Showing posts with label சர்ச்சை. Show all posts
Showing posts with label சர்ச்சை. Show all posts

Friday, October 26, 2012

மனுஷ்ய புத்திரனின் சின்மயிக்கு எதிரான நிலைப்பாடு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic4smqbzXhbxA3xZ5pMvEq6RlmHRlKZpPVx7Fi1L2gnAR18N0M0K4RJ10q6ybCd3N5Jq_J7sYBAWk1ChB9f3_vJzzI2yn_4iGlXB0R8098efXx4060TCYHD2lb-k3DbxFjtHgOTDtqeUC9/s1600/manushya+puthiran.jpgசின்மயி விவகாரம் பற்றி இனி எழுத நேரக்கூடாது என்று நேற்றிரவு கடவுளை பிரார்த்தித்துவிட்டு தூங்கப் போனேன். ஆனால் கடவுள் சின்மயி பக்கம் இல்லாததாலும் நேற்று நான் எழுதிய குறிப்பிற்கு நண்பர்கள் ஆற்றியிருக்கும் எதிர்வினை காரணமாகவும் சில வார்த்தைகள் மீண்டும் சொல்ல வேண்டியதாகிவிட்டது. ஒரு இளம் எழுத்தாளர் என் வாழ்க்கையில் முதன் முதலாக உருப்படியாக பேசுகிறேன் என்று பாராட்டுகிறார்.


 ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் சுஜாதாவிடம் இல்லாத ஆபாசமா சின்மயிடம் இருக்கிறது என்று கேட்கிறார். இதுபோன்ற அபத்த களஞ்சியங்களுக்கு இடையே நான் முகவும் மதிக்கும் வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்ற நண்பர்களும் இந்த விவாத்தில் பங்கேற்றிருப்பதால் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இருக்கிறது.



புதிய தலைமுறை, சத்யம் இரண்டிலும் நடந்த விவாதத்தில் பெண்கள் உடல் சார்ந்து ஆபாசமாக விமர்சிக்கப்படுவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறேன். சின்மயிக்கு செய்யப்பட்ட எதிர்வினையை நான் எந்த இடத்திலும் ஆதரிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை. இதில் சம்பந்தபட்ட இரண்டு தரப்புமே ஒரு விவாதத்தை நடத்துவதற்கான தகுதியற்றவர்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறேன்.



ஆனால் இந்த பிரச்சினை வெறும் பாலியல் விவகாரம் மட்டும் அல்ல. ஒரு இனப்படுகொலையை புலால் உண்ணும் பழகத்திற்கு இணையாக பேசுகிறார் சின்மயி. இது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்றும் புலால் உண்ணும் பழக்கமுள்ள என்னை புண்படுத்துகிறது என்றும் நான் காவல்துறையிடம் சென்றால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? இணையத்தில் மீனா கந்த கந்தசாமிமீது தொடுக்கப்பட்ட ஆபாசத் தாக்குதல்கள் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கபட்டு எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்?



இங்கு அரசியல் அதிகாரம், ஊடக அதிகாரம், காவல்துறை அதிகாரம், நீதிதுறை அதிகாரம் அனைத்திலும் சாதிய ரீதியான – சமூக பொருளாதார அந்தஸ்து ரீதியான பாரபட்சங்கள் மண்டிக்கிடக்கின்றன. இதைத்தான் நான் இந்தப் பிரச்சினையில் மைய்யபடுத்த விரும்புகிறேன்.



மீனவர் படுகொலை, இட ஒதுக்கீடு போன்றவை தமிழ் சமூகத்தின் அரசியல் சரித்திரத்திரம் சார்ந்த ஆதாரமான பிரச்சினைகள். கோடிக்கணகான மக்களின் உணர்வுகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக ஒருவர் எந்த ஒரு வரலாற்றுப் பார்வையும் சமூகப் பார்வையும் இல்லாமல் பேசுவது என்பது கருத்துச் சுதந்திரம் என்று மட்டும்தான் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?



ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா?



