Monday, November 30, 2015

உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ்?- 66A


உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். ஃபேக் ஐடியாக இருந்தாலும் காவல் துறையினர் ஆளை கண்டுப் பிடித்து விடுவர். மெசேஜ்களை டெலிட் செய்யாமல் வைத்திருங்கள். அதுவே ஆதாரமாகும்.



IT act section 66A. Punishment for sending offensive messages through communication service, etc. upto 3 years imprisonment



உங்களைப் பற்றி தரக்குறைவாக ஃபேஸ்புக் வாலிலோ, ப்ளாகிலோ போட்டிருந்தால் 509 செக்ஷன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். ஒரு வருட சிறைத் தண்டணை. அந்த போஸ்ட்டை ஸ்க்ரீன்ஷாட் செய்து விடுங்கள். அதுவே ஆதாரமாகும்.



IPC Section 509: Word, gesture or act intended to insult the modesty of a woman: Acts of sexual harassment demeaning a woman on the basis of her gender or sexuality - and other forms of sexual abuse faced by women online - can fall under this. one year imprisonment



உங்கள் ஃபோட்டோக்களை இன்னொருவர் ஷேர் செய்து தரக்குறைவாக விமர்சித்து இருந்தாலோ, ஆபாச சைட்களில் உங்கள் ஃபோட்டோக்களை போட்டிருந்தாலோ, செக்ஷன் 499 படி ஒரு வருட சிறைத் தன்டணை கிடைக்க செய்யலாம். உங்கள் ஃபோட்டோ இருக்கும்னிடத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுங்கள்.



IPC Section 499: Defamation: 
Harming the reputation of a person through words, signs, or visible representations. Many women bloggers and Tweeters say that the violent sexist slander they receive goes on to create an irrecoverably negative message for them within their communities, societies, etc. 2 years imprisonment



இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லுபடியாகும். வெளிநாட்டில் இருந்து இந்தியர்கள் குற்றம் புரிந்தால் IPC 188 படி மேற்சொன்ன சட்டப்பிரிவுகளில் உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம்.


-https://web.facebook.com/radha.jayasri.7



ஸ்பெக்டர் - ஜெயமோகன்

24-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக சமீபத்தில் இந்தியாவில் வெளியான ஸ்பெக்டர் படத்தைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன், தன்னுடையஇணையத்தளத்தில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
‘வெண்முரசு காண்டீபம் முடிந்த கையோடு ஒரு மாறுதலுக்காக சினிமா பார்க்கப்போகலாம் என முடிவெடுத்தேன். ஸ்பெக்டர் பார்க்கப்போகிறேன் என்று நண்பர் சுகாவிடம் சொன்னேன். அவரும் ஒருமாதிரி சிரித்து ’போய்ட்டு வாருங்க மோகன்’ என்றர். ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பது அறிவுஜீவிகளுக்கு உகந்தது அல்ல என்று ஒரு பொதுநம்பிக்கை இருப்பது தெரிந்தது. ஆனால் வேண்டாம் என்று விடவும் எனக்கு மனமில்லை. நான் இதுவரை வந்த எல்லா பாண்ட் படங்களையும் பார்த்திருக்கிறேன், எனக்கு பிடிக்கும்.
என் திரைப்பட ரசனை பொதுவாக ஒரு பத்துவயதுப் பையனுக்குரியது. தெளிவாகச் சொன்னால் ‘சிந்தனைக்கோ கற்பனைக்கோ இலக்கியம் இருக்கிறதே சினிமா எதற்கு?’ என்னும் மனநிலைதான். மாஸ்டர்பீஸ்கள் என்று சொல்லப்படும் படங்களை விழுந்து விழுந்து பார்த்த காலம் உண்டு. ஃபிலிம் சொசைட்டி இயக்கத்தில் செயலாற்றியும் இருக்கிறேன். ஆனால் எந்த சினிமாவும் ஒரு நடுவாந்தர நாவல் அளித்த அனுபவத்தைக்கூட எனக்கு அளித்ததில்லை. சினிமா குறைவான கலை என நான் நினைக்கவில்லை, என் கலை அல்ல.
எனக்கு சினிமா கேளிக்கைவடிவம்தான். சினிமாஸ்கோப்பில் பிரம்மாண்டமான நிலக்காட்சிகளைப் பார்ப்பதுதான் முதல் கவர்ச்சி. நகரங்கள், விதவிதமான சூழல்கள் பிடிக்கும். அத்துடன் பரபரப்பாகச் செல்லும் காட்சிகள் கவரும்.
நான் பார்த்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் கோல்ட் ஃபிங்கர். நான் அப்போது எட்டாம் வகுப்பு மாணவன். நாகர்கோயிலுக்கு அக்கா வீட்டுக்கு வந்தபோது மச்சான் என்னை கூட்டிக்கொண்டுசென்றார். லட்சுமி திரையரங்கம் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் பெரிய திரை எல்லாம் கிடையாது. படமே ரொம்ப பழைய அச்சாக இருக்கும். மழை பெய்யும்.மொத்தமாகச் சிவந்துபோயிருக்கும்.
ஆனால் சினிமாவை நாம் கற்பனையில் காண்கிறோம். இன்றைய சினிமாக்களைவிட பிரம்மாண்டமாக அதை அன்று நான் கண்டேன். நான் எண்ணிப்பார்க்கவும் முடியாத உலகங்களில் வாழ்ந்தேன். பாண்ட் என்னும் அந்தக்கனவு என்னை அப்போதுதான் ஆட்கொண்டது. நானே படம் பார்க்க ஆரம்பித்தபோது திருவனந்தபுரம் சென்று ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் பார்த்தேன். நாவல்களை திருவனந்தபுரம் வாடகை நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன்.
திருவரம்பு என்னும் சின்னக்கிராமத்தில் பிறந்து, மாடுமேய்த்து, சாணி சுமந்து, தொளியுழவு செய்து வாழ்ந்த ஓர் இளைஞனுக்கு ஜேம்ஸ்பாண்ட் என்னவாகப் பொருள் பட்டிருப்பார் என இன்று சிந்தித்துப்பார்க்கிறேன். ‘வெளியுலகம்’ என்றுதான். மாநகர்கள், உயர்தர விடுதிகள், அதிவேக கார்கள், விழாக்கள், நவீனக் கருவிகள், பெண்கள்… அறிவியலும் முதலாளித்துவப் பண்பாடும் சேர்ந்து உருவாக்கிய வாழ்க்கையின் உச்சகட்ட நுனி அது. அது எந்த இளைஞனுக்கும் கனவு.
கூடவே அதன் அபாயங்கள். வேட்டையாடுதலும் வேட்டையாடப்படுதலும். ஜேம்ஸ்பாண்டுடன் நான் என்னை அடையாளம் கண்டுகொண்டதே இல்லை. ஆனால் அவருடன் சென்றுகொண்டிருந்தேன். அந்தக்கனவில் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். பின்னர் வெளிநாட்டுப்பயணங்களில் பெருநகர்களின் தெருக்களில், மலையுச்சிகளில், எரிமலைச்சாரல்களில், ஏரிக்கரைகளில் நின்றிருந்தபோது, மிக உயர்தர விடுதியறைகளில் தங்கியபோது அந்த கனவில்தான் வாழ்ந்தேன்.
எனக்குப் பிடித்த பாண்ட் ரோஜர்மூர்தான். சீன் கானரி அடுத்தபடியாக. ஆனால் பிற பாண்ட்களைப் பிடிக்காது என்றல்ல. எல்லா பாண்டுகளும் பிடித்தமானவர்கள்தான். ஏதோ ஒருவகையில் டேனியல் கிரெய்க் மூன்றாவதாக பிடித்தமானவராக இருக்கிறார். குழப்பமான பாண்ட். கவலைப்படுபவர், அலைக்கழிப்புகள் கொண்டவர். துரோகங்கள் பாண்டுக்குப் புதியவை அல்ல, ஆனால் கிரெய்க் மனம் கலைந்துபோகிறார். இன்றைய காலகட்டத்தின் பாண்ட். தான் சார்ந்திருக்கும் அமைப்பாலேயே வேட்டையாடப்படுபவர்.
ராஜாஸ் மால் அரங்கில் பகல்முழுக்க பெய்த மழைச்சாரலிலும் நூறுபேர் இருந்தனர். நாகர்கோயிலிலேயே நல்ல திரையரங்கு, நல்ல ஒலியமைப்பு. படம் எனக்கு மீண்டும் ஒர் இளமைமீட்சியாக இருந்தது. பாண்ட் ஓடிக்கொண்டே இருந்தார். அவருக்கும் பத்து வயதுதான். பத்து வயதுப்பையனின் உலகில்தான் சாகசம் உண்டு, சாவு இல்லை.
ஆனால் நம் மக்களுக்கு இன்னமும் நல்ல அரங்கில் படம் பார்க்கத்தெரியாது. ஒற்றை ஸ்பீக்கர் அரங்கில் படம் பார்த்த பழக்கம். பல ஓடைகளிலாக சூழொலி அமைப்பு உள்ள அரங்கில் ஒலிகள் அரங்கின் அனைத்து திசைகளிலும் கேட்கும். எல்லா ஒலிகளும் துல்லியமாகக் கேட்பதனால் இன்றைய படங்கள் மௌனமாகவும் மெல்லிய இசையுடனும் மிகமென்மையான ஒலிகளுடனும் இருக்கும்.
ஆகவே நடுவே செல்பேசி ஒலிப்பது, பேசிக்கொண்டிருப்பது , கூச்சலிடுவது எல்லாம் ஒலியனுபவத்தை அழித்துவிடும். என்னருகே இருந்த இரண்டு இளம்ஜோடிகள் பேசிக்கொண்டே இருந்தனர்.நடுவே செல்பேசியில்  பேசினர். படித்த ‘நவயுவர்’கள். அவர்களிடம் சொல்லிப்பார்த்தேன். முறைத்தார்கள்.
நான் எழுந்து சென்று அரங்கப்பணியாளரிடம் அப்பால் ஓர் இடம் கோரிப்பெற்றேன். முன்பக்கம் சென்று தனித்து அமரமுடிந்தது. பின்னால் செல்பேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. ‘ஆமா மச்சி, படம் பாக்கிறேண்டா’ போல குரல்கள்.
புன்னகையுடன் எண்ணிக்கொண்டேன். ஒருபக்கம் பாண்டின் அதிநவீனத் தொழில்நுட்பம். செல்பேசிகள், நவீனத் திரையரங்கம். ஆனால் ஓலைக்கொட்டகையில் படம் பார்க்கும் கலாச்சாரப்பயிற்சி. இதுதான் நவீன இந்தியா.
மெக்ஸிகோசிட்டி, லண்டன், ரோம், மொரோக்கோவின் டான்ஜியர் வரை வெவ்வேறு நிலங்கள். வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் அல்ல. உணர்வுபூர்வமானவர், தன்னந்தனிமையை ஒவ்வொரு கணமும் உணர்பவர். ஆனால் வழக்கமான உலகைக் காக்கும் சாகசம்.
படம் முடிந்தபோது உருவான எண்ணம் ஒருவகை இரட்டைநிலை. ஒன்று என் இளமைமுதல் கண்ட பாண்ட், அதே கதை. ஒன்றுமே மாறவில்லை. அப்பாடா! ஆனால் அதற்குள் அனைத்துமே மாறிவிட்டிருக்கின்றன. பாண்டே கூட. அதுவும் நன்றாகவே இருந்தது என்று ஜெயமோகன் எழுதியுள்ளார்.

