Showing posts with label சிம்பு. Show all posts
Showing posts with label சிம்பு. Show all posts

Wednesday, August 12, 2015

தன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது.......

'வாலு' படத்துக்கு விஜய்யின் தார்மீக ஆதரவு பெரிய உதவியாக இருந்தது என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 14ம் தேதி 'வாலு' படத்தை வெளியிட இருப்பதால், செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி.ராஜேந்தர். அச்சந்திப்பில் டி.ஆர் பேசியது:
"சினிமா துறை எக்கச்சக்கமாக மாறியுள்ளது. படத்துக்கான மினிமம் கேரண்டி தொகையை தர திரையரங்க உரிமையாளர்கள் தயாராக இல்லை. எனவே விநியோகஸ்தர்கள் தான் அனைத்து பணத்தையும் செலவழிக்க வேண்டியுள்ளது.
நேற்று வரை ’’வாலு’’ தயாரிப்பாளருக்கு பணப் பிரச்சினை இருந்தது. ஒரு வழியாக அனைத்தையும் நாங்கள் சரிகட்டியுள்ளோம்.
எனக்கு நடிகர் விஜய்யின் பால் பெரிய மரியாதை உள்ளது. அவர் நல்ல இதயம் கொண்ட தமிழர். விஜய் எனது பெரிய ரசிகர் என்பதை அவரது நண்பர்கள் சிலர் மூலம் அறிந்து கொண்டேன். நானும் அவருக்கு உண்மையிலேயே ஒரு ரசிகன்.
சினிமாவைச் சேர்ந்த யாரும் எந்த உதவியும் செய்யாத போது, விஜய் தனது மேனேஜர் பிடி செல்வகுமார் மூலமாக ’வாலு’ படத்துக்கு உள்ள சிக்கல்களை கேட்டறிந்தார். அவரது தார்மீக ஆதரவு பெரிய உதவியாக இருந்தது. பிடி செல்வகுமார் மற்றும் கோவையைச் சேர்ந்த விநியோகர் சிவாவிடம் பேசி ’வாலு’ படம் எந்த சிக்கலுமின்றி வெளியாக உதவி செய்யச் சொன்னார்.
அவர்கள் இருவரும் விஜய்க்கு தூதுவர்களைப் போல. அவர்கள் என்னுடன் நேற்று இரவு வரை இருந்து அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவியாக இருந்தனர்.
நான் யாரையும் குற்றம் சாட்டப் போவதில்லை. அடிக்கடி படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுப்பது வழக்கம் தான். எனவே அவர்கள் இன்னொரு படத்துக்கு அதிக அரங்குகளை ஒதுக்கியுள்ளனர். சென்னையை தவிர மற்ற ஊர்களில் ’வாலு’ படம் பெரிய அரங்குகளில் வெளியாகும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் பல படங்களை வெளியிடத் திட்டங்கள் உள்ளன. எனக்கு விஜய் நடித்து வரும் 'புலி' படத்த்தின் சேலம் மற்றும் திருநெல்வேலி வெளியீடு உரிமையை வாங்க ஆசையும் உள்ளது" என்று பேசினார் டி.ராஜேந்தர்.

நன்றி - த இந்து

Thursday, June 11, 2015

‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையும்’ - இயக்குநர் மணிகண்டன் பேட்டி

