Showing posts with label cine critis. Show all posts
Showing posts with label cine critis. Show all posts

Monday, March 14, 2011

ஐவர் - நட்பும், கற்பும் முறிந்த கதை - சினிமா விமர்சனம்

http://s.chakpak.com/se_images/14481992_-1_564_none/aivar-wallpaper.jpg

பெரிய பேனர் படம் இல்லை, மாஸ் ஹீரோக்கள் யாரும் இல்லை, அப்படி இருந்தும் இந்தப்படத்துக்கு ஏன் போனேன்னா இதுல 2 புதுமுகம் அறிமுகம்.. 2 ல ஒண்ணு செம கட்டை என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தந்த அடிபடையில் தகவலை உறுதி செய்து கொள்ளவும் ( இவரு பெரிய சென்சஸ் ஆஃபீசர்..)உண்டு களித்த மனதை கலர் கண்டு ரசிக்கத்தயார் படுத்தவும் தான்...

பல வருடங்களுக்கு முன் ஃபாசில் இயக்கத்தில் நதியா நடித்த பூவே பூச்சூடவா படத்தில் வரும் கூலிங்க் கிளாஸ் காமெடியை அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடித்து முத சீனா ஓப்பன் பண்ணுனப்பவே அண்ணன் (டைரக்டர்) கிட்டே சொந்த சரக்கு கம்மின்னு தெரிஞ்சு போச்சு..

ஸ்ரீமன் தன்னோட ஃபிரண்ட் மேல ரொம்ப அட்டாச்மெண்ட்டா இருக்காரு.. அது எந்த அளவுக்குன்னா தனக்கு வரப்போற மனைவியை தேர்வு செய்வதும் தன் நண்பன் தான், கல்யாணத்தன்னைக்கு முதல் இரவுக்கு போறதுக்குக்கூட நண்பனுக்கு கைல அடிபட்டுடுச்சுன்னு டிலே பண்ற அளவு...


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPv3NPFYZC0UD0P8Dxaf5fD22OtbzAzvaAZJY1wXdnQCSAjQVbdfmBUHReyTzjX8-MYrgBpoTuQENIg6fGiO6_vGW00pgUMBdv2Lw7i90iXYVvQjthUoaa5lOyiGgqL4Y539vw874qRBqU/s1600/actress_athulya_latest_photos_stills_pics_images_01.jpg
இது எந்த மனைவிக்காவது பிடிக்குமா? ( என்னமோ பல மனைவிகள் வெச்சிருக்கறவனாட்டமே பேசறானே....?)நண்பனை கணவன் கிட்டே இருந்து பிரிக்க தன் தம்பியுடன் சேர்ந்து சதி பண்றா... பொய்ப்பழி சுமத்தி கழட்டி விடறா...(ஃபிரண்ட்ஷிப்பை)

நட்பைக்கூட கற்பைப்போல எண்ணும் ஸ்ரீமன் எப்படி உண்மையை உணர்ந்தார்..(ஆவ்..ஆ,.வ் கொட்டாவி) என்பதை தில் இருந்தா தியேட்டர்ல போய் பார்த்து தெரிஞ்சுக்குங்க..
படத்தோட இந்தக்கதை மேல டைரக்டருக்கே நம்பிக்கை இல்லை போல.. இன்னொரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் கதை அட்டாச் பண்ணி இருக்காரு..ஸ்ரீமனுக்கு ஒரு தங்க்ச்சி.. இதான் புதுமுகம் அதுல்யா.. ( எதுலய்யா..?) அவளை ஒரு வெட்டாஃபீஸ் லவ் பண்ணுறான்..அவனுக்கு 3 ஃபிரண்ட்ஸ்.. அவங்களுக்கும் வேலை வெட்டி எதுவும் கிடையாது..
மேலே சொன்ன 4 பேரும் சகிக்க முடியாத முகத்தோற்றம், தாடி, தலை சீவாத பாணி .. ஹூம்..எப்படித்தான் கேமரா மேன் சகிச்சுக்கிட்டாரோ.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUIcivLX_VCVVqP88ESrPWlnVgQFpGjmjF5-ZICZJfl435_4qvxNOA5eNzbkxnTnTlPSeOnCGDRq231XuBnHhr5HNSqa0cNrU1EN0sBCQvrkd5x80cW24-l_KFMmTpdSX1fZRPmGHgszSw/s1600/actress_athulya_latest_photos_stills_pics_images_04.jpg
4 பேர்ல ஒருத்தன் அதுல்யாவை லவ் பண்றான்..இன்னொருத்தன் அந்த ஊர்ல இருக்கற ஒண்ணாம் நெம்பர் அயிட்டம் மல்லிகாவை லவ் பண்றான்.. இதுல என்ன கொடுமைன்னா ஒரு டூயட்டும் உண்டு.. நீ மட்டும் மாறிட்டேடி மல்லிகா..செமயான பாடல் வரிகளை எழுதிக்குடுத்த கவிஞர் மட்டும் மல்லிகாவா நடிச்ச சப்ப ஃபிகரை பார்த்திருந்தா கோடம்பாக்கத்தை விட்டே ஓடி இருப்பார்..

ஹீரோயின் அதுல்யா சுமாரா இருக்கு. நடிப்பும் ஓரளவு வருது..ஆனா அதுக்கு சரிப்பட்டு வராது.. ( டேய் ஒழுங்கா சொல்லீட்டு போ.. எதுக்கு சரிப்பட்டு வராது..?)

ஸ்ரீமனின் மனைவியாக வரும் ஃபிகர் தான் நான் சொன்ன செம கட்டை... சந்தன கலர் தேகம். ஆப்பிள் கன்னம்..செர்ரிப்பழ உதடு.வெண்ணெய் + மெழுகு மிக்ஸ் பண்ணி செய்த தேகமோ என வியக்க வைக்கும் உடல் அழகு..

ரொம்ப லோ பட்ஜெட் படமான இதுல அந்த செம கட்டை மட்டும் படம் பூரா பட்டுப்புடவைலயே வருது.. அநேகமா அதுதான் புரொடியூசரா இருக்கும். அல்லது புரொடியூசருக்கு...... ரொம்ப வேண்டியவங்களா இருக்கும்..ஹி ஹி 
http://www.jointscene.com/ahtees/admin/movies/content/17263_17_Ayvar.jpg
ஏண்டா இந்தப்படத்துக்கு வந்தோம் என விசனப்பட நேர்ந்தபோது மனதில் பட்ட வசனங்கள்

1.  டேய்.. சுத்துதுடா......

இன்னும் நாம குடிக்கவே இலை.. எப்படிடா சுத்தும்?

நான் பாட்டில் மூடியை சொன்னேன்...


2. இப்போ எதுக்கு இந்த கிழவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கே..?


குடிச்சா அயுசு கம்மின்னு அடிக்கடி என்னை திட்டுவியே..இந்தாளுக்கு வயசு 80 ஆகுதாம்.. கடந்த 60 வருசமா குடிச்சுட்டே தான் இருக்காராம்.இப்போ என்ன சொல்றே..?

3.  என்னை ரொம்ப வயசானவன்னு கேவலமா பார்க்காதீங்க.. என் மூணாவது சம்சாரம் முழுகாம இருக்கா...

யார்றா இந்த ஆளு....?

என் ஒயின் ஷாப் உடன் பிறப்பு..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMYqufdo3U_LKbTbzNXSnGTuPuAlxEQnhmJCtpIoQuvnBcoh3nIUOYNe0n8wjaJU0GZ02V5uWglzmSqB54wlVSHz5cn7k4_XjURhke80z324BRjrQAMNDmsGAAovnIG7RLq4wQknHBYJpC/s1600/sameera_reddy_latest_hot_stills_pics_photos_wallpapers_02.JPG
4.  முதல் இரவுக்கு போற பொண்ணுக்கு வளையல் போட்டு விடறப்ப எதுக்காக எத்தனை வளையல் போடறோம்கறதை எண்ணுறாங்க..?

எத்தனை வளையல் உடையுதுங்கறதை வெச்சு கணக்கு போடத்தான்.

( ஹா ஹா நாங்க யாரு.. வளையலையும் கழட்டி வெச்சுடுவோம்ல.?ஹி ஹி )

5.  எனக்கு மல்லிகா செட் ஆகிட்டா ..ஊர்ல இருக்கறவனுக்கெல்லாம் பார்ட்டி.. அவனவன் ஓ சி ல கிடைக்குதேன்னு அள்ளிட்டு போறான்.. நீ மட்டும் கண்டுக்காம இருக்கியே,.?

ஏன்னா.. நான் தான் மல்லிகாவோட தற்கால புருஷன்..

(அப்போ கற்கால. முற்கால, எதிர்கால புருஷன்க நிறைய பேரு மெயிண்டெயின் பண்ணுறாங்க போல..)

6. நீ எதுக்காக இப்போ மொட்டை போட்டிருக்கே..?


நம்ம மல்லிகா இருக்காளே.. அவ யார் கிட்டேயும் இதுவரை ஒரு மாசத்துக்கு மேல ஒரே ஆள் கிட்டே இருந்ததில்லையாம்.. என் கிட்டே 40 நாள் இருந்துட்டா.. அதை கொண்டாட...

டிஸ்கி - நான் மேலே ஜொள்ளிய அந்த கட்டையோட ஸ்டில் கிடைக்கலை... அதனால பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கற மாதிரி ஒரு ஆல்டர்நேட் அரேஞ்மெண்ட்ஸ்க்காக கடைசி ஸ்டில்.. ஹி ஹி (சமீரா ரெட்டி ஸ்டில் எதுக்கு போட்டீங்க?ன்னு ஏகப்பட்ட கால்...)