அடுத்து யார்?-ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே

அடுத்து யார்?
ஜூ.வி. ஸ்பெஷல் சர்வேஜூவி டீம், ஓவியங்கள்: கண்ணாபடங்கள்: கே.குணசீலன், உ.பாண்டி, ஆர்.ராம்குமார், கா.முரளி, சித்தார்த்
ஜூ.வி. ‘ஸ்பெஷல் சர்வே’-யின் மூன்றாவது பகுதி இது. வாக்களிக்கும் வயது வந்த 16,846 பேரை செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட விகடன் டீம் சந்தித்தது. கிராமம், நகரம் என புகுந்து புறப்பட்ட ஜூ.வி. டீம் ஆண், பெண், இளைஞர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் என பல தரப்பு மக்களைச் சந்தித்து சர்வே படிவங்களைப் பூர்த்தி செய்தது டீம்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா என இரண்டாக உடைந்தது அ.தி.மு.க. 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த இரண்டு அணிகளும் போட்டியிட்டபோது, ஜெயலலிதாவுக்குத்தான் அமோக செல்வாக்கு இருந்தது.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதாதான் என்பதை காலம் சொன்னது. 1989-ல் இருந்து அ.தி.மு.க-வின் ஒன்மேன் ஆர்மியாக இருந்து வருகிறார் ஜெயலலிதா. ‘அ.தி.மு.க-வின் நம்பர் டூ யார்?’ என்கிற கேள்வி எல்லாக் காலங்களிலும் எழுப்பப்பட்டு வருகிறது. நெடுஞ்செழியன் தொடங்கிப் பல பெயர்கள் அடிபட்டு வந்தன. அது இப்போது சசிகலா, 
ஓ.பன்னீர்செல்வம் வரையில் வந்து நிற்கிறது. ‘அ.தி.மு.க-வின் நம்பர் டூ யார்?’ என்கிற கேள்விக்கு விடை தேடினால் என்ன என்கிற யோசனை எழ... அதையே சர்வேயில் கேள்வி ஆக்கினோம்.

‘அ.தி.மு.க-வின் அடுத்த தலைவராக வரத் தகுதியானவர் யார்?’ என்கிற கேள்வியை முன் வைத்தோம். அதற்கு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், மற்றவர்கள் என மூன்று ஆப்ஷன்கள் தந்தோம். சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தைத் தாண்டி இன்னொருவரைதான் பலரும் விரும்புகிறார்கள் என்பது சர்வேயில் தெரியவந்தது. ‘மற்றவர்கள்’ என்பதைத்தான் 54 சதவிகிதம் பேர் ‘டிக்’ அடித்தனர். அதற்கு அடுத்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 38 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் நிழலாக வலம் வருபவர் ஓ.பன்னீர்செல்வம் இல்லை. சசிகலாதான். ஆனால், அவருக்கு வெறும் 7 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது. ‘‘பின்னால் இருந்து அரசியல் ‘மூவ்’ நடத்திக்கொண்டிருக்கிறார் சசிகலா’’ என்கிற பேச்சுகள் இருந்தபோதும் அவர் அ.தி.மு.க-வின் நம்பர் டூ ஆகத் தகுதியில்லை என்பதை பொட்டில் அடித்தார்போல சொல்லியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. வட்டாரத்துக்குள்ளேயே சசிகலாவுக்கு ஆதரவு இல்லை. அவரிடம் காரியம் சாதித்துப் பதவிகளைப் பிடிக்க நினைக்கும் சொற்பமான வர்கள்தான் அவரைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்கிற பேச்சும் இதில் இருந்து உண்மையாகி இருக்கிறது.
சர்வேயில், அடுத்த கேள்விக்கு போயஸ் கார்டனில் இருந்து அப்படியே கோபாலபுரம் பக்கம் போகலாம். தி.மு.க. வென்றால் அடுத்த முதல்வர் கருணாநிதியா, ஸ்டாலினா என்கிற விவாதம் நடந்துகொண்டு இருக்கிறது. அதையே, ‘தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக யாருக்கு உங்கள் ஆதரவு’ என்று கேள்வியாக வைத்தோம். கருணாநிதியைவிட ஸ்டாலினுக்குத்தான் ஆதரவு அதிகமாக இருந்தது. ஸ்டாலினுக்கு 60 சதவிகிதம் பேரும், கருணாநிதிக்கு 39 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இன்னும் சொல்லப்போனால் சர்வேயின் எல்லாக் கேள்விகளுக்கும் கொடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் மிக அதிகமாக ஸ்டாலினுக் குத்தான் 60 சதவிகிதம் கிடைத்தது. ஸ்டாலினின் அரசியல் பயணம் மிசாவுக்கு முன்பு தொடங்கியது. தி.மு.க-வைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட ஸ்டாலினுக்குத் தகுதி உண்டு என்பதை மறுப்பதில்லை. ‘ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் என்ன’ என்கிற கேள்வியை சர்வேயின்போது பலரும் எழுப்பினார்கள். ‘நமக்கு நாமே’ பயணம் மக்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியிருப்பதும் சர்வேயின்போது அறிய முடிந்தது.
இந்த சர்வேயின் ஃகிளைமேக்ஸ் கேள்விக்கு ஆச்சர்ய முடிவுகள்   அடுத்த இதழில்..

