Showing posts with label பாலுமகேந்திரா. Show all posts
Showing posts with label பாலுமகேந்திரா. Show all posts

Sunday, May 18, 2014

இளைய தளபதி விஜய் ஒரு கடல் , அவருக்கு என் அடுத்த படம் ? - எம் சசிகுமார் கத்திக்குத்து பேட்டி @ த ஹிந்து

''ரொம்ப வேதனையான உதாரணம்தான். ஆனால், என்னோட சந்தோஷத்தையும் வலியையும் அப்படியே சொல்ல இதைவிட வேற உதாரணம் தெரியலை. அழகான குழந்தையைப் பெத்துக் கையிலக் கொடுத்திட்டு பிரசவக் காயத்துல செத்துப் போற அம்மா மாதிரி கையில தேசிய விருதுக்கான படத்தை எடுத்துக் கொடுத்திட்டு பாலு மகேந்திரா சார் இறந்திட்டார். அந்த விருதைப் பார்க்குறப்ப எல்லாம் சந்தோஷமும் துக்கமுமா மனசு ரெண்டுபட்டுப் போயிடுது." - பாலு மகேந்திராவின் நினைவுகளில் இருந்து இன்னமும் மீளவில்லை சசிகுமார். 'தலைமுறைகள்' படத்துக்காக தேசிய விருது வாங்கியவர், இப்போது 'தாரை தப்பட்டை' படத்துக்காக பாலாவின் பட்டறையில். 



''முதுமை கொடுக்கும் பரிசு மரணம்னு பாலு மகேந்திரா சாரே சொல்லியிருக்கார். நீங்கள் இன்னமும் அந்த இழப்பின் வலியிலிருந்து மீளவில்லையே..?"


 
''சமீபத்தில் சென்னை ரயில்வே ஸ்டேஷன் குண்டு வெடிப்பில் செத்துப்போன சுவாதியோட மரணம் என்னை பெரிசா பாதிச்சது. திருமணம் நிச்சயமான அந்தப் பொண்ணு எவ்வளவு கனவுகளோட ரயிலேறி இருக்கும்? அந்த அப்பாவிப் பொண்ணைக் கொன்னதன் மூலமா பயங்கரவாதமும் தீவிரவாதமும் என்னத்தை சாதிச்சிடுச்சு? முன்பின் அறியாத யாரோ ஒருத்தரோட மரணம்கூட நம்மள உலுக்குறப்ப, மனசுக்கு நெருக்கமானவங்களோட இழப்பு எவ்வளவு பெரிசா வலிக்கும்? பாலு மகேந்திரா சார் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திட்டுப் போயிருக்கார். முதல்ல சார் என்னைப் பார்க்க விரும்புறதா பி.ஆர்.ஓ நிகில் சொன்னார். 'நானே வந்து பார்க்குறேன்'னு சொன்னேன். 'நான் உன்னோட ஆபிஸ்க்கு வாரதுதான் முறை'ன்னு சொல்லி அவரே கிளம்பி வந்து 'தலைமுறைகள்' கதையைச் சொன்னார். 



படத்தோட பட்ஜெட்டை அவர் சொன்னப்ப, 'இந்த சின்ன தொகைக்குள் எடுத்திட முடியுமா'ன்னு கேட்டேன். சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக் கொடுத்தவர், 'இதே மாதிரி சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வரணும். கோடிகளில் இருக்கும் சினிமாக்கள் லட்சங்களுக்கு மாறனும். ஈரான், கொரியா படங்களை எல்லாம் நாம ஆச்சர்யமா பார்க்குற காலம்போய் நம்ம படங்களை அவங்க ஆச்சர்யமா பார்க்கணும்'னு சொன்னார்.



 ஒரு தயாரிப்பாளராக‌ படப்பிடிப்பிற்கு நான் போகவே இல்ல. நடிகனா ஒரே ஒரு நாள் போனேன். அன்றைக்கு நிறைய கூட்டத்தை வைத்து படப்பிடிப்பு. முதலில் கூட்டத்தை வைத்து எடுக்க வேண்டிய ஷாட் எல்லாம் எடுத்துட்டு, கடைசியா என்னைக் கூப்பிட்டார். ரொம்ப இலகுவா என்னோட போர்ஷனை முடிச்சார். 'அவளவுதானா சார்'னு ஆச்சர்யமா கேட்டேன். படத்தில் அந்தக் காட்சியோட உருக்கத்தைப் பார்த்து வியந்து போயிட்டேன். அன்றைய ஷூட்டிங் முடிந்த உடனே மேனேஜர் உதயகுமாரை கூப்பிட்டவர், 'இன்னிக்கு 600 பேர் கேட்டிருந்தோம். அதில ஒரு பொண்ணு வரலை. அதனால 599 பேருக்குப் பணம் கொடுத்தா போதும்'னு சொன்னார். ஒரு தயாரிப்பாளருக்கு எல்லா விதத்திலும் உதவுற படைப்பாளியா அவர் இருந்தார். நானும் அப்படி இருக்கணும்" 



''பாலு மகேந்திரா இளையராஜா மீது பேரன்பு கொண்டவர். இளையராஜா பற்றி உங்களிடம் ஏதும் சொல்லியிருக்கிறாரா?"


 
''நிறைய சொல்லியிருக்கார். 'இளையராஜா இல்லாம நான் வேலை பார்க்கவே மாட்டேன் சசி'ன்னு சிலாகித்துச் சொல்வார். 'ஒரு காட்சி எடுக்குறப்ப இதுக்கு பின்னணி இசை இருக்கக்கூடாதுன்னு நினைச்சு எடுப்பேன். அவரும் அப்படியே பண்ணிக் கொடுப்பார். என்னோட மெளனத்தைப் புரிஞ்சுகிட்டவர் ராஜா மட்டுமே'ன்னு வியந்து பேசுவார். சினிமாவில் ஒருத்தரை ஒருத்தர் புகழ்வது வழக்கமானதுதான். ஆனால், இளையராஜா சார் பற்றி பாலு மகேதிரா சார் பேசுவது ஆத்மார்த்தமும் உண்மையுமா இருக்கும்." 