கனடா நாட்டின் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘காக்கா முட்டை’ தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்த விமர்சகர்கள், ‘இவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல, ஆனால்... பொழுதுபோக்கால் போதுமான அளவில் மகிழ்விக்கக்கூடிய தெருக்கோடி வசீகரர்கள்!’ என்று பாராட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டுத் தயாரிப்பில் விரைவில் தமிழகத்திலும் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் பேசியதிலிருந்து...
திரைப்பட விழாக்களை மனதில் வைத்துத்தான் இந்தப் படத்தை இயக்கினீர்களா?
பொழுதுபோக்குக்காக மட்டும் பாடல்கள் வச்சுட்டு டான்ஸ் பண்ற படங்கள் மீது எனக்கு விருப்பம் கிடையாது. தமிழ் ரசிகர்களுக்காகவே இந்தப் படத்தை இயக்கினேன்.
பாடல்கள், நடனம் பிடிக்காது என்று சொல்ல என்ன காரணம்?
பாடல் இருந்தால்தான் படம் பார்ப்போம் என்று ரசிகர்கள் அடம்பிடிக்கிறது இல்ல. அவங்களுக்கு பாட்டுல கதைய நகத்திட்டுப்போனா ரொம்பப் பிடிக்கும்.
சில கதைகளுக்குப் பாடல்களே மைனஸாக இருக்கும். கதையோட ஓட்டத்தைத் தடுக்கும். பாடல்களே தேவையில்லை என்று சொல்ல மாட்டேன். ‘காக்கா முட்டை’யில்கூட 4 பாடல்கள் இருக்கிறது. எல்லாமே மாண்டேஜ் பாடல்கள்தான். நல்ல ஒரு கதையில், பாடல்கள் கதையின் ஓட்டத்தைத் தடுக்கும். இந்த மாதிரிப் படங்களில் ரொம்ப அப்பட்டமாவே தப்பா தெரியும்.
வெற்றி மாறன், தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தது எப்படி?
என்னுடைய ‘விண்ட் (WIND), என்ற குறும்படத்தை ஒரு படவிழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பார்த்திருக்கிறார். என்னைக் கூப்பிட்டு இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு கேட்டார். நான் எழுதி வைச்சுருந்த ‘காக்கா முட்டை’ கதையைச் சொன்னேன். வெற்றி மாறன் கதையைக் கேட்ட உடனே, ஓ.கே. பண்ணிட்டார். தனுஷும் கதையைப் படிச்சுப் பார்த்துட்டு உடனே ஓ.கே. சொல்ல உடனே படப்பிடிப்புக்குக் கிளம்பிட்டோம்.
ஹீரோ இல்லாத இந்தப் படத்துல சிம்பு நடிச்சிருக்காராமே?
ஆமா! அவர் நடிகர் சிம்புவாகவே இரண்டு காட்சிகளில் வருவார். நான் முதலில் கதையை எழுதும்போதே, இந்த கேரக்டர் சிம்புதான் என்று எழுதிவைத்தேன். வெற்றி மாறன் பார்த்துவிட்டு எதுவுமே சொல்லவில்லை. தனுஷும் இணைந்து தயாரிக்கிறார் என்றவுடன், வெற்றி சாரிடம் கேட்டேன். ‘சிம்புனு எழுதி வைத்திருக்கேனே சார்’னு சொன்னேன்.
தனுஷ் படிச்சுப் பார்த்துட்டு, அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையே இல்ல. நானே சிம்புகிட்ட பேசுறேன்னு அவரே போன் பண்ணிப் பேசினார். தனுஷ் பேசிய அடுத்த நிமிடமே, ‘நான் பண்றேன்’னு சிம்புவும் சொல்லிட்டார். அரை நாளில் சிம்புவை வைத்துப் படப்பிடிப்பு முடித்துவிட்டோம்.
கமர்ஷியல், காமெடி, யதார்த்தம் - இதில் உங்க ஏரியா எது?
எதற்குள்ளும் நான் என்னை பிக்ஸ் பண்ணிக்க விரும்பல. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் படமாக எடுக்கவே ஆசைப்படுவேன். விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்று சோகத்தைத் திணித்து கதை பண்ணுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. யதார்த்தமான படங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மக்களுக்குப் பிடித்த மாதிரி, அவர்களுக்கு போர் அடிக்காத படங்களில்தான் என்னோட கவனம் இருக்கும்.
தரமான படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்குத் திரைப்பட விழாக்கள் மூலம் வருவாய் உண்டா?
இங்கு இருக்கிற மார்க்கெட்டைவிட, திரைப்பட விழா மார்க்கெட் என்பது பெரிது. இங்குள்ள தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எப்படித் திரும்ப எடுப்பது என்று யோசிப்பார்கள். அதை நாம் திரும்ப எடுத்துக் கொடுக்கணும். தயாரிப்பாளருக்குத் திரைப்பட விழாக்கள் மூலமாகவே போட்ட பணம் வருகிறது என்றால் அவங்க நம்மகிட்ட எதுவும் கேட்க மாட்டார்கள்.
நான் பண்ற ரெண்டு படங்களிலுமே மினிமம் கியாரண்டி இருக்கிறது. திரைப்பட விழாக்களில் இருக்கும் மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு படம் எடுத்தால், இன்னும் நிறைய உலக சினிமாக்களைத் தமிழில் உருவாக்கலாம்.
உங்களது அடுத்த படம்?
படத்துக்கு ‘குற்றமும் தண்டனையும்’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறேன். இதே தலைப்பில் ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல் இருக்கிறது. அந்த நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
விதார்த் நாயகன், நாடக நடிகை பூஜா நாயகி. முக்கியமான பாத்திரங்களில் நாசர், குரு சோமசுந்தரம் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசை. பின்னணி இசை மட்டும்தான். பாடல்கள் கிடையாது.



நன்றி -த இந்து

Saturday, March 28, 2015

கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன்? - சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் பேட்டி