ன்றி=விகடன்

அஜித் 56; அமராவதி முதல் ‘வேதாளம்’ வரை

'அஜித் என்றால் தன்னம்பிக்கை; அஜித் என்றால் தைரியம்; அஜித் என்றால் ஆச்சர்யம்’ எனச் சிலாகிக்கிறார்கள் சினிமா உலகில். அதற்கு ஏற்ப அஜித்தும் தன் சினிமா கரியரின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு விநாடியையும் அவராகவே செதுக்கியிருக்கிறார். அது பற்றிய ஒரு ரீவைண்டு நினைவுகள்...
காதல் புத்தகம்
செப்பல் விளம்பரத்துக்காகத்தான் கேமரா முன்பாக முதன்முதலில் நின்றார் அஜித். அந்த விளம்பரம் பார்த்துதான் தெலுங்கில் 'பிரேம புஸ்தகம்’ படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம் தமிழில் 'காதல் புத்தகம்’ என்ற பெயரில் டப்பிங் படமாக வெளியானது. அதுதான் அஜித்தின் முதல் வெள்ளித்திரை பிரவேசம்!
அமராவதி
ஊட்டியில் ஒரு பள்ளியில் இந்தப் படத்தின் 'புத்தம் புது மலரே...’ பாடலைப் படமாக்க அஜித், சங்கவி என யூனிட் காத்திருந்தது. அப்போது திடீரென 'திருடா திருடா’ பட யூனிட் அங்கு வந்து இறங்கியது. மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், பிரசாந்த் என 'லைம்லைட்’ பிரபலங்களைப் பார்த்ததும்  'அமராவதி’ யூனிட்டே அவர்களை நோக்கி ஓடியது. அஜித் செல்லவில்லை. அவர் அருகில் அமர்ந்து இருந்த ஒருவரும் செல்லவில்லை. 'ஏன் நீங்க ஆட்டோகிராப் வாங்க போகலையா?’ என அஜித் அவரிடம் கேட்க, 'இல்லை. நான் ஃப்யூச்சர் ஸ்டார்கூட உட்கார்ந்திருக்கேன்’ என்றார் அவர். பெயர் சுரேஷ் சந்திரா. அவர்தான் அப்போது முதல் இப்போது வரை அஜித் மேனேஜர்!  
பாசமலர்கள்
சினிமாவில் பளிச் வாய்ப்புகள் கிடைக்கும் வரை பல விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் அஜித். அப்போது, 'அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நீங்களும் நடிக்கிறீர்களா?’ என ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் கேட்க, உடனே ஒப்புக்கொண்டு இந்தப் படத்தில் நடித்தார் அஜித்.
பவித்ரா
கதைப்படி மருத்துவமனை படுக்கையில் படுத்துக்கொண்டே இருக்கும் கேரக்டர் அஜித்துக்கு. ஆனால், அப்போது நிஜமாகவே பைக் ரேஸ் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டு மருத்துவமனையில்தான் இருந்தார் அஜித். படப்பிடிப்புத்தளம் வரைகூட வர முடியாத நிலை. ஆனாலும், சக்கர நாற்காலியில் வந்து 'பவித்ரா’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார்!
ராஜாவின் பார்வையிலே...
அஜித் - விஜய் இணைந்து நடித்த முதல் படம். சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது, மதியம் படப்பிடிப்புக்கு சாப்பாடு கொண்டுவருவார் விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர். அப்போது மகன் விஜய்க்கு மட்டும் அல்ல, அஜித்துக்கும் சேர்த்தே சாப்பாடு கொண்டுவந்து பரிமாறுவார். ஒரே கேரியர் சாப்பாடு சாப்பிட்ட இருவரும்,  இன்று சினிமா கரியரிலும் உச்சத்தில் இருக்கிறார்கள்!
ஆசை
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், 'மே மாதம்’ படத்துக்காக அஜித்திடம் கால்ஷீட் வாங்கியிருந்தார்கள். ஆனால், பைக் ரேஸ் விபத்து ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததால், அஜித்தால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. 'மே மாதம்’ படத்துக்குக் கொடுத்த கால்ஷீட்டை அப்படியே 'ஆசை’ படத்துக்குக் கொடுத்தார். அஜித் நடித்த கிளாசிக் பட வரிசையில் இடம் பிடித்தது 'ஆசை’!
வான்மதி
அஜித்தை 'ஏ’ சென்டர் ஹீரோவாக நினைத்து, நெருங்காமல் சிதறியவர்கள் நிறைய. அவருக்கு கதை சொல்லவரும் உதவி இயக்குநர்களும், அஜித் பேசும் இங்லீஷைக் கேட்டு மிரள்வார்கள். அந்த 'ஏ சென்டர்’ இமேஜை மாற்றவே  'வான்மதி’ படத்தில் நடித்தார் அஜித்.  பி, சி சென்டர்களில் படம் தாறுமாறு ஹிட். அதன் பிறகே பல அறிமுக இயக்குநர்கள் அஜித்துக்கு என கதை யோசித்து அவரை அணுகினார்கள்!
கல்லூரி வாசல்
படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்தி நடிகை  பூஜா பட். அவருக்கு அஜித்தின் நடவடிக்கைகள் பிடித்துப்போக, இருவரும் 'திக் ஃப்ரெண்ட்ஸ்’ ஆனார்கள். அந்தப் பழக்கத்தில் அஜித்தை இந்தி சினிமாவில் நடிக்க அழைத்தார் பூஜா. ஆனால், 'தமிழே போதும். இந்தி இஷ்டம் இல்லை’ என அன்பாக மறுத்துவிட்டார் அஜித்.
மைனர் மாப்பிள்ளை
இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு, படப்பிடிப்புகளுக்கு பைக்கில்தான் செல்வார் அஜித். 'மைனர் மாப்பிள்ளை’யில் நடித்தபோதுதான் சொந்தமாக வாங்கிய மாருதி 800 காரில் செல்லத் தொடங்கினார். அந்த கார் இன்னும் அஜித் கராஜில் பத்திரமாக இருக்கிறது!
காதல் கோட்டை
சென்னைத் துறைமுகத்தில் படப்பிடிப்பு. ஷூட்டிங் முடிந்து எல்லோரும் கிளம்பிவிடுவார்கள். அஜித் மட்டும் கப்பலுக்குள் புகுந்து அதன் மரைன் இன்ஜினீயர்களிடம் கப்பல் இயக்கம், அதன் தொழில்நுட்ப விவரங்களைக் கேட்டுக்கொண்டிருப்பார். கார், பைக், விமானம் மட்டும் அல்ல... கப்பல் ஓட்டுவது குறித்தும் அஜித்துக்குத் தெரியும்!
நேசம்
இன்று சில ஹீரோக்கள் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய, தாங்களே பணம் கொடுப்பது வழக்கம். ஆனால்,  சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே தான் நடித்த 'நேசம்’ படத்தை வெளியிட முடியாமல் இயக்குநர் சுபாஷ் பண நெருக்கடியால் தவிக்க, 28 லட்சம் ரூபாய் கொடுத்து படம் வெளியாக உதவினார் அஜித். பைக் விபத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்த தன்னை 'பவித்ரா’ படத்தில் நடிக்க அழைத்த சுபாஷ§க்கு அஜித் காட்டிய 'தேங்க்ஸ் கிவ்விங்’ அது.
ராசி
சென்னை மீரான் சாகிப் தெருவில் நிக் ஆடியோ கம்பெனி ஒன்றை வைத்திருந்தார், சக்ரவர்த்தி. அஜித் நடித்த 'கல்லூரி வாசல்’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி இருந்தார். அப்போது அஜித்தைச் சந்தித்து, 'எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுங்க’ எனக் கேட்டபோது, அஜித் கால்ஷீட் கொடுத்த படம்தான் 'ராசி.’ அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. பொதுவாக, ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால், தயாரிப்பாளருக்கும் ஹீரோவுக்கும் முட்டிக்கொள்ளும். ஆனால், அதன் பிறகுதான் அஜித்துக்கும் சக்ரவர்த்திக்கும் அதீத நெருக்கம் ஏற்பட்டு பல வெற்றிப் படங்கள் கொடுத்தனர்.
உல்லாசம்
அமிதாப் பச்சன் தமிழில் தயாரித்த படம். அஜித் மார்க்கெட் அப்போது ஏறுமுகமாக இருந்தது. 'உல்லாசம்’ படத்தின் இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகிய நண்பர்கள். படத்தில் இன்னொரு ஹீரோ கதாபாத்திரத்துக்கு விக்ரமை நடிக்கவைக்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டு, 'நீங்க எப்படி ஜேடி - ஜெர்ரினு ஒண்ணா இருக்கீங்களோ, அதே மாதிரி படத்துல என் கேரக்டருக்கு இணையா விக்ரம் கேரக்டரும் இருக்கணும்’ எனக் கறாராகச் சொன்னவர் அஜித்.
பகைவன்
ரமேஷ் கண்ணா 'அமராவதி’ படப்பிடிப்பின்போதே, அஜித்தை ஹீரோவாக வைத்து ஒரு கதை சொல்லியிருந்தார். சினிமாவில் தனக்கு என அடையாளம் இல்லாதபோதே, கதை சொன்ன ரமேஷ் கண்ணாவுக்காக 'பகைவன்’ படத்தில் நடித்தார்.
ரெட்டை ஜடை வயசு
பாக்யராஜுடன் 'இன்று போய் நாளை வா’ படத்தில் நண்பராக நடித்தவர், பழனிச்சாமி. அவரே பாக்யராஜுக்கு மேனேஜராக இருந்தார். அஜித், பாக்யராஜைச் சந்தித்தபோது, 'என் மேனேஜர் பழனிச்சாமி உங்களை வெச்சு படம் தயாரிக்க ஆசைப்படுறார்’ எனச் சொன்னார். பாக்யராஜ் மேல் இருந்த மரியாதையால் உடனே கால்ஷீட் கொடுத்தார். அதுதான் 'ரெட்டை ஜடை வயசு’!
காதல் மன்னன்
சரண் இயக்கிய முதல் படம். அஜித்துக்கு இந்தப் படத்தின் கதையைச் சொன்னது ஆகாயத்தில் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். சரண், கே.பாலசந்தரின் உதவியாளர் என்ற அளவில் அஜித்துக்கு அறிமுகம் இருந்தது. இருவரும் ஹைதராபாத் ஃப்ளைட்டில் பக்கத்துப் பக்கத்து ஸீட். ஒரு மணி நேரப் பயணம். அந்த நேரத்தில் சரண் சொன்ன கதை இது. ஃப்ளைட்டை விட்டு இறங்கும்போது 'நிச்சயம் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன்’ என்றாராம் அஜித்.
உயிரோடு உயிராக
அஜித் எதிர்காலத்தில் இயக்குநர் ஆவாரா என்பது தெரியாது. ஆனால், அவர் ஏற்கெனவே இயக்கிய ஒரு பாட்டு இந்தப் படத்தில் இடம் பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஹீரோயினுக்கு அஜித்தே டான்ஸ் கம்போஸிங் செய்துவிட்டு, தானும் நடனமாடினார். அந்தப் பாட்டை இயக்கியதும் அவரே!
அவள் வருவாளா
அதுவரை ஆண்களை ஈர்த்த அஜித் நடித்த படங்களில் இருந்து வித்தியாசப்பட்டது 'அவள் வருவாளா’. டீன் ஏஜ், மிடில் ஏஜ் என அனைத்துத் தரப்பு பெண்கள் மத்தியிலும் அஜித்துக்கு என ஒரு பிரியம் விதைத்தது இந்தப் படம். ஹீரோயின் சிம்ரனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கும் கதாபாத்திரத்தில் சாஃப்ட்டாக நடித்திருப்பார் அஜித்.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
கமர்ஷியல் வசூல் குவிக்கும் அந்தஸ்து கிடைத்த பிறகு, பெரும்பாலான ஹீரோக்கள் 'டபுள் ஹீரோ’, கௌரவ வேடப் படங்களில் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால், அஜித்துக்கு அப்படியான சங்கட, தயக்கங்கள் எதுவும் இல்லை. தனக்கு என மார்க்கெட் உண்டான பிறகும் கௌரவ வேடத்தில் நடிக்க விக்ரமன் அழைத்தபோது, இந்தப் படத்தில் நடித்தார் அஜித்.
தொடரும்
ஏறத்தாழ ஒரு டஜன் படங்களுக்குப் பூஜை போட்டு ஒரு படமும் வெளியாக சோகத்தில் இருந்தார் ரமேஷ் கண்ணா. விஷயத்தைக் கேள்விப்பட்டு அஜித் கால்ஷீட் தந்த படம் இது.
ஆர்.பாண்டியராஜன் அசிஸ்டென்ட் என்ற தகுதியில் இருந்து, நடிகராகவும் இயக்குநராகவும் ரமேஷ் கண்ணாவின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஹீராவோடு அதிகமாகக் கிசுகிசுக்கப்பட்டிருந்த நேரத்தில், தேவயானியின் கணவராகவும் ஹீராவை விரும்புகிறவராகவும் நடித்தார்.
உன்னைத் தேடி
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த சமயம், அஜித்துக்கு மீண்டும் முதுகில் ஆபரேஷன் நடந்தது. உட்காரக்கூட முடியாத சிரமம். ஆனால், தன்னால் பட வேலைகள் பாதிக்கப்பட வேண்டாம் என, சிரமப்பட்டு வந்து டப்பிங் பேசிச் சென்றார். அந்த மெனக்கெடல், முதுகுக் காயங்களில் இருந்து ரத்தம் வழியச் செய்துவிட்டது.
வாலி
அஜித் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படம். 'மாஸ் வெற்றி’யை அஜித் ருசிக்கவும், 'மாஸ் ஹீரோ’ பட்டியலில் அவர் இடம் பிடிக்கவும் 'ஒரே கல்... ரெண்டு மாங்காயா’க உதவிய படம். உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யாவின் அபார உற்சாகம் பார்த்து, 'நிச்சயம் நாம ஒரு படம் சேர்த்து பண்ணுவோம்’ எனச் சொல்லியிருக்கிறார் அஜித். அதை ஞாபகம் வைத்து சமயம் வந்தபோது, ரிஸ்க்கான கதையில் எஸ்.ஜே.சூர்யாவை இயக்குநராக அறிமுகப்படுத்தினார்.  
ஆனந்த பூங்காற்றே
அதுவரை 'க்ளீன் ஷேவ்’ தோற்றத்திலேயே  நடித்த அஜித், இந்தப் படத்தில் இரண்டு நாள் தாடி கெட்டப்பில் நடித்தார்.அதற்கு சரமாரி லைக்ஸ் குவிய, அந்த 'லுக்’கை அப்படியே தக்கவைத்துக் கொண்டார்!  
நீ வருவாய் என...
தீவிரமான ரசிகர் பட்டாளம் அஜித்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது வெளியான இந்தப் படத்தில் அஜித் இறந்துவிடுவதுபோல நடித்திருப்பார்.   படம் வெளிவந்ததும் அஜித்தைத் தேடிவந்த ரசிகர்கள், 'இனிமேல் இறப்பதுபோல நடிக்க வேண்டாம்’ எனக் கோரிக்கை வைத்தார்களாம்.
அமர்க்களம்
முதல் நாள் படப்பிடிப்பில் அஜித், ஷாலினியைக் கத்தியைக் காட்டி மிரட்டும் காட்சி. அப்போது எதிர்பாராவிதமாக நிஜமாகவே ஷாலினியின் கையைக் கீறிவிட்டார் அஜித். ரத்தம் துளிர்த்துவிட்டது. ஷாலினியைவிட அதிகம் பதறிவிட்டார் அஜித். அந்தப் பதற்றமும் அதன் பிறகான அஜித்தின் அக்கறையும், இருவருக்குமான காதலாக மலர்ந்து சிறகடித்தது... ஒரு மகிழ்ச்சியான காதல் கதை!    
முகவரி
இதுவரை அஜித் நடித்த படங்களிலும், இனி நடிக்க இருக்கும் படங்களிலும்... அவர் மனதில் இருந்து நீங்காத இடம்பிடித்த கேரக்டர் எது எனக் கேட்டால், 'முகவரி’ ஹீரோ ஸ்ரீதர் கேரக்டர்’ என்பார் அஜித். அந்த அளவுக்கு மிக யதார்த்தமான, இயல்பான அந்த கேரக்டர் அவருக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தில் இடம்பெற்ற 'மில்லினியம்’ பாடலும் அவருக்கு மிகவும் பிடிக்கும்!
