பழநி வரை போகுமாம். எல்லாம் சொல்ல கேள்விதான்.யாருக்கு அதை டெஸ்ட் பண்ண தைரியம் இருக்கு.?

இந்த 7 நாள்ல ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.தினமும் ஆர்க்கெஸ்ட்ரா,நாடகம்,கரகாட்டம்,தப்பாட்டம்,ஒயிலாட்டம்,மயிலாட்டம், சினிமா ( திரை கட்டி படம் போடறது) னு  ஒரே கலக்கல்தான்.தெப்பத்தேர் அன்னைக்கு வாண வேடிக்கை நடக்கும் பாருங்க.. 5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள்..வெடிகள் ஒரு மைதானத்துல வெடிப்பாங்க.. ( எல்லாம் கோயில் காசுதான்) நாம எந்தக்காலத்துல காசு குடுத்து வெடி வெடிச்சிருக்கோம்?

இன்னைக்கு காலைல 6 மணிக்கு தேர் வடம் பிடிச்சாங்க.. மக்களோட ஆரவாரத்தோட தேர் இழுக்கறதைப்பார்க்க கண் கோடி வேணும்.மனிதன் தனியா இருக்கும்போது ஒரு மாதிரியும், கூட்டமா இருக்கும்போது வேற மாதிரியும் நடந்துக்குவான். நல்லா நோட் பண்ணி பாருங்க..அமைதியா இருக்கற பசங்க எல்லாம் இந்த விழாவுல ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.

ஈஸ்வரன் கோவிலை சுற்றி நால்ரோடு இருக்கு .அந்த நாலு வீதிலயும் தேர் சுற்றி வரும்.ஒவ்வொரு டர்ன்லயும் தேர் திரும்ப படாத பாடுபடும். தேர்சக்கரத்தை கண்ட்ரோல் பண்ண ஒரு மரக்கட்டை வெச்சிருப்பாங்க.. அதை முட்டுக்குடுத்துதான் திருப்புவாங்க..சில சமயம் தேர் வர்ற வேகம் பார்த்தா நம்ம மீது விழுந்துடுமோன்னு பயமா இருக்கும். ஆனா விழாது.

தேர் நிலை சேர்ந்ததும் மக்கள் வெண்ணெய், உப்பு,மிளகு, எலுமிச்சை இதை எல்லாம் வீசுவாங்க... எதுக்கு வீசறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாம் ஒரு ஐதீகம்தான்.

பக்தி, கடவுள் நம்பிக்கை இதை எல்லாம் தாண்டி இந்த விழாவுல நான் பாக்கறது மக்கள் உற்சாகமா, ஒற்றுமையா,சந்தோஷமா, சொந்தக்காரங்களோட சிரிச்சி பேசி மகிழ்வதைத்தான்.வெளி ஊர் ஆட்களும் ,உள்ளூர் ஆட்களும் கூடி மகிழ்வதை பார்க்கவே சந்தோஷமா இருக்கும்.

விழாவோட இறுதி நாள்ல சத்தாவரம் நடக்கும். அதாவது தெய்வ  தரிசனம்.இரவு 7 மணில இருந்து மறு நாள் காலை 8 மணி வரை கூட்டம் பின்னி எடுக்கும். 4 வீதிகள்லயும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கூடி தேர்க்கடையை சுத்தீட்டே இருப்பாங்க.எவனும் எதையும் வாங்க மாட்டான். சும்மா பாவ்லா காண்பிப்பாங்க.
http://staff.science.nus.edu.sg/~sivasothi/blog/images/20070206-jeff_ooi-thaipusam.jpg
கூட்டத்துல ஃபிகருங்களை இடிக்கறது,ஆண்ட்டிகளை உரசறதுன்னு நம்மாளுங்க பண்ற லோலாயம் இருக்கே.. அட அட.. இதுக்குன்னே 80 கி மீ நடைப்பயணமா வர்ற ஆளுங்களும் உண்டு.

அதனால உள்ளூர் பெண்கள் யாரும் அன்னைக்கு நைட் வெளில வர மாட்டாங்க..உள்ளூர் ஆண்கள் .. நைசா அவங்களை தூங்க வெச்சுட்டு மிட் நைட்ல கிளம்பிடுவாங்க.. ராத்திரி ரவுண்ட்ஸ் அப்பை ஜூனியர் விகடன் நிருபரை விட பிரமாதமா பண்ணுவாங்க..

தேர்க்கடைகள் ஏராளமா இருக்கும்.இதுல அவனவன் லவ்வர், கேர்ள் ஃபிரண்ட்ஸ் (கவனிக்க - பன்மை)க்கெல்லாம் ஜிமிக்கி,வளையல்,தோடு அது இதுன்னு ஏதாவது வாங்கிகுடுப்பாங்க.

பலூன் சுடறது..,ரிங்க் வீசி சோப்,பிஸ்கட் பாக்கெட் ஜெயிக்கறது,ராட்டன் தூரினு ஊரே களேபரமா இருக்கும்.முன்ன பின்ன பாக்காத ஃபிகரை கணக்கு பண்றவங்க இங்கே அதிகம்.ஸ்கூல்ல படிக்கறப்ப மேத்சே போட மாட்டான்.. ஆனா ஃபிகரை மேத்தமேட்டிக்ஸ் பண்றதில பி ஹெச் டி பண்ணி இருப்பான்.
http://www.noexpectations.com.au/images/thaipusam-0206-00234-display.jpg
கரும்பு ,பொரி கடலை,பட்டாணி சுண்டல் இந்த 7 நாள்ல செமயா சேல்ஸ் ஆகும்.வேல் குத்தறது, அலகு குத்தறது.. அரோகரா அரோகரா போடறதுன்னு ஒரே களேபர பூமியா காட்சி அளிக்கும். ( அலகு குத்தறதை  கண்ல பாக்க முடியாது).

அண்ணமார்,தேவகிரி, பாலமுருகன் அப்படின்னு 3 சினிமா தியேட்டர் இருக்கு.. (அதானே பார்த்தேன்,.. ஆன்மீகக்கட்டுரைல கூட சினிமா மேட்டரை நுழைச்சிடுவியே?)இந்த தரிசனம் அன்னைக்கு விடிய விடிய சினிமா நடக்கும். காட்சி நேரம் காலை 10, 1 , 4 , 7 , 10, 1, 4 , 7  அப்படின்னு 8 ஷோ போட்டுடுவாங்க.செம கலெக்‌ஷன்தான்

ஈரோட்ல இருந்து சென்னிமலை வர டவுன் பஸ் நெம்பர் 11 . டிக்கெட் விலை ரூ 6.   L S S  பஸ்னா ரூ 6.50. விழாக்கால பேருந்துன்னு போர்டு போட்டான்னா ரூ 10 ரவுண்டா வசூல் பண்ணிடுவாங்க..சர்வீஸ் பஸ்ல ரூ 10.  ஈரோடு டூ பழநி வர்ற சக்தி முருகன் பஸ் உட்பட 13 சர்வீஸ் பஸ் இருக்கு.சக்தி முருகன் பஸ்ல மிச்சமான ஃபிகருங்க எல்லாம் வரும். ( அதென்ன மிச்சமான?- நாம ரசித்த அழகு போக மிச்ச அழகே 100% இருக்கும்)

படிக்கறவங்க யார் வேணாலும் வாங்க. நல்ல விருந்தோம்பல் உண்டு.

டிஸ்கி 1 - ஆன்மீக கட்டுரைதான் டைப் அடிச்சேன்.. மறுபடி படிச்சு பாக்கறப்ப சராசரி ரசிகனுக்கு போர் அடிக்கக்கூடிய தகவல்களை..ஸ்தல புராணங்களை எடிட் பண்ணிட்டு பார்த்தா அப்புறம் கட்டுரை இப்படி  அமைஞ்சிடுச்சு.. சாரி...