  • சிம்பு, யுவனுடன்
    சிம்பு, யுவனுடன்
  • படம். எல்.சீனிவாசன்
    படம். எல்.சீனிவாசன்
  • மனைவி கீதாஞ்சலியுடன்..
    மனைவி கீதாஞ்சலியுடன்..
‘‘உண்மை இதுதான். தற்போதைய சினிமாவில் சுதந்திரம் அறவே இல்லை. நான் படம் எடுக்கத் தொடங்கிய 2000-ல் ஒரு ஆரோக்கியமான சூழல் இருந்தது. 100 படங்களில் 99 படங்கள் காமெடிப் படங்கள்தான் விற்கும் என்ற நிலை அப்போது இருந்ததில்லை ’’
ஒவ்வொரு முறையும் வெப்பம் தெறிக்கக் கோபத்தோடு பேட்டிக்குத் தயாராவதுதான் இயக்குநர் செல்வராகவன் ஸ்பெஷல். சிம்புவை வைத்து அடுத்து எடுக்கவிருக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளில் மூழ்கியிருந்தவர், ‘தி இந்து’வுக்காக அளித்த பேட்டியிலிருந்து...
‘இரண்டாம் உலகம்’ படத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இடைவெளியை எப்படி உணர்கிறீர்கள்?
தொடர்ந்து படம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? ஓடிக்கொண்டே இருக்கும்போது நின்று மூச்சு வாங்கிக்கொள்வோம் இல்லையா.. அப்படித்தான் இந்த இடைவெளியை எடுத்துக்கொள்கிறேன்.
‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வழியே ஏற்படுத்திய தாக்கத்தை, நீங்கள் புதிய களங்களில் உருவாக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ படங்களில் ஏற்படுத்தவில்லையே?
தொடர்ந்து காதல் படங்களையே கொடுக்க முடியாது. நான் இங்கே காதல் படங்கள் மட்டும் எடுப்பதற்காக வரவில்லை. அப்போது எனக்கு 22, 23 வயது இருக்கும். அதனால் சில படங்கள் அந்த வயது அனுபவத்தில் இருந்திருக்கலாம். அதையே தொடர்ந்தால் பணத்துக்காக மட்டுமே இயங்கும் ஆளாக மாறிவிடுவோம். அதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ஃபிலிம்மேக்கர் பல வகைப்படங்களைக் கொடுத்தே ஆக வேண்டும்.
உங்கள் படங்களைப் படமாக்கும்போது திரைக்கதையின் முதல் காட்சியில் தொடங்கி வரிசையான முறையில் படமாக்குவீர்கள் என்பது உண்மைதானா?
சில படங்களை அப்படித் தொட்டுத் தொடர்ந்திருக்கிறேன். அதுமாதிரி செய்யும்போது நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. படக்குழுவினர் எல்லோருடைய ஒத்துழைப்பும் அதற்கு முக்கியம். எல்லா தருணங்களிலும் அப்படிச் செய்ய முடியாத சூழலும் உருவாகும். தொடக்கத்தில் 15 முதல் 20 காட்சிகள் வரைக்குமாவது வரிசையாக எடுக்கும்போது கதையோடு நம்மை இணைத்துக்கொள்வது இலகுவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
படைப்பாளியின் சுதந்திரத்திற்குள் தணிக்கைக் குழு அதிகம் தலையிடுவதாகவும், படத்தை ஆராய்ந்து தேர்ந்த விமர்சனம் வைப்பவர்கள் அங்கே குறைவு என்றும் கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீகள்?
என் படங்களுக்கு சென்சாரில் இதுவரை எந்தப் பிரச்சினையும் எழுந்ததில்லை. அவர்கள் முன் வைக்கும் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கும்.
உங்கள் படங்களை மணிரத்னம் தொடர்ந்து பாராட்டிவந்திருக்கிறார். தற்போது அவரும் காதல் கதைக்குத் திரும்பியிருக்கிறார் என்று தெரிகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. வேறுவேறு மனநிலைகளில் கிரியேட்டர்கள் யோசிக்கத்தான் செய்கிறார்கள். காதல் கதைகளைக் கொடுக்க இது சரியான நேரம்தான். தற்போதைய சூழலில் காதல் படங்கள் எதுவும் இல்லை. காமெடிப் படங்களைத்தான் இழுத்துப்போட்டு இயக்குகிறார்கள். இப்போது காதலைத் தொட்டால் புதிதாகத்தான் இருக்கும்.
கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் பணியாற்ற முடிவெடுத்து படத்தின் ஆரம்ப வேலைகளில் இணைந்திருந்தீர்கள். திடீரென ஒரு கட்டத்தில் விலகியும் விட்டீர்கள். அந்தப் படத்தில் பணியாற்றியிருக்கலாமே என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நடக்காததைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. சினிமா எல்லோரும் சேர்ந்து பயணிக்கக்கூடிய விஷயம். சரியாக இல்லை என்றால் அதன் உறுதி கம்மியாக இருக்கும். ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் அடுத்ததை நோக்கி நகர்வதுதானே சரி.