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, 'சிவாஜி கணேசனுக்குப் பிறகு பாடலுக்கான உதட்டு அசைவு அஜித்துக்கு அற்புதமாகப் பொருந்துகிறது’ எனச் சொல்ல, எதிர்பாராத அந்தப் புகழ்ச்சிக்குத் திக்கென அதிர்ந்து, பின் எழுந்துநின்று அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
அஜித், விஜய் என இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் ஆவேசத்தை அதிகப்படுத்திய படம். 'வாலி’, 'முகவரி’ வெற்றிக்குப் பிறகு வெளியான இந்தப் படம் சரியாகப் போகவில்லை.
தீனா
முதலில் இந்தப் படத்துக்கு இயக்குநராக  ஒப்பந்தமானவர் வேறு ஒருவர். ஆனால், படப்பிடிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கும் படத் தயாரிப்பாளருக்கும் திடீரென முட்டிக்கொண்டது. புது இயக்குநரைத் தேடவேண்டிய நிர்பந்தம். 'எஸ்.ஜே.சூர்யா அசிஸ்டென்ட்னு ஒருத்தர் என்னைப் பார்க்க வந்தாரே... அவரை உடனே அழைச்சுட்டு வாங்க’ என அஜித் ஒருவரை அழைத்து வரச் சொன்னார். அந்த ஒருவர்தான்... இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!
சிட்டிசன்
பொதுவாக, அஜித் 'கெட்டப்’ மாற்றம் குறித்து அலட்டிக்கொள்ள மாட்டார். ஆனால், இந்தப் படத்தின் கதை பிடித்துப்போனதால், அத்திப்பட்டி கிராமத்து மீனவர் வேடத்துக்காக தினசரி வெற்றிலை போட்டு தனது பற்களைக் கறையாக்கிக்கொண்டு, விக், மேக்கப், தியாகி தாத்தா கெட்டப் எனப் பல வித்தியாச கெட்டப்களில் நடித்திருப்பார்!
பூவெல்லாம் உன் வாசம்
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக குலுமணாலி சென்றிருந்தார்கள். அப்போது திடீரென சிவாஜி கணேசன் இறந்துவிட்டார். குலுமணாலியில் அப்போது கடும் மழை. ஆனாலும் யோசிக்காமல் ராத்திரி ஒரு மணிக்கு குலுமணாலியில் இருந்து தானே காரை ஓட்டிக்கொண்டு அருகாமை நகரத்துக்கு வந்து, டெல்லிக்கு வந்து சேர்ந்தார். அங்கு இருந்து விமானம் பிடித்து சென்னைக்கு வந்து சிவாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றார். காரணம், சிவாஜி மீது அவருக்கு அந்த அளவுக்கு அபிமானம் கலந்த மரியாதை!
அசோகா
சின்ன ரோல்தான். கிட்டத்தட்ட வில்லன் வேடம்கூட. ஆனாலும், ஷாரூக் கான் கேட்டுக்கொண்டதால், இந்த இந்தி படத்தில் நடித்தார் அஜித். பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களில் ஓடியாடி, துடிப்பாக வேலைபார்க்கும் உதவி இயக்குநர்களுக்குத் தன் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுப்பார் அஜித். அப்படி இந்தப் படத்தில் வேலைபார்த்த ஓர் இளைஞரை அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர்... அஜித்தை வைத்து 'பில்லா, 'ஆரம்பம்’ என இரண்டு படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன்.
ரெட்
பிரபல டைரக்டர் ஒருவர் படத்தில் நடிப்பதற்காக அஜித் 'மொட்டை’ அடித்துக்கொண்டார். ஆனால், எதிர்பாராத காரணங்களால் அந்தப் படம் ரத்தாக, சிங்கம்புலியை அழைத்து 'ரெட்’ பட இயக்குநர் ஆக்கினார். அந்த மொட்டை கெட்டப்புக்கு ஏற்ப 'ரவுடி’ கதை பிடித்தார்கள்.
ராஜா
சும்மாச்சுக்கும் விடுமுறையைக் கழிப்பது போல மிக கேஸுவலாக அஜித் நடித்த படம். இந்தப் படம்தான் வடிவேலுவுடன்  அஜித் நடித்த ஒரே படம்.
வில்லன்
இந்தப் படத்தின் கதையை எழுதிய யூகிசேது, 'அஜித் இப்போ மாஸ். அவரோட ரசிகர்கள் அவர் படத்தில் ரஜினி மாஸையும் எதிர்பார்க்கிறார்கள்; கமல் பெர்ஃபார்மன்ஸையும் விரும்புகிறார்கள்’ என்றார். 'பக்கவாத’ நடை, கண்டக்டர் உடை என அஜித்தும் ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்து வைத்திருப்பார்!
என்னைத் தாலாட்ட வருவாளா
அஜித் நடித்த ஆரம்ப கால படம் இது. 'வெண்ணிலா' என்ற பெயரில் பாதி படம் உருவானபோது அஜித்துக்கு சென்னை அண்ணா சாலையில் பெரிய விபத்து. நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். படத்தை முடிக்க முடியாத நிலை. அஜித் 25 படங்கள் நடித்து முடித்த பின், எட்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்தனர். பாதியில் அஜித்துக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டதாகவே கதை பண்ணி, அவருடைய தம்பியாக விக்னேஷ் வந்து, ஏமாற்றிவிட்டுச் சென்ற காதலியைப் பழி தீர்ப்பதாகக் கதையை முடித்தார்கள்.
ஆஞ்சநேயா
இப்போது சினிமா நிகழ்ச்சிகள் எதிலும் பங்கெடுக்காமல், தனது பட இசை வெளியீட்டு விழாக்களில்கூட கலந்துகொள்ளாமல் தவிர்க்கிறார் அஜித். ஆனால் அப்போது, 'நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்...’ எனப் பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தப் படத்தில் நடித்தார். அதுதான் அஜித்தின் தன்னம்பிக்கைக்கு சின்ன உதாரணம்!
ஜனா
'வல்லரசு’ படத்தை எடுத்த ஷாஜி கைலாஷை அழைத்து, ஒரு கேங்க்ஸ்டர் படம் வேண்டும் என உருவாக்கிய படம். 'பில்லா’, 'மங்காத்தா’ படங்களுக்கு முன்னர் துப்பாக்கியும் கையுமாக அஜித் உலா வந்த படம். 'பாட்ஷா’ படத்தைப்போல இருக்கும் என பட ரிலீஸுக்கு முன் பரபரப்பு இருந்தது.  
அட்டகாசம்
'பொள்ளாச்சி இளநீரே’ என்ற பாடல் காட்சிக்காக ஆஸ்திரேலியா போயிருந்தார்கள். தயாரிப்பாளருக்குப் பணச் சிக்கல். படக் குழுவினர் அனைவரையும் தன் சொந்த செலவில் பார்த்து, அழைத்துவந்தார் அஜித்.
ஜீ
முதன்முதலாக லிங்குசாமி கதை சொன்னபோதே, 'இது மலையாளப் பட கதை மாதிரி இருக்கு. எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. அதனால், இந்தக் கதை எனக்கு செட் ஆகாது’ எனச் சொன்னார். படம் வெளியான பிறகு அவர் சொன்னதுபோலவே முடிவு அமைய, பத்திரிகையாளர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து, 'படம் சரியாப் போகலை. ஆனால், நல்ல கதை’ என இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்.  
பரமசிவம்
'சந்திரமுகி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் அஜித் நடித்தார். படபூஜையை ரஜினி தொடங்கிவைத்தார். ரஜினிக்கும் அஜித்துக்கும் மெல்லிய பாசம் பிறந்தது. அது இன்று வரை தொடர்கிறது.
திருப்பதி
முந்தைய சில படங்கள் சரியாகப் போகாததால், ஓய்வெடுத்துக்கொண்டு, சின்ன இடைவேளைக்குப் பிறகு ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் நடித்தார். சட்டென ஆளே மெலிந்து, இளைத்து, முடி வளர்த்து அஜித்தின் தம்பிபோல வந்து நின்றார். அஜித்தின் அந்தத் தோற்றம் அப்போதே செம வைரல் ஷாக் உண்டாக்கியது!  
வரலாறு
படத்தின் கதையைக் கேட்டதுமே, பரதநாட்டியம் ஆடும் திருநங்கை கேரக்டர் பற்றி அஜித்துக்கு சின்ன நெருடல். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் குழப்பம். 'அண்ணன், தம்பி கேரக்டர்களை மட்டும் அஜித் செய்துவிட்டு, பரதம் ஆடும் அப்பா வேஷத்துக்கு வேறு நடிகரை நடிக்க வைக்கலாமா?’ என யோசித்தார்கள். ஆனால், 'நானே நடிக்கிறேன்’ எனச் சொல்லி சில பரதநாட்டிய அபிநயங்களைக் கற்றுக்கொண்டு நடித்தார்.
ஆழ்வார்
'ஆழ்வார்’ மிகுந்த எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கப்பட்டது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை; சளைக்கவில்லை அஜித். ஃப்ளாப் கொடுத்தாலும் என் ஒவ்வொரு படத்துக்கும் அட்டகாசமான ஓப்பனிங் இருக்கும் என தெம்பாகச் சொன்னார். 'எத்தனை ஃப்ளாப் கொடுத்தாலும் தாங்குவேன்’ என அஜித்தின் துணிச்சல் பேட்டி அப்போது வெளியானது.
கிரீடம்
தயாரிப்பாளர் பூர்ண சந்திர ராவைச் சந்தித்து, 'ரஜினியின் 'தீ’ படத்தை  ரீமேக் செய்யலாமா?’ என அஜித் கேட்டார். 'ஏற்கெனவே பார்த்த படத்தை மக்கள் மறுபடி பார்ப்பார்களா எனத் தெரியவில்லையே!’ என்று ஏதேதோ சாக்குச் சொல்லி மறுத்துவிட்டனர். அந்த 'ரீமேக் ஜுரத்துடன்’ இருந்தபோது இயக்குநர் விஜய் எடுத்த விளம்பர படங்களைப் பார்த்து வியந்த அஜித், அவர் இயக்கத்தில் மலையாளப் பட ரீமேக்கான இந்தப் படத்தில் நடித்தார்.
பில்லா
'தீ’ ரீமேக் ஆசை நிறைவேறாமல் இருந்தவர், 'பில்லா’ படத்தை நிச்சயம் ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்தார். ரஜினியிடம் அனுமதி வாங்கி நயன்தாரா, நமீதா என ஏக காஸ்ட்டிங்கில் படத்தை உருவாக்கினர். பழைய 'பில்லா’வில் தேங்காய் சீனிவாசனும் மனோரமாவும் நடித்திருப்பார்கள். அவர்களுக்கு இணையான நடிகர்கள் இல்லை என்பதால், ரீமேக் பில்லாவில் அந்தப் பகுதியையே தூக்கிவிட்டார்கள்.
ஏகன்
முதலில் இந்த கதையைச் சொன்னவர் பிரபுதேவா. அவர்தான் படத்தை இயக்குவதாகவும் இருந்தது. ஆனால், திடீரென விஜய் படத்தை இயக்கச் சென்றுவிட்டார் பிரபுதேவா. பின்னர் பிரபுதேவா அண்ணன் ராஜு சுந்தரம் படத்தை இயக்கினார். பத்தும் பத்தாததற்கு இதன் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு விழாவில் அஜித்தும் விஜய்யும் சந்தித்துக்கொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பைப் பற்றவைத்தது!
அசல்
சிவாஜி குடும்பம் மீது இருந்த அபிமானத்தால், 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ பேனரில் இந்தப் படத்தில் நடித்தார். இந்தப் பட டைட்டில் கார்டில் 'கதை, திரைக்கதை, வசனம் உதவி அஜித்குமார்’ எனப் பெயர் வரும்.
மங்காத்தா
எதேச்சையான சந்திப்பின்போது, சத்யராஜுக்காக ஒரு நெகட்டிவ் ரோல் கதை வைத்திருப்பதாக அஜித்திடம் வெங்கட் பிரபு சொல்ல, கதையைக் கேட்டிருக்கிறார் அஜித். முழுதாகக் கேட்ட அடுத்த நொடி, 'இந்தப் படத்தை நானே பண்றேன். இதான் என் 50-வது படம்’ என்றார். ஐம்பதாவது படத்தை தெறி மாஸ் பட்டியலில் சேர்த்தது அந்த முடிவு!
பில்லா-2
  'பில்லா 1’ படத்தில் டான் ரஜினி ஆற்றில் விழுந்து இறந்துவிடுவதாக கதை இருக்கும். ஆனால், அஜித் நடிக்கும் 'பில்லா-2’ படத்துக்கான லீடை அதில் இருந்து எப்படி எடுப்பது என யோசித்துக் கொண்டிருந்தபோது, 'பில்லா டான் ஆவதற்கு முன்பு எப்படி சாதாரண ஆளாக இருந்தான். பின் எப்படி படிப்படியாக டான் ஆனான் என்று படமாக்கினால் நன்றாக இருக்கும்’ என அஜித் சொன்ன ஐடியாவில் உருவானது படம்!
இங்கிலீஷ் விங்கிலீஷ்
ஒருநாள் அஜித்துக்குத் திடீரென போன்; எதிர்முனையில் ஸ்ரீதேவி. தான் நடிக்கும் இந்தி படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கக் கேட்டார். ஆரம்பத்தில் அஜித் தவிர்த்தார். ஆனால், 'தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கை அதிகம் உள்ள ஹீரோ நீங்கதான். கதைப்படி தன்னம்பிக்கை இல்லாத என் கேரக்டருக்கு நீங்கதான் தைரியம் கொடுக்குறீங்க...’ என ஸ்ரீதேவி சொன்னதும் உடனே ஓ.கே சொல்லி நடித்துக் கொடுத்தார்.
ஆரம்பம்
ஒரு காலத்தில் 'நான் அஜித்தை வைத்துப் படமே தயாரிக்க மாட்டேன்’ என பகிரங்கமாக அறிக்கையே விட்டார், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். தமிழ் சினிமாவில் கார்ப்பரேட் கம்பெனிகள் கால் ஊன்றிய பிறகு, பிரமாண்ட தயாரிப்பாளர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள் என்பதில் அஜித்துக்கு வருத்தம். ஏம்.எம்.ரத்னத்தின் இரண்டு தயாரிப்புகள் பாதியிலேயே நின்றதில் மன உளைச்சலில் இருந்தார். அவருக்கு ஒரு லிப்ஃட் கொடுக்க, அவரது தயாரிப்பில் இந்தப் படத்தில் நடித்தார்.
வீரம்
அஜித் என்றாலே கோட் சூட் மாட்டிக் கொள்வார்; கார் ரேஸ் போவார்; ஹெலிகாப்டர் ஓட்டுவார் என்கிற எண்ணம் இருந்து வந்ததால், பக்கா கிராமத்துப் படம் ஒன்றில் நடிக்க ஆசைப்பட்டார். இயக்குநர் சிவா அஜித்தைச் சந்தித்தபோது, 'நீங்க படம் முழுக்க வேட்டி, சட்டையோடு நடிக்கிறீங்க. உங்க ரசிகர்கள் உங்களோட தம்பியா நடிச்சா படம் எப்படி இருக்கும்?’ எனச் சொல்ல, உடனே அந்த புராஜெக்ட் நடைமுறைக்கு வந்தது!  
என்னை அறிந்தால்
'ஆரம்பம்’ படத்தின் முதல் காப்பி பார்த்துவிட்டு அஜித்தும் ரத்னமும் ஒரே காரில் சென்றனர். அப்போது 'அடுத்த படத்தையும் நீங்களே தயாரியுங்கள்’ என்றார் அஜித். 'இயக்குநர் யார்?’ என்ற பேச்சு வந்தபோது, 'கௌதம் மேனன் டைரக்‌ஷன்ல நடிக்கணும்னு ஆசை. ஏற்கெனவே ரெண்டு தடவை அவரோட நடிக்க வேண்டியது தள்ளிப்போச்சு!’ என்றவர், கௌதம் மேனனிடம் ஒரு வரிகூட கதை கேட்காமல் ரத்னத்திடம் அட்வான்ஸ் வாங்கிக்கொடுத்தார்.
வேதாளம்
'பாட்ஷா’வில் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்ததுபோல, 'வேதாளம்’ படத்தில் கால் டாக்ஸி டிரைவர் வேடம் அஜித்துக்கு. 'பாட்ஷா’ ஃப்ளாஷ்பேக் போல இந்தப் படத்திலும் ஒரு ஃப்ளாஷ்பேக். அந்த போர்ஷனுக்கான அஜித் கெட்டப்... 'ரெட்’ ஸ்டைல் மொட்டை 'தல’!
55 திரைப்படங்கள்தானே வருகின்றன என கச்சிதமாகக் கணக்குப் போட்டவர்களுக்கு ஓர் ஒரு வரித் தகவல்.
சுரேஷ் - நதியா நடித்த 'என் வீடு என் கணவர்’ படத்தில் பள்ளி மாணவனாக சிறிய வேடத்தில் நடித்தார். 56 ஓ.கே-வா?
எம்.குணா, படங்கள் உதவி: ஞானம்

