Friday, February 17, 2023

பகாசூரன் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் டிராமா)

 


2016ம்  ஆண்டு  பழைய  வண்ணாரப்பேட்டை என்னும்  சுமார்  ரக  அரசியல்  படம்  தந்தார் , நான்கு  வருட  இடைவெளிக்குப்பின் 2020 ல்   திரவுபதி  என்னும்  சாதி   ரீதியிலான படம்  தந்தார் , இது சமூக   வலைத்தளஙகளில்  பரபரப்பாக  பேசப்பட்டது . 2021ல்  இவரது  மூன்றாவது  படமாக  ருத்ர தாண்டவம் எனும்  ஆக்சன்  த்ரில்லர் வெளியானது .இதுவும்  சுமார்  ரகமே. . இவர்  மீது  விழுந்த  சாதி  ரீதியான  விமர்சனங்களுக்குப்பின்  (  பா  ரஞ்சித்  போலவே  இவர்  படங்களில்  சாதியை  வலுக்கட்டாயமாக  திணிப்பவர் என்னும்  விமர்சனம்  வந்தது)  இப்போது  2022 ல்  சாதியப்படமாக  இல்லாமல்  ஒரு  ரிவஞ்ச்  த்ரில்லராக  இந்தப்படத்தை  தந்திருக்கிறார். இது  எப்படி  வந்திருக்கிறது  என  பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் நெ1  முன்னாள்  ராணுவ  மேஜர். இப்போது  ஓய்வு  பெற்று ஒரு  யூ  ட்யூப்  சேனல்  நடத்தி வருகிறார். மொபைல்  ஆப்  மூலம்  நிகழும்   பாலியல் குற்றங்கள்  பற்றி  அப்டேட்டுவது  அவரது  யூ  ட்யூப்  சேனலில் செய்யும்  பணி . அவரது  அண்ணன்  மகளின்  தற்கொலைக்கு  காரணம்  ஆனவர்களை  தேடிக்கொண்டு  இருக்கிறார். அவரது  அண்ணன்  மகளின்  செல் ஃபோன்  அவருக்குக்கிடைக்கிறது , அதை  செக்  பண்ணிப்பார்க்கும்போது  சில  அதிர்ச்சியான  வீடியோக்கள்  கிடைக்கின்றன. அதன்  மூலம்  அவர்  குற்றவாளிகளை  அடையாளம்  காண  முடிகிறது 


 நாயகன்  நெ 2   ஒரு  சிவ  பக்தர் .கடலூரில்  இருந்து  சேலம்  வந்து  ஒரு  கோயிலில்  இறை  பணி , சேவை  செய்து  கொண்டிருப்பவர் . இவர்  தொடர்ந்து  மூன்று  கொலைகளை  கொடூரமாக  செய்து  வருகிறார். ஒரு  கல்லூரியின் பேராசிரியர் , விடுதியின்   லேடி  வார்டன் , காலெஜ்  வாட்ச்மேன்  என அடுத்ததுத்து  கொலைகள்  செய்கிறார். இவர்  எதற்காக  அநத  மூன்று  கொலைகளையும்  செய்தார்?நாயகன் நெ1  நாயகன்  நெ  2  இருவரும்  எந்தப்புள்ளியில்  இணைகிறார்கள்  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  நெ 1  ஆக  சதுரங்க  வேட்டை  புகழ்  நட்டி  எனும் நட்ராஜ், துடிப்பான  நடிப்பு . கச்சிதமாக  நடித்திருக்கிறார்.


நாயகன் நெ 2  வாக  இயக்குநர்  செல்வராகவன்  அமைதியான  பக்தராகவும், ஆவேசமான  கொலைகாரராகவும்  மாறுபட்ட  நடிப்பை  தர  முயன்றிருக்கிறார். அண்டர்லைன்  த  வோர்டு  முயன்றிருக்கிறார். அவ்வளவே . சாணிக்காயிதம்  பாகம்  2  போலதான் அவரது  கேரக்டர்  டிசைன்  அமைந்திருக்கிறது 


கே  ராஜன்  வரும்போது  அவருக்கு  கை  தட்டல்  கிடைக்கிறது  , எல்லாம்  யூ  ட்யூப்  மகிமை .


கல்லூரியின்  தாளாளராக  ராதாரவி  வில்லத்தனம்  குட் . செல்வராகவனின்  மகளாக  ரிச்சா ,  புரோக்கராக  கூல்ஜெயந்த், ஹாஸ்டல்  வார்டனாக  சசி லயா  அனைவரும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் 

சபாஷ்  டைரக்டர்


1   உங்கள்  குழந்தைகளைக்கண்காணியுங்கள் ., செல் ஃபோனில்  அவர்கள்  என்ன  பார்க்கிறார்கள், என்ன  செய்கிறார்கள்  என    அறிந்து  கொள்ள  வேண்டும்   என்ற  கருத்து  பதிய வைத்த  விதம் 

2   வழக்கமான  அவரது  சாதி  ரீதியிலான  காட்சிகள் , வ்சனங்களை  தவிர்த்தது 


3  இந்தியன்  படத்தில்  நாயகனான  இந்தியன்  தாத்தா  வரிசையாக  கொலை  செய்வார். அந்த  பேடர்னில்  தான்  இந்த  திரைக்கதையிலும்  வருகிறது 



