Showing posts with label VIJAYAKANTH. Show all posts
Showing posts with label VIJAYAKANTH. Show all posts

Saturday, October 27, 2012

விஜயகாந்த் நிருபரை கேவலமாகத் திட்டிய வீடியோ காட்சி

போடா டேய்!' விஜயகாந்த் டென்ஷன் ஏர்போர்ட்டில் பரபரப்பு.


''உன் பத்திரிக்கையாடா எனக்கு சம்பளம் குடுக்குது.. நாயி" - விஜயகாந்த்


ஒருவர்: நானும் மதுரைகாரன் தான். விஜயகாந்த்: மதுரை.. மயிரு.. கூட்டிட்டுப்போ...



நிருபர்: சி.எம். ஒரு திட்டத்தை உருவாக்குறாங்க…


. விஜயகாந்த்: உருவாக்கும் போது அங்க போய் கேளுங்க


… நிருபர்: சார்…


 வி: அவுங்கட்ட கேளுய்யா.. 


நன்றி - விகடன் , புலவர் தருமி


டிஸ்கி - சிதறிய தேமுதிக , பதறிய கேப்டன், கதறிய பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ்
 http://www.adrasaka.com/2012/10/blog-post_6488.html

 

சிதறிய தேமுதிக , பதறிய கேப்டன், கதறிய பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ்

தின மணி செய்தி 1 - மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


நேற்று இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர். இன்றும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரைச் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏக்கள் தேமுதிக.வில் இருந்து விலகுவார்கள் என்று கூறப்படும் தகவல்கள் குறித்து, அவர் கட்சியினருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.


முன்னதாக, இன்று காலை மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கட்சியினர் யாரும் வரவேற்க வரவேண்டாம் என்று தடை விதித்துவிட்டார் விஜயகாந்த்.



 தின மணி செய்தி 2

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வரைச் சந்தித்து, அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


மதுரை மத்திய தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜன், திட்டக்குடி  தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் க.தமிழழகன் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வரைச் சந்தித்தனர். முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர்கள், தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறி பாராட்டினர். மேலும், தங்கள் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசின் உதவியையும் ஆதரவையும் கோரினர்.


இந்நிலையில், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் முதல்வரைச் சந்திக்கச் சென்றதால், அவர்கள் இருவரும் அதிமுகவில் இணையவுள்ளதாகவும், அதற்காகவே அவர்கள் முதல்வரைச் சந்திக்கச் சென்றதாகவும் மதுரையில் இன்று காலை முதல் பரபரப்பாகப் பேசப்பட்டது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து அரசையும் ஆட்சியையும் விமர்சித்து பல இடங்களில் பேசி வருகிறார். இந்நிலையில், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் இருவர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கட்சிக்குள்  ஏற்படுத்தியுள்ளது. எனவே விஜயகாந்த் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முற்படுவார் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


 தின மணி செய்தி 3
தேமுதிக எம்எல்ஏக்களான அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் இன்று தமிழக முதல்வரை சந்தித்துள்ளனர்.
பேராவூரணி தொகுதி தேமுதிக எம்எல்ஏ அருண்பாண்டியனும், ராதாபுரம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனும் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து, அவரது தலைமையிலான அரசின் நடவடிக்கை குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நேற்று  தேமுதிக எம்எல்ஏக்கள் தமிழ்அழகன் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் முதல்வரை சந்தித்துள்ள நிலையில், இன்று அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் முதல்வரை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஒன் இண்டியா தட்ஸ் தமிழ் செய்தி 

நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீங்க.. பத்திரிகையாளர்களை கேவலமாக திட்டிய விஜயகாந்த்




 Vijayakanth Slam Media

சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துவிட்டார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த்.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜனும் தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து தேமுதிகவில் பிளவு வெளிப்படையாக வெடித்தது.


இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மதுரை செல்வதற்காக வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் செய்தியாளர்கள், ஜெயலலிதாவுடனான எம்.எல்.ஏக்கள் சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினர். இதில் கடுப்பாகிப் போன கேப்டன் விஜயகாந்த், பத்திரிகையாளர்களை கண்டபடி திட்டித் தீர்த்துவிட்டார்.


ஒருகட்டத்தில். நாய்..நாய்களா.. எங்க போனாலும் மைக்கை தூக்கிட்டு வந்துடுவீங்களா..உங்களுக்கு சம்பளம் கொடுக்கலையா? என்று ஏகத்துக்கும் ஒருமையில் பேசினார்.