டிஸ்கி 2 - நாளைக்கு வெள்ளிக்கிழமை. வழக்கமா பக்தர்கள் வெள்ளிக்கிழமைலதான் விரதம் இருப்பாங்க.ஆனா நான் சினிமா பதிவு போட்டு 4 நாள் ஆகுது. அந்த விரதத்தை முடிக்கப்போறேன்.. ஹி ஹி

வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்கறாங்கப்பா

 http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/events/kw/2008/nov/lankanatrocitiesstarsfastinprotest/lankanatrocitiesstarsfastinprotest_050.jpg
1. தமிழக நிதியமைச்சர் அன்பழகன்: அரசின் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு பெறும் பயனாளிகளுக்கு முதல் நாள் பட்டா வழங்கப்படும்; அடுத்த நாள் வீடு வழங்கப்படும்; அதற்கு அடுத்த நாள் பயனாளிகள் குத்துவிளக்கு ஏற்றலாம்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - நீங்க ரொம்ப கிரேட்டுங்கண்ணா.. ஆட்சி போகப்போறது தெரிஞ்சும் இன்னும் நல்லது பண்றீங்களே..?அது ஏன் உதவித்தொகை வழங்கறதை மட்டும் தவணை முறைல பண்றீங்க? ஊழல் பணம்,லஞ்சப்பணம் இவைகளை மட்டும் சிங்கிள் பேமெண்ட்டா வாங்கிக்கறீங்க..?

2. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்: சென்னை நகரில் குற்ற கண்காணிப்பிற்காக 15 கோடி ரூபாய் செலவில், 1,000 கேமராக்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டில் நடந்த குற்ற சம்பவங்களில் 77 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அதெல்லாம் சரிதான். அந்த 1000 கேமராக்கள் வழங்கப்பட்டதுல ஏதும் ஊழல் இல்லையே..? க்ரைம் 77% கண்டுபிடிச்சதெல்லாம் ஓக்கே தான்.. எத்தனை கேஸ்ல தண்டனை வாங்கித்தரப்பட்டதுன்னு பாருங்க முதல்ல..


3. தமிழக காங்., எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ்: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி, பதட்டத்துடன் பேசுகிறார். சிலர் பெண்ணை வைத்துக் கொண்டு மாப்பிள்ளை தேடுவர்; சிலர் மாப்பிள்ளையை வைத்துக் கொண்டு பெண் தேடுவர்; ஆனால், இவர்கள், கல்யாண மண்டபத்தை வைத்துக் கொண்டு மணமக்களைத் தேடும் நிலையில் உள்ளனர்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக்  -நாங்க கூடத்தான் அரசியல்ல நல்லவங்களைத்தேடிட்டு இருக்கோம்.. கிடைக்க மாட்டேங்குதே..தேனை எடுக்கறவன் புறங்கையை நக்கறதைக்கூட மன்னிச்சிடலாம்..ஆனா மொத்த தேன் கூட்டையும் ஆட்டையப்போட்டுடறானுங்களே...

4.தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை, "சாட்டிலைட் சிட்டி'யாக மாற்றும் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - சாட்டி “லைட்”  ங்கறதால லைட்டாதான் ஊழல் நடக்கும்னு யாரும் நம்பிடாதீங்க.. ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்னு நினைக்கறேன்.


 http://www.voicetamil.com/wp-content/uploads/2009/07/kanimoli-karunanidhii.jpg
5. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: "வீட்டை கட்டிப் பார்; கல்யாணத்தை பண்ணிப் பார்' என்று சொல்வர். கல்யாணம் செய்ய 25 ஆயிரமும், வீடு கட்ட 75 ஆயிரம் ரூபாயும் இந்த அரசு தான் கொடுக்கிறது. சும்மா கொடுத்த மாட்டை, பல்லைப் பிடிச்சு பார்க்கக் கூடாது.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இந்தாளுக்கு லொள்ளைப்பாரு.. எகத்தாளத்தை பாரு.. என்னமோ கஷ்டப்பட்டு கூலி வேலை செஞ்சு வந்த சொந்தப்பணத்துல அள்ளிக்குடுக்கற மாதிரி உதார் விடறதை..நீங்க செய்யற தப்பை மறைக்க அரசாங்கப்பணத்துல அதாவது மக்கள் வரிப்பணத்துலருந்து எடுத்து தர்றீங்க.. அதுல எத்தனை ஊழலோ ..அடுத்த ஆட்சி வந்தா தானே தெரியும்?

6. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: கூட்டுறவு கடன் தள்ளுபடியால், பொள்ளாச்சி அ.தி.மு.க., எம்.பி., சுகுமார், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் தள்ளுபடி பெற்றுள்ளார். உடுமலை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகவேல் ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவி மனோன்மணி ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும் கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இப்போ என்ன சொல்ல வர்றீங்க ?அம்மாகட்சி ஆளுங்களை விலை குடுத்து வாங்க ஆரம்பிச்சாச்சுன்னு சொல்றீங்களா?இல்ல.. மறைமுகமா அந்த கட்சி ஆளுங்களுக்கு அழைப்பு விடறீங்களா?


7. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: பள்ளிகளில், சினிமா பாடல்களுக்கு, குழந்தைகளை நடனம் ஆடச் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல், நம் வீர விளையாட்டுகள் மறைந்து, இப்போது தெருவெல்லாம், கிரிக்கெட் விளையாடுகின்றனர். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. எனவே, கிரிக்கெட் விளையாட்டை தமிழகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். இதற்காக, மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - பரவால்லைய்யா .. காமெடி பீஸா இருந்தாலும் அப்பப்ப நல்ல வார்த்தை எல்லாம் சொல்றீங்கோ...அது இருக்கட்டும்.. கோபாலபுரத்துக்கும் , போயஸ் தோட்டத்துக்கும் மாறி மாறி நடைப்பயணம் போறீங்களாமே.. அது எதுக்கு?


8.முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேச்சு: ஒருவருக்கு பதவி கொடுக்க முடியவில்லை என்ற கோபத்தில், சட்ட மேலவையை எம்.ஜி.ஆர்., கலைத்தார். யாருக்கோ பதவி கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில், சட்ட மேலவையை கருணாநிதி மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார்.நாங்கள் வரும் தேர்தலில் தனியா நின்று எங்கள் பலத்தை நிரூபிப்போம்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - எலக்‌ஷன் டைம்ல 20 ஷீட் வேணும், 30 ஷீட் வேணும்னு லோ லோ-னு அலைவீங்க.. இப்போ சோலோ
வா நிக்கறதைப்பத்தி பேச ஆரம்பிச்சீட்டீங்களே.. தேவலை காங்கிரஸ் காரங்க உப்பு போட்டு சோறு சாப்பிட ஆரம்பிச்சீட்டீங்களா?



9.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: தமிழக மீனவர்களின் உயிர், மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரையாகி விட்டது. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு. "தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால் தான் பிரச்னை ஏற்படுகிறது' என, பிரதமரும், உள்துறை அமைச்சரும், இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது, பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதும், அனுதாபம் தெரிவிப்பதும், ஊரை ஏமாற்றும் கபட நாடகம்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - வந்துட்டாருய்யா கவர்னரு.. யாரு இப்போ ஊரை ஏமாத்தலை..?அரசியல்வாதிங்கன்னாலே ஊரை அடிச்சு உலையில போடறவங்கன்னுதானே அர்த்தம்..?எரியற கொள்ளில எது நல்ல கொள்ளின்னு பார்த்தா ஒரு பயலும் தேறலையே..?