இனி திரைப்படமே எடுக்க வேண்டாம் என்ற மனநிலையோடு பேட்டி கொடுத்தவர், நீங்கள். அந்த கோபம் எல்லாம் குறைந்துவிட்டதா?
எப்போதுமே என் கோபங்களுக்குச் சரியான காரணம் இருக்கும். இங்கே இருக்கும் சூழ்நிலை மீதுதான் என் கோபம். மும்பையில் சினிமா வேலை செய்யும்போது மரியாதை இருக்கிறது. இங்கே இல்லை. இது பணத்துக்கான தொழில் என்று 90 சதவீதம் ஆட்கள் பார்க்கிறார்கள். பணம் மட்டும்தான் சினிமாவா? பணம் அவசியம்தான். அதுவே முழுக்க அவசியமாகிவிடக் கூடாதே. என் கோபம் இதுதான்.
தனுஷின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கிறது. ஒரு அண்ணனாகத் தற்போது அவருடைய ஓட்டத்தை எப்படி கவனிக்கிறீர்கள்?
சின்ன வயதில் இப்படி இருந்தோம், அப்படிச் சுட்டித்தனம் செய்தோம் என்ற ஏக்கங்கள் இருக்கலாம். அதை எல்லாம் கடந்து எல்லோருக்கும் தனித் தனிக் குடும்பம், திசைகள் வந்துவிட்டன. அதைவிட ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு எல்லைக்கோடும் உருவாகியுள்ளது. அண்ணன், தம்பி என்பதை எல்லாம் கடந்து தனித் தனி இடம் இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும்.
சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிடுகிறீர்களே?
கூட்டமாக இருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. சின்ன வயதில் இருந்தே நான் இப்படித்தான். நாலு பேர் சுற்றி நின்றாலே எனக்குப் பிரச்சினை. நான் எனக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறேன்.
ட்விட்டரில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவது தொடர்பான பதிவுகளையே நிரப்புகிறீர்களே?
அது ஒரு வரம்தான். எவ்வளவு பேர் குழந்தையின் அருமையைப் புரிந்துகொள்கிறோம். பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காக நேரத்தை வீணாக்குவது விசேஷமானது. அதை விட்டுவிடக் கூடாது.
அவ்வளவு எளிதாகப் படப்பிடிப்புக்கு அழைத்து வர முடியாதவர் என்று கூறப்படும் சிம்புவை நீங்கள் இயக்க இருப்பதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது..
‘காதல் கொண்டேன்’ படம் இயக்கிய நாட்களில் இருந்தே சிம்புவைத் தெரியும். என்னையும்கூட, ‘இவன் அப்படி, இப்படி’ என்று கூறுகிறார்கள். சிம்புவையும் அதுமாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நெருக்கமான இரண்டு நண்பர்கள் சேர்ந்து இந்தப் படத்தில் பயணிக்கப்போகிறோம். அவ்வளவுதான்.
‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தினை உங்கள் மனைவி கீதாஞ்சலி இயக்குகிறார். படப்பிடிப்பில் உங்களையும் பார்க்க முடிகிறதே?
நான் ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள், ‘நான் படம் இயக்கப்போகிறேன்’ என்று ஒரு டீமோடு வந்து கேட்டாங்க. ‘ஓ தாராளமாக’ என்று கதையைக் கொடுத்துவிட்டேன். திரைக்கதை என்னோடது என்பதால் படப்பிடிப்பில் கதையில் ஏதாவது மாற்றம் வரும்போது நான் அங்கே இருந்துதானே ஆக வேண்டும்?
சிம்புவை வைத்துத் தொடங்கும் படத்தின் கதைதான் என்ன?
ஒவ்வொரு முறை ஒரு படம் செய்யும்போதும் நிறைய யோசிப்பேன். இதைத் தொடுவோம் எனும்போது எனக்கு முதலில் ஆர்வம் ஏற்பட வேண்டும். மீண்டும் ஒரு சோகமான காதல் கதையோ, பாதிக்கப்பட்ட மனதின் கதையோ எடுக்க முடியாது. இந்தப் படத்தில் என்னவெல்லாம் ஈர்க்க முடியும் என்று பார்க்கும்போது என்னோட தேடலும் அதை நோக்கியதாக இருக்கிறது. அப்படி ஒரு படமாகத்தான் இதுவும் வரும்.
விக்ரமை இயக்கப் புறப்பட்டு ‘லடாக்’ வரை படப்பிடிப்புக்கு போய் படத்தைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம் என்ன?
கதையை மாற்றிக்கொண்டே போகச் சொன்னார்கள். அது முடியாது என்று சொல்லிவிட்டேன். சிம்பிள். அவ்வளவுதான்.