குஷ்புவின் மீது தமிழகம் முழுக்க தாக்குதல் தொடுக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் சின்மயி விவகாரத்தில் வெளிப்படும் இனவாதத்தையும் சாதிதிமிரையும் அதிகார வர்க்க தொடர்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளமல் அவர் மீதான பாலியல் விமர்சங்களை மட்டும் தனியாக எடுத்து விவாதிக்க முடியாது.



நீங்கள் தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் உங்கள் தலையில் தன் வீட்டு மாடியிலிருந்து குப்பையைக் கொட்டுகிறார். நீங்கள் அண்ணந்து பார்த்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறீர்கள். ஆனால் குப்பையைக் கொட்டுகிறவருக்கு அது அவருடைய உரிமை என்றும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியவர் மட்டும் சமூக விரோதி என்றும் விவாதிப்பது என்ன நியாயம்?



கூடங்குளத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய காவல்துறையினர் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?



எல்லாவற்றிலும் நுண் அரசியல் பேசும் நண்பர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினையில் சின்மயியின் மனோபாவம், காவல்துறையின் அதீத அக்கறை, இணையத்தின் மீது கண்காணிப்பையும் ஒடுக்குமுறையையும் கொண்டுவர விரும்பும் அரசு… இது போன்ற பிரச்சினைகளை எப்படிக் கையாள்கிறது என்பதையெல்லாம் இணைத்து பேச மறுப்பது ஏன்?



நான் சின்மயிக்கு ஆதரவாக தெருவில் நின்று போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் தனக்கு மாறான வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமும் கொண்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

வாசகர்கள் கருத்து


1.

Kraja Raja இது அவசர உலகம். முன்பெல்லாம் சாலையில் செல்லும் போதெல்லாம் யார் மீதும் தவறாக இடித்து விட்டால் "சாரி" கேட்போம்.
இப்போது அப்படி இல்லை நம் மீது தவறு இருந்தாலும் கண்ணு தெரியலையாஃபார்த்து போ என்கிறோம்.
வேணாம் வலிக்குது இத்தோடு விட்டுறுங்க
2.
Anbarasan Vijay இந்த வெளிப்படையான பகிரங்கமான கருத்தைதான் உங்களது முந்தைய தொலைகாட்சி நேர்காணலில் எதிர்பார்த்தேன், எந்த ஒரு கருத்தையும் எதற்காகவும் தயங்காமல் முன் வைக்கும் உங்களிடம் ஏதோ பின்வாங்குதல் இருப்பதாக நினைத்தேன், இந்த பதிவை படித்த பிறகு அந்த குறை தீர்ந்தது, சின்மயியினுடைய சாதிய ரீதியிலான கருத்துக்களால் பாதிக்கப் பட்ட ஆயிரமாயிரம் பேர்களில் நானும் ஒருவன், 
சின்மயி முற்போக்கு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவரது புகாரின் மீது காவல்துறை அதீத அக்கறையும், அவசரமும் காட்டியுள்ளது, இந்த அக்கறை ஏன் மீனாகந்தசாமி விவகாரத்தில் காட்டப் படவில்லை?,சாதீயம் எல்லா மட்டங்களிலும் தலை தூக்கி நிற்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம், உங்களது நிலைப்பாட்டை வழிமொழிகிறேன் உங்களோடு நானும் கைகோர்க்கத் தயார்
3.
Arul Ezhil நன்றி சார். ராஜன்லீக்ஸ், சரவணகுமார் அகியோரை யாரென்றே எனக்குத் தெரியாது. கிட்டத்தட்ட அவர்கள் கைதாகி இரண்டாம் நாள் வரை நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் அதன் பின்னர் வந்த செய்திகள் எல்லாம் இவர்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்த பிறகுதான் நான் எழுதினேன். உங்களைப் பொன்றோர் ஒரு தரப்பை ஆதரிக்காலம் எழுதுவது மன ஆறுதல் அளிக்கிறது.
4.
Mani Kandan ஒரு தனிப்பட்ட பகை, காழ்புணர்ச்சி, உயர் சாதி/மேட்டு குடி வளர்ப்பு முறை, சக நண்பர்கள் உசுப்பு - மொத்த உருவகம் சண்டை இட்ட இரு தரப்பினரும்.

இதில் சின்மை கை ஓங்கி இருபது அவரின் அதிகரவர்க்கத்துடன் இருக்கும் நெருக்கத்தை பட்டவர்தமாக வெளிபடுதிவிட்டார். இது சமூ
கத்துக்கு பெரிய சவால்.
இவருக்கு முன் உள்ள 19 வழக்குகள் பற்றி முச்சி விடாத ஜர்ஜ் - இவருக்கு மட்டும் வரிந்து கட்டுவதில் அப்பட்டமாக தெறிகிறது.

சின்மை அகம்பாவத்தில் பெரும் பங்கு - ஆஹா ஓகோ என்று பொய்யான தோற்றத்தை ஏற்படுத்திய காலன் போல் தோன்றி இருக்கும் வண்ணமிகு தொலைகாட்சி நிறுவனங்களை சேரும்.

பாடினால் / ஆடினால் எதோ உலகத்தில் பெரிய சாதனை புரிந்த போன்று ஒரு மாயை உருவாக்கும் தொழில்சாலையாக தொலைகாட்சி நிறுவனங்களை செயல்படுகின்றன. இவற்றின் இயங்கு தளம் சென்னை அதை சார்ந்த இடம் மட்டுமே, அதனால் தமிழகத்தின் மற்ற பகுதிகள் பற்றி புரிந்து கொள்ளும் தன்மை இவற்றில் உள்ள என்னோயோருக்கு தெரிவது இல்லை - சின்மை உட்பட.

அவர்கள் இதுதான் உலகம் என்று நம்புகிறார்கள், ஆனால் சமுகம் இதைவிட பெரியது, அதை அவ்வளவு எளிதாக நேர்கொள்ள முடியாது.இதை புரியாமல் இதற்கு முதல் பலி - சின்மை.

அதிகம் பாதிப்பு அடைவது சின்மை - அவரின் / அவரை போல் உள்ள சென்னை வாழ் மேட்டு குடி மக்களின் மறு முகம் கிழிந்து விட்டது.

இதனால் சின்மை - இனிமேல் தமிழகத்தின் செல்ல பிள்ளை இல்லை.

பெண்ணிடம் கிழ்த்தரமாக நடந்துகொண்டவன் தமிழன் இல்லை.

இதை தவிர, இந்த விசயத்தில் இரு தரப்பினர் பற்றி விவாதிக்கும் அளவுக்கு தகுதி இல்லை. இருவரும் வேவ்வேறு குட்டையில் ஊறின ஒரே மாதிரி மட்டைகள்.

ஒருவேளை நீங்கள் அய்யா ராகவா ஐயங்கார் வழிமுறை இருந்தால், அவர் பெயருக்கு களங்கத்தை செய்யதிர்கள், தயவுசெய்து.

அய்யா ராகவா ஐயங்கார் அவர்களின் தமிழ் தொண்டு, பற்று கருதி - சின்மை மன்னிப்போம், மறப்போம் - அவர் பாடலை புறக்கணித்து.

நன்றி.
5. Mansoor Ali Khan சின்மாயி செய்தது தவறு என்று கூறுபவர்கள் - ராஜன் செய்ததும் தவறு என்று ஒத்துக்கொள்ளதான் செய்கிறார்கள், மேலும் இது திசை திருப்பபட்ட வழக்கு என்பது தான் அவர்களின் வாதம், ஆனால் சிம்னயின் ஆதரவாளர்கள் - அந்த பெண் கூறியது தவறு என்று ஒத்துக்கொண்டதாக தெரியவில்லை - இது ஆணவத்தின் வெளிபாடாக தான் பார்க்கமுடிகிறது
6. Prasanna Kumar ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா? - உங்களின் இந்த கட்டுரை சின்மயி விவகாரம் என்பதையும் மீறி நீங்கள் சொன்ன எந்த வாக்கியம் பொதுவானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்
நன்றி - மனுஷ்ய புத்திரன் ஃபேஸ் புக்  