10 . .தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியினரும், கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பா.ஜ.,வை பொறுத்தவரை, தி.மு.க., மற்றும் காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில், பா.ஜ., பலத்தைக் காட்ட வேண்டிய தருணம். தனித்து போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.



கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - சிங்கம் சிங்கிளாதான் நிக்கும்கற பஞ்ச் டயலாக் எல்லாம் இங்கே எடுபடாது.. அசிங்கபட்டு போயிடுவீங்க.ஆனானப்பட்ட அம்மாவே தனியா நிக்க பயப்படறாங்க.. உங்களுக்கென்ன? 


டிஸ்கி 1  - எங்க ஊர்ல (சென்னைமலை)இன்னைக்கு தைப்பூச தேர்த்திரு விழா.. அதனால முதன்முதலா ஒரு ஆன்மீக கட்டுரை ரெடி பண்றேன்.எப்போ எங்கப்பா இறந்தாரோ (7.7 2006) அப்பவே எனக்கு கடவுள் நம்பிக்கை குறைஞ்சிடுச்சு.. இருந்தாலும் இன்னும் நாத்திக வாதி ஆகிடலை.அதனால ஆன்மீகக்கட்டுரை போட்டா தப்பில்லைன்னு தோணுது.. அதுல பக்தியை விட அதிகமா ஊர்ப்பெருமையும்..கோயில் தல வரலாறும் இருக்கும்.கபர்தார்.



டிஸ்கி 2 - தியேட்டர்ல நல்ல படம் ஓடுதோ ,குப்பைப்படம் ஓடுதோ தியேட்டர்ல கூட்டம் குறைஞ்சிட்டா படத்தை தூக்கிட்டு புதுப்படம் போடற தியேட்டர் ஓனர் மாதிரி நானும் இப்போவெல்லாம் பிளாக்ல கூட்டம் குறைஞ்சிட்டா புது போஸ்ட் போட்டுடறேன்..ஆன்லைன்ல 10 பேருக்கும் குறைவா இருந்தா தூக்கிடுவேன். அதான் என் அளவுகோல் .

Saturday, January 01, 2011

முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPJah30Q8wP_awUe4bxDnUsobCzoc6WhXbU4HIJYohZurjICzfRXQv_Tcfatq8VEmgoqFg8mnt-OS80D7cEs-QQShAgZdXmFCdgoY4WOr5lgZ-NfPzAMay0UtNEQ3WHif-TUAN9-G1HnOX/s400/odum.jpg
1. கமல் - எனக்கு பொண்ணுங்களே பிடிக்காது..அப்புறம் முத்தம் தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.

2. ரஜினி - எனக்கு வயசு 20. என் அடுத்த படத்துல அனாகா என்கிற அம்லாபால் தங்கச்சிதான் ஜோடி.அரசியலுக்கு வருவேனா? வரமாட்டேனா ?அப்படிங்கறதை 2011 முடிஞ்சாக்கூட சொல்ல மாட்டேன்.

3. கே பாக்யராஜ் - எனக்கு டான்ஸ் நல்லா வரும்.சித்து பிளஸ் டூ படம் பட்டி தொட்டி எல்லாம் நல்லா ஓடுது.


4.தனுஷ் - தமிழகத்தின் அர்னால்டு நான்தான். பொங்கலுக்கு வர்ற ஆடுகளம் ஆக்‌ஷன்ல மைல்கல் படம்னு பேர்வாங்கும்.

5.ராஜ்கிரண் - எனக்கு ஜீன்ஸ் பேண்ட் ரொம்ப மேச்சிங்க் டிரஸ்.ராஜ் டிவி என்னுதுதான்னும்,கிரண் எனக்குப்பிடிச்ச நடிகைன்னும் சிலர் சொல்றாங்க அது உண்மை இல்ல.
http://narumugai.com/wp-content/uploads/2010/12/Nayanthara3.jpg
6. சிம்பு - நான் என் லைஃப்ல ஒரே ஒரு பெண்ணை மட்டும்தான் லவ் பண்ணுவேன்.


7. விஜய்காந்த் - விருதகிரி எம் ஜி ஆர் நடிச்சு டைரக்ட் பண்ணுன உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி கலக்கிட்டு இருக்கு.அதனாலதான் விருதகிரி 10வது நாள் போஸ்டர்ல உலகம் சுற்றும் வாலிபன் பட ஸ்டில்ல்லை போட்டிருக்கேன்.

8. அஜித் - மங்காத்தா படம் ஒரு ஆத்தா செண்ட்டிமெண்ட் படம்.

9. பிரபுதேவா - என் அடுத்த படம் டைட்டில் ஒருவனுக்கு ஒருத்தி.

10. விஜய் - எங்கம்மா சத்தியமா நானும் ஒரு ஹீரோ,நம்புங்க

டிஸ்கி 1- காலைல 7 மணிக்குத்தானே ஒரு பதிவு போட்டே ,அதுக்குள்ள என்ன மறுபடி ஒரு பதிவு?ன்னு கேக்கறீங்களா? அது அட்டர் ஃபிளாப் ஆகிடுச்சு.அதான்.( புது வருசம் ஓப்பனிங்கே சரி இல்லையே).

டிஸ்கி 2 - ஹீரோக்கள் பற்றிய பதிவுக்கு ஹீரோயின் நயன்தாரா ஸ்டில் எதுக்கு? காரணம் 1 - ஹீரோக்கு ஜோடி வேணாமா?  காரணம் 2 - பிரபுதேவா ஸ்டில் போட்டு உங்களை கடுப்பேற்றவிரும்பவில்லை.அதுக்கு சப்ஸ்டிடியூட்டா...நயன்

Wednesday, December 08, 2010

கறுப்பு எம் ஜி ஆர்-ன் விருதகிரி - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb-NCWrjY_4-jiVCvY7DDzeLrqgoo9LwjJWBZb-9NyX4wtwAu35b9UabktAzwhky1Rwj0FCl7EG_pNYx8RafsjB9xxn9abjYt-cPQTm9JeUf01NG9nVSbPeqBoViPuz6ds01igKKA-1Rnk/s1600/virutha211209_1024_1.jpg
1. கேப்டனுக்கு மனசுக்குள்ள நாடோடி மன்னன் எம் ஜி ஆர்னு நினைப்பு.

எப்படி சொல்றே?

இந்தப்படம் ஓடுனா நான் கிரி,ஓடாட்டி ஆகிடுவேன் வெறி..னு சொல்றாரே?

ஓடுனாலும்,ஓடாட்டியும் படம் படம் சொறினு மக்கள் சொல்றாங்களே?


2.கேப்டன் -  இதுவரைக்கும் யாருமே பண்ணாத கேரக்டர் நான் பண்றேன்.

இவ்வளவு கேவலமான கேரக்டரை வேற யாரும் பண்ண மாட்டாங்க...


3. ஊமை விழிகள்,புலன் விசாரனை-னு நான் நடிச்ச போலீஸ் சப்ஜெக்ட்
   எல்லாமே ஹிட்,இது ஹிட் ஆகாதுன்னு எப்படி சொல்றீங்க?

அந்தப்படங்களை எல்லாம் விபரமான டைரக்டர்ஸ் டைரக்ட்
பண்ணாங்க,இந்தப்படத்தை நீங்க டைரக்ட் பண்றீங்களே..அதான் பயம்.


4.  இந்தப்படத்துல நான் சீரியஸ் போலீஸா வர்றேன்.

