Thursday, March 15, 2012

தி முக , அதிமுக எது எனக்கு அதிக யூஸ்? குஷ்பூ அதிரடி பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0IiRw1YZiqYYyHlLBSBDJBUAuPeNZGYk5IdMi_Xv5rSoOGZg8disNJHgwCTQnQsWyRylLt0noatIfqifQNEP9_kfRqu2KCmcKIvKRXzkBNLAW5lstyk1_YCJUkY8RbmDBTHo-u6O9N7k/s400/kushboo2.jpg 

1. ''ஒரு பக்கம் உங்கள் ரோல் மாடல் ஜெயலலிதா... இன்னொரு பக்கம் உங்கள் திரையுலக நண்பர் விஜயகாந்த்... இவர்களை எதிர்த்து அரசியல் செய்வது உங்க ளுக்குக் கஷ்டமாக இல்லையா?'' 

சி.பி - இது நல்ல கேள்வி .. ஆனா நான் நிருபரா இருந்தா இன்னா கேட்டிருப்பேன்னா ஒரு பக்கம் ஆத்ம நண்பர் பிரபு, இன்னொரு பக்கம் குடும்ப நண்பர் கார்த்திக், உங்க பக்கம் தாராள மனப்பான்மை கொண்ட சுந்தர் சி இவங்க எல்லார் கிட்டேயும் நல்ல பேர் எடுக்கறீங்களே, எப்படி?
 
 ''சரவணன்... ஜெயலலிதா என் ரோல் மாடல்னு நான் எப்ப சொன்னேன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். 'என் ரோல் மாடல் இவங்கதான்’னு இது வரை நான் யாரையுமே சொன்னது இல்லை.


சி.பி - ஹலோ மேடம் மேடம், ஜெயா டி வி ல ஜாக் பாட் நிகழ்ச்சில நீங்க முதன் முதலா  அப்பாய்ண்ட் ஆனப்ப குமுதம் வார இதழ்ல ஒரு பேட்டி குடுத்தீங்க.. அதுல முதல் கேள்வியே ஜெ பற்றி என்ன நினைக்கறீங்கன்னு தான், அப்போ நீங்க ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் அபாரம்னு அள்ளி விட்டீங்க, நினைவில்லையா? செலக்டிவ் அம்னீஷியா அம்மா கிட்டே இருந்து உங்க கிட்டேயும் தொத்திக்கிச்சா?

 ஒரு பெண் என்ற வகையில் ஜெயலலிதாம்மாவை எனக் குப் பிடிக்கும். ஆனா, அவங்க தலைமை யிலான ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு சிரமப்படுறாங்கனு பார்க்கும்போது, வருத்தமா இருக்கு. 

சி.பி - ஆமாமா, நீங்க சொல்றதும்  கரெக்ட் தான், வீட்டை நிர்வாகம் செய்யும்போது பெண்கள் காட்டும் கெடுபிடி,நிர்வாகசீர் எல்லாமே நாட்டை நிர்வாகம் பண்ணும்போது காணாமப்போயிடுது.. யார் பேச்சையும் கேட்காம சித்தன் போக்கு சிவன் போக்கு , நாம நினைச்சதுதான் சரின்னு ஒரு எதேச்சாதிகாரம் வந்துடுது..


மே 13-ம் தேதி காலை 10 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வந்துட்டு இருக்கும்போதே, 'தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்காங்கனு அடுத்த அஞ்சு வருஷத்தில் தெரிஞ்சுக்குவாங்க’னு சொல்லியிருந்தேன். ஆனா, இப்ப 10 மாசத் திலேயே நாம செஞ்சது தப்புனு மக்கள் புரிஞ்சுட்டு இருப்பாங்க.


சி.பி - இந்த தமிழக மக்கள் எப்பவும் இப்படித்தாங்க ஒரே தப்பை 5 வருஷத்துக்கு ஒரு டைம் மாத்தி மாத்தி  பண்ணுவாங்க.. அதாவது முதல்ல தி முக , அடுத்து அதிமுக அப்படி மாத்தி மாத்தி குத்தி  நம்பி ஏமாந்துடறாங்க.. அவங்களுக்கு வேற சாய்ஸ் இல்லையே பாவம்.. 


விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, கமிட்டி உறுப்பினராக இருந்திருக்கேன். ஆனால்,அவரோட அரசியல் செயல்பாடுகள்பற்றி இது வரை நான் விமர்சித்தது இல்லை. அவருடைய அரசியலைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்!''


சி.பி - வெரிகுட் மேடம். பக்குவமான பதில்.. கேப்டன் எதிர்க்கட்சி என்பதால் தரக்குறைவா பேசாம அடக்கி வாசிக்கறீங்க.. ஐ திங்க் இது கட்சி மேலிட உத்தரவாக்கூட இருக்கலாம்.. கேப்டனை ஓவரா தாக்க வேண்டாம்.. அவர் கூட கூட்டணி வைக்க வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்.. அப்டினு.. 


http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/kushboo-sundar-latest-photos-gallery-images-07.jpg


2. ''உண்மையைச் சொல்லுங்கள்... உங்களுக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா?'' 


சி.பி -இதென்ன கேள்வி அண்னாமலை, பாண்டியன்ல நடிக்கறப்ப சினிமா எக்ஸ் பிரஸ் இதழ்ல எனக்குப்பிடித்த ஒரே நடிகர் அது ரஜினிதான்னு தீபாவளி மலர்ல பேட்டி குடுத்தாங்க.. சிங்கார வேலன் ஷூட்டிங்க் டைம்ல  இதயம் பேசுகிறது இதழ்ல என் கனவு கமல் கூட  நடிக்கனும்கறதுதான் அப்படின்னு பிட்டை போட்டாங்க.. நாக்கில்லாத நரம்பு மாத்தி மாத்தி பேசும்.. தப்பில்லை./. சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்

''யோசிக்கவே வேண்டாம்.... கமல்ஹாசன்தான். ஏன்னா, 'ரஜினி சார் என் ஃப்ரெண்ட்’னு சொல்ல முடியாது. ஆனா, கமல் சாரை என் ஃப்ரெண்ட்னு சொல்ல முடியும். ரஜினி சார் ரொம்ப தூரத்தில் இருக்கார். 'ஆ’னு அண்ணாந்து ஆச்சர்யமா பார்க்கிற உச்சியில இருக்கார்.

 கமல் சார் ஒரு ஃப்ரெண்டா இருக்கார். எப்ப வேணும்னாலும் அவருக்கு போன் பண்ணிப் பேசலாம். என் குடும்ப விழாக்கள்ல கமல் - கௌதமி கலந்துப்பாங்க. அவங்க வீட்டு நிகழ்ச்சிகளில் நானும் கலந்துப்பேன். என் குழந்தைகளும் அவங்க குழந்தைகளும் ரொம்ப க்ளோஸ். இப்படி நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸா இருப்பதால், கமல் சாரை அதிகமாப் பிடிக்கும்.


சமீபத்தில், அவரோட 'விஸ்வரூபம்’ படப்பிடிப்புக்காக பிரபல கதக் டான்ஸர் பண்டிட் பிர்ஜு மகராஜ் சென்னைக்கு வந்திருந்தார். எனக்கு கதக் தெரியும். அதுவும் பிர்ஜு மகராஜை எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு கமல் சாருக்குத் தெரியும். 'பிர்ஜு இங்கே இருக்கார். வந்து பார்க்குறியா?’னு அவரே போன் பண்ணி எனக்குத் தகவல் சொன்னார். உடனே, நான் ஓடிப்போய் லொகேஷன்ல அவரைப் பார்த்துப் பேசிட்டு வந்தேன். எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுனு எனக்குத் தெரிஞ்சதைவிட கமல் சாருக்கு அதிகமாத் தெரியும்!''


சி.பி - என்னது? உங்களுக்கு கதக் தெரியுமா? அப்போ உங்க இயற்பெயரான நக்கத் இனி நக்கதக்?


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6b9x4V25INdS5AuZ4foBEe8zIyhF-TJHpA3I37OZ3hgXLfoZmYTfAl_ZR6nleA92GADT0NdI65ySVqFbUVLlQEKcqiH-2DSdwQOnWwOGexdJSKTStUIKvAPwBE7RCVKFxaa86jDV4xME/s1600/Actress-Kushboo-Hot-Photos-0k034.bmp

3. '' 'வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ என்ற கோஷத்தை முன்வைத்துத் தொடங்கப்பட்டது தி.மு.க. அதில் நீங்கள் எப்படி..?'' 


சி.பி - அது போன  மாசம், நான் சொல்றது இந்த மாசம்.. வடக்கு ஆல்ரெடி வீழ்ந்துடுச்சு... தெற்கு தேஞ்சுட்டு இருக்கு


''முதல்ல நான் வடக்கில் இருந்து வந்தவள்ங்கிற எண்ணத்தை உங்க மனசுல இருந்து அழிச்சிடுங்க  இந்த 41 வயசுல நான் மும்பையில் வாழ்ந்தது 16 வருஷம். சென்னையில் வாழ்ந்தது 25 வருஷம். கடைசி வரை இங்கேதான் இருக்கப்போறேன். அப்போ நான் தமிழ்ப் பெண்மணிதானே!


சி.பி - என்னது? உங்க வயசு 41? இப்படி உண்மையை சொல்லலாமா?

 என் பாஸ்போர்ட்டில், பிறந்த இடம் எது என்ற கேள்விக்கு மட்டும்தான் மும்பைனு இருக்கும். மத்தபடி மும்பையில் சொந்தம்னு சொல்லிக்க எனக்கு யாருமே இல்லை. நான் சம்பாதிச்சது எல்லாத்தையுமே இங்கே தான் முதலீடு பண்ணியிருக்கேன். 'குஷ்பு மும்பையில் ஒரு வீடு வாங்கிப் போட்டு இருக்கா, இடம் வாங்கிப் போட்டுஇருக்கா’னு யாரையாவது சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். என் சம்பாத்தியம், செலவு எல்லாமே தமிழ்நாட்டில் மட்டுமே!''


சி.பி - அதெப்பிடிங்க சொல்ல முடியும்? நீங்க நக்கத்ங்கற பேர்ல வீடு வாங்கி இருந்தா குஷ்பூ வாங்குனார்னு சொல்ல முடியாதே?


4. '' 'ச்சே... நாம் ஹீரோயினாக உச்சத்தில் இருந்தபோது இவர் நடிக்க வரவில்லையே’ என்று இப்போதைய ஹீரோக்களில் யாரைப் பார்த்தால் உங்களுக்குத் தோன்றும்?'' 

சி.பி - இந்த மாதிரி பர்சனல் கேள்விகளை எல்லாம் பப்ளிக்கா கேட்டா எப்படி?

'' 'பருத்தி வீரன்’ கார்த்தியைப் பார்க்கும்போது, லைட்டா அப்படித் தோணுச்சு. அந்த கார்த்திக்குக்கு அப்புறம் அதே துறுதுறு குறுகுறு பெர்சனாலிட்டியை இந்தக் கார்த்தி கிட்ட பார்க்கிறேன். கார்த்தியை நான் 'பையா’னுதான் கூப்பிடுவேன். 'சிறுத்தை’ பார்த்துட்டு 'ரொம்ப நல்லா பண்ணியிருக்க பையா. அந்த ராக்கெட் ராஜாவுக்கு நான் ரசிகையாகிட்டேன்’னு கார்த்திகிட்ட சொன்னேன்.


ஆனா, 'ஒரு படம் முழுக்க இவருக்கு ஹீரோயினா நடிக்கலையே’னு நான் வருத்தப்படுற ஒரே ஹீரோ அரவிந்த்சாமி. இந்த வருத்தம் அவருக்கும் தெரியும். அவர்கிட்ட ஒரு ரசிகையா ஆட்டோகிராஃப் வாங்கநான் பட்டபாடு இருக்கேன்... அவர்கிட்ட ஆட்டோ கிராஃப் கேக்குறப்பலாம் நான் ஏதோ கிண்டல் பண்றதா நினைச்சு, போட்டுத் தரவே மாட்டார். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா நானும் விடாமத் துரத்திட்டே இருந்தேன். அப்போ அவர் பிரியதர்ஷன் படத்தில் நடிச்சிட்டு இருந்தார்.