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html


டிஸ்கி 7 -ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 8- லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள் http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html


டிஸ்கி 9 - கோர்ட்டில் சின்மயி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் | அட்ரா சக்க-http://www.adrasaka.com/2012/10/blog-post_6680.html



Wednesday, October 06, 2010

எந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிடம் நான் கேட்கும் சில கேள்விகள்


 
சமீபகாலமாக அமைதியாக இருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.2 தினங்களுக்கு முன் அவரது பிளாக்கில் அவர் தெரிவித்த கருத்து



கோபமான இரண்டு பேர்…

ரத்த அழுத்தத்தை சோதிப்பதற்கு ஒரு கருவி இருக்கிறதல்லவா, அதைப் போல் கோபத்தை அளப்பதற்கும் ஒரு கருவி இருந்தால் இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம்.  ஒருவர், கமல்ஹாசன்.  காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ்.  இரண்டாவது, சாரு நிவேதிதா.  அடியேனின் கோபத்திற்குக் காரணம், எந்திரன் என்னை ஒரு தேசத் துரோகியாக மாற்றி விட்டது…
(எந்திரன் படத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தின் ஆரம்பப்பகுதி இது.  மீதியை நவம்பர் உயிர்மை இதழில் காண்க)
4.10.2010.
1.50 p.m.


எனது கேள்விகள்


1.தமிழக ரசிகர்களுக்கு எந்தப்படத்திற்கு எந்தளவு மரியாதை தரவேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.முதல் மரியாதை,புது வசந்தம் போன்ற விளம்பரம் இல்லாமல் சாதரணமாக ரிலீஸ் ஆன படங்களை அவர்கள் கொண்டாடவில்லையா?கதை சரி இல்லாத ஸ்டார் வேல்யூ உள்ள படங்களான ஆளவந்தான்,பாபா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வவில்லையா?

2.ரஜினியை கேவலமாக திட்டும் நீங்கள் எழுதும் படைப்புகள் அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து படிக்க முடியுமா?ரஜினி படத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம்.

3.சக எழுத்தாளர்,அமரர்,சீனியர் என 3 கிரேடுகளில் எதிலாவது நீங்கள் மரியாதை செய்தீர்களா?அமரர் சுஜாதாவிற்கு உங்களைப்போல் 10 மடங்கு வாசகர்கள் இருப்பது தெரியாதா உங்களுக்கு?


4.ஃபேன்சி பனியன் நாவல்.ஜீரோ டிகிரி நாவல்,மற்றும் டைட்டிலையே சொல்லக்கூசும் நாவலைப்படைத்த நீங்கள் ஒரு ஜனரஞ்சகமான படத்தை குறை கூறுவது சரியா?

5.படத்தை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.ஆனால் தனிப்பட்ட விரோதம்,பொறாமை இவற்றின் காரணமாக இழிவுபடுத்தி எழுதுவது சரியா?படைப்பாளர்கள்.எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் என அனைத்து தரப்பு பாராட்டையும் பெற்ற களவாணி படத்தையே குறை சொன்னவர் ஆச்சே நீங்கள்?

6.பரபரப்பாக ஏதாவது எழுதி புகழ் பெறும் ஆசையில் மற்றவர் உள்ளங்களை காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்?

Tuesday, October 05, 2010

எந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும்,ரஜினி ரசிகர்களின் பதிலடியும்

சர்ச்சை 1 - ரஜினியின் அறிமுகக்காட்சி மிக சாதாரணமாக இருக்கே,ஏன்?ஒரு மாஸ் ஹீரோ இப்படித்தான் சிம்ப்பிளாக இண்ட்ரடக்‌ஷன் ஆவதா?

