Tuesday, June 28, 2011

ஈரோடு காலேஜ் பிரின்சிபால் VS மவுண்ட் ரோடு அமலா பால்

1.உங்களுக்கு பிடிச்சது எது?பிடிக்காதது எது?

பிடிச்சது  அமலா பால்,பிடிக்காதது எங்க காலேஜ் பிரின்சிபால்#பால் பாண்டி ஜோக்

---------------------------

2. DR,என்னால எதையும் சாப்பிட முடியல. 

பேச்சிலர்னா ஹோட்டலை மாத்துங்க, சம்சாரின்னா சம்சாரத்தை மாத்திப்பாருங்க

------------------------

3. இந்தக்காலத்துப்பொண்ணுங்க ரொம்ப மோசம்னு எப்படி சொல்றே?

வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களை விட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போற பொண்ணுங்கதான்  அதிகமா இருக்காங்க.. 

------------------------------

4.  என் லவ்வை அவ கிட்டே சொல்லக்கூட நான் இவ்வளவு யோசிச்சதில்லை,ஆனா உன் கிட்டே சொல்லத்தாண்டா பயமா இருக்கு.. 

ஏன்?

காதலியிடம் லவ்வை சொல்ல 4 ரூபா ரோஜாப்பூ வாங்கிகுடுத்தா போதும்,ஆனா நண்பனிடம் அதை சொல்ல 400 ரூபாவுக்கு தண்டச்செலவு செஞ்சு ட்ரீட் வைக்கனும்னு எழுதப்படாத விதி இருக்கே?

--------------------------



5. சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது. 

மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்னு தெரியுமா உங்களுக்கு?

----------------------

6. அவரு பால் மணம் மாறா பாலகன்னு இனிமே சொல்ல முடியாது.. 

ஏன்? 

எப்போ பாரு நடிகையோட ஸ்டில்லை ஸ்மெல் பண்ணிட்டே இருக்கானே? அமலா பால் மணம் மாறா கிராதகன்னு வேணா சொல்லலாம்..


---------------------

7. விளக்கேற்ற ஒரு பெண்ணைத் தேடி களைத்தவர்கள் அவசர உதவிக்குகிடைத்த பெண்ணை வைத்து விளக்கை அணைக்கிறார்கள்#முதிர் கண்ணன்களின் காமம்


----------------------------------

8.  மனசுக்குப்பிடிச்சவங்களை பார்க்காமல்.பேசாமல் இருந்து விடலாம்,ஆனால் மனதில் நினைக்காமல் இருந்து விட முடிவதில்லை#நெஞ்சுக்கு நீதி

--------------------

9. உனக்காக எதையும் விட்டுக்குடுக்க நான் தயார் தான்,ஆனால் உன்னை விட்டுக்குடுக்க தயார் இல்லை.. 

-----------------------

10. பெண்கள் அனைவரும் தேவதைகள் தான்.நீ தேவதைகளின் தேவதை

-------------------

. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் என்ன??


1. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் அவசர முத்தங்களால் கறைகள் காட்டிக்குடுத்துவிடும் அபாயமாகக்கூட இருக்கலாம்#ஜிகிடி

--------------------

2. நீ தலைக்குக்குளித்து வரும் நாட்களில் உன்னைத்தவிர்க்க நினைக்கிறேன்,காரணம் உன் முக வசீகரத்தை கூந்தல் அழகு முந்துவதை விரும்பாததால்#ஃபிரைடே

--------------------

3. காதலிக்க கண்கள் மட்டும் போதும்,ஆனால் அதை கண்ட்டினியூ பண்ண பாக்கெட்ல காசு வேணும்#நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டோய் 

---------------------

4. உன்மேல் உள்ள அன்பை முழுசாக வெளிப்படுத்த எனக்குத்தெரியவில்லை என்றாய்,சோ வாட்?உள்ளே அன்பு இருக்கு என்று தெரிந்தாலே போதாதா?

---------------------

5. உன்னுடன் சந்திக்கும் வாய்ப்பு ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் என்னோடு இருக்கும் பர்ஸ் காலி ஆகி விடும்#வெட்டிச்செலவு வந்தனா 

--------------------




6. ஓட்டுப்போட 18 வயசு ஆகனும்,மேரேஜ் பண்ண 21 வயசு ஆகனும்,நீதி -நாட்டை கட்டுப்படுத்தறதை விட ஒரு நாட்டுக்கட்டையை கண்ட்ரோல் பண்ணறது கஷ்டம்

---------------------

7. கணவன்மார்கள் பைக்கில் போகும் நேரத்தை விட மனைவியை டிராப் பண்ணும் நேரம் அதிகம்,மனைவிமார்கள் பெரும்பாலும் கணவன்களை டிரைவராக யூசிங்க்

---------------------

8. ஆண்கள் பைக் உலா போகையில் அவன் கம்பீரம் கூடுகிறது,பெண்கள் ஸ்கூட்டி உலா போகையில் அவள் நளினம் குறைகிறது

--------------

9./ கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் எனக்குப்பிடிக்காமல் போனதற்குக்காரணம் ,அவள் கண்கள் கட்டப்படுவதால்

----------------
10.  எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன்-ஜெ#அப்போ முதல்ல கரண்ட்கட்டுக்கு ஒரு வழி பண்ணுங்க தாயே

------------------



11. பிரதமர் முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால்,  சிறப்பாக செயல்பட முடியாது-ஜெ#சிஎம்மாக இருக்கறவங்க கூடதோழியின் பேச்சைத்தானே கேட்கறாங்க?

--------------------

12. எல்லா கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்-ஜெ#அய்யய்யோ,அம்மா,குண்டை தூக்கிப்போடறீங்களே?அப்போ திமுகவுல உங்க நண்பர் யாரு?

---------------------------
13. நரேந்திர மோடி பற்றி விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்-ஜெ#இந்நாள் சினிமா நடிகை பேட்டி மதிரியே இருக்கே?

----------------------

14. நம் நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்-ஜெ#என்னம்மா? இது?45 நாட்களுக்குள்ளேயா?

-------------------------

15. ஊழல்அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாடே எதிர்பார்க்கிறது-ஜெ #ஊழல் செய்த முதல் அமைச்சர்கள் மீதும்,2 பேரும் மாட்னீங்க

-------------------



16. அரசு பேருந்தில் 'தீ' 36 பயணிகள் தப்பினர்-செய்தி # தீ ரஜினி நடிச்ச படம் ஆச்சே.. ரஜினியே தப்பிச்சுட்டாரு..பயணிகள் தப்பிக்க மாட்டாங்களா?

------------------------

17. பிரபுதேவா- பியா ஒரேவிமானத்தில் அருகருகே அமர்ந்து மும்பை சென்றனர்# நயன்தாரா எங்கிருந்தாலும் சீதை படப்பிடிப்பை கேன்சல்செய்துவிட்டுஆஜர்ஆகுக

---------------------------

18.  என்னைத்தொந்தரவு செய்வதே உன் வேலை ஆகி விட்டது.இனி என் முன்னால் வருகையில் மாஸ்க் அணிந்து வரவும்.

----------------------

19.  எல்லோரிடமும் குழந்தைத்தனம் ஒளிந்திருக்கும்,ஆனால் அது எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படாது#ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்&டீலிங்க்

-----------------------
20.  உன்னை சமாதானப்படுத்த என்ன பரிசு வேணும்? என கேட்டேன் .செலவே இல்லாத எப்போதும் கிடைக்கும் 4 எழுத்து மந்திரம் என்றாள் #கிஸ்ஸாலஜி

----------------------

பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீடு -கிராமத்துக்காதல்+அழகிய அழுகை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUmMckJNomiHZVrgmF6HV4h4OF3XWvEdWvIJUFPo69D4yDD_pHP9FHLKxMN-Z5_87J9A9zlDxKx_FuhhTC2OhVJdayVkQsf7z6YO1PUBTjP0D-i3m1BufJaL5-3GvZNuj5a-DotubEEEUI/s1600/pillaiyar_theru_kadaisi_veedu-Mp3+Sogs+free+Download.jpg 

ஹீரோவுக்கு கேன்சர், ஹீரோயினுக்கு எயிட்ஸ்,வில்லனுக்கு பைல்ஸ்,வில்லிக்கு லொள்ஸ்  இப்படி கதை சொல்ற இயக்குநர்களுக்கெல்லாம் ஆப்பு இருக்குடி..1980 களில் 47 படங்கள் இப்படி வந்தன.. அவற்றில் பாதி ஹிட் படங்கள். ஆனா 2011லயுமா? உஷ் அப்பா முடியல.. 

ஜித்தன் ரமேஷை சிரிக்கறப்பவே பார்க்க சகிக்காது.. இதுல பாதிப்படம் அழுதுட்டே வர்றாரு.. (சிரிப்புப்போலீஸ் ரமேஷ் மன்னிக்க)

படத்தோட கதை என்ன?ஹீரோவுக்கும் ,ஹீரோயினுக்கும் காதல்,ஹீரோயினுக்கு கேன்சர் என ஹீரோவும் ,ஆடியன்சும் நினைக்கும்போது கேன்சர் ஹீரோவுக்கு என ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார்.. கேன்சர் ஹீரோவுக்கா இருந்தா என்ன? ஹீரோயினுக்கா இருந்தா என்ன? சாகறது ஆடியன்ஸ்தானே?

இந்த லட்சணத்துல இந்தப்படத்தோட டைரக்டர் பட ரிலீஸ் அப்போ டி விக்கு அளித்த பேட்டில வழக்கமான படங்களில் வர்ற மாதிரி ஹீரோ - ஹீரோயின் அறிமுகம் சாதாரணமா இருக்காது ஸ்பெஷல் டச் இருக்கும்னாரு.. அந்த ஸ்பெஷல் டச் என்னங்கறதை இப்போ சொல்றேன்.. சாப்பிட்டுக்கிட்டே இதை படிக்கறவங்க சாப்பிட்ட பிறகு தொடரவும்.. 

 ஹீரோ கிராமத்துல காலைக்கடனுக்காக ஒதுங்கறார்.. பாதிலயே வயக்காட்டு ஓனர் டேய் யார்றா அங்கே என கத்தறார்.. பாதிலயே எந்திரிச்ச ஹீரோ கைல தண்ணி சொம்போட ஓடறார்.. (வித் அவுட் வாஷிங்க்.. )அப்போ ஹீரோயின் எதேச்சையா அங்கே வர்றார்.. 2 பேரும் மோதிக்கறாங்க.. அப்போ ஹீரோ அந்த 40 மார்க் ஃபிகரைப்பார்த்து பிரமிச்சுப்போய் பின்னாலயே போய் கிணத்துல விழறாரு.. ஹீரோயின் அவரைக்காப்பாற்ற முயற்சி பண்றப்ப ஹீரோவோட வேட்டி அவர் கைல.. ஹீரோ கிணத்துல..

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ,ஒரு அப்பார்ட்மெண்ட் ஃபிகர்ஸ்சுக்கு ஒரு ஃபிகர் இதம் என்பது போல  இந்த கேவலமான ஒரு சீனே போதும், அண்ணன் கிட்டே சரக்கு இல்லைன்னு.. தெரிஞ்சுக்க.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2ndqtDaKToa4izyljPWJGe9ZFo-B9KFpNl7qFT7qLbJiIbkHxCKSspR8JcHAZKOqVqcyQkKVHx8b9lnLmhIIom3PNEN3GjVQLqZ8vWGPmdY8NFvSht4j4sTBnH7mDXI6yo0aXgPtCAQ06/s1600/pillaiyar_theru_kadaisi_veedu_04.jpg

படத்தில் தேறிய வசனங்கள்

1.  லவ்ங்கறது  அழகைப்பார்த்தோ ,பணத்தைப்பார்த்தோ வர்றதில்லை.. உள்ளே இருந்து வர்றது.. 

எப்டி? வாமிட் மாதிரியா?

2.  எனக்கு அந்தப்பொண்ணு வேணூம்....ம் ம் 

என்னமோ டீக்கடை பன்னு வேணும்கற மாதிரி கேட்கறே?

3. உன் ஆளு எப்படி இருப்பா?

இந்த ஊர்லயே அழகான பெண் அவ தான்.. (இப்படித்தான் ஒவ்வொரு லவ்வரும் சொல்லிக்கறானுங்க.. )

4. நான் அடிக்கடி சொல்வேனே.. ஊரெல்லாம் அழகா இருக்கும், ஒருத்தன் மட்டும் அழுக்கா இருப்பான்னு அது இவன் தான்.. (ஆஹா என்னமா இண்ட்ரோ கொடுக்குது பொண்ணு..?)

5. நீ என்னடி  படிக்கறே?

 ஆமா, சொன்னா மட்டும் புரிஞ்சிடவா போகுது?

6. காக்கா எச்சம் போட்டா நினைச்ச காரியம் நடக்கும்..  (அட ஈனப்பயலுகளா.. அது தினமும் தாண்டா எச்சம் போடுது...?டெய்லி அதன் கீழ் போய் நின்னுக்கிட்டா காரியம் சக்ஸஸா?)

7.  அம்மா.. அடுத்த ஜென்மத்துலயாவது உனக்கு நல்ல புருஷன் கிடைக்கட்டும்.. 

8. அவன் பண்றது கேனத்தனமா இருந்தாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு.. 

9. நான் உன் கூட பேசுனது சாதாரண விஷயம்....உடனே லவ்ங்கறதா?

ஆனா எனக்கு அதுதான் விஷயமே.. 

10. பொண்டாட்டிங்க எல்லாரும் புகுந்த வீட்ல இருக்கறப்ப பழைய பாத்திரம் மாதிரி  இருப்பாங்க,ஆனா பிறந்த வீட்டுக்கு வந்துட்டா மட்டும் பளிச்னு ஆகிடறாங்களே அது எப்படி?

11. நடந்தது நடந்து போச்சு.. 

ஆமா.. நடக்காதது ஆட்டோல போச்சு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-nkyvXbHdRYB_uYJMJX3jcp32bON5N4dVGnE7Pwe7KZaXnDq7DKHGfpfsnnbk2pAI1cLYV7H58xUqExaKlhGPOQ7NjGAQKD379x8AAQJ1Vf9FRiynlVV0_RYFYPL6eNo_sYoDKKGpJ2E/s1600/Suhasini+Hot+In+Pillaiyar+Theru+Kadaisi+Veedu+%25281%2529.jpg

12. நட்பு, வீடு 2ம் தானா அமைஞ்சது,நீ மட்டும் தான் நானா தேடி கிடச்சது..

13. ஆண்டவன் சில சமயம் கெட்டவங்களுக்கும் நல்லது பண்ணிடறானே?

14. இவருக்கு ரொம்ப நல்ல மனசுங்க.. என்ன ,அறிவு தான் கொஞ்சம் கூட இல்லை..

15. ஒருத்தன் சாகப்போறான்னு தெரிஞ்சும் மேரேஜ் பண்ண  ஓக்கே சொல்றியேம்மா.. உன்னை நினைச்சா..... 

16. இந்த ஊர்ல எங்கண்ணன் ஏகப்பட்ட நல்லது பண்ணி இருக்கார்.. அவர் செஞ்ச நல்லதுகளை சொல்லிட்டே போகலாம்.. அவ்ளவ் ஏன்? கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆகியும் நோ சைல்டு.. இப்போ அவ 4 மாசம் முழுகாம இருக்கான்னா அதுக்கும் எங்கண்ணன் தான் காரணம்..(அண்ணன் பேரு ராம்சாமியா?)

17. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?

தெரியலை.. இது வரைக்கும் அதுக்கான அவசியம் வர்லை..

18. மனசுல இருக்கறதை நாம சொல்லாமலேயே தெரிஞ்சுக்கறது 2 பேர் தான் 1. அம்மா 2.சாமி..

19.  நீங்க தண்ணி அடிப்பீங்களா?

எப்பவும் அடிக்க மாட்டேன்.. சந்தோஷமா இருக்கறப்ப, மூடு அவுட்டா இருக்கறப்ப.. அடிப்பேன்..

=இதுக்கு பேசாம டெயிலி தண்ணி அடிப்பேன்னு சொல்லி இருக்கலாம்.. 

20. எல்லாரும் கல்யாணத்துக்கு போய் இருக்காங்க..

எதுக்கு? சாப்பிடவா?

21.  காதல் ஒண்ணும் பஸ் இல்லை.. 50 பேர் 60 பேர் ஏத்திக்க.. அது கேரியர் இல்லாத சைக்கிள் மாதிரி.. ஒருத்தருக்கு மேலே ஏத்தவே முடியாது.. 

அடத்தூ.. பஞ்ச் டயலாக்..?

22.என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா?

ம்ஹூம்..

அப்புறம் என்ன தைரியத்துல  ஓ சி கட்டிங்க்க்கு ஷேர்க்கு வர்றே?

பசங்க சொல்வாங்க.. நல்ல காரியம் பண்ணப்போறப்ப ஒரு கட்டிங்க் போட்டுட்டு போனா நல்லதுன்னு.//..

23.  பாக்கெட்ல காசும்,. உடம்புல தெம்பும் இருந்தா 10 பொண்டாட்டிங்க கூட கட்டிக்கலாம்... (நல்லவேளை.. பொண்ணுங்களை இதுல சேர்க்கல.. )

24. இந்த உலகத்துல எந்த ஆம்பள தப்பு பண்ணாம இருக்கான்? 

25.  ஒரு பேஷண்ட்டை காப்பாற்ற ஹாஸ்பிடல், பணம் மட்டும் போதாது..

. ( ஏன்?அழகிய நர்சும் வேணுமா?ராஸ்கல்.. பாடைல போறப்பக்கூட பருவச்சிட்டு கேட்குதா..?)

ஹீரோயின் புதுமுகம் போல ,பேரு சுஹாசினியாம்..சுமாரா இருக்கு ஃபிகரு,.. 

http://www.metromasti.com/galleryImage,650,wmi%7C2.png%7CC%7C60%7C20%7C20%7C,wmi%7Csimgw.png%7CBC%7C%7C0%7C100%7C,,khushi/2011-04-02/Kollywood/Event/Pillaiyar%20Theru%20Kadaisi%20Veedu%20Movie%20Audio%20Launch%20Gallery/Pillayar-Koil-Kadaisi-Theru-Audio-Launch-Gallery-16.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

 1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல கிராமத்து சிறுவர்கள் வாய்க்கால்ல பாய்ந்து ஜம்ப் பண்ணும் கவிதையான காட்சி..

2. காதலி கடவுள் பற்றி பேசியதும், பத்தே நிமிடத்தில் ஆல விழுதுகளை, 2 எலுமிச்சம்பழங்களை (கண்கள்) வைத்தே ஒரு விநாயகர் சிலை ரெடி பண்ணும் காட்சி.. ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஒரு சபாஷ்..

3. ஹீரோயினுக்கு கேன்சர் என ஹீரோ நினைத்துக்கொண்டிருக்கும்போது ஹீரோவுக்குத்தான் கேன்சர்,என ட்விஸ்ட் வைத்த விதமும்,அதைத்தொடர்ந்து வரும் ஹீரோ- ஹீரோயின் சந்திப்புகளும்..

4. எனக்கு ஒரு தேவதையை மெலோடி பாட்டை கையாண்ட விதம்.. 

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ சைக்கிள்ல 12 கிமீ ஸ்பீட்ல போறார். அதை துரத்தும் போலீஸ் ஜீப் 75 கிமீ ஸ்பீடுல போகுது,ஆனா ஹீரோவைப்பிடிக்க 13 நிமிஷம் ஆகுது.. என்னா லாஜிக் இது?

2. ஹீரோவுக்கு வந்திருக்கும் கேன்சர்க்கு டாக்டர் சொல்ற டெக்னிக்கல் பேரையேதான் 180 (நூற்றி எண்பது) படத்து ஹீரோவுக்கும் அந்த டாக்டர் சொல்றாரு.. என் டவுட் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடுச்சா? அல்லது 2 பேரும் ஒரே டி விடில சுட்டுட்டீங்களா?

3. டைட்டிலில் பொள்ளாச்சி பொன்னாவரம் என கதைக்களன் நடக்கும் ஊரைக்காட்டுகிறார்கள் ,ஆனால் பேசும் மொழி நடை (ஸ்லாங்க்) அந்த ஊர் போலவே இல்லையே?