 அந்தப் படத்தின் காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி கூட ஒருநாள் ஸ்பாட்டுக்குப் போயிட்டேன். 'அரவிந்த், உன்னோட மிகப் பெரிய ரசிகை வந்திருக்காங்க. அவங்க ஒரு ஆட்டோ கிராஃப் கேக்குறாங்க. போட்டுக் கொடுத்துருங்க’னு சொல்லி அரவிந்தை வெளியே அழைச்சிட்டு வந்தார் அனு. என்னைப் பார்த்த அரவிந்த், 'ஐயோ குஷ்... நீயா?’னு சிரிச்சுட்டார். 'ரெண்டு வருஷமாத் தொரத் திட்டு இருக்காங்களாமே... போட்டுக் கொடுப்பா’னு அனு ரெகமண்ட் பண்ண பிறகுதான், ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார் அரவிந்த்!''


சி.பி - நல்ல வேளை, அவரோட இப்போதைய தோற்றத்தை நீங்க பார்க்கலையே, ஒரு காலத்துல அர்விந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேணும்னு சொன்ன ஃபிகருங்க எல்லாம் இப்போ அவரையே கிண்டல் பண்றாங்க.. ஆண்களூக்கு வழுக்கை ஒரு சாபம்.. பெண்களுக்கு வழுக்கை இல்லாதது ஒரு வரம்.. ( 0.12 % பெண்களுக்கு வழுக்கை வருவது உண்டு)
 http://s4.hubimg.com/u/1127503_f520.jpg

5.''குஷ்பு இட்லி, குஷ்புவுக்குக் கோயில் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

சி.பி - கொஞ்சம் என்ன நிறையவே மிதப்பா இருக்கும்.. மார்க்கெட் இருந்த கால கட்டத்துல இந்த மாதிரி சென்சேஷனல் மேட்டர் எல்லாம் சம்பளம் கூட்டிக்கேட்க உதவியா  இருக்கும்


''பெருமையா இருக்கு. அதே சமயம், இந்த அளவுக்கு அன்பு, நம்பிக்கைவெச்சுப் பாசம் செலுத்துறாங்களே... அதை அவங் களுக்கு நாம எப்படித் திரும்பச் செலுத்தப் போறோம்னு யோசிக்கும்போது கொஞ்சம் பயமாவும் இருக்கு!''


சி.பி - ஒண்ணும் வேண்டாம் மேடம், கடலூர் ஏரியாவுல ஒரு கிராமத்தை தத்து எடுத்து உங்களால் ஆன உதவி செய்ங்க போதும்


6. ''முதலமைச்சர் ஆகும் ஆசை இருக் கிறதா? அப்படியானால், தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களை எல்லாம் தருவீர்கள்?'' 

சி.பி - இந்த கேள்வி எல்லாம்  தி மு க வட்டாரத்துல பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும், அங்கேயே இன்னும் வாரிசு பிரச்சனை முடியலை.. அதுக்குள்ள இவங்களூமா?

''அப்படி எல்லாம் பகல் கனவு காணும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது கட்சிக்காக நிறைய உழைக்கணும். என் உழைப்பு, அனுபவத்துக்கு ஏற்ற வளர்ச்சி இருந்தால் அதுவே போதும் எனக்கு!''


சி.பி - உங்கள் அபரிதமான  வளர்ச்சி தமிழ் நாட்டின் மட்டற்ற  மகிழ்ச்சி ஹி ஹி 



7. ''வெயிட் போட்டுட்டே போறீங்க... உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கலையா அல்லது முடியவில்லையா?'' 

சி.பி - ரேஷன் கடை ஊழியரா ஒரு கேரக்டர்ல நடிங்க.. தன்னால உடல் எடை குறையும்

 ''சான்ஸே இல்லை... நான் வெயிட் போட்டிருக்கேனா இல்லையானு என் வீட்டுக்காரர்கிட்டதான் கேட்பேன். அஞ்சு வருஷமா ஒரே வெயிட்லதான் இருக்கேன். இதுவே பெரிய சாதனை!''

 சி.பி -உடம்பு வெயிட் வந்தா குறைச்சிடலாம்.. ஆனா ஹெட் வெயிட் தான் வரக்கூடாது.. 


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxVDBUiCI499zXBvj0URMoxpj68nq52DSITAtm8GsUFkAtl5XcgK7Yc9gNOS_AGoaGKx4BvyI4w3zim26wrQkmgW5YtA2nyVudBc33xkRqk33rtn-8Ar3Ej-Bu7GjX92C58-R5wNI10oio/s1600/661543_f520.jpg


8. ''சினிமாவில் ஹீரோயின் கேரக்டர் கள் குறைந்தபோது, உங்களை ஜெயா டி.வி. 'ஜாக்பாட்’ நிகழ்ச்சிதான் லைம் லைட்டில் வைத்திருந்தது. நீங்கள் 'கற்பு’ பிரச்னையில் சிக்கித் தவித்தபோது தி.மு.க. அரசு உங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளவில்லை. அப்புறமும் ஏன் அ.தி.மு.க-வுக்குச் செல்லாமல் தி.மு.க-வில் சேர்ந்தீர்கள்? இது நன்றி மறந்த செயல் ஆகாதா?'' 


சி.பி - அதெல்லாம் ஒண்ணும் இல்லை, உண்மை என்னான்னா  அதி முக-ல சேர்ந்தா குஷ்பூக்கு வளர்ச்சி இல்லை.. ஏன்னா ஒரு நடிகை கட்சில சேர்ந்து செல்வாக்கு அடைஞ்சா எந்த மாதிரி டாமினேஷன் இருக்கும்னு ஒரு முன்னாள் நடிகையான ஜெவுக்கு நல்லாவே தெரியும்.. அதனால அங்கே போக வாய்ப்பு இல்லை.. தி முக வுக்கு ஒரு கிளாமர் சினிமா ஸ்டார் ஆதரவு தேவைப்பட்டுது.. கவர்ச்சிக்கு குஷ்பூ, காமெடிக்கு வடிவேல்னு யூச் பண்ணிக்கிட்ட்டாங்க.. 

''2000-ல் எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. 2001-ல் ஜாக்பாட் பண்ண ஆரம்பிச்சேன். அதனால், வளர்ச்சி கம்மியானதும்தான் ஜாக்பாட் பண்ண வந்தேன்னு சொல்றதை ஏத்துக்க மாட்டேன். ஆனால், 'ஜாக்பாட்’ என்னை லைம் லைட்டில் வெச்சிருந்தது என்பது மறக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. அது அருமையான நிகழ்ச்சி. 

அதே சமயம், நான் தொழில்ரீதியாகத்தான் ஜெயா டி.வி-யுடன் இணைந்திருந்தேனே தவிர, அ.தி.மு.க-வின் தொண்டராக நான் ஜெயா டி.வி-யில் வேலை பார்க்கலை.


அதேபோல், அந்த என் அஞ்சு வருஷப் போராட்ட காலத்தில் அரசியல் கட்சிகளில் சேர எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தன. எந்தக் கட்சியிலும் அப்போதே நான் சேர்ந்து இருக்கலாம். அப்படிச் செஞ்சிருந் தால், 'குஷ்பு அந்தக் கட்சியோட உதவி யாலதான் இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வந்தாங்க’னு சொல்லியிருப் பாங்க. ஆனா, அந்தப் பிரச்னை என் தனிப் பட்ட போராட்டம். தனி மனுஷியா யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் போராடித்தான் அதில் ஜெயிச்சேன். ஆனால், பொது வாழ்க்கைக்கு வரணும்னு எப்போ முடிவு பண்ணேனோ... அப்பவே தி.மு.க-வில்தான் சேரணும்கிறதில் உறுதியா இருந்தேன்!''



''தி.மு.க-வில் நீங்கள் ஸ்டாலின் கோஷ்டியா... அழகிரி கோஷ்டியா?'' 


''பிரபுதேவா - நயன்தாரா இருவரும் உங்களுக்கு நிச்சயம் நெருக்கமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்த நீங்கள் முயற்சிக்கலாமே?''   
\
''இப்போதும் கற்பு குறித்த உங்கள் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?'' 


- நிறைய பேசலாம்...

 தொடரும்

http://i497.photobucket.com/albums/rr336/hotpicszone4/Kushboo%20Came%20in%20Tight%20TShirt/engarasinallarasiaudio_039.jpga


டிஸ்கி  - இதன் முதல் பாகம் -   http://www.adrasaka.com/2012/03/blog-post_8166.html

Wednesday, March 14, 2012

THE WOMAN IN BLACK -ஹாலிவுட் திகில் சினிமா விமர்சனம்


http://www.covershut.com/covers/The-Woman-In-Black-2012-Front-Cover-64080.jpg
திகில் படம், பேய்ப்படம்னா பேன்னு கத்தறது, ரத்தம் குடம் குடமா கொட்டறதை காட்றது,கோரைப்பல்லோட பேய் உருவங்களை காட்டறதுன்னு நிறைய பேர் தப்பான டெஃபனிஷன் வெச்சிருக்காங்க.. அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கி ரொம்ப டீசண்ட்டா ,கண்ணியமா ( 2ம் 1 தான்) ஒரு திகில் படம் கொடுத்திருக்காரு டைரக்டர்.. அவருக்கு முதல்ல வாழ்த்துகள்.. 

இந்தப்படம் ஃபாரீன்ல மெகா ஹிட்டாம்.. நம்ம ஊர்ல எந்திரன் ஏற்படுத்திய பரபரப்பை இது அங்கே ஏற்படுத்தி இருக்கு

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல 3 சின்னப்பொண்ணுங்க அமைதியா வந்து முகத்துல எந்த வித உணர்ச்சியையும் காட்டாம பல அடுக்கு மாடி ஜன்னல் வழியா எட்டி குதிச்சு தற்கொலை செஞ்சுக்குதுங்க..

http://www.filmcritic.com/assets_c/2012/02/womaninblack-cropped-proto-filmcritic_reviews___entry_default-thumb-560xauto-42444.jpg

அந்த கிராமத்துல ஏதோ சாபம்.. குழந்தைங்கள் வரிசையா சாகறாங்க..ஹீரோ ஒரு வக்கீல்.. அந்த குழந்தை இறந்த எஸ்டேட் செட்டில்மெண்ட் சம்பந்தமா ஹீரோ அங்கே போறார் . ஹீரோவுக்கு, ஒரு குழந்தை..சம்சாரம் ஆல்ரெடி டெட்.. ஒரு கார்டியன் லேடி( அதாவது நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா வேலைக்காரி கம் பணியாள்) அவங்களை ஊர்ல விட்டுட்டு 2 நாள்ல வந்துடறேன்னு சொல்லிட்டு லண்டன்ல இருக்கற அந்த அமானுஷ்ய கிராமத்துக்கு ஹீரோ போறார்..



அவருக்கு அங்கே பல திடுக்கிடும் அனுபவங்கள் கிடைக்குது. பல விசாரணைக்குப்பிறகு குழந்தையை இழந்த ஒரு பெண்ணின் சாபம்  அல்லது பழி வாங்கல் தான் இதெல்லாம் அப்டிங்கறதை கண்டு பிடிக்கறாரு.. அந்த பெண் பேய் தான் விமன் இன் பிளாக்  ( அந்த ஃபிகரு பிளாக் கலர்லயும் இல்லை , சொந்தமா ஒரு பிளாக் ஸ்பாட்டும் வெச்சிருக்கலை, யாரையும் பிளாக் பண்ணிடுவேன்னு மிரட்டலை,ஆனாலும் சும்மா ஒரு எஃபக்ட் தர அப்படி டைட்டில்)

2 நாள் முடியுது.. இருந்தாலும் ஹீரோ கிளம்பலை.. பொதுவா இந்த சம்சாரங்க வேலை என்னான்னா புருஷன் எங்கே இருக்கானோ அங்கே போய் அவன் உயிரை எடுக்கறதுதான்.. அவனை நிம்மதியா தனியா இருக்க விட மாட்டாங்க.. ஆக்சுவலா அவங்க வந்த பிறகு தான் அவன் நிம்மதியே போகும்..இந்த சம்பிரதாயம் ஆல் ஓவர் வோர்ல்ட்லயும் இருக்கு.. சம்சாரம் மாதிரியே அந்த கார்டியன்  ஹீரோவை தேடிட்டு குழந்தையை கூட்டிக்கிட்டு அந்த கிராமத்துக்கு வந்ததும் ஹீரோ பதட்டம் ஆகிடறான்.. ஏன்னா அங்கே இருக்கற பேயோட வேலையே குழந்தைகளை தற்கொலை செய்ய வைக்கறதுதான்

 ஏன்னா ஹீரோவோட குழந்தையோட உயிருக்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதே?அவசர அவசரமா அவன் இடத்தை காலி பண்றான்.. ரயில்வே ஸ்டேஷன்ல என்ன நடக்குதுங்கறதை திக் திக் திகிலோட பார்க்கலாம்.. 

ஹாரிபாட்டர் படத்துல சின்னப்பையனா வந்து  பலரது உள்ளங்களை கொள்ளை அடிச்சு, ஃபாரீன் ஃபிகரு ரெண்டை அட்டர் டைம்ல  கரெக்ட் பண்ணின டேனியல் ராட் கிளிஃப் தான் ஹீரோ. அதுல பால் மணம் மாறாத பாலகனா வர்றவர் இதுல அமலா பால்க்கே அண்ணன் மாதிரி கொஞ்சம் ஓல்டு கெட்டப்ல ( 25 வயசு) வர்றார்.. நல்ல நடிப்பு.. அவரை இன்னும் யூத்தாவே காட்டி இருக்கலாம்.. இந்தக்காலத்துல 18 வயசுலயே பிஞ்சுலயே பழுத்துடுதுங்களே.. 

 டைரக்டர் ஹீரோவை அப்படி ஏஜ்டு பையனா காட்ட முக்கிய ரீசன் ஹீரோ 8 வயசுப்பையனின் அப்பான்னு காட்ட வேண்டிய சூழல் தான்.. ஓக்கே

http://horrornews.net/wp-content/uploads/2011/12/the-woman-in-black-movie-2012-3.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  கிராமம் வரும் ஹீரோ அந்த ஹோட்டல்ல தங்கிட்டு நைட்ல கதவு சாவித்துவாரம் வழியா பார்க்க அதே மாதிரி பேயும் பார்ப்பது செம திகில்

2. ஹீரோவுக்கு அந்த கேஸ் பற்றிய துப்பு கிடைப்பது குழந்தையை இழந்த அம்மாவின் லெட்டர் மூலமா.. அந்த லெட்டர்ஸை அப்படியே ஆடியன்ஸ் கிட்டே பகிர்ந்ததன் மூலம் டெரர் டெம்ப்போ ஏத்துனது.. 

சாம்ப்பிள் -a  என்னை மெண்ட்டல்-னு சொல்லி என்னை என் மகள் கிட்டே இருந்து பிரிச்சு வெச்சே.. 

b என்னதான் நீ பிளான் பண்னாலும் என்னை என் மக கிட்டே இருந்து பிரிக்க முடியாது

c. என் மகளை நீ புதைக்கக்கூட இல்லை.. உனக்கு நரகம் தான் கிடைக்கும்.. 

3. பின்னணி இசையில் அடக்கி வாசித்தது.. பெரும்பாலான படத்தை சைலண்ட் மோடில் கொண்டு சென்று தேவையான இடத்தில் மட்டும் அதிரடி இசையை உபயோகித்த லாவகம்..


4. த சிக்ஸ்த் சென்ஸ் படத்தை நினைவு படுத்தினாலும் உறைய வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சி ட்விஸ்ட்

5.  வீட்டில் உள்ள குருவிகுஞ்சை  ஹீரோ எடுத்து அதன் கூட்டில் விடும்போது மடார் என்று  காகம் வந்து ஹீரோ முகத்தில் மோதிச்செல்லும் சீன்   சவுண்ட் எஃபக்ட், ரீ ரெக்கார்டிங்க், எடிட்டிங்க் கட் எல்லாம் செம

6.  ஹீரோ படுத்திருக்கும் கட்டில் மெத்தையில் கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் பரவி அப்படியே குழந்தையாக எழும்  பேய் செம திக் திக் சீன்

7. ஃபயர் ஆக்சிடெண்ட்டில்  சிக்கி நெருப்புக்கிடையில் மாட்டிக்கொண்ட குழந்தை டக் என்று பெட்ரோல் கேனை உடைத்து தனக்கு தானே தீ வைத்துக்கொள்ளும் உறைய வைக்கும் காட்சி

8. குழந்தை நலன் விரும்பி பேயை வர வைக்க ஹீரோ ரூமில் உள்ள எல்லா பொம்மைகளையும்  சாவி கொடுத்து இயக்கி வர வைக்கும் தந்திரம்.. அந்த சீனில் மெல்ல மெல டெம்ப்போ ஏற்றிய விதம் மார்வலஸ்

http://paracinema.net/wp-content/uploads/2012/02/The-Woman-in-Black-front.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் ( அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு இங்கிலீஷ் தெரியாது, ஐ ஜாலி, என்ன வேணாலும் கேட்கலாம்)


1. ஹீரோ எங்கே வேலை செய்யறார் என்பதே அவர் கார்டியன்க்கு தெரியாது, ஹீரோ போகும்போது எந்த ஊர்க்கு போறேன்னு சொல்லாம போறாரு, பின் எப்படி சரியாக அவர் அங்கே வந்தார்?

2. கிராமத்தில் அமானுஷ்ய சக்தி இருக்குன்னு  ஹீரோவுக்கு தெரிஞ்சுடுது.. தான் வீட்டை விட்டு கிளம்பறப்ப  2 நாள்ல வந்துடறதா சொல்லி இருக்கார், அவர் ஏன் கார்டியன்க்கு ஃபோன் பண்ணி என்னை தேட வேண்டாம், வேலை முடிய இன்னும் நாள் இருக்குன்னு சொல்லலை?

3. குழந்தை பாசத்தால் தவிக்கும் பேய் எதுக்காக குழந்தைகளை குறி வெச்சு கொல்லனும்? தன் கணவன் போல அயோக்கிய ஆண்களை கொன்னா  அதுல லாஜிக் இருக்கு.. தான் எப்படி மழலையை இழந்து கஷ்டப்படறோமோ அதே போல் ஊர் மக்கள் அனைவரும் கஷ்டப்படட்டும் என்பது மோசமான லாஜிக்கா இருக்கே?

 படத்தில் மனதைக்கவர்ந்த ஒரே வசனம் 


சமூக சேவை செய்ய இங்கே யாரும் வர்லை.. சம்பாதிக்க வந்திருக்கோம்.. அதை முதல்ல ஞாபகம் வெச்சுக்கிட்டு அப்புறம் வேலை செய்..

http://mimg.sulekha.com/english/the-woman-in-black/stills/the-woman-in-black-movie-013.jpg
வழக்கமான திகில் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம், ஆனால் ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கு ,வித்தியாசமான திகில் பட விரும்பிகளுக்கு  மிகவும் பிடித்தமான படமாக இருக்கும்.. ஆண்கள், பெண்கள் அனைவரும் பார்க்கலாம்..

 குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் சீன்கள் நிறைய இருப்பதால் மனோ ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இந்தப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்

ஈரோடு அண்ணா தியேட்டரில் படம் பார்த்தேன்



ஜெ-வின் ஆஸ்தான முன்னாள் ஜோதிடர் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்களில் ஒருவராக இருந்தவர் என்று சொல்லப்பட்டவர் வெற்றிவேல்.

 சி.பி - ஆஹா VETRIVAEL கூட்டுத்தொகை 9 வருது.. அம்மாவோட செண்ட்டிமெண்ட்டே  செண்ட்டிமெண்ட் அவ்வ்வ்வ்

 இவர் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே ராவணன் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறது. இதுகுறித்து, 20.2.2008 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'கோடிகளுக்காக என்னைக் கடத்தினார்கள்! உயிர் பயத்தில் ஜெ. ஜோதிடர்!’ என்ற தலைப்பில் செய்தி வந்தது. அந்தப் புகார் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளார் வெற்றிவேல்.


 ''எனது புகார் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று தனது வழக்கறிஞர் குமாரதேவனுடன் கடந்த 12-ம் தேதி வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் வெற்றிவேல் மனு கொடுத்துள்ளார்.


வெற்றிவேலை சந்தித்துப் பேசியதில்


 ''எனக்கு சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி. 98-ம் வருஷம் பெரியம்மாகிட்ட (ஜெயலலிதா) அறிமுகம் ஆனேன். பெரியம்மா அப்போது வழக்கு விவகாரங்களுக்காக அலைஞ்சுட்டு இருந்த நேரம். நான் அவரோட அரசியல் எதிர்காலம், வழக்குகளின் நிலை சம்பந்தமாகத் தெளிவா கணிச்சுச் சொன்னேன். அதனால, அவங்களோட நம்பிக்கைக்கு உரிய ஆஸ்தான ஜோதிடர்களில் நான் முன்னணியில் இருந்தேன்.

சி.பி - அண்ணே, சாரி ஃபார் த குறுக்கீடு , அமைதிப்படை அமாவாசை மாதிரி ஒரு கேள்வி, யார் யாருக்கோ ஜாதகம் கணிச்ச நீங்க உங்க ஜாதகத்துல போலீஸ் கேஸ் வரும், சின்னம்மாவை பகைச்சுக்குவோம் அதெல்லாம் கணீக்கலையா? அப்படி இல்லைன்னா நீங்க என்ன ஜோசியர்? ஹி ஹி 




 பெரியம்மா, சின்னம்மா (சசிகலா) மற்றும் அவரோட குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் நான்தான் ஜோதிடம் பார்த்தேன். 2004-ம் வருஷம், சின்னம்மா என்கிட்ட, 'பெரியம்மாவுக்கு அடுத்து அ.தி.மு.க-வில் முதல்வர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கு?’னு கணிச்சுத் தரச் சொன்னாங்க. அதுக்காக அவங்க குடும்பத்துல இருக்கிற அத்தனை பேர் ஜாதகமும் கொடுத்தாங்க.
அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்த நான், 'உங்க குடும்பத்துல ஒருத்தருக்குக்கூட கட்சியில் பொதுச்செயலாளர் ஆகும் யோகமோ, தமிழகத்தின் முதல்வர் ஆகும் யோகமோ கிடையாது. இது மாற்ற முடியாத உண்மை’னு கணிச்சு சொன்னேன்.


 சி.பி - உடனே பெரியம்மா டென்சன் ஆகி “ முதல்ல எதுக்காக அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்தீங்க, என் கிட்டே அதுக்கு அனுமதி வாங்குனீங்களா?ன்னு கேட்கலை?” ஹி ஹி

 இந்த விஷயத்தை நான் பெரியம்மாகிட்டேயும் அப்படி​யே சொல்லிட்டேன். இதுதான் கார்டனுக்கும் எனக்கும் விரிசல் விழக் காரணமான சம்பவம். அன்றுமுதல், சின்னம்மா என்னை எதிரியா நினைச்சிட்டார். உண்மையைச் சொல்லப்போனால், சின்னம்மாவை என் அம்மா மாதிரி நினைச்சு இருந்தேன்.


சி.பி - அண்ணே, எகெயின்  ஒரு ஸ்மால் டவுட்டு, சின்னம்மாவை  உங்கம்மா மாதிரி நினைச்சா உங்கம்மாவை என்னவா நினைச்சீங்க? ஜெ அம்மாவை என்னவா நினைச்சீங்க?  உபயம் - வெற்றிக்கொடு கட்டு ஆர் பார்த்திபன் - வடிவேல் காமெடி


 எங்க அம்மா இறந்தப்​பகூட நான் அழுதது இல்லை. ஆனா, சின்னம்மா கஷ்டப்பட்டப்ப எல்லாம் அழுதேன். கிராமத்துல செம்மறி ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த என்னை கார்டனுக்குக் கூட்டிவந்து பெரிய ஆள் ஆக்கினதே சின்னம்மாதான். ஆனா, அவங்களே எனக்கு எதிரியா மாறிட்டாங்க.

சி.பி - நாடு ஏன் நாசமாப்போய்ட்டிருக்குன்னு இப்போ தெரியுது. செம்மறி ஆடு மேய்ச்சுட்டு இருந்தவங்க எல்லாம் அரசியல் ஆலோசகரா ஆனா நாடு எப்படிய்யா உருப்படும்?படிச்சவன் வேலை இல்லாம அலைஞ்சுட்டு இருக்கான்

அப்ப இருந்து என்னை விரட்ட ஆரம்பிச்சவங்க... இப்ப வரைக்கும் விடாம விரட்டிக்கிட்டு இருக்காங்க. உண்மையில் நான் சாதாரண ஆளுங்க. கார்டன்ல ஜோதிடத்தைத் தாண்டி எதையும் எப்பவும் பேசியது இல்லை. அரசியல்னா என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. நான் சொன்ன ஜோதிடக் கணிப்புகளை வைச்சு, சின்னம்மாவும் ராவணனும் என்னை அவங்களுக்குப் போட்டியா, எதிரியா நினைச்சுப் பழிவாங்க ஆரம்பிச்சிட்டாங்க.

சி.பி - நீங்க ஒரு தப்பு பண்ணீட்டிங்க, சசிகலாட்ட எதுவும் சொல்லாம ஆமாம் சாமி போட்டு நைசா ஜெ கிட்டே அவங்களை பற்றி போட்டுக்குடுத்திருக்கனும்.. 

2007-ம் வருஷம் ராவணன் என்கிட்ட என் சொத்து விவரங்களை கேட்டு, ஈரோட்டில் இருந்து கோவைக்கு கார்லயும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்துலயும் கடத்​திட்டுப் போனார்.

 சி.பி - ஆமா, ஈரோட்ல உங்களுக்கு என்ன வேலை? பர்சனல் மேட்டர்ஸா? ஹி ஹி

அங்கே தகாத வார்த் தைகளில் பேசி வெற்றுப் பேப்பர் களிலும் பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கினார். அதுதொடர்பா தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்து, பிறகு அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே அளவுக்கு அதிகமான செல்வாக்குடன் இருந்தார் ராவணன். அதனால், அந்த வழக்கில் ஒரு துரும்பைக்கூட போலீஸார் கிள்ளிப் போடலை.



கடந்த தி.மு.க. ஆட்சியில் ராவணன் எனக்குக் கொடுத்த துன்பங்களுக்கு அளவே இல்லை. 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி என் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளுக்காக வீட்டில் ஹோமம் வளர்த்துட்டு இருந்தேன். அப்போது ராவணனுக்கு நெருக்கமான வருமானவரித்துறை அதிகாரியை வைச்சு என் வீட்டில் ரெய்டு நடத்தினார். அதே வருஷம் திருப்பூர் செங்கப்பள்ளியில் ஒரு சொத்தை வாங்க, 1 கோடியே 1 லட்சம் ரூபாய் முன் பணத்தை செங்கப்பள்ளி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த ராவணனின் நண்பர் சண்முகத்திடம் கொடுத்து, அவரது மனைவி ஈஸ்வரி பெயரில் ஒப்பந்தம் போட்டேன்.


ராவணன்கூட பிரச்னை ஏற்பட்ட பிறகு, அந்த இடத்தை அவங்க தரலை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டா, 'ராவணன்கிட்ட போய் வாங்கிக்​கோ’னு மிரட்டுறாங்க. இதுசம்பந்தமா, கடந்த தி.மு.க. ஆட்சியில் முக்கியமான நான்கு அமைச்சர்களை நேரில் சந்தித்து உதவி செய்யும்​படி கேட்டேன். ஆனா, அமைச்சர்கிட்ட போன ரெண்டு மணி நேரத்துல எனக்கு போன் வரும். 'அமைச்சர்கிட்ட போனா உன் பணம் கிடைச் சிடுமா? டேய், நீ எங்க போனாலும் என்னை ஒண்ணும் செய்ய முடி யாது’னு ராவணனும் அவரோட ஆட்களும் மிரட்டுவாங்க.


சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் எனக்கு இடம் இருந்துச்சு. 2009-ம் வருஷம் அந்த இடத்தை வைச்சு, ஒரு தேசிய வங்கியில் 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தக் கடனைக் கட்ட முடியாம வட்டியோடு சேர்த்து 65 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. ஆனா, எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்​காமல் சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சொத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி ஏலம் விட்டுருச்சு. இது எப்படி சாத்தியம்?


 சி.பி - ஆடு மேய்ச்சிட்டு இருந்தவருக்கு எப்படி இந்த மாதிரி கோடிக்கணக்குல சொத்து வந்துச்சு.. ஜாதகம் பார்க்க அம்புட்டு வருமா? நல்ல நேரம் சதீஷ்.. நோட் பண்ணப்பா..


 முதல் தவறு எனக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம்விட்டது. அடுத்தது, மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஒரு கோடிக்கு விற்று வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியது. எனக்குத் தகவல் தெரிவிச்சதுக்கு ஆதாரம், அந்த சொத்தை யாருக்கு வித்தாங்க? அந்த ஏலத்தில் யார் எல்லாம் கலந்துக்கிட்டாங்க?ன்னு பல கேள்விகளைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு போட்டேன். இப்ப வரை சரியான தகவல் கொடுக்கலை. இதன் பின்னணியிலும் ராவணன்தான் இருக்கார்.


சி.பி - அடடா.. ஒரு வங்கிக்கு நஷ்டம்னு சொன்னதும் அண்ணன் கண்ணு கலங்குதே.. நாட்டுப்பற்று!!!

இதுமாதிரி ஒண்ணு, ரெண்டு இல்லை. இப்படி சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு என் பணம், சொத்துகளை ராவணன் மோசடி செய்து இருக்கார். 2007-ம் ஆண்டு என்னைக் கடத்திட்டுப் போன சம்பவத்துக்குப் பிறகு ராவணனுக்குப் பயந்து, டெல்லிக்குப் போய் செட்டில் ஆகிட்டேன். அங்கேயும் ராவணன் என்னை விடலை. டெல்லியில் ஒரு அ.தி.மு.க. வக்கீல் என் மீது பொய்ப் புகார் கொடுத்து, ஒரு உதவி கமிஷனர்கிட்டேயே, 'சார், இது தமிழ்நாடு டெபுடி சி.எம். ராவணனின் ஆர்டர். உடனே அரெஸ்ட் பண்ணுங்க’னு டார்ச்சர் பண்ணினார். நான் அந்த போலீஸ் அதிகாரிகிட்ட, 'தமிழ்நாட்டுல டெபுடி சி.எம்-னு போஸ்ட்டிங்கே இல்லை’ன்னு ஆதாரபூர்வமாப் புரிய வைச்சுத்தான் தப்பிச்சேன்.
இப்ப ராவணன் மீது படிப்படியா நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னாலதான், சென்னை வந்து இருக்கேன். ஜோதிடர்களைக் கடவுளின் தூதர்கள்னு சொல்லுவாங்க. நான் கடவுள்கிட்ட கேட்டு, அங்க இருந்து எனக்கு என்ன தகவல் கிடைச்சதோ, அதைத்தான் ஜோதிடக் கணிப்புகளாகச் சொல்லிட்டு இருக்கேன்.

 சி.பி - அப்படியே கடவுளுக்கு ஒரு ஐ எஸ் டி கால் போட்டு உங்களுக்கு ஒரு விடிவு காலம் எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்கோ..

 2011-ம் வருஷத்துக்குப் பிறகு ராவணன் அரசியல்ல இருக்க மாட்டார். அவரோட அழிவுகாலம் தொடங்கிடும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்சிக்காரங்க, என் நண்பர்கள், ராவணன் நண்பர்கள்னு சுமார் 100 பேர்கிட்ட சொல்லி இருக்கேன்.


 சி.பி - ஓஹோ, அந்த 100 பேர்ட்டயும் ஃபீஸ் வாங்கியாச்சா?

இப்பவும் சொல்றேன். ராவணனுக்கு அழிவு நிச்சயம். இத்தனை நாள் அவர் மீது கொடுக்கப் பட்ட புகார்களைவிட, ஆணித்தரமான ஆதாரங்கள் கொண்ட புகார்கள் நிறைய என்கிட்ட இருக்கு. ஒவ்வொரு புகாரா போலீஸில் கொடுத்து, ராவணன் அழியறதை என் கண்ணால பார்க்கப்போறேன். இது என் ஆசை எல்லாம் கிடையாது. இதுதான் ராவணனின் ஜாதகம்!'' - ஆவேசமாக முடிக்கிறார் ஜோதிடர் வெற்றிவேல்!


சி.பி - அட போங்கண்ணே, இப்படித்தான் குணச்சித்திர நடிகை சோனா கூட சொன்னாங்க. என் கிட்டே வீடியோ ஆதாரம் இருக்கு, எஸ் பி பி சரணை கூண்டில் ஏத்துவேன், சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பேன்னு சபதம் போட்டாங்க.. ஆனா அப்புறம் டகார்னு பல்டி அடிச்சு இப்போ சரண் ஹீரோவா நடிக்க சோனா கவுரவ கதாநாயகியா  “ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்” அப்படின்னு ஒரு படம் நடிக்கராங்களாம்.. அவ்வ்வ்வ்
வெற்றிவேல் பணம் கொடுத்ததாகக் கூறும் செங்கப்பள்ளியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சண்முகத்திடம் பேசினோம். ''வெற்றிவேலிடம் சொத்தை விற்க முன் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அதன் பிறகு சொத்தைக் கிரையம் செய்ய பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்குப் பிறகு, அவர் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கித் தொகைக்காக இந்த நிலத்தையும் பணத்தையும் வழக்கில் சேர்த்து விட்டார்கள். ராவணன் என் நண்பர் இல்லை. அவரை நான் பார்த்ததுகூட கிடையாது...'' என்றார்.


 சி.பி - பார்க்காமயே நட்பா? விட்டா எனக்கு ராமர், ராவணன், ராமாயணம் எதுவுமே தெரியாது, கேள்விப்பட்டதே இல்லைன்னு சொல்லிடுவார் போல..
ராவணன் மீதான பிடி இறுகுவதற்கு வெற்றிவேல் புகார் கூடுதல் வலையாக மாறிக்கொண்டு இருக்கிறது!

Tuesday, March 13, 2012

சேவற்கொடி - விரோதச்செடி - சினிமா விமர்சனம்

 http://tamil.cinesnacks.net/photos/posters/Sevarkodi-Posters/sevarkodi-posters-005.jpg

அக்னி நட்சத்திரம் படத்துல வர்ற பிரபு, கார்த்திக் மாதிரி 2 பேரு எப்போ பாரு அடிச்சுக்கறாங்க..கிரி படத்துல பேக்கரி - தங்கச்சி  டீலிங்க் விட்டாரே வடிவேல் அந்த மாதிரி தான் வசதியா வாழனும்கறதுக்காக ஒரே ஒரு ஜீப்க்கு ஆசைப்பட்டு வில்லனோட தங்கச்சியை வில்லன் கை மாத்தி விடலாம்னு பார்க்கறப்போ அந்த தங்கமான தங்கச்சி தன் காதலனை இழுத்துக்கிட்டு நாடோடிகள் படத்துல வர்ற ஜோடிகள் மாதிரி ஊரை விட்டு எஸ்.. அவங்க ஓடிப்போனதுக்கு காரணமே ஹீரோதான்னு தப்பா நினைச்சுக்கிட்டு வில்லன் ஹீரோவை தூக்க நினைக்கறான்.

அந்த மாதிரி ஒரு முயற்சில ஹீரோ தன் அம்மா கூட பைக் போறப்ப   ஆக்சிடெண்ட் பண்ணிடரு. அதுல ஹீரோ எஸ்.. அம்மா ஆள் அவுட்.. செம காண்ட் ஆகற ஹீரோ வில்லனோட  பயங்கரமா ஒரு ஃபைட் போட நடு ரோட்ல இதுதாண்டா போலீஸ்  படத்துல அண்டர் டிராயரோட வில்லனை ராஜசேகர் அடிச்சு கிளப்பற மாதிரி கிளப்பறார்.. அதுல அவமானப்பட்ட வில்லன் கூலிப்படை ஆளுங்களை நியமிச்சு ஹீரோவை போட்டுத்தள்ள முயற்சி பண்றார்.என்ன நடக்குதுங்கறதுதான் மிச்சக்கதை..

சும்மா சொல்லக்கூடாது.. பெரும்பாலான புது முகங்களையும் சாதாரண கதையையும் வெச்சுக்கிட்டு டைரக்டர் செம விறுவிறுப்பான திரைக்கதை தான் அமைச்சிருக்கார்.. ஆனாலும் ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல்கள்..

பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி தான் ஹீரோ .. கேமரா கூச்சமோ , பயமோ இல்லாம பல காட்சிகளில் யதார்த்தமா நடிக்கறார்.. ஒரு சீன்ல பைக்ல லாவகமா சறுக்கி கீழே விழும்போது அப்ளாஸ் அள்ளுகிறார்.. மற்ரபடி இவரது எதிர்காலத்தை அடுத்து வரும் படங்கள் தான் தீர்மானிக்கும்..


http://keralapals.com/wp-content/uploads/2012/02/Sevarkodi-tamil-movie-stills-bhama-17.jpg

வில்லனாக வரும் பவன் தான் ரியல் ஹீரோ.. ஹீரோவை விட இவருக்குதான் அதிக வாய்ப்பு.. மனிதர் செம காட்டு காட்டி இருக்கார்.. டிரைவராக வரும்போது புழுங்குவதும், ஓனர் ஆனதும் அசால்ட் காடுவதும் , கூலிப்படை தலைவனிடம் பம்மும்போதும், ஹீரோவோட மோதும்போதும் என   அள்ளுகிறார்.. க்ளைமாக்ஸில் மட்டும் ஹீரோவிடம் கெஞ்சுகிறார்..

பவனுக்கு எடுபிடியாய் க்ளீனராக நடித்திருக்கும் சேகர் நடிப்பு பிரமாதம்.. க்ளீனராக வந்தாலும் கடைசி வரை அவர் வில்லனிடம் காட்டும் விசுவாசம் கன கச்சிதம்.. வில்லனை பற்றி போலீஸ் விசாரிக்கும்போது வாய் பேசாத கிளீனரை போலீஸ் “ என்ன விசுவாசமா? என நக்கல் அடிக்கும்போது , ஏன் சார்? எங்களுக்கு விசுவாசம் இருக்கக்கூடாதா? என்று கேட்கும்போது தியேட்டரில் கை தட்டல்ஸ்..

ஹீரோயின் கேரளா ஃபிகர்.. பேரு  பாமா.. மொழு மொழு முகம்.. அங்கங்கே நடிக்கிறார்.. ஓக்கே தான்..


http://www.filmics.com/gallery/d/147108-1/Sevarkodi-Movie-Photo-Stills-22.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  படம் முழுக்க பேசும் தூத்துக்குடி ஸ்லாங்க் எனப்படும் வட்டார வழக்குப்பேச்சில் வசனங்கள் கலக்கல்ஸ் ரகம்..

2. வில்லனின் கேரக்டர் என்ன? என்பதை பட ஓப்பனிங்க் முதல் பல காட்சிகளில் அசால்ட்டாக சொல்லி வில்லன் மேல் கதையை கொண்டு செல்லும் உத்தி,,

3. ஹீரோ - வில்லன் இருவருக்குமான விரோதம் எதனால் வருது..? என்பதை தெளிவாக விளக்கி யார் மேல் தப்பு என்பதை யூகிக்க முடியாதபடி திரைக்கதையை இருவர் பக்கமும் மாற்றி மாற்றி கொண்டு செல்லும் திறன்

4. கூலிப்படை ஆட்கள் பற்றிய விஸ்தீரனமான நம்ப வைக்கும் காட்சிகள்

5. ஹீரோ வில்லன் மோதல் தான் கதையின் ஒன் லைன் என்பதால் தேவை  இல்லாமல் டூயட் சாங்க் அதிகம் வைக்காமல் படத்தை மையப்புள்ளியை நோக்கி நகர்த்தும் விதம்..

6. சூறாவளியாய் வந்து போகிறாய், கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு ,தீ குனிவதில்லை என 3 பாடல்கள் நல்லா வந்திருக்கு



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibcbz_2uYPuM6JCBywh8ydBuGeuLYyI57L3edyyUSrbfRsjjrcPMzJsrxZt8iafD2o2V_oyPq8sHRohuxa1tU9bDqj-9PqTeac4rWiBFmlvabsgNy6n4Y0c65YnLpN6fCX8g5oByM1TUM/s1600/actress-bhama-hot-navel.jpg
 இயக்குநர்  கவனிக்க மறந்த லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. படத்தின் முக்கியமான சீனான வில்லனை ஹீரோ அடித்து நிர்வானம் ஆக்கும் காட்சியில் வேடிக்கை பார்க்கும் ஜனங்கள் யாரும் துண்டு குடுத்து போர்த்தலை? அட்லீஸ்ட் கூடவே விசுவாசமா இருக்கும் கிளீனர் சடார் என தன் வேட்டியை கழட்டி மானத்தை மறைத்திருக்க வேண்டாமா?

2.  வில்லன் ஒரு சீன்ல ஹீரோவோட செல் ஃபோன் நெம்பருக்கு ஃபோன் போட்டு மிரட்றார்.. ஆனா அவர் நெம்பர் இவருக்கு த்நெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லையே..?எப்படி தெரிஞ்சது?

3. வில்லன் பலடைம் பலரை ஆக்சிடெண்ட்டில் அடி பட வைக்கிறார்.. படு காயப்படுத்துகிறார்.. ஆனால் ஒரு சீனில் கூட போலீஸ் அவரை எதுவும் செய்யவில்லையே? ஏன்>

4. வாய்ப்பிருந்தும் வில்லனை ஏன் போலீஸ் அரெஸ்ட் பண்னாமல் வேடிக்கை பார்க்கிறது? டீக்க்டையில் டேங்கர் லாரியை ஓட்டி மாபெரும் ஆக்சிடெண்ட் செஞ்சும் அவரை யாரும் எதுவும் கண்டுக்கலையே?

5. வில்லன் கித்தாய்ப்பாய் படம் முழுக்க வசனம் பேசி அந்த கேரக்டர் மேல் சத்யராஜ் தனமான ஒரு பில்டப் கொடுத்துட்டு க்ளைமாக்ஸில் வடிவேல் மாதிரி உயிர்ப்பிச்சை கேட்பது மாதிரி ஏன் காட்டனும்?

http://2.bp.blogspot.com/_Toi-rh0Nm00/S_6K6Nsd4bI/AAAAAAAAEqU/iBM_LHUB1Mk/s1600/bhama+hot+photos+12.jpg

 மனதில் நின்ற வசனங்கள்


1. எல்லாருக்கும் எல்லாரும் எல்லா நேரமும் நல்லவனா வாழ முடியாது,ஆனா நம்மளை சுத்தி இருக்கற 4 பேருக்காவது நாம நல்லவனா வாழனும்


2.  ஒருத்தன் இன்னும் சாகலை.. இப்போ என்ன பண்ண?

 ம் போய் சாகச்சொல்லு..

3.  கல்யாணத்துக்கு முன்னேயே இப்படித்தான்... அதுக்குப்பிறகு பொய்யே பேச மாட்டேன்..

ம்க்கும், அப்புறம் நான் உங்க கூட பேசவே மாட்டேன்..

4.  என்னடா.. விசுவாசமா?

, ஏன் சார்? எங்களுக்கு விசுவாசம் இருக்கக்கூடாதா?


5. அவன் கெட்டவன் தான் .. அது உங்களுக்கு.. போலீஸ்க்கு.. ஆனா அவர் எனக்கு சோறு போட்டவர்.. மொதலாளி

6. கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு பாடல் விழாமலே இருக்க முடியுமா? விழுந்து விட்டேன் காதல் வலையிலே பாட்டு மெட்டை நினைவு படுத்துகிறது




http://2.bp.blogspot.com/_GaVBOHRwetA/SetIelqCNJI/AAAAAAAAb8c/3z-iw9I5vGU/s1600/Ivar%2BVivahitharayal%2BMovie%2BPhotos%2B2%2B(11).jpg
யார் எல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்?

ஆண்கள் எல்லாரும் பொழுதுபோக்கா பார்க்கலாம் ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கு பிடிக்காது.. பி , சி செண்ட்டர் ரசிகர்கள்க்கு பிடிக்கும்.

 பெண்களுக்கு இந்தப்படம் பிடிக்காது.. விரோதம், கோபம், வன்முரை, பழி வாங்கும் உணர்வை தூண்டுதல் என மைனஸ்கள் இருப்பதால் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் தவிர்ப்பது நல்லது

எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி கமெண்ட் - பி ,சி  ஆண் ரசிகர்களுக்கு மட்டும்

ஈரோடு ஸ்டார் தியேட்டரில் படம் பார்த்தேன்


http://i625.photobucket.com/albums/tt332/Anish911/bhama.jpg

கும்தலக்கடி கும்மாவா? குஷ்பூன்னா சும்மாவா? கல(ழ)கத்துக்கே அம்மாவா? காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0uLC40ruDMNWZk6t8BCg_28tggMjW8aV4FDsCZRqL15O2flhZmzwDY7xPEYYMWznxg_JvilpIB10pLIBKNAitnhKWB-h9Zu96dKyjQczLvvNZv_ZYdhFWFQ5pXb7nUYodlEiWAbK3kTY/s640/actress_kushboo_Hot_photos+(1).jpg 

குஷ்பூ பற்றி அறிமுகம் எதுக்கு? இருந்தாலும் ஃபார்மாலிட்டின்னு 1 இருக்கே.. வருஷம் 16 , தர்மத்தின் தலைவன் வந்தப்ப எல்லாம் யாரும் அவர் இவ்ளவ் ஹிட் அடிப்பார்னு எதிர்பார்க்கலை.. சின்னத்தம்பி படம் வந்து ஒரு தூக்கு தூக்குச்சு ... இந்தியா டுடே பத்திரிக்கைல கற்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்து சொல்லி அகில உலக ஃபேமஸ் ஆனார்.. ஷூட்டிங்க் ஸ்பாட்ல அம்மன் சிலை முன் கால் மேல் கால் போட்டு உக்காந்து பெண்ணியவாதி அலட்சியவாதி பெயர் எடுத்தார்.. ஜெயா டி வி யில் பிரம்மாண்டமான யு நெக் ஜாக்கெட் கலாச்சார புரட்சியை தோற்றுவித்தவர்.. அவரோட ஜாக்கெட் டிசைனை பார்க்க பெண்களும், 70 எம் எம் முதுகை பார்க்க ஆண்களும் போட்டி போட்டு பார்க்க நிகழ்ச்சி செம ஹிட்.. அவரது பிரம்மாஸ்திரம் தி முக வில் இணைந்து கலைஞர், ஸ்டாலின், அழகிரி என மூவரிடமும் நல்ல பெயர் எடுத்தது.. இனி ஆண்ட்டியின் கேள்வி பதில்கள்



1. கார்த்திக் முதல் ராஜ்கிரண் வரை உங்களுடன் நடித்த ஹீரோக்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்? மழுப்பல் இல்லாமல் நச்சென்று பதில் சொல்லுங்கள். நீங்கள்தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆயிற்றே?'' 


சி.பி - இந்தாளுக்கு ஓவர் குசும்புய்யா.. கேள்விலயே  கார்த்திக் தான் முதல்ல அப்டிங்கற அர்த்தம் வர்ற மாதிரி கேட்டிருக்காரே? பிரபுவுக்கு கோபம் வராது?
 
''கார்த்திக்தான் எப்பவும் என் ஃபேவரைட். நான் 'வருஷம் 16’ பண்றதுக்கு முன்னாடி இருந்தே, அவரை எனக்குப் பிடிக்கும். 'மௌன ராகம்’, 'அக்னி நட்சத்திரம்’ படங்கள் பார்த்த பிறகு எனக்கு கார்த்திக் பைத்தியமே பிடிச்சிடுச்சு.

சி.பி - ஓஹோ அப்போத்தான் பாடுன பாட்டா? நீயும் மெண்ட்டல், நானும் மெண்ட்டல்.. நினைச்சுப்பார்த்தா எல்லாம் மெண்ட்டல்..

 ஒரு நடிகன்னா துறுதுறுனு இப்படித்தான் இருக்கணும். அவர் நடிப்பை, ஸ்டைலை சும்மா வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது எல்லாத்தையும் மீறி அவர் என் குடும்ப நண்பர். 


சி.பி - ஹா ஹா இதுதாங்க செம காமெடி.. குடும்ப நண்பரா? அதாவது குடும்பத்தோட நீங்க இருந்தாக்கூட வந்து ஜாலியா பேசிட்டு இருப்பாரா? ரைட் ரைட்?

அவர் உங்க எல்லாருக்கும்தான் கார்த்திக். ஆனா, எங்களுக்கு அவர் 'முரளி’. என் பசங்களுக்கு அவர் 'முரளிப்பா’... 'பெரியப்பா’. இன்னும் சொல்லணும்னா, அவரோட போட்டோ மட்டும்தான் என் வீட்ல இருக்கும். வேற எந்த ஹீரோ போட்டோவும் இருக்காது. என் கணவரோட அண்ணன் என்ற ஸ்தானத்தில் அவரை வெச்சிருக்கேன் நான்!''

http://www.extramirchi.com/gallery/albums/south/marriage/Prabhu_daughter_Aishwarya_wedding/normal_Prabhu_daughter_Aishwarya_wedding_(7).jpg

சி.பி - அதாவது மச்சினர்.. கொழுந்தனார் ஹி ஹி ரைட்டு.. கேட்கவே கிளு கிளுப்பா இருக்கு.. ஆமா கார்த்திக்  உங்க குழந்தைகளுக்கு பெரியப்பா முறைன்னா பிரபு பெரியப்பாண்ணன் முறையா? ஹி ஹி 

2. ''நீங்கள் சொன்னால் சரியாக இருக் கும்... தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?'' 


சி.பி - தமிழ் நாட்டின் ஒரே ஊழல்வாதி கலைஞர் தான்.. தமிழ்நாட்டுக்கு ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிதான்

''கண்டிப்பா அடுத்த சூப்பர் ஸ்டார் யாருமே இல்லை. எப்பவும் அவர்தான்... அவர் மட்டுமேதான் சூப்பர் ஸ்டார்!

ரஜினி சார் சினிமாவுக்கு வந்தப்ப, 'இவர்தான் சூப்பர் ஸ்டாரா வருவார்’னு யாரும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டாங்க. ஏன்... அவரே நினைச்சிருக்க மாட்டார். ரஜினி சாரே சினிமாவில் வளர்ந்த பிறகு,  அப்ப யாராவது, 'இவர் சிவாஜி சார் இடத்தைப் பிடிப்பாரா? எம்.ஜி.ஆர். இடத்தைப் பிடிப்பாரா?’னு கேள்வி கேட்டு இருப்பாங்க. ஆனா, அவங்க இடத்தையா ரஜினி சார் பிடிச்சிருக்கார்? இங்கே யாரும் யாரோட இடத்தையும் பிடிக்க முடியாது. இன்னும் 20 வருஷத்துக்குப் பிறகு, 'அஜீத், விஜய், சூர்யா இடத்தை யார் பிடிப்பாங்க?’னு கேட்கலாம். இது ஓர் ஓட்டம். ஒவ்வொருத்தர் நடிப்பு, உழைப்பைப் பொறுத்து அவரவருக்கான இடம் நிர்ணயிக்கப்படும். அவ்வளவுதான்!''


3. ''உங்களை இயக்கியதில் உங்களைக் கவர்ந்தவர் யார்? யாருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?'' 

சி.பி - ராஸ்கல்.. என்னாய்யா கேள்வி இது டபுள் மீனிங்க்ல ? 

 ''நான் எப்பவும் மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர்னு மூணு பேரின் ஃபேன். இவங்களோட படங்களை முடிஞ்சா முதல் நாள் முதல் ஷோவே பார்த்துடுவேன். ஆனா, என்னை இயக்கிய இயக்குநர்களில் எனக்குப் பிடித்தவர் பி.வாசு சார். அவர் என்னை வெச்சு கிட்டத்தட்ட 15 படங்களை இயக்கியிருக்கார். இப்போதைய இயக்குநர் களில் நான் நடிக்க விரும்புவது கௌதம் மேனன், வசந்தபாலன்னு பெரிய லிஸ்ட்டே இருக்கே!''


சி.பி - என்னது? வாசு அண்ணன் உங்களை வெச்சு 15 பண்ணிட்டாரா? அடங்கொன்னியா.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJEbQEyRa-BfuBjJ8_EgNQD-gTnsODVV6_2oGlG2MTIXIMrQXlqDV7FmC0N5oufGSGL79L6fNFL859X61_maATKuT4hUwbf5Pgu2CfX7zzrhYnGaI0PvK4UdpFPZD_V-uBLCGqyq_yUt8/s1600/kushoob%252Bsunder%252Bhot%252Bactress.jpg

4.'' 'சின்ன குஷ்பு’ என்று யாருக்காவது பட்டம் கொடுக்கச் சொன்னால், இப்போதைய கதாநாயகிகளில் யாருக்குக் கொடுப்பீர்கள்?'' 


சி.பி - ஆமா, இப்போ ரொம்ப குண்டாகிட்டதால இவங்க பெரிய குஷ்பூ,, ஒரு காலத்துல பாலாம்பிகா அப்டினு ஒரு நடிகை , சிவரஞ்சனி-அவங்க தான் சின்ன குஷ்பூவா இருந்தாங்க.. என் கண்ணோட்டத்துல கொழுக் மொழுக் அழகி ஹன்சிகா மோத்வானி சின்ன குஷ்பூஅப்டினு சொல்லலாம்.. 

''யாருக்கும் கிடையாது! அவங்க ஏன் சின்ன குஷ்புவா, சின்ன சிம்ரனா, சின்ன ஜோதிகாவா இருக்கணும்? அவங்க அவங்களாவே இருக்கட்டுமே. என்னை யாரும் சின்ன நதியா, சின்ன ராதான்னு கூப்பிடலையே. குஷ்புவாக மட்டும் பார்த்ததுதானே எனக்கு ப்ளஸ். அந்த ப்ளஸ் அவங்களுக்கும் கிடைக்கட்டுமே!'

'
5.''பொதுவாக, ரஜினியைப் புகழ்ந்து பாடும் பாடல்கள்தான் ஹிட் ஆகும். ஆனால், ரஜினியே உங்களைப் பற்றிப் பாடுவதுபோல அமைந்த 'கூடையில் என்ன பூ... குஷ்பு’ பாடலுக்கு அவருடன் ஆடும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?'' 

சி.பி - ஹா ஹா தமிழன்கள் பைத்தியக்காரனுங்க, இந்த போதையை வெச்சே 10 வருஷம் காலம் தள்ளிடலாம்னு நினைச்சிருப்பாங்க.. 

 '' 'அண்ணாமலை’ படத்துல அந்தப் பாட்டு இருக்கிற விஷயமே எனக்குத் தெரியாது. ஒரு காமெடி சண்டைக் காட்சி எடுத்துட்டு இருந்தப்ப, 'உன் பேர்ல படத்துல ஒரு பாட்டு இருக்கு... தெரியுமா குஷ்?’னு ரஜினி சார் கேட்டார். நான் நம்பலை. ஆனா, ஒலிப்பதிவாகி வந்த பாட்டை நாகராவில் கேட்டுட்டு, 'சார், இது பயங்கர காமெடியா இருக்கு. இந்தப் பாட்டை யார் கேப்பாங்க?’னு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஆனா, அவரோ, 'டெஃபனிட்டா இந்தப் பாட்டு ஹிட்டாகும் குஷ்’னு சொன்னாரு. 


அந்தப் பாட்டை ஷூட் பண்ணும்போதுகூட லொகேஷன்ல நான் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தேன். ஆனா, தியேட்டர்ல பார்த்தப்பதான் அந்தப் பாட்டோட ரீச் புரிஞ்சது. 21 வருஷத்துக்கு அப்புறமும் அந்தப் பாட்டை டி.வி-யில் பார்க்கும்போது, ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த விஷயங்கள், சிங்கப்பூர் ஷோ போனபோது நானும் ரஜினி சாரும் அந்தப் பாட்டுக்கு சேர்ந்து டான்ஸ் பண்ணினதுனு நிறைய விஷயங்கள் ஞாபகத் துக்கு வரும். ஆனாலும், எனக்கு அந்தப் படத்தில் பிடிச்ச பாட்டு, 'அண்ணாமலை அண்ணாமலை ஆசைப்பட்டேன் அண்ணாமலை’தான்!

அப்புறம் அந்தப் படம் பத்தி இன்னொரு ரகசியம் சொல்லவா? ஆக்ச்சுவலா 'அண்ணாமலை’ படம் ஷூட்டிங் ஆரம்பிச்சப்ப, படத்திலும் என் கேரக்டர் பேர் குஷ்புதான். நடிக்கும்போது ரஜினி சார் ஒவ்வொரு முறை, 'குஷ்பு... குஷ்பு...’னு கூப்பிடும்போது என்னையும் அறியாமல் சிரிச்சிடுவேன். அதனால, கிட்டத்தட்ட பாதிப் படம் ஷூட்டிங் முடிஞ்ச பிறகு என் கேரக்டர் பேரை 'சுப்பு’னு மாத்திட்டாங்க. இப்பவும் படம் பார்க்கும்போது நல்லாக் கவனிச்சா, படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ரஜினி சார் உட்பட எல்லாரும் என்னைக் கூப்பிடும்போது 'குஷ்பு... குஷ்பு’னுதான் உதடு அசையும்!''

 சி.பி - குஷ்பூ 3 எழுத்து , தி மு க 3 எழுத்து..  ஆனா கலைஞர், ஸ்டாலின், அழகிரி எல்லாம் 4 எழுத்து எதுவும் செட் ஆகலையே.. ஆனா பிரபு 3 எழுத்து ஹி ஹி 

http://tamilcinemanews.hosuronline.com/pictures/kushboo_Chepel_God.jpg

6. ''உங்களைக் கவர்ந்த திராவிட இயக்க முன்னோடி யார்?'' 


''அதிலென்ன சந்தேகம்... தலைவர் கலைஞர்தான்! நான் 25 வருஷமா தமிழ்நாட்டில் இருக்கேன். இத்தனை வருஷத்துல நான் பார்த்த வரை பயம் இல்லாமல், தைரியமாகக் கருத்து சொல்லக்கூடியவர். ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர்ங்கிற ஈகோ, கர்வம் அவர்கிட்ட கிடையாது. பிறந்த நாள், திருமண நாள்னு நான் கட்சியில் சேர்வதற்கு முன்னாடியே ஆசீர்வாதம் வாங்க அனுமதி கேட்டா, 'உடனே வரச் சொல்லுங்க’னு என்னை வரவேற்றவர்.


 சி.பி - ஹி ஹி ஹி ஹி ஹி

 அதுக்குக் காரணம், சினிமா மேல் அவருக்கு இருந்த பிரியம். எனக்குத் தெரிஞ்சு அவரை மாதிரி படிச்சவர், படிக்கிறவர் யாரும் கிடையாது. வெற்றி, தோல்வினு எவ்வளவோ விஷயங்களைப் பார்த்தவர். எனக்கு மட்டும் இல்லை... வாழ்க்கையில் முன்னேற நினைக்கிற யாருக்குமே அவர்தான் முன்னோடியா இருக்கணும்!''


7. ''உங்களுடன் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?'' 

சி.பி - கையில காசு வாயில தோசை.. எந்த கேரக்டரா இருந்தா என்ன? 


 ''அவங்க தாத்தாவா நடிச்சா, நான் பாட்டியா நடிக்கத் தயார். 'வீரம் விளைஞ்ச மண்ணு’ படத்துல நான் விஜயகாந்த்துக்கு அம்மாவா நடிச்சேன். ஆனா, படத்துல அப்பா விஜயகாந்த்துக்கு நான் ஜோடி. இடைவேளைக்கு அப்புறம் மகன் விஜயகாந்த்துக்கு அம்மாவாகிடுவேன். ஆனா, அந்த அம்மா-மகன் காம்பினேஷன் சீன் ஒரே ஒரு இடத் தில்தான் வரும். இந்த மாதிரிக் கதைகள்னா ஓ.கே. ஆனா, அதுக்கு வாய்ப்பு இல்லைனு தான் எனக்குத் தோணுது!''


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/01/kushboo-joins-dmk-party_008.jpg

8. ''நீங்கள் 'குஷ்பு இட்லி’ சாப்பிட்டு இருக்கிறீர்களா?'' 


''ஓ... சாப்பிட்டு இருக்கேனே! மதுரைனு நினைக்கிறேன். அங்கே ஷூட்டிங்கில் இருக்கும்போது கொடுத்த இட்லி வழக் கத்தைவிட வெள்ளையா, புஸ்புஸ்னு ரொம்பவே சாஃப்ட்டா இருந்துச்சு. 'இட்லி புதுசா இருக்கே... என்ன ஸ்பெஷல்?’னு கேட்டேன். 'இதுதான் குஷ்பு இட்லி’ன்னாங்க. அடப்பாவிங்களானு சொல்லிச் சிரிச்சுட்டே சாப்பிட்டேன்!''  


சி.பி - அது ஒண்ணுமில்லை மேடம்.. வெந்தயம் நல்லா ஊறவெச்சு சோடா மாவு சேர்த்து போட்டு ஆட்டுனா அது குஷ்பூ இட்லி.. இப்போ அதையே ஹன்சிகா இட்லின்னு சொல்றாங்க 


9. ''கலைஞரிடம் பிடிக்காதது, ஜெயலலிதாவிடம் பிடிச்சது என்ன?'' 


 சி.பி - கட்சில இன்னும் பெரிய பொறுப்பு தர்லை, அது கலைஞர்ட்ட பிடிக்கலை
, ஜெயா  டி வி ல ஜாக் பாட் மூலம் டி ஆர் பி ரேட்டிங்க் ஏத்திக்கொடுத்தும் ஜெ என்னை கண்டுக்கலை.. பாம்பின் கால் பாம்பறியும்கற மாதிரி ஒரு நடிகையை கட்சில சேர்த்தா எத்தனை ஆபத்துன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு.. ஏன்னா அதிமுகவுக்கு ஒரு நடிகையால தானே ஆப்பு வந்துச்சு? 


''தலைவரிடம் பிடிக்காதது... யாரையும் ரொம்ப சீக்கிரம் நம்பிடுவார். அழுதுட்டே ஒரு விஷயத்தைச் சொன்னால், உடனே மனம் இரங்கிடுவார். அவரோட இயல்பு அது. ரொம்ப இளகிய மனம் உள்ளவர்.  

 சி.பி - இலங்கைல லட்சக்கணக்கான தமிழன் அழுதப்ப இரங்காதவர், இறங்கி வராதவர் பதவிக்காக டெல்லி வரை செல்பவர்..  இளகிய மனம் உள்ளவரா? அவ்வ்வ்வ்


ஜெயலலிதாவிடம் பிடிச்சது இப்போதைக்கு எதுவுமே கிடையாது. அவங்களிடம் எனக்கு முன்னாடி பிடிச்சது தைரியம். இப்ப அது அகம்பாவமா மாறியிருக்கு. இருந்தாலும் ஒரு பெண்ணாக, அவங்களை நான் மதிக்கிறேன்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDsrfurZtfmGYwg34W0VcChK4Q0w6ZNiGn3O33d96S3IdrPArZgU7JYYOSNK2f-xfnDVr-bTSd1mhkiOu_KKPuq-7_LpnYRI2eJdI5Rxh84HV-Ngxt37UVDxUcyRTV07RB-X1Ivprs8CT-/s400/actress_kushboo_0003.jpg

10. ''2016 தமிழகப் பொதுத் தேர்தலில் குஷ்பு எந்தத் தொகுதியில் போட்டியிடுவார்?'' 

சி.பி - திருச்சில தான் போட்டி இடனும்.. ஏன்னா அங்கே தான் தீவிர பக்தர்கள் இருக்காங்க.. குஷ்பூக்கு கோயில் கட்டுன இடமும் அதுதானே?



 ''2016 தேர்தலில் நான் போட்டியிடுவேனான்னு இப்பவே யோசிப்பது முட்டாள்தனம். கட்சியில் இப்பதான் நான் சேர்ந்திருக்கேன். என்னைவிட மூத்தவர்கள், முன்னோடிகள் கட்சியில் எத்தனையோ பேர் இருக்காங்க. இப்போதைக்கு நான் கட்சியின் அடிப்படைத் தொண்டர். அவ்வளவுதான். தேர்தல் போட்டி, பிரசாரம் எல்லாத்தையும் தலைவர்தான் முடிவு செய்வார். இப்பவே இதுபத்தி யோசிக்காம நம்ம வேலை எதுவோ அதை மட்டும் செஞ்சுட்டுப் போயிட்டே இருப்போம்!''

சி.பி - வாய் அப்படி சொன்னாலும் மனசு என்ன சொல்லுதோ?


http://www.cinesouth.com/images/kushboo-23.jpg

புவனாவை கட்டிக்கிட்டா நீ பூவாவுக்கு என்ன பண்ணுவே? ( ஜோக்ஸ்)

Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam Suhasini Maniratnam
1.மாப்ளே , பொண்ணு லட்டு மாதிரி இருப்பா..


 அய்யோ மாமா, நான் சுகர் பேஷண்ட்


----------------------------

2.சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை-சீமான்#  அட்லீஸ்ட் விஜயலட்சுமிக்காவது ஆதரவு தாங்கண்ணே


----------------------------------

 3. 60 வயதில் நான் இளைஞரணி செயலாளர்': ஸ்டாலின் புலம்பல் # 90 வயதிலும் நான் மானாட மயிலாட பார்க்கிறேன், புலம்பிட்டா இருக்கேன்?-கலைஞர்

------------------------------------

4. பிரதமரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: சோனியா..# இதுதான் சாக்கு, தி முக தலைவரை மாற்ற கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லை - கலைஞர்

--------------------------------

5. . ட்விட்டர்ல காதல் கவிதை எழுதறவங்களுக்கு 1 சொல்றேன், பாரதியாரை யானை மிதிச்சு கொன்னுது


---------------------------------------

6. டியர், காலம் முழுவதும் உனக்காக காத்திருப்பேன் .

 MATHEMATICS MATRIX MAD - அப்போ ROW ல காத்திருக்க மாட்டியா?  COLUMNல மட்டும்தானா?

-------------------------------------

7. அனுஷ்கா - டாக்டர், பல் கூசுது..

 ரியாஸ் - சும்மா கதை விடாதீங்க, உங்களுக்குத்தான் கூச்சமே கிடையாதே!


---------------------------------------

8. மேடம், நீங்க எலிமினேட் பண்ணி துரத்தி விட்ட உங்க பழைய லவ்வரை மீண்டும்  சேர்த்துக்கிட்டீங்களே, ஏன்?

9 தாரா - ஒயில்டு கார்டு ரவுண்ட்ல ஜெயிச்ட்டாரு

----------------------------------

9   ஆனந்த் - டாடி,உங்க சொத்து எனக்கு வேணாம், எனக்கு புவனா தான் வேணும்..

. போடா போ,.. புவனாவை கட்டிக்கிட்டா நீ பூவாவுக்கு என்ன பண்ணுவே?

--------------------------------------

10. அன்பே! ஏகப்பட்டஅழகைச் சுமந்து அதனால்  நீ உடல் இளைத்தாய்! உன்னை சுமந்து நான் இன்னும் இளைத்தேன் # உட்டாலக்கடி நளவெண்பா கவித ஹி ஹி

---------------------------------



11. சும்மா இருக்கற குளத்துல கல் வீசுனியா?

 சும்மா இருந்தா வீசி இருக்க மாட்டேன், அது கூடங்குளம் மாதிரி தோணுச்சு

------------------------------

12. ஆன் லைன் மூலம் உங்கள் குடும்பத்தை புதுப்பிக்க குடும்ப உறுப்பினர்களையும் பிளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் என இழுத்து விடவும்


----------------------------------

13. எனக்கு தொப்பை உள்ள ஆண்களையே பிடிக்காது.

.ஏன்?

அவனே நொறுக்ஸ் நிறையா சாப்பிட்டான்னா எனக்கு யார் வாங்கித்தருவா?


------------------------------------

14. டியர், உனக்கும் தொப்பை வந்துடுச்சா?

நாசமாப்போச்சு, நான் மாசமா இருக்கேன், தாலியக்கட்டு, மண்டபத்துக்கு நடையக்கட்டு

-------------------------------

15. ஆம்பளைங்க பீர் சாப்பிடறதாலதான் தொப்பை வருது.

 ஓஹோ அப்போ ஆம்பளைங்களோட  சொத்துக்களை அபேஸ் பண்ணி கபளீகரம் பண்றதாலதான் பெண்ணுக்கு தொப்பை?

-------------------------------------

16. ஆம்பளை தொந்தியோட இருக்கறது தப்பில்லை.. ஏன்னா முழு முதற்கடவுள் விநாயகரே அப்படித்தான் இருக்காரு#நீதி- ஆண் = கடவுள்

--------------------------

17. . சதீஷ் , நான் உங்களால அப்லோடு ஆகிட்டேன்.

அய்யய்யோ, சாரி,இன்று முதல் உன்னை அன்ஃபாலோ பண்றேன் # பிளாக்கர்ஸ் ஷார்ட் லவ் ஸ்டோரி

-------------------------------

18. 6 நாட்களில் 520 கி.மீ.பிரசாரம்:விஜயகாந்த் திட்டம்# மாமோய், தொப்பை குறையும் ஓக்கே, மப்பை எப்போ எப்படி குறைப்பீங்க? - பிரேமலதா


--------------------------------

 19. மார்ச் 8 -சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் சமைக்க ஒத்துக்கொண்ட என் ஹோம் மினிஸ்டருக்கு என் நன்றிகள், ஹி ஹி


-------------------------------------

20. ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் ''கென்டக்கி கர்னல்'' விருது #  அழகிரி அண்ணே, இதுக்கு ஏட்டிக்குப்போட்டியா நீங்களும் ஒரு விருது “வாங்கிடுங்க”


-----------------------

Monday, March 12, 2012

பத்திரமா பார்த்துக்குங்க - சினிமா விமர்சனம்

சில பல வருடங்களுக்கு முன்னால தல நடிச்ச காதல் மன்னன் படம் நினைவு இருக்கா? ஊர்ல 1008 பொண்ணுங்க வயசுக்கு வந்து ரெடியா இருந்தாலும் நம்மா ஆளுங்க ஆல்ரெடி நிச்சயம் ஆன பொண்ணையே குறி வெச்சு லவ் பண்ணுவாங்களே. அதே கதைதான்.. கொஞ்சம் ஆல்டர் பண்ணி இட்லியை உப்புமா ஆக்கி சமைச்சிருக்காங்க..


ரொம்ப நாளைக்குப்பிறகு கோடம்பாக்கத்துக்கு லட்சணமா, சுஹாசினி மணிரத்னம் விருப்பட்ட மாதிரி கலரா  ஹேண்ட்சம்மா ஒரு புதுமுக ஹீரோ வந்திருக்காரு.. இதை ஏன் ஸ்பெசிபிக்கா சொல்றேன்னா இந்த 10 வருஷமா புதுமுக ஹீரோன்னா தலை சீவாம, தாடியோட பார்த்து பார்த்து அலுத்துடுச்சு.. இவர் ஆள் டீசண்ட்டா இருக்கார்.. ஆனா அண்ணன் சிரிக்கும்போதுதான் ஸ்டாலின் மாதிரி உதடு ஒரு சைடுல லேசா இழுக்குது... மற்றபடி ஓக்கே.. ஆள் செம சுறு சுறுப்பு.. நல்ல எதிர்காலம் இருக்கு.. அண்ணன் பேரு சரண் குமார்

ஹீரோயின் கூட ஆள் லட்சணமா, கொழுக் மொழுக் கன்னத்தோட ஜைஜாண்டிக்காதான் இருக்காரு.. ( இந்த ஜைஜாண்டிக் என்பது அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்படாத  ஒரு ஆண் பால் வார்த்தை ஹி ஹி பாப்பா கிட்டே கொஞ்சம் பெண்மை , நளினம் மிஸ்சிங்க் )ஜிகிடி பேரு ஸ்மிதா ஸ்ரீ

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/Pathirama-Pathukkunga-3.jpg

சரி கதைக்கு வருவோம்.. வழக்கம் போல ஹீரோ ஹீரோயினை முத தாட்டி ( தாட்டின்னா தடவைனு அர்த்தம் ஹி ஹி )பார்க்கறப்ப மயங்காத குறையா வாயை பிளக்கறாரு.. பின்னாலயே நாய் மாதிரி சுத்தறாரு.. காணாததைக்கண்ட மாதிரி ஹீரோ ஹீரோயினையே அடிக்கடி உத்து பார்க்கறப்ப ஹீரோயினுக்கு புரியாமயா இருக்கும்?தன்னை கரெக்ட் பண்ணத்தான் அலையறான்னு? ஆனா பாப்பா அப்பாவி போல.. 

எனக்கு ஆல்ரெடி ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு இண்டர்வெல்க்கு 15 நிமிஷம் முன்னால பாப்பா சொல்லுது.. உடனே ஹீரோ நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை நம்ம இளைய தலைவலி விஜய் நடிச்ச ஷாஜகான்,யூத் படங்கள்ல வர்ற மாதிரி நம்ப வெச்சு கழுத்தை அறுத்து ஹீரோயின் கிட்டெ கெட்ட பேர் ஏற்படுத்தறார்.. 

இதுல என்ன செம காமெடின்னா அந்த பேக்கு மாப்ளை முன்னே பின்னே பழக்கம் இல்லாத ஹீரோ சொல்ற மாதிரி எல்லாம் கேட்டு ஹீரோயின் கிட்டே கெட்ட பேர் வாங்கிக்கறார்.. 

கடைசில அந்த மாப்ளையே ஹீரோ - ஹீரோயினை சேர்த்து வெச்சுடறார்.. இதுதான் கதை... 

 ஆனா பாருங்க டைரக்டர்க்கு திடீர்னு ஒரு டவுட்.. படம் யூத்ங்க மட்டும் பார்த்தா போதுமா? தாய்க்குலங்களை கவர வேணாமா? அதுக்காக அண்ணன் தேவி பாலா எழுதுன மாலைமதி நாவல் ஒண்ணை நைஸா சுட்டு அந்த கதையை ஹீரோவோட அம்மா அப்பா, ஹீரோயினோட அம்மா அப்பா இடைல புகுத்தி 2 பேரும் முறை பொண்ணு -முறை பையன் தான் அப்டின்னு ஒரு கிளைக்கதையை நைஸா சொருகறாரு..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/10.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1.  டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஹீரோ தனக்கு வராத ஒரு ஃபோனை வந்த மாதிரி காட்டி அதுல சொல்லாத ஒரு ஃபோன் நெம்பரை ஹீரோயின் கையை பிடிச்சு உள்ளங்கைல எழுதி டச் பண்றாரே அந்த ஐடியா நல்லாருக்கு.. ( நோட் பண்றா நோட் பண்றா)

2. ஒரு பாடல் காட்சில ஹீரோயின் குளத்துல ஏகப்பட்ட ரோஜாப்பூக்கள்க்கு இடையில் குளிக்கறாரே அந்த சீன் செம ( யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. அந்த சீன்ல ஹீரோயின் தலை மட்டும் தான் தெரியுது ஹி ஹி - இங்கே படத்துல தலையை தாண்டி தெரியுதேன்னு கேட்காதீங்க, அந்த சீன் படத்துல நஹி ) )

3. ஹீரோ ஹீரோயினை டார்ச்சர் பண்ண செல் ஃபோன், லேண்ட் லைன் ஃபோன் என மாறி மாறி  கலாய்ப்பதும், அதற்கு அவர் கொடுக்கும் விளக்கங்களும் நைஸ்

4. ஹீரோயினுக்கு வெள்ளை நிறம் பிடிக்காதுன்னு தெரிஞ்சதும் ஹீரோ ஹீரோயினுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்ளைக்கு எல்லாமே வெள்ளை நிறம் வர்ற மாதிரி ரெடி பண்ணி அனுப்புவது செம,.,. குறிப்பா மாப்ளையோட செல் ஃபோன் ரிங்க் டோன் கூட “ வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே.. “அந்த சீன்ல ஹீரோயின் கடுப்பாவதும், ஹீரோ துள்ளிக்குதிப்பதும், மாப்ளை பல்பு வாங்குவதும் ஆஹா..!!

5. ஹீரோ மற்றும் ஹீரோயின் செலக்‌ஷன்.. நீட்.. அவங்க பர்ஃபார்மென்ஸ் ஆல்சோ குட்.. 

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/Pathirama-Pathukkunga-20.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.ஹீரோவுக்கு மாமாவா வர்ற இன்ஸ்பெக்டர் எதுக்காக வில்லன் இடத்துக்கு போய் அங்கே 2 ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடறார்? கண்ணியத்தையே குறைச்சுடுச்சே?

2. எந்த கேனையனாவது  தனக்கு நிச்சயம் ஆன பெண்ணை என்னமோ பஸ்ல முன் சீட்ல உக்காந்து இருக்கற புது ஃபிகர் காலை உரசுற மாதிரி ஹோட்டல்ல உரசி கெட்ட பேர் வாங்குவானா?

3. ஹீரோயின் எதுக்காக கேன்சல் ஆன கல்யாண மாப்ளை ஆஃபீஸ்க்கு சம்பந்தமே இல்லாம வர்றார்? அந்த சீன் டிராமா மாதிரி இருக்கு.. 

4. லவ்வர்ஸ்னா முதல்ல கோயில், பார்க், பீச், சினிமா தியேட்டர் இப்படித்தான் போவாங்க.. ஆனா ஹீரோயின் திடு திப்னு லவ்க்கு ஓக்கே சொன்ன அடுத்த செகண்டே ஹீரோவோட வீட்டுக்குப்போகலாம்குதே அது எபப்டி;? ( ரொம்ப பிராக்டிகல் பொண்ணு போல)

5.ஹீரோவும், ஹீரோயினும் டான்ஸ் ஆடறப்ப அவங்க பின்னால கலர் குண்டு போடற பழக்கம் எல்லாம் ரஜினி நடிச்ச ராஜா சின்ன ரோஜா- சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா - காலத்துலயே முடிஞ்சுடுச்சு,.. எதுக்கு பழசை எல்லாம் மறுபடி கிளரிங்க்?

6. படத்துல நம்ப முடியாத முக்கியமான விஷயம் ஹீரோவோட ஃபிரண்டோட தங்கச்சிக்கு ஹீரோவோட இன்னொரு ஃபிரண்ட் கில்மா மெசேஜ் அனுப்புறதும் அந்தப்பழி ஹீரோ மேல வர்றதும்.. அதுல அந்த தங்கச்சி அத்தனை கில்மா மெசேஜையும் எரேஸ் பண்ணாமயா வெச்சிருப்பா? அப்படி அசால்ட்டா வெச்சவ செல்ஃபோனை மறந்துட்டு போவாளா?

7. ஹீரோவோட மாமா இன்ஸ்பெக்டர் பேங்க் அக்கவுண்ட்ல வில்லன் அவருக்கே தெரியாம பல தவணைகள்ல பல தடவை பணம் கட்டறான்.. அது எப்படி இன்ஸ்பெக்டருக்கு தெரியாம இருக்கும்? அந்த பேங்க்லதான் எஸ் எம் எஸ் வசதி அலர்ட் பண்றாங்களே. முதல் தடவை பணம் கட்டுனதும் SMS வந்திருக்குமே.. அதுவும் இல்லாம ஒரு இன்ஸ்பெக்டர் தன் பேங்க் பேலன்ஸை பல மாதங்கள் செக் பண்ணாம இருப்பாரா?

8. ஹீரோவுக்கு பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லையாம் அய்யோ ஹய்யோ.. இந்தக்காலத்துல ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே பல சந்தர்ப்பங்கள் பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண சான்ஸ் இருக்கே?

9. அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு ஏமாத்தி ஆபரேஷனுக்காக ஹீரோவோட  மாமா பேங்க் அக்கவுண்ட்ல பணம் கட்டறதா சீன் வருது.. ஓக்கே , ஆனா 13 டைம் அவ்ளவ் பெரிய  தொகை செலுத்தப்படு,ம்போது டவுட் வராதா?

10. ஹீரோயின் அவ்ளவ் லூசா? நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை டகார்னு கழ்ட்டிவிடுது.. ஹீரோவை ஏத்துக்குது.. டகார்னு ஹீரோவை வெறுக்குது.. ஒய் திஸ் கொலை வெறி?.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAzyuNqN34sTAk7SOAMb2TuZ0pqWLEU_h4IIlXtWVF6yUKaGZ5vxQFAi-Mbb1xhWruNGpn1XAd3h9v-zJHd4NwstvGHaRotAmFqUHWi1nMjBxchsXxQDsvQzOEQKQn4ypINlE7mrixa6Pn/s1600/pathirama-pathukkunga-movie-stills-26.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  தினம் காசு கேட்கறாரு... அடிக்கறார்.. காசு குடுத்தாலும் குடிச்சுட்டு வந்து மறுபடி அடிக்கறார்


தண்ணி அடிக்கறதுக்கு முன்னே அவ அடிப்பா, அதுக்குப்பிறகு நான் அடிப்பேன்


2. போலீஸ்காரனா உத்தியோகம் பார்த்தாலும் சரி, மளிகைக்க்டைல பொட்டலம் கட்டறவனா இருந்தாலும் சரி மதியம் டி வி சீரியல் பார்க்கற டைம் வீட்டுக்கு வந்தா பொண்ணுங்க மரியாதையே தர்றதில்லை..

3. சரி சரி வாங்க சாப்பாடு போடறேன்..

விளம்பரம் போடற டைம்லயாவது புருஷன் நினைவு வருதே..


4. இவருக்கு இங்க்லீஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை சிக்ஸ் பேக்


5. மோதிர விரல்ல தான் அன்பு, காதல், சந்தோஷம் எல்லாம் இருக்குற நரம்பு ஓடுது..  அதனால மோதிரத்தை அங்கே தான் போடனும் ( நல்ல வேளை,.. ஹி ஹி )

நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை.. எங்காவது ரோட்ல கிளி ஜோசியம் பார்க்க வேண்டிய ஆள் ..


6. அவ வீட்டு வாசல்ல நாய் ஜாக்கிரதை போர்டு இருக்குடா..

 அவளுக்காக எத்தனை நாய் கடிச்சாலும் தாங்குவேன்..

நீ தாங்குவே.. அது உன் தலை விதி.. எங்களுக்கென்னடா?

7.  இவன் என் ஃபிரண்ட்.. டைரக்டர் ஆகனும்கற வெறியோட இருக்கான்..

பார்த்து கிட்டே வந்து கடிச்சு வெச்சுடப்போறான்?

8. ஏய் என்ன இது? எல்லாமே வெள்ளையா இருக்கு? உஜாலாவுக்கு மாறிட்டியா?


 படம் டி வில போட்டா முதல் 4 ரீல் மட்டும் பார்க்கலாம்.. அதுல ஹீரோ ஹீரோயின் அறிமுக காட்சிகள் வரும் , அப்புறம் நீங்க உங்க வேலையை பார்க்கலாம்  ஹி ஹி நான் கூட அப்படித்தான் செஞ்சேன்.. உலக வரலாற்றில் முதன் முதலாக தியேட்டர்லயே ஆஃபீஸ் வேலை பார்த்தேன் ஹி ஹி

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - கிரேட் எஸ்கேப் ஆகவும் ஹி ஹி




ஈரோடு ஸ்ரீகிருஷ்னாவில் படம் பார்த்தேன் ( கூட டோட்டலா 14 பேர்தான் இருந்தாங்க, பாவம் கரண்ட் சார்ஜுக்கே கட்டுபடி ஆகி இருக்காது)