பதிலடி - கதையும்,சூழ்நிலையும் அனுமதித்தால் மட்டுமே ஹீரோவுக்கான பில்டப் தர முடியும்.பாட்ஷா,படையப்பா,மன்னன் மாதிரி சவால் விடும் ஆக்‌ஷன் கதை என்றால் ஓப்பனிங் ஃபைட் அல்லது பில்டப் இண்ட்ரடக்‌ஷனுக்கு சான்ஸ் உண்டு.ஏன் கமலின் லேட்டஸ்ட் படமான உன்னைப்போல் ஒருவனில் சர்வ சாமான்யனாக மார்க்கட் போகும் சராசரி மனிதன் போல் அறிமுகம் ஆகவில்லையா?அன்பே சிவம்,மகாநதி,உன்னைப்போல் ஒருவன்,ஹேராம் உட்பட பல படங்களில் ஹீரோ சாதரணமாக அறிமுகம் ஆகவில்லையா?அவ்வளவு ஏன்?ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வசந்த் இயக்கிய வேதம் படத்தில்,விஜய்காந்த் ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படத்தில் சாதரணமாக அறிமுகம் ஆகவில்லையா?எப்படி அறிமுகம் ஆகறார்ங்கறது முக்கியம் இல்லை.


சர்ச்சை 2 -ரோபோ கேரக்டரில் ரஜினியின் நடிப்பில் லேசாக செயற்கை இழை தட்டுகிறது.காமெடி இயல்பாக வரவில்லை.கமல் அந்த கேரக்டரில் இதை விட சிறப்பாக நடித்திருக்க முடியும்.

பதிலடி - யார் வேணாம்னு தடுத்தது?வந்த வாய்ப்பை கோட்டை விட்டுட்டு இப்போ லபோ திபோனு அடிச்சுக்கிட்டு என்ன பிரயோஜனம்?சயிண்ட்டிஸ்ட் கேரக்டரில் கமல் நடிச்சிருந்தா இந்தளவு மாஸ் கிடைச்சிருக்குமா?ஓப்பனிங்க் இவ்வளவு பிரம்மாண்டமா வந்திருக்குமா?


சர்ச்சை 3 - கருணாஸ்,சந்தானம் இருவருக்கும் சரியான வாய்ப்பு தரப்படவில்லை.சும்மா வந்துட்டு போறாங்க,இன்னும் காமெடியில் அவங்களை யூஸ் பண்ணி இருக்கலாம்.

பதிலடி - படத்தின் காமெடி போர்ஷனை ரோபோ ரஜினி (சிட்டி) டாமினேட் செய்வதால் அப்படி தோன்றி இருக்கலாம்.ஃபுட்டேஜ் பிராப்ளமாகக்கூட இருக்கலாம்.(அதாவது படத்தின் நீளம் கருதி காமெடி போர்ஷனை குறைத்தல்).இதே பிரச்சனை சிம்புவின் மன்மதன் படத்தின் போதும் வந்தது,கவுண்டமணியின் காமெடிகாட்சிகள் பல வெட்டி எறியப்பட்டன.பொதுவாக ஒரு படத்தில் நீளம் அதிகமாக இருந்தால் அதற்கு முதலில் பலி ஆவது காமெடி காட்சிகளே.


சர்ச்சை 4 - ஐஸ்வர்யாராய்க்காக காத்திருந்ததால்தான் இந்தப்படம் இவ்வளவு தாமதமாக வந்தது.ராவணன் பட ஷூட்டிங்கில் அவர் இருந்ததால் கால்ஷீட் பிராப்ளம் வந்தது.ஒரு சூப்பர்ஸ்டார் படம் ஹீரோயினுக்காக வெயிட் பண்ணலாமா?ஏன் கோலிவுட்டில் வேறு நடிகைகளே இல்லையா?