ஆனா ஸ்டில்ஸைப்பார்த்தாலே எங்களுக்கு சிரிப்பு பாலீஸா வருதே...


5.இந்தப்படம் பிரம்மாண்டமான சினிமாஸ்கோப் படம்.

படம் ஓடும்னு எனக்கு ஸ்கோப் இல்லை.
http://img219.imageshack.us/img219/5307/17virudhagiri200.jpg

6. படப்பெட்டில பேடு ஸ்மெல் (BAD SMELL) வருதே...?

படத்துல அங்கங்கே அரசியல் கலந்திருக்காராம்.

சோ வாட்? (SO WHAT?)

அரசியல் ஒரு சாக்கடை ஆச்சே?சாக்கடைல பேடு ஸ்மெல் வராம
குல்கந்து ஸ்மெல்லா வரும்?



7. இந்தப்படத்துக்கு விருது நிச்சயம்னு.எப்படி சொல்றே?

ஓடாத படத்துக்கு விருது தர்றதுதானே கோலிவுட்டோட பழக்கம்?



8. இது ஒரு போலீஸ் ஸ்டோரி.

நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க,போலீஸ் ஸ்டோரியா? போலி ஸ்டோரியா?



9. கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.

தலைவரே...நாம எதுக்கு அந்தாள் படத்தை ஹிட் பண்ணனும்?

படம் ஹிட் ஆகிட்டா அந்தாளுக்கு டைரக்‌ஷன் சான்ஸ் நிறையா வரும்.
அரசியல்ல டைம் வேஸ்ட் பண்ணி நம்ம கழுத்தை அறுக்க மாட்டாரே?




10. குடும்ப அரசியல் பண்றவங்களைத்தாக்கி பஞ்ச் டயலாக் பேசறேன் இதுல..

அடடா,உங்க மச்சான் கோவிச்சுக்க மாட்டாரா?

Sunday, December 05, 2010

இளைய தளபதியின் காவலன் கலக்குமா?கவுக்குமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY701XzwAZMzfXMGyEBrLVsw650PJLma66Sdiwv9qgyfr5fDvsS3XlHTl3n-GNtZMtO3G7PxpkQPjpXUct1fm8eiaBq-3WMQp1up84DiOGWx-GcoFxfZRIjgjJ6XfMvoezMa3ULpoyhMc/s1600/vijay_kavalan_movie_stills_pics_images_02.JPG

1.இளைய தளபதி விஜய்யோட காவலன் ரிலீஸ் ஆகறப்ப மக்கள் நாயகன் ராமராஜன் நடிச்ச மேதை படமும் ரிலீஸ் ஆகுதாமே? ஏன்?

சனி பொணம் தனியா போகாதும்பாங்களே...அதான்


2. காவலன் செம காமெடி படமாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றே?

விஜய் சும்மா வந்து நின்னாலே காமெடியாத்தான் இருக்கும்,இதுல 4 கெட்டப்ல
வேற வர்றாராம்.

3.   படத்துல விஜய்க்கு 2 ஜோடியாமே?

      20 ஜோடி போட்டாலும் படம் 20 நாள்தான் ஓடப்போவுது.


4.   நடிகர் சிவகுமார் விஜய் மேல கேஸ் போடப்போறாராமே?

  அவர் நடிச்ச பழைய படமான வாட்ச்மேன் வடிவேலு டைட்டிலை அவரோட
   அனுமதி இல்லாம சுட்டு உல்டா பண்ணீட்டாங்களாம்.


5. மிஸ்டர் விஜய்,உங்க எல்லா படத்துலயும் காமெடி  இருக்கற மாதிரி
     பார்த்துக்குறீங்க?ஏன்?

     காமெடிபீஸ் இருக்கு,காமெடி இல்லைன்னா எப்படி?
http://chennai365.com/wp-content/uploads/movies/Innisai_Kavalan/Innisai_Kavalan_009.jpg

6. உங்க படத்தை ஏன் டிசம்பர் மாசம் ரிலீஸ் பண்றீங்க?

    இப்போதான் குளிர்,மழை எல்லாம் இருக்கு,கொசு ஜாஸ்தி இருக்கும் ,      தியேட்டர்ல ஆடியன்ஸ் கொசு அடிக்கறப்ப படத்தைப்பார்த்துத்தான் கை தட்டறாங்கன்னு பில்டப் குடுக்கலாம்.


7.   இனிமே பைலட்னுதான் உங்களை கூப்பிடனுமா?ஏன்?

      ஏற்கனவே கேப்டன்னு ஒரு டெரர் பீஸ் இருக்கே?


8.ஒண்ணா படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணி இருக்கனும்,அல்லது
பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணனும்,இப்படி ரெண்டுங்கெட்டானா டிசம்பர்ல
ரிலீஸ் பண்றீங்களே ,ஏன்?

உங்க கேள்விலயே பதிலும் இருக்கு.



9.ஹிந்தி டிக்‌ஷன்ரியை எடுத்து பாருங்க,விஜய்னா வெற்றின்னு அர்த்தம்.

தமிழ்  சினிமா இண்டஸ்ட்ரி டிக்‌ஷனரியை எடுத்துப்பாருங்க,விஜய்னா ஃபிளாப்னு அர்த்தம்.


10.இதுவரைக்கும் ஏதாவது சரித்திரப்படத்துல நடிச்சிருக்கீங்களா?

இல்லை.

சாண்டில்யன்,கல்கி நாவல் ஏதாவது படிச்சிருக்கீங்களா?

இல்லை.

ஸ்டாலின் கட்சியா?

இல்லை.

ஜே கே ரித்தீஷ்க்கு உறவா?



இல்லை.


அப்புறம் என்ன இதுக்கோசரம் இளைய தளபதின்னு பட்டப்பேரு வெச்சுக்கிட்டீங்க?

Monday, November 15, 2010

தலைவர் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரரா?


1. “ஒரே  வீட்ல  பன்றிக்  குட்டிகளுடன்  10  நாள்  தங்கி  இருக்கணுமா? என்னால  முடியாது!”

“மேடம்  விளையாடாதீங்க!  இது  ‘PIG’Brothers’  நிகழ்ச்சினு  முதல்லயே  சொன்னோமே?”



2. “ஐ.சி.யு.ல  வைக்கற  அளவு  பேஷண்ட்டுக்கு  என்ன  பிரச்சணை?”

“பேஷண்ட்டுக்கு  எந்தப்  பிரச்சனையும்  இல்ல,  டாக்டருக்குத்தான்  கொஞ்சம்  பணப்  பிரச்சனை.”



3. “தீவிரவாதிகளைப்  பிடிக்கறதுல  போலீஸ்  ரொம்ப  உஷாரா  இருக்கு”

“எப்படி  சொல்றே?”

“குண்டு  மிளகாய்  பர்ச்சேஸ்  பண்ணுனாக்கூட  அரெஸ்ட்  பண்ணிடறாங்களே?”



4. “வன்முறை  என்றாலே  நம்  மன்னருக்கு  பிடிக்காது”

“அதற்காக  வானில்  மின்னல்  வெட்டினால்  கூட  இப்படி  பயப்படுவதா?”



5. “டாக்டர்,  20  வருஷமா  டெய்லி  ஊசி  போடறீங்க!  அதுக்குப்  பதிலா  ஒரு  ஆபரேஷன்  பண்ணி  குணப்படுத்தக்  கூடாதா?”

“பொன்  முட்டை  இடற  வாத்தை  ஒரே  நாள்ல  அழிக்க  சொல்றீங்களா!”



6. “இந்த  மாத்திரையை  சாப்பாட்டுக்கு  பிறகு  சாப்பிடணும்.”