''தேசிய விருது மட்டும் அல்லாது சர்வதேச விருதுகளையும் 'தலைமுறைகள்' பெற்றுக் கொடுக்கும் என்கிற பேச்சு இருக்கிறதே?"


 
''FMS எனப்படும் வெளிநாடு வியாபாரத்திற்கு நான் படத்தைக் கொடுக்காததற்குக் காரணமே சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகத்தான். பாலு மகேந்திரா சார் இருக்கும்போது ஒரு சிலர் வந்து பல திரைப்பட விழாக்களைச் சொல்லி அங்கெல்லாம் படத்தை அனுப்பச் சொன்னார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் வரவே இல்லை. திரைப்பட விழாக்கள் சம்பந்தமான விவரங்களைச் சொல்லக்கூட இங்கே உள்ள யாரும் முன்வரலை. மலையாளத்தில் உள்ள சிலரும் இந்தியில் உள்ள அனுராக் காஷ்யப் மாதிரியான ஆட்களும் சொல்லித்தான் எனக்கு இது சம்பந்தமான விஷயங்கள் தெரிய வந்தது. இப்போ ஒவ்வொரு விழாக்களையும் தேடிப் பிடிச்சு படத்தை அனுப்பிகிட்டு இருக்கேன். கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்புவதற்குள் தேதி முடிந்துவிட்டது." 



''விருது குறித்த விவரங்கள் சொல்ல ஆள் இல்லையா? இல்லை, இங்கிருப்பவர்களுக்கு விருது குறித்த விவரங்களே தெரியவில்லையா?"


 
''தெரியும். நல்லாத் தெரியும். எங்கெங்கு விழாக்கள் நடக்கின்றன... எந்தெந்த பிரிவில் விருதுக்கு அனுப்பலாம் என்கிற விவரங்களைத் தெரிந்துகொண்டு அவர்களின் படங்களை மட்டும் அனுப்பிவிடுகிறார்கள். ஆனால், தவறியும் அடுத்தவர்களுக்கு இந்த விவரங்களைச் சொல்வதில்லை. ஒரு மலையாளப் படம் விருது வாங்கினால் அது கேரளாவுக்கே கிடைக்கிற பெருமையா இருக்கு. ஒரு ஆந்திரப் படம் விருது வாங்கினால் அது ஆந்திர மாநிலத்துக்கே கிடைக்கிற விருதா இருக்கு. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அந்த மனசு இல்லை. ஒரு தமிழ்ப் படம் விருது வாங்கினால், அதைத் தமிழ்த் திரையுலகிற்கே கிடைத்த விருதாத்தானே பார்க்கணும்.



 அந்த மனசோ பெருந்தன்மையோ இங்கே பலருக்கும் இல்லை. பெங்காலியில் ஒரு படம் நல்லபடி வந்தால், 'அதை அங்கே அனுப்பு... இங்கே அனுப்பு'ன்னு சொல்லி அத்தனை கலைஞர்களும் தோளில் சுமந்து கொண்டாடுறாங்க. இதைச் சொல்வதால் சிலர் மனசு வருத்தப்படலாம். படட்டும்... ஆனால், இந்த ஆதங்கத்தைச் சொல்றதால் இனியாவது நல்ல படைப்புகளுக்கு நல்ல வழிகாட்ட அவங்க முன் வருவாங்கன்னு நம்புறேன். என்னாலான முயற்சியா திரைப்பட விழாக்கள் எந்த நேரத்தில், எங்கெல்லாம் நடக்கின்றன என்பதைத் தொகுத்து ஒரு புத்தகமா போடப் போறேன். நான் பட்ட சிரமத்தைப் புதுசா வாரவங்க படக்கூடாது!" 



''சசிகுமார் படம்னாலே நட்பு மட்டும்தான்னு சொல்றாங்களே?"


 
''சொல்லட்டுமே... அறிமுகப் படத்திலேயே நட்பை ஆழமா சொல்லிட்டதால் இந்தப் பேராகிடுச்சு. 'நாடோடிகள்' அதை இன்னும் உறுதியாக்கிடுச்சு. 'போராளி' நட்புக்கான படமே கிடையாது. ஒரு தனி மனுஷனோட போராட்டம் அது. 'சுந்தரபாண்டியன்' நட்புக்கான அடையாளப் படமா வந்து, அந்தப் பேரை இன்னும் வலுவாக்கிடுச்சு. 'குட்டிபுலி' அம்மா பையனுக்கான பாசத்தைச் சொன்ன படம். 'பிரம்மன்' மறுபடியும் என்னை நட்பு வட்டத்திலேயே நிறுத்திடுச்சு. அடுத்தடுத்த படங்களில் நட்பைத் தாண்டிய நிறைய விஷயங்கள் இருக்கும்." 



''பிரம்மன் சக்சஸ் ஆகாததற்கு யார் காரணம்?"


 
''நான்தான் காரணம். என்னோட தோல்விக்கு வேறு யாரையும் நான் கைகாட்ட மாட்டேன். என் மீது எத்தகைய எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பதே தெரியாமல் அந்தப் படத்தில் ரொம்ப சாதுவா கேரக்டரில் நடிச்சிருப்பேன். என்னோட படங்களில் பெரிய அளவுக்கு ஆக்ரோஷம் இருக்கும்னு நினைக்கிறாங்க. அதை 'சுந்தரபாண்டியன்', 'குட்டிபுலி' படங்கள் ரொம்ப உறுதியாக்கிட்டு போயிருச்சு.