பதிலடி - ஐஸ்வர்யாராயுடன் ஜோடி சேர வேண்டும் (படத்தில்தான்)என்பது ரஜினியின் நீண்ட நாள் ஆசை.பல படங்களில் அதற்கான முயற்சி செய்யப்பட்டது.ஆனால் இப்போதுதான் கை கூடி வந்தது.தசாவதாரம் படத்தில் அசின்தான் கமலுக்கு ஜோடி.ஆனால் மும்பை மார்க்கெட்டுக்காக கமல் மல்லிகா ஷெராவத்தை ஊறுகாய் ஆக்கவில்லையா?அவருக்காக 2 மாதங்கள் காத்திருந்து ஷீட் பண்ணவில்லையா?விக்ரம் படத்தில் அம்பிகா,லிஸி என 2 ஜோடி இருந்தும் டிம்பிள் கபாடியாவுக்காக 3 மாதங்கள் வீணாக்கவில்லையா?ஹேராம் படத்தில் ராணி முகர்ஜி கால்ஷீட்டுக்காக காத்திருக்கவில்லையா?



 



சர்ச்சை 5 - படத்தில் கடைசி 20 நிமிட கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார்தான்.ஏதோ கார்ட்டூன் சேனல் பார்ப்பது மாதிரி இருக்கே தவிர சிலாகிக்க முடியவில்லையே?ராமநாராயணன் பட காட்சிகள் போல்,தான் இருக்கே தவிர ஷங்கரின் பிரம்மாண்டம் இல்லையே ,ஏன்?

பதிலடி - ஆளவந்தான் படத்தில் மணிஷா கொய்ராலா அடிபடுவது மாதிரி சீன் 15 நிமிடம் கார்ட்டூனாகவே காண்பிக்கப்படவில்லையா?அப்போது ரசிகர்களும் ,பத்திரிக்கைகளும் எள்ளி நகையாடவில்லையா?அதற்கு ஒண்ணும் இது மோசமில்லை.தசாவதாரம் படத்தில் கமலின் பல கேரக்டர்களுக்கான மேக்கப் ஏதோ மாறுவேஷப்போட்டிக்குத்தயார் ஆவது போல் அன் இயற்கையாக (நன்றி - சுஜாதாவின் வார்த்தை உபயோகம்) இருந்ததே?அந்தளவு மோசமில்லை.

சர்ச்சை  6 - படத்தின் டிக்கட் ரூ 300 என நிர்ணயித்திருக்காங்களே?இது ஓவரா இல்லை?ரசிகனை ஏமாத்தற வேலை இல்லையா?

பதிலடி -நாங்க யாரையும் கட்டாயப்படுத்தலையே?வீடு வீடா வந்து கையைப்பிடிச்சு இழுத்து இந்தப்படத்தை பார்த்தே ஆகனும்னு சொல்லலையே.ரேட் அதிகம்னு நினைக்கறவஙக ஏம்ப்பா வர்றிங்க?கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா.பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்.மார்க்கெட் இருக்கு,ரேட் ஃபிக்ஸ் பண்றான்.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,ரிசல்ட் தெரியும் முன் வசூலை அள்ளிக்கொள்.


சர்ச்சை 7 -படத்தில் பஞ்ச் டயலாக்ஸ் இல்லையே?ரஜினியின் ஸ்டைலும் மிஸ்ஸிங்க்.படம் பார்த்தவங்க ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இல்லைனு சொல்றாங்களே?

பதிலடி - இதே ஷங்கரின் சிவாஜி படத்துல ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்ஸ் வைக்கலையா?மொட்டை பாஸ் ஸ்டைல்,மெயின் ஹீரோ ஸ்டைல்னு வெரைட்டியா கலக்கலியா?இதுல கதை அனுமதிக்கலை.ஒரு சயிண்டிஸ்ட் என்ன பஞ்ச் டயலாக் பேசிவிட முடியும்?அப்படியே பேசினாலும் அது நகைப்புக்கு இடம் ஆகி விடாதா?அதையும் தாண்டி ரோபோ ஒரு இடத்தில் “ரோபோ” என ஸ்டைலாக சொல்வது போதுமே?
மகாநதி படத்தில் ஏன் பிரேக் டான்ஸ் வைக்கலைனு கேக்கமுடியுமா?



சர்ச்சை 8 - படத்தில் ரஜினியின் டாமினேஷன் அதிகமா இருக்கே?

சந்திரமுகி படத்தில் ஜோதிகா,வடிவேல் 2 கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லையா?அதில் ரஜினி அடக்கிதானே வாசித்தார்?வேட்டையன் கேரக்டரில் 10 நிமிஷத்தில் கலக்கவில்லையா?கதை,திரைக்கதைக்குத்தகுந்தாற்போலத்தான் எல்லாம்.

ஏன் இதே கமல் குருதிப்புனல் படத்தில் அர்ஜூனை டம்மி பண்ணவில்லையா?வெற்றி விழா படத்தில் பிரபுவை இருந்த இடம் தெரியாமல் ஆக்கவில்லையா?அன்பே சிவம் படத்தில் மட்டுமே மாதவனுக்கு சரி சம கேரக்டர் குடுத்தார்,மற்றபடி கடந்த 15 வருடங்களில் கமல் தனக்கு நிகரான ஒரு கேரக்டரை யாருக்கும் தரவில்லை.தான் மட்டுமே தனித்து தெரிய வேண்டும் என நினைத்தார்.



ஆனால் ரஜினி மன்னன் படத்தில் விஜயசாந்திக்கு தன்னை விட அதிக வாய்ப்பு குடுத்தார்,அவர் கையால் அறை கூட வாங்கினார்.படையப்பா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனுக்கு வலிமையான கேரக்டர் தந்தார்.இந்தப்படத்தில் 2 கேரக்டர் என்பதால் பார்வையாளனுக்கு ஆக்கிரமிப்பு போல் ஒரு மாயத்தோற்றம் தெரிகிறது,அவ்வளவுதான்..


டிஸ்கி -இந்தப்பதிவைப்படித்த அனைவருக்கும் ஒரு தகவல்.யாரும் இப்படி பேசிக்கொள்ளவில்லை,நானே கமல் ரசிகனாக் இருந்து எனக்குத்தோன்றிய கேள்விகளை எழுப்பி ,ரஜினி ரசிகனாக இருந்து பதில் அளித்துக்கொண்டேன்.நான் உண்மையில் கமல் ரசிகனும் அல்ல,ரஜினி ரசிகனும் அல்ல,சினிமா ரசிகன்,நல்ல சினிமா அது யார் நடித்தாலும் பார்ப்பவன்.

டிஸ்கி 2 - கோபத்தில் மைனஸ் ஓட்டு போடும்  மைனாரிட்டி மைனர்கள்  தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை தேடி குழம்ப வேண்டாம்.பதிவின் டைட்டிலை ஒரு கிளிக் செய்தால் போதும், தமிழ்மணம் தெரியும்,நீங்கள் மைனஸ் ஓட்டைப்போட்டு ஜென்ம சாபல்யம் அடையுங்கள்.

Thursday, September 02, 2010

சிந்துசமவெளி - நாகரீகமா?அநாகரீகமா? 18+

22 வருடங்களுக்கு முன் ஈரோடு  ரவி தியேட்டரில் (18. 6.1989) மழு என்ற மலையாளப்படம் ரிலீஸ் ஆச்சு.தமிழில் மாமனாரின் இன்ப வெறி என இவர்களாகவே மொழி பெயர்த்திருந்தார்கள்.கிட்டத்தட்ட அதே மாதிரியான கதை அமைப்பில் நாளை ரிலீஸ் ஆகும் இந்தப்படமும் சேரும்.

இந்தப்படத்தில் 2 வெவ்வேறு துருவங்கள் இணைகின்றன.மிக கவுரவமான எழுத்துக்களுக்கும்,நுண்ணிய மனித உணர்வுகளின் நுட்பமான தருணங்களை நாவலில் வடிப்பவருமான எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதி இருக்கிறார்.இவர் எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்த லிஸ்ட்டில் விரைவில் வர இருப்பவர்.இவரது எழுதும் வேகம் அளப்பரியது.22 வருட பத்திரிக்கைத்துறை அனுபவத்தில் இவரைப்போல் சலிக்காமல் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுபவரை நான் கண்டதில்லை.

இயக்குநர் சாமி உயிர் படம் மூலம் அண்ணி -கொழுந்தன் உறவில் ஏற்படும் ஒரு சிக்கலான தருணம் பற்றி படம்  எடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர்.படத்தில் காட்சி ரீதியாக ஆபாசம் இல்லை என்றாலும் கருத்து ரீதியாக கூட்டுக்குடும்பங்களிடையே பெரிய ஒரு சுணக்கத்தை ஏற்படுத்த வல்ல பாம் (படம்)அது.2வது படம் மிருகம் ஷீட்டிங்க் டைமில் நாயகி பத்மப்ரியாவை பளார் என அறைந்து ஒரு வருட காலம் டைரக்ட் பண்ண தடை பெற்றவர்.


இப்படி 2 வேறு வேறு துருவங்கள் இணையும் இந்தப்படம் என்ன மாதிரி கதை?

ரஷ்ய மொழியில் வெளி வந்த 3 காதல் கதைகள் என்ற நூல் தொகுப்பில் முதல் காதல் என்ற குறு நாவலே ஜெயமோகன் கை வண்ணத்தில் படம் ஆகி இருக்கிறது.
இளம் காதல் ஜோடி திருமணத்திற்குப்பின் திடீர் என ஒரு கட்டத்தில் நாயகன் ஹரீஸ் காணாமல் போகிறார்.அவர் என்ன ஆனார்?உயிருடன் உள்ளாரா ,இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில் நாயகி அனகா மாமனார் (ராணுவ மேஜர் ரிட்டயர்டு) உடன் தொடர்பு ஏற்படுகிறது.திடீர் என காணாமல் போனதாகக்கருதபட்ட நாயகன் வருகிறான்.இப்போது நாயகியின் நிலை என்ன?யாருடன் ஜோடி சேர்கிறாள்?மாமனாருக்கு கிடைத்த தண்டனை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

ஹீரோயின் கேரளத்துப்பார்ட்டி போல.நல்ல கவிதை பேசும் கண்கள்,நடிக்க பல சீன்களில் வாய்ப்பு.இந்தப்படத்துக்கு நல்ல விளம்பரம் ,தியேட்டர்களில் வைக்கப்பட்ட ரிச்சான ஸ்டில்கள் பி சி செண்ட்டர் ரசிகர்களை கவர்வதாக இருந்தன.ஒளிப்பதிவு தரமாக இருந்தது.மாமனாரின் அறிமுகக்காட்சியில் கமாண்டோ படத்தில் அர்னால்டு ஸ்வார்செனேகர் விறகு வெட்டி எடுத்துப்போவது போல் (பைசெப்ஸ் காண்பிக்கும் ஆண்மை தெறிக்கும்)சீனை சுட்டு ஏற்கனவே விஜய்காந்த் உளவுத்துறையில் சீன் வைத்திருந்தாலும் சாமி அது பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் அந்த சீனை சுட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா நல்ல ஆரோக்கியமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.நாடோடிகள்,சுப்ரமணியபுரம்,அங்காடித்தெரு
,களவாணி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் சூப்பர் ஹிட் ஆகி புதுப்புது டைரக்டர்களை,புது கதையம்சமான படங்களை கோடம்பாக்கம் வரவேற்கத்தயாராகி வரும் இந்த நேரத்தில் சாமி மதிரி பெண்ணியத்தை கொச்சைப்படுத்துகிற ஒரு படைப்பாளியின் படைப்பு மக்களிடையே வரவேற்பு பெறாமல் போவதே நல்ல படைப்புகளை விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
  இயக்குநர் சாமி மீது தனிப்பட்ட பகையோ,கருத்து வேற்றுமையோ எனக்கு கிடையாது.நான் இன்னும் படமே பார்க்கவில்லை.ட்ரைலர் மட்டுமே பார்த்தேன்.மேலும் சில தகவல்கள் சினிமாத்துறையில் உள்ள உதவி இயக்குநர்கள் தந்து  உதவினார்கள்.சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் போராடும் பெண்ணிய அமைப்புகள் இந்தப்படம் பற்றி என்ன கருத்து கூறுவார்கள் என்பது நாளை தெரிந்து விடும்.