“ஓ.கே.  டாக்டர். சாப்பாடு  எங்கே  எப்போ போடுவீங்க?”



7. “டாக்டர்,  இதுவரைக்கும்  ஏதாவது  நல்ல  காரியம்  பண்ணியிருக்கீங்களா?”

“ஏகப்பட்ட  காரியம்  பண்ணியிருக்கேன்.  நல்லதா,  கெட்டதான்னுதான்  தெரியலை!”



8. “டாகடர்  எதுக்கு  நர்ஸ்  சித்ராவை  வட்டம்  அடிச்சிட்டு  இருக்காரு?”

“டெய்லி  காலையில  டாக்டர்  ரவுண்ட்ஸ்  வருவார்னு  சொன்னேனே!”




9. “டாகடர்,  என்  கணவர்  அடிக்கடி  சிரிச்சிட்டு  இருக்காரு!”

“ஓஹோ...  அவரு  சந்தோஷமா  இருக்கறது  கூட  உங்களுக்கு  பிடிக்கலையா?”



10. “டைரக்டர்  சார்,  ஆபரேஷன்  தியேட்டரை  காட்டிட்டு  அப்புறம்  சுவர்க்கடிகார  பெண்டுலத்தை  காண்பிக்கறீங்களே,  என்ன  அர்த்தம்?”

“உயிர்  ஊசலாடிட்டு  இருக்குன்னு  அர்த்தம்.”



11. “டாக்டர்,  எனக்கு  வந்திருக்கறது  ஒற்றை  தலைவலின்னு  எப்படிச்  சொல்றீங்க?”

“ஹெட்  ஏக்னு  ( HEADACHE) சொன்னீங்களே?  ‘ஏக்’னா  ஹிந்தில  ஒண்ணுதானே?”



12. “இன்கம்டாக்ஸ்  எந்தெந்த  வழியில  கட்டலாம்னு  கவர்மெண்ட்  டெய்லி  டி.வி-ல  விளம்பரம்  தருதே?”

இன்கம்-க்கு  ஏதாவது  வழி  சொன்னா  தேவலை”



13. “நீ  கோபமா  இருக்கறப்ப  உன்  2  கன்னமும்  சிவந்துடுதுன்னு  என்  மனைவி  கிட்டே  சொன்னது  தப்பா  போச்சு”

“ஏன்?”

“24  மணி  நேரமும்  அவ  கன்னம்  சிவந்தே  இருக்கு.”



14. “ஸ்கூட்டர்  ஓட்டற  மாப்ளை  வேணாம்.  பைக்  வெச்சிருக்கற  மாப்ளைதான்  வேணும்னு  ஏம்மா  சொல்றே?”

“ஸ்கூட்டர்  மாப்ளைன்னா  அவருக்கு  ஸ்டெப்னி  வெச்சிருக்கற  பழக்கம்   இருக்குமேப்பா?”



15. “நிருபர்:  உங்க  வெய்ட்  எவ்வளவு?”

நடிகை:  மேக்-அப்புக்கு  முன்னாலயா?  மேக்-அப்புக்கு  பின்னாலயா?”



16. “தலைவர்  தான்  கட்சி  வேட்டி  கட்டியிருக்கறப்ப  மட்டும்  வேட்டியை  மடிச்சுக்  கட்றதுக்குக்  கூட  ஒரு  ஆள்  வெச்சிருக்காரே.  ஏன்?”

“கறை   படியாத  கரத்துக்கு சொந்தக்காரர்ன்னு  பெயர்  எடுக்கணுமாம்.”

Sunday, November 14, 2010

ஒரு மஞ்ச மாக்கானின் காதல் கடிதங்கள்

1) ஹாய் மோஹனா,

ஐ ஆம் சதீஷ்,....இங்கே எந்த நாயும் உன்னை மாதிரி ஒரு மொக்கை ஃபிகரை பார்த்திருக்கவே முடியாது,,நீ அவ்வளவு சப்பை. நானும் எவ்வளவோ ஃபிகர்சை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுனேன்,ஆனா எவளும் சிக்கல.உன் மூஞ்சிக்கு வேற எவனும் சிக்கியிருக்க மாட்டான்னு தெரியும்.வேற வழி இல்லை... இதை உன் கிட்டே சொல்லியே ஆகனும்.முதல்ல உன் அக்கா கிட்டேதான் சொன்னேன்.ஆனா அவ ஒர்க் அவுட் ஆகல.அவ பேட்டா கடைக்குப்போய் புதுசா ஒரு ஹை ஹீல்ஸ் வாங்க வேண்டியதா போச்சு.ஐ ஆம் இன் லவ் வித் யூ......

-------------------------------------------

2)கண்மணி ,


வம்போட வெறும்பய வெங்கட் எழுதும் மேட்டர்...ச்சே.... குவாட்டர்....அதுவும் தப்பு... இதென்ன லவ் மேக்கா?டாஸ்மாக்கா?லெட்டரே இருக்கட்டும்... எங்கே படி...?

ஏன் உங்களுக்கு படிக்கத்தெரியாதா?

படிக்கத்தெரிஞ்சா உன்னை ஏண்டி லவ் பண்றேன்?

பொண்மணி! என் வீட்ல வேலைக்காரி சவுக்கியம்... உன் வீட்ல உன் தங்கச்சி சவுக்கியமா?உன் மூஞ்சியை நினைச்சுப்பாக்கறப்ப மொக்க ஜோக்ஸ்தான் வருது. அதை எழுதனும்னு உக்காந்தா மைனஸ் ஓட்டுதான் விழுது...என் பதிவுக்கு யாரும் கமெண்ட்ஸ் போடலைன்னா என் பிளாக் தாங்கிடும்.. ஆனா நீ தாங்க மாட்டே....
உன்னை ஹீரோயினா போட்டு ஒரு படம் எடுத்தா எப்படி இருக்கும்...நம்ம 2 பேரைத்தவிர ஒரு பய தியேட்டர் பக்கம் வர மாட்டான்.டைட்டில் என்ன தெரியுமா?

உனக்கு 20 உங்கம்மாவுக்கு 36 (கோபமா பாக்காதே நான் வயசை சொன்னேன்)



------------------------

3) லவ் லெட்டரை லீவ் லெட்டர் மாதிரி எழுதுனா எப்படி இருக்கும்?


LOVE LETTER

TO

THE GIRL (LOVER)

SUBJECT - PROPOSING LOVE

DEAR LOVER,

            AS I AM  SUFFERING FROM LOVE,I AM UNABLE TO EAT.,SLEEP,AND DO ANY WORK WITH CONCENTRATION FOR LAST 5 DAYS.AND I HAD ATTACHED THE LOVE CERTIFICATE TOO.SO I KINDLY REQUEST YOU TO LOVE ME FOR EVER FROM TODAY ONWARDS,

THANKING YOU,

YOUR'S LOVINGLY

HEART

YOUR'S FAITHFULLY

HEART ROBBER.

டாக்டர் ராம்தாஸ் ரசிகர்களுக்காக தமிழில்.....

காதல் கடிதம்.


அனுப்புநர்

உன் பாய் ஃபிரண்ட் நெம்பர் 18 (பாய்லதான் தினம் படுக்கறேன்)

பெறுநர்


வணக்கத்துக்குரிய காதலி  (ஒர்க் அவுட் ஆகறவரை மரியாதை )


பொருள் (சொந்தமா சேத்து வெச்சது ஒண்ணுமில்ல)- காதலை வெளிப்படுத்துதல்

அன்புள்ள காதலி,

நான் காதல் நோயால் பீடிக்கப்பட்டுள்ளேன் (நாயே உனக்கு எல்லா நோயும் தானே இருக்கு.)என்னால சாப்பிட முடியல,தூங்க முடியல,எந்த வேலையும் செய்ய முடியல.  (முதல்ல ஏதாவது வேலைக்கு போனாத்தானே?)
5 நாளா இப்படித்தான்.இத்துடன் எங்கள் குடும்ப மருத்துவர் தந்த காதல் சான்றிதழையும் இணைத்துள்ளேன்.எனவே என்னை எப்படியாவது கஷ்டப்பட்டு காதல் பண்ணுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.இன்றிலிருந்தே அது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்.