4. ஹீரோ இறந்துட்டதும் டக்னு படத்தை முடிக்காம மெகா சீரியல் ரேஞ்சுக்கு ஏன் சடங்குகளை எல்லாம் காட்டி இழுக்கனும் படத்தை?

http://2.bp.blogspot.com/-LX8ePYh34mA/TZN-lwi0t7I/AAAAAAAAPPs/QQyJj4S9QQ0/s1600/pillaiyar_theru_kadaisi_veedu_audio_launch_06.jpg


இந்தப்படம் எல்லா செண்ட்டர்லயும் சுமாரா 20 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

சி. பி . கமெண்ட் - டி வி சீரியல் ரசிகைகள் பார்க்கலாம்

ஈரோடு தேவி அபிராமி,ஆனூர் 2 தியேட்டர்களில்  படம் ஓடுது.. நான் எந்த தியேட்டர்ல பார்த்திருப்பேன்னு எல்லாருக்கும் தெரியும்..என் பொண்ணு பேரு இருக்கற தேவி அபிராமி தியேட்டர்ல தான் பார்த்தேன்..

Monday, June 27, 2011

என் அழகை வைத்தே பல கவிதைகள் தேற்றி விடுகிறாயே? எப்படி?

1.நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு #ஈரோடு என் கே கே பி ராஜா மீது அம்மாவுக்கு என்ன கோபமோ?

------------------------------

2. டீசல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக் : லாரிகள் நாளை ஓடுமா? #டீசல் அடிச்சுட்டு ஓட்டுனா ஓடும்,லபோ திபோன்னு அடிச்சுக்கிட்டு இருந்தா ஓடாது

-----------------------

3. காதலன் வீட்டு முன்பு தீக்குளித்த பெண் பலி#அப்டியே காதலனையும் கட்டிப்பிடிச்சு கரை சேத்தி இருக்கலாம்

---------------------

4. எஸ்.ஐ.,யை தரக்குறைவாக பேசியதால் பரபரப்பு#அவர் என்ன அரசியல்வாதியா?எப்படி பேசுனாலும் போனாப்போகுதுன்னு விட?

---------------------

5. ஓட்டலில் சாப்பாட்டிற்கு அப்பளம் வைக்காததால் ஆவேசம்  10 பேர் கைது#அடடா அப்பளம் சாப்பிட ஆசைப்பட்டு இப்படி ஜெயில்ல களி சாப்பிடறாங்களே?

--------------------

6. மகனை நினைத்து அடிக்கடி அழும் கனிமொழி: சிறை அதிகாரி தகவல்#மகனையும் உள்ளே அனுப்பிடலாமா?அப்பா மட்டும் போதுமா?

--------------------

7. கும்பகோணம்:அண்ணியின் விரலை கடித்த வாலிபருக்கு வலை#மாறுபட்ட கோணத்துல சிந்திச்சு இருக்கார் போல..

---------------------


8. விஜய்யின் போக்கிரி பட தயாரிப்பாளர் கைது!#விஜய்யை  வெச்சு படம் தயாரிச்சா அவ்வளவு பெரிய சமுதாயக்குற்றமா? அவ்வ்வ்

-------------------

9. ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்: சல்மான் வாழ்த்து!#நல்ல மனம் வாழ்க ,நாடு போற்ற வாழ்க

---------------------

10சீதையாக நடிப்பதால்,  பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்துள்ளார் நடிகை நயன்தாரா.#ஆமாமா,முதல் ராமரை நினைச்சு 2வது ராமரை அவாய்டுபண்றாரோ?

----------------------------

11. "ஐ லவ் யூ அண்ணா". என ஒரு ஃபிகர் அழைத்தால் பயம் தேவை இல்லை,உங்கள் பெயரை அண்ணாமலை என மாற்றுக#விடாக்கண்டன் விமல்ராஜ்

---------------------

12.ஆ.ராசாவை விசாரிக்க சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை#இது ஜெ வின் பழி வாங்கும் நடவடிக்கை-கலைஞர் புலம்பல்@இமேஜினேஷன்

-----------------------

13.அண்ணா என ஒரு ஃபிகர் அழைத்தும் ஒருவன் கவலைப்படவில்லை என்றால் அந்த ஃபிகர் கேரளத்துப்பைங்கிளியாக இருக்கும்

--------------------

14. சின்ன விஷயத்தை பெரிசாக்கி நமக்கு தொந்தரவு தர்றவங்க 1.நம்ம சம்சாரம் 2.சினிமாவில் நடிகைகள்#நோ உள்குத்து

--------------------



15. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி- ஹன்சிகா மோத்வானி#அப்புறம் ஏன் நயன் தாரா உங்களை சக்களத்தின்னு வையறாங்க?ஒரு வேளை கண்ணன் மாதிரியோ?

--------------------

16. ட்விட்டரில் உன்னால் ஐலவ்யூ சொல்ல முடியுமா? என சவால் விட்டாள்.ஏன் முடியாது என்றேன்.140 க்குள் முடிக்கவேண்டும் எப்படி 143 முடியும்?என்றாள்

---------------------

17. எனக்காக காத்திருப்பது உனக்கு போர் அடிக்கவில்லையா? என்றாள் காதலி.உன் சமீபத்தைவிட எனக்கு அதிகபோதை தருவது உனக்காக காத்திருக்கும் தருணங்களே

--------------------

18. கணினியுகத்தில் எந்த கிறுக்கனாவது காதலியின் ஃபோட்டோவை மணிபர்சில்வைத்திருப்பானா?என்றாள் காதலி.எந்த யுகத்திலும் காதலியின் முகம்தானே சுகம்?

---------------------

19. காதலியிடம் 143 என்றேன்.இப்போதைக்கு உங்கள் எண்ணத்தை 356 என்றாள்.நான் என்ன 420யா? என்றேன்#அக்கவுண்டன்ஸி கேர்ள் லவ்

-----------------------------

20. என் அழகை வைத்தே பல கவிதைகள் தேற்றி விடுகிறாயே? எப்படி? என்றாள் காதலி.உன்னையே தேற்றிய எனக்கு கவிதைகளை தேற்றுவதா கஷ்டம்? என்றேன்

அன்பே.. உன் அதீதஅன்பு என்னை மிரள வைக்கிறது

1.நீ என்னை காயப்படுத்தி விட்டாய்,இதில் என்ன விசித்திரம் எனில் காயத்துக்கு மருந்தே நீ தான்.

------------------------

2. உணர்ச்சி வசப்பட்டு நான் வார்த்தைகளை கொட்டுவதில்லை,உணர்ச்சிகள் மாறி விடும்,ஆனால் பேசிய வார்த்தைகள் மாறாது.. 

--------------------

3.  சேலை எடுக்கும் கணவன் மெல்லிய  எடை குறைந்த சேலையாக எடுத்தால்வீட்டில் துவைக்கும் பணி கணவனுடையதாக இருக்கும்

---------------------

4.  என்னைப்புரிந்து கொள்வாயா?இல்லை,பிரிந்து கொல்வாயா?முடிவெடுக்கும் அதிகாரம் உன் கையில்,ஏற்றுக்கொள்ளும் அன்பு என் மனதில்#அப்ளிகேஷன்

---------------------

5. நான் கேட்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்வதே இல்லை என என்னுடன் ஊடல்கொண்டாள்.அப்போதுதான் ஏன்? ஏன்? என பேசிக்கொண்டே இருப்பாய் என்றேன்


 ---------------------



6. கொடுத்து கொடுத்து சிவந்த அதரங்கள் என்னுது,வாங்கினால் வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என்ற இங்கிதம் இல்லாத உதடுகள் உன்னுது#கிஸ்ஸாலஜி

--------------------

7. இன்றுடன் நம் காதல் செத்துப்போய்  12 ஆண்டுகள் ஆகின்றன.நீயும், நானும் தனித்தனியே இருக்கிறோம்.வாழ்கிறோமா?

---------------------------

8. கூட்ட நெரிசலில் பஸ்ஸில் கண்டக்டர் முன்னும்பின்னும்  எரிச்சலுடன் அடிக்கடி சென்று வருவதைப்போல என் நினைவுகள் உன் ஊடல் தருணங்களைதொட்டுத்தொட்டு வருகிறது..

----------------------------

9. உன் அதீதஅன்பு என்னை மிரள வைக்கிறது,வாங்கிய கடனை வட்டியுடன் கட்ட இயலாத ஏழை அசலையாவது கட்ட ஏங்குவது போல் கிடைத்த அன்பை உன் மீது செலுத்த துடிக்கிறேன்

--------------------

10.  கல்நெஞ்சக்காரியடி நீ.அதனால் தான் உன் முடிவை மறு பரிசீலனைக்கு நான் கோரிக்கையே விடுக்கவில்லை.நேசிப்பு என்பது இதயம் உள்ளவர்களூக்குமட்டும்

------------------------

நெல்லை பதிவர் சந்திப்பு கடைசி பாகம் -பாகம் 6



பண்டிகைகளும், விழாக்களும் மக்களின் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டவை.வீட்டில் ஏதாவது சண்டை,கணவன்,மனைவிக்குள் ஊடல் என்றால் இந்த மாதிரி விழாக்காலங்களில் உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் சும்மானாச்சிக்காவது தம்பதிகள் சந்தோஷமாக முகத்தை வைத்துக்கொள்வார்கள்.. அந்நியோன்யமாய் இருப்பது போல் காட்டிக்கொள்வார்கள்.. பிறகு அதுவே தொடர் கதை ஆகிவிடும்..

இது போன்ற உயரிய காரணங்களுக்காகவும்,மனித நேயம் வளர்வதற்காகவும்,உறவுகள் மேம்படுவதற்காகவும் உருவாக்கப்பட்டவைதான் விழாக்கள்..ஊர்த்திருவிழா என்றால் வியாபாரிகளுக்குக்கொண்டாட்டம்.. சுபச்செலவாக இருப்பதால் யாரும் அது பற்றி கவலைப்படுவது இல்லை.. 

பிரபலமான எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்க ஆர்வமாக இருப்பதும், சந்திப்புக்குப்பின் அவன் மனம் ஏமாற்றம் அடைவதையும் நான் கண்டிருக்கிறேன்..  காரணம் அவன் படித்த எழுத்து மூலம் அவனுக்குள் ஒரு கற்பனை  பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பான்.. 

நேரில் சந்தித்து உரையாடிய பின் அவன் கற்பனைகள் தவிடுபொடியாகும்..அவன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எழுத்தாளனின் முகம் வெளிப்படும்போது அவன் ஏமாற்றம் அடைகிறான்...

ஆனால் பதிவர் சந்திப்பில் யாரும் அதிகமாக எதிர்பார்த்து வரவில்லை.. ஒவ்வொரு பதிவரின் எழுத்தை மட்டுமே பார்த்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்ட கேரக்டர்?பழகுவதற்கு எந்த மாதிரி ஆள் என்பதை கண்கூடாக காண முடிவதால் சந்திப்புக்கு பிறகு உறவு பலப்படும் வாய்ப்பே அதிகம்.. 


எல்லா பதிவர்களூம் பேசி முடித்த பின் ஒரு நன்கொடை வசூலிக்கப்பட்டது.. பதிவர்கள் மனம் உவந்து பணம் கொடுத்தனர்.. இதில் சித்ராவும் ,பலாப்பட்டறை சங்கரும் அதிகமான பணம் கொடுத்தனர்.. நான் 100 ரூபாய் கொடுத்தேன்..

மொத்தம் 37 பதிவர்கள் வந்திருந்தனர்.. சராசரி ஆளூக்கு ரூ 50 டூ 100 தருவாங்க, அதிக பட்சம் ரூ 3000 கலெக்ட் ஆகும் என நினைத்தேன்.. ஆனால் ரூ 5615 கலெக்ட் ஆச்சு.. ஆச்சரியம் தான்.. இதில் நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி யாரோ ஒரு பதிவர் ஏழ்மை நிலையையும் மீறி ரூ 15 நன்கொடையாக கொடுத்ததுதான் விழாவின் ஹை லைட்..அப்போதுதான் நான் நன்கொடை இன்னும் அதிகமாக கொடுத்திருக்கலாமோ என வருந்தினேன்..

ஒவ்வொரு மனிதனும் அவசரமாக ஒரு செயலை செய்தி முடித்து விடுகிறான்.. பிறகு காலம் எல்லாம் அதை அப்படி செய்திருக்கலாமோ?இதை இப்படி செய்திருக்கலாமோ என நினைத்து நினைத்து வருந்துகிறான்.. இது இயற்கை.. மனித மன விசித்திரம்..

சும்மா வந்து சந்தித்தோம், சிந்தித்தோம் என வாய் வார்த்தைக்காக இல்லாமல் ஏதோ உபயோகமாக செய்த திருப்தி அனைவர் உள்ளத்திலும்..

பதிவர் மீட்டிங்க் முடிந்ததும் சாப்பாடு...


பஃபே சிஸ்டம்..ஒரு ஆள்க்கு ரூ 160 செலவு (உபயம் அண்ணன் உணவு உலகம்).

செம கலக்கலான சைவ சாப்பாடு..


முதல்ல ஒரு சூப் குடிச்சோம்.. அப்புறம் நாண் ரொட்டி ,குருமா , பிறகு வெஜ் ஃபிரைடு ரைஸ்.. தயிர் பச்சடி..

அப்புறம் நார்மல் ஒயிட் ரைஸ் ,ரசம், தயிர்.. அப்பளம், மாங்காய் ஊறுகாய்  என வெளுத்து வாங்கினோம்..

இந்த சாப்பாட்டை செம எஞ்சாய் பண்ணி சாப்பிட்டது இம்சை அரசன் பாபு,வெறும்பய ஜெயந்த்,கல்பனா ,நாஞ்சில் மனோ சாரி லேப்டாப் மனோ இந்த செட் தான்.. ஊஞ்சல்ல உக்காந்துட்டு ஜாலியா பேசிக்கிட்டே கிண்டல் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டாங்க.. அவங்க என்ன பேசுனாங்க, என்ன கமெண்ட்ஸ் பண்ணாங்க என்பது எல்லாம் இங்கே சொன்னா அது ரொம்ப நீளம் ஆகிடும்.. ஏற்கனவே பதிவை சீக்கிரம் முடிடா ரொம்ப இழுக்காதே என ஏகப்பட்ட மிரட்டல்கள் வருவதால் அவை கட்..

பாபு வும் ,மனோவும் கல்பனாவை மிரட்டி (அன்பு மிரட்டல்) அதை வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வா என அதிகாரம் செஞ்சாங்க.. ஏன்னா இவங்க போனா அடிக்கடி வர்றானே அப்டின்னு இமேஜ் ஸ்பாயில் ஆகிடுமாம்.. 

நாய்க்குட்டி மனசு,சித்ரா,கவுசல்யா இவங்க ஒரு செட்.. டேபிள்ல உக்காந்து சாப்பிட்டாங்க..


பலாபட்டறை சங்கர்,மணிஜி,மணிவண்ணன் ,வலைச்சரம் சீனா,வெடிவால் இவங்க எல்லாம் ரொம்ப நாசூக்கா சாப்பிட்டாங்க..

ஜோசஃபின் அவர் கணவர் கூட  ஸ்டேண்டிங்க்லயே சாப்டாங்க.. அவர் மனைவிக்கு ரொம்ப தான் மரியாதை செலுத்துனார்.. லவ் ஜோடி போல.. நான் கேட்டேன்.. என்ன சார் உக்காந்து சாப்பிடலியா?ன்னு , அதுக்கு அவர் அது எப்படிங்க மனைவிக்கு எதிரே மரியாதை இல்லாம அமர்வது என்றார்..  ஹூம்.. நல்லவேளை.. என் மனைவியை அழைத்து வரவில்லை என நினைத்துக்கொண்டேன்..

நான் நின்னுட்டே தான் சாப்பிட்டேன்.. ஒரு இடத்துல உக்காந்து சாப்பிட்டா எல்லாரையும் நோட் பண்ண முடியாதே?

சாப்பிட்டு முடிச்ச பிறகு எல்லாரும் குரூப் குரூப்பா ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்..காலேஜ் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி ஒரு ஃபீலிங்க்..

இறுதி நிகழ்ச்சியா சித்ரா எல்லா பதிவர்களூக்கும் ஸ்வீட் பாக்கெட் குடுத்தாங்க.. உணவு உலகம் அண்ணன் தான் அவங்க கிட்டே நீங்க கொடுங்கன்னு வேண்டுகோள் விடுத்தார்.. அப்பவே என் மைண்ட் 37 பதிவர்களுக்கு அல்வா கொடுத்த ஃபாரீன் பதிவர் சித்ரா.. பதிவுலகம் அதிர்ச்சி அப்டின்னு டைட்டில் வெச்சுடலாமா?ன்னு யோசிச்சுது..

சித்ரா கிட்டே பர்மிஷன் கேட்டேன்.. தம்பி.. நீ பதிவர் சந்திப்பு போஸ்ட்டையாவது எந்த கோணங்கித்தனமும் பண்ணாம உருப்படியா எழுதப்பாரு அப்டின்னாங்க.. ஆஹா.. சி.பி போற பக்கம் எல்லாம் பல்பு வாங்கறானே அப்டின்னு நினைச்சுட்டு டைட்டில் ஐடியா கேன்சல்..ஓக்கே அக்கா அப்டின்னுட்டேன்..

அப்புறம் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு பிரியா விடை பெற்றோம்.. ( நல்ல வேளை பிரியாங்கற பேர்ல எந்த பதிவரும் இல்லை)


அப்புறம் நான் ,லேப்டாப் மனோ, கோமாளி செல்வா ,லேப் டாப் மனோ மேல நம்பிக்கை இல்லாம அவரோட சம்சாரம் ( தாலி கட்டிய முதல் மனைவி ) பாடிகார்டா அனுப்பின மனோவின் மச்சினன் 4 பேரும் குற்றாலம் போய் வந்தோம்.. அது தனியாக பின்னொரு நாளில் குற்றாலத்தில் கும்மி அடிச்சோம் என்ற தலைப்பில் பதிவு போட்டுக்கலாம்..

இப்போதைக்கு நெல்லை பதிவர் சந்திப்பு போஸ்ட் இனிதே நிறைவு பெறுகிறது.. வாழ்க வளமுடன்,, வாழ்க வையகம்..

டிஸ்கி - பதிவர்சந்திப்புக்கான வீடியோ இணைப்பு கிடைத்தால் அண்ணன் உணவு உலகம் அனுமதியுடன் அதை பதிவாக போடலாமா? என யோசித்து வருகிறேன்..  ..

உதயன் -சந்தானத்தின் காமெடிக்காக - சினிமா விமர்சனம்

http://indiatheatres.com/MovieStills%5CUdhayan(1).jpga

10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 10,000 ரூபாய்க்கு மட்டுமே நடிக்கும் ஹீரோ,20 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய்க்கு நடிக்கும் ஓவர் ஆக்டிங்க் ஹீரோயின்  இவங்க ரெண்டு பேரும் இணைந்தா எப்படி இருக்கும்?அது தான் உதயன்.. அரசியல் வாழ்வில் மட்டும் அல்ல, சினிமா வாழ்விலும் கலைஞருக்கு ,அவர் குடும்பத்தார்க்கு இறங்குமுகம் ஸ்டார்ட்டட் என்பதை உணர்த்த வந்த படம்....

சிங்கிள் ஆக்ட்டுக்கே ஃபீலிங்க்ஸ் காட்டத்தடுமாறும் ஹீரோவுக்கு இதில் டபுள் ஆக்‌ஷன்.. அண்ணன் தானும் சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்தறார்... 2 கேரக்டருக்கும் என்னா வித்தியாசம்னா தாதா ஹீரோ பான்பராக்கோ வெற்றிலையோ போட்டிருப்பார்.. சாதா ஹீரோ டிரஸ் மட்டும் போட்டிருப்பார்.. ஹி ஹி ..


படத்தோட கதை என்னான்னா.. 2 தாதா கோஷ்டி... (அய்யய்யோ.. மறுபடி தாதா கதையா? வுடு ஜூட்.. )  ஒரு தாதா கோஷ்டில ஹீரோயின் அப்பா கணக்குப்பிள்ளை... இன்னொரு தாதா கோஷ்டில ஹீரோவோட அண்ணன் (இவரும் ஒரு ஹீரோ தான் )2 கோஷ்டியும் மாற்றி மாற்றி அடிச்சுக்குது.. இதெல்லாம் இடைவேளைக்குப்பிறகுதான்.. அதுவரை ஹீரோ ஹீரோயின் லவ் காட்சிகள், சந்தானம் காமெடி காட்சிகளை வெச்சு ஒப்பேற்றப்பார்த்திருக்காங்க.. ..ஹூம்... 