நன்றி  - த  இந்து

Sunday, February 08, 2015

சிம்பு வின் மெண்ட்டாலிட்டி சரியா? தவறா? மக்கள் அலசல்

எனக்கும் இருக்கிறது கருத்து சுதந்திரம்: ட்விட்டர் எதிர்ப்பாளர்களுக்கு சிம்பு விரிவான பதில்

கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்' நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. அப்படம் பார்த்தவர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள்.
அஜித் ரசிகராக வலம் வரும் நடிகர் சிம்பு, படம் வெளியானவுடன் இயக்குநர் அட்லீ, அனிருத் ஆகியோருடன் இணைந்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 'என்னை அறிந்தால்' பார்த்தார்.
அதற்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் "ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ்ப் படம் பார்த்துள்ளேன். 'தல' அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்" என்று சிம்பு கருத்து தெரிவித்திருந்தார்.
சிம்புவின் இந்தக் கருத்தால் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உண்டானது. 'சிம்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று சாடும் வகையிலான ஹெக்டேக் ஒன்றை உருவாக்கி இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.
இந்த சர்ச்சை குறித்து சிம்புவிடம் கேட்டேன். அதற்கு, "நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. முன்பு தொடர்ச்சியாக நல்ல படங்கள் வந்து கொண்டிருந்தன. இப்போது எப்போதாவதுதான் நல்ல படங்கள் வருகின்றன.
சினிமாவில் நிறைய அழுத்தம் இருக்கிறது. 'யு' சான்றிதழில் மட்டும்தான் படம் இருக்க வேண்டும், காமெடியாக இருக்க வேண்டும், பேய் படம் என்றால் பார்க்கிறார்கள் இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது.
பணம் போடுகிற தயாரிப்பாளர்கள் அவ்வளவு பணம் செலவு செய்கிறார்கள். அந்தப் பணம் திரும்ப வருவதற்கான சூழ்நிலையும் தற்போது குறைவாக இருக்கிறது. நமது கட்டமைப்பு அந்த மாதிரி இருக்கிறது.
இந்த மாதிரியான நெருக்கடியான சூழலில், எல்லா படங்களிலும் குறைகள் என்பது இருக்கத்தான் செய்யும். குழந்தைகள் தவறு செய்யத்தான் செய்கிறது, அதற்காக அக்குழந்தையை அடித்து, துன்புறுத்தி, மிரட்டி சொல்லிக் கொடுப்பதில்லை. அக்குழந்தையிடம் நாம் எப்படி சொல்லிக் கொடுப்போம், அதுதான் என்னுடைய கருத்து.
'ஐ' படம் எவ்வளவு பிரம்மாண்டமாக ஒவ்வொரு ஃப்ரேமையும் எடுத்திருந்தார்கள். அதில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், அதை விட்டுவிட்டு போகலாம். இல்லையென்றால் சொல்கிற விதம் என்று ஒன்று இருக்கிறது. இது 'கேவலம்', 'வேலைக்கு ஆகாது' என்று சொல்லும்போது அவ்வளவு பணம் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவார்?
இதை நாம் சொன்னால், உடனே எங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா என்கிறார்கள். 'அஞ்சான்' படம் சரியாக போகவில்லைதான், இயக்குநர் லிங்குசாமி ஏதோ ஒரு இடத்தில் மிஸ் பண்ணிட்டார். உடனே லிங்குசாமியை அவ்வளவு கிண்டல் செய்தார்கள், அப்போது நான் ஏதாவது கேட்க முடியுமா, சொன்னேனா... இல்லையே. அது அவங்களோட கருத்து சுதந்திரம்தானே.
அதுபோலவே எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. நான் என் மனதில் தோன்றிய கருத்தைச் சொன்னால், அதை பெரிய பூகம்பமாக உருவாக்குகிறார்கள். அதான் ஏன் என்று தெரியவில்லை" என்றார் நடிகர் சிம்பு.

நன்றி - த இந்து 


  • பிடிக்காதவன மெண்டல் நு சொல்றது கருத்து சுதந்திரம் ..உங்களுக்கு பிடிச்சிருக்கு எல்லாருக்கும் பொதுவாக பிடிக்கும்னு சொல்லிட்டு போ ..அத விட்டுட்டு தேவையில்லாமல் வாய் சவடால் விட்டு வம்புக்கு இழுக்கிறது அப்புறம் கருத்து சுதந்திரம்னு படுத்துகிறது ..முன்னாடி எப்ப நல்ல படம் வந்துச்சு?..ஒரே மாறி படாத எடுத்து வச்சிட்டு நல்ல படம்னு சொல்லிகிறீங்க ..மேல் தட்டது மக்களை படம் எடுத்து ஓடும் போது அது நல்ல படம்..வெற்றிமாறன் சொல்வது போல் போர்முல படம் தான எடுத்தீங்க ..இங்கு உள்ள வாழ்க்கை முறையை வித்தியாசமான உத்தியுடன் காட்டினால் அது மொக்க படம்...நேர்மையா படம் எடுத்த ஓடும் போர்முல எல்லாம் மிக்ஸ் பண்ணா ஓடாது...
    Points
    175

    2 days ago ·   (32) ·   (4) ·  reply (0) · 
       

    •  Raghu Nathan at businessman 

      அப்போ எனோட கருது சுகதிரம் இது - - படம் ரொம்ப ரொம்ப சுமார் , (அருண் விஜய் - நல்ல நடிப்பு ), (அஜித்- பரவில்லை) ( த்ரிஷா & அனுஷ்க டோடல்லி வேஸ்ட்) லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்னோட பணம் வேஸ்ட். இதுக்கு பில்லா 2 -பரவில்லை.

      2 days ago ·   (90) ·   (34) ·  reply (2) · 



      • வில்லு, ஆதி?

