Tuesday, November 22, 2022

கவுரவம் (1973) - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா)

 


சூப்பர் ஸ்டார்   ரஜினி  சிவாஜியா  நடிச்ச  ஷங்கர்  படத்தை  ரிலீஸ்  அன்னைக்கே  பார்த்தாச்சு, ஆனா  சிவாஜி கணேசன்  ரஜினிகாந்த்தா  நடிச்ச  கவுரவம்  படத்தை  இத்தனை  நாட்களா  ஏன்  பார்க்கலைனு  தெரியல . இது லீகல்  டிராமா  அல்லது  கோர்ட்  ரூம்  டிராமா  கதைனு   முதல்ல  தெரியாது .  தெரிஞ்சிருந்தா  அப்பவே  பார்த்திருப்பேன், மிஸ்  ஆகிடுச்சு 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லனோட  மனைவி  ஒரு  மன நோயாளி .ஹிஸ்டீரியா  பேஷண்ட் அவளைக்கொலை  செஞ்ச  வழக்கில்  மாட்டின  வில்லன்  வக்கீல்  கிட்டே  சொன்ன  சம்பவம்... ஒரு  மழை  நாளில்  வில்லன்  தன்  மனைவி  கிட்டே  உனக்கும்  எனக்கும்  இனி  ஒத்து  வராது . இந்த  விடுதலைப்பத்திரத்தில்  கையெழுத்துப்போட்டுடு. நாம்  இருவரும்  பிரிந்து  விடலாம்  என  சொல்லும்போது  மனைவி  அதற்கு  ஒத்துக்கலை. இருவருக்குமான  வாக்குவாதம் , தள்ளுமுல்லுல  மனைவி  மாடில  இருந்து  கீழே  விழுந்து  இறந்துடறா,இந்த  சம்பவத்தை  நேரில்  பார்த்த  சாட்சி  இருந்தும்  வக்கீல்  தன்  வாதத்திறமையால்  வில்லனை  ரிலீஸ்  ஆக  வெச்சுடறார்



வில்லனுக்கு  இன்னொரு  மேரேஜ்  நடக்க  இருக்கு , ஒரு  பெண்ணை  மேரேஜ்ஜூக்கு ரெடி  பண்றார். . ஒரு  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்  வீட்டுக்கு  வந்து  வில்லனின்  வருங்கால  மனைவிக்கு  இன்சூரன்ஸ்  பாலிசி  பத்திரத்தில்  சைன்  வாங்கிக்கறான்.  சில நாட்கள்  கழித்து வில்லன் உடைய  வருங்கால   மனைவி   பாத் டப் ல  குளிக்கும்போது   மர்மமான  முறையில்  இறந்துடறா. இந்த  கேஸ்ல  மீண்டும்  வில்லன்  மாட்டிக்கறான்.  முதல்  கேஸ்ல  காப்பாற்றுன  அதே  வக்கீல்  இந்த  கேஸ்க்கும்  ஆஜர்  ஆக  இருக்கிறார்


 இப்போ  நாயகன்  அறிமுகம்.   வில்லனைக்காப்பாற்றும்  வக்கீல்  உடைய  தம்பி  மகன்  தான்   நாயகன். . மகன்னா  நேரடி  வாரிசு  இல்லை ., பெரியப்பானுதான்  கூப்பிடறான். ஆனாலும்  இருவருக்கும்  அப்படி  ஒரு  பாண்டிங் .  பெரியப்பா  சொல்  தட்டாத  மகன் 


நாயகனோட பெரியப்பா  ஈகோ  பிடிச்சவர் , தோல்வியைத்தாங்க  முஜ்டியாதவர். நாயகனும், பெரியப்பாவும்  செஸ்  விளையாடும்போது  தோல்வி  ஏற்படும்  நிலை  வந்தாக்கூட  அதைத்தாங்கிக்க  முடியாதவர் 


 ஒரு  கட்டத்தில்  அப்பா , மகனுக்கு  வாக்குவாதம்  வந்து  வீட்டை  விட்டு  வெளீல  போனு  சொல்லிட்றார் . காரணம்  ஒரே  கேசில்  எதிர்  எதிர்  துருவங்களாக  இருவரும்  வாதாட  முடிவு  எடுத்ததே 


இதற்குப்பின்  அந்த  கேசில்  யார்  ஜெயித்தார்கள்  என்பதே  க்ளைமாக்ஸ்


வில்லனாக  மேஜர்  சுந்தர்ராஜன். பசுத்தோல்  போர்த்திய  புலியாக  பிரமாதமான  நடிப்பு , ஆனா  அவர்  பிராண்ட் டயலாக்  ஆன  இங்க்லீஷ்ல   ஒரு  முறை  தமிழில்  ஒரு  முறை  ஒரே  டயலாக்கை  ரிப்பீட்  பண்ற  சீன்  இல்லாதது  ஒரு  ஏமாற்றமே


நாயகனாக , நாயகனின்  பெரியப்பாவாக  இரு  வேடங்களில்  சிவாஜி  கணேசன். பாரிஸ்டர்  ரஜினிகாந்த்தாக  இவர்  பண்ணும்  அலப்பறைகள்  பிரமாதம் . ஆனா  பிளட்  பிரஷர்  வந்த  மாதிரி  அவர்  ஓவர்  ஆக்ட்  பண்றாரோனு  தோணுது .  நாயகனாக  வரும்   சிவாஜி  அமைதியே  உருவாக  வருகிறார்


நாயகியாக  உஷா  நந்தினி  , அதிக  வாய்ப்பில்லை , ஒரே  ஒரு  டூயட்தான்  மிச்சம் 


 பெரியம்மாவாக  பண்டாரி  பாய் . அந்தக்காலத்துல  அம்மா  ரோலுக்கு   இவர்தான்  நேர்ந்து  விடப்பட்ட நைவேத்தியம் 


இந்தப்படம்  மெகா  ஹிட்டாம்.   மெயின்  கதையான  அந்த  கொலை  வழக்கு பற்றிய  பேச்சு  மக்கள்  மத்தியில்  இல்லை ,  சைடு  கதையான  பாரிஸ்டர்  ரஜினிகாந்த்தின்  வறட்டு  கவுரவம் , அப்பா  மகன்  ஈகோ  மோதல்  சம்பவம்தான்  டாக்  ஆஃப்  த  டவுனா  இருந்ததாம்  


 நாகேஷ்  , வி கே  ராமசாமி  , செந்தாமரை   எல்லாரும்  உண்டு .  சும்மா  சில  காடசிகள்  தான் 


எம் எஸ்  விஸ்வநாதன்  இசையில்   5  பாடல்கள்  அவற்றில்  2  பாடல்கள்  மெகா  ஹிட் 


1    யமுனா  நதி  இங்கே 

2  அதிசய  உலகம் 


3   பாலூட்டி  வளர்த்த  கிளி  பழம்  கொடுத்துப்பார்த்த  கிளி 


4  மெழுகுவர்த்தி  எரிகின்றது 


5   நீயும்  நானுமா?கண்ணா  நீயும்  நானுமா


சபாஷ்  டைரக்டர்



1   பாரிஸ்டர்  ரஜினிகாந்த்  கேரக்டர்  டிசைன்  எழுதப்பட்ட  விதமும்  அதற்கு  உயிர்  ஊட்டிய  சிவாஜியின்  நடிப்பும் 


2   கோர்ட்  ரூம்  காட்சிகளில்  வசனம் 


  ரசித்த  வசனங்கள் 


1    நாய்  கடிச்சு  சாவதை  விட  யானை  மிதிச்சு  சாவது  உயர்ந்தது 


2   வாழ்க்கைங்கறது  பால்  மாதிரின்னா  காதல்  என்பது  சர்க்கரை  போல 


3   டாக்டர்  கிட்டேயும்  வக்கீல்  கிட்டேயும்  பொய்  சொல்லக்கூடாது 


 அதாவது  நாம  அவங்க  கிட்டே  பொஉ  சொல்லக்கூடாது , ஆனா  அவங்க  பொய்  சொல்லலாம் 


4   விளையாட்டிக்குக்கூட  ஒரு  விளையாட்டில்  கூட  என்னால  தோல்வியைத்தாங்கிக்க  முடியாது , அதே  சமயம்  விட்டுக்கொடுக்கப்பட்ட  வெற்றியையும்  ஏற்றுக்கொள்ள  முடியாது 


5  அடுத்தவங்க  வாழ்க்கைல  அக்கறை  எடுத்துக்கொள்ளும்  ஒரே  ஜீவன்  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்  தான் 


6  ஒருவரின் பலத்தோட  போட்டி  போட்டு  ஜெயிக்க  முடியலைன்னா  அவரின்   பலவீனத்தோட  போட்டி  போட்டு  ஜெயிக்க  வேண்டியதுதான் 


7  அப்பா  , உங்களை  எதிர்த்து   வாதாடி  நான்  ஜெயிச்சாலும்  அது  உங்களுக்குப்பெரும்னைதானே?


 என்னை  எதிர்த்து  நீ  ஜெயிச்சாலும், தோற்றாலும்  அது  எனக்கு  அவமானம்  தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஃபிளாஸ்பேக்  சீனில்  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்தான்  பாலிசி  போடச்சொல்லி  வற்புறுத்தறான்  , ஆனா  க்ளைமாக்ஸ்ல  கோர்ட்ல  ஜட்ஜ்  கிட்டே  அந்த  ஏஜண்ட்  வில்லன்  தான்  வற்புறுத்தி  பாலிசி  போட  வெச்சார்னு  பொய்  சொல்றான் 


2  ஓப்பனிங்  சீன்  கேஸ்ல  ஜட்ஜோட  நடிப்பு  ரொம்ப  ஓவர்  ஆக்டிங்கா  இருந்தது, சிவாஜி  ரசிகரா  இருக்கும்  போல 


3    ஓப்பனிங்  சீன்ல   கேஸ்ல  குற்றவாளிக்கூண்டில்  நிற்கும்போது  வில்லன்  சர்ட்  பட்டன்கள்  முதல்  இரண்டைக்  கழட்டிட்டு  அசால்ட்டா  நிற்கறார் கேஸ்  முடிந்து  கோர்ட்  வளாகம்  தாண்டி   கூட்டிச்செல்லப்படும்போது  பட்டன்கள்  போடப்பட்டு   இருக்கு 


4  பாரிஸ்டர்  சிவாஜி  நைட்  தூங்கி  எழும்  ஒரு  காட்சியில்  ஃபுல்  ஸ்லீவ்  சர்ட்  போட்டு  அயர்ன்  பண்ணின  மடிப்புக்கலையாம  இருக்கார் ,  தூங்கும்போது நைட்  டிரஸ் ல  ஃப்ரீயா  அல்லது  பனியனோட  இருப்பாங்களா?   இப்படி  ஆஃபீஸ்  போற  மாதிரி  பக்காவா  டிரஸ்  பண்ணிட்டு  இருப்பாங்களா?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் .  ரெண்டரை  மணி  நேரப்படத்துல  போர்  அடிக்காம  போகுது ,  பாடல்கள்  ஹிட்  என்பதாலும்  கோர்ட்  ரூம்  வாதத்துக்காகவும்  பார்க்கலாம்  ., ரேட்டிங் 2.75 / 5 


Gauravam
Gauravam 1973 poster.jpg
Theatrical release poster
Directed byVietnam Veedu Sundaram
Written byVietnam Veedu Sundaram
Based onKannan Vanthaan
by Vietnam Veedu Sundaram
Produced byS. Rangarajan
StarringSivaji Ganesan
Ushanandini
Pandari Bai
CinematographyA. Vincent
Edited byR. Devarajan
Music byM. S. Viswanathan
Production
company
Vietnam Movies
Release date
  • 25 October 1973
Running time
136 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: