Showing posts with label vijay tv. Show all posts
Showing posts with label vijay tv. Show all posts

Wednesday, December 19, 2012

விஜய் டி வி 7 சி ஐஸ்வர்யா பேட்டி

http://www.cinespot.net/gallery/d/980328-1/Aishwarya+Tv+Serial+Actress+Photos+_7_.jpg 

 

நான் நடிகையான கதை! - ஐஸ்வர்யா

தொகுப்பாளியாக, தொடர்களின் நாயகியாக வெற்றி வலம் வந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக இருந்துகொண்டே "7சி'யில் நடிக்கிறார். சன் தொலைக்காட்சியில் "பைரவி'யாக கலக்கிக்கொண்டே, ஜெயா டி.வியில் பாலசந்தரின் இயக்கத்தில் "இலக்கணம் மாறுதோ' தொடங்கிவிட்டது. அவரிடம் தொடர் நடிப்பு இடைவேளையில் பேசியதிலிருந்து...  


தற்போது நடித்து வரும் தொடர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "7சி', சன் டிவியில் "பைரவி', இப்போது ஜெயா டிவியில் "இலக்கணம் மாறுதோ' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறேன். எல்லா தொடர்களிலும் லீட் ரோல் நான் தான் செய்கிறேன்."7சி' தொடரில் எஸ்தராகவும், "பைரவி' தொடரில் மதுராவாகவும், "இலக்கணம் மாறுதோ' தொடரில் சுரபி என்கிற கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "7சி' எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. அதற்குக் காரணம் அந்த கேரக்டர் துடுக்கான, அதே மற்ற ரோல்களைவிட வித்தியாசமாக இருக்கும். நானும் அந்த கேரக்டரில் ரொம்ப இன்வால்வாயி நடிக்கிறேன்."

இலக்கணம் மாறுதோ' உங்களை எந்த விதத்தில் மாறுபடுத்திக் காட்டும் தொடராக இருக்கும்?"


இலக்கணம் மாறுதோ' இப்போதுதான் புதிதாக ஆரம்பித்திருக்கிறது. கவிதாலயா பேனர்ல கே.பாலசந்தர் சாரோட தொடர் இது. பாலசந்தர் சார் தொடர் என்றாலே அதில் ஒரு வித்தியாசம் இருக்கும். அதுவே கேரண்டிதான். இதுவும் கண்டிப்பாக பல சுவரஸ்யங்கள் நிறைந்த தொடராக இருக்கும். அவர் இயக்கிய "சஹானா' தொடரில் நடித்த காவியாவும் இந்தத் தொடரில் நடிக்கிறாங்க. இரண்டு பெண்களின் மணவாழ்கை சம்பந்தப்பட்ட கதையாக "இலக்கணம் மாறுதோ' உருவாகி வருகிறது.கவிதாலயா பேனர்ல நான் ஒரு தொடராவது நடித்துவிட வேண்டும் என்பது என் அம்மாவோட நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு இப்போது நிஜமாகியிருப்பது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது


. நீங்கள் நடிக்க வருவதற்கு முன்பு, வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிகை ஆகிட்டீங்களாமே உண்மையா?


ஆமாம் உண்மைதான். என் அண்ணனுக்கு டிவியில் காம்பெய்ராக ஆக வேண்டும் என்று நிறைய ஆசையிருந்தது. அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் விஜய்டிவியில் அதற்கான ஆடிஷன் நடந்தது. அதில் கலந்து கொள்ள அண்ணன் போயிருந்தார். அவரோடு நானும் சும்மா வேடிக்கை பார்க்க போயிருந்தேன். ஆனால் அவர் தேர்வாகவில்லை. எதிர்பாராத விதமாக நான் தேர்தெடுக்கபட்டேன். வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் காம்பெய்ரிங் பண்ண வந்தேன். அதைத் தொடர்ந்து தொடரில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைக்க இப்படியே என் பயணம் தொடர்கிறது.


தொடர்களில் நடிப்பதற்கு முன்பு நீங்கள் தொகுப்பாளினியாக இருந்தீர்கள். அந்த அனுபவம் பற்றி?