இப்படிக்கு,

உன் இதயம் கவர்ந்த காதலன்.




------------------------

Saturday, November 13, 2010

தகதிமிதா மைதா நமீதா

Namitha in Saree


1. “தமிழ்  மொழியை  விட  அழகான  மொழி  எது?”

“உங்க  பொண்ணு  தேன்  மொழி  சார்!”



2. “உங்க  தோட்டத்து  காய்கறிகளுக்கு  மட்டும்  டபுள்ரேட்  சொல்றீக்களே, ஏன்?”

“தண்ணி  பாய்ச்சறது  கூட  வயலுக்கு  மினரல்  வாட்டர்தான்...!”



3. “அமைச்சரே!  நமது  நாட்டின்  ‘குடிமக்கள்’  எப்படி  இருக்கிறார்கள்?”

“போதையில்தான்  மன்னா!”



4. “உன்  கடைசி  ஆசை  என்ன?”

“இந்த  வழக்குல  உண்மைக்  குற்றவாளியை  எப்படியாவது  கண்டுபிடிச்சு  எனக்குக்  காண்பிங்க  எசமான்!”



5. “என்னது,  மன்னருக்கு  மாரடைப்பா?  எதனால்...?”

“சுயம்வரத்துக்குப்  போனவரை  அந்நாட்டு  இளவரசி  ‘மன்னா’  என்று  அழைக்காமல்  ‘அண்ணா’  என்று  அழைத்துவிட்டாளாம்...!”



6. “மன்னா,  ஆபத்து...  ஆபத்து  வந்துவிட்டது...!”

“என்ன  ஆனது,  மாறவர்மன்  நம்  மீது  படையெடுத்து  வருகிறானா?”

“இல்லை  மன்னா,  தாய்  வீட்டுக்கு  போன  மகாராணி  அதற்குள்ளாகவே  திரும்பி  வந்துவிட்டார்...!”



7. “என்ன,  மகாராணிக்கு  திடீரென்று  அலங்காரம்  செய்கிறீர்கள்...?”

“மன்னா, ‘பட்டத்து  யானையை  அலங்கரியுங்கள்’  என்று  நீங்கள்  தானே  ஆணையிட்டீர்கள்...!”



8. “தூங்கிக்கொண்டிருந்த  புலியை  எதிரி  நாட்டு  மன்னன்  ஓலை  அனுப்பி  உசுப்பி  எழுப்பிவிட்டான்...”

“இப்போது  என்ன  செய்யப்  போகிறீர்  மன்னா?”

“சாப்பிட்டுவிட்டு  மறுபடியும்  தூங்க  வேண்டியதுதான்!”



9. “மன்னா!  அரசாங்க  ரகசியத்தை  இந்த  ஒற்றன்  அறிந்து  கொண்டான்...”

“நான்  சமையலறையில்  மகாராணிக்கு  உதவியாக  காய்கறி  அரிந்துகொண்டிருந்ததை  இவன்  பார்த்துவிட்டானா...?”



10. “மன்னா,  எதிரி  நாட்டு  மன்னனிடமிருந்து  போர்ச்  செய்தி  வந்துள்ளது... என்ன  பதில்  அனுப்புவது...?”

“நீங்கள்  அனுப்பிய  ஓலை  எமக்கு  கிடைக்கவில்லை,  என்று  பதில்  ஓலை  அனுப்பிவிடலாமா...?”



11. “மன்னா,  உங்களைப்  பாட  புலவர்  வந்திருக்கிறார்...!”

“இப்போதுதான்  மகாராணியிடம்  பாட்டு  வாங்கி  வந்தேன்!”



12. “டாக்டர்  ஹார்ட்  ஆபரேஷனுக்கு  எதுக்கு  கோடாரி,  கடப்பாரை  எல்லாம்  எடுத்துட்டு  வர்றீங்க...?”

“நீங்க  ஒரு  கல்செஞ்சக்காரர்னு  சொன்னாங்க...”



13. “தலைவர்  ஒரு  துறவி  மாதிரின்னு  எப்படி  சொல்றே?”

“ஆமா...  நேர்மை,  நாணயம்,  மனசாட்சி  எல்லாத்தையும்  துறந்துட்டாரே”



14. “மன்னா!  புலவர்  எழுதிய  பாட்டில்  உங்களைப்   புகழ்ந்து  தானே இருக்கிறது.  ஏன்  கோபப்படுகிறீர்கள்?”

“அமைச்சரே!  ஓலையின்  கீழே  பாருங்கள். ‘மேலே  கூறியவை  முழுக்க, முழுக்க  கற்பனையே!  யாரையும்,  எவரையும்  குறிப்பிடுபவை  அல்ல’னு எழுதியிருக்கே!”



15. “அந்த  பாகவதர்  சினிமா  ரசிகர்னு  எப்படி  சொல்றே...?”

“தகதிமிதா-னு  பாடாம,  ‘தகதகநமீதா’னு  பாடறாரே...!”



16. “நான்  லவ்  பண்றது  தெரிஞ்சா,  அப்பா  என்  கையில  சூடு  வைப்பார்!”

“இப்படி  கூட  செய்வாங்களா?”

“இங்க  பாருங்க...  ஏற்கனவே  அஞ்சு  தடவை  சூடு  வாங்கியிருக்கேன்!”

Thursday, November 11, 2010

விஜய் +அமீர் = கண்ணபிரான் - புதுப்பட காமெடி கும்மி


1.படம் இன்னும் பூஜையே போடலை,அதுக்குள்ள கும்மி அடிக்கறது எதுக்கு?

கல்யாணமே ஆகலை,நிச்சயதார்த்தம் கூட ஃபிக்ஸ் பண்ணலை,பொண்ணை மட்டும் தான் பார்த்துட்டு வந்திருப்போம்,ஆனா பொண்ணு கூட ஃபோன்ல கடலை போடறது இல்லையா? அது மாதிரிதான்.


2. அமீர் டைரக்‌ஷன்ல விஜய் ஒரு படம் பண்ணப்போறாராமே?

ஆமா,அது பருத்தி வீரன்,இது படுத்தி எடுக்கற  வீரன்.


3.  ஏசுபிரான் - கண்ணபிரான் என்ன வித்தியாசம்?

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால சிலுவைல அறையப்பட்டு கொல்லப்பட்டாரு ஏசு பிரான். லட்சக்கணக்கான மக்களை சிலுவைல அறையாமலேயே கொல்லப்போறாரு கண்ண பிரான்.


4. இது ஆக்‌ஷன் படம் கிடையாது,வன்முறை கிடையாது,ஆனா படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட்தான் கிடைக்கும்னு எப்படி சொல்றே?

கண்ணபிரான் அப்படிங்கற டைட்டில்ல இன்னொரு வாட்டி நல்லா பாரு.