60 மார்க் ஃபிகரை 80 மார்க் ஃபிகர் ஆக்கும் ரசவாத வித்தையை ஆடை வடிவமைப்புக்கலைஞரும்,முக ஒப்பனைக்கலைஞரும் பிரமாதமாக கற்றுத்தேர்ந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு ஒரு சபாஷ்.. ..ஹீரோயின் முகத்தைபார்த்துக்கொண்டே இருக்கலாம்.. சோ க்யூட்.. ஆனா பாப்பாவுக்கு ஓவர் ஆக்‌ஷன் தான் வருது.. 

டபுள் ஹீரோ இருந்தும் அவர்களை ஓவர்டேக் செய்து சிங்கிள்மேன் ஆர்மியாக அசத்துவது நம்ம சந்தானம் தான்.. பாம்பு பிடிப்பவராக  டி வி கேமராமேன்களோட அவர் அப்பார்ட்மெண்ட்க்கு வரும் பில்டப் சீன்கள் செம காமெடி ரகளை கச்சேரி.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7Tz5rh9HRS-3PBw_FWJZnEyQq_NPyq3Pn1EqbVJMlHdl8oONmQaEBbKD0AIbqTMXcUYtEH36zq_uVMXq7QImVfZYM6fGplElBaEL9QP_s8L4LMNIrUxNEpv_SfatCchxePUWLdrZ-EfSt/s1600/Pranitha-+Cute-+Stills+-In-+Udhayan-+Movie-008.jpg



சந்தானம் காமெடியில் பின்னிப்பெடல் எடுத்த காட்சிகள்..

1. எதுக்காக மறுபடியும் அங்கே போய் திரும்பி எண்ட்ரி கொடுக்கறீங்க?


சந்தானம் -  ஹி ஹி பில்டப்ல பேண்ட் ஜிப் போட மறந்துட்டேன்..

2. சந்தானம் - பாம்பை பிடிக்க பரபரப்பா போறேன்.. எதுக்கு கேமராவை முன்னால கொண்டு வர்றீங்க?.. இந்த கீரித்தலையனை கூடவே கூட்டிட்டு போறேன்.. பாம்பை பயமுறுத்த உதவுவான்..

3. சந்தானம் -  அவன் என்ன அபிஷேக் பச்சனா?க்ளோஷப்ஷாட் வைக்க?

4. சந்தானம் -  அடேய்.. பாம்புக்கு எதுக்கு பால், முட்டை இதெல்லாம்? அதென்ன ஜிம்முக்கா போகுது?

5. சந்தானம் -  அடப்பாவிகளா.. இந்நா வரைக்கும் பூட்டாத கதவையா நம்பிட்டு இருந்தீங்க..?நீங்கள்ளாம்......

6. ஹீரோ- சாரி. மிஸ்.. நீங்க ரொம்ப அழகு.. வண்டியை இடிச்சா திரும்பி பார்க்கறீங்க.. அதுக்குத்தான் அடிக்கடி இடிச்சேன்.. அடிக்கடி உங்க முகத்தை பார்க்கலாமே..?

7. ஹலோ.. இப்போ நீங்க என்ன டிரஸ் போட்டு இருக்கீங்க?

சந்தானம் - ம் ,அழுக்கு பனியனும்,கிழிஞ்ச லுங்கியும் போட்டிருக்கேன்.. பேசுதுங்க பாருங்க.. ஃபோன்ல..

8. சந்தானம் -  சரி சரி.. போடா.. பேண்ட் சர்ட் உனக்கு ஓசி கொடுத்தவன் உன்னை தேடுவான்.. இவரு பெரிய மிஸ்கின் பாரு.. கூலிங்க் க்ளாஸ் போடாம வெளீல வரவே மாட்டாரு.. 

9. ஹீரோ -  இது யாரு ஆண்ட்டி..? உங்க தங்கச்சியா? ஓ சாரி உங்க மகளா?

10. ஹீரோயின் - ஆம்பளைங்களூக்கு உடனே கிடைச்சுட்டா அதனோட அருமை தெரியாது.. ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்க.. 

11. மிஸ்.. உங்க பேரென்ன? 

------------------------

ஓ , ஊமையா? சாரிங்க... 

அய்யோ.. என் பேரு பிரியா.. 

12. இப்போ பாருடி.. என் சர்ட் பட்டன் மேல் பட்டனை ஒண்ணு மட்டும் கழட்றேன்.. லோன் சாங்க்‌ஷன் ஆகிடும் பாரு.. ( ஓப்பன் யுனிவர்சிட்டி ஓமனா வாழ்க)

13. சந்தானம் -  மேடம், உள்ளே ஏ சி ஒர்க் ஆகலையா? ஏன் பட்டனை கழட்டி விட்டிருக்கீங்க?

ஸ்டுப்பிட்.. 

டவுட் கேட்டா ஏன் திட்டறீங்க?
14.  என்னப்பா இது சொல்லாம கொள்ளாம வந்திருக்கே?

சொல்லாம வந்தா சர்ப்பரைஸ்.. சொல்லிட்டு வந்தா அது மீட்டிங்க்.. 

15. அவ பேரு கூட என்னமோ வர்றியா? போறியா?ன்னு வருமே.. ம் பிரியா.... 


http://movies.vinkas.in/files/2011/06/pranitha-stills.jpg

16. சின்னப்பையன் - அங்க்கிள், எங்க கூட விளையாட வர்றதா சொன்னீங்க?

சந்தானம் -  அது உங்கக்கா கூட இருக்கறப்ப சொன்னது.. இப்போ நீ தனியாத்தானே இருக்கே?

17. சந்தானம் -  கோணியை திட்டுனா சாணிக்கு ஏன் கோபம் வருது?

18. சந்தானம் -  இந்த பொண்ணுங்க எல்லாம் சாக்கு மூட்டைல கால் விட்டு தத்தி தத்தி வர்றாங்க பாருங்க.. இந்த கேமை நிமிர்ந்து பார்த்தா  தெரியாது.. குனிஞ்சு பார்த்தாதான் தெரியும்.. 

19. எத்தனை  பேர் இருந்தாலும் அந்த கூட்டத்துல  பொண்டாட்டி வாசனை புருஷனுக்கு தெரிஞ்சிடும்.. 

20. ஸாரி.. மேடம்,,. நான் வேணும்னு பண்ணலை.. தெரியாம இடிச்சுட்டுது..

இல்லை.. நான் வேணும்னுதான் இடிச்சேன்... ( ஆஹா பெண்ணுக்கு சம உரிமை)

21. சாரி சார்.. யாரும் சாகலை.. சுடுகாடு காலி.. அதனால டியூ கட்ட முடியல.. 

22. ஏய்.. வசந்த்.. நீயா!!!!!!!!!!!

ஏன்? வேற யாரையாவது எதிர்பார்த்தியா?

அது இல்ல.. வீட்டுக்குள்ள எப்படி வந்தே?

வாசல் வழியாத்தான்... 

23. ஹலோ.. பூசாரியா? நீங்க மந்திரிச்சதுல இருந்து என் பொண்ணு ராத்திரில உளர்றதில்லை.. 

வெரிகுட்..
பகல்லயே உளற ஆரம்பிச்சுட்டா.. 

24. சந்தானம் -  வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களைவிட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போறபொண்ணுங்க அதிகம்

25. வோட்கா சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது. 


சந்தானம் -  மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்தெரியுமா உங்களுக்கு? 

26.  சந்தானம் -  நீயும் சிங்கிள்,நானும் சிங்கிள்.. ஒய் டோண்ட் வீ  கெட் மிங்கிள்?

27. சந்தானம் -  கல்யாணம் பண்ணிக்கறியா?ன்னு கேட்டதுக்கு ஏன் இந்த கத்து கத்தறா?கற்பழிச்சிருந்தாக்கூட இப்படி கத்தி இருக்க மாட்டா.. போல.. 

28. ஹீரோ - ஹாய்.. ப்ரியா.. நீ பக்கத்துல இருந்து பார்க்கறதை விட தூரத்துல இருந்து பார்க்கறப்பத்தான் அழகா தெரியறே!!


அப்படியா? அப்போ நான் கிளம்பறேன்.. என்னை தூரத்துல இருந்தே ரசிச்சுக்கோ..

29. சந்தானம் - எதுக்கு இத்தனை பொண்ணுங்க? இவங்க எல்லாம் யாரு?

எல்லாரும் என் ஒயிஃப்ங்க தான்.. ஹவுசிங்க் லோன் வாங்கி கட்னதால எல்லாரும் ஹவுசிங்க் ஒயிஃப் ஆகிட்டாங்க.. 

30. சந்தானம் -  டேய்.. உன் கிட்டே கரண்ட் இருக்கறதால தானே லோன் வாங்கி லோன் வாங்கி வீடு கட்டறே..?ஃபீஸ் பிடுங்கிட்டா?

எப்படி பிடுங்குவீங்க..?

இப்படி உதைச்சுத்தான்

அய்யோ.....




http://telugu.go4wallpapers.com/bollywood_babes33/P/Praneetha/PRANEETHA151110a.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ சின்னப்பையன்கிட்ட ஐஸ்க்ரீம் குடுத்துவிட்டு அதை ஹீரோயினிடம் தரச்சொல்ல அவன் அவனோட ஆள் சிறுமிக்கு அதை தருவது சோ க்யூட் சீன்.. 

2. ஹீரோயின் காதல் வசப்பட்ட முதல் நாள் ஹீரோவின் ரூமில் உடை மாற்றும்போது ஹீரோவின் ஃபோட்டோவை தன் துப்பட்டாவால் மூடும் இடம் கவிதை.. 

3.  இத்தனை நாளாய் எங்கே இருந்தாய் பாடல் காட்சிகளில் காமிரா கோணங்களும் , ஹீரோயின் முக அழகை 100%  மெருகேற்றி காட்டியதும்.. 