 'நாடோடிகள்', 'போராளி', 'சுந்தரபாண்டியன்', 'குட்டிபுலி' இப்படி என்னோட படங்கள் எல்லாமே ரொம்ப டென்ஷான படங்கள். 'எத்தனை நாள்தான் நானும் கத்தியைத் தூக்கிட்டு திரியுறது, வேறொண்ணு பண்ணிப் பார்க்கலாமே'னு நினைச்சுதான் 'பிரம்மன்' பண்ணினேன். அதில், நான் ரொம்ப தன்மையான பையனா நடிச்சது பலருக்கும் உடன்பாடு இல்லாமல் போச்சு. 'பிரம்மன்' படத்தை 'சுந்தரபாண்டியன்' படத்திற்கு முன்னாடியே பண்ணியிருந்தால் நல்லா போயிருக்கும்." 




''எப்படி ரெடியாகுது பாலாவோட தாரை தப்பட்டை?"


 
''இன்னும் ஷூட்டிங் கிளம்பலை. அதனால படத்தைப் பற்றி இப்ப சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அண்ணனோட படத்தில் நடிக்கப்போற பரவசம் மனசு முழுக்க இருக்கு. பாலா அண்ணன் என்னை நடிக்க அழைச்ச நாள்தான் ஒரு நடிகனா நான் அங்கீகரிக்கப்பட்ட நாள்." 



''விஜய்யை வைத்துப் படம் இயக்கப் போறதா கிளம்புற செய்தி உண்மைதானே?" 

 
''சந்தித்தது உண்மை. கதை விவாதம் நடத்தியது உண்மை. மற்ற எந்த விஷயங்களையும் நாங்க இன்னும் தொடங்கலை. விஜய் இன்னிக்கு கடல் மாதிரி விரிஞ்சு கிடக்குறார். டெக்னிகல் விஷயங்கள் தொடங்கி டெய்லி அப்டேட் வரை அவருக்கு அத்துப்படி. அவரை வழிக்குக் கொண்டு வரணும்னா நாமளும் ஒரு கடலாத்தான் மாறணும். மாறிட்டாப் போச்சு!" 


நன்றி - த இந்து 





  • sadhasivasaravanan  from Salem
    இன்று தமிழக பல திரைப்படங்கள் சிறு துளியும் சமுக அக்கறை என்பது இல்லாமல் வருமானம் ஒனறுதான் நோக்கம் கொண்டு செயல்பட்டு வருகிரகள்.தேசிய விருது இரண்டவது சமுக அக்கறை என்பது முதல் இருக்க வேண்டும் அது இன்று இல்லை.ஆபாசம்,அட்டகாசம்,அட்டவடி,இரட்டை வசனம் பாடல்கள்.படங்கள்,தமிழக திரைப்படங்கள் எல்லாம் கறை படியந்து உள்ளது.
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • sivashanmugam Vasu retd.,deputy secretarytogovt., at Government of Puducherry from Pondicherry
    தராதரம் எது என்ற புரிதல் இடத்திற்கு இடம் / மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது .





Monday, March 24, 2014

எது நல்ல திரைக்கதை? - PART 1

எந்த திரைக்கதை (பொதுவாக கதை என நாம் சொல்வது) மக்களுக்கு பிடிக்கும் என்பதை எவராலும் எளிதில் கணிக்க முடியாது. அது மட்டும் தெரிந்திருந்தால், எல்லாத் தயாரிப்பாளர்களும், அந்த மாதிரி கதையைத்தான் எடுப்பார்கள். எனக்கும் என் குழுவில் உள்ள நாலு பேருக்கும் பிடித்த ஒரு கதை, ஐம்பது லட்சம் மக்களுக்கு பிடிக்கும் எனக் கணிக்க முடியாது. ஓரளவே நம்மால் அதைச் சொல்ல இயலும். ஐம்பது லட்சம் மக்களுக்குப் பிடிக்க ஒரு நல்ல திரைக்கதை எப்படி இருக்க வேண்டும்? 


பாலுமகேந்திரா காட்டும் பாதை

 
மறைந்த இயக்குநர் மேதை, கேமரா கவிஞர் பாலுமகேந்திரா பல பேட்டிகளில் இவ்வாறு சொன்னார்: வாழ்க்கையிலிருந்து ரத்தமும் சதையுமாக, மக்களிடமிருந்து பிய்த்து எடுக்கப்பட்ட ஒரு கதை, ஊடக ஆளுமையோடு உள்ள ஒரு படைப்பாளியால் சமரசங்கள் இல்லாமல் நேர்மையாகச் சொல்லப்படும்போது அந்த இடத்தில் ஒரு நல்ல சினிமா பிறக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதெல்லாம் இருந்தால் மட்டும் ஒரு நல்ல படம் வந்துவிடும் என்று சொல்ல முடியாது. அது ஒரு சாத்தியம்தான். இவைகளுடன், வார்த்தைகளால் சொல்ல முடியாத நமக்கே தெரியாத ஒரு மந்திரமும் இருக்கிறது. அந்த மந்திரம் சேரும்போது ஒரு படம் மக்களால் கொண்டாடப்படும் படமாக மாறுகிறது.” சினிமா என்பது வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளுடன் உள்ள ஒரு ஃபார்முலா அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகிறது.



பாலுமகேந்திராவின் இந்த அற்புதமான கருத்தை, ஒரு பொதுவான, அனைத்துத் தரப்பு படங்களுக்கும் ஏதுவானதாக என்னால் பார்க்க முடியவில்லை. நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதுபோல, எந்த மாதிரிப் படங்களை நாம் உருவாக்க நினைக்கிறோமோ, அதற்கு ஏற்ற மாதிரி, கதைகளின் கட்டமைப்புகளும் வேறுபட வேண்டிய அவசியம் உள்ளது. 



யதார்த்த சினிமாக்கள் எப்படிப்பட்டவை?


 
பாலு மகேந்திரா அவர்களின் கருத்து, யதார்த்த (அ) இணை (ரியலிஸ்டிக் / பேரலல்) சினிமாக்களுக்குக் கண்டிப்பாகப் பொருந்தும். ஏனெனில் யதார்த்த சினிமா நாம் பார்த்து அல்லது படித்த வாழ்க்கையை, யதார்த்தத்துடனும் உணர்ச்சிகளுடனும் அளிப்பவை. யதார்த்த சினிமாவில் எல்லாச் சுவைகளும் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, ஏனெனில், யதார்த்த சினிமாவின் நிகழ்வுகள் நம்மை அதனுடன் ஒன்றிவிடச் செய்யும்போது, நாம் அந்தக் கதாபாத்திரங்களுடன் வாழ ஆரம்பித்துவிடுகிறோம். எனவே இத்தகைய படங்களை சமரசங்கள் இல்லாமலும் 



செய்ய முடியும். யதார்த்த பாணியிலான பல வெற்றிப் படங்கள், அவரது கருத்துக்களைப் பிரதிபலித்துள்ளன (சில உதாரணங்கள்: சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், தென்மேற்குப் பருவக்காற்று, களவாணி, ஆடுகளம், வழக்கு என்: 18/9). இத்தகைய சினிமாக்களில், இதுவரை பார்க்காத, சொல்லப்படாத ஒரு கருத்தும், கதையும் புதுமையாக இருக்கும்போது வெற்றியின் அளவு அதிகரிக்கிறது. 



வெகுஜன சினிமாவின் சூத்திரம்


 
ஆனால் வெகுஜன சினிமா (அல்லது வணிக சினிமா) என்பது வேறு. இத்தகைய சினிமாக்கள் எல்லாத் தரப்பு மக்களையும் குறி வைத்து எடுக்கப்படுபவை. இவைகளில் எல்லா ரசனைகளும் தவறாமல் இருக்க வேண்டும் (சண்டை, காதல், கலகலப்பு, பாடல்கள், நடனம், சென்டிமெண்ட்). அவ்வாறு இருந்தால்தான் வெகுஜனங்கள் அத்தகைய படங்களை ரசித்து வெற்றி பெறச் செய்வார்கள்



 (சமீபத்திய உதாரணங்கள்: எந்திரன், விஸ்வரூபம், துப்பாக்கி, ஆரம்பம், சிங்கம் 2, சுந்தரபாண்டியன், வீரம். என நிறைய படங்களை குறிப்பிடலாம்). இத்தகைய படங்களில், யதார்த்தை மீறி, மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்க ஒரு பிரபலமான கதாநாயகன் தேவை. வெகுஜன சினிமா கதைகளின் வெற்றி, அந்த கதாநாயகனுக்கு மக்களிடம் உள்ள தாக்கத்தை பொறுத்து மாறும். 



அழகியல் சினிமாக்களின் பாதை


 
அழகியல் சினிமாக்கள் (அல்லது ஆர்டிஸ்டிக் சினிமா) எவ்வித வெகுஜன சினிமா நெருக்கடிக்கும் விட்டுக் கொடுக்காமல், சமாதானத்திற்கும் உட்படாமல், தான் சொல்ல வந்த கருத்தை, அழகுடனும், யதார்த்ததுடனும், புதிய அறிதலை, புதிய உணர்வு நிலையை உண்டாக்கும். இப்படங்களின் கதைகள் உண்மையாகும், இலக்கிய நயத்தோடும் சொல்லப்படுபவை. (உதாரணம்: காஞ்சிவரம், நந்தலாலா, பாலை, மதுபானக்கடை, ஆரோஹணம், அழகர்சாமியின் குதிரை எனப் பல படங்கள்). இத்தகைய கதைகளில் உள்ள நேர்மைதான் அவைகளுக்கு பாராட்டுதல்களைத் தருகின்றன. மேல் தட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுகின்றன. 



புதுவகை சினிமாக்கள்


 
புதுவகை சினிமாக்கள் (நியோ-ரியலிஸ்டிக் மற்றும் நியோ-நாய்ர் சினிமா), எளிய அல்லது சாதாரண மனிதர்களை பற்றியும் அவர்களின் போராட்டங்களை பற்றியும், எளிமையான கதைகளுடன், புதுமையான முறையில் தரப்பட்டுவருகின்றன. இப்படங்களில் புது மாதிரியான கதையும், கதை சொல்லிய விதமும்தான் மக்களை சந்தோஷப் படுத்துகின்றன. (உதாரணம்: மூடர் கூடம், நடுவிலே கொஞ்சம் பக்கத்தை காணோம், ஆரண்ய காண்டம், சூது கவ்வும் எனப் பல படங்கள்). 



தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, அழகியல் சினிமாக்களுக்கும், புதுவகை சினிமாக்களுக்கும், குறைந்த அளவு மட்டுமே பார்வையாளர்கள் இருப்பது மாறினால்தான், அத்தகைய படங்கள் மேலும் வர வாய்ப்புள்ளது. புதிய மற்றும் உண்மையான முயற்சிகளை ரசிகர்கள் ஆதரிக்கும் அதே நேரம், வெகுஜனப் படங்களும், யதார்த்த சினிமாக்களும் வியாபார வெற்றியைப் பெறுவதால், அத்தகைய படங்களுக்கு தேவைப்படும் சில விஷயங்களைப் பார்ப்போம். 