        2 days ago ·   (17) ·   (8) ·  reply (0) · 


        • Prakash  

          முதலில் தமிழ் எழுத கற்றுக்கொள்ளுங்கள்

          a day ago ·   (2) ·   (1) ·  reply (0) · 



        • சிம்பு சார் சொன்னது சரியே....

          2 days ago ·   (24) ·   (72) ·  reply (0) · 


          • vasanth  

            படம் நல்ல இருக்குன நல்ல இருக்குனு சொல்லிடு போ.அத விடு படம் நல்ல இலன்னு சொல்றவங்கள நி எப்டி மெண்டல் நு சொல்லாம்..

            2 days ago ·   (41) ·   (4) ·  reply (0) · 


            • Karthik  

              சின்ன தல சொன்ன சரியாய் தன இருக்கும் நோ ப்ரொப்லெம் சிம்பு நாங்க இருக்கோம்

              2 days ago ·   (43) ·   (232) ·  reply (1) · 


            • Pravin  

              Ivar koorum karuthu sudandiram matravargalai batikakodatu oru madatai kuripitu adai pinpatrubavargal ellam mental endru vetru madatinar korinal natil pracanai varada. Karuthu endu enda karumatai vendumanalum kooralama?

              2 days ago ·   (2) ·   (7) ·  reply (1) · 


              • leon  

                Simbu sir appa kathi movie nalla padam illaya

                about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


              • vikki  

                இவருக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாம். அதற்காக அவருக்கு பிடித்ததெல்லாம் மற்றவர்களும் பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இவர் பாணியிலே சொன்னால், புத்தி உள்ளவர்கள் இது போல பிதற்ற மாற்றார்கள்

                2 days ago ·   (60) ·   (9) ·  reply (1) · 


                • abdul  

                  சூப்பர் விக்கி சிம்பு கு பிடித்தால் மட்டவற்கும் பிடிகவெஅண்டும் எஆன்று அவசியமில்லை

                  a day ago ·   (10) ·   (1) ·  reply (0) · 



                • நான் ஒத்துகொள்கிறேன். உங்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. நாங்கள் யாரும் தடுக்கவில்லை. அனால் நீங்கள் சொல்லும் கருத்துக்குள், கருத்தே இல்லையே. அதுதான் பிரெச்சனை. "மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்." இதில் என்ன கருத்து இருக்கிறது? மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் நல்லது எது, கேட்டது எது என சிந்திக்க கூட தெரியாது. இதில் என்ன கருத்து உள்ளது? சிம்பு அவர்கள் கருத்து உள்ள கருத்தை தெரிவித்தால் நாங்கள் யாரும் கடுப்பாக மாட்டோம். காரணமில்லாமல், கருத்தில்லாமல், எவரைப்பற்றியும் கவலைப்படாமல், கருத்தில்லா கருத்தை தெரிவித்தால் கடுப்பாகிபோவோம் நாங்கள்.
                  Points
                  2255

                  2 days ago ·   (91) ·   (19) ·  reply (3) · 



                  • மனநலம் பாதிக்க பட்டவர் என்று சொன்னது விஜய் ரசிகர்களை தான். அஜித்தின் எந்த படம் வந்தாலும் அவர்களுக்கு பிடிக்காது. படம் பார்க்காமலே படம் மொக்கை என்று கருத்து சொல்லும் மனநலம் பாதிக்க பட்ட விஜய் ரசிகர்கள் . சூப்பர் ஸ்டார் டைட்டில் விஜய்க்கு கிடைப்பதற்கு ரஜினியை கிண்டல் செய்பவர்களும் அவர்களே . ஆகா சிம்பு சொன்ன மனநலம் சரி இல்லாதவர்கள் அந்த விஜய் ரசிகர்களே..

                    a day ago ·   (30) ·   (26) ·  reply (1) · 


                    • anand  

                      அஜித் ரசிகர்கள் லேசுபட்டவர்கள் இல்லையே !!! விஜய் படம் வந்தால் அவர்கள் இதற்குமேல் எதிர்மறை கருத்தை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலே சொல்ல அரம்பிகிறதை எல்லோரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் . இரண்டு தரப்பும் இதை நிறுத்தவேண்டும்.

                      about 17 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 



                    • கருத்தே இல்லை என்றால் நீங்கள் நீங்கள் ஏன் கடுப்பாக வேண்டும்???? அதை கண்டுகொள்ளாமல் விடலாமே? உங்களுக்கு மட்டும் கருத்து சுதந்திரம் நடிகர்களுக்கு கடுப்பு சுதந்திரமா???

                      2 days ago ·   (12) ·   (21) ·  reply (1) · 



                      • சிம்பு மாதிரி நானும், "நீங்க சொல்றத சொல்லிட்டு போங்க நான் செய்யறத தான் செஞ்சிட்டு இருப்பன். நீங்க சொல்றத எல்லாத்தையும் காதில போட்டுக்க மாட்டன். அப்படியே தொடசிவிட்டுடு பொய்கிட்டெஇருப்பென்."

                        a day ago ·   (8) ·   (4) ·  reply (0) · 



                      • அருமை ...சரியா சொன்னீர்கள் ...

                        2 days ago ·   (16) ·   (7) ·  reply (0) · 



                      • உங்க படம் எந்த லிஸ்ட்ல இருக்குது ?
                        Points
                        135

                        2 days ago ·   (30) ·   (3) ·  reply (0) · 


                        • geethu  

                          ஆமா பா நாம எது சொன்னாலும் அப்படி தான் "காய்ச்ச மரம் தான் கல்லடி படும்"

                          2 days ago ·   (7) ·   (2) ·  reply (0) · 


                          • Kannan  

                            ஓடாத மொக்கை படங்களை "வெற்றி நடைபோடுகிறது"னு வாய் கூசாமல் சொல்கிறீர்களே.. பின் நாங்கள் எப்படி உண்மையை சொல்லாமல் இருக்க முடியும்? இக்காலகட்டத்தில் Television media is completely waste..
                            Points
                            3145

                            2 days ago ·   (21) ·   (7) ·  reply (0) · 



                            • "லூசு பெண்ணே" பாட்டைமனசில வச்சி பேசி இருப்பார்
                              Points
                              690

                              2 days ago ·   (12) ·   (2) ·  reply (0) · 



                              • தல படம் சூப்பர் நண்பர்களே சிம்புவுக்கு சப்போர்ட் பண்ணுங்க

                                2 days ago ·   (57) ·   (40) ·  reply (1) · 


                              • Ravi  

                                இப்போ தா நீ தெளிவா பேசி இருக்க , அது அவங்களுக்கு பொறுக்கல

                                2 days ago ·   (24) ·   (17) ·  reply (0) · 


                                • selva  

                                  இதே கருத்த மற்ற நடிகர்கள் படத்துக்கும் sollirunththa கருத்து ஏத்துக்கலாம் .

                                  2 days ago ·   (20) ·   (7) ·  reply (1) · 


                                  • Jebaraj  

                                    சிம்பு தல பேன் தல படம் பத்தி மட்டும் தான் சொல்லுவாரு

                                    a day ago ·   (12) ·   (13) ·  reply (0) · 


                                  • praveen  

                                    சும்மா வாய் இர்ருகுனு பேசகூடாது ........உங்க படத்ஹா மொதல பாத்துட்டு ஏன்னா நு சொல்லுங்க

                                    2 days ago ·   (20) ·   (4) ·  reply (0) · 


                                    • shankar  

                                      இந்த படம் நல்ல படம் என்று சொல்லலாம்.இதை ஒரு சினிமா பார்பவனாக மட்டும் சொல்ல முடியும்.ஒரு வெறி பிடித்த ரசிகன் எப்படி வேண்டுமானாலும் சொல்வான் அப்போது அதற்க்கு எதிராக கமெண்ட் வந்தாலும் பொருது கொள்ள தான் வேண்டும்.ஆனால் இந்த படம் வெகு நாளுக்கு பிறகு வந்த ஒரு நிஜமான நல்ல படம்.
                                      Points
                                      13610

                                      a day ago ·   (35) ·   (32) ·  reply (0) · 



                                      • நீ சொன்னா கரெக்டு தான் தல....

                                        a day ago ·   (23) ·   (12) ·  reply (0) · 


                                        • dhinesh  

                                          என் சிம்பு நீங்க அவளோ பெரிய அப்படேகேரா? நீங்க சொன்ன தமிழ் மக்கள் பார்த்திடு வாங்கனு நினைப்பா? முதல்ல உங்க படம் oduthanngu பாருங்க...அப்புறம் அடுத்த படம் பற்றி சொலுங்க....?திரு வாய் அவர்களே....என் கருத்து சுதந்திரம்....

                                          a day ago ·   (39) ·   (13) ·  reply (0) · 



                                          • இந்த போட்டோவை பார்த்தால் எனக்கு என்ன புரிகிறது என்றால், "நீங்க சொல்றத சொல்லிட்டு போங்க நான் செய்யறத தான் செஞ்சிட்டு இருப்பன். நீங்க சொல்றத எல்லாத்தையும் காதில போட்டுக்க மாட்டன். அப்படியே தொடசிவிட்டுடு பொய்கிட்டெஇருப்பென்."
                                            Points
                                            2255

                                            a day ago ·   (11) ·   (0) ·  reply (0) · 


                                            • Felix  

                                              சினிமா உலகத விட்டு வெளிய நீங்கலாம் வரவே மாட்டிங்கலாடா எப்போ தாண்டா திருந்த போறீங்க.. இந்தியால சினிமா உலகம் எப்போ இல்லாம போகுதோ அப்போ தாண்டா தன்னோட குடும்பத்த பத்தி நீங்கலாம் யோசிபிங்க... கலைய ரசிக மட்டும் செய்கடா நாசமா போரவங்கலா....