நான் தொடர்ச்சியாக மூன்று வருடமாக விஜய் டிவியில் வரும் "ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தேன். அதே போல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் காம்பெய்ரிங் செய்துள்ளேன். அப்போதிலிருந்தே தொடர்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதில் விருப்பம்மில்லாமல் இருந்தேன். காரணம் தொகுப்பாளினியாக இருப்பது தொடரில் நடிப்பதைவிட ஈசியாக இருக்கும். ஜாலியாக வந்தோமா, ஹாயாக பண்ணோமா போய்க்கிட்டே இருக்கலாம். தினம் ஆபிஸ் வந்து போகிற பீல் தொடரில் நடிக்கும் போது ஏற்படும். ஆனால் காம்பெய்ரிங் செய்வது அப்படி அல்ல.

சரி இப்படி இருந்த நீங்கள் அப்புறம் ஏன் தொடரில் நடிக்க ஒத்துக்கிட்டீங்க?


எதுவும் ஒரு கட்டத்தில் போரடிக்கும்தானே? அதுமட்டுமில்லை இங்க நிலைக்கணும் என்றால் நம் திறமையை நிரூபிக்கணும். அதற்குத் தொடர்களில் நடிப்பது முக்கியம். அதற்காக காத்திருந்தேன். அப்போதுதான் "வந்தாளே மகராசி' தொடரின் கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது. அதனால் இத்தொடரில் நடிக்க சம்மதித்தேன். அந்த தொடரின் மூலமாகத்தான் நான் சின்னத்திரை நாயகி ஆனேன்.


நடிகையாகவும் இருக்கீங்க, தொகுப்பாளியாகவும் இருக்கீங்க எதை விரும்பி செய்கிறீர்கள்?


காம்பெய்ரிங்கிற்கும், நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. காம்பெய்ரிங் பொருத்தவரை நம்ம வீட்டிலோ நண்பர்களிடமோ பேசுவது போன்று இயல்பாக இருக்கும். அதே சமயம் சில நேரங்களில் சரியாக நிகழ்ச்சி கொடுக்கவில்லை என்றால் உடனே முகத்துக்கு நேரே சொல்லி ஓ வென்று கத்திவிடுவார்கள்.அதுவே நன்றாக இருந்தால் உடனே வாழ்த்துவார்கள், நேரடி நிகழ்ச்சிகள் வழங்குவது ஜாலியாக இருந்தாலும், ரொம்ப கடினமான விஷயம். ஆனால் நடிப்பு அப்படியில்லை, கஷ்டப்பட்டு நடித்து முடித்த பிறகு வெளி இடங்களுக்குப் போகும் போது, ரசிகர்களை சந்திக்கும் போதுதான் நாம் என்ன செய்திருக்கிறோம் என்று தெரியும். நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டியிருக்கிறது. இது ஒரு வித்தியாசமான, புதுமையான நல்ல அனுபவமாக இருக்கிறது. இதில் எது பிடித்திருக்கிறது என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் தொகுப்பாளி ஆன பிறகுதான் நான் நடிகையானேன். அதனால் கம்பெய்ரிங்கும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறேன். சமயம் கிடைக்கும்போது மேடை நிகழ்ச்சிகள், திரை விழாக்களையும்கூடத் தொகுத்து வழங்கி வருகிறேன். இதை தவிர விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன்.


சினிமாவில் நடிக்க அழைப்புகள் வருகிறதா? அந்தப் பக்கம் போகும் எண்ணம் உண்டா?


ஐந்து வருடமாக பெரிய திரையில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்போதைக்குப் பெரியதிரைக்குப் போகிற எண்ணம் இல்லை. சின்னத்திரையே நிறைவாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக பெரிய திரைக்குப் போகமாட்டேன்.


உங்களுடைய வருங்காலத் திட்டங்கள் என்ன?


பதினோராம் வகுப்பு படிக்கும் போதே நான் மீடியாவுக்குள் வந்துவிட்டேன். அதனால் பளஸ் டூ முடித்ததும் விஸ்காம் எடுத்து படித்தேன். ஆன் ஸ்கீரின் மட்டும் அல்லாமல் திரைக்கு பின்னும் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு போட்டோகிராபி ரொம்ப பிடிக்கும். கல்லூரியில் படிக்கும் போது பைனல் இயர்ல போட்டோகிராபியில் யூனிவர்ஸிட்டியில் டாப்பராகவும் வந்தேன். முதலில் எல்லா துறையைப் பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும், டெக்னிக்கலாக அதில் அனுபவம் பெற்ற பிறகு எனக்கு எது சரியாக வருகிறதோ அந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்றிருக்கிறேன் என்ன சரிதானே?


நன்றி - சினிமா எக்ஸ் பிரஸ்

Tuesday, November 27, 2012

நீயா? நானா? - விஜய் டி வி விவாதம் - பாக்கெட் மணி -அதிர்ச்சி கலாச்சார சீர்கேடு

ஆடம்பர செலவுக்காக குற்றவாளிகளாக மாறும் இளையசமுதாயம்!: நீயா நானாவில் அதிர்ச்சி

அப்பா நாலணா குடுப்பா....


நாலணாவுக்கு என்ன செலவு இருக்கு? பத்துபைசா தர்றேன்... பாட்டி கடையில மிட்டாய் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போ கண்ணு...



இது 80களில் பள்ளிக்கு சென்றவர்களின் வீடுகளில் நடந்த உரையாடல். 90களில் கல்லூரி சென்று படிக்கும் போது கூட 20 ரூபாய் செலவிற்கு வாங்குவது கூட அதிகம்தான். ஆனால் இன்றைக்கோ எல்.கே.ஜி செல்லும்போதே தினசரி 30 ரூபாய் அல்லது 50 ரூபாய் சாக்லேட், ஸ்நாக்ஸ் வாங்கித்தர வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.



இதுவே வளர்ந்து கல்லூரி செல்லும்போது 500 லிருந்து 1000 ரூபாய் வரை கூட பாக்கெட் மணி கொடுக்கவேண்டியிருக்கிறது. தன்னுடன் படிக்கும் மாணவர்கள் ஆடம்பரமாக செலவு செய்கின்றனரே தானும் அதே போல செலவு செய்யவேண்டும் என்ற எண்ணம்தான் பெற்றோர்களிடம் பாக்கெட் மணி அதிகம் கேட்டு செலவு செய்யத் தூண்டுகிறது.



இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ‘பாக்கெட் மணி' பற்றி பெற்றோர்களும், பிள்ளைகளும் விவாதித்தனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரியவில்லை என்று பெற்றோரும், அப்பா, அம்மா கொடுக்கும் பணம் போதவில்லை என்று குழந்தைகளும் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.



பெற்றோர் தரும் பணம் போதவில்லை அதற்காக வீட்டில் வைத்திருக்கும் பணத்தை திருடுகிறோம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து இளைய தலைமுறையினரும் தெரிவித்தனர். இது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிக்காக எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் 70 சதவிகித கல்லூரி மாணவிகள் பெற்றோர் கொடுக்கும் பாக்கெட் மணியை தவிர்த்து வீட்டில் பணம் திருடுகிறோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.



இளைய சமுதாயத்தினரின் இந்த பணம் திருட்டு ஆபத்தானது என்று தெரிவித்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளங்கோ. உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறையினர் ஆடம்பர செலவிற்காக பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இளைஞர்கள் ஆட்களை கடத்துவதும், திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நடக்கிறது. இது பெண் பிள்ளைகள் என்றால் விபச்சாரம் செய்வதற்குக்கூட தயங்குவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.



இதற்குக் காரணம் பிள்ளைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு செல்லம் கொடுத்து கெடுத்தது பெற்றோர்கள்தான். எனவே திடீரென்று அவர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவர்களின் எண்ணம் வேறு விதமாக வடிவெடுக்கிறது. எனவே ஆடம்பரமோகத்தை குறைத்து பணத்தின் அருமையை உணர்ந்து செலவு செய்யவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினர்.



இதேபோல் நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் நாகப்பன் புகழேந்தி பணத்தின் அருமையை குழந்தைகள் உணரவேண்டுமானால் அவர்களின் கையில் பணத்தை கொடுத்து கணக்கு கேட்கலாம். அதனால் எதற்க்கு எவ்வளவு பணம் செலவு செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவரும் என்றார்.



பணத்தின் அருமையை உணர்தும் புத்தகம் ஒன்றை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்போவதாகவும் நாகப்பன் தெரிவித்தது சிறப்பு அம்சம்.



இன்றைய கால கட்டத்தில் நுகர்வு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது இதன்காரணமாகவே பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை உணராமலேயே ஆடம்பரச் செலவு செய்கின்றனர் இளைய தலைமுறையினர். இந்த சூழ்நிலையில் நடத்தப்பட்ட ‘நீயா, நானா' விவாதம் பயனுள்ளதாகவே இருந்தது என்கின்றனர் ரசிகர்கள்.


thanx - thats tamil