ன்றி-விகடன்

Sunday, November 29, 2015

சத்தியமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பண்ணாரியம்மன் கோவில் மகிமைகள்

பிணி தீர்க்கும் பிரார்த்தனை..!
டலில் ஏதேனும் பிரச்னை என்றால், மருத்துவரிடம் ஓடுகிறோம். அப்படியே கோயிலுக்கும் சென்று கடவுளைத் தரிசித்து, நம் பிரார்த்தனையை வைத்துவிட்டுச் செல்கிறோம். கொங்கு தேசத்து மக்கள் தங்கள் உடலில் ஏதேனும் தீராத நோய் வந்து அவதிப்பட்டால், உடனே ஸ்ரீபண்ணாரி அம்மனை நாடி வந்து, தங்கள் கோரிக்கையை வைத்துச் செல்கின்றனர். அவளும் நோய் தீர்க்கும் மருத்துவச்சியாகத் திகழ்கிறாள்.
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்தும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஆவாரம்பாளையம். கோயிலுக்குச் செல்ல, அடிக்கடி பஸ் வசதி உண்டு. ஷேர் ஆட்டோவும் உள்ளது. சுமார் 150 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் இருந்தபடி, தன்னை நாடி வருவோரின் நோய்களைத் தீர்த்து அருள்கிறாள் ஸ்ரீபண்ணாரி அம்மன்.
மனத்தில் எப்போதும் கவலை, தொழிலில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பிரச்னை, குடும்பத்தில் பூசல் என வாழ்வில் என்ன சிக்கல்கள் வந்தாலும், 'பண்ணாரியம்மா இருக்கும்போது நமக்கென்னப்பா கவலை?’ என்று சொல்லியபடி, அவளின் சந்நிதிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள், பக்தர்கள். சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனுக்கு வேண்டிக் கொண்டு, ஏதேனும் காரணங்களால் அங்கே செல்ல இயலாதவர்கள், தங்களது நேர்த்திக்கடனை இங்கு வந்து செலுத்திச் செல்வதாகத் தெரிவிக்கிறார்கள்.