4. அபார்ட்மெண்ட்சில் ஹீரோ,ஹீரோயின், சிறுவர் ,சிறுமிகள் கண்னாமூச்சி ஆட்டம் ஆடும்போது வரும் பின்னணி இசை

5. டூயட் சாங்க்ஸ் தவிர ஹீரோயினை பிரமாதமான அழகுடன் கண்ணியமான உடைகளில் காட்டியது..  ( டூயட் சாங்க்ஸில் தடார் என கவர்ச்சி டிரஸ்ஸில் ஹீரோயின் வரும்போது மொத்தப்படத்திலும் மெனக்கெட்டு காட்டிய கண்ணியக்காதல் களங்கம் அடைகிறது)





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9cj6niB9z9RrfJSauXmGlKZjIfEkaXdyfrk494h8fzQveXcskW5mp03g96WCI6d1JHTcOHbRSmoycB3sQeSHjdfLbD8XdlqpCbcU1FAGsolZnMEOwsM1SeV53DgX3-uvouXFUnSUfCBc/s1600/Pranitha+new+Hot+Photo+Stills+%25285%2529.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.  ஒரு தனியார் வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் ஹீரோ இப்படித்தான் கலர் போன ஜீன்ஸ் பேண்ட்டும் ,டக் இன் செய்யாத சட்டையுமாக படம் பூரா வருவாரா? THE DRESSING SENSE OF THE HERO IS VERY BAD


2. டிராஃபிக்கில் மாட்டும் ஹீரோயின் நடி ரோட்டில் சாவதானமாக மேக்கப் போடறாரே  . அது எப்படி? எந்தப்பெண் அப்படி போடுது?

 3. ஹீரோவுக்கு முக உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தத்தெரிவதில்லை என்பதற்காக அவருக்கு படம் பூரா கூலிங்க் கிளாஸ் மாட்டி விட்டது.. 


 4. படம் பூரா கண்ணியமாக பாடல்களை நுழைத்தவர் திடீர் என யக்கா யக்கா லக்கா லக்கா மேல இல்ல கீழே இல்ல ஆதரிப்பார் யாரும் இல்ல என்ற மோசமான டப்பாங்குத்துப்பாடலை நுழைத்து படத்தின் தரத்தை குறைத்தது..




http://www.imageboxoffice.com/photos/1024-768/simg34d53c99263536.jpg

இடைவேளைக்குப்பிறகு வன்முறை  ஜாஸ்தி.. 

ஏ , பி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.. சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி .பி .கமெண்ட் - சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம் என நினைப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்

 ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்

பலரது வேண்டுகோளுக்கிணங்க  நாட்டுக்கு முக்கியமான தகவல்  ஹீரோ பெயர் - அருள் நிதி (வம்சம்),ஹீரோயின் பெயர் ப்ரனீதா (காஜல் அகர்வால் தங்கை)

டிஸ்கி - 1 வரி,வீட்டு மனை மற்றும் சட்ட சிக்கல்கள் கேள்வி பதில்கள்

டிஸ்கி 2 கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது ... 



Sunday, June 26, 2011

வரி,வீட்டு மனை மற்றும் சட்ட சிக்கல்கள் கேள்வி பதில்கள்



சொத்து வரிக்கும், செல்வ வரிக்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி-பதில்
1. ''சொத்து வரி, செல்வ வரி வேறுபாடு என்ன? விளக்க முடியுமா?''
அசோக்குமார், பென்னாகரம், தருமபுரி.

ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர், மனோகர் அண்ட் சவுத்ரி அசோசியேட்ஸ்.

'' பிராபர்டி டேக்ஸ்’ என்ற சொத்து வரி என்பது குறிப்பிட்ட சொத்து இருக்கும் பகுதியை பராமரிப்பு செய்யும் மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டும் வரி. இந்த வரி உள்ளாட்சி அமைப்பின் கணக்கில் ஏறிவிடும். அவை, இதைக் கொண்டுதான் சாலைகள், தெரு விளக்குகள் அமைப்பது மற்றும் பராமரிப்பு போன்ற வேலைகளை செய்கின்றன. 


செல்வ வரி என்பது ஒருவர் அளவுக்கு அதிகமான சொத்துகள் குவிப்பதைத் தடுக்கும் விதமாக வசூலிக்கப்படுகிறது. குடியிருக்கும் வீடு மற்றும் வாடகை வருமானம் வரும் வீட்டை தவிர்த்து சும்மா போட்டு வைத்திருக்கும் வீடு, மனை, தங்க நகைகள், கார் போன்றவற்றின்  மதிப்பு, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 'வெல்த் டேக்ஸ்’ என்ற செல்வ வரி கட்ட வேண்டும். இது மொத்த சொத்து மதிப்பில் 1% விதிக்கப்படும். இந்த வரி மத்திய அரசின் கணக்குக்கு செல்லும்.''


2.''வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்கள் (என்.ஆர்.ஐ.) இந்தியாவில் விவசாய நிலம் வாங்க முடியுமா?''

அந்தோனி ஜோசப், மெயில் மூலமாக.

ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர், மனோகர் அண்ட் சவுத்ரி அசோசியேட்ஸ்.

''வெளிநாட்டில் வசிக்கும் என்.ஆர்.ஐ.க்கள் அப்பார்ட்மென்ட், மனை போன்றவற்றை இந்தியாவில் வாங்கலாம். ஆனால், விவசாய நிலங்களை வாங்க முடியாது.''


3.''தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனையை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?''

சி.எஸ். நிவாஸ்குமார்,      திருவள்ளூர்.

டி.பார்த்தசாரதி, பார்த்தசாரதி அசோசியேட்ஸ், சார்ட்டர்ட் என்ஜினீயர்.

''ஒரு மனை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் ஒதுக்கப்பட்டு இருந்தால், அந்த மனை அவரது பெயரில் கிரயம் (SALE DEED) செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மிக முக்கியமாக பார்க்க வேண்டும். மேலும், அந்த நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தும் போது அந்த நிலத்தின் உரிமையாளர் ஏதும் வழக்கு தொடர்ந்தாரா, வழக்கு நிலுவையில் உள்ளதா? என்பதையும் கவனித்து கொள்ள வேண்டும்.''   
   

4.''என் தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். சித்திக்கு பிள்ளை இல்லை. நான் மற்றும் எனது அக்கா என இரண்டு வாரிசுகள். தற்போது குடியிருக்கும் வீடு, என் தந்தையின் தாய் வழிப் பாட்டனாரின் உயில்படி என் தந்தையின் பெயரில் இருக்கிறது. இந்த வீட்டை எங்கள் மூவரின் அனுமதியின்றி தந்தையால் விற்க முடியுமா?''

ஆர்.சுரேஷ், திருவண்ணாமலை.

என். ரமேஷ், வழக்கறிஞர்.

''தாய் வழிப் பாட்டனார் எழுதி வைத்த உயில் மூலம் தங்கள் தகப்பனாருக்கு கிடைத்த சொத்து அவரின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். பரம்பரை சொத்தாக கருதப்பட மாட்டாது. எனவே, அந்த சொத்தை தன் விருப்பப்படி மாற்றி அமைக்க உங்கள் தகப்பனாருக்கு உரிமை உள்ளது. அவரின் காலத்திற்கு பின்பு, உயில் எதுவும் எழுதாவிட்டால் உங்கள் மூவருக்கும் (நீங்கள், அக்கா, சித்தி) சம பங்கு உரிமை கிடைக்கும்.''


5.''நண்பர் ஒருவர் அண்மையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிப்பட்டு இறந்து விட்டார். சாலை விபத்தில் மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் மூலம் கிளைம் கிடைப்பதுபோல ரயிலில் அடிபட்டு இறப்பவர்களுக்கு மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?'
'
ஜே.மகேஷ், செங்கல்பட்டு.

சுந்தர்ராஜன்கிளை மேலாளர், வெல்த் மேனேஜ்மென்ட், ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி

''பொதுவாக சாலை விபத்தில் மட்டுமே மூன்றாம் நபர் பாலிசி பொருந்தும். ரயிலில் அடிபட்டு இறந்த உங்கள் நண்பருக்கு மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் மூலம் கிளைம் கிடைக்காது. தனிநபர் விபத்துக்கான பாலிசி உங்கள் நபர் எடுத்திருந்தால் மட்டுமே அவருக்கு கிளைம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.''


6.''வீட்டுக் கடன் மாதத் தவணையை இரு மடங்குகளாக அதிகரித்து கட்டலாம் என திட்டமிட்டுள்ளேன். அப்படி கட்டினால் அபராதம், வேறு கட்டணம் ஏதாவது உண்டா?''

எஸ்.இ. முத்து, மெயில் மூலமாக.

பத்மநாபன்கிளை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, திருவண்ணாமலை.

பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரையில், மாதத் தவணையை அதிகரித்து கட்டும்போது எவ்வித கட்டணமும் இருக்காது. கூடுதலாக கட்டும் தொகையும் உடனடியாக அசலில் கழிக்கப்பட்டுவிடுவதால் வட்டி செலவும் குறையும். அதேநேரத்தில், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஓராண்டில் பாக்கி கடன் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் மற்றும் சில இ.எம்.ஐ.-களை மொத்தமாக கட்டத்தான் அனுமதிக்கும் நிலை இருக்கிறது. நீங்கள் கடன் வாங்கியிருப்பது பொதுத் துறை வங்கியா? அல்லது தனியார் துறை வங்கியா என்பதை பொறுத்து முடிவு எடுங்கள்..''

7.''என்னிடம் 50 அம்புஜா சிமென்ட்ஸ் பங்குகள் உள்ளன. ஏ.சி.சி. நிறுவனம், அம்புஜா நிறுவனத்துடன் இணைய போவதாக பேசப்படுகிறது. அப்படி இணையும்பட்சத்தில்  விலை எவ்வாறு கணக்கிடப்படும்?''

ரமேஷ்பட், சி.இ.ஓ. அனிராம் நிறுவனம்

''அம்புஜா சிமென்ட்ஸ், ஏ.சி.சி. நிறுவனத்துடன் இணையப் போகிறது என்பது புரளி. அப்படியே இணைந்தாலும் எந்த விகிதத்தில் பங்குகள் கொடுப்பார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே விலையைப் பற்றி கூறமுடியும். அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி. இந்த இரண்டு நிறுவனங்களுமே நல்ல வலிமையான நிறுவனம். எனவே அதிகாரப்பூர்வ தகவல் நிறுவனங்களிடமிருந்து வந்த பிறகு எந்த முடிவையும் எடுக்கவும்.''


நன்றி - நாணயம் விகடன்

கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி? (ஆன்மீகம்)


கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

1. கோ தானம் எதற்காக... அதன் மகிமைகள் என்ன?

பசு மாட்டில் 14 உலகங்களும் அடங்கியுள்ளன. பசுவை தானம் அளித்தால், அகில உலகையும் தானம் அளித்த பலன் உண்டு. வேள்விக்குத் தேவையான நெய், இறைவனின் அபிஷேகத்துக்கு உகந்த பால், தயிர், நெய், பஞ்சகவ்யம் ஆகியன பசுவிடம் இருந்து கிடைக்கின்றன. பால், தயிர், நெய், கோமியம், சாணி ஆகிய ஐந்தின் கலவை பஞ்சகவ்யம் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து; கவ்யம் என்றால் பசுவிடம் இருந்து வந்தது என்று பொருள். இது, நமது எலும்பு மற்றும் தொடு புலனோடு இணைந்த பாபத்தை அழிக்கவல்லது என்கிறது சாஸ்திரம் (யத்வகஸ்திகதம்பாபம...).

கோமூத்திரம் வெள்ளைப்பாண்டை அறவே அகற்றும்; பஞ்ச கவ்யகிருதம் மனநோயைக் குணப்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் பால் முழு உணவு. உடல் மற்றும் உள்ளத்தைத் தூய்மையாக்குவதுடன், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது பசுவின் பால். நெய்யானது, ஜீரண சக்தியை வலுப்படுத்தி உடலுக்கு வலுவூட்டும். மருத்துவ குணமுடைய பொருள்களை மற்றவர்களுக்கு அளிப்பதால் உண்டாகும் பெருமை சொல்லில் அடங்காது. ஆறறிவு இல்லாதது, ஆறறிவு பெற்றவர்களை வாழ வைக்கிறது. பசுவின் பாலுக்கும் நெய்க்கும் ஈடான மற்றொரு பொருள் இல்லை. அதன் இழப்பை, தற்காலச் சூழலில் வாழும் ஆறறிவு பெற்றவர்களிடம் காணமுடிகிறது.



தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குத் தாய்ப்பாலாகச் செயல்படுவது பசும்பால்தான். இயற்கையின் படைப்பை கடைச் சரக்காக மாற்றக்கூடாது என்பதால், தானமாக (இனாமாக) அளிக்கச் சொன்னது தர்மசாஸ்திரம். பால் கொடுப்பது பசு; பணம் பெறுவது மற்றொருவர் என்று இருக்கக்கூடாது என்பதால், பசுவை தானமாக அளிக்கப் பரிந்துரைத்தது தர்மசாஸ்திரம். வேள்விக்குத் தேவையான நெய்யை அளிப்பதால், வேள்வி அரசன் கண்ணன், பசுக்களைப் பாதுகாக்கும் கோபாலனாகத் தோன்றினான்.




2. அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியம் என்பார்கள். ஆனால், அந்த அரிசி மாவை தின்ன வரும் எறும்புகள், நம்மையும் அறியாமல் காலில் மிதிபட்டு இறந்தால், பாபம் சேராதா?

அனுதினமும் மருந்தடித்துக் கொசுக்களைக் கொன்று குவிக்கிறோம். அது பாபம் இல்லையா? அதேபோல், நடக்கும் போது நமது செருப்புகளுக்கு அடியில் அகப்பட்டு ஈ- எறும்பு போன்றவை மடிகின்றனவே?! வெண்டைக்காயை நறுக்கும் போது, சில நேரம் எதிர்பாராதவிதமாக உள்ளிருக்கும் புழுக்களும் அறுபட்டுவிடுமே! மாவரைக்கும்போதும், அம்மியில் அரைக்கும் வேளையிலும் மிகச்சிறிய உயிரினங்கள் குழவியில் அடிபட்டு மடிந்துபோகலாம்; வரட்டி, விறகுகளில் ஒளிந்திருக்கும் உயிரினங்கள், அடுப்பு நெருப்பில் மடிய நேரிடுகிறதே? தேனுக்காக தேனீக்களைத் தெரிந்தே அழிக்கிறோமே?! வரையறை இல்லாத அஹிம்சையை ஏற்றால், பல நன்மைகளை இழக்க நேரிடும். எறும்பு வராமல் இருக்க, தெரிந்தே நாம் எறும்புப் பொடியை உபயோகிப்போம்.



விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோ, 'லக்ஷ்மண ரேகையை’ (சாக்பீஸ் கோடு போன்று) அறிமுகம் செய்து, எறும்புகளை அழிக்க வழி சொல்கிறது.



உங்கள் கவனத்துக்கு ஒரு விஷயம்... எறும்புக்கு உணவளிப்பதற்காக மாக்கோலம் போடுவதில்லை. தரையைச் சுத்தம் செய்து, கோலம் போட்டு, சுப காரியங்களை நிறைவேற்றும்படி பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம் (ரங்க வல்யாத்யலம் கிருதம்). கோலம் போட்டு அதில் விளக்கை வைப்போம். கோலத்தின் மீது கும்பம் வைப்பதும் உண்டு. கோலமிட்டு அதன்மீது தட்டு வைத்து, விருந்தினரின் கால்களை அலம்பிப் பணிவிடை செய்வோம். அக்னி குண்டத்துக்குக் கோலம் போட்டு அழகுபடுத்துவோம்.



மற்றபடி, எறும்புக்கு உணவளிக்கவே கோலம் பயன்படும் எனும் கூற்று, சாஸ்திரத்துக்குப் புறம்பானது. எறும்புகள் கோலத்தைத் தாறுமாறாக்கினால், வேறு கோலம் வரைந்து சரிசெய்ய வேண்டும். கோலத்தை அழிப்பது அபசாரம். ஈரம் காயும் வரை, நாமே கோலத்தை மிதித்து அழித்துவிடாமல் இருக்கக் கண்காணிப்போம் இல்லையா?!



அரிசி மாவால் கோலமிடுதல் என்பது, எறும்புகளுக்கு உணவளிக்கும் எண்ணத்தில் எழவில்லை. அரிசியில் விச்வே தேவர்கள் குடியிருக்கிறார்கள். கோலத்தில் நிரம்பியிருக்கும் அவர்களது சாந்நித்தியம், செய்யும் சடங்கின் நிறைவுக்குத் துணை புரியும் (தண்டுலா:வைச்வதேவத்யா:). ஆக, கோலத்தில் எறும்புகள் வராமல் பார்த்துக்கொண்டு, அதில் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும். கோலத்தைக் காலால் மிதிக்கக்கூடாது. அதில் கவனம் வேண்டும். சடங்கு முடியும் வரை கோலம் இருக்க வேண்டும். கஷ்டப்பட்டுக் கோலம் போட்டுத்தான் எறும்புகளுக்கு உணவளித்து மகிழவேண்டும் என்பதில்லை; அரிசியை ஒரு மூலையில் கொட்டி வைத்தால் போதும்; எறும்புகள் எடுத்துக்கொள்ளும்; கால்களில் மிதிபட்டு மடியாமலும் இருக்கும்.




3. எங்கள் மகன், மகள் இருவருமே கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எங்கள் அந்திம காலத்துக்குப் பிறகு, எங்களுக்கு இவர்கள் கர்ம காரியங்கள் செய்யலாமா? கூடாது எனில், வேறு யார் மூலம் செய்யலாம்?



பண்பு, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றை ஒதுக்கி, தன்னிச்சையாகக் கலப்புத் திருமணத்தைச் சந்தித்த பிறகு, மீண்டும் சம்பிரதாயத்தை எட்டிப் பார்ப்பது சரியல்ல. தற்காலச் சூழலில், விருப்பப்படி திருமணம் செய்யலாம் என்று வந்த பிறகு, பழைய சடங்குகளை நிறைவேற்ற நினைப்பது பொருளற்றது. கலப்புத் திருமணத்தை ஏற்காதவர்களுக்கு, மரபுப்படி செயல்படுவது சிறப்பான விஷயம். அதன் சட்டதிட்டங்கள் அப்படித்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றிருக்கக்கூடாது. மரபை மீறியவனுக்கு அந்தச் சட்டதிட்டங்கள் பொருந்தாது; விருப்பப்படி செயல்படலாம்.



தங்கள் பங்காளிகளில் எவரேனும் முன்வந்தால், அவர்கள் உங்களுக்கானதை நிறைவேற்றலாம். அவர்கள் மரபோடு இணைந் தவராக இருக்கவேண்டும். நாம் விருப்பப்படி செயல்படுவோம்; தர்ம சாஸ்திரம் அதை ஏற்கவேண்டும் என நினைக்கக்கூடாது. வரம்பு மீறிய செயலுக்கு என்றைக்கும் தகுதி இழப்பு உண்டு. கலப்பு மணத்தில் மற்றொருவரின் மரபுப்படி செயல்படலாம். கலப்பில் இரண்டுக்கும் சம அந்தஸ்துதான். ஆகையால், ஒன்று இல்லையெனில் மற்றொன்றைப் பின்பற்றலாம்!


4. நவக்கிரகங்களை எந்தெந்த திசையை நோக்கிப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்?



சூரியன் கிழக்கு முகமாக இருக்கலாம். சந்திரன்- மேற்கு; செவ்வாய்- தெற்கு; புதன்- வடக்கு; குரு- வடக்கு; சுக்கிரன்- கிழக்கு; சனி- மேற்கு; ராகு- தெற்கு; கேது- தெற்கு... இந்த முறையில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என பரிந்துரைக்கிறது, ஸம்ஸ்கார ரத்னமாலை எனும் நூல். அத்துடன், மற்ற எல்லா கிரகங்களையும் சூரியனை நோக்கி பிரதிஷ்டை செய்வதும் சிறப்பு என்றும் சொல்கிறது.



விண்வெளியில் இருக்கும் கிரக வரிசைப்படியும் பிரதிஷ்டை செய்யலாம். கோள வடிவில்... சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி என்கிற ஏழு கிரகங்கள் வரிசையாக இருக்கும். இவற்றுடன் சேர்த்து ராகு- கேதுவையும் பிரதிஷ்டை செய்யலாம். கிரகங்கள் காலத்துடன் இணைந்திருக்கும்; காலம், எப்போதும் நம்முடன் இணைந்திருக்கும். ஒவ்வொரு சுப காரியத்திலும் கிரக வழிபாடும் இணைந்திருப்பதால், நவக்கிரகங்களுக்கென தனி வழிபாட்டு முறை தலை தூக்காத காலம் இருந்தது. தினமும் நீராடியதும், கை நிறைய தண்ணீரை அள்ளி 3 முறை கிரகங்களுக்குத் தர்ப்பணம் செய்யும் நடைமுறையை, வேத காலத்திலி ருந்தே வேதம் ஓதுபவர்கள் கடைப்பிடிப்பது உண்டு.



பிற்காலத்தில் வந்த சிந்தனையாளர்கள், நவக்கிரகங் களை ஆலயப் பிரவேசம் செய்வித்து, பிரதிஷ்டை செய்யும் முறையையும் பரிந்துரைத்தனர். இன்றும் பல கோயில்களில் நவக்கிரக சந்நிதி இருக்காது. ஆலயத்தில் உறைந்திருக்கும் (மூலவர்) திருவுருத்திலேயே நவக்கிரக சாந்நித்தியம் இருப்பதாகச் சொல்வார்கள். இந்தக் கோயில் ராகு ஸ்தலம், இது கேது ஸ்தலம் என்று சுட்டிக் காட்டுவதும் உண்டு. தற்போது பக்தர்களின் விருப்பம், பொருளாதாரம் ஆகியவற்றை முன் வைத்து, மற்ற மூர்த்தங்களுடன் சேர்த்து, நவக்கிரகங்களும் கோயிலில் இடம் பெற்றுள்ளனர்.



முன்பு கோயிலைத் தேடிச் சென்று பக்தன் வழிபடுவான். இப்போதெல்லாம் பக்தனுக்கு வசதியான இடங்களில் கோயில் வந்துவிடுகிறது. தனித்தன்மை மாறி, வியாபார ஸ்தலமாகக் காட்சியளிக்கும் கோயில்களும் உண்டு. இந்த மாதிரியான சிக்கலைத் தவிர்க்க, நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய முனையவில்லை முன்னோர்கள்.



எதிலுமே ஒரு புதுமை- ஒரு வித்தியாசம் இருந்தால், மக்களுக்கு ஈடுபாடு ஏற்படும். அதை அறிந்த அறிஞர்கள், புதுமையாகத் தோற்றுவித்ததே நவக்கிரக பிரதிஷ்டை. அதன் பிறகு, குறிப்பிட்ட திசைகள்வாரியாக அவர்களை பிரதிஷ்டை செய்யும் முறை பிரபலமானது.



5. வடநாட்டில், பெரியவர்களை வணங்கும்போது தலையில் முக்காடு போட்டுக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? அதேபோல், நம் கோயில்களில் நைவேத்தியம் செய்த பிறகே ஆரத்தி காட்டுகிறோம்; ஆனால், அங்கெல்லாம் ஆரத்திக்குப் பிறகே நைவேத் தியம் சமர்ப்பிக்கிறார்கள். ஏன் அப்படி?


தேசத்துக்கு தேசம் நடைமுறையில் மாறுபாடு தென்படும். இதை தேசசாரம்... அதாவது, நாட்டு நடப்பு அல்லது சம்பிரதாயம் என்பார்கள். சாஸ்திர சட்டதிட்டங்களுக்குக் குந்தகம் விளைவிக் காதவற்றை சம்பிரதாயம் என்று ஏற்று, நடைமுறைப்படுத்துவார்கள்.



திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பு- ஜானுவாசம் என்றொரு சம்பிரதாயம் உண்டு. அதேநேரம், மணப்பெண் அழைப்பு எனும் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்படும். மாமன் மகள்- அத்தை மகன் இவர்களின் திருமணம் நடந்தேறும்; முறைப்பெண் என்று அதைக் கடைப்பிடிப்பார்கள். தலையில் முக்காடு இடுவது, வடநாட்டு சம்பிரதாயம். பிற பெண்களைக் கூர்ந்து கவனிக்கக் கூடாது. அதற்கு உகந்த வகையில் முக்காடு பயன்படும். ஸ்ரீராமனுடன் வனவாசம் செல்லும்போது, முக்காடு போட்டுக் கொண்டிருந்தாள் சீதை. 'மக்கள் உன் முகத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். அதை நிறைவேற்ற வேண்டும்; முக்காடை அகற்றி, முகத்தைக் காட்டு’ என சீதைக்கு ஸ்ரீராமன் கட்டளையிட்டதாகத் தகவல் உண்டு.



சம்பிரதாயம் என்றால், எல்லோரும் கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று அல்ல. நைவேத்தியத் துக்குப் பிறகு ஆரத்தியும், ஆரத்திக்குப் பிறகு நைவேத்தியமும் சம்பிரதாயத்தில் விளைந்தது. கோயிலுக்கு பெரிய மனிதர்கள் விஜயம் செய்யும்போதெல்லாம் ஆரத்தி எடுக்கும் சம்பிரதாயம் தமிழ்நாட்டில் உண்டு. எனவே, சம்பிரதாயங்கள் குறித்த ஆராய்ச்சியைக் கைவிட்டு, வழிபாட்டில் கவனம் செலுத்துவதே நல்லது!


- பதில்கள் தொடரும்

நன்றி - சக்தி விகடன்

Saturday, June 25, 2011

உங்க கேரியர் பற்றி நீங்களே கேர் எடுத்துக்கலைனா எப்படி?

கேரியர் அன்லிமிடட் -1 : சவால்களை வரவேற்போம்!

- பிரிட்டோ

(எவ்விதப் பணிச் சூழலைக் கொண்ட இளைஞர்களையும் பக்குவப்படுத்த முனையும் வழிகாட்டித் தொடர்)
நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானதுதானா? எல்லா பிரச்னைகளுக்கான தீர்வையும்  உங்களால் எப்போதும் சரியாக கண்டறிய முடிகிறதா?

'ஆம்' என்று சொன்னால், கங்கிராட்ஸ்... நீங்கள் நன்றாக பொய் சொல்கிறீர்கள்!
உண்மை என்னவென்றால், பெரிய பெரிய (அரசியல்/தொழில்) தலைவர்கள் கூட  சில நேரம்  தடுமாறும் இடம் அது.
சரியான முடிவு எடுக்கும் திறன், அனுபவத்தால் வருகிறது. அந்த அனுபவமோ, தவறான முடிவு எடுத்ததால் வருகிறது.
சவால்களை வரவேற்போம்..!
பிரபல சோப்பு தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம். இதுவரை அவர்கள் சந்தித்திராத புதுப் பிரச்னை. தீர்வு காண வேண்டும்.
ஒரு கஸ்டமர் தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கடைக்கு போய் இவர்கள் தயாரித்த சோப்பை வாங்கி இருக்கிறார். சோப்பு பாக்கெட்டில் சோப்பு இல்லை. காலியாக இருந்திருக்கிறது. கம்பெனிக்கு போன் செய்து புகார் செய்துவிட்டார்.
"ப்ச்.. அவர் பொய் சொல்றார்பா," என்று இதை அலட்சியமாக ஒதுக்கி விட்டு, சமோசா சாப்பிட போகவில்லை அந்த சோப்பு கம்பெனி நிர்வாக அதிகாரி. மீட்டிங் கூட்டினார்.
சகலமும் இயந்திரமயம் ஆக்கப்பட்ட சோப்பு தொழிற்சாலை அது. சோப்பு தயாராகி, வரிசையாக வந்து, தானாகவே பேக் செய்யப்பட்டு தானாகவே பெரிய அட்டைப் பெட்டிகளில் அடுக்கப்படும்படியாக இருந்தது அவர்கள் இயந்திர அமைப்பு.
தயாரித்து பேக் செய்யப்பட்டு வெளியே வரும் ஒவ்வொரு சோப்பு பாக்கெட்டிலும் சோப்பு இருப்பதை உறுதி செய்ய என்ன செய்யலாம் என்று முடிவு செய்யத்தான் இந்த அதிகாரிகளின் அவசர மீட்டிங்.
மீட்டிங்கில், புதிதாக வேறு பேக்கிங் இயந்திரங்கள் வாங்கலாம், சோப்புகள் அடுக்கிய அட்டைப் பெட்டியை கடைகளுக்கு அனுப்பும் முன் வேலையாட்களை வைத்து எடை போட்டு பார்த்து அனுப்பலாம் உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதற்காக புதிதாக வேலைக்கு எடுக்கப்பட வேண்டிய ஆட்களும் செலவினங்களும் பரிசீலிக்கப்பட்டன.

இறுதியில் அங்கே வேலை பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளி சொன்ன யோசனையை அமல்படுத்தினார்கள். என்ன அது?
சோப்பு பாக்கெட்டுகள் அட்டைப்பெட்டியை அடையும் இடத்துக்கு அருகில் ஒரு மேசையை வைத்தார்கள். அதன் மீது ஒரு பெரிய சைஸ் டேபிள் ஃபேனை வைத்தார்கள். பாக்கெட்டில் சோப்பு இல்லாவிட்டால், காலி பாக்கெட் காற்றில் பறந்துவிடும். சோப் இருக்கும் பாக்கெட்டுகள் மட்டுமே அட்டைப் பெட்டியை வந்தடையும்.
மிக எளிமையான யோசனை. ஆனால் பெரிய செலவில்லாமல், பிரச்னைக்கு தீர்வு தருகிறது.இந்த யோசனை ஏன் மற்ற அதிகாரிகளுக்கு உடனே தோன்றவில்லை..?காரணம், அவசரம்.
பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதற்றமே அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது.  அவசரப்பட்டு புது இயந்திரமோ, வேலையாட்கள் நியமனமோ செய்திருந்தால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?
பல நேரங்களில் பிரச்னைக்கான தீர்வு மிக எளிதானதாக இருக்கும்.

பிரச்னையை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்த மாதிரி தான். பின்னர் பதற்றப்படாமல் அதை அணுகினால், தீர்வு கிடைப்பது எளிதாகிறது.
பிரச்னை என்பது ஒரு சவால். அதற்கான தீர்வு தேடுவதை நம்மை மேம்படுத்திக் கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால், தினம் தினம் நம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்கலாம்.
சவால்கள் கூடக் கூட உங்களது தீர்வு காணும் திறன் கூடும். புத்தி கூராகும்; வாழ்க்கை நேராகும்.


நன்றி - நாணயம்  விகடன்