1. மோசமான கதையில் இருந்து ஒரு நல்ல சினிமா உருவாக வாய்ப்பு இல்லை. மேலும் 

கதை, திரைக்கதை மட்டுமே சினிமா அல்ல. நல்ல சினிமாவிற்கு அது ஒரு சிறு ஆரம்பம் மட்டுமே. அதனுடன், நல்ல, ரசிக்கத் தகுந்த வசனங்களும், ஊடக ஆளுமை கொண்ட ஒரு இயக்கமும்தான் அதை நல்ல சினிமாவாக்குகின்றன. 



நல்ல கதைக்குத் தேவைப்படும் மேலும் பல அவசியங்களைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம். 





thanx - the tamil hindu  

Saturday, February 15, 2014

பாலுமகேந்திரா குறித்து மனம் திறக்கிறார் மௌனிகா

சிறந்த சினிமாக்காரர் என்பதைப்போல ஒரு சிறந்த குடும்பத்தலைவராகவும் பாலுமகேந்திரா இருந்தார் என்று மௌனிகா கூறியுள்ளார். 


மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான நடிகை மௌனிகா ‘தி இந்து’விடம் கூறியதாவது. 



‘‘சினிமாவைப்போல வாழ்க்கையிலும் ரொம்பவே பெர்பக்ஷனாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் பாலு மகேந்திரா. 1985-ம் ஆண்டு வெளியான ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்ததன் மூலம் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு அறிமுகமானேன். எங்கள் திருமணம் 2000 ல் நடந்தது. 28 ஆண்டுகால அன்பு சேர்ந்த வாழ்க்கை எங்களுடையது. சிறந்த சினிமாக்காரர் என்பதைப்போல அவர் சிறந்த குடும்பத் தலை வராகவும் இருந்தார். 

 மௌனிகா

என் இயற்பெயர் விஜயரேகா. அவரின் நிறைய படங்களில் நாயகியின் பெயர் விஜியாகவே இருக்கும். என்னை சந்திப்பதற்கு முன்பே ‘மூன்றாம் பிறை’ படத்தில் நாயகிக்கு விஜி என்கிற பெயரை வைத்திருப்பார். என்னை சந்தித்தபின், “உன்னை பார்க்க இருந்திருக்கிறேன் என்பதால்தான் அந்தப்பெயர் எனக்கு பிடித்ததாக அமைந்திருக்கிறது” என்று சொல்வார். 



சமீபத்தில் வந்த ‘தலை முறைகள்’ படத்தில்கூட நாயகிக்கு விஜி என்ற பெயரைத்தான் வைத்திருந்தார். அந்த படத்தில் அவர் இறந்துவிடுவதுபோல காட்சி அமைந்ததாலேயே இது வரைக்கும் அந்தப்படத்தை நான் பார்க்கவே இல்லை. என்னை அழகழகாக படம் பிடிப்பது அவருக்கு அத்தனை இஷ்டம். அவர் என்னை எடுத்த படங்களையெல்லாம் பெட்டகமாக வைத்திருக்கிறேன். 



சமீபத்தில் 20 வயது பெண்ணை தத்தெடுத்து வளர்க்கப்போகிறேன் என்று அவர் சொன்னபோது எல்லோருக்கும் எழும் கோபம் எனக்கும் வந்தது. அதனால் அவ்வப்போது பேசாமல் இருந்தவர், எப்போதும் என் நினைவுகள் இல்லாமல் இருந்ததில்லை. அவர் யார் மீது கோபம் கொண்டாலும் அது நிரந்தரமாக இருந்ததில்லை. அவருக்கு யார்மீதும் வெறுப்பே வராது. சமீப காலமாக அவருடைய வயோதிகம் என்னை பாதித்துவிடக்கூடாது என்று எங்கள் நெருக்கமான நண்பரிடம் சொல்லிச்சென்றதாக கூறியிருக்கிறார். 



அவருக்கு இரண்டாவது முறையாக அட்டாக் வந்தபோதுதான் எங்களுடைய திருமண விஷயத்தை தெரியப் படுத்தினார். ஆபீஸ் போய்விட்டு திரும்புகிறேன் என்று சொன்னவர். பத்திரிகை யாளர்களை அழைத்து திருமண விஷயத்தை சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதி லிருந்துதான் அவருடைய முதல் குடும்பம், நெருக்கமான உறவினர்களிடம் இருந்து நான் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. 



நான் உன்னை பிரிந்துவிட்டால், நீ நிச்சயம் அழாமல் வந்து என் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு உடனே சென்றுவிட வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்தார். 



எங்கள் இருவரின் அன்பைப் பற்றி அவரே, இயக்குநர் பாரதிராஜாவிடம் நிறைய சொல்லி வைத்திருக்கிறார். இப்போதும் அவரை கடைசியாக பார்க்க முடியாதோ என்கிற ஏக்கத்தில் இருந்தபோது இயக்குநர் பாரதிராஜா, விடுதலை, வெற்றிமாறன் உள்ளிட்டவர்களின் முயற்சியால் அவரது முகத்தை கடைசியாக பார்க்க முடிந்தது. 



அவருடைய மகன் கௌரி சங்கரிடம், ‘ஒரே ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன்!’ என்று கண்ணீருடன் போனில் கேட்டேன். அவரும் எந்த மறுப்பும் இல்லாமல் பார்க்க அழைத்தார். தந்தையின் அந்த இரக்க குணம் மகனுக்கும் இருப்பதைத்தான் இது உணர்த்தியது. 


என்னை, அவரைப் பார்க்க விடாதவர்கள் பற்றி எதுவும் பேச வேண்டாம். எல்லோர் மனதிலும் இடம் பிடித்த அந்த ஆன்மா.. இனி இல்லை. அந்த துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முயற்சிக்க வேண்டும். பார்க்கலாம். 