  ரசித்த  வசனங்கள் 

1  கணவனால்  திருப்தி  அடையாத  பெண்கள்  வேறு  உறவை  நாடினால்  அதை  கள்ளக்காதல்  என  கேவலப்படுத்துகிறார்கள் , ஆனால்  நாம் அதை  திருமணம்  தாண்டிய  உறவு என  கவுரவமாகச்சொல்ல  வேண்டும்  ( எக்ஸ்ட்ரா  மேரிட்டல் லைஃப்) 


2  இந்த  தப்பு  பண்ணுனவ்ங்க  எல்லாம்  சாக  வேண்டியதுதான், ஆனா  இப்படி  நார்மலா  சாகக்கூடாது , அசிங்கப்பட்டு  சாகனும் 


3 ஆண்கள்  மூளையை  வெச்சு  சம்பாதிக்கற  மாதிரி  பெண்கள்  உடம்பை  மூலதனம்  ஆக்கி  சம்பாதிப்பதில்  தப்பே  இல்லை 


4  வாழ்க்கைல  சோதனைகள்  வந்தா  இறங்கிப்போராடனுமே  தவிர  இப்படி  (நடத்தையில் ) இறங்கிப்போயிடக்கூடாது  , ஒழுக்கத்தை  விட்டா  எல்லாமே  நாசமாப்போயிடும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  செல்வராகவன்  நெருப்புடன்  பேசுவது  போல  ஒரு  காட்சி  வருகிறது. அதில்  ஏகப்பட்ட  தேவை  இல்லாத  குறியீடுகள்  எல்லாம்  இருக்கின்றது , அதைத்தவிர்த்திருக்கலாம்


2  முதல்  பாதியில்  இருந்த  பரபரப்பும்  , விறுவிறுப்பும்  பின்  பாதியில்  இல்லை 


3   தனது  காதலருடன்  லிப்  லாக்  செய்யும்  வீடியோ  வெளியாகி  அதை  வைத்து  அவரை  பாலியல்  தொழில்  தள்ள  வற்புறுத்தப்படுவது  நம்பும்படி  இல்லை . இது  எந்தக்காலம்  என  இயக்குநருக்குத்தெரியாதா?  ப்ரீ  வெட்டிங்  சூட்  என்ற  பெயரில்  அலங்கோலமாக  அணி  வகுக்கும் காலம், இப்போது  இத்ற்கெல்லாம்  பயப்படுவார்களா? 


4  திரைக்கதையில்  பெண்களைத்தான்  எல்லோரும்  குறை  சொல்கிறார்கள். காதலனுடன்  நெருக்கமாக  இருந்தது  தப்பு , முத்தம்  கொடுத்தது  தப்பு , அதை  வீடியோ  எடுக்க  உதவியது  தப்பு   என  எல்லா  தப்புக்களையும்  பெண்கள்  தலைல தான்  கட்டுகிறார்கள், ஏன்  ஆண்கள்  மேல்  தப்பு  சொல்லவே  இல்லை ? 


5  அறிவியல்  கண்டுபிடிப்புகளால்  நன்மையும்  இருக்கு , தீமையும்  இருக்கு , ஆனால்  இந்தக்கதையில்  செல்  ஃபோன்  தான் பகா சூரன்  என  அது  கெடுதல்  மட்டுமே  என்னும்  கருத்து  வலியத்திணிக்கப்படுகிறது 

6  காலேஜில்  படிக்கும்  ஒரு  பெண்ணுக்கு  மிரட்டல்  கால்  வருது . உடனே  அவர்  தன்  செல் ஃபோன்  எண்ணை  மாற்றி  விடலாமே? நெம்பர்  தெரிந்தால்தானே  மிரட்டல்  வரும் ?


7   காதலன்  உடல்  பாகங்களை   காட்டுவதாக  சொன்னதும்  உடனே  காலேஜ்  பெண்  அதற்கு  சம்மதித்து செல்  ஃபோன்  முன்  போஸ்  கொடுப்பாரா? அது  ரிப்பெருக்குப்போனால்  பரவிவிடும்  ஆபத்து  உள்ளது  என்ப்து  அவருக்கு  தெரியாதா? 


8   தெருக்கூத்துக்கலைஞனாக  வரும்  செல்வராகவன்  ஆக்சன்  ஹீரோ  மாதிரி  அனாயசமாக  அடித்து  வீழ்த்துவது  ஓவரோ  ஓவர்


9  பெண்  பிள்ளைகளை  வெளியே  அனுப்ப  வேண்டாம்  வீட்டிலேயே  பத்திரமாக  வைத்துக்கொள்ளுங்கள்  எனும் கருத்து  மறைமுகமாக  சொல்லபப்ட்டிருக்கிறது , அதற்கு  சாத்தியமே  இல்லையே? 


10  இயக்குநர்  தனது  முந்தைய  படங்களில்  டெக்னிக்கள்  அம்சங்கள்  மேக்கிங்கில்  நல்ல  தரம்  காட்டி  இருந்தார்  ஆனால்  அந்த  அளவுக்கு  இதில்  இல்லை , குறிப்பாக  ஒளிப்பதிவில்  பல  தவறுகள் . 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  இது யு  ஏ  சர்ட்டிஃபிகேட்  படம்  தான். ஆனாலும்  மைனர்கள்  பார்க்கத்தேவை  இல்லை .



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பகாசூரன் - தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்கும் அப்பாவின் கதை, இடைவேளையோடு படம் முடியுது, ஆனா பின் பாதி இழுவை.செல்வராகவன், நட்டி நடிப்பு குட். விகடன் மார்க் 40 , ரேட்டிங் 2/ 5

0 comments: