Thursday, November 10, 2022

அர்ச்சனா 31 நாட் அவுட் (2022) (மலையாளம்) - சினிமா விமர்சனம் @ அமேசான் பிரைம்


ஸ்பாய்லர்  அலெர்ட் 

 நாயகி  ஒரு  கிராமத்தில்  பெற்றோருடன்  வசித்து  வருகிறார்.. அரசு  பள்ளியில்  தற்காலிக  ஆசிரியையாகப்பணி  புரிகிறார். வயது 28 .  இவருக்கு  இதுவரை  30  இடங்களில்  மாப்பிள்ளை  பார்த்து  விட்டார்  புரோக்கர். ஒவ்வொரு  வரனும்  ஏதோ  காரணத்தால்  தட்டிக்கழிந்து  விடுகிறது 

31  வது  வ்ரனாக  ஒரு  துபாய்  மாப்பிள்ளை  வருகிறார்.  வீடியோ  காலில்  மாப்பிள்ளை  , பெண்  இருவரும்  பேசிக்கொள்கிறார்கள் . இருவருக்கும்  சம்மதம் . மாப்பிள்ளை  தரப்பு  உறவினர்கள்  பெண்  வீட்டில்  சம்பந்தம்  பேசி  முடிக்கின்றனர் 

  இந்த  சமயத்தில்  நாயகிக்கு  ஆசிரியை  பணி   போய்  விடுகிறது .  இந்தத்தகவலை  நாயகி  மாப்பிள்ளையிடம்  சொல்லி  விடுகிறார்.  மாப்பிள்ளை  பெரிதாக  அலட்டிக்கொள்ளவில்லை . எப்படியும்  துபாய்  தானே  வரப்போகிறாய்? அங்கே  ஏதாவது  வேலை  பார்த்துக்கலாம்  என்று  சொல்லி  விடுகிறார்

நாயகிக்கு  மிக்க  மகிழ்ச்சி , முதிர்  கன்னியாக  காலத்தை  க்ழிக்க  வேண்டி  வருமோ  என்ற  அச்சத்தில்  இருந்தவர்  திருமணம்  நிச்சயம்  ஆனதால்  தன்  சேமிப்புப்பணம்  பூரா  திருமண  ஏற்பாடுக்ளூக்கு  செலவு  செய்கிறார்

 ஊரெல்லாம்  பத்திரிக்கை  வைத்து  கல்யாண  மண்டபம  வரை  எல்லாரும்  வந்து  விடுகிறார்கள் . விடிந்தால்  திரும்ண  முகூர்த்தம் . இரவு    திடீர்  என  ஒரு  தகவல்  வருகிறது . , மாப்பிள்ளை   வேறு  ஒரு  பெண்ணுடன்  ஓடி  விட்டார்


நாயகிக்கு  இது  மிகப்பெரிய  அதிர்ச்சி . இந்தத்தகவல்  வெளீல   தெரிந்தால்  அப்பா  ஹார்ட்அட்டாக்கில்  இறந்து  விடுவார் , அம்மா  தற்கொலை  செய்து  கொள்ளக்கூடும்

  நாயகி  என்ன  முடிவு  எடுத்தார்  என்பதே  க்ளைமாக்ஸ் 

  நாயகியாக  ஐஸ்வர்யா  லட்சுமி  ஒரு  டீச்சருக்கான  தோரணையை  மிக  கம்பீரமாக  ஸ்கூலில்  வெளிப்படுத்துபவர்   வீட்டுக்கு  வந்ததும்  சராசரிப்பெண்ணாக   தன்  மீதே  சுய  இரக்கம்  வரப்பெற்றவராக  மாறுவது  அருமையான  நடிப்பு   திரைக்கதையில்  வாய்ப்பிருந்தும்  இவருக்கு  தனி  டூயட்  பாடலோ ,  கனவுப்பாட்டோ , இண்ட்ரோ  சாங்கோ  வைக்காதது  ஏனோ ?

  திரைக்கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  அழையா  விருந்தாளியாக  மண்டபத்துக்கு  வரும்  இந்திரன்ஸ்  கதாபாத்திரத்தை  க்ளைமாக்சில்    அந்த  கேரக்டருக்கு  நியாயம்  செய்திருக்கிறார்கள் . ஆனால்  அவரும்  காட்சிகளில்  இவர்  திருமணத்தை  நிறுத்தப்போகும்  வில்லன்  என்பது  மாதிரி  மாயை  உண்டாகிறது \

ஸ்கூலில்  சுட்டிப்பெண்ணாக  தன்  மாமாவிடம்  சாவியை  பிடுங்கி  ஒளித்து  வைக்கும்  கதாப்பாத்திரத்தில்  வரும்  சிறுமி  அருமையான  நடிப்பு . அந்த  சிறுமியின்  மாமாவாக  வருபவர்  நாயகியை  ஒரு  தலையாய்  காதலித்ததாக  திருமண  தின  இரவன்று  சொல்லும்போது  ஆச்சரியம், ஆனால்  அவரை  மாப்பிள்ளையாக  தேர்ந்தெடுத்து  கல்யாணத்தை  செய்ய  விருப்பமில்லாமல்  ஒரு  வேலை  கிடைக்கட்டும்  என  ஒத்திப்போடுவது   பெண்கள்  பொருளாதார  ரீதியாக  ப்லம்  பெற்றால்  தான்  மனோரீதியான  தன்னம்பிக்கை  பலம்  கிடைக்கும்  என்ற  கருத்தை  வலியுறுத்துகிறது 




ஒளிப்பதிவு  பிரமாதம் . பளிங்குக்க்ண்ணாடி  வழியே  காட்சிகள்  பார்ப்பது  போல்  இருக்கிறது  .  நாயகியின்  ஆடை  வடிவைப்பும்ம்  அலங்காரமும்  எளிமை  + அழகு 