 மௌனிகா பாலு மகேந்திராவுடன்..
 thanx - the tamil hindu 

  • rahman
    Neat interview. Gud one.
    about 11 hours ago ·   (7) ·   (5) ·  reply (0)
    p   Up Voted rahman 's comment
  • JAMBUNATHAN from Secunderabad
    தொடரும் துயரங்கள் !
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Ganpat from Chennai
    அவர் மகன் கெளரி சங்கரை பாராட்டுகிறேன்.
    about 8 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • ghouse from Mangalagiri
    மௌனிகாவின் கண்ணீர்... ************************ குடும்பவியல், திருமணம் ஆகியவை பற்றிய இறைவழிகாட்டுதல்கள் மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கோ மௌனிகாவுக்கோ தெரிந்திருந்தால் இன்று மௌனிகா இப்படி “உரிமை இல்லாத மனைவியாக” கண்ணீர் சிந்த வேண்டிய தேவை இருந்திருக்காது. என்ன செய்வது? “இறைவன் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவன். ஆகவே மனித இயல்புக்கேற்ப அவன் அருளிய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்” என்று சொன்னால் உடனே “மதவாதி” என்று முத்திரை குத்துகிறார்கள். எதிர்காலத்திலும் பல “மௌனிகாக்கள்” தோன்றலாம்; கண்ணீர் சிந்தலாம். அந்தக் கண்ணீருக்கு ஒரே தீர்வு- இறைநெறியில் மட்டும்தான் உண்டு.

Tuesday, November 27, 2012

பரதேசி - ஆடியோ விழாவில் பாலா, பாலுமகேந்திரா ,வைரமுத்து பேசியது என்ன?


விக்ரம் - சூர்யாவை விட நான் தான் சிறந்த நடிகன்! - 'பரதேசி' பாலா 

 

'அவன் - இவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் பாலா அடுத்து டைரக்ட் செய்து வரும் படம் 'பரதேசி'.


அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் பிரபல இரட்டை டைரக்டர்களில் ஒருவரான ஜெர்ரி இந்தப் படத்தில் கங்காணி என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.


நேற்று நடந்த இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸை ஒட்டி டைரக்டர் பாலா சிறப்பு பேட்டியளித்தார். அந்தப் பேட்டி இதோ உங்களுக்காக...


கேள்வி : 'பரதேசி' என்ன மாதிரியான கதை?


பரதேசின்னா வேற ஒண்ணுமில்லை. பஞ்சம் பொழைக்கப் போற ஒரு கூட்டம். அவங்களோட கதை, அதுதான்.



கேள்வி : உங்கள் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லோருமே சினிமாவில் சீக்கிரம் பாப்புலராகி விடுகிறார்கள், ஆனால் ஹீரோயின்கள் அந்தளவுக்கு பிரபலமாவதில்லையே?



பதில் : ( சில நொடிகள் யோசிப்புக்குப் பின்...) பிதாமகன் படத்துல நடிச்ச சங்கீதா, அவ ஒரு நல்ல நடிகையாத்தானே இருக்கா... நெறைய படங்கள் நடிச்சிருக்கா? ஹிட் கொடுத்திருக்கா...? அப்புறமென்ன..? அந்த லைலா பொண்ணுக்கும் எனக்கு லவ்வுன்னு எழுதியே அந்தப் பொண்ணை வீட்டுக்கு அனுப்பிட்டீங்க, அப்புறம்.., ஆனால் இந்தப் படத்துல நடிச்சிருக்கிற ரெண்டு ஹீரோயின்களுக்கும் கண்டிப்பாக சினிமாவுல நல்ல சான்ஸஸ் இருக்கு.



கேள்வி : இந்தப் படத்துக்காக மலைகளையெல்லாம் சொந்தமா வாங்கி ஷூட்டிங் நடத்தினீங்களாமே..?


பதில் : என்னது மலையா..? அதெல்லாம் இல்லீங்க, ரெண்டாவது மலைகளையெல்லாம் விலைக்கு வாங்க முடியாது, விட்டா திருநீர் மலையையே நான் வாங்கிட்டேன்னு சொன்னாலும் சொல்வீங்க போலிருக்கு. படத்துக்காக சில காட்சிகளை காடுகள்ல எடுக்க வேண்டியிருந்தது, அதுக்கு வனத்துறையினர் ரொம்ப கெடுபிடி பண்றதுனால நானே சொந்தமா ரெண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அதுல காடு மாதிரி செட்போட்டு ஷூட்டிங் பண்ணினேன். ஆனால் மரங்களையெல்லாம் வெட்டல. அத ஒரு நியூஸா போட்டு பிரச்சனை பண்ணிடாதீங்க.



கேள்வி : உங்க படங்கள்ல நடிச்ச சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா இவங்கள்ல யார் சிறந்த நடிகர்ன்னு சொல்வீங்க?



பதில் : விஷாலை விட்டுட்டீங்க...என்றவுடன் ( நிருபர் ஆமாம்.. விஷாலும் என்று சொல்கிறார்) கேள்வியைக் கேட்டு சிரித்தவர் தாடையை தடவிக்கொண்டே.., இவங்கள்ல யாருமே சிறந்த நடிகன் கிடையாது. அவங்களை விட நான் தான் சிறந்த நடிகன்
என்றவுடன் ஒரே சிரிப்புச் சத்தம்.



கேள்வி : விளிம்பு நிலை மனிதர்களோட வாழ்க்கையைப் பத்தி மட்டுமே எப்போதுமே உங்க படங்கள்ல நல்ல கருத்துக்களை சொல்றீங்க? கமர்ஷியல் படம் பண்ணும் எண்ணம் இல்லையா..?



பதில் : கமர்சியல்ன்னா எதைச் சொல்றீங்க? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அப்போதைக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் படமா எடுப்பேன். இந்தப் படத்தை எடுத்து முடிக்கிறதுக்கே போதும் போதும்னு ஆயிடுச்சி, அடுத்தப் படத்தைப் பத்தி யோசிக்கவே இல்லை.


கேள்வி : இந்தப்படம் 'எரியும் பனிக்காடு'ங்கிற நாவலைத் தழுவி படமா எடுத்திருக்கீங்க, இப்படி நாவலையோ, சிறுகதையையோ படமா எடுக்கிறப்போ இருக்கிற சவுகரியம் எப்படி இருக்கு?



பதில் : ம்... நாமளே ஒரு கதையை சொந்தமான யோசிச்சி அதை படமா பண்றதை விட இது இன்னும் ஈசியா இருக்கு, ரெண்டாவது முழுக்க முழுக்க இது 'எரியும் பனிக்காடு' நாவல் கிடையாது, அதுல எனக்கு பிடிச்ச ஒருபகுதியை எடுத்துக்கிட்டு என்னோட கற்பனையையும் கலந்து படமாக்கியிருக்கேன்.



கேள்வி : நல்ல கலரா, அழகா இருக்கிற ஹீரோயின்களுக்கு கருப்பு சாயத்தை தடவி மேக்கப்பெல்லாம் போட்டு அவங்களை கருப்பா காட்டுறதை விட ஏற்கனவே கருப்பா இருக்கிற ஒரு ஹீரோயினை நடிக்க வெச்சா இன்னும் ஈசியா இருக்கும்ல?



பதில் : யாரு வேதிகாவா..? அந்தப் பொண்ணு கலர்னு சொல்லுங்க, ஆனா அழகுன்னு சொல்லாதீங்க..என்றவுடன் அங்கு சிரிப்பு சத்தம், (அப்போது, இதற்கு என்ன அர்த்தம் என்று வேதிகா பக்கத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனிடன் ஆங்கிலத்தில் விளக்கம் கேட்டுக் கொள்கிறார்.) இல்லை அப்படின்னு கிடையாது, இந்தப் படத்துல கூட ஒரு கலர் கம்மியான மாலதிங்கிற ஒரு பொண்ணை ஒரு முக்கியமான கேரக்டரில் நான் அறிமுகப்படுத்துகிறேன். கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ அவங்களை நடிக்க வைப்பேன். கலரெல்லாம் பாக்கிறது இல்லை.



கேள்வி : இளையராஜாவை போடாம எதுக்கு ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டரா போட்டுருக்கீங்க?



சூர்யா,அடுத்து விக்ரம்,அடுத்து ஆர்யா, அப்புறம் சூர்யா,விக்ரம்ன்னு ஒரே ஆட்களோட வேலை பார்த்துக்கிட்டிருக்கீங்க? புதுப்புது ஆட்களோட வேலை பார்க்க மாட்டீங்களான்னு நீங்க தான் விமர்சனத்துல எழுதுனீங்க...? அதனால தான் இந்தப் பையனை கமிட் பண்ணினேன். ஆனா இப்போ நீங்களே எதுக்கு ஜி.வியை போட்டீங்கன்னு கேட்குறீங்க..


இவ்வாறு டைரக்டர் பாலா கூறினார்.

http://www.thamizhthirai.com/wp-content/gallery/paradesi-first-look/paradesi_first_look_exclusive_stills_01_0.jpg


பாலா என் மூத்த மகன் : பரதேசி ஆடியோ விழாவில் நெகிழ்ந்த பாலுமகேந்திரா!


"பாலா என் வீட்டிலேயே வளர்ந்த என் மூத்த மகன், அவன் தேசிய விருது வாங்கிய போது நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை" என்று டைரக்டர் பாலுமகேந்திரா பேசினார்.

டைரக்டர் பாலா லேட்டஸ்ட்டாக தயாரித்து, டைரக்‌ஷன் செய்து வரும் 'பரதேசி' படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு பேசிய ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்திரா "பாலா என் மூத்த பிள்ளை" என்று நெகிழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர்.., " என்னுடைய 'வீடு' படத்தின் போது பாலா என்னிடம் வந்து சேர்ந்தான். அவனையும், ராம் என்பவனையும் பாடலாசிரியர் அறிவுமதி என்னிடம் கொண்டு வந்து விட்டுப் போனார். நான் பாலாவை யூனிட்டில் சேர்த்துக் கொள்ளவே இல்லை.

ஆனால் அவன் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த நான் “ யாருப்பா..நீ நான் உன்னை பார்த்ததே இல்லையே..? என்று கேட்டேன். அதற்கு அவன் நான் உங்கள் படத்தில் தான் வேலை செய்கிறேன். மதுரையில் படித்து விட்டு உங்களிடம் சேர வேண்டும் என்று வந்து விட்டேன், நீங்கள் தான் என்னை கண்டுகொள்ளவே இல்லை என்றான், அன்றிலிருந்து அவனை நான் என்னிடம் சேர்த்துக் கோண்டேன். அவன் என் வீட்டில் ஒருவனாக வளர்ந்தான்.


பொதுவாக நான் எல்லா படங்களின் ஆடியோ ரிலீஸுக்கும் வருவேன். ஆனால் என் மனைவி வரமாட்டார். ஆனால் இந்த பரதேசி படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனுக்கு என் மனைவி அகிலாவை கூப்பிட்டபோது அவள் உடனே வந்து விட்டாள். அந்தளவுக்கு அவன் மீது ஒரு தாய் போல அவள் பாசம் வைத்திருக்கிறாள். அதனால் தான் இந்த விழா எனக்கு முக்கிமானது" என்று பேசிய பாலுமகேந்திரா.., தொடர்ந்து.., "பாலாவும் தேசிய விருது வாங்கி விட்டான், என்னுடைய இன்னொரு பிள்ளை வெற்றிமாறனும் தேசியவிருது வாங்கி விட்டான், எனது ரெண்டு பிள்ளைகளும் தேசிய விருது வாங்கியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு அப்பாவுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்.


"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"  என்ற குறளைப் போல நான் மகிழ்கிறேன்" என்றார்.

விழாவில் நடிகர்கள் சூர்யா,விக்ரம், ஒளிப்பதிவாளர் செழியன், கவிப்பேரரசு வைரமுத்து, ஹீரோ அதர்வா,ஹீரோயின்ஸ் வேதிகா, தன்ஷிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


டைரக்டர் பாலாவின் 'பரதேசி' படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறாராம் நடிகர் அதர்வா.


ஆர்யா-விஷால் இணைந்து நடித்த 'அவன் - இவன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலா சைலண்ட்டாக டைரக்‌ஷன் செய்து வரும் படம் தான் 'பரதேசி'.

அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்து வரும் இந்தப் படத்துக்காக தனக்கு பழக்கப்பட்ட ஏரியாவான தேனி,கம்பம் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார். மேற்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ஆக்டிங் என்ற பெயரில் நடிகர் அதர்வாவை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா.

அதன் ஒரு பகுதியாக அதர்வாவை சுமார் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கச் சொல்லியிருக்கிறார். கேரக்டருக்கு இந்த எடைக்குறைப்பு முக்கியம் என்று பாலா சொன்னதால் அதர்வாவும் வேறு வழியில்லாததால் ரொம்பவும் மெனக்கட்டு தனது உடல் எடையைக் குறைத்தாராம்.

இதுவரை இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா என இசைக் கூட்டணி போட்ட பாலா இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டராக கமிட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த மாதம் 25-ஆம் தேதி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் பாலா.


என்னமோ போங்க.. எடையைக்குறைக்க அந்த மெடிசின் இந்த மாத்திரைனு டிவில காட்டுறதெல்லாம் வொர்க்கவுட் ஆகுதோ இல்லையோ இந்த பாலா மெடிசின் மட்டும் கரெக்டா வொர்க்கவுட் ஆகுது; சேது விக்ரம், செய்யாத படத்துக்கு அஜீத், இப்பொ அதர்வா என.




http://www.tamil.haihoi.com/news/Dhansika%20Character%20In%20Paradesi_HaiHoi_214.jpeg
நான் பாடல்களை திருத்த அனுமதிப்பதில்லை என்று யாரோ தவறான வதந்தியை பரப்பி விட்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறினார்.




டைரக்டர் பாலாவின் ’பரதேசி’ படத்தின் எல்லா பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்...



இந்த 'பரதேசி' படம், தமிழ் திரையுலகில் முக்கியமான படமாக இருக்கும். படத்தில், ஒரு விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாலா, ஒரு சராசரி கலைஞன் அல்ல. மனிதர்களின் மறுபக்கத்தைப் பார்க்க பாலா ஆசைப்படுகிறார். இங்கே மாறுபட்டு சிந்திக்கிறவன் தான் எப்போதுமே கவனிக்கப்படுகிறான். அந்த வகையில் இயக்குனர் பாலா மாறுபட்டு சிந்திக்கிறவர்.


வைரமுத்து தனது பாடல்களில் திருத்தங்களை செய்யவிடுவதில்லை என்று என்னைப் பற்றி யாரோ சிலர் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை., நியாயமான திருத்தங்களை நான் எப்போதும் செய்து வருகிறேன். பொருந்தாத திருத்தங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை.


இந்த படத்தில் கூட , ‘கண்ணீர்தானா கண்ணீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று ஒரு பாடல் எழுதியிருந்தேன். இதை, ‘செந்நீர்தானா செந்நீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று மாற்றிக் கொள்ளலாமா? என டைரக்டர் பாலா என்னிடம் கேட்டார். பாலாவின் திருத்தம் எனக்கு நியாயமாக இருந்தது. அவருடைய திருத்தத்தை ஏற்றுக் கொண்டேன்.


நான் எல்லா இயக்குனர்களும் சொல்லும் திருத்தங்களையும் நியாயமான காரணமாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். அப்படித்தான் பெரும்பாலான இயக்குனர்கள் என் பாடல்களை என் அனுமதியோடு திருத்தியிருக்கிறார்கள், ஆனால் பாரதிராஜா மட்டும் தான் என் பாடல்களை இதுவரை திருத்தியதேயில்லை.


அதேபோல எல்லோரும் பாரதிராஜா படங்களில் வரும் நல்ல இனிமையான பாடல்களைப் போல தாருங்கள் என்று கேட்கிறார்கள், அதுதான் சொன்னேன், பாரதிராஜா என் பாடல்களை திருத்துவதிலை அதனால் அந்தப் பாடல்கள் பிரபலமாகி விடுகிறது.


இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

 நன்றி - சவுண்ட் கேமரா ஆக்‌ஷன், நக்கீரன், தினமணி

http://chennaionline.com/images/articles/October2012/7ed70fca-9621-4f3b-bf1e-e4a3043d5445OtherImage.jpg



டிஸ்கி 1 - பரதேசி படத்தின் திரைக்கதை நெட்டில் வெளியானது
டிஸ்கி 2 - பரதேசி - கலக்கல் ட்ரெய்லர்,
டிஸ்கி 3 - பாலாவின் பேட்டி

http://www.adrasaka.com/2012/10/blog-post_7245.html


http://sim.in.com/f4f460a229d5c7e281072787ca350276_ls.jpg