பத்திரிகையாளர்களைத் திட்டுவதில் மட்டுமே குறியாக இருந்த விஜயகாந்த் கடைசிவரை கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமலேயே எஸ்கேப் ஆகிவிட்டார்.



கூட்டணியில் இருந்து விலகிய விஜயகாந்த், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சியைசேர்ந்த இரு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., வலையில் விழுந்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, நேற்று காலை, 8:50 மணிக்கு, தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன் மற்றும் திட்டக்குடி எம்.எல்.ஏ., தமிழழகன் ஆகிய இருவரும், திடீரென சந்தித்தனர். பின், இரு எம்.எல்.ஏ.,க்களும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நற்சான்றிதழ்:

பத்து நிமிட சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், "தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு கொடுத்‌‌தோம்; இந்த அரசு, நல்ல அரசாக செயல்பட்டு வருகிறது' என, நற்சான்றிதழ் அளித்தனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவரும், அக்கட்சியின் கரைவேட்டியுடன், கட்சி கொடி கட்டிய காரில் வந்திருந்தனர். இவர்களது சந்திப்பு,தே.மு.தி.க., வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் ஆலோசனை :

சென்னை, விருகம்பாக்கம் வீட்டில் இருந்த விஜயகாந்திற்கு, எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு குறித்த செய்தி, உடனுக்குடன், மொபைல் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்தஅவர்,கட்சி நிர்வாகிகள் இருவரையும், உதவியாளரையும்,மைத்துனர் சுதீஷையும்,போனில் தொடர்பு கொண்டு, ஆலோசனை நடத்தினார். பெரும் எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள், கட்சி அலுவலகத்தில், காத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விஜயகாந்த் அலுவலகம் வருவதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது
. அதேநேரத்தில், மதுரை கோரிப்பாளையம் தர்காவில், தே.மு.தி.க., சார்பில், தனது தலைமையில் இன்று, மாலை 4:00 மணிக்கு, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும், என்ற அறிக்கையை, விஜயகாந்த் வெளியிட்டார்.கட்சி அலுவலகத்திற்கு வந்த, அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாண்டியராஜன் எம்.எல்.ஏ., உள்ளிட்@டாரும், எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கவலையில்லை :

தன்னை தொடர்பு கொண்ட கட்சி நிர்வாகிகள் சிலரிடம்பேசிய விஜயகாந்த், "யார் கட்சியை விட்டுப் போனாலும், எனக்கு கவலையில்லை. வேறு கட்சிக்கு போக திட்டமிட்டவர்கள், போய்த்தான் தீருவார்கள்; அவர்களை என்ன செய்தாலும், தடுக்க முடியாது' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.மேலும், "கடந்த ஆட்சியில், அ.தி.மு.க., முக்கியப் புள்ளிகள் பலர், தி.மு.க.,வுக்கு தாவினர். எனவே, அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டால் அரசியல் நடத்த முடியாது; எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்ள, எம்.எல்.ஏ.,க்களை அழைத்து கெஞ்சப் போவதில்லை' என்று, கூறியதாக தெரிகிறது.
Advertisement
இன்று தெரியும்:முதல்வரை சந்தித்த எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல், தே.மு.தி.க., வட்டாரத்தில் பரவியுள்ளது. இது தொடர்பாக, சட்ட நுணுக்கங்கள் குறித்து, அக்கட்சி வழக்கறிஞர்களுடன், விஜயகாந்த், நேற்று மாலை நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார்.இன்று மதுரையில் நடக்கும் பக்ரீத் விழாவில், முதல்வர் - எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு குறித்து, தனது கருத்தை விஜயகாந்த், வெளிப்படையாக வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-




நன்றி - தினமணி , ஒன் இண்டியா,தினமலர்

diSki - விஜயகாந்த் நிருபரை கேவலமாகத் திட்டிய வீடியோ காட்சி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_4792.html

Saturday, April 02, 2011

கலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப்டன் வேட்பாளரை அடித்த விவகாரம்- காமெடி கும்மி

டந்த 29-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க. மற்றும்
http://www.southdreamz.com/wp-content/uploads/2008/03/arasangam-new-stills-6.jpg
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக விஜயகாந்த்தின் கிறுகிறு பிரசாரம்!  ( சரக்கு ஜாஸ்தியோ? )
மாலை 3 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, பேச்சைக் கேட்கக் கூட்டம் திரண்டிருக்க... வேனில் விஜயகாந்த்தோடு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி​யின் அ.தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், பென்னாகரம் தொகுதியின் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன், தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்! ( அதுல அடி வாங்கப்போறது யாரோ? என்ற சஸ்பென்ஸோடா? )


பேசத் தொடங்கிய விஜயகாந்த், ''ஊழலும், குடும்ப ஆதிக்கமும் நிறைந்த கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். அதுக்குத்தான் மக்களாகிய உங்கள் விருப்பப்படி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வெச்சுக்கிட்டேன். நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் போடும் ஓட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வைக்கப்போகும் வேட்டு. ( நாங்க எங்கேய்யா விரும்புனோம்? நீங்களா சொல்லிக்கறீங்க.. )

ஊழலில் கொட்டமடிக்கும் தி.மு.க-வோடு சில சாதித் தலைவர்களும் கைகோத்திருக்காங்க. 'தமிழ் வாழ்க’ன்னு வெளியில சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், தமிழும், தமிழ் இனமும் அழியக் காரணமா இருப்பதே இந்தக் கருணாநிதிதான். ( ஓஹோ.. அது தெரிஞ்சும் ஏன் நீங்க நடிகர் சங்கத்தலைவரா இருந்தப்ப்ப அவருக்கு பாராட்டு விழா நடத்துனீங்க?)

ஆனா, அவர்கூட போய் திருமாவளவன் இருப்பதை நினைச்சாத்தான் எனக்கு வேடிக்கையா இருக்குது. அதே மாதிரி 'மரம் வெட்டி’ன்னு ஒரு சாதித் தலைவர் இருக்கார். என் பெயரைத் தன் வாயால் உச்சரிக்க மாட்டேன்னு அவர் சொல்லிட்டதால், நானும் அவர் பெயரை சொல்ல விரும்பலை.(ஓஹோ.. தானிக்கு தீனி சரியாப்போச்சாக்கும்.. படுவாக்களா? பிச்சுப்புடுவேன் பிச்சு.. பேரை சொல்ல என்ன வெட்கம்?)

அந்த மரம் வெட்டித் தலைவரும், ஊழல்வாதியான கருணாநிதியுடன் ஆதாயத்துக்காகக் கூட்டுப் போட்டிருக்கார். 'சாதியே வேண்டாம்’கிற வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா, இங்கே பல தலைவர்கள் சாதியைக் கையில் எடுத்துத்தான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. தன் சொந்த சாதி சனங்களுக்கு அவங்களால் என்ன நன்மைன்னு யோசிங்க... மக்களின் நலனைப்பத்திக் கவலைப்படாம, சுயலாபத்துக்காகத்தானே கருணாநிதி​யைத் தூக்கிப் பிடிக்கிறாங்க...'' என்று விளாசினார். ( இந்த டகால்டி எல்லாம் இங்கே வேணாம்.. கல்யாண மண்டபத்தை இடிச்ச கோபத்துல தானே நீங்க தி மு க  எதிர்ப்பு நிலையை எடுத்தீங்க? அது சுய நலம் தானே..?)


பேச்சை முடிக்கும் தறுவாயில், வேனுக்குள் அமர்ந்திருந்த தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் எழுந்து நின்று, விஜயகாந்த் அருகில் நின்று கூட்டத்தைப் பார்த்து கும்பிட்டார், உடனே விஜயகாந்த், ''அதனால் மக்களே, இதையெல்லாம் மனசுல வெச்சு, உங்க வேட்பாளர் பாண்டியனுக்கு மறக்காம ஓட்டுப் போடுங்க!'' என்று கேட்டுக்கொண்டார். பெயரை மாற்றிச் சொன்னதும் வேட்பாளர் பாஸ்கர், விஜயகாந்த் காதைக் கடிக்கவே, ''மன்னிக்கனும்... ஏதோ ஞாபகத்துல பாண்டியன்னு சொல்லிட்டேன். பாஸ்கருக்கு ஓட்டுப் போடுங்க!'' என்று திருத்திக் கூறி, பிரசாரத்தை நிறைவு செய்தார். ( மப்புல உளறிட்டு சமாளிப்பு வேற. சொன்னா கோபம் வந்துடுது...வேட்பாளர் பேரே ஞாபகம் இல்லைன்னா வாக்குறுதி எப்படி ஞாபகம் இருக்கும்?)


விஜயகாந்த் பேசியபோது, நடுநடுவே கையில் இருந்த இரண்டு மைக்குகளும் கோளாறாகி சவுண்ட் கட் ஆனது. மைக்கையும், கூடியிருந்த மக்களையும் மாறி மாறிப் பார்த்தபடியே ''இது வேற ஒண்ணு...'' என்றவர், மைக்குகளை அசைத்துச் சரிசெய்ய முயல... அப்போது மைக்குகளின் பாகங்கள் கழன்று, வேனுக்குள் விழுந்தன. அதைப் பார்த்து மைக்செட் அமைப்பின் லட்சணத்தை மேலும் கிண்டல் செய்யும் தோரணையில் மக்களைப் பார்த்தவர்... தன் ஸ்டைலில் நாக்கை மடித்துக் கடித்தபடியே வண்டிக்குள் இருந்த மைக்செட் அமைப்பாளரிடம் மைக்குகளைக் கொடுத்துவிட்டு, அவர் தலையில் தட்டினார். ( ஓஹோ அதுகு பேரு தட்றதா? மப்புல சப்பு சப்புன்னு அடிச்சுப்போட்டு.. )


ஆனால், சில மணி நேரத்தில் நடந்ததுதான் ஹைலைட்... ஒரு டி.வி-யில், ''தர்மபுரி பரப்புரையின்போது பொது இடத்தில் விஜயகாந்த், வேட்பாளரை அடித்து உதைத்தார்... மக்கள் கடும் அதிர்ச்சி... இன்றிரவு 10 மணி செய்தியில் காணத் தவறாதீர்கள்'' என்று ஃப்ளாஷ் நியூஸ்  ஓடியது. பின்னர் இரவு 10 மணிச் செய்தியில் ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.(பின்னே சும்மாவா? வெறும் கைலயே நாங்க முழம் போடறவங்க..அவல் கிடச்சா விட்ருவமா?)


உயரமான இடத்தில் இருந்து படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் விஜயகாந்த் கை, வேனுக்கு  உள்ளே இருந்த ஒருவரின் தலையில் படுவதை மட்டும் சவுண்ட் எஃபெக்ட் சேர்த்து, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள். அதைத் தொடர்ந்து அந்தக் காட்சி, 'மக்கள் தொலைக்காட்சி’, 'கலைஞர் செய்தி’, 'சன் செய்தி’ சேனல்களிலும் ஒளிபரப்பாகவே... தமிழகம் முழுக்கப் பரபரப்பு! ( எடிட்டிங்க் வேலைல சன் டி வி , கலைஞர் டி வி களுக்கு மாஸ்டர் பட்டமே தரலாம்..)


நடந்த சம்பவம் பற்றி தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் நாம் கேட்டோம். ''மைக் தொல்லை செய்தபோது, சரிசெய்யும்படி மைக் அமைப்பாளரிடம் கேப்டன் கொடுத்தார். அப்போது கீழே இருந்த அவரது தலையில் இயல்பாக கேப்டன் கைபட்டது. அப்போது நானும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாள​ரான பழனியப்​பனும் வேனுக்குள்​தான் உட்கார்ந்து இருந்தோம். ஆனா, 'என்னைத்தான் கேப்டன் அடிச்​சார்’னு தப்பான ஒரு செய்தியை ஆளும் கட்சி தரப்பு சேனல்களும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இதுக்கு சட்டரீதியாகப் பாடம் புகட்டுவோம்!'' என்றார் கொதிப்பாக. ( தக்காளி.. அடி வாங்கிட்டு சமாளிக்குது பாரு.. )


விஜயகாந்த் கை ஓங்கியதை ஒரு குறிப்பிட்ட டி.வி. இவ்வளவு பெரிதாக்க என்ன காரணம் என்று தே.மு.தி.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''விஜயகாந்த், தன் பேச்சுக்கிடையில் ராமதாஸை மரம் வெட்டித் தலைவர் என்றுதான் குறிப்பிடுகிறார். மேலும் சாதி அரசியலை ஒரு பிடி பிடித்தார். அந்தக் கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். (இவரு மட்டன் சிக்கனைத்தான் ஒரு பிடி பிடிப்பாரு... ?)

இதுவரைக்கும் ராமதாஸைத் திட்டி எந்தத் தலைவரும் இவ்வளவு காரசாரமாகப் பேசியது இல்லை. முதல் தடவையாக அவரைப்பற்றி கடுமையாக கேப்டன் பேசுகிறார் என்றதும், அதைத் திசைதிருப்ப இப்படிச் செயல்படுகிறார்கள். எங்கள் கேப்டன் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸை முதலில் பதில் தரச் சொல்லுங்கள்!'' என்றார்கள்.( தலைவரா? எங்கே எங்கே? )


தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் வைக்கும் விமர்சனங்களை இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்தது இல்லை என்பதுதான் உண்மை! ( சொந்தப்பிரச்சனைக்கு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க.. கஜேந்திரா பட பெட்டி தூக்கிட்டு போன விவகாரத்துல 2 பேருக்கும் பிரச்சனை.. என்னமோ மக்கள் பிரச்சனைல மக்களுக்காக போராடுனது மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?