பண்ணாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா பிரசித்தம்! அதேபோல், இங்கேயும் அதே நாளில் விமரிசையாக நடைபெறுகிறது திருவிழா. அந்த நாளில் இங்கு வந்து அம்மனுக்கு மிளகு மற்றும் உப்புக் காணிக்கை செலுத்தி பிரார்த்தித்துக் கொண்டால், எத்தகைய தோல் வியாதியும் விரைவில் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை.
ஆடி வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், நவராத்திரி காலங்களிலும் இங்கு வந்து ஸ்ரீபண்ணாரியம்மனிடம் வேண்டிக்கொண்டால், பூரண ஆரோக்கியத்துடன் நம்மைச் சிறப்புற வாழ வைப்பாள், ஸ்ரீபண்ணாரியம்மன்.
- சு.மதிவாணன்
படங்கள்: ர.சதானந்த் 

thanks vikatan

தவமிருக்கும் திரைப்படங்கள்!-நிஜமும் நிழலும்-தமிழகத் தணிக்கைக் குழுவின் மண்டலத் தலைவர் நடிகர் எஸ்.வி.சேகர்

கடந்த இரண்டு வாரங்களாகத் தங்கள் படங்களின் தணிக்கைக்காகத் தவமிருக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள். ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எடிட்டிங் பணிகள் தொடங்கும். அது முடிந்ததும் அடுத்து டப்பிங் பணிகள், டி.ஐ எனப்படும் கலர் கிரேடிங் உள்ளிட்ட டிஜிட்டல் வேலைகள், கிராபிக்ஸ் காட்சிகள் சேர்ப்புப் பணிகள், பின்னணி இசைக்கோர்ப்பு எல்லாம் முடித்து முழுமையாகத் தயாராகும். இது ஃபர்ஸ்ட் காப்பி என்கிறார்கள். இப்படி முதல் பிரதி தயாரானதும் ரிலீஸ் தேதியை முடிவு செய்வார்கள்.



எனவே, தணிக்கை அதிகாரிகளுக்குத் திரையிட்டுக் காட்டி தணிக்கைச் சான்றிதழ் பெறுவார்கள். தணிக்கை வாரியத்திடமிருந்து ‘யு' சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில்தான் வரிவிலக்குச் சலுகைக்காக விண்ணப்பிக்க முடியும். அதற்கென இருக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து வரிச்சலுகைக்கு வேண்டுகோள் வைத்த பிறகே வரிச்சலுகைக்கான காட்சியை அதிகாரிகள் பார்த்து, அதற்காக அரசு குறிப்பிடும் அளவுகோல்களில் படம் இருந்தால் வரிச்சலுகை கிடைக்கும். வரிச்சலுகை கிடைத்த பிறகுதான் படத்தை விளம்பரப்படுத்த முடியும்.



தேதியை முடிவு செய்ய முடியாத நிலை!


தற்போது தமிழ்த் திரையுலகில் உள்ள காட்சிகளைப் பார்க்கும்போது, தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனை அதிகாரிகள் பார்த்து சான்றிதழ் தருவதற்கு சுமார் 20 நாட்கள் ஆகின்றன என்கிறார்கள். இதனால் பல படங்களுக்கு ‘விரைவில்' என்று போடப்பட்டே விளம்பரம் அளித்துவருகிறார்கள். காரணம், தணிக்கைப் பணிகள் முடிந்தால் மட்டுமே பட வெளியீடு எப்போது என்பதை வெளியிட முடியும். தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களிடம் ஒரு தேதியைத் தெரிவித்துவிட்டு தணிக்கை முடியாததால் கடும் தத்தளிப்புக்கு உள்ளாகிவருகிறார்கள்.



விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து படம் சொன்ன தேதிக்கு வருமா, வராதா என்று தெரியாத நிலை நிலவுகிறது. சமீபத்தில் ஒரு படத்துக்கு நவம்பர் 8-ம் தேதி தணிக்கைக்கு விண்ணப்பித் திருக்கிறார்கள். ஆனால், தணிக்கை அதிகாரிகள் பார்த்து சான்றிதழ் அளித்தது நவம்பர் 23-ம் தேதி. ஒருவேளை, தணிக்கை அதிகாரிகள் முன்பே பார்த்து சான்றிதழ் அளித்திருந்தால், இன்னும் நன்றாக விளம்பரப்படுத்தியிருப்போம் என்று குமுறுகிறது படக் குழு.



இது குறித்து முன்னணி தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசியபோது, “எனது படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு 17 நாட்கள் கழித்துத்தான் படத்தைப் பார்த்து சான்றிதழ் அளித்தார்கள். நான் வெளியீட்டுத் தேதி முடிவு செய்து, விநியோகஸ்தர்களிடம் பேசிவிட்டேன். தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தவுடன்தான் என்னால் வெளிநாட்டுக்குப் படத்தை அனுப்பிவைக்க முடியும். இதனால் அதுவும் தாமதமானது. சீக்கிரம் படத்தைப் பார்த்திருந்தார்கள் என்றால் சரியாகத் திட்டமிட்டிருப்போம். இப்போது அவசர கதியில் எல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார் காட்டமாக.


என்ன சொல்கிறார் எஸ்.வி. சேகர்?


தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு குறித்து தமிழகத் தணிக்கைக் குழுவின் மண்டலத் தலைவர் நடிகர் எஸ்.வி.சேகரிடம் கேட்டோம். “இந்தக் குற்றச்சாட்டை நான் முற்றிலும் மறுக்கிறேன். தணிக்கை என்பது ஒன்றும் திண்டிவனம் சுங்கச்சாவடி கிடையாது. முதலில் தமிழ்த் திரையுலகத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் தணிக்கைப் பணிகள் குறித்த புரிதல் வேண்டும். முதலில் யார் பணம் கட்டித் தணிக்கைக்கு முன்பதிவு செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும்.



சமீபத்தில்கூட, ஒரு படத்துக்குத் தேதி முடிவு பண்ணிவிட்டோம், ஆகையால் நீங்கள் தணிக்கை செய்துதர வேண்டும் என்றார்கள். உடனே, முன்னால் இருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சரி என்றால் எங்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தோம். அவர்களும் ஒப்புக்கொண்டதால் உடனே தணிக்கை செய்தோம்.” என்றவர் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு இருக்கிறது என்பதையும் விவரித்தார்.



தயக்கம் வேண்டாம்!
“நாங்கள் ஒரு அரசு நிறுவனம் என்பதால் முதலில் தணிக்கைப் பணிகள் குறித்துத் தயாரிப்பாளர் சங்கம் ஒரு வரைமுறையை வகுக்க வேண்டும். தணிக்கைக் குழு என்பது தயாரிப்பாளர்கள் குற்றவாளிகள் கூண்டில் நிற்க வேண்டிய இடம் அல்ல. அவர்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்ய நூறு சதவீதம் உரிமை உண்டு. அதற்கு உண்டான நாட்களை வைத்துக்கொள்ள வேண்டும். தணிக்கை குழு மீது சந்தேகமோ, பிரச்சினையோ உங்களுக்கு இருந்தால் [email protected] என்ற எனது இ-மெயில் முகவரிக்குப் புகார் அனுப்பலாம்.




முதலில் சினிமா தயாரிப்பாளர்கள், தணிக்கை அதிகாரிகளைப் பார்த்தவுடன் கையைக் கட்டிக்கொண்டு நிற்பது, சாப்பாடு வாங்கிக்கொடுப்பது போன்றவற்றை யெல்லாம் செய்யக் கூடாது. அதுவும் ஒரு வகையில் லஞ்சம்தான். தைரியமாகப் போய் இது என் படம், பார்த்துவிட்டு என்ன சான்றிதழ் கொடுக்கிறீர்கள் என்று கேட்பதில் தவறில்லை. தணிக்கைக் குழுவிடம் நிலைமையைக் கேட்டறிய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை. படப்பிடிப்புக்கு முன்பு 6 மாதம், படப்பிடிப்புக்கு 6 மாதம், படப்பிடிப்புக்குப் பிறகு 3 மாதம் என மாதக்கணக்கில் திட்டமிடும் தயாரிப்பாளர்கள் ஏன் தணிக்கை செய்ய ஒரு மாதத்துக்கு முன்பாகவே பதிவு செய்யக் கூடாது? அதைச் செய்தால் இப்போது இருக்கும் பிரச்சினைகள் பாதி தீர்ந்துவிடும்” என்றார்.


தஹிந்து
எஸ்.வி. சேகர்