5. அமீர்க்கும் ,விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

விஜய் தெலுங்குப்படத்தை ,மலையாளப்படத்தை ரீமேக் பண்ணுவாரு.ஆனா டீசண்ட்டா இந்தப்படத்துல இருந்துதான் சுடறோம்கறதை அறிவிச்சுடுவாரு.ஆனா அமீர் உலகப்படத்துல இருந்து உருவுவாரு,உல்டா பண்ணுவாரு,ஆனா ஒத்துக்க மாட்டாரு,கமுக்கமா இருந்துடுவாரு,நாம தான் கண்டு பிடிக்கனும்.


6.  ஆறிலும் சாவு நூறிலும் சாவுன்னு எதுக்கு பழமொழி வந்தது?

கண்ணபிரான் டைட்டில் பாரு ,6 எழுத்து,அந்தப்படம் 100 நாள் ஓடுனாக்கூட (அல்லது ஓட்டுனாக்கூட) ஆபத்து என்னவோ நம்ம தமிழ்நாட்டுக்குதான்.


7.விஜய் - அமீர் சார்,யோகினு ஒரு டப்பா படம் குடுத்திருக்கீங்க,உங்க கூட ஒர்க் பண்ணவே பயமா இருக்கு.

அமீர் - விஜய்,மனசாட்சியே இல்லாம பேசாதீங்க, அஞ்சு அட்டர்ஃபிளாப்பை அசால்ட்டா குடுத்துட்டு இந்த அல்டாப்பு எதற்கு?


8. அமீருக்கும் ,விஜய்க்கும் ஒத்து வருமானு டவுட் தானா,ஏன்?

எதார்த்தமான நடிப்பை வெளிக்கொணர்வாரு அமீரு,எதார்த்தம்னா கிலோ என்ன விலைனு கேக்கறவரு விஜய்.....எப்படி செட் ஆகும்கறே?


9.இந்தப்படம் ரிலீஸ் ஆகறது 2015 தீபாவளுக்குத்தானா?ஏன்?

அமீர் பருத்தி வீரனை 3 வருஷமா எடுத்தாரு,யோகியை 2 வருஷமா எடுத்தாரு.ஒரு திறமையான ஹீரோவை வெச்சு படம் எடுக்கவே அவருக்கு இத்தனை வருஷம் தேவைப்படுதே,....... (ஃபில் இன் த பிளாங்க்ஸ் பிளீஸ்)


10. இந்தப்படத்தை சன் டீ வீ அதுக்குள்ள விலைக்கு வாங்கிடுச்சா,ஏன்?

மத்தவங்க யாராவது விலைக்கு வாங்குனா இளைய தளபதி விஜய் நடிக்கும்னு தெனா வெட்டா போட்டுக்குவாரு,இவங்க வாங்கிட்டா சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்னு போட்டு அவரை, அவர் பேரை அமுக்கிடலாமே,அதுக்குத்தான்.

டிஸ்கி 1 - இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும்.பெரும்பாலும் ஆங்கிலத்தில் திட்டியே மெயில் வருகிறது.

டிஸ்கி 2 - வி வி எஸ் எனும் விஜய்க்கு வெடி வைப்போர் சங்கத்தில் நான் சாதாரண உறுப்பினர் மட்டுமே. (இன்னும் சந்தா கூட கட்டலை)  நான்தான் அதை உருவாக்கினேன் என்பதுபோல் ஆளாளுக்கு என்னை திட்டுவதை மென்மையாக கண்டிக்கிறேன்.

Wednesday, November 03, 2010

அனுஷ்கா,அலாஸ்கா,அலாக்கா



















1. இது விஜய் வெடியா?

ஆமா. பற்ற வைக்க வேண்டியது இல்லை. பஞ்ச் டயலாக் பேசுனா போதும்.



2. சிநேகா வெடி-அனாகா வெடி என்ன வித்தியாசம்?

குடும்பப்பாங்கான பொண்ணுங்க வெடிக்கறதுக்கும்-கிளாமர்
பொண்ணுங்க வெடிக்கறதுக்கும் உள்ள வித்யாசம்தான்.



3. இலியானா படம் போட்டிருக்கே இந்த வெடில?

’கேடி’ வெடி. கேடிப்பசங்க மட்டும் வெடிக்கற வெடி.



4. லவ்வர்ஸ் வெடியா இது?

ஆமா! இங்கே பற்ற வெச்சா ஊர் எல்லையைத் தாண்டிப்போய்
வெடிக்கும்.





5. பட்டாசுக் கட்டை அப்படியே பற்ற வைக்காம ஒவ்வொரு வெடியா
உருவி பற்ற வெச்சு வெடிக்கறீங்களே! ஏன்?

கண்ணா! கோழைங்கதான் கட்டோட வெடிப்பாங்க. வீரன் சிங்கிள்
சிங்கிளாத்தான் வெடிப்பான்.



6. இது அர்ஜூன் வெடியா?

ஆமா. பற்ற வெச்சா ‘வந்தேமாதரம்’-னு கோஷம் போட்டுக்கிட்டே வெடிக்கும்.



7. தீபாவளி அன்னைக்கு எதுக்கு அஜீத் வீட்டுக்கு கிளம்பிட்டே?

 ‘தலை’-க்கு எண்ணெய் தேய்ச்சுட்டு அப்புறமா குளி-னு சொன்னாங்க. அதான் ‘தல’ வீட்டுக்கு போறேன்.



8. கம்யூனிஸ்ட்ங்களைக் கண்டாலே தலைவருக்கு பிடிக்கறதில்லை.

அதுக்காக எந்தப் பட்டாசும் சிவப்புக் கலர்ல ரெடி பண்ணக்கூடாதுன்னா எப்படி?



9. சிவகாசி வெடி இருக்குங்களா?

சிவகாசி ஜெயலட்சுமி வெடிகூட இருக்கு.



10. அண்ணே! சிவகாசி வெடி குடுங்க.

அது பழசுங்க. சுறா வெடி புதுசு. அதை வாங்கிட்டுப் போங்க.



11. இணைய தளத்துல பிளாக்ஸ்பாட் [வலைப்பூ] ஆரம்பிக்கறவங்க எவ்வளவுதான் வெள்ளையா இருந்தாலும் அவங்களை ‘பிளாக்’கர்ஸ்-னு தான் சொல்லுவாங்க.  by  பிளாக் ஆரம்பிக்கும் போதே பிளான் பண்ணுவோர் சங்கம்.



12. போலீஸ் லஞ்சம் வாங்குனா லஞ்ச ஒழிப்பு போலீஸ் கிட்டே புகார் பண்ணலாம். லஞ்ச ஒழிப்பு போலீஸே லஞ்சம் வாங்கினா யார் கிட்டே போய் புகார் பண்றது?



13. திருச்சி மாவட்டத்துல சரக்கு சாப்பிடற ஆளுங்க அதிகம்-னு தலைவர் சொல்றாரே?

 ‘உறை’யூர் அங்கே தானே இருக்கு?


14.தலைவரு ஜிம்முக்கு போறாருன்னு எப்படி சொல்றே?


50 கிலோ எடை உள்ள அவரு 80 கிலோ எடை உள்ள அனுஷ்காவை அலாக்கா தூக்கிடுவேன்னு சவால் விடறாரே?



15. ஸ்டோரி டிஸ்கஷனை எப்பவும் நைட் டைம்லயே வைக்கறீங்களே, ஏன் டைரக்டர் சார்?

STORY KNOT (ஸ்டோரி நாட்) NIGHT-ல தான் KNIGHT (குதிரை) மாதிரி கிளம்பும்.



16. மன்னர் தாராபுரம் போயிருக்காரா? எதற்கு?

தாராபுரம் என்றால் அங்கே ஏகப்பட்ட அந்தப்புரம் இருக்கும் என்று எண்ணிவிட்டார்.



17. கூட்டணிக்காக அலையற ஆளு நான் இல்லை-னு தலைவர் சொல்றாரே?

ஆமா... அவரு வழக்கமா பொம்பளைக்காகத்தான் அலைவாரு.



18. இவதான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு, இவ அவளோட தங்கை...

ஓஹோ... உன்னோட நாளைய இயக்குநரும், நாளைய மயக்குனரும்-னு சொல்லு.


டிஸ்கி - தீபாவளி ஸ்பெஷல் ஜோக்கில் சம்பந்தமில்லாமல் எதற்கு அனுஷ்கா ஜோக்.அலாஸ்கா ரேங்க்கிங்கில் நான் ஒரு லட்சம் தொட்டதை விளம்பரம் பண்ணவேணாமா?

Sunday, October 31, 2010

ஜோக்ஸ்,ஜோக்ஸைத்தவிர வேறொன்றுமில்லை



1. ஆம்னி பஸ்-க்கு எதிர்ப்பதம் என்ன?

இல்லை நான் லாரி.


2. தலைவரே! நீங்க செஞ்ச ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை
கமிஷன் அமைக்கறாங்களாம்.

விடுய்யா, அவங்களுக்கு 10% கமிஷன் குடுத்தா பிரச்சனை தீர்ந்தது.



3.சச்சின் டெண்டுல்கருக்கும், நம்ம மன்னருக்கும் என்ன
வித்தியாசம்?

அவரு ஆட்ட நாயகன், இவரு ஓட்ட நாயகன்.


4. ஊலலலா-னு பாடிட்டு போறாரே உன் கணவர் அதுக்கு ஏன்
அவர் கேரக்டர் மேல சந்தேகப்படறே?

ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா-னு பொண்ணுங்ககூட
சிநேகம் இருக்குமோனு டவுட்.


5. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

ஆகும். பூனை கூட புலி கள்ளத் தொடர்பு வெச்சிருந்தா.


6. என் பையன் சிங்கக் குட்டி மாதிரி இருப்பான்.

அப்போ... மனுஷக் குழந்தை மாதிரி இருக்கமாட்டானா?


7. பாரதி கண்ட கனவு நனவு ஆகிடுச்சுனு தலைவர் குதிக்கறாரே?

அட நீ வேற, தலைவரோட சின்ன வீடு பாரதி கனவுகண்ட
மாதிரி அவரு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.



8. பதவிக்காக தலைவர் நாய் மாதிரி அலையறாரு...

அதுக்காக நாய் சேகர்-னு பட்டப்பெயர் வெச்சு அவரைக்கூப்பிடனுமா?


9. நம்ம டல் திவ்யா இப்போ தூள் திவ்யாவா மாறிட்டாளே?

சும்மாவா? தலைவருக்கு சின்ன வீடா ஆகிட்டாளே?


10. தலைவரே! கல்மாடி நிராகரிப்பு-னு நியூஸ்ல சொல்றாங்களே?

சரி... கல்மாடிக்கு பதிலா சாதா மாடி கட்டுனா போச்சு.



11. கைதிகளுக்கு சிறப்பு சலுகை வேணும்னு தலைவர் திடீர்-னு
போராட்டம் பண்றாரே?

அவரை அரெஸ்ட் பண்ணப் போறதா தகவல் வந்துச்சாம்.



12. என் மனைவி மாதிரி ஒருத்தியை பாக்கவே முடியாது.

ஏன்? அவங்க கூடப் பிறந்தவங்க யாருமே இல்லையா?


13. ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் என்ன வித்தியாசம்?

முதலிரவு-ஹனிமூன் டூர்.

14. உன் ஆளு உன்னை கட்டைல போறவனே அப்டினு திட்றாளே, ஏன்?

அவளோட அம்மாவை முதமுறை பார்த்தப்ப செம கட்டையா இருக்கே-னு கமெண்ட் அடிச்சுட்டேன்.



15. தலைவருக்கு ராசி பார்க்கற பழக்கமே இல்லையாமே?

ரெட்டை ஜடை வயசு படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆகுது.
இன்னுமா அந்தப்பட ஹீரோயினை பார்ப்பாரு?



16. சினிமாவுக்கே போகாத தலைவர் இந்தப்படத்துக்கு மட்டும்
வந்திருக்காரே?

“பட்டாப்பட்டி 50-50” அப்டினா ஏதாவது நிலம் பட்டா போட்டு
தருவாங்கனு நினைச்சுட்டாராம்.

டிஸ்கி 1  - படம் உதவி வி வி எஸ் கஜா (விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம்)

Thursday, October 28, 2010

டாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்


1.எந்திரன் படத்தில் விஜய் நடித்திருந்தால்....

கடவுள் படச்சதுலயே மொக்கையான ரெண்டே விஷயம் என்னனு தெரியுமா?

1.நீ    2  நான்   (கண்ணாடி முன் நின்று கொண்டு விஜய்)



2.போன வாரம் ஆனந்த விகடன் புக்குல மேட்டர் எல்லாம் நல்லாத்தானே இருந்தது,ஏன் சேல்ஸ் ரொம்பக்குறைஞ்சுது?


உனக்கு விஷயமே தெரியாதா?போன வார விகடன் அட்டைப்படத்துல நம்ம விஜய் இருந்தாரே,பாக்கலை?

3.ஏ ஆர் முருகதாஸ் நம்ம டாக்கூட்டரை ஹீரோவா போட்டா என்ன டைட்டில் வைப்பாரு? (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)

ஐந்து அறிவு ஜந்து

4.கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுல விஜய் பேசுனதுல ஏதோ கலாட்டாவாமே?

ஆமா,டாக்டர் பட்டம் மட்டும் குடுத்தா போதுமா?நர்ஸ் எங்கேனு கேட்டாராம்.


5.ஊர்ல  நாலு அஞ்சு அஜித் படம் பார்த்தவன் எல்லாம் ஜாலியா இருக்கான்,ஒரே ஒரு விஜய் படம் பார்த்துட்டு நான் படற அவஸ்தை இருக்கே.....




6.விஜய் - டைரக்டர் சார்,காவலன் பட கதையை இன்னும் நீங்க சொல்லவே இல்லையே?

டைரக்டர் - படத்தோட ஹீரோயின் கிட்டயும்,காமெடியன் கிட்டயும் சொல்லியாச்சு,போதாதா?

7. ராகுல் சார்,இளைஞர் காங்கிரஸ்ல ஏன் என்னை சேத்துக்க மாட்டேங்கறீங்க?

மிஸ்டர் விஜய்,படங்களை ஃபிளாப் பண்றது பத்தலையா?கட்சியையும் காலி பண்ணனுமா?

8. எஸ் ஏ சந்திரசேகர் - எப்படியாவது என் பையனை சி எம் சீட்டில் உட்கார வெச்சு அழகு பாக்கனும்.

பப்ளிக்- உங்க ஒருத்தரோட ஆசைக்காக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்க்கைல விளையாடனுமா?


9. ஆனந்த விகடன் பேட்டியில் விஜய் - நான் அப்பாவியா ,வெகுளியா நடிச்ச படம் எல்லாம் ஹிட்,காவலன்ல நான் ரொம்ப இஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்.


பப்ளிக் - அதை நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு பாக்கனுமா?


10. அதே ஆனந்த விகடனில் ஜெ விடம் விஜய் - அம்மா உங்க மேடைப்பேச்சை கேட்டேன்,அருமை,உங்களுக்கு ஏகப்பட்ட கூட்டம் கூடுதே?

ஜெ -நான் கூட உங்க படங்களை பார்த்தேன்,ஒண்ணு கூட உருப்படியா இல்ல,தியேட்டர் காத்து வாங்குது.