                                              a day ago ·   (56) ·   (2) ·  reply (0) · 



                                              • படம் பிடிச்சுருந்தா நல்லாருக்குநு சொல்லு.. ஒரு சிலர்க்கு பிடிக்கும்.. ஒரு சிலர்க்கு பிடிக்காது.. வேட்டையாடு விளையாடு .. காக்க காக்க .. வாரணம் ஆயிரம் கலந்து எடுத்தா 150 ருபாய் பணம் கொடுத்து பார்க்கும் போது பிடிக்காமல் தான் போகும்.. எனக்கு பிடிக்கல.. நான் மனநலம் பாதிக்க பட்டவனா.. நான் முதுநிலை பட்டதாரி.. பேங்க் ஒபிபிசெர் .. உன் கருத்து என்னையோ அடுதவரையோ பாதிக்க கூடாது..

                                                a day ago ·   (128) ·   (34) ·  reply (2) · 


                                                • Jebaraj  

                                                  உங்க போஸ்ட் முதல படிக்க முதுநிலை பட்டதாரி

                                                  a day ago ·   (16) ·   (21) ·  reply (0) · 


                                                  • eswar  

                                                    Superர் j

                                                    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


                                                  • Jebaraj  

                                                    Dear Friends and Haters, First one think all of them,,, Yennai Arindhaal film is going on a Rock .. Blockbuster film of 2015, This is telling on All Cinema welfares and Cinema Scientists, But some Irritate Persons speaking about Simbhu. That is ANIL Kunjukals playing.. Not carrying about Small Vgay Mama Fans. Thala fans support Simbhu

                                                    a day ago ·   (62) ·   (62) ·  reply (0) · 



                                                    • இவரு படத்த மன நலம் பாதித்தவன் பார்த்தாகூட செத்துருவான்
                                                      Points
                                                      3665

                                                      a day ago ·   (75) ·   (49) ·  reply (0) · 



                                                      • ஆமோதிக்கிறேன்

                                                        a day ago ·   (2) ·   (17) ·  reply (0) · 



                                                        • தம்பி டி இன்னும் வரல!!!! மனிதன்
                                                          Points
                                                          405

                                                          a day ago ·   (25) ·   (0) ·  reply (0) · 


                                                          • raghu  

                                                            சிம்பு சார் நீங்க அத சொல்லகூடாது உங்கள நம்பி நெறைய தயரிபளர்கள் கடன்ல இருகண்க அத பாருங்க 4 படத்துக்கு மேல பாதில நடிக்கமாஇருக்கு பொய் தொழில பாருங்க

                                                            a day ago ·   (50) ·   (3) ·  reply (0) · 



                                                            • சிம்புவுக்குக் கருத்து சுதந்திரம் இருக்கு என்பதை நாமும் ஒத்துக்குறோம். ஆனா ஒன்னு-அதே மாதிரி மத்தவங்களுக்கும் கருத்து சுதந்திரம் இருக்குமா இருக்காதா? சிம்பு ஒரு உதவாக்கரை என்று சொன்னால் எனது கருத்துச் சுதந்திரத்தை சரிதான் என்று ஏற்றுக்கொள்வாரா? சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம். அதை அந்த அளவில் விட்டு விட்டு வேறு வேலை இருந்தாப் போய் பாருங்கப்பா. எனக்கு ஒரு ஆசை. 40 வயதிற்கு மேற்பட்ட நடிகர்களை நடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒரே மூஞ்சியை திரும்ப திரும்பப் பார்ப்பதற்கு போர் அடிக்குது.கதாநாயகிகளை மாற்றுவது போல் நாயகர்களும் அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.கிழடு கெட்டை எல்லாம் குமரிகளோடு ஆடுறத பார்த்தா சகிக்கல.
                                                              Points
                                                              475

                                                              a day ago ·   (115) ·   (31) ·  reply (3) · 


                                                              • umar  

                                                                கரெக்ட் விஜய் அஜித் விக்ரம் ரஜினி கமல் எல்லாரும் 40 பிளஸ் இவங்க எஅள்ளரும் மாத்திடலாம்

                                                                a day ago ·   (21) ·   (4) ·  reply (1) · 



                                                                • பிடிக்கவில்லை என்றால் எதற்காக பார்க்கவேண்டும்? என்ன கட்டாயம்? வீட்டில் இருக்கலாமே?

                                                                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



                                                                • அய்யயோ என்னால சிரிப்பா அடக்கவே முடியலையே...

                                                                  a day ago ·   (8) ·   (5) ·  reply (1) · 


                                                                • vimal  

                                                                  அருமையான கருத்து....

                                                                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


                                                                • kalai  

                                                                  சிம்பு யு டோன்ட் வொர்ரி summa

                                                                  a day ago ·   (15) ·   (26) ·  reply (1) · 



                                                                  • டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி, டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி,

                                                                    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 


                                                                  • Kannan  

                                                                    ஏன் ஜால்ரானு புரியுதா? இவரும் கெளதம் மேனன்'ம் ரொம்ப நாட்களா தயாரிச்சுட்டு இருக்கிற "சட்டென்று மாறுது வானிலை" படத்துக்காக தான் இந்த ஜால்ரா..