Wednesday, November 28, 2012

உங்கள் உதட்டை பாதுகாக்க 10 வழிகள் ( கமல் ரசிகைகளுக்கு மட்டும் அல்ல )

பாதுகாக்க 10 வழிகள் உதடு


நன்றி - விகடன்

பிட்ஸ்


கமல் பற்றி ஏதும் கேட்க வேணாம் - சரிகா கமல் கட் அண்ட் ரைட் பேட்டி

My biggest expense is books, not diamonds: Sarika
Sarika-My biggest expense is books, not diamonds: Sarika

The Times of India

 

Starting off as a child actor, graduating to a seasoned actress, then moving behind the scenes as a technician and returning to face the arc-lights... actress Sarika's journey in the film world has come full circle.


 Dressed in a simple cotton salwar kurta, the light-eyed actress with the "never looking back" attitude talks career, daughters and, as usual, clamps down when it comes to her ex-husband — Kamal Haasan.

http://entertainment.jagranjunction.com/files/2011/11/Kamal-Hassan-Sarika-Marriage.jpg

You seem to be leading a simple life...



I am a very simple person, very basic. I don't like jewellery or diamonds. My biggest expense in life is books and music. Whenever I get a signing amount I immediately run to a bookstore where I spend the whole day and my girls say, 'Oh my God, now she will splurge 10000 to 15000'



It's been quite some time since you separated from Kamal Haasan. Have you moved on in life?




Yes, of course, or else I wouldn't have been where I am today. I am very happy as I have done it on my own. An ideal or a perfect life is to have people there for you at different stages of life, but it didn't happen with me which I am okay with. This is my life and I have made the best of what I can as even today I take care of myself.


I make sure that there is food on the plate. One thing nobody can take away from me is my pride. You get up in the morning, put on your makeup and you go. You thought you will never have to do all this again, but you have to do it so make the most of it. Do a Parzania, win a National award and feel proud of yourself. At the end of the day, I have to pat my back. You can't sit and brood over yeh hota toh achha hota.


 It has been a tough life, but in that toughness I have found myself. Nobody is there to tell me anything, I have to run my house, I am doing so for 10 years. I lead a simple yet queen-size life. Till the time I have strength and courage, I will do it and when I lose that, I will go and do kheti badi.



How come you decided to do the item number Dum Mast Kalandar in your upcoming film David?




Director Bejoy Nambiar was a bit hesitant to ask me to do the item number wondering how I would react to it. But I was thrilled because many years ago when I was young and had just started my career, me and three to four other actresses wanted to meet Runa Laila who had come at a Filmfare function.


Her song Dum Mast Kalandar was a craze then. We were running from pillar to post trying to go inside and meet her personally, but we never got to meet her. We were feeling miserable about it. I never thought that I would ever be associated with the track after so many years.

http://images.news.pluzmedia.in/slide/big_Cinema_is_everything_for_me__Kamal_Haasans_exwife-be01085a0f3471c99423d1ef2ea933b0.jpg

But are you okay with the song being called an item number?




Mera kya jaata hai, meri toh chandi hai. Life mein jo aaye le lene ka.
Earlier we didn't use the term item number, but this is not those days, I don't live in the past. Not even for a day. What is gone is gone; you look back only to learn from where you went wrong. You cannot walk backwards towards the future, you will trip and fall.



Do you discuss cinema with your daughters especially Shruti who is already into movies?



I discuss cinema with anybody who likes cinema. But coming to my daughters - Shruti is into music and my younger daughter Akshara is learning western dance. They can both be actors but I am glad that they have their own space which is not influenced by either of their parents. It is not fair to the children to be compared to their parents all the time as making their own identity will be difficult for them.


 They already have an identity and luckily I have my own career to talk about. By virtue of being here for a long time the natural reaction for everybody is to come and get us onto the bandwagon. But we have made a conscious decision to keep away for some time till they get established.


They are my children, where are they going? Where am I going? I can always get up and hold their hands again. As a parent we should not be interfering in their space, we have to keep out. I want them to have a free run of me. All celebrity parents, whose children are trying to do something, should never interfere in their space. Hence, I don't focus my interviews on them and one must move back or else it goes on back and forth and they never get their space. And it is not that I am not doing anything. Within a span of 10 years both Shruti and I are actresses.




So do you meet and bond with your ex Kamal Haasan for the sake of children?



Why talk about something that is not part of my life anymore? I don't need to talk about anyone else. My life is good enough, more than enough to talk about. Between me and my daughters we have lot many interesting things to say. We have lot of fun together. There are two ways of living life - one is to just sit where you have been pushed and not get out from there, and the other is to be happy and enjoy life each day, I chose the latter.


http://www.our-kerala.com/newgallery/images/photos/images/KamalHassan-with-Sarika.jpg

Has Akshara expressed interest in acting?



As of now she is not at all interested in acting. She will if she wants to, but at present she is very keen on her dancing and I don't want to disturb that. That is her call.



There were some reports of Akshara doing a Mani Ratnam film



That is not true. Mani is a very dear friend and I don't know who spread that.



With the experiences you have had, what advice do you give to your daughters?



Never give negativity to people, if they have problems let them solve it in their way. If something happens, you address, why do it in anticipation? One must take life as it comes.


Are you friends with them?



Of course, otherwise what is the fun in having children? The best part of having children is that you have your very own best friend. I can say yeh dost toh mera apna hai.


Do they discuss their love life with you?



No, that is their personal life.


Any regrets?


No, I don't have any. Yes, we all make mistakes but something we do at a particular point of time was perhaps correct then. My life has always been tough, it has not been an easy life right from the beginning and everybody knows that, I don't want to go into details of that. Probably that is my destiny.

http://www.extramirchi.com/wp-content/uploads/2010/03/Salman-Khan-with-Sarika-and-Akshara-Hassan.jpg

Do you go out seeking work or it comes to you?



Nowadays directors see if the actor is good for a script and they come to you. I don't have to go seeking work. And that is the most wonderful thing that has happened in the industry. Gone are the days of secretaries and managers, you have them managing your dates now, they can't get work for you.


 All that nonsense is over. And now cinema is so good that they will even cast me when I am 70 and grey in a rocking role of a grandmother. And hopefully some good guys will be there that time to play my grandsons. Then too money will come aur tab bhi biryani ban jayegi ghar mein.


Just that there are not as many good scripts as they should be. We may like to believe that we have come of age and we are giving women lot of importance, it is nothing like that. Where are women given chance that the male actors get? Are they giving me chance the way they are giving Naseeruddin Shah? Scripts are still written with male characters in mind. Have a sense of security let the women come in.




How was your experience behind the camera?



I have been in front, I have been behind and I am in front of the camera again. I have been behind the camera for 18 years, I loved being a technician. The kind of sharing and teamwork that you have actors can never ever imagine. Taking care of each other, making sure that if one department is down, all the departments come...it is a kind of union situation, we are the workers so we stick to each other. That kind of a thing never happens between actors as we are competing and doing the same thing. We can be the best of friends but when the camera is switched on I have no friend except my camera otherwise I am not doing justice as an actor. Being an actor is a luxury.




Which are your personal favourites?



Basuda's Grihapravesh and then straight Parzania, in 2005. It is a good legacy I am leaving behind for my children. I should have at least two more such films then I will feel good. Because after working for so many years just two good films is a bad record. I am trying to do as many different roles as possible. I could have said 'yes' to six other films but either they don't get made or they don't get released.



Do you mingle with people, do you attend film parties?



Where have you seen me? Only if my very close friends from the industry are part of it then I go. For friends I will go anywhere, we are all there for each other. I can't name anyone and randomly say things just for an interview, these are very personal things, and they are of great value to me. 
 http://www.extramirchi.com/gallery/albums/south/actors/kamal/sarika_kamalhassan.jpg

சூசயிட் பாயிண்ட் VS , பக்கோடா பாயிண்ட்

Photo: இந்நாளில் வாழ்தலைப் போன்றதொரு 
முட்டாள் தனம் வேறில்லை.

பிரியம் உடைத்தாகிவிட்டபோது
உழன்று தவிக்கின்ற ஒன்றைப்பற்றி
யாருக்கும் கவலையில்லை தான்....
1. டாக்டர், சாயங்காலம் 6 மணி ஆனா போதும், எல்லாப்பொண்ணுங்களும் அழகா மங்களகரமா தெரியறாங்க.


இது காம மாலைக்கண் நோய் மாதிரி தெரியுதே?



------------------------



2. தலைவருக்குத்தான் இண்ட்டர்நெட் நாலெட்ஜே இல்லையே? எப்டி சைபர் க்ரைம் போலீஸ் கிட்டே மாட்னாரு?


 அவர் லேடி சைபர் க்ரைம் போலீஸ் கையைப்பிடிச்சு இழுத்துட்ட்டாராம்



----------------------



3. உங்க பையன் எல்லா சப்ஜெக்ட்லயும் பூஜ்யம் தான் வாங்கி இருக்கான்

 நோ பிராப்ளம், சைபர் க்ரைம் போலீஸ்ல வேலை கிடைச்சுடும்



-------------------------



4. பைக் பெட்ரோல் டேங்க் ல என்ன கிறுக்கி வெச்சிருக்கே?


 பைக்ல 8 போட்டு காட்டு.அப்போதான் லைசன்ஸ்ன்னு சொன்னீங்களே?




------------------------


5. டியர், எங்க குடும்பத்துல யாருமே லவ் மேரேஜ் பண்ணூனதில்லை


 நல்ல வேளை, எங்க குடும்பத்துல யாரும் மேரேஜே பண்ணலைன்னு சொல்லாம விட்டியே?



----------------------


Photo: எந்தன் சிறைகள் தான்
எனக்கான சிறகுகளென்பதை அறிவீராக....



6. தலைவருக்கு காங்கிரஸ்னா அ;லர்ஜி


 அதுக்காக கையேந்தி பவன்ல கூட சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிச்சா எப்டி?




---------------------


7. மிஸ்! உன்னை மாதிரி ஒரு அழகியை என் வாழ்க்கைல நான் பார்த்ததே இல்லை

 இதே டயலாக்கை என் தங்க்ஜச்சி கிட்டேயும் சொன்னீங்களாமே?

 ஆமா, ஆளை மாத்தினாலும், பேச்சு மாத்தமாட்டேன்.




-------------------


8. டாக்டர், கண்ல பூ விழுந்துடுச்சு



 எப்டி?



 காலி ஃபிளவர் ரை என் மேல எறிஞ்சுட்டா என் சம்சாரம்




---------------------


9. மேரேஜ் ஆன நாள்ல இருந்து கட்டுன பொண்டாட்டிக்கு ஒரு சேலையாவது எடுத்து குடுத்தியாய்யா?



 விளையாடறியா? சுடிதான் பிடிக்கும்னு இதுவரை நீ 309 சுடி எடுத்துக்கலை?




-----------------


10. மடி கணினி ரூ 25,000


 மடி இல்லாம வெறும் கணீனி  மட்டும் எவ்ளவ் சார்?



====------------------------------------

Photo: ●
விட்டுச்செல்கின்ற நேசங்களைத் தாண்டியும்
விடாது தொடர்கின்ற
நினைவுகளையே அதிகம் நேசிக்கின்றது
இந்த பாழும் மனம்...
●
ரேவா பக்கங்கள்




11. சார், போஸ்ட் கார்டு 100 கேட்டீங்களே, இந்தாங்க


 சார், ரொ ம்ப வெளுத்து இருக்கே, வேற டார்க் கலர்ல குடுங்க




-----------------


12. வாஷிங்க் மிஷின் வேணும்


 என்ன மாடல்?

 6 அடி




---------------------


13. டியர், சூசயிட் பாயிண்ட்ல நாம தற்கொலை செஞ்சுக்கலாமா?



வேணாம், பக்கோடா பாயிண்ட்ல ஏதாவது வாங்கி கொறிச்சுக்கிட்டே சாகலாம்



--------------------


14. அந்த காலத்துக்கும், இந்தக்காலத்துக்கும் என்ன வித்தியாசம்?


அந்த காலத்துல விளை நிலங்கள் , இப்போ விலை போன நிலங்கள் ஆகிடுச்சு



-----------------------


15. ஒரு கைல ஓசை எழுப்ப முடியும்னு நேத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்


 எப்டி?



 என் சம்சாரம் ஒரு கைல என் கன்னத்துல ஓங்கி பளார்னு ஒண்ணு குடுத்தா பாரு




---------------------

Photo: கொஞ்சம் - நீ
இதழ் திறந்து இதயம் காட்டு
புரியாது நிற்கும் 
இக்கவிதையின் அடுத்தவரி
ஆரம்பமாகட்டும்...
16.  கேரளா ஆட்கள் இங்க்லீஷ் உச்சரிப்புல ஆ  என சொல்லும் இடங்கள்ல ஓ என சொல்வாங்களாமே? உண்மையா?

 ஓ மா





------------------------------------
டுடே டைம் பாஸ் @ டி வி 

டுடே டைம் பாஸ் @ டி வி


Tuesday, November 27, 2012

நீயா? நானா? - விஜய் டி வி விவாதம் - பாக்கெட் மணி -அதிர்ச்சி கலாச்சார சீர்கேடு

ஆடம்பர செலவுக்காக குற்றவாளிகளாக மாறும் இளையசமுதாயம்!: நீயா நானாவில் அதிர்ச்சி

அப்பா நாலணா குடுப்பா....


நாலணாவுக்கு என்ன செலவு இருக்கு? பத்துபைசா தர்றேன்... பாட்டி கடையில மிட்டாய் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போ கண்ணு...



இது 80களில் பள்ளிக்கு சென்றவர்களின் வீடுகளில் நடந்த உரையாடல். 90களில் கல்லூரி சென்று படிக்கும் போது கூட 20 ரூபாய் செலவிற்கு வாங்குவது கூட அதிகம்தான். ஆனால் இன்றைக்கோ எல்.கே.ஜி செல்லும்போதே தினசரி 30 ரூபாய் அல்லது 50 ரூபாய் சாக்லேட், ஸ்நாக்ஸ் வாங்கித்தர வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.



இதுவே வளர்ந்து கல்லூரி செல்லும்போது 500 லிருந்து 1000 ரூபாய் வரை கூட பாக்கெட் மணி கொடுக்கவேண்டியிருக்கிறது. தன்னுடன் படிக்கும் மாணவர்கள் ஆடம்பரமாக செலவு செய்கின்றனரே தானும் அதே போல செலவு செய்யவேண்டும் என்ற எண்ணம்தான் பெற்றோர்களிடம் பாக்கெட் மணி அதிகம் கேட்டு செலவு செய்யத் தூண்டுகிறது.



இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ‘பாக்கெட் மணி' பற்றி பெற்றோர்களும், பிள்ளைகளும் விவாதித்தனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரியவில்லை என்று பெற்றோரும், அப்பா, அம்மா கொடுக்கும் பணம் போதவில்லை என்று குழந்தைகளும் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.



பெற்றோர் தரும் பணம் போதவில்லை அதற்காக வீட்டில் வைத்திருக்கும் பணத்தை திருடுகிறோம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து இளைய தலைமுறையினரும் தெரிவித்தனர். இது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிக்காக எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் 70 சதவிகித கல்லூரி மாணவிகள் பெற்றோர் கொடுக்கும் பாக்கெட் மணியை தவிர்த்து வீட்டில் பணம் திருடுகிறோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.



இளைய சமுதாயத்தினரின் இந்த பணம் திருட்டு ஆபத்தானது என்று தெரிவித்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளங்கோ. உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறையினர் ஆடம்பர செலவிற்காக பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இளைஞர்கள் ஆட்களை கடத்துவதும், திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நடக்கிறது. இது பெண் பிள்ளைகள் என்றால் விபச்சாரம் செய்வதற்குக்கூட தயங்குவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.



இதற்குக் காரணம் பிள்ளைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு செல்லம் கொடுத்து கெடுத்தது பெற்றோர்கள்தான். எனவே திடீரென்று அவர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவர்களின் எண்ணம் வேறு விதமாக வடிவெடுக்கிறது. எனவே ஆடம்பரமோகத்தை குறைத்து பணத்தின் அருமையை உணர்ந்து செலவு செய்யவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினர்.



இதேபோல் நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் நாகப்பன் புகழேந்தி பணத்தின் அருமையை குழந்தைகள் உணரவேண்டுமானால் அவர்களின் கையில் பணத்தை கொடுத்து கணக்கு கேட்கலாம். அதனால் எதற்க்கு எவ்வளவு பணம் செலவு செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவரும் என்றார்.



பணத்தின் அருமையை உணர்தும் புத்தகம் ஒன்றை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்போவதாகவும் நாகப்பன் தெரிவித்தது சிறப்பு அம்சம்.



இன்றைய கால கட்டத்தில் நுகர்வு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது இதன்காரணமாகவே பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை உணராமலேயே ஆடம்பரச் செலவு செய்கின்றனர் இளைய தலைமுறையினர். இந்த சூழ்நிலையில் நடத்தப்பட்ட ‘நீயா, நானா' விவாதம் பயனுள்ளதாகவே இருந்தது என்கின்றனர் ரசிகர்கள்.


thanx - thats tamil


நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ - கலைஞரை நக்கல் அடிக்கும் படமா? மணி வண்னன் தில் பேட்டி


http://haihoi.com/Channels/cine_gallery/sathyaraj_amaithipadai_2_nagaraja_cholan_ma_mla_first_look_posters_3786785252_S_108.jpg 


அமாவாசை ரிட்டர்ன்ஸ் !



அதே லொள்ளு, அதே தில்லு, அதே ஜொள்ளு... 'அமைதிப் படை’யில் அதகளப்படுத்திய 'அமாவாசை’, 18 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் அதன் இரண்டாம் பாகம்  'நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ’-விலும் அப்படியே இருக்கிறார். 'அல்லக்கை’ டு 'அலேக்’ அரசியல்வாதி கதையின் பின்னணியை 'அமைதிப்படை’ அளவுக்கு எந்தத் தமிழ்ப் படமும் கிண்டல்அடித்தது இல்லை. சத்யராஜ், சீமானை வைத்து சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை நடத்திவரும் இயக்குநர் மணிவண்ணன் எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறார். துரத்திப் பிடித்துப் பேசியதில் இருந்து.


 ''என்ன சார்... எப்பவும் நாட் ரீச்சபிள்லயே இருக்கீங்களே..?''



''சந்தோஷமான விஷயம்தானுங்களே... செல்போன் டவர் இல்லாத 'நாட் ரீச்சபிள்’ ஏரியா இந்தியாவுக்குள் இப்போ காட்டுக்குள்ள மட்டும்தானே இருக்கு. நம்ம இயற்கை வளத்தை அரசியல்வாதிங்க எப்படிலாம் அழிக்கிறாங்க - இதுதான் 'அமைதிப் படை’ இரண்டாம் பாகத்தின் கதை. அதனாலதான் ஒழுங்கான ரோடுகூட இல்லாத காட்டுக்குள்ள படத்தை எடுத்துட்டு இருக்கோம்.


சத்யராஜ் இந்தப் படத்திலும் அதே அமாவாசைதான். நாகராஜசோழன் எம்.எல்.ஏ-வோட அல்லக்கைதான் நான். முன்னைக் காட்டிலும் மோசமா இருக்குற சத்யராஜைத் திருத்த முயற்சிக்கிற லாரி டிரைவர் கேரக்டரில் சீமான் நடிச்சிருக்கார். என் மகன் ரகுவண்ணனும் நடிக்கிறான்.



 கோமல், வர்ஷா, மிருதுளானு மூணு பொண்ணுங்க இருக்காங்க. கஸ்தூரி, ரஞ்சிதா, சுஜாதா, மகன் சத்யராஜ் கேரக்டர் கள் இந்தப் படத்துல இல்லை. ஆனா, அவங்க இல்லாதது தெரியாத அளவுக்கு புது திரைக்கதை அமைச்சிருக்கேன். அரசியல்வாதிகளின் சேட்டையும் கொள்ளையும் இப்போ கோடிகளில் ஓடிட்டு இருக்கு. அப்படியான குள்ளநரி அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியா நாகராஜசோழன் இருப்பான். அவன் என்ன ஆகுறான்கிறதுதான் படத்தோட க்ளைமாக்ஸ்!''


''வாரிசு அரசியல், அப்பாவுக்கு விஷம்வைக்க முயற்சிக்கும் மகன்னு படத்தோட கதையைப் பத்தி ஏதேதோ பரபரப்பா தகவல் உலவுதே?''



''இதுலாம் உங்க லொள்ளு சார். எப்பவுமே இந்த மணிவண்ணன் தனி நபரைக் குறிவெச்சு விமர்சிக்க மாட்டான். நாம சாப்பிடுற சாப்பாட்டுல, குடிக்கிற தண்ணியில... ஏன் சுவாசிக்குற காத்துலகூட அரசியல் இருக்கு. காலையில எந்திரிச்சதுல இருந்து தூங்கப்போற வரை அரசியலோடுதான் நாம வாழறோம். அந்த அரசியலைத்தான் படத்துல பேசப் போறேனே தவிர, தனி நபர் தாக்குதல் எதுவும் படத்துல இருக்காது. இந்தப் படத்தைப் பொறுத்த வரை சத்யராஜ் பண்ற அக்குறும்பு உங்களைச் சுத்தி இருக்கிற அரசியலை மறந்து சிரிக்கவைக்கும்!''


''நடுவுல உடல்நிலை சரியில்லாம இருந்தீங்களே... இப்போ ஒரு படம் இயக்கும் அளவுக்கு உற்சாகமா உணர்றீங்களா?''



''50 வயசுக்கு மேலதான் ஆக்டிவ்வா வேலை பார்க்கு றான் ஹாலிவுட்காரன். முதுகுத் தண்டுவடத்துல அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து, இப்போதான் ஓரளவு தேறி இருக்கேன். தொண்டாமுத்தூர் பக்கத்துல க்ரீன் வேலி க்ளப்புனு ஒரு இடத்துல தங்கி இருக்கோம். குளிர் பின்னுது. அதிகாலையில நான்தான் முதல் ஆளா எந்திரிச் சுப் போய் எல்லோர் ரூம் கதவை யும் தட்டி எழுப்புவேன். 'ஏனுங் மணி... இன்னும் அரை மணி நேரம் தூங்கிக்குறேனே’னு சதாய்ப்பார் சத்யராஜ். பதிலுக்கு நடுராத்திரி நான் அசந்து தூங்குறப்போ தலை முழுக்க மப்ளர் போர்த்திக்கிட்டு வந்து, 'வாங்க மணி... வாக்கிங் போயிட்டு வரலாம்’னு லந்து கொடுப்பார். இதெல்லாம் என்னை உற்சாகமாவெச்சுக்க அவர் காட்டுற அக்கறை!'' 



''இப்போ ம.தி.மு.க. முகாம் பக்கம் உங்களைப் பார்க்க முடியலையே?''


''அந்தப் பக்கம் போனாத்தானே பார்க்க முடியும். 2006-ல ம.தி.மு.க-வுக்கு ஆதரவா பிரசாரம் பண்ணப்போ, நான் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூடக் கிடையாது. ஆனா, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்குறப்போ, வைகோ, சீமான், நெடுமாறன்லாம் எந்த மேடையில் இருந்தாலும் நானும் அங்கே இருப்பேன். சீமானோட கருத்து கள், போராட்ட வழிமுறைகள் பிடிச்சுப்போய் 'நாம் தமிழர்’ இயக்கத்துல உறுப்பினராகி இருக்கேன். ஆமாம்... இப்போ தம்பி சீமான் இல்லே...  தலைவர் சீமான்!''


 நன்றி - விகடன்

http://www.cineaxis.com/Gallery/Actress/TAMANNAAH%20LATEST%20STILLS/Thumb.jpg


 டிஸ்கி - கலைஞர் , அழகிரி ,ஸ்டாலின் வாரிசு சண்டை பற்றிய படம் போல் தெரிகிறது


http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2012/10/&file=nagaraja-cholan-ma-mla-amaidhi-padai-2-poster_13503672951.jpg

பரதேசி - ஆடியோ விழாவில் பாலா, பாலுமகேந்திரா ,வைரமுத்து பேசியது என்ன?


விக்ரம் - சூர்யாவை விட நான் தான் சிறந்த நடிகன்! - 'பரதேசி' பாலா 

 

'அவன் - இவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் பாலா அடுத்து டைரக்ட் செய்து வரும் படம் 'பரதேசி'.


அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் பிரபல இரட்டை டைரக்டர்களில் ஒருவரான ஜெர்ரி இந்தப் படத்தில் கங்காணி என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.


நேற்று நடந்த இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸை ஒட்டி டைரக்டர் பாலா சிறப்பு பேட்டியளித்தார். அந்தப் பேட்டி இதோ உங்களுக்காக...


கேள்வி : 'பரதேசி' என்ன மாதிரியான கதை?


பரதேசின்னா வேற ஒண்ணுமில்லை. பஞ்சம் பொழைக்கப் போற ஒரு கூட்டம். அவங்களோட கதை, அதுதான்.



கேள்வி : உங்கள் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லோருமே சினிமாவில் சீக்கிரம் பாப்புலராகி விடுகிறார்கள், ஆனால் ஹீரோயின்கள் அந்தளவுக்கு பிரபலமாவதில்லையே?



பதில் : ( சில நொடிகள் யோசிப்புக்குப் பின்...) பிதாமகன் படத்துல நடிச்ச சங்கீதா, அவ ஒரு நல்ல நடிகையாத்தானே இருக்கா... நெறைய படங்கள் நடிச்சிருக்கா? ஹிட் கொடுத்திருக்கா...? அப்புறமென்ன..? அந்த லைலா பொண்ணுக்கும் எனக்கு லவ்வுன்னு எழுதியே அந்தப் பொண்ணை வீட்டுக்கு அனுப்பிட்டீங்க, அப்புறம்.., ஆனால் இந்தப் படத்துல நடிச்சிருக்கிற ரெண்டு ஹீரோயின்களுக்கும் கண்டிப்பாக சினிமாவுல நல்ல சான்ஸஸ் இருக்கு.



கேள்வி : இந்தப் படத்துக்காக மலைகளையெல்லாம் சொந்தமா வாங்கி ஷூட்டிங் நடத்தினீங்களாமே..?


பதில் : என்னது மலையா..? அதெல்லாம் இல்லீங்க, ரெண்டாவது மலைகளையெல்லாம் விலைக்கு வாங்க முடியாது, விட்டா திருநீர் மலையையே நான் வாங்கிட்டேன்னு சொன்னாலும் சொல்வீங்க போலிருக்கு. படத்துக்காக சில காட்சிகளை காடுகள்ல எடுக்க வேண்டியிருந்தது, அதுக்கு வனத்துறையினர் ரொம்ப கெடுபிடி பண்றதுனால நானே சொந்தமா ரெண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அதுல காடு மாதிரி செட்போட்டு ஷூட்டிங் பண்ணினேன். ஆனால் மரங்களையெல்லாம் வெட்டல. அத ஒரு நியூஸா போட்டு பிரச்சனை பண்ணிடாதீங்க.



கேள்வி : உங்க படங்கள்ல நடிச்ச சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா இவங்கள்ல யார் சிறந்த நடிகர்ன்னு சொல்வீங்க?



பதில் : விஷாலை விட்டுட்டீங்க...என்றவுடன் ( நிருபர் ஆமாம்.. விஷாலும் என்று சொல்கிறார்) கேள்வியைக் கேட்டு சிரித்தவர் தாடையை தடவிக்கொண்டே.., இவங்கள்ல யாருமே சிறந்த நடிகன் கிடையாது. அவங்களை விட நான் தான் சிறந்த நடிகன்
என்றவுடன் ஒரே சிரிப்புச் சத்தம்.



கேள்வி : விளிம்பு நிலை மனிதர்களோட வாழ்க்கையைப் பத்தி மட்டுமே எப்போதுமே உங்க படங்கள்ல நல்ல கருத்துக்களை சொல்றீங்க? கமர்ஷியல் படம் பண்ணும் எண்ணம் இல்லையா..?



பதில் : கமர்சியல்ன்னா எதைச் சொல்றீங்க? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அப்போதைக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் படமா எடுப்பேன். இந்தப் படத்தை எடுத்து முடிக்கிறதுக்கே போதும் போதும்னு ஆயிடுச்சி, அடுத்தப் படத்தைப் பத்தி யோசிக்கவே இல்லை.


கேள்வி : இந்தப்படம் 'எரியும் பனிக்காடு'ங்கிற நாவலைத் தழுவி படமா எடுத்திருக்கீங்க, இப்படி நாவலையோ, சிறுகதையையோ படமா எடுக்கிறப்போ இருக்கிற சவுகரியம் எப்படி இருக்கு?



பதில் : ம்... நாமளே ஒரு கதையை சொந்தமான யோசிச்சி அதை படமா பண்றதை விட இது இன்னும் ஈசியா இருக்கு, ரெண்டாவது முழுக்க முழுக்க இது 'எரியும் பனிக்காடு' நாவல் கிடையாது, அதுல எனக்கு பிடிச்ச ஒருபகுதியை எடுத்துக்கிட்டு என்னோட கற்பனையையும் கலந்து படமாக்கியிருக்கேன்.



கேள்வி : நல்ல கலரா, அழகா இருக்கிற ஹீரோயின்களுக்கு கருப்பு சாயத்தை தடவி மேக்கப்பெல்லாம் போட்டு அவங்களை கருப்பா காட்டுறதை விட ஏற்கனவே கருப்பா இருக்கிற ஒரு ஹீரோயினை நடிக்க வெச்சா இன்னும் ஈசியா இருக்கும்ல?



பதில் : யாரு வேதிகாவா..? அந்தப் பொண்ணு கலர்னு சொல்லுங்க, ஆனா அழகுன்னு சொல்லாதீங்க..என்றவுடன் அங்கு சிரிப்பு சத்தம், (அப்போது, இதற்கு என்ன அர்த்தம் என்று வேதிகா பக்கத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனிடன் ஆங்கிலத்தில் விளக்கம் கேட்டுக் கொள்கிறார்.) இல்லை அப்படின்னு கிடையாது, இந்தப் படத்துல கூட ஒரு கலர் கம்மியான மாலதிங்கிற ஒரு பொண்ணை ஒரு முக்கியமான கேரக்டரில் நான் அறிமுகப்படுத்துகிறேன். கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ அவங்களை நடிக்க வைப்பேன். கலரெல்லாம் பாக்கிறது இல்லை.



கேள்வி : இளையராஜாவை போடாம எதுக்கு ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டரா போட்டுருக்கீங்க?



சூர்யா,அடுத்து விக்ரம்,அடுத்து ஆர்யா, அப்புறம் சூர்யா,விக்ரம்ன்னு ஒரே ஆட்களோட வேலை பார்த்துக்கிட்டிருக்கீங்க? புதுப்புது ஆட்களோட வேலை பார்க்க மாட்டீங்களான்னு நீங்க தான் விமர்சனத்துல எழுதுனீங்க...? அதனால தான் இந்தப் பையனை கமிட் பண்ணினேன். ஆனா இப்போ நீங்களே எதுக்கு ஜி.வியை போட்டீங்கன்னு கேட்குறீங்க..


இவ்வாறு டைரக்டர் பாலா கூறினார்.

http://www.thamizhthirai.com/wp-content/gallery/paradesi-first-look/paradesi_first_look_exclusive_stills_01_0.jpg


பாலா என் மூத்த மகன் : பரதேசி ஆடியோ விழாவில் நெகிழ்ந்த பாலுமகேந்திரா!


"பாலா என் வீட்டிலேயே வளர்ந்த என் மூத்த மகன், அவன் தேசிய விருது வாங்கிய போது நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை" என்று டைரக்டர் பாலுமகேந்திரா பேசினார்.

டைரக்டர் பாலா லேட்டஸ்ட்டாக தயாரித்து, டைரக்‌ஷன் செய்து வரும் 'பரதேசி' படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு பேசிய ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்திரா "பாலா என் மூத்த பிள்ளை" என்று நெகிழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர்.., " என்னுடைய 'வீடு' படத்தின் போது பாலா என்னிடம் வந்து சேர்ந்தான். அவனையும், ராம் என்பவனையும் பாடலாசிரியர் அறிவுமதி என்னிடம் கொண்டு வந்து விட்டுப் போனார். நான் பாலாவை யூனிட்டில் சேர்த்துக் கொள்ளவே இல்லை.

ஆனால் அவன் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த நான் “ யாருப்பா..நீ நான் உன்னை பார்த்ததே இல்லையே..? என்று கேட்டேன். அதற்கு அவன் நான் உங்கள் படத்தில் தான் வேலை செய்கிறேன். மதுரையில் படித்து விட்டு உங்களிடம் சேர வேண்டும் என்று வந்து விட்டேன், நீங்கள் தான் என்னை கண்டுகொள்ளவே இல்லை என்றான், அன்றிலிருந்து அவனை நான் என்னிடம் சேர்த்துக் கோண்டேன். அவன் என் வீட்டில் ஒருவனாக வளர்ந்தான்.


பொதுவாக நான் எல்லா படங்களின் ஆடியோ ரிலீஸுக்கும் வருவேன். ஆனால் என் மனைவி வரமாட்டார். ஆனால் இந்த பரதேசி படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனுக்கு என் மனைவி அகிலாவை கூப்பிட்டபோது அவள் உடனே வந்து விட்டாள். அந்தளவுக்கு அவன் மீது ஒரு தாய் போல அவள் பாசம் வைத்திருக்கிறாள். அதனால் தான் இந்த விழா எனக்கு முக்கிமானது" என்று பேசிய பாலுமகேந்திரா.., தொடர்ந்து.., "பாலாவும் தேசிய விருது வாங்கி விட்டான், என்னுடைய இன்னொரு பிள்ளை வெற்றிமாறனும் தேசியவிருது வாங்கி விட்டான், எனது ரெண்டு பிள்ளைகளும் தேசிய விருது வாங்கியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு அப்பாவுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்.


"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"  என்ற குறளைப் போல நான் மகிழ்கிறேன்" என்றார்.

விழாவில் நடிகர்கள் சூர்யா,விக்ரம், ஒளிப்பதிவாளர் செழியன், கவிப்பேரரசு வைரமுத்து, ஹீரோ அதர்வா,ஹீரோயின்ஸ் வேதிகா, தன்ஷிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


டைரக்டர் பாலாவின் 'பரதேசி' படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறாராம் நடிகர் அதர்வா.


ஆர்யா-விஷால் இணைந்து நடித்த 'அவன் - இவன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலா சைலண்ட்டாக டைரக்‌ஷன் செய்து வரும் படம் தான் 'பரதேசி'.

அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்து வரும் இந்தப் படத்துக்காக தனக்கு பழக்கப்பட்ட ஏரியாவான தேனி,கம்பம் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார். மேற்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ஆக்டிங் என்ற பெயரில் நடிகர் அதர்வாவை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா.

அதன் ஒரு பகுதியாக அதர்வாவை சுமார் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கச் சொல்லியிருக்கிறார். கேரக்டருக்கு இந்த எடைக்குறைப்பு முக்கியம் என்று பாலா சொன்னதால் அதர்வாவும் வேறு வழியில்லாததால் ரொம்பவும் மெனக்கட்டு தனது உடல் எடையைக் குறைத்தாராம்.

இதுவரை இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா என இசைக் கூட்டணி போட்ட பாலா இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டராக கமிட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த மாதம் 25-ஆம் தேதி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் பாலா.


என்னமோ போங்க.. எடையைக்குறைக்க அந்த மெடிசின் இந்த மாத்திரைனு டிவில காட்டுறதெல்லாம் வொர்க்கவுட் ஆகுதோ இல்லையோ இந்த பாலா மெடிசின் மட்டும் கரெக்டா வொர்க்கவுட் ஆகுது; சேது விக்ரம், செய்யாத படத்துக்கு அஜீத், இப்பொ அதர்வா என.




http://www.tamil.haihoi.com/news/Dhansika%20Character%20In%20Paradesi_HaiHoi_214.jpeg
நான் பாடல்களை திருத்த அனுமதிப்பதில்லை என்று யாரோ தவறான வதந்தியை பரப்பி விட்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறினார்.




டைரக்டர் பாலாவின் ’பரதேசி’ படத்தின் எல்லா பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்...



இந்த 'பரதேசி' படம், தமிழ் திரையுலகில் முக்கியமான படமாக இருக்கும். படத்தில், ஒரு விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாலா, ஒரு சராசரி கலைஞன் அல்ல. மனிதர்களின் மறுபக்கத்தைப் பார்க்க பாலா ஆசைப்படுகிறார். இங்கே மாறுபட்டு சிந்திக்கிறவன் தான் எப்போதுமே கவனிக்கப்படுகிறான். அந்த வகையில் இயக்குனர் பாலா மாறுபட்டு சிந்திக்கிறவர்.


வைரமுத்து தனது பாடல்களில் திருத்தங்களை செய்யவிடுவதில்லை என்று என்னைப் பற்றி யாரோ சிலர் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை., நியாயமான திருத்தங்களை நான் எப்போதும் செய்து வருகிறேன். பொருந்தாத திருத்தங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை.


இந்த படத்தில் கூட , ‘கண்ணீர்தானா கண்ணீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று ஒரு பாடல் எழுதியிருந்தேன். இதை, ‘செந்நீர்தானா செந்நீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று மாற்றிக் கொள்ளலாமா? என டைரக்டர் பாலா என்னிடம் கேட்டார். பாலாவின் திருத்தம் எனக்கு நியாயமாக இருந்தது. அவருடைய திருத்தத்தை ஏற்றுக் கொண்டேன்.


நான் எல்லா இயக்குனர்களும் சொல்லும் திருத்தங்களையும் நியாயமான காரணமாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். அப்படித்தான் பெரும்பாலான இயக்குனர்கள் என் பாடல்களை என் அனுமதியோடு திருத்தியிருக்கிறார்கள், ஆனால் பாரதிராஜா மட்டும் தான் என் பாடல்களை இதுவரை திருத்தியதேயில்லை.


அதேபோல எல்லோரும் பாரதிராஜா படங்களில் வரும் நல்ல இனிமையான பாடல்களைப் போல தாருங்கள் என்று கேட்கிறார்கள், அதுதான் சொன்னேன், பாரதிராஜா என் பாடல்களை திருத்துவதிலை அதனால் அந்தப் பாடல்கள் பிரபலமாகி விடுகிறது.


இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

 நன்றி - சவுண்ட் கேமரா ஆக்‌ஷன், நக்கீரன், தினமணி

http://chennaionline.com/images/articles/October2012/7ed70fca-9621-4f3b-bf1e-e4a3043d5445OtherImage.jpg



டிஸ்கி 1 - பரதேசி படத்தின் திரைக்கதை நெட்டில் வெளியானது
டிஸ்கி 2 - பரதேசி - கலக்கல் ட்ரெய்லர்,
டிஸ்கி 3 - பாலாவின் பேட்டி

http://www.adrasaka.com/2012/10/blog-post_7245.html


http://sim.in.com/f4f460a229d5c7e281072787ca350276_ls.jpg 

Monday, November 26, 2012

பெஸ்ட் CM காமராஜர், பெஸ்ட் PM வி பி சிங்க் ,மத்தவங்க வேஸ்ட் - கி ராஜநாராயணன் கலக்கல் பேட்டி

காந்தி செத்தது கூட நல்லதுதான் !


சமஸ்

படங்கள்: ஜெ.முருகன்


நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர் கி.ராஜநாராயணன். பாண்டிச்சேரி அரசாங்கம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் ஒதுக்கி இருக்கும் சின்ன வீட்டில் அவரைப் பார்த்தபோது, அவர் ஒன்றும் அத்தனை வசதியோடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், வழக்கமாக எழுபதைத் தொட்டாலே நடுங்க ஆரம்பிக்கும் நம் சமூகச் சூழலில், 90 வயதிலும் நிறைந்த சந்தோஷத்தோடு இருக்கிறார்.




''ரத்தமும் சதையுமாக ஊரோடு உறைந்துபோன உங்களை மாதிரி ஓர் எழுத்தாளர் 66 வருடங்கள் இருந்த ஊரைவிட்டு, இன்னோர் ஊருக்கு இடம்பெயர்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இடைசெவலைவிட்டு எப்படிப் பிரிந்து புதுவைக்கு வந்தீர் கள்?''





''ஒரு சூறாவளி உண்டு. பேரு மறந்துபோச்சு. அந்தக் காத்து என்ன பண்ணும் தெரியுமா? சமுத்திரத்துலேர்ந்து சர்ர்ர்ர்ருன்னு புறப்படும். அது மேலே எழும்புறதும் யாருக்கும் தெரியாது. கீழே இறங்குறதும் யாருக்கும் தெரியாது. சர்ர்ர்ர்ருனு நெலத்தைத் தொட்டுட்டு திரும்பவும் மேலே கிளம்பும். அந்தச் சமயம் ரெண்டு நண்பர்கள் பேசிக்கிட்டுப் போறாங்கனு வெச்சுக்குங்க. ஒரு ஆளைத் தூக்கிட்டுப் போயிடும். தூக்குனதே தெரியாது. தடம் தெரியாம அப்படியே இன்னொரு எடத்துல இறக்கிவெச்சுட்டுப் போயிடும். அப்படி ஒரு காத்து! இப்படித்தான் பள்ளிக்கூடம் பக்கமே போகாத என்னை மத்தியப் பல்கலைக்கழகம்கிற காத்து வந்து இடைசெவல்லேர்ந்து தூக்கி பாண்டிச்சேரியில் விட்டுட்டுப் போயிட்டு.




அப்புறம், மத்தியில ஒரு தடவை என் ஊருக்குப் போனேன். ஊரு அடையாளமே மாறிக்கிடந்துச்சு. அங்கே இசையைப் பத்தியும் பேச ஆள் இல்லை; இலக்கியத்தைப் பத்தியும் பேச ஆள் இல்லை. எனக்குப் பிடிச்ச பிரெஞ்சுப் பேராசிரியர்கள், ஆங்கிலப் பேராசிரியர்கள், இலக்கியவாதிகள்னு சுத்தி இருந்த இந்த ஊர்ச் சூழலை நெனைச்சுப் பார்த்தேன். இங்கேயே வந்துட்டேன்.''




''ஆரம்பக் காலத்தில் இடைசெவலில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?''






''சும்மாதான் இருந்தேன். சின்ன வயசுலேர்ந்தே நான் பெரிய நோயாளி. ஐயோ, எனக்கு வந்த வியாதி எல்லாம் இருக்கே... அதுல ஒரே ஒரு வியாதியைக் கண்டாலே, அவனவன் செத்துருவான். நான் சாகலை. ஆனா, எல்லோருக்குமே பயம்தான். எப்ப போவேனோன்னு. ஊருல நம்ம குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம். 80 ஏக்கரா நெலம் இருந்துச்சு. மூணு அண்ணன் தம்பிங்க. உடல் உழைப்பே இல்லாம வாழ்ந்துட் டேன். தம்பிகளுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வெச்சேன். நான் பண்ணிக்கலை.


நோயாளி இல்லையா? அப்புறம், எங்க பாட்டிதான் சொன்னா, 'சும்மா தைரியமாக் கல்யாணம் பண்ணிக்கோடா’னு. முப்பது வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உள்ளூர்ப் பொண்ணுதான். நான் நோயாளினு தெரிஞ்சே பண்ணிக்கிட்டா. அப்போது அவளுக்கு இருபது வயசு. நல்ல நிர்வாகி அவ. வீட்டு வேலை, வயல் வேலைனு எல்லாத்தையும் கட்டிச் சுமந்தா. ஒரு கட்டத்துல சொத்து பாகம் பிரிச்சு, விவசாயம் உட்கார்ந்த பின்னாடிதான் நான் பிழைக்க வேண்டிய சூழல் உருவாச்சு. சரியா அப்போதான் எழுத ஆரம்பிச்சேன். எழுத்தே பிழைப்பாப் போச்சு.''




''பள்ளிக்கூடம் ஏன் உங்களுக்குப் பிடிக்காமல் போனது?''



''பலருக்கும் படிப்பு புடிக்காமப்போறதுக்கு வாத்தியாருங்களோட கண்டிப்புதான் காரணமா இருக்கும். ஆனா, என் கதையே வேற. வாத்தியாருங்களோட நெருக்கமான சிநேகம் எனக்கு இருந்துச்சு. அது எப்படின்னா, இந்தக் காலம் மாதிரி வாத்தியாருங்க வசதி வாய்ப்போட இருந்த காலம் இல்லை அது. ரொம்ப ஏழ்மைப்பட்ட சூழல்ல இருப்பாங்க. ஊருல கொஞ்சம் வசதியான விவசாயிங்க பார்த்து ஒதுக்கிவிடுற குடிசைங்கதான் வாத்தியாருங்களுக்கு வீடா இருக்கும். பெரும்பாலான வாத்தியாருங்க தொழுவுலதான் தங்கி இருப்பாங்க. அதனால, வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்குத் தனி மரியாதை.


எங்க ஊர் வாத்தியாருங்களுக்கு விறகுல தொடங்கி பால், மோர் வரைக்கும் எங்க வீட்டுலேர்ந்துதான் போகும். எதுக்கும் துட்டு வாங்கக் கூடாதுனு சொல்லிடுவார் எங்க நைனா. அதனால, பள்ளிக்கூடத்துல மட்டும் இல்லை; அவங்க வீட்டுலேயேகூட சொல்லிக்கொடுக்கத் தயாரா இருந்தாங்க வாத்தியாருங்க. ஆக, அக்கறை எல்லாம் இருந்துச்சு. ஆனா, படிப்பு ஏறலை. படிப்பை வாங்கிக்குற சக்தி எனக்கு இல்லைனு சொல்ல முடியாது. எனக்குப் படிப்பைக் கொடுக்குற சக்தி வாத்தியார்களுக்கு இல்லைங்கிறதுதான் உண்மை. ஆனா, எந்த வாத்தியாரும் இதை ஏத்துக்க மாட்டாங்க.''




''கல்வி ஒரு பெரும் வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில், பள்ளிக்கூடங்களின் நிலை மாறி இருக்கிறதா?''





''கல்வியைப் பத்தி நிறையப் பேசுறோம். ஆனா, ஒண்ணும் நடக்கலை. என்னையக் கேட்டா, புத்திசாலியை மேலும் புத்திசாலிஆக்குறது இல்லை; மக்குப் பிள்ளையைப் புத்திசாலி ஆக்குறதுதான் ஒரு நல்ல வாத்தியாருக்கு அடையாளம். பள்ளிக்கூடம்னு சொன்னாலே, பிள்ளை சந்தோஷமாக் கிளம்பி ஓடணும். அதுதான் ஒரு நல்ல பள்ளிக்கூடத்துக்கு அடையாளம். அப்படிப்பட்ட சூழல் இன்னைக்கு வந்திருக்குதானு கேட்டா, இல்லை. மேலும் மோசமாகிட்டு இருக்குன்னுதான் சொல்லணும். இந்தச் சூழல் மாறணும்னா, பெத்தவங்களோட மனநிலை முதல்ல மாறணும். பள்ளிக்கூடத்துக்கு உள்ளே மட்டும் இல்லை; பள்ளிக்கூடத்துக்கு வெளியிலேயும் படிப்பு இருக்குங்கிறதைப் புரிஞ்சுக் கணும்.''




''கட்டுக்கோப்பான கலாசாரத்துக்குப் பேர் போன இடைசெவல் மாதிரி ஒரு இந்தியக் கிராமம்; உலகிலேயே முற்போக்கானதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு கலாசாரச் சூழல் நிலவும் பாண்டிச்சேரி மாதிரி ஒரு நகரம்... இரண்டிலுமே நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள். எந்தக் கலாசாரம் உண்மையில் உன்னதமானதாக உங்களுக்குத் தெரிகிறது?''





''பிரெஞ்சுக் கலாசாரம்தான் உன்னதமாத் தெரியுது. இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோஷமா வாழணும். அதுதான் நோக்கம். சந்தோஷமா எப்படி வாழறது? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாம, அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா, சந்தோஷமா வாழணும். அதுக்கு எந்தக் கலாசாரம் எடம் கொடுக்குது? இந்தியக் கலாசாரம் எடம் கொடுக்கலை. அட, விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே?


ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாசாரம் இருந்துச்சு. விருப்பம்போல வாழலாம். புடிச்சவங்களோட சேர்ந்து வாழலாம்; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம். இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம். புள்ளைங்களுக்கும் தெரியும். அம்மாதான் நம்மளோட அம்மா, நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது. ஊருக்கும் தெரியும். யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை. சந்தோஷமா இருந்தாங்க. ஆனா, அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது. நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான். கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடிச்சு அலையுறோம்.''




''அப்படி என்றால், ஒரு கலாசா ரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம் தான் அளவுகோலா?''





''ஆமா, கலாசாரம்னு பேசுனா, மொதல்ல அங்கே இருந்துதானே தொடங்கணும்? ஒழுக்கம், ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ, அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும். ஒவ்வொருத்தனும் மனசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான். வெளியே பேசுறது பதிவிரதத்தனம். சென்னையிலேயே, ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு, குழாயை உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு? அட, பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது? என்னடா, இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது. இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது, இல்லையா? மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக் கிறேன்.''





''இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா?''





''கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும். எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும். பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும். மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விஷயமாக்கிட்டோம். பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு, அந்த ஞாபகமாகவே அலையுது. நான் கேட்குறேன்... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா, அது சிக்கலா, இல்லையா? அது அவனோட சிக்கல் மட்டும்தானா... சமுதாயத்தோட சிக்கலுமா


? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே, அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி, கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க. ரெண்டு பசியுமே மோசமானது. ஆனா, இங்கே எல்லாருமே மேல் வயித்தைப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம். கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்.''




''சமூக வலைதளங்களை எல்லாம் கவனிக்கிறீர்களா?''





''சங்கதி என்ன நடக்குதுனு மட்டும் தெரியும். என்ன, முன்னே மறைச்சுவெச்சுப் படிச்சோம்... இப்பம் மறைச்சுவெச்சுப் பார்த்துக் குறீங்க, உறவாடிக்கிறீங்க.''




''இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா?''





''முதல் காதல்... ஹா... ஹா... பசிக்குது. அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு. உடனே கிடைச்சுட்டா, அதை ஒரு விஷயமா நெனைப்போமா? அப்படித்தான் இந்தக் காதலும். கிடைச்சுட்டா, அந்த நேரச் சாப்பாடு. கிடைக்காட்டி, அதுக்குப் பேர் காதல். கிடைக்கவே கிடைக்காட்டி, அது அமரக் காதல், காவியக் காதல். ஒரு விஷயம் சொல்லலாம். காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை. வந்துக்கிட்டே இருக்குறது.''




''நம் சமூகத்தில், பெரும்பாலானபடைப் பாளிகள் தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.வெற்றிகரமான உதாரணங்களில் ஒருவர் என்ற முறையில் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்று சொல்லுங் களேன்..?''





''ரெண்டு காரணங்கள். ஒண்ணு, ஒரு படைப்பாளியோட நேரத்தை அவன் வீட்டுல அனுமதிக்கணும். எனக்கு ராத்திரியில எழுத வருது; அது சம்பந்தமா, முக்கியமா நான் ஒரு புத்தகத்தைப் படிக்கணும்னு வெச்சுக்குங்க. அப்போ நான் படிச்சாகணும். அப்போ பார்த்து என் பொண்டாட்டி, 'தூக்கத்தைக் கெடுக்காமப் படுங்க’னு சொன்னா வேலைக்கு ஆகாது. ஏன்னா, எழுத்து நம்ம இஷ்டப்பட்ட நேரத்துக்கு வராது. அதேபோல, அவளோட கஷ்டத்தையும் நான் புரிஞ்சுக்கணும்.



என்னோட அனுசரணையை அவ எதிர்பார்க்குறானு வெச்சுக்குங்க. பொய்யா யாவது சில வார்த்தைகள் ஆறுதலாப் பேசணும். நடிக்கணும். தப்பு இல்லே. மனசைக் காயப்படுத் துற மாதிரி உண்மையைப் பேசுறதைவிட இது மேல். இன்னொரு விஷயம் இருக்கு. படைப்பு சார்ந்து வர்ற உறவு களை, குடும்பத்துக்கு உள்ளே நுழையவிடாம வெச்சுக்குறது. உங்க எழுத்தைப் படிச்சுட்டு ஒரு பொண்ணு, 'நான் உங்க அடிமை’னு சொல்லிக்கிட்டு வர்றானு வெச்சுக்குங்க. அவளை எங்கே நிப்பாட்டணும்னு உங்களுக்குத் தெரிய ணும். இது ரெண்டும் தெரியாததுதான் நிறையப் பேருக்குப் பிரச்னை ஆயிடுது.''




''ஒரு கதை சொல்லியாகச் சொல்லுங்கள்... குடும்பத்துக்குள், உறவுகளுக்குள் கதையாடலும் உரையாடலும் ரொம்பவும் சுருங்கிவிட்டது இல்லையா?''





''கதைங்கிறதுக்கு ஏராளமான அர்த்தம் உண்டு. அதுக்கு ஏகப்பட்ட வடிவமும் உண்டு. நேரடியான வாய் மூலமான உரையாடல் குறைஞ்சு இருக்கலாம். ஆனா, வெவ்வெறு வடிவத்துல உரையாடல் நடந்துக்கிட்டுதான் இருக்கு. கதை இல்லாம இங்கே எதுவும் நடக்காது. ஆக, கதை நடக்குது. ஆனா, குடும்பத் துக்கு உள்ளே அந்தக் கதையாடல் குறைஞ்சுருக்குங்கிறது கஷ்டமான விஷயம்.''




''நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிப்பீர்கள்; எழுதுவீர்கள்?''





''புதுமைப்பித்தன் உட்கார்ந்தார்னா, ஒரே நேரத்துல கதையை எழுதி முடிச்சுடுவார்னு சொல்வாங்க. எனக்கு அப்படி வழக்கம் இல்லை. அடிச்சு அடிச்சு, திருத்தித் திருத்தி எழுதுற ஆள் நான். அதனால, எழுத்தும் வாசிப்பும் மாத்தி மாத்தி நடந்துக்கிட்டே இருக்கும். முடியுற நேரம் எல்லாம் படிப்பேன்; எழுதுவேன்.''




''வீட்டு வேலைகள் செய்வீர்களா?''



''இல்லை. என் மனைவி கடுமையான உழைப்பாளி. அதேபோல, நல்ல நிர்வாகி. அதனாலேயே வீட்டு வேலையில என்னை உள்ளே விடுறது இல்லை.''




''வட்டார மொழி இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று உங்களைச் சொல்வார்கள். பின்னத்தி ஏராக யாரைச் சொல்வீர்கள்?''





''வட்டார மொழியில எழுதுற எல்லோருமே பின்னத்தி ஏர்க்காரங்கதான்.''




''தலித் மக்கள் வாழ்வை நீங்கள் எழுதாமல் இருட்டடிப்பு செய்தீர்கள் என்பது உங்கள் மீதான பெரிய விமர்சனம்...''


''எழுதலைதான். ஏன்னா, அவங்க வாழ்க்கை எனக்குத் தெரியாது. அவங்களோட மொழி, சம்பிரதாயங்கள், அதற் கான காரண காரியங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாத விஷயத்தை எழுதுறது தப்புனு நெனைச்சேன்... நெனைக்கிறேன்.''




''நல்ல சங்கீத ஞானம் உள்ளவர் நீங்கள். படைப்புகளில் அதை ஏன் கொண்டுவரவில்லை?''





''முந்தைய கேள்விக்கான பதிலைத்தான் இதுக்கும் சொல்லணும். எனக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. ஆனா, என் படைப்புகள் எல்லாம் என் ஊரைச் சுத்தி இயங்குறது. என்னோட கதை மாந்தர்கள் என் ஊர்க்காரங்க. அவங்களுக்குச் சங்கீதம் தெரியாது. பின்னே எப்படி எழுதறது?''
''ஒரு கட்டத்தில், வெறும் தகவல் சார்ந்ததாகிவிட்டன உங்கள் படைப்புகள் என்ற விமர்சனம் உண்டு...''
''இதுக்குக் காலம்தான் பதில் சொல்லணும்.''




''எழுத்தில் போதுமான திருப்தி இருக்கிறதா? எழுத நினைத்தவை எல்லாவற்றையும் எழுதிவிட்டீர்களா?''





''எழுதாத எழுத்தை நெனைச்சுப் பார்க்குறது, வாழாத காலத்துல வாழ்ந்து வீணடிக்கிறதுக்குச் சமம். யாராலுமே நெனைச்ச எல்லாத்தையும் எழுதிட முடியாது. முடிஞ்சது வரைக்கும் திருப்தி இருக்கு.''


''சரி, ஒரு மூத்த குடிமகனாகச் சொல்லுங்கள்... இப்போது திரும்பிப் பார்க்கும்போது சுதந்திரத்துக்கு முந்தைய கனவுகளில் கொஞ்சத்தையேனும் சுதந்திரம் நிறைவேற்றி இருக்கிறதா?''





''நிறைய ஏமாந்தோம்னுதான் சொல்லணும். அப்ப நாங்க ரெண்டு கட்சியா இருந்தோம். காந்தி கட்சி... நேரு கட்சி. வயசாளிங்க காந்தியை நம்பினாங்க. எளந்தாரிங்க நேருவை நம்பினோம். ரெண்டு பேர் பாதையும் வெவ்வேறு. குறிப்பா, நேரு ரொம்ப யதார்த்தமாவும் நவீனமாவும் இருப்பாருனு எல்லாம் நெனைச்சோம். ஆனா, காந்தி, நேரு ரெண்டு பேருமே கனவைத்தான் விதைச்சாங்க. யதார்த்தத்துக்கும் அவங்களுக்கும் ரொம்ப தூரம் இருந்துச்சு. சரியா சொல்லணும்னா, காந்திக்கு, தான் ஆளத் தகுதியான ஆள் இல்லைங்கிறது தெரிஞ்சுருந்துச்சு. நேருவுக்கு அது தெரியலை. அவ்வளவுதான் வித்தியாசம்.''


''காந்தி ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால், இந்திய வரலாறு வேறு மாதிரி இருந்திருக்குமோ?''



''இன்னும் மோசமாத்தான் இருந்துருக்கும்னு நெனைக்கிறேன். வரலாற்றைப் பொறுத்தவரைக் கும் காந்தி செத்ததுகூட நல்லதுதான்.''




''நீங்கள் பார்த்தவரை 'இது நடக்காமல் இருந்திருந் தால், இந்திய வரலாறே வேறு மாதிரி இருந்திருக்கும்’ என்று எந்தச் சம்பவத்தைச் சொல்வீர்கள்?''





''நேதாஜியோட மறைவு. அது நடக்காம இருந்திருந்தா, அவர் பிரதமரா ஆகி இருந்தா, நிச்சயம் இந்தியாவோட வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும்.''




''இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த பிர‌தமர்களிலேயே யார் சிறந்தவர்? யார் மோசமானவர்? ஏன்?''





''மக்கள் மேல உண்மையான அக்கறை ஒரு அரசாங்கத்துக்கிட்டே இருந்து வெளிப்பட்டதை ரெண்டு காலகட்டத்துல உணர்ந்திருக்கேன். ஒண்ணு, சாஸ்திரியோட காலகட்டம். இன்னொண்ணு,  வி.பி.சிங் காலகட்டம். ஆனா, அரசியல்ரீதியா நிறையத் தப்பான, பொறுப்பு கெட்ட முடிவுகளை எடுத்தார் சாஸ்திரி. குறிப்பா சொல்லணும்னா, மலையகத் தமிழர்கள் உரிமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளிவெச்சு சிரிமாவோ பண்டாரநாயகாகூட அவர் போட்டுக்கிட்ட ஒப்பந்தம். அதனாலேயே, நான் அவரை வெறுத்தேன். வி.பி.சிங் கிட்டே ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்துச்சு. அவருக்கு அரசியல் பெரும்பான்மைப் பலம் இருந்திருந்தா, பெரிய மாற்றங்களை அவர் கொண்டுவந்திருப்பார். அதனால, வி.பி.சிங் நீங்கலா மத்தவங்க அத்தனை பேருமே மோசம்தான்.''




''தமிழகத்தின் சிறந்த முதல்வர் என்று யாரை மதிப்பிடுவீர்கள்? மோசமானவர் யார்? ஏன்?''





''ஓமந்தூராரும் காமராஜரும் சிறந்த முதலமைச்சர்கள்னு சொல்வேன். ஏன்னு கேட்டா, அவங்க கை சுத்தம், வாய் சுத்தம். நாடு முதல் நோக்கமாவும் கட்சி ரெண்டாம்பட்சமாகவும் அவங்க காலத்துல இருந்துச்சு. அதேபோல, அண்ணாதுரையோட தொடக்கம் நல்லா இருந்துச்சு. ஆனா, குறுகின காலத்துக்குள்ள அவர் போய்ட் டார். அப்புறம் நடக்குற கதை எல்லாம்தான் ஊருக்கே தெரியுமே!''




''இந்தியாவில் நாளுக்கு நாள் மாநில உணர்வுகள் வலுப்பெறுகின்றன. தேசியத்தின் மீதான கனவுகள் நொறுங்குகின்றன. எதிர்காலம் என்னவாகும்?'


'
''நாசமாத்தான் போகும். மாநில உணர்வு மிகுந்துபோகுதுன்னா என்ன காரணம்? ஒரு மாநிலத்துக்கு உரிய தண்ணியை முறையாக் கொடுக்க முடியலைன்னா, அப்புறம் அந்த மத்திய அரசாங்கத்து மேல மக்களுக்கு எப்படி மரியாதை நீடிக்கும்?''




''சின்ன வயதில் ஆயுதக் குழுக்களில் இருந்தவர் என்ற முறையில் சொல்லுங்கள்... இந்தியாவில் ஆயுத வழியிலான புரட்சி சரிப்படுமா?''





''சரிப்படாது. அந்தக் காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சு.''


''இந்தியாவில் சாதியை ஒழிக்க முடியுமா?''



''ஒழிக்கணும்னு ஆசைப்படுவோம்.''




''இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்கள் என எவற்றைச் சொல்வீர்கள்?''



''ஏழ்மை... ஏழ்மை... ஏழ்மை!''



thanx - vikatan

மாவீரன் பிரபாகரன் -பிறந்த நாள் சிறப்புத்தகவல்கள்

http://www.eelamview.com/wp-content/uploads/2011/11/v.prabaharan-2.jpg 

பிரபாகரன் – 25:


* தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!



* அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!


* வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!



* பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!



* பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!



* மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!



http://photos.merinews.com/upload/imageGallery/bigImage/1242711801786-prabhakaran%20family%20photos.jpg

* ”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”



* ”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!



* அக்காவின் திருமணத்தையொட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!



* எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!



* ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!



http://3.bp.blogspot.com/_T1vzYiWcy7U/SgL_qiaEHsI/AAAAAAAAd48/5iArC6mgucM/s400/LTTE+Leader+Velupillai+Prabhakaran+Photos.jpg


* ‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!


* போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!



* ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!



* பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!


* பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!



http://www.asiantribune.com/files/images/prabaharan%20wedding_1.img_assist_custom.jpg


* தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!


* பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!



* அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!


* உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!


* பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!



http://pact.lk/wp-content/uploads/2008/11/3311.jpg



* பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!



* தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ”நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”



* ”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச் சொல்வார்!



* மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!



* ‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!


http://www.himalmag.com/userfiles/image/June%202009/raghavan_prabhakaran.jpg



-நன்றி: விகடன்

இதயக்கோவில் - மணி ரத்னம் VS கோவைத்தம்பி சர்ச்சைகள்

http://img.filmlinks4u.net/2010/07/Idhaya-Kovil-1985-Tamil-Movie-Watch-Online-300x293.jpg 
மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்ததே தவறு: கோவைத் தம்பி 
Posted Date : 11:45 (20/11/2012)Last updated : 11:47 (20/11/2012)
சென்னை
'இதயக்கோவில்’படத்தில் மணிரத்னத்துக்கு டைரக்டர் வாய்ப்பு கொடுத்ததே  தவறு என்று மைக் மோகனின் வெள்ளி விழா படங்களை தயாரித்த மதர்லேண்ட் பிக்சர்ஸ்  நிறுவனத்தின் அதிபர் கோவைத்தம்பி காட்டமாக கூறியுள்ளார்.


பென்குவின் பதிப்பகம்,மணிரத்னத்திடம் எடுத்திருக்கும் நீண்ட பேட்டியை தொகுத்து  'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது.


இந்த புத்தகத்தின் சில அம்சங்களை ஆனந்த விகடன் வார இதழ்,மொழி பெயர்த்து  வெளியிட்டுள்ளது.

அதில்,'முதல் தோல்வி?’ என்ற கேள்விக்கு," தயாரிப்பாளர் கோவைத் தம்பி அப்போது  உச்சத்தில் இருந்த ராதா, அம்பிகா இருவர் கால்ஷீட்டையும் வைத்திருந்தார். என்னுடன்  படம் செய்ய ஆசைப்பட்டு, படத்துக்கான கதையை ஒரு கேசட்டில் பதிவுசெய்து எனக்கு  அனுப்பி இருந்தார். 'இது என் டைப் படம் இல்லை. இப்போது என்னால் உங்களுக்குப்  படம் செய்ய முடியாது’ என்று அவரிடம் நேரில் சொல்லச் சென்றேன்.


நான் சொன்னதைக் கேட்ட அடுத்த கணமே போனில் ராதா, அம்பிகா இருவரின்  கால்ஷீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டு, எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.  வேண்டாம் என்று சொல்லச் சென்ற நான், என்னை அறியாமல் 'இதய கோயில்’  படத்தில் சிக்கிக்கொண்ட கதை இது. இளையராஜாவின் இசை படத்தை ஓரளவு  காப்பாற்றியது.

குறிப்பாக, 'நான் பாடும் மௌன ராகம்...’ பாடலைக் காட்சிப்படுத்தியபோது  'பியாஷா’ குருதத்துக்கு அஞ்சலி செலுத்துவதாக உணர்ந்தேன். அந்தப் பாடல்தான்  'மௌன ராகம்’ என்ற என் அடுத்த மெகா ஹிட் படத்துக்கான டைட்டிலைத் தந்தது.  மற்றபடி என்னுடைய மிக மோசமான படம் 'இதய கோயில்’!” என்று மணி ரத்னம்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மணி ரத்னத்தின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவைத் தம்பி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை  யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள்  அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம்  ‘இதயக்கோவில்’ என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா  படங்களை தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க,  தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்’ டைரக்டர் ஆக்கியது என்  தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியது  உண்மைதான்.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது ஏன்  என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.அந்த படத்தில் எனக்கு மூன்று பட  செலவு ஏற்பட்டது. விவரம் தெரியாமல்,காட்சிகளை சுட்டுத்தள்ளியது என்  பொருளாதாரத்தை சுட்டு பொசுக்கியது.என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்’  வெற்றி படம்தான்.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்’  படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என்  நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது” என்று  கூறியுள்ளார்.
மக்கள் கருத்து 
1. Avathaany6 Days ago
மணி ரத்தினம் யார் என்பதை காட்டிவிட்டார். நன்றி கெட்டத்தனம் என்பது இதுதான்.தமிழ்ச்சினிமா இன்று இன்னொரு பரிமாணத்தை அடைந்துவிட்டது.இவற்றை எட்டுவதற்கு கோவைதம்பியும் ஒரு காரணம் என்பதை மணிரத்தினம் மறந்துவிட்டார்.

மணிரத்தினதின் விமர்சனம் ஏறிய ஏணியை எட்டி உதைப்பதற்கு சமமானது.மணிரத்தினத்தின் இப்போதைய தகுதி வேறாக இருக்கலாம்.ஆனால் அப்பொழுது அவரின் இயக்கும் தகுதி அந்தளவுதான்.

இதயக்கோவில் படம் அந்தக் காலகட்டத்தில் மிக நல்ல படமே.அந்தப் படத்தை அவரே குறை சொல்வது தனக்குத் தானே எச்சில் உமிழ்வது போன்றதே.

பெரிய சிந்தனைவாதி தன்னை நினைத்துக் கொள்ளும் மணி ரத்தினம் அணுக்களின் கூட்டுத்தான் பொருள்களின் தோற்றம் என்பதை அவர் உணர்வார்தானே.

அதைப் போன்றதுதான் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு கொண்டது.மணி ரத்தினதின் படங்களைப் பார்த்து ரசிப்பவந்தான் நானும் .ஆனால் மணி ரத்தினத்தின் தலைக்கர்வம் பிடித்த் இந்த அசிங்கமான முட்டாள்தனமான சிறுபிள்ளைத்தனமான் நன்றி கெட்டத்தனமான பேட்டி அவர் யர் என்பதைக் காட்டிவிட்டது.

இவர் 70களில் சினிமாவை புதிய பாதை நோக்கி நகர்த்திய பாலு மகேந்திராவைப் பற்றியோ பாரதிராஜ பற்றியோ குறிப்பிடாமல் விட்டதற்கு மறாதி காரணமல்ல,அழுக்காறுதான் காரணம்.

சினிமாவின் நிலை கண்டு அதைக் காப்பற்ற களம் இறங்கியதாக கூறியிருக்கின்றார்.இதைவிட தலைக்கனம் பிடித்த பதில் வேறில்லை.

மணிரத்தினம் அவர்களே!.தமிழ்ச் சினிமா உங்கள் கையில் மட்டுமே இருப்பதாக நினைக்காதீர்கள்.இதயக்கோவில் இயக்கிய போது தட்டுத்தடுமாறி எழுந்து நடக்க முயற்சித்த சிறுபிள்ளை நீங்கள்.

கைபிடித்து நடை பயிற்றுவித்தவரை கேவலப்படுத்தாதீர்கள்.
2.
Indian6 Days ago
நிச்சயமாக வெற்றிப்படம்தான். நல்ல பாடல்கள், கவுண்டமணி காமெடி, அம்பிகா,ராதாவின் அழகு என்று நிறைய சொல்லலாம். வாயைக்கொடுத்து .....புண்ணாக்கிகொள்வது என்பது இதுதான். கோவைத்தம்பி அழகிய பதில் கொடுத்திருக்கிறார்.
3.Thamilarasu K6 Days ago
மணிரத்னம் மிகப்பெரும் இயக்குநர் என்ற நிலையில் இப்போது இருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறார் போலும். இதயகோயில் ஒரு நல்ல திரைப்படந்தான். அற்புதமான இசை, பாடல்கள்!
4. Zahir Husain6 Days ago
இதுதான் அவர்களின் வழக்கம்.... நன்றிகெட்ட தனம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டிஉதைப்பது.... நன்றிகெட்ட ஜென்மம்.... 
5.
madhavan6 Days ago
"மணி" இல்லாத ரத்தினத்தை மணிரத்னமாக மாற்றினால் இப்படித்தான் நடக்கும்.
6. venkatesh6 Days ago
Maniratnam does not have right to say this ? he is not talking about other's movie, he says about what he feels, nowadays the tolerance level is going down ....
7.
Chandramohan6 Days ago
எனக்கென்னவோ மணிரத்தினம் தன்னைத்தானே திட்டிக்கொள்வதாகத்தான் தெரிகிறதே தவிர கோவைத்தம்பியைப் பற்றித் தவறாக எதுவும் சொன்னதாக் இல்லையே!
8. THAMIZH UK6 Days ago
இன்று தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் நிலை இதுதான்...

படம் ஆரம்பிக்கும் வரையில் தான் அவர் "முதலாளி"..... பூஜை முடிந்துவிட்டால்.... முதலில் "அவர்" காலி....

ஹ்ஹ்ஹ ஹ்ஹ்ஹ ஹ்ஹ்ஹா...ஹா ஹா