வேறோரு  பெண்ணை  லவ்  பண்ணும்  துபாய்  மாப்பிள்ளை    எதற்காக  மணப்பெண்ணுடன்  வீடியோ  காலில்  அவ்ளோ அந்நியோன்யமாய்  பேசுகிறார்? என்ற  கேள்விக்கு  பதில்  இல்லை 

துபாய்  மாப்பிள்ளையின்  ஜாதகப்பொருத்தம்  பார்க்காமலும்  மாப்பிள்ளை  பற்றி  விசாரிக்காமலும்  உடனடியாக  திருமணத்துக்கு  பெண்  வீட்டார் ஒத்துக்கொள்வதும்  நம்பும்படி  இல்லை 


துபாய்  மாப்பிள்ளை  ஓடிப்போவதாக  தகவல்  வரும்போது  இடைவேளை  வருகிறது ., அது  வரை  திரைக்கதை  கனகச்சிதமாய்  இருந்தது 

 இடைவேளைக்குப்பின்   திரைக்கதை  செல்ஃப்  எடுக்காமல்  தடுமாறுகிறது. திருமணம்  தடை  பெற்றால்  என்னென்ன விளைவுகள்  உண்டாகும்  என  நாயகி  நினைத்துப்பார்க்கும்  கற்பனைக்காட்சிக்ள்  தேவை  இல்லாத  இழுவை 

  அதே  சமயம்  கல்யாண  வீட்டு  கலாட்டாக்களில்  வயசான  ஆட்கள்  டிஸ்கோ  டான்ஸ்  ஆடுவது ,  சிறுவர்  சிறுமிகள்  கொண்டாட்டம்  கலகலப்பு 

மொத்தப்படமே  ஒரு  மணி  நேரம்  50  நிமிடங்கள்  தான்  எடிட்டிங்  கச்சிதம். நாயகியின்  அழகுக்காகவும்  க்ளைமாக்ஸில்  அவர்  சொல்லும்  பாசிட்டிவான  கருத்துக்கும்  பார்க்கலாம் 

சபாஷ்  டைரக்டர் 

1   நாயகி  ஒரு  டீச்சர்  என்பதால்  அந்த  கண்ணியமான  தோற்றத்தை  கடைசி
  வரை  காப்பாற்றிய  விதம் .  நாயகிக்கு  கிளாமர்  டிரஸ்  போட  விடாமல்  கடைசி  வரை  புடவையிலேயே  காட்டியது 

2 காமெடி  டிராக்  என  தனியாக  எதுவும்  வைக்காமல்   ஸ்கூல்  ஸ்டூடண்சை  வைத்தும் , அவர்களைக்காண  வரும்  பெற்றோர்  செய்யும்  செய;ல்க்ளை  வைத்தும்  கலகலப்பாக  முதல்  பாதியைக்கொண்டு  போனது 

 

க்ளைமாக்சில்   அந்த  சோக  முடிவை  நாயகி  ஏற்றுக்கொண்டு  தைரியத்தை  வெளிப்படுத்தும்  விதம்மைக் முன்  நின்று  அனாயசமாக  அதை  லெஃப்ட்  ஹேண்டில்  டீல்  செய்தது  போல  காட்டிக்கொள்வது 

 

 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 

 

1    பார்க்க  சுமாரான  அழகுள்ள  பெண்களுக்கு  ஏகப்பட்ட  ஆஃபர்கள்  வரும்போது  மிக  அழகான  தோற்றம்  உள்ள  நாயகிக்கு  லவ்  ப்ரபோசலோ  , வேறு எந்த  ஆஃபரும்  வராதது  போல  காட்டி  இருப்பது  ஆச்சரியம் .30  ஜாதகம்  தள்ளிப்போக  சொல்லப்படும்  கார்ணங்கள்  எல்லாம்  சப்பையாகவே  இருக்கின்றன. பொதுவா  பெண்  அழகா  இருந்தா  10  பொருத்தத்தங்களில்  அஞ்சு  பொருத்தம்  இருந்தாலே  போதும்  என  ஃபிக்ஸ்  ப்ண்ணுபவர்கள்  தான்  அதிகம் 

 

2    மாப்பிள்ளை  ஃபாரீனில்  இருக்கிறார்பெற்றோர்  இல்லை  அப்படி  இருக்கும்போது  மாப்பிள்ளை  ஸ்பாட்டுக்கு  வராமலேயே  எல்லா  ஏற்பாடுகளையும்  செய்வது  எப்படி

 

 

அம்மா, அப்பா  கட்டாயப்படுத்தியதால்தான்  சம்மதித்தேன் என  சாக்கு  சொல்ல  மாப்பிள்ளைக்கு  வழி  இல்லை , ஏன் எனில்  அவருக்கு  அம்மா  அப்பாவே  இல்லை  அப்படி  இருக்கும்போது லவ்  பண்ணுன  பெண்ணைகல்யாணம்  பண்ண  ஏது  தடை ? எதுக்கு  ஓடிப்போகனும் > எதுக்கு  இந்த  சம்பந்தத்துக்கு  ஓக்கே  சொல்லனும் > ஏன்  மணப்பெண்ணுடன்  வீடியோ  கால்  பேச  வேண்டும் ?

 

 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  திரைக்கதையில்  பின்  பாதியில் கவனம்  செலுத்தி  இருந்தால்  இது மறக்க  முடியாத  ஃபீல்  குட்  மூவி  லிஸ்ட்டில்  சேர்ந்திருக்கும் , ஜஸ்ட்  மிஸ்ரேட்டிங் 2.25 / 5 

 




0 comments: