Wednesday, December 10, 2014

லிங்கா- 60 வயது கடந்த பின் காதல் டூயட் பாடியது கடவுள் கொடுத்த தண்டனை: ரஜினி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள 'லிங்கா' திரைப்படம் அவரது பிறந்த நாளான வருகிற 12–ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் லிங்கா படத்தின் தெலுங்கு பதிப்பின் அறிமுக விழா  ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  நேற்று இரவு நடந்தது.விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, கதையாசிரியர் பொன் குமரன், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, கே. விஸ்வநாத், ஜெகபதி பாபு, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இயக்குனர் திரி விக்ரம் சீனிவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரஜினிகாந்த், நான் நான்கு வருடங்களுக்கு மேல் படங்களில் நடிக்கவில்லை. இடையில் கோச்சடையான் வெளியானது. ஆனால் அது அனிமேஷன் படம். அதனால் நேரடி படம் ஒன்றில் நடிக்க ஆர்வம் இருந்தது. அந்த சமயத்தில் தான் லிங்கா படத்தின் கதை பற்றி சொன்னார் கே.எஸ். ரவிக்குமார். 6 மாதத்தில் முடிப்பதாக இருந்தால் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னேன். கே.எஸ். ரவிக்குமார் அந்த சவாலை ஏற்று படத்தை ஆறு மாதத்திலேயே முடித்து விட்டார்.
அதுவும் பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள், பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் இருந்தும் படத்தை திட்டமிட்டபடி முடித்தது பெரிய சாதனை. எனக்கும் இது சவாலான படம். திட்டமிட்டபடி படத்தை முடித்த கே.எஸ். ரவிக்குமாரை பாராட்டுகிறேன்.
எனக்கு லிங்கா படம் சவாலாக இருந்தது .சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சோனாக்ஷி சின்ஹாவை சிறு வயதிலேயே தெரியும். என் மகள்களுடன்  வளர்ந்தவர். அவரோடு காதல்  டூயட் பாட வேண்டும் என்றதும் வெட வெடத்து போனேன்.
நான் அறிமுகமான முதல் படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில்  கூட இப்படி  ஆனது இல்லை. அவரோடு   சேர்ந்து ஆட ரொம்ப சிரமப்பட்டேன். அவருக்கு இணையாக என் தோற்றத்தை மாற்ற மேக்கப் மேன் காஸ்ட்யூம் நிபுணர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.
60வயதை கடந்த என்னை இப்படி  டூயட் பாட வைத்தது கடவுள் எனக்கு கொடுத்த மிகப் பெரிய தண்டனை. ஓடும் ரெயிலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அதை யெல்லாம் விட  சோனாக் சியுடன் டூயட் பாடுவது  சிரமமாக இருந்தது.
இவ்வளவுக்கும் நடுவில்  திட்டமிட்டபடி    படத்தை முடித்த  கே.எஸ். ரவிக்குமாரை பாராட்டுகிறேன்.  ஹாலி வுட்டிலும் இது போன்ற பிரமாண்ட படங்கள்  நிறைய வருகின்றன. அவற்றை முடிக்க  நிறைய  காலம்  எடுக்கிறார்கள்
 பாகுபலி படம் மூலம் ராஜமௌலி இந்தியாவிலேயே நம்பர் ஒன் இயக்குனராக வலம் வருவார். ஏனெனில் அவருடைய படத்தைப் பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டதினால் சொல்கிறேன். எனக்கும் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஆசை உள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். என இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.


thanx - dinamani

1 comments:

புலிகேசி said...

அபூர்வ சகோதரர்கள் இல்லை